எதையும் தாங்கக்கூடிய சக்தியை குருநாதர் கொடுத்தார்

எதையும் தாங்கக்கூடிய சக்தியை குருநாதர் கொடுத்தார்

குருநாதர் எம்மைத் தேடி வந்து கொடுத்தார். ஏன் கொடுத்தார்…? மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்… எல்லாவற்றையும் தாங்கும் சக்தி பெறச் செய்ய வேண்டும் என்று கொடுத்தார்.

1.ஆகவே எதையும் தாங்கக்கூடிய சக்தியும்…
2.நன்மை செய்வதற்கு ஆற்றலைப் பயன்படுத்த வேண்டிய நேரத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் செயல்படுத்தச் சொன்னார்.

அதைத்தான் யாம் இப்பொழுது செய்கின்றோம்.

நமது உடல் நமக்குச் சொந்தமாகின்றதா…? நாம் தேடிய செல்வங்கள் தான் நமக்குச் சொந்தமாகின்றதா…? நாம் நல்ல அழகான துணிகளை உடுத்துகின்றோம். சுத்தமாக இருக்க வேண்டும் என்று முகப் பவுடர் அது இது என்று பூசுகின்றோம்.

ஆனால் உடலில் ஒரு நோயிருந்து அதனால் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒருவர் உங்களிடம் வந்து “பவுடர் பூசிக் கொள்ளுங்கள்…” என்று சொன்னால் “என்ன…? கிண்டலா செய்கின்றீர்கள்…! அலங்காரம் செய்து கொள்ளும் நிலையிலா நான் இருக்கிறேன்…?” என்று கேட்பீர்கள்.

நீங்கள் சந்தோஷமாக இருந்து பாருங்கள். உங்களுடைய முகத்தில் அழகு கூடும். அதே சமயத்தில் நல்ல ஆடம்பர உடையினை உடுத்தி பவுடர் பூசி அலங்காரப்படுத்தி இருந்த போதிலும் மனது சரியில்லை, வேதனை என்ற நிலையானால் முகம் சுருங்கிவிடும்.

ஆகையால் பார்ப்பவர்கள் என்ன கேட்பார்கள்…? “என்னங்க ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்…? ஏதேனும் கவலையா…?” என்று கேட்பார்கள்.

ஆகவே நம்மை எது செயல்படுத்துகிறது…?

அருள் உணர்வை நமக்குள் பெருக்கி இருளை அகற்றி மகிழ்ச்சியூட்டும் உணர்வினை நம் உடலுக்குள் செலுத்தி நமது அங்கங்களைப் பொலிவுறச் செய்ய வேண்டும்.

1.சாதாரணமாக இருக்கும் பொழுது எம்மைப் பாருங்கள். எமது முகத்தில் வித்தியாசமாக இருக்கும்.
2.அருளைப் பாய்ச்சும் பொழுது வித்தியாசமான தோற்றங்கள் வரும்.
3.இது போன்று நல் உணர்ச்சிகளால் முகம் விரிவடைவதும் மகிழ்ச்சியாவதும் போன்ற நிலைகள் பெறுகின்றது.

உதாரணத்திற்கு நீங்கள் அருள் ஞானத்தை எடுத்துப் பேசிப் பாருங்கள். அந்த நேரத்தில் உங்களிடத்தில் மகிழ்ச்சியின் உணர்வு இருக்கும்.

ஒருவர் உங்களைத் தேடி வந்து தம்முடைய கஷ்டத்தையெல்லாம் கூறுவார். நீங்கள் அது சமயம் ஞானத்தின் நிலை கொண்டு அவருக்கு அறிவுரை கூறுவீர்கள்.

ஆனால் இரண்டாவது தரம் தனது கஷ்டத்தைச் சொன்னால் “என்ன இது…? இவ்வளவு தூரம் கூறியும் தனது கஷ்டத்தைத் தானே கூறிக் கொண்டிருக்கின்றார்…” என்று அப்பொழுதே உங்களுடைய முகம் மாறும்.

ஏனென்றால் அவர் சொன்ன வேதனையின் உணர்வு வலுப் பெறுகின்றது. உங்களுடைய ஞானம் இங்கே அடிபடுகின்றது. உணர்வை மாற்ற முடியவில்லை.

ஆனால் இந்த நிலையை மாற்றி உங்களுக்குள் அருள் உணர்வைப் பெற வேண்டும்.
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர் பெற வேண்டும்,
2.அவருக்கு நல்ல காலம் வரவேண்டும் சிந்திக்கும் தன்மை அவர் பெற வேண்டும்
3.பொருளறிந்து செயல்படும் திறன் அவர் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அது சமயம் உங்களுடைய உயிர் என்ன செய்யும்…? அருள் உணர்வை எடுத்து உங்கள் உடலில் உள்ள எல்லா அணுக்களுக்கும் பங்கிட்டுத் தெளிந்த ஞானத்தை ஊட்டும் நிலையும்… வழியறிந்து செயல்படும் பக்குவத்தையும்… உங்களுக்குள் பெறச் செய்கின்றது.

நமக்கு ஆகாதவர் யாராவது இருந்தால்… “இவனால் தான் எனக்குத் தலைவலி” என்பார்கள். அவர்கள் வந்தாலே… “ஆகா வந்துவிட்டான்… தலைவலியும் வந்துவிட்டது” என்று கூறுவார்கள்.

இன்று நல்ல மன நிலையில் இருந்தேன். “இவனைப் பார்த்தேன், எல்லாக் காரியமும் கெட்டு விட்டது…” என்று கூறுவார்கள். மனிதரின் வாழ்க்கையில் இது போன்ற நிலைகள் வருகின்றன.

தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு இந்தத் தியான வழியில் உள்ளவர்கள் “மகரிஷிகளை எண்ணி…” அவர் குணமடைய வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள். அவருக்குத் தலைவலி நீங்கும்.
1.அடுத்து முறை தலைவலி என்று சொல்ல வரும் பொழுது
2.உங்களை நினைத்து வந்தேன்… தலைவலி போய்விட்டது…! என்று கூறுவார்கள்.

இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம். ஏனென்றால் உணர்வின் எண்ணம் கொண்டு சுவாசித்தபின் நோய்களை நீக்கும் சக்தி வருகின்றது.

ஆனால் ஒருவர் வந்தாலே தனக்குத் தலைவலி வருவதாக எண்ணுபவரின் உடல் பதட்டமடைகின்றது. தலை சுற்றுகின்றது… சிந்திக்கும் தன்மையை இழக்கச் செய்கின்றது,

ஒருவரைப் பார்த்தாலே தனக்குத் தலை சுற்றுகின்றது, தலை வலிக்கின்றது எனும் பொழுது “ஈஸ்வரா..” என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர் பெற வேண்டும் அவர் நன்மை செய்யும் நிலை பெற வேண்டும் என்று எண்ணினால் அவருடைய உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.

காரணம்… நுகர்ந்த உணர்வை உயிர் இயக்குகின்றது. உயிர் ஈசனாக இருக்கின்றது.
1.மனிதர் தாம் உயர்ந்த ஞானத்தின் தன்மை பெற்று…
2.பிறவி இல்லா நிலை பெறுவதற்குத் தான் இத்தனை உபாயங்களையும் கொடுப்பது.

குரு வழியில்… மகிழ்ச்சியான உலகை நாம் உருவாக்குவோம்

குரு வழியில்… மகிழ்ச்சியான உலகை நாம் உருவாக்குவோம்

 

விஷத்தை வென்றிட்ட துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெற்று நமக்குள் வளர்த்து
1.இனி வரக்கூடிய ஆண்டுகளை மகிழ்ச்சி பெறும் ஆண்டுகளாக குரு வழியில் நாம் உருவாக்குவோம்
2.உடலில் பேரின்பத்தைப் பெருக்கும் அணுக்களாக உருவாக்குவோம்
3.பெருக்கி உலக மக்கள் அனைவரும் அதைப் பெறும் தகுதியாக வளரச் செய்வோம்… வளர்ப்போம்.
5..உலக மக்கள் தெளிந்து வாழ வாழ்த்துவோம்… தியானிப்போம்… தவமிருப்போம்
6.மகரிஷிகளின் அருள் உணர்வுகளை அனைவரையும் பெறச் செய்வோம்
7.மலரைப் போன்ற மணம் பெற்று மகிழ்ச்சி பெறும் நிலையினை அனைவருக்குள்ளும் உருப்பெறச் செய்வோம்
8.இந்த உலகம் முழுவதும் அதைப் பரவச் செய்து எல்லோருக்குள்ளும் வளர்க்கச் செய்து
9.அவர்களிடம் இருந்து வெளிப்படக்கூடிய அந்த உணர்வுகளை இந்த பூமி முழுவதும் பரவச் செய்வோம்.
10.அதன் மூலம் இந்தக் காற்று மண்டலத்தை பரிசுத்தப்படுத்துவோம்… அந்த பரிசுத்தமான உணர்வுகளை நமக்குள் வளர்ப்போம்
11.ஒன்றி வாழும் நிலையும் சகோதர தத்துவமும் சமத்துவமும் .மக்களுக்குள் வளர அருள் ஞானத்தைப் பெருக்குவோம்.

ஒன்றுபட்டு வாழ்வோம் தீமையை அகற்றுவோம் உலக மக்களைக் காக்கும் உணர்வை நமக்குள் வளர்ப்போம்.

உலக மக்கள் என்று சொன்னாலும் “அது உயிரான ஈசன் வீற்றிருக்கும் ஆலயம் தான்…”

“ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும்…” என்று நாம் அன்பு கொண்டு செய்தால்… மனிதன் என்ற பகைமைகளை அகற்றி ஒன்றுபட்டு வாழ்ந்திடும் உணர்வினை வளர்த்திட… அரும்பெரும் சக்தியாக நமக்குள் அது வளரும்.

