இரண்யன் மூன்று லோகத்தை அடக்கினான் என்றால் பொருள் என்ன…?

இரண்யன் மூன்று லோகத்தை அடக்கினான் என்றால் பொருள் என்ன…?

 

மனிதனான பின் அசுர உணர்வுகளைச் சந்தர்ப்பவசத்தால் நாம் எடுத்துக் கொண்டால்…
1.நாம் எண்ணத்தால் எடுத்துக் கொண்ட அந்த நிலைப்படி இந்திரலோகத்தை மாற்றி அமைத்து
2.அதை அந்த அசர உணர்வுகளே ஆட்சி புரியும் நிலைக்கு வருகின்றது.
3.இந்திரலோலகம் என்பது ரத்த நாளங்கள்.

இதைத் தான் காவியங்களில் இரண்யன் மூன்று லோகத்தையும் அடக்கினான் அடிமைப்படுத்தினான் இந்திரலோகத்தில் உள்ள அனைவரையும் தனக்குக் கீழ் அடிமைப்படுத்தினான் என்று சொல்வது.

உடலான இந்திரலோகத்திற்குள்ளும் இவன் அடக்குகின்றான் காற்றுப் பகுதியில் உள்ள உணர்வுகளையும் இவன் செயல்படுத்துகின்றான்… காற்று மண்டலத்தையும் அதுவாக மாற்றுகின்றான்.

சூரியனிலிருந்து வரக்கூடிய உணர்விலும் இந்த உணர்வுகள் இணைந்து மற்றவர்களை இது அடக்கிடும் சக்திகளாகப் பரப்புகின்றான்.

இப்படி மூன்று நிலைகளாகப் பரவுவதை “மூன்று லோகம்” என்று காரணப் பெயரை வைத்து அழைத்தனர் ஞானிகள்.

1.உடலான ஒரு லோகமும்
2.புறத்தால் தன் சுற்றுப்புற சூழ்நிலையில் உள்ள உணர்வுகளும்
3.சூரியனிலிருந்து வரும் உணர்வின் தன்மை விஷத்தின் தன்மை உமிழ்த்தப்படும் போது இவனிடும் உணர்வுகளே அதனின் செயலாகச் செயல்படுகிறது.

அசுர குணங்கள் கொண்டு நாம் பேசினால் சுற்றுப்புற சூழ்நிலைகள் இந்த லோகத்தையே இது கவர்ந்து விடுகின்றது. அதற்குள் வாழும் மக்களும் சிறிதளவு நுகர்ந்தபின் உடலுக்குள் அந்த உடலையும் அடக்குகின்றது. அச்சுறுத்தி வாழும் நிலை வருகின்றது.

ஒரு இடத்திலே போக்கிரி இருக்கிறான் என்றால் அவன் கடுமையாகப் பேசப்படும் பொழுது அவன் உடலுக்குள் இருக்கும் நல்ல குணத்தை அடக்குகின்றான்.

நல்ல உணர்வின் தன்மை அடங்கிச் சொல்லாக வெளிப்படும் பொழுது கேட்போர் உடலுக்குள்ளும் இந்த உணர்வுகளே உள் புகுந்து அவர்களை அச்சுறுத்தும்படிச் செய்கின்றது.

அதே சமயத்தில் சூரியனால் கவரும் சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்ப காந்தத்திலும் மற்றவைகளுடன் இணைந்து… உணர்வின் அலைகளாகப் படரப் படும் பொழுது “அந்தச் சூரியனின் வெப்ப காந்தமும் இவனிடமிருந்து வெளிப்பட்ட உணர்வைக் கலந்து” அதனின் உணர்வாக ஆட்சி செய்யும் நிலையாக அமைந்து விடுகின்றது.

இவனின் ஆக்கிரமிப்புத் தன்மைகள் வரும்போது இவனின்று விளையும் தன்மையே
1.உடலையும்
2.காற்று மண்டலத்தையும்
3.சூரியனுடைய உணர்வுகளையும்
4.இந்த மூன்று மண்டலங்களையும் வீரியத்தன்மை கொண்டு ஆட்சி புரியத் தொடங்கி விடுகின்றது.

இதை நுகர்ந்தோர் அனைவரும் மடியும் நிலையும் அசுர உணர்வுகள் கொண்டவர்களாகவே வந்து விடுகின்றது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காக ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

ஆனால் நஞ்சினை வென்றிட்ட அஅகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமான உணர்வுகளை நாம் நுகர்ந்தோம் என்றால் மெய்ப் பொருளைக் காணச் செய்யும் நிலையாக.. இருளைப் போக்கிடும் அருள் ஒளியாக வளர்த்திடும் அரும்பெரும் சக்தியாக இது அமையும்.

1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்த்துத்தான் நம்மை அறியாது வரும்
2.அந்த அசுர உணர்வினை நாம் மாற்றி அமைக்க முடியும்.

அருள் ஞானச் சக்கரத்தைப் பார்த்து தியானிக்க வேண்டிய முறைகள்

அருள் ஞானச் சக்கரத்தைப் பார்த்து தியானிக்க வேண்டிய முறைகள்

 

1.எம்மை எப்படி, நமது குருநாதர் ஆயுள் கால மெம்பராக துருவ நட்சத்திரத்தோடு இணைத்தாரோ
2.அதே வழியில் தான் உங்கள் அனைவரையும் துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொள்ளச் செய்து ஆயுள் கால மெம்பராக இணைக்கின்றோம்.

அருள் ஞானச் சக்கரத்தை எதற்குக் கொடுப்பது என்றால், காலை 4.00 மணிக்கெல்லாம் இந்தச் சக்கரத்திற்கு முன் அமர்ந்து தியானிக்க வேண்டும்.

அப்படித் தியானிக்கும் பொழுது ஒளி வரும்.. எதையெல்லாம் நீங்கள் எண்ணுகின்றீர்களோ அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் விளையும். நல் உணர்ச்சிகள் வரும்.

அருள் ஞானச் சக்கரம் ஒரு நினைவுச் சின்னம்தான். குருநாதர் கொடுத்த ஆறாவது அறிவின் தன்மையைச் சக்கர வடிவில் கொடுத்தது. அந்தச் சக்கரத்தில், “பிரம்ம சக்தி விஷ்ணு சக்தி சிவ சக்தி சித்தி விநாயகா” என்று மூன்று நிலைகளை வைத்தது.

1.பிரம்ம சக்தி என்றால் எது உருவானதோ அதன் மணம் ஞானம்.
2.விஷ்ணு சக்தி என்றால் அது வெப்பமானாலும் ஈர்க்கும் சக்தி… உருவாக்கும் சக்தி.
3.உணர்வின் தன்மை சிவமாகும் போது உடலுக்குள் அந்தச் சக்தியின் இடப்பக்கம் சேர்த்துக் கொண்ட வினை அந்தக் குணம் வினைக்கு நாயகனாக இருக்கும்.
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கணங்களுக்கு (குணங்களுக்கு) அதிபதியாக்க வேண்டும். அது அதிபதியாகும் பொழுது இருளை நீக்குகின்றது.

ஓ…ம் கணபதி என்ற இந்த உணர்வை எடுத்துத்தான் நம் குரு காட்டிய அருள் வழியில் நம் உடலின் சக்கரமாக நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகின்றது…? என்பதனைச் சக்கரத்தை வடிவமைத்துக் கொடுத்தது.

நமது குருநாதர் வடிவமைத்த சக்கரத்தை உங்கள் வீட்டில் வைத்துத் தியானிக்கும் பொழுது… நீங்கள் சக்கரத்தை உற்றுப் பார்த்து “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டுமென்று சிறிது நேரம் ஏங்குங்கள்.

அதிலிருந்து ஒளி வரும்… உங்கள் உடலில், அந்த உணர்ச்சிகள் வரும். அதற்குப் பின் உங்களுக்கு வேண்டியதை எண்ணுங்கள்.
1.சக்கரத்தின் முன் நல்லவைகளைத்தான் எண்ண வேண்டும்… குறைகளையே எண்ணக் கூடாது.
2.எங்கு வெளியில் சென்றாலும் செல்வதற்கு முன் இந்தச் சக்கரத்தைப் பார்த்து ஆத்ம சுத்தி செய்துவிட்டுச் செல்லுங்கள்.
3.உங்கள் காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை அடிக்கடி உங்களுக்குள் செருகேற்றிக் கொள்ளுங்கள். அந்த உணர்வை நீங்கள் பெற்றால் தீமையை மாற்றி அமைக்கும் சக்தி உங்களுக்குள் வந்துவிடும்.

உங்கள் சொல்லினைக் கேட்போர் உணர்வுகளில் இருளை நீக்கும்… ஞானத்தை ஊட்டும் சக்தியாக வரும். தியானவழி அன்பர்கள் நாம் அனைவரும் இதைப் பெருக்க வேண்டும்.

உங்கள் ஆசையை மட்டும் அந்தச் சக்கரத்தில் கூட்டிவிடாதீர்கள்.

1.நம் ஆசை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறும் நிலையாகத்தான் இருக்க வேண்டும்.
2.எங்கள் செயல், நல்லதாக இருக்க வேண்டும்… எங்கள் சொல், எல்லோரையும் நலம் பெறச் செய்ய வேண்டும்.
3.எங்கள் வாழ்க்கை நல்லதாக இருக்க வேண்டும் என்ற உணர்வை மட்டும் எண்ண வேண்டும்.

இது மாதிரி எண்ணும் பொழுது நமக்குள் நல்ல உணர்வைக் கொடுக்கும். உங்களைப் பேரின்பத்திற்கு அழைத்துச் செல்லும். அருள் ஞானச் சக்கரத்தை ஒரு தெளிவான இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

சக்கரத்தின் முன் தியானிக்கும் பொழுது
1.குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்களுக்குள் வளர வேண்டும்.
3.இந்த வீட்டிற்குள் வந்தால் நோய் அகல வேண்டும் என்ற உணர்வை வளர்க்க வேண்டும்.

இவ்வாறு செயல்படுத்தினோம் என்றால் வீட்டிற்குள் தீமைகள் வராது தடுத்துவிடலாம். தீமை என்ற நிலையை மாற்றி அருள் என்ற உணர்வுகளைப் புகச் செய்து அதை வணங்கிப் பழக வேண்டும்.

துருவ மகரிஷிகளின் அருள் உணர்வை வளர்த்தீர்கள் என்றால் தீமைகள் அகலும். உங்கள் ஊர் பக்கம் நல்ல மழை பெய்யும். நீங்கள் இருக்கும் பக்கம் உங்கள் மூச்சலைகள் பரவும் பொழுது தானியங்கள் நன்கு விளையும். வாழ்க்கையில் தீமைகளை ஒளியாக மாற்றும் நிலைக்கு நாம் எல்லோரும் வர வேண்டும்.

1.நாம் எல்லோரும், ஒன்றாகச் சேர வேண்டும்…
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் அனைவரும் வாழ வேண்டும்.
3.நம்முடைய இந்த வாழ்க்கைக்குப் பின் சப்தரிஷி மண்டலம்தான் போக வேண்டும்.
4.நமது வாழ்க்கையின் ஒவ்வொரு செயலிலும் அந்த எண்ணம் தான் அடிப்படையாக இருக்க வேண்டும்.

குழந்தைகள் அந்தச் சக்கரத்திற்கு முன் அமர்ந்து அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும், துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

அதற்குப்பின்
1.கல்வியில் ஞானம் பெற வேண்டும், கருத்தறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்,
2.மன பலம் பெற வேண்டும் மன வளம் பெற வேண்டும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்.
3.கற்றவை அனைத்தும் என் நினைவில் வரவேண்டும், சிந்திக்கும் ஆற்றல் பெற்று எனக்குள் தெளிவு பெற வேண்டும்
4.தெளிவான கல்வி தெளிவான நிலை பெற வேண்டும் என்று சக்கரத்தின் முன் அமர்ந்து, எண்ணி வணங்கினால்
5.அந்த அருள் வழிகள் குழந்தைகளுக்குக் கிடைக்கும்.

தேர்வுக்குப் போகும் முன் இந்த மாதிரி எண்ணிவிட்டுப் படியுங்கள். உங்களுக்கு நல்ல ஞானத்தை ஊட்டும்… தெளிவான நிலை வரும்.

குறைகளை நினைக்கும் பொழுதெல்லாம் அந்தக் குறைகள் தான், உங்களை இயக்கும். பிறருடைய தவறுகள் நம்மை இயக்குகின்றது. அந்த மாதிரி நேரங்களில் ஈஸ்வரா என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

பின் யாரால் அந்தக் குறை வந்ததோ அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும். சிந்தித்துச் செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று, எண்ண வேண்டும். பிறருக்கு நல்லது செய்யும் உணர்வு வரவேண்டும் என்று எண்ணும் பொழுது இதன் உணர்வு நமக்குள் விளைகின்றது.

இந்த மாதிரிச் சொல்லப்படும் பொழுது
1.பிறர் உணர்வில் இது கலந்து அவரும் மாறும் நிலை வருகின்றது.
2.வீட்டிற்குள்ளும் இந்த நிலை படர்ந்து தீமைகள் வருவதில்லை.
3.நம் தெருவிற்குள்ளும் இது படர்ந்து வேற்றுமையை இது மாற்றும்.
4.நல்ல உணர்வுகள் படரும்… ஒன்றுபட்டு வாழும் நிலை வருகின்றது.

இதைப் போன்று ஒவ்வொரு ஊரிலும் உள்ள நம் அன்பர்கள் செய்துவர நம் நாட்டிலும் இந்த உலகிலும், அருள் உணர்வுகள் படர ஏதுவாகின்றது. அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் இந்தக் காற்று மண்டலம் முழுவதும் படருகின்றது.

ஆகவே இந்த உலகில் வாழும் அனைத்து மக்களும், அருள் ஞானம் பெற வேண்டும், அருள் உணர்வுகள் அவர்கள் அனைவருக்குள்ளும் விளைய வேண்டும். நாளைய உலகம் அருள் உலகமாக மாற வேண்டும். இந்த உலகில் படர்ந்துள்ள, அனைத்து நச்சுத்தன்மைகளும் நீங்க வேண்டும் என்று, தொடர்ந்து இந்தச் சக்கரத்தைப் பார்த்துத் தியானித்து வர வேண்டும்.

அப்படிச் செய்து வந்தால்
1.எத்தகைய சூறாவளியோ பூகம்பமோ அல்லது விஞ்ஞான விஷத் தன்மைகளால் ஏற்படக்கூடிய கடுமையான நிலைகளோ
2.நாம் இருக்கும் இடத்தில் வராதபடி நிச்சயம் தடுக்க முடியும்… அதற்குத்தான் இதைச் சொல்வது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் நிலைகளாக வளருவோம். கணவனும் மனைவியும் பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழ வேண்டும். நம் குடும்பத்திற்குள், உயர்ந்து வாழும் நிலைகள் பெற வேண்டும். குறைகள் வந்தால் நீக்கிப் பழக வேண்டும்.

அதற்குத்தான் இந்த அருள் ஞானச் சக்கரத்தைக் கொடுப்பது.

1.சக்கரத்தை நீங்கள் மதித்துப் பழக வேண்டும்… வெறும் சக்கரமாக எண்ண வேண்டாம்.
2.நமக்குள் ஆறாவது அறிவின் இயக்கம் எப்படி இருக்கின்றது…? என்பதைச் செயல்படுத்திக் கொண்டு வரும்.
3.நாம் எல்லோரும் துருவ நட்சத்திரமாக மாற வேண்டும்… நம் சொல், பிறருடைய தீமைகளை அகற்ற வேண்டும்.

எல்லாவற்றையும் உருவாக்கிய உணர்வு கொண்ட நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் தான் இதையெல்லாம் தெரிந்து கொண்டோம்.

1.குருதேவரை நினைத்து.. துருவ நட்சத்திரத்தை நினைத்து வாழ்க்கையைக் கொண்டு போனோம் என்றால்
2.நாம் என்றுமே அருள் உணர்வுடன் ஒன்றி வாழலாம்… இருளை அகற்றும் அருள் சக்தி பெறலாம்.
3.நாம் இருக்கும் இடத்தில் நல்ல மழை பெய்யும்.
4.ஊருக்குள் இருக்கும், பகைமையை மாற்றியமைக்கலாம்… இந்த உலகையும் காக்கலாம்.

