நீங்கள் ஒவ்வொருவரும் அருள் ஞானிகளாக அருள் மகரிஷிகளாக உருவாகுங்கள்

நீங்கள் ஒவ்வொருவரும் அருள் ஞானிகளாக அருள் மகரிஷிகளாக உருவாகுங்கள்

 

நமது வாழ்க்கையில் சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு வேதனை என்ற நிலைகள் படுவோரைப் பார்த்து நம் நல்ல குணங்கள் கொண்டு அவர்களுக்கு உதவி செய்தாலும் நம் நல்ல குணங்களை அந்த விஷம் என்ற குணங்கள் திரை மறைவாக்கி விடுகின்றது. பின் வேதனை என்ற உணர்வு தான் நமக்குள் வருகின்றது

உதாரணமாக நல்ல பலகாரத்தைச் செய்து வைத்திருக்கின்றோம் என்றால்
1.அதன் மேலே மிளகாய்ப் பொடியைத் தூவி விட்டால் அந்த வாசனை தான் வரும்.
2.அதிலே விஷத்தைத் தூவி விட்டால் அது தான் இயக்கம் ஆகும்.
3.ஆனால் பலகாரத்தின் மீது நல்ல நறுமணங்களைப் போட்டால் நறுமணத்தின் தன்மை தான் வரும்

ஆனால் சுவைக்கும் போது தான் வித்தியாசங்கள் தெரிய வரும்.

அதைப் போன்று தான் மேலெழும் மணங்கள் நம் உடலின் அணுக்களில் படும் பொழுது
1.அந்த மேலெழுந்த உணர்வுகளே நம்மை இயக்குகின்றது
2.அது சிறு திரையாக மறைத்து நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் இயங்காதபடி தடைப்படுத்தி விடுகின்றது.

இதைத்தான் சித்திரை என்று சொல்வது.

சந்தர்ப்பத்தால் இப்படி மூடி மறைக்கும் அத்தகைய சிறு திரைகளை நீக்கி
1.நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களையும் தூய்மையாக்கிப் பொருளை அறியும் ஞானங்கள் பெற்று
2,எல்லாவற்றையும் அறிந்திடும் அறிவின் ஒளியாக நாம் மாற்ற வேண்டும்.

நமது வாழ்க்கையில் மகிழ்ச்சியும் பேரின்பமும்… பெரு வாழ்வு பெறும் அழியா ஒளிச் சரீரத்தை உருவாக்கும் நிலையாக… ஒவ்வொரு நிமிடத்திலும் மகரிஷிகளின் ஆற்றலைப் பெற்று
1.நமக்குள் தீய குணங்கள் தூண்டப்படும் போது நல்ல குணங்களை மறைக்கச் செய்யும் அந்தச் சிறு திரைகளை நீக்கி
2.அருள் மகரிஷிகளின் துணை கொண்டு அருள் ஒளிச் சுடராகப் பெருக்கி
3.என்றும் பேரின்பப் பெருவாழ்வு பெறும் அந்தத் தகுதியை நாம் பெறுவோம்.

அதற்காக வேண்டி… ஒவ்வொரு நாளும் காலை துருவ தியானத்தில் அருள் சக்திகளைப் பெருக்கி
1.ஒவ்வொருவரும் இருளை அகற்றிடும் அருள் ஞானிகளாக மாறுதல் வேண்டும்.
2.ஒவ்வொருவரும் அருள் ஞானத்தை உருவாக்கும் ரிஷிகளாக மாற வேண்டும்.
3.நமது குருநாதர் அனைத்து அண்டங்களையும் அறியும் தகுதிகளை நமக்கு ஏற்படுத்துகின்றார்.
4.அவர் காட்டும் வழியில் அதனை நமக்குள் வளர்த்திடல் வேண்டும்.

ஆகவே… பிறவியில்லா நிலைபெறும் எல்லையைக் குறியாக வைத்து இந்த வாழ்க்கையில் எத்தகைய துன்பங்கள் வந்தாலும் அதை அகற்றிவிட்டு அருள் ஞானத்தை உங்களுக்குள் பெருக்கிப் பேரின்பம் பெறும் அருள் ஞானிகளாக வளருங்கள் வாழுங்கள்.

உங்களுடைய பார்வையில் பிறருடைய தீமைகளை அகற்றும் அருள் சக்திகளை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள்
1.உங்கள் பார்வையில் தீமை உங்களை நாடாது அருள் பாதுகாப்பு என்ற உணர்வின் வலிமையைப் பெறுங்கள்.
2.வலிமை பெற்ற அருள் ஞானிகள் உணர்வை உங்கள் உடலுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

அருள் வழி வாழ்வோம்… மெய் வழி வாழ்வோம்… மெய் ஞானிகள் அருள் வட்டத்தில் வாழ்வோம்.

தன் மனநிலையில் இருந்து தான் மடிகின்றான்… வாழ்கின்றான்… மனிதன்…!

தன் மனநிலையில் இருந்து தான் மடிகின்றான்… வாழ்கின்றான்… மனிதன்…!

 

கல்கியில் வந்த உலகம் சுற்றும் நிலையில் கல்கிக்கே மீண்டும் வருகின்றது. இந்நிலையில் வடிகட்டி வந்தவர்கள் தான் கல்கியில் அவதரிக்கின்றார்கள்.

இந்நிலையில் கல்கியில் அவர்கள் நிலையை வைத்துத்தான் பிறிதொரு உலகம் வந்திடுமப்பா. அந்நிலையில் மண்டலங்களின் தன்மை மாறுபடுகின்றன. இவ்வுலகிற்கும் கல்கியில் வரும் உலகத்திற்கும் மாறுபடுகின்றது. மனிதனின் எண்ணமும் செயலும் மாறுபடுகின்றன.

அந்நிலையில் வாழ்பவர்கள் உயர்ந்த எண்ணத்தில் அந்நிலையை எய்திடத்தான் இப்பாடங்கள் எல்லாம்.
1.இந்நிலையில் உள்ள அற்ப ஆசைகளை மறந்து பெருநிலை ஏய்திடப்பார்.
2.வாழ்ந்து என்ன பயன்…? வாழ்ந்து என்ன பயன்…? என்கின்றார்கள்… வாழ்ந்த பயனை எல்லாம் கல்கியில் கண்டிடலாம்.

பெருநிலையை எய்திடவே பெருநிலையை எய்திடவே என்ற எண்ணம் புரியாத மனிதர்கள் வாழும் வாழ்க்கை இது.

பெருநிலை எய்திடு என்பது இவ்வுலக வாழ்க்கையில் சுற்றி வந்தவர்கள் எல்லோரும் பெருநிலை எய்திk கலகிக்கு வருபவர்களே.
1.எல்லாச் சித்தர்களும் ஞானிகளும் காலம் காலமாகத் தவம் இருந்த தவசிகளும்
2.பெருநிலையை எண்ணித்தான் கல்கிக்கு வருகின்றார்கள்… அவர்களுடன் கலந்துவிடலாம்.

இக்கலியில் இப்பொழுது வாழும் மனிதர்களில் முதல் ஜென்மத்தில் விட்ட குறையை இந்த ஜென்மத்தில் எய்தி விட்டால் அப்பெருநிலையான கல்கியில் நாமும் கலந்திடலாம்… பல கோடித் தேவாதி தேவர்களுடன். பாட நிலை புரிந்ததா…?

விடிய விடியக் கேட்டுவிட்டு விக்கல் நிற்க என்ன மருந்து…? என்று கேட்டால்
1.நினைவின் எண்ணத்தினால் வருவது தான் அவ்விக்கல். அவ்விக்கலுக்கே மருந்து தேடினால் விக்கலுக்கு ஏதப்பா மருந்து…?
2.விக்கலுக்கு மருந்து இல்லை… எண்ணும் எண்ணத்திற்கும் மருந்து இல்லை… விடியும் விடிவிற்கும் மாற்றில்லை.
3.ஈசனின் சக்தியில் உதித்ததப்பா உனக்குள்ளே அவ்வண்ணம்.
4.ஜெபநிலையில் மனநிலையைக் கலந்திடப்பா உன் நிலைக்கே புரிந்துவிடும் உன் நிலை என்ன…? என்று.

இன்றுள்ள மனிதர்களுக்கு ஆயுள் நிலை அதிகரித்துள்ளது என்கிறார்கள் அறிவு நிலையும் ஆயுள் நிலையும் ஆண்டவன் அளித்த பொக்கிஷங்கள். அறிவினால் ஆயுளை வளர்க்கின்றான் இக்கலியில் மனிதன்.

அவன் எண்ணம் அவன் வைத்தியத்தில் வந்தது என்று… இல்லையப்பா எண்ணத்தில் வந்ததப்பா ஆயுள் நிலை. ஜீவ எண்ணத்தில் வந்ததப்பா அவ்வாயுள் நிலை.

மனித உடலில் ஆசை உள்ளவன்… தான் வாழ வேண்டும் என்ற ஆசையுடன் எண்ணுகின்றான் அவ்வீசனை. அவன் எண்ணத்தின் வடிவினிலே அவனுள் இருக்கும் ஈசனே அவனைச் சுற்றுகின்றான். அவ்வெண்ணத்தின் தன்மையினால் அவனின் ஜீவனும் வாழ்கின்றது

1.எண்ணத்தைக் குறுக்கிட்டு… வாழ்ந்து என்ன பயன்…? இருந்து என்ன புண்ணியம் வரும்…? என்று
2.வரும் வியாதியைக் தாங்கிக் கொள்ள முடியாமல் அவ்வெண்ணத்திலே சுருங்கி விடுகின்றான்
3.அவன் உடலில் உள்ள உறுப்புகளும் உணர்வுகளும் இவ்வெண்ணத்தினுள்ளே சுருங்கி விடுகின்றன.

ஆயுள் முடிந்து இறக்கின்றான் என்பது அல்ல. அவனின் “எண்ணம் சுருங்கி… மனம் சுருங்கி… பெரும் பயத்தில் உள்ளவனிடம்… “சோர்வு நிலையில் பிரிந்து செல்வதுதான் ஆவியின் நிலை…”

வாழ்ந்திட வேண்டும் என்று ஆசை உள்ளவன் வாழுகின்றான் பல நாட்கள்.
1.உயிர் பிரிவது எல்லாம் காலன் (எமன்) பிரித்துச் செல்வதல்ல
2.இவனின் எண்ணத்தாலும் சோர்வாலும் சோகையினாலும் வருவதே அவ்வியாதிகள்.
3.அவ்வியாதியில் உள்ளவன் எண்ணும் எண்ணத்திலேயே… “தன் உயிர் பிரிந்து விடும்” என்ற பயத்திலேயே பிரிந்து செல்வது தான் அவ்வாவி.

எந்நிலையில் உள்ளவனும்… “வாழ வேண்டும்” என்று ஆசை இருந்தால் தன்னுள் இருக்கும் ஈசனின் சக்தியை ஒருநிலைப்படுத்தி வேண்டுபவனெல்லாம் வாழ்கின்றான். மருந்தும் மாயமும் அல்ல பல நாட்கள் வாழ்வதெல்லாம்.

பிறப்பு இறப்பு என்பதெல்லாம் ஆண்டவன் இட்ட பிச்சை என்கின்றோம். இயற்கை என்கின்றோம். எதுவப்பா பிச்சை எதுவப்பா இயற்கை…?

அணுவின் பாடத்தையும் ஆவியின் பாடத்தையும் எண்ணிப் பார்த்தால் பிறப்பு இறப்பு எல்லா இரகசியங்களும் புரிந்துவிடும். இன்றைய ஜீவாதாரத்தின் பாடங்கள் புரிந்ததா…?

பிறப்பு இறப்பு என்பதைப் புரிந்து கொண்டீர்களா…? தன் மனநிலையில் இருந்து தான் மடிகின்றான்… வாழ்கின்றான் மனிதன்.

ஜெப அருளைத் தந்திடுவாய்
ஜெபமெல்லாம் ஜெபித்திடவே
ஜெப அருளைத் தந்திடுவாய்
ஜெபித்திடுவேன் ஈஸ்வரனை
ஜெபித்திடுவேன் அவன் சக்தியை
ஜெபித்திடுவேன் ஓம் என்ற நாதத்தில்
ஜெபித்திடுவேன் ஜெபித்திடுவேன் ஓம் ஈஸ்வரா
ஜெபித்த நிலையில் நீ வந்து ஜெபமாக்கித் தந்திடுவாய்.

அகஸ்தியனைப் (துருவன்) பற்றிய உண்மைகள் பலவாறு திரிபுகள் ஆகிவிட்டது

அகஸ்தியனைப் (துருவன்) பற்றிய உண்மைகள் பலவாறு திரிபுகள் ஆகிவிட்டது

 

அகஸ்தியன் என்று கூறும் அந்தச் சிசு தாய் கருவிலே இருக்கப்படும் போது… தாய் தந்தையர் அவர் உடலில் அரைத்துப் பூசிய நஞ்சினை வென்றிடும் பச்சிலை மூலிகைகள் தாவரங்கள் மணங்களின் அந்த முலாம்களை நுகர நேர்கின்றது.
1.நுகர்ந்த உணர்வுகள் அது கருவிலே இணைகின்றது
2.இணைந்து நஞ்சினை வென்றிடும் அணுக்களாகப் பெருகுகின்றது

இப்படிப் பத்து மாதங்களும் பெற்றுப் பிறந்த குழந்தைதான் பிறந்த பின் சூரியனை நேரடியாக உற்றுப் பார்க்கின்றது. சூரியனைப் பார்த்தால் நமக்கெல்லாம் கண் கூசுகின்றது
1.ஆனால் மோதலில் ஒளிப் பிளம்புகள் வெளி வருவதை இவன் உற்றுப் பார்த்து
2.அந்த உணர்வின் தன்மையைக் கண்டு சிரிக்கின்றான்… மகிழ்கின்றான்.

இந்தப் பிரபஞ்சத்தையும்… அதன் தொடர் அலைவரிசைகள் எங்கே செல்கின்றது என்பதை இளமைப் பருவத்தில் அவன் உணர்கின்றான் மகிழ்கின்றான்…! இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் நிலை இல்லை.

27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து கவர்வதும்… அதன் உணர்வுகள் ஒரு நட்சத்திரத்திற்கு இன்னொரு நட்சத்திரம் மோதுண்டு மத்தாப்பைப் போல் பொறியலைகள் மாறுவதும்… ஒரு உணர்வுக்கு ஒரு உணர்வு மாறுபட்டு மின் அணுக்களாக மாறுவதும்… இதைப் போன்று வேடிக்கைகளைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றான்.

1.விஷத்தை அடக்கி அந்த உணர்வின் இயக்கமாக வரும் பொழுது
2.அவன் நுகரும் உணர்வுகள் அவனது உயிர் இதற்குள் அந்த ஞானத்தின் வழித் தொடராக உருவாக்குகிறது
3.ஒளியின் சிகரமாக எதையும் அறியும் அறிவாக அந்தப் பிஞ்சு உள்ளத்திற்குள் விளைகின்றது… வெளிப்படுத்தும் உணர்வு இல்லை.
4.ஆனால் நுகர்ந்த உணர்வு அவனுக்குள் விளைகின்றது.

இப்படி அவன் வளர்ந்து வரும் நிலைகளில் அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு காடுகளுக்குள் சென்றால் மற்ற உயிரினங்கள் மிருகங்கள் விஷ ஜந்துக்கள் எவையும் இவர்கள் அருகில் வருவதில்லை.

ஐந்து வயது வரப்படும் பொழுது தனித்து இவன் காட்டுக்குள் சென்றால் மிருகங்கள் அனைத்தும் இவனைக் கண்டு பதும்பி வருவதும்… இவனுக்குப் பின் வருவதும்… இப்படி காட்டுக்கே இவன் ஒரு அரசன் ஆகின்றான்.

அதே சமயத்தில் இவனைப் பின் தொடர்ந்து சென்றால் அங்கே மக்கள் அனைவரும் மற்ற கொடூர மிருகங்களிடமிருந்து காக்கும் பண்பும் பெறுகின்றனர்.

பிற்காலங்களில் துருவனை அரசன் என்று வைத்தார்கள் அதற்குப்பின் அவனுடைய சரித்திரம் வராது. அவன் கடும் ஜெபம் எடுத்தான் என்று இருக்கும்
1.ஆனால் அரசன் என்ற நிலைகள் கொண்டு தான் காட்டினார்களே தவிர
2.அந்தத் துருவன் எவ்வழியில் விண்ணுலகம் சென்றான்…? என்ற நிலைகள் இல்லை.

ஆகவே புலஸ்தியர் சொன்னார் என்ற காவியங்களில் எடுத்திக் கொண்டால்… ஓர் அரசனுக்கு இரண்டு மனைவிகள்… அவரவர்களுக்குக் குழந்தைகள் உண்டு. அரசனுடன் பழகி இருக்கும் குழந்தையை தன் மடி மீது வைத்து அந்தத் தாய் கொஞ்சுகின்றது. இன்னொரு தாயின் மகன் (துருவன்) தன் தந்தையிடம் வந்து அமர்ந்து கொஞ்ச வேண்டும் என்று வரப்படும் பொழுது இந்த்த் தாய் அவனைக் கொஞ்ச விடாது தடுக்கின்றது.

ஆகையினால் அவன் வெறுத்துக் கொண்டு காட்டுக்குள் சென்றான்… தவம் இருந்தான் என்று உண்மைக்கு மாறாக உண்மையின் இயக்கங்களை அறியாதபடி தவறின் முறைகளைக் காட்டிவிட்டார்கள்.

துருவனின் உண்மை நிலைகளை நாம் அறிந்திடாது அரசர்களுக்கு உகந்த நிலைகள் கொண்டு பல நிலைகளைச் சொல்லி காவியங்களைப் படைக்கச் செய்து அசுர உணர்வுகளும் மற்ற குணங்களும் என்ற நிலைகளில் பல பல காவியங்களாக மாற்றி மகாபாரதம் இராமாயணம் போன்ற நிலைகளைக் காட்டுகின்றார்கள்.

கந்தபுராணம் சிவபுராணம் என்று வந்தாலும் விநாயகன் என்ற நிலைகள் அகஸ்தியன் வணங்கினான் அதனால் அவனுக்குச் சக்தி ஏற்பட்டது அவனிடம் எதுவும் எதிர்த்துச் செய்ய முடியாது என்று இப்படி அகஸ்தியன் கதைகளைச் சாற்றி அதனுடைய முழுமையைக் காட்டாதபடி விட்டுவிட்டார்கள்.

1.காவியத் தொகுப்புகளை ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு தக்கவாறு வெளிப்படுத்தி
2.நூல்களை படித்தவர்கள் உண்மை நிலைகளை அறியாது தான் படித்ததை தனக்குத் தெரிந்ததைப் பெரிது என்று வாதித்துக் கொண்டிருப்பதும்
3.உண்மை நிலைகள் உணராதபடி இதனைச் சட்டமாக்கப்பட்டு மந்திரங்களாக ஜெபிக்கப்பட்டு
4.அதைக் கேட்டுப் பதிவான நிலைகள் கொண்டு அவர்கள் இறந்தால்… இறந்த பின் அதே மந்திர ஒலிகள் கொண்டு
5.அந்த ஆன்மாக்களைத் தனக்குள் கைவல்யப்படுத்தும் நிலையாகத் தான் வருகின்றது.

அகஸ்தியனைப் பற்றிய உண்மைகள் காலத்தால் இப்படித் தான் திரிபுகள் ஆகிவிட்டது.

ஜீவாதாரம் – பிழைக்கும் வழிக்குத் தேவையான சொத்து

ஜீவாதாரம் – பிழைக்கும் வழிக்குத் தேவையான சொத்து

 

ஜீவன் பிறந்து அந்த ஜீவன் வளர்வதற்கு இந்த ஜீவனுக்கு ஆகாரம் தேவை. எல்லா ஜீவராசிகளுக்குமே ஆகாரம் தேவை. மற்ற ஜீவராசிகள் எண்ணமெல்லாம் தன் ஆகாரத்தை எந்த நிலையில் பெறுவது…? என்ற ஒரே குறிதான்.

ஜீவன் எடுத்து முடியும் வரை அதன் எண்ணமெல்லாம் அதன் ஆகாரத்தை எடுத்துப் புசித்து… உண்டு வாழ்ந்து மடிவதுவே.

ஆறறிவு படைத்த ஜீவன் உள்ள மனிதனுக்கு அவ்வாகாரத்தை அடைவதற்குத் தன் அடுத்த அறிவைப் பயன்படுத்துகின்றான். அடுத்த அறிவு என்பது ஜீவராசிகளுக்கு உள்ள அறிவை விட மனித அறிவு உயர்ந்தது.

ஐந்தறிவு ஆறறிவு என்கின்றார்கள். எண்ணப்படி அல்ல. அவ்வறிவு ஆவி உலகத்தின் பாடத்தில் பகர்ந்துள்ளேன்… மற்ற மிருக ஜீவராசிகள் எப்படிப் பிறக்கின்றன…? என்று.

எறும்புக்கும் ஐந்து அறிவு தானா…? யானைக்கும் ஐந்து அறிவு தானா…? இவர்கள் சொல்வது போல் ஜந்துகளுக்கு ஐந்து அறிவு அல்ல… மனிதனுக்கு ஆறு அறிவும் அல்ல.
1.அவனவன் செய்த பாவம் புண்ணியங்களில் எடுத்திட்ட பிறப்பிற்கு இவன் மனிதனாகின்றான்
2.அது செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ப மிருகமாகின்றது மற்ற ஜீவராசியாகிறது.

மனித உடலில் உள்ள எல்லோருமே அவர்களுக்கு அளித்த ஆறு அறிவைப் பயன்படுத்துகிறார்களா…? ஆறு அறிவு தான் எல்லா மனிதர்களுக்கும் அளித்துள்ளானா அந்த இறைவன்…?

ஆறு அறிவு அல்லப்பா அவ்வறிவு. ஆறுமுகா என்று சொல்கின்றோம் ஆறுமுகனுக்கு ஆறுமுகங்கள் இருந்தனவா…? எண்ணி வந்தானா இம்மனிதன்…?

ஆறுமுகா என்பதன் பொருளே…
1.ஆறு வகைக் குணங்கள் படைத்த மனித மனத்திற்கு ஒத்துத் தான்…
2.கடவுளுக்குப் பெயர் வைத்து விட்டான் ஆறுமுகன் என்று.

இறைவன் சக்தியில் மனிதனுக்கு அளித்துள்ள குணங்கள் ஆறு. நற்குணங்கள் ஆறு. அவன் உடலில் உள்ள பல கோடிக் குணங்களைப் பகர்ந்திட்டால் அவன் எண்ணி வைத்த மனிதர்களின் ஆறு குணங்கள் என்னப்பா…?

ஆறு அறிவு படைத்த மனிதன் என்பதெல்லாம் மனிதனில் இருந்து மாறுபடும் ஜீவராசிகளுக்கு மனிதனின் நிலை மாறுபடுகின்றதல்லவா…! மற்ற ஜீவனுக்கும் மனிதனுக்கும் உள்ள நிலையைப் பிரித்துக் காட்டிடப் பகர்ந்திட்டேன் இவையெல்லாம்.

மனிதன் ஜீவிப்பதற்கு அவனுடைய “ஜீவாதாரம்” மிக முக்கியம். மனிதன் நிலையும் மிருகத்தின் நிலையும் மாறுபடுகின்றது என்றேன். மனிதனின் நிலையில் இருந்து அவன் வாழ்வதற்கு ஜீவனுள்ள ஜீவாதாரத்திற்குப் பொருள் முக்கியம்.

இன்றுள்ள மனிதர்களுக்குப் பொருள் முக்கியம். ஆனால் ஆதியில் மனிதன் அன்னம் புசித்திடவில்லை. தன் இனத்தைத் தன்னைத்தானே அடித்து உண்டிட்டான்.

இராமாவதாரத்திற்கு முன்பு மனிதர்கள் எல்லாம் மிருக நிலையில் இருந்தவர்கள் தான். ஒன்றை ஒன்று அடித்துத் தன் பசியைப் போக்கிக் கொண்டவர்கள்.

பிறகு ஒரு நிலையில்… மிருகத்தின் தன் இனத்தைத் தவிர மற்ற இனத்தை அடித்துப் புசித்தார்கள். அதற்கு அடுத்த நிலையில் வந்தவர்கள் தன்னிச்சையில் வளர்ந்த காய்கறி இலைகளைப் பறித்துப் புசித்தார்கள்.

அந்நிலையில் ஒரு உலகம் சுழன்று கொண்டிருந்தது. அவ்வுலக நிலை மாறி… அந்நிலையில் இருந்து மீண்டவர்கள் இராமாவதாரத்தில் வந்து தேவர்கள் என்ற பெயருடன் புதிய உலகம் கண்டார்கள்.

இராமாவதாரத்தின் சுழற்சியில் வந்த கடைசிக் கலி இது. இக்கலியின் தன்மை மாறி கல்கி சுழலப் போகின்றது.

இராமாவதாரத்தில் இருந்து தான் இந்த ஜீவாதாரத்திற்கு பொருள் தேடி தன் வழியில் அப்பொருளைத் தேடிப் பக்குவம் செய்து புசித்திட்டான். இராமாவதாரத்தில் இருந்த நிலை பெரும் நிலையப்பா.

காலப் போக்கில் கிருஷ்ணாவதாரத்தில் வந்ததப்பா பெரும் கஷ்டங்கள் எல்லாம். ஆதியில் மனிதன் மனிதனையே அடித்துப் புசித்திட்டான். இராமாவதாரத்தில் இருந்த உலகத்தில் தப்பி வந்தவன் தான் கிருஷ்ணாவதாரத்தில் உதித்திட்டான்.

அந்நிலையில் ஜென்மங்கள் மாறி கிருஷ்ணாவதாரத்தில் வந்தவர்கள் அனைவரும் ஒருவனை ஒருவன் வஞ்சனையாலும் பெரும் சூழ்ச்சினாலும் சிக்க வைத்துத் தன் பொருளைச் சம்பாதித்து மகிழ்ந்தான்.

அடுத்த அவதாரத்தில் வந்தவர்கள் எல்லோரும் தன் நிலையை உயர்த்திட… உயர்த்திட என்பது அவர்கள் வழியில் பொருளைச் சேர்த்து வைத்திடப் பெரும் புதையல்… பொக்கிஷம் என்றதெல்லாம் கிருஷ்ணாவதாரத்திற்கு மறு அவதாரத்தில் வந்தவர்கள் எல்லோரும் “புதைத்து வைக்கும் நிலையை” உண்டு பண்ணினார்கள்.

அந்நிலையில் இருந்து வந்த இக்கலி மனிதர்கள் தான் செயற்கை யுகத்தைக் கலந்து விட்டார்கள் காலப்போக்கில் செயற்கையின் தன்மைக்குப் பொருளைத் தேட… “மிக முக்கியமான ஜீவாதாரத்தின் வழியையே” மாற்றி விட்டார்கள்.

ஜீவன் தோன்றி வளர்வதற்கு அப்பொருள் முக்கியம் அப்பா.
1.தன் ஜீவனை வளர்த்திடத் “தன் வாழ்க்கைக்கு வேண்டியதை” எண்ணுவதில்லை இம்மனிதர்கள்.
2.பெரும் செயற்கையின் காலத்தில் தள்ளுகின்றார்கள் இம்மனிதர்கள்.
3.இச்செயற்கை ஆசையின் உந்தலினால் தான் ஜீவாதாரத்தின் தன்மையை மாற்றித் “தான் மகிழ” என்ற நிலையையும் எடுக்கின்றார்கள்.

ஜீவாதாரத்தை மறந்து மதம் மதம் என்று செயற்கையுடன் கலக்கி விட்டார்கள். தான் பிழைக்கும் வழிக்கு என்கின்றார்கள்… தான் பிழைக்கும் வழிக்குப் பெரும் சொத்தைச் சேர்க்கின்றார்கள்.

பிழைக்கும் வழிக்குச் சொத்து எதற்கப்பா…? சொத்து என்று சேர்ப்பது என்னப்பா…? அவர்கள் வழியில் “பணம் காசு தான் சொத்து” என்கிறார்கள். பெரும் சொத்து அதுவல்லப்பா.

தான் பிறந்து வளரும் நிலையில்
1.தன் ஜீவாதாரத்தில் “போதும்…” என்ற நிலையில் பெற்ற பயனை எடுத்து
2.பெற்ற மக்களுக்கும் நல் போதனையில் நல்லறிவு புகட்டி தர்ம நியாயம் அளித்து
3.தான் பெற்ற மக்களை நல் உணர்வுடன் வளர்ப்பவனும்
4.தான் என்றால் யார்…? என்று புரிந்து நடப்பவனும் அடைந்த சொத்து தானப்பா பெரும் சொத்து.

இக்கலியில் அந்நிலையில் வாழ்வது பெரும் அரிது… அரிதப்பா அரிது. இக்கலியிலிருந்து தப்புவது அரிது. கலியில் உள்ள மனநிலை எல்லாம் மற்றவனைப் பார்த்துத் தான் தன் நிலையில் வாழ்கின்றான்.

இது புரிந்ததா…?

1.அவன் அந்நிலையில் வாழ்கின்றானே – தன் நிலை அப்படி இல்லையே…!
2.தானும் அவனைப் (மற்றவனை) போல் வாழ்ந்திட முடியாவிட்டால்
3.அவனைப் பார்த்துத் துவேஷ எண்ணமும் தன் நிலையில் பெரும் சோர்வும் அடைகின்றான்.

இந்நிலையில் உள்ளவனின் நிலைதானப்பா இக்கலியில் உள்ளவர்கள் நிலையெல்லாம். பெரும் பேராசைக்காரனப்பா இக்கலியின் மனிதன். இவன் விட்ட சுவாசத்தினால் இக்காற்று மண்டலமே கரியாகிவிட்டதப்பா. இந்நிலையில் வளரும் பயிர்களை உண்டவன் அவன் எப்படியப்பா இருப்பான்…?

காலம் எப்படிச் சுழலுகின்றதோ நற்காற்றுடன்… அந்நிலையில் வரும் தன்மை வேறப்பா…! இவன் விட்டிடும் நஞ்சு… காற்றுடன் சுற்றிடும் உலகம் வேறு எப்படிப்பா இருந்திடும்…?

ஜீவாதாரத்தை மாற்றி விட்டான் ஜீவனுக்கே பெயர் வைத்திட்டான் ஆறறிவு ஐந்தறிவு என்று…! பாடநிலை புரிந்ததா…?

முக்காலத்தையும் அறியும் சக்தி கொடுக்கின்றோம்

முக்காலத்தையும் அறியும் சக்தி கொடுக்கின்றோம்

 

காட்டுப் பகுதிகளுக்குள் குருநாதர் அழைத்துச் செல்லப்படும் பொழுது அங்கே மனிதனும் மிருகங்களும் சந்தர்ப்பத்தால் மடிந்த நிலையில் அந்தச் சடலங்கள் மண்ணிலே பதிந்து கிடக்கும் போது
1.அந்த அழுகிய உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகளைச் சூரியன் காந்த சக்தி கவர்ந்து கொள்வதும்
2.மற்ற தாவர இனங்களில் வெளிப்பட்ட உணர்வுகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்வதும்
3.இன்னொரு விஷச் செடியின் மணத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்வதும்
4.அதே சமயத்தில் முதலில் சொன்ன தாவர இனத்தின் மணம் அழுகிய மணத்தைக் கண்டு அஞ்சி ஓடி வரப்படும் பொழுது
5.மனித உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகள் விஷச் செடியின் மணத்திலே தாக்கிய பின் கிறு கிறு என்று சுழன்று
6.இது அனைத்தும் ஒன்றாக சேர்த்து மனித உடலில் உருவான உணர்ச்சிகளும் கலந்து “புது விதமான செடியாக” உருவாகின்றது.

அந்தச் செடிகளை மனிதன் தொட்டால் “கரண்ட் இழுப்பது போன்று” சில செயல்களைச் செயல்படுத்துகின்றது. இதையே மருந்தாக அரைத்துக் கொடுத்தால் பல பகைமை உணர்வுகளை நீக்கும் சக்தியும் வருகிறது.
1.அதனுடன் எந்தெந்த மருந்துகளைச் சேர்த்தால் எந்தெந்தத் தாவரங்களைச் சேர்த்தால்
2.மனித உடலில் விளைந்த தீமைகளை ஊடுருவி அந்த உணர்ச்சிகளை எப்படி மாற்றுகின்றது…? என்பதை குருநாதர் காட்டுகின்றார்.

சில பகுதிகளுக்கு அழைத்துச் செல்கின்றார். ஆனால் அந்த இடத்திலே மிதித்த பின் கீழே ஒரு கொடி படர்ந்துள்ளது. கொடி மேல் என் கால் பட்ட பின் எனக்கு நினைவு இழந்து விட்டது. மறதிப் பூடு என்று சொல்வார்கள்…!

இந்த செடியினுடைய தன்மை என்ன…? ஏன் இப்படி வளர்ந்தது…? என்ற நிலைகளை குரு விளக்குகிறார்.
1.பல மனிதர்கள் உணர்வு கொண்டு ஒருவருக்கொருவர் இரக்கமற்றுத் தாக்கி இரத்தக்கசிவுகளாகி இருந்தால்
2.இதைப் போன்ற சில பூடுகள் ஒன்றுடன் ஒன்று கலந்து அங்கே உருவானதால்
3.அங்கே தாக்கும் போது “அவர்கள் எப்படி நினைவிழந்தார்களோ” இதைப் போன்று
4.இந்தக் கொடியை மிதிப்பவர்களையும் நினைவிழக்கச் செய்கின்றது…?

ஆனால் மற்ற உயிரினங்களை நினைவிழக்கச் செய்வதில்லை.

மனிதர்கள் வரப்படும் பொழுது அவனுடைய உதிரம் அந்த உணர்வுகள் படர்ந்து இருப்பதனால் இந்த பூடுகள் எப்படி விளைகின்றது…? என்று தெளிவாக எனக்கு உணர்த்திக் காட்டுகின்றார்.

மனிதனாக நாம் வாழும் நிலையில் தாவர இனச் சத்தை நாம் நுகர்ந்த பின் அந்த உணர்வின் இயக்கங்கள் அது அணுக்களாக விளைவதும் அதன் வழி தான் பல கோடிச் சரீரங்களை மாற்றி வந்திருக்கின்றோம்.

ஒன்றுடன் ஒன்று… ஒன்றுடன் ஒன்று கலந்து… கலந்து… “வெங்காயச் சருகு போன்று அது தோடாக” (மேல் தோல்) எப்படி இருக்கின்றதோ நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொன்றும் மற்ற மிருகங்களிலிருந்து நுகர்ந்த உணர்வுகள்
1.அணுக்களில் அடுக்கடுக்காக மாறி அது ஒரு முழுமை அடைந்து
2.அந்த உணர்வைப் போல எத்தனையோ கோடி அணுக்கள் சேர்த்துத் தான் மனிதனாக உருவாகக் காரணமானது.

மிருகத்திலிருந்து மனிதனாகத் தோன்றிய நிலையில் அந்த உணர்வு கொண்டு முக்காலத்தையும் அறியக்கூடிய சக்தியும் பெற முடியும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தால்
1.நம்முடைய முப்பிறவிகளின் நிலையும் பார்க்கலாம்
2.இப்பிறவியின் வாழ்க்கையின் நிலையை அறியலாம்
3.அடுத்து நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலையினையும் அறியலாம் என்பதை குருநாதர் காட்டுகின்றார்.

மனிதனாகப் பிறந்த நிலையில் இன்று இருக்கும் இந்த உடலில் இருந்தே நாம் பிறவியில்லா நிலை எப்படி அடைய வேண்டும்…? என்பதற்காகத்தான் இதை எல்லாம் குரு எனக்குக் (ஞானகுரு) காட்டினார்.

ஈர்ப்புத் தன்மையே சுவாச நிலைதான்

ஈர்ப்புத் தன்மையே சுவாச நிலைதான்

 

உலகத்தன்மையிலே ஈர்ப்பு நிலை இருந்து விட்டால் ஈசன் அருள் வந்ததப்பா. ஈர்ப்பு நிலையில் தான் இவ்வுலக நிலையே உள்ளதப்பா. மூச்சின் பாடத்தைப் பகர்ந்துள்ளேன்.

1.எந்நிலைக்கும் ஈர்ப்பு நிலை வேண்டுமப்பா…!
2.மனித மனத்திற்கு ஈர்ப்பு நிலை இருந்தால் தான் அவ்வீசனையும் வணங்கிடுவான்

ஈர்ப்பு நிலை ஈர்ப்பு நிலை என்பதெல்லாம் காற்றை இந்த பூமி தன்னுள் ஈர்ப்பதனால் தான் இப்பூமியே சுற்றுகிறது என்றேன். ஈர்ப்பு நிலையின் பாடங்கள் பல உள்ளன.

1.ஈர்க்கும் தன்மையை எடுத்துக் கொள்…!
2.எந்நிலைக்கும்… ஒருவர் சொல்வதையும் “நம் மனதில் ஈர்ப்பு நிலை இருந்தால் தான்” எடுத்துக் கொள்ள முடியும்.
3.அவ்வீர்ப்பு நிலையில் தான் ஈசன் அருளையும் பெற்றிட முடியும்.

அவ்வீர்ப்பு நிலையினால் தான் ஒரு தாயின் வயிற்றில் அக்கருவும் தரிக்கிறது மலரின் மணத்தை ஈர்க்கின்றது அவ்வண்டு என்ற வழிமுறை தெரிந்து இருக்கும்.

அதைப் போல் தான் தாயின் வயிற்றில் வந்து உதிக்கும் கருவின் நிலையும். மணங்களின் பாடம் பகர்ந்திட்டேன். ஒவ்வொரு உடலுக்கும் ஒவ்வொரு மணம் உள்ளது. பூவிற்கு மணங்கள் உள்ளது போல் மனித உடல்களுக்கும் அந்த மணங்கள் உள்ளன.

ஜென்மப் பலனைப் பகர்ந்திட்டேன் மணத்தையும் முதல் பாடத்தில் பகிர்ந்துள்ளேன் அக்கரு எப்படி வந்து உதிக்கிறது…? என்று.

இவ்வுலகத்தில் பல தேசங்கள் உள்ளன. எத் தேசத்தில் பிறந்தவனும் முதல் ஜென்மத்தில் விட்ட குறையினால் மறுஜென்மம் எடுக்கின்றான் என்பதைப் பகர்ந்து உள்ளேன்.

அண்டகோடியில் உள்ளவன் தன் ஆவி ரூபத்தில் தன் எண்ணத்தின் செயலை “எப்பிறவி எடுத்தால் முடித்திடலாம்…?” என்று எண்ணுகின்றான்.

அதனுடைய ஈர்ப்புத் தன்மையினால் தாயின் எண்ணத்தின் மணத்தை அறிந்து அத்தாயின் வயிற்றில் உதிக்கின்றான்.

பிறவி எடுப்பதற்கு முன் அவ்வாவிகளின் நிலை எல்லாம் ஈர்ப்புத் தன்மை தான். “ஈர்ப்புத் தன்மையே சுவாச நிலைதான்…” ஒருவர் எடுக்கும் மூச்சிலிருந்து அவர்களுடைய மணத்தையும் மனத்தையும் ஈர்க்கின்றது அவ்வாவிகள்.

அதிலிருந்து தான் அவ்வாவிகள் பிறக்கின்றன கருவில்… இப்பாட நிலை புரிந்ததா…?
1.மனித மனத்திற்கு வேண்டுமப்பா ஈர்ப்புத் தன்மை.
2.இவ்வுலகம் ஈர்ப்பதினால் தான் உன் நிலை நடக்கின்றது… நிற்கின்றது.

இவ்வுலக மண்டலத்திற்கு “பல மைல்களுக்கு அப்பால்… ஈர்ப்பு நிலை இல்லையப்பா…”

உலக மண்டலத்தில் உள்ளவர்கள் எல்லோருமே கலியில் வந்துள்ளார்கள் என்ற பாடத்தைப் பகர்ந்துள்ளேன். இவ்வுலகத்தில் உள்ளவர்கள் பிற மண்டலத்தில் பிறக்கின்றார்களா…? என்று சாமியிடம் கேட்டாய் எங்கும் பிறக்கின்றார்கள்… ஆனால் அந்த வழிகள் வேறு.

மனித ஜீவராசிகள் இவ்வுலகத்தில் உள்ளது போல் வேறு எந்த உலகத்திலும் இல்லையப்பா. வேறு உலகத்தில் ஜீவராசிகள் நிலை எல்லாம் உருளும் தன்மையில் தான் ஊரும் தன்மையில் தான் உள்ளதப்பா.

இவ்வுலகில் உள்ள ஈர்ப்பு தன்மை பிற மண்டலத்தில் இல்லையப்பா…! பிற மண்டலத்தின் தன்மை எல்லாம் மாறுபடுகின்றது.

இன்று விஞ்ஞானத்தில் பிற மண்டலத்திற்குச் சென்று உயிர் வாழப் போகின்றானாம்… நடந்து பார்க்கின்றானாம்… பயிர் செய்து பிழைப்பானாம்…! கால நிலையைக் கடத்துகின்றார்கள் பெரும் கஷ்டத்திற்குள்ளே.

ஜெப நிலையில் இருந்தவனுக்குத் தெரிந்துவிடும் பிற மண்டலத்தின் நிலை. இவ்வுலகம் ஈர்ப்புத் தன்மையில் நடப்பது போல் அந்நிலையில் அவன் நடந்துவிடுவானா…?

செயற்கையுடன் சென்று நடந்தேன் என்று செப்புகின்றானாம். எப்படி அப்பா நடந்திருப்பான்…? “உருண்டல்லவா சென்றிருப்பான்…!” இவ்வுலக நிலை எவ்வுலகிலும் இல்லையப்பா.

இவ்வுலகில் பிறந்த பயனைப் பெற்றிடுங்கள் என்பதெல்லாம் இதுவே தான்.

1.ஈர்ப்புத் தன்மைக்கும் மனநிலைக்கும் ஒத்திருந்தால் எல்லா நிலையும் ஈசனே பார்த்துக் கொள்வானப்பா
2.நம் நிலை வேறு நினைத்தாலும் அவ்வீர்ப்பு நிலையைத் தான் ஈசன் முடித்திடுவான்.

இதைப் போல்தான் ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு சொல்லும்
1.அவ்வீசனின் நிலையில் ஈர்ப்பு இருந்தால் நடந்திடுமப்பா… ஈர்ப்பு நிலைப்பாடத்தை இதற்காகத்தான் பகர்ந்திட்டேன்.
2.மனதில் உள்ள எந்நிலையையும் அவ் ஈசனின் ஈர்ப்புக்கு விட்டு விட்டால் அவ்வீசன் பார்த்துக் கொள்வான் எல்லாமே… புரிந்ததா…?

ஈர்ப்பு நிலை வைத்திடம்மா… உன் நிலைக்கு மிகத் துரிதமாக எல்லா நிலையும் கிட்டிவிடும்… ஜெப நிலையும் தான்…!

ஒவ்வொரு மனதிற்கும் ஈர்ப்புத் தன்மை எப்படி அறிவு வளர்ச்சி என்று சொல்கின்றோமோ அதைப்போல ஈர்ப்புத் தன்மையும் மாறுபடுகின்றதம்மா.

ஒரே முறையில் பலர் சமைத்தாலும் சமையல் ருசியும் மணமும் மாறுபடுகின்றது கை வாக்கு என்கின்றார்கள்… அது “மனவாக்குத் தான்…”

அது ஒரு நாள் செய்த முறையிலேயே மறுநாள் சமைத்தால் அந்தச் சுவை இருப்பதில்லை. இது எல்லாம் மன வாக்குத் தான் அது. மனதின் ஈர்ப்பு நிலை எப்படி உள்ளதோ இதைப் பொறுத்துதான் எல்லாமே.

உன் மனதின் ஈர்ப்பை இன்று ஈசனிடம் செலுத்தி விடு நோயைப் பற்றி எண்ணிவிடாதே கலசம் வைத்ததின் பயனை நீ பெறுவாய்.

காட்சி:- நிறைய சித்தர்கள் ரிஷிகள் சுற்றி நின்று ஆசீர்வாதம் செய்தல்.
1.ஒரு சித்தர் அல்ல… பல சித்தர்கள் இங்கே வந்துள்ளோம்
2.சித்தாதி சித்தர்களின் ஆசிகளை அருளியுள்ளோம். பல கொழுந்துகளை ஆசீர்வாதம் செய்துள்ளோம்
3.வாரி இறைப்பேன் ஞானச் செல்வங்களை உனக்கு…!

துருவ நட்சத்திரம்

துருவ நட்சத்திரம்

 

அகஸ்தியன் குழந்தைப் பருவமாக இருக்கப்படும் பொழுது நடந்த நிகழ்ச்சிகள் இது.
1.வானை நோக்கித் தரையில் மல்லாந்து படுத்திருக்கும் பொழுது சூரியனைப் பார்ப்பதும்
2.அதைக் கண்டு சிரிப்பதும் அதில் நடக்கும் மோதல்களைக் காணுவதும் மற்ற பிரபஞ்சங்கள் தெரிவதையும்
3.அந்தப் பிஞ்சு உள்ளத்தில் அகஸ்தியன் உற்றுப் பார்க்கின்றான்

நமது குருநாதர் காட்டிற்குள் செல்லப்படும் பொழுது அகஸ்தியன் வாழ்ந்த காலங்களில் அவன் இருந்த இடங்களில் இந்த உணர்வலைகள் எப்படிப் பதிந்துள்ளது…? என்று எமக்குக் (ஞானகுரு) காட்டினார்.

அந்த உணர்வுகளை நுகர்ந்தால்
1.அவன் கண்டதை நாமும் பார்க்கலாம் என்ற நிலைக்காக அந்த உணர்வை நுகரும்படி செய்கின்றார்.
2.வான்வீதியில் நடக்கும் அதிசயங்களை நீ பார்…! என்கின்றார்.

ஏனென்றால் அகஸ்தியன் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன்… அவன் உணர்வுகள் பூமியில் படர்ந்துள்ளது. சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்ந்து வைத்துள்ளது.

அதை நுகர்ந்து காவியமாகச் சொல்லி கதையாகச் சொல்லி நடந்த நிகழ்ச்சிகளை
1.இப்படி எல்லாம் நடந்தது என்று சொல்லச் சொல்ல அதைக் கேட்கக் கேட்க இந்த உணர்வுகள் எனக்குள் வருகின்றது.
2.குருவின் வலு கொண்டு அவர் நுகர்ந்த உணர்வுகள் எனக்குள் வரப்படும் பொழுது அதை நான் அறியும் பருவமும் வருகின்றது.

அக்காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை குருநாதர் இப்படித்தான் எனக்குத் தெளிவாகக் கூறினார்.

நாளடைவில்… குழந்தையாக இருக்கும் அகஸ்தியனைக் கையிலே தூக்கிச் சென்றால் கொடூர மிருகங்களிடமிருந்து தாய் தந்தையைக் காக்கும் நிலை வருகின்றது… மற்ற உயிரினங்களும் இவர்களைத் தாக்குவதில்லை.

ஐந்தாவது வயது ஆகும் பொழுது அந்தக் காட்டிற்கே அரசன் ஆகின்றான் புலி சிங்கம் மற்ற மிருகங்கள் ஒடுங்கி விடுகின்றது விஷத்தன்மைகளை ஒடுக்கும் சக்தி வரும் பொழுது
1.அவன் சொல்லைக் கேட்போர் உணர்வுகளிலும்
2.கோபம் கொண்டோர் கொதித்தெழும் உணர்வு கொண்டோர் நிலைகளும் அங்கே ஒடுங்கி விடுகின்றது.
3.போர் முறை என்ற நிலையே மாறி விடுகின்றது.

ஏனென்றால் அன்று வாழ்ந்தவர்கள் ஒரு எல்லைக்கு எல்லை மாறி வரும் போது மனிதனுக்கு மனிதன் தாக்கிடும் நிலையே வருகின்றது. அந்த நிலையில் அகஸ்தியன் அதைத் தடுத்து அங்கு இருப்போரைப் பாதுகாக்கும் நிலை வருகின்றது.

இளமைப் பருவத்தில் அவன் அறிந்த உணர்வின் தன்மை வானை நோக்கி உற்றுப் பார்த்து துருவத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளைக் கண்ட பின் அந்த்த் துருவத்தின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றான்.

அதனால் தான் அவனுக்குத் துருவன் என்று காரணப் பெயர் வந்தது. அவனுக்குள் மேலும் மேலும் வலுகொண்ட நிலையாகி எதையுமே அறியும் ஆற்றலாக அறிவின் தன்மை அதிகரிக்கின்றது.

அவன் வானை நோக்கிப் பார்க்கும் பொழுது நமது சூரியநுக்கு 27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களில் இருந்து வரும் விஷத்தன்மையை எப்படி கவர்கின்றது என்று அறிகின்றான்.

அதிலே சூரியன் வெளிப்படுத்தும் உணர்வுகள் கவர்ந்து வரும் பொழுது ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது அது மின்னல்களாக மாறுவதும்… இந்தப் பொறிகள் பல பாகங்கள் பரவி ஒளி அலைகளாக மாறுவதும்… மற்ற கோள்களில் இருந்து வரக்கூடியது இதற்குள் கலந்த பின் அணுக்கள் மாற்றப்பட்டு… ஒவ்வொரு உணர்வின் தன்மை கொண்டு அது எப்படி மாறுகின்றது…? என்பதையும் இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவாகின்றது…? என்பதையும் அவன் காணுகின்றான்.

பிரபஞ்சத்திற்குள் சூரியனின் இயக்கத்தன்மை ஏற்பட்டு பூமிக்குள் உருப்பெற்ற மனிதன் எவ்வாறு வாழ வேண்டும்…? என்ற உணர்வினை அவன் அறிகின்றான்.

இப்படி அறிந்தவன் தனது 16வது வயதில் திருமணமான பின்… தான் இளமைப் பருவத்தில் இருந்து எதை எதையெல்லாம் அறிந்தானோ அவை அனைத்தையும் மனைவிக்குப் போதிக்கின்றான்.

1.மனைவி அதைச் செவி வழி கேட்டுப் பதிவாக்கி அந்த உணர்ச்சிகள் உந்தப்பட்டு
2.அதையெல்லாம் காண வேண்டும் என்று விரும்பி அந்த உணர்வுகளைத் தனக்குள் நுகர்கின்றது.
3.இப்படி இருவருமே ஒருவருக்கொருவர் விண்ணின் ஆற்றலைப் பெற வேண்டும் என்று வளர்த்துக் கொள்கின்றனர்.

இரு உணர்வும் சேர்த்து நுகரப்படும்போது உயிரிலே அந்த உணர்வின் அணுவாக உருவாக்கும் தன்மையும்… “ஒளியின் சிகரமாக” உருப்பெறும் அணுவாக ஆகின்றது.

நட்சத்திரங்களிலிருந்து வரும் நஞ்சின் தன்மையை அவர்கள் கண்டாலும்
1.இருவரும் அதைப் பெற வேண்டும் என்று தங்களுக்குள் சேர்க்கப்படும் பொழுது
2.மின்னல் வரும் பொழுது எப்படி ஒளிக்கதிர்களாகப் படர்கின்றதோ
3.இந்த உணர்வின் தன்மையைச் சேர்த்து அந்த ஒளிக்கதிர்களை உருவாக்கும் நிலையும்
4.அது எப்படி மின்னும் பொழுது இருளை மறைக்கின்றதோ நஞ்சினை அடக்குகின்றதோ
5.அதைப்போல ஒளியின் உணர்வாக இருவரது உணர்வுகளிலும் இந்த அணுவின் தன்மை உருவாகின்றது.

அப்படி உருப் பெற்றது தான் துருவ நட்சத்திரம்

அதிலிருந்து வந்து கொண்டிருக்கும் சக்திகளைத் தான் உங்களைப் பெறச் செய்து கொண்டே வருகின்றேன் குருநாதர் காட்டிய வழியில்.

நோய் நீக்கும் தாவர இனங்கள் காடுகளில் எப்படி உருவாகிறது…?

நோய் நீக்கும் தாவர இனங்கள் காடுகளில் எப்படி உருவாகிறது…?

 

காட்டிற்குள் “அட்டை” என்று சொல்வார்கள். மனிதன் இறந்திருந்தால் மனித உடலில் இருந்து அந்த அணுக்கள் பெற்றிருந்தால் மனிதன் சும்மா நடந்து சென்றாலே போதும்.

அந்த மணத்தின் தன்மை கொண்டு வில்லைப் போல பாய்ந்து மனித உடலில் அந்த அட்டைகள் ஒட்டிக் கொள்ளும். ஆனால் ஒட்டுவது நமக்குத் தெரிவதில்லை.

இரத்தத்தை உறிஞ்சும். அது எவ்வளவு உறிய முடியுமோ அதற்குப் பின் கீழே விழுந்து விடும்… நமக்குத் தெரியாது.
1.மனிதன் மடிந்த பின் இறந்த உடலிலிருந்து அந்த அணுக்களின் தன்மை அடைந்த பின்
2.மனிதனுக்குள்ளேயே இந்த இரத்தத்தைக் குடித்துச் செயல்படும் தன்மை வருகின்றது.

அட்டைகள் மடிந்த பின் இதே உணர்வின் தன்மை மற்ற தாவர இனங்களுக்குள் கலக்கப்பட்டு புதிதாக உருபெற்றால் அதை உணவாக உட்கொண்டால் ஒரு இரத்தத்திற்குள் சென்றால் இரத்தத்தை உருமாற்றும் நிலையாக அடைகின்றது “அந்தத் தாவர இனங்களுக்கு…”

காட்டிற்குள் குருநாதர் எம்மை அழைத்துச் செல்லப்படும் பொழுது
1.அங்கே உருவாகும் அணுக்களும் அது மடிந்த பின் மற்ற தாவர இனங்களுக்குச் செல்வதும்
2.அவைகள் மனிதனுக்கு நல்ல நிலைகளை உருவாக்கும் நிலையும் காட்டுகின்றார்.

அதாவது மனிதன் மடிந்த பின் அந்த மனித உடலிலிருந்த அணுக்கள் வெளிப்பட்டு… தாவர இனத்தை அது உணவாக உட்கொண்டு அது மடிந்து அதன் உணர்வுகளில் வரப்படும் பொழுது அந்தத் தாவரங்கள் மனித உடலுக்குள் ஆனபின்
1.அப்படின் உருவான அந்த தாவர இனத்தை உணவாக உட்கொண்டால்
2.மனிதனுக்குள் இருக்கும் சர்க்கரை நோயை முறிக்கும் தன்மை வருகின்றது
3.இரத்தக் கொதிப்பையும் முறிக்கும் தன்மை வருகின்றது.

ஒவ்வொரு நிலைகளிலும் மனிதனுக்குள் விளைந்து உணவாக உட்கொண்டு அணுவின் தன்மை அடைந்த பின் மீண்டும் அது படர்ந்த பின் தாவர இனங்களை உணவாக உட்கொண்டு “அது மடிந்தால்”
1.அதனின் உரங்கள் மற்ற தாவர இனங்களில் சேர்க்கப்பட்டு
2.அது உயர்ந்த மருத்துவ குணம் கொண்ட (மருந்து) தாவர இனங்களாக விளைகின்றது.

காட்டுக்குள் அழைத்துச் செல்லப்படும் பொழுது இத்தனை வித்தியாசங்களையும்… இயற்கையின் நிலைகள் மனிதனான பின் உணர்வு மற்றதுடன் சேர்ந்து “அது எந்தெந்த நிலைகள் அடைகிறது…?” என்று காட்டுகின்றார் குருநாதர்.

ஒரு சமயம் என்னை ஒரு பக்கம் உட்காரும்படி சொன்னார். அவர் வேறு ஒரு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். உட்கார்ந்த பின் அந்தத் தரையில் இனம் புரியாத “ஒரு ஈர்ப்பு” வருகின்றது.

காரணம்…
1.மண்ணிற்குள் மறைந்த அந்தத் தாவர இன வித்துகள்
2.மனிதனின் உடல் பட்ட பின் அந்த உணர்வை நுகர்ந்து அது செடியாக வளரத் தொடங்குகிறது.
3.அரிப்பின் தன்மை வரப்படும் பொழுது ஈர்ப்புடன் ஏங்கி வருகின்றது.

இப்படிப் பல நிலைகளைக் காட்டுகின்றார் குருநாதர்.

தொட்டால் வாடி என்றும் தொட்டால் சிணுங்கி என்றும் நாம் கேள்விப்பட்டிருப்போம். அதாவது சில செடிகளைத் தொட்டால் அதிலிருந்து கண்ணீர் (நீர்) வடியும். சில செடிகளைத் தொட்டவுடன் அப்படியே சுருங்கி… வாடிவிடும். மனிதனின் உணர்வின் நிலை பெற்று உருவான செடிகள் தான் அவைகள்.

மனிதன் இறந்த பின் அவன் உடலில் இருந்து எந்தெந்த குணங்கள் பெற்றுச் சென்றானோ… அதாவது சோர்வடைந்து இருப்பான் பல விஷத்தன்மை கொண்டு…!
1.இது போன்ற உணர்வுகள் செடிகளில் சேர்க்கப்பட்ட பின்
2.மனிதனுக்குண்டான ஜீவனைப் போல அது வாடுகின்றது… சிணுங்குகிறது.

சிலருக்கு மூட்டு வாதங்கள் இருக்கும். இரத்தத்தில் உப்புத் தன்மைகள் அடைந்து உறையும் தன்மையாக வரும்… சீழாகவும் மாற்றும். அதனால் அத்தகைய நோய் உருவாகும்.

மிளகையும் தொட்டால் வாடி என்ற செடியையும் பதப்படுத்தி அரைத்து மூட்டு வாதம் உள்ள இட்த்தில் சேர்த்தால்
1.அந்தக் கார உணர்ச்சிகள் ஊடுருவிச் செல்லும் பொழுது
2.மூட்டு வாதத்திற்கு உண்டான அணுக்களை வாடச் செய்யும் வாத்த்தை அகற்றிவிடும்.

இயற்கையின் நிலைகளில் மனிதனுக்குகந்த சில நிலைகள் எப்படி வருகின்றது…? என்று காட்டிற்குள் அழைத்துச் சென்று குருநாதர் எனக்குக் காட்டிய நிலைகள் தான் மேலே சொன்ன தாவர இனங்கள் அனைத்தும்.

“விழிப்புடன்” கூடிய தியானமே மிகவும் சிறந்தது

“விழிப்புடன்” கூடிய தியானமே மிகவும் சிறந்தது

 

பல கோடி ஆண்டுகளாகச் சேமித்துப் பழக்கப்படுத்தி நம் உடலுடன் கூட்டிக் கொண்டுள்ள இம் மூன்று வகை உணர்வலையையும்… பன்னிரெண்டு வகை குண அமிலத்தையும்… இந்தப் பல கோடி எண்ணத்தின் சுவாசத்தால் நம் சப்த அலையுடன் பல ஜென்மங்களாக எடுத்துப் பழக்கப்படுத்திய நிலைகளை எல்லாம்.. “தாவரங்களைப் போன்று”
1.இக்காற்றினில் கலந்துள்ள ஒலி அலையான காந்த மின் அலையைத்
2.தனக்கு வேண்டிய உயர்ந்த ஞான சக்தியைக் கூட்டிப் பலன் பெருக்கிக் கொள்ள முடியும்.

தாவரம் தனக்கு வேண்டிய பிரித்த அமிலத்தை எடுத்துப் பலனைத் தரவல்ல காலங்கள் முடிந்தவுடன் குறுகிய கால வளர்ச்சியினால் பட்டுப் போகின்றது.

ஆனால் அதிலிருந்து வெளிப்பட்ட அமில குண கூட்டுப் பெருக்கில் ஜீவன் கொண்ட ஜீவ ஆத்மாக்களான நம் ஜீவித சக்தியில்… இப்பெருக்கத்தின் பெருக்க நிலை வளர்வதற்கு… இந்த எண்ணத்தில் எடுக்கும் ஞானத்தின் ஒளி ஈர்ப்பின்… காந்த மின் அலையின் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் மனிதனின் ஞான ஒளியாக… இந்த உயிரணு மட்டுமல்லாமல் பல கோடி அணுக்களும் செயல் கொண்டு… இம்மனித ஞானத்தின் வளர்ச்சி நிலை கூடும் சக்தியை என்றுமே வளர்த்திட முடியும்.

இருந்தாலும் அத்தகைய நிலை எய்திட… தியானப் பயிற்சி முறையைப் பலரால் பல காலங்களாக வழிப்படுத்தி வாழ்க்கையில் பலரினால் செயல்படுத்தி வருகின்றனர் என்றாலும் “அதில் அவர்கள் அடைந்த நிலை என்ன…?”

1.நல்ல வாழ்க்கையின் பல ஞான உபதேசங்களும் பெற்றவர்கள் அதே சுழற்சியில் தான் சுழல்கின்றார்கள்
2.“ஆழ்நிலை தியானத்தை…!” அறியத் துடிக்கின்றனர்.
3.இந்த உணர்வையும் எண்ணத்தையும் உறங்கும் நிலைப்படுத்தும் ஞானத்தால்
4.இந்த உடலுக்கோ இந்த உடலை வளர்க்க குடி வந்த பல கோடி உயிரணுக்களுக்கோ வளரும் சக்தி குன்றி
5.இதே சுழற்சியில் தான் சுழன்று கொண்டே இருக்கும்.

மாறாக ஒவ்வொரு அணுவுமே மண்டலமாக உருப்பெறும் நல் ஒளி பெறும் சூரிய ஒளியுடனோ… பல கோடிச் சக்தி ஒளியான சர்வமும் படைக்கவல்ல அவ்வாதி சக்தியின் அருள் ஒளியுடன் கலக்கும் நிலை பெற… ஆழ் நிலைத் தியானத்தால் வளர்ச்சி கொள்ள முடியாது,

உணர்வுடன் கூடிய எண்ணத்தை…
1.இவ்வுணர்வின் உந்தலுக்குகந்த ஒவ்வொரு உடலிலும் உள்ள அமில குணங்களையும்
2.இவ்வெண்ண ஞானத்தால் எடுக்கும் சுவாசம் கொண்டு உயர்வாக்கும் பக்குவ முறையைச் செயல்படுத்தினால் தான்..
3.சக்தியின் சக்தியான சகலத்துடன் செயல்படுத்தும் “ஆதி சக்தியின்” ஒளி சக்தியைப் பெற முடியும்.

ஆதி சக்தியின் ஒளி சக்தியின் சிறு அணுவாக உதித்த நாம் அச்சக்தியின் அருளின் ஒளியைப் பெருக்கிச் சமர்ப்பிப்பது தான் நமக்கு ஆண்டவனின் சக்தி பெற்ற நிலையின் பொருள்…!

புரிந்ததா…!

இது நாள் வரை உணர்த்தி வந்த பாட முறையின் தியானம் கொண்டு
போற்றலுக்குகந்த போற்றலாய்
யான்… போற்றி மகிழவே

நேசத்திற்குகந்த நேர்மையாய்
நினைவால்… வழி நிற்பேனே

பாசத்திற்குகந்த படைப்பிலே…
பலவாகக் கலந்து பெறுவேனே…!

ஆசைக்குகந்த ஆசையாய்
அளவாய்.. மகிழ்ந்து அடைவேனே..!

ஆற்றலுக்குகந்த ஆண்டவனே…
ஆற்றலின் எதிர்பிம்பமானவனே…

தாலாட்டும் தாய் தந்தை தலைமையிலே
தலை வணங்கி… பணிவேனே…!

ஏற்றத்திற்குகந்த எண்ணத்திலே… …
ஏறும் படியில்… ஏறுவேனே…!
வாசத்திற்குகந்த வாசனையாக
உள்ளத்தின் வாசனையை… வளர்ப்பேனே…!

போற்றித் துதிக்கும் நிலையில் உள்ளேன்…
போற்றலுக்குகந்த… “தெய்வ நிலை பெறுவேனே…!”
என்ற இந்தப் பாடலில் உள்ளதன் கருத்தின் நிலையே உணர்ந்து ஒவ்வொரு மனிதனின் செயலும் செழிப்பாகிடல் வேண்டும்.

“தன்னுள்ளேயே” ஈசனின் சொரூபத்தைக் கண்டவர் எல்லோருமே வருகின்றார்கள் கல்கிக்கு

“தன்னுள்ளேயே” ஈசனின் சொரூபத்தைக் கண்டவர் எல்லோருமே வருகின்றார்கள் கல்கிக்கு

 

விட்ட குறையினால் வந்து பிறந்தவர்கள் தானப்பா எல்லோரும். இன்று உள்ள கலியுகத்தில் விட்ட குறைகள் உள்ள மக்கள் எல்லோருமே ஜீவித்துள்ளார்கள்.

ஜனப்பெருக்கம் ஜனப்பெருக்கம் என்கிறார்கள் ஜனப்பெருக்கத்தைக் குறைக்கின்றார்களாம்… அவர்கள் ஆயுளை வளர்க்கின்றார்களாம்
1.இருப்பவன் இருந்து கொண்டே இருக்க வேண்டுமாம்…
2.ஜனப்பெருக்கத்தைக் குறைக்கின்றானாம்… ஆளுகின்றானாம் நாட்டை
3.அவன் ஜனப்பெருக்கத்தைக் காக்கின்றானாம் உளவறிந்து.

எப்படி இருக்கிறதப்பா இக்கதை எல்லாம்…?

கலியில் வந்து விட்டார்கள் விட்ட குறை உள்ளவர்கள் எல்லோருமே மனிதர்களாகவும் மற்ற ஜீவராசிகளாகவும் இனி பிறப்பவர்களும் இப்பொழுது கலியில் மடிபவர்கள் தான் பிறக்கிறார்கள்.

கலியின் கடைசி நிலையில் எல்லோருமே எல்லா ஜீவ ஜெந்துகளும் அவரவர்கள் செய்த பாவ புண்ணிய நிலையில் வந்து விடுகின்றார்கள். விட்ட குறை என்றதும் இதனால் தான்.

மனிதன் ஆடு மாடு பூச்சி புழு எல்லாமே வந்து விடுகின்றன இக்கலியின் கடைசியில். இக்கலியிலிருந்து தப்பி வடிகட்டி எடுப்பவன் தான் கல்கிக்கு வருகின்றான்.

கல்கியில் வருபவன் எல்லாம் யாரப்பா…?