இதற்கு வலிமை சேர்க்க… கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்து தியானத்தில் வலுப்பெற்றால் அது அனைத்தும் கூடி வரும். பகைமை வராது தடுக்கலாம். உலக இருளை நீக்கும். நஞ்சினை மாற்றிடும் அருள் ஞான உணர்வுகள் உருப்பெறும்.

அருள் ஞானத்தைப் பெருக்கிடும் அந்த அருள் சக்தியை நாம் பெறுகின்றோம். அருள் சக்தி பெற மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் ஒவ்வொரு நொடிப் பொழுதும் தியானிப்போம்.

1.மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணைப்போம்
2.அவர்கள் உடல் பெறும் நஞ்சினை அங்கே கரைத்து உணர்வை ஒளியாக மாற்றும் நிலையைச் செயல்படுத்துவோம்.

அவர்கள் ஒளியான உணர்வுகளை நாமும் நுகர்வோம். நமக்குள் பேரருளைப் பெருக்குவோம். அறியாது சேர்ந்து இருளை மாற்றுவோம். ஒளியான உணர்வை உருவாக்குவோம். பிறவி இல்லாத நிலை அடைவோம். பேரருளை நமக்குள் ஏங்கிப் பெறுவோம்.

நம் உடலுக்குள் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளைப் பெருக்கி
1.நம் உயிரான ஈசனுக்கு அந்த மகிழ்ச்சியை ஊட்டுவோம்.
2.அவன் அருளை நாம் பெற்று…
3.அவனுடன் என்றும் பிரகாசமாக… என்றும் ஏகாந்தமாக… ஏகோபித்த நிலையாக உயிருடன் ஒன்றி
4.அவன் எவ்வாறோ… அவன் வழியே… நாமும் உடல் பெறும் உணர்வுகள் ஒளியாக மாறி
5.ஏகாந்த நிலையை… ஏகாதசி என்ற நிலையை… பத்தாவது நிலையை… அந்த முழுமையை நாம் அடைவோம்.

“பிறர் நன்றாக இருக்க வேண்டும்…” என்று எண்ணினால் அது நமக்குள் நன்மையையே உருவாக்கும்

“பிறர் நன்றாக இருக்க வேண்டும்…” என்று எண்ணினால் அது நமக்குள் நன்மையையே உருவாக்கும்

 

மெய் ஞானிகள் தமது மனித வாழ்க்கைக் காலத்தில் பேரண்டத்தினுடைய சூட்சம இயக்கங்களை அறிந்துணர்ந்தார்கள்.
1.இந்த மனித வாழ்க்கையில் தன்னை அறியாது வரும் தீமையான நிலைகளிலிருந்தும் தம்மைக் காத்து
2.உயிருடன் ஒன்றிய உணர்வினை ஒளி பெறச் செய்யும் நிலையினையும் பெற்றனர்.

அந்த மெய் ஞானிகள் பேரண்டத்தின் பெரும் உண்மையினைக் கண்டுணர்ந்து உணர்வின் ஆற்றலைத் தம்முள் வளர்த்து வெளிப்படுத்தியது எல்லாம் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு இந்தப் பூமியெங்கும் படர்ந்து பரவியிருக்கின்றன.

மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் அவர்கள் நமக்குக் காண்பித்த அருள் வழிகளை நாம் பின்பற்றுவதன் மூலம் இந்தப் பூமியில் படர்ந்துள்ள அந்த மெய் ஞானிகளின் உணர்வலைகளை நாம் பெற முடியும்.

நீங்கள் அனைவரும் மெய் ஞானிகளின் அருள் ஆற்றலைப் பெற வேண்டும் என்பதற்காக யாம் உயர்ந்த உண்மைகளை உங்களுக்கு உபதேசித்து வருகிறோம்.

1.அதனைக் கேட்கும் நீங்கள் அந்தத் தத்துவங்களை உங்களுடைய அகத்தில் இருத்தி
2.அதனைத் திரும்பத் திரும்ப எண்ணுவீர்கள் என்றால் உங்களிடத்தில் மகிழ்ச்சியின் தன்மை பெருகுகின்றது.

அதன் வழியில் நீங்கள் உயர்ந்த செயல்களைச் செய்யும் பொழுது அதனின் உணர்வுகள் உங்களை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்கின்றது.

உதாரணமாக… நாம் கடைக்குச் செல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு பொருளையும் தரம் பார்த்துத் தான் வாங்குகின்றோம்.

இருந்தாலும் வீடு வந்து சேர்ந்த பின் அந்தப் பொருள்களை எடுத்துப் பார்க்கும் பொழுது அவைகளில் ஒன்றிரண்டு பொருள்கள் உபயோகிக்க முடியாத அளவுக்கு கெட்டுப் போயிருப்பதை பார்த்து “வேதனைப்பட்டுக் கொண்டிருந்தால் நன்றாக இருக்குமா…?”

1.கெட்டதைத் தூக்கி எறிந்துவிட்டு இனி அடுத்து எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.
2.ஆகாததைத் தூக்கிப் போட்டுவிட்டு இனி அடுத்து ஆக வேண்டியதைப் பார்க்க வேண்டும்.

இந்த மனிதன் முழுமை அடைய வேண்டுமென்றால் “இந்த உடலில் எவ்வளவு குணச் செல்வங்கள் இருந்தாலும்… வேதனை என்ற நஞ்சான உணர்வானால் குணச் செல்வம் அழிந்து விடுகின்றது…”
1.வேதனையைக் கேட்டறியும் நிலையில் அது நம்முள் வளர்ந்து
2.நமது பொருள் செல்வத்தையும் இழக்கச் செய்யும் என்பதை நாம் அறிய வேண்டும்.

அழியாப் பேரின்பப் பெரு வாழ்வு என்ற அருள் ஞானியின் உணர்வை நாம் கவர்ந்து கொண்டால் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற முடியும்.

பேரின்பப் பெரு வாழ்வை எண்ணி எடுக்கின்ற உணர்வுகளால் நம்முடைய சொல் செயல் புனிதம் பெறும். நம்மைப் பார்ப்பவர் அனைவரும் மகிழ்ச்சி பெறும் நிலை உண்டாகும். அறியாமை என்ற இருள் அகன்று அனைத்தும் அறியும் ஞானம் உருவாகும்.

சொல்லில் பொருள் இருப்பது போன்று நமது செயலில் நன்மைகள் இருக்க வேண்டும்.
1.நாமும் நமது சமுதாயமும் “ஒரே இனம்” என்ற நிலையில்
2.நமது நலத்தையும்.. பொது நலத்தையும் ஒன்றிணைப்பதாக நமது செயல்கள் இருக்க வேண்டும்.
3.ஏனெனில் பிறர் நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணும் பொழுது
4.அதனின் உணர்வின் சத்து உங்களிடத்தில் விளைந்து நன்மையையே உங்களிடத்தில் விளையச் செய்யும்.

இவ்வாறு இதனின் உண்மைகளை அறிந்து அருள் ஞானிகள் வகுத்துக் கொடுத்த அறங்களை கடைப்பிடித்து அதனின் வழியில் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் அனைவருக்கும் எமது ஆசிகள்.

மனதைச் சமப்படுத்தும் பக்குவநிலை

மனதைச் சமப்படுத்தும் பக்குவநிலை

 

ஆறறிவு கொண்ட மனிதரான நாம் பல விதமான உடல் உறுப்புகளைக் கொண்ட உயிரினங்களைப் புதிதாக உருவாக்குகின்றோம். விஞ்ஞான அறிவால் இதை நாம் அறிந்து கொண்டோம். இப்படி அறிந்து கொண்ட உணர்விலிருந்து நாம் என்ன செய்ய வேண்டும்…? நமக்குள் எப்படிச் சமைத்தல் வேண்டும்…?

ஒருவர் நமக்குத் தீமை செய்தார் என்று அறிகின்றோம். ஆனால் அந்தத் தீமையின் உணர்வு நமக்குள் வளராது தடைப்படுத்துதல் வேண்டும்.

அவ்வாறு தடைப்படுத்த வேண்டுமென்றால்
1.“ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணித் “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாம் பெற வேண்டும்” என்று எண்ணி ஏங்கி
2.அந்தத் தீய உணர்வினை நமக்குள் வராது தடைப்படுத்தி அருள் உணர்வினைச் சேர்க்கப்படும் பொழுது
3.தீய உணர்வுகளின் வீரியத்தை அது குறைக்கின்றது.

உதாரணமாக மிளகாய் தனித்துக் காரமாகத்தான் இருக்கும். ஆனால் மற்ற பொருள்களுடன் இணைக்கப்படும் பொழுது “சுவையாக மாறுகின்றது…”

ஒருவர் “தவறு செய்கிறார்” என்று நாம் அறியும் பொழுது நாம் அருள் ஒளியின் உணர்வினை நுகர்ந்து
1.அவருடைய அறியாமை நீங்க வேண்டும்
2.அருள் ஞானம் அவர் பெற வேண்டும்
3.அருள் சக்தி அவர் பெற வேண்டும்
4.தெளிந்த மனம் அவர் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இதனால் அவருடைய உணர்வுகள் நமக்குள் வந்தாலும்… “அவரை இயக்கும் தீய உணர்வுகள்… நமக்குள் விளையாது…”

அவர் தவறு செய்கிறார் என்று நாம் அறிந்தாலும் அவர் வேகத் துடிப்பாக இருக்கும் பொழுது நன்மை தரும் சொல்களை நாம் சொன்னால் அவர் கேட்கமாட்டார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு அதாவது சாந்தமாக இருக்கப்படும் பொழுது “நீங்கள் இப்படிச் செய்தால் உங்களுக்கு நன்மை” என்று நாம் சொல்லும் பொழுது அவர் ஏற்றுக் கொள்ளும் பருவம் வருகின்றது.