எல்லா உயிரும் கடவுள் எல்லா உடலும் கோவில் எல்லா உடலும் சிவன். எல்லாக் கண்களும் கண்ணன். எண்ணும் எண்ணம் இராமன்.

ஆகவே நாம் மகிழ்ச்சி என்ற எண்ணங்களையே எண்ண வேண்டும். நம் எண்ணங்களில் தூய்மைப்படுத்தும் உணர்வுகள் வளர வேண்டும் என்ற உணர்வோடு நாம் வாழ்வோம், வளர்வோம்.

இந்த உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை அடைவோம் என்ற உறுதி எடுத்துக் கொண்டு இதையே உறுதியாக எண்ணி அருள் பெற வேண்டும் என்று வாழுங்கள்.

1.குரு வழியில் துருவ நட்சத்திரத்தின் உண்ர்வைப் பெறுவோம்.
2.அருள் ஒளி என்ற உணர்வைப் பெற்றுப் பிறவி இல்லா நிலையை அடைய நாம் எல்லோரும் பிரார்த்திப்போம்.

எமது அருளாசிகள்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எந்த நேரத்திலும் பெற நாம் பசித்திருக்க வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எந்த நேரத்திலும் பெற நாம் பசித்திருக்க வேண்டும்

 

இந்த மனித வாழ்க்கையில் நாம் விழித்திருப்பது மிகவும் நலம். இந்த நினைவாற்றல் கொண்டு தெளிவாக்கி அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் வலுவாக்கச் செய்ய வேண்டும்.

நாம் போகும் பாதையில் தவறு செய்யாமலேயே பிறருடைய நிலைகளை நுகர்ந்தறிய நேருகின்றது. தீமையிலிருந்து விடுபடும் நிலைகள் வருகின்றது.
1.ஆனால் தீமையிலிருந்து விடுபட்டுச் சென்றாலும் நுகர்ந்த தீமையான அணுக்கள் நமக்குள் வளர்ந்து
2.தீமையை உருவாக்கும் நிலையாக தீமையையே உணவாக ஏங்கி எடுத்துத் தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கிவிடும்.
3.அந்த இனத்தைப் பெருக்காது நாம் தடைப்படுத்த நாம் விழித்திருப்பதே நல்லது.

தனித்திரு… நீ விழித்திரு…! என்று சொல்வார்கள். எப்பொழுதுமே பிறிதொரு தீமையின் உணர்வுகள் நமக்குள் கலக்காது “தனித்த அந்த ஞானியின் உணர்வை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது” பிறருடைய உணர்வுகள் நமக்குள் கலந்திடாது அந்த மகரிஷியின் உணர்வுடன் ஒன்றி நாம் தனித்து வாழ முடியும்.

இல்லையென்றால் பிறருடைய தீமை செய்யும் உணர்வுகள் நம்மை இயக்கிவிடும். அதனால் தான் ஒவ்வொரு நிலைகளிலும்.. நீ விழித்திரு நீ தனித்திரு என்று காரணங்களைச் சொல்லி ஞானிகள் கூறுகின்றார்கள்.

அருள் ஞானிகள் உணர்வை விழித்திருந்து அந்த உணர்வினைத் தனக்குள் வளர்த்துக் கொண்டால் பிறிதொரு தீமை செய்வோர் உணர்வுகள் நம்மை இயக்காது.. நாம் தனித்து தனித்தன்மையில் வாழ்கின்றோம்.

தனித்தன்மை கொண்டு துருவ நட்சத்திரம் அந்த ஒளியின் சுடராக
1.மற்றொன்று இதை இயக்கிடாது… அதைத் தனக்குள் இயக்கப்பட்டு ஒளியின் தன்மையாக “தனித்தன்மையாக அது எப்படி வளர்கின்றதோ…”
2.இந்த மனித வாழ்க்கையில் எவரொருவர் அதனைப் பின்பற்றி அதைப்போல விழித்திருந்து செயல்பட்டாரோ
3.இன்றும் அவர்கள் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒளியின் சுடராக
4.அவரவர் நிலைக்கொப்ப தனித்தே வாழ்கின்றார்கள் தனித்தன்மை கொண்டு.

ஆகவே நாம் இந்த மனித வாழ்க்கையில் நாம் எதனின் தன்மை கொண்டு நுகர்கின்றோமோ அடுத்தவர்களுடன் தொடர்பு கொண்டு தான் நாம் வாழ்கின்றோம்.

ஒருவருக்கொருவர் இணை சேர்த்து ஒருவருக்கொருவர் ஒன்றி வாழுகின்றோம். கோள்களும் அதே போன்று தான் அதனதன் நிலைகள் வளர்ந்து அதனதன் தனித்தன்மையில் வளர்ந்தாலும்… அதனின் விஷத்தன்மைகள் வளர்கின்றது.

1.ஆனாலும் சூரியன் தனித்தன்மை கொண்டு வரும் நஞ்சினை எல்லாம் பிரித்து விட்டு ஒளியின் சுடராக மாற்றுகின்றது.
2.இதைப் போன்று தான் நாம் தனித்திருந்து விழித்திருத்தல் வேண்டும்.

எத்தகைய தீமையான உணர்வாக இருந்தாலும் ஒவ்வொரு நொடியிலும் அது உள் சேராது சூரியன் நஞ்சினைப் பிரித்து அதனுடைய தனித் தன்மையை எப்படிக் காட்டுகின்றதோ… தனித்த நிலைகள் அதனுடைய ஒளியின் தன்மையாக அது எப்படிச் செயல்படுகின்றதா இதைப் போன்று தான் நமக்குள் தனித்து இருத்தல் வேண்டும்… விழித்திருத்தல் வேண்டும்.

1.இந்த மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் நல்லவர்களுடைய உணர்வுகளை அறிந்தாலும்
2.அவர்கள் உணர்வுக்குள் சிக்கி நாம் அடிமையாகாது தனித்திருப்பது நல்லது… தனித்திருப்பது என்றால் நாம் விழித்திருப்பது நல்லது.

தீமைகள் நமக்குள் ஊடுருவாது மகரிஷிகளின் உணர்வுகளை நாம் நுகர்ந்து அந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்கித் தனித்தன்மையாக… நமது நிலைகள் உணர்வுகள் பிறருடைய தீமைகளிலிருந்து விடுபட்டுத் “தீமையற்றவராக வாழும் நிலை பெற வேண்டும்…”

மகரிஷிகள் தனித்திருந்து விழித்திருந்ததனால் தனித்திருக்கும் நிலை பெற்றார்கள். அதனின் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் நமது வாழ்க்கையில் விழித்திருக்கும் உணர்வும் தனித்து வாழும் நிலைகளும் தீமையற்ற நிலைகளும் நமக்குள் வளர்ந்திடும் நிலை பெறுகின்றது.

அதை நினைவுபடுத்தும் நன்னாள் தான் சிவன் ராத்திரி.

1.நம் உடலுக்குள் இருளாக இருப்பதை அருள் ஞானிகள் ஒளிச்சுடரைச் சேர்த்து
2.இருள் சூழும் நிலையை நீக்கி இருளற்ற உணர்வினைத் தனக்குள் வளர்த்து
3.மெய் உணர்வுடன் ஒன்றிய நிலைகளை நமக்குள் பெருக்க வேண்டும்.
4.அந்த அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் சேர்க்க வேண்டும்.

நாம் எடுக்க வேண்டிய பெரு மூச்சு (பெரும் மூச்சு)

நாம் எடுக்க வேண்டிய பெரு மூச்சு (பெரும் மூச்சு)

 

விண்ணிலிருக்கும் அருள் ஞானிகளைப் பற்றி உங்களிடம் அடிக்கடி உபதேசிக்கின்றோம். அதைப் பெற வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டி மேல் நோக்கிச் சுவாசியுங்கள்.
1.எதையெல்லாம் உயர்வாக எண்ணுகின்றீர்களோ… அப்படி எண்ணும் போது…
2.உங்களுக்கு அது கிடைக்க வேண்டும் என்ற (பெரும் ஏக்கமான) பெரு மூச்சாகக் கிடைக்கும்.

ஆனால் எம்மைச் சந்திக்க வரும் பொழுது என் காலிலே விழுந்து பாத நமஸ்காரம் செய்யும் போது… என்ன…? இப்படிச் செய்கிறார்களே…! என்று பார்க்கும் பொழுது
1.மேலிருந்து உயர்ந்த சக்தியை எடுத்து உங்களுக்குக் கொடுப்பதற்குப் பதில் நான் கீழ் நோக்கியே பார்க்க வேண்டி இருக்கின்றது.
2.அதைச் சாதாரண மனிதனின் உணர்வைத் தான் நானும் அதைச் சுவாசிக்க நேர்கின்றது.

ஆனால் விண்ணின் ஆற்றல் எல்லை கடந்து பரவி உள்ளது.

ஆகவே அதை நோக்கி எண்ணி ஏங்கி எடுத்து அந்த சக்தி உங்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கும்… உங்களை உயர்ந்த நிலைகள் கொண்டு நான் பார்ப்பதற்கும் அது சரியாக இருக்கும்.

பாத பூஜை… பாத நமஸ்காரம்… என்று சாதாரண வாழ்க்கையில் நாம் அடிபணிந்தே பழகி விட்டோம். நமக்குள் வரும் ஆசை… நம்மை அறியாமல் இருள் சூழச் செய்யும் “இந்த வினையின் தத்துவத்தை” நாம் அடிபணியச் செய்ய வேண்டும்.

அதாவது… மெய் ஒளியைப் பெறும் உயர்வான எண்ணங்களை நாம் எடுத்து எடுத்து தீமைகளை அடிபணியச் செய்யப் பழக வேண்டும்.

நான் யார் வீட்டுக்காவது சென்றால்… “சாமி உங்களுக்குக் கும்ப அபிஷேகம் செய்கிறோம்…” என்று குடத்தைத் தூக்கிக் கொண்டு வருகின்றார்கள். அந்த உயர்வு தேவையில்லை.

நமக்குள் உயர்ந்த உணர்வுகளை எடுக்க வேண்டும் அதுதான் நமக்குத் தேவை. நாம் உயர்ந்த உணர்வின் தன்மையைச் சுவாசிக்கின்றோமோ அந்த உயர்ந்த நிலைகளைப் பெறும் ஆர்வத்தின் உணர்ச்சியை நாம் தூண்ட வேண்டும்.

1.பிறரைப் போற்றுவதற்கோ… அந்தப் போற்றுதலால் தன்னை மதிக்க வேண்டும் என்ற நிலைகள் நமக்கு அறவே கூடாது.
2.விண்ணிலிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் இணைந்து
3.பேரானந்தப் பெருவாழ்வாக வாழும் அந்த மேல் நோக்கிய சுவாசமே…
4.நமக்குள் உயர்ந்த மூச்சாக… பெரும் மூச்சாக அமைய வேண்டும்.

ஐக்கிய மனோபாவத்தை உருவாக்கத் தான் கூட்டுக் குடும்ப தியானம்

ஐக்கிய மனோபாவத்தை உருவாக்கத் தான் கூட்டுக் குடும்ப தியானம்

பெண்கள் நீங்கள் சமையல் செய்யும் பொழுதெல்லாம் உங்களுக்குச் சந்தர்ப்பம் உண்டு. நீங்கள் ஆத்ம சுத்தி செய்து
1.நான் செய்யும் சமயல் அனைத்தும் அதை உணவாக உட்கொள்வோர் அனைவருமே
2.மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெற்று அவர்கள் புனித நிலைகள் பெற வேண்டும்
3.அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் நீங்கள் உணவு பரிமாறுங்கள்.

பெண்களுக்கு இந்த நினைவலைகள் ஈர்ப்பலைகள் அதிகமாக உண்டு.

ஆகவே தாய்மார்கள் ஒவ்வொருவரும் இதை நினைவில் கொண்டு உங்களையறியாமல் துக்கப்படச் செய்யும் உணர்ச்சி வசப்படச் செய்யும் சங்கடப்படச் செய்யும் இந்த உணர்வுகளை மாய்க்க ஒரே வழி இதுதான்.

நீங்கள் சமையல் செய்யும் சமையல் அறையில் ஆத்ம சுத்தி செய்யுங்கள். உங்களுக்குத் துன்பமூட்டும் நிலைகள் இருந்தாலும் உங்கள் குடுமபத்திற்குள் துன்பமூட்டும் நிலைகள் இருந்தாலும் அதையெல்லாம் நீங்கள் நினைவில் வைக்காதபடி, ஈஸ்வரா என்று உயிரை எண்ணி ஆத்ம சுத்தி செய்துவிட்டு சமையலைச் செய்யுங்கள். ஆகாரம் சாப்பிடும் பொழுதெல்லாம் இதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்களுக்கு எப்பொழுதெல்லாம் துன்பங்கள் ஏற்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் ஆத்ம சுத்தி செய்து
1.நம் வீட்டில் மகரிஷிகளின் அருள் ஒளி படர வேண்டும்.
2.வீட்டிற்கு வருவோர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும்.
3.நம் வீட்டில் இருப்போர் அனைவரும் மகரிஷியின் அருளாலே சொல்லாலும் செயலாலும் இனிமை பெறும் ஆற்றல் பெற வேண்டும் என்று
4.வீட்டிலிருந்து ஏங்கி எடுத்தாலே புவியின் ஈர்ப்பிற்குள் வீட்டிற்குள் உங்கள் மூச்சலைகள் படருகின்றது… சுவர்களிலே படர்கின்றது.

அங்கு எவ்வளவு பெரிய நிலைகள் இருந்தாலும் உங்கள் சொல்லாலே குடும்பத்தில் புனித நிலைகள பெறச் செய்ய உங்களுக்கு இந்தச் சக்தி உண்டு.

இந்த முறையில் செய்தீர்களென்றால் ஆச்சரியமான நிலைகளில் உங்கள் வீட்டிலே மகிழ்ச்சியின் நிலைகள் தோற்றுவிப்பதை நீங்கள் பார்க்கலாம்.

1.நீங்கள் இட்ட மூச்சலைகள் உங்களுக்குள் நல்ல நறுமணங்களாக வளர்ந்து எப்பொழுதும் மகிழ்ச்சியூட்டும் நிலைகளைப் பார்க்கலாம்.
2.உங்கள் வீட்டில் நல்ல நறுமணங்கள் அடிக்கடி சுழன்று வருவதை நீங்கள் பார்க்கலாம்.

யாம் தியானத்தைச் சொல்கிறோம் நீங்கள் கேட்கின்றீர்கள். இதைப் போல நீங்களும் ஒவ்வொருவராகச் சொல்லும் பொழுது கேட்பவர்களுக்கும் இது பதிவாகின்றது. அவர்களுடைய உணர்வுகள் அங்கே பதிவாகி எண்ணத் தொடருடன் நல்லதாகின்றது.

இதைப் போன்று ஒரு குடும்பத்தில் இருந்தாலும் சரி… தியான வழி அன்பர்கள் கூட்டுத் தியானமிருக்கும் பொழுதும் சரி ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளைக்குச் சொல்லிப் பழக வேண்டும்.

1.வீட்டிலிருக்கும் நம் குழந்தைகளையும் தியானத்தை அவர்களைச் சொல்லச் சொல்லிப் பழக்க வேண்டும்…
2.அத்தகைய பக்குவத்திற்கு வரவேண்டும். தியானத்தை உணர்வுபூர்வமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
3.அப்படிச் சொல்லும்போது, கேட்போருடைய செவிகளிலும் அது பதிவாகின்றது.
3.இவருடைய (ஒவ்வொருவருடைய) நல்ல எண்ணம் மற்றவருக்குள் உருவாகும்போது அந்த நல்ல எண்ணம் இவர் மேல் அன்பைப் பாய்ச்சுகின்றது.

இப்படி நாம் கூட்டுக் குடும்ப தியானங்கள் இருக்கப்படும் பொழுது, ஒவ்வொரு மெம்பர்களும் இன்று ஒருவர் சொன்னாலும், நாளை ஒருவரைச் சொல்ல வைக்க வேண்டும். நான்கு பேர் தான் என்று இருந்தாலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தரும் செய்து பழக வேண்டும்.

