பகைமையை அகற்றினால்தான் மகிழ்ந்து வாழ முடியும்

பகைமையை அகற்றினால்தான் மகிழ்ந்து வாழ முடியும்

 

ஒன்றுடன் ஒன்று இணைந்து இயங்கும் தன்மை பேரண்டத்தில் இல்லையென்றால் இந்தப் பிரபஞ்சமே இல்லை.

அதே போல் மனிதனின் வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் “சகோதரத் தத்துவத்துடன்” வாழவில்லை என்றால் மகிழ்ச்சியும் இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.

ஒன்றை நாம் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
1.ஒருவர் மிகவும் நெருக்கமாக இருப்பினும் அதில் சிறு பகைமை ஏற்பட்டு விட்டால் அது கடும் விஷ வித்தாக நம்முள் பதிந்து
2.நம்மை அறியாமலே அவர்களைப் பகைத்து தீமையின் உணர்வாக நம்முள் வளர்ந்து கொண்டிருக்கும்.

இவ்வாறு பகைமையுணர்வுகள் நம்முள் வளரும் பொழுது அது நம்முள் உள்ள நல்ல குணங்களையும் பகைமையாக்கிக் கொண்டே இருக்கும்.

1.நமது உடலுக்குள் உணர்வுகள் ஒன்றுக்கொன்று பகைமையாகும் பொழுது
2.நமது உடலின் தன்மை குன்றுகின்றது.. நம்முடைய எண்ணங்களும் மாறுகின்றது.

எனவே சூரியக் குடும்பம் ஓர் ஒழுங்குடன் அமைதியாக இயங்குவதைப் போன்று நாமும் பகைமை உணர்வுகள் இல்லாமல் ஒற்றுமை உணர்வுடன் மகரிஷிகளின் அருள் சக்தியின் துணை கொண்டு வாழத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் வாழும் தெருவில் உள்ள அனைவரையும் நமது குடும்பத்தினரைப் போலக் கருதி
1.அவர்களும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்,
2.இருள் நீங்கிப் பொருள் காணும் திறன் பெற வேண்டும்,
3.வாழ்வில் என்றும் மகிழ்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணி
4.நமது தெருவில் வாழும் மற்ற குடும்பத்தினருக்காகத் தியானிக்கும் பொழுது
5.அவர்களும் நம்முடன் ஒன்றுபட்டு வளரும் நிலை உருவாகிறது.

நாம் அனைவரும் ஒன்று கூடிக் கூட்டுத் தியானமிருந்து இதனின் எண்ண அலைகளை ஒருமித்த நிலையாக வெளியிடும் பொழுது… “இதனைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இந்த பூமியில் படரச் செய்கின்றது…”

மேலும் இந்த உணர்வின் அலைகள் இவ்வுலக மக்களின் உணர்வில் கலந்து அவர்களிடத்தில் மகிழ்ச்சியின் தன்மையை வளர்க்கின்றது. பகைமையற்ற மனிதர்களாக அவர்களை மாற்றுகின்றது.

பேரண்டத்திலும் பூமியிலும் மனிதரிடத்திலும் நடைபெறும் இயற்கையின் இயக்கங்களை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காண்பித்த அருள் வழியில் உங்களுக்கு உபதேசித்து வருகின்றோம்.

இதில் உங்களின் கருத்தினைச் செலுத்தி உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். இந்த ஊரும் நாடும் உலகமும் என்றும் மகிழ்ந்த நிலையாக இருக்க வேண்டும் என்ற உணர்வினை வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஊரும் நாடும் உலகமும் மகிழ்ந்த நிலை பெற வேண்டும் எனும் பொழுது மகிழ்ச்சியின் உணர்வுகள் உங்களிடத்தில் பெருகுகின்றது.

மகிழ்ந்த உணர்வின் துணை கொண்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டல ஒளி வட்டத்துடன் நாங்கள் அனைவரும் இணைய வேண்டும் என்று
3.இவ்வாறு இந்த உணர்வின் எண்ணங்களை நாளும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

நாளும் நல்ல உணர்வுகளை வளர்ப்போர் அனைவருக்கும் எமது ஆசீர்வாதங்கள்.

கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்

கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்

 

இந்த மனித வாழ்க்கையில் தீமைகளைக் காணும் பொழுதெல்லாம் அடுத்த கணம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நுகர்ந்து
1.ஒவ்வொரு நொடியிலும் அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் உங்கள் ஆன்மாவை இணையச் செய்யும்
2.அந்த வலுவான நிலைகளை உங்கள் உடலில் உருவாக்குதல் வேண்டும்.

இவ்வாறு உருவாக்கினால் இந்த வாழ்க்கைக்குப் பின் இதே உடலில் உருவான உயிருடன் ஒன்றி கணவன் மனைவி இருவரும் ஒன்றிணைந்து அதனுடன் இணைய முடியும்.

கணவன் மனைவியாக இணைந்து குழந்தையை எப்படி உருவாக்குகின்றோமோ… அது போல் இருவரும் துருவ தியானத்தில் கணவனுக்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று மனைவியும் மனைவிக்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று கணவனும் இவ்வாறு உணர்வால் ஒன்றிய பின் “இரு உயிரும் ஒன்றாக இணைந்து விடுகின்றது…”

இரு உயிரும் ஒன்றான பின் அருள் ஒளியின் உணர்வை உருவாக்கி ஒளியின் சரீரமாக இயங்கத் தொடங்கும்.
1.உயிருக்குள் வெப்பம் என்ற நிலை இருக்கும் பொழுது அது விஷ்ணு என்றும்
2.அதிலே ஈர்க்கும் காந்தத்தை லட்சுமி என்றும்
3.ஆண் பெண் என்ற நிலை இல்லை என்றால் இதை உருவாக்க முடியாது.

ஆண் என்ற நிலையில் இயங்கினாலும் பெண் என்ற நிலையில் இணைக்கும் போது எண்ணத்தால் உருவாக்கும் அருள் சக்தியை… “தன்னுடன் இணைத்துப் பெருக்கும் சக்தி பெறுகின்றது…”

காரணம் – அமிலத்தின் தன்மை கொண்டு ஒன்றைத் தனக்குள் வளர்த்திடும்… அதை உருவாக்கும்… உணவாகக் கொடுத்து வளர்த்திடும் திறன் பெற்ற அமிலங்கள் பெண்கள் உடலில் உண்டு.

ஆண்களில் திடப்பொருளின் தன்மையை இறுகச் செய்யும் நிலையில் இருப்பினும் பெண் உணர்வுடன் கலந்து உயிருடன் ஒன்றி உருவாக்கினால்
1.உடலை விட்டு அகன்றால் இரு உயிரும் இணைந்து
2.ஒருவர் பின் ஒருவர் சென்றாலும்… அல்லது
3.இந்தத் தியானத்தில் இணைந்து வாழ்ந்தால் ஒன்று முன் சென்றாலும்
4.பின் வரும் தன் கணவனோ தன் மனைவியோ அவர் உணர்வையும் அரவணைத்து ஒன்றியே அதை அழைத்துச் செல்லும்.
5.எந்த விண்ணை நோக்கி ஏங்கி எடுத்தோமோ அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையும்.
6.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பிலே வளர்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்தில் நாம் இணைய முடியும்.

