“கர்ம தியாகம்”

“கர்ம தியாகம்”

 

மனிதனின் நெற்றியும்… நெற்றிப்பொட்டில் அறுகோணக் கருவறை குணங்களும்… சிருஷ்டியையே… சிருஷ்டியைப் பிணைத்திடும் செயலும் காட்டப்பட வேண்டும்.
1.இந்த நிலை உணர்ந்து கொண்டால்
2.இவைகள் குவிப்பு “அகஸ்திய போக இடும்ப சூட்சம இரகசியங்கள்…!”

“மகரிஷிகளின் சர்வோதய சக்தி” வலுக்கூட்டும் கூட்டு தியானத்தின் போது கார்மேக வான் எழுந்த ஓசையுடன் விண் நீர் பெய்திடும் சூழலில்… தியானத்தின் ஈர்ப்பலையாக மின் நுண் காந்த சக்தி எனும் பதிவு படுத்திட்ட நிலை நிறைவின் போது… உபதேச உரையாக உரைத்திட்டதன் செயலில் “கர்ம தியாகம்” என்ற சூட்சமம் உள்ளது.

சூரியனை எண்ணி ஈர்த்திடும்… “ஓர் ஜெப மந்திரம் – கர்ண முறை வழி” என்று இரகசியப்படுத்தப்பட்டு உலகினுக்கு உரைத்திடாத் தன்மையாக வந்தது தான்.
1.ஆசான் சிஷ்யனுக்கு வெளியில் நீ இதை உரைத்திட்டால் உரைப்பவன் நரகம் எய்துவான்
2.ஆனால் இந்த வேத மந்திரம் கேட்பவன் சொர்க்கம் பெறுவான்.

இருந்தாலும் “இதை வெளியில் உரைத்திடாதே…!” என மொழிந்தார் ஆசான் தன் சிஷ்யனிடம்.

ஆனால் அப்பொழுது மௌனமாக அமர்ந்திருந்த அந்த சீடன் காலைப் பொழுதில் உயர்ந்த ஓர் மதில் மீது நின்று அனைவரையும் அழைத்தான்
1.எல்லோரும் நன்நிலை பெற்றிட வாருங்கள் என்று
2.அவன் ஆசானிடம் பெற்றுக் கொண்ட சூட்சும மந்திரத்தை “உலகறிய உரைத்தான்…”

ஆசான் கனன்று எழுந்து… அடா… என்ன காரியம் செய்தாய்…! இரகசியப்படுத்தப்பட்ட நிலையை உரைத்தாயே… ஏன்…? என்று கேட்கின்றார்.

சீடனோ… “கேட்டவர் அனைவரும் சொர்க்கம் புகுவர்” என உரைத்த ஆசானே…!
1.இதோ இத்தனை ஆத்மாக்களும் கடைத்தேறட்டும்…
2.நான் ஒருவன் மட்டும் கேட்பதில் “ஸ்ரீமன் நாராயணன் பதம் பெறுவேன்…” என்ற எண்ணத்தை
3.இதோ…! இங்கே குழுமி இருக்கும் சிரத்தை மிக்க ஆத்ம ஜீவன் ஒவ்வொருவரிலும் நான் அந்தப் பரந்தாமனையே காண்கின்றேன்.
4.இந்தக் “கர்ம தியாகம்” உள்ளன்புடன் உவந்த எனக்கு “என் நிலை செய்வதாகிலும் ஆகுக…! என்றே உரைத்திட்டான்.

அப்படி வெளிப்படுத்திய அந்தப் பெரியோர் இன்றும் ஒளி நிலை பெற்றிருக்கின்றனரப்பா.

அதே சமயத்தில்… மறைமுகப்படுத்துவது வளர்ச்சிக்கே…!

நுணுகி ஆய்வு செய்வதிடும் சிந்தனையின் வளர்ச்சி… பக்குவம் கொண்டிட்ட நிலையின் அடுத்த வளர்ச்சிக்கு “மகரிஷிகள் உவந்து வழிகாட்டுகின்றார்கள்…”

நீர் பாய்ச்சித் தானியங்கள் விளைச்சல் எனும் மகசூல் பெற்றிடும் ஓர் உழவன் “கேணியில் நீர் நிறைந்திருக்கின்றதே…!” என்று உட்கொண்டிடும் தேவைக்கு மேல் பாய்ச்சிட்டால்… வளர்ப்பின் பலன் செழிப்பைக் காட்டினாலும்… பெற்ற பயனைப் பெற்றுத் தந்திடும் சூட்சும நிலை காட்டிடாது.

1.பக்குவம் கண்டு உபதேசங்கள் அளிப்பதில் தடை ஒன்றுமில்லை.
2.மாமகரிஷிகள் ஆசிகள் என்றும் உனக்குத் துணை நிற்கும்.

ஞானத்தின் வளர்ச்சி எப்போது வரும்…?

ஞானத்தின் வளர்ச்சி எப்போது வரும்…?

 

நமது உயிரின் தன்மை இயக்கப்படும் போது பிறரின் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வுகளைச் (நல்லதோ கெட்டதோ) சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்ந்தாலும்
1.கண்ணின் புலனறிவு நமது ஆன்மாவாக இங்கே மாற்றுகின்றது.
2.இதைத் தான் நாம் நட்சத்திரங்கள் என்று சொல்வது.

எதன் தன்மை வருகின்றதோ ஒன்றுக்கொன்று கலவையாகும் பொழுது அந்தக் கலந்த உணர்வு நாம் சொல்வோம் “எனக்குப் பதட்டாமகிறது என்று…!”

தீமை செய்கின்றான் என்று அவன் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வுகள்… கண் அவனைப் பதிவாக்கி அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் இழுக்கப்படும் பொழுது… அதாவது துருவம் எந்தப் பகுதியில் இருக்கின்றதோ அதனின் நேர் வரிசையில் தான் இழுக்கும்… அதே போன்று
1.நமது கண்ணின் பார்வை எதன் பாதையில் இழுக்கின்றதோ நாம் எண்ணிப் பார்க்கும் பொழுது
2.அதை இழுக்கும் அந்தப் பகுதி வழியாக அதன்வழி பதிவான பின் அந்த உணர்வுகள் ஆன்மாவாக மாற்றுகின்றது.

எந்த மனிதனை நாம் உற்றுப் பார்க்கின்றோமோ அந்த உணர்வு அந்த உடலில் இருந்து வெளிவருவதை இழுத்து நம் ஆன்மாவாக நம் ஈர்ப்பு வட்டதிற்குக் கொண்டு வந்து சேர்ப்பிக்கின்றது.

அப்படிச் சேர்ப்பிக்கும் போது பல விதமான உணர்வும் உள் அடங்கி உணர்வுகள் எதிர்த்து வந்த பின் கலக்கங்கள் வருகின்றது.
1.நல்ல உணர்வுகளும் அவருடைய தீமையான உணர்வுகளும் இங்கே கலக்கப்படும் பொழுது
2.நுகர்ந்த பின் நமக்குள் பதட்டம் ஆகின்றது.

இது எல்லாம் இயற்கையில் நடக்கக் கூடிய நிகழ்ச்சிகள் தான்.

அகஸ்தியன் இந்த உண்மைகளை உணர்ந்தவன் அவன் தன்னுடைய வளர்ச்சியின் பருவத்தில் வரப்படும் போது அவனுக்குத் திருமணத்தைச் செய்து வைக்கின்றார்கள்.

திருமணமான பின் தன்னுடைய மனைவிக்குத் தான் பெற்ற உணர்வுகள் அனைத்தையும் செவி வழி ஓதுகின்றான். உண்மையின் இயக்கம் இதுதான்… இதையெல்லாம் நீயும் பார்க்க வேண்டும் என்று உணர்த்துகின்றான்.

அதைக் கேட்டறிந்த மனையாளும் அதை ஏற்றுக் கொண்டு அதே வழியில் வழி நடந்து வருகிறது.

கணவனால் கண்ட உண்மைகள் தனக்குள் வளர்ந்து அதையெல்லாம் தன் கணவன் பெற வேண்டும் என்று எண்ணுகிறது.

தான் சொன்ன உணர்வுகள் மனைவி கண்டுணர்ந்ததை அகஸ்தியன் தன் மனைவி மீண்டும் உயர வேண்டும் என்று இரு உணர்வுகளும் ஒன்றாகும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.
1.இதுவும் ஒரு சந்தர்ப்பம் தான்.
2.இவ்வாறு இருவரும் இணையப்படும் பொழுது உயர்ந்த உணர்வாக அங்கே வளருகின்றது.

காரணம் ஆண் பெண் என்ற செடிகள் இருந்தால்தான் அது விளைகின்றது… நல்ல அலனைக் கொடுக்கின்றது.

நட்சத்திரங்களிலும் ஆண் பெண் என்ற நிலைகள் தான் உண்டு. ரேவதி கார்த்திகை ரோகிணி என்று ஆண் பெண் என்ற நிலையில் வரப்படும் பொழுது… அது மின்னலாக உருவாகி சந்தர்ப்பத்தால் ஒன்றுடன் ஒன்று மோதிப் பல அணுக்களாக மாறினாலும்… எந்த நட்சத்திரத்தின் துகள்கள் எதனுடன் எது கலக்கின்றதோ… அதற்கொப்ப தான் வளர்ச்சியும் இயக்கங்களும்.

பெண்பாலின் நட்சத்திரம் ஆனால் அது மற்றொன்றைக் கவர்ந்து செடிகளையோ பாறைகளையோ வளர்க்கும் தன்மை வருகிறது. அதன் வழி வளர்ந்த பின் மற்றதுடன் கலந்து இந்த உணர்வு வளர்ச்சி பெறும் தன்மை வருகின்றது.

இதைப் போன்று தான் நமது உயிரும்…!

கார்த்திகை நட்சத்திரத்தின் தன்மை ஆண் பாலாக இருந்தாலும் ரோகிணி நட்சத்திரம் என்று வைத்துக் கொள்ளுங்கள் அதன் உணர்வின் துகள்கள் தூசிகள் மோதப்படும் பொழுது இந்த மோதலில் அதனைக் கண்டு இது அஞ்சி ஓடுவதும்… வியாழன் கோளிலிருந்து வரக்கூடிய சத்து “குரு” – விஷத்தன்மையான கதிரியக்கங்கள் வரும்பொழுது இதைக் கண்டு இது அஞ்சி ஓடுவதும் கார்த்திகை நட்சத்திரத்துடன் மோதும் பொழுது அதற்குத்தக்க மோதி “ஒன்றுக்கொன்று துடிப்பின் நிலைகள் வருகின்றது…”
1.துடிப்பின் நிலை வரும் பொழுது மற்ற கோளிலிருந்து வரும் தூசிகளை இதை ஈர்க்கும் சக்தி வருகின்றது
2.ஈர்க்கும் சக்தி வந்த பின் அது அடைபட்டுவிடுகிறது… அந்தத் துடிபின் நிலையே உயிர்…!

எந்தெந்தக் கோளின் தன்மை அடைபட்டிருக்கின்றதோ துடிப்பால் ஈர்க்கும் நிலை வரும் பொழுது… உராய்ந்து.. அதே உணர்வின் தன்மை தனக்குள் இணைந்து அது அணுவின் தன்மையாக உருவாக்கி… அதன் மலத்தின் தன்மை கொண்டு அந்த உணர்வுக்கொப்ப உடலை மாற்றி அமைத்து விடுகிறது.

இதைப் போல் இந்த உணர்வின் தன்மை உருவான இந்த நிலைகளை அன்று அகஸ்தியன் தெளிவாகத் தெரிந்து கொண்டான். இப்படித்தான் உயிர் உருவானது என்று…!

மற்ற துகளின் தன்மைகள் ஒன்றுடன் ஒன்று கலக்கப்படும் பொழுது எதன் ஈர்ப்புக்குள் வருகின்றதோ சூரியன் ஒளிக்கற்றைகளால் தாக்கப்படுகின்றது.

அந்த உணர்வு பொறியாக மாறி அதன் உணர்வுக்கொப்ப பாறைகள் விளைகின்றது என்பதை அகஸ்தியன் அறிந்த அந்த உண்மைகளை நாமும் அறிந்து கொள்வது நல்லது.

விஞ்ஞான அறிவில் எத்தனையோ பாட நிலைகளை புரட்டி பார்த்து அவர்கள் படித்துணர்கின்றார்கள். ஒரு இன்ஜினியரிங் என்றால் நான்கு வருடம் படிக்கிறார்கள் பௌதீகத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்… டாக்டர் என்ற நிலைக்கு வர வேண்டும் என்றால் அதற்கு ஐந்து வருடம் என்று படிக்கின்றார்கள்… தெளிவாகத் தெரிந்து கொள்ளும் நிலை வருகின்றது.

ஆனால் இப்பொழுது உபதேசிப்பது அனைத்தும்
1.நான் படித்து வரவில்லை… கற்று வரவில்லை…
2.குரு காட்டிய உணர்வின் தன்மையை மோதலில் உணர்வின் உணர்ச்சியாக நான் அறிய முடிகின்றது.

குரு எனக்குப் பதிவாக்கியது போன்று… அதை நான் அதை நுகர்ந்தது போன்று…
1.அந்த இயற்கையின் உணர்வுகள் உங்களுடன் மோதப்படும் பொழுது அதை அறிந்திடும் அறிவாக உங்களுக்குள் வரும்.
2.ஞானம் என்ற நிலையில் உங்களுக்குள் வளர்ச்சியாகும்

விஞ்ஞானத்தால் வரக்கூடிய எத்தகைய விஷத்தன்மையிலிருந்தும் மீட்டிட… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தால் அதைப் பிளந்து நமக்குள் அறிவின் தன்மைகொண்டு காக்கும் தன்மையாக உங்களை மாற்றி அமைக்கும்.

அத்தகைய நிலை நீங்கள் பெற வேண்டும் என்றும் வளர்ச்சியின் பாதையில் நீங்கள் வரவேண்டும் என்று தான் என்பதற்குத்தான் இதை உங்களுக்கு தெளிவாக ஊட்டிக் கொண்டு வருகின்றேன்.

மனிதனாக உயிர் உருவாக்கிய பின் பிறவி இல்லாத நிலையை நீங்கள் அடைய வேண்டும். அப்படிப்பட்ட நிலை அடைந்தவன் தான் அகஸ்தியன்.

சோமாஸ் ஸ்கந்தன்

சோமாஸ் ஸ்கந்தன்

 

சிருஷ்டியின் தொடராக மகரிஷிகளால் மறைமுகப்படுத்தப்பட்ட நிலைகள் தெளிவு பெறும். படைப்பாக்கும் உயிரணுக்கள் ஜீவன் கொள்ளும் செயலில்
1.சிதாகால மண்டலம் என்றே தன்னுள் கவன ஈர்ப்பு நரம்பு நெற்றி பொட்டினுள் எண்ணங்களும்…
2.எண்ணத்திற்கொப்ப வாசனைகளும் வாசனைக்கொப்ப ஜீவன் கொண்டிடும் அணுக்களின் செயலாக
3.சிருஷ்டிக்கின்ற ஒவ்வொரு மனிதனும் பிரம்மனே.

உலகோதய நிலை நாடிடும் மனிதன்… நொடிப்பொழுதினுள் அதற்கும் குறைவாக உயிரணுக்கள் எண்ணத்திற்கொப்ப ஈர்த்து… சிருஷ்டியின் செயல் உலகோதய நாட்டமாக மோகத்தின் குணங்கள் முதன்மையாகக் கொண்டிடும் பொழுது… சரீரத்தின் சகல அணுக்களும் சக்தி கொண்ட சூட்சுமம் “ஓம்” பொருள் என்னும்… ஓங்கார ஒலி கொண்டு ஒளி காட்டும் “தன் ஆத்ம வலுவை உணர்வதில்லை…”

வேல் என்ற அறிவு நற்குணங்கள் என்ற முருகன் கைக்கொள்ளும் செயலில்… அகங்காரம் ஆணவம் மோகவலைப்படுத்தும் “சிருஷ்டி என்றிட்ட குணங்களென்னும் பிரம்மன்…” தன் செயல் ஒழித்து நற்குணங்கள் வசம் சிறைப்படுகின்றான்.

பின் துர்க்குணங்கள் தன் செயல் விடுக்க
1.நற்குணங்கள் சிருஷ்டிப்பதே அதுவும் பிரம்ம தத்துவமாக
2.உலகோதயம் எனும் ஈர்ப்பின் நிலை விடுத்து கை கொண்ட அறிவாகக் காட்டுவதே
3.சிருஷ்டியையே முருகன் சிருஷ்டித்தான்… “பிரம்மாவைச் சிறை பிடித்தான்…!” என்று சொல்வதில் ஓர் சூட்சமப் பொருள் உண்டு.

நெற்றிப்பொட்டு எனும் கவனத்தின் ஈர்ப்பில் உள் நுழைந்திடும் ஈர்ப்பினும் எண்ண நினைவலையாம்… அணுக்கள் அறுகோணக் கருவறை என்ற அறிவின் சூட்சமம் செயல் கொண்டிட… அணுக்களின் எந்த வீரிய குண சக்தியோ அந்தச் சக்தியே செயலாக வேல் தோன்றுவதும் தோன்றாதிருத்தலும் துர்க்குண சம்ஹாரச் செயலுக்கு மனிதன் கொண்டிடும் வைராக்கியம் அந்தச் செயலின் வலுக் கூட்டும்.

1.சப்த கன்னிகள் சாப விமோசனம் என்பதுவும் சூட்சமப் பொருள் தான்
2.ஒளி கொண்டு செயல்படும் சப்தரிஷிகள் சப்தத்தின் நாத வாகினி “உலகத்தின் ஈர்ப்பில் செயல்படுவது சாபம்…”

அத்தகைய சிருஷ்டி அன்றி “சக்திவேல் எனும் அறிவு செயல் கொண்டிட…” உலகோதயம் மாற்றிட்ட சப்த நாதங்களைத் தன்னுள் மெய் ஒலி ஒளி சக்தியாகச் சப்தரிஷிகளின் படைப்பே “நேர்முகமாகக் கொள்தல் என்பது ஈர்ப்பின் நிலை விடுத்த சாப விமோசனம்…”

1.எண்ணத்தின் உயர்வே அறுகோணக் கருவறை உயர்த்திட்ட பீடம்…!
2.அதனில் உயிராத்ம சக்தியை அளந்திடச் செய்திட “நீல வண்ணம்” காட்டும் குளிர்விப்பு சக்தியாகத் தோற்றம் காட்டும்.

பர வெளியில் உருக்கொள்ளும் உயிரணுக்கள் அதனின் சுழற்சி அறுகோணத் தன்மையதாய் அமில குண ஈர்ப்பின் எண்ணம் கொண்ட ஜீவன் பெறுகின்றது. சிருஷ்டியின் இரகசியங்களை இப்படி பிண்டத்தில் கண்டனர் மகரிஷிகள்.

சரீரத்தில் கண்ணுற்ற செயல் எண்ண ஜீவித செயல்பாடு “சிரசின் நெற்றிப் பொட்டில் அறுகோணக் கருவறையாக”
1.அதனுள் எண்ண குண வாசனை சுவாச அலை எனும் ஈர்ப்பாகச் செயல் கொண்டிட
2.சிவசக்தி சுழுமுனை நாடிகள் மூலாதாரம் தொடங்கி பிடரிக்கண் பார்வையுடன் இணைந்து கொண்டு
3.அறுகோணக் கருவறையின் உள் நிகழ்வாகச் செயல் கொண்டு எண்ணங்களின் ஜிவித சிருஷ்டியே நடைபெறுகின்றது.

பர வெளியின் உயிரணுக்கள் தன்மையில் உள்நிகழ்வாகச் செயல் கொண்டிடும் சூட்சுமங்களை… சித்தர்கள் மனித சரீரத்தில் செயல் கொண்டிடும் சூட்சுமத்தையே ஒப்பு நோக்கி… உதயம் கொண்டிடும் அணுக்களின் தன்மையை உணர்த்தினர்.

அணுக்களின் செயல்பாட்டைச் சரீர நிகழ்வாகக் கண்ட மாமகான்கள்
1.சிவன் கையில் முத்தலை சூலாயுதம் சக்தியின் கையில் முத்தலை சூலாயுதம் என்றே
2.”சூல்” என்று அணுக்களின் ஜீவித செயலின் கரு என்றே மறைபொருள் காட்டினர்.

ஏழு பிறவிகள் என்று கூறியவற்றுள் அணுக்களின் உதயம் காட்டிடும் செயலில்… “அறுகோணங்கள்” உலகின் ஜீவித அணுக்கள் கொண்டிடும் “பிறப்பின் இரகசியங்கள்” எனவும்… அந்த உயிரணு தனக்கு ஒத்த அமில குணத்தன்மைகள் ஈர்த்துக் கொண்டிட்டு அறுகோண சூட்சுமத்துள் எந்நிலை வலுக்கொள்கின்றதோ அதுவே அந்த உயிரணுவின் ஜீவித நிலை.
1.அறுகோணத்தின் மையப் பகுதியே
2.தெய்வப்பிறவி எனும் ஏழாம் நிலை.

அறுகோணச் சக்கரம் என்று உரைத்த பின்பு… வாசனையின் குணங்கள் மனிதச் சரீரத்தினுள் கவன ஈர்ப்பெனும் நெற்றிப்பொட்டில்… அறுகோணங்களின் உட்குவிந்த பகுதிகள் நற்குணங்கள் எனவும்… பிறப்பின் சூட்சுமத்தில் தாய்மைப் பேறு குழந்தைக்கு ஊட்டுவது அன்பு பரிவு பாசம் என்ற முத்தொடர்களும்… உயிரணு கருக் கொண்ட நிலைத் தொட்டு ஜீவித சரீரம் பெற்றிடும் எண்ணத்தின் ஈர்ப்பில் தாய்மையால் ஊட்டப்படுகின்றது.

ஞானம் வீரம் சாந்தம் என்றிட்ட குணங்களுக்கே… உள்முகமாக உயிராத்ம சக்தி வலுக் கொண்டிடும் அந்தச் செயலுக்கே
1.அந்த மூன்றின் குணங்களுக்கு வீரிய சக்திகளை
2.ஈர்ப்பினால் ஊட்டப்படல் வேண்டும் “அதுவும் தியானம் கொண்டே…”

சக்தியின் கையில் முத்தலை சூலாயுதம் “இடப்பக்கம் வளைந்திட்ட நிலை கரு கொண்டிடும் உயிரணுக்களின் ஈர்ப்பு… பின்பு அந்த உயிரணுவைப் பேணுகின்ற தன்மை மையப் பகுதியின் கூர்வேல்… முத்தலை சூலாயுதத்தின் வலப்புற வளைவே அந்த ஜீவனை ஈன்றிடும் தாய்மைப் பெறும் என…” – சிருஷ்டியின் இரகசியங்கள் காத்தலாகக் கரங்களில் கொண்ட நிலையும் “சித்தர்களால் காட்டப்பட்டதே…”

ஈஸ்வரரின் கையில் முத்தல சூலாயுதம் உயிரணுக்கள் உதயம் காட்டித் தாய்மைப் பேற்றின் முழுமைக்கு அளித்தலால்… ஈஸ்வரர் கொண்ட முத்தலை சூலாயுதம்
1.சரீர அமைப்பில் சிவசக்தி நாடிகள் சுழுமுனையில் ஒன்றி உயர் ஞானம் வாய்க்கப் பெறின்
2.அங்கு “சோமாஸ் ஸ்கந்தன்” (சிவம்+சக்தி+முருகன்) உதயமாகின்றான்.

சூரிய சந்திர ஒளி பெற்றவன் என்ற பெயர் நாமச் சூட்சுமம் மூலாதாரச் சக்தியாக எழுகின்ற ஊர்த்துவ சக்தி… அருகோணக் கருவறையுள் முத்தலை சூலாயுதம் செயல் கொண்ட நிலை… ஞானவேல் என்ற சக்தியாகக் காட்டுவது…
1.உயர் ஞான நற்குண எண்ணங்கள் நெற்றிப்போட்டில் மோதிடும் செயலாக
2.தெய்வப் பிறவி எனும் மைய நிலையை அறிவால் பொருத்தி… சுடர்தலால் “மனிதனே சிஷ்டிக்கும் பிரம்மன் ஆகின்றான்…”

எலக்ட்ரானிக் கருவிகளை அதிகமாக உற்று நோக்குபவர்களுக்குத் “தலைவலியும் தலை சுற்றலும் வருவதன் காரணம்…”

எலக்ட்ரானிக் கருவிகளை அதிகமாக உற்று நோக்குபவர்களுக்குத் “தலைவலியும் தலை சுற்றலும் வருவதன் காரணம்…”

 

விஞ்ஞான அறிவால் இந்த உலகமே நச்சுத்தன்மை அடைந்து கொண்டுள்ளது. ரேடியோ டிவி ஒலி/ஒளிக் கற்றைகளாக அது பரவிக் கொண்டுள்ளது. மனிதன் உற்றுப் பார்த்துக் கேட்டறியும் போது தனக்குள் பதிவாகி விடுகிறது.

எப்படி…?

1.கெமிக்கல் கலந்த உணர்வுகளை இயந்திரத்துணை கொண்டு எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்று ஒலி/ஒளிக்கற்றைகளாக மாற்றுகின்றனர்..
அதன் மூலம் உருவங்களைப் பார்த்து அந்த உணர்வின் ஒலிக்கற்றைகளை நாம் செவி வழி கேட்டு
3.உணர்வின் தன்மை நுகரும் பொழுது நம் உடலுக்குள்ளும் இது கலந்து விடுகின்றது.

ஒளிக்கற்றைகள் பரவப்படும் பொழுது கண்ணுற்று இந்த உணர்வுகளை நுகர்ந்து அந்த உணர்வின் அறிவாகத் தெரிகின்றோம். “எந்தக் கெமிக்கலில் கலந்து” இதைச் சேர்த்தானோ நிச்சயம் இது இயக்கும்.

எதிலே கலக்கின்றதோ விஷத்தின் உணர்ச்சிகளாக அது இயக்கப்படும் பொழுது இரத்த நாளங்களிலே சிறுகச் சிறுக… சிறுகச் சிறுகச் சேருகின்றது.

நம் உடலில் உள்ள அணு செல்களுக்கும் இந்த உணர்வின் விஷத்தன்மைகள் கலந்து விடுகின்றது
1.அதிகமாக டிவி கம்ப்யூட்டரைப் பார்த்தவர்களுக்கு தலைவலி நிச்சயம் வரும்
2.அதே சமயத்தில் கை கால் குடைச்சலும் அதிகமாக இருக்கும்.
3.சில நேரங்களில் அதைப் பார்த்த பின் இந்த உணர்வின் அழுத்தங்கள் ஆகி மோதலாகும்போது
4.நடந்து போகும் போது சில பேருக்கு தலை சுற்றும்… கீழே தள்ளுகின்ற மாதிரிக் கொண்டு போகும்.

ஆனால் டாக்டரிடம் சென்றால் இரத்தக் கொதிப்பு… அது… இது… என்று எதையெதையோ பரிசீலனை செய்து காசை பறிக்கும் நிலைகள் தான் வரும்.

ஏனென்றால் டி.வி. கம்ப்யூட்டர் போன்ற எலக்ட்ரானிக் கருவிகளை “நெருங்கி உற்றுப் பார்க்கப்படும் போது” இத்தகைய நிலை வருகிறது.

பார்க்கலாம்… ஆனாலும் பார்த்த பின் மாற்றி அமைக்க துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற உணர்வை நுகர்ந்து அந்த வீரியத்தைத் தணித்துப் பழகுதல் வேண்டும்.

சாதாரணமாக… அசுத்தமான இடங்களை நம் கையை வைத்துத் தான் அதைத் தூய்மைப்படுத்துகின்றோம். ஆனால் அதற்குப் பின் அந்தக் கையில் இருக்கக்கூடிய அழுக்கைத் துடைக்கின்றோம் அல்லவா.

அதைப் போன்று நுகர்ந்தறிந்த உணர்வின் தன்மையை அதை எல்லாம் மாற்றி அமைத்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.

இயற்கையின் இயக்க நிலைகளை ஆதியிலே அகஸ்தியன் கண்டுணர்ந்தான். நஞ்சை வென்றிடும் சக்தி பெற்றான். விஷத்தை ஒடுக்கிடும் சக்தியாக அவன் வெளிப்படுத்திய உணர்வுகளைச் சூரியனின் காந்தப் புலன் கவர்கின்றது.

அவன் எதை எதை எல்லாம் கண்டுணர்ந்து அந்த அறிவின் உணர்ச்சியாக மாற்றி அமைத்தானோ அதன் உணர்வுகள் இங்கே பரவிக் கொண்டுள்ளது. அதை எல்லாம்
1.நமது குரு துணை கொண்டு அவர் ஊட்டிய அந்த உணர்வின் தன்மையை உற்று நோக்கி
.அதன் உணர்வைக் கவர வேண்டும் என்ற ஏக்கத்தால் அதைப் பெற்றுக் கொண்டதனால்
3.அகஸ்தியன் கற்றுணர்ந்த உணர்வின் அறிவும் எனக்குள்ளும் (ஞானகுரு) வருகின்றது.
4.அதை நீங்களும் பெற வேண்டும்… உங்களுக்குள்ளும் அது வளர வேண்டும்.
5.அவன் நஞ்சை ஒளியாக மாற்றிய ஆற்றலை நீங்களும் பெற வேண்டும்.
6.விஞ்ஞானத்தால் வரும் நஞ்சுகளை எல்லாம் வென்று அதை ஒளியின் சுடராக மாற்ற வேண்டும்.

“குரு அருள்” என்றுமே உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்

“குரு அருள்” என்றுமே உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்

 

வேதனை என்ற உணர்வு உட்புகுந்து உடலுக்குள் சென்று தீமைகள் செய்யாது தடுத்தல் வேண்டும். அவ்வாறு தடுக்க வேண்டும் என்பதற்காகத் துருவ நட்சத்திரம் ஒளியின் கற்றையாக இருக்கும் அந்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவாக்கி உள்ளேன்.

1.அதை எடுக்கும் திறன் உங்களுக்குள் வர வேண்டும் என்பதற்காக மணிக்கணக்கில் உபதேசித்து
2.ஒவ்வொரு உணர்வின் மாற்றங்களை நீங்கள் அறிந்திடவும்
3.அறிந்த உணர்வு (ஞானம்) உங்களுக்குள் பதிவாகவும்
4.அதனின் நினைவு கொண்டு தீமைகளை அகற்றிடும் அந்த வலிமை பெற வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறேன்.

எப்பொழுது தீமை என்ற உணர்வுகள் வருகின்றதோ அப்போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துப் பதிவாக்கிக் கொண்டால் இந்த உணர்வை எண்ணும் போது உயிர் எலக்ட்ரிக்… எண்ணங்கள் எலக்ட்ரானிக்.

கோபமான உணர்வைப் பதிவாகிவிட்டால் அதை நினைக்கும் பொழுது அது எலக்ட்ரானிக்காக மாறி… கம்ப்யூட்டரில் இயக்குவது போன்று அவன் உணர்ச்சி கொண்டு நமது உணர்வின் குணங்கள் அப்படி இயங்கி விடுகின்றது.

ஆகவே தான் தீமை என்ற உணர்வு நமக்குள் உட்புகாதபடி தடுக்க உயிரான ஈசனை எண்ணி கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரவையின் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

பல முறை துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்துள்ளேன் அந்த உணர்வினை மீண்டும் எண்ணி… காற்றுக்குள் மறைந்திருக்கும் உணர்வின் தன்மை நீங்கள் கவர்ந்து இங்கே இடைமறித்தால் இந்த வேதனை உள்ளே புகாதபடி தடுத்து நிறுத்தப்படும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு தனக்குள் பாதுகாப்புக் கொடுத்து…
2.தீமை செய்யும் அணுக்கள் அந்த அருள் ஒளி கண்ட பின் அது அடைபட்டு விடுகிறது.

ஒவ்வொரு அணுவின் தன்மையும் நம் இரத்தத்தில் சுழன்று வரும் போது தீமை செய்யும் உணர்ச்சிகளை உந்தினால் தான் அது தன் உணர்வை அதிகமாகக் கவரும்.

ஆனால்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரரொளி பெற வேண்டும் என்று உள் செலுத்தினால்
2.உடலுக்குள் இருக்கும் நிலைகளை எல்லாம் இது மறைத்து விடுகின்றது.

தீமையான உணர்வு உள்புகாதபடி தடுத்து நின்ற பின் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் யார் துன்பப்படுகின்றாரோ வேதனைப்படுகின்றாரோ அவர்கள் உடலில் அது படர்ந்து அவருடைய துன்பங்கள் அகல வேண்டும் என்று நம் உணர்வின் சொல்லால் அவர் செவிகளில் பாய்ச்ச வேண்டும்.

அப்பொழுது அவர் நம்மை உற்றுப் பார்த்தால் நம்மிடமிருந்து வெளிப்படும் உணர்வுகளை நுகர்ந்து அந்த உணர்வு உயிரிலே பட்டு அந்தத் தீமைகளை அகற்றும் சக்தியாக மாறும்.

இதைச் செய்… நீ துருவ நட்சத்திரத்தின் சக்தி பெறுவாய்…! என்றால் அந்த நினைவைக் கூட்டினால் அவர்களும் காக்கப்படுவார்கள்.

நடைமுறை வாழ்க்கையில் வேதனைப்படுகிறான் என்று நுகர்ந்தால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் பதிவானால்… அந்த உணர்ச்சிகள் உந்தி… கண் வழி ஆன்மாவாக மாற்றி… உயிருடன் இணைக்கச் செய்து… இரத்தத்தில் கலக்கச் செய்து… அதை உணவாக எடுத்து வேதனைப்ப்டும் அணுக்களாகப் பெருகத் தொடங்கி விடுகின்றது. நல்ல அணுக்களுக்கு இடமில்லாது போய்விடுகிறது.

அதை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்ற ஆசையில் இதைச் சொல்கிறேன்.
1.குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்
2.அவரால் தான் நாம் இதை அறிய முடிகின்றது.
3.அவரின் உணர்வை உங்களுக்குள் பாய்ச்சுகிறேன்

அதை நீங்கள் ஏங்கிப் பெறும் போது நீங்கள் நுகர்ந்ததை உங்கள் உயிர் அதைக் கருவாக்கி உங்கள் உடலுக்குள் அணுவாக உருவாக்கிவிடும்.
1.அதன் துணை கொண்டு உங்களைக் காத்திடும் அரும்பெரும் சக்தியாக
2.குரு அருள் உங்களில் வளர வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்வது..

அறுகோணக் கருவறை எழுதி… அதன் மீது முத்தலை சூலாயுதம் எழுது

அறுகோணக் கருவறை எழுதி… அதன் மீது முத்தலை சூலாயுதம் எழுது

 

அறுகோணக் கருவறை என்பதும் கர்ப்பவாசம் எனப்படுவதும் ஜீவன் கொள்கின்ற அணுக்களின் செயலாக நடைபெற்றிடும் ஓர் சிருஷ்டி..
1.சகல ஜீவன்களும் இதனுள் அடக்கம்.
2.சிருஷ்டிக்கும் காரண மூலம் அதன் செயலைக் காட்டுவதே முத்தலை சூலாயுதம்.

அறுகோணக் கருவறை சிருஷ்டிக்கும் நிலையில்… எண்ணத்திற்குகந்த பிறப்பிற்கு வந்திடும் உயிரணுக்கள்… ஈர்த்து நிலையாக நின்று உயர்த்திச் செயல்படுகின்ற சுழற்சி.

பஞ்சபூதங்களின் சேர்க்கையாய் உருக் கோலம் கொள்கின்ற அந்த உயிரணுக்கள் உலகின் ஜீவித வாழ்க்கை கொண்டு செயல்படும் ஜீவன்கள் தாவரங்கள் நீர் வாழ்பவை ஊர்வன உலவுகின்ற மிருகங்கள் பறக்கும் பறவைகள் மனிதன் என்பவையே அறுகோண சக்கரத்துள் உயிரணுக்களின் சிருஷ்டியாக ஜீவன் கொள்பவை.

1.முத்தலை சூலத்தின் வளைந்த பகுதி… சரீரத்தினுள் நுழைந்திடும் அணுக்கள்
2.சூலத்தின் கூர்மையான மையப்பகுதி… உயிரணுக்கள் அறிவின் தொடராக கர்ப்பவாசம் காக்கப்படும்
3.மற்றொரு வளைந்த பகுதி… ஜீவன் கொண்டு பிறப்பின் செயலாக வெளி வருவது.

காளிதாசன் உணர்த்திய மெய்ஞானப் பாடம்

காளிதாசன் உணர்த்திய மெய்ஞானப் பாடம்

 

“சாதாரணமாகத் தன்னைக் காட்டிக் கொண்டிட்ட வேதாந்த நாதன்” வார்த்தைகள் ஆடி மௌனமாக அமர்ந்திட்ட விசாலவதி தேவியைப் பேச வைத்திட்ட செயல்… சாகுந்தலம் என்ற விசுவாமித்திர காலபங்கம் வெளிப்பட்டு உண்மை நிலையை உலகத்தவர் உணர்ந்திட வாயுரைத்த பிள்ளையாகக் “காளியின் தாசன்” ஆயினர்.
1.”ஓர் தாயின் இரு குழந்தைகள்” என்ற சூட்சுமமே
2.விசாலவதி தேவியைப் பேசிட வைத்தது.

எங்கும் வியாபகமாய் இந்த பூமியின் சுவாசத்தில் செயல் கொண்டிடும் காற்று… அனைத்து உயர் ஜீவன்களும் சுவாசம் கொண்டே அந்தக் காற்றினை உட்கொள்கின்றன.

மெய்ஞான விழிப்பாக்கும் செயல் கொண்டிடும் ஆத்ம ஞானம் பெற்றிட விளையும் செயல் தன்மை கொள்பவர் யாராயினும்…
1.”சுவாச கதியினால்”
2.இந்த பூமியில் மாத்திரமன்று…! எங்கும் எதிலுமாக வியாபித்தே படர்ந்துள்ள சூட்சும சக்திதனைப் பெற்றே உயர்வு நிலை காணலாம்.

தன் நிலை வளர்ப்பாக்கிடும் செயலின் பக்குவத்திற்கு வரும் போது… ஞானி எண்ணிட்ட அனைத்து செயல்படு காரியங்கள்… தங்கு தடையற்ற வழிப் பாதையாக ஆக்கம் காட்டும்.

வேதாந்த நாதன் செயல் கொண்ட காரியங்கள் பேரருள் சூட்சும இலயமாக விளங்கிதை… அதனை எண்ணி உணர்ந்து செயல்படுகின்ற நிலை பெற்றோர்களுக்கெல்லாம் இன்றளவும் அவை அமுதமான செயலாகத்தான் உள்ளது.

வாக் தேவியின் அம்சம் கொண்டவள் விசாலவதி தேவி வாய் திறந்திட… மௌனம் பூண்டு தனக்குத்தான் ஒரு செயலை வகுத்துக் கொண்டிட்டவள்.

வேதாந்த நாதன் முன் திரை மறைவில் அமர்ந்திட்ட அவளின் அருகே உடன் இருந்த தோழிப் பெண்… கல்வியின் சகல பந்தனங்கள் கொண்ட வினாக்கள் தொகுத்திட… பதிலுரைத்து வந்தான் வேதாந்த நாதன்.

பின் அவன் வினா எழுப்பினான்…
1.அம்மணி…! ஒரு தாயின் இரு குழந்தைகள் தமக்கு விருப்பமுடைய பொருளை வேண்டுகின்றனர்.
2.அவற்றில் ஒன்று… தனியே இருந்து தான் பெற்றுக் கொண்ட “அகப்பொருளைக் காக்கின்றது…”
2.மற்றொரு குழந்தை தான் பெற்றுக் கொண்ட பொருளும்… தன் உணர்வும் கொண்டு… “மற்றொன்றுடன் போராடும் செயல் வன்மம் கொள்கின்றது…”
3.தாயின் நிலை சமநோக்கு எனினும் உட்பொருள் தெளிந்திடும் ஞானம் “இடை புகுவோர் பெறுவது என்ன…?”

திரை மறைவில் “ஆ…!” என்ற குரல் எழுந்தது.

வேதாந்த நாதன்… தோழிப் பெண்ணே…! தலைவிக்காக நீ வினாக்கள் தொகுத்தாய்… ஆனால் உன் குரலின் தோனி திரை மறைவின் புதிர் விடுத்து விட்டது. உன் தலைவியே உனக்காக விடை உரைத்திடல் வேண்டும் என்று கூறினான்.

நிலைமையின் நிகழ்வு… விசாலவதி தேவியைத் தன் மௌனம் விடுக்கச் செய்து… பின் வாக் தேவியாக அவள் விடை பகர்ந்தாள்.

ஒரு பொருள் நிறைந்த அங்காடி… அந்தப் பொருளின் உரிமம் கொண்ட பொறுப்பின் மிக்கவர் இருவர். இருவரில் ஒருவர் மற்றவர் அறிந்திடாமல் பொருளைக் கவர்ந்திடும் வழியாக… அந்த அங்காடியில் விற்பனைப் பொறுப்புள்ள சிறுவனிடம் பொருளைக் கவர்ந்திடும் சூட்சும வழிகள் உரைத்திட்டாலும்… அன்றி அந்தச் சிறுவனே அவ்வழி உரைத்தான் எனினும்… “செயல் ஒன்றே…”

1.அங்காடியே – இந்தச் சரீரம்
2.பொறுப்பின் மிக்கவர் – ஆத்ம நிலை…
3.உணர்வுகளின் வழி – உயிர் சக்தி
4.பொருள் விற்பனை காவலர் – செயல் கொண்டிடும் குணங்கள்.

ஆத்ம நிலையின் நோக்கு நீர் கேட்ட வினாவிற்கும் விடை இதில் அடங்குவதே. ஞானத்தின் ஒப்புமை நீரே காட்டும். பின் விடையை உரைக்கின்றேன்…! என விசாலவதி தேவி வாய் மலர்ந்து அருளிட்டாள்.

வேதாந்த நாதன்…
1.நற்குண காரியங்கள் உயிர் சக்தியின் செயலாக அதுவே ஆத்மன் என்ற வலு
2.குணங்களின் செயல்பாட்டில் மாற்று நிலைத் தன்மைகள் உயிர் கூட்டிக் கொண்டிடும் உயர் நிலையைப் பேதப்படுத்தி
3.அச்செயலினால் “ஆத்மாவும்… உயிரும்” சூட்சுமமாக இரு குழந்தைகளாகக் காட்டப்பட்டது.
4.இங்கு “தாய் என்று கூறுவது – பேரருள் சூட்சமம்” என்றான்.

உடனே விசாலவதி தேவி… மனிதனாகப் பிறப்பிற்கு வந்தாலும் குணங்களின் செயல்பாட்டை எப்பொழுது மனிதன் உணர்கின்றானோ… அப்பொழுதுதான் மனிதன் என்ற பெயர் பெறுகின்றான்.

ஞானம் இடை புகுந்தவர் யார்…? குணங்களின் பேதத்தை உணர்ந்து கொண்டு உயர் ஞான சித்திக்குத் தான் பெற்றார் உயர்வின் உருவாக.

அந்தக் குழந்தைகளின் பேதங்கள் நீங்கி… ஒன்றுடன் ஒன்று உறவாடி மகிழும் பேரின்ப இலயத்தில் உணர்வதும் ஒன்று.
1.ஜீவன் கொள்ளும் உயிரணு – உயிராத்ம வலு எனும் சுழற்சியாக
2.பிறப்பெனும் மாய இருளை விலக்கிடும் சக்திக்கே அன்று பெற்ற உயர்வு.

இவ்வாறு விடை பகர்ந்ததும் இருவரும் ஒரே நேரத்தில் திரைகளை விலக்கினர். “மங்கள நாண்” பூட்டிடும் விழா எழுந்தது.

தன்னை ஆட்கொண்ட சூட்சமத் தொடர்பை வேதாந்த நாதனது உயிர் சக்தி விழிப்பாகப் பெற்றுக் கொண்டிட வேதாள மகரிஷி தவமியற்றும் மாகாளிப்பட்டினத்திற்கே தன் துணைவியுடன் வாழ வந்தான்.

அங்கே குப்த மன்னனும் வேதாந்த நாதனும் சீரிய நட்பு வளர்ப்பாகி… நவநீதியர்கள் குழுவில் தலைமை பீடம் ஏற்று பற்பல சூட்சுமங்களுக்கே “காளிதாசனாக” வழி காட்டினான்.

நல்லதைப் பெற வேண்டும் என்று விரும்பினால் தீமை செய்வோரைப் பற்றிய எண்ணமே நமக்கு வரக்கூடாது

நல்லதைப் பெற வேண்டும் என்று விரும்பினால் தீமை செய்வோரைப் பற்றிய எண்ணமே நமக்கு வரக்கூடாது

 

1.கிராமப்புறங்களில் இன்று படிக்காத மக்களாக இருந்தாலும்… கவனித்து ஒரு நிலை பெற்று…
2.சிலருடைய உண்மைகளைப் பேச்சிலிருந்து அறிந்து கொள்ளும் தன்மைகள் கொண்டுள்ளார்கள்.

கல்வி கற்றோரைக் காட்டிலும் கிராமத்தில் உள்ளவர் ஒரு சொல்லை கேட்ட பின் இவன் திருடன் இவன் திருடன் அல்லாதவன் என்ற நிலைகளைப். புரிந்து கொள்வார்கள்.

ஆனால் திருடன் என்ற நிலை வரப்படும் பொழுது அவனை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற உணர்வு வந்து விடுகிறது.
1.அந்தத் திருடும் அறிவை நீக்க வேண்டும்…
2.அவனை நல்லவனாக்க வேண்டும் என்று வந்தால் ஒழித்துக்கட்டும் உணர்வுகள் இங்கே வராது.

ஒழித்துக் கட்ட வேண்டும் என்று வரும் பொழுது அவன் அழின்றான். ஆனாலும் அவன் அழிந்த பின் அவன் வேகத்தின் உணர்வுகள் பரவுகின்றது. அதனால் தான் ஒரு அசுரன் இறந்தால் அதிலிருந்து பல அசுரர்கள் வருகிறார்கள் என்று காவியங்கள் காட்டுகின்றது.

ஒரு அசுரச் செயல் வளர்ந்து…
1.அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து விளைய வைத்து விட்டால்
2.அந்த அசுர உணர்வின் அணுக்கள் அதை நுகர்வோரையெல்லாம் அதே செயல்களைச் செயல்படுத்த ஆரம்பித்துவிடும்.

மகாபாரதத்தில் இராமாயணத்திலும் இது காட்டப்பட்டுள்ளது.

அந்த அசுரன் இறந்த பின் அவனுடைய உணர்வின் அலைகள் எவ்வாறு பரவுகின்றது…? கேட்டுணர்ந்தோருக்கும் இதே செயல்களை எப்படிச் செயல்படுத்துகின்றது…? இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் எப்படி விடுபட வேண்டும்…? என்று காவியப் படைப்பாக நமது ஞானிகள் கொடுத்துள்ளார்கள்

அதனை நாம் சற்றும் சிந்திக்கவில்லை.

இன்று நான் என்ன செய்தாலும் நாளை என்னவோ…! என்ற நிலையில் நாளைக்காகச் சேமிக்க வேண்டும் என்றால் மற்றவர்களை இம்சித்துத் தன்னைப் பாதுகாக்கும் நிலை வருகின்றது.

நாளை என்னவோ…? சரி நடப்பது நடக்கட்டும்…! என்று இருப்போரும் உண்டு. ஆனால் “நாளைக்குஸ் சேமிக்க வேண்டுமே” என்ற ஏக்கத்தில் உள்ளவர்கள் தன்னிடமிருந்து பறித்துச் சென்றுவிடுவார்களே… என்ற துன்பத்தைக் கொண்டு… அந்த பணத்தைச் சேமிக்கும் நிலை வருகிறது.

அப்படிச் சேமிக்கும் தன்மை வரும் பொழுது… அதை மற்றவன் பறிக்கும் தன்மை வருகிறது. இதைப் போன்ற உணர்வுகள் மனிதனுக்குள் மாறி மாறி… மனிதனுடைய சிந்தனையை அழித்திடும் நிலைகள் பரவி வருகின்றது.

ஆகவே இத்தகைய நேரத்தில் குருநாதருடைய உணர்வுகளைத் தான் இங்கே வெளிப்படுத்துகின்றோம்.
1.அவருடைய உணர்வுகள் தான் செயல்படுத்துகிறது… நான் பேசவில்லை…!
2.குரு அருளைத்தான் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
3.அவர் எனக்குத் தெளிவாக உணர்த்தினார்… அதையே தான் உங்களுக்குள்ளும் உணர்த்துகிறோம்

இன்று நல்லதை எண்ணி ஏங்கும் நிலைகள் அனைவர் உள்ளங்களிலும் தீமையான உணர்வுகள் புகுந்து அவருடைய நல்லதைச் செயலற்றதாக மாற்றிக் கொண்டுள்ளது… வேதனையில் துடிக்கின்றனர்.

1.நல்லதுக்காக ஏங்கும் அனைவரும் பிறர் செய்யும் தீமைகளை நுகர்ந்து நல்லதை வளர்க்க முடியாதபடி தடுக்கப்பட்டு
2.அதனால் கடும் நோயும் வேதனையும் வெறுப்பும் கொண்டு
3.என்ன வாழ்க்கை…? என்று கடைசி நிமிடத்தில் ஒதுக்கும் தன்மையை வருகின்றது.

அசுர உணர்வு கொண்டவர்களோ… மற்றவரைத் தாக்கித் தான் வாழ வேண்டும் என்று பிறரைத் துன்புறுத்தும் நோக்கிலேயே செயல்படுகின்றனர். மிருகங்கள் தன் பசிக்கு மற்றவைகளைக் கொன்று பூசிப்பது போன்று மனிதன் இரக்கம் இல்லாத மிருகமாக இன்று மாறிக் கொண்டுள்ளான்.

பிறரைத் தாக்கி அவரைக் கொன்று விட்டு அவன் செல்வத்தை அபகரித்து அதைக் கண்டு ரசித்து வாழுகின்றார்கள்… அவர்கள் மகிழ்ந்தே வாழ்கின்றார்கள்… அப்படி இருந்தால் மகிழ முடியும் என்ற நிலை தான் உருவாகி உள்ளது.

இது போன்ற நிலைகள் தான் இன்று அதிகரித்துள்ளது. இதிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

அதிலிருந்து காத்துக் கொள்ளும் சக்தியாகத்தான் குருநாதர் காட்டிய வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம். பதிவான நிலைகளை நீங்கள் எண்ணி ஏங்கி அந்தச் சக்திகளைப் பெற முடியும்.
1.காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து
2.உங்கள் வாழ்க்கையில் வரும் எத்தகைய கொடிய துன்பங்களையும் அகற்ற முடியும்.

அதற்காகத்தான் இதை எல்லாம் உங்களுக்குத் தெளிவாக உபதேசித்துக் கொண்டு வருவது.

விசாலவதியின் செருக்கு அடங்கிய விதம்

விசாலவதியின் செருக்கு அடங்கிய விதம்

 

வேதாந்த நாதன் வேதாள மகரிஷிடம் கற்றுக் கொண்டது மௌனமாக அமர்ந்திருக்கும் ஓர் நிலை. அஃது அன்றி அறிந்திடாத வேதாந்த நாதன் மடந்தையின் (விசாலவதி தேவி) முன் நின்றிட்ட பொழுது “அவனைச் செயல்படத் தூண்டிய சக்தியாக அகப்பொருள் காத்திட நின்றது வேதாள மகரிஷியின் அருள் சக்தி…”

மடந்தை வேதாந்த நாதனிடம் உரைத்த வினா… ஒரு கை ஓசையும்… ஒரு விரல் அறிவும்… நான் என்பதுடன் கூடி நிலை பெற்றால்… “நீ என்பது என்ன…?”

1.அபரிதமான சிந்தனை உடையவள் அந்த மடந்தை கொண்ட அறிவு…!
2.ஆனால் “அவளின் அகங்காரமின்றேல்” அவள் அம்மன் சக்தியாய் செயல் கொண்டிருக்க முடிந்திடும்.

கூர்ந்த மதி கொண்ட வேதாந்த நாதன் பெற வேண்டிய உயர்வின் தன்மைக்கு… பெறுகின்ற அனுபவ நிலைகள் “கவிகாளிதாசன்” என்றிட்ட சொல் நாமத்திற்கு… வித்தின் நிலை போல் செயல் கொண்ட விதம் வேதாள மகரிஷியினுடையது.

1.ஆலமரத்தின் வித்து சிறியது தான் என்றாலும் அதன் திறத்தை அறிந்து கொண்டிட முடிவது
2.அந்த வித்து முளைத்து கிளைத்து அறியதாகிய வளர்ப்பாக ஈர்த்து வளர்ந்த பின்
3.அந்நிலையில் அதனை நாம் முழுமையாக உணர்கின்றோம்.

தெளிந்த மனம் கொள்கின்ற பாங்கு செயல் உருவாக வளர்ச்சியின் விதம் காண்பிக்கப்படுவதாக… சிறப்பரிய ஆலின் வித்து போல் உயர் ஞானத்தின் வளர்ச்சி… “ஆலின் வித்து தழைப்பதைப் போல் ஞானத்தின் பாங்காக வளர்ச்சி நிலை பெறுதலும் உண்மை…”

1.வேதாந்த நாதன் மடந்தையின் முன் நின்று அவள் வினவிய பொருள் தன்மை உணர்ந்திடாத நிலையிலும்
2.அவன் உள்ளத்தை ஆட்கொண்டது வேதாள மகரிஷி காட்டும் “சின் முத்திரை…”
3.அதுவே மன மண்டலத்தில் வியாபிக்க… அந்த முத்திரை கூட்டித் தியானத்தில் ஆழ்ந்து விட்டான்.

மடந்தையின் வினாவிற்கு வேதாந்த நாதனின் இந்நிலை கண்ட அவள்… சொல்லாமல் சொல்வித்த பதில்… அவள் கரம் கூப்பிக் கண்களில் ஆனந்த நீர் சொரிய சிரம் தாழ்த்தித் தொழுதாள்.

கூடி இருந்த புலவர் பெருமக்கள்… அம்மணி…! வேதாந்த நாதன் பதில் உரைத்திடா வண்ணம் தியானத்தில் அமர்ந்து விட்டான். வினா தொடங்கிய நீயே இதற்குரிய பதிலும் அளித்திட சூழ்நிலையை அவரே உருவாக்கி விட்டார். பதில் உரைத்திடல் வேண்டும் என்று கேட்டனர்.

மடந்தையோ… கல்வியின் செருக்கு என் மனக்கண்ணை மூடி அகங்காரம் கொண்டுவிட்டேன்… கல்வியின் சிறப்பை அவமதித்துவிட்டேன். இவர் ஒருவர் பதில் உரைத்து என் அகக்கண் திறந்து… ஆட்கொண்டிட்டார்.

1.ஒரு கை ஓசையே – பிருகிருதியின் நாதக்தம் (இயற்கையின் நெறி)
2.அதனைச் சுட்டிக்காட்டும் மாமகான்கள் – “பரப்பிரம்ம பெருநிலை அறிவு என்பர்…”
3.“நான்” – என்றிட்ட தன்மையைத் தெளிந்து
4.பிருகிருதியின் சூட்சுமத் தன்மைகள் தன்னில் கலந்தே – “தானும் அதுவாகி”
5.சிவமென்று அழைக்கப் பெற்றிட சுட்டும் அறிவும் தன்னுள் தெளிந்த “நான்” என்னும் நிலை தெளிவுபடுத்தவே
6.சுட்டு விரலும் கட்டை விரலும் இணைந்து… அந்தப் பொருளை முத்திரையாக… சிவ ஜீவ ஐக்கியமாக மறைபொருள் காட்டுகின்றனர்.

என் செருக்கு நீங்கிடப் பெற்றேன்…! என்று உரைத்தாள் அந்த மடந்தை (விசாலவதி).

“துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தனித்துப் பிரித்தெடுக்கக்கூடிய வல்லமையை” நாம் பெற வேண்டும்

“துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தனித்துப் பிரித்தெடுக்கக்கூடிய வல்லமையை” நாம் பெற வேண்டும்

 

விஞ்ஞான அறிவு கொண்டு டிவிக்களில் மனித உருக்களைப் படமாக்கிக் காட்டுகின்றார்கள்… ஒலி/ஒளி அலைகளாகப் பரப்புகின்றார்கள். எந்த அலைவரிசையில் திருப்பி வைக்கின்றோமோ அந்தப் படக் காட்சிகளையும் அதிலிருந்து வரும் சொல்களையும் காண்கின்றோம்.

இதைப் போன்று தான் ஒரு தெய்வத்தை வழிபட்டு வருகிறோம் என்றால்… அதை நமக்குள் பதிவாக்கி விட்டால்
1.பதிவான உணர்வுகள் அங்கு இருப்பது கல் சிலை தான்
2.அதிலே பல நிறங்கள் பல ஆடைகள் பல ஆபரணங்கள் எத்தனையோ விதமான அலங்காரங்கள் எல்லாவற்றையும் கண்களால் உற்றுப் பார்த்து
3.அந்த உணர்வின் அலைகளாக மாற்றித்தான் நாம் நுகர்ந்து அதை அறிகின்றோம்.

