
தீமையை நீக்கும் அரும் பெரும் சக்திகளை நமக்குள் உருவாக்கும் நேரமே பிரம்ம முகூர்த்தம்
ரத்தத்தை உறிஞ்சும் சில கொடிகள் காட்டுக்குள் இருக்கின்றது. அந்தக் கொடியின் அருகில் ரத்தம் உள்ள உயிரினங்கள் வந்தால் அழுங்காமல் அதை எடுத்துக் கொள்ளும். ரத்தத்தை உறிஞ்சிய பின் “சொத்…” என்று கீழே விழுந்து இறந்து விடும்.
அந்த மாதிரிக் கொடிகள் வளர்ந்திருக்கும் இடத்திற்குக் குருநாதர் எம்மை அழைத்துச் சென்றார். அந்தக் கொடி நம் மீது பட்டால் சுரீர் என்று மின்சாரம் தாக்கியது போல் இருக்கும். உடலிலிருக்கும் ரத்தத்தை உறியும். மயக்கம் வந்துவிடும்.
1.ஆனால் குருநாதர் எம்மிடம் ஒரு கத்தியைக் கொடுத்திருந்தார்.
2.முதலில் எனக்கு அந்தக் கொடியே தெரியவில்லை.
3.என்னைத் தொட்டவுடன் தான் தெரிந்தது… உடனே அதை வெட்டினேன்.
இப்படி எல்லாம் காட்டிற்குள் பல நிலைகளைத் தெரிந்து கொண்ட பின்பு தான் உங்களிடம் எல்லாவற்றையும் சொல்லி வருகின்றேன். என்னை இப்படித்தான் பல வகைகளிலும் பழக்கினார்.
எம்மிடம் வருபவர்கள்… எம்மைச் சந்தித்த உடனே தலைவலி போக வேண்டும் என்ற எண்ணத்தில் வருகிறார்கள். தலைவலி போய் விடுகின்றது.
தலை வலி போனாலும் எதனால் வந்தது…? என்று அறிந்து அந்தத் தப்பை மட்டும் திருத்த மாட்டார்கள்.
1.ஏனென்றால் அறியாமல் தவறு செய்யும் நிலைகளை நீக்குவதற்குத் தான் தியானம் செய்யுங்கள்
2.எது உங்களை இயக்குகிறது…? தவறு செய்ய வைக்கிறது என்பதைத் தெரியச் செய்கிறோம்.
3.தீமைகளை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துக் கொண்டால் நீங்களே மாற்றி அமைக்க முடியும் என்றும் சொல்கிறோம்.
அதன்படி நன்றாகிறது…!
ஆனால் இதை வீட்டில் உள்ளவர்கள் கேட்க மாட்டேன் என்கிறார்கள் என்று என்னிடம் வந்து சொல்வார்கள்… திட்டுவார்கள்.
1.இது எல்லாம் எதைக் குறிக்கின்றது…?
2.நம்மை அறியாமல் நாம் எடுத்துக் கொண்ட அந்தக் குறை உணர்வுகள் தான் மீண்டும் இயக்குகின்றது.
அதனால் உருவாகும் நோயை நீக்க மருத்துவர்களிடம் சென்று மருந்தை உட்கொண்டாலும் அந்த மருந்தின் விஷத்தன்மைகள் ரத்தத்தில் கலந்து வீரியத் தன்மை காட்டப்படும் பொழுது… இதைச் சுத்தப்படுத்தும் கிட்னி பெயிலியர் ஆகி விடுகிறது.
அடுத்து… உப்புச் சத்து வந்து விட்டது சர்க்கரைச் சத்து வந்து விட்டது என்று சொல்வார்கள். சர்க்கரையைப் பிரிக்கும் நிலை இழந்து அந்த உணர்வின் இயக்கமாகி விட்டால் ரத்தத்தில் சர்க்கரை கலந்து விடுகின்றது… நீரிலும் பிரிகின்றது.
அவர்கள் சிறுநீர் கழித்தால் ஈயோ எறும்போ மொய்க்கத் தொடங்கும், அதைச் சீர்படுத்தும் உறுப்புகள் பலவீனம் அடைகின்றது. வேதனை அதிகமாகி பித்த சுரப்பிகள் அதிகமாகி விட்டால்… அந்த நஞ்சு அதிகமாக ரத்தத்தில் கலந்து விடுகிறது. அதனால் தலைசுற்றல் வரும்.
1.அந்தத் தலை சுற்றலுக்கு என்று மீண்டும் மருந்துகளை உட்கொள்ளும் பொழுது உடலில் விஷத்தன்மை தான் அதிகமாகின்றது.
2.தலை சுற்றல் குறையவில்லை என்பார்கள்.
3.ஏனென்றால் மீண்டும் விஷ அணுக்களாக உடலுக்குள் மாறும்.
4.அந்த நிலையில் அரிப்பு வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் அதிகமாகும். சிந்திக்கும் தன்மை இழக்கப்படும்.
காரணம்… இது எல்லாமே நாம் நுகரக்கூடிய உணர்வுகளினால் வரும் விளைவுகள் தான். இதை மாற்ற வேண்டும் அல்லவா.
இதைப் போன்ற உணர்வுகளை எல்லாம் வென்றது துருவ நட்சத்திரம். அதிலிருந்து வெளிப்படும் அலைகள் மிகவும் சக்தி வாய்ந்தது.
1.துருவ நட்சத்திரம் பூமியின் அச்சுக்கு நேராக இருப்பதால்
2.மற்றது வருவதற்கு முன்பாக அதிகாலையில் நம் பூமி துருவத்தின் வழி அதைக் கவர்கின்றது… நமக்கு முன் பரவச் செய்கின்றது.
3.அந்த நேரத்தில் அதைப் பெற வேண்டும் என்று எண்ணினால் பிரம்ம முகூர்த்தம்
4.அதாவது நமக்குள் புதிதாக அந்த உயர்ந்த சக்தியை உருவாக்க முடியும் என்று ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.
பிரம்மம் என்றால் மனிதனின் ஆறாவது அறிவு கொண்டு தீமையை நீக்கும் அரும்பெரும் சக்தியை நமக்குள் பிரம்மாக்குகிறோம் என்று இப்படி அதை மறைமுகமாகச் சொல்கிறார்கள்.
ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி எடுத்து வாழ்க்கையில் வரும் தீமைகளை உங்களால் நீக்க முடியும். அதிகாலையில் ஒரு பத்து நிமிடமாவது அந்த உயர்ந்த சக்தியை எடுத்து உடலுக்குள் சேர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
1.எல்லா ஆலயங்களிலும் அந்த அதிகாலையில் வணங்கும் முறைகளை ஞானிகள் கொடுத்தது இந்த அடிப்படையில் தான்.
2.நல்ல குணங்களை வளர்ப்பதற்கும் தெய்வீகப் பண்புகளை நாம் வளர்ப்பதற்கும் ஞானிகள் அன்றே காட்டியுள்ளார்கள்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.