ஜீவனுடன் உள்ள ஆன்மாவிற்கும் ஜீவன் இல்லாத ஆன்மாவிற்கும் உண்டான வித்தியாசம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

soul parameters

ஜீவனுடன் உள்ள ஆன்மாவிற்கும் ஜீவன் இல்லாத ஆன்மாவிற்கும் உண்டான வித்தியாசம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இச்சரீரத்தில் நாம் பெற்றுள்ள அமிலத்தின் தன்மைக்கும் இப்பூமியைச் சுற்றியுள்ள நட்சத்திரக் கோள்களின் அமிலத்தின் தன்மைக்கும் தொடர்புண்டு.

சுவை ஏழு… வண்ணம் ஏழு… நாதம் ஏழு… மணம் ஏழு… என்ற நிலையில் இந்த பூமியின் தொடர்பு நிலை மையத்தின் விகித நிலைகள் பலவாக மாறுபட்டாலும்… ஒன்றின் தொடர்பு கொண்ட வீரியத் தொடர்பில்.. பல மாற்றத்துடன் ஒவ்வொன்றும் ஜீவன் பெறுகின்றது.

ஜீவிதத்தின் தொடர்பில் ஒன்றிலிருந்து ஒன்று மாற்றப்படும் அமிலக் கலவையின் கூட்டு விகிதத்தில் செயல் தன்மை பலவாக மாறு கொள்கின்றது.

1.நொடிக்கு நொடி மாறுகொள்ளும் உணர்வின் செயல் வட்டத்தில்
2.இச்சரீரத்தின் எண்ணத்தை எப்படிப் பக்குவப்படுத்தல் வேண்டும்…? என்ற ஞானத்தைத்தான்
3.நாம் உயர் ஞானமாக்கும் வழிமுறைக்குச் செயல்படல் வேண்டும்.

நாம் வாழக் கூடிய வீட்டிற்கு முன் கதவு வைத்து நமக்குப் பாதுகாப்பிற்கான செயலுடன் வீடு கட்டிக் கொள்கின்றோம். வெளி உலகத் தொடர்பிற்கு நாம் வீட்டின் முன் கதவைத் திறந்துதான் வெளியே செயலுக்குச் செல்கின்றோம்.

உண்ண உறங்க இச்சரீரத்தின் பாதுகாப்பிற்கு வீட்டை அமைத்துக் கொள்கின்றோம். வெளி உலகத்திற்கும் வீட்டிற்கும் எப்படி முன் கதவு இருக்கின்றதோ அதைப் போன்று
1.சரீரம் என்பது நம் ஆத்மாவிற்கு வீட்டைப் போன்றது.
2.இவ்வீட்டிற்குள்ளே ஆத்மா குடியிருக்கக்கூடிய செயலானது
3.ஆத்மாவினுடைய வளர்ச்சியின் செயலுக்கான எண்ணத்தை வீட்டின் கதவைப் போன்று
4.வெளி உலகத்திற்கும் வீட்டிற்கும் எப்படிக் கதவை வைத்துப் பாதுகாப்பு அமைத்துக் கொண்டுள்ளோமோ
5.இக்கதவு என்ற எண்ணத்தைப் பாதுகாப்பின் செயலுக்காக நாம் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

இச்சரீரத்தின் உணர்வின் எண்ணத்தைக் கொண்டுதான்…
1.ஆத்மாவின் ஒளியைப் பிறவா நிலை என்ற
2.ஜோதி நிலைக்குச் செயல்படுத்திடல் முடியும்.

நிலைக் கண்ணாடியில் நம் பிம்பத்தைப் பார்க்கும் பொழுது நம்மைச் சுற்றியுள்ள பொருளையும்… நம் உருவத்தையும் எதிர்படுத்திக் காட்டுகின்றது

அதுவே இரசம் பூசப்படாத கண்ணாடியில் பார்க்கும் பொழுது வெளி உலகைத்தான் பார்க்க முடிகின்றது. நம் உருவமோ நம்மைச் சுற்றியுள்ள நிலையோ எதிர்படுத்தி இரசம் பூசாத கண்ணாடியில் பார்க்க முடிவதில்லை.

1.அதைப் போன்று இச்சரீரமென்பது நம் ஆத்மாவிற்கு இரசம் பூசப்பட்ட கண்ணாடியைப் போன்றது.
2.ஜீவனற்ற ஆத்மாவின் நிலை இரசம் பூசப்படாத கண்ணாடியைப் போன்றது.

தன் பிம்பத்தைத் தானேக் கண்டு… தன்னைச் சுற்றியுள்ள பொருளும் கண்ணாடியில் தெரிவதைப் போன்று… ஆத்மாவின் இயக்கத்தின் செயல் இச்சரீர ஜீவனில் வாழக்கூடிய செயலில்…
1.தன்னைத்தானே உணர்ந்து வளரும் வலுவிற்கு வலுக் கூட்டக் கூடியது
2.இச்சரீரத்தின் இயக்கமுடன் கூடிய ஆத்மாவின் வாழ்க்கை…!

உடலை விட்டு ஆத்மா பிரிந்து விட்டதென்றால் அவ்வாத்மாவிற்கு ஊடுருவிப் பார்க்கும் கண்ணாடியைப் போன்று எதிர் நிலையைத்தான் உணர முடியுமே தவிர “தன் ஆத்மாவை வளர்த்துக் கொள்ள முடியாது…”

ஆகவே இதைத் தெளிவாக உணர்ந்து கொண்டு
1.இப்போழுது இருக்கும் இந்த உடலையே கடைசி உடலாக எண்ணி…
2.உயர் ஞானத்தை இச்சரீரத்தில் விளைவித்து…
3.ஆத்மாவைப் பேரொளியாக ஆக்கி…
4.மகரிஷிகள் வாழும் இடம் செல்ல வேண்டும்.
5.அழியா ஜோதி நிலை பெற வேண்டும்.

மரணம் – உயிர் எதனால் உடலை விட்டுப் பிரிகின்றது…?

death

மரணம் – உயிர் எதனால் உடலை விட்டுப் பிரிகின்றது…?

உதாரணமாக ரோட்டிலே நாம் போகும்போது அது கோள்களைப் போன்ற நிலை தான். அங்கே பிறிதொருவர் செய்யும் தவறைப் பார்க்க நேர்கின்றது. கூர்ந்து கவனித்தால் அதை நாம் எடுத்துச் சுவாசிக்கின்றோம்.
1.எந்தக் குணத்தில் எண்ணிச் சுவாசித்தோமோ அது நம் உடல் முழுவதும் பாய்கின்றது.
2.நம்மிடம் இருக்கக்கூடிய நல்ல குணம் கெட்ட குணம் எல்லாவற்றிலும் அது மோதும்.
3.அந்த உணர்வலைகளை நம் உடலுக்குள் முழுவதிற்கும் செலுத்தும்போது அந்த உணர்வின் துடிப்புகள் அதிகமாகின்றது
4.அப்பொழுது நம்மிடம் இருக்கக்கூடிய நல்ல குணங்களைப் பதறச் செய்து விடுகின்றது.

சந்தர்ப்பத்தில் நாம் சுவாசித்த அந்த உணர்வுகள் உள்ளே சென்றவுடன் உடலோடு அமைப்பாக இருக்கும் மற்ற அணுக்கள் ஒவ்வொன்றும் அதற்குத்தக்கவாறு நெளிந்து கொடுக்கின்றது.

அதாவது நாம் ரோட்டில் நடந்து போகின்றோம் பூமியில் பல சக்திகள் வருகின்றது. இந்த வேப்ப மரத்திலிருந்து கசப்புகள் வருகின்றது. அந்தப் பக்கம் குப்பையைக் கொட்டி வைக்கின்றார்கள். இன்னொரு பக்கம் ஒரு தொழிற்சாலையிலிருந்து விஷமான நிலைகள் வெளி வருகின்றது.

ஒரு காற்றடித்தால் இத்தனை விதமான மணங்களும் நமக்கு அடிக்கின்றது. நம் உடலுக்குள் மற்ற மற்ற அந்த அணுக்களின் தன்மை இருந்தாலும் ஒவ்வொரு தடவையும் நாம் சுவாசிப்பது உடல் முழுவதற்கும் எல்லா பாகத்திற்கும் போய்க் கொண்டுதான் வரும்.

நாம் எந்தெந்த குணங்களைச் சுவாசிக்கின்றோமோ அவை அனைத்தும் நம் உடலுக்குள் உறவாடுகின்றது.

ஆனால் தீமையாக இருக்கும் பட்சத்தில் நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களில் அது மோதும் போது அப்பொழுது நமக்குப் பதட்டமும் பயமும் ஏற்படுகின்றது.

இப்படி நாம் சுவாசிக்கக் கூடிய நிலைகளில் அடிக்கடி நாம் கெட்டதைச் சுவாசித்தால் என்ன ஆகின்றது…? உடலில் நோய் வருகின்றது…!

நாம் சலிப்பான நிலை கொண்டு “அசிங்கம்” என்ற நிலைகள் கொண்டு மனம் சோர்வடைந்து பேசுகின்றோம். ஒரு நெடியான வாசனைக் கண்டவுடனே உடலுக்குள் அந்த நெடியின் தன்மை வருகின்றது. இதைப் போல…
1.நாம் சுவாசிக்கக்கூடிய ஒவ்வொரு நிலையும்
2.நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களுக்குள் அது இணைந்தவுடனே
3.அது நம் உடலுடன் சேர்த்து இயக்கப்படும்போது சிறுகச் சிறுக மாசுபடும் நிலையாக வருகின்றது.

இவ்வாறு… வாழ்க்கையிலே அடிக்கடி நாம் சேர்க்கும் இத்தகைய நிலைகளினால் அசுத்தமாகின்றது.

1.உதாரணமாக ஒரு சண்டை போடும் உணர்வைப் பார்க்கும் போது அடுத்து நாமும் சண்டை போடுவதற்குத் தயாராகி விடுவோம்.
2.அடிக்கடி பயத்தினுடைய நிலைகளில் இருப்பதைப் பார்த்தோம் என்றால் அந்த உணர்வுகள் நமக்குள் பய அலைகளைத் தோற்றுவித்துவிடும்.

இதைப் போன்ற உணர்வின் தன்மை அது வளர்ச்சியான பின் அந்த நிலைக்கே நம்மை அது “திசை திருப்பி விடுகின்றது…!” அதை அவ்வப்பொழுது சுத்தப்படுத்தவில்லை என்றால் நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களின் தன்மை அனைத்தும் மாறிவிடும்.

ஒரு குழம்பு வைக்கின்றோம் என்றால் அதிலே உப்பை அதிகமாகப் போட்டு விட்டால் அந்தக் குழம்பை நாம் வெறுக்கின்றோம். அதே சமயம் காரம் அதிகமாகி விட்டாலோ நாம் வெறுக்கின்றோம்

அதைப் போல நாம் எடுத்துக் கொண்ட பல கோடி உணர்வுகள் நம் உடலுக்குள் இருந்தாலும் ஒவ்வொரு நிமிடமும் சலிப்போ சஞ்சலமோ கோபமோ ஆத்திரமோ இது எல்லாம் நாம் தவறு செய்யாமலே சேர்ந்து விடுகிறது.

ஏனென்றால் பிறர் செய்யும் தவறின் நிலைகளை நாம் பார்க்காமல் இருக்க முடியாது. நல்லது… கெட்டது… என்ற நிலைகளில் நாம் பார்த்தாலும் அந்த உணர்வுகள் நம் உடலில் வந்து சேர்ந்து விடுகின்றது.

1.அன்றைய தினத்தில் நாம் எதை எதையெல்லாம் பார்த்தோமோ
2.அதற்குத் தகுந்த மாதிரிதான் அன்றைக்கு நமது செயல் எல்லாமே இருக்கும்.

இரண்டு பேர் சண்டை போட்டதைப் பார்த்தால் ஆத்திரமும் பயமும் நாம் எடுத்துக் கொண்ட நிலைகளுக்கொப்ப வேகமாக இந்த அலைகள் கொண்டு அன்றைய இரவில் காது சம்பந்தப்பட்ட வலியோ கண்ணிலே வலியோ ஏற்படும்.

ஏனென்றால் அந்த ஒளி… ஒலிகளை இழுத்துப் பேசும் அந்த மேக்னெட் பவரும் அதனுடைய வேகத் துடிப்பு அதிகமாகிவிடும் ஒரு மோட்டாரை இயக்கினாலும் அதிலே லோடு அதிகமாகி விட்டால் சுழன்றால் அது சூடாகிவிடுகின்றது.

அதைப் போல் சமமான அந்த உணர்வுகளை இழுக்கும்… ஒலியை நமக்கு ஊட்டக் கூடிய அந்த காதுகளில் காந்தம் தேய்மானமாகின்றது. சூடாகும்போது அதனுடைய காந்த சக்தி குறையும்.

பயமோ ஆத்திரமோ இவைகளை அதிகமாக எடுத்தால் நமது கண்ணில் இருக்கக்கூடிய கருமணிகள் பலவீனமாகிவிடும். இதைப்போல சோர்வு சஞ்சலம் அதிகமாக எடுத்தாலும் கரு விழியில் இருக்கக்கூடிய நிலைகள் அது இயக்கச்சக்தி என்ற நிலைகள் கம்மியாகும்.

சஞ்சலமும் சோர்வும் மற்ற உணர்வின் தன்மையும் அடிக்கடி எடுத்தால் செவியில் இருக்கக்கூடிய நாதங்களை இயக்கும் நிலைகள் மந்தமாகச் செய்து அதனுடைய நிலைகள் பதிவாகிவிடும்.

இப்படி கண் காது மூக்கு முதற் கொண்டு நம் உடலில் உள்ள எல்லாவ்ற்றிலுமே அது கலந்துவிடும். நாம் அடிக்கடி சுவாசிக்கும் இந்த உணர்வின் நிலைகள் எலும்புக்குள் இருக்கக்கூடிய உணர்வுகளிலும் அது படருகின்றது.

அந்த எலும்புகளில் இருக்கும் காந்த சக்தியினால் தான் நம் உயிருக்கே கரண்ட்டை உற்பத்தி செய்ய கூடிய காந்தம் உருவாகி அதன் மூலம் இந்த உடலை இயக்க முடிகின்றது.

1.அதாவது… உயிரின் துடிப்பு வரப்படும்போது காந்த அலைகள் உருவாக
2.அந்தக் காந்தம் இருந்தால்தான் (உடலிலே) உயிரே துடிக்கும்

இல்லை என்றால்… காந்த உற்பத்தி குறைவாகி விட்டால்…
1.உயிருக்குள் இருக்கக்கூடிய இந்த துடிப்பு கொண்டு
2.இந்த உடலில் இருக்கும் காந்தத்தை இழுக்காமல்
3.வெளியில் இருக்கக்கூடிய காந்தத்தில் இழுத்துவிடும்… ஈர்க்கப்பட்டு விடும்.

இந்த உடலில் விளைய வைத்ததின் நிலை இது தான் மரணம் என்பது…!

புவியின் ஈர்ப்பிற்குள்… அந்தத் துடிப்பின் நிலை “நம் காந்தம்…” என்றைக்குக் கம்மியாகின்றதோ அந்தச் சமயத்தில் இந்த உயிராத்மா வெளியே வந்துவிடும்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்… உயிருடன் ஒன்றி உணர்வுகளை ஒளியாக மாற்றிய… மகரிஷிகளின் எண்ண ஒளிகள் அனைத்தும் நமக்கு முன்னாடி இந்தக் காற்றிலே மிதந்து கொண்டு இருக்கின்றது.
1.அதை நீங்கள் பெறுவதற்குத்தான் யாம் (ஞானகுரு) கொடுக்கும் இந்த உபதேசமும்
2.அதன் வழி செயல்பட வேண்டிய தியானமும்.

 

உடலை விட்டுப் பிரியும் போது குருநாதர் சொன்ன விண் செல்லும் மார்க்கம்

Divine world

உடலை விட்டுப் பிரியும் போது குருநாதர் சொன்ன விண் செல்லும் மார்க்கம்

என்னை (ஈஸ்வரபட்டர்) அணுகியோர் பலர் உண்டு. பல அற்புதங்களைச் செய்து காட்டினேன். அந்த அற்புதத்தில் மயங்கி இருந்தோர் பலர் உண்டு.
1.அவர்கள் எல்லாம் என்னிடத்தில் எப்படி எல்லாம் வந்தார்கள்…!
2.எதை நாடி வந்தார்கள்… எதைச் சொன்னார்கள்… கேட்டார்கள்…?

தனக்குச் சொத்து வேண்டும்…. சுகம் வேண்டும்… உடல் நலம் வேண்டும் என்றும் தன் காரியத்திற்காக வேண்டி அந்த அருள் வேண்டும்… இந்த அருள் வேண்டும்… என்று தான் கேட்டார்கள்.

1.மெய்ப் பொருள் காணும் சக்தி பெற வேண்டும்
2.உலகம் நலமாக இருக்க வேண்டும்…. உலக மக்கள் நலமாக இருக்க வேண்டும்.
3.பிறருடைய குடும்பங்கள் நலமாக இருக்கக்கூடிய சக்தி நான் பெற வேண்டும்
4.என் பேச்சால் மூச்சால் நான் பார்ப்போருடைய குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று தான் எண்ண வேண்டும்.

ஆனால்… இதைப்பற்றி என்னிடம் யாரும் கேட்பார் இல்லை.

ஆகவே தனக்குத் தான் கேட்டார்களே தவிர… “எல்லோரும் நலம் பெற வேண்டும்…!” என்ற கேள்வி அங்கே எழவில்லை.

எல்லோரும் அந்த அருள் ஞான சக்தி பெற வேண்டுமென்று நான் (ஈஸ்வரபட்டர்) எண்ணினேன்… அதைப் பெற்றேன். அந்த உணர்வின் தன்மை கொண்டு இந்த உடலைவிட்டு நான் வெளி செல்லப் போகின்றேன்…!

ஆனால் நீ எதை எண்ணப் போகின்றாய்..? எதை நீ பெறப் போகின்றாய்…? என்ற இந்த வினாக்களை எழுப்பினார்.

வைகுண்ட ஏகாதசி வருவதற்கு முன்னாடி இப்படி ஒரு மாதமாக என்னை (ஞானகுரு) பல கேள்விகளைக் கேட்டு பல உணர்வின் தன்மையை தெளிவாக்கினார்.
1.நீ பெற வேண்டிய தகுதிகள் எது…?
2.நீ பெறுவது எப்படி என்ற இந்த உணர்வைத் தெளிவாக்கிக் காட்டினார்.

மேலும்… இந்த உடலை விட்டுச் சென்ற பின்…
1.என்னுடன் நீ இணைந்து நீ வர வேண்டுமென்றால்
2.நீ எதை எண்ண வேண்டும் என்று கேட்கின்றார்…?

அந்தத் துருவ மகரிஷிகளின் அருள்சக்தி என் குரு பெற வேண்டும். அவர் என்றுமே ஒளி சரீரம் பெற வேண்டும். அவர் பேரின்பப் பெரு வாழ்வு வாழ வேண்டும். அழியாத ஒளிச் சரீரம் பெற வேண்டும் பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும்.
1.அந்த அருள் வழி “என் குரு பெற வேண்டும்…” என்று நீ எண்ணினால்
2.அந்தக் குரு உனக்குள் ஒளியின் சரீரமாக ஆகின்றார்.

உங்களுக்குச் சொல்வது அர்த்தமாகிறதா…? இதை நீங்கள் தெளிவாக்கிக் கொள்ளுங்கள்…!

ஆகவே அவ்வாறு எண்ணும் போதுதான்… என்று நீ இப்படி எண்ணுகின்றாயோ அப்பொழுது நீ அதுவாகின்றாய்…! என்று இந்த நிலையை அன்று தன் உடலை விட்டுப் பிரிவதற்கு முன் ஈஸ்வரபட்டர் அதற்குச் சில உபாயங்களைச் சொல்லிக் கொடுத்தார்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் நிலையும் சப்தரிஷிகளின் அருள் ஒளியும் பெறும் தகுதியும் பெற்று இதன் வழி கொண்டு அந்தக் குருவை நீ எப்படிச் செலுத்த வேண்டும்…? எதை நீ உருவாக்க வேண்டும்…? என்ற பேருண்மையை உணர்த்திவிட்டுத்தான் அந்த வைகுண்ட ஏகாதசி அன்று அந்த உடலைவிட்டு அவர் ஆன்மா பிரிகின்றது.

உடலைவிட்டுச் சென்ற பின்…
1.அந்தக் குருவின் நினைவும் அதன் உணர்வு இங்கே விளையவும்
2.மனித உடலுக்குள் இருந்தாலும் அந்தச் சப்தரிஷி மண்டலங்களையும் துருவ நட்சத்திரத்தையும்
3.மீண்டும் மீண்டும் நினைவு கொண்டு வரப்படும்போது
4.அதன் தொடர் கொண்ட அந்த அருள் மகரிஷி அதன் வழிகளிலே சென்று ஒளியின் சரீரமாகப் பெறுகின்றார்

ஏனென்றால் அந்த வரிசை… ஒன்றை வைத்துத் தான் ஒன்று விண் செல்ல முடியும்…!

இந்த மெய் வழியை நீ பெறு… மற்றவருக்கும் இந்த நிலையைக் காட்டி அவர்களையும் பெறச் செய். அவர்கள் பெற வேண்டுமென்று நீ ஏங்கு… அதன் வழி பெறும் தகுதியை அவர்களைப் பெறச் செய்…!

அடுத்தவருடைய நிலைகளும் இதைப் போன்று எண்ணும் போது
1.நீயும் அங்கே எளிதில் செல்கின்றாய்.
2.பிறரும் அந்த நிலைகளைப் பெறுகின்றனர்.
3.ஆகவே இதனை நீ வழிப்படுத்து…! என்று சொன்னார் குருநாதர்.

கோபம் ஆத்திரம் வேதனை பயம் போன்ற உணர்வுகள் உடலின் இயக்கத்தை நலியச் செய்து நோய் உருவாக எப்படிக் காரணமாகிறது…?

Magnetic power of human body

கோபம் ஆத்திரம் வேதனை பயம் போன்ற உணர்வுகள் உடலின் இயக்கத்தை நலியச் செய்து நோய் உருவாக எப்படிக் காரணமாகிறது…?

உதாரணமாக ஒரு பல்பிற்கு (ELECTRICAL BULB) அது எரிதற்குத் தகுந்தவாறு கரண்ட் இருந்தால்தான் அந்த பல்ப் சுடராக… வெளிச்சமாக இருக்கும்.

அது போல் சாதாரண மனிதனின் எண்ண அலைகளை எடுத்துக் கொள்வதற்கு நாம் இப்பொழுது எடுக்கும் மூச்சலைகளே போதுமானது.

அது போதுமானதாக இருந்தாலும் ஒரு மனிதனுக்குக் கோபமோ அல்லது பயமோ வந்து விட்டால் நம் உடலிலே காந்த சக்தி (POWER) குறையத் தொடங்கும்.

காந்த சக்தி கம்மியாக இருக்கும்போது…
1.ஒருவர் தவறு செய்கிறார்… என்ற அந்த வேகமான உணர்வுகளை நாம் இழுக்கப்படும் பொழுது
2.அதைச் சரியான முறையில் இயக்க முடியாத நிலைகளில் நம் உடல் அனைத்துமே நடுங்கும்.

ஒரு மோட்டாருக்குக் காந்த சக்தி (HORSE POWER) கம்மியாக இருக்கும் போது லோட் (LOAD) அதிகமாகி விட்டால் அதற்கு மேல் அந்த மோட்டார் சூடாகிவிடும்.

இதைப் போலத்தான் மனிதர்கள் நமக்குள் இருக்கக்கூடிய நிலைகளும்.

நம் உடலில் அடிக்கடி கோபம் சலிப்பு பயம் போன்ற உணர்வுகளைச் சுவாசிக்க நேர்ந்தால் நம் உடலில் காந்தத்தை உற்பத்தி செய்யும் சக்திகள் குறைகின்றது.

அப்படிக் குறையப்படும் போது…
1.முன் பகுதி ஏதோ கோபமாக பேசி இருப்போம் ஆத்திரமாகப் பேசி இருப்போம்.
2.அதைப் போன்ற உணர்வின் சத்துகளை அதிகமாகச் சுவாசித்து
3.நம் உடல்களில் சேர்க்கப்படும்போது பல வியாதிகளுக்கும் அது காரணம் ஆகின்றது.
4.அதே சமயம் நம் உடலில் இருக்கக்கூடிய காந்த சக்தியும் தேய்வாகின்றது.
5.அவ்வாறு தேய்ந்து விட்டால் நாம் எடுக்கும் எந்த ஒரு எண்ணத்தையும் அது சீராக இயக்கவிடாது.

ஒரு சங்கடமான நிலைகள் ஒருவர் சொல்கின்றார் என்றால் அதை நாம் காதுக் கொடுத்துக் கவனித்துக் கொண்டிருந்தால் போதும்

அந்த உணர்வை இழுத்து அதைக் கிரகிக்க கூடிய தன்மை இல்லாதபடி வெறுப்பு ஆத்திரம் இதைப் போன்ற உணர்வுகள் தான் நமக்குள் தோன்றும்.

ஆக அதைத் தாங்கும் நிலை நம் உடலில் இல்லாது போகின்றது. காரணம்… நம் உடலில் காந்தப்பவர் உற்பத்தி செய்யும் திறன் கம்மியாவதால் தான்.

ஆனால் உயிரின் துடிப்போ அது எப்போதும் ஒரே சீராகத்தான் துடித்துக் கொண்டிருக்கும்.

பூமி நிலைகள் விண்ணிலே ஓடும் போது அது சூரியனுடைய எந்த ஈர்ப்பில் இருக்கின்றதோ ஒரே சீராக… ஒரே ஓட்டமாகத் தான் ஓடிக் கொண்டிருக்கும்.

அப்படி ஓடினாலும் நமது பூமிக்குள் எந்த அளவுக்குக் காந்த சக்திகள் இருக்கின்றதோ
1.அதற்குத் தகுந்தவாறுதான் விண்ணிலே ஓடும் போது இதனுடைய சுழற்ச்சியின் தன்மை இருக்கும்…
2.அதற்குத் தகுந்தவாறு தான் காந்தத்தை உற்பத்தி செய்யும்.

சந்திரனிலே காந்தப் பவர் கம்மியாக இருப்பதனாலே பூமியின் ஈர்ப்பு ஓட்டத்திற்குள் இதனுடைய சம பங்கு கொண்டு பூமியைச் சுழன்று வருகிறது.

ஆனால் சந்திரனுக்குக் காந்தப் பவர் அதிகமாகி விட்டால் அந்தக் காந்தத்தின் சக்தி கொண்டு வந்தால் பூமியின் ஈர்ப்பை விட்டு விலகி சூரியனின் ஈர்ப்பு வட்டத்திற்குச் சென்றுவிடும். (சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!)

சூரியனுடைய காந்தப் பவர் அதிகம். அந்த சூரியனுடைய காந்தம் அதிகமாக ஈர்க்கப்படும்போது சந்திரன் அதனுடைய சுழல் வட்டத்திற்குத் தனித்துப் பிரிந்து சென்றுவிடும்.

சந்திரனில் அந்தக் காந்தப் புலன் குறைவாக இருப்பதால் தான் பூமியின் காந்த வட்டத்திற்குள் அது எடுத்து இதிலிருந்து பிரியாது இதற்குள் பகிர்ந்த நிலைகள் கொண்டு நம் பூமியைச் சுழன்று கொண்டு வருகின்றது.

இதை எல்லாம் தெரிந்து கொண்ட நிலைகள் கொண்டு
1.வாழ்க்கையில் பயமோ ஆத்திரமோ சங்கடமோ கோபமோ வந்தால்
2.அது வளர்ந்து விடாதபடி தடுக்கும் எண்ணம் கொண்டு
3.மகரிஷிகள் அருள் சக்தியை நமக்குள் வலிமையாக்கிக் கொள்ள வேண்டும்.
4.இதனால் நம் எண்ணங்களும் தூய்மை அடைகிறது
5.நோய் உருவாகாதபடி தடுத்துக் கொள்ளவும் முடிகின்றது

நம் மனதை மங்கச் செய்யாதபடி… தங்கமாக்கச் செய்யும் அருள் சக்தி

Konganar -tirupathi

நம் மனதை மங்கச் செய்யாதபடி… தங்கமாக்கச் செய்யும் அருள் சக்தி

அன்று மகரிஷிகள் எந்த அருள் வழியைக் காட்டினார்களோ அதன் வழியில் நம் உள்ளத்தைத் தங்கமாக்க வேண்டும்.

தங்கம் என்ன செய்கின்றது…? தங்கத்திற்கு என்ன குணம் இருக்கின்றது..?
1.தங்கம் எதிலையும் அது மாசுபடுவதில்லை.
2.அதாவது வெள்ளி செம்பு போன்று அதனுடைய நிறம் கருப்பதே இல்லை.

அதைப் போன்று தான் அந்தத் தங்கத்தைப் போன்று ஒவ்வொரு எண்ணத்தையும் உயர்ந்ததாக ஆக்கிக் கொண்டால்
1.ஒருவர் நம்மைத் திட்டினாலும் நம்மை
2.நல்ல எண்ணத்திலிருந்து மாசுப்பட்டு நம்மை அழிக்காது.

இதைத் தான் மனதைத் தங்கமாக்குவது என்று சொல்வது…! ஏனென்றால் தங்கத்தில் உள்ள அழுக்கு நிற்குமோ…? நிற்காது… அதனுடைய நிறத்தை மாற்றாது.

நம்முடைய உணர்வின் நிலைகளை பிறர் நம்மைச் சங்கடப்படுத்துகின்றார்கள்… நம்மைப் பழித்துப் பேசிவிட்டார்கள்..! என்ற இத்தகைய உணர்வுள் வந்து விட்டால் செம்பிலேயோ வெள்ளியிலேயோ அழுக்குப்பட்ட மாதிரி உள்ளே மறைந்து விடுகிறது.

அது பக்கு பக்காக நீங்கள் தேய்க்க தேய்க்கத் தேய்ந்து கொண்டே இருக்கும். ஆனால் அந்தத் தங்கத்தினுடைய நிலைகள் மாசில்லாத நிலைகளாக இருக்கப்படும் போது பளிச்… என்று பளபளப்பாக… இருக்கும்.

நம் நல்ல எண்ணத்திற்குள் பிறர் சொல்லும் துன்பமான எண்ணங்கள்… இருள் சூழும் நிலைகள் வந்து விட்டால் உடனே இங்கே இந்த ஞானத்தை ஊட்டும் நிலைகள் மறையும். நாம் அறிந்து இந்த அந்த இருளை எப்படி மாற்றுவது…? என்ற அந்த எண்ணத்தை அகற்றிவிடும்.

அப்படி ஆகாமல் மாற்றுவதற்குத்தான் இப்பொழுது யாம் உபதேசிக்கும் ஞானிகளின் அருள் உணர்வு கொண்டு
1.மனதைச் சுத்தப்படுத்துவோருக்கு ஆத்ம சுத்தி என்ற நிலைகள் கொண்டு
2.ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் ஆற்றலை எடுத்துச் சுத்தப்படுத்தி
3.மாசுபடும் நிலைகளை மாற்றி நமக்குள் இருக்கக்கூடிய ஒவ்வொரு உணர்வின் எண்ணத்தையும் தங்கமாக மாற்ற வேண்டும்.

இது தான் கொங்கணவர் தன் மனதைத் தங்கமாக்கிய நிலைகள்.

ஆகையினால் அதே மாதிரி நீங்களும் செயல்படுத்துங்கள்.
1.உங்கள் வாழ்க்கையில் செல்வம் வரும்
2.உங்கள் மனதில் மகிழ்ச்சி வரும்
3.உங்கள் சொல்லிலும் செயலிலும் தெளிவும் வரும்.

 

தெய்வ சக்தி பெற்ற மனித உயிராத்மாக்கள் தான் படைக்கப்படும் படைப்பிற்கே உறுதுணையாக இருக்கின்றது…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Astral powers of human soul

தெய்வ சக்தி பெற்ற மனித உயிராத்மாக்கள் தான் படைக்கப்படும் படைப்பிற்கே உறுதுணையாக இருக்கின்றது…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

1.சிவனான ஆண் குண வலுவைக் கொண்டு
2.சக்தியான பெண் உணர்வின் எண்ண அமில ஈர்ப்பின் ஜீவித தொடர்பால்
3.இரண்டு ஆத்மாக்களின் ஈர்ப்பு வட்டம் ஒன்றின் தொடர்பு கொண்டு எடுக்கப்படும் தியான அலையின் வலுவைக் கூட்டக் கூட்ட
4.அவ்வலுவின் வளர்ச்சியால் ஆத்ம ஐக்கிய உணர்வு சரீர வாழ்க்கை பந்தத் தொடர்பில்
5.ஒரே எண்ண குண தொடர்பின் சுழற்சியில் வளர வேண்டும்.

ஏனென்றால் அப்படிப்பட்ட உயர் நிலையில் வளர்ச்சிக்கு வரும் இந்த மனித சக்திகளால் தான் ஒவ்வொரு கோள்களாகவும்.. ஒளி சக்தி கொண்டு ஒளிரும் சக்தியாகவும்… நம் பூமியில் சூரியனின் ஒளி அலைகள் வீசத்தக்க ஈர்ப்பின் தொடர் கொண்டு வளர்ந்துள்ள இயற்கை வள கனி வளங்களும் தாவர இனங்களும் உருவக அமைப்பின் தன்மையும் எல்லாமே உருப்பெற்று உள்ளன.

இன்று ஓர் பலூனை ஊதும் பொழுது… எந்த வடிவ அமைப்பில் அது உள்ளதோ… எந்த அளவுக்குக் காற்றின் அழுத்தத்தைச் சேமித்து உப்பக்கூடிய நிலை அதற்குள் இருக்கின்றதோ… அதனுடைய வடிவை அது பெறுகிறது. அதிகப்படும் பொழுது பலூன் வெடித்து விடுகின்றது.

அதைப் போன்று தான் உயிரணுவின் தோற்றத்தின் உருவ நிலைகள் யாவுமே…! மரம் செடி கொடிகள் மற்ற இன வர்க்கங்கள் ஒவ்வொன்றுமே
1.அதனதன் ஆத்ம அமிலச் சேர்க்கையின் நிலைக்கொப்ப
2.உயிர் பெறும் உருவக அமைப்பில் இப்பூமியின் காற்றழுத்த ஈர்ப்பின் வளர்ச்சி கொண்டு வளரும் தன்மை பெறுகிறது.
3.ஆனால் இது பிற கோள்களின் நிலையில் மாறுபடுகின்றது.

மனித உயிர் ஆத்மாவின் அமிலக் கூறின் உயிர் பெற்று ஜீவ வளர்ச்சியின் பருவக்காலம் வரை சேமிப்பின் அமில உருவக நிலை வளர்ந்தாலும் உருவ வளரச்சி நிலை பருவ காலத்திற்குப் பின் உயரும் நிலை தடைப்பட்டு விடுகின்றது.

இப்பூமியின் எந்தெந்த இடங்களில்… எக்காற்றின் அலைத் தொடர்பில் ஜீவன் பெறுகின்றதோ… அதற்கொப்பத்தான் அங்கங்குள்ள மனித இனங்களும்… மற்ற தாவரங்களும்… பிராணிகளும் உருவகம் பெறுகின்றது.

ஏறக்குறைய இப்பூமியின் அமைப்பின் சுழற்சியிலேயே சிறிது சிறிது மாற்றங்களுடன் உருவக வளர்ச்சி நிலைகள் யாவையும் வளர்கின்றன.

சில அபூர்வமாக உயரமாக வளரக்கூடிய தன்மைகள் மட்டும் அமிலத்தின் சேர்க்கை விகித நிலைக்கொப்பக் கூடியும் குறைந்தும் வளர்கின்றது.

இன்று நம் பூமியின் தன்மைக்கும் மற்றக் கோள்களின் தன்மையும் மாறுபாடான நிலை தான் உண்டு. உதாரணமாக சனி கிரகத்தில் மனித ஜீவனின் உணர்வின் எண்ணம் கொண்டு வாழக்கூடிய தன்மைக்கு சனிக் கோளின் அமைப்பு நிலை மாறுபட்ட தன்மையாக உள்ளது.

ஜீவனுள்ள உயிர் அணுக்கள் அங்கு வளர்ந்தாலும் இங்கு எப்படி கல் மண் மேல் படிந்துள்ள பாசி போன்று அங்கங்கு உள்ள ஜீவ வளர்ச்சி நிலையில் உள்ளது போல் தான் உண்டு. நம் பூமியில் உள்ளது போல் அவைகள் நகரும் தன்மையோ நடந்து பறக்கும் நிலை போன்று அங்கில்லை.

ஓர் ஜீவ உயிர் சனியில் பிறந்ததென்றால் அப்பூமியின் பிடிப்பில் ஒன்றியே பிறப்பெடுத்து இறுகிய நத்தைக்கும் மற்றச் சில பிராணிகளுக்கும் இருப்பதைப் போன்று கெட்டியான ஓடுகளுடன் பிறப்பெடுத்து அப்பிறப்பின் இறப்பிலேயே மாறும் தன்மையும் உள்ளது.

சனிக்கோள் அதி குளிரின் ஈர்ப்புப் பிடிப்பிற்கொப்ப சுழல்வதால் பிற கோள்களின் சந்திப்புச் செயல்நிலை இருந்தாலும் உஷ்ண அலையின் சமைப்பு நிலைக்கு நம் பூமியின் தன்மை போன்ற நிலை இல்லாததினால் மனிதர்கள் யாரும் அக்கோளில் பிறப்பெடுக்க முடியாது.

நம் பூமியிலிருந்து பார்த்தால் சந்திரனின் பௌர்ணமி நிலவு தெரிவதைப் போன்று தான்… சனியைச் சுற்றியுள்ள பன்னிரண்டு கோள்களின் நிலையிலும்… சனிக்கோளின் சுழற்சி சந்திப்பிற்கொப்ப இங்கெப்படி அமாவாசை பௌர்ணமி என்று ஒரு சந்திரனின் தொடர்பில் அறிவது போன்ற நிலை உண்டு.

சனிக் கோளின் தொடர்பு கொண்ட பன்னிரண்டு கோள்களும் அவை எடுத்து வெளிக் கக்கும் அலை அமில நிலைக்கொப்ப சனியின் சுழற்சி ஓட்டமும் பூமியைக் காட்டிலும் குறைவான நிலையிலும்
1.இரவில் சந்திர ஒளியின் வெளிச்ச அலையை எப்படி நாம் இங்கு காண்கின்றோமோ அதற்கொப்ப
2.குளிர்ச்சியில்… சனிக்கோளும் சனிக்கோளின் உப கோள்களும் மிகவும் ரம்மியமாய் செயல்படக் கூடிய நிலையில்
3.நம் சூரியக் குடும்பத்தில் ஜீவனைத் தரக்கூடிய மையமாக உள்ளது
4.சனியின் தொடர்பு நமக்குக் கிட்டும் வலுவில்தான் நம்முடைய ஜீவ நாடியே உள்ளது

சனிக் கோள் நம் சூரியக் குடும்பத்தின் ஜீவனான நீர் சக்திக்கே மிகவும் முதன்மையானது.

ஒவ்வொருவரும் ஈசனாகும் மகத்துவம்…!

soul eswaran

ஒவ்வொருவரும் ஈசனாகும் மகத்துவம்…!

அகண்ட அண்டம் இருண்டதாக இருப்பினும் அண்டத்தின் நிலை கோளாகும்போது இருண்ட நிலை தான். ஆனால் அந்தக் கோளின் தன்மை
1.நட்சத்திரமாகும் போது ஒளியின் நிலை அடைகின்றது.
2.நட்சத்திரமாகும் போது உணர்வை வளர்க்கும் நிலைக்கு வருகின்றது.

இருண்ட நிலையில் இருக்கும் இந்தப் பிரபஞ்சத்தில் கோள்களில் புழு பூச்சிகளாக உருவானால் அதுவும் இருண்ட நிலை தான். அதே சமயத்தில் அதிலே பரிணாம வளர்ச்சிகள் அடைந்து… அடைந்து…
1.உணர்வின் தன்மை கொண்டு அறிவின் தன்மை கொண்டு உடலாகும் போது நட்சத்திரம்
2.அதாவது நாம் மனிதனாகும் போது நட்சத்திரம்
3.மனித நிலையில் அனைத்தையும் பக்குவப்படுத்தி உணர்வை ஒளியாக மாற்றும் நிலை பெற்றால் நாம் இவ்வுலகின் சூரியன் ஆகின்றோம்.

ஆகவே உணர்வின் தன்மை உயிராக உருவாக்கும் இந்தப் பிரபஞ்சத்தில் உருவான நாம் ஒவ்வொருவரும் ஈசனாக மாற வேண்டும். நம் உணர்வு ஒவ்வொன்றையும் ஈசனாக மாற்றிடல் வேண்டும்.

உயிர் ஈசனாக இருந்து உணர்வின் அறிவை ஊட்டுகின்றது. ஆறாவது அறிவின் தன்மை இருளை அகற்றும் உணர்வாக வருகின்றது.
1.அறிந்திடும் அறிவின் தன்மை கொண்டு இந்த உயிர் என்றும் அழியா நிலைகள் கொண்டு வந்தது.
2.உயிரின் துணை கொண்டு அருள் ஒளியின் உணர்வாக
3.அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் உருவாக்க வேண்டும். ஆக

நாம் எண்ணியதை நமக்குள் உருவாக்குவது நமது உயிரே. எண்ணிய வழிப்படித் தான் இந்த உடலை உயிர் இயக்குகின்றது.

ஆகவே நம் உணர்வுகளை எல்லாம் ஒளியாக்குவோம். அருள் ஒளியின் சுடராக மாறுவோம். பிறவியில்லா நிலைகளை அடைவோம். அண்டத்தில் அகண்ட அண்டத்தில் என்றும் பெரு வீடு என்ற நிலையை அடைவோம்.

1.இதைப் படித்துப் பதிவாக்குவோர் அனைவரும் மகானாக வேண்டும்… மகரிஷிகள் ஆக வேண்டும்.
2.உயிரின் தன்மை ஈசனாக மாற்ற வேண்டும்
3.ஒவ்வொரு அணுக்களையும் ஈசனாக மாற்ற வேண்டும்.

அருள் வழியில் அருள் ஞானத்தின் தன்மை உங்களுக்குள் வளர்த்தால் அந்த ஈசன் என்ற நிலை வரும்போது இதே உணர்வுகள் நோயுற்றவருக்குள் சென்றாலும் அங்கே ஈசனாக… அருள் ஒளி சுடரின் தன்மையாக அவர் நோயை நீக்கி… ஒளியின் உணர்வாக மாற்றும் தன்மை வருகின்றது.

1.நம் உயிர் ஈசனாக இருக்கின்றது
2.நமது உணர்வுகள் அனைத்தும் ஈசனாக வேண்டும்.
3.நம்முடைய சொல் ஒவ்வொரு உடலிலும் பாய்ந்து ஈசனாக மாற வேண்டும்.

ஆகவே அருள் ஒளியின் சுடராக மாற்ற வேண்டும் என்று நிலை கொள்ளுங்கள். யாரோ செய்வோர்…! எவரோ செய்வார்…! என்று எண்ண வேண்டாம். யாருக்கோ காசு கொடுத்து இதைச் செய்ய வேண்டாம்.

குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் உணர்வின் வலுவைக் கூட்டினால் அதுவே உங்களில் உருவாக்கும். உங்கள் வலுவின் தன்மை பிறரின் தீமையைப் போக்கும்.

பொருளுக்காக பல மனித உணர்வுகளை வைத்து மாயாஜாலங்களைச் செய்கின்றனர். அதனால் பொருள் அவனுக்கு வருகின்றது.

அனைவருக்கும் சொல்கின்றான். இருந்தாலும் அவன் அழிகின்றான். ஏனென்றால் அவன் வளர்த்த சொத்தை அவன் பிள்ளையே அழிக்கின்றான். இலட்சம் இலட்சமாகச் சம்பாரித்தார்… எல்லாம் போய் விட்டது என்று நம் கண் முன்னாடியே பார்க்கலாம்.

1.ஏனென்றால் தவறான வழிகளில் செல்வத்தைச் செலவழித்தால் தவறான மகனே பிறக்கின்றான்.
2.தந்தையின் உணர்வை பிள்ளை தனக்குள் அங்கே கலக்கின்றான்.
3.அந்த உணர்வின் தன்மையில் சொத்தை இவன் அழிக்கின்றான் என்ற இந்த நிலைகள் தான் வருகிறது.

யாருக்காக நீங்கள் போராடுகின்றீர்கள்…? என்று சற்று சிந்தியுங்கள்.

1.உங்கள் உயிரின் தன்மைக்காகப் போர் செய்யுங்கள்
2.அருள் வழியின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்
3.இருளை அகற்றும் ஆற்றலைப் பெறுங்கள்.
4.அருள் ஞானியின் உணர்வை உருவாக்கும் அதையே ஈசனாக மாற்றுங்கள்

உங்கள் உணர்வின் தன்மை மற்றவர்களுக்குள்ளும் பாய்ந்து அவருக்குள்ளும் அந்த ஈசனின் உணர்வை அது உருவாக்கும்.

இதன் வழி உணர்வின் ஆற்றலைப் பெருக்குவோம்… குரு வழியில் செல்வோம்…. அருள் ஆனந்தம் பெறுவோம்…. அருள் வாழ்க்கையை நடத்துவோம்… இருளை அகற்றுவோம்…. மெய் உணர்வுடன் ஒன்றுவோம்… மெய் ஞானத்துடன் வாழ்வோம்…. மெய் உணர்வுடன் வாழ்வோம்…. மெய் உலகாக மாற்றுவோம்…. ஒவ்வொரு மனித உடலிலும் மெய்யை அறிந்திடும் உணர்வின் தன்மை பெற தியானிப்போம்… தவமிருப்போம்…!

நிறைந்த மனம் கொண்டு இதைச் செய்யுங்கள். அனைவரையும் நிறைவுபடுத்தும் மனமாக உயர்ந்த பண்புடன் சொல்லுங்கள். பண்பு கொண்ட உணர்வை வளர்த்திடுங்கள்.

இத்தகைய உயர்ந்த பண்புடன் அரவணைக்கும் நிலை கொண்டு நமக்கு மதம் அல்ல… இனம் அல்ல… என்று செயல்படுத்துங்கள். இனமும் மதமும் நம்மைப் பிரிக்கும்.

ஆனால் அருள் ஒளி நம்மை என்றும் ஒளியாக சுடராகப் போற்றும் என்ற இந்த நினைவு கொண்டு இந்த வாழ்க்கைப் பயணத்தை குரு வழியில் வழிபடுத்துவோம்.

நம் குடும்பத்தில் அறியாது சேர்ந்த இருளை அகற்றுவோம். அனைவரும் ஒன்றென்ற நிலைகளில் உருப்பெறச் செய்வோம்.
1.அனைவரையும் மகிழ்சி பெறச் செய்யும் உணர்வினை உருவாக்கும் ஈசனாக
2.நம் உணர்வின் தன்மை ஒவ்வொரு உடலிலும் ஈசனாக உருவாக வேண்டும்.

அருள் ஒளிச் சுடராக நாம் உருவாக்க வேண்டும். அவ்வாறு நாம் எண்ணுவதே நமக்குள் ஈசனாகின்றது. அந்த அருள் வழியின் நிலைகள் வளர வேண்டுமென்ற நிலைகள் கொண்டு இதை மனதில் வைத்துக் குரு அருளின் துணை கொண்டு நாம் இதைச் செயலுக்குக் கொண்டு வருவோம் என்ற உறுதி எடுத்துக் கொள்வோம்.

இல்லறத்தில் தாம்பத்ய வாழ்க்கையிலிருந்து கொண்டே உயர் ஞான நிலையில் வளர்ச்சியைப் பெற முடியுமா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

husband-and-wife-unity

இல்லறத்தில் தாம்பத்ய வாழ்க்கையிலிருந்து கொண்டே உயர் ஞான நிலையில் வளர்ச்சியைப் பெற முடியுமா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சகலத்தின் சக்தியையும் சகலமாக்கித் தன்னைத்தானே தான் உணரும் உயர் ஞான ஒளி சக்தியாய் உயரும் வழித் தொடருக்கு… எண்ணத்தின் உணர்வு பக்குவ முறை கொள்தல் வேண்டும்.

இப்பூமியின் ஈர்ப்புப் பிடிப்பின் சுழற்சியில் இருந்து விடுபட எண்ணத்தின் வலுவை முதலில் பக்குவ நிலைக்கு நாம் செயல் படுத்துதல் வேண்டும்.

வாழ்க்கையில் இருந்தே நம் தியான முறையை வழிப்படுத்தும் சமமான நற்குண செயல் வழியை எண்ணத்தின் உணர்வு செயல்படும் முறை பக்குவத்தில்
1.உடல் உணர்வில் உந்தப்படும் இல்லற உணர்வின் வழித் தொடர் உகந்ததா…?
2.அந்த உடல் உணர்வின் உந்தலைச் சமப்படுத்தும் பக்குவத்தில் அடக்கும் பக்குவம் உகந்தந்தா…?
3.உடல் இச்சையின் உணர்வின் உந்தலில் எப்படிச் செயல்படுவது…? என்ற வினா ஒவ்வொருவருக்கும் எழும்பலாம்.

அதாவது தாம்பத்ய வாழ்க்கை உகந்த நிலையா…? பிரம்மச்சர்ய நிலையில் உயர்வு நிலை பெற முடியுமா…? என்ற வினா எழும்பலாம்.

ஆரம்ப மனித உணர்வின் வழித்தொடரே தாவர நிலைக்கடுத்த வளர்ச்சி நிலை யாவையும் நீரிலிருந்து உயிர் ஆத்ம ஜீவன்கள் பிறப்பெடுத்து வந்தது.

அதன் பின் (கடல் வாழ்) தாவர இனங்களில் இருந்து வளரும் புழு பூச்சிகள் உடல் உணர்வின் ஆண் பெண் இனச் சேர்க்கையில் வளரும் நிலை இல்லாமல் தாவரங்களின் உஷ்ண அலை வெளிக் கக்கும் அமிலத்தின் பிசின் போன்ற வழுவழுப்பான அமிலத்தின் கெட்டித் தன்மையில் உயிர் அணுக்கள் சிறு புழு பூச்சிகள் உற்பத்தியாகும் நிலை இனச் சேர்க்கையின்றி வளரும் நிலை தான் உண்டு.

நீரிலிருந்து உயிரணு தோன்றும் வளர்ச்சியில் இனச் சேர்க்கையில் ஆண் பெண் என்ற நிலை அபூர்வமாகச் சில இனங்களுக்கு மட்டும்தான் உண்டு.

ஆனால் ஜீவப் பிராணிகள் பெரும்பகுதி இனச் சேர்க்கையின் தொடர்பு கொண்டுதான் இனப் பெருக்கம் செயல் கொள்கின்றது.

இவற்றின் தொடர்பில் மனித உணர்வில் பகுத்தறியும் ஞான வித்தின் முதல் நிலையில்
1.அன்பான உணர்வின் குணம் தான்
2.உந்தப் பெறும் மனித நிலையின் குணத்தின் “முதல் நிலை…”

தன் உணர்வில் உந்தும் இச்சையின் ஆசையில்… உதிரத்தில் பிறக்கும் உயிர் ஜீவனே அந்த அன்பின் உணர்வுத் தொடரில் பிறக்கும். அன்பின் ஆசை நிலை அதற்கடுத்த நிலை.

உதிரத்தில் அன்பின் உணர்வு கொண்டு பிறக்கும் சிசுத் தொடரில்
1.ஆசையும் பாசமும் தன் உணர்வின் இச்சையிலேயே பிறக்கா விட்டால்
2.எஜ்ஜீவ சக்தியையும் எந்த ரிஷிகளாலும்… ஆதிசக்தியாலுமே… வளர்க்க முடியாது.
3.அன்பின் எண்ண உணர்வில் ஆசையின் பாசமில்லை என்றால் மனிதன் என்ற நிலையே உருவாகாது.

உயர் ஞான நிலைக்கு மனித உணர்வின் எண்ணத்தைச் சம குணப்படுத்தக் கூடிய வழி முறைக்கு வயது முதிர்ந்தவர்கள் தான் செயல்படுத்த முடியுமா…? சிறுவர்களும் புதிதாக மணமான தம்பதியர்களும் எப்படி அந்நிலை பெற முடியும்…? என்ற வினா எழும்பலாம்.

நாம் எடுக்கக்கூடிய தியான உணர்வின் ஆரம்ப உணர்வே… அன்பென்னும் ஆசையில்… பாசம் கொண்டு வளர வேண்டிய வழித் தொடரில் தான்… சத்திய நிலையின் ஜீவனை வளர்க்க முடியும்,

1.தம்பதியர்களின் உணர்வுகளில் உடல் உணர்வில் அன்பின் ஆசை கொண்டு பிறக்கும் சிசுவின் பாசம் எப்படி வளர்கின்றதோ
2.வாழ்க்கையில் உண்ண உறங்க உடுக்க எப்படி சம நிலை குணங்களைப் பக்குவப்படுத்தச் சொல்லிப் போதனைப்படுத்தினோமோ
3.மணமான சிறு வயது தம்பதியர்கள் அவர்களின் வம்சத்தின் கொழுந்து பிறக்கக்கூடிய காலத்திலேயே
4.எப்படி உடல் உணர்வில் சிசு பிறக்கின்றதோ அதைப் போல் ஆத்ம ஐக்கிய உணர்வு கொண்டு இரு எண்ணங்களும் ஒன்றுபோல் ஆகி
5.உயர்ந்த ஞானத்தின் உணர்வுடன் ரிஷிகளின் தொடர்பால் எடுக்கும் தியானத்தின் மூலம்
6.ஆத்ம ஐக்கிய உணர்வில் இரண்டு ஆத்மாக்களும் இணையக் கூடிய பக்குவ நிலை பெற்று
7.சாதாரண வாழ்க்கை நிலையில் ஆத்ம உயிருக்கு நம் அன்பின் ஆசையின் ஜீவன் தந்து பிறக்கும் குழந்தையைக் காட்டிலும்
8.ஆத்ம ஐக்கியம் கொண்டு ரிஷிகளின் தொடர்பில் எடுக்கும் ஜெபத் தொடர்பின் அலை ஈர்ப்பினால்
9.புது மணம் கொண்ட தம்பதியரின் ஈர்ப்பில் உயர்ந்த ஞான வித்தின் ஆத்ம உயிர்களுக்கு ஜீவன் தரும் பாக்கியத்தைப் பெற முடியும்.

இப்பூமியில் பிறப்பெடுத்து ஞானத்தின் வழியில் சித்து நிலையால் உயர்ந்த ரிஷிகளுக்குப் போக முடியாத பல நல்ல ஆத்மாக்கள் இன்றும் உள்ளன. அந்த உயர்ந்த ஆத்மாக்களுக்கு மீண்டும் ஜீவன் கிடைக்கச் செய்யலாம்.

நாமெடுக்கக்கூடிய (தாய் தந்தை) ஆத்ம ஐக்கியத்தால் எடுக்கும் உயர் குணத்தைக் கொண்டு அத்தகைய ஆத்மாக்களுக்கு… தான் பெற முடியாத ரிஷி சக்தியின் செயலைச் செயலாக்கி வழிதரக் கூடிய நிலையை…
1.ஒவ்வொரு தம்பதியரும் ஆத்ம ஐக்கியத்தில் நல்ல உணர்வின் செயல் வாழ்க்கையால்
2.இப்பூமியைப் பக்குவப்படுத்தக் கூடிய இல்லற உணர்வின் இச்சையின் ஆசைக்கு
3.உடல் உணர்வின் உந்தலைப் பக்குவப்படுத்தும் நிலை செயல்படுத்தலாம்.

வாழ்க்கை வழிமுறையில் துறவறம் என்ற பிரமச்சரிய முறையால் ஆண்டவனை அடைய முடியுமா…? உயர்ஞான வாழ்க்கைக்கு எம்முறை உகந்தது…? என்ற வினா எழும்பலாம்.

உணர்வின் எண்ண குணத்தைச் சமப்படுத்தும் பக்குவத்தால்… ஒவ்வொரு நாளும் இப்பூமியின் ஈர்ப்புப் பிடியிலிருந்து ரிஷிகளின் எண்ணத்துடனும்… விண்ணின் ஆற்றலைப் பெறும் எண்ணத்துடனும்
1.எண்ணத்தின் உணர்வைத் தினசரி எடுக்கக்கூடிய தியான முறையில்
2.உணவின் இன்பம் அனைத்தும் ஏகாந்தத்தின் இன்பத்தை உணரும் பக்குவ இன்பத்தில்
3.இனிமை சுரக்கும் அன்பின் ஆசை உணர்வு கொண்டு பெறப்படும் பக்குவத்தில் ஆத்ம ஒளியே ஒளிரும் நிலை பெற்றுவிட்டால்
4.உடல் உணர்வின் இச்சை எச்சுவையையும் தனித்து எடுக்கக்கூடிய ஏக்கத்தின் உணவிற்கு
5.நம் எண்ணத்தின் உணர்வே செல்லாது (இதை அனுபவத்தில் பார்க்கலாம்).

ஏகாந்தத்தின் இன்பத்தை நுகரும் பக்குவத்தை… ஆத்ம ஐக்கியத் தொடர்பு கொண்டு… இரண்டு ஆத்மாக்களுக்கும் ஒரே எண்ணத்தின் வழிப்படுத்தும் வழி முறையில் கிடைக்கும் ஆத்ம ஐக்கிய ஒளியால்… எச்சிருஷ்டியையும் சிருஷ்டிக்கவல்ல தன்மையைப் பெறலாம்.

ஆனால் இரண்டு எண்ணங்களின் குண நிலை மாற்றப்பட்டு ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் ரிஷி சக்தியின் தொடர்பில் அதைச் சீர்படுத்தும் பக்குவ நிலையாக ஜெப ஈர்ப்பில்
1.ஒருவர் மேல் ஒருவர் எண்ணத்தைச் செலுத்தி
2.ஆத்ம ஐக்கிய உயர் ஞானம் பெற வேண்டுமென்ற எண்ணத்தைக் கொண்டே
3.இரு நிலையையும் ஒரு நிலையாகக்கூடிய தன்மைக்கு
4.நிச்சயம் செயல்படுத்திட முடியும்.

உயிரின் முக்கியமான இரண்டு வேலைகள்

telepathy-meditations

உயிரின் முக்கியமான இரண்டு வேலைகள்

“ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…’ என்று சொல்லும் போதெல்லாம் புருவ மத்தியில் இருக்கும் அவரவர்கள் உயிரை நினைவிற்குக் கொண்டுவர வேண்டும்.

நமது குருநாதர் பெயரும் ஈஸ்வரன் தான்…! நம் உயிருக்குப் பெயரும் ஈஸ்வரன் தான்…!

நாம் எதை எண்ணுகின்றோமோ அவை அனைத்தையும் அணுக்கருக்களாக உருவாக்குகின்றது. கருவான பின் உருப் பெறுகின்றது. உருப் பெறச் செய்கின்றது.

1.நாம் எந்தெந்தக் குணங்களை எண்ணுகின்றோமோ
2.அவை அனைத்தையும் கருவாக்கி நம் இரத்த நாளங்களிலே மிதக்க விடுகின்றது. (1)
3.அதே சமயத்தில் நாம் எண்ணும் உணர்வுகளை ஊழ் வினை என்ற வித்தாக எலும்பினுள் அது பதிவாக்கி விடுகின்றது. (2)

இது எல்லாம் நம் உயிரின் வேலைகள்.

இப்போது மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பற்றி இங்கே பேசும்போது நீங்கள் கூர்மையாகப் பார்த்து இந்தப் பேச்சின் உணர்வை நுகர்ந்தறியும் போது… அந்த உணர்வின் செயலாக உணர முடிகின்றது. உணரும் தன்மையை கருவாக உருவாக்கி… இரத்தத்தில் அது மிதக்க விடுகின்றது.

1.நாம் எக்குணத்தின் தன்மை பெற்றோமோ
2.அக்கருவின் தன்மை அக்குணத்தை உருவாக்கும் அணுவாகத்தான் அது வெளிப்படுகின்றது.

அதே சமயத்தில் கூர்மையாகப் பார்த்த உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாக நம் எலும்பினுள் பதிவாகி விடுகின்றது.

ஏனென்றால் முதலில் வித்தை ஊன்றினால் தான் வித்து தனது சத்தைக் கவர்ந்து… அது இலையையும் தனது மலரையும் தன் விதையையும் அது உருவாக்கும்.

இதைப் போன்று நாம் எதைக் கூர்மையாக உற்று நோக்கி அந்த உணர்வினைப் பெற வேண்டுமென்று ஏங்குகின்றோமோ அவை நம் எலும்பினுள் உள்ள ஊன்களில் ஊழ்வினை என்ற வித்தாக ஊன்றப்படுகின்றது. (மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்)

நாம் எக்குணத்தின் தன்மையை நுகருகின்றோமோ… அந்த உணர்வுகள் நுகரப்பட்டு
1.நம்மை அறியச் செய்கின்றன… உணரச் செய்கின்றன… உணர்த்துகின்றன….
2.இந்த மூன்று வேலையும் செய்கின்றன.

உணர்த்தினாலும் இரத்தத்தில் அது கருவாக மாற்றி விடுகின்றது… ஒரு முட்டையாக…! அவ்வாறு கருவாக உருவாகி விட்டால் நம் இரத்த நாளங்களிலே மிதக்கச் செய்கிறது.

நாம் எண்ணக்கூடியதை ஓ…! என்று பிரணவமாக்கி (ஜீவன் பெறச் செய்து) நாம் எண்ணிய உணர்வை ஓ… ம்… என்று ஜீவ அணுவாக நம் உடலாக இணைத்து விடுகின்றது உயிர். இது தான் ஓ…ம் ஈஸ்வரா.

நாம் எண்ணுவது அனைத்தையும் நம் உடலுக்குள் உருவாகி விட்டால் அவை அனைத்திற்கும் நம் உயிரே குருவாக இருக்கின்றது.

ஆகவே ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…” என்று எண்ணும் போதெல்லாம் அல்லது சொல்லும் போதெல்லாம் அவரவர் உயிரை ஈசனாக மதித்தல் வேண்டும்.

அவரவர்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்திற்கும் இந்த உயிரே குருவாக இருக்கின்றது.

உயர்ந்த ஞானத்தின் வழிகளில் இப்போது உபதேசிக்கும் உணர்வுகள் அனைத்தும்
1.நமது குருநாதர் “ஈஸ்வரர்…” அவர் அவருக்குள் உருவாக்கிய உணர்வை
2.எமக்குள் (ஞானகுரு) ஓதப்பட்டு அந்த உணர்வின் தன்மை வளர்க்கப்பட்டு
3.அதே உணர்வை மீண்டும் உங்களில் ஓதப்படும் பொழுது
4.இந்த உணர்வுகள் உங்களுக்குள் அந்த உங்கள் உயிரான ஈசனிலே பட்டு ஜீவன் பெற்று
5.நம் குரு ஈஸ்வரரால் உருவாக்கப்பட்ட இந்த உணர்வும் இரண்டும் கலந்து ஒன்றாகி
6.அவர் உருவாக்கிய அருள் ஞானத்தை இங்கே ஈசனாக உருவாக்கும் செயலாக உருப்பெறுகின்றது.

ஆகையினால் தான் ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் போதெல்லாம் உங்கள் உயிரையும்… உயர்ந்த ஞானத்தை ஊட்டும் அந்த உணர்வின் கருவாக உருவாகும் அச்சக்தியை ஈசனாகவும்… மதித்தல் வேண்டும்.

அப்படி மதித்து நமது குரு காட்டிய அவருள் விளைய வைத்த உணர்வுகளை எடுத்தால் அந்த உணர்வை நமக்குள் உருவாக்கும். குரு பெற்ற சக்தியை குரு அடைந்த ஒளி நிலையை நாமும் பெறலாம்.

“உயிர்…” ஞான வழியை… அறியக்கூடிய நிலை மனிதனுக்கு மட்டும் தான் உண்டு என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

greatest

“உயிர்…” ஞான வழியை… அறியக்கூடிய நிலை மனிதனுக்கு மட்டும் தான் உண்டு என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

1.ஆதியின்… படைப்பின் கடவுள்… இறைவன்… தெய்வம் என்ற தொடரில்…
2.மனித ஒளி சரீரத்தின் ஒளித் தன்மை கொண்டு…
3.அவ்வொளியின் நாத உயர்வில் இறை நிலை பெற்ற மனிதன் “தெய்வத் தன்மை பெறுகின்றான்…”

பூமிக்கும்… பூமியில் வளரும் சகல ஜீவராசிகளும் ஒளித் தன்மையின் நிலை பெற்றிருந்தாலும்… ஒவ்வொன்றின் தொடர்பலையில் வலுக் கொண்ட ஒளி நிலை பெற்று… ஒளி சக்தியை வளர்க்கும்
1.உயிர் ஞான வழியை அறியக்கூடிய நிலை
2.மனிதனுக்கு மட்டும் தான் உண்டு.

குயில் அழகாக… இனிமையாக… அதனுடைய குரல் ஒலியை எழுப்பினாலும்… மனிதனின் எண்ணத்தின் உணர்வு ஞானம் அதற்கு இல்லை.

மனித உணர்வுடன் ஒட்டி… ஒன்றின் தொடரில் வளர்ச்சியின் நிலை பெருக்கத் தொடருக்கு… ஞானத்தை உயர்த்தித் தன் பகுத்தறிவைக் கொண்டு “பல நிலைகளை மாற்றியமைக்கும்” செயல் மனிதனுக்குத் தான் உண்டு.

ஒலியின் நாதத்தை உணர்வின் எண்ண ஊட்டத்தில் பகுத்தறியும் ஞானத்தால் மனிதன் இச்சரீர உயர்வை எண்ணி… இவ்வுணர்வால் இறை சக்தியின் உன்னத நிலையான இவ்வுயிர் ஆத்மாவை… இறை குணத்தை… உணர்வின் எண்ண ஞானத்தால் பகுத்தறியும் செயலைக் கொண்டு இவ்வுடலையே இறையாக்கி… இறைவன் படைப்பில் இறை சக்தியை எடுக்கக்கூடிய ஒலி நாதத்தைத் தன் ஆத்ம உயிருக்காக இறை உணர்வு பெற்றுத் “தெய்வ நிலை பெறும் சத்திய நிலையை…” மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மனிதன் இன்று எடுத்துள்ள உடல் பிம்ப வாழ்க்கைக்குகந்த பேராசைப் பிடிப்பையே தெய்வ நிலை பெறக்கூடிய பேராசையாய் உணர்வின் எண்ணத்தைப் பக்குவப்படுத்த வேண்டும்.

ஒளியின் ஒளிப் பெருக்கை பெருக்கவல்ல தொடரைப் பூமியில் படைத்த
1.ரிஷிகளின் சக்திக்கு ஒளி கூட்டும் ஒளி நிலை பெற
2.உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் ஒலி கொண்டு
3.நம்முள் உள்ள இருளகற்றி ஒளி நிலையை நாம் பெற்றோமானால்
4.ஒளி கொண்டு மற்ற இருளையும் அகற்றும் சித்தை
5.நம் சித்தத்தின் உணர்வால் ஒவ்வொருவரும் பெறலாம்.

இச்சரீர அமைப்பைச் சிருஷ்டிக்கவல்ல சித்து சக்தியையே… இக்காற்றலையில் கலந்துள்ள சகல சத்திலிருந்து உருவை உருவாக்கும் சக்தியைப் பிரித்தெடுத்துச் செயலாக்கும் முறையை உயர் ஞானி அன்றைய தன் ஞானத்தால் செயல்படுத்திக் காட்டினான்.

ஆனால் இன்றைய விஞ்ஞானி தன்னைத்தான் தான் நம்பாமல் “இயந்திரங்களின் இயக்க ஒலி சக்தி கொண்டு தான்” விஞ்ஞானத்தில் சாதிக்கும் நிலைக்கு வளர்ந்துள்ளான்.

பல முன்னேற்றங்கள் விஞ்ஞானத்தால் இன்று வளர்ந்திருந்தாலும் தன் ஆத்ம உயிருக்குக் கூட்டக் கூடிய ஒளியின் உயர்வைக் கூட்டாததால் அழிக்கும் நிலைக்குத் தன் உயிர் ஆத்மாவை மங்கச் செய்யும் நிலை ஏற்பட்டு விடுகின்றது.

அன்று ஞானிகள் காட்டிய உண்மைகளை எல்லாம்… ஞானிகள் தொடர்பால் இன்றும் எல்லோராலும் பெற முடியும்.

எண்ணத்தின் உணர்வை மனிதனுக்கு மனிதன்… தான்… எவ் ஒலி இறை உணர்வைப் பெற்று இச்சரீர உணர்வால் செயல்படுகின்றானோ அதே தொடர்தான் தன்னை ஒத்த மனித உணர்விலும் உள்ளதை அறிந்து கொண்டால்
1.தன் ஆத்ம பலத்தின் உயர்வைக் கூட்டிக் கொள்ளக் கூடிய உரம்
2.மனித உணர்வுடன் ஒட்டிய தொடர்பால்
3.பிறரிடம் இருந்து எதிர்படும் மூச்சலைகள்
4.நல் அலையின் உணர்வு கொண்டு பெறப்படும் தொடர்பால்
5.மனித உணர்வின் ஆத்ம உயிர் ஒலித் தன்மையின் வலு நிலையை
6.சம குணத்தின் அறுகுண ஈர்ப்பால் உயர்ந்த ஒளி ஞானியாகலாம்.

அதாவது… மனித உணர்வின் எண்ண வேட்கையின் சமைப்பின் ஒளி நிலை கொண்டு
1.ஒருவரின் மேல் உயர்ந்த குணத்தைப் பலரும் செலுத்தச் செலுத்த
2.அவ்வுரத்தின் உணர்வால் மனிதன் தெய்வமாகும் நிலையை
3.அன்றைய ஞானி உணர்ந்ததால் தான் அன்பையே தெய்வமாகக் காட்டினான்.

உணர்வுகள் உந்தப்பட்டாலும் அதைச் சமமாக்கும் பக்குவத்தை எவனொருவன் செயல்படுத்தி.. செயல் வழியில் உரத்தைப் பெறுகின்றானோ… அன்றே தெய்வ நிலை கொண்ட ஒளித் தன்மையில் செயல் கொள்ள முடியும்.

இக்காற்றலையின் சுழற்சியில்… மனித உணர்வில் பல உணர்வின் வேட்கை அலைக்கு மத்தியில்… “தன் ஞானத்தை உயர்வாக்க… உயர்ந்த ரிஷி சக்திகளின் எண்ண ஜெபத்தால்… உயர் காந்த மின் ஒளியின் தியானத்தைக் கொண்டு… மனிதன் தன்னைத் தானே தான் உணர்ந்து… தெய்வ நிலை பெறும் வழி நிலையை… அமைத்துக் கொள்ளல் வேண்டும்…”