அதாவது அதன் மீது சூரியனுடைய ஒளிக் கதிர்கள் படப்பட்டு எத்தகைய கலர்கள் இருந்ததோ அந்த உணர்வலைகள் கவரப்பட்டு அந்த அலைகளாகக் கவர்ந்து வெளி வருகின்றது.

அதன் உணர்வைத் தான் நம் கண்ணின் கருவிழி தனக்குள் இதைப் பதிவாக்குகிறது. கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ சூரியனால் கவரப்படும் இந்த அலைகளைத் தனக்குள் எடுத்து இந்த பூமியில் பரவுவதைக் கருவிழி இங்கே பதிவாக்கியதனால் இதைக் கவர்ந்து கொள்கிறது.

கவர்ந்து நமது ஆன்மாவாக மாற்றி நம் உயிரிலே இணைக்கச் செய்து இந்த உணர்வின் அலைகளை உடலில் பரப்பச் செய்து அதன் உணர்ச்சிகள் எதுவோ அதன் செயலாக்கங்களை நம்மை அறியச் செய்கிறது.

மனிதனாக இருக்கக்கூடிய நாம் அறிந்து இதை கொள்ள வேண்டும்.

நான் (ஞானகுரு) படிக்காதவன் தான்…! குரு அருளைப் பதிவு செய்து அதன் வழி உணர்ந்து கொண்ட… தெரிந்து கொண்ட நிலையைத் தான் என்று வெளிப்படுத்துகின்றேன்.

சாமி என்னமோ சொல்கின்றார்…! விஞ்ஞானத்தைப் பற்றிப் பேசுகிறார்…! என்று எண்ண வேண்டியதில்லை.
1.விஞ்ஞான அறிவு கொண்டு எதைச் செய்கின்றார்கள்…? என்று குரு அருளால் இங்கிருந்து அதை நான் காண முடிகின்றது.
2.அந்த அலைகள் பரவி இருப்பதை என்னால் நுகரவும் அறியவும் முடிகின்றது.

காரணம்… விஞ்ஞானத்தின் அபரித வளர்ச்சியால் தீமைகள் பயக்கின்றது. அதிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்பதற்குத்தான் உங்களில் இதைப் பதிவாக்குகின்றேன்.

நீங்கள் நினைவு கொண்டு அந்த அருள் ஞானிகளின் அருள் உணர்வை எடுத்து “விஞ்ஞான விஷத்தன்மையால் வரும் பேரழிவிலிருந்து… உங்களை நீங்கள் மீட்டிக் கொள்ள வேண்டும்…”

எப்படிப் பல ஸ்டேஷனில் இருந்து அலைகள் வந்தாலும் டிவி.யைத் திருப்பி வைத்தவுடன்… அந்த ஸ்டேஷனுக்குரிய அலைகளை மட்டும் பிரித்து எப்படி எடுக்கின்றதோ… அதைப் போல்
1.துருவ நட்சத்திரத்தில் இருந்து வரும் ஒளி அலைகளைச் சூரியனுடைய காந்தப்புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி வருவதை
2.இப்பொழுது பதிவாக்கிப் பதிவு கொண்ட நிலையை நினைவைக் கூட்டி அந்த வலுவினை எடுத்துக் கொண்டால்
3.நாளைக்கு எத்தனை விபரீதங்கள் விஞ்ஞானத்தில் வந்தாலும் அதிலிருந்து பிரித்து
4.நீங்கள் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து உங்களைக் காக்க முடியும்
5.உங்கள் சார்புடையோரையும் நஞ்சிலிருந்து மீட்க முடியும்.

அந்த நிலையை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் குரு இட்ட ஆணையை… அந்த வழிப்படி செய்கின்றேன்

சூரியன் வாழ வேண்டும் என்றாலும் தனக்கு ஒத்த கோள்களின் தன்மை சமப்படுத்தினால் தான் இதுவும் வாழ முடியும். தனக்கொத்த நிலைகளில் வந்தால் தான் சூரியக் குடும்பமே ஜீவனுடன் இருக்க முடியும்.

உதாரணமாக குடும்பத்தில் குழந்தை பிறந்து வளர்ச்சியடைந்து திருமணமான பின் தனிக் குடும்பமாக செல்கின்றார்கள்.

இது போன்றுதான் இந்தச் சூரிய குடும்பத்தைச் சேர்ந்த நட்சத்திரங்கள் தனக்கென்று நிலையில் வரப்படும் பொழுது… கார்த்திகை நட்சத்திரம் அதுடன் சேர்ந்து ஏனைய நான்கைந்து நட்சத்திரங்கள் தனக்கென்று ஒரு குடும்பமாக சூரியக் குடும்பமாக பிரிந்து சென்று விட்டது.
1.அவை எடுத்துச் சமைத்து நம் சூரியனுக்குக் கொடுக்கும் உணர்வுகள்
2.சூரியனுக்குக் கிடைக்காது போய் விட்டது (அதனால் மங்கல் ஏற்பட்டுக் கொண்டுள்ளது).

இருப்பினும் நட்சத்திரங்களால் வெளிப்படுத்தப்பட்டு மின்னல்களாக வருவது… அதன் உணர்வுகள் பல நிலைகள் மாறினாலும் நமது பூமிக்குள் அந்த மின்னல்கள் தாக்கப்படும் பொழுது செடி கொடிகள் கருகி விடுகின்றது.

அதே மின்னல்கள் பூமிக்குள் ஊடுருவினால் எதிர் நிலையான நட்சத்திரங்களின் அலைகள் ஒரு இடத்தில் குவியப்படும்போது இங்கு எதிர் நிலைகள் உருவாகின்றது.

சாந்த குணங்களும் நல்ல பண்புகள் கொண்டிருக்கப்படும் பொழுது ஒருவன் பயமுறுத்தும் உணர்வினை வெளிப்படுத்துகிறான் என்றால் அதை நுகர்ந்தால் உடலையே அது எப்படிக் கலக்குகின்றதோ நம்மை அஞ்சச் செய்கின்றதோ… சிலருக்கு பேதி கூட ஆகிவிடும். அவன் தன்னைக் கொன்று விடுவான் என்றால் அந்த உணர்வின் தன்மை வந்தபின் பேதியாகி விடுகிறது.

இதைப் போன்றே நட்சத்திரங்களுடைய மின் கதிர்கள் ஊடுருவி விட்டால்
1.எதிர்நிலை கொண்டு கொதிக்கலனாக மாறுகிறது… பாறைகளை உருக்கி விடுகின்றது.
2.இந்த பாறைகள் உருகி வரும்பொழுது நட்சத்திரங்கள் தாக்கிய ஒளிக்கற்றைகள் அது பலவீனமாகும் வரையிலும் குழம்பாகி
3.ஒரு நொடிக்குள் ஒரு குலுக்கு குலுக்கி விட்டு நின்றுவிடும் (நிலநடுக்கம்).

அதன் பின் பார்த்தால்… சில பாறைகளில் வெடிப்பாக இருக்கும். உருகிக் குழம்பான ஆவியின் கற்றைகள் வெளிச் செல்லும் பொழுது பாறைகளில் பல பல உலோகத் தன்மைகளும் மருந்துத் தன்மையும் பாறைகளின் நிறங்கள் மாற்றம் கைரேகை போன்று இருக்கும்.

எங்கே வெடித்ததோ அந்த ஆவியின் தன்மை சேர்ந்து மறுபடியும் அந்த சந்தை அடைத்துக் கொள்ளும்.

இவைகள் எல்லாம் இயற்கையின் நியதிகள்… ஆதியிலே கண்டவன் அகஸ்தியன்.
1.அவனுடன் சேர்ந்து விஞ்ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வுகளை இணைத்துப் பார்த்து
2.உலகம் எப்படி இருக்கின்றது…? என்று உங்களை நீங்கள் அறிந்து
3.இனி வரும் விஷத்தன்மைகளிலிருந்து நீங்கள் மீண்டிட வேண்டும்.

அந்த அகஸ்திய மாமகரிஷியின் உணர்வுகளை நுகர்ந்து உங்களை நீங்கள் காத்துக் கொள்ள வேண்டும். உங்கள் எண்ணம் தான் அதற்கு உதவும். எந்த சாமியாரும் எந்தக் கடவுளும் நம்மைக் காப்பாற்றப் போவதில்லை.