“தூர திருஷ்டி…”

“தூர திருஷ்டி…”

 

1.கண்களால் பார்க்கும் செயல்படம்
2.அகத்திற்குள் தோன்றும் எண்ணத்தின் கற்பனைப் படம்.
3.கனவில் காணும் படம்
4.பிறர் சொல்லும் ஒலி (சொல்லை) கேட்டு அந்த எண்ணத்தில் எடுக்கும் படம்.
5.இப்படி மனித உணர்வில் நாம் நான்கு வகைப் படங்கள் எடுத்துக் கொண்டே உள்ளோம்.

நம்முடைய எதிரில் காண்பவை எல்லாம் நம் கண்கள் படமாக எடுத்துக் கொள்கின்றது.

கற்பனையாக எண்ணும் படத்தை நம் எண்ணத்தின் உணர்வில் ஒரு தடவை எந்த இடத்தை எண்ணிக் கற்பனையில் படம் எடுக்கின்றோமோ அதே தொடர் தான் எப்பொழுது அந்த இடத்தை எண்ணும் பொழுதெல்லாம் நினைவில் வருகின்றது.

அதே படத் தொடர்
1.மற்றவர்கள் ஒலியால் சொல்லக்கூடிய பொருளைப் பற்றி
2.எண்ணத்தின் நினைவு படமாகவே
3.நம் ஆத்மாவில் நாம் பார்க்காமலேயே படமெடுத்து விடுகின்றது – “கற்பனையில்…!”

எண்ணம் உறங்கிய நிலையில் ஆத்மாவில் பதிவான உணர்வின் தொடர் கொண்டு நாம் சுவாசிக்கும் பொழுது “தூக்கத்திலே மோதும் சுவாச ஒலியால்” கனவாக… அந்தப் படமாக… ஆத்மாவில் பதிவு நிலை ஏற்பட்டுவிடுகின்றது.

சரீர வாழ்க்கையில் வாழக்கூடிய செயல் தன்மையில் கண்களால் மட்டுமல்லாமல் ஆத்மாவின் தொடர்பிலும் இப்படம் பதிவாகின்றது. (உதாரணமாக – செவி வழி கேட்கும் ஒலிகள்,,, மூக்கின் வழி சுவாசிக்கும் மணங்கள்… உடலில் உணரும் உணர்வுகள்…)

கண்களால் தான் நாம் அதிகமாகப் படமாக எடுக்கின்றோம். இருந்தாலும் அத்தகைய ஒளி கொண்ட சுவாச கதியில் இயக்கத்தின் தொடர் நம் கண்களின் தொடர்பில்லாமல்
1.கற்பனை… கனவு… வெளியிலிருந்து வரும் ஒலி இந்த மூன்றின் படமும்
2.உணர்வின் பதிவு கொண்டு சுவாசமெடுக்கும் காந்த மின் அலையால் ஆத்மாவின் படமாகப் பதிந்திருக்கின்றது.
3.ஆகவே பார்க்கும் பொருளைப் பற்றிய படங்களும் ஆத்மாவின் பதிவுப் படமே.

இந்தச் சரீரத்தின் செயலால் ஏற்படும் ஆத்மாவின் இயக்கத்தின் கதி தான் மனித வாழ்க்கையின் உயிர் செயல்பாடாக ஆத்மாவின் இயக்கம் ஜீவ காந்த சரீரமுடன் செயல் கொள்கின்றது.

இந்த ஜீவ காந்தமுடன்… ஆத்ம உயிரில்…
1.ஒலி… ஒளி கொண்ட பதிவின் தன்மை உணர்வின் நினைவலைகள் மோதும் செயல்பாட்டில்
2.விழிப்பு நிலை ஏற்படக்கூடிய “ஐந்தாம் நிலையான… ஞானத்தின் செயல் அறிந்து “தூர திருஷ்டி…! (TELESCOPE போல்) என்ற காட்சியைக் காணும் நிலையும்
3.அதற்கடுத்த “ஆறாம் நிலையில்… அண்டத்தில் சுழலும் மண்டலங்களின் உண்மையை” நம் ஆத்மா அங்கு சென்று அறியும் நிலையும்
4.”ஏழாம் நிலையான… படைப்பின் படைப்பாக்கும்” செயல் தன்மையும்
5.அடுத்தடுத்த நிலைக்கு இந்த “உயிரும் ஆத்மாவும்” இணைந்து ஒளிப் படம் எடுக்கும் இந்த ஆத்மாவுக்கே ஏற்படக்கூடிய செயல் நிலைக்கு
6.ஆத்மாவின் விழிப்பு (“நம் விழிப்பு நிலை”) இந்தக் கண் ஒளியில் இருந்து பெறுவதற்கு
7.விழிப்படலத்தின் ஒளித் தன்மையை “மின் காந்த ஈர்ப்பின் செயலுக்குக் கொண்டு வர வேண்டும்…”

அதாவது முதலில் சொன்னபடி நான்கு விதமான படங்களை எடுக்கும் நாம் ஐந்து ஆறு ஏழு என்ற நிலையில் நமக்குச் சொந்தமான “நம் உயிர் ஈர்ப்பது போல்” அலைகளை இழுத்துக் கவர்ந்து இயக்கும் நிலைக்கு வர வேண்டும்.

மூக்கு வழியாகக் காற்றைச் சுவாசிப்பது போல் “ஆன்மாவின் விழிப்பு என்ற… அந்தக் கண்கள் வழியாக” நுண்ணிய அலைகளைக் கவரும் நிலைக்கு வர வேண்டும்.

இன்று விஞ்ஞானக் கருவிகள் கவரும் நுண்ணிய அலைகளைக் காட்டிலும் மிகவும் நுண்ணிய நிலைகளைக் கவர முடியும்.

அது தான் ஆன்மாவின் விழிப்பு நிலை என்பது..!

“மனத்தை தேவன் வசம் ஒப்படையுங்கள்… தேவனின் இராஜ்ஜியம் சமீபத்தில்…!”

“மனத்தை தேவன் வசம் ஒப்படையுங்கள்… தேவனின் இராஜ்ஜியம் சமீபத்தில்…!”

 

1.சரீரமில்லா செயல் நிலை உடைய உயிரணுக்கள் (ஆவி ஆத்மாக்கள்) சரீர கதிச் சுழல் காந்த அமில ஈர்ப்பின் குணத்தின் வசம் அகப்பட்டு
2.தனது சுவாச அமில நிலைக்கொப்ப சரீர செயல் சமைப்பு முறை அமில குண சுவாச நிலையில் குணத்துடன் ஒன்றி
3.தனது சரீரமற்ற ஆவித்தன்மையின் வீரிய குண எண்ணத்தை செயல் நடத்திட
4.சரீரமுடைய காந்த அமில குண சுழற்சியில் அகப்பட்டுச் சுவாச கதி அலையில் உட்சென்று தான் செயல் கொண்டிட
5.தனக்கு என்று ஓர் வாய்ப்பு நிலை ஏற்படுத்தும் “நரம்பு மண்டல செயல் நிலைகளில் நகர்ந்து ஓடி…” அதே கதியில் செல்லும் அவைகள்
6.தங்கள் எண்ணத்திற்கொப்ப ஆங்குள்ள உயிரணுக்கள் செயலை விட மிக வீரியமான தம் குண எண்ண நிலை கொண்டு வெற்றி உலா வந்து
7.தன் எண்ணம் கொண்டு சரீர கதியையே மாற்றி அமைத்துத் தமது எண்ணத்தின் வலுவை வலுவாக்கி
8.அதன் செயல் கொண்டு செயலுறும் இயந்திரகதி சரீரமாக்கி
9.தனது இச்சைகளை பூர்த்தி செய்து கொள்கின்ற பாங்கில் துர் ஆவிகள் புகுந்த உடலில் செயல்படும்.

