கணவன் மனைவி ஒன்றி வாழ வேண்டியதன் சூட்சமம்

கணவன் மனைவி ஒன்றி வாழ வேண்டியதன் சூட்சமம்

 

மாயவரத்தில் ஒரு டாக்டர் இருக்கின்றார். அவருடைய தாயாருக்கு வயது எண்பது இருக்கும் அவருடைய கணவர் உடலை விட்டுப் பிரிந்து விட்டார்.

அந்தத் தாய் “என் கணவர் என்னுடன் தான் இருக்கின்றார்…” என்ற நிலையிலே அது வாழ்ந்தது. மற்றவர்கள் பொட்டையும் தாலியை நீக்கச் சொல்லி இருக்கிறார்கள்.

என் கணவர் என்னுடன் இருக்கும் பொழுது நீங்கள் ஏன் அதை நீக்கஸ் சொல்கிறீர்கள்…? என்று மற்றவர்கள் சொல்வதை ஏற்காதபடி வீட்டிற்குள்ளேயே அடங்கி இருந்தது…. வெளியே சென்றால் அதையே கேட்கிறார்கள் என்று…!

அந்த அம்மா உபதேச வாயிலாக யாம் வெளிப்படுத்திய புத்தகங்களை இதற்கு முன்னாடி படித்திருக்கின்றார்கள். அதை மனதில் எண்ணிக் கொண்டு
1.இந்த மாதிரி ஒரு சாமி (ஞானகுரு) வருகின்றார்… அவரை நான் பார்க்க வேண்டும்
2.அவரை பார்த்து அவர் என்ன சொல்கிறார் என்ற விளக்கங்களைக் கேட்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இருந்தது.

ஆனால் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

நான் (ஞானகுரு) அவர்களைச் சந்திக்கச் சென்றேன். அப்போது
1.தெரிந்தோ தெரியாமலோ அந்த எண்ணம் (என்னுடன் தான் கணவர் இருக்கிறார்) எனக்கு வந்தது
2.சாஸ்திரங்களைப் பற்றி படிக்கும் பொழுது எனக்கு அந்த உள் உணர்வு ஒன்று தோன்றியது என்று
3.விபரங்களை எல்லாம் அந்த அம்மா சொல்லியது.

கணவனுடன் இணைந்து வாழ்கின்றோம். இருவரும் ஒன்றாகி விட்டால் மனைவி இறந்தால் கணவனும் உடனே இறக்கின்றான்… கணவன் இறந்தால் மனைவி இறந்து விடுகிறாள்…!
1.இப்படி ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்து ஒரே உணர்வோடு சென்றால்
2.அந்த ஆன்மாக்கள் எங்கே செல்கிறது…? என்று இந்த ரகசியத்தை எல்லாம் நான் எடுத்துச் சொன்னேன்.

எனக்கு இந்தச் சக்தி எப்படிக் கிடைத்தது…? என்று அந்த அம்மா என்னிடம் கேட்கின்றது.

உங்களுடைய தாய் கருவிலே நீங்கள் விளையப்படும் பொழுது
1.இந்த உணர்வைப் பற்றி நீங்கள் கேட்டதால் உங்கள் உடலில் விளைந்திருக்கின்றது
2.அந்த உணர்வு தான் உங்களை இயக்குகின்றது என்று விபரத்தைச் சொன்னேன்.

கணவர் என்னுடன் தான் இருக்கின்றார் என்று தான் அறியாதபடியே அவர்கள் எண்ணிச் செயல்பட்டார்கள். ஆனால் சாங்கியம் செய்ய ஒத்துக் கொள்ளவில்லை… சாங்கியம் செய்யவும் விடவில்லை

இருந்தாலும்… உன்னுடைய கணவருடைய ஆன்மா வேறு எங்கேயும் செல்லாதபடி உன் உடலைச் சுற்றிக் கொண்டே இருப்பதே நீ பார்க்கலாம் அம்மா…! என்று சொன்னேன்

அப்போது கணவனின் உணர்வலைகள் தனக்குள் இருந்து அவர் வாழ்ந்த காலத்தில் எப்படி மகிழ்ச்சியாக இருந்ததோ அதை எல்லாம் அந்த அம்மா கண்களில் பார்க்கின்றது.

அந்த மகிழ்ச்சியான நிலையினை அந்தத் தாயும் மகனும் (டாக்டர்) காணுகின்றனர். பின் இன்றைக்குத்தான் இந்த உண்மைகளை நாங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது… உணர முடிந்தது…! என்று என்னிடம் ஆசீர்வாதம் வாங்கினார்கள்

என் தாயின் அருள் கிடைக்க வேண்டும்… என் குடும்பத்திலும் அந்த நிலை கிடைக்க வேண்டும் என்று அந்த உண்மையைத் தெரிந்து கொண்ட பின் டாக்டரும் வேண்டி நிற்கின்றார்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் காலையில் நான்கு மணிக்கு எடுத்து அதை வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த வலுவின் துணை கொண்டு அந்த ஆன்மாவை உந்தி “விண்ணுக்குச் செலுத்துங்கள்…” என்று சொன்னேன்.

அந்த ஆன்மா இவர்கள் உடலுக்குள் செல்லவில்லை வெளியே தான் இருந்தது. உடலைச் சுற்றிக் கொண்டிருப்பதை அந்த உண்மைகளை அவர்கள் உணர்கின்றார்கள்.

யாம் சொன்ன முறைப்படி அவர்கள் செய்த பின் அவர் ஒளிச் சரீரம் பெறுகின்றார்.

ஏனென்றால் முன்னாடி அவர்கள் ஒரு பெரிய சாதுவைச் சந்தித்து இருக்கின்றார்கள். அவர் சில உபதேசங்களைக் கொடுத்திருக்கின்றார். இராமாயணம் மகாபாரதத்தை பற்றிச் சொல்லி இருக்கின்றார்.

ஆனால் சாங்கியங்கள் மட்டும் நீ செய்ய வேண்டாம்…! என்று ஒன்றை மட்டும் சொன்னார்… மற்ற விவரங்களை அவர் சொல்லவில்லை என்று அந்த அம்மா சொல்கிறது.

அவர் சொன்ன முறைப்படி என் கணவர் என்னுடன் தான் இருக்கின்றார் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றேன்.
1.அவர் கட்டிய தாலி என்னுடன் இருந்தாலும்
2.அவருடன் ஒன்றி முழு மாங்கல்யக்காரியாகத்தான் நான் செல்ல வேண்டும் என்ற
3.அந்த எண்ணத்தில் தான் நான் வாழுகின்றேன்… என்று அந்த அம்மா சொன்னது.

ஏனென்றால் இந்த உண்மைகளை அறிந்தும் அறியாதபடி சில இடங்களில் சில நிலைகள் இருக்கின்றது.

குருநாதர் காட்டிய அருள் வழியில் மூன்று லட்சம் பேரை நான் சந்தித்ததில் “எப்படி எல்லாம் இந்த உலகம் இயங்குகின்றது…?” என்பதைக் கண்டுணர முடிந்த்து.

ஆகவே… மனிதரான பின் இனி நமக்கு என்ன இருக்கின்றது…?

1.இந்த உடலுக்குப் பின் நான் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று உறுதியை வைத்து விட்டால்
2.நாம் நிச்சயம் அந்த எல்லை அடைகின்றோம்…!

அதை அடைவதற்கு தான் இந்த உபதேசம்…!

ஒரு நொடிக்குள் ஏற்படப் போகும் மாற்றம்…

ஒரு நொடிக்குள் ஏற்படப் போகும் மாற்றம்…

 

விஞ்ஞான உலகில் வாழும் அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு மெய் ஞான வாழ்க்கையை நாம் தொடர்தல் வேண்டும்.

விஞ்ஞான வாழ்க்கையில் வரும் கடுமையான விஷத்தன்மைகளால் சூரியனின் இயக்கச்சக்தி எத்தனையோ மாற்றங்களைச் சந்தித்து வருகிறது.

1.வெயிலின் அழுத்தம் கடுமையாக… இன்று எப்படிச் சுட்டெரிக்கும் வெயிலாக வருகின்றதோ
2.சூரியனின் இயக்கம் ஒரு நொடிக்குள் கரண்ட்டை அதிகமாக உற்பத்தி செய்யும் நிலையாக
3.பூமிக்குள் நிலநடுக்கம் ஏற்படுவது போல் மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகள் சூரியனை அணுகும் நிலையாகி விட்டது.

ஒரு எலக்ட்ரிக் வயருடன் இன்னொரு எலக்ட்ரிக் வயர் உராய்ந்தால் அதிகமான மின்சாரம் பாய்ந்து பல்புகள் ஃப்யூஸ் ஆவது போல
1.ஒரு நொடிக்குள் சூரியனுக்குள் தாக்குதல் அதிகமாகி அதிகமான காந்தப்புலன்களை அது உமிழ்த்தி
2.அந்த உணர்வுகள் மனித உயிருக்குள் உராயப்பட்டு அதனின் உணர்வின் தொடராக அதிகமான உணர்ச்சிகளைத் தூண்டி
3.நம் உடலில் உள்ள அணுக்களில் கடுமையான மாற்றங்கள் மாற்றப்பட்டு
4.மனிதனே மனிதனல்லாத நிலைகள் செயல்படுத்தும் உணர்ச்சிகளைத் தூண்டி மனிதனைத் தாக்கிடும் நிலையாக வரும்.

ஒரு நொடி மாற்றத்தின் நிகழ்வுகளிலிருந்து உங்களைக் காக்கவும் உங்கள் சார்புடையவரைக் காக்கவும் இந்த உலகைக் காக்கவும் அருள் ஒளியின் உணர்வை தினமும் காலை துருவ தியானத்தில் கணவனும் மனைவியும் எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் நமக்கு உறுதுணையாக இருக்க
2.”நாம் அனைவரும் ஒன்று…” என்ற நிலைகளில் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற
3.எங்கிருந்தாலும் துருவ தியானத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தியானித்துப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் அழுத்தத்தை நாம் அதிகமாகக் கூட்டி அதை அடர்த்தியாக உலகெங்கிலும் பரவச் செய்து உலக மக்களையும் காக்க முடியும்… அவர்களையும் நாம் நல்லவர்களாக்க முடியும்.

உலக மக்களின் தீமையான உணர்வுகள் நமக்குள் இருந்தாலும் பகைமையான உணர்வை வளர்க்கும் தன்மையிலிருந்து நம்மை மீட்டிக் கொள்ள முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நமக்கு அருளிய அருள் வழிப்படி இந்த வாழ்க்கையில் வரும் பகைமைகளை மாற்றி நஞ்சினை வென்று… நஞ்சினை வென்றிடும் அருள் உணர்வின் தன்மையை நமக்குள் உருவாக்கிடல் வேண்டும்.

நம் ஆறாவது அறிவைக் கார்த்திகேயா என்றாலும்… தீமைகள் புகாது சேனாதிபதியாக அருள் ஒளியின் உணர்வை எடுத்துத் தீமைகளைத் தடுத்து நிறுத்தி அதனுடைய செயலாக்கங்களை மாற்றிடல் வேண்டும்.

ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி மெய் உணர்வின் வழிப்படி நாம் வாழ்ந்தோமென்றால் அடுத்து நமக்குப் பிறவி இல்லை. அதை அடைவது தான் மனிதனுடைய கடைசி எல்லை.

1.உயிர் தோன்றி உணர்வின் தன்மை மனிதனாக உருவாக்கிய நிலைகளில்
2.உயிருடன் ஒன்றிய உணர்வின் அறிவாக ஒளியாக மாறுதல் நாம் வேண்டும்.

எத்தகைய அழுக்குப் பட்டாலும் உடலை நாம் தூய்மைப்படுத்துகின்றோம். இந்த உடலிலே ஒரு திரவகமே பட்டு அதனால் தசைகள் வெந்தாலும் நாம் மருந்தைப் போட்டு அதை ஆற்றத் தொடங்குகிறோம்.

இதைப் போன்று
1.கடும் வேதனையான உணர்வுகளை நுகர்ந்தாலும் “அருள் மகரிஷிகள் உணர்வுகளை வைத்து அதை நீக்கிடல் வேண்டும்…”
2.இதுவே வாழ்க்கை என்ற நிலையில் அருள் வாழ்க்கை வாழ்வோம்
3.அருள் ஆற்றலை நாம் பெறுவோம்… அருள் ஆசையுடன் வாழ்வோம்.

இதைப் பேராசை என்று கூடச் சொல்லலாம்…!

அருள் வாழ்க்கை வாழ வேண்டும் என்ற இந்த ஆசை என்றுமே நமக்குள் நிலையானதாக இருக்க வேண்டும். அதன் வழி வளர்ச்சி அடைந்தால் “உடல்” என்ற ஆசையிலிருந்து விடுபடுகின்றோம்.

ஆனால் உடலுக்காக வாழும் போது “எண்ணியபடி நடக்கவில்லை…!” என்று நம்முடைய ஆசைகள் தடைபடும் பொழுது இது பேராசையாக மாறுகின்றது.
1.முதலில் ஒரு பத்தாயிரம் ரூபாய் இருந்தால் போதும் என்று நினைப்போம்
2.அது வந்த பின் அடுத்து ஒரு லட்சம் கிடைத்தால் போதும் என்று நினைப்போம்.
3.முதலில் ஒரு சிறிய வீட்டைக் கட்டி இருப்போம்
4.அடுத்து இதைக் காட்டிலும் விசாலமான வீட்டைக் கட்டினால் நலமாக இருக்கும் என்று ஆசையைக் கூட்டிக் கொண்டே இருப்போம்.
5.சிறிது தடைப்பட்டாலோ வேதனைகள் கூடிவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

ஆகவே இருளை அகற்றிடும் அருள் சக்தியைப் பெறுவோம்… மெய் ஞானிகளுடன் ஒன்றி வாழ்வோம்… மெய் ஞான வாழ்க்கை வாழ்வோம்

உயிருடன் ஒன்றி நாம் வாழ்வோம்… என்றும் பேரின்பம் பெறுவோம்… பெரு வாழ்க்கை வாழ்வோம். பிறவி இல்லா நிலை அடைவோம்… அருள் ஒளியாக என்றுமே நிலை கொள்வோம்.

1.சூரியனே அழிந்தாலும் அகண்ட அண்டத்தில் என்றுமே நாம் என்றும் பதினாறு என்ற நிலைகளில் ஏகாந்தமாக வாழலாம்
2.வைகுண்ட ஏகாதசி வைகுண்டம் என்றால் அகண்ட அண்டத்திலும் ஏகாந்த வாழ்க்கை வாழக்கூடிய தன்மை.

பகைமை உணர்வுகள் நமக்குள் வளராது அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற வாழ்க்கையை வாழத் தொடங்கினால் இதுவே வைகுண்ட ஏகாதசி…! என்றும் பகைமைகள் புகாத நிலையாக வருகின்றது.

ஆனால் விஷத்தின் தன்மை அதிகரித்து விட்டால் புவியின் ஈர்ப்புக்குள் நம்மைச் சிக்க வைத்துவிடும். இதிலிருந்து நாம் மீண்டு அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்வோம்… ஏகாந்த நிலை பெறுவோம்.

பேரின்பம் பெறுவோம்… ஏகாந்த நிலை பெறுவோம்…! என்று பிரார்த்தித்து நிறைவு செய்கின்றேன் (ஞானகுரு).

நடந்ததை நினைத்து வேதனைப்படுவதும்… நடக்கப் போவதாகக் கனவு காணுவதும் நமக்குகந்ததல்ல…!

நடந்ததை நினைத்து வேதனைப்படுவதும்… நடக்கப் போவதாகக் கனவு காணுவதும் நமக்குகந்ததல்ல…!

 

சிறு சிறு மழைத் துளிகள் தான் பெரும் வெள்ளமாகச் செல்கிறது. நாற்று நட்டுப் பயிர் செய்து.. அந்தப் பயிரை விளைய வைத்து… அதை எடுத்து வந்து நாம் சமைத்துப் பக்குவப்படுத்திய பின் தான்… நாம் உணவை உட்கொள்ள முடிகின்றது.

அதே போல் தான் இந்தத் தியான முறையிலும் நம்மை நாம் சிறுகச் சிறுகப் பக்குவ நிலைக்குப் பதப்படுத்தித்தான் அந்த நிலைக்கு நாம் வழியமைத்து வந்திட முடியும்.
1.அவசரப்பட்டும்…
2.இருக்கும் நிலையில் கசப்புடனும்…
3.ஆவல் நிலையில் ஆசைப்பட்டும் வருவதல்ல தியான நிலை.

