
துருவ நட்சத்திரத்தின் இயல்பு
மனிதனாகப் பிறந்து வளர்ச்சி பெற்று வாழ்ந்து கொண்டிருந்தாலும் பிறிதொரு தீமைகளையோ பகைமை ஊட்டக்கூடிய உணர்வுகளையோ வேதனை உணர்வுகளையோ எடுத்துக் கொண்டால் உடலில் அது விளைந்து “விஷமான அணுக்களாகப் பெருகுகின்றது…”
அதனால் இந்த உடலை விட்டு உயிர் வெளியே சென்று விடுகின்றது.
ஆக இந்த உயிர் எத்தகைய விஷத்தின் தன்மையைச் சேமித்து வைத்ததோ இதைப் போல விஷத்தைக் கொண்டு ஜீரணித்து வாழக்கூடிய உயிரினங்களுக்கு அழைத்துச் சென்று விடும்.
1.மாடு ஆடு யானை எல்லா உயிரினங்களிலும் பார்க்கலாம்… நாமும் சரி பித்தப்பை என்பது கடுமையான விஷம்.
2.பழுவிலிருந்து எல்லா வகையிலும் எடுத்து மனிதனாக வளர்ச்சி பெற்று வந்த நிலையில்
3.அந்தப் பித்தம் சிறிதளவு மனித உடலில் இல்லை என்றால் “ஜீரணிக்கும் சக்தி குறையும்…”
ஒரு சிலர் பித்தப்பையை எடுத்தே வாழ்வார்கள். சேமிக்கும் தன்மை கொண்டு வடிகட்டும் நிலை… அதாவது இரத்தத்திலிருந்து மீண்டும் பித்த சுரப்பிகள் சேமிக்கும் நிலை இல்லை என்றால் அது நம் உடலிலேயே கவர்ந்து கொள்ளும்.
1.ஆனால் பித்தப் பையில் கல் உருவாவதால் தான் அதை நீக்குகிறார்கள்.
2.காரணம் அந்த நஞ்சு உறைந்து கல்லாகிறது.
ஆனால் விஷத்தை அதிகமாக எடுக்கும் பாம்பினங்களுக்கோ அதிலே உறைந்து நாகரத்தினமாக மாறுகிறது. இதே போல் பித்தப்பை உள்ள மற்ற உயிரினங்களிலும் இது போல் விஷத்தின் சேமிப்பு அதிகமானால் அந்தக் கற்கள் வைரக் கல்லாக மாறும்.
பித்தம் அதிகரிக்கும் போது அந்த உணர்வுகளைச் சேமிக்க என்று ஒரு தனிப் பை இருக்கும்.
1.பாம்பினங்களுக்கு வைரக்கல்லாக மாறுகின்றது.
2.அந்த விஷம் ஒடுங்கி ஒளியாக மாறுகின்றது
ஏனென்றால் விஷம் தாக்கித் தான் வெப்பத்தின் தன்மை கொண்டு ஒளியாகின்றது. இது இயற்கையின் நியதிகள். இதைப் போன்று… “விஷத்தின் ஆற்றல்…” மிகச் சக்தி வாய்ந்தது.
இதையெல்லாம் ஏன் சொல்லிக் கொண்டு வருகிறோம் என்றால் புழுவில் இருந்து மனிதனாக நாம் வளர்ச்சி பெற்று வந்த நிலையை இந்த சரித்திரத்தை சிறிதளவாவது இந்த மனித உடலில் ஏற்றுக் கொண்டு அதை நீக்குவதற்குத் தான்…!
ஆக இதையெல்லாம் நீக்கியவன் யார்…?
அகஸ்தியன் என்று பின் கூறும் அந்த ஞானி இந்த நஞ்சை எல்லாம் மாற்றி அமைத்து
1.கணவன் மனைவி இருவரும் ஒன்றாகி அந்த விஷத்தை அடக்கி
2.ஒளியின் சுடராக மாற்றித் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
3.உங்களை அதனுடன் இணைத்துக் கொண்டு வரப்படும் பொழுது
4.“உங்கள் உடலில் உள்ள அணுக்களும்…” நஞ்சினை ஒளியாக மாற்றிடும் உணர்ச்சிகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கொள்ளும்.
குருநாதர் இப்படித்தான் காட்டிற்குள் என்னை அழைத்துச் சென்று எல்லாவற்றையும் சொல்லிக்
1.கடைசியில் துருவ நட்சத்திரத்தின் இயல்புகளைக் கொண்டு வருவார்.
2.அதைத்தான் உங்களுக்கும் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.