இந்தப் பிரபஞ்சம் அகண்ட அண்டத்தில் வரும் சக்திகளை நுகர்ந்தாலும் நமது பூமி நுகரும் தருவாயில் பூமியில் உருப் பெற்ற அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக அமைந்திருப்பதனால் பூமிக்கு வரும் உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியான உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது அதனின் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் சப்தரிஷி மண்டலங்கள் அதுவும் ஒளியின் சுடராக வளர்கின்றது.

சூரியன் எப்படிக் கோள்களையும் நட்சத்திரங்களையும் உருவாக்கிப் பிற மண்டலத்திலிருந்து வருவதைச் சூரியன் கவர்ந்து அனைத்தையும் அரவணைத்து எப்படி வளரச் செய்கின்றதோ இதைப் போல் தான் நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் என்றும் நிலை கொள்ளுதல் வேண்டும்.

இந்த வளர்ச்சிக்கு நாம் செல்ல வாழ்க்கையில் பிறவி இல்லாத நிலை அடைய முடியும்.

மனிதனாகப் பிறந்தோம்… உடல் மடிகிறது…! என்றால் மனித வாழ்க்கையிலே விஷத்தின் தன்மை அளவுகோல் கூடும் பொழுது தான் உடலில் நல்ல அணுக்கள் மடிகின்றது.

மடிந்து உடலை விட்டுச் செல்லும் உயிரான்மா எந்த ஆசையை வளர்த்து வாழ்ந்ததோ பேயாசையாக மாறி… எல்லாவற்றையும் அழித்துவிட்டு ஒன்றை பெறப் வேண்டும் என்ற ஆசையின் உணர்வுகள் அதிகரிக்கும் பொழுது இன்னொரு மனித உடலுக்குள் புகுந்து அந்தப் பேயாசையை அங்கே ஊட்டி அந்த விஷத்தன்மையை அந்த உடலிலும் அதிகமாகச் சேர்த்து அந்த உடலை வீழ்த்தி விட்டு வெளிவந்த பின்… மனிதன் அல்லாத நிலைகளைத் தான் பெறச் செய்கின்றது.

1.ஆனால் நம்முடைய ஆசை அருள் மகரிஷிகள் உணர்வுடன் ஒன்றி
2.அந்த உணர்வினை நமக்குள் எடுத்தால் எந்த மனிதனுடைய ஈர்ப்புக்குள்ளும் செல்லாது
3.அருள் ஒளியின் உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்று பிறவி இல்லா நிலை அடைய முடியும்.

இந்த வலுவைச் சேர்த்தால் நாம் அங்கே செல்கின்றோம். “மனிதனின் கடைசி எல்லை சப்தரிஷி மண்டலத்தை அடைவது தான்…”

குழந்தைகளுக்கு நாம் எப்படித் தியானிக்க வேண்டும்…?

குழந்தைகளுக்கு நாம் எப்படித் தியானிக்க வேண்டும்…?

 

நமது குடும்பத்தில் குழந்தைகள் நன்றாகப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது சந்தர்ப்ப பேதத்தால் படிப்பு குறைந்து போனால் “ஐயோ நன்றாகப் படித்துக் கொண்டிருந்த குழந்தை இப்படி ஆகிவிட்டதே” என்று வேதனைப்பட்டுக் குழந்தைகளை எண்ணவே கூடாது.

அந்த மாதிரிச் சொற்கள் வந்தாலே “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதற்குப் பின்… குழந்தையை நினைத்து அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியும் துருவ மகரிஷியின் அருள் சக்தியும் சிந்தித்துச் செயல்படும் அந்தச் சக்தியும் என் குழந்தை பெற வேண்டும்,
1.நல்ல மன வலிமை பெற வேண்டும்,
2.கல்வியில் சிறந்த ஞானம் பெறக்கூடிய அருள் சக்தி பெற வேண்டும் என்று
3.நமது உடலில் இதை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

நாம் குழந்தைகளைப் பார்க்கும் பொழுதெல்லாம்… கல்வியில் சிறந்த மாணவனாக மாணவியாக வர வேண்டும் என்று இந்த உணர்வோடு பார்த்து “நீ வெற்றி பெறுவாய்… தேர்வில் முன்னணியில் வருவாய்…!” என்று மனதில் எண்ணிப் பார்த்தால் போதும்.

பள்ளிக்குப் போகும் பொழுது ஆசீர்வாதம் கேட்டால் இதே போன்று சொல்லால் சொல்லி… அந்த உணர்வைப் பாய்ச்சி அனுப்ப வேண்டும்.

அதே சமயத்தில் குழந்தைகள் மற்ற நேரங்களில் அவர்கள் உணர்வுக்குத்தக்க “சில குறைபாடுகள்” வருகிறது என்றால் அந்த உணர்வு நமக்குள் வந்துவிடும்.

அந்த உணர்வு நமக்குள் வராதபடி “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நாம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பின் பையனை எண்ணி
1.அவன் சிந்தித்துச் செயல்படும் சக்தியும் மலரைப் போன்ற மணமும்
2.மகிழ்ந்து வாழும் சக்தியும் மகிழச் செய்யும் உணர்வுகளும் அவனுக்குள் வளர வேண்டும்.
3.தெளிந்த மணமும் தெளிவான நிலை அவன் பெற வேண்டும் என்ற உணர்வை எடுத்து
4.நமக்குள் மாற்றி உருவாக்கி விட்டால் அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் இந்த எண்ணங்கள் தான் வரும்.

இல்லாவிடில் குறை வந்து விட்டால் அவனை எண்ணும் பொழுதெல்லாம் கோபம் வரும். நம் உணர்வு அவன் மேல் பாயும்.

அப்பொழுது அந்த உணர்வின் எண்ணங்கள் அவன் மீது “இப்படியே பண்ணிக் கொண்டிருக்கிறானே… என்ன ஆகப்போகிறானோ…?” என்று எண்ணும் போது அவன் சிந்தனை பூராவுமே குறைக்கப்பட்டு அவன் சிந்திக்கும் தன்மையையே இழந்து விடுகிறான்.

அப்படி ஆகாதபடி… துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் ஒவ்வொரு நொடியிலேயும் எடுத்து அதை நம் உடலுக்குள்ளும் குழந்தைக்குள்ளும் சேர்த்துப் பழக வேண்டும்.

கணவன் மனைவி தியானத்தால் ஒளிகள் பாய்ந்து குடும்பத்திற்குள் இருள் நீங்கும்

கணவன் மனைவி தியானத்தால் ஒளிகள் பாய்ந்து குடும்பத்திற்குள் இருள் நீங்கும்

 

ரோட்டிலே ஒருவன் யாரையோ கோபமாகப் பேசுகின்றான்… நாம் பார்க்க நேருகின்றது. “நடு ரோட்டில் இந்த மாதிரிப் பேசுகின்றானே” என்ற உணர்வு வந்தவுடனே உயிரில் பட்டவுடனே நமக்கும் அந்த உணர்ச்சியைத் தூண்டுகிறது.

அவன் உணர்வு நம்மை இயக்குகின்றது. அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

1.“ஈஸ்வரா…” என்று கண்ணின் நினைவை உயிருக்கு… புருவ மத்திக்குக் கொண்டு போகவேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும், பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்.
3.எங்கள் உடலில் படர வேண்டும் எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று உள்ளுக்குள் செலுத்த வேண்டும்.
4.இந்த வலுவான நிலைகள் இங்கே வந்தவுடனே அதைத் தள்ளிவிட்டு விடுகிறது.
5.புருவ மத்தியில் அடைத்து வலுக்கூட்டி நாம் ஆன்மாவைச் சுத்தப்படுத்துகின்றோம்.

துணியில் அழுக்குப் பட்டவுடன் சோப்பைப் போட்டவுடன் நுரை உள்ளுக்குள் போய் அழுக்கை வெளியே தள்ளிவிட்டு விடுகிறது. சோப்புப் போடாமல் என்னதான் துவைத்தாலும் இருட்டடித்த மாதிரிதான் இருக்கும். வெள்ளையாக வருவதில்லை.

அது போல நம் ஆன்மாவைத் தூய்மை செய்ய வேண்டும்.

இவ்வாறு ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதற்கு நம் எண்ணத்திற்கு வலு கொடுப்பதற்கு… ஜீவன் ஊட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும்…?

காலையில் எழுந்தவுடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவனுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று முதலில் எண்ண வேண்டும்.

பின் தன் கணவருக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணி அவர் உடல் முழுவதும் படர வேண்டும் அவர் ஜீவாத்மா பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதே போல ஆண்களும் தன் மனைவி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இரண்டு பேர் சண்டை போட்டார்கள் என்றால் அமெரிக்காவில் இருந்தாலும் புரையோடுகின்றது. நன்மை செய்தான் என்று எண்ணினால் விக்கலாகின்றது.

இங்கே குடும்பத்தில் பாசத்துடன் இருந்து “என் குழந்தைக்கு என்ன ஆனதோ…?’” என்று எண்ணிப் பாருங்கள், அங்கே தொல்லை கொடுக்கும்.

கணவர் ரொம்ப உழைத்துக் கொண்டேயிருக்கிறார். அங்கே இருக்கிறவர்கள் எல்லாம் அவரை இப்படிப் பேசுகிறார்களே…! என்று மனைவி எண்ணினால்… ஆண்கள் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் செயலற்றதாக ஆக்கிவிடும்.

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும். என் கணவர் உடலில் ஜீவான்மா முழுவதும் படர வேண்டும். நாங்கள் இரு மனமும் ஒன்றி இரு உயிரும் ஒன்ற வேண்டும்.

வாழ்க்கையில் இருளை அகற்றும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று அதிக நேரம் இல்லையென்றாலும்கொஞ்ச நேரமாவது இரண்டு பேரும் எண்ண வேண்டும். இராத்திரியிலே விழிப்பு வரும் பொழுது இந்த மாதிரிச் செய்து பழக வேண்டும்.

1.தியானத்திலே இருக்கிறவர்களுக்குக் காலை 4 மணியில் இருந்து 6 மணிக்குள் இந்த உணர்வுகள் தட்டி எழுப்புவதை நீங்கள் பார்க்கலாம்.
2.உங்களை அறியாமலேயே விழிப்பு வரும். அந்த நேரத்திலே அந்த அருள் சக்திகளை நுகருங்கள்.
3.அப்பொழுது பெண்கள் தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும்
4.ஆண்கள் தன் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

எண்ணியபின்… குரு அருளைப் பெற வேண்டும். என் கணவர் பார்வையில் தீமைகள் அகற்றும் அந்தச் சக்தி பெற வேண்டும். அவர் செயலிலே புனிதம் பெற வேண்டும், அவரைப் பார்ப்போரெல்லாம் புனித நிலை பெற வேண்டும் என்று மனைவி எண்ண வேண்டும்.

அதே மாதிரி கணவன் மனைவியை ஓர் 5 நிமிடம் எண்ணிப் பழக வேண்டும். இப்படி நீங்கள் எண்ணினால் காலையில் விழித்தெழும் பொழுது “ஓர் ஆனந்தமான நிலை வரும்…”

இந்த மாதிரி எண்ணும் பொழுது பார்த்தால் உங்கள் உடலில் “பளீர்… பளீரென்று…” வெளிச்சம் வரும்.
1.ஏனெனில் நுகரப்படும் பொழுது இது பட்டவுடன் மோதி… இருளை நீக்கி
2.வீட்டிற்குள் ஒரு வெளிச்சம் வருவதைப் பார்க்கலாம்.

சூரியன் தான் எடுத்துக் கொண்ட பாதரசத்தால் தன் அருகில் வந்தவுடன் மோதிப் பளீரென்று உலகம் முழுவதும் ஓர் வெளிச்சத்தைக் கொடுக்கிறது.

அதே மாதிரி நம் மூச்சலைகள் பட்டவுடன் நமது வீட்டிற்குள் இவ்வாறு எண்ணும் பொழுது நம் உடலில் எடுத்துக் கொண்ட சக்தி தீமை என்ற நிலையில் மோதியவுடனே அது விலகிப் போகும். உடலில் ஒரு விதமான வெளிச்சம் வரும். உடலில் மகிழ்ச்சி ஏற்படும்.

இதை நீங்கள் ஒவ்வொரு நாளும் காலையில் 4 மணிக்கெல்லாம் செய்து பழக வேண்டும்.
1.அப்படிச் செய்தால் யாம் பதிவு செய்கின்ற ஞான வித்திற்கு
2.அப்பொழுது “நீங்கள் சக்தி ஊட்டுகிறீர்கள்” என்று அர்த்தம்.

நம் உடலுக்குள் இருக்கும் தீமையை அகற்றிடும் அணு செல்கள்

நம் உடலுக்குள் இருக்கும் தீமையை அகற்றிடும் அணு செல்கள்

 

பல கோடிச் சரீரங்களில் தீமை என்று உணர்ந்து அதிலிருந்து தன்னைக் காத்திடும் உணர்வுகளைச் செயலாக்கிப் பெற்ற மனிதச் சரீரத்தில்
1.“அனைத்துத் தீமைகளையும் அகற்றிடும் அணு செல்கள்” உள்ளன.
2.ஆகையினால்தான் கார்த்திகேயா என்றும் “ஆயிரம் கண்ணுடையாள்…” என்றும் ஞானிகள் உரைத்தனர்.

மனிதனின் நிலையில் ஆயிரம் குணங்களின் சத்து நமது உடலில் இருக்கின்றது. இதனால் நாம் எத்திசையிலும் எந்நிலையையும் நமது உணர்வின் அறிவு கொண்டு அறிந்து கொள்கின்றோம்.

ஆலயங்களில் 1008 அபிஷேகங்கள் செய்வார்கள். மனிதரிடத்தில் 1008 குணங்கள் உள்ளன. பகைமை உணர்வுகள் வரும் பொழுது அதிலிருந்து மீண்டிடும் நிலையாக அறிவைக் கூட்டிப் பகைமையிலிருந்து விடுபடுகின்றோம்.

பல கோடிச் சரீரங்களில் சேர்ந்துள்ள தீமைகளை வென்ற உணர்வுகள் நமக்குள் இருக்கப்படும் பொழுது பகைமை உணர்வுகளைக் கண்ணால் பார்க்கப்படும் பொழுது நமது உடலில் இருக்கும் அறிவு இது பகைமை கொண்டது என்று உணர்த்துகின்றது. அறியும் தன்மை வருகின்றது.

தீமையை வென்றவர் துருவ மகரிஷி… அவர் துருவ நட்சத்திரமானார்.

“ஈஸ்வரா” என்று நம் கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தால் இதன் வழி கொண்டு தீமைகளை வென்றிடும் சக்தியினை நமக்குள் உருவாக்குகின்றது நமது உயிர்.

1.ஏனென்றால் கண்ணால் காக்கும் நிலை பெற்றிருந்தாலும்
2.கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றும் பொழுது உணர்வினை உயிர் வழி கொண்டு உடலில் பரப்புகின்றது.
3.உடலில் பரப்பிய உணர்வுகள் உந்தி… மூக்கின் வழி சுவாசிக்கும் உணர்வின் தன்மையினை இடைமறித்து
4.அருள் ஒளி என்ற உணர்வுகள் இணையும் பொழுது தீமை என்ற நிலை வராது தடுக்கின்றது.

அருள் ஒளியின் உணர்வின் தன்மை, நமக்குள் வலு பெறும் பொழுது பகைமையை உட்புகாது தடுக்கும் நிலை வருகின்றது. இதைத்தான் கார்த்திகேயா என்று உணர்த்தினர் ஞானிகள்.

ஏனென்றால் நாம் நமது ஆறாவது அறிவால் அனைத்தையும் அறிந்திடும் தன்மை இருந்தாலும்… ஆறாவது அறிவு சேனாதிபதியாக நின்று தீமைகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கவும் செய்கின்றது.

1.எண்ணத்தால் உணர்வின் ஒளியை நமக்குள் உருவாக்கினால்
2.உயிரென்ற நிலைகள் இணைந்து அருள் ஒளி எனும் பேரொளியின் தன்மையை நம்முள் உருவாக்கும்.
3.இவையனைத்தும் எதிர்காலத்தில் உங்களைப் பகைமையுணர்வு தாக்காது
4.அதனின்று பாதுகாக்கும் சேனாதிபதியாக உருப்பெறுகின்றது.

அத்தகைய பாதுகாப்புக் கவசத்தின் உணர்வின் அணுக்களைப் பெறுவதற்குத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நீங்கள் நுகர்ந்து உங்களுக்குள் உருவாக்கினால் இந்த உணர்வின் எண்ணம் உங்களைக் காக்கும். இதுவே சேனாதிபதி…!

ஞானிகளின் தத்துவக் கருத்துக்கள் மனிதன் தீமைகளிலிருந்து மீளும் மார்க்கத்தைத்தான் உரைக்கின்றன. அதற்காகத்தான் விநாயகரை வணங்கச் செய்தது.

பல கோடிச் சரீரங்களில் தீமைகளில் இருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வைப் பெற்றுத் தன்னைக் காட்டிலும் வலு கொண்ட உணர்வைச் சுவாசித்து நம்மை மனிதனாக உருவாக்க மூலமாக இருந்தது நமது உயிர்.

தீமையிலிருந்து விடுபடும் உணர்வைச் சேர்த்துச் சேர்த்து எண்ணத்தின் வலிமை பெற்றது மனித உடல்,

இன்றைய மனிதன் “தன் எண்ண வலுவின் உணர்வின் துணை கொண்டு…
1.1000 டன் எடை உள்ள இராக்கெட்டை விண்ணில் செலுத்துகின்றான்.
2.பெரும் பாறைகளைச் சிறு கடப்பாரை கொண்டு நகர்த்தி இடம் மாற்றுகின்றான்.

இது மனிதனின் எண்ண வலு.

எண்ணத்தின் வலுக் கொண்டு இவன் சுவாசிக்கும் பொழுது “அதனின் உணர்வின் யுக்தியின் அணுக்கள் உருவாகி…” அது காலத்தால் தனக்கேற்ற உணர்வை உருமாற்றிக் கொண்டேயிருக்கும்.

எண்ணத்தின் வலுக் கொண்டு தீமைகளை அகற்றும் உணர்வை நமக்குள் சேர்க்கும் பொழுது அந்த உணர்வினை வலுப் பெறச் செய்யும்… வளர்க்கச் செய்யும் உணர்வினைச் செயல்படச் செய்கின்றது.

ஆகவே நாம் அருள் ஞானிகள் காண்பித்த அருள் நெறிப்படி துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் நமக்குள் சேர்ப்போம்.
1.“ஈஸ்வரா” என்று உயிர் வழி கொண்டு தீமைகளை வெல்லும் அருள் உணர்வினைக் கவர்ந்து உடல் முழுவதும் அதைப் பரப்பி
2.அறியாது நமக்குள் சேர்ந்துள்ள தீமைகளைப் பிளந்திடும் நிலை பெறுவோம்..

இதன் வழியைப் பின்பற்றும் அன்பர்கள் அனைவரும் தம்முள் தீமைகளை வென்றிடும் நிலையாக ஒளியின் உணர்வுகளைப் பெற்று இவ்வாழ்வில் பேரின்பப் பெரு வாழ்வாக பெரு வீடு பெருநிலை பெறும் நிலையாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.

தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் செயல்படுத்த வேண்டியது

தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் செயல்படுத்த வேண்டியது

 

எலக்ட்ரானிக் என்ற நிலைகளை வைத்திருக்கின்றார்கள்… நாம் அருகிலே சென்றவுடன் கதவு திறக்கின்றது. மனிதன் இவ்வாறு கொண்டு வருகின்றான்.

அதே போன்றுதான் வேதனை என்ற உணர்வு ஆன பிற்பாடு உடலுக்குள் சிக்கலை ஊட்டி விடுகின்றது. காரணம் நாம் நுகரும் உணர்வு தான் நம்மை இயக்குகின்றது… அந்த உணர்வுகள் அதிகமாகின்றது.

இதை மாற்ற வேண்டும் அல்லவா…!

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று விஞ்ஞானம் தெளிவாகக் கொடுக்கின்றது… நிரூபிக்கின்றது. ஆனால் மெய் ஞானிகள் காட்டியது…
1.பிறருடைய உணர்வுகளை வேகமாக எடுக்கப்படும் பொழுது
2.நம் நல்ல உணர்வுகளை உடைத்து விட்டு உள்ளே செல்வது போல் ஆகிவிடுகின்றது.

ஆகையினால் நாம் எங்கிருந்தாலும் இந்த உணர்வின் அழுத்தம்… “அந்தக் கோபம் நமக்குள் வராது தடுக்க என்ன செய்ய வேண்டும்…?”

மகரிஷிகளின் அருள் சக்திகளை அடிக்கடி நம் உடலுக்குள் சேர்த்து இணைக்கப் பழக வேண்டும். அப்போது மகரிஷிகள் உணர்வு சார்ஜ் அதிகமாகிறது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. என் கணவருக்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும். அவர் வேலை செய்யும் இடங்களிலே பேரும் புகழும் பெற வேண்டும்… நல்ல முறையில் அவர் வேலை செய்ய வேண்டும் என்று இந்த உணர்வை எடுத்து வளர்க்க வேண்டும்.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்தச் சார்ஜை அடிக்கடி ஏற்றிக் கொண்டே வர வேண்டும்.
2.இது பாதுகாக்கும் சக்தியாக வரும்.

ஏனென்றால் தியானம் என்பது ஒவ்வொரு நொடியிலும் தீமைகள் புகாது தடுத்துப் பழகுவது தான். துருவ நட்சத்திரத்தின் உணர்வை இப்படிச் சேர்க்கும் பொழுது வாழ் நாளில் எல்லா அணுக்களுக்கும் சேர்க்கின்றோம்.

புழுவிலிருந்து மனிதனாக வளர்ச்சி பெற்று வரும் போது தீமையிலிருந்து விடுபட்டுத் தான் வந்திருக்கின்றோம். மனிதனாக வளர்ச்சி பெற்ற நிலையில் தீமையெல்லாம் நீக்கிய துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

அந்தச் சக்தி காற்றில் இருக்கின்றது… அதை எடுத்து பயன்படுத்தி அந்த உணர்வை வளர்த்துக் கொண்டு வந்தோம் என்றால்
1.துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக இணைகின்றோம்.
2.மெம்பர்கள் வாழ்க்கையில் தன் குடும்பத்தில் இதைக் கடைப்பிடித்தாக வேண்டும்.

எத்தகைய தீமை வந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கொண்டு அதை அடக்கி பையனுக்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் அருள் ஞானம் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

தொழிலிலே நஷ்டம் என்ற வார்த்தையை விடுத்துவிட வேண்டும். துருவ நட்சத்திரத்தை எண்ணினால் நல்ல சிந்தனை வரும்… எப்படிச் செயல்படுத்த வேண்டும்…? என்ற ஞானங்கள் வரும். அதற்குத் தக்க எண்ணங்கள் வரும்.

ஆனால் அடுத்தவரிடம் போய் என் தொழில் நஷ்டமாக இருக்கிறது…! என்று சொன்னால் அவர் ஒரு விதமாகச் சொல்வார் இன்னொருவர் இன்னொரு விதமாகச் சொல்வார்.

எல்லாவற்றையும் சேர்த்துக் குழப்பிவிட்டு “ஒன்றுமே தொழில் செய்ய முடியாது போல் இருக்கின்றது…” என்ற அந்த உணர்வு வந்து சோர்வடைந்து விடுவீர்கள். ஆக நம்மையே நாம் தாழ்த்திக் கொள்கின்றோம்.

1.கணவன் மனைவி இருவரும் ஒன்று சேர்ந்து துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து
2.உயர்ந்த ஞானம் கிடைக்க வேண்டும்… சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும்
3.தொழிலில் வீரிய சக்தி கிடைக்கும் அந்த ஞானம் கிடைக்க வேண்டும் என்று
4.காலை துருவ தியானத்தில் எடுத்து இதைப் பாய்ச்சிப் பாருங்கள்.

கணவர் மன வலிமை பெற வேண்டும்… அவருடைய எண்ணங்கள் சீராக இருக்க வேண்டும்… அனைவரும் போற்றும் நிலை பெற வேண்டும்… தொழில் செய்யும் இடங்களில் வாடிக்கையாளர்களும் மற்றவர்களும் நன்றாக இருக்க வேண்டும்… உயர்ந்த பண்புகள் வளர வேண்டும் என்று மனைவி எண்ணிவிட்டால் “வேறு யாரிடம் யோசனை கேட்க வேண்டியதில்லை…”

நீங்கள் தொழிலுக்குச் செல்லுங்கள் எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும்… நல்ல சரக்கைத் தேர்ந்தெடுக்கும் சக்தி கிடைக்கும் வியாபாரம் பெருகும் என்று என்று மனைவி சொல்லி அனுப்ப வேண்டும்.

1.இத்தகைய நல்ல உணர்வுகளைக் கணவன் மனைவிக்குள் உருவாக்க வேண்டும்.
2.அதைச் செயலாக்கிப் பார்க்க வேண்டும்… நாம் வாழ்ந்து காட்ட வேண்டும்… மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

இதையே மற்றவர்களிடம் இதன் வழி செயல்படுத்துங்கள் என்று சொல்ல வேண்டும்.
1.இந்த நல்ல உணர்வுகள் அங்கே விளைய வேண்டும்… அவர்கள் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும்.
2.அவர்கள் உடலில் விளையும் அந்த நல்ல மூச்சலைகள் இங்கே படர வேண்டும்.
3.நம் வீட்டில் மட்டுமல்ல… நாம் சொல்லும் உணர்வுகளை நுகர்வோர் குடும்பத்திலும் இது பரவி கஷ்டங்கள் அகல வேண்டும்.
4.நாம் வசிக்கும் தெருவிலும் நல்ல உணர்வுகள் படர வேண்டும்… ஒன்றுபட்டு வாழும் நிலை வர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் இதைச் சீராக செயல்படுத்துங்கள்.

யுத்த காலங்களில் நாம் இணைக்க வேண்டிய உயர்ந்த சக்தி

யுத்த காலங்களில் நாம் இணைக்க வேண்டிய உயர்ந்த சக்தி

 

தாவர இனங்களில் விளைந்தவற்றைத்தான் மனிதர்கள் நாம் உணவாக உட்கொண்டு வளர்ந்து வந்துள்ளோம்.
1.அதில் உருவானது தான் நம் உணர்வுகளும் உணர்ச்சிகளும் எண்ணங்களும் அணுக்களும் எல்லாமே
2.ஆகவே தாவர இனத்தின் உணர்வுகள் நம்மிடம் உண்டு…!

பல பிறவிகள் கடந்து வந்த பின் தாவர இனங்கள் அனைத்தும் செழித்து வளர வேண்டும் என்ற உணர்வை நாம் செலுத்தினால் இந்த உணர்வு அங்கு இணைக்கப்படுகின்றது.

நல்ல உணர்வின் தன்மையாக நாம் பாய்ச்சப்படும் பொழுது தீமை என்ற உணர்ச்சிகளை மாற்றி நல்ல நிலைகள் கொண்டு தாவரங்கள் வளரும்.

1.ஆனால் நீங்கள் சங்கடமாக சலிப்பாக இருந்து உங்கள் வயலுக்குச் சென்று உற்றுப் பாருங்கள்.
2.பயிர்களின் வளர்ச்சி எப்படிக் குறைகிறது…? என்று பாருங்கள்.

வீட்டில் நல்ல செடியை வளருங்கள். அடுத்தவரிடம் சண்டை போட்டுவிட்டு அந்த உணர்வுடன் நீரை அதற்கு ஊற்றிப் பாருங்கள்… செடி கருகிப்போகும்.

ஏனென்றால் புழுவாக பூச்சியாக இருக்கும் பொழுது நாம் அதை உட்கொண்டு தான் வந்துள்ளோம்… இந்த உணர்வின் தன்மை வரும். மனிதனாக இப்போது முழுமை அடைந்திருக்கின்றோம் இந்த உணர்வுகளை அங்கே பாய்ச்சப்படும் பொழுது அது கருகும்.

அதே சமயத்தில் தியானத்திலே உயர்ந்த உணர்வுகளை உங்களுக்குள் வலுக் கூட்டி இந்த செடி நன்றாக வளர வேண்டும் நல்ல பலன் தர வேண்டும் என்று உங்கள் பார்வையில் பாருங்கள்.

1.எந்த அளவுக்கு நீங்கள் சக்தி வளர்த்துக் கொண்டீர்களோ நீரை ஊற்றியோ அல்லது கண்களிலே பார்த்தால் கூட இந்த உணர்வுகள் அங்கே பாயும்.
2.இப்படி அங்கே பரவச் செய்யும் போது செடிகளில் தீமையின் அணுக்கள் குறையத் தொடங்கும்.

இதையெல்லாம் உங்கள் மனதில் உருவான உணர்வின் தன்மை எதை நினைவுக்குக் கொண்டு வருகின்றீர்களா அதன் வழி அங்கே நடக்கும்.

அதனால்தான் தியானத்தில் உங்களுக்குப் பயிற்சியாகக் கொடுக்கப்படும் பொழுது… மகரிஷிகள் உணர்வுகள் மேகங்களிலே படர வேண்டும்… மேகங்கள் கூடி நல்ல மழை பெய்ய வேண்டும்…! என்று இந்த உணர்வைச் செலுத்தச சொல்கின்றோம்.

அந்த மேகக் கூட்டத்திற்குள் இந்த உணர்வுகள் கலக்கின்றது. அந்த மழை நீர் பட்டுத் தான் நாம் அனைவருமே வளர்ந்து வந்திருக்கின்றோம். இந்த உணர்வின் எண்ணத்தால் அங்கே பாய்ச்சப்படும் பொழுது செடிகளும் நன்றாகச் செழித்து வளர்கின்றது.

1.காரணம் எல்லாவற்றிலுமே காந்தப்புலன் உண்டு… எல்லாவற்றிலுமே அது கலந்து கொள்கின்றது.
2.நாம் உயர்ந்த உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது அது கலந்து மழை நீராக நன்னீராக வரும் பொழுது தீமைகளை அகற்றும் சக்தி பெறுகின்றது.
3.மனிதனால் உருவாக்கப்பட்ட உணர்வுகள் மேகக் கூட்டத்துடன் கலந்து “நல்ல மழையாகப் பெய்யும்…”

ஆனால் மனிதன் விஞ்ஞானத்தினால் வெளிப்படுத்தப்படும் புகை மண்டலங்களும் பல விஷ உணர்வுகளும் மேகக் கூட்டத்திலே கலக்கின்றது. அமிலம் கலந்த நீராகத் தாவர இனங்களுக்குத் தொல்லை கொடுக்கும் சக்தியாக கலந்து விடுகின்றது.

அது மட்டுமல்ல…!
1.யுத்த காலங்களில் பார்த்தோம் என்றால் மழை பெய்தாலே செடி கொடிகள் கருகும்.
2.காரணம்… பகைமை கொண்டு ஒருவனுக்கு ஒருவன் கொன்றிடும் உணர்வுகள் அங்கே படரப் படும் பொழுது அவ்வாறு ஆகிறது.

இது போன்ற நிலைகளில் இருந்து நாம் அனைவரும் காக்கும் சக்தியாக துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் வலுவாகப் பெருக்கி இந்த உணர்வினை மேகக் கூட்டங்களிலே படரச் செய்யும் போது நல்ல மழை நீராகப் பெய்யும்.

நாம் பார்ப்போர் அனைவரையும் நம் ஊர் மக்களையும் நாட்டு மக்களையும் தூய்மைப்படுத்த இது உதவும். “ஒவ்வொருவரும் நாம் இதைச் செய்ய வேண்டும்…”

1.யுத்த காலங்களில் நம்மைப் பாதுகாக்கவும் உற்றார் உறவினர் நண்பர்களைப் பாதுகாக்கவும் இந்தச் சக்தி நமக்கு உதவியாக இருக்கும்.
2.எந்த நிலையில் நாம் உடலை விட்டுச் சென்றாலும் பிறவி இல்லா நிலை அடைய இது உதவும்.

நம்முடைய எதிர்பார்ப்பு எதுவாக இருக்க வேண்டும்…?

நம்முடைய எதிர்பார்ப்பு எதுவாக இருக்க வேண்டும்…?

 

பிறரிடமிருந்து வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் என்று கேட்டறிந்தாலும் இதை மாற்ற அருள் மகரிஷிகளின் உணர்வுகள் பெற வேண்டும் என்று சிறிது நேரம் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். உடலுக்குள் அதை உருவாக்க வேண்டும்.

நம் உடலில் எத்தனை வகையான குணங்கள் உண்டு. அந்தந்த குணங்கள் வரப்படும் பொழுது அதனால் ஏற்பட்ட அணுக்கள் உண்டு.

நாம் ஒன்றுமே சங்கடப்பட வேண்டாம். ஆனால் சங்கடப்படுபவர் உணர்வைக் கேட்டறிந்து
1.அது அணுவாக உடலிலே விளைந்திருந்தால் அடுத்தாற் போல சந்தோஷப்படுவதைக் கேட்டாலும் அது இயங்காது.
2.மற்றவர்கள் சங்கடமாகப் பேசிக் கொண்டிருந்தால் அதைப் பார்த்த பின்
3.அவர் உடலிலிருந்து வந்ததை உணவாக எடுத்து இங்கே நமக்குள் கொண்டு வந்து விடும்.
4.நம்மை அறியாமலே சங்கடமாகத் தான் அடுத்து பேசுவோம்.
5.குடும்பத்தில் ஏதாவது நடந்தால் வம்பு வந்துவிடும்… சங்கட உணர்ச்சிகள் தூண்டப்பட்டு விடுகின்றது.

இது போன்ற நிலைகளைத் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா… என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று பல முறை எண்ண வேண்டும்.

பின் மகரிஷிகளின் அருள் சக்தி அந்தச் சங்கடப்படுபவர்கள் பெற வேண்டும். அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும். அவர் வாழ்க்கையில் நலம் பெறும் சக்தி உருவாக வேண்டும் என்று எண்ணி விட்டால் இங்கே நம் உடலுக்குள் இது உருவாகின்றது.

அவர்கள் எண்ணினால் அவர்களுக்குக் கிடைக்கும். அவர்கள் எண்ணவில்லை என்றாலும்
1.அவர்கள் உணர்வு நமக்குள் இருப்பதால் நாம் இதை இந்த முறைப்படி மாற்றிக் கொள்கின்றோம்.
2.இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

காரணம் நம் எண்ணியது எதுவோ அதைத்தான் உயிர் உருவாக்கும். ஆகவே இந்த வாழ்க்கையில் “பிரதிபலனை எதிர்பார்த்து எதுவும் செய்யக்கூடாது…”

ஆனால் பிரதிபலன் எதுவாக இருக்க வேண்டும்…?

நாங்கள் பார்த்த குடும்பம் எல்லாம் நலம் பெற வேண்டும் அவர் குடும்பங்கள் அனைத்தும் நலம் பெற வேண்டும்
1.அவர்கள் மகிழ்ச்சி பெற வேண்டும்… அவர்கள் பேரானந்தப்பட வேண்டும் என்று அதை நாம் பற்றி
2.அவர்கள் வாழ்வில் நல்லது வருவதை எண்ணி நாம் மகிழ வேண்டும்.
3.இது தான் நம்முடைய எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும்.

அவர்கள் நன்றாக இருக்க வேண்டும்… நல்ல சொல் சொல்ல வேண்டும்… குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டால் அது எதிர்பார்ப்பாக வளரும். அந்த எதிர்பார்ப்பு நமக்குள் நல்ல உணர்வுகளாகப் பெருகும்… அத்தகைய அணுக்கள் விளையும். தீமைகள் வராது தடுக்கும்.

ஒருவர் மீது நாம் அதிகப் பற்று கொண்டால்
1.அவர் என்ன தப்பு செய்தாலும்
2.நாம் அதை ஏற்றுக் கொள்வோம்…!

ஆனால் நமக்குப் பிடிக்காதவர்கள் என்று தெரிந்தால்
1.என்னதான் அவர்கள் நல்லது செய்தாலும்
2.அவர்களைக் குறை கூறும் நிலைகள் தான் வரும்… அவர்களைப் பார்த்த உடனே இந்த உணர்வுகள் தான் தோன்றும்.

இதைப் போன்ற நிலைகளிலிந்து நாம் விடுபட வேண்டும்.
1.விஷத்தை ஒடுக்கிடும் ஆற்றலை ஒவ்வொரு நொடியிலும் நாம் பெற வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று நமக்குள் எந்தத் தீமையும் வளராது தடுக்க வேண்டும்.

நாம் எடுக்க வேண்டிய பிரமாணம்

நாம் எடுக்க வேண்டிய பிரமாணம்

 

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமான அந்த உணர்வை
1.உலக மக்கள் அனைவரும் பெற்று…
2.இருளை அகற்றிப் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற உணர்வுடன் நாம் வாழ்வோம்.

அவர் உணர்வை ஏற்றுக் கொண்டோர் அனைவரும் அதன் வழியில் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழுகின்றார்கள். துருவ நட்சத்திரம் அகண்ட அண்டத்தில் வரும் நஞ்சினை ஒளியாக மாற்றி அருள் உணர்வைப் பெற்று ஒளி உணர்வாக வருவதை நுகர்ந்தோர் அனைவரும் “சப்தரிஷி மண்டலங்களாக…” வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

அவர்களைப் போன்று நாமும் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் கால மெபராக இணைந்துள்ளோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருளைப் பெற்று
1.அதன் உணர்வின் தொடர்பு கொண்டோர் அனைவருக்கும் அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று
2.நமக்குள் ஒன்றுபட்ட உணர்வின் வலுவைச் சேர்த்து அனைவரும் பெற வேண்டும் என்று தியானிப்போம்.
3.அனைத்து குடும்பங்களும் ஒன்றுபட்டு வாழத் தவமிருப்போம்.

கணவன் மனைவி இரு மனமும் ஒன்றி இரு உயிரும் ஒன்றி இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றிடும் அருள் சக்தி பெற்று பேரரருள் உணர்வுகளைத் தனக்குள் கூட்டி அவர்கள் பார்வையில் இருளை அகற்றிடும் அருள் ஞானக் குடும்பமாக வளர்ந்திடத் தியானிப்போம்.

யாம் உபதேச வாயிலாக ஒளி உணர்வுகளைப் பரப்பப்படும் பொழுது உங்கள் செவிகளில் இந்த உணர்ச்சிகளை ஊட்டி… யாம் இட்ட உணர்வுகள் அனைத்தையும் கண் வழி கவர்ந்து… மூக்கு வழி சுவாசித்து… உயிர் வழி நுகர்ந்து… அந்த அருள் உணர்வுகள் அனைத்தையும் உங்கள் ரத்த நாளங்களில் இப்போது கலக்கச் செய்கிறோம்.

எல்லா உணர்வுகளையும் எடுத்துத் தான் துருவ நட்சத்திரம் ஒளியானது. அதாவது
1.மனித வாழ்க்கையில் வந்த இருளை அகற்றி மகிழச் செய்து மகிழ்ந்திடும் உணர்வுகளை விளைய வைத்து
2.எல்லோரையும் மகிழ்ந்து வாழச் செய்யும் அந்த ஒளியின் சரீரமாகப் பெற்றது துருவ நட்சத்திரம்.
3.அகண்ட அண்டத்தில் என்றும் பதினாறு என்ற நிலை பிறவி இல்லாத நிலை அடைந்தது துருவ நட்சத்திரம்.

அனைத்துக் குடும்பங்களிலும் பேரின்பப் பெரு வாழ்வு வாழச் செய்யும் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் நாம் ஆயுள் கால மெம்பராக இணைவோம். அனைவரையும் நாம் வாழ்த்துவோம். அனைத்துக் குடும்பங்களும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று நாம் எண்ணுவோம்..

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அனைவரும் பெற்று இருளை அகற்றி மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி அனைத்துக் குடும்பங்களும் பெற வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் நாம் பிரார்த்திப்போம்.

1.அருள் வழி வாழ்வோம்… ஒன்றுபட்டு வாழ்வோம்
2.ஒன்றுபட்டு வாழ்ந்திடும் அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்று இதை ஒரு பிரமாணமாக எடுத்துக் கொள்வோம்

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெருக்கி நம்முடைய மூச்சும் பேச்சும் உலக உலக மக்களை இருளில் இருந்து அகற்றச் செய்யும் அருள் உணர்வாக நாம் படரச் செய்வோம்.

நாட்டுக்கு நாடு போர் செய்யும் இன்றைய காலகட்டத்தில் நாம் செய்ய வேண்டியது

நாட்டுக்கு நாடு போர் செய்யும் இன்றைய காலகட்டத்தில் நாம் செய்ய வேண்டியது

 

இன்றைய நிலையில் பூமியில் வாழும் நாம் மிகவும் சிரமமான காலகட்ட்த்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். காற்று மண்டலமோ நச்சுத்தன்மையாக மாறிக் கொண்டு வருகின்றது.

அதே சமயம் மனிதனுடைய எண்ண அலைகள் அனைத்தும் சிந்தனையற்ற நிலைகள் கொண்டு மனித உடலில் விளைய வைத்த இந்த உணர்வுகள் இங்கே படர்ந்து கொண்டிருக்கின்றது. அதிலிருந்து நாம் மீள வேண்டும்.

நாம் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற்று அவர்கள் அருள் வட்டத்தில் இணைந்து நம்மையறியாது சேர்ந்த தீமைகளை நீக்கி நம்முடைய மூச்சும் பேச்சும் உலக நன்மை பயக்கும் சக்தியாக உருவாக வேண்டும்.
1.நாம் எண்ணும் அந்த உயர்ந்த உணர்வுகள் தீமையை அடக்கும் சக்தியாகவும்
2.நம்முடைய உணர்வுகள் எண்ணங்கள் அனைத்தும் உலக மக்களைக் காத்திடும் நிலையாகவும் சகோதர உணர்வை வளர்த்திடும் நிலையாகவும்
3.உலக மக்களுக்கு நன்மை பயக்கும் சொல்லாகவும் செயலாகவும் அது வளர்ந்திட வேண்டும்.

1.அன்றைய மெய் ஞானிகள் எவ்வாறு பேரன்பு கொண்டு ஒருவருக்கொருவர் கலந்து உறவாடினார்களோ
2.அதே போன்று நாம் வெளியிடும் அனைத்து உணர்வுகளும் பேரன்பு கொண்ட உணர்வாகப் படர வேண்டும்.

நமக்குள் ஆகாத உணர்வுகள் வந்தாலும் சகோதர உணர்ச்சியுடன் ஒன்றுபட்டுச் சேர்த்து அதைப் பகைமையற்றதாக ஆக்க வேண்டும்.

நாம் தனித்த சரீரங்களாக இருந்தாலும் சகோதர உணர்வுகளுடன் வாழ்ந்திடும் உணர்வாக
1.நாம் இடும் அத்தகைய மூச்சலைகள் இங்கே படர்ந்து
2.அதன் வழிகளில் நம் பூமியான பரமாத்மாவும் பரிசுத்தப்படும் நிலை ஏற்படும்.
3.இந்தப் பரமாத்மாவில் இருந்து நுகர்ந்து எடுக்கும் அனைத்து மக்களும் “மெய் வழி பெறும் நிலைகள் ஏற்படும்…”

நாம் எந்தத் தாவர இனச்சத்தை நுகர்ந்து உணவாக உட்கொண்டு உடலாக ஆனோமோ… இந்த மனித உடலுக்குள் எண்ணிய அருள் மகரிஷிகளின் உணர்வலைகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டுப் படர்ந்து…
1.நாம் செல்லும் இடங்களில் பரவியுள்ள நஞ்சு கொண்ட உணர்வுகளைத் தாக்கி
2.நஞ்சு கொண்ட தாவர இனமே வளராது… மனிதனை வீழ்த்திடும் நிலையைத் தடுக்கும்.
3.நீங்கள் இடும் அந்த மூச்சலைகள் மூலம் தாவரங்களும் சத்தான நிலைகளில் வளரட்டும்
4.அதை உணவாகப் புசிக்கும் மக்கள் அனைவரும் மெய் உணர்வைப் பெறும் தகுதியாக உங்களுடைய மூச்சுகள் அமையட்டும்.
5.கேட்டுணர்ந்த உணர்வுகள் இங்கே படர்ந்து மெய் உலகைப் படைக்கும் உணர்வாக உங்களுக்குள் விளையட்டும்
6.நீங்கள் இடும் மூச்சலைகள் உலகில் உள்ள பகைமைகளை நீக்கி மெய் உணர்வைப் பெறும் சக்தியாக மலரட்டும்.
7.எல்லாம் வல்ல குருநாதர் அருள் வழியில் அந்த மெய் ஞானியின் அருள் வட்டத்திற்குள் உங்கள் அனைவரின் எண்ணங்களும் செல்லட்டும்…!

அதன் வழிகளிலே தீமையை நீக்கி நல்வினைகளைச் சேர்த்து… நல் வினைக்கு நாயகனாக மெய்ப்பொருள் கண்டுணர்ந்த அந்த மெய் ஞானியின் அருள் வட்டத்தில் உலக மக்கள் அனைவரும் இணைவோம்.

என்றும் நிலையான பெரு வீடு பெரு நிலை என்ற நிலையடைந்து… என்றும் மங்காத ஒளிச்சரீரத்தைப் பெறுவோம்.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உணர்த்திய அந்த அருள் வழியை, நீங்களும் பெற வேண்டுமென்ற ஆசையினால்தான் இதை உபதேசிக்கின்றோம்.

நம் குருநாதர் காண்பித்த உணர்வுகளை உங்களுக்குள்ளும் விளையச் செய்து
1.அதை நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம் அந்த மகரிஷியின் அருள் சக்தியைப் பெற்று
2.உங்களை அறியாது புகுந்த தீமைகளை நீக்கி நல்லுணர்வின் தன்மையாக நீங்கள் வளர வேண்டும்

அத்தகைய நிலை அனவரும் பெற வேண்டும் என்று பிரார்த்தித்து… அதனின் சத்தை “ஒருங்கிணைந்து விளையும் சத்தாகச் செயல்படுவோம்…” என்று வேண்டிக் கொள்கிறேன்.