“நல்ல குணங்களின் வலுவுக்கு வலு சேர்க்கும்” மகரிஷிகளின் அருள் சக்திகள்

“நல்ல குணங்களின் வலுவுக்கு வலு சேர்க்கும்” மகரிஷிகளின் அருள் சக்திகள்

 

விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு மூலக்கூறைப் பிரிக்கப்பட்டு… அந்த மூலத்தின் செயலாக்கங்கள் எவ்வாறு இருக்கிறது…? என்று காணுகின்றார்கள்.

அதைக் கண்டுணர்ந்த பின் “இதனெதன் செயலாக்கங்கள் இப்படித்தான்…” என்று விஞ்ஞானத்தால் பாட நூல்களாகக் கொடுக்கப்பட்டு அதன் வழி தான் எந்த ஒரு இயந்திரமாக இருந்தாலும் இயக்குகின்றார்கள்.

1.அந்த இயந்திரத்திலே பல பல உறுப்புகளை (ACCESSORIES) இணைத்து உருவாக்கினாலும்
2.அந்த இயந்திரத்தின் இயக்க ஓட்டச் சக்திக்கொப்ப “தாங்கும் இயல்பு” அதிலே வர வேண்டும்
3.அப்படித் தாங்கக்கூடிய வலுவைக் கொண்டு வருவதற்காக
3.உலோகக் கலவையினை மாற்றித் தான் அந்த உறுப்புகளை உருவாக்குகின்றனர் (விஞ்ஞான அறிவுப்படி).

அதைப் போல நமக்குள் இருக்கும் ஒவ்வொரு குணத்தின் தன்மையிலும்… இந்த உடலின் தன்மை தாங்கும் நிலையாக… அதற்குள் இயக்க உணர்வின் வலு பெற வேண்டும்.

இதை ஏன் சொல்கிறேன்…? (ஞானகுரு) என்று நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். காரணம்
1.நமக்குள் பல கோடி எண்ணங்கள் இயக்குகின்றது
2.இது அனைத்தையும் அரவணைத்துச் செல்லக்கூடிய பக்குவம் நமக்குள் வருதல் வேண்டும்.

மகரிஷிகள் தனது வாழ்க்கையில் விண்வெளியின் ஆற்றலைப் பெறும் தகுதியைப் பெற்றார்கள். அந்த உணர்வின் ஆற்றலை உயிரின் துணை கொண்டு நாம் நுகர்தல் வேண்டும்.

1.நமக்குள் இருக்கும் எந்தெந்த எண்ணங்களுக்கு எவ்வாறு வலுப்பெறச் செய்ய வேண்டுமோ
2.அதற்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று
3.கண்ணின் நினைவை விண்ணை நோக்கி ஏகி…
4.உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி
5.அந்த உயிர் வழியாக உடலுக்குள் அந்த உணர்வுகளைச் செலுத்தினால்
6.நமக்குள் இருக்கும் குணங்களுக்கு இது நல்ல உரச்சதாக அமைகின்றது.

அப்படி உரமேற்றப்படும் போது தான் “தீமையிலிருந்து விடுபடும் நிலைகளே நமக்குள் உருவாக்குகின்றது” என்பதை நமது குருநாதர் தெளிவாகக் காட்டியுள்ளார்.

ஆகவே இந்த வாழ்க்கையில் வரும் தீமைகள் எதுவாக இருப்பினும் மெய் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்தறிந்து நம் உடலுக்குள்ளே அந்த தீமைகளை அகற்றிடும் உணர்வாகச் சேர்க்க வேண்டும்.

இராக்கெட்டை விஞ்ஞான அறிவுப்படி விண்ணிலே செலுத்திய பின்பு அவர்கள் ஏகும் உணர்வின் தன்மை கொண்டு
1.குறைகளை நீக்கும் உணர்வுகளைப் (TROUBLE SHOOTING) பாட நிலைகளில் கொடுத்து இங்கே எப்படித் தெளிவாக்குகின்றார்களோ அதைப் போன்று
2.மெய் ஞானிகள் அவர்கள் கண்டுணர்ந்த உண்மையினை உணர்த்துவதற்காக
3.ஆலயங்களிலே அதை உருவங்களாக… சிலைகளாக வடிக்கப்பட்டுக் காவியப் படைப்பினை உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள்.

ஆலயத்தில் காட்டியுள்ள அந்தத் தெய்வ குணத்தை எண்ணி… அந்த உண்மையை உணர்த்திய அருள் மகரிஷிகளை எண்ணி…
1.அவர்கள் உணர்வினை நமக்குள் பதிவு செய்தால்… வரும் தீமைகளை அகற்றிடும் உணர்வாக
2.”நம் நல்ல குணங்களுக்கு மிகச் சக்தி வாய்ந்ததாக” அது ஆக்கம் கொடுக்கின்றது.

இது சாஸ்திர விதிகளின் மூலம் ஞானிகள் நமக்குக் கொடுத்த பேருண்மைகள். அதைப் புரிந்து நாம் நடக்க வேண்டும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply