நஞ்சினை ஒளிக்கதிராக மாற்றிய துருவனின் சக்தியை நாம் பெற வேண்டும்

நஞ்சினை ஒளிக்கதிராக மாற்றிய துருவனின் சக்தியை நாம் பெற வேண்டும்

 

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் விஷத்தைக் குறைத்துக் குறைத்து… குறைத்துக் குறைத்து… விஷத்தை நீக்கிடும் உடலாக (மனிதன்) இந்த உயிரால்தான் நாம் பெற்றோம்.

அதாவது… ஒவ்வொரு உடலிலும் நுகர்ந்ததை உயிர் உருவாக்கியது
1.உணர்வின் தன்மை கொண்டு நஞ்சினை நீக்கியது
2.நஞ்சினை நீக்கிடும் உடலாக மனிதனாக உருப்பெற்றது.

நாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் நஞ்சினை நம் உடல் மலமாக மாற்றிவிட்டு… நல்ல உணர்வின் சத்தை உடலாக மாற்றுகின்றது.

இருப்பினும் அதிகமான நஞ்சினை சேர்க்கப்படும் பொழுது குறைந்த நீரை வைத்து அதைச் சுத்தப்படுத்த முடியுமா…? என்றால் முடியாது.
1.அதிக அளவில் எடுக்கும் இந்த உணர்வுகள்
2.நஞ்சினை நீக்கும் சக்தி நமக்குப் போதுமானதாக இல்லை.

இந்த உடல் நஞ்சினை நீக்கும் ஆற்றலாகப் பெற்றாலும்… இந்த உடலில் இருந்து வரக்கூடிய மணம் நஞ்சு என்றும் அறிந்து கொள்ளும் நிலையைப் பெறுகின்றது. இதற்குப் பெயர் கார்த்திகேயா என்று தெளிவாக கூறுகின்றது நமது சாஸ்திரங்கள்.

நஞ்சினை நீக்கிடும் ஆற்றலைத் தெரிந்தும்… உணர்ந்தும்… நஞ்சினை அகற்றிடும் சக்தி பெற்ற இந்த மனித உடலில்
1.நம் உடலிலிருந்து வரக்கூடிய மணம் அது வெளிப்படும் பொழுது
2.புறத்திலிருந்து வரும் ஒரு வேதனைப்படும் உணர்வை இதனுடன் கலக்கப்படும் பொழுது
3.நஞ்சினை நீக்கிடும் ஆற்றல் இருந்தாலும் நஞ்சு கொண்ட (வேதனையை) உணர்வினை நுகரப்படும் பொழுது நஞ்சினை நீக்கிடும் ஆற்றல் குறைகின்றது.
4.நஞ்சினை நீக்கிடும் ஆற்றல் குறைந்தால்… நஞ்சினை வளர்த்திடும் உணர்வின் அணுக்கள் நமக்குள் விளைகின்றது.

இருந்தாலும் மனிதனாக ஆனபின் நஞ்சினை ஒடுக்கி உணர்வினை ஒளியாக மாற்றி… ஒளியின் சரீரமாக இன்று வாழ்ந்து வளர்ந்து கொண்டிருப்பது… “அகஸ்தியன் – துருவ நட்சத்திரமாக ஆனது…”

கருவிலே அவன் இருக்கப்படும் பொழுது நஞ்சை வென்றிடும் தாவர இனங்களை எல்லாம் அகஸ்தியனின் தாய் தன் உடலிலே பூசிக் கொண்டு… நஞ்சு கொண்ட விலங்குகளிலிருந்து காத்துக் கொள்ளும் ஆற்றலைப் பெற்றது.

அப்போது… தாய் நுகர்ந்த அந்த நஞ்சினை வென்றிடும் உணர்வுகளைக் கருவிலிருக்கும் அந்த அகஸ்தியன் என்ற சிசுவும் பெறுகின்றது.
1.அவன் பிறந்த பின் நஞ்சினை வென்றிடும் சக்தி பெறுகின்றான்
2.நஞ்சினை வென்றிடும் சக்தியாக வளர்கின்றன்
3.நஞ்சின் இயக்கச் சக்தியை உணர்கின்றான்.

நஞ்சினை மற்ற பொருள்களுடன் சேர்த்த பின்… அதிலே எந்தெந்த மணம் இருக்கின்றதோ அதை எப்படி எல்லாம் இயக்குகின்றது…? என்பதை “அகஸ்தியன் அவன் வளர்ச்சியில் காணுகின்றான்.
1.நஞ்சு இல்லாத தாவர இனம் இல்லை
2.நஞ்சு இல்லாத கோள்கள் இல்லை
3.நஞ்சு இல்லாத அணுக்கள் இல்லை என்ற நிலைகளையும் அறிகின்றான்.

நஞ்சின் அளவுகோல் அதிகரிக்கப்படும் பொழுது… அது ஒரு பொருளை அதிக வீரியமாக மாற்றி விடுகின்றது.

நஞ்சு அதிகரிக்கப்படும் பொழுது மிளகாயில் காரம் அதிகரிக்கிறது… நஞ்சின் தன்மை அதிகரிக்கும் பொழுது கசப்பின் தன்மை அதிகரிக்கின்றது. எப்பொருளில் இந்த நஞ்சின் தன்மை அதிகரிக்கின்றதோ அந்த கசப்பான உணர்ச்சிகளை ஊட்டும் வலிமை பெறுகின்றது.

நெல் வகைகளை எடுத்துக் கொண்டால் அதிலே நஞ்சின் இயக்கச் சக்தி குறைவு. ஆகவே உணர்வின் தன்மை அதற்குள் சுவைமிக்கதாக… மகிழ்ச்சி ஊட்டும் உணர்வின் நிலைகள் அங்கே விளைகின்றது.
1.இப்படி… சாந்தம் கொண்ட உணர்வுகளில் நஞ்சு கலந்தால்
2.நஞ்சினைக் குறைக்கும் நிலைகளில் தாவர இனங்களும் விளைகின்றது.

இந்த உண்மையின் உணர்வுகளை எல்லாம் அறியும் பருவம் பெறுகின்றான் அகஸ்தியன்.

தாய் கருவில் இருந்து வெளிவந்த பின்…
1.அவன் உடல் இவனிடம் நஞ்சு வராதபடி
2.”அவன் உடலில் இருந்து வரக்கூடிய மணம்” அந்த நஞ்சையே வென்றிடும் சக்தியாக பெறுகின்றது.

“இவனின்று வெளிப்படும் உணர்வுகளோ” மற்ற நஞ்சின் தன்மை வந்தாலும் தனக்குள் அருகில் வராதபடி பாதுகாத்துக் கொள்கிறது. இந்த உணர்வின் துணை கொண்டு உலகில் நஞ்சின் இயக்க உணர்வை முழுமையாக அறிந்தான்.

உலகம் எப்படி இயங்குகிறது…? என்று அதனின் வலுவின் தன்மை அறியும் சந்தர்ப்பம் அவனுக்குள் உருவானது. அப்படி உருப்பெற்ற உணர்வு தான்
1.வானுலகில் இருந்து வரும் மின்னலாக இருந்தாலும்… அதைக் காட்டிலும் இடி மின்னலாக இருந்தாலும்
2.அவன் உற்று நோக்கினால் அது எல்லாம் அவனுக்குள் ஒடுங்குகின்றது
3.ஒடுங்கும் போது உணர்வின் ஒளியின் கதிராக அவனுக்குள் வளரும் தன்மை வருகின்றது.

ஐந்து வயதிற்குள் இதை எல்லாம் அறியும் பருவம் பெறுகின்றான்.

வானுலக இயக்க உணர்வு… நஞ்சின் மோதலால் ஏற்படும் (விஷக்கதிரியக்கத்தால் ஏற்படும்) மின் அணுக்களின் தாக்குதல் தான் மின்னல்…!

அந்த விஷத்தின் மோதலினால் அணுக்கள் பரவலாகச் சிதறும் போது மற்ற கோள்கள் உமிழ்த்தும் உணர்வுடன் கலக்கப்படும் பொழுது
1.அந்தக் கோளின் சக்தியை இயக்கச் சக்தியாக அதற்குள் வலுவூட்டி
2.எதனுடன் எந்த உணர்வின் சத்து கலந்ததோ அதிலே இது கலந்த பின்
3.அந்த உணர்வினை இயக்கும் சக்தியாக மாறுகின்றது என்பதனை அகஸ்தியன் உணர்கின்றான்.

ஏனென்றால் அவனுக்குள் ஒரு மின்னணுவின் தாக்குதல் வரப்படும் பொழுது… அதை அடக்கி அந்த உணர்வின் சத்தை உணரும் பருவம் பெறுகின்றான்.

மின்னல் தாக்கப்படும் பொழுது தாவர இனங்கள் கருகுகின்றது மற்ற பொருள்களும் கரைகின்றது. அது விஷம் கொண்டது
1.ஒன்றுடன் ஒன்று அந்தக் கதிரியக்கப் பொறிகள் தாக்குவதை அகஸ்தியன் உற்றுப் பார்த்தாலும்… அது இவனுக்குள் அடங்கும் சக்தி வருகின்றது.
2.நட்சத்திரங்களின் இயக்க ஓட்டங்களையும் உற்று நோக்கி அதன் உணர்வின் இயக்கங்களை அறிகின்றான்

அப்பொழுதுதான் “துருவன்” என்று அவனுக்கு காரணப்பெயர் வருகிறது.

பேரண்ட மகரிஷிகள்

பேரண்ட மகரிஷிகள்

 

1.”பேரண்டத்தில் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும்…”
2.அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பெறும் தகுதியை ஏற்படுத்துவதற்குத் தான்
3.இதுவரையிலும் யாம் உபதேசித்து வருவதும்… உணர்த்தி வருவதும்.

இதைப் பதிவாக்கி மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது துருவ தியானத்தின் மூலம் அனுதினமும் அதைப் பெற்று அந்த அரும்பெரும் சக்திகளை வளர்த்துக் கொள்ள முடியும்.

அருள் ஞான வித்துக்களைத்தான் ஊன்றுகின்றேன் அருள் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று எண்ணத்தால் ஏங்கிப் பெறுங்கள்.
1.பேரண்ட மகரிஷிகளின் உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
2.அறியாது வரும் இருளைப் போக்கிக் கொள்ளுங்கள்.

உங்களுடைய நினைவுகள் கூர்மையாக அந்தத் துருவ நட்சத்திரத்துடனும் சப்தரிஷி மண்டலங்களுடன் இணையும்படியாக நினைவாற்றலைப் பெருக்குங்கள்.

அதை உங்களுக்குள் பெருக்கினால் கூர்மை அவதாரமாக உங்கள் உணர்வுகள் ஒளியின் சரீரமாக மாறுகின்றது. அதுவே மனிதனின் கடைசி எல்லை.
1.மனிதனாகப் பிறந்த நாம் அனைவருமே எளிதில் பெற முடியும்.. மறவாதீர்கள்…
2.என்னால் சாத்தியமாகுமா…? என்று எண்ணி சோர்வடையச் செய்து விடாதீர்கள்.

யாகங்கள் செய்தோ வேள்விகள் செய்தோ இதையெல்லாம் மாற்றி அமைக்க முடியாது.

காரணம்…
1.அதிலே மந்திரங்களை ஓதி அதை நமக்குள் பதிவு செய்து கொண்டால் அது “வசியமாகி” விடுகின்றது.
2.இறந்த பின் அதே மந்திரத்தை யார் ஜெபிக்கிறார்களோ அது “கைவல்யம்…”
3.அதை மற்றவர்கள் பயன்படுத்தப்படும் பொழுது “ஏவல்…”

உலக மதங்கள் அனைத்தும் இந்த வழிப்படி தான் சென்று கொண்டிருக்கின்றது. நான் (ஞானகுரு) யாரையும் குறை கூறவில்லை. அரசன் காட்டிய வழிகள் பின் வந்தோர் பதிவு செய்த உணர்வே விளைகின்றது. அதன் வழியிலே இன்று இயங்கிக் கொண்டுள்ளது.

“இன்று வாழும் மக்களுக்கு இது எல்லாம் தெரியாது…”

மதம் என்ற நிலைகள் உருவாக்கப்படும் பொழுது மனிதனைச் சீர்குலைக்கும் நிலையாகப் பகைமை உணர்வுகள் வளர்கின்றது/ மதத்திற்குள் இனம் என்று வரப்படும் பொழுது “என் இனம் பெரிது… இல்லை என் இனம் தான் பெரிது…” என்று ஒன்றை ஒன்று அழித்துக் கொன்று குவித்து அதை ரசித்துக் கொண்டிருக்கும் நிலை தான் இன்று வருகின்றது…

ஞானிகள் காட்டிய அருள் வழியில் அருள் ஒளியைப் பெருக்கும் நிலைகள் காலத்தால் மறைந்து விட்டது. இதை அறிந்து கொண்ட நாம்
1.இனியாவது மகரிஷியின் அருள் உணர்வை நாம் பெறுவோம்.
2.மகரிஷிகள் உணர்வுகளை உலகம் முழுவதும் பரவச் செய்வோம்…
3.மெய்ப் பொருள் காணும் சக்தி பெற வேண்டும் என்று தியானிப்போம்
4.அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் பெருக்குவோம்.

நமது பார்வையில் உலக மக்கள் தன்னைத் தான் அறிந்திடும் மெய் ஞானிகளாக வளர வேண்டும் என்று தவமிருப்போம்.

நம்மை உருவாக்கிய அன்னை தந்தையரை மறவாது அவர்களைக் கடவுளாக மதித்து… நம்மைத் தெய்வமாகக் காத்தருளிய அவர்களைக் கடவுளாக மதித்து… நல்வழி காட்டிய அவர்களை குருவாக மதித்து… அதன் வழியில் எண்ணியதை உருவாக்கும் உயிரை ஈசனாக மதிப்போம்.

நாம் எண்ணியதை உயிரே உடலாக்குகின்றது… நினைவாக்கும் பொழுது அதுவே தெய்வமாகச் செயல்படுகின்றது… மீண்டும் அதை எண்ணும்பொழுது அது குருவாக அதன் வழியிலேயே நம்மைச் செயலாக்குகின்றது. ஆகவே
1.அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் குருவாக்குவோம்… அதனை நினைவாக்குவோம்
2.மகரிஷிகள் சென்ற பாதையில் இந்த வாழ்க்கையில் ஒளியின் சரீரம் பெறுவோம்.

நீர் சக்தியின் முக்கியத்துவம்

நீர் சக்தியின் முக்கியத்துவம்

 

எண்ண ஓட்ட கதியையும் நீரோட்டச் சக்தியின் செயலையும் ஒன்றுபடுத்தி அதன் உட்பொருளை வெளிக்காட்டி எண்ணத்தினுள் சிந்திக்கும் கருப்பொருள் தத்துவத்தினால் எண்ணத்தின் வழிச் செயல் நீர் சக்தி பெறும் ஆரம்ப முறை ஞான வழியமைத்தவர் தான் “அகஸ்திய மாமகரிஷி…!”

1.வானத்தில் கன பரிமாணம் கொண்ட நீர் சக்தி… இடி மின்னல் ஒரு புறமும்
2.மறுபுறம் ஆகாயத்தில் சரி பாதி இருக்கும் கோள்களையும் விண்மீன்களையும் காட்டி
3.எண்ண ஓட்ட கதியின் தத்துவத்தை எண்ணி எடுக்க வைத்த அந்த அகஸ்திய மாமகரிஷி தான்
4.நீர் சக்தியை (ஜீவன்) வென்றதாகவும்… பின் அதனுள்ளே தான் ஒன்றியதாகவும் கூறப்பட்டுள்ளது.
5.அகஸ்தியன் ஜீவ சக்தியைப் பெற்றது மிக மிக முக்கியமானது…!

அதாவது சரீரமாகிய திடமும் அந்தத் திடத்திற்குள் உள்ள நீர் சக்தியும் நீரினுள் இருந்த பொழுது நீரோடு நீர் சேர்ந்து ஒருநிலைப்படுத்திட
1.தன் திடச் சரீர நிலை அணுக்கள் அனைத்தையுமே
2.நீரோட்ட நீர் சக்தியின் லேசான தன்மை போல் நீரோட்டச் சக்தியின் கதியையே தன்னுள் அடக்கி
3.நீர் மேல் உலவ… நீர் மேல் அமரும் செயலில்… ஓர் சூட்சமம் கூறப்பட்டது.

எண்ண ஓட்டச் செயல் சக்தியாகும் சூட்சமத்தை… அதனுள் ஏற்படுத்தப்படும் பதிவு… அல்லது ஈர்க்கப்படும் செயல் அனைத்தையும்…
1.ஒருமித்த கருத்தின் விளைச்சல்களாக (மகசூலாக) உருவாக்கிடும் நிலையாக
2.யாம் சொல்லும் தியானத்தின் வழித் தொடர் கொண்டு
3.அந்த எண்ண ஓட்டத்தின் கதியையே நற்கதியாக ஆக்கும்…
4.உயரிய ஞானம் பெறும் முறைகளாக வழியமைத்துக் கொள்ள வேண்டும்.

காற்றின் நீரே இளநீராகி… அதனுள் உள்ள விஷ அமில சக்தியே தேங்காய்க்குள் எண்ணையாக இருக்கும்
1.“மறைந்துள்ள அந்தத் தொடர்பை அறிந்து…”
2.அதையும் பயனுற வழிப்படுத்திக் கொள்ளும் செயலே ஞானம் என்பதாகும்..!

“குரு” கோளின் சக்தியைப் பெற வேண்டியது மிகவும் அவசியம்

“குரு” கோளின் சக்தியைப் பெற வேண்டியது மிகவும் அவசியம்

 

ஆற்றின் ஆழம் தெரியாமல் கடந்து சென்றுவிட எண்ணுபவன் செயல் போல் இல்லாமல் இலட்சிய நோக்கில் “விழிப்பாக இரு…!”

பால்வெளி மண்டலத்தின் சக்திகளை ஈர்த்து வலுக் கொண்டு பால்வெளிச் சூட்சமத்தின் பூதியை அறிந்து கொள்ளும் முன்
1.மாமகரிஷிகளின் அருளாசி பெறுவது
2.சக்தியின் வலுவை வலுவாக்கிக் கொள்வது
3.புவியின் காந்த நீர் சக்தியை ஈர்த்துச் செயல் கொள்வது என்ற
4.அந்தப் பாடத்தைப் படி… படி… படி… என்று சொன்னதெல்லாம்
5.இந்தப் படி தான்… இந்த வழி தான்… என்று அறிந்து கொள்ளுதலும்…!
6.நீர் சக்தியை வென்று காட்டினேன்… அதனுடன் ஒன்றியும் காட்டினேன்..! என்ற அகத்தியரின் கூற்று தான்.

இதனுடைய சூட்சமம் புரிகிறதா…?

நாம் வாழும் இந்தப் பூமித் தாயின் தொடர்பில் சக்தி பெற்று வலுக் கொண்டு மனிதனாக வளர்ந்த செயலுக்கு அன்று தாயின் பால் அருந்தினாய்.

இன்று சரீர வலுவின் வீரியத்தில் மண்டலங்களின் சுழற்சியினை (விண்ணுலகம்) அறியும் செயலுக்கு… எண்ண வலுவின் நேர் கோட்டில் அறிந்து கொள்ளும் செயலுக்கு
1.பூமித்தாய் புவி காந்த நீர் பாலை அமுதாக்கி அளித்திடக் காத்துக் கொண்டிருக்கின்றாள்.
2.வளர்த்து வலுக் கொண்டு சுயப்பிரகாச தனிச் சக்திச் சுழல் மண்டலமாக ஆக்கிடும் உங்கள் செயலுக்கு நானும் ஊட்டிவிட்டேன்…!

அகத்தியர் கூறிய அந்தச் சூட்சமப் பொருளைக் கூறுகின்றேன்.

1.நம் சூரியக் குடும்பத்தில் சுழன்று ஓடும் கோளங்களில் குரு என்று சிறப்பித்த வியாழன் கோள்
2.ஆதிசக்தியின் நீர் சக்தி அமில முலாமைத் தன் சக்திக்கு வலுக் கொண்ட செயலின் இரகசியம்
3.தன் ஈர்ப்பின் சுழல் வட்டத்தில் நெருங்கி வரும் அத்தனை வளரும் சுழல் சக்திகளையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்டு
4.அந்தச் சக்தியைத் தன்னுள் ஒன்றச் செய்து… தன் வலுவை வலுவாக்கி வீரியம் கொண்டே சுழன்று ஓடிடும் செயலில்
5.அந்த வியாழன் கோள் அலையை ஈர்த்திடும் பக்குவத்தை ஞானச் செல்வங்கள் பெறப் பழகிக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் அகத்திய மாமகரிஷி அந்தக் கோளின் அலையைத் தன் வீரிய அமில ஈர்ப்பைக் கொண்டு தன் அமில வீரிய முலாமுடன் ஒன்றச் செய்து தன் சக்தியையே வலுக் கொண்டதாக்கிக் கொண்டார்.

துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் என்ற தனித்துவமான மண்டலங்களாகச் செயல் கொண்ட செயலுக்கு ஜெபத்தின் வேகம் என்று சொல்லிய சொல் நாதத்தின் குணத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

அலை வீசாக்கடல் என்ற பால்வெளி சூட்சமத்தில் இப்படித் தனக்கென ஓர் சுய அமைப்பு மண்டலத்தை உருக்கொள்ளும் செயலின் கதிக்கு ஒவ்வொருவரும் வளர்தல் வேண்டும்.

தன் உயிராத்ம சக்தியின் வலுவிற்கு வலுக் கொண்டிடும் ஜெப நிலையில்
1.ஓர்முகப்படுத்தப்பட்ட எண்ண அம்பு…
2.பிரம்மாண்டமாகப் படைப்பின் படைப்பாக எய்தி
3.பூதியில் உருவாக்கப்படும் தன் ஒளி காந்த வட்டத்திற்குள் “ஒளி தீபம்…” ஏற்றப்பட வேண்டும்.

ஞானத்தில் உயர்வடைய… “தான் எடுக்கும் எண்ண ஓட்ட சுவாச கதியை உயர்வாக்க வேண்டும்…”

ஞானத்தில் உயர்வடைய… “தான் எடுக்கும் எண்ண ஓட்ட சுவாச கதியை உயர்வாக்க வேண்டும்…”

 

மனித குலம் உண்மையை உணர்ந்து வாழவும்… அந்த வாழ்வில் உயர் ஞானச் செயலின் சிறந்த பேறு பெறும் வழியாகவும்… மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய குணங்களின் விசேஷத் தன்மைகளைச் சிலை வடிவில் சித்தர்கள் அன்று உணர்த்தினார்கள்.

அந்தச் சித்தர்கள் மனித குல உயர்விற்கு வழி காட்டிய தெய்வச் சிலைகளின் தத்துவத்தையே கேடுறச் செய்து… ஆர்ப்பரித்துப் பகட்டைக் காட்டிடும் நிலைக்கு இன்று வந்து விட்டார்கள்.

சித்தன் படைத்த செயலையே மனிதன் பகட்டிற்காகவும் கௌரவ வாழ்விற்கும் பயன்படுத்திச் சீர்குலைத்து விட்டனர். அப்படிச் சீர்குலைக்கப்பட்டதால்
1.வாழையடி வாழையாக வழி வரும் மெய் ஞான உயர் சக்தி பெற விழைந்த ஆத்ம ஞானிகளால்
2.உட்பொருள் வெளிப்படுத்தும் எண்ணமின்றி மறைக்கப்பட்டு விட்டது.

விநாயகர் உருவத்தைக் காட்டி ஆற்றங்கரையில் வைத்த நிலை எல்லாம் இன்று கேலிக்குரிய நகைச்சுவைப்படுத்தி ரசித்து மகிழும் நிலைக்குச் சென்று விட்டது.

இன்றைய மனித மனங்கள் உட்பொருளை நாடி அறிந்து கொள்ளத் தயங்குதுவும்… பயம் என்ற போர்வை கொண்டு பக்தி என்ற குளிர் போக்கத் தானும் நடுநடுங்கி… அறிவொழிந்து…! அதிலிருந்து விடுபட முடியாத நிலை ஆகிவிட்டது.
1.ஜோதி என்ற தன் உயிர்க்கனலின் நெருப்பே
2.பக்தி என்ற குளிரை விரட்டும்…! என்று அறியாமல் போனதென்ன…?
3.அந்தக் குளிரை நீக்க வந்தவனும் உட்பொருளை அறிந்ததில்லை…!

ஆவியான நீர் அமிலங்கள் எல்லாம் தன் செயலில் தான் நெருங்கி… ஒன்றோடொன்று கண பரிமாணம் கொண்டு… பிறிதொன்றின் சேர்க்கையில் நீர்த் திவலையாகும் நிலையில் “அதுவே சிவமாகின்றது” (திடமாகி உருவமாகின்றது).

அது பூமிக்குள் வரும் காரிய நிலை கொண்டு சுழலும் தன்மையிலே சக்தியாகவும்… பூமியில் படிந்து பின் எழும் செயலின் தொடர்பில் மீண்டும் நீராகவும்… அதுவே எழும் தொடரில் ஆவி நீர் அமிலமாகவும் செயலுறும் தொடர்புகளை அறிந்து கொள்தலே “பிரம்மம்…!”

அத்தகைய பேருண்மைகளை அறிந்து கொண்டவர் தான் “அகத்தியர்…!”

அவர் உயிரணுவின் செயல் சுழலும் சக்தியாகப் பரிணமித்துப் பூமிக்கு வந்த காரியத்தில் வினையான தன்மைக்கு நாயகனாக இந்தச் சரீரம் பெற்றார்.

வினையின் நாயகனே விநாயகர் என்று தன் உயிர் ஆன்ம சக்தியையே உயர்த்திக் கொள்ளும் வழியாக
1.எல்லா உயிர்த் தொகைகளுக்கும் உயிரணுக்கள் பொதுவாகவும்
2.அது பெறும் வீரியத்தில் வித்தியாசமும்… அதுவே பின் எண்ணத் தொடரில் சரீரமாகவும்
3.தன் அமில குண நிலைக்கொப்பத் தனக்குகந்த… தான் பெற்ற தன்மை கொண்டு… ஞான வழியில் “ஒவ்வொரு சரீரமும் பெறுகிறது…” என்றார் அகத்தியர்.

அத்தகைய உயிரணுக்களுக்குள் வீரிய சக்தி கொண்டது “யானை…” என்றும் அது பெற்ற சக்திக்கு அதன் “சுவாசமே…” காரணம் என்று தெளிவாக உணர்த்தினார்.

மனித குலம் ஞானத்தில் உயர்வடைய வேண்டும் என்றால் “தான் எடுக்கும் எண்ண ஓட்ட சுவாச கதியை உயர்வாக்க வேண்டும்…” என்பதற்காக விநாயகரை உருவகப்படுத்திக் காட்டினார் அந்த அகத்தியர்.

நீர்ச் சக்தியைத் தன் எண்ண ஓட்ட கதியுடன் ஒன்றுபடுத்திக் கண்ட அந்த அகத்திய மாமகரிஷி “சுவாச வழியில் வீரியம் பெறும் நிலையைப் புகட்டினார்…!”
1.வினைக்கு நாயகனே விநாயகன் என்று
2.தன் உயிர் குருவைக் கண்டு கொண்ட பின்
3.அவர் சென்ற வழியின் உயர்வே “கணபதி…”

கணங்களை ஆளக்கூடிய தலைவன் “கணநாதன் என்ற உயிர்ச் சக்தியானது” தன்னுள் உள்ள கணம் என்ற கூட்டமாகிய அனைத்து உயிரணுக்களுக்கும் நாயகனாக வினையின் நாயகனாகச் செயல்படுகிறது.

1.கணங்களுக்கெல்லாம் (உயிரணுக்களுக்கெல்லாம்) அதிபதியாக ஒரு வழிகாட்டியாக
2.உயிர் ஆத்ம சக்தி… தான் சக்தி பெறும் மார்க்கமாகச் சக்தி பெற்று
3.தான் பெறும் சக்தியையே சரீர உயிரணுக்களுக்கும் ஊட்டிடும் நிலையே கணங்களின் பதியான கணபதி ஆவான் என்று
4.உயிர் பெறும் உயரிய தன்மைக்குச் சித்தனால் காட்டப்பட்டதே விநாயகர் என்பதை அறிந்துணர்தல் வேண்டும்.

இந்த உலகிற்கும் நமக்கும் இனி எது தேவை…?

இந்த உலகிற்கும் நமக்கும் இனி எது தேவை…?

மனிதனுக்கு மனிதன் இரக்கமற்றுக் கொன்று அதை ரசித்துக் கொண்டிருக்கும் உணர்வுகளே அதிகமாக இன்று வளர்ந்து கொண்டுள்ளது.

விஷத்தன்மை கொண்ட அணுக்களாக மாற்றம் அடைந்து… விஷக் கிருமிகளும் அதிகமாக உருவாகிக் கொண்டே உள்ளது… கொடூர நோய்களும் உருவாகின்றது கொடூரச் செயலைச் செயல்படுத்தும் தன்மைகளும் மனித உடலுக்குள் ஊடுருவிக் கொண்டுள்ளது.

அதே சமயத்தில் வான் வீதியில் விஞ்ஞானிகள் பரீட்சித்துப் பார்த்த விஷத்தன்மைகளும் (குண்டு வெடிப்புகள்) அதிக அளவில் பரப்பப்பட்டதனால்
1.பிரபஞ்சத்தில் உள்ள கோள்களும் நச்சுத்தன்மை அடைந்து விட்டது.
2.அது உமிழ்த்தும் உணர்வுகளை சூரியன் கவர்ந்து ஜீரணிக்கும் சக்தியை இழந்து விட்டது.

அதே போன்று நமது உயிர் நம்மை மனிதனாக உருவாக்கிய நிலையில் நஞ்சினை வென்றிடும் ஆறாவது அறிவைப் பெற்றிருந்தாலும்… மாறுபடும் தன்மை வரும் பொழுது மனித உடலையே சீர்குலையைச் செய்யும் நிலை ஆகிவிடுகின்றது… சிந்தனையை இழக்கச் செய்கின்றது. உடலை விட்டுச் சென்றால் அடுத்து மனிதனல்லாத உருவாகத் தான் உயிர் உருவாக்கும்.

நமது உயிரின் துடிப்பு நிலைகள் சீராக இயக்கிக் கொண்டிருக்கும் போதும் அது அதற்குத் தக்கவாறு உடலில் உள்ள எல்லா அணுக்களை இயக்குகின்றது. அதே சமயம் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு உடலிலும் இதைப் போல அது சீராக இயங்கிக் கொண்டுள்ளது.

அதாவது…
1.ஒவ்வொரு உயிரும் எலக்ட்ரிக் என்ற நிலையில் இயக்கத் துடிப்புகளை உருவாக்குகின்றது
2.அதன் உணர்வின் துணை கொண்டு தனக்குள் கவர்ந்து கொண்ட உணர்வின் தன்மையை
3.அது எது எதுவோ அதனின் உணர்வாக எலக்ட்ரானிக்காக மாற்றி அமைக்கின்றது.

இருப்பினும் வான் வீதியில் வீசிய கதிரியக்கப் பொறிகள் சூரியனை அணுகி விட்டது. இந்தப் பூமியிலிருந்து வெடிக்கப்பட்ட அணுக்கதிரியக்கங்களால் துருவப் பகுதியில் ஓசோன் திரையும் கிழிந்து விட்டது. ஆகையினால் துருவத்தின் வழியாக வடிகட்டப்படாத விஷத்தன்மைகளே பூமிக்குள் வந்து கொண்டிருக்கிறது.

விஷங்கள் பூமிக்குள் வரப்படும் பொழுது மனிதனுடைய செயலும் விஷத்தன்மையாகின்றது
1.கதிரியக்கப் பொறிகள் தாவர இனங்களிலும் பரவப்பட்டு அவைகளின் குணங்களும் மாறத் தொடங்கி விட்டது
2.அதை உணவாக உட்கொள்ளும் மனிதனுடைய குணாதிசயங்களும் மாறுபடுகின்றது.
3.விஷத்தன்மை கொண்ட அணுக்களாக மாறி ஒவ்வொரு உடல்களிலும் மாற்றங்கள் ஆகின்றது.

சூரியன் தனக்குள் கவரும் சக்திகளில் விஷத்தின் தன்மை அதிகரிக்கும் பொழுது “எலக்ட்ரிக்கின் இயக்கச் சக்தி” அதிகமாக வளரத் தொடங்கி விட்டது.

உதாரணமாக ஒரு எலக்ட்ரிக் வயரிலே இரு மடங்கு மின்சாரம் அதிகரித்தால் அதனுடன் இணைக்கப்பட்ட பல்புகளோ மற்ற இயந்திரங்களோ அது பியூஸ் (எரிந்து) ஆகிவிடும். அப்போது ஒலி அதிர்வுகள் அதிகமாகின்றது. நாம் இயக்கக்கூடிய சாதனங்களும் வேகமாக இயங்கி… பழுதடைந்து விடுகின்றது.

அது போல் தான் ஒவ்வொரு உயிரினங்களின் துடிப்பும் இரு மடங்கு ஆகும் போது
1.மனித உணர்வின் எண்ணங்கள் துரித கதியில் இயங்கி
2.சிந்திக்கும் திறனை இழக்கச் செய்து விடுகின்றது.

மனிதனுக்குள் சிறு மூளை பாகங்களில் விஷத் தன்மை பரவினால் “உணர்ச்சியின் வேகங்கள் அதிகரிக்கும்…!” பித்து பிடித்த உடலில் பார்த்தால் நரம்புகளில் பல மடங்கு வீரிய சக்தி உண்டு

இதைப் போன்று தான் மற்ற உயிரினங்களில்… காட்டு விலங்குகளில் உயிரின் இயக்க ஓட்டம் அதிகரிக்கப்படும் பொழுது அதுவும் மாற்றம் அடைந்து காடுகளிலிருந்து அகன்று “அசுரத்தனமான தாக்குதலில் இறங்கவும் கூடும்…”

இத்தகைய நிலைகள் நம் பிரபஞ்சத்தில் உருவாகிக் கொண்டுள்ளது.
1.கதிரியக்கப் பொறிகளால் சூரியனுக்குள் மின் உற்பத்தி அதிகமாகி… மின் அணுக்களின் வேகத் தொடர் அதிகரிக்கப் போகிறது.
2.அதனால் இந்தப் பிரபஞ்சமே சீர் கெடும் நிலையும்… அதனின் செயலாக்கம் தணியும் நிலையும் வந்து கொண்டிருக்கின்றது.

ஆதியிலே… சந்தர்ப்பத்தால் நஞ்சை வென்றிடும் சக்தி பெற்று வளர்ந்த அகஸ்தியன்… அவன் வளர்ச்சியில் துருவத்தின் ஆற்றலைக் கண்டுணர்ந்து துருவத்தின் ஆற்றலைப் பெற்று கணவன் மனைவி இருவருமே உயிருடன் ஒன்றும் உணர்வினை ஒளியாக்கி நஞ்சினை வென்றிடும் உணர்வு பெற்றுத் துருவ நட்சத்திரமாக… அகண்ட அண்டத்தில் வருவதையும் ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளார்கள்.

அதிலிருந்து வந்து கொண்டிருக்கும் உணர்வலைகள்
1.நமக்கு முன் இந்தக் காற்றுக்குள் இருப்பதை நுகர்ந்து பழகுவதற்குத் தான்
2.கூட்டுத் தியானங்களை உங்களுக்கு அமைத்துக் கொடுத்திருக்கின்றோம்.

அதே சமயத்தில்…
1.நாம் தியானத்தில் எடுக்கும் மகரிஷிகளின் உணர்வுகள் தணியத் தொடங்கினால் விஷத்தன்மைகள் ஆட்கொண்டு விடும்
2.பல கோடிச் சரீரங்களில் சம்பாதித்த சக்தியை வலிமை பெற்றதை அழித்துவிடும்.

ஆகவே… இந்த உலகமே விஷத்தன்மையாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில்… வராகன் நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வைக் கவரும் சக்தியாக நஞ்சினைப் பிரித்திடும் மனித உடலை உருவாக்கிய “பரசுராம்” என்ற நிலையில்… அதன் வழி வளர்ச்சி பெற்றவன் தான் அழியாத நிலைகள் கொண்டு “ஒளிச் சரீரமாக விண்ணிலே உள்ளார்கள்…!”

ஆனால் உடலில் இச்சைக்குச் சென்றோர் அரசராக ஆனார்கள். மற்றவர்களை வீழ்த்தி அதிலே மகிழ்ச்சி பெற்று… பல மதங்களாக பல இனங்களாகப் பிரிக்கப்பட்டு அழித்திடும் நிலையாக வளர்ந்து விட்டது.

ஆனால் அத்தகைய அரசர்கள் வீழ்ச்சி அடைந்தாலும் இன்று மக்களாட்சி என்று வந்துள்ளது. மக்களாட்சி என்றாலும்…
1.அரசியலிலும் அதே நிலைகள் இன்று வளர்ந்து விட்டது
2.அதிலும் எத்தனையோ பிரிவுகள்… ஒருவருக்கொருவர் பகைமை.

நன்மையை எதிர்பார்த்திருக்கும் மக்களோ கலக்க உணர்வு கொண்டு சிந்திக்கும் தன்மை குறைந்து எப்படி வாழ்வது…? என்ற நிலையிலேயே உள்ளார்கள்.

ஆகவே சிதறுண்டு போகும் இந்த நிலையில் இருந்து மீட்டிட
1.நீங்கள் ஒவ்வொருவரும் காலை துருவ தியானத்தில் உலக மக்கள் அனைவருக்கும் அந்த துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும் என்று
2.தனக்குள் அந்த ஆற்றலை விளைய வைத்து மக்களுக்கு இந்த அலைகளை அனுப்ப அனுப்ப
3.நல்லதை எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கும் மக்களுக்கு இது உதவியாக அமையும்.

துருவ தியானத்தில் எத்தனை ஆயிரம் பேர் இப்படி எண்ணி எடுக்கின்றோமோ… பரவச் செய்கின்றோமோ… தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று யாரெல்லாம் எண்ணுகின்றார்கள் அவர்களுக்கு இது கிடைக்கும்.

இரு மடங்கு அதிகரிக்கப் போகும் மின் அணுக்களின் தன்மைகளிலிருந்து நாம் அனைவரும் மீள்தல் வேண்டும்.

அதற்காக அகஸ்தியன் சென்ற வழியில் அவன் உணர்வை மட்டும் அவனுடைய வளர்ச்சியில் இருந்து நாம் பிரித்து எடுத்து வளர்த்துப் பழக வேண்டும்.

கடந்த காலங்களில் பிரபஞ்சத்தின் இயக்கமும்… மற்ற நிலைகள் எவ்வாறு…? என்று உபதேசித்த உணர்வுகளிலிருந்து அதை மாற்றி
1.அகஸ்தியன் வழியில் அவன் சென்ற பாதையில் அவன் உணர்வையே தொடர்ந்து வளர்த்து
2.துருவ நட்சத்திரமான நிலையை வரிசைப்படுத்தி… நம் உடலில் உள்ள அணுக்களை அதன் வழி மாற்றி
3.இனி இந்த உடலில் இருந்து எப்பொழுது நாம் அகன்றாலும்… பகைமை உணர்வு தாக்கப்பட்டாலும்
4.நம்முடைய நினைவாற்றல் துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்ட நிலையிலேயே இருத்தல் வேண்டும்.

இது நமக்குள் வளர்ச்சியாக வளர்ச்சியாக… பிரபஞ்சத்திலிருந்து வரும் தீமைகளிலிருந்து நாம் விடுபட உதவும்.

ஆகவே நமது குரு காட்டிய வழியில் ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைப் பெற மறவாதீர்கள்…! தீமைகளை அகற்றும் அந்த வல்லமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

எதையுமே தன் எண்ணத்தால் உருவாக்கும் ஆற்றல் கொண்டவன் தான் மனிதன்

எதையுமே தன் எண்ணத்தால் உருவாக்கும் ஆற்றல் கொண்டவன் தான் மனிதன்

 

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன்… தான் பெற்ற கலைகள் அனைத்தையும் தன் மனைவிக்கு உபதேசிக்கின்றான். நுகர்ந்த உணர்வுகள் மனைவி உடலில் விளைகிறது.

ஆண் பெண் என்ற நிலையில் இணைந்து தன் இனத்தை விருத்தி செய்யும் நிலையாகக் குழந்தைகள் இன்று எப்படி உருவாகின்றதோ இதைப் போன்று தான்
1.அகஸ்தியரும் அவர் மனைவியும் ஒன்றி வாழ்ந்து… இரு உயிரும் ஒன்றாக்கப்பட்டு…
2.நஞ்சினை வென்றிடும் உணர்வாக இருவரும் விளைவித்துக் கொள்கின்றனர்.
3.ஒளிக்கதிர்களை உருவாக்கும் சக்தி பெறுகின்றனர்.

அதாவது… அவர்கள் இருவரும் வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து… கணவன் உயர வேண்டும் என்று மனைவி எண்ணுவதும் மனைவி உயர வேண்டும் என்று கணவன் எண்ணுவதும்… தனது வாழ்க்கையில் கண்டறிந்த உணர்வுகள் அனைத்தும்
1.கணவன் உயர்ந்த சக்தி பெற வேண்டும்… அந்த அருள் எனக்குள் வளர வேண்டும் என்றும்…
2.மனைவி உயர்ந்த சக்தி பெற வேண்டும்… என்று அந்த அருள் ஒளி எனக்குள் கூட வேண்டும் என்றும்
3.இருவருமே இந்த உணர்வுகளை எண்ணி ஏங்கப்படும் பொழுது
4.இரு உயிரையும் ஒன்றாக இணைத்திடும்… ஈர்த்திடும் உணர்வுகள் ஒன்றிடும் பருவத்தை அடையச் செய்கின்றது.

இப்படி அடைந்த உணர்வுகள் தான் உடலை விட்டுச் சென்ற பின் சத்தியவான் சாவித்திரி…! இன்னொரு உடலுக்குள் அழைத்துச் செல்லாது “ஏகாந்த வாழ்க்கை” வாழும் நிலை பெற்றனர்.

ஆகவே உயிருடன் ஒன்றி உணர்வின் தன்மை ஒன்றி வாழும் பொழுது “சாவித்திரி எமனிடமிருந்து தன் கணவனை மீட்டினாள்…”

நம் பூமிக்குள் வரும் அந்த உணர்வினைக் கூர்மையாக உற்றுப் பார்த்து இருவருமே ஒன்றாக அந்த உணர்வை ஒருவருக்கொருவர் பெற வேண்டும் என்ற உணர்வினை அவர்களுக்குள் விளைய வைத்து அந்த உணர்வின் அணுவாக வளர்த்துக் கொண்டார்கள்.

அவ்வாறு வளர்த்து உடலை விட்டுச் சென்ற பின் இரு உயிரும் ஒன்றாகி…
1.தான் நுகரும் உணர்வுகள் ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக…
2.“இந்தப் பிரபஞ்சத்தில் உருவாகும் அனைத்தையும் ஒளிக்கதிராக மாற்றிக் கொண்டுள்ளார்கள்…”

அணுக்களாகி… வளர்ச்சியில் கோளாகி… கோள் நட்சத்திரங்களாகி… நட்சத்திரம் சூரியனாக எப்படி ஆனதோ இதைப் போன்று தான் உயிரணுவாகி… பல கோடிச் சரீரங்கள் பெற்று… பரிணாம வளர்ச்சியில் மனித உடலை உருவாக்கி… மனிதனான பின் “தன் எண்ணத்தால்” உருவாக்கும் ஆற்றல் பெறுகின்றது.

சூரியன் ஆனபின் தான் மற்றொன்றைத் தனக்குள் வளர்த்து தீமைகள் அகற்றி ஒளியின் சுடராக மாற்றுவது போன்று உயிரணு மனிதனாகத் தோன்றிய பின்… அனைத்தையும் ஒளியாக்கும் தகுதி பெற்றது தான் அது.

சந்தர்ப்பத்தால் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது தான் ஒவ்வொரு பொருளும் உருவாகின்றது. ஆனால் மனிதனான பின் ஒன்றைக் கவர்ந்து உருவாக்கும் திறன் பெற்றவன்.

அத்தகைய திறன் பெற்ற நாம்… அதைச் சீராகப் பயன்படுத்த வேண்டும்.

அதற்காக வேண்டித் தான் அருள் ஒளியின் உணர்வுகளை உங்களுக்குள் பாய்ச்சி அருள் ஞானிகள் பெற்ற உணர்வினைப் பெறும்படி செய்கிறேன் (ஞானகுரு).

அதே சமயத்தில்
1.இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களை அந்தத் துருவ நட்சத்திரத்திற்கே அழைத்துச் சென்று
2.அதனின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக அமைந்திருக்கும் அதனுடன் உங்கள் நினைவினை இணைக்கச் செய்து
3.கூர்மையாக நினைவாக்கி அதைக் கவரும் பருவம் உங்களுக்குள் ஆக்கப்படும் பொழுது
4.உங்களை அறியாது தீமையை விளைவிக்கும் அணுக்களுக்கு அந்த அருள் ஞானிகள் உணர்வுகள் இரையாகி
5.உங்கள் உடலுக்குள் இருக்கும் பகைமை உணர்வுகள் அகன்று “ஞானத்தின் வழியில் வளர்ச்சி பெறும் தகுதி பெறுவீர்கள்…”

அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற பூர்வ புண்ணியத்தை நாமும் பெற வேண்டும்

அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற பூர்வ புண்ணியத்தை நாமும் பெற வேண்டும்

 

அகஸ்தியனின் தாய் தந்தையர் கொடூர மிருகங்களிடமிருந்தும் விஷ ஜந்துக்களிடமிருந்தும் தங்களைக் காத்துக் கொள்ள இயற்கையில் விளைந்த விஷத்தை முறிக்கும் ஆற்றல் கொண்ட மூலிகைகளை அரைத்துத் தங்கள் உடலிலே பூசிக்கொண்டார்கள்.

பூசிய பின்… உடலின் வெப்பத்தால் வெளி வரக்கூடிய அந்த மணங்களை மற்ற மிருகங்கள் நுகரப்படும் போது அவைகளுக்கு எதிர்நிலையாகி… அதனின் வலுவை இழந்து விடுகின்றது… மிருகங்கள் விலகி ஓடி விடுகின்றது.

புலியானாலும் யானையானாலும் தேளானாலும் பாம்பானாலும் அஞ்சி ஓடி விடுகின்றது. அவைகள் எல்லாம் விஷத்தின் இயக்கம் கொண்டது தான். ஆனாலும்
1.விஷத்தை முறிக்கும் பச்சிலைகளை உடலில் முலாமாகப் பூசியபின்
2.அந்த மணத்தை அந்த விஷம் கொண்ட உயிரினங்கள் நுகரப்படும் பொழுது இவர்கள் அருகிலே வருவதில்லை.

அகஸ்தியன் என்று சொல்லும் அவர்கள் தாய் தந்தையர்கள் அத்தகைய பாதுகாப்பு கொண்டு தான் வாழ்ந்தார்கள். அதே சமயத்தில் கணவன் மனைவி இணைந்து கர்ப்பமான பின் இந்த மணத்தைக் கருவில் இருக்கும் குழந்தையும் நுகர்கின்றது.

நஞ்சை வென்றிடும் சக்தியாக அந்தக் குழந்தை உருவாகிறது. பத்து மாதமும் அந்த உணர்வுகளை நுகர்ந்து குழந்தை பிறக்கிறது. அப்படி உருவானவன் தான் அகஸ்தியன்.

ஏனென்றால் இதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த உபதேசத்தை நீங்கள் கூர்மையாகக் கேட்டுப் பதிவாக்கி…
1.நினைவு கொண்டு அதை நுகரப்படும் பொழுது
2.உயிர் உங்களுக்குள் நஞ்சை வென்றிடும் அணுவாக மாற்றுகின்றது.