அப்போது நாம் சொல்லும் சொல்லின் உணர்வுகள் அவரிடத்தில் உருவாகும் தன்மை வருகின்றது.

எண்ணெய் நன்றாக கொதிக்கும் முன் வடையைத் தட்டி எண்ணெயில் போட்டால் என்னவாகும்…? வடை சீராக வேகாது. எண்ணெயை அதிகமாக விழுங்கும்.

பின்… அது சூடேறச் சூடேற வடையில் சுவையும் மாறிவிடும். ஆனால் எண்ணெய் அதிகமாகக் கொதித்து அதில் வடையைத் தட்டிப் போட்டால் வடையின் மேல் பாகம் கருகிவிடும். உள் பாகம் மாவாக இருக்கும்.

சமப்படுத்தும் பக்குவப்படுத்தும் உணர்வின் தன்மை கொண்டுதான், பதார்த்தங்களை உருவாக்க வேண்டும்.

இதைப் போன்றுதான் நமது வாழ்க்கையில் குழந்தை ஒன்று தவறு செய்யும் பொழுது… “தருணம் பார்த்துத்தான்…” நல் உணர்வின் தன்மையைக் குழந்தைக்குச் சொல்ல வேண்டும்.

1.ஏற்றுக் கொள்ளும் பருவம் வரும் பொழுதுதான் நல் உணர்வுகளை ஊட்ட வேண்டும்.
2.ஏற்றுக் கொள்ளும் பருவம் இல்லை என்றால் சொல்லிய நல் உணர்வுகள் அங்கே விளையாது.
3.நல் உணர்வின் தன்மை விளையும் பருவம் அங்கே இழக்கப்படுகின்றது.

ஆனால் தவறைச் சுட்டிக் காட்டி, நல் உணர்வை ஊட்டத் தவறினால் வெறுப்பின் உணர்வே வரும். வெறுப்பின் நிலை வளர்ந்து விட்டால் ஏற்றுக் கொள்ளும் பண்பே வராது.

ஆகவே நாம் இது போன்ற நிலைகளை எல்லாம் அறிந்து
1.எதனை…
2.எவ்வாறு…
3.எதன் வழியில் நாம் உருவாக்க வேண்டும்…? என்ற நிலையில்
4.“நாம் பக்குவப்படுத்தும் நிலையில்” சமப்படுத்துதல் வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் “மனதைச் சமப்படுத்தினால்… பக்குவப்படுத்தும் பண்பும்…” வருகின்றது.

அருள் ஞானத்தின் உணர்வுகள் நமக்குள் விளைந்தால் நம் வாழ்க்கையில் வரும் விஷத் தன்மைகளை கார உணர்ச்சிகளை அடக்கும் தன்மை வருகின்றது.

இப்படி அடக்கும் தன்மை வந்தால் “சிந்திக்கும் தன்மை…” வருகின்றது. சிந்திக்கும் தன்மை வந்தால் நம் “செயல் சீராக…” அமைய இது உதவும்.

நாம் நமது வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வைப் உருவாக்கி பேரின்பப் பெரு வாழ்க்கை என்ற நிலையை நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.

உதாரணமாக ஒருவர் சாக்கடையில் விழுந்து விட்டால் அவரை அங்கேயிருந்து மீட்க நினைக்கின்றோம். அவரைக் கை கொடுத்துத் தூக்குகின்றோம். அவரும் நம்மைக் கட்டித் தாவி மேலே வருகின்றார்.

இதனால் நம் மீதும் அசுத்தம் ஆகிவிடுகின்றது. உடனே அசுத்தத்தை நீரால் நீக்குகின்றோம். இது புறத்தால் நிகழ்வது.

ஆனால் பிறிதொருவரின் வேதனையின் உணர்வை நாம் நுகரும் பொழுது நம் அகத்திற்குள் வந்த அந்த அசுத்தத்தை நீக்க வேண்டுமல்லவா…? (இதைப் பற்றி அதிகமாக நாம் எண்ணுவதில்லை).

யாம் அருள் வாக்கினை வழங்குகின்றோம். எம்மை நீங்கள் பார்க்கின்றீர்கள். யாம் பேசும் உணர்வுகளை நீங்கள் நுகர்ந்தபின் அது உங்களுடைய உயிரினில் பட்டு இதனின் உணர்வை அறிய நேருகின்றது.

இதை உங்களால் பார்க்க முடிகின்றதா…? இல்லை…! ஆனால் உணர முடிகின்றது.

நீங்கள் எம்மைப் பார்க்கின்றீர்கள்… பார்த்து நீங்கள் “எதைப் பெற வேண்டும்…?” என்று எண்ணி ஏங்குகின்றீர்களோ “உயர்ந்த எண்ணங்களை எண்ணும் பொழுது…” அதனின் உணர்வின் தன்மை உங்களுக்குள் இயக்குகின்றது.
1.அப்படி இயக்கப்படும் பொழுது உங்களுக்குள் அறிய முடியாத “சில சலனங்கள் ஏற்பட்டு…”
2.அது எப்படி நம்மை இயக்குகிறது…? என்று அறியும் பருவம் வருகின்றது.

அறியும் பருவம் வந்தாலும் நீங்கள் அதை அடக்க வேண்டுமென்ற உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. அப்போது “தீமைகள் தம்முள் வராது தடுக்க வேண்டும்…” என்ற உணர்வுகள் உங்களிடத்தில் வருகின்றது.

1.அருள் ஞானியின் அருள் உணர்வுகள் வலிமை கொண்டது. அதே சமயத்தில் வேதனையின் உணர்வுகளும் வலிமை கொண்டது.
2.ஆனால் அருள் ஞானியின் உணர்வுகள் சிந்தனையைத் தூண்டும்… வேதனை உணர்வுகள் சிந்தனையை இழக்கச் செய்யும்.

“நல்ல மனிதராக இருந்தார்… இன்று அவருடைய நிலை அவருடைய குடும்பத்தினர்களே அவரை எதிர்க்கும் நிலை ஆகிவிட்டதே…!” என்று உங்களிடத்தில் சிந்தனையின் தன்மை மாற்றப்பட்டு… வேதனை பற்றிய சிந்தனையை உங்களிடத்தில் வளர்க்கச் செய்கின்றது. அப்போது அவரிடத்தில் இருந்த அந்த வேதனையின் வலு உங்களிடத்தில் வளர்கின்றது.

தீமைகளின் உணர்வை அடக்கும் ஆற்றல் கொண்டது துருவ நட்சத்திரம். அதன் உணர்வை எடுத்து உங்களுக்கு யாம் உபதேசிக்கும் பொழுது தீமைகளை அடக்கும் ஆற்றல் உங்களிடத்தில் வலிமை பெறுகின்றது.

1.தீமை என்று ஒன்றை அறியும் பொழுது… அந்தத் தீமையிலிருந்து விடுபடும் நிலையை நாம் பெற வேண்டும்.
2.தீமையிலிருந்து விடுவிக்கும் உணர்வுகள் எது…? விடுபட்டவர் யார்…? துருவ நட்சத்திரம்.
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளை நமக்குள் கவரும் பொழுது
4.அது நம்முள் உள்ள தீமைகளை ஒடுக்குகின்றது… தீமைகள் வராது காக்கின்றது.

புழுவிலிருந்து மனிதராகும் வரையிலும் மனிதராக ஆன பின்னும் ஒவ்வொரு சரீரத்திலும் தீமைகளை நீக்கிடும் ஆற்றல் பெற்றது கண்கள். கண்களின் துணை கொண்டு தீமைகளை அகற்றிடும் ஆற்றல் பெற்றது துருவ நட்சத்திரம்.

துருவ நட்சத்திரத்தின் அருளுணர்வின் தன்மையை நாம் நுகர்ந்தால் ஞானிகள் அறிந்த உணர்வின் அறிவு நமக்குள் விளைகின்றது, பகைமை உணர்வுகளை நீக்குகின்றது… தீமைகள் வராது காக்கின்றது.

ஆகவே நாம் எதைச் செய்ய வேண்டும்…? ஒருவர் வேதனைப்படுகிறார் கஷ்டப்படுகின்றார் என்றால் நாம் அதை நீக்கிடும் நிலையைப் பெற வேண்டும்.

உதாரணமாக ஒருவர் சாக்கடையில் விழுந்து விட்டால் அவருக்குக் கை கொடுத்து அரவணைத்துச் சாக்கடையிலிருந்து மீட்கிறோம். பின் அவரைக் குளிக்கச் செய்கின்றோம். நாமும் குளித்துக் கொள்கின்றோம்.

இதைப் போன்று வேதனையின் உணர்வினை நாம் நுகர்ந்தால் முதலில் நம்முள் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். பின் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை அவர் பெற வேண்டும்… வேதனைகள் அவரிடத்திலிருந்து நீங்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இதனின் உணர்வின் தன்மையினை நமக்குள் வளர்த்துக் கொண்டால் அருள் உணர்வின் ஆற்றல் நம்மிடையே பெருகும் நிலை வருகின்றது.

1.இதனைப் பின்பற்றி வரும் அனைத்து அன்பர்களும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று சர்வ தீமைகளில் இருந்தும் விடுபட்டு
2.மன பலம் பெற்று உடல் நலம் பெற்று செல்வம் செல்வாக்கு பெற்று
3.வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற்றிட எமது அருளாசிகள்.

அடிக்கடி உணர்ச்சி வசப்படுவதை அருள் ஞானத்தால் பக்குவப்படுத்தும் வழி

அடிக்கடி உணர்ச்சி வசப்படுவதை அருள் ஞானத்தால் பக்குவப்படுத்தும் வழி

 

வியாபாரங்களில் கொடுத்தது வரவில்லை என்றால் “கொடுத்தேன், வரவில்லை…!” என்ற இந்த உணர்வை எடுத்து இந்த உணர்வோடு சேர்த்து இன்னொருவரைச் சேர்த்தால் கடன் வாங்குவார்கள்… பின் போய் விடுவார்கள்.

