உடல் பெறும் உணர்வுகளைக் கரைப்பது என்றால் அதனின் உப்பொருள் என்ன…?

உடல் பெறும் உணர்வுகளைக் கரைப்பது என்றால் அதனின் உப்பொருள் என்ன…?

 

கூட்டுத் தியானங்களில் அருளுணர்வைப் பெற்று அதன் வழியில் சார்புடாயோர் நிலைகள் கொண்டு நாம் முன்னோர்களை விண் செலுத்துகின்றோம்.

ஏனென்றால் இதற்கு முன் நம்மிடம் இந்தப் பழக்கங்கள் இல்லாததால் இப்போது நம் குரு காட்டிய அருள் வழியில் அந்தந்தக் குடும்பத்தார் உடலை விட்டு பிரிந்து சென்ற ஆன்மாக்களை காலை துருவ தியான நேரங்களில் அந்த வலுவை ஏற்றுக் கொண்டு எளிதில் விண்ணுக்கு அனுப்ப முடியும்.

உடல் பெறும் உணர்வுகள் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்த பின் இந்த உணர்வுகள் பட்டபின் உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடுகின்றது.
1.காரணம் உடல் பெறும் உணர்வுகளைSAP அவர்கள் கரைத்தவர்கள்.
2.அங்கே கரைத்து வெளிவருவது என்றால் அடுத்து காலை சூரிய உதயம் வருகின்றது
3.அடுத்து வரப்படும் பொழுது இந்த உடலில் இருந்து பிரிந்து சென்ற இந்த உணர்வுகளை விஷத்தை அது கவர்ந்து செல்கின்றது
4.ஏனென்றால் அது பிரித்தது

உதாரணமாக கருணைக்கிழங்கை நாம் வேக வைக்கின்றோம். இந்த விஷத்தின் தன்மை பிரிந்து சென்ற பின் சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது. இயற்கையில் விளைந்த உணர்வு தான்.

ஆனால் நாம் வேகவைத்து நீக்கினாலும் எதன் கலவையுடன் கலந்து இந்த உணர்வுகளை வெளிப்படுத்துகின்றோமோ இந்த உணர்வலைகள் வெளிப்படுத்தி நாம் அதை உணவாக உட்கொண்டால் அந்த உணர்வின் தன்மை எடுத்து வைத்திருப்பதை உணவின் அணுக்கள் ஆக்கப்படும் பொழுது இந்த உணர்வுகள் இதிலிருந்து வெளிப்பட்ட உணர்வை ஈர்த்து அதை நமக்குள் வளர்க்கின்றது.

எந்தப் பொருளானாலும் நாம் உணவாக உட்கொள்ளும் பொழுது இந்த உணர்வின் தன்மை கொண்டு அணுக்களாக்கப்படும் பொழுது அதை நமக்குள் உருவாக்கி
1.அந்த அணுக்களில் எந்த உயர்ந்த குணத்தை பதிவு செய்கின்றோமா அந்த பதிவின் நிலை கொண்டு அந்த அணுக்கள் மாற்றம் அடைகின்றது.
2.இதை நாம் செயல்படுத்த வேண்டும்.

இதைப் போல ஒவ்வொன்றும் நாம் எடுத்த உணர்வைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து வைத்துக் கொள்கின்றது

ஆனால் பூமியின் ஈர்ப்பைக் கடந்து வெளியே செலுத்தப்படும் பொழுது காலை சூரிய உதயம் வரப்படும் பொழுது மேலே கொண்டு செல்கிறது. அங்கே ஓசோன் திரை என்பது விஷத்தின் அடர்த்தியாகி தன்னுடன் விஷத்தை இணைத்துக் கொள்ளும் நிலை பெற்றது.

அதாவது சூரியானிலிருந்து மற்ற பிரபஞ்சங்களுலிருந்து வரக்கூடியதை நம் பூமியின் சுழற்சி வட்டத்திற்குள் இந்த அடர்த்தியான ஒசான் தான் விஷத்தை உள்ளே போகாது தடுக்கின்றது.

சூரியனிலிருந்து வரக்கூடியது அல்ட்ரா வயலட். விஷத்தின் தன்மை கொண்டது அது அடித்துப் பிசைந்து வெளிவரப்படும் பொழுது அதனுடைய ஒளிக் கதிர்கள் வெகு தூரத்தில் நெருப்பின் தன்மையாக மாற்றுகின்றது. நெருப்பின் தன்மையாக மாறினாலும் விஷத்தன்மைகள் பிரிகின்றது.

ஆனால் இந்த மோதலில் வெப்ப மின் அணு போன்று ஆகும் பொழுது ஈர்த்துத் தனக்குள் அந்த விஷத்த்தின் தன்மை கொண்டு ஒரு அணுவின் தன்மை அடைகின்றது

ஆகவே இந்த இயற்கை நிலைகளில் இவ்வாறு நிகழ்ந்து வருவது பூமிக்கு இத்தகைய விஷத்தின் தன்மை அடர்த்தியான பின் (ஒசான்) பூமிக்குள் ஜீவணுக்கள் மற்ற உயிரினங்கள் வாழும் தகுதி பெறுகின்றது. நஞ்சினை அது கவர்ந்து கொள்ளும் நிலையில் நமக்குள் அடக்கச் சக்தியாகக் கொண்டு வரும் நிலையும் வருகின்றது.

இதைப் போன்று தான்
1.நாம் உயிரான்மாக்களை விண் செலுத்தும் போது பிரபஞ்சத்தை விட்டு வெளியே சென்ற பின்
2.அந்த விஷத்தின் உணர்வுகள் ஓசான் திரையுடன் அதன்  அடர்த்தியில் கலந்து விடுகின்றது.
3.மனித உடலில் விளைந்தது அங்கே செல்லவில்லை என்றால் மீண்டும் இந்த உயிரின் தன்மை இதன் உணர்வின் தொடர் கொண்ட உடலைத்தான் உருவாக்கும்.
4.இந்த உடலில் எத்தகைய உணர்வு எடுத்துக் கொண்டதோ அந்த உணர்வுக்கொப்பத் தான் உடலைத் தேடிச் சென்று இந்த உணர்வின் தன்மை உடல் ஆக்கும்.

ஆகவே உயிருடன் ஒன்றி ஒளியாக்கும் நிலைகளை ஆக்க அங்கே உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்க “காலை துருவ தியானத்தில் எவர் ஒருவர் அந்த அரும்பெரும் சக்தி எடுத்துச் செயல்படுத்துகின்றார்களோ… அவருடைய சார்புடையவரை எளிதில் விண் செலுத்த முடியும்…”

”நான் உடலிலேயே இருப்பேன்…” என்று எந்த மகரிஷியும் இருந்ததில்லை

”நான் உடலிலேயே இருப்பேன்…” என்று எந்த மகரிஷியும் இருந்ததில்லை

 

நாம் ஒரு பாம்பைக் கொன்றால் பாம்பின் உயிரான்மா நமக்குள் வந்து விடுகின்றது. ஆனால் ஒரு பாம்பு நம்மைத் தீண்டி விட்டால் அந்த விஷம் உடல் முழுவதும் பரவும் பொழுது பாம்பின் நினைவே நமக்குள் வருகின்றது. அந்த விஷம் அதன் நினைவுக்கே அழைத்துச் செல்லும்.

எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து இன்று நாம் மனிதனாக வந்தாலும் அதன் உணர்வு… நம் நினைவாற்றல் அனைத்தையும் மறையச் செய்து விடுகின்றது.
1.உடலை விட்டுச் சென்றால் அதனின் ஈர்ப்புக்குள் சென்று
2.நாம் பாம்பாகத்தான் பிறக்க நேரும்.

எத்தனையோ காலம் பல உடல்களைக் கடந்து மனிதனாக உருப்பெற்று வந்திருந்தாலும்
1.இத்தகைய விஷத்தை வென்ற… விஷத்தை ஒளியாக மாற்றிய
2.அந்தத் துருவ மகரிஷி துருவ நட்சத்திரமான அந்த நிலைகளை நாம் நுகர்ந்தோமென்றால்
3.பாம்பின் நினைவு மறந்து நஞ்சை வென்ற நினைவு வரும்.

அந்தப் பாம்பினத்திற்குள் செல்லாது தடைப்படுத்த நம் உணர்வின் நினைவலைகளும்
1.கண் எதைக் கடைசியில் நினைவு கொண்டதோ
2.அங்கே இந்த உணர்வின் துணை கொண்டு நாம் விண்ணுக்குச் செல்ல முடியும்.

அதனால் தான் கண்ணன் முதலில் பார்த்தசாரதி. பின்… எதன் வலுவைப் பெற்றதோ அந்த உணர்வின் தன்மை வரும் பொழுது பாம்பின் உணர்வு வலுவாகிவிட்டால்… நாம் கூர்மையாக உற்றுப் பார்க்கும் பொழுது இந்தக் கண் எது தன்னைத் தீண்டியதோ அந்த உணர்வும் அந்த விஷத்தின் தன்மை பட்டபின் அதன் வலுவின் தன்மை கொண்ட பின்… இதே கண்கள் பாம்பின் உடலுக்குள் அழைத்துச் சென்று விடுகின்றது.

அது தான் கண்ணன் அர்ஜுனனுக்குச் சாரதியாகச் சென்றான். கண்களின் நினைவு… அதாவது அந்தப் பாம்பின் உணர்வுகள் நம் உடலுக்குள் வலிமை ஆகிவிட்டால் அர்ஜுனன்.

அந்தப் பாம்பிடமிருந்து தப்பிக்க நம் கண் எத்தனை உபாயங்களைச் சொல்கின்றது. இருப்பினும் இந்தக் கண் அந்தப் பாம்பின் உணர்வை வலுவாக்கி விட்டால் அர்ஜுனன் ஆகின்றது.

அர்ஜுனன் ஆனபின் எந்த உடலின் தன்மை கொண்டதோ இது தீண்டினாலும் அதன் உடலுக்குள் சென்ற பின் அது பாதுகாப்பு தருகின்றது.
1.ஆகவே கண்கள் எதனின் உணர்வை நுகர்ந்ததோ
2.அதன் வழியிலேயே நம்மை அழைத்துச் சென்று அதன் வழியிலே நம்மைப் பாதுகாக்கின்றது.

மனிதனான பின் பிறவியில்லா நிலை அடைந்தது துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும். இதைப் போன்று ஒன்று தீண்டி விட்டால் அந்த வலுக்கொண்ட எண்ணத்துடன் நாம் அதை எண்ணும் பொழுது
1.இந்த உடலில் நஞ்சுகள் பாய்ந்தாலும் நஞ்சின் உணர்வு இதற்குள் கலந்தாலும்
2.நாம் பாதுகாப்பான இடங்களை (துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலத்தையும்) எண்ணும் பொழுது
3.அந்த உணர்வின் தன்மை வலுப் பெற்று உடலை விட்டு வருகின்றோம்.

உடலை விட்டு வந்தாலும் இது அர்ஜுனன் ஆகி அந்த உணர்வுக்கு நம்மை அழைத்துச் செல்லும். இங்கே நஞ்சினை ஒடுக்குகின்றது.
1.ஆனால் உடலை விட்டுச் செல்லும் பொழுது
2.அதன் அருகிலே (ஈர்ப்பு வட்டத்திற்குச்) செல்கின்றோம்.

நஞ்சின் உணர்வுகள் கரைகின்றது மனிதன் என்ற உணர்வின் ஒளிகள் நமக்குள் மிச்சமாகின்றது. அது தான் “பிறவி இல்லாத நிலை…”

எந்தச் சந்தர்ப்பத்தில் இந்த உடலை விட்டு உயிரான்மா சென்றாலும்
1.எது நம்மைத் தாக்கியதோ அந்த உணர்வின் வலுவாகி அதற்குள் செல்வதற்கு முன்
2.இந்த வலுவை இழக்கச் செய்து “அருள் ஒளியின் உணர்வை” நாம் பெறும் தகுதியைப் பெற வேண்டும்.

அந்தத் தகுதியை நாம் காலையில் துருவ தியானத்தில் நாம் வலுப்பெறச் செய்ய வேண்டும்.

நாம் எப்படி எந்த நிலையில் ஒளியின் உணர்வை எடுத்தாலும் ஒளியின் உணர்வுகள் அதிகரிக்க அதிகரிக்க அந்த ஒளி பட்டு “இந்த உடலும்” கரையத்தான் செய்யும்.

1.இது கரைந்தால் தான் உயிருடன் ஒன்றி ஒளியாக மாற முடியும்.
2.”நான் இந்த உடலிலேயே இருப்பேன்…” என்று எந்த மகரிஷியும் இருந்ததில்லை.
3.அவன் எதனின் உணர்வு கொண்டு உடலை விட்டுச் சென்றானோ ஒளியின் சரீரமாக மாறுகின்றான்.

விஷத்தை ஒளியாக மாற்றும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி

விஷத்தை ஒளியாக மாற்றும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி

 

விஷ்ணுவின் மறு அவதாரம் சீதாராமா…!
1.உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ அந்தச் சுவைக்கொப்ப ஜீவ அணுவாக மாறி
2.அதனதன் எண்ணங்களை இயக்குகின்றது என்பது காவியத்தின் முக்கியத் தொகுப்பு.
3.அதாவது எந்தச் சுவையோ “அதைப் போல் ஜீவ அணுக்களாக” உயிர் உருவாக்குகின்றது என்பதை நாம் அறிந்திடல் வேண்டும்.

நட்சத்திரங்களுடைய சக்திகள் பூமியில் மண்ணுடன் கலந்து புவியின் ஈர்ப்பால் சிறுகச் சிறுக விளைந்து வைரமான பின் வெடித்துத் தனித்தன்மையாக வெளிவந்து விடுகிறது.

அதைப் போல் நம் உயிரால் உருவாக்கப்பட்ட ஜீவ அணுக்கள் நாளுக்கு நாள் அது வெளிப்படும் பொழுது
1.அறிவின் வளர்ச்சி அறிந்திடும் வளர்ச்சி இங்கே வருகின்றது.
2.ஒரு வெளிச்சத்தைக் கண்டபின் அதற்குள் பொருள் தெரிவது போல நமது ஜீவணுக்களின் துணை கொண்டு
3.நம் கண்ணின் வளர்ச்சி கொண்டு அதன் உணர்வின் அறிவை அறிந்திடும் ஞானமாக வளர்கின்றது.

நட்சத்திரங்களுடைய துகள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மின்னலாக மாறி பூமியிலே பட்டபின் சிறுகச் சிறுக வைரமாக விளைகிறது. அது ஜீவ அணு அல்ல… ஒளியின் உடலாகப் பெறுகின்றது… நட்சத்திரம் எப்படி மின்னுகின்றதோ அதைப் போல.

நமது உயிரோ “மின்னணு” போன்று அது இயங்கிக் கொண்டே இருக்கின்றது அந்த உயிரின் இயக்கத்தைக் கொண்டு நமது ஜீவ அணுக்கள் மின்னணுவின் துணை கொண்டு இயங்குகின்றது.

எப்படி மின் நிலையத்திலிருந்து வரும் மின்சாரத்தை நம் வீட்டிற்குள் எந்தெந்த இணைப்புகளுடன் சேர்க்கின்றோமோ அந்த மின் அணுக்கள் அதை இயக்கி அதன்வழி நாம் பயன்படுத்துகின்றோமோ இதைப் போல
1.சூரியன் இயக்கத் தொடரில் நாம் வளர்ந்தாலும் நம் உயிரே சூரியனின் தொடர்பு கொண்டு தான் அதுவும் இயங்குகின்றது.
2.நாம் எப்படி ஊருக்கு ஒரு சப்ஸ்டேசனை வைத்திருக்கின்றோமோ அதைப் போன்று நமது உயிரும் அந்த நிலை பெறுகின்றது.
3.சூரியன் துணை கொண்டு அந்த மின் கதிர்கள் உடலில் உள்ள அணுக்களை அது இயக்குகின்றது.

இருப்பினும் பல உணர்வின் தன்மையை அனைத்தையும் அறிந்திடும் உணர்வு கொண்டு மனித உடலில் வந்த விஷத்தை வென்றவன் அகஸ்தியன்.

அவன் திருமணமாகி கணவனும் மனைவியும் இரு மனமும் ஒரு மனதாகி அருள் மணம் பெற்று… உயிரைப் போன்றே உயிரணுக்களை வளர்த்து “விஷத்தை ஒளியாக மாற்றிடும் சக்தி பெற்று” ஒளி உடலாகத் துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.

27 நட்சத்திரங்களும் கடும் விஷத் தன்மை கொண்டது, அதனுடைய துகள்கள் பூமியிலே பட்டால் அதன் இனத்தின் தன்மை கொண்டு அந்த விஷங்கள் வளர்ந்து வைரங்களாக விளைகிறது.

அந்த வைரத்தை நாம் உட்கொண்டால் மனிதனை உடனடியாகச் சுருட்டி விடும்… அவ்வளவு கடுமையான விஷம்.
1.ஆனால் அந்த விஷத்தின் உணர்வை ஒளியாகக் காண முடிகிறது… வெளிச்சமாகத் தெரிகின்றது.
2.இதைப் போன்று தான் விஷத்தை ஒளியாக மாற்றி ஒளியின் சுடராக துருவ நட்சத்திரம் இருக்கின்றது.

விஷமே உலகை இயக்குகின்றது. சூரியன் இயங்குகிறது என்றால் விஷத்தின் தாக்குதலால் தான் வெப்பத்தின் தன்மை கொண்டு அது இயக்குகின்றது.

நமது உயிரும் விஷத்தின் தாக்குதலால் தான் துடிப்பின் தன்மை ஏற்பட்டுக் கொண்டுள்ளது. இதைப் போல் ஒவ்வொரு அணுக்களிலும் விஷத்தன்மை கலந்திருப்பதால் தான் அது இயக்க அணுக்களாகவும் ஜீவ அணுக்களாகவும் மாறிக் கொண்டுள்ளது என்பதனை நாம் அறிதல் வேண்டும்.

1.ஆறாவது அறிவால் ஒளியின் உடல் பெற்றது துருவ நட்சத்திரம்.
2.அந்தப் பேரருள் பேரொளியை நமக்குள் சேர்த்துக் கொண்டால் நாமும் இந்த விஷத்தை ஒளியாக மாற்ற முடியும்.

இருந்தாலும்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை யாரும் பெறுவது என்றால் மிகவும் கடினம். “குருவின் துணை…” இல்லாமல் எடுப்பதென்றால் மிக மிகக் கடினம்.

1.நமது குருவின் மூலம் எத்தகைய கடும் விஷத்தையும் ஒளியாக மாற்றிடும் அந்த்த் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற முடிந்தது.
2.நமது குரு அந்த விஷத்தையும் தாங்கி அதை ஏற்றுக் கொள்ளும் பருவத்தினை ஏற்படுத்தினார்.
3.ஆகவே தான் உங்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும்படிச் செய்து…
4.விஷத்தை ஒளியாக மாற்றும் பருவத்தை ஏற்படுத்துகின்றோம்..

நாம் ஒவ்வொரு நாளும் ”உயிரின் முகப்பில்” ஈர்க்கப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் உடல் முழுவதும் பரவுகின்றது.

இதைப் போன்று உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களின் முகப்பில்… உயிரின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வினை ஈர்க்கச் செய்யும் பொழுது… அதாவது
1.என் குரு எப்படிச் செய்தாரோ அதைப் போன்று உங்களில் ஈர்க்கச் செய்யும் பொழுது
2.நாம் அனைவரும் “ஒளியின் சரீரம்” பெறும் தகுதி பெறுகின்றோம்.

மூதாதையர்களுக்கு இதற்கு முன் நாம் செய்ய மறந்த காரியத்தைச் செயல்படுத்த வேண்டும்

மூதாதையர்களுக்கு இதற்கு முன் நாம் செய்ய மறந்த காரியத்தைச் செயல்படுத்த வேண்டும்

 

மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் அருள் உணர்வைத் தூண்டி…
1.உங்கள் நினைவை விண்ணை நோக்கிச் செலுத்தச் செய்து
2.சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி உணர்வுகளை நீங்கள் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளை நாம் ஏங்கிப் பெற்று அதனின் வலுக் கொண்டு “அவரவர்கள் குலதெய்வங்களின் உயிரான்மாக்களை” சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க முடியும்.

ஏனென்றால் நாம் அனைவரும் சேர்ந்து வலுக் கொண்டு “உந்தித் தள்ளப்படும் பொழுது…” சப்தரிஷி மண்டலத்தின் ஈர்ப்புக்குள் முன்னோரின் ஆன்மாக்கள் செல்கின்றது.
1.உடல் பெறும் உணர்வுகள் கரைகின்றது.
2.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலைக்கின்றது
3.சப்தரிஷி மண்டலத்துடன் அது சுழலத் தொடங்குகிறது.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு ராக்கெட் மூலம் செயற்கைக் கோள்களை விண்ணிலே செலுத்துகின்றார்கள். பூமியின் ஓடு பாதையில் சுழலச் செய்யும் பொழுது அதன் வரிசையில் சுழல்கின்றது.

அதே சமயத்தில் தெற்கு வடக்காகச் சுழலும் பொழுது அந்தச் சூழலின் தன்மைக்கு இதனின் ஈர்ப்பு வேகத்தைக் கூட்டும் பொழுது அது சுழல்கின்றது. அதனுடைய வேகத்தைக் குறைத்து பூமியின் சுழல் வட்டத்தில் சமமான நிலைகள் இருக்கும் பொழுது… “அது எந்த ஊரின் எல்லையோ…” அங்கேயே நிலைகொண்டு அதனைச் செயல்படுத்துகின்றது.

இதைப் போன்று தான் எந்த மனித உடலில் இருந்து உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாகச் சப்தரிஷி மண்டலத்தில் இருக்கின்றனரோ அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நம் உடலுக்குள் செலுத்தி… அதனின் வலுக் கொண்டு மூதாதையரின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை நாம் முறைப்படி விண் செலுத்துதல் வேண்டும்.

அவ்வாறு விண் செலுத்தினால் அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணைகின்றது. பின் உடல் பெறும் உணர்வுகள் கரைந்த பின் அதனுடைய ஈர்ப்பு வட்டத்திலேயே சுழலத் தொடங்குகிறது.

அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர்
1.சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெற வேண்டும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் அதைப் பெற்று
2.வாழ்க்கையில் வரும் கடும் தீமைகளையும் மாற்றி அந்த மகரிஷிகளின் உணர்வை வளர்த்துக் கொள்ளலாம்.

பௌர்ணமி தோறும் அனைவரும் ஒன்று சேர்ந்து இதைப் போன்று செயல்படுத்த வேண்டும்.

இதற்கு முன்பு நாம் செய்யாத்தால் நம்முடைய முன்னோர்களின் ஆன்மாக்கள் இன்னொரு உடலுக்குள் சென்று இருந்தாலும் நாம் எடுக்கும் வலுவின் துணை கொண்டு
1.அந்த உடலிலிருந்து எப்பொழுது வெளி வந்தாலும் நம்முடைய நினைவின் ஆற்றலை அங்கே பெருக்கப்படும் போது
2.அந்த உடலில் பெற்ற நஞ்சினைக் கரைத்து விட்டு விண் செல்லும் தகுதியை நாம் ஏற்படுத்த முடியும்.

ஆகவே நாம் தளராது இதைச் செய்ய வேண்டும். மனிதனாக நம்மை உருவாக்கிச் சீராட்டித் தாலாட்டி வளர்த்த நம்முடைய முன்னோர்கள் மீண்டும் பிறவிக்கு வராதபடி செய்வதே நம்முடைய “தலையாயக் கடமையாக” வைக்க வேண்டும்.

ஆங்காங்கு உள்ளோர் கூட்டுத் தியானங்களின் மூலம் முதலில் இதை வலுப்படுத்திச் செயல்படுத்த வேண்டும். உடலை விட்டு வந்த ஆன்மாக்களைத் துரிதமாக நாம் விண் செலுத்த முடியும். காரணம் அவருடைய உணர்வுகள் தான் நம் உடலாக இருக்கின்றது. எளிதில் அனுப்ப முடியும்.

ஆனால் இப்பொழுது சாங்கியத்தைத் தான் நாம் கடைப்பிடித்து வருகின்றோம். சுட்ட சாம்பலைக் கொண்டு போய் ஓடும் தண்ணீரில் கரைத்தால் பாவம் போய் மோட்சம் போவார்கள். மோட்ச தீபம் ஏற்றினால் சொர்க்கம் செல்வார்கள் என்று தான் செய்து கொண்டுள்ளோம்.

ஆகவே காலத்தால் மறைந்த அந்த உண்மைகளை நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் செயல்படுத்தி நம் முன்னோர்களின் ஆன்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்துப் பிறவியில்லா நிலை பெறச் செய்வோம்.

அவர்கள் ஒளி நிலை பெற்றால் அவருடைய துணை உண்டு இந்தப் பூமியில் வரும் தீமைகளை அகற்றிவிட்டு வாழ்க்கையில் நாம் மகிழ்ந்து வாழவும்… மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழவும் முடியும்.

இந்த உடல் நமக்குச் சொந்தம் அல்ல… உயிரே நமக்குச் சொந்தம். ஆனால் வழக்கத்தில் நாம் உயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலையில் இருக்கின்றோம்.

உயிரை நாம் சொந்தமாக்க வேண்டும் என்றால் குரு காட்டிய அருள் வழியில் நாம் இதைச் செயல்படுத்துவோம்.

1.நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் உயிர் இயக்குகின்றது… உடலாக்குகிறது
2.அப்படிப்பட்ட உயிரைச் சொந்தம் என்று யாரும் எண்ணவே இல்லை.
3.அவனால் உருவாக்கப்பட்டது தான் இந்த உடல்.
4.அவனை வேண்டி அந்த அருள் உணர்வுகளை நாம் வலுவாக்கிக் கொண்டால்
5.உயிருடன் ஒன்றி என்றும் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.

விண்ணுக்குப் போகும் உந்து விசை

விண்ணுக்குப் போகும் உந்து விசை

 

விண் வெளியில் உள்ள கதிரியக்கப் பொறிகள் மற்ற மண்ணுடன் கலந்திருப்பதைப் பிரித்து அணுக்கதிரியக்கமாக மாற்றி அதன் உணர்வின் வலிமை கொண்டு அதன் சேர்க்கையில் பல கலவை கொண்டு “உந்து விசையாக மாற்றி” விண்ணிலே ராக்கெட்டை ஏவுகின்றார்கள்.

அதனின் தொடர் கொண்டு… பூமியின் ஈர்ப்பின் அழுத்தத்தைப் பிளந்து பூமியைக் கடந்து சென்று… ஈர்ப்பற்ற நிலைகளில் சுழன்று கொண்டிருக்கின்றது ராக்கெட்டின் செயலாக்கங்கள் விஞ்ஞான அறிவால்.

இதைப் போன்று தான்
1.விண்ணுலகில் எவ்வாறு உயிரின் தன்மை உருப்பெற்றதோ மண்ணுலகில் அது ஈர்க்கப்பட்டு
2.பல நட்சத்திரங்களில் இயக்கப்படும் பொறிகள் கோள்களாக மாறி அந்த உணர்வின் அலைகள் படர்ந்து வருவதைத் துருவத்தின் வழி பூமி நுகர்ந்து
3.அதன் வழி தாவர இனங்களாக வளர்ச்சி பெற்று அதன் உந்து விசையாக அதனின் உணர்வு இயக்கப்பட்டு
4.அதன் தொடர் வரிசையில் அதனதன் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப ரூபங்கள் மாறி மனிதனான பின் மனிதன் தன்னிலை அடைகின்றான்.
5.துருவத்தை நுகர்கின்றான்… நுகர்ந்ததைத் தனக்குள் ஒளிசுடராக மாற்றுகின்றான்.

அகஸ்தியன் இதையெல்லாம் பெற்ற பின் தன் மனைவிக்கும் இதை ஓதுகின்றான்… மனைவி பெற வேண்டும் என்று விரும்புகின்றான்.

மனைவியோ தன் கணவனுக்குப் பெற வேண்டும் என்று அவர்கள் இரு உணர்வும் ஒன்றாகி… அது கருவாகி ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றார்கள் அகஸ்தியனும் அவன் மனைவியும்.

அதன் வழி விண் சென்ற அவர்கள் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள். ஆகவே கடவுள் எப்படி இருக்கின்றான் என்பதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

அதனை நாம் நுகர்ந்தால் அதன் வழியில் நாமும் அங்கே செல்ல முடியும்.

அகஸ்தியன் கண்ட பேருண்மைகளை எல்லாம் உங்களுக்குள்ளும் இப்பொழுது பதிவாக்கும் நிலை வருகின்றது.
1.பேரண்டத்தைக் கண்டுணர்ந்த அகஸ்தியன் உணர்வை நமது குரு தனக்குள் கவர்ந்தார்.
2.ஒளியின் சுடராக விண்ணின் ஆற்றலை அவன் கண்டான்… பூவுலகின் நிலையையும் அறிந்தான்… உயிரியலின் தத்துவத்தை அறிந்தான்.
3.பேரண்டத்திலிருந்து எவ்வாறு நுகர்ந்தது என்று மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அகஸ்தியன் தொடர்வரிசையை அறிந்தான்.
4.அதைத் தனக்குள் உருவாக்கினான்… கருவின் வித்தாக உருவாக்கினான்.
5.அந்த வித்தினைத் தான் எனக்குள்ளும் பதிவு செய்தான்
6.அவன் உணர்வின் துணை கொண்டு அந்த எண்ணங்களை எடுக்கப்படும் பொழுது விண்ணின் ஆற்றலை நான் நுகர முடிகின்றது.

அதில் விளைந்த உணர்வின் எண்ணங்களை வித்தாக ஊழ்வினையாகப் பதிவு செய்ய முடிகின்றது.

இதை நீங்கள் நினைவு கொள்வீர்கள் என்றால் அந்த உணர்வின் துணை கொண்டு மண்ணுலகை வென்று வானுலகின் உணர்வை நீங்கள் நுகர்ந்து கணவன் மனைவியாக இதை வளர்த்துக் கொண்டால்
1.உடலை விட்டுச் சென்ற பின் அதே விண்ணுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.
2.இது நிச்சயம்…!

அகண்ட பேரண்டத்தின் உண்மை நிலைகள்

அகண்ட பேரண்டத்தின் உண்மை நிலைகள்

 

மற்ற சூரியக் குடும்பத்திலும் நம்மைப் போன்ற மனிதர்கள் வாழ்கின்றார்கள்.
1.நம்மைக் காட்டிலும் வளர்ச்சி இல்லாத மனிதர்களும் உண்டு… வளர்ச்சி அடைந்தவர்களும் உண்டு.
2.இங்கே நமக்கு முடி உண்டு… முடி இல்லாது மொட்டைத் தலையாக உள்ளவர்களும் சூரியக் குடும்பங்களில் உண்டு.

நம் சூரியக் குடும்பத்தில் ஒரு பூமி இருக்கிறது என்றால் இரண்டு பூமி இருக்கக்கூடிய குடும்பங்களும் உண்டு. ஒன்று வளர்ச்சி உள்ளதாகவும் உண்டு… சிலது வளர்ச்சி இல்லாததும் உண்டு. இரட்டைக் குழந்தை என்று சொல்கிறோம் அல்லவா அது போல…!

இதையெல்லாம் விரிவாக்கமாக குருநாதர் ஒரு நாள் காட்டுகின்றார்.

சூரியக் குடும்பத்திற்குள் எல்லா இடத்திற்கும் பயணம் செய்வது வருடக் கணக்காகும் என்று சொல்கின்றார்கள். அகண்ட நிலையில் 2000 சூரியக் குடும்பத்திற்கும் போக வேண்டுமென்றால் எப்படி இருக்கும்…?

2000 சூரியக் குடும்பம் என்பது அகண்ட அண்டமாக இருக்கிறது, இதைக் காட்டிலும் எத்தனையோ அண்டங்கள் இருக்கின்றது.

அதனுடைய விரிவடைந்த நிலைகளை நீங்கள் பார்க்கப் போனால் மனிதனுக்கு ஆயுள் பத்தாது. ஆயுள் பத்தாது என்று மட்டுமல்ல… போகவும் முடியாது.
1.ஆனால் போக வேண்டும் என்றால் நம் குருநாதர் காட்டிய வழியில்
2.இந்த அருள் உணர்வுகளைப் பெற்றால் அதுபாட்டுக்குப் போய்க் கொண்டே இருக்கும்.

வான்வெளியில் நட்சத்திரங்களாக நம் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் 2000 சூரியக் குடும்பத்தின் ஈர்ப்பில் உள்ளது தான்.

நம் சூரியனைக் காட்டிலும் வலுவடைந்த பெரிய அளவில் உள்ள சூரியனும் சில பிரபஞ்சத்தில் இருக்கின்றது. ஒரே அளவாக இல்லை.

நீங்கள் ஒரு சமயம் இதையெல்லாம் பார்க்க நேர்ந்தால்
1.இரவிலே படுத்திருக்கும் பொழுது உங்களை மேலே அழைத்துச் செல்லும்.
2.எந்த உணர்வு பதிவானதோ ஆன்மாவிலே கலக்கும். பறப்பது போல் இருக்கும்.

ஒரு சிலர் பயந்து போய் எங்கேயோ போய் விடுவோமோ என்று எண்ணிப் பிடித்துக் கொண்டவர்களும் உண்டு. இதெல்லாம் வரும்.

ஏனென்றால் இந்த உணர்வுகள் இயக்கப்படும் போது
1.உங்கள் ஆன்மா அதனுடன் தொடர்பு கொண்டு வட்டமிடும்.
2.அதனுடைய உணர்வுகள் அறிவாக இங்கே உங்களுக்குள் வளரும்.
3.ஒரு விழுது பாய்ந்து தான் தாவர இனங்களுக்குள் வளர்ச்சி அடைகிறது…
4.அது போல் அகண்ட அண்ட்த்துடன் நீங்கள் தொடர்பு கொள்ள முடியும்

நீங்கள் இரவிலே கனவு காண்கிறீர்கள் என்றாலும் மற்ற மனிதர்கள் உடலிலிருந்து வரக்கூடியது… மற்றவர் சொல்லும் பொழுது அதைக் கேட்டிருந்தால் இரவில் உயிரிலே படும்.

இந்த உணர்வு அங்கே அழைத்துச் செல்லும். எங்கேயோ இருக்கின்ற மாதிரி இருக்கும்… பள்ளத்திலேயோ மேட்டிலேயோ மலை மீதோ எங்கெங்கோ செல்வதாகத் தெரியும்.

அந்தந்த பகுதியில் எந்தெந்த மனிதனுடைய உணர்வு விளைந்து அந்த நினைவாற்றல் இருந்ததோ அப்படி இயக்கப்பட்டு கனவுகளாக வருவதும் உண்டு.

இது எப்படியோ அப்படித்தான்…
1.அந்த அருள் ஞானிகள் உணர்வுகள் உங்களுக்குள் விளையப்படும் போது
2.அது உங்களை அங்கே அவர்கள் வாழும் எல்லைகளுக்கு அழைத்துச் செல்லும்…!

சப்தரிஷி மண்டலத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் அதற்குண்டான முகப்பு வேண்டும்

சப்தரிஷி மண்டலத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் அதற்குண்டான முகப்பு வேண்டும்

 

குருநாதரை விண் செலுத்துவதற்கு அவருக்கு ஒரு துணை தேவைப்படுகின்றது.
1.நேரடியாக எங்கும் போக முடியாது… உந்து விசை வேண்டும்.
2.முகப்பை எடுத்து எண்ணத்தைத் திசை மாறாது கொண்டு போக வேண்டும்.

திசை மாறிவிட்டது என்றால் வான வெளியில் மிதந்து விடும். அணுவின் தன்மை அடைந்தால் மற்ற கோள்களின் ஈர்ப்பிற்குள் சென்று விடும். சப்தரிஷி மண்டலத்துடன் இணையாது.

சந்திரன் இருக்கிறது என்றால் அங்கே செல்லும். அங்கே வளர்ச்சியற்ற அணுவாக இருக்கும். மீண்டும் அங்கிருந்து கடந்து செல்லும் திறன் இருக்காது. அங்கே அடைபட்டுப் போகும்.

இவ்வாறு எத்தனையோ வகைகளை குருநாதர் சொல்லித்தான் இப்பொழுது அதைச் செயல்படுத்துகின்றோம்.
1.குரு இல்லாதபடி எந்த நிலையும் இருக்க முடியாது.
2.குரு காட்டிய வழியினைப் பதிவு செய்தால் தான் விண்ணுக்குச் செலுத்த முடியும்.

கிணற்றுத் தவளை போன்று சுற்றிக் கொண்டு எடுப்பதென்றால் முடியாது.

20 வருட அனுபவத்தைக் கொடுத்துத் தான் அதைப் பெறச் செய்கின்றார். ஆகையினால் தான் உங்களுக்குள் அடிக்கடி இதைப் பதிவு செய்து நினைவுகளை ஒவ்வொன்றாகக் கொண்டு வருகின்றோம்.

அதற்குக் கணவன் மனைவி நீங்கள் இந்த முறைப்படி தியானம் எடுக்க வேண்டும். ஆன்மா வெளியே சென்று விட்டால் ஒளியின் கருவை உருவாக்க வேண்டும்.

காலை துருவ தியானத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். தன் கணவனுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் மனைவிக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று இரு உணர்வையும் ஒன்றாக்க வேண்டும்.
1.அதை உருவாக்கித் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வைப் பெற்றுச் சப்தரிஷி மண்டல ஈர்ப்புக்குச் செல்ல வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்திற்குச் செல்ல முடியாது. அங்கே இருக்க முடியாது
3.அந்த வட்டப்பாதையான சப்தரிஷி மண்டலத்தில் தான் சேர முடியும்.
4.அதற்குண்டான முகப்பை எடுத்து இணைத்துச் செலுத்திய பிற்பாடு தான் அங்கே சேரும்.

இராக்கெட்டைச் செய்கின்றார்கள் கம்ப்யூட்டரில் படங்களை எடுக்கின்றார்கள். அதைச் சேர்த்துக் கொண்டு முகப்பில் வைக்கின்றார்கள்.

விண்ணிலே செலுத்தப்படும் பொழுது அந்த முகப்பைப் பார்த்து அதனின் ஈர்ப்புக்குத் தான் கொண்டு போகும். கொஞ்சம் திசை மாறியது என்றால் வேறு எங்கே போகும்…! என்று சொல்ல முடியாது.

எந்த எந்தக் கோள்களைப் படமாக எடுத்துப் பதிவு செய்தார்களோ அதை இந்த முகப்பில் இணைக்க வேண்டும். அந்த உணர்வின் துனை கொண்டு அங்கே செல்லும்.

இதைப் போன்று தான்
1.உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஒவ்வொரு ஆன்மாக்களுக்கும் சப்தரிஷி மண்டல உணர்வை முகப்பாக இணைக்கின்றோம்.
2.அப்படி இணைக்காதபடி அந்த இடம் போய்ச் சேர முடியாது.

விலகிப் போய்விட்டால் வேறு பக்கங்களுக்குச் சென்று விடும். கரணம் தப்பினால் மரணம் என்பது போல பல வித்தியாசமான நிலைகள் இருக்கின்றது.

குரு செல்கிறார் என்றால் அது சரியான எல்லையை வைத்து அனுப்புவதற்கு எனக்குப் பயிற்சி கொடுத்தார். அங்கே செலுத்தும்படிச் செய்தார்.

1.அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்று வரிசைப்படுத்தி எனக்குச் சொன்னார்.
2.அது எல்லாம் சரியாக இருக்கிறது என்று தெரிந்து கொண்ட பிற்பாடு தான் உடலை விட்டுப் பிரிகின்றார்.
3.சப்தரிஷி மண்டல உணர்வை முகப்பில் எப்படி இணைக்க வேண்டும்…?
4.எவ்வாறு விண் செலுத்த வேண்டும்…? என்று எல்லாம் தெரிந்த பிற்பாடு தான் அவர் உடலை விட்டுப் பிரிந்து அங்கே சேர்கின்றார்.

குருவை விண் செலுத்திய பிற்பாடு தான் அங்கிருந்து அதிக அளவில் நான் சக்தியைப் பெற முடிந்தது. உங்களுக்கும் இப்பொழுது வழிகாட்ட முடிகின்றது.

உயிருடன் ஒன்றிடும் உணர்வை ஒளியாக மாற்றுவது தான் நமக்கு நல்லது

உயிருடன் ஒன்றிடும் உணர்வை ஒளியாக மாற்றுவது தான் நமக்கு நல்லது

 

ஒரு ஆடு புலியைப் பார்க்கின்றது… புலியோ அதைக் கொன்று தின்னும் நிலை பெற்றது. அதனிடமிருந்து தப்பிக்கும் சிந்தனை ஆட்டிற்கு வருகிறது.

புலியின் உணர்வே நினைவாகின்றது. நினைவின் உணர்வே உடலாகின்றது… ஆட்டின் உடலில் அது வலுப்பெறுகின்றது. அந்தச் சிந்தனை கொண்டு அதனிடமிருந்து தப்பிக்க அதனின் வலுப்பெறுகின்றது… அதுவாகின்றது.

மனிதர்களான நாம் இந்த உடலிலிருக்கும் போது
1.எனக்கு இப்படிச் செய்தானே… துன்பம் கொடுத்தானே என்ற இந்த சிந்தனை இந்த உணர்வின் தன்மை வருகிறது.
2.இந்த இடத்தை நாம் வலுவாக்குகின்றோம்… அந்த உடலுக்குள் சென்று விடுகின்றோம்.

ஆனால் உடலிலே வந்த தீமைகளை அகற்ற “மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…” என்று
1.அந்த உணர்வின் தன்மை… நம் சிந்தனையை அதற்குள் செலுத்தினோம் என்றால்
2.அதனின் உணர்வாகி அதனின் நிலைகள் கொண்டு மனித உடலில் ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.

இந்த உடலிலிருந்து தான் ஒளியாக மாற்றி அமைக்க முடியும். இன்னொரு உடலுக்குள் இழுக்கப்பட்டு விட்டால் மீண்டும் வேறு ஒரு உருவாக உயிர் நம்மை மாற்றிவிடும்.

ஆனால் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்கப்படும் பொழுது ஒளியின் தன்மை பெறுகின்றோம்.
1.அங்கே… உடல்கள் உருவங்கள் மாறுகின்றது.
2.இங்கே… ஒளியின் தன்மை பெறுகின்றோம்.

உயிர் ஒளியானது… மனிதனான பின் அறிவாக அறிந்து கொள்கிறோம். அறிந்திடும் ஒளியின் உணர்வாக விளைகின்றோம். மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உடலில் “சிந்தனை வந்த பின்பு தான்…” இதிலே உறைந்த உணர்வுகள் அதனின் இயக்கத்திற்கு வருகின்றது.

நான் கோபமாக இருக்கின்றேன் என்று வைத்துக் கொண்டால் எனக்கு அது சாதகமாக இருந்தால் நல்லது. நான் தவறு செய்கின்றேன்… நண்பன் என்னுடைய தவறுக்கு ஒத்துழைத்தால் இது நல்லதாகின்றது.

ஆனால் மாறாக… என் தவறைச் சுட்டிக் காட்டும் நிலை வந்தால் எனக்கு எதிரியாகின்றது. ஆக நல்லது நல்லதாக எண்ண முடியாது… கெட்டது கெட்டதாக எண்ண முடியாது.
1.தனக்கு ஒத்து வந்தால் நல்லது என்று எண்ணுகின்றோம்…
2.ஒத்து வரவில்லை என்றால் எதிரியாக்குகிறோம்.

மிளகாய் காரமானது தான். அதை அளவுடன் இணைத்தால் நல்லதாகிறது அதிகமாகப் போட்டுவிட்டால் ஏற்றுக் கொள்வதில்லை… குறைத்துப் போட்டு விட்டால் சப்… என்று ஆகிவிடுகிறது.

நல்லது நல்லதும் அல்ல… கெட்டது கெட்டதும் அல்ல.

1.ஒளியின் சரீரம் பெற்ற… என்றுமே நிலையாக இருக்கும் அந்த மகரிஷிகள் அருள் சக்திகளை எடுத்தால் அதுவே நமக்கு நல்லது.
2.உயிர் ஒளியாக நின்று எதையெல்லாம் தனக்குள் அறிவிக்கின்றதோ “உயிருடன் ஒன்றிடும் உணர்வை ஒளியாக மாற்றுவது தான் நமக்கு நல்லது…”

புறநிலைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பாதீர்கள்… விண் செல்லும் மார்க்கத்தை அறிய முற்படுங்கள்

புறநிலைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பாதீர்கள்… விண் செல்லும் மார்க்கத்தை அறிய முற்படுங்கள்

 

அன்று… ஆதிசங்கரரும் கோலமாமகரிஷியும் அவர்கள் உணர்வின் தன்மை கொண்டு தங்களுக்குள் விளைய வைத்ததைத் தன் சீடர்களுக்குள் பதிவு செய்தார்கள்.

அவர் மீது பற்று கொண்ட சீடர்கள்…
1.அவர்கள் எதை உணர்த்தினார்களோ அதைக் கொண்டு அந்த ஆன்மாவை உந்தித் தள்ளுகின்றார்கள்…
2.இருவரும் சப்தரிஷி மண்டலம் அடைந்தார்கள்.

நமது குருநாதர் எத்தனையோ கோடி நிலைகள் பெற்றிருந்தாலும்… “எனக்கு அந்தக் குருவின் ஆசி இருந்தால்…” மாட மாளிகைகளை… கூட கோபுரங்களைக் கட்டி விடுவேன்
1.”அவருடைய நாமத்தை உலகமெல்லாம் பரப்புவேன்…!” என்ற பக்தர்கள் தான் சிஷ்யர்கள் தான் இன்று பெரும்பகுதி உண்டு.
2.அதனால் பலன் இல்லை…!

அறிந்து கொள்ளும் ஆற்றல்கள்…. இந்த வாழ்க்கையில் அவர் எப்படி மந்திரம் செய்கிறார்…? இவர் என்ன செய்கிறார்…? அவர் என்ன செய்கிறார்…? என்ற நிலைகளை அறிய உங்கள் நாட்டத்தைச் செலுத்த வேண்டாம்.

காரணம்… எம்மை நாடி வருவோரின் ஏக்கம் எதுவோ அதன் வழி தான் அவருக்குள் உணர்வுகள் பதிவாகின்றது.

மந்திரத்தின் உணர்வைப் பதிவு செய்து கொண்டால் அதிலே தான் நோக்கம் இருக்கும்… மந்திரத்தின் செயலைக் கேட்க வேண்டும் என்றால் அது ஆழமாகப் பதிந்திருக்கிறது என்று தான் பொருள்.

அதன் மேல் எண்ணம் கொண்டு விவரங்களைத் தெரிந்து கொண்டால் அது தான் வளரும். இதிலிருந்து விடுபடும் வழிமுறைகள் எப்படி…? என்று கேட்டால் விடுபடும் உணர்வுகள் வளரும்.

அதாவது…
1.என்னிடம் கேட்ட உணர்வு கொண்டு தான் உங்களுக்குள் அது பதிவாகும்.
2.“கஷ்டமாக இருக்கிறது…” என்று சொல்லிக் கேட்டால் அந்தக் கஷ்டத்தையே வளர்க்க உதவும்.
3.கஷ்டத்தை நீக்க வேண்டும் என்று கேட்டறிந்தால் “கஷ்டத்தை நீக்கும் உணர்வுகள் விளையும்…”

கேட்டறிவோர் உணர்வின் தன்மை அது எதுவோ அதுதான் வளரும். அதனால் தான் கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகிறாய் என்று சொன்னது.

என் கஷ்டம் என்ன விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது…! என்றால்… அது வந்து விடும்.
1.இந்த மனித வாழ்க்கையில் இருந்து “நான் நல்ல நிலை பெற முடியுமா… மீள முடியுமா…? சந்தேகம்…!
2.மீள முடியாது என்ற நிலைகளில் “வலு இழந்து விட்டால்…” மீள முடியும் என்ற நிலை வராது.

ஆனால் மீள வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்பெற்றுக் கொண்டால் அந்த எண்ணம்… கொடுக்கும் வாக்கின் தன்மையைப் பதிவு செய்தால் அதன் வளர்ச்சிக்கு நிச்சயம் வரும்.

பெரும்பகுதியானவர்கள் இன்று கஷ்டத்தைப் பற்றித் தான் என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். இது எப்படி ஆனது…? என்ன ஆனது…? என்று கேட்கிறார்கள்.

உணர்வின் தன்மை இயக்கம் எப்படி ஆகிறது…! என்பதைப் பற்றி பல விளக்கவுரைகளை… பல முறைகளில் கொடுத்துள்ளேன். இது அவர்களுக்குள் பதிவாகவில்லை என்று தான் பொருள்.

1.இதிலிருந்து விடுபட்டு… நாம் மேற்கொண்டு விண் செல்லும் மார்க்கங்களை எண்ணி ஏங்கி… அதைப் பெற்று
2.அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று ஏங்கினால் அது பதிவாகும்.
3.அதன் உணர்வின் துணை கொண்டு தான் உடலுக்குள் அந்த நற்சக்திகள் விளையும் தன்மை வரும்.

பெண்கள் துணை இல்லையென்றால் சப்தரிஷி மண்டலம் செல்வது மிகவும் கடினம்

பெண்கள் துணை இல்லையென்றால் சப்தரிஷி மண்டலம் செல்வது மிகவும் கடினம்

 

தான் கவர்ந்து கொண்ட சக்தி எதுவோ அதைப்போல உயிருடன் ஒன்றி இணைந்து வாழ்வதே வசிஷ்டரும் அருந்ததியும் என்பது.

உடலில் இருக்கும் பொழுது தான் ஆண்பால் பெண்பால். உடலை விட்டுச் சென்று விட்டால் உறைந்தது ஆண்பால் தான்.

1.பெண்பால் என்பது உணர்வின் உணர்வுகள் இங்கே வருவது தான்.
2.அது இரண்டற இணைந்து விட்டால் ஆண்பால் பெண்பால் சேர்ந்து கலந்தே செயல்படும்… “சிவசக்தி…” என்பார்கள்.

ஆகவே பெண்கள் தான் ஆண்களைக் காட்டிலும் பெரும்பகுதி தனக்குள் சக்தி வாய்ந்த நிலையை உருவாக்கி ஏழாவது நிலை பெற்றுச் சப்தரிஷி மண்டலங்களாக உள்ளார்கள்.

ஆண்களைப் பற்றித் தான் பெரும்பகுதி சொல்கின்றார்கள்… பெண்கள் ரிஷித் தன்மை பெற்றது பற்றிச் சொல்லவில்லையே…! என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

காரணம்… சாஸ்திர விதிகள் அனைத்துமே பெண்களைப் பற்றி இழுக்குப்படுத்தித் தான் வெளிப்படுத்தி இருப்பார்களே தவிர உயர்ந்த நிலைகளைச் சொல்வதில்லை.

பதிவிரதையாக இருக்க வேண்டும் உத்தமியாக இருக்க வேண்டும் என்று பெண்களுக்குத் தான் கட்டுப்பாடு… ஆண்களுக்கு அப்படி இல்லை. எல்லா மதத்திலும் அப்படித்தான்… பெண்களைத்தான் பழித்து பேசியிருப்பார்கள்.

இன்று ஆணாக இருக்கலாம்…
1.ஆனால் உருவம் ஆகப்படும் போது பெண்கள் மீது மோகம் கொண்டால் அடுத்து இவர் பெண்ணாகத்தான் பிறப்பார்.
2.இன்று ஆண் பெண்ணாகப் பிறக்கின்றான்.

இதைப் போல சக்தி என்பது பெண்பால் தான். எது கவர்ந்து கொண்ட சக்தியோ வசிஷ்டரும் அருந்ததி போல கவர்ந்து கொண்ட சக்தியாகத்தான் இந்த உணர்வுகள் ஈர்க்கும்.
1.பெண்கள் தான் ஏராளமானோர் சப்தரிஷி மண்டலத்தில் (ஆண்பால் பெண்பால்) சிவசக்தியாக உணர்வின் இயக்கமாக இயக்கி வருகின்றனர்.
2.தன் கணவனின் எண்ணம் கொண்டு இணைந்திட்ட உணர்வுகள் சிவ சக்தியாக இயங்கிக் கொண்டுள்ளார்கள்.
3.தான் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எதுவோ உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக சிவசக்தியாக இன்றும் இருக்கின்றார்கள்.

ஆண்கள் அங்கே குறைவுதான்… பெண்கள் தான் அங்கே அதிகமாக இணைந்துள்ளார்கள். ஆண்கள் ஒளி நட்சத்திரமாக ஆன நிலைகள் குறைவுதான். பெண்களுடைய சக்தி உறுதி கொண்டு தான் அவர்கள் வளர்ச்சி பெற்றுள்ளார்கள்.

தங்கள் உடலிலே ஒரு கஷ்டம் வந்தாலும் பெண்கள் அதை எண்ணுவதில்லை. விட்டுக் கஷ்டத்தைப் போக்க மில்லில் வேலை செய்கிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும் காலையில் எழுந்து குடும்பத்திற்கு வேண்டிய அனைத்தையும் சமைத்து எல்லோருக்கும் சாப்பாடு போட்டு அவர்களும் சாப்பிட்டுவிட்டு வேலைக்கு முதலிலே வந்து உற்பத்தியையும் அதிகமாக எடுத்து விடுகின்றனர்.

பெண்களுக்கு வலிமை அதிகம் ஆண்களுக்குக் குறைவுதான். நான் தவறாகச் சொல்கிறேன் என்று யாரும் எண்ண வேண்டியதில்லை…! இயற்கையின் உணர்வின் சக்தி அதுதான்.

அவர்கள் உடலில் முடியவில்லை என்றாலும் வலுவான எண்ணங்கள் கொண்டு சப்தரிஷிகளின் அருள் சக்தி பெறக்கூடிய தகுதி அவர்களுக்குத் தான் உண்டு.
1.எந்த அளவுக்குப் பெண்கள் தனக்குள் அதை வளர்க்கின்றார்களோ இந்த எண்ணம் உலகைக் காக்கும் நிலைக்கே வரும்.
2.சக்தி இல்லை என்றால் சிவம் இல்லை.

மற்றதை வளர்த்திடும் நிலையாக தன் இனத்தை வளர்த்திடும் காத்திடும் நிலைகள் பெற்றவர்கள் தான் பெண்கள். எதனின் உணர்வு கொண்டு கருத்தன்மையாகிக் குழந்தையை உருவாக்குகின்றார்களோ அந்த மெய் உணர்வை வளர்க்கும் ஆற்றல் அவர்களுக்குத்தான் அதிகமாக உண்டு.

எதனின் பற்று அதிகமாகின்றதோ அதனின் தன்மை கொண்டு வளர்த்திடும் சக்தியும் சக்தி அதிகமாகின்றது. பெண்கள் தான் அதிக அளவில் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்துள்ளார்கள்.

வசிஷ்டரும் அருந்ததியும் போன்று இந்த உடல் தனக்குள் கவர்ந்து கொண்ட சக்தி எதுவோ அதுதான் விசிஷ்டாத்வைதம் என்று சொல்வது. எந்த உணர்வின் தன்மையை உடலாக ஆக்கியிருக்கின்றதோ… சக்தியாக எடுக்கின்றோமா… இது இணைந்தே அங்கே செயல்படும்.

ஆக பெண்களுக்கு தான் அதிகச் சக்தி உண்டு…! ஆனால் இதனின் விளக்கம் மதங்களிலே காண முடியாது… தரம் குறைத்துத் தான் காட்டி இருப்பார்கள் மற்றவர்களுக்கு அடிமையாக்கித் தான் காட்டியிருப்பார்கள். ஆனால்
1.அவர்கள் துணை இல்லை என்றால்
2.சப்தரிஷி மண்டலம் செல்வது மிகவும் கடினம்…!