இதைப் போன்று ஆத்ம சுத்தியும் பயிற்சியும் செய்யும் பொழுதும் ஒருவரே செய்ய வேண்டுமென்பது அல்ல. ஒவ்வொருத்தரும் அதைச் செய்து பழக வேண்டும்.

1.இப்படி ஒருவருக்கொருவர் அந்தக் கலப்பு உணர்வினுடைய நிலைகளில் ஒன்று சேர்ந்தோமென்றால்
2.அந்தப் பிரியத்துடன் நாம் சொல்லப்படும் பொழுது அந்தப் பாசம் இங்கே வளர்கின்றது.
3.ஏனென்றால் இந்த உணர்ச்சிகளை அங்கே தூண்டச் செய்வதற்கும் அந்த ஐக்கிய மனோபாவத்தின் நிலைகளும்
4.இந்தப் பற்றுதலுடன் ஒன்று சேர்வதற்கு இதைப் போல் நாம் முறைப்படி செய்ய வேண்டும்… அனவருக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டும்.

உங்கள் வீட்டை மகாலட்சுமி குடிபுகும் வீடாக மாற்றுங்கள்

உங்கள் வீட்டை மகாலட்சுமி குடிபுகும் வீடாக மாற்றுங்கள்

எத்தனையோ பேர் நம் குருநாதருடன் பழகினார்கள். அவர் ரசமணி செய்து கொடுத்தால் சக்தி கிடைக்கும்…. அவரிடம் சித்துகள் பெற்றால் நானும் சக்தி பெறுவேன் என்று அந்த ஆசையில்தான் வந்தார்கள்.

அவர் யாரிடமெல்லாம் பழகினாரோ அவர்களெல்லாம் சாமி எங்கள் வீட்டில் தான் படுத்திருந்தார்… நான் சோறு போட்டேன்…! என்று சொல்லுவார்கள்.

அதே சமயத்தில் எங்கள் வீட்டிற்கு வந்தால் மலம் இருந்து வைத்து விடுவார்… துணியைக் கிழித்து வைத்து விடுவார்…! என்று சொல்கிறவர்களும் உண்டு.

எங்கள் வீட்டிற்கு வந்தாலும் தொட்டியில் இருக்கின்ற தண்ணீரில் தவிடை எடுத்துப் போட்டு “அனைத்தும் அசிங்கமாயிடுச்சு…” என்று சொல்லி அனைத்தையும் கொட்டிவிடச் சொல்வார்.

குடத்தில் இருக்கும் தண்ணீரை வீடு முழுவதும் ஊற்றிவிட்டு “வீடு அசிங்கமாக இருக்கு… அதைக் கழுவுகின்றேன்…” என்று சொல்வார். வீட்டிற்குள் சின்ன ரூமில் சிறுநீர் கழித்துவிட்டு எவனோ அசிங்கம் பண்ணி வைத்திருக்கான்… அதைக் கழுவ வேண்டும்…! என்பார்.

சாமி அம்மாவோட அம்மா… அதாவது எனது மாமியார் “பைத்தியத்தை வீட்டுக்குள் விட்டு இந்த மாதிரிச் செய்கின்றான்…” என்று சொல்லி என்னைத் திட்டும்.

ஒரு நாள் இங்கே வந்து… இந்தச் சொத்து போய்விடும்… இந்த வீடு போய்விடும்… எல்லாமே போய்விடும்…” என்று குருநாதர் சொல்கிறார்.

இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அந்த அம்மா அருளாட ஆரம்பித்து விட்டது. உடம்பெல்லாம் எரிகிறது… தண்ணீர் ஊற்று…! என்று சொல்கிறது.

குருநாதர்… எனக்குத் தெரியாமல் எப்படி இந்தச் சாமி வருகிறது…? என்று சொல்கிறார். எரியுதா…? உனக்கு இன்னும் எரியும் பார்…! என்கின்றார். அக்கினியாகின்றது…!

அந்தக் கிழவனை போகச் சொல்…! என்கிறது அந்த அம்மா.

குருநாதர் என்னிடம்… தண்ணீரை எடுத்து அடி…! என்றார். அடித்தவுடன் கீழே விழுந்துவிட்டது. அது உடலில் இருந்த பேய் போய்விட்டது .

1.கழுவிவிட வேண்டும் என்று குருநாதர் சொன்ன நிலைகள்… இந்த வீட்டில் அந்த அம்மா பாதங்களால் பதிவானது.
2.சாமி அம்மாவோட சின்னம்மா அது சாபமிட்ட அலைகள் இங்கு இருக்கின்றது…!
3.அதனால்தான் தண்ணீரை ஊற்றிக் கழுவச் சொன்னேன் என்றார் குருதேவர். துணியைப் போட்டுத் தேய்க்கின்றார்,

எல்லாம் போய்விட்டது என்றேன்.

உன் கண்களுக்குத் தெரியவில்லை நீ முட்டாள்டா…! என்கிறார். உற்றுப் பார்…! என்றார்.
1.பார்க்கும் பொழுது அந்தம்மா திட்டியது பேசியது எல்லாம்
2.டேப் ரிக்கார்டரில் பதிவான மாதிரிச் சுழன்று கொண்டு இருக்கின்றது.

இதுவெல்லாம் நடந்த நிகழ்ச்சிகள்.

வீட்டில் வாழ்ந்தவர்கள் இறந்து போய்விட்டார்கள் என்று நாம் நினைக்கிறோம்.
1.அவர்கள் உடலில் எந்தெந்த எண்ணங்களை வேகமாக எண்ணினார்களோ
2.பூமியில் இருக்கின்ற காந்தம் அதைப் பதிவு செய்து வைத்துக் கொள்கின்றது.

சில பேர் நல்லவர்களாக இருப்பார்கள். பக்கத்து வீட்டுகாரர் நம் வீட்டிற்குள் வந்து… குடும்பக் கஷ்டங்களைப் பேசினால் நிம்மதியாக இருக்கின்றது என்று சொல்லிப் பேசிக் கொண்டிருப்பார்.

அவர் எந்த இடத்தில் உட்கார்ந்து பேசினாரோ அந்த இடத்தில் பதிவாகி விடும். அந்த அலைகள் எல்லாம் சேர்ந்துவிடும்.
1.நிம்மதியாக இருந்த வீட்டிற்குள் அடுத்தாற்போல் சண்டையும் சச்சரவுமாக வந்து விடும்.
2.நாங்கள் என்ன பாவம் செய்தோமோ…? என்பார்கள்.

காரணம்… இரண்டு பேரும் கலந்து உறவாடிய உணர்வுகள் சுவரிலும் பதிவாகி விடுகின்றது. சங்கடமாக இருந்தால் வேறு எங்கும் போக மாட்டார்கள்… சங்கடமாக எங்கு பேசினார்களோ அங்கு போய்த் தான் உட்காருவார்கள்.

சாதரணமாக சுற்றுலா மையங்களில் பார்த்தால் சில பேர் ஒதுங்கித் தனியாகப் போவார்கள். உட்காருவதற்கே இடமிருக்காத இடங்களில் ஒற்றைக் காலில் நிற்பார்கள். ஊரில் இருக்கின்ற குறைகளெல்லாம் பேசிக் கொண்டு இருப்பார்கள். இவை அனைத்தும் அந்த இடங்களில் பதிவாகும்.

குறைகளைப் பேசப் பேச அவர்கள் தொழில் நலிந்துவிடும். உலகத்தில் எல்லோரும் ஏமாற்றுகின்றார்கள்… ஏமாற்றுபவர்கள் நன்றாக இருக்கிறார்கள்… நம் தொழில் மட்டும் நலிந்து கொண்டே இருக்கின்றது…! என்று சொல்வார்கள்.

நம் குடும்பத்திலுள்ளவர்கள் வேலை நிமித்தமாக வெளியில் செல்லும் பொழுது பிறருடைய கடுமையான உணர்வலைகள் அவர்களுக்குள் தாக்கப்பட்டு அந்த உணர்வாலே நல்லவரின் எண்ணங்களையும் மாற்றி அது நம் குடும்பத்திற்குள் ஊடுருவி நமக்குள் பாய்ச்சும் பொழுது தீய வினைகளை உண்டாக்கி விடுகின்றது.

இதைப் போன்ற உணர்வுகளை எடுத்துக் கொண்டு வீட்டிலே நடமாடும் பொழுது ஒருவருக்கொருவர் எதிர்ப்பான உணர்வுகள் தோன்றியபின் இந்த உணர்ச்சிகளை நாம் மூச்சால் வெளியிடும் பொழுது சுவர்களிலும் பதிவு செய்து கொள்ளும்.

அதே சமயம் பூமியின் ஈர்ப்பலைகளில் நாம் இருக்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் பூமியிலேயும் பதிந்து விடுகின்றது. அப்படிப் பதிந்தபின்
1.நம் உடலிலிருந்து வரும் இந்த வீட்டிலே வீசும் மணத்தைக் கொண்டு
2.அந்தக் கடுகடுப்பும் வெறுப்பான எண்ணங்களையும் ஒருவருக்கொருவர் தோற்றுவித்து விடுகிறோம்.
3.அதனாலே நாம் எண்ணிய நல்ல காரியங்கள் தடைப்பட்டு வேதனையும் சஞ்சலமும் கொண்டே நாம் குடிகொண்டு இருப்போம்.

ஆகவே… நாம் எதற்குள்ளே இருக்கின்றோம்…? இந்த விஷத்தின் அறைக்குள்ளே நம் வீட்டிற்குள்ளேயே அதை உருப்பெறச் செய்து அந்த உணர்வை நாம் சுவாசித்து நமக்குள் அதிகமாக வளர்த்துக் கொள்கின்றோம்.

நம் உடலுக்குள்ளும் சேருகின்றது… நம் உடலுக்குள்ளும் இயக்கி விடுகின்றது. நம் வீட்டிற்குள்ளும் பரவச் செய்து நமக்கு நாமே தண்டனை விதித்தது போன்று ஆகிவிடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை மாற்ற வேண்டுமென்றால்
1.வாரத்தில் ஒரு நாள் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் சேர்ந்து கூட்டுத் தியானமிருந்து
2.உங்களின் எண்ணத்தின் வலுவை உங்கள் வீட்டிற்குள் பரவச் செய்யுங்கள்.
3.அந்த மகரிஷிகளின் அருள் ஒளிகளை வீட்டிற்குள் பாய்ச்சிச் சர்வ தீமைகளிலிருந்தும் விடுபடுங்கள்.

இயற்கையில் உருவாகும் சுழிக் காற்றும்… அதனின் விளைவுகளும்

இயற்கையில் உருவாகும் சுழிக் காற்றும்… அதனின் விளைவுகளும்

 

வாழ்க்கையில் ஓரளவுக்கு நான் மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருந்தாலும் காட்டுக்குள் என்னை அழைத்துச் சென்றார் குருநாதர்.

அங்கே பல பல தாவர இனங்களின் சத்துக்களை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்தாலும் கவர்ந்த உணர்வலைகள் அலைகளாகத் தொடரப்படும் பொழுது அந்த ஒவ்வொரு உணர்வுகளும் எப்படித் தனக்குள் எடுத்து வளர்த்து தனது சக்தியாக… பல பல செடிகள் உருவாகி அது எப்படி வந்தது…?

ஒவ்வொரு செடியாக உருவாகி அதனின் மணங்கள் உணர்வலைகளாக வெளிப்பட்டதைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்திருந்தாலும்
1.எந்தச் செடியாக உருவானதோ அந்தச் செடியில் இருந்து வெளிப்பட்ட இந்த உணர்வின் வித்து இன்னொரு பக்கம் பட்ட பின்
2.தன் தாய்ச் செடியில் இருந்து வந்ததைத் தன் இனமாகக் கவர்ந்து செடிகள் எவ்வாறு உருவாகிறது…? என்று நீ பார் என்று காட்டினார்.

அந்தச் செடிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து அப்படி இணையப்படும் பொழுது சுழிக்காற்று உருவாகின்றது… நாம் பார்க்கலாம்.

மற்ற செடிகளின் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று இணையப்படும் பொழுது சுழிக் காற்றுகளாக உருவாகி அதிலே எந்த உணர்வின் சத்து அதிகமாகின்றதோ அது மற்றதைக் கவர்ந்து அதற்குள் சேர்த்து… ஒரு உணர்வின் கருவாக உருவாகிப் புவியின் ஈர்ப்புக்குள் சென்று… “ஒரு புதுச் செடியாக உருவாகின்றது…”

இதைப் போன்று தான் மனித வாழ்க்கையில் நாம் உயர்ந்த குணங்கள் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தாலும்
1.பிறரிடமிருந்து வரும் எண்ணத்தின் உணர்வுகளை நாம் சுவாசித்து
2.நம் உயிருக்குள் பட்ட உடனே சுழிக் காற்று போல நமக்குள் அந்த சுழலும் தன்மை அடைகிறது.

நாம் ஒன்றைப் பார்த்த உணர்வினைப் பொறுமையாகக் கண் எடுத்துப் பதிவு செய்தாலும்…
1.அதனால் சுழலின் தன்மை ஆகி இரண்டும் ஒன்றாகி இது விளையும் கருவாக வித்தாக
2.தான் ஈர்க்கும் சக்தியாக உருவாவதை நீ பார் என்று உணர்த்தினார்.

இவ்வாறு உணர்த்தியபின் வாழ்க்கையில் மனிதர்கள் தவறு செய்யாமலேயே… தன்னை அறியாமலே பல வேதனைகளை எவ்வாறு படுகின்றனர்…? என்ற நிலையினைக் காட்டுகிறார்.

பிறருடைய எண்ணங்களை நமக்குள் எண்ணிய பின் இந்த உணர்வின் ஆற்றல் மறைந்து உடலில் புதுப்புது கருவித்துகளாக ஊன்றி இந்தக் காற்றிலே படர்ந்து வெளிப்பட்ட உணர்வுகளை அது தன்னிச்சையாகக் கவர்ந்து எப்படி வளர்கிறது…?
1.மனிதனுடைய நிலைகளே சீர்கெடும் நிலைகளுக்கு எப்படி உருவாகிறது…? என்று காட்டுக்குள்ளும் ஊரிலும் சுற்றிக் காண்பித்து
2.இதிலிருந்து மீளும் வழி என்ன…? என்ற நிலையையும் காட்டுகின்றார்.

அன்றைய மெய் ஞானியான அகஸ்தியன் தனக்குள் தீமையை வென்றிட தன் எண்ணத்தால் மேகத்தை உற்றுப் பார்க்கப்படும் பொழுது அந்த மேகங்களைத் தனக்குள் கவர்ந்து தன் உடலுக்குள் வரும் பொழுது நீராகச் சுரந்து தன் ஜீவித நிலைகளை உருவாக்குகின்றான்.

அதே போல் மற்ற தாவர இனச் சத்தை அவன் நுகர்ந்தறிந்து தன் உடலிலே பதிந்து கொள்கின்றான்.
1.எங்கே நின்று இதையெல்லாம் அவன் கவர்ந்தானோ அந்தப் பகுதிகளுக்கு எல்லாம் குருநாதர் எம்மை அழைத்துச் சென்றார்.
2.அந்தப் பகுதிகளில் அவனின் உணர்வலைகள் பூமியிலே படரப்பட்டு இன்றும் பல பல நீர் சத்துக்களை அது கவர்ந்து
3.அந்தப் பாறைகள் உணவாக எடுத்துத் தன் சத்தின் தன்மையாக அதை எப்படி மாற்றிக் கொண்டிருக்கின்றது…? என்று நீ பார் என்றார்.

பல பல தாவர இனங்களின் சத்தை உணவாக எடுத்து வளர்ச்சிக்கு வந்தாலும் அவனுக்குள் வளர்ந்த உணர்வின் சத்து எண்ணங்கள் ஆக மாறி அந்த எண்ணத்தின் வலு தொடர் கொண்டு விண்ணின் ஆற்றலை நுகர்ந்து தனக்குள் பெறுகின்றான் அகஸ்தியன்.

ஒவ்வொரு செடியும் நஞ்சின் தன்மை கொண்டு இயங்கினாலும் அந்தச் செடிக்குள் கலந்த நஞ்சின் சத்தை அகஸ்தியர் முறியடிக்கின்றார்.

