கோடீஸ்வரன்

கோடீஸ்வரன்

 

நாம் எத்தனையோ கோடித் தவறுகளைப் பார்த்தாலும் அந்தந்த சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று உடலுக்குள் உள் செலுத்தித் தூய்மைப்படுத்தி இந்த உணர்வினை வலு சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.

அதற்குத்தான் இராமேஸ்வரத்தைக் காட்டினார்கள். நாம் பல கோடி உடல்களில் மற்றொன்றைக் கொன்று தின்று இன்று மனிதனாக வளர்ச்சி பெற்று வந்திருந்தாலும் கோடிக்கரையாக வந்திருக்கின்றோம்… தனுசு கோடி.

தீமை என்று தெரிந்த பின்…
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அதைத் தாக்கி அதனின் வலுவை இழக்கச் செய்ய வேண்டும். அதுதான் விஷ்ணு தனுசு.
2.உயிரைப் போன்றே உணர்வின் அணுக்களை ஒளியாக உருவாக்குதல் வேண்டும்.
3.எத்தனை கோடி விதமான உணவுகளை நாம் சந்திக்க நேர்ந்தாலும் அத்தனையும் மாற்றி அமைக்க வேண்டும்.

ஏனென்றால் கோடிக்கணக்கான (எண்ணிலடங்காத) உணர்வுகளையும் ஒளியாக மாற்றி அமைத்தது அந்தத் துருவ நட்சத்திரம். அதன் உணர்வை அவ்வப்பொழுது நமக்குள் எடுத்துத் தீமைகளை நீக்குதல் வேண்டும்.

உதாரணமாக ரோட்டிலே நாம் செல்லும் பொழுது ஒருவன் வேதனைப்படுவதைப் பார்க்கின்றோம். அந்த நிமிடமே ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று இரத்தங்களில் கலக்கச் செய்ய வேண்டும்
1.உள்முகமாக இந்த உணர்வின் வலுவை நமக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
2.வேதனைப்படும் உணர்வு நமக்குள் வலுவாகச் சேர்வதற்கு முன் அதைத் தடுத்து நிறுத்திவிட்டு
2.வேதனைப்படுபவனுக்கு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் கிடைக்க வேண்டும்
3.அவன் அவன் நலமாக வேண்டும் என்று எண்ணிச் சொல்லிவிட வேண்டும்.

அவன் உணர்வு நமக்குள் வராது…!

அதே போன்று இரண்டு பேர் கொடூரமாகத் தவறு செய்கின்றார்கள். சண்டையிடுகின்றார்கள். அதைப் பார்த்த பின் அந்த உணர்வுகள் நமக்குள் புகாதபடி தடுக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று ஏங்கி புருவ மத்தியில் உயிரான ஈசனிடம் வேண்ட வேண்டும். அவர்களுடைய தவறுகள் நமக்குள் புகாதபடி தடுத்துக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தினுடைய சக்தி இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்ற உணர்வைச் சேர்த்து விட்டால்… அந்த உணர்வுகள் உள் புகுவதில்லை.

1.பின் அந்த உணர்வை ஈர்க்காது ஒதுக்கிவிட்டு
2.அவர்கள் இருவரும் ஒன்றுபட்டு வாழும் தன்மையும் பண்புடன் வாழும் தன்மையும் பெற வேண்டும் என்று
3.நாம் விலகி விட வேண்டும்… அந்தத் தீமை நமக்குள் விளையாது.

ஏனென்றால் தவறு செய்கின்றார்கள் என்றால் அதனைப் பார்க்காமல் இருக்க முடியாது கேட்காமல் இருக்க முடியாது.

ரோட்டிலே செல்லும் போது ஒரு வாகனம் வேகமாக வருகிறது என்றால் பார்த்தவுடனே “பயம்” என்ற நிலை வந்து விலகுகின்றோம்.

பார்க்கின்றோம்… பஸ் திடீரென்று நம் பக்கமாகத் திரும்புகின்றது. அந்த அதிர்ச்சியின் வேகத்தில் நாம் ஒதுங்கி விடுகின்றோம்.
1.அப்படி அதிர்ச்சி கொடுக்கவில்லை என்றால்
2.நாம் அங்கிருந்து விலக முடியாது.

அதிர்ச்சியை ஊட்டுவது எது…?

அதன் வேகத் தொடரை நம் கண் நுகர்ந்து உயிரிலே மோதப்படும் போது உணர்ச்சிகள் தெரிய வருகின்றது. ஆனாலும் அடுத்து அதிர்ச்சியின் தன்மை கூட்டி உடலில் பதட்டமாகி வேகமாக விலகிச் செல்ல வைக்கின்றது.

விலகிச் சென்றாலும் அதிர்ச்சியின் உணர்வு நம் இரத்தத்தில் கலந்து நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் சேர்ந்து விட்டால் அடிக்கடி பய உணர்வும் மற்ற நிலைகளும் ஏற்பட நேர்கின்றது.

பயம் அதிகமானால் சிந்திக்கும் தன்மை கூட சில நேரங்களில் முடியாது போய் விடுகின்றது. இப்படி…
1.நம் சந்தர்ப்பம் நாம் நுகர்ந்த நிலைகள் நம் இரத்தங்களிலே மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டே உள்ளது.
2.சந்தர்ப்பத்தில் தப்பினாலும் அடுத்த கணமே… ஈஸ்வரா என்று
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று அந்த அதிர்ச்சியின் உணர்வைத் தடுத்துப் பழகுதல் வேண்டும்.

இப்படி வாழ்க்கையில் எத்தனையோ விதமான உணர்வுகள் நமக்குள் வரும்…! அதை அதை அவ்வப்பொழுது தடுத்து துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து மாற்றிக் கொண்டே வந்தோம் என்றால் அதுதான் “தனுசு கோடி…”

ஆகவே… உயிரின் தன்மை ஒளியாக்கிய அந்த உணர்வை… அந்தந்த நேரத்தில் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குத் தீமை சேராதபடி தடுத்து நிறுத்துகின்றோம்.

உடலில் விளைந்த அந்த உணர்வுகள் கொண்டு
1.“இந்த உயிர்” அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலு கொண்டதால் நேராக நம்மை அங்கேயே அழைத்துச் செல்கின்றது.
2.தொக்கிய உணர்வின் அணுக்களை அங்கே தூய்மைப்படுத்தி விடுகிறது

அப்போது ஏகாந்தமாக… எத்தகைய எதிர்ப்பும் இல்லாது என்றும் மகிழ்ந்து வாழ்ந்திட முடியும்…!

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இரத்த நாளங்களில் சேமித்துக் கொண்டே வந்தால் நம் சிந்தனை எப்போதும் தெளிவாக இருக்கும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இரத்த நாளங்களில் சேமித்துக் கொண்டே வந்தால் நம் சிந்தனை எப்போதும் தெளிவாக இருக்கும்

 

நஞ்சினை நீக்கிடும் சக்தி பெற்றுப் பரிணாம வளர்ச்சியில் வந்த இந்த மனித உடலில்… இப்போது அன்றாட வாழ்க்கையில் வரும் விஷத்தன்மைகளை நீக்கத் தவறினால்… மீண்டும் அந்த விஷத்தினையே சிறுகச் சிறுகச் சேர்த்து விஷம் கொண்ட உயிரணுக்களாக நம்மை அது மாற்றிவிடும் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆகவே அந்த விஷத்தை அவ்வப்போது நீக்க வேண்டும் என்றால்
1.விஷத்தை அகற்றி இன்றும் ஒளியின் சுடராக இருக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெற வேண்டும்
2.அதை நீங்கள் பெறுவதற்குத்தான் அடிக்கடி “துருவ நட்சத்திரத்தைப் பற்றி” உங்களுக்கு யாம் (ஞானகுரு) உபதேசிப்பது.

துருவ நட்சத்திரமாக ஆவதற்கு முன் அகஸ்தியன் தன் வாழ்க்கையில் தீமைகளை அகற்றிய உணர்வுகளும் இந்தப் பூமியில் படர்ந்துள்ளது

அகஸ்தியன் துருவனான பின் வளர்ச்சியில் திருமணமாகி… திருமணமான பின் கணவனும் மனைவியும் இருவரும் ஒன்றாகி… நஞ்சினை அகற்றிடும் அணுக்களைத் தனக்குள் உருவாக்கி… இரு உயிரும் ஒன்றாகித் துருவ நட்சத்திரமாக அமைந்துள்ளார்கள்.

நம் பூமிக்குள் வரும் அல்லது இந்த பிரபஞ்சத்திற்குள் படர்ந்து கொண்டிருக்கும் உணர்வலைகளை ஒளியாக மாற்றிக் கொண்டு இன்றும் ஏகாந்தமாக நிலை கொண்டு இருக்கின்றார்கள்.
1.எந்த விஷத் தன்மையும் அவர்களைத் தாக்குவதில்லை…
2.விஷத்தையே ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளார்கள்…
3.அதை நாம் அனைவரும் பெற வேண்டும்.

