வயிறு வலி… வயிற்றில் புண்… (அல்சர்) நெஞ்சு எரிச்சல்… இதெல்லாம் எதனால் வருகிறது…?

Third eye soul - bliss

வயிறு வலி… வயிற்றில் புண்… (அல்சர்) நெஞ்சு எரிச்சல்… இதெல்லாம் எதனால் வருகிறது…? எதனால் நெஞ்சைக் கரிக்கின்றது…?

வயிறு நிறையச் சாப்பிட்டிருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். சந்தர்ப்பத்தில் உங்கள் குடும்பத்திலோ அல்லது எதிர்த்த வீட்டிலோ கடுமையாக இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள்.

நீயா…? நானா..? என்ற அளவிற்கு ஒருவரை ஒருவர் தாக்குகின்றார்கள். பார்க்கின்றீர்கள். அந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகின்றது. இழுத்துச் சுவாசிக்கின்றீர்கள்.

சுவாசித்த உணர்வுகள் உமிழ் நீராகி சாப்பிட்ட ஆகாரத்துடன் கலக்கின்றது. அப்புறம் கொஞ்ச நேரத்தில் பார்த்தால் “புஸ்…” என்று இரைப்பை (வயிறு) வீங்கிவிடும்.

இரைப்பை ஊதியவுடன் புளிப்பான சத்து எதிர்த்து வெளியில் வரும் (எதிர்கழிக்கும்) “ஏஏவ்வ்வ்வ்…!” என்று வரும். அப்புறம் பார்த்தால் நெஞ்சைக் கரிக்கும்.

முதலிலே சாப்பிட்ட ஆகாரம் இரைப்பையைப் பாதிக்காமால் இருப்பதற்காக அதிலே ஒரு முலாம் பூசி இருக்கும். ஆனால் நாம் சுவாசித்த இந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறி இரைப்பைக்குள் வந்து பாதுகாப்பாக இருக்கும் அந்த முலாமைக் கரைத்துவிடும்.

ஒரு பித்தளைப் பாத்திரத்தில் (அழுக்கு) களிம்பு பிடித்திருந்ததென்றால் அதில் புளியை வைத்துத் தேய்த்தால் என்ன செய்யும்…? அந்தக் களிம்பை எல்லாம் சுத்தமாக எடுத்துவிடும். அதைப் போல
1.நம் இரைப்பைக்குள் புளித்து விட்டது என்றால்
2.நல்ல சத்துக்கள் எல்லாவற்றையும் பிய்த்துக் கொண்டு வந்துவிடும்.
3.அதற்குப் பிறகு வேறு எதைச் சாப்பிட்டாலும் எரிச்சலாகும்.

சும்மா வெறும் வாழைப் பழத்தைச் சாப்பிட்டால் கூட எரியும். வாழைப் பழமோ இனிப்பாக இருக்கும். ஆனால் அதில் இருக்கக்கூடிய துவர்ப்போ கொஞ்சம் இறுக்கிப் பிடிக்கும்.

வாழைக்காயை முக்கால் பழமாக இருக்கும் போது கொஞ்சம் போல் சாப்பிட்டுப் பார்த்தால் தெரியும். அந்தத் துவர்ப்பும் மண்ணையப் பிடிக்கிறதும் கழுத்தைப் பிடித்துக் கொண்டு உள்ளுக்குள் திணறுவதைப் பார்க்கலாம். திணறிக் கொண்டு இருக்கும்.

ஏனென்றால் நம் சிறு குடல் அது சுருங்க முடியாமல் தடுக்கிறது. அப்போது எப்படியோ இக்கட்டுப் பிடிக்கிற மாதிரி இருக்கிறது…! என்னவோ தெரியவில்லை… இப்படி வலிக்கிறதே…! என்ற எண்ணம் தோன்றும்.

நாம் எந்தத் தப்பும் பண்ணவில்லை. வேடிக்கை தான் பார்த்தோம். ஆனால் அது இங்கே நெஞ்சைக் கரிக்கச் செய்கிறது. ஆனால் இதிலே வடிக்கப்பட்ட இரத்தமோ புளிக்கச் செய்த உணர்வு கலந்ததாகப் போகும்.

அந்த இரத்தத்தை இழுத்துச் சுத்தப்படுத்துவதற்காக இருதயம் பம்ப் (PUMP) செய்து உடலிலுள்ள எல்லாப் பக்கமும் அனுப்பும். அப்பொழுது என்ன நடக்கின்றது…?

உதாரணமாக நாம் உபயோகப்படுத்தும் காரில் பெட்ரோல் டேங்கில் பெட்ரோல் வைத்திருக்கின்றோம். இஞ்சின் அந்தப் பெட்ரோலை இழுத்து எல்லாப் பக்கத்திற்கும் வேண்டிய அளவுக்கு எடுத்து அதை இயங்கச் செய்கிறது.

அதே சமயத்தில் பெட்ரோலில் வரும் அந்தக் கசடைச் சுத்தப்படுத்துவதற்கு ஒரு பில்டர் (FILTER) போட்டிருப்பார்கள். ஏனென்றால் இஞ்சினில் உள்ள வால்வு (VALVE) அடைத்து விடாமல் இருப்பதற்காக அதை வைத்திருப்பார்கள்.
1.வரும் அழுக்கை எல்லாம் அது வடிகட்டிச் சுத்தமாக்கும்.
2அந்த வால்வில் அழுக்குகள் அடைத்து விட்டால் பெட்ரோல் உள்ளே போகாது.

அதைப் போல ஆகாரத்திலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட இரத்தத்தை இருதயம் இழுத்து உடல் முழுவதும் அனுப்பும் நிலையில்
1.அந்த இரத்தத்தில் விஷத்தின் தன்மை இருந்ததென்றால்
2.இருதயத்திலுள்ள வால்வுகள் வீக்கமாகி
3.இரத்தம் வருவதையோ போவதையோ தடைப்படுத்தும்.

இரத்தத்தை இழுப்பதற்காக வேண்டி பிஸ்டன் (PISTON) இழுக்கும். அப்படி இழுத்தவுடன், “பளீர்…!” என்று நெஞ்சை வலிக்கிறது என்போம். சுவாசிக்கும் பொழுது இங்கே “பளிச்…” என்று மின்னும்.
(ஏனென்றால் அங்கே சண்டை போடுவதைப் பார்த்தோம். அவர்கள் ஒருவருக்கொருவர் சப்தம் போடுவதைப் பார்த்தோம் அது நமக்குள் வந்து இவ்வாறு இயக்கும்)\

அப்படி மின்னியவுடன் எப்படியோ இருக்கிறது…! “பளீர்…பளீர்…” என்று மின்னுகிறது. இது வாயுவாக இருக்குமோ…? என்று நினைப்போம்.

இதிலிருக்கக்கூடிய வாயும் (GAS) விஷமும் சேர்த்து என்ன செய்கிறது…! இரத்தம் சீராகப் போவதை நிற்க வைத்து விடுகிறது. அப்போது அழுத்தமாகி விடுகின்றது.

அந்த அழுத்தத்தால் இங்கே நெஞ்சில் ஏதோ இறுக்கிப் பிடித்த மாதிரி ஒரு மூச்சுத் திணறல் போல ஆகும். இரத்தம் சரியானபடி எல்லாப் பக்கமும் (SUPPLY) போகாதபடி கிட்னிக்கு (KIDNEY) வரும்.

உதாரணமாக நாம் ஒரு அமிலத்தையோ அல்லது விஷமான பொருளையோ சாப்பிட்டுவிட்டால் வாந்தி வந்து வெளியிலே கக்கிவிட்டால் மரமரத்துப் போகின்றது.

அதே போல கிட்னி அந்த அசுத்த இரத்தத்தைச் சுத்தப்படுத்தாதபடி மரமரப்பாகி போகும். அதன் இயக்கமெல்லாம் செயலிழந்து போய்விடும். கிட்னி செயலிழந்தபின் விஷம் கலந்த இரத்தம் தன்னாலே உடலுக்குள் போனவுடனே மற்ற உறுப்புகளிலும் எரிச்சலும் வேதனையும் தோன்றும்.

ஏனென்றால் நாம் இரண்டு பேர் சண்டை போட்டதைப் பார்த்தோம், அங்கே எரிச்சலாகிப் போனது.
1.நம் உடலில் உள்ள நல்ல குணங்களின் சத்துடன்
2.அந்த இரண்டு பேரின் உணர்வுகள் மோதியவுடனே
3.ஐய்யய்யோ… அம்மம்மா…! என்று அவர்கள் எப்படி வேதனைப்பட்டார்களோ அதே போல
4.நம் உடலுக்குள் இந்த உணர்வுகள் இயக்கி ஐய்யய்யோ… அம்மம்மா… “பளீர்…!” என்று குத்தும்.
5.ஏனென்றால் அங்கே சண்டையை வேடிக்கை பார்த்தோம். இது இங்கே உடலுக்குள் வந்து அதே மாதிரிச் சண்டை போடும்.

ஆனால் நாம் தப்புப் பண்ணவில்லை. இந்த மாதிரி நம் வாழ்க்கையிலே சேர்ந்து விடுகின்றது. இதைத் தடுப்பது யார்…? தடுப்பதற்கு என்ன ஆயுதம் வைத்திருக்கின்றோம்…? சாமி காப்பாற்றுமா…! சாமியார் காப்பாற்றுவாரா…? சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

ஏனென்றால் நம் உயிர் தான் நாம் நுகர்ந்ததையெல்லாம் உடலுக்குள் அணுவாக மாற்றும் கருவாக உருவாக்கிக் கொண்டே உள்ளது. அதை நல்லதாக மாற்றியமைக்க வேண்டும் என்றால் மீண்டும் அவனிடம் தான் வேண்ட வேண்டும்.

தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணிச் சுவாசிக்க வேண்டும். சுவாசிக்கும் பொழுது
1.அந்த அருள் ஒளியை நம் உயிர் ஒளியான அணுவாக மாற்றும்.
2.ஒளியான அணுவாக மாறிய பின் உடலுக்குள் இருக்கும் தீமைகளை அது அடக்கும்.
3.அதையும் ஒளியாக மாற்றும்.

அதாவது… தீமைகளைத் துடைக்க வேண்டும் என்றால் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும்… நம்மை உருவாக்கிக் கொண்டிருக்கும் உயிரிடம் நினைவைச் செலுத்தித்தான் செயல்படுத்த முடியுமே தவிர வேறு யாராலும் மாற்ற முடியாது.

இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்…!

தலையிலிருந்து கால் வரை உடலை உருவாக்கிய எல்லா அணுக்களுக்கும் தியானத்தில் கொடுக்க வேண்டிய சக்தி

real-meditation

தலையிலிருந்து கால் வரை உடலை உருவாக்கிய எல்லா அணுக்களுக்கும் தியானத்தில் கொடுக்க வேண்டிய சக்தி 

1. துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சுவாசிக்க வேண்டிய முறை:-
எங்கள் அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தியால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் அவர் துருவனான நிலையும் துருவ நட்சத்திரமான அந்த பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் நினைவு அனைத்தையும் இப்போது துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்.

அதனின்று வரும் பேரருளைப் பெற வேண்டும் என்று கண்ணைத் திறந்தே ஏங்கித் தியானியுங்கள்.

இப்போது கண்ணின் நினைவினை உங்கள் புருவ மத்தியில் நினைவினைச் செலுத்துங்கள். உங்கள் புருவ மத்தியில் வீற்றிருக்கும் உங்கள் உயிரான ஈசனிடம் நினைவினைச் செலுத்துங்கள்.
1.உங்கள் கண்ணின் நினைவினை உயிரில் இணைக்கும் போது
2.அந்த உயிரான காந்தத்தின் வழி துருவ நட்சத்திரத்துடன் இணைக்கப்படும் போது
3.அதனின்று வரும் பேரருளைக் கவர்கின்றது.

இப்போது உங்கள் உயிரில் அது ஈர்க்கப்படும் போது துருவ நட்சத்திரத்திலிருந்து பேரருளும் அந்த பேரொளியும் உங்கள் உயிர் ஈர்க்கப்படும் போது
1.புருவ மத்தியிலே வெளிச்சம் வரும்.
2.சிலருக்கு அரிப்பு ஏற்படும்.
3.சிலருக்கு இந்த வலி ஏற்படும்.
4.சிலருக்குக் காட்சியாகவும் தெரியும்.

துருவ நட்சத்திரத்தை எண்ணும் போது அதைச் சுழன்று கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலமும் உங்களுக்குத் தெரியும். அதாவது இன்று பிரபஞ்சத்தில் மற்ற நட்சத்திரத்தின் கூட்டத்தில் தனித்து வாழும் இந்த உணர்வுகளை நீங்கள் பார்க்கலாம்.

2. நம் உடலிலுள்ள இரத்தத்தைச் சுத்தப்படுத்த வேண்டிய முறை:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களிலே கலந்து எங்கள் இரத்த நாளங்களில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் இரத்த நாளங்களிலே செலுத்துங்கள்.

நம்முடைய சகஜ வாழ்க்கையில் வேதனை வெறுப்பு சங்கடம் சலிப்பு கோபம் குரோதம் போன்ற உணர்வுகளை
1.நாம் பார்க்க நேர்கின்றது நுகர நேர்கின்றது.
2.இந்த உணர்வுகள் அனைத்தும் உமிழ் நீராக மாறி நம் ஆகாரத்துடன் கலக்கின்றது.
3.அப்பொழுது தீய உணர்வுகள் நம் இரத்தமாக மாறுகின்றது.
4.இந்த உணர்வின் இயக்கங்கள் இரத்தத்தில் கரு முட்டைகளாக மாறிப் பின் அணுக்களாக மாறுகின்றது.

இப்படி அணுக்களாக மாறிவிட்டால் நம் இரத்தத்தில் கோபம் அதிகமானால் இரத்தக் கொதிப்பும் வேதனை அதிகமானால் அதற்குத்தக்க வாத நோயோ சரவாங்கி நோயோ போன்ற வாதங்கள் 48ம் உருவாகின்றது.

ஆகவே அந்தந்த அணுக்களுக்குத் தக்க நம் உடலில் இரத்தங்கள் உருவாகி இந்த இரத்தங்கள் உடல் முழுவதும் படர்ந்து நமது உடலில் உள்ள உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு இதனின்று ஆகாரம் செல்கின்றது.

தீய உணர்வின் அணுக்கள் இரத்தத்துடன் கலந்து உடல் முழுவதும் பரவப்படும் போது உடலிலுள்ள உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் தீய அணுக்கள் உருவாகி அந்தந்த உறுப்புகளில் நோயாகின்றது… வேதனையாகின்றது…!

கடும் நோயான பின் உடலை விட்டு உயிர் பிரியும் தன்மை வருகின்றது.
1.உடலை விட்டுப் உயிர் பிரியும் போது
2.எந்தெந்த உறுப்புகளில் எதனெதன் நிலைகள் பாழானதோ
3.அந்த உறுப்புகள் குறைவான நிலையில் உயிரான்மா வெளியேறும்.

உறுப்புகள் குறையும் பொழுது அதற்குத்தக்க மனிதனல்லாத உறுப்புகள் குறைவாக உள்ள உடலின் (உயிரினங்களின்) ஈர்ப்புக்குள் அழைத்துச் சென்று விஷம் கொண்ட உடலை அடுத்து உருவாக்கிவிடும்.

ஒவ்வொரு நிமிடமும் நம் வாழ்க்கையில் நாம் கேட்டு பார்த்து நுகர்ந்து அறிந்து உணர்ந்த உணர்வுகள் அனைத்தும் ஈஸ்வரலோகத்தின் (உயிரின்) இயக்கமாகவும் நம் இரத்தத்தில் அணுத்தன்மை கருவாகும் இந்திரலோகமாகவும் அடைந்து விடுகின்றது.

ஆகவே நம் உடல் உறுப்புகளைச் சீராக்க வேண்டுமென்றால் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உயிரான ஈசனிடம் வேண்டி அந்த உணர்வினை உமிழ் நீராக மாற்றி நல்ல இரத்தமாக உருவாக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து இரத்த நாளங்களில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினை இரத்த நாளங்களில் செலுத்தி இந்த அணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

இருளை நீக்கி ஒளியாக மாற்றும் அணுக்களை நம் இரத்தத்தில் உருவாக்கும் நிலைக்கே இந்தப் பயிற்சி.

3. நுரையீரலுக்குச் செய்ய வேண்டிய தியானம்:-
சலிப்பு சஞ்சலம் வெறுப்பு என்ற உணர்வுகள் நுரையீரலில் அணுக்களாக ஆனபின் ஆஸ்துமா போன்ற நோய்களும் வேதனை என்ற கடுமையான நிலைகளை எடுத்தால் T.B. என்ற நோய்களும் வருகின்றது.

இதைப் போன்ற அணுக்களை மாற்ற துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நுரையீரலில் படர்ந்து நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று உங்கள் நினைவினைச் செலுத்துங்கள்.

4. இருதயத்திற்குத் தியானிக்க வேண்டிய முறை:-
தீய உணர்வுகள் இரத்தங்களில் கலந்து இருதயத்திற்குள் செல்லப்படும் போது அங்கே அது எதிர்நிலையாகி இரத்தங்கள் உறையும் தன்மையாகின்றது.

அதே சமயத்தில் விஷத்தன்மை படர்ந்த பின் அந்த இருதயத்தை இயக்கும் அந்த நரம்பு மண்டலம் பலவீனம் அடைந்து மூச்சுத் திணறலும் நெஞ்சு வலியும் ஏற்படுகின்றது.

இதைப்போன்ற நிலைகளிலிருந்து மாற்ற துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இருதயத்தில் படர்ந்து இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று ஏங்கி உங்கள் நினைவு அனைத்தும் இந்த இருதயத்திற்குள் செலுத்தி அந்த அணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

5. கல்லீரலுக்குத் தியானிக்க வேண்டிய முறை:-
அசுத்த இரத்தங்கள் கல்லீரலுக்குள் சென்றால் அது வீக்கம் ஆகும், அதிலேயும் மூச்சுத் திணறலும் வரும். சில நேரங்களில் வலியும் எரிச்சலும் வரும்.

கல்லீரலை அதை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உங்கள் நினைவினை கல்லீரலுக்குள் செலுத்துங்கள்.

6. கணையங்களைச் சீராக இயக்கத் தியானிக்கும் முறை:-
சர்க்கரைச் சத்து உப்புச் சத்து போன்ற நிலைகளை மாற்றியமைக்கும் திறன் கொண்ட கணையங்களை உருவாக்கிய அணுக்கள் பலவீனமானால் சர்க்கரைச் சத்து உப்புச் சத்து உருவாகும். இரத்தக் கொதிப்பும் உருவாகும்.

அந்த மூன்றையும் சீராக்க கணையங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று கணையங்களுக்குள் நினைவினைச் செலுத்துங்கள்.

7. கிட்னிக்குத் தியானிக்க வேண்டிய முறை:-
தீமையான உணர்வுகள் இரத்ததில் அதிகமாகி அந்த கிட்னிக்கு வந்தால் அது சீராக இயங்கும் தன்மை மாறி மயக்கடைந்து இரத்தத்தைச் சுத்திகரிக்கும் தன்மைகள் இழந்துவிடுகின்றது.

அதனால் அசுத்தமான இரத்தங்கள் உடல் முழுவதும் சென்று உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படக் காரணமாகின்றது.

இதைப் போன்ற நிலைகள் வராது தடுக்கக் கிட்னியை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

8. சிறு குடல் பெரும் குடலுக்குத் தியானிக்கும் முறை:-
உங்கள் சிறு குடல் பெரும் குடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரரளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நினைவைச் செலுத்தி அந்த அணுக்களைத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறச் செய்யுங்கள்.

9. ஆற்றல்மிக்க சக்திகளை உடலுக்குள் நேரடியாகச் செலுத்தும் பயிற்சி:-
இன்று மருத்துவ ரீதியில் ஊசி மூலமாக மருந்தினை இரத்தத்தில் செலுத்தும் பொழுது மருந்து உடனடியாக உடல் முழுவதும் பரவி உடலில் நிவாரணம் ஏற்படுகின்றது. உடல் வலியோ வேதனையோ உடனே குறைகின்றது.

அதே போலத்தான் உங்கள் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதன் உணர்வைக் கவர்ந்து கண்ணின் நினைவு கொண்டு உங்கள் இரத்த நாளங்களில் கலக்கச் செய்து உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களுக்கும் அந்தச் சக்தியைப் பெறச் செய்வதற்கே இந்தப் பயிற்சி.

நேரடியாக அந்தந்த உறுப்புகளுக்குள் கண்ணின் நினைவைச் செலுத்தும் போது துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உடலிலுள்ள அணுக்களுக்கு வீரிய உணர்வை ஊட்டித் தீமைகளை நீக்கும் அணுக்களாக ஒளியாக மாற்றுகின்றது.

இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொண்டால் உங்கள் எலும்புகளில் உள்ள ஊன்களில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகின்றது.

அந்த வித்தின் தன்மை வளர்ந்தால் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நேரடியாகக் கவர்ந்து
1.நோய்களை நீக்கும் தன்மையும்
2.சிந்திக்கும் ஆற்றலும் மனவலிமை பெறும் தன்மையும்
3.அருளைப் பெருக்கும் தன்மையும்
4.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குச் செல்லும் சக்தியும் நீங்கள் பெறுகின்றீர்கள்.

10. கண்களில் உள்ள கண்மணிகளைத் தூய்மையாக்கும் பயிற்சி:-
வேதனை வெறுப்பு என்ற உணர்வுகளை கண்மணி வழியாக அதிகமாகக் கவர்ந்தால் வேதனையைக் கவரும் சக்தியாக மாறிக் கண் பார்வை குறைந்து விடுகின்றது. அல்லது பார்வையே கூட இழந்து விடுகின்றது.

இதை மாற்றக் கண்களில் உள்ள கருமணிகள் இரண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று அதிலுள்ள விஷத் தன்மைகள் அனைத்தும் அகன்று அருள் ஞான சக்தியைக் கவரும் கண்மணிகளாக மாற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

பேரொளியான உணர்வுகளையும் பேரருளான நிலைகளையும் பெறும் அருள் கண்மணிகளாக வளரவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

11. நரம்புகளை வலுவாக்கும் பயிற்சி:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நரம்பு மண்டலம் முழுவதும் படர்ந்து எங்கள் நரம்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானித்து கண்ணின் நினைவினை அதிலே செலுத்துங்கள்.

இந்தப் பயிற்சியைச் சீராகக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் நினைவாற்றல் தீமைகளை நீக்கும். அருளைப் பெருக்கும். வாழ்வில் நலம் பெறச் செய்யும். ஆனந்தப்படச் செய்யும்.