அதாவது…
1.ஒரு நஞ்சு கொண்ட பாம்பு தனக்குள் இருக்கும் சத்தை…
2.மற்ற உயிரின்ங்களில் நஞ்சைப் பாய்ச்சி அதனைக் கரையச் செய்து தனக்குள் உணவாக எப்படி எடுத்ததோ
3.இதைப் போல மனிதனின் உணர்வுக்குள் இருக்கும் நஞ்சினை உணர்ந்து அதனைக் கரைக்கச் செய்து
4.அதைத் தனக்குள் செயலற்றதாக ஆக்கித் தன் உடலில் உள்ள அனைத்தையும் ஒளியின் உணர்வாக மாற்றினார்.

“அவரவர்கள் வீட்டில்…” குடும்பமாக அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்

“அவரவர்கள் வீட்டில்…” குடும்பமாக அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்

 

வீட்டில் உள்ள தரை சுவர் கல் மண் அனைத்திலும் காந்தப்புலன் உண்டு. நாம் பேசுவது அனைத்துமே அதிலே பதிவாகின்றது.

ஒரு வீட்டிலிருப்போர் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்… ஒருவரை ஒருவர் கொடூரமான நிலையில் தாக்கிக் கொள்கின்றார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அவர்கள் அந்த வீட்டைக் காலி செய்த பின் அந்த வீட்டிற்குப் புதிதாக குடி புகுந்தார்கள் என்றால்
1.இந்த உணர்வுகளை இழுக்கப்பட்டு இவர்களும் சண்டை போட ஆரம்பிப்பார்கள்.
2.மோசமான உணர்வின் செயல்கள் அந்த வீட்டிலே பதிவாகி இருந்தால்
3.புதிதாக வந்தவர்களையும் அந்த உணர்வுகள் தாக்கி அவர்களையும் சண்டை போட வைக்கும்.
4.அவர்களை அங்கே குடி இருக்க விடாது… ஒற்றுமையில்லாது சண்டையிடச் செய்து வெளியேற்றிவிடும்.

காரணம்… அதில் உள்ள மேக்னெட் இழுத்துக் கவர்ந்து அவ்வாறு இயக்கச் சக்தியாகக் கொண்டு வருகின்றது. அதை மாற்ற வேண்டும் அல்லவா…! என்ன செய்ய வேண்டும்…?

1.உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய ஒவ்வொரு அணுக்களுக்கும்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஈர்க்கப் பழக்க வேண்டும்.

எனக்கு குருநாதர் வானியல் புவியியல் தாவரயியல் அகண்ட அண்டத்தின் உண்மைகளை உபதேசத்தின் மூலமாக உணர்த்தினார். அதே போல் தான் உங்களுக்கும் உபதேசிக்கின்றேன்.

குருநாதர் கொடுத்ததை ஈர்க்கும் சக்தியாக அந்த உணர்ச்சிகளை உங்களுக்குள் தூண்டச் செய்து… தியானிக்கும் போது உங்கள் உடலில் உள்ள அணுக்கள் அதைப் பெறக்கூடிய தகுதியைக் கொடுக்கின்றோம்.

அந்தத் தகுதியை ஏற்படுத்தி
1.அதன் வழி கொண்டு உயர்ந்த உணர்வுகள் உங்கள் வீட்டில் பரவப்படும் பொழுது
2.உயர்ந்த சக்திகள் தரைகளிலும் சுவர்களிலும் பதிவாகிறது.

அத்தகைய அருள் உணர்வுகளை வீட்டிலே ஆழமாகப் பதிவு செய்யப்படும் பொழுது சிந்திக்கும் ஆற்றலும் தன்னை அறிதலும் பகைமையிலிருந்து விடுபடச் செய்யவும் பகைமையற்ற உணர்வைச் சேர்த்துக் கொள்ளவும் இது உதவி செய்யும்.

ஏனென்றால் இது மிக மிகச் சக்தி வாய்ந்த நிலைகள். அந்த அருள் உணர்வை வீட்டில் நாம் பரவச் செய்ய வேண்டும்.

உங்கள் வீட்டிலே தியானிக்கும் போது அந்த இடங்களில் பதிவாகிறது.
1.அதே சமயத்தில் அந்த அலைகள் படர்கின்றது பதிவாக்கும் பொழுது அந்த உணர்வு இழுக்கும்… “நல்ல நறுமணத்தை உண்டாக்கும்…”
2.மகரிஷிகள் கொடுத்த வானஇயல் புவியியல் தத்துவங்களை வீட்டிலே பதிவு செய்ய வேண்டும்.

உலக இருளை நீக்க நம் உணர்வின் தன்மையைத் தெளிவாக்கும் அந்த உணர்வின் அறிவை நாம் பெறுவதற்குத் தான் நாம் அனைவரும் அவரவர்கள் வீட்டிலே குடும்ப தியானத்தை அவசியம் அமைக்க வேண்டும். கூட்டமைப்பாக நாம் அந்த மூச்சலைகளைப் பதிவு செய்தல் வேண்டும்.

உதாரணமாக எத்தனையோ கோடி ஆண்டுகளுக்கு முன் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் மடிந்த டைனோசார் மண்ணுடன் மண்ணாகிக் கல்லாகி விட்டது.

அதிலிருந்து வெளிப்படும் உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது. விஞ்ஞானிகள் அதை எலெக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற உணர்வின் அதிர்வுகளைக் கொண்டு இன்ன இடத்திலே இப்படித்தான் வாழ்ந்தது என்று கண்டுபிடிக்கின்றார்கள்.

அதில் உள்ள செல்களை எடுத்து அதே டைனோசாரைப் போன்று ஜீவ அணுக்களை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானி சொல்கின்றான்.

இதே போன்றுதான் எத்தனையோ லட்சம் ஆண்டுகளுக்கு முன்
1.அன்று வாழ்ந்த “அகஸ்தியன் வெளியிட்ட மூச்சலைகள்… உணர்வலைகள்… நம் பூமியிலே உண்டு…”
2.அதன் தொடர் கொண்டு வளர்ச்சி அடைந்த துருவ நட்சத்திரம் உண்டு.
3.அதை வரிசைப்படுத்தி எடுத்து இந்த உணர்வை உங்களுக்குள் இப்பொழுது பதிவாக்கப்படும் பொழுது “இந்த நினைவு உங்களைக் காக்கும்…”

இந்த அருளை ஒவ்வொரு நிமிடமும் உங்கள் உடலில் உள்ள ஜீவணுக்களில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை வளர்க்கச் செய்து வாழ்க்கையில் அறியாது வரும் இருளை நீக்கித் தெளிந்து தெளிவான வாழ்ந்திட உதவும்.

இதைக் கேட்போர் அவரவர்கள் வீட்டிலே இந்த உயர்ந்த சக்திகளைப் பதிவு செய்தல் வேண்டும்.

வீட்டில் உள்ள அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து மலரைப் போன்ற மணம் பெற்று மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும். இந்த வீட்டிற்கு வரும் அனைவரும் அவர்கள் வாழ்க்கையில் தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கை வாழ்ந்திடும் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் தியானிப்போம்… தவமிருப்போம்…!

தரைகளிலும் மண்ணிலும் இருக்கும்… “ஈர்க்கும் காந்த சக்தியும்… அதனின் இயக்கங்களையும்” அறிதல் வேண்டும்

தரைகளிலும் மண்ணிலும் இருக்கும்… “ஈர்க்கும் காந்த சக்தியும்… அதனின் இயக்கங்களையும்” அறிதல் வேண்டும்

 

வீட்டில் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்பார்கள். வீட்டுக்கு முன் முச்சந்தியில் இருக்கும் மண்ணை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கே மிளகாயை வைத்து அந்த மண்ணையும் வைத்துத் தலையைச் சுற்றி அதற்குப் பின் அடுப்பிலே போடுங்கள்.

மிளகாயின் நெடி வருகிறதா…? என்று பாருங்கள்.
1.ஏனென்றால் குழந்தை உடலில் அந்தக் கார உணர்வு இருந்தால் அதை இழுத்துக் கொள்ளும்.
2.அதற்கு அந்த இழுக்கக்கூடிய சக்தி இருக்கின்றது… குழந்தையின் உடல் நலமாகிவிடும்.