ஆவிகளின் துர்க்கதி வினைச் செயலை நீக்கிட… மார்க்கம் காட்டிய அன்பு நிலை வெளிக்காட்டும் மாமகரிஷியின் தொடர்பு பெற்ற “தேவகுமாரன் இயேசுபிரான் அவர்கள்” துர் ஆவிகளை விரட்டிச் சொஸ்தப்படுத்தியது அறிய வேண்டிய சூட்சுமம்.

“பன்றிகள்” என்று துர்க்குணங்களைச் சுட்டி காட்டிய இயேசுபிரான் அந்தப் பன்றிகள் வாசம் செய்யும் இடம் சைத்தான் என்று மனித சரீரத்தைக் காட்டினார். ஏன்…?

துர்குண எண்ணமாகிய பன்றியின் குணங்கள் கொள்ளும் பொழுது… பன்றி கழிவை உண்டு அந்தக் கழிவின் தீய செயல் குண அமிலங்களைத் தனது சரீரத்திற்கு ஏற்றுக் கொண்டு அப்பன்றியியின் கழிவில் நல்ல நிலைகளை வெளித்தள்ளும் செயல் சரீர செயலிலும் நடைபெறுதல் போலவே (பன்றியின் மலம் துர்வாசனை வீசுவதில்லை)…
1.அதே பன்றி குணம் கொள்ளும் மனிதன் தன் ஈர்ப்பின் செயலுக்குத் துர் ஆவிகள் அவன் உடலில் ஏறி (சைத்தான்)
2.சரீரம் கிடைத்தவுடன் மனித சரீரத்திற்குள் அவை நுழைந்து
3.மனிதர்களை ஆட்டுவிக்கும் செயலாக… தன் இச்சைகளை அங்கே பூர்த்தி செய்து கொள்ளும் செயலுக்கு
4.எந்தச் சரீரத்தில் ஏறியதோ அங்கே பயமுறுத்தும் காரியார்த்தவாத செயல் நிலைப்படுத்தி
5.தங்கள் இஷ்டம்போல் அச்சரீர உயிர் ஆத்மாவையும் அடிமை கொண்டிட அதி ஆவேச செயல் நிலைப்படுத்தும் என்பதை
6.அந்த ஆவிகள் மனிதர்களை ஆட்டிப் படைக்கும் செயல் திறத்தால் அறியலாம்.

ஆனால் அந்தத் துர் ஆவிகளை இயேசு பிரான் கடலில் சென்று விழச் செய்து மாள வைத்தார் என்பதன் பொருள் என்ன…?

அத்துர் ஆவி ஆன்மாக்கள் மனிதச் சரீர செயலில் தன் தனது நடைமுறைகளுக்கொப்ப செயல் கொண்டிடும் விதம்… நாத குணங்கள் போக்கி… தான் செய்யுறும் குணநலன்படுத்தி ஆட்டுவிக்கும் செயலில்…
1.உயரிய சக்தி பெற்ற ஆத்ம ஞானிகள் அவைகளை நீக்கச் செய்திட்ட சூட்சுமப் பொருள் என்ன…?
2.அவைகளை விரட்டிட்ட செயல் சூட்சுமத்தை நாம் அறிந்திட வேண்டும்

“துர் ஆவிகள் பன்றிக்குள் நுழைந்து…
கூட்டம் கூட்டமாகக் கடலுக்குள் விழுந்து செத்தொழிந்தன…
நீங்கள் சுகம் அடைந்தீர்கள்
இனி மனத்தை தேவன் வசம் ஒப்படையுங்கள்
தேவனின் ராஜ்ஜியம் சமீபத்தில்…!” என்று
ஏசுபிரான் போதனைப்படுத்தி வழிகாட்டிய அந்தச் செயல் முறையால் ஆவி ஆத்மா வசம் அகப்பட்டவன் எப்படிச் சுகம் அடைந்தான்…?

பன்றிக்குள் நுழைந்தன ஆவிகள் என்பது… எப்படி அவைகள் பன்றியின் செயல் நிலையில் ஒன்றி ஒடுங்கின…? என்பதை அத்துர் குணங்களின் வசம் உள்ள ஆவி ஆன்மாக்கள் அக்குணங்களையே ஆட்கொள்தல் என்பதே… “பன்றியின் உள் நுழைதல் என்று சூட்சுமம் காட்டி…” அவைகளைக் கடலுக்குள் தள்ளியதாகக் கூறும் விதம்… அத்துர் குணங்களாகிய பன்றிகள் மாய்க்கப்பட்டுக் கடலுக்குள் தானே விழுந்து விட்டன…! என்ற தத்துவ ஞான போதனையை யார் ஏற்றுக் கொண்டார்கள்…?

தங்கள் மனம் போல் வியாக்கியானப்படுத்தும் இந்த உலகம் அந்த உண்மையை அறிந்து கொண்டதா…? அதன் செயல் நிகழ்வு எப்படி நடைபெறுகின்றது…?

இச்சரீர கதியில் என்பது துர்குணம் வாழும் ஆவி ஆத்மாக்களை ஞானக்கடலிலே விழச் செய்தான் தேவகுமாரன்.. ஞானக்கடல் எங்கிருந்து வந்தது…?
1.தன் சக்தியின் சக்தியை அவர்களுக்கு (ஆவிகளுக்கு) ஊட்டுவித்து
2.தன்னையே அவர்களிடம் ஒப்புவித்து… தானே அவர்களானான் என்பதே
3.அன்பால் வசப்படுத்தும் மனதினன் அவ் அன்பு நிலை எம் மக்கள் செயலில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதோ
4.அதே நடைமுறைச் செயலில் நல்வினை ஆக்கும் செயலுக்குப் போதனைப்படுத்திய ஞானவான்
5.தன் மன நிலையுடன் அவர்களின் மன நிலையை ஒன்றச் செய்து
6.தன் வசமாக்கி… தெளிவுபடுத்தி… மனங்களின் அன்பை அருந்த “ஞான நிலை போதனை கொடுத்து…”
7.குரு காட்டிய வழி (உயிரான்மா அறிந்த சொல்) என்ற மந்திரச் சொல்லைப் பயன்படுத்தும் பொழுது
8.அவனுள் ஏற்படும் மாற்ற நிலையானது மனம் அன்பின் வசப்படும் தன்மையும்
9.அதனுள் சுரக்கும் ஞானக்கடல் நிலை என்பது ஞானத்தின் பரிமாணத்தைக் கூறும் சூட்சும செயல்படுத்தி
10.அந்தச் செயல் முறையின் நடைமுறையைக் காட்டினான் தேவகுமாரன் அன்று.

ஆகவே… ஞானத்தின் வசம் ஒப்புவிக்கப்படும் மனமானது… “அன்பின் வசம் உற்று…” நல்வினைப் பயன் ஏற்பட நற்குண வழிகாணும் செயல் நிலை வந்தது. (அன்பால் தான் ஆன்மாக்களை நல்வழிப்படுத்த முடியும்… நம் வசத்திற்குக் கொண்டு வர முடியும்)

எந்தெந்த நற்குண செயல் போதனைப்படுத்தப்படுகின்றதோ… அவைகளைத் தனக்குகந்த போதனையாக ஏற்று… அந்தப் போதனைகள் வழி மனம் செலுத்தப்பட முயற்சி என்ற நம்பிக்கை வேண்டும்.

அந்த முயற்சி தானே உருவாகும் செயலுக்கு முன்பு யார் போதனைப்படுத்துகின்றார்களோ “அவர்களின் காந்த வீரிய எண்ணச் சுழற்சி செயலில்…” மனம் நாட்டம் கொண்டிடல் வேண்டும்.

எண்ண வலுவின் செயல் கொண்டிடும் நிலையானது எந்த நிலையானாலும் அது பக்தியோ ஞானமோ அல்லது வேறு உபாய காரியச் செயல் முறையோ “அந்தத் துர் ஆவிகள் விலகும்…” என்பது அவைகள் குணங்களுடன் (துர்க்குணங்கள்) ஒன்றி வாழும் பொழுது… அக்குணங்களையே களைவிக்கும் மந்திர ஜெபம் என்ற சூட்சமப் பொருளானது… நாம் எடுக்கும் தியானத்தின் வழியில் தான்.

தியானத்தின் மூலம்… நற்குண வீரிய சொல் ஏற்கும் மன ஜெப நிலை வசம் உயரும் முறையாக அது மாறி தன் நற்குணத்தில் சுகம் பெறும் என்பது
1.அந்த ஆவி ஆத்மாக்களின் வீரிய குணம் நற்குண அதி வீரிய ஜெப குணம் ஞானத்தால் அடக்கப்பட்டு
2.அந்தத் துர்குணங்கள் மாய்க்கப்படுவதையே ஞானமாம் கடலில் பன்றிகள் விழும் பொழுது
3.அதனுள் வாசம் செய்த துர் ஆவிகளும் செத்தொழிந்தன (அதன் வீரியத்தை அடக்குதல்) என்கின்ற சூட்சுமம்.

மனநிலையை ஞானத்தால் உயர்த்திக் கொண்டால்… நற்குணத்தின் வீரியத்தால் சுகம் பெறலாம்…! என்பது தேவகுமாரன் காட்டிய அன்பின் தத்துவம்

உபதேசிகன்

உபதேசிகன்

 

ஜெபத்தின் சூட்சும ரகசியங்கள் என்ன…?

தன்னைத்தான் உணர்ந்து… தன்னைத்தான் நம்பி… தன்னுள் இறை குணத்தன்மைகளைத் தாய்மை குழந்தையைச் சுமப்பது போல சுமந்து கொண்டிட வேண்டும்.

உலகோதய நடைமுறை வாழ்க்கையில் தனக்கு எத்தகைய இன்னல்கள் பிறரால் ஏற்படுத்தப்பட்டிருப்பினும்… இறை குணத் தாய்மையைச் சுமந்து… அன்பு கொண்டு குழந்தை போல் நேசிக்கும் மனம் கொண்டவன்…
1.ஈசன் வேறல்ல… தான் வேறல்ல என்ற வகையில்
2.தோற்றத்தில் பணிவும் சொல்லில் கனிவும் கொண்டவனே “உபதேசிகனாக” வளர முடியும்

அப்படிப்பட்ட நிலையில் இந்த உலகம் உய்ய வேண்டும்… அனைத்து உயிர்களும் இன்புற வேண்டும்… என்ற முழுமையாக நிலை நிற்றல் போல… அன்பு கொண்ட குருவாகத் தன்னை வெளிப்படுத்தியவர் இயேசு.

1.உள்ளொன்றும் புறம் ஒன்றும் கொண்டு சாதாரண நடைமுறையில் தூசிக்கும் மாக்கள் போல்
2.தன் உணர்வில் தான் வலு கொண்டிட்ட எண்ணத்தை வெளிக்காட்டி
3.உயர்ஞானம் வலுக்கொள்ள வேண்டிய வளரும் ஞானப்பயிர்களின் ஊடே – சூட்சுமமாகப் பேதமையை ஏற்படுத்தி
4.தன்னையே எண்ணித் துதிக்கும் திருக்கூட்டங்களை ஏற்படுத்தி அந்த ஆத்மாக்களைத் தனக்கு அடிமை கொண்டு
5.தன் உயிராத்மா வலுக் கொள்ள வேண்டும் என்ற சுய தேவை காரணமாகத் தான் சக்தி ஈர்த்திட்டே
6.உங்களுக்கு அளித்திடுவேன் என்ற சொல் வாக்கினால் நம்பிக்கையை ஊட்டி
7.அவ்வாய் வார்த்தையே சதம் என்று நம்பி
8.பேரருள் சக்தி பெற்றிட வேண்டிய தன் உயிராத்மாவை எண்ணிடாத ஜீவர்களின் எண்ணங்களை வசப்படுத்தி
9.குரு என்ற பெயரில் உலவிடும் எத்தனையோ ஆத்மாக்கள் போல் அல்லாதபடி
10.உண்மையின் ஜெபத்தை ஊட்ட வந்த அன்பு மகான் இயேசு.

அந்த மகானின் போதனைகளைத் தியான வழியில் கைக் கொள்வோரைக் காண்பதுவும் அரிதாகிவிட்டது.

ஆணவத்தில் இருந்து பேச்சும் மூச்சும் என்று… பற்பல தத்துவ விளக்கங்கள் ஞானவான்கள் என்று கூறிக் கொள்வோர்… “உயர் நிலை பெற வேண்டிய ஜீவர்களைப் பாவிகள் என்று அழைத்து…” ஆவேச உணர்வுகளை ஊட்டும் வழியாகத் தேனிற்குள் மறைந்த கசப்பாக ஊட்டுபவர்கள்… உண்மையின் சாரத்தை உணர்ந்து கொண்டார்களா…?

சிலுவையைச் சுமந்ததும் சிலுவையில் அறையப்பட்டதும்… பின் உயிர்த்தெழுதலும் தான் கொண்ட அனுபவ அவஸ்தையே.

மனித ஆத்மாக்கள் பிறப்பு வளர்ப்பு சாக்காடு என்ற வகையாக உலகினுக்குப் பேருண்மைகளைப் போதனையாக்கிடவே தன்னையே ஆட்படுத்தி உரைத்ததில்…
1.உடல் என்ற சிலுவையில் ஆணவத்தன்மையால் ஆத்ம அறிவு அறையப்பட்ட பின்
2.மரித்தல் என்ற செயலுக்கு ஆணவமும் அகப்பட்டு மாய்ந்து
3.உயிர்த்தெழுதலாக மெய்யறிவும் தோன்றுதல் என்பதிலும்
4.”அறையப்படும் அவஸ்தை வேண்டுமோ…?” (மீண்டும் மீண்டும் உடல் பெறுதல்)

வினாவின் விடையைத் தெளிந்து கொள்…!

1.ஐந்து அப்பங்கள் என்பதே பஞ்சேந்திரியங்கள் செயல்படும் இந்த உடலப்பா…
2.இணை மீன்கள் இரண்டு என்பதே பஞ்சேந்திரியங்களில் செயல்படும் சுவாசமப்பா.

தன்னையே எண்ணி ஜெபித்திடலே சூட்சமம்….!

நானே அப்பமுமாக இருக்கின்றேன்… என்னைப் புசிப்பவனுக்கு எந்தவிதப் பசியும் இல்லை…! என்று உரைத்தவற்றில் தியானமே முதன்மையாக்கப்பட்டது.

உபதேசம் கொள்வோனிடம் கொண்ட எண்ணத்தின் மாறுபாட்டை விளக்கிட வேண்டாமா…? அதுவும் உண்டு.

என்னையே காட்டிக் கொடுக்கும் சீடன் என்னிடத்திலிருந்து அப்பம் பெறுவாண் என்று காட்டிக் கொடுக்கும் அந்தச் சீடனுக்கு அப்பத்தையும் அளித்து… அந்தச் சீடன் கொண்டிட்ட எண்ணத்தையே சைத்தான் தன் செயலைத் தொடங்கி விட்டான் என்று கூறியதன் பொருள் என்ன…?

ஞானம் கொள்ள வந்தோர் பெற்றது அப்பம். ஞானம் கொண்ட சீடன் பெற்றதும் அப்பம்.
1.உபதேசம் ஒன்று தான்…
2.கொள்ள வேண்டியவன் கொண்டிட்ட “எண்ணத்தின் மாறுபாடு புரிந்ததா…?”

நீரில் மறைந்துள்ள காற்றைக் கொண்டு வாழும் மீனின் தன்மை போல் மனிதன் “தியான எண்ணத்தின் வழி… சுவாசத்தின் வழி…” ஈர்த்திடும் பக்குவம் கூறப்பட்டது.

ஒலி கொண்டு ஒளி பெறும் சூட்சுமமாகச் சப்த ஒலி நாதங்கள் செயல் கொண்டிடும் ஆத்மாவின்… உள் நிறைவாகச் சேமிப்பாகக் காட்டவே “ஏழு” கூடைகளுக்குள் நிரப்பப்பட்ட ஆகாரம்.

தட்டியவன் திறப்பான்… கேட்பவன் கிடைக்கப் பெறுவான்… தேடியவன் கண்டு கொள்வான்…!

தட்டியவன் திறப்பான்… கேட்பவன் கிடைக்கப் பெறுவான்… தேடியவன் கண்டு கொள்வான்…!

 

ஸ்தூல தேகம் கடந்து சூட்சும தேகத்தில் வாழும் தன்மை நிலை பெற்று விட்டால் சரீரம் கொண்டு துன்பங்களாக உணரும் தன்மைகள் அனைத்தும் துன்பங்களாகத் தோன்றிடாது.

அத்தகைய பாக்கியம் பெற்ற மகான் தான் இயேசு.

வாழ்க்கை நடைமுறை மோதலில் ஏற்படும் உரையாடலில் உணர்ந்திடும் குணங்களையே பெரும் துன்பங்களாகப் பெரிதுபடுத்தியே… எண்ணத்தின் கடுமையாகச் சொற்களின் விஷ வித்துக்களை விதைத்திட்டால்… அதை உரைப்பவனும் அந்த உரையைக் கேட்பவனும் விதைத்திட்ட விதையின் பலனை அறுவடை செய்வானப்பா…!

அதைத் தான் திணை விதைத்தவன் திணை அறுப்பான் வினை விதைப்பவன் வினை அறுப்பான் என்று சொல்வது.

இயேசு மகான் சுட்டிக் காட்டியது அன்பு வழி வாய்மை. சொல்லும் சொல்லிலும் நிதானம் தேவை.

1.உலகோதயத் துன்பங்கள் ஞானிகளுக்கு மக்களால் ஏற்படுத்தப்படும் தன்மைகளில்
2.தேகம் கடந்து வாழும் தன்மையால் ஞானிகளுக்கு எந்த விதப் பாதிப்பும் ஏற்பட்டுவிடாது.

மெய்ஞானத்தின் முழுமைத்துவம் பெற்றிடும் செயலில் மனத்தின் பக்குவமே மெய்ஞான விழிப்பாகச் செயல் கொண்டு நல்லாக்கம் பெறுதலே உண்மை ஞானத்தின் சிறப்பு.

தனக்கு இழைத்திட்ட துன்பச் செயல்களைக் கூட… கல்வாரி மலை மீது சிலுவையில் அமைக்கப்பட்ட காலத்தில் கூட…… மன்னிக்கும் மனம் படைத்த இயேசுவின் செயலை
1.அவர் பெற்று வளர்ச்சிப்படுத்திக் கொண்ட அவரின் சக்தியை
2.தாமும் பெற்றிட முடியும் என்ற எண்ணத்தைக் கொள்வோர் யாரும் இல்லை.

சூட்சும உடல் வாழும் வாழ்க்கை வாழ்ந்து காட்டிட்ட மகான்தான் இயேசு. தியானத்தின் வழியைச் சூட்சுமமாக மறைபொருள் தன்மையில் உரைத்திட்ட போதனைகள்… அவரால் கொண்ட கருத்தின் தெளிவு.

எழுத்தின் வடிவத்தில் சமுதாய நலத்திற்கு அவர் கொண்டிட்ட எண்ணத்தின் சப்த அலைகளை… நேரடியாக ஈர்த்திடும் பக்குவச் செயல் அனைத்தும்… காற்றினில் ஓடிடும் ஒலி அலைகளை… அவர் காட்டிய போதனைகளைப் பெறுவது என்பதெல்லாம் “தியான ஈர்ப்பின் மூலம் தான் பெற முடியும்…”

“உயிர்த்தெழுதல்” தத்துவத்தையே சூட்சும உடல் வாழும் தன்மை கொண்டிட்ட செயலாகத் தத்துவத்தின் உண்மைப் பொருள் உணர்த்தப்பட்டது. அது எந்த வகை…? என்ற வினாவுக்கு “ஆத்ம வலு கொண்டிடும் மூலசக்தியே” நிலைக்களன் (சான்று).

உயிர் ஜீவன் கொண்டிட்ட இந்தச் சரீரமே சிலுவையாக…
1.உடல் என்ற சிலுவையில் பொருந்த அமைவு பெற்ற ஆத்மா
2.சக்தி வலுக் கொண்டு மூல சக்தியாகக் கலந்துறவே எழுதல் என்பது சூட்சுமம்.

தான் கொண்ட எண்ணத்தின் வலுவைப் பிறர்க்கும் ஊட்டிடவே… தான் தேடிக் கண்டு கொண்ட நல்லது போன்றே மற்ற மனித ஜீவன்களும் தேடிக்கொள்ள வேண்டும் என்று
1.ஆத்மாவை மறைபொருளாகச் சுட்டிக்காட்டி…
2.தேடிக் கண்டு கொள்பவன் கொள்ள வேண்டிய எண்ணத்தில் சிரத்தை இருந்தால்
3.“தட்டியவன் திறப்பான்…
4.கேட்பவன் கிடைக்கப் பெறுவான்…
5.தேடியவன் கண்டு கொள்வான்…” என்பதில்
6.எண்ணத்தின் செயல்பாட்டிலே “சிரத்தையே அதிமுக்கியம்…” என்று உரைத்தவர் இயேசு.

