
நம் ஆன்மாவிற்குள் கொண்டு வர வேண்டிய சக்தி
வீட்டில் பெண்கள் கோலமிடுகின்றார்கள். கோலமிடும் போது புள்ளிகளை வைத்து இணைக்கப்படும் போது
1.எங்கள் குடும்பம் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும்…
2.இந்த வீட்டிற்கு வருவோர் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று எண்ணத்தில் உற்றுப் பார்த்து
3.இந்த உணர்வுகளை அந்தக் கோலத்திலே பதிவாக்க முடியும்.
4.ஏனென்றால் அந்தக் கோலப் பொடியிலும் மேக்னெட் உண்டு.
ஆகவே குடும்ப ஒற்றுமைக்காக உயர்ந்த எண்ணங்களை எண்ணி அருள் ஞானம் பெருக வேண்டும் நல் வாழ்க்கை வாழ வேண்டும். குடும்பத்தில் எதையெல்லாம் நல்லதாக வேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ அதை எல்லாம் எண்ணிக் கோலமிடலாம்.
நமக்குள் இது பதிவாகிறது… நல்ல இயக்கச் சக்தியாக மாற்றுகிறோம். நீங்கள் இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக நமக்குத் தெரிந்தவர்கள் அல்லது நண்பர்கள் நம் வீட்டுக்கு வருவார்கள். இங்கே வந்து அவருடைய கஷ்ட நஷ்டங்களை எல்லாம் சொல்ல ஆரம்பிப்பார்கள். நாம் “உம்…” கொடுத்துக் கேட்டுக் கொண்டே இருப்போம்.
எந்த இடத்தில் நின்று பேசினோமோ அந்த இடத்திலே பதிவாகிவிடும்… இருவர் உடலிலும் பதிவாகிவிடும்.
1.அடுத்தாற்போல் அந்த இடத்திற்கு மீண்டும் வந்தாலே அந்த வாசனை இயக்கி
2.உங்களை அறியாமலே “ஏதோ சங்கடமாக இருக்கின்றது…” என்ற நிலையில்
3.அந்த கவலையாகப் பேசிய அதே இடத்திலே அமர்ந்து மீண்டும் எண்ணி அதை வளர்க்கும்படி செய்யும் (பதிவு அப்படி இயக்கும்).
அதே போல ஊரிலிருக்கும் குறைகளைப் பற்றிப் பேசியிருந்தால் வேறு பாதையில் செல்ல மாட்டார்கள். ஒற்றைக்காலில் நிற்கக்கூடிய இடமாக இருந்தாலும் கூட அங்கே தான் செல்லும்படி அதை எல்லாம் கவரும்படி இந்த உணர்வு இயக்கும்.
இந்த நினைவுகள் அவ்வாறு தான் இயக்கும். அதே எண்ணத்துடன் வீட்டிற்குள் வந்தால் வீட்டிற்குள்ளும் இது வரும்.
அதாவது…
1.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று மனிதனுக்குள் இருக்கக்கூடிய நிலைகள் எப்படி உருமாறுகிறது…?
2.நம்மை அறியாத செயல்கள் சூட்சுமத்தில் எப்படி நடக்கிறது…?
3.இதையெல்லாம் எப்படி மாற்ற வேண்டும்…? என்பதற்குத்தான் உபதேசிக்கின்றோம்.
4.எல்லாம் நேரடியாக அனுபவித்துச் சொல்கின்றேன்… புத்தகத்தைப் பார்த்துப் படித்துச் சொல்லவில்லை.
குருநாதர் காட்டிய வழிப்படி இந்தியா முழுவதற்கும் இமயமலை முதல் கன்னியாகுமரி வரையிலும் சுற்றித் தெரிந்து கொண்ட பிற்பாடு தான் இதை எல்லாம் சொல்கின்றோம்.
ஒரு மனிதன் அவன் தெரிந்து தவறு செய்யவில்லை…! சந்தர்ப்பம் சூழ்நிலை தான் அவனைக் குற்றவாளியாக்குகின்றது. அதே சந்தர்ப்பம் சூழ்நிலை அவனை நோயாளியாக மாற்றுகின்றது… அதே சந்தர்ப்பம் சூழ்நிலையால் தான் குடும்பத்தில் கஷ்ட நஷ்டங்களும் வருகின்றது…!
1.இதிலிருந்து மீளும் வழி என்ன…? என்பதைத்தான் கோவிலில் வைத்து ஞானிகள் காட்டியிருக்கின்றார்கள்.
2.ஆனால் காசைக் கொடுத்து விலைக்கு வாங்கும் நிலைகளுக்கு இன்று அது மாறிப் போய்விட்டது.
இயற்கையின் உண்மை நிலைகளை நாம் நுகர்ந்தால் நமது உயிர் என்ன செய்யும்…? நாம் எண்ணியதை நமது உயிர் உருவாக்கிக் கொடுக்கும். அதற்குத் தான் அதிகாலையில் அந்த பிரார்த்தனையைச் செய்யும்படி எல்லோருமே சொல்கின்றார்கள்.
ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். அதை வளர்க்க வேண்டிய பொறுப்பு உங்களிடம் தான் இருக்கின்றது.
1.அந்த அதிகாலை நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் என்று எண்ணி எடுத்து உங்களுக்குள் சேர்த்துக் கொள்ளுங்கள்… குளிக்க வேண்டாம்…!
ஆனால் குளித்துவிட்டு மறுபடியும் நீங்கள் ஆடைகளை அணிந்து பாருங்கள். குளித்த வியர்வை வெளியில் வரும். ஆடையை இரண்டவது தரம் நுகர்ந்து பாருங்கள். ஆடையில் நாற்றம் வரும்.
ஆனால் அதிகாலை விழித்தவுடன்… படுக்கையிலே எழுந்து அமர்ந்து
1.அல்லது படுக்கையிலேயே துருவ நட்சத்திரத்தை எண்ணி நினைவுகளை அங்கே செலுத்தித் தியானித்த பின்
2.ஐந்து நிமிடம் கழித்து உங்கள் ஆடையை நுகர்ந்து பாருங்கள்.
நல்ல வாசனையாக இருக்கும். அந்த அருள் மணங்கள் தீமைகளை அகற்றும். ஆக… ஆடையில் படிகின்றது.
இதை எல்லாம் நாம் தெளிந்து தெரிந்து
1.நம் எண்ணத்தால் உயர்ந்த சக்திகளை நம் ஆன்மாவிற்குள் கொண்டு வரக்கூடிய பழக்கத்தை அவசியம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்…
2.நம் ஆன்மாவை வலுவாக்க வேண்டும்… தீமைகள் புகாது தடுக்க வேண்டும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.