மெய் ஞானத்தைப் பெறும் தியான நிலையின் பக்குவம் என்ன…?
1.தன் வாழ்க்கையுடன் ஒன்றி உயர்ந்து
2.சிறு சிறு நிலைக்கும் நம் எண்ணத்தையும் செயலையும் பக்குவப்படுத்தி
3.நம் உடலிலுள்ள அணுக்களை எல்லாம் நம் நிலைக்குச் செயல்படும் தன்மைக்குக் கொண்டு வந்து
4.நாம் என்ற நிலையையே… இந்த உடல் என்னும் கூட்டை நாம் மறக்கும் நிலை கொண்டு
5.நம்மை நாம் பரிபக்குவப்படுத்தி நம்முள் இருக்கும் அந்த ஆத்மாவை நாம் கண்டு
6.அருள் வழியில் நாம் இதை இயக்கும் தன்மையைப் பெற்று
7.அந்த ஆத்மாவின் நிலை கொண்டு பெரும் உன்னத சக்தியை நாம் ஈர்த்து எடுக்கலாம்.

இந்த உலகம் சுழலும் சுழற்சி நிலையில் நம் ஆன்மாவிற்கு விண்ணிலிருந்து வந்து கொண்டிருக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளை நேரடியாக ஈர்க்கும் நிலையை ஏற்படுத்திக் கொண்டு அதிலிருந்து நம் நிலையை நாம் ஞான நிலைக்கும் ரிஷியின் நிலைக்கும் உயர்த்திக் கொள்ள முடியும்.

1.நடந்தவைகளை நினைப்பதுவும்
2.நடக்கப் போவனவற்றைக் கனவு காண்பதுவும்
3.ஞான நிலைக்கும் ரிஷி நிலைக்கும் உகந்ததல்ல,
4.நேற்று… இன்று… நாளை… என்ற பாகுபாடில்லாத பகலும்… இரவும்… பிரித்து எண்ணாமல் தியான நிலையைப் பெற்றிடலாம்.

வெறும் பாட நிலையிலிருந்தோ போதனை நிலையிலிருந்தோ தன்னுள் அச்சக்தியின் அருளை ஒவ்வொருவரும் ஈர்த்து எடுத்திட முடியாது.

பாட நிலையும் போதனை முறையும் நமக்கு வழி காட்டி நிலை தான். வழி அறிந்து செயல்படுவது “நம்முடைய செயலினால் தான்…!” இந்த நிலையை ஒவ்வொருவரும் ஏற்றுக் கொண்டு ஒவ்வொருவரும்
1.தன் நிலையில் ஜெப நிலை என்றால் என்ன…?
2.அத் தெய்வத்தின் சக்தியின் அருளை நாம் எப்படி ஈர்த்து எடுத்திட முடியும்…? என்றுணர்ந்து
3.தன் தன் நிலையில் நடந்தவற்றை மறந்து
4.நடக்கப் போவதை எண்ணிடாமல் இன்று இருக்கும் நிலையில் எண்ணம் கொண்டே ஜெபித்திடுங்கள்.

செல்வம் தேடக் கோடிக்கணக்கான சிந்தனைகளைச் செலுத்தினாலும் தனக்குள் வரும் பகைமைகளை நிர்வகிக்கும் திறன் இருக்கின்றதா…?

செல்வம் தேடக் கோடிக்கணக்கான சிந்தனைகளைச் செலுத்தினாலும் தனக்குள் வரும் பகைமைகளை நிர்வகிக்கும் திறன் இருக்கின்றதா…?

 

வாழ்க்கை என்ற நிலைகளில் செயல்படும் போது “ஒரு எஞ்சினியர்” அவர் கண்டுபிடித்த கருவியை உருவாக்குவதில் கால தாமதமானால் வேதனை என்ற உணர்வு அவருக்குள் அதிகமாகிறது.

இப்படி வேதனையை உருவாக்கி விட்டால் பின் அதனுடைய நிலைகள் ஆன பின் அந்த இயந்திரத்தைச் சீராகப் பயன்படுத்த முடியாது.

காரணம்… வேதனை என்று வரப்படும் பொழுது சிந்திக்கும் தன்மை இழந்தால் அருகில் இருக்கும் தன்னுடைய சிஷ்யனை (தன்னிடம் வேலை செய்பவனை) கோபித்துப் பேசுவான்.

அவன் சொன்னபடி சரிவர செய்யவில்லை என்றால்… சரியான பதில் சொல்லவில்லை என்றால் “போடா அறிவு கெட்டவனே… ஏன்டா இப்படிச் செய்கின்றாய்…?” என்று சீறிப்பாயும் தன்மை தான் வரும்.

ஏனென்றால்…
1.மனிதன் தான் நுகர்ந்த உணர்வின் இயக்கங்கள் – உயிருடன் ஒன்றி உணர்வின் பொறிகள் இயக்கி
2.அந்த உணர்வு எப்படி இயக்குகின்றது…? என்பதனை நமது குருநாதர் தெளிவாக எடுத்து என்னிடம் கூறினார்.

மனிதனின் வாழ்க்கையில் ஆசையுடன் தான் வாழ்கின்றோம். அந்த ஆசை நிராசையாக எப்படி மாறுகின்றது…? நிராசையாக மாறும் பொழுது மனித உணர்வுகள் எப்படி மாறுகின்றது…?

வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது நோய் என்ற நிலைகள் வருகின்றது. பல துறைகளைக் கற்றுணர்ந்த டாக்டர்களும் இந்த உடலை விட்டு அதனால் தான் மடிகின்றார்கள். வேதனை என்ற உணர்வு கொண்டு மீண்டும் மனிதன் அல்லாத நிலையைத் தான் பெறுகின்றார்கள்.

1.செல்வத்தைத் தேடக் கோடிக்கணக்கான சிந்தனைகளைச் செலுத்தி நிர்வாகத்தை நடத்தும் திறன் வந்தாலும்
2.இந்த உடலுக்குள் இருக்கும் பகைமையான உணர்வுகளை நிர்வகிக்கும் தன்மை எவருக்கும் இல்லை.

அப்படி நிர்வகிக்கும் அந்தத் திறனைப் பெற
1.அனைத்தையும் ஒளியின் உணர்வாக மாற்றிடும் அந்த மெய் ஞானியின் உணர்வை
2.எவர் ஒருவர் இங்கே தேடிக் கொள்கின்றனரோ அவரே அதனைப் பெற முடியும்.

ஆகவே… அந்த அருள் ஞானத்தின் உணர்வின் தன்மையை நாம் நமக்குள் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.

விஞ்ஞானத்தின் அறிவு வந்தால் அது இந்த உடலின் இச்சைக்கே வருகின்றது. ஆனால் மெய் ஞானத்தினுடைய அறிவால் ஒவ்வொரு அணுவின் இயக்கங்களையும் அறிய முடிகின்றது.

அருள் உணர்வின் தன்மை கொண்டு மெய் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்து நமக்குள் உருவாக்கி விட்டால் தீமைகளை அகற்றிடும் அரும் பெரும் சக்தியாக நமக்குள் வருகின்றது.

உதாரணமாக குறும்புத்தனம் செய்வோரை உற்றுப் பார்த்த பின் அந்த குறும்புத்தனத்தை உருவாக்கும் அணுவாக நம் உடலில் விளைய ஆரம்பிக்கிறது.
1.அவனை நினைக்கும் போதெல்லாம் இந்த உணர்ச்சிகள் தூண்டும்
2.நம்மை அறியாமலே அந்த உணர்வுகள் இயக்கப்பட்டு நாமும் குறும்புத்தனம் செய்வோம்… பார்க்கலாம்…!

அது நமக்குள் உருப் பெறாதபடி தடுக்க வேண்டுமல்லவா…!

ஏனென்றால் தவறு செய்கின்றான் என்று தெரிந்து கொள்ள முடிகின்றது. அது கார்த்திகேயா. கார்த்திகேயா என்றால் ஆறாவது அறிவு… நம்மைக் காத்திடும் சேனாதிபதி.

ஆகவே… தீமையான உணர்வு நமக்குள் வராதபடி தடுக்க வேண்டும் என்றால் சேனாதிபதிக்கு வலு எப்படி கொடுக்க வேண்டும்…?

நஞ்சினை வென்ற அகஸ்தியன் துருவனாகி… துருவ மகரிஷியாக உள்ளான்.
1.அவனின் உணர்வை அடுத்த கணமே இணைத்து நம் வாழ்க்கையில் வரும் தீமைகளை அடக்குதல் வேண்டும்.
2.அந்தத் தீமைகள் உள்புகாதபடி நம் வழிக்கு அது வசப்படும்படி செய்தல் வேண்டும்.

நாம் எடுக்கும் ஞானத்தின் வழிகளில் அருள் ஒளியின் உணர்வைத் தன்னுடன் இணைத்து தீமைகளை அடங்கச் செய்ய வேண்டும். அது தான் அங்குசபாசவா…!

தீமையான உணர்வை நாம் நுகர்ந்தாலும் அருள் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து… இதை வைத்து அதை அடக்கி நமக்குள் செயலாற்றும் தன்மை பெற வேண்டும் என்பதற்காக
1.சிறு கல்லைக் காட்டி (ஆலயத்தில் காட்டப்பட்டுள்ள தெய்வச் சிலை)
2.அடுத்து உன் வாழ்க்கையை நீ எப்படி அமைக்க வேண்டும்…?
3.இந்த உடலை விட்டுச் சென்றால் நீ என்ன ஆவாய்…? என்ற நிலையைத் தெளிவாகக் கூறியுள்ளான் அருள் ஞானி.

இயற்கையின் உண்மை நிலைகள் எப்படி மாறுகின்றது…? என்பதை உணர்ந்த மெய் ஞானிகள்… உருவாக்கும் திறன் பெற்ற ஆறாவது அறிவால் நாம் எப்படிச் சீராகச் செயல்பட வேண்டும் என்று காட்டியுள்ளார்கள்.

சொல்வது நன்றாக அர்த்தம் ஆகிறது அல்லவா.

படிப்பறிவினால் சம்பாரித்து உடலை வளர்க்கலாம்… அருள் ஞானத்தைப் பெற்றால் உயிரான்மாவை வளர்க்கலாம்

படிப்பறிவினால் சம்பாரித்து உடலை வளர்க்கலாம்… அருள் ஞானத்தைப் பெற்றால் உயிரான்மாவை வளர்க்கலாம்

 

பிறந்தோம்… வளர்ந்தோம்… வாழ்ந்தோம்… மடிந்தோம்…! என்ற சாதாரண நிலையில் மிருகங்களின் வாழ்க்கை நிலை போலத் தான் “நம் எண்ணத்தின் சக்தியை…” நாம் எண்ணிப் பார்க்காமல் வாழ்கின்றோம்.

1.இந்த எண்ணம்…
2.இந்தச் சக்தி…
3.உடல் என்னும் கூட்டில் ஆத்மா உள்ள வரை “செயல்படும் தன்மை…!”
4.உடலை விட்டுப் பிரிந்த பின்னாடி ஆவி உலகத்தில் அறிந்திட முடியாது.
5.தன் அறிவைப் பெருக்கிக் கொள்ள ஆவி உலகில் உள்ள ஆத்மாவினால் முடிந்திடாது. (இது மிகவும் முக்கியம்)

பல ஜென்மங்களில் நாம் எடுத்த எண்ணங்களும் செயல்களும்தான் இந்த உடலை விட்டுச் சென்ற அந்த ஆவிகளால் அறிந்து கொள்ள முடியும்.

உடலில் உள்ள பொழுது எந்தெந்த நிலையை அந்த ஆத்மா பெற்றதோ… எந்த நிலை கொண்ட அறிவாற்றல் அந்த ஆன்மாவிலே இருந்ததோ… அதே நிலையில் தான் அந்த ஆத்மா சுற்றிக் கொண்டேயிருக்கும்.

1.இந்த உலகையும்…
2.தான் எந்தெந்த நிலையில் வாழ்ந்ததோ அந்த நிலை கொண்ட மனிதர்களையும்…
3.அதே நிலை கொண்ட இடத்திலும்தான்.. அந்த ஆன்மா மறு ஜென்மம் பெற்று
4.“தன் தேவையை எப்படிப் பூர்த்தி செய்து கொள்ளலாம்…!” என்ற ஆவலுடன்
5.பல ஆண்டுகள் சுற்றிக் கொண்டே இருக்க முடியும்.

ஆனால் மறு ஜென்மம் பெற்று இன்று இந்த உலகில் வாழ்ந்திடும் உடலுடன் கூடிய ஆத்மாக்கள் எல்லாம் தன் நிலை உணர்ந்து வாழும் நிலையும் ஈர்க்கும் நிலையும் இல்லாமல் பிறரின் நிலை கொண்டே தன் எண்ண சக்தியை விரயமாக்கிக் கொண்டுள்ளார்கள்.

ஏனென்றால் நாம் வாழும் இந்த உலகம்.. மற்ற மண்டலங்கள்… அண்டசராசரங்கள்… எல்லாவற்றையுமே அறிந்து கொள்ள மனிதர்களால் மட்டும் தான் முடிந்திடும்.
1.இன்று ஆத்ம உடலுடன் உள்ள மனிதனால் மட்டும் தான்
2.எல்லா நிலையையும் ஈர்த்து
3.எல்லா உண்மைகளையும் கண்டுணர முடியும்.

அத்தகைய சக்தியைப் பெறும் தகுதி என்பது ஆண்… பெண்… குழந்தைகள்… முதியவர்கள்… என்ற நிலை கொண்டு வயது வரம்பில்லாமல் எல்லோருக்குமே அந்தச் சக்தியுள்ளது. நாம் ஈர்த்து எடுக்கும் நிலை கொண்டு தான் அந்தச் சக்தி நமக்கு உதவுகின்றது.

மின்சாரத்தை உபயோகித்து ஒரு கடுகளவு வெளிச்சத்தையும் அதிதீவிர வெளிச்சத்தையும் உண்டாக்குகின்றோம். அந்தந்தச் சாதனத்திற்குள் எந்த அளவிற்கு மின்சாரத்தைப் பாய்ச்சுகின்றோமோ அந்த நிலையில் நாம் அதனின் ஒளியைப் பெறுகின்றோம். அதைப் போல
1.மனிதனின் சக்தி என்பது
2.அந்த மின்சாரத்தின் சக்தியைவிட அதிவிரைவு கொண்ட சக்தியாக உள்ளது.
3.ஆனால் இன்றைய மனிதர்கள் தன் சக்தியைத் தானே உணர்ந்து எடுக்கும் நிலை இல்லை.

படிப்பு என்ற நிலையில் பல நூல்களையும் பல கல்வி ஸ்தாபனங்களுக்குச் சென்று படிப்பதுவும் தன் அறிவை மென்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இருந்தாலும் அறிவு வளர வேண்டும்…
1.தன் எண்ணத்தில் வீரிய சக்தி பெற வேண்டும்
2.தன் நிலையில் பல உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற
3.இப்படிப்பட்ட எண்ணத்தில் படிப்பை வளர்த்துக் கொள்பவர்கள் மிகவும் குறைவு.

படிப்பதனால் தன் வாழ்க்கை நிலைக்குகந்த செல்வம் பெற்றுச் செல்வச் செழிப்புடன் வாழலாம்.
1.உயர்ந்த உத்தியோகம் கிடைக்கும்
2.உன்னத நிலை பெற்று புகழ்ந்த நிலையில் வாழலாம் என்ற
3.இந்த ஆசாபாசத்துடன் தான் இன்றைய பாட நிலையும் படிக்கும் நிலையும்
4.கல்வி கற்பவருக்கும்… கல்வி புகட்டுபவருக்குமே… உள்ளது.

அப்படி வாழ்ந்திடாமல் அச்சக்தியின் அருளை ஏற்று வாழும் வாழ்க்கையைப் பெற்று வாழ்ந்திடுங்கள்.

இந்த உடல் என்னும் கூட்டை… ஆத்மாவின் நிலை கொண்டு… நம் எண்ணம் என்ற செயலினால்…! இந்த உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களை ஆற்றல் மிக்கதாக ஆக்கி
1.இந்த உலகம் அனைத்திலும் உள்ள சக்தியைக் கண்டறியும் ஆற்றலும்
2.இந்த உடலையே நாம் பறக்கும் நிலைப்படுத்திடவும்
3.எந்த நிலைக்கும் இந்த உடலை நாம் ஈர்த்து அச்சக்தியின் அருளைப் பெற்று
4.இந்த உலகில் உள்ள மக்களுக்குப் பல உண்மைகளை உணர்த்திட முடியும்.

உங்களை நீங்கள் நம்புங்கள்…!

நான் (ஞானகுரு) கற்றறிந்தேன்… பேசுகின்றேன்… நீங்கள் என்றைக்குத் தயாராகுவது…!

நான் (ஞானகுரு) கற்றறிந்தேன்… பேசுகின்றேன்… நீங்கள் என்றைக்குத் தயாராகுவது…!

 

மனிதனாக வாழும் பொழுதே கணவன்-மனைவி இருவரும் இங்கே கொடுக்கும் உயர்ந்த சக்திகளை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பார்வை தீமைகளை அகற்றிடும் ஆற்றல்மிக்க சக்தியாக விளைய வேண்டும்.

உலக மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டும்… அருள் ஞானிகள் உணர்வைப் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை
1.உங்கள் உடலிலே வளர்த்துக் கொள்ளுங்கள்
2.இந்த உணர்வலைகளை உலகெங்கிலும் பரப்புங்கள்.

அத்தகைய நிலையை ஏற்படுத்துவதற்குத்தான் திரும்பத் திரும்ப உங்களுக்கு இதை நினைவுபடுத்துகிறேன் (ஞானகுரு).

ஏதோ சாமி சொல்கின்றார்… நாங்கள் கேட்பதற்குத்தான் இருக்கிறோம் என்று எண்ணிவிடாதீர்கள்.

நீங்கள் என்றைக்குத் தயாராகுவது…?

நான் கற்றறிந்தேன்… பேசுகின்றேன். உங்களை வளர்ப்பதற்காக இந்த உணர்வின் தன்மை பதிவாக்குகின்றேன். நீங்கள் தயாராக வேண்டும்…!

1.ஒரு குருவாக இருந்தார்… என்னைத் தயாராக்கினார்.
2.அந்த ஞானத்தின் வழியை எல்லோருக்கும் போதிக்கச் சொன்னார்.
3.நீங்கள் எல்லோரும் நம் குருவின் உணர்வை ஏற்று… குருவாகவே மாற வேண்டும்.

ஒவ்வொருவரும் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை வளர்த்து குரு நமக்கு எந்த வழியைப் போதித்தாரோ அதன் வழியிலே நாம் சென்றோம் என்றால்
1.நாம் அனைவரும் குருவே… குரு வழியில் குருவாகின்றது அதன் வழியே செயல் ஆகின்றது
2.ஆக அருள் ஒளியை நமக்குள் உருவாக்குதல் வேண்டும்
3.அந்த அருளையே நமக்குள் குருவாக்குதல் வேண்டும்
4.அருள் வழியில் இருளை மாற்றிடும் உணர்வை நமக்குள் உருவாக்க வேண்டும்
5.குருவாக… குருவின் நிலைகளில் தீமையை மாற்றிடும் அருள் உணர்வுகளைப் பெறுதல் வேண்டும்.

அதற்குத் தான் இதைச் சொல்வது.

சாதாரண மனித வாழ்க்கையில் வாழ்கின்றோம். இருந்தாலும் இயற்கையின் நிலைகள் கொண்டு அந்த மகரிஷிகளின் உணர்வுகளை… அந்த மெய் ஞானிகளின் உணர்வைக் காலை துருவ தியானத்தில் எடுத்துப் பழகுங்கள்.

அந்த மகரிஷிகள் சென்ற பாதையில் கணவனும் மனைவியும் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை பெறவேண்டும் என்று உங்களுக்குள் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த உணர்வின் அறிவாக வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஒருப் பத்து நிமிடம் எடுத்துக் கொண்டபின் அந்தச் சக்தி என் கணவருக்குப் பெற வேண்டும் என்று ஏங்கி பெறச் செய்யுங்கள் அதே போன்று கணவன் மனைவிக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டுமென்று உணர்வைப் பாய்ச்சுங்கள்.

1.அடுத்தடுத்து உங்களுக்குள் அந்த மெய் உணர்வின் விளக்கங்கள் வர வேண்டும்.
2.நீங்கள் ஒவ்வொருவரும் அருள் ஒளியின் சுடராக மாற வேண்டும்
3.உங்கள் பார்வையால்… உங்கள் சொல்லால் கேட்போர் உணர்வுகளில் இருளை மாய்த்திடும் நிலை பெற வேண்டும்.

உங்கள் பேச்சும் மூச்சும் விஞ்ஞான அறிவில் வரும் பேரழிவுகளில் இருந்து உலகைக் காக்கும் நிலையாக மாறுதல் வேண்டும். குருவின் அருள் நமக்குள் செயல்படுதல் வேண்டும்.

தியானத்தின் மூலம் பெற்ற சக்தியால் உங்கள் சொல்லைக் கேட்கும் பொழுது மற்றவர்கள் பிணிகள் பறந்து ஓடவேண்டும் அருள் உணர்வுகளை அவர்கள் நுகரும் திறனைப் பெறச் செய்தல் வேண்டும்.

அதை அவர்கள் நுகர்ந்தால் அவர்கள் பிணிகள் ஓடுகின்றது. இதனின் தன்மையை அவர்களுக்குள் சேர்த்தால் பல பிணிகளையும் போக்க முடிகின்றது. பிணிகளைப் போக்கும் அந்த நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நோயாகிவிட்டதே…! என்று எண்ணி அதை நுகர்ந்தால் இங்கே அது சாடிவிடுகிறது. நம் நல்ல குணங்களையும் அழித்து விடுகின்றது.

ஆகவே மெய் ஞானிகளின் உணர்வு கொண்டு அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து நாம் விடுபட்டு மெய் ஞான வாழ்க்கைக்குச் செல்லுதல் வேண்டும்.

அஞ்ஞான வாழ்க்கையாக வாழும் இன்றைய உலகில்…
1.மனிதன் சிதைந்திடும்… மனிதனைச் சிதைக்கச் செய்யும் உணர்வுகள் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில்
2.மனிதனையே பூண்டோடு அழித்திடும் சக்திகளும்
3.மனிதனுக்கு மனிதன் அழித்திடும் நிலையை உருவாக்கும் சந்தர்ப்பங்களும்
4.மதம் இனம் மொழி என்ற நிலையில் மொழி பேதங்களும் இனபேதங்களும் மனபேதங்களும் உருவாக்கப்பட்டு
5.நம்முடைய ஆறாவது அறிவின் தன்மையை இருள் சூழச் செய்துவிட்டோம்.

நம் உயிரை மறந்துவிட்டோம்… எங்கேயோ இருக்கின்றான் ஆண்டவன் என்று எண்ணுகின்றோம்… எங்கேயோ இருக்கின்றான் கடவுள் என்று எண்ணுகின்றோம்… எங்கேயோ இருக்கின்றான் ஈசன் என்று எண்ணுகின்றோம்… எங்கேயோ இருக்கின்றான் கர்த்தர் என்று எண்ணுகின்றோம்…!

ஆக மொத்தம் கடவுள் நாம் எண்ணும் உணர்வு எதுவோ அந்த உணர்வைத் தான் உருவாக்கி இயக்குகிறது. இது தான் உயிருடைய வேலை

நமக்குள் இருந்து இயக்கும்
1.அவனை (உயிரான ஈசனை) மறவாது
2.அவனால் உருவாக்கப்பட்ட மனித உடலை அழித்திடாது
3.மனித உடலில் சோர்வை விடாது அருள் உணர்வுகளை வளர்த்துப் பழகுங்கள்.

தீமைகள் வரும்போதெல்லாம் மகரிஷிகளின் அருள் ஆற்றலை உங்கள் இரத்தநாளங்களில் கலக்கச் செய்யுங்கள். தீமை என்று நுகர்ந்தாலும் அறிய அது உதவினாலும் அடுத்தகணம் நமக்குள் உருவாகாதபடி அதை மாற்ற வேண்டும்.

அதற்குத்தான் இந்த உபதேசம்…!

நாம் எண்ணிய எண்ணத்தில் தான்… ஏற்றமும் தாழ்வும் அமைவது…!

நாம் எண்ணிய எண்ணத்தில் தான்… ஏற்றமும் தாழ்வும் அமைவது…!

 

எண்ணக் கடலில் செல்லும் நாம்
எண்ணிய இடத்திற்குச் செல்வதற்கே
எண்ணிய எண்ணத்தில் தான்…
ஏற்றமும் தாழ்வும் அமைவதுவே…!

இந்த உலகம் என்ற மாயையே எண்ணி மயங்கி வாழும் வாழ்க்கை தான் நாம் வாழ்கின்றோம். அப்படிப்பட்ட
1.இந்த உலக வாழ்க்கையிலே நமக்கு எஞ்சி இருப்பது எதுவப்பா…?
2.வாழும் வாழ்க்கையில் மிஞ்சுவது என்னப்பா…?
3.சொத்தையும் சுகத்தையும் ஆள்வது யாரப்பா…?
4.இந்த உலகில் பிறந்து வாழ்ந்து இறந்த பின் நிலைத்து இருப்பது என்னப்பா…?
5.நம் உடலா…? சம்பாரித்த பணமா…? சொத்தா…? சுகமா…?

நாம் இந்த உலகை விட்டுச் செல்லும் பொழுது நம்முடைய மக்கள் (பிள்ளைகள்) இருக்கின்றார்களே…! என்ற எண்ணம் பலருக்குண்டு. ஆனால்
1.நம் பெயர் சொல்ல அந்த மக்கள் எத்தனை காலங்களுக்கு…?
2.அடுத்து அந்தக் குழந்தைகளுக்குக் குழந்தை.. குழந்தைகளுக்குக் குழந்தை…! என்று (பேரன்… கொள்ளுப் பேரன்….!)
3.இப்படிச் சுற்றிக் கொண்டேயுள்ள நிலையிலே நம் பெயர் மறைய எத்தனை காலங்கள்…? என்று இதை எல்லாம் சிந்திக்கின்றோமா…?

நம்முடைய அம்மா…அப்பா… பற்றி சிறிது காலத்திற்கு எண்ணுகிறோம். அவர்கள் அம்மா அப்பா… அதற்கு முன்னாடி வாழ்ந்தவர்கள்…! என்று யாரையாவது நாம் நினைக்கின்றோமா…?

மீறிக் கேட்டால் என்ன சொல்வோம்..? அவர்கள் எல்லாம் போய் விட்டார்கள்… என்று “சாதாரணமாகத்தானே சொல்கிறோம்…!”

அவர்கள் எதையுமே (தன் உடலையோ பொருளையோ) கொண்டு போக முடியவில்லை என்கிற பொழுது நாம் மட்டும் எதைக் கொண்டு போக முடியும்…?

ஆக மொத்தம் பிறப்பு…உடல்…இறப்பு…! மீண்டும் பிறப்பு… உடல்…இறப்பு…! என்று இராட்டினம் மாதிரித் தான் சுற்றிக் கொண்டே இருக்கின்றோம்.

இந்தப் பூமியில் பிறந்த நாம் அனைவரும் பிறவிப் பயன்… பிறவிப் பயன்… என்பதையே புரிந்து வாழ்ந்திடாமல் இருக்கும் வரை (உடலுடன்) அனுபவிக்க வேண்டும் என்று இப்படித்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.

ஆனாலும் நம்மைப் போன்றே பூமியில் தோன்றிய புண்ணியவான்கள் இன்றும் அவர்கள் பெயர்கள் நிலைத்திருக்க வாழும் நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

1.நம்முடைய ஆணிவேரான சுவாச நிலையிலிருந்து
2.நாம் பெறும் பாக்கியங்களை… நாம் பெறும் செல்வங்களை
3.உயிராத்மாவிற்குத் தேவையான அழியாத பொக்கிஷத்தை… அந்தச் செல்வத்தை நாம் புரிந்து வாழ்ந்திட
4.பல நிலைகளை நமக்கு அளித்துச் சென்றவர்கள் தான் புண்ணியவான்களான அந்த ஞானிகளும் மகரிஷிகளும்…!

அவர்கள் ஒவ்வொருவரும் தன்னுடைய நிலையினிலே பல பல ஆற்றல்களையும் சக்திகளையும் பெற்று இன்றும் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் நிலைத்திருக்கவில்லையா…?

அவர்கள் பிறந்த அதே பூமியில் வாழும் நமக்கு நம் நிலை நிலைத்திருக்கப் பல நிலைகளை உணர்த்திச் சென்றுள்ளார்கள்.

அத்தகைய சக்தி (அஷ்டமாசித்து) பெற்றவர்கள் தன் உடலை ஒரு கூடாக வைத்துத்தான் தன் ஆத்மாவை உலகெங்கும் பிற மண்டலங்கள் எங்கும் சென்று வரும் நிலைக்குப் பல அருளைப் பெற்றார்கள்.

இந்த உலகில் கலந்துள்ள அத்தகைய மெய் ஞானிகள் மகரிஷிகளின் நிலையை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
1.நாம் எந்த நிலை கொண்டு எண்ணுகின்றோமோ அந்த நிலைக்கெல்லாம் வந்து உதவி
2.நம் எண்ணத்தையும் செயலையும் நல்லதாக்க
3.நமக்குப் பல நன்மைகளைச் செய்திடப் அப்படிப்பட்ட பல பெரியோர்கள் உள்ள பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

நம் எண்ணமும் செயலும் பல ஆசை கொண்ட சுகபோகங்களுக்குச் சென்றிடாமல் அதற்கு அடிமைப்பட்டு வாழும் நிலையை மாற்றிட வேண்டும். அன்பென்னும் ஆசை தான் நமக்கு வேண்டும்.

ஆகவே
1.அழியாச் செல்வமான நம்முடைய ஆத்மாவை நாம் அழித்தே வாழ்ந்திடாமல்
2.நம் எண்ணத்தையும் நம் சுவாசத்தையும் நம் ஆத்மாவிற்கு அடிமையாக்கி
3.அந்த ஆத்மாவிற்கு அடிபணிந்து வாழ்வதற்கு நம்முள் இருக்கும் உயிரான ஈசனின் சக்தியைக் கொண்டு
4.நமக்கு முன் தோன்றிய பல பெரியோர்களின் ஆசியைப் பெற்று வாழ்வதுவே மனிதனின் வாழ்க்கை.

ஞானிகள் மகரிஷிகளின் அருளாசி பெற்று வாழ்ந்திடுங்கள்…
அன்புடன் வாழ்ந்திடுங்கள்… ஆண்டவனாக வாழ்ந்திடுங்கள்…!

நழுவ விட்டதை மீட்டிட இந்தக் கடைசி உடலிலிருந்தாவது உயிரணுவைச் சமமாக நிலை நிறுத்தி மகரிஷிகளிடம் ஐக்கியப்படுத்துங்களப்பா

நழுவ விட்டதை மீட்டிட இந்தக் கடைசி உடலிலிருந்தாவது உயிரணுவைச் சமமாக நிலை நிறுத்தி மகரிஷிகளிடம் ஐக்கியப்படுத்துங்களப்பா

 

இந்தப் பூமியில் பிறப்பெடுத்த ஒவ்வொரு மனிதருமே சமமான நிலை நிலைக்க வாழும் வாழ்க்கையை வாழ்ந்திடுங்கள். சமமான வாழ்க்கையை ஆண்டவன் நமக்கு ஏன் அருளவில்லை என்று எண்ணிவிடாதீர்கள்.

இந்தப் புண்ணிய பூமியில் பிறந்ததின் நோக்கமே அச்சக்தியின் அருள் பெற்று நமக்குத் தந்த இச்சந்தர்ப்பங்களை எல்லாம் நம் நிலையைச் சமமாக்கி வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.

அதாவது ஒவ்வொரு பிறவி எடுக்கும் பொழுதும்
1.அடுத்த பிறவியிலாவது நம் வாழ்க்கையைச் சமமாக்கி வாழ்ந்திடலாம்
2.சகல தேவரையும் கண்டிடலாம் என்ற பேராவலுக்காகத்தான் பிறப்பு எடுக்கின்றோம்

பிறவி எடுத்திருந்தாலும் நிறைவு பெற்ற சமமான வாழ்க்கையை எடுத்திட முடியாமல் தான் இன்று இந்த உலகில் உள்ள பாமரர்களின் நிலை உள்ளது.

மனிதனாகப் பிறவி எடுத்த நாளிலேயே அடுத்த ஏழு பிறவிக்கு நம் ஆத்மாவை அலைய விட்டிடாமல்
1.ஒரே பிறவியில் தன் நிலை உணர்ந்து சமமான நிலை எய்தி
2.சகல தேவனாக சூட்சம உலகத்தில் சென்று கற்றுணர்ந்த ஞானிகளும்
3.தன் நிலையைத் தெய்வ நிலையாக்கி வாழ்ந்தவர்களும் இன்றும் தெய்வமாக உள்ளார்கள்.

ஆனால் நாம் எடுத்துள்ளோம் இப்படிப் பல பிறவிகளை. இந்தப் பிறவியிலும்… இப்பொழுதும்… இன்றும்… நிறைவு இல்லாமலேயே வாழ்கின்றோம்.

ஆகவே சமமான நிலை நிலைக்க அந்த ஆண்டவனின் அருள் கிட்ட நம்முள் இருக்கும் ஆண்டவனைப் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
1.நான் என்ற நிலையை…
2.நம்மை ஈசன் இயக்குகின்றான் என்ற உண்மையை உணர்ந்திடல் வேண்டும்

இவ்வுலக வாழ்க்கையிலே சலிப்பும் சங்கடமும் மேற்கொள்ளாமல் நம்மை நாம் சமமாக நிலைப்படுத்தி வாழ்ந்திடும் வாழ்க்கையால்தான் அந்த சகல தேவர்களுடன் நாமும் ஒருவராக வாழக்கூடிய தகுதியைப் பெற முடியும். அந்தத் தேவாதி தேவர்களின் நிலையையும் எய்திட முடியும்.

சகல தேவர்கள் என்றால் யார்…? என்ற கேள்விக்குறி எழுந்திட முடியும்.

ஈசன் ஒருவன் தான் சகலத்திலும் கலந்துள்ளவன். அந்த ஈசன் தான் என்னும் பொழுது ”சகல தேவர்கள்” என்று பிரித்துக் கூறும் நிலையில் உள்ளவர்கள் யார்…? என்று நம் மனதிற்கு விடை காண எண்ணிடலாம்.

1.சகல ரூபங்கள் கொண்டு
2.ஒவ்வொரு ரூபத்தின் வடிவினிலும் எண்ணி ஏங்குபவருக்கு
3.ஆண்டவனாக வந்து அருள் புரியும் அந்த ஞான நிலை பெற்ற
4.“மெய் ஞானிகளும்… மகரிஷிகளும் தானப்பா அச் சகல தேவர்கள்…!” (முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள்)

இந்த உலகில் மனிதர்கள் மிருகங்கள் மட்டும் வாழவில்லை. நம்மைச் சுற்றிப் பல கோடி ஆத்மாக்கள் உடலில்லாமல் ஆத்மாவுடன் (ஆவிகள்) இந்தக் காற்று மண்டலத்தில் உள்ளது.

1.உலகில் நடக்கும் நிலைகளை எல்லாம் தெரிந்து கொண்டு தன் நிலைகளுக்கு ஏற்ப உடல்களையும்
2.தன் ஆத்மா வந்து (தான்) பிறந்து வாழ்ந்திடும் நிலைக்காகவும்
3.எந்த உடலில் ஏறினால் அந்த உடலின் மூலமாகத் தான் விட்டுச் சென்ற தன் எண்ணத்தை – நன்மையையோ துவேஷத்தையோ பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்ற நிலை கொண்டும்
4.இப்படித் தன் நிலையை ஈடேற்றிக் கொள்ள இன்று உடலுடன் வாழும் மனிதர்களை
6.உடலில்லா ஆத்மாக்கள் பல கோடி கோடியாகத் தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ளச் சுற்றிக் கொண்டேயுள்ளன.

நாம் நினைக்கின்றோம்…!
நம் எண்ணம்…
நம் உடல்…
நம் ஆன்மா என்று…!
நம் உடலில் நாம் மட்டும் வாழவில்லையப்பா.

(நாம் எண்ணுவதைப் போல் நாம் மட்டும் வாழவில்லை – இது மிகவும் முக்கியமானது)

நம் மன நிலை எந்தெந்த நிலை கொண்டு மாறுகின்றதோ
1.அந்தந்த நிலை கொண்ட ஆவி அணுக்கள் நம் உடலில் வந்து எந்தத் திசையிலும் ஏறிக் கொண்டு
2.நம்மையே ஆட்டிப் படைத்து நம்மை ஆண்டு வாழ்ந்து
3.தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ள நம் உடலை ஒரு கூண்டாக
4.தான் குடியிருக்கும் கூண்டாக வைத்து ஆண்டு வாழ்கிறது.

(உடலில் ஆவிகள் இல்லாத மனிதரே இல்லை என்று சொல்லலாம்)

நம் நிலையைக் கொஞ்சம் போல மாற்றிக் கொண்டாலே (உணர்ச்சி வசப்பட்டாலே) நம் நிலையில் இருந்து வாழ்ந்திடப் பல அணுக்கள் நம்மைச் சுற்றிக் கொண்டுதான் உள்ளன…! என்பதை இப்பொழுதாவது ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளுங்கள்.

இதிலிருந்தெல்லாம் தப்ப வேண்டும் என்றால் நம்முள் அந்த ஆண்டவனின் சக்தி ஒன்றைத்தான் ஈர்த்து வாழ்ந்திட முடியும் என்ற உண்மையை உணர்ந்து பல ஆவி உலக ஆன்மாக்களுக்கு நாம் அடிமையாகாமல் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இது வரை இந்த உலக வாழ்க்கையில் பெற்ற சந்தர்ப்பங்கள் (பல பிறவிகள்) எல்லாவற்றையுமே நழுவ விட்டு விட்டோம்.
1,இந்தக் கடைசி நிலை கொண்ட இந்த மனித உடலிலிருந்தாவது
2.நம் உயிரணுவைச் சமமாக நிலை நிறுத்தி
3.அந்தச் சகல தேவர்களிடம் (மகரிஷிகளிடம்) ஐக்கியப்படுத்துங்களப்பா…!

வாயுப் பிடிப்பு… அல்சர்… இது எல்லாம் வரக் காரணம் என்ன…?

வாயுப் பிடிப்பு… அல்சர்… இது எல்லாம் வரக் காரணம் என்ன…?

 

நாம் நுகரும் உணர்வுகள் (சுவாசிப்பது) அனைத்தும் இரத்த நாளங்களில் தான் செல்கின்றது.

சூரியன் பல விதமான உணர்வுகளைக் கவர்ந்து அலைகளாக மாற்றி பூமியில் எப்படிப் பரவச் செய்கின்றதோ இதைப் போல நாம் எடுக்கும் ஒவ்வொரு உணர்வுகளும் இந்த இரத்த நாளங்களின் வழி கூடித் தான் எல்லா அணுக்களுக்கும் உணவாகப் போய்ச் சேர்கின்றது.

அப்போது உடலுக்குள் ஆங்காங்கு மோதலின் எதிர்நிலை வரப்படும் பொழுது வாயு உண்டாகிறது.

ஒரு வேப்பமரத்தினுடைய உணர்வும் ரோஜாப்பூவினுடைய உணர்வும் இரண்டும் கலந்து வரப்படும் பொழுது
1.வேப்பமரத்தின் மணத்தைக் கண்டு ரோஜாவின் மணம் அஞ்சி ஓடப்படும் பொழுது
2.இதற்கு முன்னாடி இதனுடைய அழுத்தம் தள்ளும் பொழுது ஒரு காற்று வரும்… நறுமணமாக இருக்கும்.
3.அதே போல இதைக் காட்டிலும் வலுவான நிலைகள் (விஷச் செடியின் மணம்) அங்கே இருக்கிறது என்றால் போகாது தடுக்கும்
3.”சுழி…” என்ற காற்றுகள் சுழலும்.

ஒரு எதிர்ப்பான உணர்வின் தன்மை வரப்படும் பொழுது இங்கே காற்று மண்டலத்தில் சுழிகள் எப்படி வருகின்றதோ இதைப் போல நாம் அணுக்களின் நிலைகளில் இரத்த நாளங்களில் செல்லப்படும் பொழுது மோதலின் தன்மை வரப்படும் பொழுது
1.எதிர்மறையான மோதல் வந்து
2.ஏ…வ்வ்வ்வ்…! என்று ஏப்பமாக வருவது இப்படித்தான்.

எதிர்நிலையான அணுக்களின் தன்மையும் அதே சமயத்தில் இந்த உணர்வும் இரத்த நாளங்களில் அதிகமாக ஊடுருவி அது செல்லும் பாகங்களில் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது வாயு அதிகமாக உருவாகின்றது.

அது அதிகமாக உருவாகி அழுத்தங்கள் அதிகமாக்கப்படும் போது நம் உடல் அசர்க்கையாகின்றது (சோர்வு). ஏனென்றால்
1.இந்த அணுக்கள் நுகர்ந்த உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதல் ஆக்கப்படும் பொழுது
2.இதற்குள் ஒன்றை ஒன்று வென்றிடும் உணர்வுகள் வரும்.

சில நேரங்களில் வாயு உபத்திரவம் ஆனால் முக்கியமான பாகங்களில் செல்லப்படும் பொழுது “பளீர்…ர்…” என்று ஒரு மின்னலாகும். நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் இந்த உணர்ச்சியின் தன்மை தூண்டப்படும் பொழுது இந்த உணர்வை நுகர்ந்து நம் இரத்த நாளங்களில் கலக்கின்றது.

அதேபோல ஒவ்வொரு உணர்வுகளும் நமக்குள் மாறிக் கொண்டே இருக்கின்றது.

வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கும் பொழுது நம் இரத்த நாளங்களைச் சோதித்தால் இதில் வித்தியாசமாக இருக்கும்.
1.மறு நாள் காலையில் பார்த்தோம் என்றால் சிவப்பு அணுக்களையே காணோமே…! என்ற நிலை வரும்
2.இதை மாற்றிடும் உணர்வின் தன்மை நுகர்ந்து விட்டால் சிவப்பணுக்களின் நிலைகள் பூராம் இழந்து விடுகின்றது.

ஒரு திரவகத்தை ஊற்றினால் எப்படியோ அது போல் விஷத்தன்மை கொண்ட இத்தகைய நிலைகளும் நொடிக்குள் நம் உடலுக்குள் மாற்றும் நிலை வந்துவிடும்.

நொடிக்குள் மாற்றம் வரப்படும் பொழுது…
1.நமக்குள் வளர்ச்சி பெற்ற அணுக்களுக்கு இதனின் உணர்வின் தன்மை அந்த வலு இல்லை என்றால்
2.அதனுடைய செயலாக்கங்களை இழக்கின்றது… சோர்வடைகின்றது.

உதாரணமாக… காற்று மண்டலத்தில் அனல் காற்று வீசினால் இங்கே தாவரங்கள் எப்படி வளரும்…? அது கருகுகின்றது. அனல் காற்று பூமியில் உள்ள ஈரசத்தை எல்லாம் எடுத்துக் கொண்டால் தாவர இனங்களுக்கு வேண்டிய ஈரம் இல்லை என்றால் மரம் வாடுகின்றது.

இதைப் போன்றுதான் நாம் நுகர்ந்த உணர்வுகள் போர் முறையாகி வெப்பமாகி ஈரச்சத்தை எல்லாம் ஆவியாக்கி விட்டால் உடலுக்குள் அடுத்து வாயு உருவாகிறது.

நம் உடலுக்குள் இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுள்ளது. இதை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

அன்பு கொண்டு நாம் வணங்கும் “அனைத்துமே ஆண்டவன் தான்…”

அன்பு கொண்டு நாம் வணங்கும் “அனைத்துமே ஆண்டவன் தான்…”

 

ஒவ்வொரு ஆத்மாவும் தனக்கு வேண்டிய ஒரே ஆசையான அன்பென்னும் ஆசையைத்தான் நாடி ஏங்கி வாழ்கிறது. எல்லா ஆன்மாக்களுமே அன்பை வேண்டித்தான் இந்த உடலுடன் வாழ்கின்றது.

அந்த அன்பிற்காகத்தான்… …
1.அந்த அன்பு கிடைக்காத நிலையில் சோர்வாகி
2.மன நிறைவைப் பெற்றிடாமல் பல தவறுகளும் பல இன்னல்களும் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் வந்து
3.அந்த மனம் என்னும் அன்பு கொண்ட ஒரே லோகத்தைப் பல லோகங்களாக்கி வாழ்ந்திடுகிறார்கள் மனிதர்கள்.

பரலோகம்.. எமலோகம்… நரகலோகம்… பூலோகம்… சொர்க்கலோகம்… இப்படிப் பல லோகங்களைச் சொல்கிறார்கள்…! அல்லவா. இவைகள் எல்லாம் என்னப்பா…?

மனம் என்னும் அந்த அன்பு லோகத்தை அந்த அன்பையே ஏங்கி அன்புக்காக வாழும் அந்த ஆத்மலோகத்திற்காக நம்மைச் சுற்றியுள்ள பல லோகங்களைத்தான் நாம் அழிக்கின்றோம்.

அன்பு ஒன்றினால் மட்டுமே இந்த உலகை உன்னதமாக ஆக்கிட முடியுமப்பா. ஆகவே எந்த நிலை கொண்டும் இன்று இருக்கும் இந்த விஷமான விஞ்ஞான உலகில்
1.பல இன்னல்களுடன் வாழ்ந்திடும் இம்மனமென்னும் ஆத்மாவிற்கு
2.அன்பென்னும் பொக்கிஷத்தை அவ்வுயிர் ஆத்மாவிற்கு ஊட்டம் தந்தே வாழ்ந்திடுங்கள்.

ஏனென்றால் அன்பினால் தான் நம் உடலும் நம் மனதும் நம் ஆத்மாவும் புத்தொளிர் பெற்று வாழ்கிறது என்ற உண்மையை அறிந்து ஒவ்வொருவரும் அன்பு கொண்டு வாழ்ந்திடுங்கள்.

ஆண்டவனை வணங்கிடும் முறையை நமக்கு முன் வாழ்ந்த முன்னோர்கள் ஏன் உணர்த்தினார்கள்…? என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

1.சஞ்சலக்கூடு நிறைந்த இந்த மனத்தை
2.அன்பு என்னும் நிலையில் தான் அவ்வாத்மாவை அமைதிப்படுத்த முடியும் என்ற நிலைக்காகத்தான்
3.ஆண்டவன் என்னும் ரூபத்தை ஏற்படுத்தினார்கள் முன்னோர்கள்.

மனமென்னும் நிலையைச் சஞ்சல நிலையிலிருந்து மீட்டிட அவ்வாண்டவனைப் பல ரூபத்தில் எண்ணி மகிழ்ந்து நம் ஆண்டவன் என்னும் அன்பு ரூபத்தை நாம் அன்பு கொண்டு வணங்கிட நம் முன்னோர்கள் வழி காட்டி வந்தார்கள்.

ஆண்டவன் என்னும் ரூபத்தில் நம் அன்பை ஒன்றில் மட்டும் செலுத்தி வணங்கிடுவதில்லை…!
1.அன்பு கொண்டு நாம் வணங்குவதெல்லாம் ஆண்டவன் தான்.
2.எல்லா உயிரினங்களிலுமே அந்த ஆண்டவன் உள்ளான்.

உன் அன்பை உயிரினங்களிடம் மட்டுமல்ல…! இந்த வானமும் பூமியும் மரம் செடி கொடி மழை காற்று சூரியன் சந்திரன் நட்சத்திர மண்டலங்கள்
1.இப்படி எந்நிலை கொண்டும்
2.உன் மனமென்னும் அன்பைச் செலுத்தி எண்ணி வணங்கிட்டாலே
3.எந்த ரூபத்திலும் (எல்லா வகையிலுமே) உன் உயிராத்மாவிற்கு நீ சேர்க்கும் உன்னதப் பொக்கிஷம் கிட்டுகின்றது.
4.ஆகவே அந்த அன்பினால் மட்டும் தான் அவ்வுயிராத்மாவிற்குக் குளிர்ந்த நிலையை (மகத்துவத்தை) அளிக்க முடியும்.

இந்த உடல் முழுவதுமே ஒரு நிலை கொண்ட வெப்பத்துடனே உள்ளது. ஆனால் இந்த உடலிலுள்ள நம் உயிரணு மட்டும் தான் குளிர்ந்த நிலையில் உள்ளது.

மனம் என்னும் நிலையை நாம் அமைதிப்படுத்தி அன்புடன் வாழும் பொழுது அவ்வுயிராத்மா ஒரே நிலை கொண்டு அமைதியுடன் அன்பு கொண்ட நிலையில் ஆனந்த நிலையில் உள்ளது.

இம்மனமென்னும் நிலையை
1.நாம் பல நிலை கொண்டு அலைய விடும் பொழுது (மன அழுத்தம் – TENSION, STRESS)
2.இவ்வுடல் நிலையில் ஏற்படும் அதி உஷ்ண நிலையினால்
3.அவ்வுயிராத்மாவிற்குப் பல தீங்குகளைத்தான் நம்மால் சேர்க்க முடிகின்றது.

நம்மில் பல பெரியோர் இந்த அன்பையே நமக்குப் பல வழிகளில் உணர்த்திட அன்றிலிருந்து இன்று வரை போதித்துச் சென்றார்கள்.
1.“அன்பிலார்க்கு இவ்வுலகமே இல்லை…!” என்ற உண்மையை உணர்த்திச் சென்றார்கள்,
2.அன்பே தான் கடவுள்…! என்றார்கள்.

ஆனால் இப்பொழுது வாழ்ந்திடும் மனிதர்களின் குறிக்கோள் எல்லாம் செல்வந்தனாகச் செழித்து வாழ்ந்திட வேண்டும் என்பது தான். அதற்காக “எதை வேண்டும் என்றாலும் செய்யலாம்…!” என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.

அந்த நிலைக்காகத் தன்னைத் தானே.. தன் இனத்தைத் துவேஷிக்கும் நிலையில்
1.தன்னைத்தானே ஏமாற்றி வாழ்கிறான்.
2.அன்பிற்கு மேல் துவேஷத்தினால் தான் இன்றைய உலகமே உள்ளது.
3.இந்த நிலையில் இவ்வுலகில் கலந்துள்ள இக்காற்று மண்டலமே விஷமுடன் உள்ளது.

ஆகவே இனி வாழ்ந்திடும் வாழ் நாள்களை வீண் விரயம் செய்திடாமல் அன்பு கொண்ட வாழ் நாள்களாக வாழ்ந்து அன்பென்னும் பொக்கிஷத்தை ஆண்டு வாழ்ந்திடுங்கள் அன்புடனே.

ஈஸ்வரபட்டனாகிய எனது ஆசிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.