அவரைக் கூட்டம் கூட்டமாகப் பின் தொடர்ந்து வந்து சூழ்ந்தவர்களுக்கு அவரால் போதனை அளிக்கப்பட்டது என்றும்… குழந்தைகளும் பெண்களும் ஆடவர்களும் கூடியிருந்த அந்தக் கூட்டத்தில் பசியோடு இருந்தவர்களுக்காக அப்பமும் மீனும் அதை இரண்டையும் தூபப்படுத்தி ஆசீர்வதித்து… அனைவரும் உண்ணும் மட்டும் பகிர்ந்தளித்து… சாப்பிட்ட உணவின் மீதம் ஏழு கூடைகளில் நிரப்பப்பட்டது என்று “விவிலிய நூல்…” கூறுகின்ற பொருளின் உண்மையை அறிந்தவர்கள் யார்…?

அதைப் பின்பற்றுபவர்களும்… அதைக் கடைபிடிக்கிறோம் என்று சொல்பவர்களும்… பெற்றிடும் திறன் இல்லாது அது மாற்று நிலை பெற்று விட்டதப்பா.

1.நானே அப்பமாக இருக்கின்றேன்… என்னைப் புசிப்பவன் நித்திய ஜீவனுமாக இருப்பான்…! என்று
2.அவர் உரைத்திட்ட சொல்லிலும் மறைபொருளாகவே கூறப்பட்டது.

அன்பு தானப்பா கடவுள் – LOVE IS GOD

அன்பு தானப்பா கடவுள் – LOVE IS GOD

 

1.அன்பு வழி காட்டி… அன்பு கொண்டே ஊட்டிடும் செயலாகச் செயல்படுபவன் …
2.தன்னுள் ஈர்த்துக் கொண்டு தன்னை வளர்ச்சிப்படுத்தும் தன்மைக்கு “அன்பே கடவுள்” என்று சொல்லிய சொல்லிலும்
3.பிற உயிர்களையும் தன் உயிர் போல நேசிக்கும் செயல்பாடு உடையவனாக இருத்தலும்
4,தன்னுள்ளே வேரூன்றி வளர்ச்சி கொண்டிட்ட அன்பினில் நிறைவு போதனையாக வெளிப்படும் பொழுதே
5.போதனையை ஏற்றுத் தன் ஆக்கத்தின் வளர்ச்சிக்கு அந்த உபதேசத்தை ஏற்றவன்
6.அந்த நன் நெறியில் பிறழாமல் “அந்த அன்பையே பற்றுக்கோடாகக் கொண்டிட்ட எண்ண செயலினால்…”
7.நல்வழி வகைச் செயலைக் கடைப்பிடிப்போன்… மனிதன் என்ற முழுமை பெறுகின்றான்.

அன்பும் பரிபூரணத்துவம் பெறுகின்றது.

இயேசு காட்டிட்ட அன்பு வழி அதனுடைய நிலைகள் இன்று ஆக்ரோஷ வலைக்குள் அகப்பட்டுத் தத்தளிக்கின்றது. யாரையும் குற்றம் குறைகள் காண்பதல்ல நம்முடைய வழி…!

மனித எண்ணத்தையும் அன்பு சாமராஜ்யத்தையும் ஆள வந்த அந்த மகானுக்கே தந்த பரிசு “சிலுவையில் ஏற்றப்பட்டதுதான்…” இன்றும் உண்மைகளைப் புகட்டினாலும் ஏற்றுக் கொள்வோர் இல்லையப்பா.

அன்பு வழி காட்டிய மாமகான் இயேசு தான் தெளிந்த உண்மைகளை இந்த உலகினுக்கு உவட்டாமல் ஊட்ட வந்த நிலை என்னப்பா…?

குழந்தைக்குத் தாய் உணவை ஊட்டும் பொழுது தாயின் மனத்தின் எண்ண நினைவு எத்தகையதோ அதே உணர்வால்
1.உலக மக்கள் படும் இன்னல்களுக்காகத் தன்னையே அர்ப்பணிக்க வந்த மகான் இயேசு
2.தாய்மையின் உணர்வு கொண்டே ஜெபம் கொண்டு உயர் ஞான சித்தியின் வழி
3.உயர்நிலை பெறவே ஊட்டிட்டார் ஊட்டிட்டார் அன்பு கொண்டே ஊட்டிட்டார்.

தாய் முகம் கண்ட குழந்தை தாயிடம் தாவி ஓடுவதைப் போல் மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு உபதேசங்களைச் செவிமடுத்தனர்.

ஏனென்றால் அன்றைய காலகட்டத்தில் அரசாட்சியின் அதிகாரத்தில் அறிவின் ஆற்றல் செயல்படாதொழிந்த அந்தக் குழப்ப சூழ்நிலையில்… உண்மையை உணர்த்தி அவர் அளித்திட்ட போதனைகள் மக்களுக்குத் தெளிந்த சிந்தனை அளித்து… அதனால் ஈர்க்கப்பட்டனர் என்றால் “அந்த அன்பின் திறத்தை என்னவென்பது…?”

அன்பு தானப்பா கடவுள்…!

சத்திய நிலை கடைப்பிடித்த அந்த மகான்களுக்கே அவச்சொல் என்றால் சிந்தனா சக்தி செல்லும் வழி தான் என்ன…?
1.தன் குடும்ப நலத்தைப் பெருக்கிக் கொள்வதற்காகவா… அல்லது வளப்படுத்திக் கொள்வதற்காகவா… கூட்டங்களை அவர் கூட்டினார்…?
2.இன்றைய நடைமுறை வழி அதைத்தான் காட்டுகின்றது.

ஆனால் அன்று அவர் காட்டிய அன்பு வழியில் உயர் ஞான சக்தி பெறுபவர்… எண்ணிக்கையில் பலர் இருப்பினும் அவர்களும்… வழி வந்த குருக்களின் போதனையால் அறியாத உணர்வுகளுக்கே செலுத்தப்படுகின்றனர்.

உண்மை வழியை அறிந்து அந்த மகான் காட்டிய வழிதனைக் கடைப்பிடிக்க முயல்வோர் முயலட்டும்.

அன்பு கொண்டு குணங்களின் செயலைத் தன்னில் கண்ட இயேசுபிரான் “சைத்தான்” என்று காட்டியது தீய குணங்களைத்தான்.

தீய குணங்களுக்கு மனம் ஆட்படும் பொழுது அதி ஆசைகளின் வழி செல்லும் மாற்று நிலைகளைக் காட்டி… அவைகளைப் பக்குவமாக விலக்கிடவே தியானத்தின் வழியாக காட்டப்பட்டது தான் அப்பமும் மீனும்.

வழி தவறிச் செல்லும் ஆடுகளை மீட்க வந்த மேய்ப்பர் என்று அவரை அழைக்கின்றார்கள். நேசிக்கும் மனோபாவத்தை அன்பு நிலையைக் கூற வந்த மகான் இயேசு உபதேசித்த நெறிமுறைகள் அனைத்தும் ஒலி அலைகளாக இந்தப் பூமியின் நாதத்தில் கலந்து சுழன்று ஓடிக்கொண்டிருக்கிறது.

அந்த அரிய போதனைகளைத் தியான வழி ஈர்ப்பின் செயலில் ஈர்த்தே உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ண வலுவிற்குச் சிந்தனை வசப்பட்டு அதை முயற்சி செய்வோர் இல்லையப்பா.

