குருதேவர் அனுபவபூர்வமாக எமக்கு உணர்த்திய உண்மைகள்

குருதேவர் அனுபவபூர்வமாக எமக்கு உணர்த்திய உண்மைகள்

 

நமது குருநாதர் சொன்னபடி மூன்று இலட்சம் பேரை யாம் சந்திக்க நேர்ந்தது, ஒவ்வொருத்தரையும் சந்திக்கும்போது
1.அவர்களுடைய கஷ்டங்கள் எவ்வாறு இருக்கின்றது…?
2.அவர்களுக்குத் துன்பங்கள் எப்படி நேருகின்றது…?
3.நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணும் போது அவரகளைத் துயரங்கள் எப்படி வந்தடைகின்றது…?
4.அதிலிருந்து அவர் மீள்வதற்கு வழி இல்லாதபடி எப்படி இருக்கின்றனர்…? என்று காட்டுகிறார்.

பக்தி என்ற நல்லொழுக்கத்தை மட்டும் கடைபிடித்து வாழ்ந்தாலும்… நல்லதை எண்ணுகின்றனர்… ஆனால் அந்த நல்லதைக் காக்கும் திறன் இழக்கும் நிலையில் இன்று ஒவ்வொரு மனிதனும் இருக்கின்றனர். நல்லதைக் காக்கும் வலுவான நிலைகள் ஒவ்வொரு மனிதனிடத்திலும் செயலிழந்து இருக்கின்றது.

நல்லதைப் பெற வேண்டுமென்று அரசர்கள் பக்தி ஒன்றை மட்டும் நமக்குக் காட்டிவிட்டு நல்லொழுக்கத்தைக் காக்கும் திறனை அவர்கள் விட்டு விட்டுச் சென்று விட்டார்கள். அதைப் பெற முடியாதபடி தடைப்படுத்திவிட்டார்கள்.

ஏனென்றால்
1.பக்தி என்ற நிலைகளில் மக்கள் நல்லொழுக்கத்தைக் கடைபிடித்தாலும்
2.மெய் ஒளி பெற்று உண்மைகளை அவர்கள் உணர்ந்தால் தனக்குக் கீழ் அடிபணியமாட்டார்கள் என்ற நிலையில்
3.அரசர்கள் தங்கள் சுகபோகங்களுக்காக உலக ரீதியிலேயே ஞானிகள் சொன்ன உண்மைகளை மாற்றினார்கள்.

ஞானிகள் கண்ட பேரண்டத்தின் பேராற்றல்கள் பூமிக்குள் வந்தாலும் சாதாரண மக்கள் நாம் பெற முடியாதபடி எப்படித் தடையானது…? அதிலிருந்து மீண்டு நமது உயிராத்மாவை எப்படி ஒளி நிலை பெறச் செய்ய வேண்டும்…? என்ற நிலையை நமது குருநாதர் அவருடைய உயிராத்மா உடலை விட்டு வெளியே செல்லப் போகும்போது முதல் நிலையாக எனக்குச் சொன்னார்.

அவர் உடலுடன் இருக்கும் போதே பிரணவத்தின் தத்துவத்தை முழுமையாக எம்மைப் பெறச் செய்தார். கன்னியாகுமரி முதல் இமயமலை வரை சென்று வரச் செய்து எனக்குப் பல அனுபவங்களைக் கொடுத்தார்.

நம் பூமி வட துருவத்திலிருந்தும் தென் துருவத்திலிருந்தும் ஆற்றல் மிக்க சக்திகளை எப்படிப் பெறுகின்றது…? என்பதை குருநாதர் உடலுடன் இருக்கப்படும் போது நேரடியாகவே எமக்கு உணர்த்தினார்.

1.அவர் எங்கே செல்கின்றாரோ அவருடன் எம்மை அணைத்துக் கொண்டு ஆங்காங்கு நிறுத்தி
2.இயற்கையின் செயலாக்கங்கள் எப்படி இருக்கிறது…? என்ற நிலையை
3.நாம் எப்படி T.V.க்களில் பார்க்கின்றோமோ அதைப் போன்று எமக்கு உணர்த்தினார்.

சுமார் 12 வருட காலம் பல காடு மேடு அலைந்தேன். உயிரினங்கள் எவ்வாறு செயல்படுகின்றது…? தாவரங்கள் அதனதன் தாவர இனச் சத்தை எப்படி இழுக்கின்றது…? தாவரங்கள் எப்படி வளர்கின்றது…? அந்த வளர்ச்சியின் தன்மை கொண்டு பூமியின் காற்றலைகள் எப்படி மாறுகின்றது…? என்று அவர் உணர்த்தியதை எல்லாம் நானும் உணர்ந்தேன்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் அதை உணர்வதற்கு நேரடி அனுபவத்தைக் கொடுத்தார். அவ்வாறு அனுபவத்தால் பெற்ற உண்மைகளை நீங்களும் பெற முடியும் என்ற நம்பிக்கையில் இதைச் சொல்கிறோம்.
1.எமக்குள் பெற்று வளர்த்த அந்த ஆற்றல் மிக்க சக்திகளை எல்லோரும் பெறுவதற்கே
2.இந்த உபதேசத்தின் மூலமாக உங்களுக்குள் அதைப் பதிவு செய்கின்றோம்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply