நீங்கள் ஒன்றுமே தெரியாதவர்களாக இருப்பினும்… பிறவி இல்லா நிலை அடைய முடியும்

நீங்கள் ஒன்றுமே தெரியாதவர்களாக இருப்பினும்… பிறவி இல்லா நிலை அடைய முடியும்

 

நான் (ஞானகுரு) ஒன்றும் அறியாதவனாக இருக்கப்படும் பொழுது குருநாதர் அருள் உணர்வுகளை எனக்குள் பதிவாக்கினார்.
1.அவர் கூறியதை எல்லாம் உற்று நோக்கினேன்… உணர்வுகளைப் பதிவாக்கினேன்.
2.அந்தப் பதிவினை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது
3.காற்றலைக்குள் இருக்கும் பல தீமைகளை அறியக்கூடிய பக்குவங்களை குரு ஏற்படுத்தினார்.

அந்தப் பக்குவங்களை எல்லாம் நீங்களும் பெறுதல் வேண்டும்…!

ஏனென்றால் நீங்கள் படித்து உணர்ந்து வருவதற்கு முன்
1.உபதேசக் கருத்துக்களை உற்று நோக்கிக் கூர்ந்து கவனித்தால்
2.உங்களுக்குள் அது நுண்ணிய நிலையில் வேலை செய்யும்.

ஒரு கம்ப்யூட்டரில் நாம் பதிவாக்கியதை எல்லாம்… அது சீராக இயக்கிக் காட்டுவது போன்று தான் உங்களுக்குள்ளும் யாம் பதிவாக்குகின்றோம். அதன் வலுக் கொண்டு… நாளை வரும் விஞ்ஞான அறிவால் விஷத்தன்மைகள் தாக்கினால் அதிலிருந்து மாற்றி அமைத்து அதற்குத்தக்க நீங்கள் வாழ முடியும்.

அதனை மாற்றி அமைக்கவில்லை என்றால் விஷத்தன்மைகளாக மாறி விஷப் பூச்சிகளாக ஆகிவிடுவோம். அது போன்று ஆகாதபடி துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் உங்களுடைய நினைவுகளை அழைத்துச் சென்று என்றும் பிறவியில்லா நிலை அடைவது தான் கடைசி நிலை… அதுதான் கல்கி.

இதிலே வீழ்ச்சி அடைந்தால் ஆரம்ப நிலையாகப் புழு பூச்சிகளாக ஆகிவிடுவோம்… அப்போது அது கலியாக மாறுகின்றது.

ஏனென்றால் குருநாதர் இது அனைத்தையும் எனக்குத் தெளிவாக்கினார்.

நினைவினைக் கூட்டி அதை அறிந்து கொள்…! என்று இந்த உணர்வினை எனக்குள் கொடுத்தார்.
1.அவர் பதிவு செய்த நிலை கொண்டு தான் எனது நினைவால் அனைத்தையும் அறிய முடிகின்றது.
2.அறிந்த பின் தீமை நீக்கும் உணர்வுகளை வலுப்பெறச் செய்ய முடிகின்றது.

அதைப்போல உங்களுக்குள்ளும் பதிவு செய்கிறோம். எந்தச் சந்தர்ப்பத்தில் பூமிக்குள் கடும் விஷத்தன்மைகள் பரவினாலும் அந்த விஷத்திற்குள் நீங்கள் சிக்கிடாது
1.உங்கள் நினைவாற்றல் அந்தக் கடைசி நினைவு
2.துருவ நட்சத்திரத்தின் பால் வரட்டும்.

ஒவ்வொரு நொடியிலும் உங்கள் வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுங்கள். தீமைகளை அகற்றுங்கள் அருள் உணர்வைப் பெருக்குங்கள்.

எந்த நிமிடம் உயிர் வெளியே சென்றாலும் இந்த உடலுக்குப் பின் இன்னொரு பிறவி இல்லை என்ற நிலையில் உயிருடன் ஒளியாக மாற்றிய துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் செல்ல வேண்டும்..

குருநாதர் எனக்குள் இதைப் பதித்ததினால் உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றேன் உங்கள் நினைவுகள்…
1.கடைசி நிமிடத்திலேயாவது துருவ நட்சத்திரத்தை எண்ணினால் போதும்.
2.அதன் ஈர்ப்புவட்டத்தில் செல்லலாம்
3.அப்படி எண்ணக்கூடிய வலிமை நீங்கள் பெற வேண்டும்…!

அத்தகைய வலிமையான எண்ணம் (நினைவாற்றல்) வந்தால் அதன் துணை கொண்டு உயிர் உங்களை அங்கே அழைத்துச் செல்லும்… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அமையும்படி செய்யும்.

உந்து விசை

உந்து விசை

 

பிறவா நிலை அடைந்து விண்ணிலே வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் எடுத்தோம் என்றால் மனித வாழ்க்கையில் தடைப்படும் உணர்வுகளை நீக்கிவிட்டு நாம் அடைய வேண்டிய எல்லையைச் சீராகச் சென்றடைய முடியும்.

அப்படிச் சீராகச் செல்ல வேண்டும் என்றால் அடிக்கடி ஆத்ம சுத்தி செய்தல் வேண்டும்.
1.தவறு எங்கிருந்து வந்ததோ தவறை நீக்கித் தன் வாழ்க்கையைச் சீர்படுத்தவும்
2.தவற்றற நிலையைத் தனக்குள் வளர்க்கவும் முடியும்.

அந்தத் தவறற்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றால் மெய் ஞானிகளின் உணர்வைச் சுவாசித்தால் தான் அது முடியும்.

விஞ்ஞானிகள் செலுத்தும் இராக்கெட் விண்ணை நோக்கி எப்படிச் செல்கின்றதோ அதைப் போன்று அந்த மெய் ஞானிகளின் உணர்வின் தன்மை நமக்குள் வளர்க்கப்படும் பொழுது
1.இந்தப் புவி(யில்) வாழும் வாழ்க்கை நம்மை ஈர்க்காது
2.மெய்யான வாழ்க்கையாக வாழும் சப்தரிஷி மண்டலத்திற்கு நம்மைச் செலுத்தும்… இந்த உயிர்…!

மெய் ஞானிகள் உணர்வை நமக்குள் எடுத்துக் கொண்டால் வாழ்க்கையில் வரும் சிக்கலைப் பிளந்து… விண் செல்லும் நிலையாக உடல் பெறும் உணர்வுகளைப் பிரித்துவிடும். உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகும்.

இராக்கெட்டை விண்ணிலே ஏவி அதனின் எல்லையை அடைந்த பின்… உந்தித் தள்ளிய உணர்வின் சத்தைப் பிரித்து (ROCKET STAGES) விடுகின்றது. அதன் பின் அதனுடைய சுழல் வட்டத்திலே செல்கிறது.

அதைப் போன்று இன்று புவியின் ஈர்ப்பிலே இருக்கும் நாம்
1.விண்ணிலே இருக்கும் மகரிஷிகளின் உணர்வுகளைக் கவர்ந்து அந்த உணர்வின் சத்தாக நமக்குள் வளர்த்துக் கொண்ட பின்
2.அதனின் “உந்து விசைகள்” நமக்குள் அதிகமாகும் பொழுது அதனின் ஆற்றல் நமக்குள் அதிகமாகின்றது.
3.அந்த ஆற்றலின் துணை கொண்டு ஒளி வட்டமான சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வைப் பிரித்து விடுகின்றது
4.உயிருடன் ஒன்றி மகரிஷிகளின் சுழல் வட்டத்திற்குள் சென்று உணர்வின் தன்மை ஒளியாகச் சுடர்கின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு விண்ணுலக ஆற்றலை அறிய… ஆற்றல்மிக்க சாதனங்களை உருவாக்கி விண்ணிலிருந்து அதைக் கவர்ந்து இங்கே மண்ணுலகில் அனுப்பப்பட்டு… அதனின் சீர் பாதைகளை எந்திரத்தின் துணை கொண்டு காணுகின்றனர்.

இதைப் போன்று உடல் என்ற இயந்திரத்தின் துணை கொண்டு மெய் ஞானிகளின் உணர்வை இணைக்கச் செய்து
1.வரும் தீமைகளைப் பிளக்கும் உணர்வை நாம் உந்து விசையாக ஆக்கி
2.விண்ணுலகம் செல்ல முடியும்… அதற்குத் தான் ஆத்ம சுத்தி…!

ஒவ்வொரு நொடியிலும்… வாழ்க்கையில் வரும் இடையூறுகளை நீக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று நமக்குள் இதை இணைத்திடல் வேண்டும் (ஆத்ம சுத்தி).

ஆகவே… எந்த ஒரு தடையும் இல்லாது அருள் ஞானிகள் உணர்வுகள் நமக்குள் சேரச் சேர… அங்கே சென்றடைந்த பின்
1.இந்த உடலில் பெற்ற உணர்வின் தன்மையை… அதாவது உடல் பெறும் உணர்வுகளைக் கழற்றி எறிந்துவிடும்.
2.அந்த நிலையைப் பெறுவதற்கு மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியினை நாம் செயல்படுத்துதல் வேண்டும்.

வேகாநிலை போகாப்புனல்

வேகாநிலை போகாப்புனல்

 

மகரிஷிகள் தன்னுள் கண்டுணர்ந்ததும்… தன்னை அறிந்ததும்… பேரண்டத்தையும் தன்னுள்ளே கண்டுணர்ந்து…
1.தனக்குள் கண்டுணர்ந்த உணர்வில் இருள் படர்ந்ததை… இருளை நீக்கி வாழ்க்கையில் பொருளறிந்து செயல்பட்டு
2.உணர்வினை ஒளியாக மாற்றி… உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக இன்றும் நிலை கொண்டுள்ளார்கள்.

அகஸ்தியன் அணுவின் ஆற்றலை அறிந்து ஆற்றல்மிக்க உணர்வினை தன் உடலிலே வளர்த்து உயிருடன் ஒன்றி… துருவ மகரிஷியாக வளர்ந்து… துருவ நட்சத்திரமாக என்றும் 16 என்ற நிலையை அடைந்தான்,

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்பட்ட உணர்வினை எவர் எவர் கவர்ந்தனரோ அவர்கள் அனைவரும் ஆறாவது அறிவினை… ஏழாவது நிலையாகப் பெற்று… சப்தரிஷி மண்டலங்களாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

மனிதனின் உயர்ந்த நிலையாக… பிறவா நிலை என்ற பெருநிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெற்று வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

அவர்கள் கண்டுணர்ந்த உணர்வின் வழி… அவர்கள் சென்ற பாதையில் நாம் சென்றோம் என்றால்…
1.இந்த வாழ்க்கையில் வரும் இருளினை நீக்கி இருளுக்குள் பொருள் கண்டுணர்ந்து
2.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக இந்த வாழ்க்கையில் வாழவும்
3.இருளை நீக்கிடும் உணர்வின் ஆற்றலைத் தன்னுள் வளர்த்திடவும் முடியும்.

மனித வாழ்க்கையில் அதை எவர் பெறுகின்றனரோ அவரே அடுத்த எல்லையாக… இந்த உடலிலிருந்து பிறவா நிலை என்னும் பெருநிலை அடைகின்றனர்.

இதற்குப் பெயர் வேகாநிலை…!

ஆனால் இந்த வாழ்க்கையில் எந்தெந்த ஆசைகளை அதிகமாக வளர்த்துக் கொள்கின்றோமோ… அது சாகாக்கலையாக வளர்ந்து… உடலை விட்டு அகன்றாலும் அந்த (கலையின்) அந்த உணர்வுக்கொப்ப உடலின் அமைப்புகள் அமைகின்றது… மாறுகிறது.

சாகாக்கலை… வேகாநிலை… போகாப்புனல்…! என்று இந்த இருநூறு ஆண்டுகளுக்குள் இராமலிங்க அடிகள் தெளிவாக உணர்த்தியுள்ளார்.

1.மனிதனின் வாழ்க்கையில் தீமைகளை நீக்கிடும் உணர்வின் தன்மையை சாகாக்கலையாக வளர்த்து
2.அருள் மகரிஷிகளின் உணர்வுகளை வலுவாக்கி உயிருடன் ஒன்றிய ஒளியாக வேகாநிலையாக உருவாக்கி
3.இன்னொரு உடலுக்குள் புகாதபடி போகாப்புனலாக விண் செல்ல வேண்டும்…! என்பது தான் அவர் சொன்ன தத்துவம்.

மனிதன் தீயிலே குதித்தால் அந்த உயிர் வேகுவதில்லை… உடல் தான் கருகுகின்றது. ஆகவே உயிரை போன்றே உணர்வுகள் அனைத்தையும் அழியா நிலை பெறச் செய்து… உடலை விட்டு அகன்றால் இன்னொரு உடலுக்குள் செல்லாதபடி பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்பதனைத் தான் அவர் உணர்த்தினார்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு ஓம் ஈஸ்வரா குருதேவா…! என்று உயிரை எண்ணி நாம் சொல்கின்றோம்.
1.நம் உயிரையும்… உயிரின் இயக்கத்தையும்… உயிரால் இயக்கப்பட்டு மனிதனான நிலையும்
2.மனிதனான பின் அடுத்து எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலையைச் சீராக்கிக் கொள்வதே நல்லது.

அதற்குத் தான் இதைச் சொல்கிறோம்.

இறந்தவர்களின் துக்கத்தை விசாரிக்கலாமா…?

இறந்தவர்களின் துக்கத்தை விசாரிக்கலாமா…?

 

எந்த ஒரு சூழ்நிலையிலும்… “ஒருவர் அகால மரணம் அடைந்து விட்டார்…” என்று நீங்கள் கேள்விப்பட்டால்
1.தனித்து நின்று அவர்களை எண்ணி
2.“ஐயோ இறந்து விட்டாரே… உயிர் போய்விட்டதே ஈஸ்வரா…!”
3.மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அவர் போக வேண்டும் என்று “முந்தி விடாதீர்கள்…”

ஏனென்றால் இப்படி எண்ணினால் அந்த ஆன்மா உங்களுக்குள் வந்து விடும்… இதை மறந்து விடாதீர்கள்…!

அதற்குப் பதிலாக… மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
1.முதலில்… இந்த வலுவை நமக்குள் ஏற்றிக் கொள்ள வேண்டும்.
2.அதற்குப்பின் அந்த உயிரான ஈசனின்… ஆன்மாவின் முகப்பிலே சப்தரிஷி மண்டல உணர்வினை இணைத்து…
3.உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து
4.பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று சொல்லி விட வேண்டும்…!

அங்கிருந்து நாம் நகர்ந்து விட வேண்டும்…!

பின் கூட்டுத் தியானத்தில் கலந்து கொண்டு ஐந்து பேர் சேர்ந்து மேலே சொன்னபடி செயல்படுத்துங்கள். அவ்வாறு செயல்படுத்தினால் அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து விடுகிறது.