12. எலும்புக்குள் உருவாகும் ஊனை மாற்றத் தியானிக்க வேண்டிய முறை:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் எலும்பு மண்டலம் முழுவதும் படர்ந்து எங்கள் எலும்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவினை எலும்பு மண்டலத்தில் செலுத்தி எங்கள் எலும்புக்குள் ஊனை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

நாம் எதையெல்லாம் கண்மணி வழியாகப் பார்க்கின்றோமோ அது நம் எலும்புக்குள் இருக்கும் அந்த ஊனுக்குள் வித்தாகப் பதிவாக்கி விடுகின்றது.

அந்த வித்தின் உணர்வு உயிரின் துடிப்பால் அந்த உணர்வின் இயக்கங்களாகும் பொழுது அது அணுவாகி அணுவின் மலமாக நம் எலும்புக்குள் உருவாகின்றது.
1.எதனெதன் உணர்வுகள் அது உருவாகின்றதோ
2.அதனதன் உணர்வுகளைக் கவரும் சக்தி பெறுகின்றது.

இவை அனைத்தையும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கவரும் சக்தியாக மாற்ற உங்கள் கண்ணின் நினைவினை எலும்புக்குள் ஊனாக உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்களில் செலுத்துங்கள்.

இவ்வாறு எண்ணும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் ஊனுக்குள் பதிவாகின்றது. எலும்புக்குள் ஏற்கனவே ஊனை உருவாக்கிய அணுக்களையும் பெறச் செய்யும் போது அருள் சக்தியைக் கவரும் ஊனாக உருவாக்க முடியும்.

13. தசைகளுக்கும் தோலுக்கும் தியானிக்க வேண்டிய முறை:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தசை மண்டலம் முழுவதும் படர்ந்து எங்கள் தசை மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தோல் மண்டலம் முழுவதும் படர்ந்து தோல் மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

14. குடும்பத்திற்குத் தியானிக்க வேண்டிய முறை:-
இவ்வாறு நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறச் செய்தது போன்று எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தாய் தந்தையர் உடல் முழுவதும் படர்ந்து அவர்கள் இரத்த நாளங்களில் கலந்து அவர்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

திருமணமானவர்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் கணவர்/மனைவி உடல் முழுவதும் படர்ந்து அவர் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

நாங்கள் கணவன் மனைவி இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து நளாயினி போன்று ஒருவரையொருவர் மதித்து நடக்கும் ஆற்றலும் சாவித்திரி போன்று எங்கள் இரு மனமும் ஒன்றி இரு உயிரும் ஒன்றி இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றிப் பேரருள் பெற்று பேரின்பப் பெருவாழ்வு பெறும் அருள் வாழ்க்கை வாழ்ந்திடும் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் குடும்பம் முழுவதும் படர்ந்து எங்கள் குடும்பத்தில் அறியாது சேர்ந்த தீயவினைகள் சாப வினைகள் பூர்வ ஜென்ம வினைகள் அனைத்தும் அகன்று அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் எங்கள் குடும்பத்தில் அனைவரும் வாழ்ந்து வளர்ந்து தொழில் வளம் பெருகி செல்வம் பெருகி செல்வாக்கு பெருகி அருள் ஞானம் பெருகி அருள் குடும்பமாக வாழ்ந்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

15. தவமிருக்க வேண்டிய முறை:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் விவசாய நிலம் முழுவதும் படர்ந்து எங்கள் விவசாய நிலத்தில் பயிரிடும் பயிரினங்கள் அனைத்தும் செழித்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் இந்த உலகம் முழுவதும் படர்ந்து உலகில் படர்ந்துள்ள நச்சுத்தன்மைகள் அகன்று உலகில் வாழும் மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து மத பேதமின்றி இன பேதமின்றி மொழி பேதமின்றி மன பேதமின்றி அருள் வாழ்க்கை வாழ்ந்திடும் அருள் சக்தி பெற்று சகோதர உணர்வுடன் ஒன்றுபட்டு வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மேகங்களில் படர்ந்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்து ஏரி குளங்கள் நிரம்பி தாவர இனங்கள் செழித்து ஊரும் உலகமும் உலக மக்களும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

நல்ல மழை பெய்ய அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் மனதார எண்ணி உங்கள் நினைவினை மேகங்களில் படரச் செய்து மேகங்களைக் கூடச் செய்து நல்ல மழை பெய்ய உங்கள் நினைவாற்றலைப் பாய்ச்சுங்கள்.

இவ்வாறு பாய்ச்சினால் உங்கள் உணர்வு அந்த மேகத்துடன் கூடி மழை நீராகப் பெய்கின்றது. எல்லா நலமும் பெற வேண்டும் என்ற உணர்வு கலந்திருப்பதனால் மழை பெய்தால் தாவர இனங்களில் நல்ல அணுக்கள் உருவாகி அதனுடைய மலம் தாவர இனங்களுக்கு நல்ல உரமாகும்.

வாழும் மக்கள் வேதனை வெறுப்புடன் எண்ணினால் விஷக் கிருமிகளாகித் தாவர இனங்களை அது பாழாக்கி விடும்.

அதனால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி மேகங்களில் படர்ந்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்து ஏரி குளங்கள் நிரம்பி தாவர இனங்கள் செழித்து வளர்ந்து ஊரும் உலகமும் உலக மக்களும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் இந்தத் தியானப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
1.ஞானிகள் வாழ்ந்த அருள் வாழ்க்கை வாழ்வீர்கள்.
2.மெய் ஞானம் பெறுவீர்கள்.
3.மெய் உலகை அடைவீர்கள்.

எமது அருளாசிகள்.

ஞானிகள் கொடுத்ததை அரசர்கள் மந்திர ஒலியாகப் பிரித்துக் கூடு விட்டுக் கூடு பாயும் நிலையாகத்தான் மாற்றினார்களே தவிர “விண் செல்ல முயற்சிக்கவில்லை…!”

Image

jebam

ஞானிகள் கொடுத்ததை அரசர்கள் மந்திர ஒலியாகப் பிரித்துக் கூடு விட்டுக் கூடு பாயும் நிலையாகத்தான் மாற்றினார்களே தவிர “விண் செல்ல முயற்சிக்கவில்லை…!”

1.தான் கண்டுணர்ந்த மெய் ஞானத்தின் தத்துவத்தை எடுத்துச் சொல்லி
2.அந்த மெய் உணர்வின் சத்தை “இப்படித்தான் வளர்க்க வேண்டும்…! என்று
3.மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மெய் ஞானிகள் சொல்லியுள்ளார்கள்.

அன்று ஆண்ட அரசர்கள் அதைத் தனக்குள் ஏற்றுக் கொண்ட பின் தனது சத்தாக மாற்றிப் போர் முறைகளாக மாற்றி விட்டார்கள். அதே சமயத்தில் தன்னுடைய சுகபோகங்களுக்காக மதங்களை உருவாக்கி அதிலும் பல பிரிவுகளை உண்டாக்கி விட்டார்கள்

ஆனால் அந்த ஞானிகள் கொடுத்தது என்ன…?

1.உன்னை அறியாது இருள்கள் எப்படி வருகின்றது…?
2.இதை மாற்றியமைக்க நீ என்ன செய்ய வேண்டும்…?
3.விண்வெளியின் ஆற்றலை நீ எப்படிப் பெற வேண்டும்…?
4.மனிதன் விண் செல்வது எவ்வாறு…? என்று அந்த ஞானிகள் பல சக்திகளைக் காட்டியிருந்தாலும்
5.ஆட்சி செய்த அரசர்களோ அதைத் தனக்குச் சாதகமாகப் பற்றிக் கொண்டார்கள்.

ஞானிகள் கொடுத்ததை அரசன் தன் இச்சைக்கு ஏற்ப அவன் உணர்வின் எண்ணங்களைக் கலந்து அந்த எண்ணங்களின் அடிப்படையில் மக்களையும் கேட்கச் செய்து மதங்களாக உருவாக்கி அவன் உணர்வின் சக்தியை மந்திர ஒலியாகப் பதியச் செய்து விட்டான்.

ஒவ்வொரு மதத்தின் மூலமாகவும் நீ இந்த மந்திரத்தைச் சொன்னால்… “அந்த ஆகம விதிப்படி… ஆண்டவன் உனக்கு இன்னது செய்வான்…! என்று மக்களுக்குள் (நமக்குள்) பதியச் செய்து விட்டார்கள்.

ஒரு மனிதன் இறந்து விட்டால் அந்த இறந்த மனித உடலில் இருக்கக்கூடிய உணர்வின் எண்ணங்களைக் கவர்ந்து சக்தி வாய்ந்த மனிதனாக அன்றைய அரசன் மாறினான்.

கூடு விட்டுக் கூடு பாயும் நிலைகள் என்று கடந்த காலங்களிலே அரசர்களால் விளைவிக்கப்பட்டது இது தான். அவ்வாறு செய்பவர்களைத் தான் முனிவர்கள் என்று சொன்னார்கள்.

ஆனால் மகா ஞானிகளும் மகரிஷிகளும் இயற்கையின் தன்மையிலே இருளை நீக்கி மெய்ப் பொருள் காணும் நிலையை வெளிப்படுத்தினர்.

அவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகள் சாதாரண மக்கள் மத்தியிலே அது படப்பட்டு அந்த உணர்வின் ஆற்றல் இயக்கப்பட்டால் “மக்கள் யாரும் தன்னை மதிக்க மாட்டார்கள்…!” என்பதால் ஞானிகள் சொன்ன மெய்ப் பொருளை மாற்றிவிட்டு மனிதர்கள் உடலிலிருந்து வெளி வரும் உணர்வலைகளை மந்திர ஒலிகளாகப் பிரிதெடுத்து அரசன் வாழ்ந்து வந்தான்.

தன்னைக் காப்பதற்காக அந்த மந்திர ஒலிகள் கொண்டு ஏவல் செய்து அடுத்த நாட்டிற்குள் இருப்பதை “அறிதல் என்ற நிலையில் கண்டறிந்து எதிரிகளை வீழ்த்துவதும் எதிரிகளை மடக்குவதும் போன்ற நிலைகளைச் செயல்படுத்தினார்கள்.

மிளகாய்… மிளகாய்… மிளகாய்… மிளகாய்… மிளகாய்… மிளகாய்… என்று ஆயிரம் தரம் சொன்னால்
1.அந்த மிளகாய் எப்படிக் காரமான உணர்வை எடுத்து அது விளைய வைத்துக் கொண்டதோ
2.அந்த மிளகாய்ச் சத்தினை நமக்குள் வளர்த்துக் கொள்ளப் போகும் போது
3.அதை அறியும் ஆற்றலாக வரும்.

அதாவது இந்தப் பூமியில் கல் மண் இவைகளிலிருக்கும் ஒவ்வொரு காரச் சத்தும் எதிர்நிலையாகும் போது ஒவ்வொரு உணர்ச்சியின் தன்மை பொங்கப்பட்டு அந்த உணர்வின் அலைகள் மாறுபட்டு
1.அந்த மிளகாய் காரத்தின் தன்மை எப்படி அடைந்தது…?
2.காரமான நிலைகள் கொண்டு இந்தப் பாறையிலே அது எப்படி விளைந்தது…? என்பதனை
3.இந்த மந்திர ஒலியால் கண்டுணரும் தன்மையும் வந்தது.