அன்று அகஸ்தியன் பெற்ற சக்தியும்… அவனின்று வெளிப்பட்ட சக்திகளும் இன்றும் நம் பூமியில் உண்டு. அகஸ்தியன் கண்டுணர்ந்த…
1.விண்ணில் தோன்றிய உணர்வுகள் அது எவ்வாறு…? என்பதை இணைத்து
2.ஆதி முதல் இந்த உணர்வுகள் மாற்றம் அடைந்ததை இணைக்கப்படும் பொழுது
3.அண்ட சராசரத்திலே விளைந்த உணர்வுகளையும் உங்களால் நுகர முடியும்
4.அகஸ்தியன் நஞ்சை வென்று உணர்வை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக அமைந்த நிலையும் உங்களுக்குள் கலக்க நேரும்.

அத்தகைய அணுக்களாக உங்களுக்குள் விளைந்து விட்டால்… அது தன்னுடைய இரைக்காக உணர்ச்சிகளை உந்தப்படும் போது… அகஸ்தியன் பெற்ற சக்திகள் அனைத்தையும் பெறக்கூடிய தகுதி நீங்கள் பெறுகின்றீர்கள். தீமைகளை அகற்றும் சக்தியும் நீங்கள் பெற முடிகின்றது.

அகஸ்தியன் தனக்குள் நஞ்சினை முறித்திடும் உணர்வுகளை தாய் கருவிலேயே பெற்றதனால்… சிறுகச் சிறுக வளர்ந்து எத்தகைய விஷத்தையும் அடக்கும் தன்மையும் அந்த விஷத்தை முறித்திடும் ஆற்றலும் அவனுக்குள் விளைகின்றது.

ஆனால் சாதாரண மக்களாக இருப்போர்… நோயுடன் வேதனைப்படுவோரை ஒரு கருவுற்ற தாய் நுகர்ந்து விட்டால் அந்தச் சிசுவிற்குள்ளும் அது இணைந்து விடுகிறது.

அதாவது… இன்னொரு மனித உடலில் விளைந்த ஆஸ்துமாவோ கேன்சரோ கடுமையான நோய்வாய்ப் பட்டதை… ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் கருவுற்ற தாய் உற்றுப் பார்த்து நுகர்ந்தால்
1.அந்தக் கஷ்டங்களை தாய் அறிய முடியும்… தாய் உடலுக்குள் அணுக்களாக விளைகின்றது
2.கருவிலிருக்கும் குழந்தைக்கோ இந்த உணர்வுகள் பட்டு விஷ அணுக்களாக உருவாகும் தன்மை வருகின்றது.

பிறந்த பின்… ஆரம்பத்தில் குழந்தைப் பருவமாக இருக்கும் பொழுது தெரியவில்லை என்றாலும்
1.எந்தப் பருவத்தில் எந்த மனித உடலில் அந்த உணர்வுகள் வந்ததோ
2.அந்தப் பருவம் வரும் பொழுது… அந்த உடலில் உருவான அதே நோய் இங்கேயும் வரும் பார்க்கலாம்.

இதெல்லாம் தாய் கருவிலே விளையும் உணர்வுகள்.

இதற்குத் தப்பியவர்கள் நல்ல உடலாக நாம் இன்று பெற்றிருக்கின்றோம். ஆனாலும் கஷ்டங்களையும் துன்பங்களையும் சாப வினைகளையும் தாய் கேட்டு அறிந்திருந்தால்… கருவிலே அது பதிவாகி இருந்தால்… நம்முடைய திறமைகள் எத்தனை இருந்தாலும் குடும்பத்தில் அந்தச் சாப அலைகள் தொல்லைகளாக வரும்.

எனென்றால் உயிர் நுகர்ந்த பின் அந்த உணர்வின் இயக்கமாக மாற்றி விடுகின்றது. இப்போது (பிறந்ததிலிருந்து) அல்ல… தாய் கருவிலேயே இந்த வித்துக்கள் ஊன்றப்படுகின்றது. அதனுடைய காலப் பருவம் வரும் பொழுது அதனுடைய விளைவுகளை விளைய வைத்துவிடும்

ஒரு தென்னை மரம் வளர்ச்சியானாலும் அதனுடைய காலப்பரும் வரும் பொழுது தான் காய்க்கின்றது. செடியோ தாவரமோ எதுவாக இருந்தாலும் அதனுடைய காலப்பருவம் வரும் பொழுது தான் அதனுடைய விளைச்சல்கள் வருகின்றது.

நெல் போன்ற தானியங்களை எடுத்துக் கொண்டாலும் அதே போன்று தான் நான்கு மாதம் அல்லது ஆறு மாதம் அது விளைந்து வருகின்றது.

மூன்று மாதத்தில் விளையக்கூடிய நெல் வகைகளையும் கண்டுபிடித்து உருவாக்கியிருக்கிறார்கள் இணை சேர்த்த நிலைகள் கொண்டு துரித காலத்தில் விளைவதும் உண்டு.

அது போன்று தான்
1.கர்ப்பமுற்ற தாய் உற்றுப் பார்த்த உணர்வுகள் பிறக்கும் குழந்தையை மாற்றி விடுகின்றது
2.இது தான் “பூர்வ புண்ணியம்” என்று சொல்வது.

தீமை செய்வோரையோ திருடுவோரையோ அல்லது குற்றங்கள் செய்வோரையோ கருவுற்ற தாய் உற்றுப் பார்த்து… இப்படிச் செய்கின்றார்களே…! என்று கூர்ந்து அதை நுகர்ந்தால் கருவிலேயும் இந்த உணர்வின் சக்தி இணைந்து விடுகிறது.

குழந்தையாகப் பிறந்த பின் அவன் வளர வளர தவறு செய்பவனாகவே அவன் மாறுகின்றான். என்னதான் அவனைத் திருத்த முயற்சி செய்தாலும் முடியாது.

சாமிக்குத் தீபாராதனை காட்டியோ… சாமியாருக்கு பணம் கொடுத்தோ… ஜோசியக்காரனிடம் சென்றாலும் அதை எல்லாம் மாற்ற முடியாது.

ஏனென்றால் இயற்கையின் நிலைகள்…
1.நமது உயிர் நாம் நுகர்ந்த உணர்வை ஓ… என்று இயக்கி
2.ம்… என்று உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது.

ஆனால் அதே தாய் மகரிஷிகளின் அருள் சக்தி என் குழந்தை பெற வேண்டும் என்று ஏங்கி… இந்த உணர்வைப் பல முறை பாய்ச்சினால் தான் அவனைத் திருத்த முடியும்.

“விஷத்தையே உணவாக எடுத்து” ஒளியின் கதிராக அதை மாற்றியவன் தான் அகஸ்தியன்

“விஷத்தையே உணவாக எடுத்து” ஒளியின் கதிராக அதை மாற்றியவன் தான் அகஸ்தியன்

 

பல கோடிச் சரீரங்களில் வளர்ச்சி பெற்று… மற்றொன்றுக்கு இரையாகி வேதனைப்பட்டு… நரகலோகத்தை அனுபவித்துத் தான் நாம் மனிதனாக வளர்ந்து வந்திருக்கின்றோம்.
1.சொர்க்கபூமியாக மனித உடலை வளர்த்து… சொர்க்கலோகமாக உருவாக்கி உள்ளது உயிர்
2.சொர்க்கவாசலாக அமைந்திருக்கும் உயிரின் துணை கொண்டு தான் நாம் “என்றும் சொர்க்கலோகமாக வாழ முடியும்…!”

துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும் சொர்க்கலோகத்தை அடைந்தது. ஆகவே இந்தச் சொர்க்க பூமியை நாம் சொர்க்கலோகமாக மாற்ற வேண்டும்.

நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களை மாற்றி அமைத்தலே… (அடுத்து) “பிறவி இல்லாத நிலை அடைதல்” என்பது. நமது சாஸ்திரங்களும் வேதங்களும் இதைத் தான் தெளிவாகக் கூறுகின்றது.
1.இப்பொழுது யாம் (ஞானகுரு) சொன்னால் உங்களுக்கு இது விளையாட்டாகத் தெரியலாம்.
2.ஆனால் எமது உபதேசங்களைக் கூர்ந்து கவனித்தால் உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகிவிடும்.
3.அது உங்களை ஞானிகளாக உருவாக்கச் செய்யும் ஆற்றல் கொண்டது.

தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது “நஞ்சை முறித்திடும் உணர்வுகள்” அகஸ்தியன் உடலிலே விளைந்தது.
1.அவன் பார்வையிலே படும் ஒவ்வொன்றும்… அது எத்தகைய நஞ்சாக இருந்தாலும் ஒடுங்கி
2.நஞ்சை முறித்திடும் அணுக்களாக அவனுக்குள் விளைகின்றது.

சூரியனை அவன் உற்றுப் பார்த்தாலும்… அதில் நஞ்சின் கடுமை இருப்பினும் எதிர்மறையான நிலைகள் அது உமிழ்த்தும் அல்ட்ரா வயலட் என்று விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட
1.அந்தக் கடும் நஞ்சினை இவன் நுகர்ந்தாலும் அந்த விஷத்தின் தன்மை இவன் உடல் உறுப்புக்களைப் பாதிப்பதில்லை.
2.ஆனால் “உணர்வின் ஒளிச் சுடர்கள்” கதிரியக்கப் பொறியாக நட்சத்திரங்கள் உமிழ்த்துவது போன்று இவனில் விளைகின்றது.

இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கங்களை கண் கொண்டு அவன் உற்றுப் பார்க்கப்படும் பொழுது… இவன் உடலுக்குள் இருக்கும் உணர்வுகள்
1.அந்த விஷத்தை ஒடுக்கி… விஷத்தை ஏற்று… தனக்குள் அதையே உணவாக எடுத்துக் கொள்ளும் நிலையும்
2.அதன் அறிவாக இந்த உணர்வின் தன்மை அவனுக்குள் ஒளியாக மாற்றிடும் திறனும் பெறுகின்றான் அகஸ்தியன்.
3.அவனுக்குள் ஒளியான அணுக்களாக விளைந்து கொண்டே வருகிறது.

பிரபஞ்சத்தின் சக்தி துருவத்தின் வழியில் பூமிக்குள் வந்து தாவரங்களாக எப்படி உருவாகின்றது…? என்று… அந்தத் துருவத்தைக் கூர்மையாக உற்று நோக்கி அதனின் உண்மையின் உணர்வை அறிந்து கொண்டவன் அகஸ்தியன்.

இப்படி அறிந்து கொண்ட பின்… அதன் வழி வரும் நஞ்சினை முறித்திடும் உணர்வும்… தனக்குள் ஒளிக்கதிர்களாக மாற்றிடும் தன்மையும் அவனுக்குள் வருகின்றது.

அவனின்று விளைந்த உணர்வுகள் வெளிப்பட்டதைச் சூரியனுடைய காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாகப் பரப்பி வைத்துள்ளது.
1.அதனை யாம் நுகர்ந்து உங்களுக்கு இப்போது வெளிப்படுத்த முடிகின்றது.
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டிய உணர்வுகள் (அவர் கற்றுணர்ந்த உணர்வுகள்) அவர் அதை வெளியிடும் பொழுது
3.அவரின் துணை கொண்டு அவர் ஊட்டிய உணர்வு கொண்டு அதை நுகர்ந்து… அதனின் உணர்வின் செயலாக்கங்களை அறிய முடிகின்றது.
4.அதுவே எனக்குள் அணுக்களாக விளைகின்றது.

நீங்கள் அதை இப்போது நுகரப்படும் பொழுது… நுகர்ந்த உணர்வுகளை உங்கள் உயிர் அணுவாக மாற்றும். அந்த உணர்வின் சக்தியை “உணவாக” ஏற்றுக் கொள்ளும் நிலை வரும் பொழுது
1.அந்த உணர்வுக்கொப்பச் சிந்தித்து செயல்படும் திறனும்
2.தீமைகளை அகற்றிடும் ஆற்றலும் நீங்கள் பெறுவீர்கள்.

அதற்கே அடிக்கடி உங்களுக்குள் இதைப் பதிவு செய்வது

நீங்கள் வளர நான் வளர முடிகின்றது. நீங்கள் வளர வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த உண்மையின் உணர்வை நுகரப்படும் பொழுது எனக்குள்ளும் அது விளைகின்றது.

உணர்வின் ஒளி அலைகள் வெளிப்படும் பொழுது சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. நீங்கள் நுகர்ந்தறியும் பொழுது உங்கள் உயிர் அதை அணுவாக மாற்றுகின்றது.
1.அணுக்களாக ஆன பின் தன் இரைக்காக உணர்ச்சிகளை உந்துகின்றது.
2.அதை நுகரும் பருவம் வரும் பொழுது “அந்த ஞானத்தின் தன்மை இயக்கும் சக்தியைப் பெறுகின்றீர்கள்…”

இதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நம்முடைய கடைசி எல்லை

நம்முடைய கடைசி எல்லை

 

மீண்டும் மீண்டும் யாம் உங்களுக்கு ஞாபகப்படுத்துவது…
1.ஞானிகளால் உணர்த்தப்பட்ட பேருண்மைகளை…
2.அவர்கள் வழியிலேயே அதை அறிந்து… நாம் எவ்வாறு வாழ வேண்டும்…?
3.இந்த வாழ்க்கையில் எவ்வாறு தெளிவுடன் செயல்பட வேண்டும்…?
4.இந்தப் பிறவிக்குப் பின் அடுத்து நாம் எந்த உடலைப் பெற வேண்டும் என்பதனைத் தான்…!

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன்… சந்தர்ப்பத்தால் அவனுக்குள் விளைந்த நஞ்சினை வென்றிடும் ஆற்றலைத் தனக்குள் பெற்றான்.

அந்த உணர்வின் துணை கொண்டு “வான இயலின்” ஆற்றலைத் தனக்குள் கண்டுணர்ந்து… அது “புவி இயலாக” மாறும் பொழுது தாவர இனங்களாக உருவாகுவதையும்… அந்தத் தாவர இனங்களின் சத்தினை உயிரணுக்கள் (உயிர்கள்) நுகர்ந்து தனக்குள் அணுக்களாக மாற்றி உடல்களாக உருவாகுவதையும்… “உயிரியலாக” மாறுவதையும் அறிந்துணர்ந்தான்.

அதே சமயத்தில்
1.உயிரணு தோன்றி பல கோடிச் சரீரங்கள் பெற்ற பின்
2.அதனுடைய கடைசி முடிவு… அதனுடைய கடைசி எல்லை எது…? என்பதனையும் அகஸ்தியன் அறிந்து கொண்டான்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி பேரருள் பேரொளியாக துருவ நட்சத்திரமாகி… துருவத்தை எல்லையாக வைத்து இன்றும் தனது வாழ்க்கையை வழி நடத்திக் கொண்டு… அகண்ட அண்டத்திலிருந்து வருவது அனைத்தையும் ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளான் துருவ மகரிஷி… துருவ நட்சத்திரமாக…!

அதாவது உயிரணு தோன்றி பரிணாம வளர்ச்சியில் மனிதனான பின் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி… அதையே கடைசி எல்லையாகப் பிறவி இல்லா நிலைகள் கொண்டு வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான் துருவ மகரிஷி.

அவனின்று விளைந்த உணர்வுகளை… அவனுக்குப் பின் வந்த மக்கள் யார் யாரெல்லாம் அதை நுகர்ந்து கொண்டனரோ… ஆறாவது அறிவை ஏழாவது நிலை ஒளியாக மாற்றும் திறன் கொண்டு… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றனர்.

ஆதியில் விண் சென்ற முதல் மனிதனான அகஸ்தியன்
1.அவன் வாழ்ந்த காலத்தில் தன் வாழ்க்கையை எவ்வாறு வழி நடத்தினானோ அவன் வழிப்படி நாமும் சென்றால்
2.மனிதனின் கடைசி எல்லையான சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து பிறவி இல்லா நிலை அடையலாம்
3.இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள சூரியனே அழிந்தாலும் அகண்ட அண்டத்தில் என்றும் நிலை கொண்டு வாழலாம்.

உயிரணு தோன்றி மனிதனான பின் உணர்வினை ஒளியாக மாற்றி அமைத்து உயிருடன் ஒன்றி வாழும் துருவ மகரிஷியின் உணர்வுகளை நுகர்ந்து… நாம் அனைவரும் அதனின் ஈர்ப்பு வட்டதில் சப்தரிஷி மண்டலங்களாக வாழ முடியும்.