வைரம்… அதில் விஷத்தன்மை அதிகரிக்கப்படும் பொழுது அந்த விஷத்தின் உணர்வுகள் கொண்டு தான் அதனின் (வைரத்தின்) வீரிய சக்தியை வெளிப்படுத்துகின்றது.

வைரத்தைப் போல் விஷத்தை அடக்கி உணர்வை ஒளியாக மாற்றிடும் அணுக்களை உருவாக்குவது தான் நாம் செய்யும் காலை துருவ தியானத்தின் முக்கிய நோக்கம்.

ஏனென்றால் இந்த மனிதனுக்குப் பின் அடுத்த நிலை… பிறவி இல்லா நிலை தான்…!

இந்த மனித வாழ்க்கையில் எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம்…! என்றால் வாழலாம். ஆனாலும் நாம் நுகர்ந்தறிந்த விஷத்தின் தன்மை நம் உடல் அணுக்களில் சேர்க்கச் சேர்க்க… இந்த உடலுக்குப் பின் மீண்டும் பிறவிக்குத் தான் வர வேண்டி இருக்கும்.

நாம் எடுத்துக் கொண்ட குணங்களின் தன்மை எதுவோ அதுவாக உயிர் மாற்றிவிடும். இதிலிருந்து நாம் மீள வேண்டும்.

இப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களைப் பெறச் செய்யும் பொழுது
1.வாழ்க்கையில் வரும் தீமைகளை மாற்றிக் கொண்டே இருப்பதும்
2.உங்களுக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்கு வீரிய உணர்வை ஊட்டுவதும்
3.பகைமை உணர்வுகள் வராது தடுப்பதும்
4.தீமை தனக்குள் வராதபடி தடுக்கும் சக்தியையும் நீங்கள் பெறுவீர்கள்
5.அதன் உணர்வு கொண்டு சிந்தித்துச் செயல்படும் திறனும் நீங்கள் பெறுவீர்கள்.

ஆகவே துருவ நட்சத்திரத்தின் உணர்வை அடிக்கடி உங்கள் இரத்த நாளங்களில் பெருக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

எத்தகைய துயரமோ கஷ்டமோ மற்ற நிலைகளைக் கேட்டு உணர்ந்து வாழ்க்கையை வழிப்படுத்தி நடத்த அவைகளை நாம் உபயோகப்படுத்தினாலும்… அப்படி நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் விஷம் கொண்டதாக மாறிவிடுகிறது.

அத்தகைய விஷத்தினை மாற்றி அமைக்கும் சக்தி நமக்கு வேண்டும். அதற்கு நாம் நுகரும் உணர்வுகள் விஷத்தை முறித்திடும் சக்தியாக வர வேண்டும்.

நமது உடல் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சினைப் பிரிக்கின்றது. ஆனால் நஞ்சின் தன்மை நம் உடலில் உள்ள அணுக்களில் சேர்ந்து விட்டால்… நஞ்சையே நுகரும் நிலையாகி அதனால் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.

ஆகவே அதைத் தடுக்க
1.நஞ்சினை வென்று ஒளியாக நிலை கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தின் நிலையும்
2.அதன் தொடர் கொண்ட நஞ்சினை வென்ற உணர்வுகளையும் நாம் நுகர்ந்து
3.நம் இரத்த நாளங்களில்… நம் உடலில்… சேமித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அதே சமயத்தில் இன்றைய காற்று மண்டலமே நஞ்சின் தன்மையாக இருக்கப்படும் போது நம் உடுத்தியிருக்கும் ஆடைகளிலும் நஞ்சினை ஈர்க்கும் சக்தி வருகின்றது.
1.ஏனென்றால் ஆடைகளில் விஷம் கலந்த கலர்களைத்தான் இணைத்துள்ளார்கள்.
2.அது நம் உடல் வெப்பத்தினால் அதில் இருக்கும் விஷம் எத்தன்மையோ அதன் உணர்வைக் காற்றிலிருந்து கவர்ந்து
3.நமது ஆன்மாவிற்குள் கொண்டு வருகிறது… அந்த விஷத்தன்மையையே நாம் நுகர்கின்றோம்.
4.நம் உடலில் உள்ள அணுக்களுக்கும் சிறுகச் சிறுக விஷத்தின் தன்மையே சேர்கின்றது.

விஷத்தை வென்றிடும் சக்தியைச் சேர்ப்பதகு மாறாக விஷத்தின் உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது… விஷத்தையே உணவாக உட்கொள்ளும்… விஷத்தின் துணை கொண்டு வாழ்ந்திடும் நிலையே… இன்றைய காலங்களில் வளர்ந்து கொண்டுள்ளது.

விஷத்தை அடக்கி வைரம் எப்படி ஒளியாக இருக்கின்றதோ அதைப் போன்று நாம் ஆக வேண்டும் என்றால் காலை துருவ தியானத்தில் கணவன் மனைவி இருவருமே… அந்த சக்தி கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவியும் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று கணவனும் எண்ணுதல் வேண்டும்.

சர்வ நஞ்சுகளிலிருந்தும் நாங்கள் விடுபட வேண்டும் என்று இருவருமே சேர்ந்து
1.குடும்பத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
2.எங்கள் குழந்தைகளுக்கு அந்த சக்தி கிடைக்க வேண்டும்
3.பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் கருத்தறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
4.அமைதி கொண்டு வாழும் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வை அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்

இதை வளர்த்துக் கொண்டே வந்தால் நமக்குள் விஷத்தின் தன்மை சேராது தடுத்துக் கொள்ள முடியும்.

ஆகவே ஒவ்வொரு நாளும் காலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் இரத்த நாளங்களிலே அதிகமாகச் சேர்த்துக் கொண்டே வரவேண்டும்.

வெளியில் எங்கே சென்றாலும் இது போன்று துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து எந்த விதமான அசம்பாவிதங்களும் நடக்காதபடி நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும்.

நம்முடைய கூர்மை (இலக்கு) எதன் மீது இருக்க வேண்டும்…?

நம்முடைய கூர்மை (இலக்கு) எதன் மீது இருக்க வேண்டும்…?

 

உயிர் தோன்றி அணு தோன்றி சூரியனாக வளர்ச்சி பெற்றது வரையிலும்… சூரியனின் வளர்ச்சியில் உயிரணுக்களை உருவாக்கி மனிதனான பின் மனிதனின் நிலைகளில் பிறவி இல்லா நிலை அடைந்த மகரிஷிகளின் உணர்வுகளை குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உபதேசிக்கின்றோம்… உங்களுக்குள் பதிவு செய்கிறோம்.

தியானத்தின் மூலம் அந்த மகரிஷிகள் உணர்வுகளைப் பெருக்கி அதனின் வலுக் கொண்டு நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்களை நாம் அனைவரும்
1.அந்தச் சப்தரிஷி மண்டல ஈர்ப்பின் துணை கொண்டு அங்கே உந்தித் தள்ள வேண்டும்.
2.அதே சமயம் அந்த ஒளிக் கதிர்கள் இந்த உயிரான்மாக்களின் மீது படப்படும் பொழுது உடல் பெறும் உணர்வுகள் கரைக்கப்படுகின்றன.
3.உயிருடன் ஒன்றிய ஒளியின் அறிவு நிலைத்து என்றும் அழியா ஒளிச் சரீரமாக வளர்ச்சி பெறத் தொடங்கி விடுகின்றது.

அந்தக் காலங்களில் இவ்வாறு விண் சென்றவர்கள் தான் சப்தரிஷி மண்டலங்களாக… முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

எண்ணிலடங்காதவர்கள் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு பிறவியில்லா நிலை அடைந்துள்ளார்கள்.
1.ஏனோ காலத்தால் பக்தி என்ற நிலையாக அது மாற்றப்பட்டு மனித உடலின் இச்சைக்கு என்றே மாற்றிவிட்டார்கள்.
2.உண்மையின் உணர்வுகள் மறைந்தே போய் விட்டது… மெய்யின் உணர்வுகளை நாம் அறிய முடியாதபடி தடைப்படுத்தப்பட்டது.

இதைக் கேட்டறிந்த அனைவரும் உங்கள் குடும்பத்தைச் சார்ந்த மூதாதையர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்றிருந்தால் இனியாவது இதன் வழி தியானியுங்கள்.

அருள் வழியை உங்களுக்குள் பெருக்குங்கள். இதன் துணை கொண்டு அந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யுங்கள். உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடுங்கள். ஒளி பெறும் அறிவின் தன்மையை நிலைக்கச் செய்யுங்கள்.

