நமக்கு ஜாதகம் இல்லை

நமக்கு ஜாதகம் இல்லை

 

ஜாதகம் குறிப்போர்… நட்சத்திரத்தின் நிலைகள் வைத்துப் பூமியின் நிலையை அந்த இயக்கச் சக்தியை மனித உயிரணுவிற்குள் இணைக்கப்பட்டு எழுதி வைத்துள்ளார்கள்… “ஞானிகளுக்குப் பின் வந்தோர்…”

ஆனால் மனிதன் என்பவன் முழுமை பெற்றவன் – முழு முதல் கடவுள்… உருவாக்கும் திறன் பெற்றவன். இருந்தாலும் ஜாதகக் கணிப்புகளை வைத்து இன்று எதைச் சிருஷ்டித்துக் கொள்கின்றார்கள்…? என்று பார்ப்போம்.

ஒரு குழந்தை பிறக்கிறது என்றால் (அந்த நேரப்படி)
1.இன்ன நேரத்தில் இன்னென்ன நட்சத்திரங்கள் இன்னென்ன கோள்கள் வந்தது
2.ஆகவே இன்னென்ன கோள்கள் இன்னென்னதற்கு ஆகாது என்பார்கள்.

அதற்குண்டான சாஸ்திரங்களை எழுதி வைத்திருப்பார்கள். அதன் அடிப்படையில் வைத்து ஜாதகங்களை எழுதிக் கொடுப்பார்கள். எந்த மதமானாலும் ஜாதகம் எழுதாதவர்கள் யாரும் இல்லை.

விண்வெளியின் ஆற்றலை (வான இயல்) இயக்கத்தின் நிலைகளை அந்தந்த நாட்டிலே தோன்றிய தத்துவ ஞானிகள் மதத்துடன் இணைத்து இது கடவுளின் அவதாரம்… கடவுளின் செயல்… என்றும் இன்ன நட்சத்திரங்கள் இன்னது தான் ஆகும் என்றும் அவரவர்கள் உணர்வுக்கொப்ப அந்தந்த நாட்டிற்குத் தகுந்த மாதிரி மதங்கள் அமைத்து மதத்திற்குத்தக்க கடவுளை அமைத்துள்ளார்கள்.
1.அதன் அடிப்படை ஆச்சாரப்படி வழி நடத்தும் உணர்வின் தன்மை கொண்டு
2.ஜாதகக் குறிப்புகளை வைத்துக் கொண்டிருப்பார்கள்.

குழந்தை பிறந்து விட்டால் அவர்கள் வகுத்துக் கொடுத்த சட்டப்படி காலண்டரை பஞ்சாங்கத்தை அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் பார்க்கின்றோம்.

இன்ன நட்சத்திரத்தில் இந்த நிலையில் குழந்தை பிறந்து இருக்கின்றது. இதைக் குறிப்பாக எடுத்துக் கொடுத்தவுடன் அந்தச் சட்டத்தை அவன் வாசிப்பான்.

அவர்கள் எதை எதையெல்லாம் எழுதி வைத்திருக்கின்றார்களோ…
1.இது ஆகாது… இது இப்படி இருக்கின்றது… கஷ்ட காலம் இன்ன நேரத்தில் வரும்…
2.ஏழரை நாட்டான் சனி வருகின்றான் இப்பொழுது பிறந்து விட்டால் உங்கள் குடும்பத்திற்கு ஆகாது என்றும்.
3.அதனால் வியாபாரம் கெடும்… குழந்தை பிறந்த இந்த நேரத்திற்குக் குடும்பத்தில் வரிசையாக சிக்கல்கள் வரும் நோய்கள் வரும் என்று
4.வரிசையாகச் சொல்லிக் கொண்டே போவார்கள்.

அவர் சொல்வதை எல்லாம் “ஒரு கம்ப்யூட்டரில் பதிவு செய்து… எப்படித் திருப்பி இயக்குகின்றோமோ…” அதைப் போன்று நமக்குள் அவர் சொன்னதைப் பதிவு செய்து கொள்கின்றோம்.

பின் அந்தக் குழந்தையை நினைக்கும் பொழுதெல்லாம் எந்த வியாபாரத்திற்கு சென்றாலும் “ஏழரை நாட்டுச் சனி இருக்கின்றானே… ஆகையினால் எப்படி வியாபாரம் செய்வது…?” என்ற எண்ணங்களையே வளர்த்துக் கொண்டு வருவோம்.

இதை எல்லாம் யார் சிருஷ்டித்துக் கொடுத்தது…?

தன் மதத்தை வளர்த்துக் கொள்ள… அதன் கீழ் அரசன் வாழ்ந்திட… மக்களை ஒன்று சேர்க்க… அதன் கீழ் நல்லது கெட்டது என்ற நிலைகள் கொண்டு… அதற்கெல்லாம் தெய்வத்தைக் கொடுத்து… பிழைகள் ஏற்பட்டால் அந்த தெய்வத்திற்கு யாகத்தைச் செய்து விடு…! என்று ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமான முறைகளைப் பின்பற்றுகின்றனர்.

எல்லா மதங்களுமே இப்படித்தான்…!

“ஜாதகக் குறைகள்” ஏற்பட்டு விட்டால் மதத்தின் அடிப்படையில் காட்டிய நிலைகள் கொண்டு இதை நீக்கிட
1.ஆண்டவனுக்கு இதைச் செய்… அல்லது மற்றவர்களை வைத்து இதை ஓதச் செய்.
2.ஆண்டவனிடத்தில் இதற்காக வேண்டி யாகத்தைச் செய்து பரிகாரம் செய்… என்று சொல்வார்கள்.

இப்படி அவர்கள் குறித்து வைத்ததை மதத்துடன் இணைக்கப்பட்டு நமக்குள் பதிவு செய்யப்படும் போது “அது கடவுளாக…” நாம் எண்ணியதை உயிர் படைத்து விடுகிறது… நமக்குள் ஆழமாகப் பதிவாகி விடுகின்றது.

உணர்வைப் பதிவு செய்து கொண்ட பின் என்ன நடக்கும்…?
1.குடும்பத்தில் குழந்தை பிறந்ததிலிருந்து வியாபாரம் மந்தமாகும்
2.சகோதரர்களுக்குள் பகைமையாகும்… கொடுக்கல் வாங்கலிலே தடை ஏற்படும்.
3.”எதுவும் உருப்படியாகாது…” என்ற நினைவு எண்ணியவுடனே அலைகளாக மாறி விடுகின்றது.

வெளியிலே எங்கே சென்றாலும் இந்த ஜாதகக் குறிப்பை நினைவுபடுத்தி வைத்துக் கொள்வோம். எண்ணியவுடனே இந்த வாசனை வந்துவிடும்.

