மகரிஷிகளின் இயக்கச் செயல்கள் – நம் எல்லோருடனும் இணைந்து தான் அவர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள்

Image

மகரிஷிகளின் இயக்கச் செயல்கள் – நம் எல்லோருடனும் இணைந்து தான் அவர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள்

 

ஞானகுரு அவர்கள் தன் மனைவி உடல் நலம் இன்றோ நாளையோ என மருத்துவர்களால் கைவிடப்பட்ட அந்த நேரத்தில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவரைக் குணப்படுத்தினார்.

 

அதன் பின் என்னை நம்புகிறாயா நான் சொல்வதைச் செய்வதிலிருந்து மாற மாட்டாய் அல்லவா என்று வாக்கு வாங்கினார் குருநாதர் என்று சாமிகள் சொல்லியிருக்கிறார்.

 

அது வரை பைத்தியமாகத் தெரிந்த குருநாதரை அதற்கப்புறம் அவர் பைத்தியமல்ல ஒரு பெரிய மகான் என்று தெரிந்தது என்றும் சொல்லியிருக்கின்றார்.

 

அதே சமயத்தில் குருநாதர் தன்னை அறியாமலே சிறு வயதில் நடந்த சம்பவங்களை எல்லாம் சொல்லுகிறார் என்றும் சொல்லியிருக்கிறார்.

 

1947ல் ஞானகுரு தன் வயல் வெளியில் நடந்து சென்ற பொழுது மண்ணுளிப் பாம்பு கடித்தத அந்த நேரத்தில் குருநாதர் வந்து பச்சிலை கொடுத்துத் தன்னைக் காத்ததாகவும் சொல்கிறார்.

 

அப்பொழுது அவரை நான் நம்பவில்லை. யார் என்றே தெரியாது. கட்டாயப்படுத்தி அந்த மருந்தைக் கொடுத்தார் என்றும் சொல்கிறார்.

 

இது போக ஞானகுரு தன் தாயின் கருவிலிருக்கும் போது தாய் தான் குடும்பத்தில் ஏற்பட்ட பல வேதனைகளிலிருந்து விடுபட ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்குச் சென்று வணங்கும் பொழுது முன்னோர்களையும் மகரிஷிகளையும் எண்ணி ஏங்கினார் என்று சொல்கிறார்.

 

அந்தச் சமயத்தில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கருவிலிருந்த குழந்தைக்கு (சாமிகளுக்கு) ஆசீர்வதித்தாகவும் நான் உனக்குக் கொடுத்த ஆசீர்வாதத்தால் தான் தக்க சமயத்தில் உன்னைத் தேடி வந்தேன் என்று குருநாதர் பின்னாட்களில் என்னிடம் சொன்னார் என்றும் சொல்கிறார் சாமிகள்.

 

இதையெல்லாம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பின்னாட்களில் சொன்னதால் தான் எனக்குத் தெரிந்தது என்று சாமிகள் உபதேச வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.

 

எந்த மகரிஷியாக இருந்தாலும் சரி ஞானியாக இருந்தாலும் சரி தொடர்பு இல்லாதவர்கள் யாரும் இல்லை.

 

நாம் பேரை வேண்டுமானால் மாற்றி மாற்றிச் சொல்லிக் கொள்ளலாம். வியாழன் கோளிலிருந்தே நான் உங்கள் அனைவருடன் தொடர்பு கொண்டவன் என்று மிக மிகத் தெளிவாக நம் சாமிகளும் சொல்லியிருக்கின்றார்.

 

இதே உணர்வை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரும் வெளிப்படுத்தியுள்ளார்.

 

மூவுலகை ஆட்டுவிக்கும் மூலவனே ஆதிமுதலாமவனே

முக்கடலை ஆட்டுவிக்கும் மூலவனே ஆதிமுதலாமவனே

முக்கனியின் சுவையை எனக்கருள்வாய் மூலவனே ஆதிமுதலாமவனே

முடிவில்லா உலகில் கலந்திருப்பாய் மூலவனே ஆதிமுதலாமவனே

மூச்சின் மூச்சாய் இருந்திடுவாய் மூலவனே ஆதிமுதலாமவனே

மூம்மூர்த்தியானவனே முருகா என்பவனும் நீயே

மூவுலகை ஆட்டுவிக்கும் மூலவனே ஆதிமுதலாமவனே

 

பல கோடி ஆண்டுகளுக்கு முன் விண் சென்ற குருநாதரின் ஒளியான அணுக்கள் வெளிப்பட்டதைச் சுவாசித்து தனக்குள் வளர்த்துக் கொண்ட எண்ணிலடங்காத உயிராத்மாக்கள் என்று சப்தரிஷிகளாக சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்.

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தான் ஈஸ்வரபட்டராகக் கர்நாடகா ஈஸ்வரமங்கலத்தில் தோன்றி தன்னை ஆட்கொண்டார் என்றும் சொல்லியிருக்கின்றார்.

 

1.தான் எடுக்காத உடல் இல்லை

2.இயக்காத சரீரம் இல்லை

3.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மனிதர்களை மெய்ஞானிகளாக உருவாக்க நான் வந்து கொண்டே தான் இருப்பேன்.

4.என்னுடைய பேராசை அது என்று ஈஸ்வராய குருதேவர் சொல்கிறார்.

 

ஈஸ்வரப்பட்டராக இருந்த நான் ஞான குரு மூலம் சில செயல்களைச் செய்து கொண்டுள்ளேன் என்று அவரும் சொல்யிருக்கின்றார். (சாமிகள் உடலுடன் இருக்கும்போது)

 

இந்த உலகில் மனித இனம் கல்கியாக மாறும் போதும் அப்பொழுதும் நான் தான் (ஈஸ்வராய குருதேவர்) வருவேன் என்றும் சொல்லியிருக்கின்றார்.

 

அகஸ்தியர் வியாசகர் வான்மீகி போகர் காளிங்கநாதர் கோலமாமகரிஷி அத்திரி பிருகு கொங்கணவர் இப்படிப் பெயர்களைச் சொல்லிக் கொண்டு போனாலும் மூலவன் ஆதிமுதலானவன் ஈஸ்வராய குருதேவர்.

 

நமக்குப் பிரியமிருந்தால் தனிப்பட்ட மகரிஷியின் பேரையும் முன் மொழியலாம். அல்லது அவர் தான் இவர் என்று அவரை இணைத்துக் கொள்ளலாம்.

 

தனித்த சக்தி என்று எங்கும் எதுவும் இல்லை. தனித்த சக்திக்கு இயக்கமும் இல்லை.

 

ஈஸ்வராய குருதேவருக்கு நாம் தேவை. நமக்கு ஈஸ்வராய குருதேவர் தேவை.

 

(அல்லது)

 

மகரிஷிகளுக்கு நாம் தேவை நமக்கு மகரிஷிகள் தேவை.

மகரிஷிகளின் இயக்கச் செயல்கள் – நம் எல்லோருடனும் இணைந்து தான் அவர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள்

Image

மகரிஷிகளின் இயக்கச் செயல்கள் – நம் எல்லோருடனும் இணைந்து தான் அவர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள்

 

ஞானகுரு அவர்கள் தன் மனைவி உடல் நலம் இன்றோ நாளையோ என மருத்துவர்களால் கைவிடப்பட்ட அந்த நேரத்தில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவரைக் குணப்படுத்தினார்.

 

அதன் பின் என்னை நம்புகிறாயா நான் சொல்வதைச் செய்வதிலிருந்து மாற மாட்டாய் அல்லவா என்று வாக்கு வாங்கினார் குருநாதர் என்று சாமிகள் சொல்லியிருக்கிறார்.

 

அது வரை பைத்தியமாகத் தெரிந்த குருநாதரை அதற்கப்புறம் அவர் பைத்தியமல்ல ஒரு பெரிய மகான் என்று தெரிந்தது என்றும் சொல்லியிருக்கின்றார்.

 

அதே சமயத்தில் குருநாதர் தன்னை அறியாமலே சிறு வயதில் நடந்த சம்பவங்களை எல்லாம் சொல்லுகிறார் என்றும் சொல்லியிருக்கிறார்.

 

1947ல் ஞானகுரு தன் வயல் வெளியில் நடந்து சென்ற பொழுது மண்ணுளிப் பாம்பு கடித்தத அந்த நேரத்தில் குருநாதர் வந்து பச்சிலை கொடுத்துத் தன்னைக் காத்ததாகவும் சொல்கிறார்.

 

அப்பொழுது அவரை நான் நம்பவில்லை. யார் என்றே தெரியாது. கட்டாயப்படுத்தி அந்த மருந்தைக் கொடுத்தார் என்றும் சொல்கிறார்.

 

இது போக ஞானகுரு தன் தாயின் கருவிலிருக்கும் போது தாய் தான் குடும்பத்தில் ஏற்பட்ட பல வேதனைகளிலிருந்து விடுபட ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்குச் சென்று வணங்கும் பொழுது முன்னோர்களையும் மகரிஷிகளையும் எண்ணி ஏங்கினார் என்று சொல்கிறார்.

 

அந்தச் சமயத்தில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கருவிலிருந்த குழந்தைக்கு (சாமிகளுக்கு) ஆசீர்வதித்தாகவும் நான் உனக்குக் கொடுத்த ஆசீர்வாதத்தால் தான் தக்க சமயத்தில் உன்னைத் தேடி வந்தேன் என்று குருநாதர் பின்னாட்களில் என்னிடம் சொன்னார் என்றும் சொல்கிறார் சாமிகள்.

 

இதையெல்லாம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பின்னாட்களில் சொன்னதால் தான் எனக்குத் தெரிந்தது என்று சாமிகள் உபதேச வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.

 

எந்த மகரிஷியாக இருந்தாலும் சரி ஞானியாக இருந்தாலும் சரி தொடர்பு இல்லாதவர்கள் யாரும் இல்லை.

 

நாம் பேரை வேண்டுமானால் மாற்றி மாற்றிச் சொல்லிக் கொள்ளலாம். வியாழன் கோளிலிருந்தே நான் உங்கள் அனைவருடன் தொடர்பு கொண்டவன் என்று மிக மிகத் தெளிவாக நம் சாமிகளும் சொல்லியிருக்கின்றார்.

 

இதே உணர்வை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரும் வெளிப்படுத்தியுள்ளார்.

 

மூவுலகை ஆட்டுவிக்கும் மூலவனே ஆதிமுதலாமவனே

முக்கடலை ஆட்டுவிக்கும் மூலவனே ஆதிமுதலாமவனே

முக்கனியின் சுவையை எனக்கருள்வாய் மூலவனே ஆதிமுதலாமவனே

முடிவில்லா உலகில் கலந்திருப்பாய் மூலவனே ஆதிமுதலாமவனே

மூச்சின் மூச்சாய் இருந்திடுவாய் மூலவனே ஆதிமுதலாமவனே

மூம்மூர்த்தியானவனே முருகா என்பவனும் நீயே

மூவுலகை ஆட்டுவிக்கும் மூலவனே ஆதிமுதலாமவனே

 

பல கோடி ஆண்டுகளுக்கு முன் விண் சென்ற குருநாதரின் ஒளியான அணுக்கள் வெளிப்பட்டதைச் சுவாசித்து தனக்குள் வளர்த்துக் கொண்ட எண்ணிலடங்காத உயிராத்மாக்கள் என்று சப்தரிஷிகளாக சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்.

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தான் ஈஸ்வரபட்டராகக் கர்நாடகா ஈஸ்வரமங்கலத்தில் தோன்றி தன்னை ஆட்கொண்டார் என்றும் சொல்லியிருக்கின்றார்.

 

1.தான் எடுக்காத உடல் இல்லை

2.இயக்காத சரீரம் இல்லை

3.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மனிதர்களை மெய்ஞானிகளாக உருவாக்க நான் வந்து கொண்டே தான் இருப்பேன்.

4.என்னுடைய பேராசை அது என்று ஈஸ்வராய குருதேவர் சொல்கிறார்.

 

ஈஸ்வரப்பட்டராக இருந்த நான் ஞான குரு மூலம் சில செயல்களைச் செய்து கொண்டுள்ளேன் என்று அவரும் சொல்யிருக்கின்றார். (சாமிகள் உடலுடன் இருக்கும்போது)

 

இந்த உலகில் மனித இனம் கல்கியாக மாறும் போதும் அப்பொழுதும் நான் தான் (ஈஸ்வராய குருதேவர்) வருவேன் என்றும் சொல்லியிருக்கின்றார்.

 

அகஸ்தியர் வியாசகர் வான்மீகி போகர் காளிங்கநாதர் கோலமாமகரிஷி அத்திரி பிருகு கொங்கணவர் இப்படிப் பெயர்களைச் சொல்லிக் கொண்டு போனாலும் மூலவன் ஆதிமுதலானவன் ஈஸ்வராய குருதேவர்.

 

நமக்குப் பிரியமிருந்தால் தனிப்பட்ட மகரிஷியின் பேரையும் முன் மொழியலாம். அல்லது அவர் தான் இவர் என்று அவரை இணைத்துக் கொள்ளலாம்.

 

தனித்த சக்தி என்று எங்கும் எதுவும் இல்லை. தனித்த சக்திக்கு இயக்கமும் இல்லை.

 

ஈஸ்வராய குருதேவருக்கு நாம் தேவை. நமக்கு ஈஸ்வராய குருதேவர் தேவை.

 

(அல்லது)

 

மகரிஷிகளுக்கு நாம் தேவை நமக்கு மகரிஷிகள் தேவை.

“மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்…” என்று பல முறை எண்ணினால் உயிர் அதை வீரியமான சக்தியாக நமக்குள் உருவாக்கிவிடும்

Image

Divine Light chakra

“மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்…” என்று பல முறை எண்ணினால் உயிர் அதை வீரியமான சக்தியாக நமக்குள் உருவாக்கிவிடும்

 

ஒரு குழம்பிற்குள் மிளகாய் அதிகரித்துவிட்டால் காரத்தின் தன்மை அடைந்து விடுகின்றது. காரமானாலும் அதற்குள் மற்ற சரக்குகளை இணைத்துவிட்டால் காரத்தின் தன்மை குறைந்துவிடுகின்றது.

 

இதைப் போன்றுதான் நம் வாழ்க்கையில் கேட்டறிந்த பார்த்துணர்ந்த உணர்வுகள் நமக்குள் தீமையை விளைவிக்கும் சக்தியாக இருப்பினும் அந்த மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க சக்தியை நாம் எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

 

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். எங்கள் உடல் முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று “நூறு முறை… இருநூறு முறை… ஆயிரம் முறை…” என்று எண்ணிப் பாருங்கள்.

 

உங்களைக் காக்கும் உணர்வாக இது வரும். அப்பொழுது அந்த ஞானிகளின் உணர்வுகள் உங்கள் உயிரால் உருவாக்கப்பட்டு அதுவே ஆட்சி புரிந்து அதனின் வழிகளிலே உங்களை வழி நடத்தும்.

 

1.நம் உயிர் நினைத்ததையெல்லாம் இயக்கிக் காட்டும்.

2.துயரத்தைத் துடைத்துக் காட்டும்.

3.மெய்ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் காட்டும்.

4.மெய்ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் வளர உங்களுக்குள் அறியாது வந்த தீமைகள் குறையும்.

 

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அதிலே ஆயிரம் குடம் பாலை ஊற்றிய பின் எவ்வாறு அந்த நஞ்சினைச் சிறுக்கச் செய்கின்றதோ இதைப் போல

1.ஞானிகள் ஒரு சொல்லானாலும்

2.ஒரு நினைவானாலும் ஆயிரம் குடம் பாலுக்கு ஒப்பானவர்கள்.

 

“பல முறை… அதைச் சொல்லும் பொழுது” நமக்குள் தீமையின் நிலைகளைச் செயலற்றதாக்கி அதனின் வீரிய நிலையாக அதை மாற்றிவிடும்.

 

உங்கள் நினைவின் ஆற்றல் விண்ணிலே செல்லும் பொழுது உங்களை முழுமை அடையச் செய்யும்.

 

இதைப் போன்று மெய்ஞானிகளின் துணை கொண்டு உங்கள் நல்ல எண்ணங்களை மறைக்கும் இந்த அழுக்கான திரையைக் கிழித்து தீமைகளை அகற்றித் தீமைகளை அகற்றும் சக்தியாக உங்களுக்குள் விளைய வைத்துக் கொள்ளுங்கள்.

 

இந்த உடலை விட்டு அகன்றால் என்றும் அழியாப் பெரு வாழ்வு வாழும் ஒளிச் சரீரம் பெற முடியும்.

 

இந்த முறைப்படித்தான் விண்ணுக்குப் போக முடியுமே தவிர நான் காட்டிற்குள் போய் ஜெபமிருந்து ஆண்டவன் அருளைப் பெற முடியும் என்றால் முடியாது.

 

அங்கே உங்கள் நினைவாற்றல் சிறிது சோர்வடைந்தால் போதும்.

1.”பாவிப்பயல்…” அந்தக் காலத்தில் எனக்கு அப்படிச் செய்தான் இப்படிச் செய்தான்.

2.நான் சாமியாராகப் போவதற்கு எப்படியெல்லாம் இடைஞ்சல் செய்தான்…!

3.”அவர்களை என்ன செய்வது…?” என்ற இந்த உணர்வுகள் எதிர்மறையை ஊட்டும்.

 

அப்புறம் இவர் சாமியாராகப் போகப் போவதுமில்லை.

 

கடைசியில் இந்தக் கோபமான வினைகளைத்தான் சாப வினைகளாக மாற்றி மற்றவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் சாபமிட்டு அவர்களைக் கெடுக்க முடியும்.

1.விண்ணுக்குப் போகவும் முடியாது

2.இந்த மண்ணை விட்டுத் தப்பவும் முடியாது.

3.இந்தப் பூமியின் ஈர்ப்பிலே தான் அவர்கள் செயல்பட முடியும்.

 

இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

மரண பயத்தை நீக்கி “மரணமில்லாப் பெரு வாழ்வு” வாழ்வோம்

Image

மரணமில்லா பெருவாழ்வு

மரண பயத்தை நீக்கி “மரணமில்லாப் பெரு வாழ்வு” வாழ்வோம்

 

ஆதிமூலம் என்ற இந்த (நம்) உயிர் பல கோடிச் சரீரங்களில் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்… விடுபடவேண்டும்… என்று தான் பார்த்துத் தப்பித்த உணர்வுகள் வலுப்பெற்றது தான் மூஷிக வாகனா என்பது.

1.அந்தக் கடுமையான உணர்வுகளைச் சுவாசித்து

2.அதிலிருந்து தப்பிக்கொள்ளும் உணர்வு கொண்டு இது ஓடுகின்றது.

 

இருந்தாலும் அந்தத் தப்பிக்கும் உணர்வுகளில் வேதனை என்ற உணர்வுகள் அதிகமாகச் சுவாசித்தால் கணங்களுக்கு அதிபதியாகி விடுகின்றது.

 

அதன் வாழ்க்கையில் எந்த உடலை உற்றுப் பார்த்து அதனால் பயந்து உணர்வின் வேகங்கள் கூடியதோ அந்த உணர்வுகள் வளர்ந்த பின் இந்த உடலை விட்டுச் சென்ற இந்த உயிரான்மா அந்த வலுவான உடலுக்குள் சென்றுவிடுகின்றது.

 

அந்த உடலுக்குள் சென்று அதனின் உணர்வின் கருவாகப் பரிணாம வளர்ச்சி அடைந்து அதனின் ரூபமாக ஆகின்றது என்ற நிலை சாஸ்திரங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

 

ஒவ்வொரு வாழ்க்கையிலும் தன் வாழ்க்கையை அது வாழத் தன்னைக் காட்டிலும் எதிரிகளிடமிருந்து தப்பிக்கும் நிலைகளில் வலுவானதைச் சுவாசிக்கும் நிலை வருகின்றது. இவ்வாறு பரிணாம வளர்ச்சியாகின்றது.

 

காகத்தை எடுத்துக் கொள்வோம். தன் ஆகாரத்தை எடுக்கும் போது ஒரு கொத்துக் கொத்திவிட்டு

1.எதிரிகள் எவராவது வருகின்றனரா

2.தன்னைத் தாக்க முற்படுகிறதா என்று எண்ணிப் பார்க்கிறது.

 

குருவியானாலும் தன் ஆகாரத்தை எடுத்தவுடன் கொத்தி வைத்து விடுகின்றது.

1.மீண்டும் திரும்பிப் பார்க்கின்றது.

2.ஒவ்வொரு நிமிடத்திலும் தன் உடலைப் பாதுகாக்கும் உணர்வுகளே அங்கே வருகின்றது.

 

அதே சமயத்தில் ஒரு பூனை சீறித் தாக்கி சந்தர்ப்பவசத்தால் குருவி சிக்கி விட்டால் குருவியின் உணர்வுகள் அனைத்தும் இந்தப் பூனையின் வாயில் சிக்கிய பின் பூனையின் நினைவே வருகின்றது.

 

குருவியின் தசைகள் பூனைக்கு இரையாகின்றது. ஆனால்

1.குருவியின் எண்ணங்களோ பூனையின் பால் நினைவாற்றல்கள் அதிகமாகி

2.உயிராத்மா  வெளியே போகும்போது பூனையின் கருவறைக்குள் சென்று

3.இந்த உணர்வின் தன்மை கருவாகி

4.அடுத்து பூனையாகப் பிறக்கும்.

 

இரவிலே பல பட்சிகள் ஒன்று சேர்ந்து மரங்களில் அடங்கி இருக்கின்றது. அந்தப் பட்சிகள் ஒன்றுக்கொன்று நுனியில் தான் அது இருக்கும்.

 

கொப்புகள் அசைந்தால் அல்லது இதைக் காட்டிலும் கடுமையான நிலை அங்கு வந்தால் எடை தாங்காது அங்கு வர முடியாத எல்லையாகப்  பார்த்துத் தான் அந்தச் சிறு நுனியில் தான் எல்லாமே இருக்கும்.

 

காரணம் ஒரு குருவி இனமாக இருப்பினும் அந்த அசைவைக் கண்டு தான் விழித்துக் கொள்வதற்காக இப்படிப் பாதுகாக்கும் எண்ணங்களை உருவாக்கி அந்த மரண பயத்துடன்தான் வாழ்கின்றது.

 

ஆனால் எதிரி தாக்கப்படும்போது உணவாகப் புசிக்கும் நிலையில் வந்தால் மரண பயமாக அது ஒன்று சப்தம் இட்டால் போதும். எல்லாம் எழுந்து கொள்ளும்.

 

இதைப்போல நாம் குருவியாக பூச்சியாக இருக்கப்படும் போது எதிரியிடமிருந்து தப்பிக்கும் உணர்வின் தன்மைகளைக் கூர்மையாக்கி அந்த உணர்வின் வலிமை பெற்று அதிலிருந்து தப்பிக்கும் உணர்வுகளைச் சேர்த்துச் சேர்த்துத்தான் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக வந்துள்ளோம்.

 

இதனை உணர்த்துவதற்குதான் மூஷிகவாகனா. கணங்களுக்கு அதிபதி கணபதி என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

 

பரிணாம வளர்ச்சியாகி மனிதனான பின் முன் சேர்த்து கொண்ட வினைகளுக்கெல்லாம் நாயகனாக இந்த மனித உடலை உருவாக்கியது நமது உயிர் தான் என்பதை எல்லோரும் அறிவதற்காக “ஆதிமூலம்” என்று உயிருக்குப் பெயர் வைக்கின்றார்கள்.

 

ஒவ்வொரு சரீரத்திலும் சுவாசித்த உணர்வுகள் இந்த கணங்களுக்கெல்லாம் அதிபதி கணபதி என்று அடுத்த ரூபம் பெறுகின்றோம்.

 

பல கோடிச் சரீரங்களில் தப்பித்து வாழ்ந்திடும் உணர்வு ஆறாவது அறிவாக வந்து மற்றதை அடக்கி ஆட்சி புரியும் கணங்களுக்கு அதிபதியாக நம்முடைய எண்ணங்கள் உருவாகி உள்ளது கணபதி.

 

கணங்களுக்கெல்லாம் அதிபதி என்ற நிலையில் உடல் பெற்றாலும் இந்தக் கணங்களுக்கெல்லாம் ஈசனாக இருந்து இயக்கியது உயிர் தான் என்று நம் உயிரை வணங்கும்படி செய்கிறார்கள் ஞானிகள்.

 

எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து வந்த நாம் இனி வரும் எத்தகைய தீமைகளிலிருந்தும் விடுபட்டு தீமையற்ற மரணமில்லாப் பெரு வாழ்வு வாழ்வோம்.

 

இந்த மனித உடலைக் கொடுத்தது என்று “அங்குசபாசவா”.

 

1.ஆறாவது அறிவு கொண்டு நாம் எதனையுமே அடக்கி

2.வாழ்க்கையில் வரும் இன்னல்களை ஒடுக்கி

3.மரணமில்லாப் பெரு வாழ்வு வாழ முடியும் என்ற

4.இந்த நிலையை நாம் உணர்தல் வேண்டும்.

 

இன்னொரு உடல் பெறாது உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் வாழ்வோம்.

குருநாதர் கொடுக்கும் சக்தி யாருக்கு…?

Guru protection

குருநாதர் கொடுக்கும் சக்தி யாருக்கு…?

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பல சக்திகளையும் பல ஆற்றல்களையும் ஞானகுருவிற்குக் கொடுத்த பின் அவரைக் கேட்கின்றார்.

இந்தச் சக்திகளை நான் உனக்கு ஏன் கொடுத்தேன்…? நீ எதற்காக இதைப் பெற்றாய்…? இதை வைத்து என்ன செய்யப் போகிறாய்…?

அப்பொழுது எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை என்கிறார் ஞானகுரு.

குருநாதர் விளக்கம் கொடுக்கின்றார்.

இந்த உலகில் நல்லதை எண்ணி ஏங்கும் ஆத்மாக்கள் பல பல உண்டு. நல்லதை வைத்திருந்தாலும் அந்த நல்லவர்களுப் பல வகைகளிலும் துன்பங்கள் வந்து சேர்கின்றது.

அந்தத் துன்பங்கள் அகற்ற முடியாத அளவிற்குப் பெருகிவிட்டால் பின் கடைசியில் அந்த நல்லவர்களும் நல்லதைச் செய்யும் வலு குறைந்து நல்லதைக் காக்கும் திறன் இழந்து வேதனையால் அவதிப்படுகின்றார்கள்.

வேதனை அதிகமாகிவிட்டால் பின் அவர்கள் சிந்தனை இழந்து நல்லவர்களாக இருப்பவர்களும் கடைசியில் தீமை செய்வோராகவே மாற நேருகின்றது.

இதைப் போன்ற நிலை ஆகாதபடி நல்லதை எண்ணி ஏங்கும் ஆத்மாக்களுக்கு நல்லதைக் காக்கும் சக்தியைப் பெறச் செய்ய வேண்டும்.

யாரும் தவறு செய்வதில்லை. அவர்கள் சந்தர்ப்பங்கள் அவர்கள் நுகர்ந்த உணர்வுகள் அவர்களை இயக்கும் பொழுது அந்த உணர்வின் இயக்கமாக ஆகி குற்றம் இழைப்பவர்களாக ஆகின்றார்கள்.

தீமைகளை வென்று நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சுடராக ஆன அந்த மகரிஷிகளின் ஆற்றல்மிக்க சக்திகளை அவர்கள் பெறக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்து.

தீமையை உருவாக்கக்கூடிய சந்தர்ப்பமாக இருந்தாலும் அவர்களுக்குள் அருள் ஞானிகளின் உணர்வைப் பதிவாக்கிவிடு.

1.பதிவான மகரிஷிகளின் அருள் உணர்வை அவர்கள் நுகரும் பொழுது
2.இந்த உலகில் நன்மை எது தீமை எது என்று உணர்வார்கள்.
3.நன்மையின் பலனை உணர்ந்திடும் மெய் ஞானம் வரும்.
4.நன்மையைக் காக்க வேண்டும்… என்னால் காக்க முடியும்… என்ற
5.தன்னம்பிக்கை அவர்களுக்குள் வளரும்.

அது வளரத் தொடங்கினால் அவர்கள் சொல் செயல் மூச்சு எல்லாம் சக்தி வாய்ந்ததாக மாறும்.

1.தீமைகளை நீக்கிடும் சக்தி வாய்ந்தவர்களாக
2.உலகைக் காக்கும் சக்தி பெற்றவர்களாக
3.இந்த உலகில் வாழும் மக்களை உருவாக்கத்தான்
4.நான் உனக்கு இந்தச் சக்தியைக் கொடுத்தேன்…! என்று தெளிவாக்கினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

கொள்ளையர்கள் திருடர்கள் பற்றி அச்சுறுத்தும் உணர்வுகளை எண்ணினால் ஏற்படும் விளைவுகள் – அதை அகற்றி மன பலம் எப்படிப் பெறுவது?

Image

Arunachala Deepam - lights

கொள்ளையர்கள் திருடர்கள் பற்றி அச்சுறுத்தும் உணர்வுகளை எண்ணினால் ஏற்படும் விளைவுகள் – அதை அகற்றி மன பலம் எப்படிப் பெறுவது?

 

இன்று நாம் பத்திரிகையின் வாயிலாகப் படிக்கின்றோம். ஓடும் பாதையில் இரயிலே கொள்ளையடித்தான் என்ற அதிர்ச்சியான செய்திகளைக் கண்டபின் அந்த உணர்வை நுகரும் போது அந்த உணர்வின் தன்மை நமக்குள் பதிவாகின்றது.

 

பதிவான பின் அடுத்து என்ன செய்கின்றது?

 

அடுத்து இரயிலில் செல்லப்படும் போது அதே நினைவு வந்து அதிர்வின் நிலை ஆகின்றது. உடனே அச்சுறுத்தும் உணர்வு வருகிறது.

 

“கொள்ளையன் வந்து விடுவானோ…!” என்ற உணர்வின் தன்மை அச்சுறுத்தினால் மற்ற பெட்டிகளில் கொள்ளையடிக்கவில்லை என்றாலும்

1.நாம் வெளிப்படுத்தும் அச்சுறுத்தும் உணர்வின் அலைகள் படரும் போது

2.அதை நுகர்ந்து கொள்ளையடிப்பவன் நாம் இருக்கும் அந்தப் பெட்டிக்கேதான் வந்து சேருவான்.

 

பார்க்கலாம்.

 

இதே போன்றுதான் வாகனங்களில் செல்லும் போது “விபத்தில் சிக்கி விடுவோமோ…!” என்று அதிர்ச்சியாகி டிரைவரை எண்ணினால் இந்த உணர்வுகள் ஊடுருவி அதற்குத் தகுந்தாற்போல் அணைத்து அடுத்து ஆக்ஸிடண்ட் ஆகும்.

 

இவன் எண்ணியபடி டிரைவரின் உணர்வை அணைத்து வண்டிக்குள் இருந்தாலும் இவன் மேல் உராய்ந்து இவன் அடிபடுவான். மற்றவருக்கு ஆவதில்லை. பார்க்கலாம்.

 

இவர்களின் எண்ணத்திற்கு ஒப்ப அந்த உணர்வின் தன்மைகள் டிரைவரையும் இயக்குகின்றது.

 

எப்படி ஒரு கம்ப்யூட்டர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் உணர்வை இயக்குகின்றதோ… இதன் வழி தான் நம் உயிர் எலக்ட்ரிக்… நாம் நுகர்வைதை எலக்ட்ரானிக்காக… உணர்வாக மாற்றுகின்றது.

 

அதன் வழி தான் (உயிரிலே மோதினால் உணர்ச்சிகளாகின்றது) இந்த உடலை இயக்குகின்றது என்பதை விஞ்ஞான அறிவு கொண்டு நாம் தெரிந்து கொள்வது நல்லது.

 

விஞ்ஞான அறிவில் வளர்கின்றோம். விஞ்ஞானியும் காட்டுகின்றான். அதன் உணர்வின் இயக்கம் எப்படி என்று காட்டிய பின்

1.இனியாவது நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகின்றது?

2.நம்மையறியாது தவறு எப்படி வருகின்றது?

3.நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் எப்படி நோயாகின்றது?

4.நோயின் தன்மை வளர்ந்தபின் உடலை எப்படி இழக்கச் செய்கிறது என்பதை

5.மெய்ஞானிகள் காட்டிய உணர்வு கொண்டு அறிந்து உணர்வோம்.

6.வரும் தீமைகளிலிருந்து விடுபடும் அருள் சக்திகளை வளர்த்துக் கொள்வோம்.

 

அந்த விஞ்ஞானியின் தன்மையில் வளர்ந்து காட்டினாலும் அஞ்ஞான வாழ்க்கையை வாழ்கின்றனர்.

 

பக்தி மார்க்கத்தில் பற்று கொண்டவர்களும் உண்மையின் உணர்வை அருள் ஞானிகள் காட்டிய வழியில் நுகராது அதை வளர்த்திடாது அதனுடைய நிலைகள் தனியப்படும் போது அஞ்ஞான வாழ்க்கை வாழும் நிலையே பக்தி மார்க்கத்திலும் வருகிறது.

 

பத்திரிகைகளில் படிக்கும் போது எப்படி இந்த உணர்ச்சி  கொள்ளையர்கள் வந்து விடுவார்களோ என்ற இயக்கத்தின் தன்மை ஆகின்றது.

 

நாம் இதற்கு என்ன செய்வது? அந்த உணர்வைத் தூண்டுகின்றது. உணர்வின் தன்மை வளர்ந்த பின் பயந்து வாழும் நிலைகளே வருகின்றது.

 

இரயிலிலே அல்லது வாகனங்களில் செல்லப்படும் போது இந்த உணர்வுகளை அதிகமாகத் தூண்டி நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் அந்த அணுக்களுக்கு அதை வீரிய உணர்வாக ஊட்டி நமக்குள் அச்சுறுத்தும் அணுக்களை வளர்த்து இந்த உடலையே பறி கொடுத்த உணர்வு கொண்டு நல்ல உணர்வையே நாம் பறி கொடுத்து விடுகின்றோம்.

 

அவன் பொருளைப் பறிகொடுத்தான். உடலை பறி கொடுத்தான். இந்தச் செய்தியைப் படிக்கின்றோம் பதிவாக்கிக் கொள்கின்றோம். நாம் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் கடும் நோயாக வரத்தொடங்கி விடுகிறது.

 

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபடுவதற்குத்தான் ஆலயங்களில் அந்தச் சிலையை உருவாக்கிக் காவியத்தைப் படைத்துக் கருத்தினை நுகரும்படி செய்கின்றார்கள் ஞானிகள்.

 

அவ்வாறு நுகர்ந்த கருத்து அருள் உணர்வின் தன்மை இயக்கமாகி அந்த உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் நல்ல அணுக்களை உருவாக்கி பகைமை உணர்வுகளை அகற்றி நம் சொல் பிறரைக் காக்கும் நிலை வருகின்றது.

 

ஆலயத்திற்குச் சென்றபின் தீப ஆராதனை காட்டும் போது மகரிஷிகளின் அருள் சக்தியால்

1.இந்த ஆலயம் வருவோர் எல்லாம் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.

2.அவர்கள் குடும்பமெல்லாம் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.

3.தொழில் செய்யும் இடமெல்லாம் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.

4.நான் பார்ப்போர் எல்லாம் பொருளறிந்து செயல் படும் தன்மை பெற வேண்டும் என்று இப்படிப்பட்ட உணர்வுகளை நாம் நுகர்தல் வேண்டும்.

 

தீப ஆராதனை காட்டும் போது அங்கு இருக்கக்கூடிய பொருள்கள் அனைத்தும் தெரியும். பொருள் தெரிந்தபின் அந்தத் தெய்வத்தைப் பார்க்கின்றோம். அது துவைதம்.

 

“இந்தத் தெய்வம் நல்லது செய்யும்…” என்று உருவமாக்கி அந்த எண்ணத்தை எடுத்து அதைக் காவியமாக்கிப் படிக்கும் போது அந்த நல்ல உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றது.

 

1.சாதாரண மனிதனும் தன்னை அறியாமலே

2.உயர்ந்த உணர்வுகளையும் உயர்ந்த ஆற்றல்களையும் பெறுவதற்கே

3.ஆலயங்களை உருவாக்கினார்கள் ஞானிகள்.

 

அந்த அருள் உணர்வுகள் நமக்குள் தூண்டப்பட்டால் அருள் ஆற்றல்களைப் பெறக்கூடிய தகுதி வருகின்றது. தெய்வ சக்திகளை நாம் பெறுகின்றோம்.

 

“நாம் தெய்வமாக வேண்டும்…” என்ற முறையைத்தான் அங்கு வகுக்கப்பட்டது. ஆலயங்களில் அதைப் பதிய வைத்தனர் ஞானிகள். அதன் வழி நாம் நடந்தோம் என்றால் நாமும் தெய்வமாகின்றோம்.

தீமைகளிலிருந்து விடுபடச் செய்யும் சில “நுண்ணிய” ஆற்றல்களைக் குருநாதர் எமக்கு அனுபவபூர்வமாகக் கொடுத்தார் – “அந்த ரிமோட் சக்தியை (REMOTE CONTROL) நீங்களும் பெற முடியும்”

Image

 

Remote power energy

தீமைகளிலிருந்து விடுபடச் செய்யும் சில “நுண்ணிய” ஆற்றல்களைக் குருநாதர் எமக்கு அனுபவபூர்வமாகக் கொடுத்தார் – “அந்த ரிமோட் சக்தியை (REMOTE CONTROL) நீங்களும் பெற முடியும்”

குருநாதர் என்னைக் காட்டுக்குள் அழைத்துச் சென்று யானையிடமும் புலியிடமும் பாம்பிடமும் இருந்து தப்பிக்கப் பல அனுபவங்களைப் பெறச் செய்தார்.

 

அதே போல் எறும்புப் புற்றிலும் கரையான் புற்றிலும் அமரச் செய்து அதனின் இயக்கங்களையும் அனுபவபூர்வமாகக் காணச் செய்தார்.

 

காட்டிற்குள் செல்லும்போது மிருகம் தாக்கும் என்றால் மிருகங்களுடைய செயலாக்கங்களை உணர்த்தி அதிலிந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்ற உணர்வைக் குருநாதர் கொடுத்தார்.

 

குருநாதருடைய பரிபாஷையில் இந்த இந்த நிலையிலே நீ இப்படி எடு என்பார்.

1.அவர் சொன்ன முறைப்படிக் கண்ணுற்றுப் பார்த்தோம் என்றால்

2.மிருகங்கள் அமைதியாக இருக்கும். ஒன்றும் செய்யாது.

3.பக்கத்திலேயே அதுபாட்டுக்குப் போய்க் கொண்டிருக்கும்.

4.நம்மைப் பார்க்காது.

 

திருப்பதி மலையின் மேலே நாரதர் மன்றம் என்று இருக்கின்றது. அதை விட்டுக் கொஞ்சம் தள்ளிப் போனால் ஒரு காடு. அந்தக் காட்டுக்குள் போகச் சொன்னார் குருநாதர்.

 

அங்கே நான் போய் உட்கார்ந்த உடனே நடுநிசியில் கரடிகள் வருகிறது.

 

ஊ…ம் ஊ..ம் ஊ…ம் என்று ஊறுமிக் கொண்டு வருகிறது.

 

கொஞ்சம் ஏமாந்தோம் என்றால் அவ்வளவு தான் ஆளைக் கொன்றுவிடும். கரடி மாமிசப் பட்சினி தான். தாவர இனத்தையும் சாப்பிடுகிறது. உயிரினங்களையும் உட்கொள்ளுகிறது.

 

அது வந்தது என்றால் “லபக்..” என்று பிடித்து இரத்தத்தை உறிஞ்சி விடும். போட்டுத் தாக்கிடும். மண்டையைப் பிளந்து மூளையை எடுத்துச் சாப்பிடும்.

 

பாக்கி தசைகளை எடுக்காமல் மூளையை எடுத்துச் சாப்பிடும்.
இரத்தத்தைக் குடிக்கும். அதை எல்லாம் எமக்குக் குருநாதர் சொல்லியிருக்கின்றார்.

 

அங்கே உட்கார்ந்திருக்கும் பொழுது 7,8 கரடி வருகிறது. நான் எப்படித் தப்பிப்பது?

 

அப்பொழுது குருநாதர் சொன்ன உணர்வு அந்த “மேக்னட்டார்”. அதாவது எதிர் நிலையான உணர்வுகள் வருகிறது என்றால் உடனே அதைக் கவர்ந்து நமக்கு உணர்த்தி அதிலிருந்து ரிமோட் (நம்மைத் தப்பச்) செய்யும்.

 

குருநாதருடைய துணை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துப் பாய்ச்சியவுடன் கரடிகள் அமைதியாகப் போகிறது. என்னை ஒன்றும் செய்யவில்லை. அதுவாக விலகிச் செல்கின்றது.

 

குருநாதர் எனக்குச் சொல்லிக் கொடுத்த நிலையில் யானைக் கூட்டத்திற்குள்ளும் புலி இருக்கும் இடத்திலேயும் ஒவ்வொரு அனுபவத்தைக் கொடுத்தார்.

 

எறும்புக் கூட்டுக்கு மேல் உட்கார வைத்தும் அனுபவத்தைக் கொடுத்தார். எறும்புக் கூட்டத்திற்குள் இருந்தால் என்னாகும்?

 

முதலில் ஒரு எறும்பு என்னை கடித்தது. அதை நசுக்கினேன். அப்பொழுது என்ன ஆனது?

 

நான் உட்கார்ந்த உடனே எறும்பு வந்து “மொய்…” என்று என்னை மொய்க்கிறது.

1.ஒரு எறும்பு செத்தது.

2.அடுத்து எல்லா எறும்புகளும் என்னைக் கடி கடி என்று கடிக்கிறது.

3.ஒரு நொடிக்குள் அந்தச் செய்தி எல்லா எறும்புகளுக்கும் எப்படிப் போகிறது?

4.அந்த உணர்வு பரிபாஷையில் உணர்வின் எண்ணங்கள் ஒன்றுக்கொன்று எப்படித் தொடர்பு கொள்கிறது? என்பதை உணர்த்திக் காட்டுகின்றார்.

 

எறும்புக்குள் இருக்கக்கூடிய ஒற்றுமையை நீங்கள் பாருங்கள்.

 

ஒரு இடத்தில் பொருள் இருந்தால் அந்த எறும்புகள் ஒன்றுக்கொன்று சந்தித்தவுடனே அந்தப் பொருளைப் பார்த்த உணர்வுகளைத் தன் “மீசையிலேயே” காட்டுகிறது.

 

டி.வி. ரேடியோவில் வைத்திருக்கும் ஆன்டென்னா… ஏரியல் – அந்த மேக்னட் வயர் என்ன செய்கிறது? அந்தந்தத் திசையிலிருந்து வருவதை ஈர்க்கின்றது. அதன் வழி ஈர்த்துக் கேட்கின்றோம்.

 

சாதாரணமாக எறும்பு தானே என்று நாம் பார்க்கின்றோம்.

1.நீளமான ஏரியல் மாதிரி அந்த எறும்பு தன் மீசைகளை ஆட்டிக் கொண்டே இருக்கும்.

2.அது எந்தப் பக்கம் போகின்றதோ அந்த உணர்வை ஈர்த்து அங்கே நடக்கிறதைச் சொல்கிறது.

3.எடுத்து அந்த திசையைக் கொடுக்கின்றது.

4.எறும்புகள் எல்லாம் அங்கே போகிறது.

 

இன்று விஞ்ஞானிகள் என்ன செய்கிறார்கள்?

 

ஒரு ரேடியோ வைத்து (TRANSISTOR) என்னென்ன அலைகள் எங்கெங்கே போகிறது என்று தெரிந்து கொள்வதற்காக மிருகங்கள் கழுத்தில் அதைக் கட்டி விட்டு விடுகின்றார்கள். அது காட்டுக்குள்ளே போகிறது.

 

அந்த மிருகம் என்னென்ன திசையில் சென்று மேய்ந்து கொண்டிருக்கின்றது? அது மேயும் போது என்னென்ன அதிசயத்தைப் பார்க்கின்றது? தன் எதிரிகளிடமிருந்து எப்படித் தப்பிக்கின்றது? அதனுடைய குணங்கள் எப்படி இருக்கிறது என்று விஞ்ஞானி அறிகின்றான்.

 

ஒரு மிருகத்தைப் பிடித்துப் பக்குவப்படுத்தி அந்த உடலில் வரும் எதிர் நிலைகளை அறிவதற்காக வேண்டி கழுத்திலேயும் போட்டு அதன் உடலுக்குள்ளும் பதிவு செய்துவிடுகிறார்கள்.

 

உடம்புக்குள் பதிவு செய்து கழுத்தில் வார் (BAND) மாதிரி மாட்டி அதனின் எக்கோ (ECHO) வருவதை அறிவதற்காக ஏரியல் போலக் கட்டி விடுகிறார்கள்.

 

ஏரியல் போலக் கட்டி விட்டவுடனே… எதிரியிடமிருந்து எப்படி இந்த மிருகம் தப்புகின்றது. இதனுடைய குணங்கள் என்ன? எதிரியின் உணர்வுகள் எப்படி ஆகின்றது? இது எந்த நிலைகள் என்று விஞ்ஞானி கண்டறிகின்றான்.

 

காட்டுக்குள்ளே மிருகங்கள் என்னென்ன செய்கிறது என்று “டிவி…க்களில்” இன்று படங்களாகப் பார்க்கிறோம் அல்லவா.

 

காட்டிற்குள் என்னென்ன நடக்கின்றது என்று அறிவதற்காக அந்தந்த மிருகங்களுக்கு இப்படி மாட்டி விடுகிறார்கள். அது பாட்டுக்குக் காட்டுக்குள்ளே விளையாடுகிறது.

 

அப்பொழுது அது அது எங்கெங்கு என்ன நடக்கின்றது என்பதைப் பார்த்து அதனுடைய செய்திகளை எல்லாம் தெரிந்து கொள்கிறார்கள்.

 

ஒரு எலியாக இருந்தாலும் தன் எதிரியிடமிருந்து அது எப்படி தப்புகின்றது? அதனுடைய குணங்கள் என்ன? எந்த மணத்தை நுகர்கிறது? எதனால் அது மாறுகிறது என்ற வகைகளில் விஞ்ஞானி இதைச் செய்கிறான்.

 

இதே மாதிரித் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்

1.அவர் பாய்ச்சிய உணர்வின் தன்மை கொண்டு நான் செல்லப்படும் போது

2.ஒவ்வொரு மிருகங்களுடைய உணர்வுகளும்

3.அதனுடைய தொடர்வரிசை எப்படி இருக்கிறது என்று சொல்லி

4.என்னை அறிய வைத்தார். நான் அறிந்து கொண்டேன்.

 

அதை நீங்களும் அதை அறிய முடியும்.

 

மனிதன் மிருகத்தினுடைய நிலைகளை அறிந்தாலும் பிறிதொரு மனித உடலில் விளையக்கூடிய தீமையின் விளைவுகளை நமக்குள் வராதபடி ரிமோட் செய்யக் கூடிய சக்தி வேண்டும்.

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நாம் எடுக்கும் போது

1.தீமைகளை நமக்குள் வராதபடி தடுத்து

2.நம்மைப் பாதுகாக்க முடியும்.

3.நமக்கு அமைதியும் பாதுகாப்பும் கிடைக்கும்.

 

தீமைகளை வென்று நஞ்சினை ஒளியாக மாற்றிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைத்தான் குருநாதர் எம்மைப் பெறச் செய்தார். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைத்தான் உங்களையும் பெறச் செய்கின்றோம்.

“மனதைச் சமப்படுத்துங்கள்” – பேரின்பப் பெருவாழ்வு வாழுங்கள்

Image

Soul cleaning - serene

“மனதைச் சமப்படுத்துங்கள்” – பேரின்பப் பெருவாழ்வு வாழுங்கள்

 

ஒரு சமயம் ஒருவர் தவறு செய்தார் என்றால் அந்தத் தவறின் நிலையை நாம் சுட்டிக்காட்ட நேர்கின்றது. ஆனால்

1.சுட்டிக்காட்டும் நிலை தவறினால் வெறுப்பின் உணர்வையே ஊட்டுகின்றது.

