
தசரதன் இறந்தாலும்… கைகேயி மலர்ந்த முகத்துடன் இருப்பதாகக் காட்டியதன் உட்பொருள்
இன்றைய உலக சூழ்நிலையில் நம்முடைய ஆசையின் நிமித்தம் எதன் வழி செல்கின்றமோ அதனால் வேதனை என்ற உணர்வுகளே வருகின்றது. அதாவது
1.பிறரைத் துன்புறுத்த வேண்டும் அழிக்க வேண்டும் அடக்க வேண்டும் என்று இந்த வாழ்க்கையில் விரும்பினால்
2.நமக்குள் வளர்ந்துள்ள நல்ல குணங்களைக் கொல்கிறோம் என்று தான் பொருள்.
அப்படிப்பட்ட உணர்வுகள் உடலில் விளைந்தால் என்ன ஆகும்…? என்பதைத் தான் இராமாயணம் தெளிவாகக் காட்டுகின்றது.
இராமனுக்குப் பட்டம் சூட்டாமல் அவனைக் காட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று நிலை வரும் பொழுது அதனால் தசரதன் இறந்து விடுகின்றான்.
பரதன் அங்கிருந்து வருகின்றான். அப்பொழுது நகரமே சூனியமாக இருக்கின்றது. யாரிடத்தில் கேட்டாலும் எல்லோருமே மௌனமாக இருக்கின்றார்கள். என்ன நடந்தது… ஏது ஆனது…? என்ற நிலையில் பரதன் உண்மையை அறிய முடியவில்லை.
இராமனின் தாயிடம் கேட்கின்றான். அதுவும் மௌனமாக இருக்கின்றது. கேட்கும் இடமெல்லாம் மௌனமாக இருக்கின்றது. கடைசியில் தன் தாயிடமே கேட்கின்றான்.
ஒன்றுமில்லையப்பா…! என்று சொல்கிறது.
1.அது மலர்ந்த முகத்துடன் இருக்கின்றது… அரசன் இறந்து விட்டான் என்ற நிலையே அங்கில்லை.
2.காரணம் ராமன் காட்டுக்குச் சென்று விட்டான் தன் மகனுக்குப் பட்டம் சூட்டும் நேரம் வந்து விட்டது வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றது.
தசரதன் தன் உடலுக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை… அதாவது எதிரியை வீழ்த்தச் சூட்சமமான நிலைகள் கொண்டு எப்படிச் செய்தானோ… அது கூனி என்ற நிலையில் இங்கே வருகிறது.
1.”குறுகும் நிலை” உடலுக்குள் வளர்கிறது என்று கூனி என்ற ஒரு பாத்திரத்தை அமைத்து
2.அது கைகேயியைத் தூண்டி தசரதரிடம் இப்படிக் கேளு…! என்று
3.எதிரியை வீழ்த்திய உணர்வுகள் தனக்குள் கலந்து எப்படிச் செய்கிறது…? என்பதைத் தான் கூனி என்ற பாத்திரத்தைக் கொடுத்து
4.தன் இனத்தைக் குறுக்கி இவளுடைய ஆசையைத்தான் தனக்குள் பெருக்குகின்றது என்று
5.உப பாத்திரங்களைப் போட்டு இவ்வளவு தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.
அதை நாம் கொஞ்சமாவது புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா…!
ஆனால் நாம் என்ன நினைக்கிறோம்…? அங்கே பார்…! கூனி என்னென்ன வேலை எல்லாம் செய்கிறாள்…? என்று அந்தக் கதாபாத்திரத்தை சுட்டிக் காட்டி அவள் எவ்வளவு தவறு செய்கின்றாள்…? என்று நாம் “கடுப்பாவோம்…”
ஏனென்றால் இந்த உணர்வைத் தெளிவாக்கிக் கொண்டு வரும் நிலையில் பரதன் சொல்கின்றான்.
1.”உன் தாயார்” (கூனி) என் பாட்டன் வீட்டையே இப்படித்தான் நாசமாக்கியது.
2.அதே போல என் தந்தையின் குடும்பத்தையும் நீ கெடுக்க வந்திருக்கின்றாய்…
3.இன்று உன்னைக் கொன்றால் தான் என்ன…? என்று இவன் ஆத்திரமான நிலைகள் வருகின்றது.
காரணம்… பரதன் கைகேயியின் மகனாக இருந்தாலும் பழகிய உணர்வு கொண்டபின் அவன் என்ன செய்கிறான்…? என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள். எந்த உணர்வை எடுத்ததோ… “அதிலே உருவானது தான்…” இந்த நிலை. அதிலே உருவாக்கப்படும் போது அதனின் இயல்பு என்று காட்டுகிறார்கள்.
அதாவது விஞ்ஞானத்தினால் விஷத் தன்மைகளை மாற்றி அதை நல்ல வித்துக்களாக இன்று மாற்றுகின்றார்கள். வீரிய உணர்வுகள் அது விஷத்தன்மை கொண்டாலும் நல்ல உணர்வின் தன்மையைச் சேர்த்து அந்த வீரியத்தின் தன்மை கொண்டு நல்ல வித்தாக உருவாக்குகின்றார்கள்.
அதே மாதிரி
1.சாந்தமான நிலைகள் கொண்டதை விஷமான கொடூரமான மிருகத்தின் உணவுக்குள் சேர்த்து
2.நல்ல உணர்வின் தன்மை கொண்ட உடல் அமைப்பாக மாற்றுகின்றார்கள்.
3.கொடூரமான மிருகங்களைச் சாந்தம் கொண்ட மிருகமாகவே மாற்றுகின்றான் இன்று விஞ்ஞானி
இதைப் போலத்தான் அந்த இராமாயணத்தின் காவியத்தின் தெளிவுகள்… அதாவது…
1.போரில் வெற்றி பெற வேண்டும் என்று தசரதன் உடலில் அணுவின் தன்மையாக அது விளைந்தாலும்
2.நல்ல அணுக்களின் தன்மை கலந்து பரதன் அதன் உணர்வு கொண்டு ஒன்று சேர்த்து வாழும் தன்மை பெற்றான் என்று பிரித்துக் காட்டுகிறார்கள்
ஆனால் வீழ்த்த வேண்டும் என்ற உணர்வின் தன்மை வரப்படும் பொழுது விஷத்தின் தன்மை கொண்டது.
1.பரதனின் தாயின் பாட்டி தான் அந்தக் குடும்பத்தினை நாசம் ஆக்கியது.
2.ஏனென்றால் இது பரம்பரை நோய் என்ற நிலையைக் கொண்டு வருகின்றார்கள்.
நாம் எதை எண்ணுகின்றோமோ இந்த உணர்வின் தன்மை நமக்குள் எப்படி இயங்குகின்றது…? என்பதைத்தான் இராமாயணம் கூறுகின்றது.
அந்தத் தாயின் நிலைகள் எப்படி…? என்கிற போது நாம் எதன் உணர்வை எடுத்தோமோ அது தாயாக வருகின்றது. இந்த உணர்வின் தன்மை தன் இனத்தைப் பெருக்கப்படும் பொழுது உடலுடன் இணைத்து வரப்படும் பொழுது தீமையாக எப்படி விளைவிக்கின்றது…?
ஆகவே நாம் எதை நீக்க வேண்டும்…? என்பதை இராமாயணம் சுட்டிக் காட்டுகிறது. இராமாயணம் என்றாலே – நம் எண்ணம் தான். நாம் நுகர்ந்த உணர்ச்சிகள் கொண்டு… அந்த உணர்ச்சிகள் எதுவோ அது நம்மை இயக்குகின்றது என்று காட்டுகிறது.
வேனையான உணர்வைச் சூரியன் எடுத்துக் கொண்டால் வாலி. ஆனால் மனிதனான நிலையில் இப்படிப்பட்ட இருளான நிலைகளை நீக்கியவன் அகஸ்தியன் உணர்வை ஒளியாக்கியவன் சுக்ரீவன்.
வேதனைப்படும் அல்லது வேதனைப்படுத்தும் உணர்வுகளை நுகர்ந்தால் நம்மைப் பலவீனப்படுத்தும்.
1.அதை மாற்றத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இணைத்தால்
2.வேதனை என்ற வலுவின் தன்மை குறைந்து அது நன்மை செய்யும் சக்தியாக மாறுகின்றது.
3.அது தான் சுக்ரீவன் – எல்லோருக்கும் நன்மை செய்பவன் என்று காவியங்கள் கூறுகின்றது.
வேதனையான உணர்வுகள் உயிரால் நுகரப்பட்டால் அதனை வென்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கலந்தால் இந்த வீரிய உணர்வு கலக்கப்பட்டு தீமை நீக்கும் உணர்ச்சிகள் நம் ரத்த நாளங்களில் கலக்கின்றது.
1.தீமை உருவாகாதபடி நாம் மாற்றியமைக்கும் சக்தி பெறுகின்றோம்.
2.அப்படிப்பட்ட சக்தி பெற வேண்டும் என்பது தான் காவியத்தின் உட்கருத்து.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.