தனித்த மனிதன் எண்ணி இழுக்கப்படும் போது ஒரு சமயம் ஏமாந்து விட்டால்
1.ஈகையின் நிலைகள் கொண்டு வேதனை கலந்த நிலையில் எண்ணி விட்டால்
2.அந்த ஆன்மா விண் செல்வதற்குப் பதில் நம்முடன் அரவணைத்து விடும்.

ஆகவே கூட்டுத் தியானங்களை அமைத்து ஒரு ஐந்து பேர் சேர்ந்து செய்து ஆன்மாக்களை விண் செலுத்த வேண்டும். ஏனென்றால் மற்றவர்களுடன் இணைந்து வலுப் பெறும் நிலையாக செயல்படுத்தினால் விண் செலுத்த இது உதவுகின்றது.

மறவாது இப்படிச் செயல்படுத்துங்கள்.

1.எங்கே யார் இறந்தாலும் “இப்படி ஆகிவிட்டதே…!” என்ற ஏக்கத்துடன் நுகர்ந்து விடாதீர்கள்
2.ஏனென்றால் அந்த ஆன்மாக்கள் நம் பூமிக்குள் ஈர்க்கும் நிலையே வருகிறது… அல்லது நமக்குள்ளே வந்துவிடும்
3.இதிலே பங்கு விகிதாச்சாரம் எவர் அதிகமாக அவரை எண்ணி ஏங்குகின்றாரோ
4.வேதனை உணர்வு கொண்டு சோகம் அதிகமானால் அதனின் ஈர்ப்புக்குள் சிக்கிவிடுவர்.
5.அதன் வழி தான் அந்த ஆன்மா மறு பிறவிக்கு வருகின்றது.

அது போன்று இல்லாது கூட்டுத் தியானத்தின் மூலம் குடும்பத்தார் அனைவரும் ஒன்று சேர்ந்து… ஆன்மாக்களை இந்த முறைப்படி விண் செலுத்துவதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்

1.பிறிதொரு ஆன்மா ஒவ்வொருவர் உடலிலும் உண்டு
2.ஆன்மா இல்லாத மனிதரே இல்லை
3.எவ்வழியிலும் ஏதாவது ஒன்று நம் உடலில் ஒரு ஆன்மாவது இருந்துதான் தீரும்.

காரணம் மனிதன்… எதன் மீது பற்று கொள்கின்றானோ அதன் துணை கொண்ட உயிரான்மா உடலுக்குள் வந்துவிடும். எந்த மனிதன் தனக்குள் வேதனையை அதிகமாக வளர்த்துக் கொண்டானோ எந்த உடலுக்குள் போனாலும் அதே வேதனையைத் தான் உருவாக்கும்.

இது போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

ஆனால்… ஆன்மாக்களை நீக்குவதற்கு ஜோதிடம் பார்ப்பதோ கோடங்கி அடிப்பதோ… மந்திரங்கள் எந்திரங்கள் செய்வதோ… முற்படாதீர்கள். அது ஒன்றும் வேலை செய்யாது… கெடுதலைத் தான் தரும்.

உங்கள் உடலுக்குள் கடின நிலைகள் கொண்டு ஆன்மா செயல்பட்டாலும்
1.உடலில் ஆட்டிப் படைக்கும் அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
2.எங்கள் உடலில் அமைதி கொண்டு நல் வழி காட்டும் நிலை பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஆன்மா ஒரு உடலில் இப்படி ஆட்டங்கள் ஆடினால் உள்ளிருந்து இயக்குவதை சப்தரிஷி மண்டலங்களுடன் உங்கள் நினைவின் ஆற்றலைச் செலுத்துங்கள்… அதன் வழி அதை அமைதிப்படுத்துங்கள்… தீமைகள் அகன்றுவிடும்

ஏனென்றால் அதனுடைய உடலில் துடித்த சாப வினைகள் தான் அதற்குக் காரணமாகின்றது. அந்தச் சாப வினைகளை நீக்க இதைப் போன்று நாம் அருள் உணர்வுகளை இணைத்து… ஆத்ம சுத்தி செய்து… சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு இந்த எண்ணத்தின் வலுவை உடலில் உள்ள ஆன்மாக்களுக்குப் பாய்ச்சினால் தீமைகள் அகலுகின்றது

ஆகவே குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று
1.எத்தனை முறை சொல்கிறீர்களோ
2.அந்த அளவுக்கு உங்களுக்குப் பலன் கிடைக்கும்.

“விண் செல்லும்… விண் செலுத்தும் ஆற்றலைத் தான்” குருநாதர் நமக்குக் கற்றுக் கொடுக்கின்றார்

“விண் செல்லும்… விண் செலுத்தும் ஆற்றலைத் தான்” குருநாதர் நமக்குக் கற்றுக் கொடுக்கின்றார்

 

கூட்டுத் தியானத்தின் வலு கொண்டு மகரிஷிகளின் ஆற்றலை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கவர்ந்து நம் மூதாதையர்களான குலதெய்வங்களின் உயிரான்மாக்களை விண்ணிலே வீசினால்… அவர்கள் முதலிலே விண் செல்கின்றார்கள்… ஒளியின் சரீரம் பெறுகின்றார்கள்.

“நம்மைக் காத்திட்ட உணர்வுகள்” அவர்களுக்குள் விளைந்தது நமக்குள் உண்டு. அதை நினைவு கொண்டு குலதெய்வங்களின் உணர்வுகளை எளிதில் நாம் பருக முடியும்.

அதனின் உணர்வின் துணை கொண்டு மகரிஷிகளின் சக்தி பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ணினோம் என்றால் இந்த மனித வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி…
1.புவியின் பற்றற்ற நிலைகள் கொண்டு விண்ணின் பற்று கொண்டு
2.உத்தராயணம்… விண்ணிலிருந்து வந்தோம்… ஒளியின் சுடராக ஆனோம் என்ற நிலையாக
3.மகரிஷிகளுடன் நாமும் இணைந்திட முடியும்.

இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்… ஏதோ கதை சொல்கிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம்…! (ஞானகுரு).

இத்தகைய இயற்கையின் நிலைகளைப் பித்தரைப் போன்று இருந்த நமது குருநாதர் எமக்கு உபதேசித்து அருளினார். அந்த அருள் ஞான வித்தை எனக்குள் பதிவு செய்தார். அதிலே விளைந்த உணர்வினைத் தான் இங்கே வெளிப்படுத்துகின்றேன்.

இராமலிங்க அடிகள்… மனிதர்கள் தெய்வமாக வேண்டும் தெய்வ நிலை கொண்டு வேகாநிலை பெற வேண்டும் என்று அவர் பேசினார். அவரைப் போன்று மற்ற மகான்களும் அதைச் சொல்லியுள்ளார்கள்.

ஆனாலும் அவரைப் பின்பற்றியவர்கள் எல்லாம்… தன்னுடைய (மனித) வாழ்க்கைக்காக வேண்டித் தான் அவர்களிடம் தொடர்பு கொண்டிருந்தார்கள். அந்த மகான்களின் ஆன்மாக்களை விண் செலுத்துவோர் இல்லை என்று இருந்தது (அந்தக் காலத்தில்.

குருநாதர் இதை எல்லாம் எமக்குக் காட்டினார்.

1.மண்ணுலகில் உள்ளோர் இன்புற்று இருக்க வேண்டும்
2.அவர்கள் அறியாது வந்த தீமைகள் நீங்க வேண்டும்
3.அவர்கள் உயர்ந்த நிலை பெற வேண்டும்
4.ஞானிகள் உணர்வை அவர்களுக்குள் புகுத்த வேண்டும்
5.பகைமை இல்லா வாழ்க்கை வாழ வேண்டும்… சகோதர உணர்வுடன் வாழ வேண்டும் என்று பாடுபட்ட
6.மகாத்மா காந்தி போன்ற ஏனைய ஞானிகள் அதை உணர்த்தி இருந்தாலும்
7.மக்களின் பால் பற்று கொண்டு வாழ்ந்த நிலையில் உடலை விட்டுச் சென்ற
8.அந்த மகான்களை விண் செலுத்துவார் யாரும் இல்லாது போய்விட்டது

மக்கள் அனைவரும் மகான்களின் அன்பைப் பெற்றனர்… அதனின் துணை கொண்டு தன் வாழ்க்கைக்குத் தான் பெற்றார்கள். ஆன்மாக்களை விண் செலுத்தவில்லை.

இது எல்லாம் காலத்தால் மறைந்த நிலைகள்.

மகான்கள் மக்களுக்காகப் பாடுபட்டார்கள்… பிறர் தீமையில் இருந்து விடுபட வேண்டும் என்று ஐக்கிய உணர்வை ஏற்படுத்தினார்கள். இருந்தாலும்… சூரியன் எவ்வாறு தனக்குள் வருவதை எல்லாம் ஒளியின் சுடராக மாற்றுகின்றதோ… மகரிஷிகள் எவ்வாறு உணர்வினை ஒளியாக மாற்றி விண் சென்றார்களோ அத்தகைய விண் செல்லும் ஆற்றலை மகான்கள் கற்றுணரவில்லை.
1.மக்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்தது.
2.விண் செல்ல வேண்டும் என்று அவர்கள் யாரும் எண்ணவில்லை.

அத்தகைய மகான்கள் உணர்த்திய உணர்வுகளும் நமக்குள் உண்டு.
1.அவர்களை முதலில் நீ விண் செலுத்து என்று
2.குருநாதர் சில உபாயங்களை எனக்குக் கொடுத்து அதைச் செயல்படுத்தும் படி சொன்னார்.
3.அதன்படி விண் செலுத்தினேன்.

முதலில் சொன்னபடி… அந்த மகானுடன் தொடர்பு கொண்டவர்கள் தன் உடலைச் சதம் என்று நோக்கத்திலேயே அவருடன் இருந்தார்கள்… சதமற்ற வாழ்க்கைக்கே ஜீவன் கொடுத்தார்கள்… சதமற்ற வாழ்க்கையே இன்று வாழ்ந்து கொண்டு சதமற்ற நிலையில் புழுவைப் போன்று துடித்துக் கொண்டுள்ளார்கள்.

இதிலிருந்து மக்களை மீட்டிட வேண்டும் என்று குருநாதர் உபதேசித்தார்.

ஆகவே நான் கொடுத்த ஞான வித்தை உனக்குள் வளர்த்து விடு. பிறரைக் காத்திட வேண்டும் என்று செயல்பட்ட மகான்களின் உயிரான்மாக்களை அவருடன் இருந்து “தனித்து நின்று நீ விண் செலுத்து…” என்றார். இப்படி…
1.புவியில் சுழன்று கொண்டிருக்கும் ஆன்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கக் கற்றுக் கொடுத்தார்… குரு எம்முடன் இருந்தே…!
2.அந்த ஆன்மாக்கள் எவ்வாறு விண் செல்கின்றது…?
3.அதற்கு எதனின் உணர்வை உனக்குள் நீ கவர வேண்டும்…?
4.எதனின் வலு கொண்டு விண்ணிலே உந்த வேண்டும்
5.உந்தி விண்ணிலே வீசிய பின் ஞானிகள் அருகே செல்லும்போது உடல் பெறும் உணர்வுகளைக் கருக்கி விட்டு
6.ஒளி பெறும் உணர்வைச் சுவாசித்து ஒளியின் சரீரமாக எவ்வாறு சுழல்கின்றது…? என்ற நிலையை தெளிவாகக் காட்டினார்.

அதே போன்று நம் குடும்பங்களிலும் நம்மை வளர்த்து ஆளாக்கிய தாய் தந்தையர் பாட்டன் பாட்டி என்று இருந்தாலும் அவருடைய சிரமத்தையும் பாராது நமக்கு எத்தனையோ உதவிகளைச் செய்தார்கள்.

அத்தகைய உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களையும் நாம் விண் செலுத்தும் மார்க்கமாக எவ்வாறு செயல்படுத்த வேண்டும்…? என்று குருநாதர் (அவர் உடலுடன் இருக்கப்படும் பொழுதே) நேரடியாகக் காட்டினார்.

நான் இதையெல்லாம் பேசுகிறேன் என்றால் நான் அல்ல… குருநாதர் காட்டிய உணர்வின் தன்மை அவரின் செயலே இங்கே இயங்குகின்றது.

1.அவரில் விளைந்த ஆன்ம ஞானத்தை… மெய் உணர்வின் தன்மையை
2.விண்ணிலே இன்றும் வளர்ந்து கொண்டிருக்கும் அவர் உணர்வுகளைப் பருகும் மார்க்கத்தை
3.எமக்கு எப்படிப் போதித்தாரோ அதை அப்படியே உங்களுக்கும் வழி காட்டுகின்றோம்.

அதன் வழியிலேயே… நீங்களும் உடலை விட்டு பிரிந்த ஆன்மாக்களை விண் செலுத்தப் பழகிக் கொள்ளுங்கள். மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

விண்ணிலிருந்து வந்த நாம்… (வாழ்க்கையின்) “திசையைத் திருப்பி” மீண்டும் விண்ணுக்கே செல்ல வேண்டும்

விண்ணிலிருந்து வந்த நாம்… (வாழ்க்கையின்) “திசையைத் திருப்பி” மீண்டும் விண்ணுக்கே செல்ல வேண்டும்

 

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் பரிணாம வளர்ச்சியாக… அதாவது மகா சிவன்ராத்திரி கண்ணில் புலப்பட்டது… விண்ணுலகில் கற்று உணர்ந்தது
1.அவை அனைத்தும் நமக்குள் சேர்த்துத் “தட்சிணாயனமாக” விளைந்து வருகின்றது
2.உடலின் ஈர்ப்புக்குள் நாம் இருக்கின்றோம் என்ற நிலையையே அவ்வாறு காட்டப்பட்டது.

அதே சமயம் பங்குனி உத்திரம்… உத்தராயணம் என்பது மனிதனின் ஆறாவது அறிவாக…
1.திசை மாற்றி ஒவ்வொன்றையும் இணைத்து
2.திருப்பி வளர்த்துக் கொள்ளும் நிலை பெற்றது.

அதாவது ஆறாவது அறிவின் துணையால் பிறவி இல்லா நிலை அடையும் தன்மை பெற்றது தான் உத்தராயணம் என்பது.

பங்குனி உத்திரம் (உத்தராயணம்) தினத்தை ஆறாவது அறிவான முருகனுக்கு விசேஷமாகக் காட்டினார்கள் ஞானிகள். அதனின் பொருள் என்ன…?

1.மாற்றி அமைக்கும் சக்தி கொண்டு… தன்னுடைய திசையை மாற்றி
2.உடல் பெறும் நிலையை மாற்றி… ஒளி பெற்ற ஞானியின் உணர்வைத் தனக்குள் இணைத்து
3.ஒளியின் சரீரமாக நிலை கொண்டு வாழ்ந்திடும் நிலையாக உருவாக்கப்பட்டது தான் பிரம்மாவைச் சிறை பிடித்தான் (முருகன்) என்பது.

ஒவ்வொரு சரீரத்திலும் எதனை எதனை இணைத்து அது உருபெற்றது என்ற நிலையை மனிதனாக ஆனபின் இவை அனைத்தும் அறிவிக்கும் நிலையாக (ஆறாவது அறிவு முருகன்) உத்தராயணம்.

மனிதனான பின்… தான் திரும்பி… மீண்டும் பிறவிக் கடலில் சிக்காதபடி) ஒளியின் சிகரமாக உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு மகரிஷிகள் விண்ணுலகில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள். அது தான் உத்திரம்…!

பங்குனி உத்திரம் அன்று காவடி ஆட்டம் ஆடி பால் குடம் எடுத்து முருகனுக்கு அபிஷேகம் செய்தால்… இந்த வாழ்க்கைக்கு அவன் செய்து தரப்போவதில்லை.

தீர்த்தங்களை எடுத்து முருகனுக்கு அபிஷேகம் செய்கிறோம் என்றால்…
1.ஞானிகளால் உருவாக்கப்பட்ட தீர்த்தங்கள்… நல்ல உணர்வின் இயக்கங்களாக மகிழச் செய்யும் உணர்வின் தன்மையாக
2.சப்தரிஷிகளின் சக்தி நமக்குள் பெற முடியும்… அதனை நாம் நுகர்ந்து எடுக்க வேண்டும்.
3.மயில் நஞ்சானதை உணவாக எடுத்தாலும் தோகை விரித்து மகிழ்ச்சியாக ஆடுவது போன்று நாம் மகிழ்ந்த நிலை பெற முடியும் (மகிழ்வாகனா).

ஞானிகள் காட்டியது ஆடல் பாடலுடன் மகிழ்ந்திடும் நிலையாக மகரிஷிகளின் உணர்வை எடுத்து மனிதனை உற்சாகப்படுத்தும் நிலைகள் வர வேண்டும். ஆனால் மயிலின் தோகையை வைத்துக் காவடி ஆட்டம் ஆடுவார்கள்… இது வெறும் ஆட்டமே…!

உற்சாகத்தில் மறைந்து உடல் சோர்வடைவதும்… ஆடிய ஆட்டங்களால் கால்களில் தொய்வடையும் பொழுது அதனால் வேதனைகள் வருகிறது.

ஆக… பாலில் இனிப்பையும் பாதாமையும் கலந்து விட்டு அதற்குள் நஞ்சினை இணைப்பது போன்று
1.வேதனையைத் தான் நாம் உருவாக்க முடிகின்றதே தவிர
2.ஞானிகள் உணர்வை நாம் பருகுவதில்லை.

“ஐதீகம்…” என்றும் முருகனுக்காக வேண்டி தன் உடலை இம்சித்துக் கொண்டால்… அதாவது உடலில் ஊசிகளைக் கோர்ப்பதும் கொக்கிகளைக் கோர்ப்பதும் அதை வைத்து முருகனை இழுத்துச் சென்றால் அவன் மெச்சி நல்லது செய்வான்…! என்று வேதனையை உருவாக்கித் திசையை மாற்றித்தான் இன்று நாம் வணங்கிக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் உத்தராயணம் என்பது
1.மனித வாழ்க்கையில் இன்னொரு பிறவிக்கு வருவதைத் திரும்பிப் பார்க்காதபடி
2.உயிரின் துணை கொண்டு அருள் உணர்வுகளை இணைத்து
3.ஆறாவது அறிவின் துணை கொண்டு உயிருடன் ஒன்றிடும் உணர்வை ஒளியாக மாற்றி விண்ணுலகம் செல்வது தான்…!.

எந்த விண்ணிலே தோன்றினோமோ (உயிர்) அது கீழே வரும் பொழுது தட்சிணாயணம்…! சூரியனின் ஈர்ப்பின் தன்மைகள் அதனின் ஓட்டத்தில் ஓடும் இதனுடைய சுழற்சி வட்டத்தில் வருவதை
1.மீண்டும் விண்ணை நோக்கித் திசை திருப்பி
2.அருள் உணர்வின் ஆற்றல் கொண்டு ஒளியின் சரீரமாகி
3.விண்ணுலகில் மிதந்து கொண்டுள்ளார்கள்.

மகரிஷிகள் அவருடைய வாழ்க்கையில் துருவப் பகுதியிந் வழி விண்ணிலிருந்து வரும் தீய உணர்வின் தன்மையை ஒளியாகத் தனக்குள் மாற்றி ஒளியின் சிகரமாகி… பிறவியில்லா நிலையாக… என்றும் பதினாறு என்று உயிருடன் ஒன்றி நிலை கொண்டுள்ளார்கள்.

பூமிக்கு(ள்) வரும் நிலைகள் தட்சிணாயணம்…! அது கவரும் நிலைகளை
1.உத்தராயணம் பகுதியில் இருந்துதான் வட துருவப் பகுதியிலிருந்து தான் இது கவர்கின்றது.
2.ஆறாவது கொண்ட மனிதன் அந்த வட துருவப் பகுதியில் நின்று (உத்தராயணம்) தன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி
3.விண்ணின் ஆற்றலைத் தனக்குள் இணைத்து… விண்ணிலிருந்து வரும் துகள்களைத் தனக்குள் உணவாக எடுத்து நஞ்சினை ஒடுக்கி
4.வைரம் ஒளியின் சிகரமாக (ஜொலிப்பது) இருப்பது போன்று ஒளி நிலை பெற்றவரே அந்த மகரிஷிகள்.
5.சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்த எல்லையை நாமும் அடைதல் வேண்டும்.

விஷத்தையே ஆக்கச் சக்தியாக மாற்றும் “நீலகண்டனாக நாம் ஆகவேண்டும்”

விஷத்தையே ஆக்கச் சக்தியாக மாற்றும் “நீலகண்டனாக நாம் ஆகவேண்டும்”

 

“மெய்யை மெய்யால் உணர்தலும் ஒன்று…
அறிவை அறிவால் அறிதலே நன்று…!

1.கோடாயுதம் கொண்டு மத்தகத்தால் தகர்க்கப்பட
2.மேலாம் அறிவு சித்தித்தது…! என்பது மெய்ப் பொருள் காணும் நிலை.

வழி வழியாக வந்த இந்தத் தத்துவங்கள் அனைத்தும் “குருவால் உபதேசிக்கப்பட வேண்டும்…!” என்று மறைபொருள் ஆக்கப்பட்டுவிட்டது. குரு என்பவன் மெய்ப் பொருளின் உண்மையை நாடிக் கோபம் சுடு சொல் தவிர்த்து மெய் ஞானம் உரைத்தலே நன்று.

ஆனால்
1.இனிய சொல்லால் வார்த்தைகள் ஆடி (ஏமாற்றும் நிலை)
2.நிலையற்ற பொருள் செல்வத்தை அடைவதிலும் அல்லது அதை அளிப்பதற்கும்
3.தான் ஒரு கருவியாகச் செயல்படும் எண்ணத்தையும் தவிர்த்திடல் வேண்டும்.

ஆக தான் பெற வேண்டியதைப் பெற்றே உயர்த்திடும் வழியாகப் பேரருள் செல்வத்தைப் பெற்றிடவே பூமியின் ஈர்ப்புப் பிடிப்பில் சிக்குண்டுவிடும் எண்ணச் செயல்களை எல்லாம் களைந்திடல் வேண்டும்.

குரு என்பவன் மெய்ப் பொருளை வாய்மையால் உபதேசிக்கும் நிலையில் நின்று அறிவின் அமைதிக்கு வழி காட்டிட வேண்டுமப்பா…!

ஆனால் இன்றைய குருமார்கள் செல்வத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். எந்தச் செல்வத்தைக் கண்டுபிடிக்கப் போகின்றார்கள்…?

வாழ்க்கை நிலையில் அருள் செல்வம் பெற்று உயர் நிலை பெற வேண்டியவன்…
1.செல்வச் செழிப்பை எண்ணத்தில் கொண்டு…
2.அதி ஆசைக்குத் தன்னையே அடகு வைத்து…
3.உயர் ஞானத்தால் ஆத்ம பலம் பெற்றிட வழிகாட்ட வந்த உபதேசியின் (குரு) நிலை எல்லாம்
4.குறி சொல்பவனின் நிலை ஆகிவிட்டது…!

அந்த நிலை நமக்கு வேண்டாம். “நான் தான்…!” என்ற நிலையே உயர் ஞான வளர்ப்பிற்குத் தடைக்கல் ஆகிவிடும்.

அறிவை அறிவால் அறிவது என்பதே தத்துவப் பொருள் காட்டப்பட்ட உண்மையின் சாரங்களைக் கைக் கொள்ள வேண்டும் என்பதே.

ஆகாரத்தை நாம் உண்ணும் நிலையில்… உண்ணும் ஆகாரங்களின் சுவை குணம் மணத்திற்கொப்ப கண்களால் பார்த்து எடுக்கும் சுவாசத்தின் எண்ணத்தால் ஜீரணத்தின் செயல்பாடு தொடங்கினாலும் “வாயின் கடைவாய்ப் பகுதியில் நடைபெறும் ஓர் சூட்சமம் உள்ளது…!”

ஓ…ம் என்ற வடிவத்தின் நாதமாக ஆகாயவெளி உயிரணுக்களின் கலப்பால் அந்த ஓங்கார நாதத்தையே ஒலி கொண்டு ஒளியாக்கும் தொடருக்கு வருதல் வேண்டும்.

மனிதச் சரீர அமைப்பில் சிரசையே ஓ…ம் என்ற வடிவமாகக் கண்ணுற்றுப் பார்க்கலாம். சிரசின் கீழ் தாடைப் பகுதி அசைவதிலும் ஓர் சூட்சமதைக் கண்டு கொண்டு வான இயல் தத்துவத்தையே எண்ணத்தால் உணர்ந்து தெளிந்தவர்கள் மெய் ஞானிகள்.

சிவசக்தியின் அணுக்கள் கலந்திடும் செயலில் கண்டப்பகுதியை (தொண்டை) ஆகாயம் என்றும் அங்கு கலந்திடும் அணுக்களுக்கு “{மஹேஸ்வரன் – லலிதை” என்று சூட்சமப்படுத்திக் காட்டினார்கள் ஞானிகள்.

அதாவது உணவாக உட்கொள்ளும் ஆகாரத்தையே அமில மூலங்களாக” மாற்றி… “பஞ்சேந்திரியங்கள் வழியாகச் செயல்படுத்திடும் நாடிகள் சரீரத்தின் கதியை இயக்குகிறது.

நாம் வழி காட்டிடும் தியானத்தின் தொடரில் உணர்வு (உணர்ச்சிகளாக) கொண்டு எடுத்திடும் ஒளி காந்த சக்தியின் வீரியம் கொண்டு சரீரத்தில் சக்தியை ஈர்த்துப் பெற்று அதை விளைய வைத்து “நீல வண்ண ஒளி ஆத்மாவாக” ஒவ்வொருவரும் ஆக்கம் பெற வேண்டும்.

1.உடலுக்குள் பரப்பும் சக்திகள் அனைத்தும் மேலான அறிவெண்ணம் கொண்டு
2.உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் தியானமாக ஒன்று குவிக்கப்பட்டு
3.நீல வண்ண ஆத்மாவாக்கிடும் செயலுக்கு – “உந்திடும் விசைத் தன்மையாக”
4.கீழ் தாடைப் பகுதியினுள் அமைவு காட்டப்பட்ட மறை பொருளைத் தெளிவாக்கிவிட்டால்
5.அங்கு செயல்படும் உண்மை தெளிவுறும்…! (நீலகண்டா…! என்று கழுத்தளவில் நிறுத்தி விஷத்தையே ஆக்கச் சக்தியாக மாற்றிடும் பக்குவ நிலை கிடைக்கும்)

காசு வாங்காமல் யாம் பயிற்சி கொடுத்தால் அதைச் சாதாரணமாக எண்ணிவிடுகின்றார்கள்

காசு வாங்காமல் யாம் பயிற்சி கொடுத்தால் அதைச் சாதாரணமாக எண்ணிவிடுகின்றார்கள்

 

உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலம் போக வேண்டும் என்று தனிப்பட்ட நிலையிலிருந்து சொல்லாதீர்கள். குடும்பத்தில் உள்ள பத்து பேர் சேர்ந்து இணைந்து அதைச் செயல்படுத்துங்கள். காரணம்…
1.சிலர் துர்மரணம் அடைந்திருக்கலாம் அல்லது மிகவும் கடினமான நோய்வாய்ப்பட்டு உடலை விட்டு வெளியே சென்றிருப்பார்கள்.
2.அவருடைய உணர்வின் தன்மை நம்முடைய உடல்களில் உண்டு.
3.அவர் மேல் உள்ள பாசத்தால் சப்தரிஷி மண்டலம் செல்ல வேண்டும் என்று எண்ணினால்
4.பாலிலே நஞ்சினை விட்டு அதிலே பாதாமைப் போட்டாலும் அது செயலற்றதாக மாறுவது போல்
5.அந்த ஆன்மாக்கள் நம் உடலுக்குள் வந்துவிடும்….!

அதைப் போன்று இல்லாதபடி குடும்பத்தில் கூட்டாக அமர்ந்து சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அனைவரும் ஒருங்கிணைந்த நிலையில் எண்ணி “சப்தரிஷி மண்டல உணர்வுகளை வலுவாக்கிக் கொள்ள வேண்டும்…”

அதற்குப் பின் எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் ஒருங்கிணைந்து சொல்லுங்கள்.

அப்படிச் செய்ய முடியவில்லை என்றால் தியானம் செய்யக்கூடியவர்கள் ஒரு இருபது பேரை அழைத்துக் கூட்டுத் தியானம் இருந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை பிறவா நிலை பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு செய்யப்படும் பொழுது அவர்கள் விண் சென்று விடுகிறார்கள். உடல் பெறும் உணர்வுகள் சப்தரிஷி மண்டல ஒளிக் கடலிலே (கங்கை) பட்ட பின் அது கருகி விடுகின்றது. உயிருடன் ஒன்றிய அறிவாக ஒளியாக நிலைத்து விடுகின்றது.

குருநாதர் காட்டிய வழியில் இவ்வாறு தான் செயல்படுத்த வேண்டும்.

அவர்களை விண் செலுத்திய பின் உங்கள் வாழ்க்கையில் எத்தகைய இடையூறுகள் வந்தாலும் அந்த நேரங்களில் எல்லாம் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியைப் பெற முடியும்…. அந்த நினைவாற்றலை நாம் பெருக்க முடியும். இடையூறுகளை அகற்றிட முடியும்.

சப்தரிஷி மண்டலங்களின் நினைவாற்றல் பெருகப் பெருக… இந்த உடலை விட்டு எப்போது பிரிந்தாலும் நாமும் அங்கே செல்ல முடியும்.

ஏனென்றால் முன்னோர்களின் ஆன்மாக்கள் ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று அங்கே உந்தித் தள்ளுகின்றோம்… உடல் பெறும் உணர்வுகள் அங்கே கறுக்கப்படுகின்றது.

அதன் துணை கொண்டு அந்தச் சப்தரிஷி மண்டலங்களை எண்ணும் பொழுது அந்த ஆற்றலை நாம் எளிதில் பெற முடியும். அனைவருமே இந்தத் தகுதி பெற முடியும்.

இதை எல்லாம் உங்களுக்குப் பயிற்சியாகத் தான் கொடுக்கின்றோம்… யாரும் செய்வதில்லை.

காசைக் கொடுத்துப் பணத்தை செலவழித்து பயிற்சி பெற்றுக் கொள்ளுங்கள் என்றால்… எவ்வளவு நேரம் ஆனாலும் அங்கே காத்திருந்து அதைப் பெறுகின்றார்கள்.

1.நீங்கள் எல்லோரும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று குரு அருளைப் பாய்ச்சி
2.உங்கள் முன்னோர்கள் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று பயிற்சியாகக் கொடுத்தால்
3.எங்களுக்கு நேரமில்லை இதைச் செய்வதற்கு எங்களால் முடியவில்லை என்று சொல்லி விடுகின்றார்கள்.

மணிக்கணக்கில் காத்திருந்து இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சொன்னால் காசையும் கொடுத்து விட்டு காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் எளிமையாக யாம் (ஞானகுரு) சொன்னாலும் அதைக் கேட்பதில்லை. இது போன்ற நிலை இல்லாதபடி உங்களை நீங்கள் நம்பி இதைச் செய்து பழக வேண்டும்.

முன்னோர்களை விண் செலுத்துவது மிகவும் முக்கியமானது.

மூதாதையரின் ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணைய வேண்டும் என்று “ஒரு நாளைக்கு ஆயிரம் முறை எண்ணுங்கள்”

மூதாதையரின் ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணைய வேண்டும் என்று “ஒரு நாளைக்கு ஆயிரம் முறை எண்ணுங்கள்”

 

இந்திய மண்ணிலே தோன்றிய ஞானிகளால் வளர்க்கப்பட்ட ஆன்மீகத்தின் நிலைகளை எவரும் பழித்திடும் நிலை வராது… வரக்கூடாது என்பதை குருநாதர் அன்றே சொன்னார். அவர் காட்டிய வழியினைத்தான் நானும் (ஞானகுரு) இப்பொழுது சொல்கின்றேன்.

விநாயகரை வணங்கும் பொழுதெல்லாம்
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் மூதாதையர்கள் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

மேலும்…
1.ஒரு நாளைக்கு ஆயிரம் தடவையாவது
2.எங்கள் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து
3.பிறவா நிலை என்னும் பெரு நிலை அடைய வேண்டும் என்று எண்ணுங்கள்.
4.சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்திற்குள் அவர்களை உந்தித் தள்ளுங்கள்… அந்த உணர்வின் ஆற்றல் உங்களுக்குள்ளும் சேரும்.
5.அந்த மாமகரிஷிகளின் அருள் சக்தி இந்த உலகம் முழுவதும் படர வேண்டும்…
6.தீமைகளை விளைய வைக்கும் “தீய உணர்வுகள் அகல வேண்டும்” என்ற உணர்வுகளைப் பாய்ச்சுங்கள்.

தத்துவ ஞானிகள் வளர்ந்து தீமைகளை அகற்றிய நாடு இது. முதல் நிலையாக உலகெங்கிற்கும் மெய் ஞானத்தை உணர்த்திய பூமி இது. தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று நிலைகளை இங்கிருந்து தான் உலகிற்குத் தெளிவுற எடுத்துரைத்தது.
1.விண்ணுலகின் ஆற்றலை ஒளியின் சரீரமாகச் சிவமாக்கியவன் அகஸ்தியன்.
2.எந்த நாட்டவரும் அகஸ்தியன் பெற்ற ஆற்றலைப் பெற முடியும்.

சீவலிங்கமாக இன்று இருக்கின்றோம். அகஸ்தியன் உணர்வை எடுத்து அதனின் துணை கொண்டு “உயிருடன் ஒன்றிய இராமலிங்கமாக” எண்ணத்தின் வழிகளிலே எண்ணத்தால் உருவாக்கப்பட்ட தன்மை கொண்டு… என்றும் ஒளிச் சரீரமாக இருக்க முடியும்.

இந்த உலகில் தீய சக்திகள் பரவிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் யாம் இதை வெளிப்படுத்த வேண்டி இருக்கின்றது.

தீமைகள் பரவாது தடுக்கச் செயுயும் அந்த ஞானிகள் உணர்வுகள் இங்கே அனைவரையும் காக்கக்கூடிய சக்தியாக வளர வேண்டும் எல்லோருக்கும் பேரானந்த அமுதாக இது கிடைக்க வேண்டும் என்று தான் குருநாதர் கூறினார்.

அதன் வழியில் தான் நான் இதைச் செயல்படுத்துகின்றேன் சாமி வேகமாகப் பேசுகிறார் என்று யாரும் எண்ண வேண்டியதில்லை.

உலகில் நல்லது என்று சிந்தித்துச் செயல்படுத்தும் மக்களை வீழ்த்திடும் நிலைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. எளிமையானவர்களிடமிருந்து பொருள்களைத் தட்டிப் பறிக்கும் நிலையே உருவாகிக் கொண்டுள்ளது

வளர்ச்சி அடைந்த நாடுகள் மற்ற நாடுகளை அடிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் (அங்கிருந்து) ஆணையிடுவதை சிரம் மேல் ஏற்று நடப்பவர்கள் அசுர உணர்வு கொண்டோர் இங்கே நம் நாட்டிலும் உண்டு. அதிலிருந்து மக்கள் காக்கப்பட வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்கின்றேன்.

மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா எங்கள் உடல் முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ண வேண்டும்.

சாஸ்திரப் பிரகாரம் நரசிம்ம அவதாரமாக தீமைகளை அகற்றிய அந்த மகரிஷிகளை நினைவுக்குக் கொண்டு வந்து… உயிருடன் ஒன்றி… விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகளின் சக்தி பெற வேண்டும் என்ற வேட்கையைக் கூட்டி ஒருங்கிணைந்து செயல்பட்டு தீமைகளை அகற்றுங்கள்.

அதே போன்று
1.மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்களை விண் செலுத்தும் உணர்வுகளை அடிக்கடி கூட்டிக் கொண்டே வாருங்கள்.
2.அது உங்களுக்கு நல்ல பயனைத் தரும்
3.அவர்கள் முன் சென்றால்… அடுத்து நாமும் நிச்சயம் பிறவா நிலை பெற முடியும்.

ஒரு வழிப்பாதை

ஒரு வழிப்பாதை

 

விஞ்ஞானிகள் ஒரு இராக்கெட்டை பூமியின் பிடிப்பிலிருந்து விடுபட்டு விண்ணிலே வீசுவதற்கு “மிகவும் சக்தி வாய்ந்த நிலைகள் கொண்டு தான்” அதைச் செயல்படுத்துகின்றார்கள்.