கடன் கொடுத்தோம்… இன்னும் வரவில்லை என்று எண்ணும்போது அதைச் சமாளிக்க… இருந்த பணத்தைக் கொண்டு சரக்கை வாங்கச் சென்றால் மட்டமான சரக்கை வாங்கி வந்துவிடுவோம்.

அந்த மட்டமான சரக்கு எப்படி விற்கும்…? என் வியாபாரமே நின்று போய்விட்டது என்போம். இது எல்லாம் சந்தர்ப்பங்கள். உணர்வுக்கொப்ப எண்ணங்களை மாற்றி நல்லவை என்றாலும் மறந்துவிட்டுச் செய்து விடுவோம்.

எப்படியும் லாபத்தைப் பெறுவோம்…! என்று செய்தாலும் முதலில் லாபம் வரும். பின்… அது தடை என்ற உணர்வுகளை ஊட்டிவிடுகின்றது. நம் எண்ணம் நமக்கே எதிரியாக உருப்பெற்று நம்முடைய நினைவும் நல்லதைப் பெறாது நமக்குள்ளே எதிரியை உருவாக்கி விடுகின்றது.

இதைக் கேட்டுணர்ந்தோர் உங்களுக்குள் இந்த அறிவின் தன்மை வளர்கின்றது. தீமைகள் வரும் பொழுது அதை மாற்ற உங்கள் நினைவின் ஆற்றலைத் துருவ நட்சத்திரத்தினுள் செலுத்தி அதை எடுத்து வலுவாக்கிக் கொள்ளுங்கள். வியாபாரத்தைச் சீர்படுத்த முடியும்.

ஒரு பக்கம் இப்படி இருந்தாலும் “இத்தகைய தியானம் செய்வோரை…” மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்…!

தியானத்தில் சிறிது நேரம் அதிகமாகி விட்டால்
1.“இவனுக்கு வீட்டுக் கவலை இருக்கின்றதா…?
2.”எவனோ சாமியார் சொன்னான்… என்று எண்ணிக் கொண்டே உட்கார்ந்திருக்கிறான்…” என்பார்கள்.

இது மாதிரிப் புலம்ப ஆரம்பித்து விடுவார்கள்.

சில வீட்டில் ஆண்கள் தியானம் செய்யாது பெண்கள் இந்தத் தியானத்தைச் செய்வார்கள். அப்போது தன் கணவரை எண்ணி… எப்படியோ இவர் தொழிலுக்காகப் பாடுபடுகின்றார்… ஆனால் உணர்வுகள் அவரை அறியாமல் இயக்குகின்றது…!
1.நாம் எப்படியாவது அவருக்கு மன வலிமை பெறச் செய்ய வேண்டும் என்று தியானமிருந்தால்
2.”சும்மா (தியானத்தில்) உட்கார்ந்து கொண்டிருந்தால் கஷ்டத்தை மாற்றிவிட முடியுமா…?” என்ற உணர்வுகளை
3.அந்த வீட்டிலிருக்கும் கொளுந்தியாலோ நாத்தனாரோ யாராவது ஊட்டுவார்கள்.

குடும்பத்தின் நிலை அறிந்து எப்படியும் நல்லதாக மாற்ற வேண்டும் என்று வீட்டிற்குள் சென்றாலும்… அங்கே சுழன்ற இருளுக்குள்… அந்த அடர்த்தியின் நிலைக்குள் சென்றபின் ஒளியின் தன்மை வெளிப்படாதபடி மங்கி விடுகின்றது.

இப்படி… தியான வழியில் நல்வழிப்படுத்த வேண்டுமென்றாலும் கூட… உலக இயல்புகள் விஷத்தன்மை கொண்ட நிலைகளில் மாறி வரும் போது
1.பக்தி கொண்ட உள்ளங்கள் அதைப் பற்றிக் கொண்டு “அந்தப் பக்தி” என்ற ஒன்றையே நம்பும் நிலை இருகின்றது.
2.ஆண்டவன்தான்…! அந்தத் தெய்வம்தான் காக்கும்…! என்ற நிலைகளில் இருக்கின்றனர்.
3.ஆனாலும் “நான் உன்னையே தான் வணங்கினேன்… எனக்கு இந்தத் துன்பம் வருகின்றதே…!” என்ற இதுவும் வருகின்றது.

அப்பொழுது நாம் எதன் மேல் பக்தி கொள்கின்றோம்…?

யாராவது நல்லவர்களைப் பார்த்தால் சந்தோஷம் அடைவதற்குப் பதிலாகப் பெருமூச்சு விடுவார்கள். நாம் இத்தனையும் செய்ய “ஆண்டவன் நமக்குக் கொடுக்க மாட்டேன் என்கின்றான்…!” என்பார்கள்.

இது மாதிரிச் சொல்லி ஒருவரைக் குற்றவாளியாக்குவோம்.

வசதி இருப்போரைப் பார்க்கும் பொழுதெல்லாம்
1.இவர்கள் எதை நினைக்கின்றார்களோ அந்த உணர்வின் தன்மையாகி
2.அவன் அவர்களுக்குத் துன்பம் செய்கின்றான்… இவர்களுக்குத் துன்பம் செய்கின்றான்… ஏமாற்றிக் கொண்டே உள்ளான்
3.ஆனால் “தெய்வம் அவனுக்குத் தான் கூரையைப் பிய்த்துக் கொட்டிக் கொண்டே இருக்கின்றது…” என்பார்கள்.

இவைகளெல்லாம் சந்தர்ப்பம். இது எதை உருவாக்குகின்றது…? இப்படி மாற்றும் உணர்வுகள் உருப்பெற்று விடுகின்றது.

நாம் நன்மை செய்ய வேண்டும் என்றால் நம்முடைய நல்ல எண்ணங்கள் வலு இழந்து விடுகின்றது. அதற்கு வலுக் கூட்ட என்ன செய்ய வேண்டும்…? யாம் வெளியிட்ட அருள் ஞானப் புத்தகங்களைச் சிறிது நேரம் படிக்க வேண்டும்.

மற்றவர்கள் நினைப்பதை மாற்ற வேண்டுமென்றால்… சாமி என்ன சொல்லி இருக்கின்றார்கள்…? தீமைகள் நம்மை எப்படியெல்லாம் தாக்குகின்றது…? என்று சிறிது நேரம் படித்தால் இவர்களின் மாறான உணர்வும் இணைக்கப்படும் பொழுது “அவர்களுக்கும் இந்த நினைவு வரும்…”

என்னடா படிக்கிறாய்…? என்பார்கள். முதலில் “படிக்காதே…” என்று சொல்வார்கள். விடாமல் படிக்கும் பொழுது
1.நல்ல உதாரணங்களைச் சொல்லும் பொழுது உற்றுக் கேட்பார்கள்.
2.சிறிது சிறிதாக நம் மேல் இருக்கும் வெறுப்புகள் மாறும்.
3.நல்லணவைகளை அவருக்குள் புகுத்தி அந்த நிலையை மாற்ற முடியும்.

இந்தத் தியான வழியில் சில பேர் “வைராக்கியமாக…” சாமி சொன்னதை எடுத்துக் கொள்வார்கள். “என்னை விடமாட்டேன் என்கிறார்களே…” என்று திருப்பிப் படித்தால் “என்னால் புத்தகமும் படிக்கவில்லை… எதுவும் செய்ய முடியவில்லை…” என்ற உணர்வுகள் கலந்து மனச்சோர்வும் மனச்சஞ்சலமும் வந்துவிடுகின்றது.

1.நாம் நல்லவைகளுக்குத் தானே போகின்றோம… இப்படிச் செய்கின்றார்களே என்ற “விஷத்தின் உணர்வுகளை”
2.நமக்குள் மாற்றப்படும் போது நம் செயலாக்கங்களும் செயலற்றதாக மாறிவிடுகின்றது.

ஆகவே… நாம் ஒவ்வொரு நொடியிலும் நமக்குள் அருள் ஞானத்தைப் பெற வேண்டும். அவர்கள் செயல்களில் உண்மையை உணரும் பருவம் வரவேண்டும் என்ற ஏக்கத்தைச் சிறிது நேரம் எடுத்துவிட்டு அந்த உணர்ச்சியைக் கண்களால் பார்த்து உணர்வின் அலைகளைப் பரப்ப வேண்டும்.

அப்படிச் செய்யும் பொழுது அவர்களும் அதைக் கேட்க நேருகின்றது. இப்படிச் சில நாள் சிறிது நேரம் மட்டும் படிக்க வேண்டும்.

அதையே படித்துக் கொண்டிருந்தால் அவர் சங்கடமாக இருக்கும் பொழுது அதைச் செய்தால்… “ஏண்டா கத்திக் கொண்டிருக்கிறாய்…? இருக்கிற துன்பத்தில்…!” என்ற நிலைகளில் இதுவும் வந்துவிடும்.
1.அமைதி கொண்டு இருக்கும் நேரத்தில் இதனைச் சிறிது வெளிப்படுத்தி
2.படிப்பதை உற்று நோக்கிக் கேட்கும் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்க வேண்டும்.

நெல் பதரினை நீக்க… “சொளவுகளில்…” எடுத்துத் தூவுவார்கள். காற்று இருக்கும் சந்தர்ப்பத்தில் தூவினால் பதர்கள் நீங்கும். காற்று இல்லாத சந்தர்ப்பத்தில் தூவினால் போகவே போகாது. திரும்பத் திரும்ப தூவ வேண்டும்.

திரும்பத் திரும்பச் செய்யும் பொழுது சுத்தப்படுத்த முடியாதபடி சோர்வடைந்து விடுவோம். பதர் அதிகமாகி பிரியாத நிலையில் அடைப்பட்டுவிடும்.

இவைகளெல்லாம் சந்தர்ப்பத்தால் நம்மை அறியாமல் தவறுகள் கூடுகின்றது. இதைப் போன்று குடும்பத்தின் நிலைகளில் தவறுகளை நீக்கும் நிலைகளைச் செயல்படுத்த வேண்டும்.

ஆகவே தான் உங்களைத் தெளிவாக்க இதை எல்லாம் நினைவுபடுத்துகின்றேன்.
1.சந்தர்ப்பங்கள் நாம் நல்லது பெறாதபடி எப்படித் தடைபடுத்துகின்றது…? என்று
2.அந்தச் சுற்றுப்புறச் சூழ்நிலையை உணரச் செய்கின்றது.
3.அதற்குத்தக்க சந்தர்ப்பத்தில் படும் பொழுது செயல்படுத்துகின்றது.
4.ஆக மற்றவர்கள் உடல்களில் உள்ள பதர்களை நீக்கும் சக்தியாக நம் சொல் ஆகின்றது.

மதில் சுவர் மறைத்தால் அப்பகுதியில் பதரை நீக்கினால் என்னவாகும்…? அந்தக் காற்று புகாது. அதே மாதிரி வாகனங்கள் தொடர்ந்து செல்கின்றது. கரை ஓரத்தில் பதரை நீக்குகின்றீர்கள். ஆனால் அங்கே வரும் காற்றினைத் தடைப்படுத்தினால் பதர் நீங்காது.

அது போல் தான்
1.பிறருடைய உணர்வுகள் பல வகையிலும் உணர்ச்சிகளைத் தூண்டி வெறுப்பென்ற நிலைகள் வருகின்றது.
2.அந்த வெறுப்பென்ற உணர்வுகளை மாற்ற… புத்தகத்தைப் படித்தால் நல்ல சொற்கள் நமக்குள் பதிவாகாதபடி
3.அவர்கள் உணர்ச்சிகள் நமக்குத் திரை மறைவாகி விடுன்றது.

ஆகவே… திரை மறைவுபடுத்தும் உணர்வினை நீக்க அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் சேர்த்துக் கொண்டால் நமக்குள் வரும் தீமையின் பதர்களை நீக்க இது உதவும்.

1.தியான வழியில் உள்ள அனைவரும் உங்கள் வாழ்க்கையில் தெரிந்து… தெளிந்து…
2.தெளிவாக வாழச் செய்யும் அந்த அருள் ஞானத்தைப் பெற்று… அருள் சக்தி பெற்று…
3.என்றென்றும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் மகிழ்ந்து வாழ்ந்திட எமது அருளாசிகள்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை அனைவருக்குள்ளும் பொங்கச் செய்வோம்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை அனைவருக்குள்ளும் பொங்கச் செய்வோம்

 

பொங்கல் நாளில் அருள் ஞானத்தை நமக்குள் பொங்கச் செய்வோம்.

இருளை நீக்கிடும் அருள் நாளாக அது அமைந்து அருள் வழியில் மகரிஷிகளின் உணர்வுகளை நம் உடலில் சேர்த்து அருள் உணர்வுகளை பொங்கச் செய்து இருளை அகற்றி… நம் பேச்சும் மூச்சும் உலக மக்கள் அனைவரையும் நலம் பெறச் செய்யும் சக்தியாகவும்… நமது குடும்பங்களில் அருள் உணர்வுகளைப் பொங்கி அருள் வழி வாழ்ந்து… மகிழ்ந்து வாழும் உணர்வின் தன்மையை நமக்குள் வளர்ப்போம்.

சூரியன் இந்தப் பிரபஞ்சத்தை இருளை நீக்கிடும் நிலையாக எப்படி வளர்க்கின்றதோ இதைப் போல்
1.நம் உடலுக்குள் இருக்கும் எத்தனையோ கோடி உணர்வுகளையும் (அணுக்களில்)
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கொண்டு நமக்குள் சுவைமிக்க உணர்வின் ஞானத்தைப் பொங்கும்படி செய்து
3.அருள் வழி வாழும் பிறவி இல்லா நிலை அடையும் அருள் உணர்வுகளை நாம் பொங்குவோம்.

இன்றிலிருந்து…
1.அருள் ஞானத்தைப் பெருக்குவோம்
2.அருள் வழியில் வாழ்வோம்
3.இருளை அகற்றுவோம்
4.மெய்ப்பொருளைக் காண்போம் மெய் வழி வாழ்வோம்
5.அனைவரையும் அரவணைத்து வாழ்வோம்
6.அன்புடன் வாழ்வோம்… பண்புடன் வாழ்வோம்
7.பரிவுடன் வாழ்வோம் என்ற இந்த உணர்வுடன் நம் மனதை நிறைவுபடுத்தி அருள் வாழ்க்கை வாழ்ந்திடுவோம்.

இந்த நாளை அருள் ஞான நாளாக துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துப் பொங்கும் மங்களமாக… என்றும் நமக்குள் அது வளர்ந்து அருள் மணம் தவழும் அருள் ஞானத்தை நமக்குள் பொங்கச் செய்வோம்.

நம் பேச்சும் மூச்சும் கேட்போரை மகிழ்ந்து வாழச் செய்வோம்.
1.நமது குரு அருள் நமக்குள் பரவி
2.அந்த உணர்வுகளை உலகம் முழுவதும் பரவச் செய்வோம்.

உலக மக்கள் அருள் ஞான வழியில் அருள் வழியில் வாழ்ந்திடும்… மலரைப் போன்ற மன மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் வாழ்க்கை வாழச் செய்யும் அந்தச் சக்தியை நாமும் பெறுவோம்.

நம் உடலில் அதை வளர்ப்போம். உலக மக்கள் அனைவரையும் அதைப் பெறச் செய்வோம். அவர்களை மகிழச் செய்வோம் உலக மக்களை மகிழ்ந்து வாழச் செய்வோம் என்று உறுதிப்படுத்துவோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் பெருக்குவோம்… பொங்கச் செய்வோம்.
1.எல்லோருக்குள்ளும் அதைப் பொங்கச் செய்வோம்
2.அந்த அருள் மணத்தை எல்லோருக்குள்ளும் வளர்க்கச் செய்வோம்.

நாம் இதையே தியானிப்போம் தவமிருப்போம்…!

நமது இலட்சியம்

நமது இலட்சியம்

 

என்னுடைய முழுமையான தியானமே… பிறரின் தீமைகளைப் போக்கும் சக்தி பெற்ற மகான்களாக நீங்கள் ஒவ்வொருவரும் மாற வேண்டும். அதைக் கண்டு தான் எனக்குச் சந்தோஷம்.

இந்த உடல் இச்சைக்காக யாரும் அதை மாற்றி விடக்கூடாது.

யாம் கொடுக்கும் சக்தியைப் பெற்ற நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகைகளில் மக்களுக்கு வழி காட்டியாக வரவேண்டும்.

எம்முடைய உபதேசத்தின் உட்கருத்துக்களை நீங்கள் உணர்ந்து கொண்டு அதன் மூலமாக மற்றவர்களுக்கு…
1.அவர்கள் நுகர்ந்த உணர்வுகள் எவ்வாறு இயக்குகின்றது…?
2.அதிலிருந்து எப்படி மீள வேண்டும்…? என்ற உபாயத்தைக் கூறிப் பதிவு செய்து
3.அந்த பதிவின் மூலம் அவர்கள் எண்ணத்தால் தீமையிலிருந்து விடுபடுவதும்
4.அதே போல் தீமை செய்வோர் தீமைகளை நிறுத்திக் கொள்வதும்
5.ஆக… நன்மை செய்யும் உணர்வுள்ள மக்களாக மாற்றும் திறன் நீங்கள் பெற வேண்டும்.

இன்றைய உலகில் கடுமையான விஷத்தன்மைகள் சுழலப்படும் பொழுது தேடிய செல்வங்கள் இருந்தாலும் அதைக் காக்கும் திறன் நமக்கு இல்லை.

உடலைக் காக்கும் திறன் முதலில் வரவேண்டும். உடலுக்குப் பின் பிறவியில்லை என்ற நிலை அடைய வேண்டும் அந்த முழுமையின் தன்மை நாம் அடைதல் வேண்டும். இது தான் நமது லட்சியமே…!

இந்த லட்சியத்துடன் நாம் சென்றால் செல்வத்தை நாம் தேடிச் செல்ல வேண்டியதில்லை… அது தன்னாலே வந்து சேரும். ஆனால் செல்வத்தைக் குறிக்கோளாக வைத்தால் அந்த ஆசையின் நிலையில் உடல் பற்று தான் வரும்.

1.எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்ற உணர்வை நீங்கள் பாய்ச்சப்படும் பொழுது அவர்களை நல்லவராக மாற்ற முடியும்.
2.அவருடைய தீமையின் உணர்வுகள் உங்களுக்குள் வராதபடி தடுக்க முடியும்.

சந்தர்ப்பத்தில்… நம் காதுகளில் படும் படியாகக் கூட சிலர் நிறைய குறை பேசிக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் நல்ல மனம் வர வேண்டும்… நல்ல நிலை பெறட்டும்…! என்று தான் எண்ண வேண்டும்.

ஆனால் இப்படிச் செய்கின்றார்கள்… பதிலுக்கு ஏதாவது செய்து பார்க்கலாமா…? நம்மைத் திட்டுகின்றார்களே…! பதிலுக்கு நாம் கஷ்டத்தை அவர்களுக்கு உண்டாக்கலாமா…? என்று எதையும் செய்யக் கூடாது.

அவர்கள் திருந்தி வாழத்தான் நல் உணர்வைப் பாய்ச்ச வேண்டுமே தவிர கஷ்டத்தை உண்டாக்கக் கூடாது.
1.அவர் எடுக்கக்கூடிய உணர்வுகள் அதைத் திரும்பிப் பார்க்கப்படும் பொழுது
2.”அவர்களாகத்தான் திருந்தி வர வேண்டுமே தவிர…” அவர்களுக்கு நாம் கஷ்டத்தை உண்டாக்கவே கூடாது.

காரணம்… அந்தத் தவறுகள் நமக்கும் துன்பத்தைக் கொடுத்துவிடும். அவர்கள் நல் வழியில் திருந்தி வர வேண்டும் என்ற உணர்வைத் தான் நாம் வளர்க்க வேண்டும்.

கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அந்த உணர்வின் தன்மை ஆகின்றாய். நுகரும் உணர்வுகள் உயிரிலே பட்ட பின் அரங்கநாதன். ஆகவே எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வைக் கொண்டு நம்மை ஆளுகின்றது.
1.நம் சொல்லைக் கொண்டு பிறர் தீமைகளைப் போக்கும் ஆட்சியாக வர வேண்டும்.
2.நம் சொல் பிறரின் தீமைகளைப் போக்கி… உண்மைகளை அவர்கள் அறியும் நிலையாக அது வர வேண்டும்.

ஆனால்… கேட்கவில்லை என்றால் அந்த உடலில் இருக்கக்கூடிய தீமைகள் நன்மையைப் பெற விடாது தடுக்கின்றது என்று பொருள்.

இருந்தாலும்… எப்படியும் அவர்களுக்குள் அந்த உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற நிலையும் அவர் உடலை அறியாது சேர்ந்து அசுத்தங்கள் நீங்க வேண்டும் என்ற உணர்வைத் தான் நாம் செயல்படுத்த வேண்டும்.

இருபது வருடம் நான் பட்ட அவஸ்தைகள் இன்னது தான் என்று சொல்ல முடியாது. காரணம் மனிதர்கள் ஒவ்வொருவரும் எத்தனையோ வேதனைப்படுகிறார்கள். குடும்பத்தில் எத்தனையோ அவஸ்தைப்படுகிறார்கள்… அவர்களுக்கு வழி காட்டுவது யார்…? என்று குருநாதர் என்னை உணரும்படிச் செய்கிறார்.

ஆக… இந்த உயிரே மனித உடலை உருவாக்கியது. அறியாத நிலைகளில் தீமைகள் உடலில் புகுந்து விடுகின்றது… தெளிவான நிலையில் செயல்பட விடாதபடி தடுக்கிறது.

1.அவர்களுக்கு உயர்ந்த நிலைகளை ஊட்டிக் காத்திடும் செயலாகச் செயல்படும் பொழுது அந்தக் காத்திடும் உணர்வு நமக்குள் வருகின்றது.
2.அதன் மூலம் இந்தப் பூமியான பரமாத்மாவிலும் நல்ல நிலைகள் பரவுகின்றது.

அது பரவும் பொழுது… தீமையை மாற்றிடும் சக்தியாக ஒவ்வொருவருக்கும் கிடைக்கப் பெற்று அதே உணர்வுகள் ஒவ்வொருவரிடம் இருந்து வெளிப்படும் பொழுது “இந்தப் பூமியும் பரிசுத்தமாகின்றது…”

நம் ஆன்மாவிலிருந்து வெளிப்படும் நல்ல உணர்வுகள் இந்தப் பூமியைச் சொர்க்கபூமியாக மாற்றி அமைக்கும்.

நாம் அனைவரும் “ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்…”

நாம் அனைவரும் “ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்…”

 

நமது பூமியே நமக்குத் தாய். நாம் மகிழ்ச்சியுடன் இருக்கும் பொழுது அதனைக் காணும் தாய் மனமும் மகிழ்ச்சி அடைகின்றது. அது போன்று நாம் மகிழ்ச்சியடையும் பொழுது வெளிப்படும் மூச்சலைகள் நமது தாய் பூமியில் படர்கின்றது.
1.இந்த மகிழ்ச்சியான உணர்வுகள் பரவும் பொழுது நமது தாய் நாடு மகிழ்ந்திருக்கும்.
2.இதில் வாழும் கோடிக்கணக்கான மக்களும் மகிழ்ச்சியின் உணர்வுகளைப் பெறுவர்.

பூமியில் ஒரு வெடிகுண்டை வீசினால் அதனின் நச்சுத் தன்மை காற்றில் பரவி அதனைச் சுவாசிக்க நேர்பவர்கள் மடிகின்றனர். ஆனால் மகிழ்ச்சியான உணர்வுகள் காற்றில் பரவும் பொழுது அதனை நுகர்பவர்கள் மகிழும் நிலை வருகின்றது.

நமது பூமியே நமக்குத் தாய் என்கின்ற பொழுது அந்தத் தாய்க்கு நாம் சேவை செய்வது எவ்வாறு இருக்க வேண்டும்…? என்ற நிலையில் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

இந்தப் பூமியில் பிறந்த நாம்… “தாயின் பிள்ளைகள்…” என்று ஒருங்கிணைந்து தாயுடன் நாம் எவ்வாறு அரவணைத்துச் செல்கிறோமோ… தாய் எவ்வாறு நம்மை அரவணைத்து வாழ்த்துகின்றதோ… இது போன்று தாயுடன் அணுகிய நிலைகள் கொண்டு “நாம் அனைவரும் சகோதரர்…” என்றும் இன பேதமின்றி மத பேதமின்றி மொழி பேதமின்றி மன பேதமின்றி நாம் வாழ்நிடுவதே நலம்.

1.நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்று எண்ண வேண்டும்.
2.இந்த எண்ணம் நம் பூமியைக் காக்கும்.

பூமித்தாயைக் காப்பது போன்று நம்மை ஈன்ற தாயும் மகிழ்ந்திடும் நிலையாக நாம் செயலாற்றிட வேண்டும்.

நமது தாய் தந்தையர் எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில் நம்மிடத்தில் அன்பைக் காட்டி நல்லறிவை ஊட்டி நம்மை வளர்த்தனர். உணவும் உடையும் கொடுத்துக் கல்விக்கு வேண்டிய வசதிகளும் நமக்குச் செய்து கொடுத்தனர்.

ஆகவே நாம் நம் தாய் தந்தையை மகிழ்ந்திடச் செய்யும் நிலை பெற வேண்டும்.
1.தீய உணர்வுகளை அடக்க வேண்டுமென்றால் தாயின் பேரன்பைப் பெற வேண்டும்.
2.தாயின் பேரன்பைப் பெற்றால் மகரிஷிகளின் அருள் சக்தியை எளிதில் பெற முடியும்.

அதைப் பெற்று உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய உணர்வுகளை அடக்கி மெய் ஞானிகளின் உணர்வை உங்களில் வளர்த்து அன்னை தந்தையைப் பேரின்பப் பெருநிலை பெறச் செய்ய வேண்டும்.

அன்னை தந்தை அவர்கள் பெறுகின்ற மகிழ்ச்சியினால் வெளிப்படும் மூச்சலைகள் இந்தப் பூமியில் படர்கின்றன.
1.நாம் அனைவரும் மகிழ்ந்திடும் உணர்வை வெளிப்படுத்தினால்
2.தாய் பூமியும் மகிழ்ந்திடும் நிலை உருவாகும்.

சத்தியவான் சாவித்திரி

சத்தியவான் சாவித்திரி

 

வீட்டில் கணவன் மனைவி வாழுகின்றார்கள். கணவனுக்கு அலுவலகத்தில் யாராவது இடைஞ்சல் செய்யும் நிலைகள் அதிகமாகி விட்டால் வீட்டில் மனைவி என்ன செய்ய வேண்டும்…?

மனைவி அந்த மாதிரி நேரங்களில் “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் இரத்தத்தில் கலந்து என் உடல் முழுவதும் படர்ந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டுமென்று எண்ண வேண்டும்.

பின் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி என் கணவர் பெற வேண்டும். அவர் உடல் முழுவதும் படர வேண்டும். அவரைப் பார்ப்பவர்கள் எல்லோருக்கும் நல்ல எண்ணங்கள் வரவேண்டும் என்று இதை உடலுக்குள் சமைத்துக் கணவரிடம் “நல்லது நடக்கும்…” என்று சொல்லிப் பாருங்கள்.
1.அவரால் இதை எண்ண முடியவில்லை… மனைவி இதைச் செய்ய வேண்டும்.
2.இரண்டு உயிரும் ஒன்றானால் இரு மனமும் ஒன்றி இரு உணர்வும் ஒன்றாகின்றது.
3.உணர்வு ஒன்றியபின் கணவரைப் பாதுகாக்கும் உணர்வை மனைவி செய்யவேண்டும்.
4.இது தான் “எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்…” என்பது.

சங்கடம் வேதனை, என்ற உணர்வுகள் வரும் பொழுது அது நோயாக மாறி மனிதனை முடித்துவிடும் எமனாக மாறுகின்றது. இதை மாற்ற வேண்டும்.

எத்தகைய குறைபாடுகள் இருந்தாலும் வசிஷ்டரும் அருந்ததியும் போல் வாழ வேண்டும். அப்படியென்றால் கணவனும் மனைவியும், “துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கவர வேண்டும். ..”

நளாயினி போன்று என்கிற போது கணவருக்கு ஒரு சங்கடம் வரும் பொழுது “அதை நிவர்த்திக்கக் கூடிய சக்தியாக…” அவர் உயர்ந்த ஞானம் பெற வேண்டும் என்ற உணர்வை மனைவி எடுக்க வேண்டும்.

சாவித்திரி போன்று இரு மனமும் ஒன்றி இரு உயிரும் ஒன்ற வேண்டும்.
1.கணவர் அருள் உணர்வு பெற வேண்டும் என்றும் அவருக்கு நல்ல எண்னம் வரவேண்டும் என்றும்
2.அவர் பார்ப்பது எல்லாம் நலமும் வளமும் பெற வேண்டும் என்றும்
3.அவர் சொல்லைக் கேட்போரெல்லாம் இனிமை பெற வேண்டும் என்றும் பெண்கள் எண்ண வேண்டும்.

அப்பொழுது அவருக்கு உற்சாகத்தை ஊட்டிக் கொண்டே இருக்கும். நல்ல சிந்திக்கும் தன்மை வரும்.

கணவன் மனைவி வேதனைப்படும் பொழுது, அந்த வேதனை என்ற உணர்வுகள் இருவரையும் சிந்திக்க முடியாமல் செய்யும். அந்த மாதிரியான நேரங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாம் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். இவ்வாறு எண்ணி உடலுக்குள் சேர்த்தவுடன் கணவருக்கு, அதைப் பாய்ச்ச வேண்டும்.
1.அந்த மகரிஷிகளின் அருளால் அவர் சொல்வதெல்லாம் நலம் பெற வேண்டும்,
2.அவர் பிறர் போற்றும் நிலைகள் பெற வேண்டும் என்று மனைவி எண்ண வேண்டும்.

அந்தப் பழக்கத்திற்கு வரவேண்டும்.

தியானம் என்பது… இதுதான் தியானம்.
1.உட்கார்ந்து சதா எண்ணுவது, தியானமல்ல.
2.அந்த அருள் சக்தி பெறுவதும் அதை இயக்குவதும்தான் தியானம்.

நமக்குள் வேதனை என்ற உணர்வுகள் ஆனபின் சிக்கலென்ற உணர்வு வருகின்றது. நுகரும் உணர்வுதான் நம்மை இயக்குகின்றது. அந்த உணர்வின் தன்மைதான் கூடும். எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகளில் விஞ்ஞானம் இதை நிரூபிக்கின்றது.

மெய் ஞானிகள் காட்டியது…
1.பிறரின் உணர்வுகள் வேகமாக இருக்கும் பொழுது நம் நல்ல உணர்வுகளை உடைத்து, உள்ளுக்குள் சென்று விடுகின்றது
2.அந்த வேகமான உணர்வுகள், நமக்குள் வராதபடித் தடுக்க வேண்டுமென்றால்
3.அருள் உணர்வை நாம் அடிக்கடி சேர்த்து இணைக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், நாம் பெற வேண்டும் என்று செருகேற்றிக் கொள்ள வேண்டும். அப்பொழுது நமக்குப் பாதுகாப்பான நிலைகள் வரும்.

நமக்குள் தீமை வராது, தடுத்துப் பழகுவதுதான் தியானம். துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எல்லா அணுக்களுக்குள்ளும் சேர்த்துவிட வேண்டும்.

நாம் புழுவிலிருந்து மனிதனாக வரப்படும் பொழுது தீமையிலிருந்து விடுபடும் உணர்வை சேர்த்துச் சேர்த்து வந்தோம். தீமையை நீக்கிய, துருவ நட்சத்திரத்தின் உணர்வை இப்பொழுது உங்களிடம் பதிவு செய்கின்றோம்.
1.இந்தப் பதிவு கொண்டு துருவ நட்சத்திரத்தை எண்ணி
2.காற்றில் கலந்துள்ள துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துப் பயன்படுத்தும் பொழுது
3.நாம் துருவ நட்சத்திரத்தின் ஆயுள் மெம்பராகச் சேருகின்றோம்.

ஆயுள் கால மெம்பர் குடும்பத்தில் யாம் சொன்ன மாதிரி கடைப்பிடிக்க வேண்டும். குழந்தை சுட்டித்தனமாக இருந்தால் உடனே துருவ நட்சத்திரத்தை எண்ணி மாற்ற வேண்டும்.

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டாலும் உடனே துருவ நட்சத்திரத்தை எண்ணினால் அதை எப்படிச் சரி செய்ய வேண்டுமென்ற நல்ல சிந்தனை வரும்.

கணவனும் மனைவியும் இந்தத் தியானத்தை எடுத்துக் கணவருக்கு உயர்ந்த ஞானம் கிடைக்க வேண்டும், சிந்திக்கும் ஆற்றல் கிடைக்க வேண்டும், தொழிலில் நல்ல வீரிய சக்தி பெறக்கூடிய உணர்வு வரவேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள்.

அவர் மனம் வலிமையாக இருக்க வேண்டும், எண்ணங்கள் சீராக இருக்க வேண்டும், அவர் செயல்களை அனைவரும் போற்றும் நிலைகள் வரவேண்டுமென்று எண்ணிப் பாருங்கள். எந்த வியாபாரமானாலும் அவரிடத்தில் பொருள் வாங்குவோர் எல்லாம் நன்றாக இருக்க வேண்டுமென்று எண்ணிப் பாருங்கள்.

மனைவி இப்படி எண்ணினால்…
1.வேறு யாரிடத்திலும் யோசனை கேட்க வேண்டியதில்லை.
2.இந்த உணர்வுடன் கணவர் எங்கு சென்றாலும் எல்லாக் காரியத்திலும் வெற்றி பெறலாம்.
3.நாம் இந்த மாதிரி வாழ்ந்து காட்டவேண்டும்… அதைச் செயலாக்கிப் பார்க்க வேண்டும்… வாழ்க்கையில் மகிழ்ச்சி வரும்.

மற்றவரிடத்தில் இதைச் சொல்லும் பொழுது இந்த உணர்வு அங்கேயும் விளைய வேண்டும். அவர்கள் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும், அவர்கள் வெளிப்படுத்தும் மூச்சு நல் உணர்வாகப் படர வேண்டும்.

நம் தெருவிற்குள் நல்ல உணர்வலைகள் பரவ வேண்டும். அப்பொழுது ஒன்றுபட்டு வாழும் நிலை வரும். ஆயுள் கால மெம்பர்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றியே வாழ வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் துருவ நட்சத்திரத்தை எண்ணி எடுத்துப் பழக வேண்டும்.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நமக்கு அருளினார்.
1.அவர் வழியில் அவர் காட்டிய நெறிப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுக்க வேண்டும்.
2.அவர் துருவ நட்சத்திரத்தின் அங்கத்தினர்… அவர் வழியில் துருவ நட்சத்திரத்தின் ஒளி பட இருள் நீங்கும்.
3.அந்த அருளைப் பெற இருளை அகற்றும் சக்தியை நாமும் பெறலாம்.

பெண்களை மதித்து நடங்கள்… ஆதிசக்தி அதுதான்…!

பெண்களை மதித்து நடங்கள்… ஆதிசக்தி அதுதான்…!

 

ஜாதகம் ஜோசியம் பார்த்து மணமக்களுக்கு எல்லாப் பொருத்தங்களும் இருக்கின்றதா…? என்று பார்த்து நல்ல நேரம் பார்த்துத் தான் திருமணத்தை நடத்தி வைக்கின்றனர்.

ஆனாலும்
1.திருமணம் முடிந்து வந்தவுடன் இல்லற வாழ்க்கை தொடங்கும் காலத்தில் இல்லத்தில் பல இன்னல்கள் வந்து சேர்கின்றன.
2.இதனால் கணவன் மனைவிக்குள் வேறுபட்ட உணர்வுகள் தோன்றுகின்றன.

இப்படி வேறுபட்ட உணர்வுகள் வரும் பொழுது பெரும்பாலான பெண்கள் அனுபவிக்கும் அவஸ்தைகளாலும் வேதனைகளாலும் வெளிப்படும் உணர்வுகள் எல்லோரையும்தான் சாரும்.

ஏனென்றால் பெண்கள் வெளிப்படுத்தும் வேதனையின் உணர்வுகளைச் சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து வைத்துக் கொள்கின்றன.

நாம் இவ்வேதனையின் உணர்வுகளைக் கேட்டறிய நேரும் பொழுது அது நமக்குள் பதிவாகின்றது. பதிவின் நிலை கொண்டு நாம் நுகர்கின்றோம்.

நம்மை அறியாமலே அவர்களுடைய வேதனைகளை நுகர்ந்து “நமக்குள்ளும் வேதனையான உணர்வுகளாகவே மாற்றி விடுகின்றோம்…” அதனின் உணர்ச்சியும் நம்முள் அதிகரித்து விடுகின்றது.

கணவனும் மனைவியும் வெறுப்பு என்ற நிலைகளோ வேதனை என்ற உணர்வுகளோ இல்லாதபடி
1.அதிகாலையில் துருவ தியானத்தில் அமர்ந்து “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்
2.என் கணவர் / மனைவி பெற வேண்டும்… எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும்
3.எங்கள் வாழ்க்கையில் இருளை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வினை இருவரும் பெருக்குதல் வேண்டும்.

இது போன்று துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை தங்களுக்குள் பெருக்கி இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றிடும் அருள் சக்தி பெறுங்கள்.

நமது வாழ்க்கையில் இயற்கையின் உண்மைகளை அறிந்து கொள்தல் வேண்டும். வெப்பம் காந்தம் விஷம் என்று இந்த மூன்று நிலைகளும் இணைந்து ஒரு அணுத் தன்மை அடைகின்றது.
1.காந்தம் “ஆதிலஷ்மி…” எதையும் ஈர்க்கும் சக்தி கொண்டு எதனையும் தன்னுள் இழுத்து வளர்க்கும் தன்மை என்றும்
2.வெப்பம் “ஆதிபராசக்தி…” அனைத்தையும் உருவாக்கும் தன்மை பெற்றது என்றும்
3.விஷம் “ஆதிசக்தி…” எதனிலும் மோதலாகி அது இயக்க உணர்வுகளை இயக்கும் என்றும்
4.நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

அதாவது பெண்பால் ஆகித்தான் ஆண்பால் ஆகின்றது. பெண்பால் என்னும் பொழுது அது தாயாகின்றது. பெண்பால் தான் தாய் என்னும் நிலையில் தன் குழந்தைகளையோ மற்ற நிலைகளையோ சீர்படுத்தி வளர்க்கும் நிலையில் செயல்படுகின்றது.

