சந்தர்ப்பத்தால் நுகரும் வேதனையை நாம் நீக்கவில்லை என்றால் அதனால் ஏற்படும் விளைவுகள்

சந்தர்ப்பத்தால் நுகரும் வேதனையை நாம் நீக்கவில்லை என்றால் அதனால் ஏற்படும் விளைவுகள்

 

இந்த வாழ்க்கையில் செல்வச் செழிப்புடன் வாழ வேண்டும் என்று தான் நாம் எல்லோருமே ஆசைப்படுகின்றோம். அதில் தோல்வி அடைந்தால் வேதனைப்படுகின்றோம்.

கடை வைத்துத் தொழில் செய்யலாம் என்று நடத்துகின்றோம். ஆனால் வியாபாரம் குறைவாகிச் சந்தர்ப்பத்தில் நஷ்டம் வந்து விட்டால் லாபத்தைக் குறிக்கோளாக வைத்த நமக்கு வேதனை என்ற உணர்வு கூடவே வருகின்றது.

வேதனையை நுகர்ந்து விட்டால் சிந்தித்துச் செயல்படும் தன்மை இழக்கப்பட்டு இதை எப்படிச் சரிக்கட்டுவது…? என்ற நிலை தடுமாறச் செய்கின்றது.

அப்போது ஒரு கனமான பொருளைத் தூக்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
1.அந்த நேரத்தில் பலவீனமான எண்ணங்களாக இருக்கும் பொழுது
2.வலுக் கொண்டு முட்டுக் கொடுத்துத் தூக்க வேண்டியதைத் தூக்க முடியாத நிலை வரும் பொழுது
3.நம் மீதே அந்தப் பொருள் விழுந்து நசுக்கி விடும்.

அந்த நேரத்தில் வலுவிழந்து அதனுடைய நிலைக்குக் கீழ் நாம் போய்விடுவோம்.

இதைப் போன்று தான் இயற்கையின் தன்மைகளில் வேதனையான உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது “நல்ல வலுவின் தன்மை இழக்கப்பட்டு நம் செயலும் குன்றி விடுகின்றது…”

அப்படித் தூக்கும் நேரத்தில் வலுவிழக்கப்பட்டால் அந்தப் பொருள் கீழே விழுந்தால் சிதைந்து விடுகின்றது. இன்னும் அதிகமான கஷ்டங்களை ஏற்படுத்துகின்றது.

இது எதனால் வருகிறது…? சந்தர்ப்பத்தால் இந்த நிலை வருகின்றது.
1.வலு இழந்திருக்கின்றோம்… அதிலிருந்து சிறிது விலகி நிற்போம்.
2.வலு உள்ளவர்களைத் தூக்கச் சொல்லலாம் என்று ஆள்களை அனுப்புகின்றோமா என்றால் இல்லை.

அதை நாம் தூக்கி விடுவோம் என்ற ஆர்வ துடிப்புடன் செய்கின்றோம். அடுத்தவர்களை உதவிக்குக் கூப்பிடுவதில்லை. அப்படித் தூக்கப்படும் பொழுது…
1.”சிந்தனை இல்லாதபடி” அடுத்தவர்களை எதற்குக் கூப்பிட வேண்டும்…?
2.நாமே ஏன் தூக்கக் கூடாது…? என்ற இந்தக் கௌரவப் பிரச்னை வந்து விடுகின்றது.
3.ஆக அப்போது அந்தப் பொருளை நாசமாக்கும் நிலை வருகின்றது… நமது உயர்ந்த பலனும் குறையத் தொடங்குகிறது.

அடுத்து நம்முடைய எண்ணங்கள் மிகவும் பலவீனம் அடைகின்றது.

இப்படி நாம் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் உயிரிலே பட்டு உணர்ச்சிகள் ரத்தத்தில் கலக்கப்படும் பொழுது நாம் எந்தத் தொழிலை வலுவாகச் செய்வோம்…?

சந்தர்ப்பங்கள் இவ்வாறு நம்மைப் பலவீனப்படுத்துகின்றது. அதை மாற்றுவதற்கு என்ன வைத்திருக்கிறோம்…?

ஒரு நோயாளியைப் பற்றிப் பரிவுடன் கேட்டறிகிறோம். அந்த உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகின்றது. நோயினால் உண்டான வேதனை மிகவும் வலுக் கொண்டது. அது நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றி விடுகின்றது.

அடிக்கடி அந்த வேதனையான உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது இந்த வித்தின் தன்மை அதற்குண்டான உணர்வினைக் கலக்கச் செய்து இந்த உணர்வுக்கொப்ப நம் உடலில் (ஒரு செடி வளர்வது போல) இந்த உணர்ச்சிகள் உடல்களில் அது பரவுகின்றது.
1.அப்படிப் பரவும் பொழுது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களையும் மாற்றும் தன்மை வருகின்றது.
2.காரணம்… அந்த வேதனை தன் இனமான வித்தாக உடலுக்குள் மாற்றுகின்றது.

உதாரணமாக… வயலில் நல்ல பயிர்களை நடுகிறோம். அதிலே களைகள் முளைக்கப்படும் பொழுது நல்ல பயிர்களுக்குச் செல்லும் சத்தினை இது கவர்ந்து தாவர இனங்கள் விஷத்தன்மையாக மாற்றி நல்ல பயிரினங்களை வாழ விடாது அதனுடைய பலனைக் குறைத்து விடுகின்றது.

இதைப் போலத் தான் வேதனை என்ற உணர்வு ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகி விட்டால் வினைக்கு நாயகனாக அதன் உணர்ச்சியின் வேகங்கள் கூடி நம் ரத்தங்களிலே கலக்கச் செய்து… ரத்த ஓட்டம் எங்கே செல்கின்றதோ மற்ற நல்ல அணுக்கள் அதை ஏற்க மறுக்கப்படும் பொழுது போர் முறை வருகின்றது.

அப்படிப் போர் முறை வரப்படும் பொழுது ரத்தம் எங்கெங்கே செல்கின்றதோ
1.நல்ல அணுக்களின் பக்கம் சென்ற பின் அது ஏற்க மறுக்கும் பொழுது பளீர்… பளீர்,,, என்று உடலுக்குள் ஒரு பக்கத்தில் மின்னல் ஆகும்.
2.அந்த மின்னலாகும் பொழுது கடினமான சாமானைத் தூக்கினால் உடலில் இடுப்பு பிடித்துக் கொள்ளும்.
3.கையில் தூக்கப்படும் பொழுது முடியாத நிலை ஆனால் கையிலே சுளுக்குப் பிடித்துக் கொள்ளும்.
4.அல்லது வலுவான நிலையில் தூக்கப்படும் பொழுது நரம்பு மண்டலங்கள் பிசகி விடுகின்றது.

இப்படி எத்தனையோ தொல்லைகள் வருகிறது. ஆனால் தவறு செய்யவில்லை.

ஆக நாம் நுகரும் உணர்வுகள் உணர்ச்சிகள் நம்மை என்னவெல்லாம் செய்கின்றது என்று அறிந்து நாம் அதைத் திருத்தி அமைக்க வேண்டும் அல்லவா…! இதிலிருந்து தப்ப வேண்டும் அல்லவா…?


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply