
நமது இலட்சியம்
என்னுடைய முழுமையான தியானமே… பிறரின் தீமைகளைப் போக்கும் சக்தி பெற்ற மகான்களாக நீங்கள் ஒவ்வொருவரும் மாற வேண்டும். அதைக் கண்டு தான் எனக்குச் சந்தோஷம்.
இந்த உடல் இச்சைக்காக யாரும் அதை மாற்றி விடக்கூடாது.
யாம் கொடுக்கும் சக்தியைப் பெற்ற நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகைகளில் மக்களுக்கு வழி காட்டியாக வரவேண்டும்.
எம்முடைய உபதேசத்தின் உட்கருத்துக்களை நீங்கள் உணர்ந்து கொண்டு அதன் மூலமாக மற்றவர்களுக்கு…
1.அவர்கள் நுகர்ந்த உணர்வுகள் எவ்வாறு இயக்குகின்றது…?
2.அதிலிருந்து எப்படி மீள வேண்டும்…? என்ற உபாயத்தைக் கூறிப் பதிவு செய்து
3.அந்த பதிவின் மூலம் அவர்கள் எண்ணத்தால் தீமையிலிருந்து விடுபடுவதும்
4.அதே போல் தீமை செய்வோர் தீமைகளை நிறுத்திக் கொள்வதும்
5.ஆக… நன்மை செய்யும் உணர்வுள்ள மக்களாக மாற்றும் திறன் நீங்கள் பெற வேண்டும்.
இன்றைய உலகில் கடுமையான விஷத்தன்மைகள் சுழலப்படும் பொழுது தேடிய செல்வங்கள் இருந்தாலும் அதைக் காக்கும் திறன் நமக்கு இல்லை.
உடலைக் காக்கும் திறன் முதலில் வரவேண்டும். உடலுக்குப் பின் பிறவியில்லை என்ற நிலை அடைய வேண்டும் அந்த முழுமையின் தன்மை நாம் அடைதல் வேண்டும். இது தான் நமது லட்சியமே…!
இந்த லட்சியத்துடன் நாம் சென்றால் செல்வத்தை நாம் தேடிச் செல்ல வேண்டியதில்லை… அது தன்னாலே வந்து சேரும். ஆனால் செல்வத்தைக் குறிக்கோளாக வைத்தால் அந்த ஆசையின் நிலையில் உடல் பற்று தான் வரும்.
1.எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்ற உணர்வை நீங்கள் பாய்ச்சப்படும் பொழுது அவர்களை நல்லவராக மாற்ற முடியும்.
2.அவருடைய தீமையின் உணர்வுகள் உங்களுக்குள் வராதபடி தடுக்க முடியும்.
சந்தர்ப்பத்தில்… நம் காதுகளில் படும் படியாகக் கூட சிலர் நிறைய குறை பேசிக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் நல்ல மனம் வர வேண்டும்… நல்ல நிலை பெறட்டும்…! என்று தான் எண்ண வேண்டும்.
ஆனால் இப்படிச் செய்கின்றார்கள்… பதிலுக்கு ஏதாவது செய்து பார்க்கலாமா…? நம்மைத் திட்டுகின்றார்களே…! பதிலுக்கு நாம் கஷ்டத்தை அவர்களுக்கு உண்டாக்கலாமா…? என்று எதையும் செய்யக் கூடாது.
அவர்கள் திருந்தி வாழத்தான் நல் உணர்வைப் பாய்ச்ச வேண்டுமே தவிர கஷ்டத்தை உண்டாக்கக் கூடாது.
1.அவர் எடுக்கக்கூடிய உணர்வுகள் அதைத் திரும்பிப் பார்க்கப்படும் பொழுது
2.”அவர்களாகத்தான் திருந்தி வர வேண்டுமே தவிர…” அவர்களுக்கு நாம் கஷ்டத்தை உண்டாக்கவே கூடாது.
காரணம்… அந்தத் தவறுகள் நமக்கும் துன்பத்தைக் கொடுத்துவிடும். அவர்கள் நல் வழியில் திருந்தி வர வேண்டும் என்ற உணர்வைத் தான் நாம் வளர்க்க வேண்டும்.
கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அந்த உணர்வின் தன்மை ஆகின்றாய். நுகரும் உணர்வுகள் உயிரிலே பட்ட பின் அரங்கநாதன். ஆகவே எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வைக் கொண்டு நம்மை ஆளுகின்றது.
1.நம் சொல்லைக் கொண்டு பிறர் தீமைகளைப் போக்கும் ஆட்சியாக வர வேண்டும்.
2.நம் சொல் பிறரின் தீமைகளைப் போக்கி… உண்மைகளை அவர்கள் அறியும் நிலையாக அது வர வேண்டும்.
ஆனால்… கேட்கவில்லை என்றால் அந்த உடலில் இருக்கக்கூடிய தீமைகள் நன்மையைப் பெற விடாது தடுக்கின்றது என்று பொருள்.
இருந்தாலும்… எப்படியும் அவர்களுக்குள் அந்த உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற நிலையும் அவர் உடலை அறியாது சேர்ந்து அசுத்தங்கள் நீங்க வேண்டும் என்ற உணர்வைத் தான் நாம் செயல்படுத்த வேண்டும்.
இருபது வருடம் நான் பட்ட அவஸ்தைகள் இன்னது தான் என்று சொல்ல முடியாது. காரணம் மனிதர்கள் ஒவ்வொருவரும் எத்தனையோ வேதனைப்படுகிறார்கள். குடும்பத்தில் எத்தனையோ அவஸ்தைப்படுகிறார்கள்… அவர்களுக்கு வழி காட்டுவது யார்…? என்று குருநாதர் என்னை உணரும்படிச் செய்கிறார்.
ஆக… இந்த உயிரே மனித உடலை உருவாக்கியது. அறியாத நிலைகளில் தீமைகள் உடலில் புகுந்து விடுகின்றது… தெளிவான நிலையில் செயல்பட விடாதபடி தடுக்கிறது.
1.அவர்களுக்கு உயர்ந்த நிலைகளை ஊட்டிக் காத்திடும் செயலாகச் செயல்படும் பொழுது அந்தக் காத்திடும் உணர்வு நமக்குள் வருகின்றது.
2.அதன் மூலம் இந்தப் பூமியான பரமாத்மாவிலும் நல்ல நிலைகள் பரவுகின்றது.
அது பரவும் பொழுது… தீமையை மாற்றிடும் சக்தியாக ஒவ்வொருவருக்கும் கிடைக்கப் பெற்று அதே உணர்வுகள் ஒவ்வொருவரிடம் இருந்து வெளிப்படும் பொழுது “இந்தப் பூமியும் பரிசுத்தமாகின்றது…”
நம் ஆன்மாவிலிருந்து வெளிப்படும் நல்ல உணர்வுகள் இந்தப் பூமியைச் சொர்க்கபூமியாக மாற்றி அமைக்கும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.