Prayer to SOUL – Song

Image

Oh, lovable Lord
Reign me with your grace

With cosmic energy acquired form Cosmos
Reign me with your grace

Be harmony with my song
Always come in my thoughts

For getting the Eternal Bliss
I surrender my mind to you.

Without you, I am not at all
Now grace me, all the endurance power
Acquired in my evolutionary cycle to attain immortal

On singing you, never make me forget about you,
Grace me the Matured Wisdom of Sages.

Be within me for ever,
To stop my selfish desire which emanates from me.
To stop my bad deeds.
Be with me for ever

_song given by Great Sage Mamaharishi Eswaraya Gurudevar

Trust yourself

Image

By evolution cycle today we are human. Without realizing that we all live for this material world. This world is not ours. We are not living for this world. One day this whole solar system may vanish.

Our SOUL is formed by the powers of Cosmos. We can acquire that powers by inhaling through our SOUL. There are billions and billions of such immortal SOULS in cosmos. We all can join that family and LIVE FOR EVER.
“EVER SIXTEEN”

“NO DEATH NO BIRTH”

— Gnanaguru Venugopal Swaamigal

செல்வம் தன்னாலே தேடி வரும்…! அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும்…?

 

treasure hunt

செல்வம் தன்னாலே தேடி வரும்…! அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும்…?

இந்த மனித உடலுக்குப்பின் நாம் பெற வேண்டியது எது…? என்பதை உங்கள் எல்லோருக்கும் தெளிவாக்கும் தன்மைக்குத்தான் யாம் (ஞானகுரு) கொண்டு போகின்றோம்.

இன்று மனிதருடைய ஆசைகள் எப்படி இருக்கின்றது…? செல்வத்தைச் சம்பாதித்துவிடலாம்… செல்வத்தைத் தேடலாம்…! என்ற ஆசைகளில்தான் இருக்கின்றது.

ஆனால் இந்த உடலுக்குச் செல்வம் தேவை என்று யாம் உணர்ந்து தான் இருக்கின்றோம்.

நீங்கள் செல்வத்தைத் தேடிப் போகின்றீர்கள் என்றால் அவ்வழியில் உங்களை முறைப்படுத்திச் சென்றால் செல்வம் தானாக உங்களைத் தேடி வரும்.

நீங்கள் வேண்டாம்…! என்று சொன்னாலும் செல்வம் தன்னாலே தேடி வரும். அமைதியும் கிடைக்கும்… சொல்லும் நன்றாக இருக்கும்… கேட்போரிடத்தில் தீய உணர்வுகளை நீக்கும்…!

இப்பொழுது நாமே தபோவனத்துக்குச் செல்வம் வேண்டும் என்று தேடிப் போய்க் கொண்டிருந்தால் பணம் வரும். ஆனால் கூடவே சங்கடமும் சேர்த்து வரும்.
1.அப்புறம் குழப்பம் தான் வரும்.
2.ஆகையினால் நாம் செல்வத்தை எண்ணுவது முக்கியமல்ல.

உலக மக்கள் அனைவரும் அருள் செல்வம் பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது அந்த அருள் செல்வம் தன்னாலே வரும். அருள் செல்வம் என்பது
1.நாம் பார்க்கும் அனைவரது உயிரையும் கடவுளாக (ஈசனாக) மதித்து,
2.உயிரால் உருவாக்கப்பட்ட அந்த உடலை ஆலயமாக மதித்து
3.அருள் மகரிஷிகளின் அருள்சக்தி ஈசன் வீற்றிருக்கும் அந்த ஒவ்வொரு ஆலயத்திலும் படர்ந்து
4.அனைவரும் அருள் ஞானிகளாக வேண்டும் என்று நாம் வேண்டுவது தான்.

ஆரம்பத்திலிருந்து யாம் இதைத் தான் செய்து வருகின்றோம். அருளைப் பெருக்கும் பொழுது இருள் நீங்குகின்றது. அப்பொழுது பொருள் தன்னாலே சேரும்.

எதன் நிலையில் எப்படிச் செயல்படுத்த வேண்டும்…? என்பதற்குத்தான் இவைகளை உங்களுக்குத் தெளிவாகக் கூறுவது.

துருவ நட்சத்திரத்துடன் நம்மை இணைத்துக் கொண்டால், தீமைகள் புகாது (REMOTE) தடுத்துவிடலாம்

1. அருள் உணர்வுகளை நமக்குள் இயக்கமாக்கி,

தீமைகளை எப்படித் தடுக்க வேண்டும்?

யாம் நிறைய அருள் உபதேசங்களை உங்களுக்குக் கொடுத்திருக்கின்றோம்.

அருள் உணர்வுகளை எப்படி உங்களிடத்தில் இயக்கமாக்க வேண்டும்? தீமைகளை எப்படித் தடுக்க வேண்டும்? என்று யாம் அடிக்கடி உங்களுக்கு உபதேசித்திருக்கின்றோம்.

“சாமி சொன்னார்கள், மறந்துவிட்டது” என்று இருக்கக்கூடாது. அருள் உணர்வுகளை உங்களுக்குள் “ஆழமாகப் பதிவு” செய்து கொள்ள வேண்டும்.

இந்த விளக்கங்களை நாம் தெரிந்து கொண்டால், ஒவ்வொரு நிமிடமும் தீமைகள் வராதபடி தடுக்கலாம்.

நாம் எதை எண்ணுகின்றோமோ, அவைகளை நம்முள் சேர்க்கின்றோம். நம்மிடம் ஒருவர் கஷ்டத்தைக் கூறும் பொழுது, அதை நாம் உற்றுக் கேட்கும் பொழுது அவ்வுணர்வுகள் நம்மில் பதிவாகின்றது.

ஆனால் பிறர், தான் சொல்லும் கஷ்டத்தைக் கேட்கவில்லை என்றால், “என்னவோ பெரிய பிகு பண்ணுகின்றான் பார், நாம் சொல்லுகிறோம், காது கூடக் கேட்க மாட்டேன் என்கிறது” என்று நம்மைப் பற்றிக் குறை கூற ஆரம்பித்து விடுவார்கள்.

ஆகையினால் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி, வேதனையின் உணர்வுகளைக் கேட்டால்,அதனைச் செவியுடன் நிறுத்திக் கொண்டு, உள்ளுக்கே கவரும் தன்மையாக எடுக்கக் கூடாது.

நம்முடைய எண்ணங்கள் துருவ நட்சத்திரத்தின்பால் சேர்க்கப்படும் பொழுது, பிறர் சொல்லும் வேதனை உணர்வுகளை தன்னுள்ளே கவராது.

இப்பொழுது, யாம் உங்களுக்கு மத்தியில் பேசிக் கொண்டு இருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது சமயம், நீங்கள் “நம்முடைய வீட்டில் செய்யவேண்டிய வேலை என்ன, வீட்டில் மகன் என்ன செய்து கொண்டிருக்கின்றானோ, ஏதாவது செய்து விட்டால் என்னவாகும்?” என்று எண்ணிக் கொண்டிருப்பீர்கள் என்றால் யாம் சொல்லும் உணர்வுகள் உங்களிடத்தில் பதிவாகாது.

2. துருவ நட்சத்திரத்துடன் நம்மை இணைத்துக் கொண்டால் தீமைகள் நம்மைப் பாதிக்காது

ஆகையால் ஒருவர் நம்மிடம், தீமை தரும் உணர்வுகளையோ வேதனை தரும் உணர்வுகளையோ சொல்வாரே என்றால் அது சமயம், துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம்முள் இணைப்போம் என்றால், அந்த தீய உணர்வுகளை நம்முள் புகாது தடுக்கலாம்.

அவர்கள்சொல்லும்உணர்வுகள்செவிகளில்கேட்கும்,

ஆனால் ஈர்க்காது. இதனை ஒரு பயிற்சிக்குக் கொண்டு வரவேண்டும்.

இன்று, எத்தனையோபேர்எம்மிடம்கஷ்டங்களைநிவர்த்திக்கவருகின்றார்கள், அவர்களுடையவேதனைகளைச் சொல்கின்றார்கள். யாம்அதைஈர்ப்பதில்லை.

யாம், எம்மைத் துருவ நட்சத்திரத்தின்உணர்வுகளுக்குள் இணைத்துக்கொள்வதால் அவர்கள் என்னசொன்னாலும் கேட்டுக் கொள்வோம்.

அதன் பிறகு, யாம் கோபமாக என்ன சொல்வோம். “போங்கள்…, உங்களுக்கு ஒன்றுமில்லை போங்கள்…,”  என்று சொல்வோம்.

அப்படி யாம் சொன்னால், “சாமி திடீரென்று நம்மைக் கோபிக்கின்றாரே” என்று எண்ணினால் என்னவாகும். ஏனென்றால்,

அவர்கள் சொல்லும் வேதனையின் உணர்ச்சிகளை

உடனே தாங்கி, மடக்கிஅனுப்புகின்றோம்.

நீங்கள்சாமிநம்மைக் கோபித்துக்கொண்டார்என்றுசொன்னால், யாம்என்னபண்ணுவது. அப்படியானால், அவர்கள்சொல்லும்கஷ்டத்தையாம்ஈர்க்கவேண்டுமா?

யாம் உங்கள் கஷ்டத்தை நீக்குவதற்குத்தான் அப்படிச் சொல்கின்றோம்.

மற்றவர்கள் அனுபவிக்கும் கஷ்டத்தையெல்லாம், நீங்கள் உற்றுக் கேட்பீர்கள் என்றால் என்னவாகும்? அந்த உணர்வுகள் உங்களுக்குள் இந்திரீகமாக மாறும்.

ஆகையால், இந்த தீயஉணர்வுகள் உங்களிடத்தில்வராதுதடைப்படுத்தக் கற்றுக்கொள்ளவெண்டும்.

இவ்வாறு, தீமைகள் தமக்குள் வராது தடைப்படுத்த தியானத்தை சீராகக் கடைப்பிடிக்கும் அன்பர்கள் அனைவருக்கும், எமது அருளாசிகள்.