1.இக்கலியில் விட்ட குறை உள்ளவர்கள் அல்ல.
2.இவ்வுலகம் தோன்றிய நாள் முதற்கொண்டு எடுத்த பிறப்பில் இருந்தெல்லாம்
3.எவன் ஒருவன் இக்கலியின் கடைசியில் தன் நிலை உணர்ந்து தன் மனத்தை மனம் என்னும் கோவிலாக்கி
4.மற்ற எல்லா நிலையையும் கடந்து முக்தி எனும் நிலை எய்தி
5.தன் நிலையை உயர்த்தி… தான் என்ற அகந்தையை விட்டுத்
6.தன்னுள்ளேயே ஈசனின் சொரூபத்தைக் கண்டவர் எல்லோருமே வருகின்றார்கள் கல்கிக்கு.
7.கல்கியில் வருகின்றார்கள் ஞான நிலை பெற்ற தீபங்கள் எல்லோருமே.

நீ நினைக்கின்றாய் ஆயிரம் ஜெபங்கள் இருந்து அடுக்கடுக்காக மந்திரங்கள் ஓதித் தான் பிறந்த நிலையை மறந்து விட்டு ஈசனுக்கு பூஜை செய்து… பல மந்திரங்கள் சொல்பவன் எல்லாம் வந்திடுவான் கல்கிக்கு என்று.

வருபவன் யாரெல்லாம் என்று ஜெப நிலையில் உணர்ந்திடலாம். தான் செய்த பாவ புண்ணியங்களைப் பொறுத்துத் தான் “வடிகட்டப்பட்டு வருகின்றான்” கல்கிக்கே.
1.கலியின் பாதையில் பகர்கின்றேன் தோட்டியும் வருவான் தொண்டனும் வருவான் என்று
2.கல்கிக்கு வருபவன் எல்லாம் கால வெள்ளத்தில் சிக்குண்டு பல கஷ்ட நஷ்டங்களையும் தன்னுள்ளே எண்ணிடாமல் பிறந்த பயனை எண்ணி
3.அந்நிலையின் உயர்வை ஊன்றி பிறந்த பயனை எல்லாம் எடுத்தவனே வருகின்றான் கல்கிக்கு.

என்னப்பா…? சொல்லும் பாடம் உனக்குத்தான்…!

கலியின் கடைசியில் வந்துள்ளோம் பிறந்த பயனை… விட்ட குறையை இக்கலியின் கடைசிக்குள் உன் ஜெபநிலையின் உதயத்தில் முடித்திடப்பா.

முதல் பாடத்தில் பகர்ந்த நீ விட்ட குறை என்ன…? என்று உனக்குள்ளே உணர்த்தி உள்ளேன். ஊன்றிப் பார்த்தால் இன்று உனக்குள்ள நிலை எல்லாம் சிறு தூசிதானப்பா… தூசியை ஊதிவிடு…!

உன் நிலையை… நீ விட்ட குறையை இக்கலியின் கடைசியில் நிலைக்கச் செய்வாய். பெரும் செயற்கை யுகத்தைக் கண்ட இம்மாமனிதர்கள் எல்லோருமே மூச்சிருக்கும் நிலையில் உன் சுவாச நிலையால் விட்ட குறையை முடித்திடப்பா.

உன் ஜெப நிலையின் தன்மையில் தான் ஐவர் மலையின் அந்தரங்கம் வந்துவிடுமப்பா. அந்நிலையில் வந்த பயனை எடுத்துத்தான் அங்கு நீ பதித்திடப்பா.

1.அவ்வார்வ எண்ணத்திலே உன் ஜெப நிலையை மாற்றிடாமல்
2.”ஒன்றே செய்வேன்… நன்றே செய்வேன்…” என்றுள்ள செய்யுளின்படி செய்திடப்பா நற்காரியத்தை.

இக்கலியின் கடைசியில் நிலைப்பவன் யார் என்பதெல்லாம் புரிந்திருக்கும் ஜெப நிலையும் புரிந்திருக்கும்

பல பாடங்களைப் பதித்துள்ளார் உன் மனதினிலே என் சிஷ்யன் (ஞானகுரு). படித்த பாடத்தை விட்டிடாமல் பாடம் மட்டும் கேட்டு விட்டால் உன் நிலைக்கு என்றப்பா வருவது…?

பள்ளிக்குச் சென்று படிப்பதெல்லாம் அறிவை வளர்க்கத் தான்.
1.வளர்ந்த பின் அறிவின் பயனைப் பெற வேண்டாமா…?
2.என்றப்பா அந்நிலைக்கு உன் நிலையை உயர்த்திடுவாய்…?

கால நிலையில் விஷத்தன்மை கலக்கின்றதப்பா மிகத் துரிதமாக… விஷத்தன்மையையும் வான மண்டலத்தையும் வென்றிடவே உன் ஜெப நிலையைக் கூட்டிக் கொள்ளப் பார்.

விட்ட குறையை முடித்திடப்பா வீண் விஷமிகளை எண்ணிவிடாதே, பாடத்தின் நிலை புரிந்ததா…?

48 நாள் என்ற பாடம் அன்றொரு நாள் உன் ஜெப நிலைக்கு முடிவு வைத்தேன். அந்த 48 நாளில் நடந்ததெல்லாம் என்னப்பா…? பார்த்திட்டாயா அவன் நிலையும் உன் நிலையும்.

48 நாளில் தேவனின் நினைப்பால் ஊன்றி வைத்தாய் கலசத்தை உன் நினைவில். அந்த 48 நாளில் உன் எண்ணமெல்லாம் அவன் தருவான் என்ற நிலையும் மறக்கச் செய்தேன். தந்தாலும்… உன் நிலைக்கு வேண்டாம் என்று நீயே உன் எண்ணத்தில் ஊன்றிக் கொண்டாய்.

பகைவன் என்பவனின் கஷ்டத்தையும் பார்த்திட்டாய் பாலகரின் நிலையையும் உயர்த்திட்டாய். உன் மனத்தையே ஒரு நிலை ஆக்கியுள்ளாய். இந்நிலையில் உனக்கு இந்த 48 நாட்களில் பகர்ந்துள்ள பல பாடங்களை மனநிலையில் ஒருநிலைப்படுத்தி உணர்ந்துள்ளாய்.

வாழ்க்கையில் வாழ்வு என்ன…? என்ற அர்த்தங்களும் அறிந்திருப்பாய், தியான முறையின் வழிகளையும் புரிந்திருப்பாய். சொல்வாக்கை அருளி இருப்பேன்.

இந்த 48 நாளில் சிறு குறையும் உள்ளதப்பா.
1.உன் நிலையை உயர்த்திக் கொள்… மனச் சஞ்சலத்திற்கு அடிமையாகாதே
2.ஆசை மனதினை அடக்கிடப்பா அந்நிலையில் வருவது தான் சுவையும் மற்ற எல்லாமே.

கலசத்தின் பயனைப் பெற்றவர் இங்கு உள்ளவரில் ஒருவன் தானப்பா. பகர்ந்தவரும் கலசத்தின் பயனைப் பெறவில்லை… கலசம் வைத்தவனும் நிலை நிறுத்த முடியவில்லை மனநிலையை.

அருளெல்லாம் அளித்துள்ளேன் இக்கலசத்தில். நாளை தியானத்தில் நல்ல அமுதை விட்டிடுவேன்… கலசத்தின் மகிமையைக் கண்டிடுவாய். இனி எல்லாமே உன் வழியில் நல்லாசிகள் தான் நடந்திடுமப்பா.

தேங்காயின் பலனைத் தெரு பூராம் தெரிவது வேண்டாம். மஞ்சள் துணியில் முடிந்து வைத்து… மாற்றான் பார்த்திடாமல் வைத்திடப்பா சில நாட்கள்.

உன் இல்லத்தினிலே உன் ஜெப நிலைக்கு அமரும் இடம் அமைத்தவுடன் நிலையில் (கதவு நிலை) கட்டிடலாம் “என் அங்கத்தின் அங்கத்தை…” அந்நாள் வரையில் உன் இல்லத்தில் பூஜிக்க முடிந்திட்டால் வைத்துக்கொள்.

பூஜை அறை வரும் வரையில் இங்கு இருக்கட்டும் என்ற எண்ணம் இருந்திட்டால் இங்கேயே விட்டுவிடு.

பூஜை அறையில் தேங்காய் உடைக்க வேண்டாம். தேங்காய் பழம் உடைத்து என்ற சொல் வருவது வேண்டாம். அவ்வோட்டில் “என்ன வாசனை வருகிறது….?” பழம் புஷ்பம் மட்டும் போதும்.

தேங்காய் உடைப்பதனால் தேவர்கள் அருளைப் பெறுகின்றார்களாம்… உடைக்கும் சத்தத்தில் தான் தேவர்கள் வருகின்றார்களாம் அத்தேங்காயின் தீர்த்தத்தைப் புசிக்கின்றார்களாம்

இவன் புசிக்க எடுத்து வருகின்றான்…! தேங்காயைச் சமைத்துச் சாப்பிட வேண்டும் என்பதில்லை. வந்த இடத்தில் தன் பசியை ஆற்றிக் கொள்ளத்தான் அதைக் கொண்டு வருகின்றான்.

வழி முறையில் வந்த சில மாற்றங்கள் இவைகள். சில வழியில் ஊருடன் ஒத்துச் செல்லுங்கள். “நமக்கு வேண்டாம் தேங்காய் உடைக்கும் தன்மை…” உடைத்த தேங்காயை எடுத்து வந்து விடாதீர்கள் இல்லத்திற்கு. பிறருக்கு அளித்து விடுங்கள் அல்லது பூசாரிக்கே அளித்து விடுங்கள்.