மகரிஷிகளின் நோக்கம்

spirituality

இவர் மனிதரே இல்லை “ஒரு ரிஷிப் பிண்டம்”

ஒரு சமயம் ரிக் வேதம் கற்றுக் கொடுக்கும் வாத்தியார் நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது அவர் குடுமியைப் பிடித்துத் தூக்கி அடிக்கத் தொடங்கினார் ஈஸ்வரபட்டர். ஏண்டா தப்புத் தப்பாக வேதத்தைச் சொல்கிறாய் என்று அவரை வாயில் வராத வார்த்தையைச் சொல்லித் திட்டினார். பின் ரிக் வேதத்தைச் சுருதி மாறாமல் மேலிருந்து கீழேயும் திருப்பிக் கீழிருந்து மேலேயும் அப்படியே பாடிக் காட்டினார் ஈஸ்வரபட்டர். மேலும் ஒவ்வொன்றும் எப்படி உருவாகிறது என்பதை ஆதியிலிருந்து விளக்கிக் கூறினார்.

அந்த வாத்தியார் அடியை வாங்கிக் கொண்டு பின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு சென்றார். மறு நாள் என்னிடம் (ஞானகுரு) வந்து “இவர் ஒரு ரிஷிப் பிண்டம்… குருநாதராக நீங்கள் பெற்றது உங்கள் பாக்கியம்..” என்றார்.

1.உரைத்துவிடு ஈஸ்வரா…! என்று உரைத்தவனும் கவி மழை பொழிந்தவனும் உண்மையின் சொரூபத்தை உணர்ந்தே
2.நலம் பெற நல்லாக்க நிலையில் “நான்…” என்ற அகங்கார நிலையை விடுத்து
3.சகலமும் ஈஸ்வரர்…! என்ற அருள் ஜோதியைச் சிந்தித்து
4.எல்லா உயிராத்மாக்களையும் தன் உயிர் போல் பாவிக்கும் பாவனையில்
5.மௌனத்தின் உரையில் ஆத்மாவில் உரைக்கட்டும்.
6.அதுவே எமக்குகந்த ஆனந்த நிலை…!

சரீர பக்தி கொண்டு ஆடுகின்ற ஆட்டமெல்லாம் எத்தனை காலத்திற்கப்பா…? ஆண்டாண்டு காலமாகச் சமுதாய அமைப்பில் எத்தனையோ தவசீலர்கள் என்று பறைசாற்றியவர்களைப் பற்றி எத்தனை முறைகள் தான் எடுத்துக் கூறுவது…?

1.உன்னை நம்பு.. பிறரை நம்பாதே…!
2.உன் உயிரான்மா சக்தி பெற்றிட அது… பிறர் கொடுத்துப் பெறுவதல்ல…!

கலியின் சூட்சமமே மனித எண்ணங்களின் விஷமான மூச்சலைகளால் பூமியின் பொக்கிஷங்கள் குறைவுபட்டு விட்டது. இந்தக் கால கட்டத்தில் ஒவ்வொருவரும் தன் உயிர் ஆத்ம சக்தியை வலுகூட்டும் முயற்சியைத்தான் யாம் விரும்புகின்றோம்.

ஒவ்வொரு மனிதனின் நிலைக்கொப்ப அது பக்தியோ வியாபாரமோ அல்லது குடும்ப நலமோ அவனவன் எடுத்துக் கொண்ட எண்ணத்திற்கொப்ப எண்ணம் சொல் செயல் மூன்றிலும் சத்திய நியாய தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒவ்வொரு நிலைகளுக்கும்…
1.அவரவர்களுக்கு ஏற்றாற்போல் மெய் ஞானத்தை உரைத்திட்டால் வெறும் திருக்கூட்டம் தான் பெருகும்.
2.யாம் சொல்ல வந்த கல்கியின் வித்துக்களை உருவாக்கிடவும் முடிந்திடாது.

ஏனென்றால் வெறும் கூட்டம் தேவை என்றால் “எத்தனையோ வழிகள் உண்டு…!” (இன்றைய கலியில் கூட்டம் எங்கெங்கே கூடுகிறது என்று பார்க்கலாம்) அது நமக்கு வேண்டியதில்லை.

நமக்கு வேண்டியது…
1.எண்ணத்தில் பிறரைப் பற்றிய தவறான கருத்துக்கள் கொள்ளாது
2.தான் கொண்ட சத்தியத்தில் பிறழாது வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.

ஆனால் சத்திய சோதனையில் சோர்வு பட்டவனும் துவேஷக் கருத்துக்களை வைத்துக் கொண்டிருப்பவனும் “சக்தி பெறலாம்…!” என்ற நம்பிக்கையிலாவது வாழட்டும்.

கலி இன்னும் முடிந்திட எண்ணிறந்த காலம் செல்லும் என்று. அறிந்து சொன்னானா எம் உரையை…? உரைத்துவிடு ஈஸ்வரா… என்றவனுக்கே உரைக்கின்றேன் “சடையாண்டி மலையின் சூட்சமத்தை…!”

1.சப்தரிஷிகளால் தடுக்கப்பட்டிருக்கின்றன…
2.அது பொங்கிடும் நாதமே உரைத்த சூட்சம ஒலி.
3.ஞானம் பெற்றிட விழைவோன் யாராக இருந்தாலும் சமமான உணர்வுகள் கொள்ள வேண்டும்.

இன்னல் கண்டு கலங்காதே…! என்ற வாசகத்தை நினைவில் கொள்க. காலம் குறுகியது என்று பல பல காலம் உரைத்திட்டேன். மெய் ஞானத்தைப் பெறுவது எக்காலம்..?

உலகெங்கிலும் எத்தனையோ எரிமலைகள் வெடிக்கின்றன. அங்குள்ள உயிர்த் தொகைகள் மடிகின்றன. எது எங்கோ நடைபெறும் சம்பவம் என்று நினைக்க வேண்டாம். அது நாம் வாழும் இந்த இடத்தில் ஏன் இருந்திடக் கூடாது.

உண்மையும் அது தான்…! சடையாண்டி மலை என்ற பெயரை வாசிக்கும் பொழுதே அறிந்து கொள்ள வேண்டும். ஞானம் பெற விழைந்தது எதற்கு…? இடத்தையும் உரைக்கின்றேன்.

கொங்கு மண்டலத்தின் தென் திசையில் அமைந்துள்ளது சடையாண்டி மலை. கந்தக மண் சூழ்ந்த அந்த இடத்தில் ஒரு மலை மாத்திரம் அன்று மூன்று மலைகள் அடுப்புகள் கூட்டிய அமைப்பில் அமைவு பெற்று அதில் ஓர் மலையில் இரண்டடி உயரத்தில் மலையின் தாழ்வாரத்தில் மூன்று நீருற்றுக்கள் கிளம்பி ஓடிக் கொண்டே இருக்கின்றன.

தென் கையிலாயம் என்று உரைத்திட்டேன் குரு மலையை. குரு மலையில் இருந்து நாற்பது கல் தொலைவில் தெற்கு திசையில் அடர்வனத்தில் உள்ளது சடையாண்டி மலை.

1.சடையாண்டி மலைகள் குமுறிக் கொந்தளிக்கப் போகின்ற எரிமலைகள்.
2.பயம் காட்டுகின்றேன் என்று எண்ணிட வேண்டாம்.
3.இன்னும் இந்தக் கலியில் உடல் கொண்டு உலவும் சித்தர்கள் அறிந்துள்ளனர் அதனின் சூட்சமத்தை…!

யாம் கூறி வரும் உண்மை நிலைகளை எல்லாம் உணர்ந்து தெளிதல் பொருட்டு இந்தத் தியானத்தின் வழியாக ஒவ்வொரு உயிராத்மாவும் பேரின்பத்தில் திளைத்துப் பேரருள் செல்வத்தில் ஆதி சக்தியில் கலந்திடவே உரைக்கின்றோம்.

மகரிஷிகள் வேண்டுவதோ கல்கியின் வித்துக்களாகிய ஞானச் செல்வங்களைத்தான்…!
lIght destination
இன்றைய உலகில் பல வகையான வாகனங்கள் உண்டு. ஒவ்வொன்றும் மனிதன் தனது எண்ண ஆற்றல் கொண்டு வேகமாகச் செல்லும் நிலைக்கு உருவாக்கப்பட்டது தான்.

ஆக அந்தந்த வாகனங்களின் கதிக்கொப்ப அது ஓடுவதைப் போன்று
1,மனித ஆற்றலின் உந்து விசையையும் அதிகப்படுத்தினால்
2.வேகம் கூட்டும் வாகனங்களின் ஆற்றலின் அறிவுத் திறன் வளர்ந்ததைப் போல்
3.மெய் ஞான வளர்ச்சியில் விருப்புடன் பயணிக்கும் பாதையே மனித சக்தியைக் கூட்டும் எண்ண ஆற்றல் ஆகும்.

உலகம் எப்படித் தன் ஈர்ப்புப் பிடிப்புடன் தன் வளர்ப்பின் செயலுடன் சுழன்று வருகிறதோ அதைப் போல்
1.நம் உயிராத்மாவை இந்தப் பூமியின் ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபட்டுச் செல்ல
2.தன் எண்ணத்தின் உந்து விசையால் நீரமிலக் காற்றில் விண்ணுலக ஒளி அமிலத்தைச் சுவாசத்தால் உடல் எடுக்க
3.நாம் மேற்கொள்ளும் தவத்தின் தனித்துவத்தால் தரணியின் மெய்யை உணர்ந்து
4.தான் மெய் ஞான விழிப்பெய்த மூல நாடியாக மூச்சலையின் சக்திதனை மூலமாக்கிய
5.அந்த மகரிஷிகளின் சக்திகளை நாமும் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

உணர்வின் எண்ணத்தில் செழிப்பின் ஆசைதானப்பா மனிதச் செயலின் மூலாதாரமே. ஆனால் வித்தை காணும் ஆசை ஓட்டத்தில் “பேராசையின் எண்ணம் கொண்ட விளைவுதானப்பா…” இன்றைய மனித நிலை.

யுகங்கள் யுகங்களாக மகரிஷிகளின் தொடர்பலைகள் வளர்ச்சியின் செயலுற்று அவர்கள் வழி வகுத்துத் தந்த அந்த மெய்ஞான விழிப்பே மனிதனின் ஞானத்தின் வளர்ச்சிக்குச் செயலாற்றும் “திறவு கோல்” ஆகும்.

இன்றைய விஞ்ஞான கலியுகத்தில் மனித ஞானத்தை விழிப்புறச் செய்ய மெய் ஞானிகள் கொண்ட ரிஷிகளின் தொடர் அலையின் கருத்தின் கோர்வைகளை அவகள் கண்ட உண்மைகளை இங்கே தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்துள்ளோம்.

செடி கொடிகள் எப்படித் தனக்கொத்ததை ஈர்த்து… வளர்ந்து… விளைந்த பின் பலன் தருவதைப் போல் நாமும் அந்த மாமகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நம்முடைய சுவாச அலையின் செயல் தன்மையைச் சீராக்கிடல் வேண்டும்.

1.இதைப் படித்துப் பதிவாக்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் தெய்வ சக்தி பெற்று
2.இந்தப் பூமியின் சுவாச கதியில் ஒளிச் சரீரமாக உங்கள் ஆத்ம உயிரை மெய் ஞான விழிப்புப்படுத்துங்கள்.
spiritual forces of human



1.நாஸ்டர்டாமஸ் – உலகைக் காக்கும் சக்தி தென்னாட்டில் தோன்றும் நிலைகள்

2.நாஸ்டர்டாமஸ் சொன்னது – ஞானக் குழந்தைகளை உருவாக்குங்கள்

3.நாஸ்டர்டாமஸ் சொன்னது-உலகைக் காக்கும் சக்தி தெற்கிலிருந்து தோன்றும்

தியானம்

agastiya-rishi


 


மகரிஷிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளச் செய்யும் தியானம் 

உங்கள் ஆசை எதில் இருக்க வேண்டும்…?

அந்த சப்தரிஷி மண்டலத்தின் பேரருள் பேரொளியை நாங்கள் பெறவேண்டும் அந்த சக்தி எங்களுக்குள் வளர வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும்.

1.யாரவது கஷ்டப்படுகிறார்கள் என்று கேள்விப்பட்டால்
2.அவர்களுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்
3.அவர்கள் மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற இந்த உணர்வை நீங்கள் எடுத்து உங்களுக்குள் சமைத்து
4.அதில் நீங்கள் மகிழ்ச்சியைத் தெரிந்து கொள்ள ஆசைப்பட வேண்டும்
5.இதை நீங்கள் பெருக்க வேண்டும்

ஒருவர் உடலில் ஆவி செயல்படுகிறது என்றால் 4 பேர் சேர்ந்து கூட்டுத் தியானம் இருக்க வேண்டும். மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று இந்த சக்தியைக் கூட்டிக்கொள்ள வேண்டும்.

மகரிஷிகளின் அருள்சக்தியைக் கூட்டிக்கொண்டபின் அவர் உடலில் உள்ள ஆன்மா மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும். அந்த ஆன்மா அவருக்கு ஒரு நல்லது செய்ய வேண்டும் என்று சொல்லவேண்டும்.

அவர்களையும் நீ இந்த மாதிரி ஆத்ம சுத்தி செய்யச் சொல்லி நீ சீக்கிரம் நன்றாகிப்போ என்று சொல்லவேண்டும் இதைப் போல் எடுத்தார்கள் என்றால் அவர்களுக்கு லாபம். இதைப் பெருக்கிப்பழக வேண்டும்

ஏனென்றால் நீங்கள் அந்தப் பேருண்மையைப் பார்க்கப் பார்க்க உங்களை அறியாமலேயே அந்த உணர்வலைகளுக்குள் சென்றவுடனே  சப்தரிஷி மண்டலத்துடன் உங்கள் உணர்வுகள் சுழல்வதைப்பார்க்கலாம்.

இந்தத் தொடர்புக்குள் அந்த உணர்வுகள் தன்னிச்சையாகவே அதை எடுக்கும்.

1.ஒரு அரசமரத்தின் வித்து பாழடைந்த இடத்தில் பட்டாலும்
2.நீர் இல்லையென்றாலும் காற்றில் இருப்பதை எடுத்து
3.விழுதுகளைப் பாய்ச்சி தன் சத்தை எடுத்து வளர்ந்துவிடும்.

அதைப் போல உங்கள் நினைவின் ஆற்றல் எல்லாம் விண்ணுக்குச் சென்று பழக வேண்டும். அப்படிப் போனால் பல அற்புதங்கள் தெரியும். பல அதிசயங்கள் தெரியும்.

ஆரம்பத்தில் (30 வருடங்களுக்கு முன்) உங்களுக்கு என்ன காட்சி கிடைத்தது? உங்களுக்கு என்ன தெரிந்தது? என்று நான் கேட்பேன்.

அப்பொழுது எல்லாருக்கும் காட்சிகள் தெரியும். எல்லோரும் “அதைப் பார்த்தேன்… இதைப் பார்த்தேன்…” என்று சொல்வார்கள்

அப்படிச் சொன்னவர்களுக்கெல்லாம் என்ன ஆகியது? அந்த ஆசையில்தான் மூழ்கிவிட்டார்கள். அதிலிருந்து மீள்வதற்கு வழி இல்லாமல் போய்விட்டது

1அகண்ட பேரண்டக் காட்சியை நாம் அந்த மகரிஷிகளின் உணர்வுகளோடு பார்க்கவேண்டும்
2.அந்த மகரிஷிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்ற ஆசையை நாம் அங்கே வைக்கவேண்டும்
3.அதை நாம் வளர்க்கப் பழகவேண்டும்

ஏனென்றால் அதை நாம் எதில் பார்க்கவேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும் என்று இதை நம் உடலுக்குள் ஏற்ற வேண்டும்.

இதன்வழி கொண்டு ஏற்றியபின் உங்கள் பார்வையால் யார் கஷ்டப்பட்டாலும் மகரிஷிகளின் அருள்சக்தி அவர்கள் பெறவேண்டும் அவர்கள் உடலில் உள்ள தீமைகள் எல்லாம் நீங்கவேண்டும் என்று “இந்தச் சக்தியை வைத்து… அந்த உண்மையான சக்தியை” நீங்கள்  பார்க்கலாம்.

இதைப் பார்க்கப்படும்போது அந்த தீமைகள் விலகி மகிழ்ச்சியின் உணர்வுகள் உங்களுக்குள் வரும். அந்த உணர்வின் எண்ணம் வேகமாகக் கொண்டு போகின்றது.

இதன் ரூபத்தில்தான் நீங்கள் பார்க்க வேண்டுமே தவிர எனக்குச் சப்தரிஷி மண்டலம் தெரியவில்லையே அது எப்படி வருகிறது? அது எப்படி இருக்குமோ…! என்று இந்த சந்தேகம் கூடாது.

படிப்படியாகத்தான் நாம் போக வேண்டும்.

ஒரு சினிமா காட்டுகின்றார்கள் என்றால்
1.அங்கே இருக்கும் போது ஒளியாகத்தான் படுகின்றது
2.அதைத் தடுத்து நிறுத்தும் போதுதான் உருவம் தெரிகின்றது
3.நாம் குறுக்கே பார்க்கும் போது தெரிவதில்லை (ஒளி தான் தெரியும்)
4.அதிலே தடுத்து நிற்கும் போதுதான் (திரையில்) அந்த உணர்வு தெரிகின்றது

அதே மாதிரிதான் அந்த மகரிஷியின் அருள் உணர்வுகள் நமக்கு முதலில் தெரியாது. “ஒளியின் அணுக்களாகத்தான் தெரியும்”.

உணர்வின் தன்மை தனக்குள் அதை நிறுத்தி அதை வைக்கப்படும் போது உருவத்தின் தன்மை “யார்…யார்…!” என்ற உணர்வுகள் நமக்குத் தெரிகின்றது

இவையெல்லாம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு நேரடியாகக் காட்டிய நிலைகள்.
1.நீங்களும் அந்த மகரிஷிகளைப் பார்க்கலாம்.
2.அவர்களுடன் தொடர்பும் கொள்ள முடியும்.

Sages network connection