அருள் மகரிஷிகளின் உணர்வைத் துணை கொண்டு என்றும் பேரின்பப் பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் அருள் மகரிஷியின் அருள் வட்டத்தில் முன்னோர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்யுங்கள்.

அவர்கள் முன் சென்றால் பின் நாமும் அங்கே செல்கிறோம். அந்தப் பேரின்பப் பெரு வாழ்வை அடைவது தான் மனிதனின் கடைசி எல்லை.
1.அகண்ட அண்டத்தில் எங்கும் செல்லலாம்
2.இருப்பிடத்தில் இருந்து கொண்டே எதையும் நுகரலாம்… அருள் ஒளியின் தன்மையைப் பெறலாம்.

இந்த மனித உடலில் இப்போது நினைவிருக்கும் பொழுதே அருள் மகரிஷிகள் உணர்வைப் பெருக்கி ஒளியின் சரீரமாக உருவாக்குங்கள்

குருநாதர் காட்டிய அருள் வழியில் இங்கே உபதேசிக்கின்றோம். உணர்வைப் பதிவு செய்கின்றோம்.
1.உங்கள் நினைவின் ஆற்றலை விண்ணுக்குச் செலுத்தச் செய்கின்றோம். அந்த உணர்வைப் பெறத் தகுதி ஏற்படுத்தினோம்.
2.அதை நீங்கள் வளர்த்துக் கொண்டால் நீங்கள் எண்ணியதை உயிர் உருவாக்குகின்றது…
3.உணர்வின் ஆற்றலைப் பெருக்குகின்றது… நினைவின் எண்ணம் கூர்மையாகின்றது.

அதன் வலிமை கொண்டு எதன் மீது நினைவைக் கூர்மையாகச் செலுத்துகின்றீர்களோ அங்கே அழைத்துச் செல்கின்றது இந்த உயிர்.

ஆகவே… நம்முடைய கூர்மை துருவ நட்சத்திரத்தின் மீதும் சப்தரிஷி மண்டலங்களின் மீதும் இருத்தல் வேண்டும். கூர்மை அங்கே இருந்தால் நாம் எந்த நேரத்தில் உடலை விட்டுச் சென்றாலும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து உடல் பெறும் உணர்வுகளை மாற்றி ஒளி பெறும் உணர்வாக விளைந்து பேரின்பப் பெருவாழ்வு அடைவோம்.

ஆகவே… இதை நீங்கள் பின்பற்ற வேண்டும். உங்களிடமிருந்து வெளிப்படும் உணர்வுகள் மற்றவருடைய தீமைகளை அகற்றிடும் சக்தியாக வளர வேண்டும்.

ஞானிகள் நமக்குக் கொடுத்ததெல்லாம் தப்பா…?

ஞானிகள் நமக்குக் கொடுத்ததெல்லாம் தப்பா…?

 

ஆண்டவன் பெயரைச் சொல்லி… சாமி பெயரைச் சொல்லி… நான் அதைச் செய்து தருகின்றேன்
1.ஆண்டவனயே என் கையில் வைத்திருக்கிறேன்… தெய்வத்தைக் கைவல்யப்படுத்தி வைத்திருக்கின்றேன்
2.உனக்குப் பல கோடி கிடைக்கும் என்று ஆசைகளை ஊட்டுவோர் வழியில் சிக்கி மனித ரூபத்தையே இன்று சிதறடித்துக் கொண்டுள்ளோம்.

ஏனென்றால் கடைசி நிலையாக இருக்கக்கூடிய நாம் இன்று எதைப் பெறுகின்றோம்…? என்று சிந்தித்துப் பாருங்கள். மனித உடலில் சகலத்தையும் உருவாக்க முடியும் என்று அரச நிலைகள் கொண்டு சாகாக்கலை ஆகின்றோம்.

ஆனால்
1.ஞானிகள் வேகாநிலை பெற்றவர்கள்.
2.மீண்டும் ஒரு உடலுக்குள் புகாது ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

வேகாக்கலை என்றால் நாம் தீயிலே குதித்தாலும் இந்த உயிர் அது வேகுவதில்லை. உணர்வுகள் கருகுகின்றது உணர்ச்சிகள் மாறுகின்றது உடல்கள் கருகுகின்றது.

உடலை விட்டுச் சென்ற பின் அந்த கருகிய உணர்வை உயிர் எடுத்துக் கொண்டு அந்த உணர்வுக்குத் தக்கவாறு “எரி பூச்சியாக” அடுத்து உருவாக்கி விடுகிறது.

ஆனால் அதே சமயத்தில் இறக்கும் தறுவாயில் நண்பா..! நான் போகின்றேன்…! என்று பாசத்துடன் எண்ணப்படும் பொழுது அந்தப் பற்று கொண்ட உடலுக்குள் சென்று… எரிச்சல் தாங்காது நண்பனையும் கருக்கும் நிலைகளுக்கே கொண்டு சென்று விடுகிறது… தற்கொலை செய்யும்படி ஆகிவிடுகின்றது.

நன்றாக யோசனை செய்து பாருங்கள்…!

இந்த வாழ்க்கையிலே நம்மால் தாங்க முடியவில்லை என்றால் உடனே தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் வருகின்றது செய்யும் போது நண்பன் மீது மிகுந்த பாசத்துடன் இருந்தால் அந்த உடலுக்குள் சென்று அவனையும் தற்கொலை செய்யும்படி உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

சில வீடுகளில் ஆக்ஸிடென்டுகள் ஆகட்டும்.
1.ஐயோ…! இப்படி ஆகிவிட்டதே… இறந்து விட்டாரே…! என்று சொல்லப்படும் பொழுது
2.விபத்தான அதே உணர்வுகளை எடுத்தால் மீண்டும் மீண்டும் விபத்துக்களை அங்கே உண்டாக்கிக் கொண்டே இருக்கும்.

என்ன வாழ்க்கை…? என்று தாங்க முடியாது தற்கொலை செய்து இருந்தால் அந்த உணர்வின் தன்மை வந்து குடும்பத்தில் எதிர்பாராத நிகழ்வுகளும் விபத்துக்களும் வந்து கொண்டிருக்கும்.

இதெல்லாம் சில குடும்பங்களில் இன்று பார்க்கலாம் இதையெல்லாம் தடுப்பது யார்…? மந்திரம் தந்திரம் எந்திரம் செய்து மாற்றிவிடலாம் என்றால் முடியுமா…?

சம்பாதித்த காசை எல்லாம் அவனுக்கு கொடுத்து விட்டு “எல்லாவற்றையும் செய்தேன்… ஒன்றும் முடியவில்லை” என்ற உணர்வு கடைசி முடிவாகி தற்கொலைக்கு அழைத்துச் செல்கின்றது.

உயிரால் வளர்க்கப்பட்ட மனித உடலின் வளர்ச்சியைக் கொன்று விட்டு நாம் எங்கே தப்ப முடியும்…?

இந்த உணர்வின் தனக்குள் எடுத்துக் கொண்ட பின் உயிர் கடைசியில் ஆனபின் இதே உணர்வின் நிகழ்ச்சிகள் வரும். அடுத்து அதற்குத்தக்க அடுத்த உடலாக மாறும்.

பாம்புகளை எடுத்துக் கொண்டால் அதனின் கடைசிக் காலத்தில் “தாங்க முடியவில்லை” என்றால் தன் உடலில் தானே கொத்திக் கொண்டு மரணம் அடைகின்றது. அதாவது
1.விஷத்தின் ஆற்றலை அது உருவாக்கப்படும் பொழுது தன்னால் முடியவில்லை என்றால்
2.கடைசி நிமிடம் இந்த உடலிலே வேதனைப்படுவதற்கு மாறாக தன்னையே கொத்தித் தீண்டி விடும்
3.விஷங்கள் பட்டபின் மடிந்துவிடும்.

விஷத்தின் தன்மை உணவாக உட்கொண்டு உணர்வின் தன்மை அந்த விஷமே ஜீரணிக்க உதவினாலும்… உடலில் மேல் இந்த விஷத்தன்மை பட்டபின் அது விஷத்தன்மைகள் ஊடுருவி அந்தப் பாம்பும் மரணம் அடைகின்றது.

நல்ல பாம்பின் விஷத்தை நாம் சாப்பிட்டால் நம்மை ஒன்றும் செய்யாது அதே சமயத்தில் நம் உடல் மீது எங்காவது புண் இருந்து… அந்த விஷம் இதுலே லேசாகப்பட்டால் போதும்… ஊடுருவி நம்மைக் கொன்று விடும்.

இதைப் போன்ற உணர்வின் இயக்கங்கள் எப்படி இருக்கின்றது என்று ஞானிகள் கண்டுணர்ந்தனர். அதைப் பின்பற்ற வேண்டுமா இல்லையா…?

யாரும் தவறு செய்யவில்லை. அன்பு கொண்டு பரிவு கொண்டு பண்பு கொண்டு பாசம் கொண்டுதான் வாழுகின்றோம்.
1.அந்தப் பாசத்தால் பிறர்படும் துயரத்தை நுகர்ந்து அறிகின்றோம் நம் உயிரிலே படுகின்றது.
2.அவன் உணர்வு இரத்தத்தில் கருவாகி இந்திரலோகமாகின்றது
3.பின் இங்கே அதை உருவாக்கிவிடுகின்றது.

அவன் உடலில் விளைந்த விஷத்தின் உணர்வுகள் எல்லா அணுக்களிலும் ஊடுருவி இதன் உணர்வின் தன்மை கருவாக்கி நல்ல அணுக்கள் மாற்றமாகும் தன்மையே பெறுகின்றது.

இதை மாற்றுவதற்கு என்ன வைத்திருக்கின்றோம்…?

சர்வ தீமைகளையும் நஞ்சினையும் வென்றவன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனது. உயிர் தோன்றி மனிதனாக வளர்ச்சி பெற்ற பின்… அகஸ்தியன் என்றும் ஒளிச் சரீரமாக துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.
1.அந்தத் “துருவ நட்சத்திரத்தின் சக்தி” – இன்றும் என்றும் பூமிக்குள் நமக்கு முன் வந்து கொண்டே உள்ளது.
2.அதைக் கவர்ந்து அந்த நம் உடலில் சேர்த்துக் கொண்டால்… இருளை அகற்றி நாம் ஏகாந்தமாக வாழ முடியும்

இந்த விஞ்ஞானிகள் பல மருந்துகளை மனித உடலுக்குள் செலுத்தப்பட்டு மனிதனை 1500 வருடங்கள் வாழ வைக்க முடியும் என்று சொல்கின்றார்கள்.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால்
1.பல ஆயிரம் ஆண்டுகள் உயிருடன் ஒன்றி ஒளியாக வாழ முடியும்
2.இந்தச் சூரியன் அழிந்தாலும்… பிரபஞ்சமே காணாமல் போனாலும்
3.இந்தப் பிரபஞ்சத்திலிருந்து… அகண்ட அண்டத்தில் வரும் தூசிகளை நுகர்ந்து ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று விடுகின்றோம்
4.மனிதனான பின் அந்த வளர்ச்சிக்கு நாம் போக முடியும்

வலிமை மிக்க சக்தி எது…?

வலிமை மிக்க சக்தி எது…?

 

1.நாம் எத்தனையோ கோடிச் சரீரங்களில் தன்னைக் காத்திடும் உணர்வுகளைச் சேர்த்து சேர்த்து
2.நூறு குணங்கள் ஒன்றாகித் தீமைகளை நீக்கிடும் உடலாக்கியது.

நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்திருக்கும் நஞ்சினை மலமாக வெளியேற்றி… நல்ல மகிழ்ச்சி பெறும் உணர்வின் தன்மையை அறியும் அறிந்திடும் அறிவாக வைத்தது. இது ஆண்பால்… முருகா…!

பல கோடித் தீமைகளை நீக்கிடும் சக்தியாக… தீமைகளை நீக்கிடும் வலிமை பெற்றது இந்த மனித உடல். தீமைகளை நீக்கிடும் அந்த உணர்ச்சிகள் அது பெண்பால்… வள்ளி…! (வலிமைமிக்க சக்தி – வல்லி)

மனித உடலில் இருந்து நஞ்சை மலமாக்கும் தன்மை வரப்படும்பொழுது அது ஆண்பால் அதிலிருந்து அந்த உணர்வின் அறிவாக இயக்கப்படும் பொழுது பெண்பாலாக. ஆகின்றது.

அதற்குக் காரணப் பெயர் என்ன வைக்கின்றார்கள்…? “வள்ளி” அந்த வலிமைமிக்க சக்தியைப் பெண்பாலாக அப்படி வைக்கின்றனர். வள்ளி
1.அந்த வலிமைமிக்க சக்தி கொண்டு தான்
2.(அடுத்து) வலிமைமிக்க சக்திகளை நாம் பெற முடியும்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி… தீமைகளை நீக்கிடும் அந்த வலிமைமிக்க சக்தி பெற்று அது துருவ நட்சத்திரமாக ஆனான் என்பதனை மனிதனின் அறிவில் தெரிந்து கொண்ட ஞானிகள்…
1.இதை நமக்கு அறிவிக்க அந்த உணர்வுகளை வெளிப்படுத்துகின்றார்கள்.
2.அதை நாம் பதிவாக்கி விட்டால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற முடிகின்றது.

ஞானிகள் தன்னுள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை முருகனாக வடிவமைத்து… அருவத்தின் சக்திகளை நாம் பெறுவதற்கு வழி காட்டினார்கள். ஏனென்றால் உயிரணு தோன்றி பல தீமைகளையும் கொடுமைகளையும் வென்று விஷத்தின் ஆற்றலை மாற்றி ஒளியின் சரீரமாகப் பெற்றது துருவ நட்சத்திரம்.

பாம்பினங்களோ தன் உடலில் உருவான விஷத்தை இன்னொரு உடலிலே ஊடுருவச் செய்து… அந்த விஷத்தின் இயக்கமாக அந்த உடலில் உள்ள விஷத்துடன் இதைப் பாய்ச்சி அதனுடன் ஐக்கியமாக்கி… அதை விழுங்குகிறது.

விழுங்கிய பின் ஜீரணித்து…
1.இந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து மீண்டும் விஷத்தின் சேமிப்பாகி
2.அதன் உணர்வின் தன்மை வலிமையாக்கப்படும் போது… அது உறையும் தருணம் வந்தால்
3.சேமிக்கப்பட்ட அந்த விஷமே “நாகரத்தினமாக” மாறுகின்றது…!

பாம்பு பல உயிரின்ங்களின் விஷத்தினை அடக்கி… அதை எப்படி நாகரத்தினமாக (ஒளியாக) மாற்றுகின்றதோ… இதைப் போன்று பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்கி நீக்கி நாம் எடுத்துப் பழகிக் கொண்ட உணர்வுகள்… நஞ்சினை மலமாக மாற்றிடும் உடல் அமைப்பாக உருவாகியது.

ஆக…
1.வலிமைமிக்க சக்தி கொண்டு நஞ்சினை நீக்கிடும் அந்தச் சக்தி பெற்றது மனித சரீரம்.
2.அதனால்தான் அந்த வலிமை மிக்க சக்தியை வள்ளி என்று காட்டினார்கள் ஞானிகள்.

இதைப் போல் அகஸ்தியன் தன் வாழ்நாளில் நஞ்சினை வென்று உணர்வின் தன்மை ஒளியாக மாற்றினான். அகஸ்தியன் ஒளியாக ஆன ஆற்றலை வலிமைமிக்க சக்தி கொண்டு தான் நாம் அதைப் பெற முடியும்.
1.அதைப் பெற வேண்டும் என்று இப்போது நாம் ஏக்கம் கொண்டால்
2.நமக்குள் அந்தச் சக்திகள் அதிகமாகச் சேருகின்றது

அது தான் வசிஷ்டர்… கவர்ந்து கொண்ட சக்தி.

எந்த்த துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று நாம் இச்சைப்பட்டுக் கவர்கின்றோமோ… அது நமக்குள் இணைந்து அருந்ததியாக
1.அவன் எப்படி நஞ்சினை ஒளியாக மாற்றினானோ
2.அதே வழியில் நாமும் அந்த அகஸ்தியனை போன்று ஒளியின் தன்மை பெற முடியும்.

“துருவ நட்சத்திரத்தின் ஒளி கொண்டு” நம்மைக் காத்திடும் சக்தியாக அதை வளர்க்க வேண்டும்

“துருவ நட்சத்திரத்தின் ஒளி கொண்டு” நம்மைக் காத்திடும் சக்தியாக அதை வளர்க்க வேண்டும்

 

நாம் எந்தெந்த உணர்வின் ஒலியைப் (மொழி) பெருக்குகின்றோமோ அதற்குத்தக்கவாறு நம்முடைய நினைவாற்றலும் பல சக்திகளும் நமக்குள் உருமாறுகின்றது.

ஆகவே…
1.எந்த வகையிலும் எத்தகைய நிலை வந்தாலும்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை விடாது அதை எடுக்கப் பழகிக் கொண்டால்
3.இந்த வாழ்க்கையில் நமக்கு அது பேருதவியாக இருக்கும்.

ஏனென்றால் ஒருவர் அவர் பேசுவதை எங்கிருந்து எண்ணினாலும் அந்த உணர்வுகள் அலைகளாக நமக்குள் வருகின்றது… கவரப்படுகிறது.

அது போன்று துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்ததனால்… அதை நீங்கள் மனதில் எண்ணி… உங்கள் வாழ்க்கையில் எப்போது சலிப்போ சஞ்சலமோ வெறுப்போ கோபமோ பயமோ மற்ற எந்த உணர்வை நுகர நேர்ந்தாலும்
1.அப்படி நுகர்ந்த அந்த சக்தி உங்களுக்குள் பெருகுவதற்கு முன்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இதை உடலுக்குள் செலுத்தித் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
3.நாளை நடப்பதெல்லாம் நல்லதாக இருக்க வேண்டும்… நல் செயலாக இருக்க வேண்டும் என்று அந்த உணர்வுகளை மாற்றி அமைத்தல் வேண்டும்.
4.ஒவ்வொரு நாளும் இதைக் கடைப்பிடித்தால் வாழ்க்கையே தியானம் ஆகின்றது.

வராகன் தன் உணவுக்காகச் சாக்கடைக்குள் இருக்கக்கூடிய நாற்றத்தைப் பிளந்து நல்லதை நுகர்வது போன்று… தீமையான உணர்வுகள் உள் செல்லாதபடி துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தனித்துப் பிரித்து நமக்குள் சேர்ப்பிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

ஒரு காரியத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று செல்லும் போதோ உணவு உட்கொள்ளும் பொழுதோ இரவு படுக்கைக்குச் செல்லும் பொழுதோ மற்றவர்களுடன் கலந்து பேசும் பொழுதோ அல்லது பேசிய பின்போ
1.ஒரு நொடி துருவ நட்சத்திரத்தினை நினைவுக்குக் கொண்டு வந்து
2.அதைக் கலந்து மாற்றிக் கொண்டே வந்தால் நமது உணர்வுகள் பூராமே தூய்மைப்படுத்தும் சக்தியாக வளர்கின்றது.

வராகன் சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தைப் பிளந்து நல்லதை எடுத்தது போன்று… வெளியிலிருந்து வரக்கூடிய மற்ற தீமைகளைப் பிளந்து விட்டுத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை ஒவ்வொரு நிமிடத்திலும் பெற முடியும்.

துருவ நட்சத்திரத்தின் வலுவை நமக்குள் நுகர்ந்து கொண்டே இருந்தால் கசடான உணர்வுகளைப் பிளந்து விட்டு நம் உயிர் ஒளியின் தன்மையாக மாறும்…. பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டதிற்கு நாம் செல்ல இது உதவும்.

அன்று மெய் ஞானிகள் எப்படி இயற்கையின் இயக்கங்களைக் கண்டறிந்தார்களோ… அந்த இயற்கை வழியிலேயே தான் செயல்படுத்த வேண்டும். அதைத்தான் தியானம் என்று சொல்வது.

வரும் தீமைகளை அகற்றி அருள் ஒளி என்ற உணர்வைப் பெருக்கிப் பேரருளைப் பெற்று பேரொளியாக மாற முடியும். பேரருள் என்றால் இருளைப் போக்கும் சக்தி.
1.ஒவ்வொரு நொடியிலும் இப்படி எண்ணிப் பழகி விட்டால்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தி தன்னாலே தன்னிச்சையாக வந்து சேரும்.

இதில் ஒன்றும் சிரமமில்லை.

கோபமோ சலிப்போ வரும் போது நம்மை அறியாமலே அதன் வழிக்கு இழுத்துச் செல்லும். அதே போன்று துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப் பழகிக் கொண்டால் தீமைகளை எளிதில் மாற்றிவிடலாம்.

ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து வாழ்க்கையில் வரும் தீமைகள் புகாது தடுத்து இந்த வாழ்க்கையை அருள் வாழ்க்கையாக வாழ முடியும்.

1.உங்களுக்கு மன பலம் கிடைக்கின்றது.
2.உடல் பிடிப்பு வராது… செல்வத்தின் பிடிப்பும் அதிகமாக வராது.
3.அந்தப் பிடிப்பு வராது என்றாலும்… செல்வம் நம்மைத் தேடிக் கொண்டு வரும்… மகிழ்ச்சி வரும்…!
4.ஒளியான உணர்வைக் கொண்டு நம்மை காக்கும் சக்தியாக வளரும்

ஆனால் உடலை காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் “எனக்கு இப்படி ஆகிவிட்டதே…” என்று வேதனைகளைச் சுவாசித்தால் அந்த வேதனை வந்த பின் மகிழ்ச்சி பெறும் உடலாக்க் கூட நாம் காண முடியாது.

அடிக்கடி “துருவ நட்சத்திரத்தின் ஒளி கொண்டு” நம்மைக் காத்திடும் சக்தியாக நாம் கொண்டு செல்ல வேண்டும்… பேரொளியாக நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

குரு அருள் உறுதுணையால் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவீர்கள். உங்கள் பேச்சு மூச்சும் புனிதம் பெறும்… இந்த உலகையும் நீங்கள் காக்க முடியும்.

ஏனென்றால்
1.சிறுகச் சிறுக அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அதைப் பல லட்சம் பேர் குவிக்கப்படும் பொழுது
2.துருவத்தை நோக்கி ஒன்று சேர்த்து அந்தப் பகுதியில் ஓட்டையாகப் பிளந்திருந்ததை நாம் அடைக்க முடியும
3.விஷத் தன்மைகள் பூமிக்குள் புகாது தடுக்கவும் முடியும்

எப்படி நம் ஆன்மாவில் தீமைகள் புகுவதைத் தடுத்து ஒரு பாதுகாப்புக் கவசம் உருவாக்குவது போன்று நம் எண்ணத்தைக் கொண்டு இந்த பூமிக்குப் பாதுகாப்பாக இருக்கும் “ஓசோன் திரை கிழிந்ததையும்” நாம் அடைக்கவும் முடியும்.

ஏனென்றால் அணு குண்டுகளும் கதிரியக்கங்களும் பல விஷமான உணர்வுகளும் பரவியதால் ஓசோன் திரை கிழிந்தது அதே சமயத்தில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நம் எண்ணத்தை அந்தத் திசை நோக்கிச் செலுத்தினோம் என்றால் அது நாளடைவில் நல்லதாகும்.

1.குருநாதர் இட்ட கட்டளைப்படி நம் அனைவரது எண்ணங்களையும் ஒருங்கிணைத்து
2.அந்தத் துருவத்தை எண்ணி குறித்த காலத்தில் அது அடைபட வேண்டும் என்று செயல்படுத்த முடியும்.

உபதேசிப்பது புரியவில்லை என்று எண்ணுவதற்கு மாறாக… அதைப் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்திற்கு வாருங்கள்

உபதேசிப்பது புரியவில்லை என்று எண்ணுவதற்கு மாறாக… அதைப் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்திற்கு வாருங்கள்

 

யாம் (ஞானகுரு) உபதேசிப்பதை எல்லாம் புரியவில்லை என்று யாரும் எண்ணி விடாதீர்கள். குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது ஆனால் சந்தர்ப்பத்தால் டிவியைப் பார்த்து அதற்குள் பதிவாகி விட்டால் அதன் உணர்வின் நினைவு கொண்டே குழந்தைகள் பாடவும் ஆடவும் செய்யும்.

மிருகங்களுக்கும் தெரியாது ஆனால் நாம் சொல்லும் உணர்வுகள் பதிவாகி விட்டால் பின்… இங்கே வாடா…! என்றால் வருகின்றது போ…! என்றால் போகின்றது நாயோ பூனையோ பெரிய மிருகங்கள் கூட மனிதனுடைய உணர்வைப் பாய்ச்சிய பின்… நம் பார்வையில் வைத்துக் கொண்டால் அதற்குத் தக்க அந்த மிருகங்களும் இயங்குகிறது.

இதைப் போன்று தான்
1.அருள் ஒலிகளை… மெய் ஞானிகள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்
2.அந்தப் பதிவான உணர்வுகளை நினைவு கொண்டு… உங்கள் எண்ணத்தால் அதைப் பெற முடியும்… தீமைகளை அகற்ற முடியும்.

உங்களை நீங்கள் நம்ப வேண்டும்…!

காரணம்… எண்ணியதை இயக்குவதும் உங்கள் உயிரே…! எண்ணியதை உடலாக்குவதும் உங்கள் உயிரே…! ஆகவே துருவ நட்சத்திரத்தின் பேரருளை நீங்கள் பெறுங்கள்.

எத்தகைய விஞ்ஞான விஷத்தன்மைகள் உலகில் பரவி இருந்தாலும் அருள் உணர்வின் தன்மை பதிவான பின் தீமையை ஈர்க்கும் நிலைகள் மறந்து… பதிவு செய்த உணர்வு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கினால் நமக்குள் விஷத் தன்மை வராதபடி தடுக்க முடியும்.

ஆகவே… இருளான உலகிலிருந்து நீங்கள் மீளுங்கள். இருளிலிருந்து அனைத்து மக்களும் மீள வேண்டும் என்று “ஒன்று சேர்த்த உணர்வை” வளர்த்துக் கொள்ளுங்கள். இந்தக் காற்று மண்டலத்தில் பரவி இருக்கும் நச்சுத்தன்மைகளை அகற்ற… அதற்குண்டான வலிமையைப் பெறுங்கள்.
1.கூட்டமைப்பாக அருள் உணர்வைப் பெருக்கிக் கொள்ளுங்கள்
2.அந்த உணர்வின் அதிர்வுகளை நாம் அனைவரும் ஒன்று சேர்த்து இந்தப் பூமியில் பரப்புவோம்.
3.நமக்கு முன் பரவிருக்கும் நச்சுத்தன்மைகளை அகற்றும் சக்தியாக நாம் செயல்படுவோம்.

அப்போது தீமை செய்யும் உணர்வுகளை நாம் ஈர்க்க மறுக்கப்படும் போது சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்ந்து மேலே கொண்டு சென்றுவிடும்.

அதே சமயத்தில் விஞ்ஞான அறிவில் வந்த தீமைகளையோ அசம்பாவிதங்களையோ கொலைகளையோ கேட்டறிந்த உணவுகள் நமக்குள் அணுவாக உருவாகாதபடி… காலை துருவ தியானத்தில் அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று வலுவாக்கிக் கொள்ளும் ஒரு பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் அனைவரும் ஒன்று சேர்த்து இழுக்கப்படும் பொழுது
2.காலை ஆறு மணிக்கெல்லாம் நாம் ஈர்க்க மறுத்த தீமை செய்யும் உணர்வுகளை சூரியன் கவர்ந்து மேலே எடுத்துச் சென்று விடுகின்றது.

எந்தச் சூரியனிலும் சிக்காது இருப்பதை… வெகு தொலைவில் இருக்கும் “வால் நட்சத்திரம்” என்று சொல்வதை… சூரியன் கவரப்படும் பொழுது அதை எடுத்து எவ்வாறு மாற்றிக் கொள்கின்றதோ… அதைப் போல் மனிதர்களாக இருக்கும் நாம் “தீமைகளை ஈர்க்கத் தவறினால்” அதைச் சூரியன் கவர்ந்து சென்று தனக்குள் இருக்கும் உணர்வு கொண்டு அதை மோதி அந்த நஞ்சினைக் கரைத்து “மாற்றுப் பொருளாக” உண்டாக்கி விடுகின்றது.

குருநாதர் காட்டிய அருள் வழியில் ஒவ்வொரு மனிதரும் ஆறாவது அறிவால் செயல்படும் உணர்வுகள் கொண்டு இந்த வாழ்க்கையில் தெளிந்த மனதுடன் வாழ்வோம்.

இந்த உடல் நமக்குச் சொந்தம் அல்ல… உடலால் தேடிய செல்வங்களும் சொந்தமல்ல.
1.இந்த மனித உடலில் நாம் தேடும் அருள் உணர்வுகளே நமக்குச் சொந்தமாகின்றது… இருளை அகற்றுகின்றது.
2.நமது வாழ்க்கையில் மகிழ்ச்சி ஊட்டும் சக்தியாக வளர்கின்றது
3.அந்த மகிழ்ச்சி என்ற உணர்வுகளை நமக்குள் சேர்த்து இனி அடுத்து என்றும் பேரானந்த நிலை என்ற
4.பெருவீடு பெருநிலை என்ற பெருவாழ்வு என்ற நிலை அடைய “இந்த மனித உடல் தான் சிறந்த இடம்…”
5.இதிலிருந்து தான் அந்த உயர்ந்த சக்திகளைப் பெற முடியும்

குரு காட்டிய அருள் வழியில் பேரின்பத்தைப் பெறுவோம்… பெரு வாழ்வாக வாழ்வோம்.

நமக்குச் சரியான வழிகாட்டி துருவ நட்சத்திரம் தான்

நமக்குச் சரியான வழிகாட்டி துருவ நட்சத்திரம் தான்

 

திட்டியவர்களைப் பற்றியோ வேதனைப்படுவோரைப் பற்றியோ உங்களுக்குள் பதிவானால்
1.அவர்களை நினைக்கும் போது கோபம் வருகின்றது
2.அதே சமயத்தில் எனக்குத் துரோகம் செய்தான் பாவி என்று கோபத்துடன் வெறுப்புடன் எண்ணினால் அங்கே புரை ஓடுகின்றது
3.நன்மை செய்தவனைப் பற்றி உயர்வாக எண்ணினால் அங்கே விக்கலாகி அவனுக்கு நன்மை ஆகின்றது… நமக்கும் நல்லதாகிறது.

பாசத்தால் தன் குழந்தையை எண்ணுகின்றோம். அவன் வெளிநாட்டில் இருக்கின்றானே… அவன் என்ன செய்கின்றான்..? என்று பதட்டத்துடன் குழந்தையைத் தாய் வேதனையான நிலையில் எண்ணிப் பார்க்கப்படும் பொழுது
1.கெட்டிக்காரனாக இருந்தாலும் அங்கே அவன் சிந்திக்கும் திறன் இழந்து அவன் தோல்வியைத் தழுவும் நிலை வந்து விடுகிறது.
2.தாய் வேதனையுடன் எண்ணும்போது இந்த உணர்வு தாக்கப்பட்டு அவன் நடந்து சென்று கொண்டிருந்தால் எதிரில் வரும் வாகனங்களை அறியாதபடி விபத்துகள் ஏற்பட்டுவிடும்
3.அல்லது வாகனத்தை ஓட்டிச் சென்றால் தாய் வேதனையாக எண்ணிய உணர்வுகள் குறுக்காட்டி… எதிரில் வரும் வாகனத்துடன் மோதி விபத்தாகிவிடும்.

இப்படி… மனிதனுக்கு மனிதன் நாம் தொடர்பு கொண்டு தான் வாழுகின்றோம். அதிலே நம்மை அறியாது வரும் தீமைகளிலிருந்து மீள வேண்டும் அல்லவா. அதற்குண்டான சிந்தனையாக உங்களுக்கு விட்டு விடுகின்றேன்.

“குருநாதர் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எம்மை (ஞனாகுரு) எப்படிப் பெறச் செய்தாரோ” அதே போல் அந்த உணர்வின் தன்மையைப் பதிவாக்கி உங்களைக் காத்திடும் சக்தியாக அது வளர வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன். இந்தப் பதிவை நீங்கள் நினைவாக்கினால் உங்கள் உணர்வே உங்களைக் காக்கும்.

அகஸ்தியன் தீமைகளை வென்று இந்த மண்ணுலகில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிக் கணவனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றென இணைந்து நம் பூமியின் துருவ எல்லையில் துருவ நட்சத்திரமாக வீற்றிருக்கின்றனர்.

அதிலிருந்து வெளி வரும் ஒளிக்கற்றைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அதை அலைகளாக மாற்றுவதும்… நம் பூமியின் துருவப் பகுதி வழியாக நாம் வாழும் பகுதிக்குள் கொண்டு வருவதும்… அதை நாம் இப்போது நுகர்வதும் ஓர் நல்ல சந்தர்ப்பம் தான்.

கடலுக்குள் செல்வோர்…
1.இரவாகி விட்டால் இந்தத் துருவ நட்சத்திரத்தினைப் பார்த்துத் தான் பாதைகளை அறிந்து செல்வார்கள்
2.துருவ நட்சத்திரம் எந்தத் திசையில் தோன்றுகிறதோ வடக்கு தெற்கு கிழக்கு என்ற நிலைகள் என்று திசைகளை அறிந்து செல்வார்கள்.

நிலப்பகுதியில் உள்ளது போன்று அங்கே ரோடு இல்லை… வழி காட்டி இல்லை. துருவ நட்சத்திரத்தைப் பார்த்துத் தான் அவர்கள் போக வேண்டிய திசைகளில் செல்வார்கள். நாம் எந்த ஊரிலிருந்து வந்தோம்…? எங்கே செல்ல வேண்டும்…? என்பதைக் கப்பலில் செல்வர் அனைவரும் இதை வைத்துதான் செயல்படுத்துகின்றனர்.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு வடக்கு தெற்கு என்ற நிலையில் பாதரசத்தை வைத்து ஈர்க்கும் சக்தி கொண்டு தெற்கு வடக்கு என்ற நிலையில் இயந்திரத் துணை கொண்டு காணுகின்றார்கள்.

ஆனால் அன்று இயந்திரத் துணை இல்லாத பொழுது
1.துருவ நட்சத்திரத்தினை உற்று நோக்கி
2.அதையே எல்லையாக வைத்து வாழ்ந்தவர்கள் தான் பலர்
3.துருவ நட்சத்திரம் தான் அன்று அவர்களுக்கு வழிகாட்டி…!

ஏனென்றால் உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ வினாக்கள் தோன்றுவதை… அதற்குண்டான விடைகள் கிடைக்க வேண்டும்… எதிர்படும் தீமைளிலிருந்து விடுபட்டு உங்களுடைய சிந்தனைகள் தெரிந்து தெளிவாக செயல்பட வேண்டும்… தெளிந்த மனதாக மாற்றிப் பிறவி இல்லா நிலை அடைவதற்குத் தான் இதைக் காட்டுவது.

தீமை என்ற உணர்வுகள் மோதி அதனின் இயக்கமாக நீங்கள் மாறிடாது உங்கள் உணர்வை உங்களை இயக்கும். உங்களில் அது வளரும் அந்த தன்மை பெற வேண்டும் இனி வரும் எத்தகைய தீமையில் இருந்தும் உங்களை மீட்டிடும் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் திரும்பத் திரும்ப உங்களுக்குள் பதிவாக்குவது

வானை நோக்கி நீங்கள் உற்றுப் பார்க்கும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தில் இருந்து வரும் பேரருள் பேரொளியை ஏங்கிப் பெற முடியும்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகும் போது… அவன் நஞ்சினை ஒடுக்கி அதை எப்படி ஒளியாக மாற்றினானோ
1.அவன் கண்டறிந்த அறிவுகள் அனைத்தையும் நாம் பெற முடியும்
2.கற்று அல்ல… இந்தப் பதிவின் மூலமாக…!
3.அதற்குண்டான சந்தர்ப்பத்தைத் தான் இப்பொழுது உருவாக்குகின்றோம்.

முதல் மனிதன் அகஸ்தியன் அடைந்த அந்த எல்லையை நாமும் அடைய வேண்டும்.

“துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தனித்துப் பிரித்தெடுக்கக்கூடிய வல்லமையை” நாம் பெற வேண்டும்

“துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தனித்துப் பிரித்தெடுக்கக்கூடிய வல்லமையை” நாம் பெற வேண்டும்

 

விஞ்ஞான அறிவு கொண்டு டிவிக்களில் மனித உருக்களைப் படமாக்கிக் காட்டுகின்றார்கள்… ஒலி/ஒளி அலைகளாகப் பரப்புகின்றார்கள். எந்த அலைவரிசையில் திருப்பி வைக்கின்றோமோ அந்தப் படக் காட்சிகளையும் அதிலிருந்து வரும் சொல்களையும் காண்கின்றோம்.

இதைப் போன்று தான் ஒரு தெய்வத்தை வழிபட்டு வருகிறோம் என்றால்… அதை நமக்குள் பதிவாக்கி விட்டால்
1.பதிவான உணர்வுகள் அங்கு இருப்பது கல் சிலை தான்
2.அதிலே பல நிறங்கள் பல ஆடைகள் பல ஆபரணங்கள் எத்தனையோ விதமான அலங்காரங்கள் எல்லாவற்றையும் கண்களால் உற்றுப் பார்த்து
3.அந்த உணர்வின் அலைகளாக மாற்றித்தான் நாம் நுகர்ந்து அதை அறிகின்றோம்.

அதாவது அதன் மீது சூரியனுடைய ஒளிக் கதிர்கள் படப்பட்டு எத்தகைய கலர்கள் இருந்ததோ அந்த உணர்வலைகள் கவரப்பட்டு அந்த அலைகளாகக் கவர்ந்து வெளி வருகின்றது.

அதன் உணர்வைத் தான் நம் கண்ணின் கருவிழி தனக்குள் இதைப் பதிவாக்குகிறது. கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ சூரியனால் கவரப்படும் இந்த அலைகளைத் தனக்குள் எடுத்து இந்த பூமியில் பரவுவதைக் கருவிழி இங்கே பதிவாக்கியதனால் இதைக் கவர்ந்து கொள்கிறது.

கவர்ந்து நமது ஆன்மாவாக மாற்றி நம் உயிரிலே இணைக்கச் செய்து இந்த உணர்வின் அலைகளை உடலில் பரப்பச் செய்து அதன் உணர்ச்சிகள் எதுவோ அதன் செயலாக்கங்களை நம்மை அறியச் செய்கிறது.

மனிதனாக இருக்கக்கூடிய நாம் அறிந்து இதை கொள்ள வேண்டும்.

நான் (ஞானகுரு) படிக்காதவன் தான்…! குரு அருளைப் பதிவு செய்து அதன் வழி உணர்ந்து கொண்ட… தெரிந்து கொண்ட நிலையைத் தான் என்று வெளிப்படுத்துகின்றேன்.

சாமி என்னமோ சொல்கின்றார்…! விஞ்ஞானத்தைப் பற்றிப் பேசுகிறார்…! என்று எண்ண வேண்டியதில்லை.
1.விஞ்ஞான அறிவு கொண்டு எதைச் செய்கின்றார்கள்…? என்று குரு அருளால் இங்கிருந்து அதை நான் காண முடிகின்றது.
2.அந்த அலைகள் பரவி இருப்பதை என்னால் நுகரவும் அறியவும் முடிகின்றது.

காரணம்… விஞ்ஞானத்தின் அபரித வளர்ச்சியால் தீமைகள் பயக்கின்றது. அதிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்பதற்குத்தான் உங்களில் இதைப் பதிவாக்குகின்றேன்.

நீங்கள் நினைவு கொண்டு அந்த அருள் ஞானிகளின் அருள் உணர்வை எடுத்து “விஞ்ஞான விஷத்தன்மையால் வரும் பேரழிவிலிருந்து… உங்களை நீங்கள் மீட்டிக் கொள்ள வேண்டும்…”

எப்படிப் பல ஸ்டேஷனில் இருந்து அலைகள் வந்தாலும் டிவி.யைத் திருப்பி வைத்தவுடன்… அந்த ஸ்டேஷனுக்குரிய அலைகளை மட்டும் பிரித்து எப்படி எடுக்கின்றதோ… அதைப் போல்
1.துருவ நட்சத்திரத்தில் இருந்து வரும் ஒளி அலைகளைச் சூரியனுடைய காந்தப்புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி வருவதை
2.இப்பொழுது பதிவாக்கிப் பதிவு கொண்ட நிலையை நினைவைக் கூட்டி அந்த வலுவினை எடுத்துக் கொண்டால்
3.நாளைக்கு எத்தனை விபரீதங்கள் விஞ்ஞானத்தில் வந்தாலும் அதிலிருந்து பிரித்து
4.நீங்கள் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து உங்களைக் காக்க முடியும்
5.உங்கள் சார்புடையோரையும் நஞ்சிலிருந்து மீட்க முடியும்.

அந்த நிலையை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் குரு இட்ட ஆணையை… அந்த வழிப்படி செய்கின்றேன்

சூரியன் வாழ வேண்டும் என்றாலும் தனக்கு ஒத்த கோள்களின் தன்மை சமப்படுத்தினால் தான் இதுவும் வாழ முடியும். தனக்கொத்த நிலைகளில் வந்தால் தான் சூரியக் குடும்பமே ஜீவனுடன் இருக்க முடியும்.

உதாரணமாக குடும்பத்தில் குழந்தை பிறந்து வளர்ச்சியடைந்து திருமணமான பின் தனிக் குடும்பமாக செல்கின்றார்கள்.

இது போன்றுதான் இந்தச் சூரிய குடும்பத்தைச் சேர்ந்த நட்சத்திரங்கள் தனக்கென்று நிலையில் வரப்படும் பொழுது… கார்த்திகை நட்சத்திரம் அதுடன் சேர்ந்து ஏனைய நான்கைந்து நட்சத்திரங்கள் தனக்கென்று ஒரு குடும்பமாக சூரியக் குடும்பமாக பிரிந்து சென்று விட்டது.
1.அவை எடுத்துச் சமைத்து நம் சூரியனுக்குக் கொடுக்கும் உணர்வுகள்
2.சூரியனுக்குக் கிடைக்காது போய் விட்டது (அதனால் மங்கல் ஏற்பட்டுக் கொண்டுள்ளது).

இருப்பினும் நட்சத்திரங்களால் வெளிப்படுத்தப்பட்டு மின்னல்களாக வருவது… அதன் உணர்வுகள் பல நிலைகள் மாறினாலும் நமது பூமிக்குள் அந்த மின்னல்கள் தாக்கப்படும் பொழுது செடி கொடிகள் கருகி விடுகின்றது.

அதே மின்னல்கள் பூமிக்குள் ஊடுருவினால் எதிர் நிலையான நட்சத்திரங்களின் அலைகள் ஒரு இடத்தில் குவியப்படும்போது இங்கு எதிர் நிலைகள் உருவாகின்றது.

சாந்த குணங்களும் நல்ல பண்புகள் கொண்டிருக்கப்படும் பொழுது ஒருவன் பயமுறுத்தும் உணர்வினை வெளிப்படுத்துகிறான் என்றால் அதை நுகர்ந்தால் உடலையே அது எப்படிக் கலக்குகின்றதோ நம்மை அஞ்சச் செய்கின்றதோ… சிலருக்கு பேதி கூட ஆகிவிடும். அவன் தன்னைக் கொன்று விடுவான் என்றால் அந்த உணர்வின் தன்மை வந்தபின் பேதியாகி விடுகிறது.

இதைப் போன்றே நட்சத்திரங்களுடைய மின் கதிர்கள் ஊடுருவி விட்டால்
1.எதிர்நிலை கொண்டு கொதிக்கலனாக மாறுகிறது… பாறைகளை உருக்கி விடுகின்றது.
2.இந்த பாறைகள் உருகி வரும்பொழுது நட்சத்திரங்கள் தாக்கிய ஒளிக்கற்றைகள் அது பலவீனமாகும் வரையிலும் குழம்பாகி
3.ஒரு நொடிக்குள் ஒரு குலுக்கு குலுக்கி விட்டு நின்றுவிடும் (நிலநடுக்கம்).

அதன் பின் பார்த்தால்… சில பாறைகளில் வெடிப்பாக இருக்கும். உருகிக் குழம்பான ஆவியின் கற்றைகள் வெளிச் செல்லும் பொழுது பாறைகளில் பல பல உலோகத் தன்மைகளும் மருந்துத் தன்மையும் பாறைகளின் நிறங்கள் மாற்றம் கைரேகை போன்று இருக்கும்.

எங்கே வெடித்ததோ அந்த ஆவியின் தன்மை சேர்ந்து மறுபடியும் அந்த சந்தை அடைத்துக் கொள்ளும்.

இவைகள் எல்லாம் இயற்கையின் நியதிகள்… ஆதியிலே கண்டவன் அகஸ்தியன்.
1.அவனுடன் சேர்ந்து விஞ்ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வுகளை இணைத்துப் பார்த்து
2.உலகம் எப்படி இருக்கின்றது…? என்று உங்களை நீங்கள் அறிந்து
3.இனி வரும் விஷத்தன்மைகளிலிருந்து நீங்கள் மீண்டிட வேண்டும்.

அந்த அகஸ்திய மாமகரிஷியின் உணர்வுகளை நுகர்ந்து உங்களை நீங்கள் காத்துக் கொள்ள வேண்டும். உங்கள் எண்ணம் தான் அதற்கு உதவும். எந்த சாமியாரும் எந்தக் கடவுளும் நம்மைக் காப்பாற்றப் போவதில்லை.

துருவ நட்சத்திரத்தின் முழு உண்மைகளை அறிந்த பின்பு தான் உங்களுக்குள்ளும் பதிவு செய்கிறேன்

துருவ நட்சத்திரத்தின் முழு உண்மைகளை அறிந்த பின்பு தான் உங்களுக்குள்ளும் பதிவு செய்கிறேன்

 

ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்வதெல்லாம் நம் உயிர் ஓ… என்று இயங்கிக் கொண்டே உள்ளது. நாம் பார்ப்பது கேட்பது இவை அனைத்தையும் ஜீவ அணுவாகப் பெறும் கருவாக உருவாக்கி விடுகின்றது.

நாம் எண்ணியது அனைத்தும் அணுத்தன்மையாகி நம் உடலாகச் சேர்ப்பதைத் தான் ஓ…ம் ஈஸ்வரா…! என்றும் உடலுக்குள் எத்தகைய குணங்களைச் சேர்த்து மனிதனாக உருவாக்கியதோ அவை அனைத்திற்கும் நமது உயிரே குருவாக இருக்கின்றது.

ஆகவே நமது வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரையிலும் எந்தெந்தக் குணங்களை நாம் நுகர்ந்து அறிகின்றோமோ அறிந்த உணர்வுகள் அனைத்தும் ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய என்று நம் உடலாக உருவாகி விடுகின்றது.

அதே சமயம் நல்லது கெட்டது என்று எத்தனை வகையிலே நாம் நுகர்ந்தறிகின்றோம். ஆனால் அவை அனைத்தையும் நமது உயிர் அந்த குணத்தின் அணுவாக உருவாகும் கருவாக உருவாக்கி விடுகின்றது.

நம் உடலில் நல்ல அணுக்கள் உருவானால் மகிழ்ச்சி என்ற உணர்வு வருகின்றது. வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்துவிட்டால் வேதனை உருவாக்கும் கருவாக உருவாகிவிடுகின்றது.

எந்தெந்த உடலில் இருந்து எத்தகைய குணங்கள் வெளிப்பட்டதோ அதை அனைத்தையும் சூரியனுடைய காந்தப் புலனறிவு கவர்ந்து வைத்துள்ளது.

நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் நம் உடலுக்குள் ஊழ்வினை என்று வித்தாக நமக்குள் அமைந்து விடுகின்றது
1.நாம் நல்ல குணங்கள் கொண்டு பலதைச் செய்தாலும்
2.தீமையான குணங்களைப் பிறர் வெளிப்படுத்தும் போது நாம் அதை நுகர்ந்து விட்டால்
3.அதன் உணர்வின் அணுக்கள் உடலுக்குள் பெருகிவிட்டால் நாமும் தீமை செய்வோராகவே மாறி விடுகின்றோம்.
4.அதே சமயம் நமக்குள் நோய்களும் வந்து விடுகின்றது.

இது போன்ற நிலைகள் வருவதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்…?

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனது. மனித வாழ்க்கையில் நஞ்சினை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று வடக்கு திசையில் விண்ணிலே வாழ்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நமது பூமி கவர்ந்து பரவச் செய்து கொண்டே உள்ளது.

சாதாரண மனிதனுடைய வாழ்க்கையில் அவர்கள் பேசும் பேச்சுக்களை நாம் கேட்டுணர்ந்தால் உடலுக்குள் ஊழ்வினை என்ற வித்தாக உருவாகி விடுகிறது.

ஆனாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் தன்மை நமக்குள் பதிவு இல்லை. நமது குருநாதர் அதை எவ்வாறு நம் உடலில் பதிவாக்க வேண்டும்…? என்று கூறியிருந்தார்.

அதன் வழி கொண்டு அவர் காட்டிய நெறிகள் கொண்டு பத்து இருபது வருடமாகக் காடு மேடெல்லாம் அலைந்து
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்…? என்று
2.அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆன அந்த முழு உண்மையின் உணர்வுகளை அறியும்படி செய்து
3.அதன் பின் அதனை வரிசைப்படுத்தி எவ்வாறு ஆனது…? என்று உணர்ந்த பின்
4.எனக்குள் அது பதிவாகி அதை நினைவு கொண்டு நுகறும் ஆற்றல் வந்தது (ஞானகுரு). அதனைக் கவர்ந்து கொண்டேன்.

குருநாதர் எனக்கு எப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தினைப் பதிவு செய்தாரோ… அதே போன்று தான் உங்களுக்குள்ளும் பதிவு செய்கிறேன்.

உபதேசிக்கும் போது நீங்கள் கூர்ந்து எந்த அளவிற்குக் கேட்கின்றீர்களோ அந்த அளவுக்கு அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகின்றது.

அதன் மூலம்… உங்கள் வாழ்க்கையில் வரும் இருளினை அகற்றி மெய்ப்பொருள் கண்டுணரும் உணர்வின் சக்தி நீங்களும் பெற வேண்டும் என்ற அந்த ஆசையிலே தான் இதை உபதேசித்து வருகின்றேன்.

அந்தச் சக்தியை உங்களுக்குள் பெருக்கும் மார்க்கம் தான் குருநாதர் காட்டிய அருள் வழி தியானம்.

1.உபதேச வாயிலாகப் பதிவான இந்த உணர்வின் தன்மையை அடிக்கடி நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்து
2.அதை ஏங்கிப் பெற்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்களுக்குள் பெருக்க முடியும்.

இல்லற வாழ்க்கையில் இருளை அகற்ற முடியும் இந்த மனித வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் திறனும் பெற முடியும் இந்த மனித வாழ்க்கையில் மகிழ்ச்சி பெறும் உணர்வாக வளர இது உதவும்.