2.வெறுப்பின் நிலை வளர்த்து விட்டால் ஏற்றுக் கொள்ளும் பண்பே வராது.

 

இதைப்போன்ற நிலைகளிலிருந்து நாம்

1.எதனை…

2.எவ்வாறு…

3.எதன் வழியில் உருவாக்குதல் வேண்டும்…? என்ற நிலைகளை அறிந்துணர வேண்டும்.

 

அதை நாம் பக்குவப்படுத்தும் நிலைகளுக்குச் சமப்படுத்தல் வேண்டும்.

 

ஒவ்வொரு நிமிடமும் மனதைச் சமப்படுத்தினால்… “பக்குவப்படுத்தும் பண்பு” வருகின்றது.

 

பக்குவப்படுத்தும் பண்பு வர வேண்டும் என்றால் “அருள் ஞானத்தின் உணர்வை” அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் விளைவிக்க வேண்டும்.

 

மகரிஷிகளின் அருள் உணர்வுகளை விளைய வைத்துக் கொண்டால் நம் வாழ்க்கையில் வரும் தீமையான உணர்வுகளையும் நஞ்சான உணர்வுகளையும் கார உணர்ச்சிகளையும் “அடக்கும் தன்மை” வருகின்றது.

 

தீமைகளை அடக்கும் தன்மை வந்தால் “சிந்திக்கும் தன்மை” வருகின்றது.

 

சிந்திக்கும் தன்மை வந்தால் நம் செயல்கள் அனைத்தும் “சீராக அமைய” இது உதவும்.

 

இந்த மனித வாழ்க்கையில் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்று அதை நமக்குள் அணுக்களாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

 

அருள் ஒளியினை வளர்த்துப் “பேரின்பப் பெருவாழ்வு” என்ற நிலையை நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.

 

நாம் உலகில் யார் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்கள் அனைவரும்

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்

2.அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்.

3.அவர்கள் குடும்பத்தில் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.

4.தெளிந்த மனம் அவர்கள் பெற வேண்டும்.

5.மகரிஷிகள் அருள் வட்டத்தில் அவர்கள் வாழ வேண்டும்.

6.அருள் ஞானம் அவர்களுக்குள் பெருக வேண்டும்.

7.இருளை நீக்கிடும் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும்.

8.நஞ்சினை வென்றிடும் அருள் ஞானம் அவர்கள் பெற வேண்டும்.

9.அருள் வாழ்க்கை வாழும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

 

நாம் சந்தித்தோர் பார்த்தோர்… நாம் தொழிலின் நிமித்தம் சந்தித்தோர்… தொழிலின் நிமித்தம் இணைந்து வாழ்ந்தோர்… “இவர்கள் அனைவரையும்” நாம் இவ்வாறு நாம் எண்ணினோம் என்றால்

1.நமக்குள் பகைமை என்ற உணர்வை மாற்றி

2.அருள் ஞானத்தின் உணர்வை வளர்க்கச் செய்கின்றது.

“மனதைச் சமப்படுத்துங்கள்” – பேரின்பப் பெருவாழ்வு வாழுங்கள்

Image

Soul cleaning - serene

“மனதைச் சமப்படுத்துங்கள்” – பேரின்பப் பெருவாழ்வு வாழுங்கள்

 

ஒரு சமயம் ஒருவர் தவறு செய்தார் என்றால் அந்தத் தவறின் நிலையை நாம் சுட்டிக்காட்ட நேர்கின்றது. ஆனால்

1.சுட்டிக்காட்டும் நிலை தவறினால் வெறுப்பின் உணர்வையே ஊட்டுகின்றது.

2.வெறுப்பின் நிலை வளர்த்து விட்டால் ஏற்றுக் கொள்ளும் பண்பே வராது.

 

இதைப்போன்ற நிலைகளிலிருந்து நாம்

1.எதனை…

2.எவ்வாறு…

3.எதன் வழியில் உருவாக்குதல் வேண்டும்…? என்ற நிலைகளை அறிந்துணர வேண்டும்.

 

அதை நாம் பக்குவப்படுத்தும் நிலைகளுக்குச் சமப்படுத்தல் வேண்டும்.

 

ஒவ்வொரு நிமிடமும் மனதைச் சமப்படுத்தினால்… “பக்குவப்படுத்தும் பண்பு” வருகின்றது.

 

பக்குவப்படுத்தும் பண்பு வர வேண்டும் என்றால் “அருள் ஞானத்தின் உணர்வை” அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் விளைவிக்க வேண்டும்.

 

மகரிஷிகளின் அருள் உணர்வுகளை விளைய வைத்துக் கொண்டால் நம் வாழ்க்கையில் வரும் தீமையான உணர்வுகளையும் நஞ்சான உணர்வுகளையும் கார உணர்ச்சிகளையும் “அடக்கும் தன்மை” வருகின்றது.

 

தீமைகளை அடக்கும் தன்மை வந்தால் “சிந்திக்கும் தன்மை” வருகின்றது.

 

சிந்திக்கும் தன்மை வந்தால் நம் செயல்கள் அனைத்தும் “சீராக அமைய” இது உதவும்.

 

இந்த மனித வாழ்க்கையில் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்று அதை நமக்குள் அணுக்களாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

 

அருள் ஒளியினை வளர்த்துப் “பேரின்பப் பெருவாழ்வு” என்ற நிலையை நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.

 

நாம் உலகில் யார் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்கள் அனைவரும்

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்

2.அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்.

3.அவர்கள் குடும்பத்தில் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.

4.தெளிந்த மனம் அவர்கள் பெற வேண்டும்.

5.மகரிஷிகள் அருள் வட்டத்தில் அவர்கள் வாழ வேண்டும்.

6.அருள் ஞானம் அவர்களுக்குள் பெருக வேண்டும்.

7.இருளை நீக்கிடும் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும்.

8.நஞ்சினை வென்றிடும் அருள் ஞானம் அவர்கள் பெற வேண்டும்.

9.அருள் வாழ்க்கை வாழும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

 

நாம் சந்தித்தோர் பார்த்தோர்… நாம் தொழிலின் நிமித்தம் சந்தித்தோர்… தொழிலின் நிமித்தம் இணைந்து வாழ்ந்தோர்… “இவர்கள் அனைவரையும்” நாம் இவ்வாறு நாம் எண்ணினோம் என்றால்

1.நமக்குள் பகைமை என்ற உணர்வை மாற்றி

2.அருள் ஞானத்தின் உணர்வை வளர்க்கச் செய்கின்றது.

“இருந்த இடத்திலிருந்தே…” நீங்கள் அருள் சக்திகளை எளிதில் பெற முடியும்

power of human soul

“இருந்த இடத்திலிருந்தே…” நீங்கள் அருள் சக்திகளை எளிதில் பெற முடியும் 

 

சாமியைப் பார்த்ததும்… அல்லது சாமியாரைப் பார்த்தால்… அவர்கள் ஆசிர்வாதம் கொடுத்தால்… “நமக்கு எல்லாம் கிடைத்துவிடும்…!” என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்.

ஆனால்
1.நாம் எதை நுகர்கின்றோமோ
2.அதைத் தான் நம் உயிர் இயக்கி
3.அந்த உணர்வின் வழிப்படி செயல் படுகிறது  என்பதை அடிக்கடி நான் சொல்லி வருகிறேன்.

நீங்கள் இருந்த இடத்திலிருந்து நல்ல சக்திகளைப் பெற முடியும். அந்தத் தன்னம்பிக்கை வேண்டும்.

உதாரணமாக ஒருவர் திட்டும் போது அதை உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டு என்ன செய்கிறீர்கள்…?
1.“என்னைத் திட்டினார்… திட்டினார்…” என்று எண்ணுகிறீர்கள்
2.என்னைத் திட்டினால் “உருப்படுவானா… அவன் உருப்படுவானா” என்றும் எண்ணுகிறீர்கள்.
3.இந்த உணர்வு அங்கேயும் போய் இயக்குகிறது. இங்கேயும் இயக்குகிறது.

உங்கள் குழந்தை மீது பாசமாக இருக்கின்றீர்கள். குழந்தை வெளியூரில் படிக்கிறது.  ஒரு வாரம் குழந்தையிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்றால் என்ன நினைக்கின்றீர்கள்.

அதன் மீது கொண்ட பாசம் காரணமாக “என்ன ஆயிற்றோ… ஏது ஆயிற்றோ…!” என்று வேதனைப்படுகிறீர்கள்.

இப்படி வேதனைப்படும் போது
1.இதே வேதனை உங்களுக்குள்ளும் விளைகிறது
2.அந்தக் குழந்தைக்கும் அதனால் வேதனை ஏற்பட்டு
3.சிந்திக்கும் தன்மை இழந்து அதனுடைய படிப்பும் கெடுகிறது.

இதற்கு முன்னால் நன்றாகப் படித்துக் கொண்டிருக்கிறது என்று நீங்கள் எண்ணுவீர்கள்.

நீங்கள் இவ்வாறு குழந்தையை வேதனையுடன் எண்ணும் போது அந்தக் குழந்தை சிந்திக்க முடியாமல் படிப்பில் ஓரளவிற்கு நினைவை இழக்கச் செய்கிறது.

முக்கியமான பாடங்கள் இருக்கும் போது நீங்கள் வேதனைப் பட்டீர்கள் என்றால் அங்கே குழந்தைக்கு நினைவில்லாமல் போகிறது.

நினைவில்லாமல் போகும் போது “இன்று நன்றாகப் படித்துக் கொண்டு வந்தோமே…! தேர்வு எழுதும்போது இப்படி ஆகிப் போய்விட்டதே…!” என்று அதுவும் வேதனைப்படும்.

“இது எல்லாம் நம்மை அறியாது செயல்படும் உணர்வின் இயக்கங்களே” என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

1.“நீங்கள் எல்லாம் அருள் ஞானம் பெற வேண்டும்” என்று தான்
2.“உங்கள் உயிரை… நான் கடவுளாக” வணங்குகிறேன்
3.உங்கள் உயிரை “ஈசனாக” மதிக்கின்றேன்.

ஈசனால் உருவாக்கப்பட்டது தான்  உடல். உயிரால் உருவாக்கப்பட்ட உடலைச் “சிவம்” என்று மதிக்கின்றேன்.
1.எண்ணத்தால் உருவானதுதான் “கண்” என்றும்
2.கண்ணால் தான் உருவாகி “எண்ணத்தைக் கொடுக்கிறது” என்றும்  குருநாதர் காட்டிய அருள் வழியில் “உங்களை” நான் மதிக்கின்றேன்.

எண்ணத்தால் தான் நாம் எல்லாவற்றையும் இயக்குகிறோம்.

1.நம் சொல்லே இராமனாகிறது
2.நம் கண்ணே கண்ணனாகிறது
3.நம் உடலே சிவமாகிறது என்ற நிலையில் வைத்து
4.ஒவ்வொருவரும் இதைப் போல நினைக்க நேர்ந்தால்
5.ஒவ்வொரு உடலையும் உயிரையும் கோவிலாகவும் ஈசனாகவும் சிவனாகவும் விநாயகனாகவும் சொல்லை இராமனாகவும் கண்ணைக் கண்ணனாகவும்
6.நாம் மதிக்க முடியும்.

இவ்வாறு நாம் மதித்து விட்டால் நம்மை அறியாது வரும் தீமைகளை அகற்றும் சக்தியை… “நாமே பெறுகின்றோம்”.

ஏனென்றால் தீமை என்ற உணர்வு நுகரப்படும் போது நம் உயிரிலே பட்டுத் தீமைகளை விளைவிக்கும் உணர்ச்சிகள் நம் உடலிலே சுழல்கின்றது.

உயிருக்கு “விஷ்ணு..” என்று காரணப் பெயர் வைத்து அழைக்கின்றனர்.
1.இயக்கத்தின் நிலையை “ஈசன்…” என்றும்
2.இயக்கத்தால் ஏற்படும் வெப்பத்தை “விஷ்ணு…” என்றும்
3.இயக்கத்தால் ஈர்க்கும் காந்தத்தை “இலட்சுமி…” என்றும் தெளிவாக நமது ஞானிகள் எடுத்து உரைத்துள்ளார்கள்.

உயிரான ஈசனிடம் (ஈசனுக்கு) நாம் எதை எண்ணுகின்றோம் என்பதைப் பற்றிச் சிந்தித்திருக்கின்றோமா…?

நாம் எதை எண்ணுகின்றோமோ அது “உயிரிலே மோதும் போது தான்” அந்த உணர்ச்சிகள் நம் உடலிலே இயக்கத் தொடங்குகின்றது.

அதனால் தான் அவனைச் “சங்கு சக்கரதாரி” என்றும் தெளிவாகக் கூறுகிறது நமது சாஸ்திரம்.

இதைப் பலமுறை உங்களுக்கு எடுத்துச் சொல்லியுள்ளேன்.

பிறருடைய வேதனைகளை நாம் சுவாசித்தோம் என்றால் முதலில் அந்த வேதனை உணர்ச்சிகள் நம் உடலுக்குள் சேர்கின்றது.
1.நம் உடலான ஆலயத்தில் அசுத்தத்தைச் சேர்க்கின்றோம்
2.நம்மை ஆண்டு கொண்டிருக்கும் உயிரான ஈசனுக்கும் துயரைக் கொடுக்கின்றோம்.

கண்ணால் உற்றுப் பார்த்து உணர்வின் தன்மை தெளிவாக்கும் நம் கண்ணுக்கு வேதனை என்ற உணர்வு வரும் போது கண் மங்கும் நிலையும்… “சிந்திக்கும் தன்மையும் சீரான உணர்வைக் கவரும் தன்மையும் இழக்கிறது…” என்பதனைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

இதனை மனதில் வைத்து ஒவ்வொரு மனிதனையும் நாம் மதிக்கும் தன்மை வந்தால் “நம்மை நாம் மதிக்கிறோம்” என்று பொருள்.

1.பிறருடைய உயிரை ஈசனாக மதித்தால் நம் உயிரை ஈசனாக மதிக்கின்றோம்.
2.பிறருடைய உடலைச் சிவமாக மதித்தால் நம் உடலைச் சிவமாக மதிக்கின்றோம்.

இதைப் போல
1.உயர்வாக உங்களை நான் மதிக்கின்றேன்.
2.உங்களைக் கடவுளாக மதிக்கின்றேன்.
3.உங்கள் உடலைக் கோயிலாக மதிக்கின்றேன்.
4.உங்கள் உடலைச் சிவமாக மதிக்கின்றேன் – “என் குரு வழிப்படி”.

எனக்கு அதைத் தான் உபதேசித்தார். அதைத் தான் உங்களுக்கும் நான் உபதேசிக்கிறேன்.

இதனை நீங்கள் கருத்தில் கொண்டு வாழ்க்கையில் வரும் சந்தர்ப்பத்தால் நுகரும் தீமையான உணர்வுகளைத் துடைத்துப் பழக வேண்டும்.

இதைத் துடைப்பதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன். பதிவாக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால்
1.”ருந்த இடத்திலிருந்து…” தீமைகளை அகற்றலாம்.
2.உயர்ந்த உணர்வின் சக்திகளை நீங்கள் பெறலாம் என்று தான் சொல்லுகின்றேன்.

“எப்பொழுதுமே… உங்களிடம் தான்… வரம் கேட்கின்றேன் நான்..!”.

காரணம்… உடலான ஈசன் வீற்றிருக்கும் இடத்தில் அமைதி கொண்ட உணர்வுகளை நீங்கள் சுவாசித்தால் அந்த அருள் உணர்வுகள் வெளி வரும் போது… அதைக் கண்டு… “நான் ஆனந்தப்படுகின்றேன்”.
1.என் உயிரான ஈசனுக்கும்
2.அந்த அமுதைக் கொடுக்கின்றேன்.

அந்த ஆனந்தத்தை நீங்கள் பெறவேண்டும் என்பதற்குத்தான் இதைத் தெளிவாக்குகின்றோம்.

குறைகளை அகற்றி அருளைப் பெருக்கி இருளை அகற்றி மெய்ப் பொருளைக் காணும் அந்த அருள் சக்தி பெற ஒவ்வொரு மனிதனின் உணர்விலும் கடவுள் என்ற நிலையில் எடுத்தல் வேண்டும்.

எமது அருளாசிகள்.