1.ஆகவே நாம் பெண்களைத் தாயாகவும் நம்மை ஒரு சேயாகவும் மதித்துப் பழகுதல் வேண்டும்.
2.இது போன்று பெண்கள் ஒவ்வொருவரும் தான் ஒரு தாயாகவும் தான் ஒரு சேயாகவும் இருந்து பழகுதல் வேண்டும்.

இதைத்தான் இராமாயணமும் மற்ற காவியங்களும் நமக்கு உணர்த்துகின்றன. நம்முடைய எண்ணங்களை (கணவன் மனைவி) ஒன்று சேர்த்து இணைத்த உணர்வின் தன்மை கொண்டுதான் நாம் விண் செல்ல வேண்டும்.

நாம் தினமும் அதிகாலையில் சிறிது நேரமாவது துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்துக் கொண்டு வருவோமேயானால் நமக்குள் அருள் உணர்வுகள் பெருகும்.

நம்மையறியாது சேர்ந்த இருளை நீக்கி இல்லத்தில் ஒன்று சேர்ந்து வாழும் தன்மை உருவாகும். அங்கே மகிழ்ந்து வாழச் செய்யும் உணர்வுகள் படரும்.

ஒரு இல்லத்தில் பெண்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் பொழுது “அந்த இல்லம் சொர்க்கலோகமாக மாறுகின்றது…”

அந்த இல்லத்தில் உள்ள பெண்களில் யாரேனும் வாட நேர்ந்தாலும் அந்த இல்லமே குடும்பமே நரக லோகமாக மாறிவிடும். ஆகவே நாம் பெண்களைத் துன்புறுத்தும் நிலைகளிலிருந்து விடுபட்டு பெண்களை உயர்வாக எண்ணிப் பழகுதல் வேண்டும்.

1.இல்லத்தில் பெண்களை எந்தளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கச் செய்கின்றோமோ
2.பெண்களிடத்தில் அன்பு கலந்த உணர்வுகளைச் செலுத்துகின்றோமோ
3.இதனின் உணர்வுகள் கொண்டு அங்கே ஒன்று சேர்ந்து வாழும் தன்மையும் இருளை அகற்றும் சக்தியும்
4.அருள் ஞானத்தைப் பெருக்கும் நிலையும் குடும்பத்தைச் சீர்படச் செய்யும் பண்புகள் வளரவும்
5.அன்பான உணர்வுகள் நமக்குள் பெருகவும் மகிழ்ந்து வாழச் செய்யும் உணர்ச்சிகள் வளரவும்
6.பிறவியில்லா நிலை என்ற நிலைக்கு அழைத்து செல்லும் சக்தியும், பெண்களுக்கு உண்டு.

பெண்களை மதித்து நடங்கள்… ஆதிசக்தி அதுதான்…!

இந்தச் சக்தியின் தன்மை வரும் பொழுது தான் உடல் சிவமாகின்றது. நுகர்ந்த உணர்வுகள் பிரம்மமாகின்றது. பிரம்மத்தின் தன்மை உடலாகின்றது.

எந்தக் குணத்தின் தன்மை உடலானதோ அதனின் உணர்ச்சியாக ஞானமான சரஸ்வதி நம்மை வழிநடத்திச் செல்லும் என்பதை நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

ஒரு குடும்பத்தில் தாய்மார்கள் வெறுப்படைந்து விட்டால் அந்த இல்லத்தில் இருக்கும் முதியவர்கள் குறைகளின் உணர்வுகளை வளர்த்துக் கொள்கின்றனர்.

வீட்டிற்கு ஒரு மருமகள் வருகிறாள் என்றால் அந்த வீட்டிலிருக்கும் முதியவர்கள் மருமகளாக வந்த பெண்ணிடத்தில் குறைகளைக் கண்டு குறை கூறும் நிலையில் அங்கே குறையின் உணர்வுகளே வந்து விடுகின்றது.

முதியவர்களாக இருப்பவர்கள் அனைவரும், இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது, எதைக் கொண்டு செல்கின்றோம்…? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

முதுமை நிலையில் இருக்கும் நாம்… தெளிந்துணர்ந்து வளர்ந்த நாம் காலை துருவ தியானத்தில்
1.தன் மகன் மருமகளுடன் இரு மனமும் ஒரு மனமாக ஒன்றுபட்டு வாழ வேண்டும்
2.தெளிந்த மனம் பெற வேண்டும்… தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும் என்று
3.இதனின் உணர்வுகளைப் பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.

ஏனெனில் ஒரு குடும்பத்தில் பெண்கள் வாடிய நிலைகளிலிருந்தால், அவர்கள் எத்தகைய பயிர் செய்தாலும் அது வாடியே போகும். நல்ல பலன் இருக்காது. பெண்கள் வாடிய முகத்துடன் இருக்கும் பொழுது செய்யும் தொழிலும் சிறப்பாக இருக்காது, அந்தத் தொழிலும் குன்றிவிடும்.

ஆகவே அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் சேர்த்து நமக்குள் ஒன்றுபட்டு வாழும் நிலையும் வீட்டில் மகிழ்ச்சியான உணர்வுகள் பெற வேண்டும் என்ற உணர்வுகளையும் நமக்குள் எடுத்துப் பழகுதல் வேண்டும்.

இது போன்று செய்து வரும் பொழுது
1.நமது இல்லத்தில் செய்வினைகள் இருந்தாலும் சரி தோஷங்கள் ஆகிவிட்டது என்றாலும் சரி
2.அல்லது நம்மை அறியாமலேயே சாப வினைகள் வந்தாலும் சரி
3.அருள் மகரிஷிகளின் அருள் துணை கொண்டு அந்தத் தீய நிலைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.

குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வினைத் தினமும் எடுத்து பழகுதல் வேண்டும். இது உங்களிடத்தில் எத்தனையோ நற்பயன்களை விளைவிக்கும்.

உண்மையான யாகம் எது…?

குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் “துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வைப் பெற வேண்டும்” என்ற உணர்வை
1.உயிரான நெருப்பினுள் போட்டு இதனின் உணர்வின் அலைகளை நமது வீடு முழுவதும் பரப்பினால்
2.வீட்டினுள் எத்தகைய சாப நிலைகள் இருந்தாலும் எத்தகைய கொடிய நிலைகள் இருந்தாலும் அவையனைத்தும் அகன்றுவிடும்.

கணவன் மனைவிக்கிடையே எத்தனையோ வேறுபட்ட உணர்வுகளும் மனஸ்தாபங்களும் வரும் போது பெண்கள் நரக வேதனையைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் வெளியிடும் வேதனையின் உணர்வலைகள் இங்கே புவியில் படர்கின்றது.

இது போன்ற வேதனையின் உணர்வுகளை நாம் நுகர்ந்து அறியும் பொழுது நம்மிடத்தில் இருள் சூழும் நிலைகள் வருகின்றது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

நாம் இனியாவது… நமது குடும்பம் நமது குழந்தைகள் நமது ஊர் நமது நாடு என்ற நிலைகளில் ஒருங்கிணைந்த நிலை பெற வேண்டும். அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும் என்ற உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நமது குடும்பமும், நமது ஊரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சும் பொழுது இதனின் உணர்வுகள் ஊர் மக்கள் ஒன்றுபட்டு வாழ உதவும்.

நாம் ஒவ்வொரு நாளும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என் கணவர் பெற வேண்டும் எங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் பெற வேண்டும் எங்கள் ஊரில் உள்ள மக்கள் அனைவரும் பெற வேண்டும் எங்கள் நாட்டு மக்கள் அனைவரும் பெற வேண்டும். இந்த உலக மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்று இதனின் உணர்வுகளை நாம் எல்லோரும் பரப்புவோம்.

இதனின் தொடர் கொண்டு நமது குடும்பத்திலும் நமது ஊரிலும் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு வாழும் தன்மையும் இருளை அகற்றும் வல்லமையும் மகிழ்ந்து வாழும் தன்மையும் உருவாகும்.

குடும்பமும் ஊரும் நலமாகும் பொழுது நமது உணர்வுகள் அடுத்திருக்கும் ஊரிலும் படர்ந்து அவர்களையும் பண்படச் செய்து மகிழ்ச்சியுடன் வாழச் செய்கின்றது.

மனிதர்களான நாம்
1.கோடிக்கரை (மனித உடல்) எனும் கடைசி நிலையிலிருக்கிறோம் என்று உணர்ந்து
2.தனுசுகோடி என்னும் கடைசி எண்ணத்தின் நிலைகளாக அனைவரும் ஒன்றுபட்டு வாழும் தன்மை கொண்டு
3.தம் உயிருடன் ஒன்றிய உணர்வினை ஒளியாக்கி இனி பிறவியில்லை என்ற நிலை அடைதல் வேண்டும்.

இதனின் உணர்வு கொண்டு மகரிஷிகள் காண்பித்த அருள் வழியில் செயல்படும் அனைவரும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று இருளை வென்று மெய்ப்பொருள் காணும் திறன் பெற்று ஒன்றுபட்டு வாழும் நிலை பெற்று மகிழ்ந்து வாழும் சக்தி பெற்றுப் பிறவியில்லா நிலை என்னும் அருள் சக்தி பெற்றுப் பெரு வீடு பெரு நிலை எனும் நிலையைப் பெறும் நிலையாக பேரின்பப் பெரு வாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.