இதே போல் வீட்டிலே பெண்கள் கோலம் போடுகின்றார்கள். புள்ளிகளை வைத்து எங்கள் குடும்பம் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் எங்கள் குடும்பத்தில் வருவோர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று இத்தகைய எண்ணங்களை எண்ணி உற்றுப் பார்த்து இந்த உணர்வின் தன்மை பதிவாக்கி அந்தக் கோலத்தை இட வேண்டும்.

நாம் போடும் அந்தக் கோலப் பவுடரில் மேக்னெட் உண்டு.

1.குடும்ப ஒற்றுமைக்காக வேண்டி உயர்ந்த எண்ணங்களை எண்ணி
2.அருள் ஞானம் பெருக வேண்டும் அருள் சக்தி பெருக வேண்டும் என்றும்
3.எதை எதையெல்லாம் நல்லதாக வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதை எண்ணி அந்தக் கோலத்தைப் போட்டுப் பாருங்கள்.

இந்த உணர்வு இயக்கச் சக்தியாக மாறும்… நமக்குள்ளும் பதிவாகிறது.

பக்கத்து வீட்டுக்காரரோ நண்பரோ உங்கள் வீட்டிற்கு வந்து அவர் கஷ்டத்தை எல்லாம் சொல்வார். உ…ம் கொடுத்துக் கேட்டுக் கொண்டே இருப்பீர்கள்.
1.எங்கே உட்கார்ந்து பேசினாரோ அந்த இடத்திலே பதிவாகும்… இருவர் உடலிலும் பதிவாகும்.
2.அடுத்து சுழன்று வரும் பொழுது அந்த இடத்திற்கு வந்தால் அந்த வாசனை அறியாமலே இயக்கி
3.ஏதோ சங்கடமாக இருக்கிறது என்று உணர்வுகளைத் தூண்டி அங்கேயே திரும்ப உட்காரும்படிச் செய்யும்.

ரோட்டில் நடந்து செல்லும் போது குறைகளைப் பற்றிப் பேசுகிறார்கள் என்றால் அந்த பாதையிலேயே தான் மீண்டும் செல்வார்கள்.

அதே போல் ரோட்டில் சின்னப் பாலங்கள் இருக்கும். அதில் உட்கார்ந்து ஊரில் நடக்கும் குறைகளை எல்லாம் பேசி இருப்பார்கள். அங்கே போனால் அந்தக் குறைகள் வரும். அதையெல்லாம் எடுத்து வீட்டுக்குள் வந்தால் இங்கேயும் அந்தக் குறை தான் வளரும்.

1.சுவாசிப்பது மனிதனுக்குள் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகளாக நமக்குள் எப்படி உருமாறுகிறது…?
2.நாம் சுவாசித்த உணர்வுகள் நம்மை அறியாமலே சூட்சமத்தில் எப்படி இயக்குகிறது…?
3.இதிலிருந்தெல்லாம் நீங்கள் விடுபட்டு நல்ல முறையில் எப்படி வாழ வேண்டும்…? என்பதற்குத்தான்
4.அருள் உணர்வுகளை உங்களுக்கு உபதேச வாயிலாக ஆழமாகப் பதிவு செய்கிறேன்.
5.ஏனென்றால் அதனுடைய இயல்புகளையும் விளைவுகளையும் அனுபவித்துச் சொல்கின்றேன்.

நான் புத்தகங்களைப் படித்து விட்டு வந்து சொல்லவில்லை.

தியானத்தில் இருந்தால் மட்டும் பத்தாது…!

தியானத்தில் இருந்தால் மட்டும் பத்தாது…!

 

மைனர்கள் எல்லோரும் “தியானத்தில் இருந்தால் மட்டும் பத்தாது…” நீங்கள் ஒவ்வொருவரும் வழிகாட்டியாக அமைய வேண்டும்… உலகத்திற்கு எடுத்துக்காட்டாக ஞானிகளாக மாற வேண்டும்.

சாமி மீது உங்களுக்குப் பற்று அதிகமாக இருக்கலாம்… ஆனால்
1.பற்று எதுவாக இருக்க வேண்டும்…?
2.அந்த அருளைப் பற்ற வேண்டும் இருளைப் போக்க வேண்டும்.
3.அந்த அருள் பற்று தான் நமக்குத் தேவை.

சாமியினுடைய உடல் பற்றல்ல…!

1.சாமியைக் கௌரவிப்பதும் சாமியை உயர்வாகச் சொல்வதும் உடலைத் தான்.
2.சாமியிடம் கேட்கும் உபதேசங்களை… அந்த அருளைப் பற்றி அதை நாம் போற்றுதல் வேண்டும்.

சாமியிடம் இருக்கும் அருள் பற்று எப்படி இருக்க வேண்டும்…?
1.ஞானத்தை வளர்த்தால் சாமியின் உடல் பற்று வராது.
2.சாமியின் ஞானப்பற்று தான் உங்களுக்கு வரவேண்டும்.

“எங்கள் சாமி உயர்ந்தவர்…” என்று சொல்வதைக் காட்டிலும்…
1.”அந்த உயர்ந்த உணர்வு என்னிலே வளர்கிறது…” என்று
2.உலகிற்கு நீங்கள் எடுத்துக் காட்டினால்… வழி நடத்தினால் அருள் பற்று வருகின்றது.

இந்தத் தியானத்தைக் கடைபிடிப்போர்கள் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் அனைவரும் இன்னொரு வேலை செய்ய வேண்டும். என்னுடைய உபதேசங்களை எழுத்து வடிவிற்குப் புத்தகமாகக் கொண்டு வர வேண்டும்.
1.அதை எழுதி என்னிடம் கொடுங்கள்… திருத்தங்களைச் சொல்லிக் கொடுக்கின்றேன்
2.ஒவ்வொருவரும் அருள் ஞானத்தை வெளிப்படுத்தும் நூல் ஆசிரியராக வாருங்கள்.

அந்த மாதிரிப் பழகிக் கொண்டால் பகைமைகள் புகாது தடுக்கலாம். அருளைப் பெருக்கலாம். இருண்ட உலகில் இருந்து மீட்டித் தெளிந்த மக்களாக கொண்டு வர முடியும்.

விஞ்ஞானத்தின் விளைவுகளிலிருந்து நம்மையும் நாட்டையும் உலகையும் காக்க முடியும்.

ஒரு வித்தை மண்ணில் ஊன்றினோம் என்றால் அது உபயோகமற்றதாக மாறுகின்றது. பின் செடியாக வளர்ந்து தன் இனத்தின் வித்தைக் கவர்ந்து எல்லோருக்கும் பசியாற்றுகின்றது.

இதைப் போன்று கருவில் வளரும் சிசுக்களுக்கெல்லாம் அருள் ஞான வித்துக்களைப் பதிவு செய்து ஊன்றினால் அவன் வளர்ந்து அருள் ஞானத்தைக் கொண்டு அனைவரையும் காக்கும் திறன் கொண்ட ஞானி ஆகின்றான்… நாட்டைக் காக்கும் ஞானியாகின்றான்.

இத்தகைய அருள் ஞானிகளை வளர்த்தால் தான்
1.இனி அரசாங்கங்க நிர்வாகத்தைத் தனதாக மாற்றி
2.“நாம்…” என்ற நிலைகளில் ஒன்றுபட்ட இயக்கமாக அவன் கொண்டு வருவான்.

இப்பொழுது உலகெங்கிலும் நடக்கும் அரசாங்கங்கள் அனைத்தும் “நான்…” என்ற நிலையில் தான் நடக்கிறது.

நாம் என்ற நிலையில் அத்தகைய அரசாங்கத்தை உருவாக்கி மகிழ்ந்து வாழும் மக்களாக நாம் உருவாக்க வேண்டும். அத்தகைய ஞானிகள் உருவானால் அனைவரையும் பிறவி இல்லா நிலை அடையச் செய்யும் அரும்பெரும் சக்தியாக அது மாறும்.
1.ஆகவே ஞானிகளை உருவாக்குவோம்.
2.நமக்கு இனி ஒரு பிறப்பு வேண்டாம்… நம்முடைய எல்லை ஒளி உடல் பெறுவது தான்.