விண்ணின் ஆற்றலை இங்கிருந்து அறிந்துணர்வதற்காக “ரேடர்” என்ற சாதனமும் “எக்ஸ்ரே” போன்ற சில செயலாக்கங்களையும் அதனுடன் பொருத்துகின்றார்கள்.

ரேடர் என்ற நிலையும் எக்ஸ்ரே என்ற நிலையும் வைத்துத் தான் பல பல உணர்வின் தன்மையைக் கண்டறிகின்றனர் விஞ்ஞானிகள்.

இதைப் போன்று தான்
1.மனிதனாக இருக்கும் நாமும் “ஞானிகள் உணர்வின் சக்தியை” நமக்குள் செலுத்தி விண்ணின் ஆற்றலைப் பெற முடியும்.
2.கண்ணை ரேடராக வைத்து… கண்ணின் நினைவலைகளை எக்ஸ்ரேவாக வைத்து…
3.மற்ற காந்த அலைகளுடன் தொடர்பு கொள்ளும் போது விண்ணின் சக்தியைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம்.

ஆனால் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் ஒலி ஒளி என்ற… “காந்தப்புலனின் ஆற்றல் மிக்க நிலைகளை…” அது எந்த அளவிற்கு இணைக்கின்றோமோ அதன் வழி கிடைக்கின்றது.

அதாவது பல காந்தங்கள் (மேக்னட்) கொண்டு சுழற்றப்படும் போது (ஜெனரேட்டர்) எந்த அளவிற்கு மின்சாரம் அதிகமாக அதிலே உற்பத்தி ஆகின்றதோ… அதைப் போன்று நாமும் ஆற்றலைப் பெற முடியும்.

இதைப் போன்று தான்
1.விண்ணிலிருந்து வெளிப்படும் காந்த அலையின் தன்மை அது படர்ந்து பரவி வருவதை… பூமியின் செயல்கள் அது இழக்கச் செய்தாலும்
2.அதே உணர்வின் தன்மையை காந்த அலைகளாக நாம் மோதும் பொழுது
3.ஒரு சீரான நிலைகள் கொண்டு… ஒரு வழிப் பாதையில் நம்முடைய எண்ணங்களை ஒருங்கிணைக்கச் செய்யப்படும் பொழுது
4.உடலை விட்டு உயிராத்மாக்கள் பிரிந்து வெளியே சென்றால் அந்த உணர்வுடன் நாம் தொடர் கொண்டு…
5.அனைவரும் சேர்ந்து ஏக குரலில் நாம் உணர்வின் ஒலியை எழுப்பி உந்தித் தள்ளப்படும் போது
6.அந்த உயிராத்மாக்களை விண் செலுத்த முடிகிறது… விண்ணிலிருந்து வரும் சக்திகளைப் பெறவும் முடிகிறது
7.எந்தக் குடும்பத்தில் யார் இதைச் செயல்படுத்தினார்களோ அந்த குடும்பத்தார் ஈர்ப்புக்கு சப்தரிஷி மண்டல ஒளி அலைகள் கிடைக்கின்றது.

ஆகவே… குடும்பத்தைச் சார்ந்தோர் அனைவருமே உடலை விட்டுப் பிரிந்தவர்களை விண் செலுத்தி… குலதெய்வங்களாக அவர்களை எண்ணி… அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் சக்தி பெற வேண்டும் என்று அந்த உணர்வுடன் தொடர்பு கொள்ளும் பொழுது… அந்த ஞானியர்கள் நம் பூமியிலே வாழ்ந்த காலத்தில் அவர்கள் வெளிப்படுத்திய ஆற்றல்மிக்க சக்திகளை சுலபத்தில் நாம் எடுத்துச் சுவாசிக்க முடியும்.

அந்த மெய் ஞானிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த இன்னல்களை நீக்கி…
1.மெய் ஒளியின் சுடராக எப்படி ஆனார்களோ…
2.எந்த விண்ணின் நிலை அடைந்தார்களோ…
3.அவர்கள் சென்ற பாதையில் நாமும் சென்று அதை எட்டிப் பிடிக்கும் ஆற்றல் நமக்குக் கிடைக்கின்றது.

இது தான் ஞானிகள் கண்ட வழி…!

இந்த உடலில் நல்ல நினைவுடன் இருக்கும் பொழுதே நாம் இதைப் பழகிக் கொள்ள வேண்டும்.

காரணம்… காற்று மண்டலம் நச்சாக இருக்கும் இந்த வேளையில் வராகன் எப்படிக் கெட்டதை எண்ணாது… அந்த நாற்றத்தைப் பிளந்து நல்லதை நுகர்ந்து எடுத்ததோ இதைப் போன்று தியானம் எடுத்துக் கொண்ட அனைவருமே தனது வாழ்க்கையில் வரக்கூடிய
1.சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ சோர்வோ வெறுப்போ பயமோ ஆத்திரமோ அதை எல்லாம் பலவீனப்படுத்தும் நிலையாக
2.ஒவ்வொரு நிமிடத்திலும் ஈஸ்வரா என்று உயிருடன் தொடர்பு கொண்டு
2.மகரிஷிகளின் உணர்வுகளைத் தனக்குள் உருவாக்கும் ஆற்றலைப் பெற வேண்டும்.

நாம் எண்ணி எடுக்கும் உணர்வுகளைப் பிரம்மமாக இருந்து நம் உயிர் தான் சிருஷ்டிக்கின்றது. ஆகவே உயிரை நாம் ஈசனாக மதிப்போம். அந்த உயிரின் துணை கொண்டு தான் உயர்ந்த சக்திகளை நாம் பெற முடியும். அந்தப் பக்குவத்தைத்தான் இப்பொழுது உங்களுக்கு ஏற்படுத்துகின்றோம்.

விஞ்ஞானிகள் ரேடார் என்ற சாதனத்தைக் கம்ப்யூட்டருடன் இணைத்து விண்ணின் ஆற்றலைச் சுலப நிலைகள் கொண்டு எப்படி அறிந்து கொள்கின்றார்களோ இதைப் போன்று தான்
1.மூதாதையரின் ஆன்மாக்களை நாம் உந்தி விண்ணிலே செலுத்தி ஒளிச் சரீரம் பெறச் செய்யும் போது
2.சப்தரிஷி மண்டலத்தின் ஆற்றல் நமக்குள் பெருகுகின்றது… எண்ணும் பொழுதெல்லாம் அது கிடைக்கிறது.

அந்த உணர்வின் தன்மையைச் சுவாசித்து உடலுக்குள் ஒவ்வொரு நிலையிலும் சேர்க்கப்படும் போது மெய் ஒளியின் சுடராக நாம் எடுக்க முடியும்.

ஆகவே… வாழ்க்கையில் வரும் தீமைகளை மறந்து… மெய் ஒளி பெற வேண்டும் என்ற எண்ணங்களை உங்கள் எல்லோருடைய உள்ளங்களிலும் ஒருங்கிணைத்து… இதைப் பதிவு செய்கிறோம்.

ஞானிகளின் ஆற்றல் மிக்க சக்தியைப் பெறுவதற்கு உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்தத் தகுதி ஏற்படுத்துகின்றோம்
1.மகரிஷிகளும் இதைத்தான் செய்தார்கள்
2.என் குருநாதரும் அதைத் தான் செய்தார்.
3.குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்கும் அதைத் தான் யாம் செய்கின்றோம் (ஞானகுரு).