1.நாம் சொல்வது யார் மனதையும் வேதனைப்படுத்துவதற்காக அல்ல.
2.உண்மைகளை கூறினாலும் ஏற்றுக் கொள்வோரும் மிக அரிதாகவே உள்ளனரப்பா
3.அவைகள் மறைபொருளாகவே இருக்கட்டும்…
4.தியானத்தின் வழிதனில் அதை அறிய முயல்வோர்கள் முயலட்டும்.

மகரிஷிகளுடன் பேசுங்கள் என்று ஏன் சொல்கிறோம்…?

மகரிஷிகளுடன் பேசுங்கள் என்று ஏன் சொல்கிறோம்…?

 

நம் சூரியக் குடும்பத்தில் ஞானத்தில் பகுத்தறிவைப் பண்படுத்தும் மனிதத் தன்மை எப்படிச் செயல் கொள்கின்றதோ அதைப் போன்ற நிலை ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் உண்டு.

நம் பூமியில் ஞானமும் விஞ்ஞானமும் வளர்ந்துள்ளதைப் போன்று மற்ற சூரியக் குடும்பத்தில் நமக்கு மேல் வளர்த்த ஞானத்தின் அலை நிலையின் தொடர்பை நம் பூமியிலும் “ரிஷிச் சக்திகள்” தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு தான் உள்ளார்கள்.

தன்னைத் தான் உணரும் சக்தியால் தன் சக்தியைக் கொண்டு ரிஷிகளின் சக்தியுடன் நம் ஆத்மாவின் சக்தியை வளர்த்துக் கொள்ள முடியும்.

ரிஷிகளின் சக்திக்கும் நம் சக்திக்கும் இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளும் முறைதான் இந்தத் தியான முறை. ரிஷிகளின் சக்தி அனைத்தும் பால்வெளி மண்டலத்தில் (பரம்பொருளாக) படர்ந்துள்ள செயலில் எல்லோருக்கும் கிடைக்கும்படியாகத்தான் படரவிட்டுள்ளார்ககள்.

அத்தகைய மாமகரிஷிகள் தன் தன் இயக்கத்திற்கொப்ப… தன் வளர்ச்சிக்கொப்ப வலுவை வலு கூட்டிக் கொள்வதற்காக… தன் குணத்தை… மணத்தை… ஒளித் தன்மையில் நட்சத்திர ஒளியாகத் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் எண்ணிலடங்காத நிலையில் இந்தப் பிரபஞ்சத்தின் சுழற்சியில் சுழன்று கொண்டே உள்ளனர்.

அந்தச் சுழற்சியின் கதியின் இயக்கத்தைச் செயல்படுத்தக்கூடிய வளர்ச்சிக்கு அறிவின் ஞானத்தை எடுக்கவல்ல எண்ணம் கொண்ட மனிதர்களை எல்லாம் தன் வலுவின் தொடரில் ஈர்க்கின்றார்கள்.

1.அத்தகைய மெய் ஞான வித்து ஓங்கி வளரத்தான்
2.தெய்வ குணங்களும் தெய்வ சக்தியும் இன்றும் சூட்சம கதியில் செயல்பட்டுக் கொண்டேயுள்ளது.
3.மலர் விரிந்து மணம் பரப்பி எப்படிக் காற்று மண்டலத்தை இனிமையாக்குகின்றதோ
4.அதைப் போன்று இன்றும் ரிஷி சக்திகளின் செயல் செயல்பட்டுக் கொண்டே தான் உள்ளது. (அருள் மணங்களாக)

தெய்வ குணத்தையும் தெய்வ சக்தியையும் வளர்க்கக்கூடிய மெய் ஞானிகளின் சிந்தனையால் தன் அறிவின் வளர்ச்சியைச் சூட்சமத்தின் துணை கொண்டு மேலோங்கி வளர்த்ததின் தொடரில் தான் இன்றைய உலகில் இருக்கும் மருத்துவம் விஞ்ஞானம் எல்லாமே வளர்ந்தது.

இருந்தாலும் இன்று மக்கள் தொகையின் பெருக்கத்தைப் போன்றே மனித அறிவின் பெருக்கமும் “ரிஷிகளின் சிந்தனை சக்தியுடன் தொடர்பு கொண்டு…!” தன்னை உணர்ந்து ஆத்ம பலம் பெற்றிருந்தார்கள் என்றால் இந்தப் பூமியில் உள்ள மனிதனின் சிந்தனைகள் வேதனை பயம் கோபம் குரோதம் அச்சம் என்ற விபரீத வினையினால் வரக்கூடிய பல கொடிய வியாதிகளினாலும் கொடிய விபத்துக்களினால் வேதனைப்பட்டு இறக்கும் நிலையிலிருந்து தப்பியிருக்கலாம்.

1.ஏனென்றால் இன்று ரிஷிகளின் அலையைக் காட்டிலும்
2.வேதனை ஒலி கொண்ட ஆவி உலக ஆத்மாக்களின் அலைத் தொடர் அதிகமாக மனிதனைச் சாடிக் கொண்டிருக்கின்றது.

இதிலிருந்து விடுபடும் நிலையாக யாம் சொல்லக்கூடிய தியான முறையின் தொடர்பில் ரிஷிகள் வழி காட்டிய துருவ மகரிஷியையும் சப்தரிஷி மண்டலத்தை இயக்கும் துருவ நட்சத்திரத்தினையும் எண்ணி அதிலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணித் தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தை புருவ மத்தியின் வழியாக எண்ணித் தியானம் எடுக்கும் பொழுது
1.நம் எண்ணத்தின் ஒலி செலுத்தக்கூடிய தொடரில்
2.அந்தத் தொடரின் அமில ஒலியின் உயிர் ஒளித் தொடர்பு ஜீவ உயிர் காந்த சுழற்சியில்
3.நம் ஆத்மாவில் ரிஷிகளின் தொடர்பலைகள் ஈர்க்கப்பட்டு
4.அவ்வாறு அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் தியானத்தின் சிந்தனை சக்தியால் (அதனால் தான் மகரிஷிகளுடன் பேசுங்கள் என்று சொல்கிறோம்)
5.இந்தப் பூமியின் பிடிப்பலையிலிருந்து நம் ஆத்மாவை ரிஷிகளின் சக்தியுடன் இணைத்து விடுகின்றோம்.

இப்படிப்பட்ட தியானத்தின் மூலம் ரிஷிகளின் தொடர்பில் நம் ஆத்மாவும் கலக்கும் பொழுது
1.அந்த இறைத் தன்மை கொண்டோரின் இறைக்கு நாம் உட்படுத்தப்பட்டு
2.நம் ஆத்மாவும் தெய்வ நிலை பெறும்.
3.பிறப்பின் பலனை ஒவ்வொரு உயிராத்மாவும் பெறும்.

உயிரை நாம் உணர வேண்டியதன் அவசியம்

உயிரை நாம் உணர வேண்டியதன் அவசியம்

 

இன்றைய மனித வாழ்க்கையில்
1.எண்ணத்தின் உணர்வு சரீர இயக்கத்தின் கதியால் இருப்பதாலும்
2.”சரீரத்தையே நான்…!” என்ற முறைப்படுத்திச் செயல்படுத்துவதாலும்
3.சரீரத்திற்காக மட்டுமே பிறப்பின் தொடர் கொண்டு தன் வாழ்க்கையை அமைத்து வாழ்வதாலும்
4.கடைசியில் இறப்பு நிலையை எய்துகின்றனர்.

உயிரின் உயர்வை ஒவ்வொருவரும் இனியாவது உணர்ந்து கொள்ளுங்கள்.

இஜ்ஜீவிதத்தில் அதாவது மனிதனாக உருப் பெற்ற நிலையில் உயிர் என்ற சூட்சம ஒளிச் சரீரத்தின் இயக்கத்தில் சுழலும் தன்மையில்
1.தன் எண்ணத்தின் உணர்வை
2.எந்தச் சுவையின் தொடரில் சுவைப்படுத்துகின்றோமோ
3.அதற்கொத்த செயலாக உயிரும் ஆத்மாவும் வலுத் தன்மை கொண்டு
4.இந்தப் பிறப்பின் தொடரிலிருந்து பிறவா நிலை பெற முடியும்.
5.உங்களால் முடியும்.. உங்களை நீங்கள் நம்புங்கள்…!

இந்தச் சரீர இயக்கத்தின் கதியில் ஓடக் கூடிய உயிரணுக்களின் உணர்வுக்கொப்ப சரீர ஆத்மா அதனுடைய செயலைச் சரீர எண்ணத்தில் மோதக்கூடிய இயக்க நிலைதான் மனித இயக்க நிலை.
(1.அதாவது வெளியிலிருந்து சுவாசித்து உடலாக உருவான நிலையில் அதனின் இயக்கமாகவும்
2.அதிலே எது எது வந்து மோதுகின்றதோ அதனின் இயக்கமாகவும் தான் நாம் இன்று வாழ்கின்றோம்)

இப்படிப்பட்ட மனித இயக்கதில் பிறப்பு இறப்பு கதி ஓட்ட கால சுழற்சியின் வாழ்க்கை என்பது…
1.எந்த உணர்வுக்கொப்ப வாழ் நாள் செல்கிறதோ
2.(வெள்ளத்திலே அடித்துச் செல்லப்படும் பொருள் போல)
3.அதன் சுழற்சியில் சிக்கி இந்தப் பூமியின் இயற்கையின் கதியுடன் தான் மீண்டும் மீண்டும் சுழல முடியும்.

இதிலிருந்து மனிதனில் மறைந்துள்ள உண்மை நிலையின்
1.“நான் என்பது யார்…?” என்ற உயிரின் தன்மையை உணர்ந்தால் தான்
2.மனித தத்துவம் “ரிஷித் தன்மை” பெற முடியும்.

நம் ஆத்மாவின் வலு “திடம் பெற வேண்டியது” மிகவும் முக்கியம்

நம் ஆத்மாவின் வலு “திடம் பெற வேண்டியது” மிகவும் முக்கியம்

 

பூமியின் சுழற்சியுடனே பல வார்ப்பில் வளர்ந்த நாம் நம்முடைய இந்த மனித வாழ்க்கையின் தொடரில்
1.தன் உயிராத்மாவின் வளர்ச்சியை வளர்க்காதபடி
2.உடலின் இயக்கத்துக்கு மட்டும் அடிமைப்பட்டு வாழ்ந்தால்
3.இந்தப் பூமியின் இயக்கச் சுழற்சியில் மட்டும் தான் சிக்கிக் கொண்டிருக்க முடியும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து ஒவ்வொருவரும் விடுபட வேண்டும். ஏனென்றால் இந்தப் பூமியின் வளர்ச்சியில் வலுப் பெற்ற வளர்ச்சியே மனிதனின் நிலை தான். பூமியின் செயல்பாட்டிலேயே உயர்ந்த நிலை கொண்டதும் மனிதனின் நிலை தான்.

மனிதன் தன்னைத் தானே உணரும் ஞான ஒலியை… அதாவது அந்த “ஆத்மாவின் விழிப்பையும்…” அதன் மூலமாகப் பெறும் ஆத்ம ஒளியின் செயல்பாடு கொண்ட சக்தியினால் தான் சூட்சம இயக்கம் சுழல்கிறது.

1.கனம் கொண்ட கயிறைச் சுற்றி முறுக்கும் பொழுது “திடம்” பெற்று விடுகின்றது.
2.சில பொருள்களை வேக வைக்கும் பொழுது அதனுடைய “மணம்” வெளிப்படுகின்றது.
3.சில பொருள்கள் எரியும் பொழுது அதனுடைய மணமும் எண்ணமும் “ஆவியாக” புகை நிறத்தில் வெளிப்படுகின்றது.

அந்தந்தச் செயல்பாடுகளுக்கொப்ப அடுத்த நிலையின் மாற்றத்தில் (வேக வைத்தலோ அல்லது எரித்தலோ) திடமாகும் பொழுது
1.அதனுடைய வார்ப்பு நிலை
2.கயிறைத் திரித்தவுடன் முறுக்குவதைப் போன்று
3.கெட்டித் தன்மை ஏற்பட்டு விடுகின்றது.

பொருளை வேக வைக்கும் பொழுது ஆவி வெளிப்பட்டுப் பொருள் திடப்படுகின்றது. பொருளை எரிக்கும் பொழுது நீர்ச் சத்து வெளியேறி அந்தப் பொருள் பஸ்பமாகிச் சாம்பல் தான் திடமாகின்றது.

அதைப் போன்று இந்த ஆத்மாவின் இயக்கம்…
1.சரீரத்தின் ஓட்டத்தில் வாழும் காலத்தில்
2.ஆத்மாவின் வலு வளர்ச்சியைத் திடமாக்கிக் கொள்ள வேண்டும்
3.ஏனென்றால் ஆத்மாவின் வலு திடம் பெற்றால் தான் உயிரின் பரிமாணம் அதிகரிக்கப்படும்.

மனிதனுக்கு அடுத்த உயர்வு நிலையான ஞான நிலை எய்திட அந்த மெய்யை அறியும் மெய் அறிவிற்கு முலாமாக்கும் நிலையாக (சக்தியைச் சேமிக்கும்) ஆத்மாவின் முதிர்வு நிலையை “விழிப்பு…” நிலையாக்கினால் தான் முடியும்.,

அத்தகையை ஆத்ம விழிப்பு நிலை பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஒவ்வொரு நிமிடமும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும்
1.அந்த ஆத்மாண்டவனை..
2.நம் உயிரான ஈசனைப் புருவ மத்தியில் ஈஸ்வரா…! என்று எண்ணி
3.மெய் வழியைக் காட்டிக் கொண்டிருக்கும் சகல ரிஷிகளின் நேரடி அலைத் தொடர்பில்
4.உயிர் வழிச் சுவாசமாக ஈர்த்தெடுக்கும் பேரருள் பேரொளி வளர்ப்பினால் தான் முடியும்.

நமக்குள் மெய் ஒலி… மெய் ஒளி பிறக்க வேண்டும்

நமக்குள் மெய் ஒலி… மெய் ஒளி பிறக்க வேண்டும்

 

ஜீவன்கள் வாழ இந்தப் பூமியின் ஜீவ நாடியாக நீர் உள்ளதற்குப் பூமியில் எப்பொழுதுமே மழை பெய்து கொண்டிருப்பதில்லை. மேகங்கள் கருத்து இடியும் மின்னலும் தோன்றுகிறது. அப்பொழுது பல இடங்களில் பெய்யக்கூடிய அந்த மழை வெள்ளமாகின்றது.