யாரிடமாவது வியாபாரம் பேசச் சென்றால் “இவர் என்ன சொல்வாரோ…?” இந்த சந்தேக உணர்வுடன் தான் போவோம். எப்படியும் ஜீவித்து வாழ வேண்டுமே என்று அவரிடம் பேசப்படும் பொழுது நாம் எதையாவது ஒன்று சொன்னால் “அவர் காதிலே கேட்ட பின்” இந்த உணர்வின் இயக்கமாகி அவர் நம்மைப் பார்க்கப்படும் பொழுது நாம் எத்தகைய சந்தேக உணர்வை எண்ணி எடுத்தோமோ அந்த உணர்வின் மணம் முன்னாடி நிற்கும்.

இதை நுகர்ந்த பின் அவருக்குள் என்ன நடக்கிறது…?
1.முதலில் நமக்கு எப்படிக் கலக்கமானதோ
2.அங்கேயும் கலக்கத்தை ஏற்படுத்தி அவருடைய உணர்வுக்குள் கலந்த பின் “பார்ப்போம்…!” என்ற நிலைகள் வந்துவிடும்.

இதற்கு முன்னாடி எல்லாம் சரியாகக் கொடுத்திருப்பார் ஆனால் இப்பொழுது ஏதாவது காரணத்தைச் சொல்லி அப்புறம் பார்ப்போம் என்பார். ஆனால் நாம் என்ன நினைப்போம்…?

1.ஜாதகத்தில் சொன்னது சரியாக இருக்கிறது
2.எல்லாம் அப்படியே நடக்கின்றதே என்று
3.நமக்குள் பதிவு செய்ததையே திரும்ப எண்ணி அதையே நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.

காரணம் நாம் எண்ணுவதைத் தான் உயிர் படைக்கின்றது… உணர்வின் செயலை மாற்றுகின்றது.

ஆனால் வியாபாரம் மந்தமாகும் பொழுது வேதனைப்படுகின்றோம் எதிர்காலத்தில் அடுத்து என்ன செய்வது…? என்று சோர்வடைகின்றோம் இதையெல்லாம் கொடுத்தவுடனே அதையும் உயிர் படைத்து விடுகின்றது.

வியாபாரத்தை மந்தமாக்கி… அழகான உடலுக்குள் நோயாக்கி… சுருதியின் திறன் குறைந்து விடும் வீணை வாசிக்கப்படும் பொழுது அதில் இருக்கக்கூடிய நரம்பு கொஞ்சம் தளர்ந்து இருந்தால் கணீரென்று சப்தம் கொடுத்த நரம்பு டொய்ய்ய்ங்ங்… என்று சுருதி மாறிவிடும்.

இது போன்று நமது சொல்லின் தன்மையும் எடுத்துக் கொண்ட உணர்வின் அலைகள் நாதங்கள் சுருதிகள் மாறி… அந்த சுருதிகள் மாறி வெளிப்படும் பொழுது கேட்டு நுகர்வோர் உணர்வுகளிலும் அது இயக்கி… நம்மைத் தாழ்த்திக் கொண்டே தான் இருக்கும்.

இப்படித்தான் ஜாதகக் குறிப்புப் பிரகாரம் சிருஷ்டித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் மனிதன் முழு முதல் கடவுள் என்கிற போது நாம் எதைச் சிருஷ்டிக்க வேண்டும்…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஆக… நம்மை அறியாமலே வேதனையும் துன்பத்தையும் வாழ்க்கையில் நமக்கு நாமே தடை விதித்துக் கொண்டு செல்கின்றோம். இதிலே மதம் இனம் குலம் என்று பிரிக்கப்பட்டு இது என் குலத்திற்கு ஆகாது அல்லது அவர்கள் குலத்திற்கு ஆகாது என்போம்

சம்பந்தங்கள் செய்யும் பொழுது இந்தக் குடும்பத்தாருடன் சம்பந்தம் செய்தால் தான் குலத்துக்கு ஆகும். வேறு குடும்பத்தில் கல்யாணம் செய்தால் என்றெல்லாம்
1.எத்தனையோ வகைகளில் பேதங்களை உருவாக்கி
2.பகைமைகளையே வளர்த்துக் கொண்டு அழித்திடும் உணர்வுகளாகத் தான் வளர்ந்து கொண்டிருக்கின்றது.

யாரும் தவறாக எண்ண வேண்டாம்…!

கம்ப்யூட்டரில் பதிவு செய்வது போன்று நம் உடலுக்குள் எது பதிவாகின்றதோ நாம் எண்ணியது மீண்டும் அதை நினைவுபடுத்தப்படும் பொழுது அது தான் நம்மை இயக்கிக் கொண்டுள்ளது.

மனிதன் முழு முதல் கடவுள்… அவனுக்கு ஜாதகம் இல்லை…!

ஞானிகள் காட்டிய வழியில் நாம் உருவாக்க வேண்டியது

ஞானிகள் காட்டிய வழியில் நாம் உருவாக்க வேண்டியது

 

கண்ணன் துகிலை உறிந்தான்… யார்…? கிருஷ்ணன்…! குளிக்கும் பெண்களின் சேலைகளை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு வேடிக்கை பார்த்தான் என்று காவியங்கள் சொல்கின்றது.

அதனின் உட்பொருள் என்ன…?

1.நம் கண்கள் ஒன்றை உற்றுப் பார்க்கின்றது… அந்த உணர்வைப் பதிவாக்குகின்றது
2.கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ அந்த எண்ணத்தின் அலைகள் வரப்படும் பொழுது
3.தனக்குள் அந்த உணர்வுடன் மோதும் பொழுது (அங்கே என்ன நடக்கிறது என்பதை) அவர் திருட்டுத்தனம் செய்கின்றார்…? என்று
4.அதற்குள் அவர் உணர்வின் தன்மையை இழுக்கின்றது… அதாவது துகிலை உறிகின்றான்.
5.இந்த உணர்வின் தன்மை கொண்டு உள்ளே மறைத்த நிலைகள் செயல்படுவதை
6.உள் நின்று அந்த உணர்வை இழுத்துத் தனக்குள் அறிகின்றது – நம் கண்கள்.

இதைக் காட்டுவதற்குத் தான் உருவமாகக் காட்டி “கண்ணன் துகிலை உறிந்தான்…” என்று கருத்தினைப் பதிவு செய்கின்றார்கள்.

கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான் என்றும் சொல்வார்கள். அதாவது ஒவ்வொரு உணர்வின் தன்மையையும் (அதற்குள் இருக்கும் வலிமையை) “தீமையை நீக்கும்” உள் இருக்கும் உணர்வை அறிகின்றது.

உதாரணமாக ஜாதகம் ஜோதிடம் பார்ப்பவரிடம் சென்று நல்லது கெட்டது பார்க்கப் போனால் தெரியும்… ஏனென்றால் அவர்கள் கண்களைத் தான் உற்றுப் பார்ப்பார்கள்.

நீங்கள் அவரைப் பார்க்காதபடி தலையை மட்டும் கொஞ்சம் குனிந்து கொண்டே இருந்தால் போதும். அவரால் ஒன்றும் சொல்ல முடியாது… பேச முடியாது.

அவர்கள் அதே எண்ணத்தில் (பழக்கத்தில்) இருக்கும் பொழுது
1.நம் கண்களை நேர் கொண்டு பார்த்த பின் உணர்வின் தன்மை மோதும் போது
2.இப்படி இருந்தது அல்லவா…! என்று நடந்ததைச் சொல்வான்.
3.அறியாமலே நாம் தலையாட்டத் தொடங்குவோம்
4.அதை பிடித்துக் கணக்கு போட்டுக் கொண்டே சொல்வான்.

அதற்குத் தகுந்த மாதிரி அவன் சொல்லச் சொல்ல… நாம் ஆமாம்… ஆமாம்… ஆமாம்…! என்று சொல்லிக் கொண்டே வருவோம் வரிசையில் அவன் சொல்லிக் கொண்டு போவான்.

ஜாதகம் ஜோதிடம் சொல்பவர் எல்லாம் இப்படித்தான் அவர்கள் வெளிப்படுத்துவார்கள் ஆனால் ஜோதிடமும் ஜாதகமும் மனிதனுக்கு இல்லை.

ஏனென்றால் அவன் தான் நமக்குள் அதைப் பதிவு செய்கின்றான். எப்படி…?

உங்கள் குழந்தை இந்த நேரத்திலே பிறந்திருக்கின்றது. இந்த நேரத்திலே இந்த நட்சத்திரத்திற்கு மிருகம் தான் பிறக்கும். ஆகையினால் அந்த குணத்தின் தன்மையாக உங்கள் குழந்தை இருப்பான்… அசுர செயல்களைச் செயல்படுத்துவான் என்று இவன் “கால்குலேஷன்” போடுவான்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

ஏழரை நாட்டுச் சனி பிடித்திருக்கின்றது… குடும்பத்திற்கு ஆகாது…! மிருகங்களை எப்படிக் கட்டுப்படுத்த முடியாதோ அது போல் குழந்தை அவன் உணர்ச்சிப்படியே செல்வான். அவன் பிறந்ததிலிருந்து “உங்கள் குடும்பத்திற்கு சனியன்” என்று வரிசையில் சொல்லிக் கொண்டு போவான்.

ஆனால் குழந்தை ஒன்றும் தவறு செய்யவில்லையே…!

குழந்தை பிறந்த ஜாதகத்தை… அந்தச் சட்டத்தை இவன் எழுதுகிறான். நீங்கள் நம்பிக்கையுடன் செல்லும் பொழுது இதை எடுத்து உருவாக்கி வைத்து விடுகின்றான்.

அடுத்து நாம் என்ன செய்கின்றோம்…?

இந்த உணர்வுடன் நாம் தொழில் செய்யும் இடங்களுக்குச் சென்றால் நம்மிடம் பொருளை வாங்கிச் சென்றவன் பணத்தைத் திரும்பக் கொடுப்பானா…! கொடுக்க மாட்டானா…? என்று எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்து விடுகின்றது.

இந்த உணர்வுகள் வந்த பின் சந்தேக உணர்வு அவனுக்குள் ஆனபின் அவன் கொடுக்கவே மாட்டான். இங்கே எண்ணிய எண்ணம் அங்கே செயலாகிறது.

1.ஆக… அந்த ஜாதகக் குறிப்புப் பிரகாரம் அவன் சொன்னது நமக்குள் பதிவாகி அது கடவுளாக இயங்க ஆரம்பித்து விடுகிறது.
2.அவன் தான் (ஜோதிடம் சொல்பவன்) சிருஷ்டிக்கின்றான்… எண்ணத்தால் நமக்குள் இப்படி உருவாகிவிடுகிறது.

ஆனால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குழந்தை பெற்று “அவன் இப்படித்தான் இருக்க வேண்டும்… நற்பண்புகள் நற்குணங்களுடன் வாழ வேண்டும்…” என்று கருவில் இருந்தே இப்படி வளர்த்துப் பாருங்கள்.

குடும்பத்தில் எவ்வளவு தரித்திரம் இருந்தாலும் அது நீங்கிவிடும். அத்தகைய சக்தி பெற்ற வல்லமை பெற்றவனாக அவன் மாறுவான். நீங்கள் இதைத்தான் உருவாக்க வேண்டும்.

ஆனால் இன்று வழக்கத்தில் நாம் எப்படி இருக்கின்றோம்…?

குடும்பத்தில் கர்ப்பம் என்று இருந்தாலும் கூட ஆயிரம் சண்டைகள் போடுவோம்.
1.இதெல்லாம் கர்ப்பிணிப் பெண்ணுக்குள் பதிவான பின் குழந்தை உருவாகிப் பிறந்த பின்
2.அவன் அதே குணத்துடன் எல்லோருடன் சண்டை இழுத்துக் கொண்டிருப்பான்.
3.ஊரில் இல்லாத வம்பை எல்லாம் இழுத்துக் கொண்டு வருவான்.

காரணம்… சண்டையிட்ட உணர்வுகள் தாய்க்கு ஊழ்வினையாகப் பதிவானது. கருவிலே விளையும் குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்து விடுகின்றது.

குழந்தை உருவாகும் பொழுதே மகரிஷிகள் சக்தி என் குழந்தை பெற வேண்டும். அந்த அருள் ஞானம் பெற வேண்டும்… உலக ஞானம் பெற வேண்டும்… தீமைகளை அகற்றிடும் அந்தச் சக்தி பெற வேண்டும்… நஞ்சை வென்றிடும் உணர்வுகள் பெற வேண்டும்… என்று தாயும் சரி குடும்பத்தில் உள்ள அனைவரும் சரி இப்படிச் சொல்லிப் பாருங்கள்.
1.ஞானிகளுடைய உணர்வுகளை எடுத்து
2.அருள் ஞானக் குழந்தைகளை வளர்த்துப் பாருங்கள்

அக்கால அரசர்கள் வல்லமை பெற்ற குழந்தைகளை இப்படித் தான் உருவாக்கினார்கள்… ஆனால் மக்கள் யாரும் செய்யவில்லை.

அரச குடும்பத்தில் கர்ப்பம் ஆகிவிட்டார்கள் என்று தெரிந்தாலே கர்ப்பிணித் தாய்க்கு பலவிதமான விஷங்களையும் பலவிதமான போதனைகளையும் கொடுத்து… அந்தக் கருவிலேயே விஷமான உணர்வுகளை ஏற்றி… எந்த விஷமும் பாதிக்காத அளவிற்குத் தன் நாட்டினுடைய பெருமைகளைச் சொல்லி சக்தி வாய்ந்த குழந்தைகளை அன்று உருவாக்கினார்கள்.

விஷத்தின் ஆற்றலால் தான் (எல்லாமே) வலிமை பெற்றது. அந்த உணர்வைக் கொடுத்துக் கொடுத்து அந்த விஷத்தை ஏற்றி வைத்துத் தாயினுடைய இரத்தத்தின் வழி குழந்தைக்கு அது போய்ச் சேரும்படி செய்தார்கள். மிருகத்துக்கு ஒத்த வலு அந்தக் குழந்தைக்கு வருகின்றது

அதே சமயத்தில் பல போதனைகளையும் சேர்த்துக் கொடுப்பார்கள்.

நாட்டினுடைய நன்மை பெருமைகள்… எதிரிகளைப் பற்றிய உண்மைகள்… எதிரிகளை எப்படி வீழ்த்த வேண்டும்…? இராஜதந்திரங்களை எப்படிச் செயல்படுத்த வேண்டும்…? என்று கதையைச் சொல்லிக் கொண்டே வருவார்கள்.

இந்த கர்ப்பிணி அதை கேட்டுக் கொண்டே இருக்கும். அரச குழந்தைகளை இப்படித்தான் அன்று உருவாக்கினார்கள். ஆனால் மக்களிடம் சொன்னால் யார் கேட்கின்றார்கள்…?

அன்று அரசர்கள் எப்படி உருவாக்கினார்களோ அது போன்று
1.அந்த ஞானிகள் காட்டிய வழியில் மெய் ஞானிகளை
2.உலகைக் காத்திடும் சக்திகளை நாம் உருவாக்க வேண்டும்… உருவாக்க முடியும்

தனுர் வேதம்

Mantra

தனுர் வேதம் 

 

வேதியர்களுக்குத் தான் இந்த சக்தி உண்டு அவர்களுக்குத் தான் இது தெரியும் என்பார்கள். காரணம் அவர்கள் எல்லாம் பிரம்மாவின் வம்சத்தில் வந்தவர்களாம்…! அவர்கள் பிரம்மத்தை உருவாக்கக் கூடியவர்கள் என்பார்கள்.

தனுர் வேதம் என்றால் எதையுமே அடக்கி ஆட்சிபுரியக் கூடிய நிலைகள். மனித உடலில் பல உணர்வுகளைப் பாய்ச்சி இயக்குவது. நல்லது கெட்டது எல்லாம் இருக்கின்றது என்று உடலுக்குள் பாய்ச்சுவார்கள்.

ரிக்கியர்கள் என்றால் அந்த உடலின் அமைப்பைத் தெரிந்து கொண்டவர்கள். அந்தக் காலத்தில் எல்லாம் மந்திரங்ளைச் சொல்லி இசைகளை வாசிப்பார்கள். காது கொடுத்துக் கேட்பார்கள்…!

1.இந்த உடலின் தன்மை கொண்டு எது எது வேண்டும்..? என்கின்ற வகையில்
2.அசுர குணங்கள் கொண்ட மிருகங்களைச் சமைத்து இந்த உணவை இங்கு கொடுப்பார்கள்
3.சோமபானம் என்ற நிலைகளில் மதுவைக் கொடுத்து மயக்கச் செய்வார்கள்.
4.மந்திரத்தைச் சொல்வார்கள்… இந்த மந்திரத்தை சொன்னவுடனே இசை வாத்தியங்களை இசைப்பார்கள்
5.ஒவ்வொரு நிலைகளுக்கும் அதைச் சொல்லி புஷ்பங்களையும் மற்றதையும் போடுவார்கள்.
6.அப்பொழுதெல்லாம் இந்த இசையை வாசித்து இந்த உணர்வின் தன்மை தனக்குள் அதைப் பதியச் செய்வார்கள்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்ட பிறகு மதுவை நிறையக் கொடுப்பார்கள். நீங்கள் யாரும் இந்தத் தப்பைச் செய்து விடாதீர்கள். சில இதுகளை தெரிந்து கொள்வதற்காகச் சொல்ல வேண்டியிருக்கின்றது,
1.மந்திரத்தைக் கற்றுக் கொள்கின்றேன் என்று
2.தப்பான வழிக்கு நீங்கள் சென்று விடாதீர்கள்…!

அந்த மாதிரி இசைகளை வாசித்துத் தர்ப்பைப் புல்லை வைத்து இதை உள்ளே வைத்து எல்லாம் முடிந்து கடைசியில் நினைவு இல்லாமல் போனவுடனே அவனைக் கட்டிச் சில மந்திரங்களைச் சொல்லித் தீயில் போட்டு எரிக்கின்றார்கள்.

முதலிலே அந்த மந்திரத்தைச் சொன்னார்கள் அல்லவா…! அதைத் திருப்பி சொன்னவுடனே இறந்த உடலிலிருந்து ஆவியாகப் போகும்போது அந்த உணர்வை எடுத்து கொள்வார்கள்.

அதற்கென்ற பக்குவ நிலை பெற்று “ஏவல்” என்ற நிலைக்குக் கொண்டு வருவார்கள். இப்படிச் செய்வதுதான் தனுர் வேதம் என்பது.

ஒரு மனிதனை வீழ்த்த வேண்டும் என்றால் இந்த உணர்வின் சொல்லாகச் சொன்னவுடனே உடலுக்குள் ஊடுருவிப் பாய்ந்து அவன் நல்ல குணங்களை வீழ்த்தி விடும்.

1.இது எல்லாம் இந்த தனுர் வேதத்தைச் சேர்ந்தது
2.தனுர் வேதம் என்றால் என்னவென்றே தெரியாமல் சில பேர் இருக்கின்றார்கள்
3.அது ஏதோ பெரிய வேதம் போல்…! என்று எண்ணுகின்றார்கள்.

ஆக அதர்வண வேதத்தின்படி ஒரு மனிதனை அடக்கி அவனை வீழ்த்தும் நிலைகள் இது. ஏனென்றால் வேதம் கற்றுக் கொண்டவனுக்கு இது தெரியாது.

இதுவெல்லாம் அதர்வண வேதத்தில் வரும். இப்பொழுது கோவிலில் நடக்கின்றது எல்லாம் அதர்வண வேதம் தான்.

நாம் நினைக்கின்றோம் கோவிலில் யாகத்தைச் செய்து பாவத்தைப் போக்கிவிடுவோம் என்று…! யாகம் செய்பவருக்கு மாலை துண்டு எல்லாம் போட்டு தேங்காய் பழம் எல்லாம் வைத்து புதுத் துணி எல்லாம் கொடுத்து விடுவார்கள்.

மந்திரங்களைச் சொல்வார்… அதைச் சொல்லும் பொழுது உற்றுக் கேட்டுக் கொண்டே இருப்போம். யாகத்தில் வாசனைப் பொருள் எல்லாம் போடுவார்கள். மந்திரத்தைக் காதில் கேட்டுகொண்டே இருப்போம். இதற்குப் பெயர் “வசியம்” என்று பொருள்.

1.சாமிக்குச் சக்தி ஏற்றுகின்றார்கள்… என்று நாம் நினைப்போம்.
2.ஆனால் நம்மை வசியப்படுத்துகின்றார்கள்…! என்று நமக்குத் தெரிவதில்லை.

நேற்றுவரை கல்லாக இருந்தது. இந்த உணர்வின் தன்மை பெற்றபிறகு சட்டங்களை வகுத்த பிறகு இந்தத் தெய்வத்திற்கு நீ இந்த மாதிரிச் செய்தாய் என்றால்
1.உனக்கு இன்னென்ன சக்திகள் கிடைக்கும்
2.உன் கஷ்டமெல்லாம் போய்விடும்..
3.உன் பாவம் எல்லாம் போய்விடும்…
4,அபிஷேகங்களைச் செய்… ஆராதனையைச் செய்…! என்பார்கள்.

இப்பொழுது தீயை உண்டாக்கி மனிதனை அதற்குள் போட்டால் அரஸ்ட் செய்துவிடுவார்கள். ஆனால் அன்று அரச காலங்களில் இதையெல்லாம் செய்வார்கள். நீங்கள் பார்க்கலாம்…. மகாலிங்கத்தில் கூட 12 வருடத்திற்கு ஒரு தடவை சிலதுகளைச் செய்கின்றார்கள்.

குழந்தைகளை ஊர்வலமாகத் தூக்கி வந்து அதைப் பலியிட்டு இதைப் போல் சக்தி ஏற்றுவார்கள்… மாடசாமி முனிசாமி என்ற காவல் தெய்வங்களுக்கெல்லாம். இதையெல்லாம் எடுத்துக் கொண்டோம் என்றால் பெயரை மாற்றிக் கொண்டு கண்டுபிடிக்க முடியாத நிலைகளில் இருக்கின்றார்கள்.

கோயில்களில் எந்த வாத்தியங்களை வாசிக்கின்றார்களோ அந்தந்த நேரத்தில் எதைச் செய்தார்களோ… எதை வாசித்தானோ… அந்த நிலைகளை இழுத்து
1.அந்த உணர்ச்சிகள் நம்மைத் தூண்டினால்
2.நாம் அருளாட ஆரம்பித்துவிடுவோம்.

காளி… மாரி… மாடசாமி… முனிசாமி.. என்று கொடூர தெய்வங்களுக்கு டும்…டும்ம்ம்…ம்ம்ம்…! என்று இசைகளை உண்டாக்கி மாமிசத்தை கொடுத்துப் படைப்பார்கள்.

ஆடை வெட்டும்போது டும்…டும்… என்றால் நம்மை அறியாமல் அருளாட ஆரம்பித்துவிடுவோம்.
1.அந்தக் காலத்தில் வெள்ளைக்காரர்களுக்கு ஒன்றுமே தெரியாது.
2.டும்…டும்ம்…டும்ம்ம்..! என்றவுடன் கிடுகிடுவென்று ஆட ஆரம்பித்து விடுவார்கள்
3.ஏனென்றால் இந்த இசை மனித உடலுக்குள் போனபின் அதே உணர்ச்சிகள் ஆனபின்
4.எதனால் உருவாக்கினானோ இதே உணர்வுகள் இங்கு ஆட்டிப் படைக்கின்றது.

ஏனென்றால் குருநாதர் இதையெல்லாம் கண்கூடாகப் பார்க்கச் செய்தார். நாம் இதிலே எல்லாம் சிக்கியிருக்கின்றோம்… நம் நிலையை மறந்து இருக்கின்றோம்…!

கோவிலில் அடுத்ததாக என்ன செய்வார்கள்…?

மேலே கலசத்தை வைக்கும் பொழுது பார்க்க வேண்டும். பறந்து போய் அந்தச் சக்தியைப் பெறப் போகின்றோம் என்று தன்னை அறியாமல் ஆணா பெண்ணா…! என்று கூடப் பார்க்காமல் மோதிக் கொண்டு தான் ஆசிர்வாதம் வாங்கச் செல்வோம்.

1.அதே மாதிரி கலசத்தை எடுத்துக் கொண்டு போகும்போது பார்க்க வேண்டுமே…!
2.அந்த ஆவேசத்தை வசியம் செய்து விடுவார்கள்
3.இதைத்தான் நாம் பெறுவதற்கு போகின்றோம்.

யாகத் தீயைத் தூக்கிக் கொண்டு போகின்றோம் என்று தலையில் இரண்டு பூவைப் போடுவார்கள். நிற்க வைத்துப் பூக்களை யாகத் தீயில் போடுவார்கள். இன்று சாங்கியமாக இப்படிச் செய்கின்றார்கள். இது சாங்கிய சாஸ்திரம்.

அப்புறம் என்ன செய்வார்கள்…?

முன்னால் அந்த பலி பீடம் இருக்கின்றது. வந்து நின்று நூலைக் கட்டிச் சாமிக்குச் சக்தி ஏற்றுகின்றார்கள். இதை கற்றுக் கொள்வதற்காக மடாதிபதிகள் இருக்கின்றார்கள் நிறையப் பேர்.

வேதங்களைக் கற்றுக் கொண்டு யாகம் எப்படி வளர்க்கின்றது… பாவங்கள் எப்படிச் செய்வது…? என்று இப்படியெல்லாம் சொல்லிக் கொடுக்கின்றார்கள்.

அரச காலங்களில் இப்படி எல்லாம் தவறுகள் செய்து யாரோ செய்வார்… எவரோ செய்வார்..! என்று நம்மைச் சூனியமாக்கி வைத்திருக்கின்றார்கள்.

நீ வேறு ஒன்றும் செய்யவேண்டியதில்லை…
1.யாகத்தைச் செய்தால் பாவங்கள் போய்விடும்
2.அர்ச்சனை செய்தால் பாவம் போய்விடும்
3.இதையெல்லாம் நீ செய் என்ற நிலையில்
4.உண்மையின் இயக்கத்தின் நிலையை நாம் எடுக்க முடியாமல் தடைப்படுத்திவிட்டார்கள்.
5..உண்மைகள் மறந்தே போய்விட்டது… மறந்துவிட்டோம் பொய்யைத் தெய்வம் என்று எண்ணிவிட்டோம்.

ஆனால் யாகங்கள் வேள்விகள் எல்லாம் செய்த பிற்பாடு பார்த்தால் கோவிலில் கூட்டம் நிறையப் போகும். அந்தப் பக்தியில் நாம் போவோம்.

தான் எண்ணியது நடக்கவில்லை என்றால் “என்னை இப்படிச் சோதிக்கின்றாயே…! என்று வேதனைப்பட்டுச் சொல்வார்கள். கஷ்டத்தைத் தாங்க முடியவில்லை… என்னை நீ உன்னிடம் கூட்டிக் கொண்டு போ…! என்றெல்லாம் சிலர் சொல்லுவார்கள்.

துன்பம் தாங்கமுடியாமல் இவ்வாறு சொல்வார்கள்.

செத்த பிற்பாடு என்ன இதே பக்தியில் போவார்கள். அந்த உணர்வின் வேகத்தில் இந்த ஆன்மா அங்கே போய்ச் சேர்ந்து பின் ஆட ஆரம்பித்துவிடும். ஆவியின் தன்மை தான் நமக்குள் வரும்.

1.இதைத்தான் நாம் இயக்கிக் கொண்டு இருக்கின்றோமே தவிர
2.மனிதனைத் தெய்வமாக்கும் ஆலயங்களை நாம் மதித்து நடக்க தெரியாத நிலையில் வைத்து விட்டார்கள்…!

பல வழிச் சாமியார்களின் செயல்கள்

Black magic horoscope

பல வழிச் சாமியார்களின் செயல்கள் 

 

பல சாமியார்கள்… பல வழிச் சாமியார்கள்…! இந்த உலகம் முழுவதுமே ஒவ்வொரு கொள்கையுடன் கடவுளின் அருளைப் பெற உள்ளார்கள் “சாமியார்கள்” என்ற பெயரில்.

அந்தச் சாமியார்களின் நிலை எல்லாம் ஆண்டவனை அடைவதற்கு.. ஆண்டவனை அடிபணிவதற்கு… ஆண்டவனைத் தான் அடிபணிந்து வணங்கிவிட்டால்… “தானே ஆண்டவன்…” என்ற எண்ணத்தில் வாழ்கிறார்கள்.

பல வழிகளில் அவர்களுக்குப் பொருளும் புகழும் வருகிறது. பல ஜெபங்களைச் சொல்கிறார்கள். பல வழிகளில் மக்களை அடிபணிய வைக்கிறார்கள் ஆண்டவனை வணங்க…!

அவர்கள் நிலை எல்லாம் என்னப்பா…?

இந்த உலகம் முழுவதுமே இந்த நிலை உள்ளதப்பா…! இந்தச் சாமியார்கள் நிலையில் அவர்கள் பூஜிக்கும் பொழுது
1.உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில்லை.
2.கடவுளை வணங்குவதையே மக்களின் மனதில் பெரும் கஷ்டத்தை உண்டு பண்ணுகிறார்கள்.

அவர்கள் நிலையில் இருப்பதெல்லாம் கரு வித்தை என்ற ஆவி தான்..! அவர்கள் நினைத்து ஜெபமிருக்கும் பொழுது அந்த ஆவி காட்சி தருகிறது.

அந்த ஆவியின் உருவத்திற்குப் பல பூஜைகளும் பல உணவுகளும் அளித்துவிட்டு இவர்கள் நினைத்த நினைவுகளுக்கு வரும்படி அந்த ஆவிகளை இவர்கள் வசப்படுத்தி இவர்கள் என்ன எண்ணுகின்றார்களோ… என்ன வேண்டுகிறார்களோ… அவைகளை எல்லாம் அந்த ஆவிகள் எடுத்துச் செப்பி விடுகின்றன.

அவற்றை வைத்துத்தான் இவர்கள் தன்னிடம் வருபவர்களுக்கெல்லாம் அவர்கள் நிலையை உணர்த்தி அவர்கள் ரூபமாகப் பொருள் சம்பாதித்து வருகிறார்கள்.

1.நடந்த நிலையைத்தான் இந்த ஆவிகளால் செப்பிட முடிந்திடும்.
2.நடக்க இருப்பவைகளை அறிந்திட முடிந்திடாது அந்த ஆவிகளின் நிலைக்கு.
3.எந்த ஜோசியனும்… எந்தச் சாமியாரும்… நடக்க இருப்பவைகளைச் செப்பிட முடிந்திடாதப்பா…!

நடந்தவைகளை முழுமையாகச் சொல்லிவிடுவார்கள். அது எல்லாம் கரு வித்தை வேலை தான்..! பல கோவில்களில் அருள் வருவதெல்லாம் இந்த ஆவிகளின் நிலை தான். அருள் அல்லப்பா.. மருள் அது.

1.ஆண்டவனின் அருள் வருபவன் தன்னையும் தன் நிலையையும் மறந்து ஆடிட மாட்டான்.
2.பெரும் அமைதியில் அமர்ந்திருப்பான்.
3.நடக்க இருப்பவைகளை நல்ல முறையில் நடத்திட அருளைத் தான் செப்பிடுவான்.

மருள் வந்தவன் வேலை எல்லாம் குட்டிச் சாத்தான் வேலையப்பா. இந்தக் குட்டிச் சாத்தான் வேலையில் தான் இந்த உலகமே உள்ளதப்பா…! நாட்டை ஆள்பவனே வைத்துள்ளான் குட்டிச்சாத்தானை…!

இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே உரைக்கின்றேன்.

ஜோதிடம் பார்ப்பவர்கள் இன்று சாதாரண மனிதரிலிருந்து பெரிய ஆள்கள் வரை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்…! நடந்த நிகழ்ச்சி

Image

Jaadhagam - nadi

ஜோதிடம் பார்ப்பவர்கள் இன்று சாதாரண மனிதரிலிருந்து பெரிய ஆள்கள் வரை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்..?  நடந்த நிகழ்ச்சி

 

இன்று உதாரணமாக ஜோசியம் ஜாதகம் என்ற நிலையில் நீங்கள் வேண்டி விரும்பிப் பார்க்கிறீர்கள். அதில் இருக்கும் உண்மைகளை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்

ஒரு சமயம் யாம் (ஞானகுரு) சுற்றுப் பயணம் வந்து கொண்டிருக்கும் போது நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். நம்மிடம் அவர் பழகியிருந்தார்.

அவரிடம் சினிமா தியேட்டர் ஒன்று உண்டு. அவர் குடும்பத்தில் அதாவது ஏறுசிங் இறங்குசிங் என்ற நிலையில் விவசாயம் செய்து கொண்டிருந்தால் பயிர் நன்றாக விளைச்சலாகி வரும். பின் சில சமயங்களில் அதில் ஒன்றுமே விளைந்திருக்காது.

சினிமா தியேட்டர் ரைஸ் மில் என்று எத்தனையோ வைத்திருந்தார். அவை அனைத்தும் ஓடும். ஆனால் காசு இருக்காது.  மூடியே கிடந்தது.

இப்படி அவர் முயற்சி எடுத்து எத்தனையோ செய்து பார்த்திருக்கிறார். முடியவில்லை.

அப்போது யாம் கொல்லூர் மூகாம்பிகையில் தியானம் இருந்தோம். மூகாம்பிகாவைக் கடந்து குடசாஸ்திரி என்று ஒன்று உண்டு. அங்கே மேலே தபோவனம் உண்டு.

அங்கே ஐந்து ஆறு வருடம் இருந்தேன்.

இங்கே அடிக்கடி வந்து சென்றாலும் அங்கே சென்று தியானத்தை மேற்கொள்வது. ஆதிசங்கரரின் இயக்கம் கோலமா மகரிஷி அவர் பெற்ற நிலையும் அந்த உணர்வின் தன்மை அறிவதற்காக இந்த தியானத்தை அங்கே மேற்கொண்டேன்.

கோலமாமகரிஷி அவர் பெற்ற உணர்வுகள் அதை அறிவதற்கு இந்தத் தவத்தை மேற்கொண்டது.

இந்த நண்பர் தன் தியேட்டர் ஓடாததையும் விளைச்சல் இல்லாததையும் பற்றி என்னிடம் வந்து விபரம் கேட்டார்.

அதர்கு நீங்கள் இந்த மாதிரிச் செய்யுங்கள் என்று நான் சொன்னேன்.

அதன் பின் அவர் வீடுகளில் புதைத்து வைத்திருந்த சில யந்திரங்கள் தகடுகள் எல்லாம் வெளி வந்திருக்கின்றது. வந்த பின் எனக்குத் தபால் எழுதியிருந்தார்.

எல்லாமே எடுத்துவிட்டோம். தன்னாலே எப்படி வந்தது என்று தெரியவில்லை.. எனக்கு அந்த உணர்வு தோன்றியது. அதை வைத்து எல்லாவற்றையும் எடுத்து விட்டேன் என்று கூறினார்.

மறுபடி தீபாவளி அன்று சினிமா தியேட்டரில் படம் ஓட்டப் போகின்றேன். அந்தச் சமயம் “சாமிகள்” நீங்கள் வர வேண்டும் என்று எனக்குத் தகவல் கொடுத்திருந்தார்.

மூகாம்பிகாவிலிருந்து பண்ணாரி வந்து அங்கே இருந்தேன்.

“என்ன நடக்கின்றது…!” என்று பார்த்துவிட்டுத் தீபாவளி அன்று மதியம் இரண்டு மணிக்கு நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன்.

இங்கே படம் ஓட்டுகிறார்கள். படம் ஓட்டினால் சத்தம் இல்லை. சத்தம் வந்தால் படம் தெரியவில்லை. டிக்கெட் எல்லோருக்கும் கொடுத்திருக்கின்றார்கள். ஆனால் படம் ஓட மாட்டேன் என்கிறது.

இருக்கிறவர்கள் பொறுமை இழந்து தியேட்டரே அல்லாடிக் கொண்டிருக்கின்றது. காசைக் கொடு என்று இந்த மாதிரி சூழ்நிலைகள் அங்கு வந்துவிட்டது.

அப்பொழுது நான் அங்கே வருகின்றேன்,

“சாமி வருவார்…! வந்தால் தியேட்டருக்குள் உள்ளே விட்டுவிடுங்கள்…” என்று அவர் ஏற்கனவே சொல்லி வைத்திருக்கின்றார்.

நான் தியேட்டருக்குள் போய் உட்கார்ந்தேன். உட்கார்ந்த உடனே படம் பாட்டுக்கு தாராளமாக ஓடுகிறது.

நன்றாக ஓடியவுடனே விழுந்தடித்து ஓடி வந்தார். யாராவது வந்தார்களா?

ஆமாம்…! சாமி உள்ளே உட்கார்ந்து இருக்கிறார்… என்று சொல்கிறார்கள்.

அப்புறம் உள்ளுக்குள் வந்தார். படம் முழுவதும் ஓடி முடியும் வரையில் கூடவே இருந்தார்.

இந்த நண்பர் ஏற்கனவே இந்த ஜோசியம் ஜாதகம் எல்லாம் பார்த்து அடிக்கடி பதிவு செய்து கொண்டவர்,

இவர் நட்சத்திரம் இவர் பெயர் இவர் பூர்வ புண்ணியம் இவர் எந்த எந்த வழி என்கிற வழியில் சொல்லால் அங்கே ஜாதகம் பார்க்கிறவரிடம் பதிவு செய்திருக்கிறார்.

தியேட்டர் வைத்திருக்கின்றார். ஆனால் இவருக்கு ஆகாதவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள்?

இவருக்கு ஆகாதவர்கள் அந்த ஜாதகம் பார்ப்பவரிடம் குறிப்பை எடுத்துக் கொண்டு இவருக்கு “எந்த வகையில் கெடுதல் செய்கிறது…? என்று பார்க்கின்றார்கள்.

அந்த ஜோசியக்காரர் என்ன செய்கிறார்?

அவர் காசை வாங்கிக் கொண்டு இவருடைய தியேட்டரைச் சூனியமாக்கி விவசாயத்தை நாஸ்தியாக்கும் நிலைக்குச் சூனியம் ஏவல் செய்து வைத்துவிட்டார்.

அதற்காக அந்த ஜோசியக்காரருக்குக் நிறையக் காசு கிடைக்கிறது.

ஆனாலும் அந்த ஜோதிடக்காரர் ஜாதகம் பார்ப்பதில் பேரும் புகழும் கொண்டவர். குட்டிச் சாத்தானை வைத்துக் கொண்டு நீங்கள் நினைப்பதை  எல்லாம் சொல்வார்.

ஆகையினால் பெரிய ஜோதிடக்காரர் ஆகி விடுகிறார்.

ஜோதிடம் ஜாதகம் எல்லாம் நன்றாகப் பார்க்கிறார். நன்றாகத் தெளிவாகச் சொல்கிறார் என்று தேடி வருகின்றார்கள்.