இப்படி வரக்கூடிய காலங்களில் தான் உலோகக் காலங்களாக மாறுகின்றது. பாறையின் தன்மையை ஒரு மனிதனில் விளைய வைத்ததைப் பல ஆயிரம் ஆயிரம் கோடி முறைகள் சொல்லப்படும் போது
1.மனிதனுக்குள் ஒரு பொருளின் இயக்கம் அது எதிர்நிலையாகும் போது
2.எதிர்நிலையான இந்த உணர்வின் சக்தி எப்படிக் கார உணர்ச்சியைத் தூண்டும் நிலையாக வருகிறது என்றும்
3.அந்த உணர்ச்சிக்குத்தக்க அது உருவம் எப்படி அமைந்தது என்ற உண்மையினுடைய நிலைகளையும் அன்று அரசர்கள் கண்டுணர்ந்தார்கள்.

அதைப் போன்றுதான் மந்திரத்தைச் சொல்லி ஒரு மனிதனின் ஆத்மாவைத் தனக்குள் இழுத்து அந்த உணர்வின் தன்மையை வீரியமாக வளர்த்துக் கொண்டபின் எந்த உடல் எனக்கு ஏற்றதோ… அந்த உடலுக்குள் சென்று… “கூடு விட்டுக் கூடு பாய்ந்தார்கள்…!”

தன் உடலில் வளர்த்துக் கொண்ட இச்சைகளை இந்த உடலில் அனுபவித்த பின் இன்னொரு உடலுக்குள் சென்று இதை அங்கேயும் மாற்றிக் கொண்டார்கள்.

அரசனும் அவனை மிகவும் அணுகியுள்ளவர்களும் இதை வளர்த்துக் கொண்டு கூடு விட்டுக் கூடு பாயும் நிலையைச் செயல்படுத்திக் கொண்டு வந்தார்கள்.

உதாரணமாக ஒருவருக்கு நாம் உதவி செய்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். ஏனென்றால் அவர் தன் வாழ்க்கையில் எடுத்துக் கொண்ட இன்னல்கள் பல.

அந்த இன்னலை நீக்க நாம் உதவி செய்கிறோம், அந்த உதவியால் தொழில் வகையிலும் குடும்பத்திலும் அவர் முன்னேற்றம் அடைகின்றார். கஷ்டத்தில் இருந்து மீள்வதற்கு எனக்கு நல்ல நேரத்தில் உதவி செய்தார் “மகராசன்…!” என்று நம்மைப் பற்றி அவர் எண்ணுவார்.

இப்படி எண்ணினாலும் கடைசியில் நோய்வாய்ப்பட்டு இறக்கும் பொழுது உதவி செய்தவரை எண்ணி ஏங்குவார். அந்த ஏக்க நிலையில் உடலை விட்டுப் பிரியும் உயிராத்மா உதவி செய்தவர் உடலுக்குள் விடுகின்றது என்பதை மெய் ஞானிகள் அன்று சொன்னார்கள்.

இதை அரசன் தனக்குச் சாதகப்படுத்தி எந்தெந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் கட்டுப்படுத்தலாம் என்று மனித அந்த உயிராத்மாக்களைத் தனக்குள் எடுத்து ஏவல் செய்யப் பயன்படுத்தினார்கள்.

ஏவல் செய்யப்பட்டு
1.ஒரு பொருளை மாற்றுவதும் ஒரு பொருளை இயக்குவதும்
2.ஒரு எண்ணத்தை இயக்குவதும் ஒரு எண்ணத்தை மாற்றுவதும்
3.ஒருவனை அடிமைப்படுத்துவதும் அவன் எண்ணத்தை சிதறச் செய்வதும் போன்ற வேலைகளை எல்லாம் அரசர்கள் அன்று செய்தார்கள்
(இன்றும் இது நடந்து கொண்டு தான் இருக்கின்றது)

அன்று ஞானிகள் சொன்ன அந்த உண்மைகளை அரசர்கள் தங்களுக்குச் சாதகப்படுத்திக் கொண்டார்கள். ஞானிகள் இதை எதிர்த்தால் அவருடைய சிரசு இருக்காது. “இது முறையற்றது…!” என்று சொல்லும் பொழுது அரசனுக்கு எதிரியாகின்றான்.

அப்பொழுது அவரை அரசன் வீழ்த்திடும் நிலை வருகின்றது. அவன் சாகும் போது வெறுப்பின் தன்மை கொண்டு இறக்கின்றான். அவ்வாறு வெறுப்புடன் இறந்திருந்தால் அந்த வெறுப்பான உணர்வுகள் அரசனை அழித்துவிடும்.

ஆக மெய் உணர்வைக் காணாத நிலைகள் இவன் எடுத்த தீய வினைகள் தீய விளைவுகளை உருவாக்கி
1.அரசர்களும் எவரும் வாழ்ந்தவர் இல்லை.
2.அரசனுடைய நிலைகள் அனைத்துமே மடிந்து விட்டது.

இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு (ஞானகுரு) உணர்த்திய உண்மைகளை உங்களுக்கும் சொல்கின்றோம்.

நாம் சுவாசிக்கும் உணர்வுகளுக்குள் (சுவாசம்) “நமக்குத் தெரியாமல் புகும் தீமைகளையும்… அதனின் விளைவுகளையும்… பற்றித் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்…!”

Image

divine frequency

நாம் சுவாசிக்கும் உணர்வுகளுக்குள் (சுவாசம்) “நமக்குத் தெரியாமல் புகும் தீமைகளையும்… அதனின் விளைவுகளையும்… பற்றித் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்…!”

 

நம் உயிர் நெருப்பு. அதில் நாம் என்னென்ன உணர்வுகள் படுகின்றதோ (பொருளைப் போடுகின்றமோ) அதை எல்லாம் வேக வைக்கின்றது. அதை எல்லாம் எண்ணம் சொல் செயலாக இயக்கி நம் உடலாக மாற்றுகின்றது.

நாம் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பொருள்களைப் போட்டு நெருப்பை வைத்து வேக வைத்தால் என்ன செய்கின்றது…? நாம் போட்ட பொருள்களின் ருசியெல்லாம் வரும்.

ஆனால் கை தவறிப் போய் அதிலே உப்பு அதிகமாக விழுந்து விட்டால் என்ன நடக்கும்…?
1.முதலில் சரியாகத் தான் நாம் உப்புப் போட்டிருக்கின்றேன்.
2.இரண்டாவது தவறிப் போய்த் தான் விழுந்தது.
3.அதனால் ஒன்றும் செய்யாது…! என்று சொன்னால் உப்பு கரிக்காமல் இருக்குமோ…?
4.அது உப்பு கரிக்கத்தான் செய்யும்…!

அந்த மாதிரித்தான் நாம் என்ன செய்கின்றோம்…? பிறருடைய துன்பங்களைக் கேட்டு அறிந்து விடுகின்றோம். அவர்களுக்கு உதவிகளும் செய்து விடுகின்றோம்.

ஆனால் அதே சமயத்தில் அவர்கள் பட்ட துன்ப உணர்வுகளை நாம் கேட்டறியும் பொழுது அது நம் உடலில் விளைந்து விடுகின்றது.
1.அவர்கள் கஷ்டப்படுவதை எண்ணுகின்றோம்.
2.காது கொடுத்துக் கேட்கின்றோம்.
3.கண் அவர்களைப் பார்க்கின்றது. அவர்கள் சொல்லை என்ன செய்கின்றது…?
4.இழுக்கின்றது… எண்ணிச் சுவாசிக்க வைக்கின்றது.

நம் உயிரிலே பட்டவுடனே அவர்கள் சொல்கின்ற கஷ்டத்தை எல்லாம் இரக்கமாகக் கேட்டு அவர்களுடன் சேர்ந்து நாமும் அதை எடுத்துக் கொள்கிறோம். அப்போது நம் உடலும் சோர்வடைந்து விடுகின்றது.

நாம் வயலில் உழுகும் போது நெல்லிற்கு ஒரு மாதிரியாக உழுகிறோம். பருப்புக்கு வேறு வகையாக உழுகின்றோம். சோளத்திற்குப் போடும் பொழுது அதனுடைய பதங்கள் வேறாகச் செய்கின்றோம். ராகி விதைக்கும் போது ஒரு மாதிரியாகப் போடுகின்றோம். கம்பு விதைக்கும் போது ஒரு விதமாகப் போடுகின்றோம்.

அந்த மாதிரித்தான் மற்றவர்கள் கவலையாகச் சொல்லும் போது அது உடலுக்குள் வித்தாகப்போகும் போது நீங்களும் சோர்வாகின்றீர்கள். அந்த விதை முளைத்து விடுகின்றது. அப்புறம் என்ன செய்கின்றது…? ஆழமாகக் கவனித்தீர்கள் அல்லவா…! நீங்கள் சும்மா இருந்தாலும் கூட அப்புறம் உங்களுக்குத் தெரியாமலேயே என்ன செய்யும்…?

வயலில் ஒரு விதையை விதைத்தோம் என்றால் காற்றிலிருந்து தன் இனமான சக்தியை இழுத்துக் கொள்கின்றது. இழுத்து அது விளைகின்றது.

அது போன்று தான் உங்கள் எண்ணத்தில் அவர்கள் சொன்ன கஷ்டத்தை எடுத்துக் கொண்ட பின் விதையாக விளைந்து விடுகின்றது. அப்புறம் அடிக்கடி இந்தக் கஷ்டமான எண்ணம் வரும்.

உங்கள் உடலில் அந்த வாசனை தான் வரும். வேறு யாரிடம் பேசினாலும் இந்த உணர்வு கலந்து போய் அவர்கள் காதிலும் கேட்கின்றது. அவர்களையும் சோர்வடையச் செய்யும்.

சோர்வடைந்த பின் நமக்கு எப்படிப் பதில் சொல்வார்கள்…?

உதாரணமாக உங்கள் வியாபாரத்திற்காக வேண்டிக் கடன் வேண்டும் என்று கேட்டிருப்பீர்கள். வாங்கி நல்ல முறையில் வியாபாரம் செய்யலாம் என்று நினைப்பீர்கள்.

அல்லது வியாபாரத்தில் ஒருவருக்கு நீங்கள் கடனாகக் கொடுத்திருப்பீர்கள். கொடுத்த பணத்தைத் திரும்ப வாங்கலாம் என்று கேட்கப் போவீர்கள்.

அப்பொழுது நம்மிடம் கஷ்டம் என்று சொன்னவர்கள் உணர்வு இது முன்னாடி வந்துவிடுகின்றது. நீங்கள் கடன் கேட்கப் போகும் போது அல்லது வாங்கப் போகும் பொழுது இந்தக் கஷ்டமான உணர்வு தான் வரும்.

இந்தக் கஷ்டமான உணர்வுடன் நீங்கள் கேட்கப் போனீர்கள் என்றால் உங்களுக்கு எதிர்ப்பாகப் பேசுவார்கள்.
1.ஆனால் அவர்கள் அப்படிச் சொல்லவில்லை.
2.உங்கள் மனது அவரை அந்த மாதிரிச் சொல்ல வைக்கின்றது.

அதே மாதிரி திருமணத்திற்காக வேண்டி வந்து நான்கு தரம் பெண்ணைப் பார்த்து விட்டுப் போகிறார்கள். ஏனென்றால் அந்த நான்கு பேருமே ஜாதகத்தில் பொருத்தம் இல்லை என்று போய் விடுகிறார்கள். அதை மனதில் எடுத்துப் பதிய வைத்துக் கொள்கின்றோம்.

இப்படி நான்கு பேர் வந்து விட்டுப் போனவுடன் நாம் என்ன சொல்கிறோம்…? இந்தப் பிள்ளை நேரம் பார்…! பெண்ணைப் பார்க்க வேண்டும் என்று சொலிக் கொண்டு வந்து விட்டு… வந்துவிட்டுப் போகிறார்களே…! என்று இதைப் பதிவு செய்து கொள்கின்றீர்கள்.

அதற்கப்புறம் புதிதாக நல்ல நிலைகளில் யாராவது பெண்னைக் கேட்க வந்தால் என்ன நினைக்கின்றீர்கள்…? இவர்கள் வந்து என்ன சொல்லப் போகிறார்களோ…! இவர்களும் சும்மா வந்து விட்டுப் போய்விடுவார்களோ என்று எடுத்து வைத்துக் கொள்வீர்கள்.

கரெக்டா (சரியாக) அது முன்னாடி நிற்கும்.

அவர்கள் வருவார்கள். வந்து எல்லாம் பேசிக் கொண்டே இருப்பார்கள். பெண்ணைப் பற்றிச் சொல்லிக் கொண்டு இருக்கும் போது நாம் பதில் சொன்னால் நம்மைக் கூர்ந்து கவனிப்பார்கள்.

முதலில் நாம் எதை நினைத்தோமோ அதைச் சுவாசித்தவுடனே
1.அவர்களும் பெண்ணைப் பார்ப்பார்கள்…
2.சரி… நாங்கள் பிறகு சொல்கிறோம் என்று சொல்லி விட்டு
3.அடுத்து வரமாட்டார்கள்…! இது யார் செய்வது…?

நம் உடலிலிருந்து வந்த உணர்வின் மணம் தான் அவ்வாறு இயக்குகின்றது. ஆகவே
1.எதையெல்லாம் நாம் பதிவு செய்கின்றமோ
2.அதையெல்லாம் நம் உயிர் இயக்கிக்கொண்டு தான் இருக்கின்றது.
3.அதையெல்லாம் உடலாக ஆக்கிக்கொண்டு தான் இருக்கிறது
4.அதனதன் மணத்தைக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது.

சந்தர்ப்பத்தால் வரும் இதைப் போன்ற தீமைகளை நீக்குவதற்கு ஞானிகள் எத்தனையோ வழிகளைச் சொல்லியுள்ளார்கள்…! அந்த ஞானிகள் காட்டிய மெய் வழிகளைத்தான் உங்களுக்கு இங்கே உபதேசமாகக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

தவறு செய்வது நாமா…? அல்லது நாம் நுகர்ந்த உணர்வா…? என்பதை நம்முடைய காவியங்கள் தெளிவாக்குகின்றன

Image

nose-breathing

தவறு செய்வது நாமா…? அல்லது நாம் நுகர்ந்த உணர்வா…? என்பதை நம்முடைய காவியங்கள் தெளிவாக்குகின்றன

இராமாயணத்தை நாம் எப்படிப் படித்திருக்கின்றோம்…?

இராமன் சாந்தமானவன்… நல்லவன். சின்னம்மா கைகேயி சூழ்ச்சி செய்து தன் மகனுக்குப் பட்டம் கட்ட வேண்டும் என்றும் இராமன் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்று தசரதனிடம் அவர் கொடுத்த வரப்படி கேட்கிறது.

தந்தையின் வார்த்தையைத் தட்டாத இராமனும் சீதாவும் காட்டுக்குள் சென்றார்கள். காட்டுக்குள் கல்லிலும் முள்ளிலும் அலைந்து மிகவும் சிரமப்பட்டார்கள்.

பின் சீதாவை இராவணன் தூக்கிச் சென்றுவிட்டான். அதனால் இராமன் வேதனைப்பட்டான். சீதா கடுமையான அவஸ்தைகள் பட்டது என்று படித்துவிட்டு
1.அட இராமா.. சீதா…! உங்களுக்கு இந்தக் கதியா…? என்று சொல்லி வேதனைப்பட்டு நாம் அழுவதற்குத்தான் பழகியிருக்கின்றோமே தவிர
2.அந்த இராமன் யார் என்று சொல்ல முடிகின்றதோ..?
3.வான்மீகி மாமகரிஷி உணர்த்திய உண்மைப் பொருளை அறியவில்லை…
4.அறிய வேண்டும் என்று முயற்சிக்கவும் இல்லை.

உதாரணமாக “தடா…புடா தடா…புடா…!” என்று ரோட்டில் சண்டை போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். என்ன சப்தம் என்று வேடிக்கை பார்க்கப் போகின்றீர்கள்.

மிகவும் கோபமாகவும் ஆத்திரமாகவும் பேசுகின்றார்கள். பார்த்தவுடன்.. என்ன….? ரோட்டிலே.. இப்படிச் சண்டை போடுகிறார்கள் பார்…! என்று வேடிக்கையாக நீங்கள் சொல்கின்றீர்கள்.

நினைக்கின்றீர்கள்…! சொல்லக் கூட இல்லை. ரோட்டிலே இப்படிச் சண்டை போடுகிறார்கள் என்று நினைக்கும் பொழுது கொஞ்ச நேரம் அந்தக் கோபம் அங்கேயே நின்று வேடிக்கை பார்க்கச் சொல்லும்.

அடுத்து நேராக வீட்டிற்கு வந்து சமையல் வேலையைப் பார்த்தீர்கள் என்றால் என்ன நடக்கும்…? குழம்பை வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்றால் போதும்.
1.அந்தக் கார உணர்ச்சி இயக்கி
2.இரண்டு மிளகாய் அதிகமாகப் போட்டுவிடுவீர்கள்.
3.ஆனால் நீங்கள் தவறு செய்யவில்லை.
4.அந்த உணர்வு இயக்கிக் காரத்தை அதிகமாகப் போட வைக்கும்.
5.அப்புறம் நீங்களே எடுத்து ருசி பார்க்கும் பொழுது காரமாகத் தெரிகிறது.

உங்கள் பையன் வந்து சாப்பிட்டு “உஷ்ஷ்…!” காரமாக இருக்கின்றது என்று சொல்வான். நீ எப்பொழுது பார்த்தாலும் காரமாகத்தான் இருக்கிறது என்று சொல்வாய். ஒழுங்காகச் சாப்பிடு என்று அவனை மிரட்டுவீர்கள்.

ஆனால் வீட்டுக்காரர் வந்து சாப்பிடும் பொழுது என்ன… குழம்பு காரமாக இருக்கிறது…? என்று கேட்பார்.

நீங்கள் எங்கேயாவது ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு இங்கே வந்து அதே மாதிரி நான் ருசியாகச் சமைக்க வேண்டும் என்றால் அது எப்படி…? என்று சொல்வீர்கள். சண்டை வந்துவிடும்.
1.நாம் செய்த தவறை அதை மறைக்கத்தான் சொல்லும்.
2.நேரடியாக இதைச் சொல்லவிடாது.

ஏன்…! என்ன காரணம்..!

அதனால் தான் ஆஞ்சநேயரை வலுவானவராகக் காண்பித்து இராமனுக்கும் சீதாவுக்கும்… “அவர் தான் காவல்..” என்று தெளிவாகக் காட்டியிருப்பார்கள்.

ஒரு வேப்ப மரம் என்ன செய்கின்றது…? கசப்பான சத்தைத் தனக்குள் வளர்த்துக் கொண்டுள்ளது. தன் கசப்பின் வலுவால் வேறு எந்த மணத்தையும் தன் அருகிலே விடுவதில்லை.

அதே கசப்பான குணத்தை (மனக்கசப்பு) நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள் என்றால் பாக்கி நல்லதை யாராவது உங்களிடம் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா…? இல்லை.

நாம் வெறுப்பாக இருக்கும் பொழுது யார் எந்த நல்லதைச் சொன்னாலும் நம்மால் கேட்க முடியாது. அந்த வெறுப்பிலேயே தான் இருப்போம். அந்தக் குணத்தை மாற்ற மாட்டோம்…! (உணர்வின் இயக்கம் அது). அதற்குப் பெயர் தான் ஆஞ்சநேயர்.

1.அந்தக் கசப்பான சத்து சீதா
2.கசப்பான உணர்ச்சிகளைத் தூண்டுவது அந்த எண்ணங்கள் இராமன்
3.அந்தக் கசப்பான மணத்தை எண்ணும் பொழுது சீதாராமனாக “சொல்லாக மாறுகின்றது…!

ஆனால் அந்த வலுவான கசப்பான நிலைகள் இயக்கி “சொல்வதையே சொல்லிக் கொண்டு…”
1.என் கஷ்டம் என்னை விட்டுப் போகமாட்டேன் என்கிறது
2.என் கஷ்டம் என்னை விட்டுப் போகமாட்டேன் என்கிறது என்று
3.அந்தக் கஷ்டத்தையே பிடித்துக் கொண்டிருப்பீர்கள்.

சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கும் சத்துகள் அனைத்துமே சீதாலட்சுமி. உபதேச வாயிலாக இப்பொழுது நான் பேசக்கூடிய சக்தியெல்லாம் சீதா சுவை. சொல்லாக வருவது இராமன். நான் சொல்லக்கூடியதை நீங்கள் காதிலே கேட்டால் இராமனுடைய அம்பு.

ஆனால் அதே சமயத்தில் திருப்பித் திருப்பிச் சொன்னதையே சொல்கிறேன் என்று சொன்னால் ஆஞ்சநேயன்.

இப்படியெல்லாம் நமக்கு அர்த்தம் புரிகிற மாதிரித்தான் காவியங்களைப் படைத்துள்ளார்கள் ஞானிகள். இதை யாராவது நாம் மதிக்கின்றோமா…? மதிப்பதில்லை.

நம்முடைய காவியப் படைப்புகள் சாதாரணமானவை அல்ல.
1.நம் உயிரின் இயக்கத்தையும்
2.மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதையும்
3.இந்த உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும் என்ற பேருண்மைகளையும்
4.எல்லோரையும் அறியச் செய்வதற்குப் படைக்கப்பட்டதே நம் ஞானிகளால் உருவாக்கப்பட்ட காவியங்கள்.

கம்ப்யூட்டருக்குள் இருக்கும் பதிவு தான் (SOFTWARE) அதைச் சீராக இயக்குகின்றது – அதுபோல் மெய் ஞானிகளின் உணர்வை ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டால் “மெய் ஒளியைச் சீராக உங்களுக்குள் காணலாம்”

Image

Computer

கம்ப்யூட்டருக்குள் இருக்கும் பதிவு தான் (SOFTWARE) அதைச் சீராக இயக்குகின்றது – அதுபோல் மெய் ஞானிகளின் உணர்வை ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டால் “மெய் ஒளியைச் சீராக உங்களுக்குள் காணலாம்”

மனிதர்கள் தனக்கு வேண்டியதை டைப் (TYPING) செய்து ஒரு கம்ப்யூட்டரில் ஆணையிட்டு (COMMAND) விடுகின்றார்கள். இன்னென்ன நிலைகள் தான் என்று ஆணையிட்டவுடனே அந்த உணர்வலைகள பதிவாகி (RECORD) விடுகின்றது.

உதாரணமாக குளிரூட்டக் கூடிய ஒரு இயந்திரத்தில் இவ்வாறு ரெக்கார்ட் செய்து வைத்து இயக்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அங்கிருக்கும் சீதோஷ்ண நிலை (CLIMATE) மாறுகின்றது… “வெயில் அதிகமாகிறது” என்ற இந்த உணர்வின் அலைகள் வந்தவுடனே அந்த மாற்றத்திற்குத் தகுந்த மாதிரி உடனே அந்தக் கம்ப்யூட்டர் என்ன செய்கின்றது…?

அதைச் சமப்படுத்துவதற்கு உடனே ஒரு சுவிட்சை மாற்றுகின்றது. அலை வரிசை மாறி அந்தக் குளிர்ச்சியாக்கும் (COOLING) நிலையைத் தட்டி விட்டுவிடுகின்றது. தானாக அவ்வாறு இயக்கிக் காட்டுகிறது.

மனிதன் அவன் கண்டுபிடித்த இயந்திரத்தில் எது பதிவு செய்யப்பட்டதோ அதற்குத் தகுந்த மாதிரி அது இயங்கி சீராக (AUTOMOATIC) வேலை செய்கிறது. ஆக எது பதிவோ அது தான் இயக்குகின்றது.
1.இயந்திரத்தில் எப்படியோ அது போல் தான்
2.மனிதருக்குள்ளும் நாம் எதைப் பதிவாக்குகின்றோமோ அது தான் நம்மை இயக்கும்.
3.இதைத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

உதாரணமாக அண்ணனும் தம்பியும் ஒரு கல்லூரியில் படிக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். அண்ணன் பொறியியல் படிக்கின்றார். தம்பி வேறு ஒரு துறையைப் படிக்கின்றார்.

அப்பா… தம்பிக்கு மட்டும் பணம் அதிகமாகக் கொடுக்கின்றார். எனக்கு மட்டும் கொடுக்க மாட்டேன் என்கிறார். நான் கேட்டுக் கேட்டு வாங்க வேண்டி இருக்கின்றது. ஏதாவது அவசரத்திற்குக் கேட்டால் கொடுக்க மாட்டார் என்று அண்ணன் கொஞ்சம் முறைத்துக் கொண்டு வந்தால் போதும்.

இந்த உணர்வு உடலுக்குள் அதிகமாகக் கலந்துவிடும். அப்புறம் இன்ஜினியர் படிப்பு என்ன ஆகிறது…? என்று பார்த்துக் கொள்ளலாம். பணம் தரவில்லை என்கிற பொழுது அதனால் சண்டையாகிவிடும்.

ஒரு கண்ணில் வெண்ணெயும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கின்றார் என்று இதையே அண்ணன் வளர்த்துக் கொண்டு வருவார். தம்பிக்குப் பணம் கொடுக்கும் போதெல்லாம் இந்த உணர்வுகள் விளைந்து கொண்டே வரும்.

வெறுப்பின் தன்மை அதிகமாகும் பொழுது கடைசியில் படிப்பில் மட்டம் ஆகிவிடுவார். அப்புறம் பரீட்சைக்குப் போனால் எல்லாம் கோட்டை விட்டுக் கொண்டே இருப்பார். இன்ஜினியராகத் தேறி வர முடியாது.

ஆனால் தம்பியோ அப்பா சொல்லைக் கேட்டு… “எப்படியும் நன்றாக இருக்க வேண்டும்…” என்ற அந்த உணர்வின் தன்மை பதிவாகி அது அவருக்குள் விளையும் பொழுது அவர் தேர்ச்சி ஆகி வந்து விடுவார்.

அதைப் போன்று தான் யாம் (ஞானகுரு) மெய் ஞானிகளைப் பற்றி உபதேச வாயிலாகச் சொல்லிக் கொண்டு வரும்போது நீங்கள் இதைக் கூர்ந்து கவனித்து ஆழமாகப் பதிவு செய்து கொண்டால் மீண்டும் நினைத்துப் பார்க்கும் போது அந்த ஞானிகள் உணர்வு இயக்கி உங்களை நல்லதாக்கும்.

1.என்னமோ சாமி (ஞானகுரு) சொல்லிக் கொண்டு இருக்கின்றார் என்கிற வகையில் சாதாரணமாக எண்ணிக் கொண்டோ…
2.அவசர வேலையாகப் போக வேண்டும் என்ற நிலையிலோ…
3.யாராவது தவறு செய்கின்றார்கள் என்றால் அவர்களைப் பற்றி எண்ணிக் கொண்டோ…
4.கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே “நேரமாகி விட்டதே…!” சீக்கிரம் முடித்தால் பரவாயில்லை என்ற எண்ணத்தில் இருந்தால்
5.”பரவாயில்லை…!” என்கிற நிலையில் அது தான் முன்னணியில் நிற்கும்.
6.அதாவது அந்த ஞானியின் அருள் சக்தியைப் பெற விடாமல் “உங்கள் உணர்வு அதைத் தடுக்கின்றது…!” என்று பொருள்.

யாம் கொடுக்கும் உபதேச உணர்வை எந்த எண்ணத்தில் எண்ணி உங்களுக்குள் கலக்கின்றீர்களோ அந்த நிலை தான் உங்களுக்குள் பதிவாகும். ஏனென்றால்
1.பதிவு இல்லை என்றால் “எதையுமே” நினைவுக்குக் கொண்டு வர முடியாது.
2.நினைவு இல்லை என்றால் நாம் சக்தியைப் பெற்று வளர்க்க முடியாது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உபதேச வாயிலாக ஒவ்வொன்றையும் எமக்குள் பதிவாக்கித் தான் மெய் ஞானிகளின் ஆற்றலைப் பெறச் செய்தார். அதை எம்மால் வளர்த்து உங்களுக்கும் தெளிவாகச் சொல்ல முடிகின்றது.

உங்களுக்குள் அர்த்தமாகவில்லை என்றாலும் கூட யாம் உபதேசிக்கும் உணர்வுகள் “ஆழமாகப் பதிவாக வேண்டும்…!” என்ற ஏக்கத்தில் நீங்கள் இருந்தாலே போதுமானது.

பதிவான உணர்வுகள் (COMMAND) கொண்டு ஒரு கம்ப்யூட்டர் இயங்குவது போல் நீங்கள் நினைவுபடுத்தியவுடன் ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குத் தக்க சமயத்தில் ஞானத்தின் அறிவை ஊட்டும்.
1.உங்களை அந்த மெய் வழியில் அழைத்துச் செல்லும்.
2.மெய் ஞானிகள் சென்ற பாதையில் நீங்கள் செல்ல ஏதுவாகும்.
3.பிறவியில்லா நிலை என்னும் அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்யும்.

ஒருவர் கெட்டுப்போக வேண்டும் என்று எண்ணும் பொழுது நாம் அதுவாகின்றோம்…! தீமைகளை நீக்கி ஒளியாக வாழும் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்தால்… நாம் அதுவாக… “மகரிஷியாகின்றோம்…!”

Image

spiritual-success

ஒருவர் கெட்டுப்போக வேண்டும் என்று எண்ணும் பொழுது நாம் அதுவாகின்றோம்…! தீமைகளை நீக்கி ஒளியாக வாழும் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்தால்… நாம் அதுவாக… “மகரிஷியாகின்றோம்…!”

 

உதாரணமாக ஒருவர் கெட்டுப் போக வேண்டும் என்று நான் எண்ணுகின்றேன் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது…
1.“கெட்டுப் போக வேண்டும்” என்ற எண்ணத்தின் உணர்வை நான் சுவாசித்து
2.அதற்கப்புறம் தான் என்னிடமிருந்து அது சொல்லாக வெளிவருகின்றது.

அதாவது கெட்டுப் போக வேண்டும் என்ற எண்ணத்தை நான் சுவாசிக்கும் போது முதலில் என் உயிரிலே படுகின்றது. எதைக் கெட்டுப் போக வேண்டும் என்று எண்ணுகின்றனோ
1.இந்த உணர்வுகள் என் உடல் முழுவதற்கும் அந்தச் சக்தி போய்
2.என் உடலிலே விளைந்து திருப்பிச் சொல்லாக வருகின்றது.

என்னுடைய சொல்லை யார் ஒருவர் கேட்கின்றனரோ அந்த உணர்வுகள் அங்கே பட்டு அவர்களிடமும் அதே உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

எதை அடிப்படையாக வைத்துக் கெட்டுப் போக வேண்டும் என்று நான் சொல்லுகின்றனோ அதே உணர்வு கேட்போருடைய உணர்வுகள் ஏற்றுக் கொண்டால் ஏற்றுக் கொண்ட உணர்வின் இயக்கமாக இயக்குகின்றது.

அப்போது…
1.ஏற்றுக் கொண்டபின் என் மேல் கோபம் வரும்.
2.அடுத்தவர்கள் ஏதாவது நல்லது சொன்னால் அதைச் செய்யவிடாது.
3.அந்த நேரத்தில் தன் பையனே ஏதாவது குறுக்கே வந்தாலும் அவன் மீது கோபமாகப் பேசச் சொல்லும்.

அதே போல் வியாபாரத்தில் கடையிலே இருந்தீர்கள் என்றால் அங்கே வருபவர் சரக்கு என்ன வேண்டும்…! என்று இரண்டு தரம் கேட்டு… மூன்றாவது தரம் கேட்டார்… என்றால்
1.நன்றாகச் சரக்கு வாங்க வந்தாய்…!
2.”போய்யா…!” என்று தான் சொல்ல வேண்டி வரும்.

ஆகவே கெட்டுப் போக வேண்டும் என்று நான் எண்ணக்கூடிய இந்த எண்ணம் என் உடலில் படர்ந்து என் உடலில் முதலில் விளைகின்றது. அப்புறம் கேட்கின்றவர்கள் உடல்களிலும் அது போய் விளைகின்றது.

அப்போது என்னை எண்ணிக் கோபம் வரும் போதெல்லாம் அது அவர்கள் காரியத்தைத் தடைபடுத்திவிடுகின்றது. ஆக “நான் சொன்ன சொல்லைத் தான் அங்கு நிறைவேற்றுகின்றார்கள்….!”

ஏனென்றால் நான் கோபமாகக் “கெட்டுப் போக வேண்டும்..!” என்று சொன்ன சொல்லை மட்டும் ஆழமாகப் பதிவு செய்து கொள்கின்றீர்கள். அந்த உணர்வுகள் உங்களை இயக்கி அந்த நிலையை ஏற்படுத்துகின்றது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

அதே போன்று நீங்கள் ஈவு இரக்கத்துடன் இருக்கின்றீர்கள். ஒருவர் கஷ்டப்படுகிறார் என்ற நிலையில் அவர்களைப் பார்க்கின்றீர்கள். அவர்கள் சொல்வதைக் கேட்கின்றீர்கள்.

அவர்கள் உங்களோடு சண்டை போடவில்லை. கெட்டுப் போக வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் அவர்கள் வாழ்க்கையில் கஷ்டப்படுகின்றார்கள். அந்தக் கஷ்டமான சொல்லைச் சொல்லும் போது காது கொடுத்துக் கேட்டவுடனே என்ன செய்கிறது…?

அவர்களுக்கு எப்படிக் கஷ்டமானதோ அந்த உணர்வு எல்லாம் கேட்கின்றவர்கள் உடலிலும் கஷ்டத்தை உண்டாக்குகின்றது.

அந்த உணர்வான சத்து உடலில் போய்ச் சேர்ந்து விடுகின்றது. ஐயோ பாவமே…! என்று இரக்கப்பட்டுக் கேட்கின்றோம். அந்த உணர்வு அதுவாகிவிடுகிறோம். நாமும் கஷ்டமாகித்தான் அவர்களுக்கு உதவி செய்கிறோம்.

ஒருவர் கெட்டுப் போக வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். அந்த கெட்டுப் போக வேண்டும் என்ற உணர்வு நான் அதுவாகிறேன். அதனுடைய நிலை என் உடலில் விளைகின்றது.

ஆனால் மனிதனாக இருக்கக்கூடிய நாம் இன்றைய சாதாரண வாழ்க்கையில் என்ன செய்கிறோம்…?
1.ஒரு உணவுப் பொருள் கெட்டுப் போய்விட்டது என்றால்
2.அந்தப் பொருளைத் “தூக்கி எறிந்து விடுகின்றோம்….!
3.சாப்பிடுவது இல்லை….!

நெல்லில் உள்ள உமியை நீக்கி விடுகின்றோம். அதை வேக வைத்துச் சாப்பிடுகின்றோம். துணியில் அழுக்குப் பட்டு விட்டது என்றால் நீக்கிவிடுகின்றோம். உடலில் அழுக்குப் பட்டால் குளித்து விடுகின்றோம்.

புற நிலைகளுக்கு இவ்வளவு செய்யும் நாம் அகத்திற்குள் நம் உடலுக்குள் வரும் தீமைகளையும் துன்ங்களையும் நீக்குகின்றோமா…? சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

இரக்கப்பட்டுக் கேட்கும் பொழுது பிறர் சொல்லக்கூடிய துன்பமான உணர்வுகள் நம் உயிரில் பட்டு உடலில் சேர்ந்து அந்த நிலைக்கே நாம் ஆளாகி நம் உடலில் விளைய ஆரம்பித்துவிடும்.

உடலிலே விளைந்து விட்டால் அந்த உணர்வே தான் திரும்பத் திரும்ப வரும். மற்றவர்கள் சொன்ன கஷ்டத்தைத்தான் நாமும் திரும்பவும் சொல்ல வேண்டி வரும்.

உதாரணமாகப் பாலை வைத்துக் காபியைப் போடுகிறோம். சீனி போடுகிறோம். நல்ல ருசியாகச் சாப்பிடுகிறோம். ஆனால் ஒரு துளி மிளகாய்த் தூள் அதற்குள் விழுந்துவிட்டது என்றால் என்ன செய்கின்றது…?

குடிப்பவர்கள் எல்லோரும் காபி “ஒரே காரமாக…!” இருக்கிறது என்பார்கள். அப்பொழுது அந்தக் காபியைப் பற்றி ருசித்துச் சொல்ல முடிகிறதோ…? சொல்ல விடுவதில்லை.

இதே மாதிரித் தான் நாம் இரக்கப்பட்டு உதவிகள் செய்தாலும் அவர்கள் கஷ்டத்தை நாம் நுகர்ந்தோமானால் நாம் அதுவாகி விடுகிறோம். அந்தக் கஷ்டமான உணர்வு நமக்குள் வளராமல் துடைக்க வேண்டும் அல்லவா…! அதற்கு என்ன உபாயம்…?

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் கண்ணின் நினைவைச் செலுத்தப் பழக வேண்டும்.

பின் எங்கள் உடல் முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று உள்முகமாக உடலுக்குள் பல முறை இப்படிச் செலுத்த வேண்டும்.
1.இவ்வாறு அடிக்கடி எடுத்துத் துடைக்கும் இந்தப் பழக்கம் வந்துவிட்டால்
2.நாம் அதுவாக… “மகரிஷியாக ஆகின்றோம்….!”
3.கஷ்டங்களோ துன்பங்களோ நம்மை இயக்குவதில்லை.

செய்து பாருங்கள்.

தீமைகளைப் “பஸ்பமாக்கிவிட்டு” உயிராத்மாவைப் “புடம் போட்டு” நாம் ஒளியாக மாற வேண்டும்

Image

Paspam pudam

தீமைகளைப் “பஸ்பமாக்கிவிட்டு” உயிராத்மாவைப் “புடம் போட்டு” நாம் ஒளியாக மாற வேண்டும்

 

வைத்தியர்கள் தங்கத்தைப் பஸ்பமாக்கிக் கொடுக்கின்றார்கள். இரும்பைப் பஸ்பமாக்கிக் கொடுக்கின்றார்கள். செம்பைப் பஸ்பமாக்கிக் கொடுக்கின்றார்கள்.

பல சரக்கை அதனுடன் சேர்த்து அதனின் வீரிய உணர்வை மாற்றிவிட்டுப் பவுடராக்கி விடுகின்றார்கள். அதனின் சத்து கெட்டுப் போகாமல் இருப்பதற்காக அதிலிருக்கின்ற கடினமான நிலைகளைப் பஸ்பமாக்குகின்றார்கள்.

1.அதனுடைய சத்தை எடுத்துச் சாப்பிடச் சொல்லும் போது அது தண்ணீராகக் கரைந்து
2.நம் உடலில் இருக்கக்கூடிய கெட்டதை இது பஸ்பம் செய்து
3.நல்ல இரத்தமாக மாற்றுகின்றது.
4.நம் உடலில் இருக்கக்கூடிய வியாதிகளைப் போக்குகின்றது.
5.வைத்திய முறையில் இவ்வாறு செய்கின்றோம்.

ஞானிகளும் மகரிஷிகளும் நம்மைப் போல வாழ்க்கையில் வாழ்ந்தவர்கள் தான். தன் வாழ்க்கையில் வந்த துன்பங்களில் இருந்து விடுபடுவதற்காக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் அந்த உயர்ந்த எண்ணங்களை எண்ணிக் கெட்டதையெல்லாம் பஸ்பம் செய்து விடுகின்றார்கள்.

தனக்குள் வந்த நோயை மாற்றி மெய் ஞானத்தின் தன்மை தனக்குள் வளர்த்து இந்த உடலில் இருக்கக்கூடிய உணர்வை ஒளியாக மாற்றி
1.அவர்கள் தங்கள் வாழ்க்கையில் உடலுக்குள் வந்த அத்தனையுமே புடம் போட்டு
2.அது பூராத்தையும் மாற்றி உயிரோட சேர்த்து
3.உயிராத்மாவை ஒளியாக மாற்றிக் கொண்டார்கள்
4.அப்படி ஆன அகஸ்தியர் இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்.

அதற்குப் பின்னாடி வந்தவர்கள் அவர் உடலில் விளைய வைத்த அந்தக் குணத்தை எடுத்து அவரின் மூச்சலைகளைச் சுவாசித்து தங்கள் உடலில் வளர்த்துக் கொண்டார்கள்.

தங்கள் வாழ்க்கையில் சந்தித்த கஷ்டமான நிலைகளுக்குள் எல்லாம் இதைக் கலந்து அதைப் புடம் போட்டுச் சங்கடத்தையும் சலிப்பையும் மாற்றி தன் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிச் சென்றவர்கள் தான் இன்று சப்தரிஷி மண்டலமாக இருக்கிறார்கள்.

ஏனென்றால் தன்னிச்சையாகவே “துன்பத்திலிருந்து மாற்றி… விண் செல்ல வேண்டும்…!” என்ற எண்ணத்தில் அவர்கள் அப்படிப் போனார்கள்.

அவர்கள் மனிதனாக இருக்கும் போது பேசிய உணர்வின் சத்துக்கள் அனைத்தும் சூரியன் காந்த சக்தியால் கவரப்பட்டடு நம் பூமியில் அலைகளாகப் படர்ந்து கொண்டிருக்கின்றது.

அந்த மெய் ஞானிகள் எப்படித் தீமைகளைப் பஸ்பமாக்கி விட்டு மெய் ஒளியைத் தன் உயிரான்மாவில் புடம் போட்டு ஒளியாக மாற்றிக் கொண்டார்களோ அதைப் போல நாமும்
1.இந்த வாழ்க்கையில் நாம் சுவாசிக்க நேரும் எந்த உணர்வாக இருந்தாலும்
2.அது அனைத்திற்குள்ளும் மெய் ஞானிகளின் உணர்வைச் சேர்த்து அதைப் பஸ்பமாக்கி
3.நம் உயிராத்மாவைப் புடம் போட்டு “மெய் ஒளியாக நாம் மாற முடியும்….!”

நம் எல்லை சப்தரிஷி மண்டலம் தான்…! நம்முடைய பாசம் அதன் மீது தான் இருக்க வேண்டும்…!

Image

suicide

நம் எல்லை சப்தரிஷி மண்டலம் தான்…! நம்முடைய பாசம் அதன் மீது தான் இருக்க வேண்டும்…!

உதாரணமாக நம் நண்பர் தன் குடும்பத்திற்குள் சண்டையிட்டு அவர்கள் அறியாதபடி மருந்து குடித்தோ அல்லது வேறு ஏதோ ஒரு வகையில் “தற்கொலை செய்து கொள்கிறார்…!” என்று வைத்து கொள்வோம்.

அந்த நண்பரிடத்தில் பாசமாகப் பழகி இருக்கும் போது அந்த நண்பனின் எண்ணம் ஓங்கி இருந்தால் அந்த உயிராத்மா நம் உடலுக்குள் வந்துவிடும். (பிறிதொரு ஆன்மா இல்லாத மனிதரே கூட இல்லை என்று சொல்லலாம்… தெரிந்து கொள்ளுங்கள்..!)

அவர் உயிரோடு இருக்கும் போது என்ன செய்தாரோ அந்த உணர்வின் தன்மை இந்த உடலுக்குள் வந்து அதே நிலையைச் செய்யச் செய்யும். நம்முடைய செயல்களில் தடுமாற்றம் ஆகும்.

நாம் செய்த உதவியின் தன்மையிலே அந்த நண்பன் தன் குடும்பத்தில் தனக்கு இடைஞ்சலாகும் போது
1.“என்னுடைய நண்பன் எனக்கு நன்மை செய்தான்..! என்ற எண்ணத்தில்
2.அவன் மரணமடைவானேயானால் அந்த உயிராத்மா இங்கே வந்து
3,நமக்குப் பல தொல்லைகள் கொடுக்கத் தொடங்குகின்றது.

அதைப் போன்ற நிலைகளில் பிறிதொரு ஆன்மா உடலுக்குள் வந்துவிட்டால் அது வெளியிலே செல்வது மிகக் கடினம். இதை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்..?

அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடலில் உள்ள அனைத்து ஜீவாத்மாக்களும் பெற வேண்டும் என்று ஒரு பத்து நிமிடமாவது அதிகமாக இந்த எண்ணத்தை நாம் எடுத்துக் கொண்டோம் என்றால் நம் உடலுக்குள் இன்னொரு ஆத்மா இருந்தாலும் அதனின் செயலை அடக்க முடியும்.

விருப்பு வெறுப்பு என்ற நிலைகளில் அன்பின் காரணமாகவும் வெறுப்பின் காரணமாகவும் எல்லோருடனும் தான் நாம் பழகி இருக்கிறோம்.

இதை போல ஆத்மாக்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்ற பின்
1.கோபக்காரர் இரண்டு பேர் இருந்தால் கோபமான உணர்வு இரண்டும் ஒன்று சேரும் போது
2.இதைப் பிரித்துக் காண முடியாது.

முதலில் கொஞ்சக் கோபக்காரராக இருப்பார். ஆனால் அந்த வெறுப்பின் தன்மை ஓங்கி வளர்ந்து இன்னொரு ஆத்மாவின் நிலைகள் வந்த பின் “மிகுந்த கோபக்காரராக” மாறிச் செயல்படத் தொடங்குவார்.

நம்மை அறியாமலேயே நம்மை ஆட்டிப் படைக்கும் இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீட்டுக் கொள்ள ஒவ்வொரு நிமிடத்திலும் இந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
1.தவறு செய்யாமலேயே பிறிதொரு ஆத்மா நமக்குள் வந்துவிடுகிறது.
2.நல்ல ஆத்மா உடலுக்குள் வந்தாலும் வேதனையாகின்றது.
3.ஏனென்றால் அவர்களும் வேதனையோடு தான் இறக்கின்றார்கள்.

சரியான வளர்ச்சி இல்லாமல் இறந்த ஆத்மாக்கள் நம் உடலுக்குள் வந்தால் அவர்கள் உடலில் எந்தக் குணங்களை விளைவித்துக் கொண்டார்களோ அதன் நிலைகளில் நம் உடல்களில் செயல்படுத்தி விடுகின்றது.

அதற்காக வேண்டித்தான் பௌர்ணமி தியானத்தை ஏற்படுத்தி உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கும் பழக்கத்தை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.

அதன் மூலம் நீங்கள் சப்தரிஷி மண்டலத்துடன் உங்களுக்கு நேரடித் தொடர்பு ஏற்படுகின்றது. அந்தத் தொடர்பின் மூலம் மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் செலுத்தி நீங்கள் இந்தத் தியானம் செய்யச் செய்யச் செய்ய….
1.நமக்குள் இன்னொரு ஆத்மா இருந்தாலும் (அல்லது வந்தாலும்)
2.நம்முடைய சக்தி ஓங்கி வளர்ந்து
3.உடலில் இருக்கக்கூடிய இன்னொரு ஆத்மாவுடைய செயல்களைத் தடைபடுத்திவிடும்.

எந்தச் சப்தரிஷி மண்டலத்தை எண்ணி நாம் மகரிஷிகளின் அருள் சக்திகளை இந்த உடலுக்குள் சேர்த்துச் சேர்த்து விளைய வைத்துக் கொண்டோமோ இறந்த பின் நம் உயிராத்மா விண்ணை நோக்கிச் சென்று நேரடியாக அந்தச் சப்தரிஷி மண்டல ஒளிக் கடலில் கலக்கின்றோம்.

மனிதனின் கடைசி எல்லை அது தான்…!

“மெய் ஞானிகளின் ஸ்டேசனை” உங்களுக்குள் அலைவரிசையாக (FREQUENCY) எடுத்துக் கொடுக்கின்றோம் – ஆன்டென்னாவை அவர்கள் பால் திருப்பி மகரிஷிகள் ஆற்றல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்

Image

sage-station

“மெய் ஞானிகளின் ஸ்டேசனை” உங்களுக்குள் அலைவரிசையாக (FREQUENCY) எடுத்துக் கொடுக்கின்றோம் – ஆன்டென்னாவை (ANTENNA) அவர்கள் பால் திருப்பி மகரிஷிகள் ஆற்றல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்

இப்போது நாம் சாதாரண மனிதர்களுடன் பேசுகிறோம். பழகுகின்றோம். இருந்தாலும் சந்தர்ப்பவசத்தால் ஒருவருக்கொருவர் பிடிக்கவில்லை என்றால் பகைமையாகி விடுகின்றது.

ஒருவருக்கொருவர் திட்டி ஏசிப் பேசியிருப்போம். இது நடந்து பத்து வருடம் இருக்கும். அவர்களும் மறந்திருப்பார்கள். நாமும் கூட மறந்து போயிருப்போம்.

பிறகு நாம் இங்கே இருக்கும் போது யாராவது ஒருவர் வந்து பத்து வருடத்திற்கு முன்னாடி உன்னுடன் பழகிய அந்த நண்பரை அங்கே அமெரிக்காவில் பார்த்தேன். ஜெக ஜோதியாக இருக்கின்றார் என்று சொன்னால் என்ன நடக்கின்றது.

அவனா…? அயோக்கியப் பயல்…! அவன் பேச்சை இந்த நேரம் பேசாதே ஐயா…! என் குடும்பத்தைக் கெடுத்தவன்…! என்று கோபமும் ஆத்திரமும் ஜிர்…ர்ர்ர்” என்று வரும். ஏனென்றால்
1.பத்து வருடத்திற்கு முன்னாடி நமக்குள் பதிவானது
2.இந்த செல்களை (உடலுக்குள்) நினைவுபடுத்தியவுடனே இது இயங்க ஆரம்பித்துவிடும்.
3.ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

இதைப்போல மனித வாழ்க்கையில் தவறு செய்யாமலேயே இந்த உணர்ச்சி வசப்படும் நிலை ஏற்படுகின்றது. ஆனால் இதை நாம் துடைக்கவில்லை என்றால் மன நோயாகி உடல் நோயாக மாறுகின்றது.

அதி விரைவாகக் கணக்கிடும் சூப்பர் கம்ப்யூட்டர் (SUPER COMPUTER) என்று இன்றைக்குக் கண்டுபிடித்து வைத்திருக்கின்றார்கள். அதைப் போன்று தான்
1.நமக்குள் என்றோ பதிவு செய்ததை நம் உயிர் என்ன செய்கிறது..?
2.நாம் நுகர்ந்த உணர்வுகள் (உணர்ச்சிகள்) பூராம் எலக்ட்ரானிக் (ELECTRONIC) இயக்கங்களாக மாறுகின்றது.

அந்தந்தச் செல்களில் மோதியவுடனே ஜீவன் பெற்று அதனின் இயக்கமாக உடனடியாக நம்மை இயக்குகின்றது. அதுவாகவே நம்மை மாற்றிவிடுகின்றது.

சூப்பர் கம்ப்யூட்டருக்கு எப்படி ஆற்றல் வந்தது…? நாம் டி.வி ரேடியோ இதையெல்லாம் தினசரி பார்க்கின்றோம்… கேட்கின்றோம் அல்லவா…!

விஞ்ஞான ஆராய்ச்சிப் பிரகாரம் கண்டுபிடித்து அதற்குள் (டி.வி. ரேடியோ) கெமிக்கல் கலந்ததை முலாமாகப் பூசியிருப்பார்கள். முலாமாகப் பூசியதிலிருந்து வெளி வரும் ஒலி… ஒளிகளைத்தான் நாம் நுகர்ந்து அதைக் கூர்ந்து கவனித்து நமக்குள் பதிவாக்குகின்றோம்.

ஒரு மனிதனைப் பேசச் செய்து அதை இயந்திரத்தில் பதிவு செய்து மீண்டும் இந்த டேப்பை (TAPE) இயந்திரத்தில் போட்டு அந்த அலை வரிசையாக (FREQUENCY) வெளியில் அனுப்புகின்றார்கள்.
1.அந்த அலைகள் வெளி வரும் போது மனிதனுடைய தொடர்பு அல்லாதபடி
2.மனித உடலில் விளைய வைத்த இந்த உணர்வின் அமில சத்தை
3.இயந்திரத்தில் இருக்கும் கெமிக்கல் கலந்த உணர்வுடன் போகும்போது
4.அதை “ஜீவனற்றதாக…” ஆக்கிவிடுகின்றது.

அந்த உணர்வின் இயக்கத்தின் தன்மை வளர்ச்சி அற்ற நிலையானாலும் கெமிக்கல் கலந்த நிலையாக (செயற்கையாக) மாறி அந்த உணர்வின் சக்தியினுடைய நிலைகலைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றிக் கொள்கின்றது.

பரப்பிய அலைகளைக் கவருவதற்காக ஒரு ஆன்டென்னாவை (ANTENNA) வைத்திருப்பார்கள். அது எந்தப் பக்கம் ஒலி/ஒளி பரப்பு செய்கிறார்களோ அந்தத் திசைப் பக்கம் அதைத் திருப்பினவுடனே அந்த ஸ்டேஷன் வருகின்றது.

சென்னையோ திருச்சியோ டெல்லியோ அல்லது மற்ற எங்கிருந்து ஒலி/ஒளி பரப்பு செய்கிறார்களோ இந்த ஆன்டென்னாவை அதற்கு நேராக வைக்க வேண்டும். அப்போதுதான் அது எடுத்துக் கொடுக்கும். கொஞ்சம் மாறிப் போனதென்றால் என்ன செய்யும்…? ஒன்றும் வராது.

இதே மாதிரித் தான் நம் உடலில் பதிவு செய்த இந்த நிலையை அவர் அமெரிக்காவில் இருக்கின்றார்…! என்று இவர் சொன்னவுடனே
1.இவர் நினைவின் அலைகள் கண்ணில் வந்து
2.ஆன்டென்னாவில் (கண்களில்) பவர் கூட்டும்போது
3.ஆ…! அப்படியா…! என்று இந்த உணர்வை இழுத்து
4.அந்த உணர்வின் அலையை இங்கே இயக்கச் செய்து அவனை “அயோக்கியன்…!” என்று பேச வைக்கின்றது.

அதே உணர்ச்சியின் வேகத்தில் அயோக்கியன் என்று பேசினாலும் இந்த உணர்வின் தன்மை ஏற்கனவே எந்தச் சண்டை முறைகளைச் செய்தார்களோ அந்த உணர்வின் சக்தி உடலில் விளைந்துவிடும்.

இதைத் தடுப்பதற்கு என்ன வைத்திருக்கின்றோம்…?

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி அந்த மெய் ஞானிகள் பெற்ற ஆற்றல்மிக்க உணர்வுகளை இந்த உபதேச வாயிலாக “ஒரு ஸ்டேசனாக (FREQUENCY) உங்களுக்குள் பதியச் செய்கின்றோம்.
1.அதைத் திரும்பத் திரும்ப உபதேசித்து
உங்கள் உடலிலுள்ள எல்லா செல்களிலும் பதிவாக்கி விடுகின்றோம்.

உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் சிரமங்கள் வருகின்றதோ அந்த நேரத்தில் “ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் நினைவைச் செலுத்துங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று கண்களின் நினைவை (ANTENNA) விண்ணிலே நினைவினைச் செலுத்துங்கள்.
1.சப்தரிஷி மண்டலம் துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வின் அலைகள்
2.இப்பொழுது உங்கள் ஈர்ப்புக்குள் வரும்.

உங்கள் உயிரிலே பட்டவுடன் அந்த ஞானிகள் தீமையை நீக்கிய உணர்ச்சிகள் உங்களுக்குள் இயக்கி உங்களுக்குச் சரியான பாதையைக் காட்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடலுக்குள் சேரும் பொழுது ஏற்கனவே உருவான தீமையான உணர்வின் இயக்கங்களை அடக்கி அதை நன்மை செய்யும் ஆக்க பூர்வமான சக்தியாக அதை மாற்றிவிடும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மெய் ஞானிகளின் அருள் ஞானத் தொடர்பை
1.அந்த ஸ்டேசனை உங்களுக்குள் வலுவாக்கிக் கொள்ளுங்கள்.
2.இருந்த இடத்திலிருந்தே எத்தகைய தீமைகளையும் உங்களால் நீக்க முடியும்.
3.மற்றவர்களுக்கும் ஒரு நல்ல வழியைக் காட்ட முடியும்.
4.மெய்ப் பொருள் காண்பீர்கள். மெய் ஒளி பெறுவீர்கள்…!

எமது அருளாசிகள்.