வெள்ளமே ஆறாகக் கரை புரண்டு ஓடி நீர் நிலைகள் பூமியில் நிறைகிறது. அந்த நீரைக் கொண்டு தான் பல ஜீவராசிகள் உயிர் வாழ்கிறது. ஒரு இடத்தில் பெய்யும் மழை ஆறாகும் பொழுது பல இடங்களுக்குச் செல்கிறது.

இதே நிலை போல் மீண்டும் மீண்டும் அந்தந்த இடங்களுக்கொப்ப ஏற்படக்கூடிய நிலைகளைக் கொண்டு ஜீவராசிகளின் நிலையும் தாவர இனங்களின் வளர்ச்சியின் பயனாகக் கனியும் பூக்களும் (புஷ்பங்களும்) வளர்கிறது.

1.கனியும் பூக்களும் வருவதைப் போன்று தான்
2.மனித உணர்வில் மெய் ஒலி பெற.. மெய் ஒளி பெற… மெய் ஞானமாக்க..
3.பல நிலைகளில் நம் உணர்வின் எண்ணமுடன் மோதிடும் இன்னல்கள் ஏற்படுத்தும் காலங்களை
4.புருவ மத்தியில் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த ஜீவித உணர்வில் எடுக்கும் ஒலி கொண்டு தான் ஒளியாக மாறும்…!
5.அதாவது இடி மின்னலைப் போன்றே ஒலி ஒளி செயல் ஏற்படும் இன்னல்கள் அனைத்தையும் பேரொளியாக மாற்ற வேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் ஏற்படக்கூடிய எண்ணத்தின் மோதலை இடி மின்னலைப் போன்று உணர்வின் சமைப்பாக நாம் மாற்றும் பொழுது
1.நீரான பெருக்கம் மழையாகி ஜீவன்களை வளர்க்கப் பூமிக்கு வலு ஏற்படுகின்றதோ
2.அதைப் போன்று எண்ணத்தில் எதிர்படும் பல மாற்றங்களையும் உணர்வில் எடுத்து
3.நம் உணர்வுடன் எந்த எண்ணத்தின் மாற்று நிலைகள் மோதினாலும்
4.மேகத்தின் கருமை கொண்டு இடி மின்னல் வெடித்து மழை வருவதைப் போன்று
5.நாம் போகும் மார்க்கத்தில் ஞானத்தின் மெய் ஞானம் அறிய…
6.மோதிடும் எதிர் தன்மைகளை உணர்வின் எண்ணத்தால் மாற்றி உயர்ந்த ஞானத்தின் ஒலியாக நாம் எண்ணினால்தான்
7.அந்த ஒலியே (எந்த ஒலியாக இருந்தாலும்) ஒளியாகும்… நம் ஆத்மா பேரொளியாக ஆகும்.

மெய் ஒலி… மெய் ஒளி பிறக்க… மெய் ஞானிகள் அன்று
1.வாழ்க்கையில் தன் உணர்வுடன் மோதிய “எண்ணத்தின் ஓட்டத்தின் கதியைக் கொண்டுதான்…”
2.எண்ணத்தால் எதிர்படும் எதிர் நிலைகளை ஞானத்தின் பகுத்தறிவால் உணர்ந்து
3.மெய் ஒலி மெய் ஒளி பெற்று… மெய் ஞானியாகும் குணங்களைத் தன் ஆத்ம ஞானத்தால் வளர்த்து
4.ஆத்ம சக்தியின் சூட்சமத்தை… ஆதிசக்தியின் ஒளி சக்தியாக..
5.அகிலத்தில் படர்ந்துள்ள பரமாத்மாவின் பரம்பொருளை
6.”தனக்குள்ளேயே…!” மெய் ஞானிகள் அன்று கண்டார்கள்.

மெய் ஞானத்தின் ஒலி கொண்டு… ஒளி பாய்ச்சும் ஏக்கத்தில்… மெய் ஞானி பெற்றான் “ரிஷிச் சக்தி…!”

அந்த ரிஷிச் சக்தியின் செயல் நிலை தன் தன் கதியின் சுழற்சிக்குச் செயலாக்குவதைப் போன்று
1.ஒவ்வொரு மனிதனிடத்திலும் மறைந்துள்ள ஞானத்தைக் கொண்டு
2.வலுவை வளர்க்க வழியமைக்கும் நிலையைத்தான் இங்கே உணர்த்துகின்றேன் (ஈஸ்வரபட்டர்).

சர்வத்தையும் அமுதமாக்கிடும் திறன்

சர்வத்தையும் அமுதமாக்கிடும் திறன்

 

1.வாழ்க்கையின் எல்லா நேரங்களும் நல்ல நேரம் தான்
2.நல்ல நேரம் கெட்ட நேரம் என்பது இல்லையப்பா…!
3.விஷ அமில குணங்களையே (துன்பங்களையும் இன்னல்களையும்) அமுதமாக்கிடும் திறன் நாம் செய்யும் தியானத்திலேயே கிடைக்குமப்பா.

நம்முடைய எண்ணத்திலும் சுவாசத்திலும் மாற்றம் கொண்டு விடக் கூடாது…! என்று கூறுவதெல்லாம்
1.விஷத்தின் அமிலத் தன்மையில் ஒலி பிறப்பதைப் போல் (ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது)
2.நம் மீது மோதும் அனைத்திலுமே நம் உயிராத்மா வலுவான சக்தியைப் பெறுவதற்குண்டான
3.அத்தகைய செயற்பாடுகள் நிலை பெற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தான்.

நவக் கோள்களின் விஷத்தையே “நவபாஷாணச் சிலையாக” முருகனின் சிலையாக உருவாக்கியவர் போகர். ஜோதி நிலை பெறுவதற்காக
1.தன் எண்ணத்தின் தன்மையை ஞானவேல் என்ற ஆறாவது அறிவை உயர்த்தி
2.வான இயல் சக்திகளைப் புவியியலில் உள்ள மனிதர்கள் அனைவரும் பெற்றிட 5300 ஆண்டுகளுக்கு முன்பே வழி காட்டினார் அந்தப் போகமாமகரிஷி.

அதே தத்துவத்தை… அதாவது நவக் கோள்களின் சக்தியை தியான வலு ஈர்ப்பு கொண்டு
1.ஒவ்வொருவரும் தன் உயிராத்மாவின் முலாம் பிரகாசித்துச் சக்தி பெறுவதற்காக
2.நீல வண்ண இராமனாகக் காட்டினார் வான்மீகி மாமகரிஷி.
3.அனைத்துமே ஆத்ம வலு பெற்றிடும் செயல் முறைகள் தான்.

நாம் சுட்டிக் காட்டும் தியான வழிகளில் உயர் ஞான சிந்தனை வசம் நிலைப்போர் ஒவ்வொருவரும் தன் உயிராத்மாவை வளர்ச்சி கொண்டதாக ஆக்கிட
1.அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை
2.நவஜோதிகளாக உங்கள் உயிரான ஆத்ம ஜோதியில் கலக்கச் செய்யுங்கள்.

அந்த ஆதிசக்தியில் (இயற்கை) ஒன்றிட வேண்டும் என்று எண்ணம் கொண்டு உயர்ந்திட வேண்டும் என்று எண்ணுவோர் அனைவருக்கும் எமது (ஈஸ்வரபட்டர்) ஆசிகள்.