குட்டிச் சாத்தானையும் கருவித்தைகளையும் வைத்து ஜாதகம் பார்ப்பதில் இப்படியெல்லாம் சில வேலைகள் செய்கிறார். அந்தக் கருவித்தைகளைப் பார்த்து வருபவர்களுடைய ஜாதகங்களைப் பார்ப்பது. அதன் வழியில் அவர்களுக்கு எல்லாம் சொல்கிறார்.

இதை நான் (ஞானகுரு) அனுபவத்தில் உங்களிடம் சொல்கிறேன்.

ஏனென்றால்
1.ஜாதகம் பார்ப்பதால் எத்தனையோ பேர் கெட்டிருக்கின்றார்கள்.
2.ஜாதகங்கள் பார்த்து எத்தனையோ குடும்பங்கள் எல்லாவற்றையும் தொலைத்திருக்கின்றார்கள்.
3.அந்த நம்பிக்கையினால் எத்தனையோ பேர் தன்னை இழந்து அவதிப்பட்டிருக்கின்றார்கள்.
4.அவரவர்கள் அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்.
5.ஆயிரத்தில் ஒன்று இரண்டு தான் தப்பித் தவறி நல்லதாக நடந்திருக்கும்.

ஜாதகக்காரருடைய என்னுடைய இந்த நண்பர் வீட்டிற்கு அங்கே வந்திருக்கின்றார். ஏனென்றால் அடிக்கடி நான் அங்கே போகக்கூடியவன்.

ஆனால் அந்தச் சமயத்தில் வெளியில் வரப்படும் போது என்னைப் பற்றிய உண்மையைச் சொல்ல மாட்டேன். “சாமியார்…” என்று சொல்ல மாட்டேன். அரசியல் பற்றி ரொம்பக் கடுமையாகப் பேசிக் கொண்டு இருப்போம்.

ஆகையினால் யாருக்கும் நான் “சாமி…” என்கிற வகையில் தெரியாது. “சாமி..” என்கிற வகையில் தியேட்டரில் ஓடாத படத்தை ஓட்ட வைக்கும் பொழுது தான் தெரியும்.

அதே சமயத்தில் சூனியம் வைத்த அந்த ஜோதிடம் பார்ப்பவர் என் நண்பரிடம் (தியேட்டருக்கு வந்து) வந்து  சொல்கிறார்.

எனக்கு வீட்டுக்குப் போவதற்குக் கண் தெரிய மாட்டேன் என்கிறது. இந்த பக்கம் வருவதற்குத்தான் எனக்குக் கண் தெரிகிறது என்றார்.

“என்ன…! என்று நண்பர் கேட்டார்.

நான் இன்னென்ன தவறுகளையெல்லாம் செய்திருக்கின்றேன். உங்களுக்குக் கெடுதல்கள் செய்திருக்கின்றேன்.

அவர் “தன்னாலே…” உண்மைகளை வெளிப்படுத்துகிறார்.

இந்த மாதிரி இங்கே ஒரு சாமியார் உட்கார்ந்திருக்கிறார் என்கிறார் அவர்.

“எந்தச் சாமியார்..?” என்று கேட்டார்.

அவர் உங்கள் கடைக்குக் கூட அடிக்கடி வந்திருக்கின்றார். நான் கூட உங்கள் கடைக்கு அடிக்கடி வந்து அவர் அரசியல் பேசும் பொழுது பார்த்திருக்கிறேன் என்று சொல்கிறார்.

“அப்படியா” சரி பார்க்கலாம் என்று என்னிடம் அழைத்து வருகிறார். இந்தப் பக்கம் தான் (நான் இருக்கும் பக்கம்) வருகிறார். அந்தப் பக்கம் போனால் அவருக்குக் கண் தெரிய மாட்டேன் என்கிறது.

சாமியைப் பார்த்து நான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சொல்கிறார். நான் காசை வாங்கி இத்தனைத் துரோகம் செய்து விட்டேன் என்றும் அவர் சொல்கிறார்.

அவர் இப்படிப் பேசியவுடன் என்னிடம் கூப்பிட்டு வந்தார். நான் தியேட்டருக்குள் உட்கார்ந்திருந்தேன்.

வந்தவுடன் நமஸ்காரம் செய்துவிட்டு நான் பாவங்கள் நிறையச் செய்துவிட்டேன் என்றார்.

நான் ஜாதகம் பார்த்ததுடன் மட்டும் இல்லாமல் பணத்தின் மீது ஆசைகள் கொண்டு ஒருவருக்கொருவர் அங்கங்கே போய்க் கேட்டுச் சில விபரங்களைத் தெரிந்து கொண்டு அதற்குத் தகுந்த தீயவினைகளைச் செய்தேன்.

அதனால் இப்பொழுது எனக்கு அந்தப் பக்கம் போனால் கண் தெரிய மாட்டேன் என்கிறது என்றார். அவர் செய்த உணர்வுகள் அவருக்குள் உள்ள  அனைத்தையும் சொன்னார்.

என்னை மன்னித்துவிடுங்கள். இனிமேல் இந்தப் பாவச் செயலைச் செய்யவே மாட்டேன் என்று சொல்கிறார்.

சரி.. என்று சொல்லி ஆசீர்வாதம் செய்தேன்.

இனிமேல் யாருக்கும் இந்தத் தீங்கைச் செய்யாதே. இந்த ஜாதகத்தைத் தொடாதே… நீ ஜாதகத்தைத் தொட்டால் மீண்டும் இந்தக் காசு ஆசைதான் வரும் என்று சொல்லி அனுப்பினேன்.

ஏனென்றால் இதைப் போன்ற ஜாதகக்காரர்கள் மக்கள் யார் யாரிடம் எல்லாம் போகிறார்களோ அங்கெல்லாம் போய் அவர் ஜாதகங்களைப் பற்றிய விபரங்களை அறிந்து கொள்வது.

ஜோதிடம் பார்ப்பதற்காக வரும் மனிதர்களின் நட்சத்திரம் என்ன…? ஏது…? அவர் உணர்வு என்ன…? என்று எல்லாம் அடுக்கு வரிசையில் தெரிந்து கொண்டு தன் இந்த மாதிரித் தவறுகளைச் செய்கின்றார்கள்.

இந்த லாட்ஜுகளில் கேம்ப் போட்டுச் செய்கின்றார்கள். இவர்களிடமெல்லாம் இந்த மாதிரி வேலைகள் ஏராளமாக உண்டு. ஒன்றும் தெரியாதது மாதிரிச் சொல்வார்கள்.

இதை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே அனுபவபூர்வமாக நடந்த நிகழ்ச்சிகளைச் சொல்கிறேன்.

“மனிதனுக்கு ஜாதகம் இல்லை”.