இராமேஸ்வரத்தில்… நேரமாகிவிட்டது

இராமேஸ்வரத்தில்… நேரமாகிவிட்டது

 

எண்ணத்தால் உருவாக்கப்பட்டது தான் இந்த உடல் இராமேஸ்வரம்… பரம்… ஒரு எல்லை…! அதை இராமேஸ்வரம் என்று ஸ்தல புராணமாக ஞானிகளால் காட்டப்பட்டது.

கோடிக்கரை…!
1.புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் தீமைகளை நீக்கும் உணர்வுகளைப் பெற்றுப் பெற்று…
2.அந்த எண்ணத்தால் மனிதனான உடலை ஈஸ்வரலோகத்தை உருவாக்கியது.

உயிர் எப்படி இதை உருவாக்குகின்றதோ இதைப் போன்று அணுவின் தன்மையும் உயிரைப் போல உணர்வைப் பெறும் தகுதி பெற்றது. ஆகவே நாம் பல கோடி உடல்களைக் கடந்து… கடைசிக் கரையில் இந்த மனித உடலில் கோடிக்கரையாக இருக்கின்றோம்.

தனுசுகோடி…!
1.மனித வாழ்க்கையில் எப்போதெல்லாம் தீமைகளைச் சந்திக்கின்றோமோ
2.அப்பொழுதெல்லாம் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளைச் சேர்த்து
3.அந்த விஷத்தை நிறுத்திக் கொண்டே வர வேண்டும்… நமக்குள் வளராது தடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

மனிதனின் வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரை எத்தனையோ விதமான கோப உணர்வுகளையும் வெறுப்புணர்வுளையும் எடுக்கின்றோம். இதைப் போன்று வரும் உணர்வுகளை எல்லாம் தனுசுகோடி…
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அதைத் தாக்கி
2.அத்தகைய கோடிக்கணக்கான உனர்வுகளையும் உயிரைப் போன்று ஒளியின் பிளம்பாக… ஒளியின் கதிராக நாம் மாற்ற வேண்டும்.

எண்ணத்தால் தான் இது உருவானது இது இராமலிங்கம் உணர்வின் தன்மை ஒளியாக்கப்படும் பொழுது இது சீவலிங்கம் ஜீவனூட்டும் லிங்கம் ஜீவிக்கும் லிங்கம்.

எண்ணத்தால் உருவாக்கும் உணர்வுகள் உயிர் என்று “இராமலிங்கம்” என்று காரணப் பெயரை வைத்தார்கள் ஞானிகள்.

1.(இராமேஸ்வரத்தில் – உடலில்) நேரம் ஆகிவிட்டது…!
2.எண்ணத்தால் நாம் ஒளியை உருவாக்க வேண்டும்
3.காரணம்… உடலில் கொஞ்ச நாள் தான் நாம் வாழுகின்றோம் அதற்குள் “மனதை ஒன்றாக்க வேண்டும்…!”

அதாவது மனதில் எல்லாவற்றையும் ஒன்றாக்கிப் பகைமையற்ற உணர்வுகளாக நமக்குள் வளர்க்க வேண்டும். எத்தனை நிலைகள் வந்தாலும் பகைமையாக உருவாகாதபடி அருள் உணர்வினை இணைத்து ஒளியாக்கிட வேண்டும்.

ஆனால் ஞானிகள் நமக்குக் கொடுத்ததை
1.பூஜை செய்ய நேரமாகி விட்டது…
2.ஆகையினால் இராமன் மணலைக் குவித்துப் பூஜித்தான் என்று இப்படிப் பிரித்து மாற்றி விட்டார்கள்.

விஞ்ஞானம் ஊன்றிய நஞ்சின் தன்மை விளைந்து அதனின் மகசூலாக விஷ வித்துக்களாக வந்துவிட்டது

விஞ்ஞானம் ஊன்றிய நஞ்சின் தன்மை விளைந்து அதனின் மகசூலாக விஷ வித்துக்களாக வந்துவிட்டது

 

1.எல்லாமே சந்தர்ப்பத்தால் நாம் நுகரக்கூடிய நிலைகளுக்குத் தக்கவாறு தான் இயங்குகின்றது.
2.யாரும் தவறு செய்யவில்லை
3.அவரவர்கள் உடலில் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் படும் பொழுது அது முதிர்வடையப்படும் பொழுது “விதி” என்ற நிலை அடைகின்றது.

ஒருவருக்குக் கேன்சர் என்ற நோய் வந்தால் விதிப்படி அது கடுமையான விஷம். மனிதனை உருவாக்கிய நல்ல அணுக்கள் அது இலகுவான விஷத்தால் இயங்கும் தன்மை பெற்றது. ஆனால் இந்தக் கேன்சர் நோய் உடலில் வந்த பின் நல்ல அணுக்கள் இயங்குவதற்குண்டான விஷத்தை எல்லாம் அது எடுத்து வளரும்… தன் இனத்தை அது பெருக்கும்.

நல்ல அணுக்களை எல்லாம் மடியச் செய்துவிடும். மனிதனை உருவாக்கிய உணர்வுகள் அனைத்தும் கேன்சரால் பாதிப்படைந்து… உடலை விட்டுப் பிரியும் நிலை வருகின்றது.

இப்படிப் பிரியும் அந்த ஆன்மா நிச்சயம் பாம்பாகவோ விஷத்தை உணவாக உட்கொள்ளும் ஜெந்துக்களாகவோ தான் அடுத்து பிறக்க நேரும். ஆக விதிப்படி இன்று மனிதனாக இருந்தாலும்
1.உயிரில் விஷத்தின் தன்மை அதிகமான சேமிப்பாகும் பொழுது
2.அத்தகைய உயிரினங்களுக்குத் தான் அடுத்து செல்ல வேண்டி வரும்.

கேன்சர் வந்தவர்களைப் பாருங்கள். அவர்களுக்கு எல்லாமே இருக்கும் ஆனால் அந்தக் கடைசி முடிவு எண்ணங்கள் அனைத்தும் விஷம் தோய்ந்து உடலை விட்டுச் செல்லும் பொழுது பாம்பின் ஈர்ப்புக்குச் சென்று விஷத்தை உணவாக உட்கொள்ளும் அதை ஏற்றுக் கொள்ளும் உடலாக அமைத்து விடுகிறது.

எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து மனிதனாக வந்தாலும் இப்படி மாற்றங்கள் ஆகி விடுகிறது அது மட்டுமல்ல…
1.மனிதனால் உருவாக்கப்பட்ட கேன்சர்
2.இன்று ஏராளமானவர்களைத் தாக்குகிறது

ஏனென்றால் விஞ்ஞானக் கதிரியக்கப் பொறிகள் மற்றதுடன் தாக்கப்பட்டு அது உடலுக்குள் சென்ற பின்… எந்த உறுப்பில் இந்த அணுவின் தன்மை அதிகமாக உருவாக்கப்பட்டதோ அந்த அணு பெருக்கிய பின் அந்த உடல் உறுப்பு கெடுகின்றது.

அதன் வழி கிளைகளைப் பெருக்கி விஷத்தின் தன்மை கூடுகின்றது அது விளைந்து விடுகின்றது.

இதைப் போல் நம் பூமியிலும் கதிரியக்கப் பொறிகள் பரவித் தாவர இனத்துடன் கலக்கப்படும் பொழுது தாவர இனத்தை உணவாக உட்கொள்ளும் உயிரினங்களில் இத்தகைய விஷத்தன்மைகள் அதிகமாகின்றது.

அதாவது தாவர இனங்களை உணவாக உட்கொள்ளும் அந்த உயிரினங்களும் விஷம் தோய்ந்து மடிகிறது.
1.அது எடுத்து வெளிவிடும் மூச்சலைகள் அனைத்தும் சூரியனால் கவரப்படுகின்றது
2.மீண்டும் விஷத் தன்மைகளை இங்கே பரவச் செய்கின்றது.

இருப்பினும் இந்த விஷத்தின் தாக்குதல் அதிகமாகி நம் பூமியில் பரவப்படும் பொழுது சூரியனால் கவரப்பட்டு… காந்த அலைகள் தொடர்பு கொண்டு பூமிக்குள் பரவப்படும் பொழுது பூமி சுழற்சி அடையப்படும் பொழுது “நடு மையம் ஈர்ப்பு அதிகமாகி விடுகின்றது…!”

அந்த ஈர்ப்பின் தன்மை அதிகரித்து இதே கதிரியக்கப் பொறிகளைத் தனக்குள் சேர்க்கின்றது. உள்ளே சேர்ந்த பின் கொதிகலனாக உருவாகின்றது.
1.கொதிகலனாக உருவாக்கப்படும் போது கல் போல் இருக்கக்கூடிய பாறைகள் எல்லாம் உருகும் தன்மை வருகின்றது…
2.கரையும் தன்மை வருகின்றது… சேறைப் போல் ஆகிறது.

இரும்பு கெட்டியாக இருப்பினும் நெருப்பை அதிகமாகக் கூட்டும் பொழுது அது கூழாக எப்படிக் கரைகின்றதோ… நம் பூமிக்குள்ளும் கரையும் தன்மை அதிகரித்து… நல்ல பொருள்களைப் பாழாக்கி… “விஷத்தின் தன்மை தோய்ந்ததாகிறது…”

பூமிக்குள் வெடிப்பாகும் போது அந்த விஷத்தின் தன்மையை மீண்டும் வெளிப்படுத்தி
1.தாவர இனங்கள் ஏற்கனவே மண்ணில் உருவான சத்தை எடுத்தாலும்
2.பூமிக்குள் கலவையாகி வெளிப்பட்ட அந்தக் கதிரியக்கங்கள் தாவர இனங்களில் சரியான கரு உருவாகாதபடி…
3.அந்த வெள்ளாமை வராதபடி தடுத்து நிறுத்துகின்றது.

இப்படி விஞ்ஞானத்தால் உருவாக்கப்பட்ட விஷத் தன்மைகள் எல்லா வகையிலும் பெருகிக் கொண்டே செல்கிறது.

“நான் இறந்துவிடுவேன்…!” என்ற பய உணர்ச்சி நமக்கு வரக் காரணம் என்ன…?

“நான் இறந்துவிடுவேன்…!” என்ற பய உணர்ச்சி நமக்கு வரக் காரணம் என்ன…?

 

பாசத்தால் பண்பால் குடும்பத்திலோ நண்பர்களிடமோ உறவினர்களிடமோ நாம் மற்றவருடன் பிரியமாகப் பழகி இருக்கப்படும் பொழுது… உடலை விட்டு அவர்கள் திடீரென்று பிரிய நேர்ந்தால் அதைக் கேள்விப்பட்ட பின் “போய்விட்டார்களே என்று ஏங்கினால்” நமக்குள் அந்த ஆன்மா வந்து நம்மை அறியாமலே எத்தனையோ பாடுபடுத்துகின்றது (முதலில் எதுவும் தெரியாது).

அப்போது என்ன செய்ய வேண்டும்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும்…
1.எனக்குள் இருந்து அந்த ஆன்மா பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்ற
2.இந்த உணர்வை நாம் செலுத்திப் பழகுதல் வேண்டும்.

ஏனென்றால் அந்த ஆன்மாவினால் முடியாததை நாம் அந்த உயர்ந்த சக்தியை எடுத்து ஊட்டும் பொழுது நம் இரத்தத்திலே கலந்து
1.அந்த ஆன்மாக்களும் நமக்கு ஒத்த நிலையாகி தொல்லை கொடுப்பதை மறந்து
2.உடலை விட்டுப் பிரியும் போது அதுவும் நம்மிலிருந்தே புனித நிலை (பெறும் தகுதி) பெறுகின்றது.

இது நம்முடைய சாஸ்திரங்கள் காட்டிய பேருண்மைகள்.

இதை விடுத்து விட்டு உடலிலே புகுந்த ஆன்மாக்களை உடுக்கை அடித்தோ கோடாங்கி அடித்தோ மந்திரங்களைச் சொல்லியோ “நான் பேய் ஓட்டுகிறேன்…!” என்று அப்படி யாராலும் ஓட்ட முடியாது.

உடலில் இருக்கக்கூடிய அந்த ஆன்மாக்களுக்கு அருள் உணர்வின் சத்தைக் கொடுத்து உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்தால் “அது நமக்குள் இருந்து நன்மை செய்யும்…”

இல்லையென்றால்… இரத்தத்தில் அது சுற்றி வரும் போது
1.உயிரிலே (புருவ மத்தியில்) வந்து மோதப்படும் பொழுது அது பட்ட வேதனை உணர்ச்சிகள் நமக்குள்ளும் வரும்.
2.ட்ரான்சாக்ஷன் என்ற உயிர் அருகிலே சென்றபின் அதே உணர்ச்சிகளைத் தான் ஊட்டும்.

கிராமஃபோன் பெட்டியில் ஒரு இசைத் தட்டைச் சுழலச் செய்து ஊசியை உராயச் செய்தால் அந்தப் பாகம் வந்த பின் அதனதன் இசைகளை வரிசயாக எப்படிக் கொண்டு வருகின்றதோ… அதைப் போன்று நமது உயிர்
1.இரத்தத்தில் கலந்த அனைத்து நிலைகளுக்கும் (ஆன்மாக்கள்) இவ்வாறு செயல்படுத்தப்படும் பொழுது
2.அந்தப் பாகம் சென்ற உடனே அந்த ஆன்மா என்னவெல்லாம் சங்கடப்பட்டதோ அந்த உணர்ச்சிகளைத் தூண்டி
3.கை கால் குடைச்சல் மற்றும் எத்தனையோ உடல் உபாதைகளைக் (தொல்லைகளை) கொடுக்கும்.

அதைக் கடந்து உடலுக்குள் அந்த ஆன்மாக்கள் போகிற பக்கம் எல்லாம்… இரத்தத்தின் வழி எங்கெல்லாம் செல்கின்றதோ
1.இருதயத்திலே சென்றால் இருதய வலி
2.கல்லீரலுக்குள் சென்றால் கல்லீரல் வலி
3.நுரையீரலுக்குள் சென்றால் நுரையீரல் வலி
4.அந்த ஆவியின் நிலைகளால் நம் உடலுக்குள் பல விதமான வலிகளைத் தோற்றுவிக்கின்றது.

இதையெல்லாம் வைத்தியம் செய்து ஒன்றும் சீர்படுத்த முடியாது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து உடலில் இரத்தத்தில் வலுப்பெறச் செய்தால் அதனுடைய வீரியம் தணியும்.

அறியாது வரும் இப்படிப்பட்ட தீமைகளை நீக்க அடிக்கடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குச் செருகேற்றினால் தீமைகள் புகாது ஞானத்தின் தன்மை பெறலாம்.

அதற்காக வேண்டித் தான்
1.இந்த உபதேச வாயிலாக அருள் ஞானிகளின் உணர்வைப் பதிவு செய்கின்றோம்
2.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதியை உங்களுக்கு ஏற்படுத்துகின்றோம்.

தியானித்து அதை வலுப்பெறச் செய்து கொண்ட பின் உடலை விட்டுப் பிரிந்த நம் முன்னோர்களின் ஆன்மாக்களை நாம் விண் செலுத்த வேண்டும்.

எத்தனை பேரை விண் செலுத்துகின்றோமோ அத்தனை பேரின் ஆற்றலும் நமக்குக் கிடைக்கின்றது. அவர்கள் முன் செல்ல பின்னாடி நாமும் அந்த நிலையை அடைய முடியும்.

ஏனென்றால் மீண்டும் இந்த உடல் பெற்றால் அது நரகலோகம் தான் அது போன்ற நிலையில் இருந்து நாம் விடுபடுவோம். பேயாகவோ நோயாகவோ நாம் உருவா(க்)க வேண்டாம்…!

இந்த மனித உடல் நமக்கு என்றுமே சொந்தமில்லை

இந்த மனித உடல் நமக்கு என்றுமே சொந்தமில்லை

 

நியூட்ரான் ஆயுதம் என்று கண்டுபிடித்து வைத்திருக்கின்றார்கள் கம்ப்யூட்டர் சாதனத்தின் மூலம் சில அதிர்வுகளைக் கொடுத்து அதை அடுத்த நாட்டிலே பரப்பினார்கள் என்றால் எந்தெந்த இயந்திரங்களைச் சேமித்து வைத்திருக்கின்றார்களோ அதை எல்லாம் அது செயலற்றதாக ஆக்கிவிடும்

இராக்கெட்டின் மூலமாக அடுத்த நாட்டில் ஒரு ஊரைத் (ஒரு இலக்கை) தாக்கும்படி வைக்கிறார்கள் (எதிரி நாட்டின் முகப்பு). ஆனால் அது தவறான பாதைகள் போகிறது என்றால் திசைகளை மாற்றி எவன் அனுப்பினானோ அவன் ஊரிலேயே வந்து விழுகும்படி செய்வார்கள். அதாவது
1.எவன் செய்தானோ அவன் ஊரிலேயே விழுந்து அவனை அழிக்கும்படி செய்வான்
2.செய்து வைத்த அனைத்து ஆயுதங்களுமே வெடிக்கும் நிலை ஏற்படலாம்.
3.அப்போது இந்த உலகமே விஷத்தன்மையாக மாற கூடிய வாய்ப்புகள் உண்டு
4.பத்து உலகத்தை அழிக்கக்கூடிய அளவிற்கு இந்த ஆயுதங்களைச் சேமித்து வைத்திருக்கின்றனர்
5.எப்படியும் இது வெடிக்கத்தான் செய்யும்… வெளியிலே வந்துவிடும்.

மின்னல்கள் தாக்கப்படும் பொழுது கடலிலே மணலாக மாறுகின்றது அதைப் பிரித்து யுரேனியமாக எடுக்கின்றார்கள். அணுகுண்டாகத் தயார் செய்து அதை வெடிக்கச் செய்யப்படும் பொழுது பல கட்டடங்களையும் மற்ற இடங்களையும் நொறுக்கித் தள்ளுகின்றது.

ஆனால் நியூட்ரான் என்ற ஆயுதம் என்ன செய்கிறது…?

“வைரஸ் உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது…” என்று அடிக்கடி சொல்கிறோம் அல்லவா. அதைப் போன்று காற்றிலே அதைக் கலக்கி வைத்து விட்டால் மனிதனுடைய சிந்தனைகள் அனைத்துமே இழந்துவிடும்.

என் பிள்ளை எது…? என் வீடு எது…? என்று தெரியாமல் போய்விடும். அந்த அளவிற்கு அதைப் பரப்பி வைத்து இருக்கின்றார்கள்.

இந்த விஷத்தன்மை (நியூட்ரான்) கடலோரத்தில் போனது என்றால்…
1.நட்சத்திரத்தினுடைய கதிரியக்கப் போறிகள் கடலிலே மணலாக இருப்பதுடன்…
2.மின் கதிர்களுடன் மோதிய உடனே வெப்பமாகி… சூறாவளியாக சுழல் காற்றாக மாறுகின்றது.
3.வெகு வேகமாகச் சுற்றி அடர்த்தியாக மாறும்…! கடலோரப் பகுதியில் தான் முதலிலே உற்பத்தியாகும்.

இப்படி உருவான இந்தச் சூறாவளி நகருக்குள் புகுந்து பெரிய பெரிய கட்டிடங்களை எல்லாம் துவம்சம் செய்து கொண்டு போகின்றது

உலகில் எங்கெல்லாம் விஞ்ஞான ஆராய்ச்சி செய்து கதிரியக்கங்களையும் நியூட்ரானின் வெடிப்புகளையும் செயல்படுத்தினார்களோ அங்கெல்லாம் இப்பொழுது இது நடந்து கொண்டே வருகின்றது.

இந்த உடல் நமக்கு என்றுமே சொந்தமில்லை…! இனி நாம் சொந்தமாக்க வேண்டிய அழியாத செல்வம் எது…? என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திதான்.
1.இந்த வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் அதை எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்
2.அது தான் நமக்குப் பெரிய சொத்து.

மனிதனாக மீண்டும் பிறவிக்கு வந்தால் அவஸ்தைகளைத் தான் பட வேண்டி இருக்கும் அத்தகைய நிலை இல்லாதபடி அனைத்தையும் ஒளியாக மாற்றிடும் சந்தர்ப்பமாக நாம் உருவாக்க வேண்டும்.

சூரியனே அழியும் காலம் உண்டு. அதற்கு முன் அழியாத அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்று இணைய வேண்டும். பெரும் பெரும் ஞானிகள் எல்லாம் அதனுடன் இணைந்து சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

ஆனால் இன்று பெரும்பகுதி மகான் (சாமியார்) என்று சொல்லக்கூடியவர்கள் எல்லாம் ஊரை ஏமாற்றுவதற்கும் உடலைக் காப்பதற்கும் உடலில் சுகங்களை அனுபவிப்பதற்கும் தான் ஞானிகள் ஆகின்றனர்.

தெய்வத்தின் பெயரைச் சொல்லியும் ஆன்மீகத்தைச் சொல்லியும் சொத்து சுகத்தைத் தேடுவதற்கும் தான் பார்க்கின்றனர். அத்தகைய நிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

நாம் வாழும் இந்தப் பூமியே நிலை தடுமாறும் காலம் வருகிறது

நாம் வாழும் இந்தப் பூமியே நிலை தடுமாறும் காலம் வருகிறது

 

இந்த உலகமே துரித நிலைகள் கொண்டு மனிதன் மிருகமாக மாறும் நிலை வருகின்றது… இல்லையென்றால் பூமியே நிலை தடுமாறும் நிலை வருகின்றது.

நிலை தடுமாறி விட்டால் அதை உணரப் போவதில்லை…!

ஆனால் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.இந்தத் தியானத்தில் வலுப்பெற்றால் அதையும் நாம் உணர முடியும்
2.அதிலிருந்து விடுபடும் ஞானமும் நமக்கு கிடைக்கும்.

ஆகவே இப்பொழுதிருந்தே அருள் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் அணுகுண்டுகளோ மற்ற ஆயுதங்களோ வெடித்தாலும் நம்மைப் பாதிக்காதபடி காத்துக் கொள்ள முடியும்.

எத்தனையோ விஷமான குண்டுகளை பூமிக்கு அடியிலே பாதுகாப்பாக வைத்துள்ளார்கள்… ஆனால் பெரும் பகுதி அது வெடிக்கும்…!

அப்படி வெடிக்கும் போது அதனால் ஏற்படும் அணுக் கதிரியக்கங்கள் மேக மண்டலங்களாக மாறி சூரியனுடைய ஒளிக் கதிர்கள் நம் பூமியிலே படாது தடைப்படுத்திவிடும்.
1.அத்தகைய சூழ்நிலை உருவாகி விட்டால் பூமி பனிப்பாறைகளாக மாறிவிடும்
2.பூமி இப்போது இருக்கும் திசை மாறி தலை குப்புறக் கவிழ்ந்துவிடும்.
3.நாமெல்லாம் கடலுக்குள் தான் போக நேரும்.

ஆனால் கடலுக்குள் சென்றபின் இந்த மனித உடலை இழந்து கடல் வாழ் நிலைகளாக… மீன் இனங்களாக உயிர் நம்மை மாற்றிவிடும்.

அதே சமயத்தில் பூமி பனிப்பாறையாக ஆனபின் எடை கூடி சூரியனை விட்டு நகர்ந்து சென்று சிதைவுண்டு… மற்ற ஏதாவது சூரிய குடும்பங்களுக்குள் ஈர்க்கப்படலாம்.

பத்து இருபது வருடங்களுக்கு முன்பே இன்னொரு சூரியக் குடும்பத்தில் இருந்து சிதைவுண்ட (பிரளயத்தில் சிக்கிய) ஒரு பூமி… தப்பித்து நம் சூரிய குடும்பத்திற்குள் வந்து கொண்டிருக்கிறது… என்று நான் சொன்னேன்.

நம் பிரபஞ்சத்தில் பனிப்பாறை அதிகமாக உள்ள வியாழன் கோளிலே அது விழுந்து சேதம் இல்லாது அங்கே அடங்கியது. நம் பூமியைப் போல உள்ள அதே உருவம் கொண்டது அது.

நம் பூமியிலே அது விழுந்திருந்தால் நாமெல்லாம் இன்று இருந்திருக்க முடியாது. விஞ்ஞானிகள் இதைக் கண்டு சொல்வதற்கு முன்னாடியே “நம் பிரபஞ்சத்திற்குள் வந்து கொண்டிருக்கிறது” என்று சொன்னேன்.

அப்போது அதை யாரும் லட்சியப்படுத்தவில்லை…!

நம் பிரபஞ்சத்தின் ஈர்ப்பிற்குள் வந்து சிதைந்து வியாழன் கோளிலே மோதியது என்று விஞ்ஞானிகளும் பின்னாடி சொன்னார்கள். இது போன்று
1.உலக நிலைகள் மாறிக் கொண்டிருக்கக்கூடிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
2.இந்த மனித உடலில் எவ்வளவு காலம் நாம் வாழப் போகின்றோம்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

காரணம்… எத்தனையோ கோடி இன்னல்களில் இருந்து தப்பித்தான் இந்த மனித உடலைப் பெற்றிருக்கின்றோம். நம் உயிர் இந்த உடலை உருவாக்கி உள்ளது.

ஆகவே… குறுகிய காலம் வாழும் நாம் அருள் உணர்வுகளை இப்போது வளர்த்துக் கொண்டால் இன்னொரு உடலின் ஈர்ப்புக்குள் செல்லாதபடி… உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக… வேகா நிலை பெற்றுத் துருவ நட்சத்திரத்தில் ஈர்ப்பு வட்டத்தில் “ஏகாந்த நிலையாக வாழ முடியும்…”

பகைமை என்பதே இல்லாது மகிழ்ச்சி என்ற நிலையில் என்றுமே அந்த அருள் வழியில் நாம் வாழ முடியும். இப்பொழுதிருந்தே இதைத் தயார் செய்து கொண்டால் தான் அந்த நிலை பெற முடியும்.

இறந்த பின் என்னவோ…? அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்…! என்று எண்ணினால் எந்த உணர்வுடன் கடைசியில் இறக்கின்றோமோ இன்னொரு உடலுக்குள் சென்று அங்கேயும் தீயதைத் தான் உருவாக்க முடியும்… மீண்டும் நரக வேதனையைத் தான் பட முடியும்.

இது போன்ற நிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

யாம் சொல்லிக் கொடுக்கும் இந்தத் தியானத்தின் மூலம் உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய ஒவ்வொரு அணுவிலும் துருவ நட்சத்திரத்தின் வீரிய சக்தியை வலு ஏற்றப் பழகிக் கொள்ள வேண்டும்.

1.உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்பதே என்னுடைய முழுமையான பிரார்த்தனை…!

நீங்களும் அதையே எண்ணி ஏங்கினால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எளிதில் பெறலாம். வளர்க்கும் முறைப்படி இப்படி வளர்த்து விட்டால் பிறவி இல்லா நிலை அடைவது உறுதி…!

வாழ்க்கையில் பெறக் கூடாதது “மனிதனின் ஆசை…!”

வாழ்க்கையில் பெறக் கூடாதது “மனிதனின் ஆசை…!”

 

ஒருவன் தீமை செய்கிறான் என்று பதிய வைத்துக் கொண்டால் “அவன் தீமை செய்தான்… ஆகவே அவனை விடுவேனா பார்…?” என்று எண்ணினால் என்ன ஆகும்…?

இந்தக் கணக்கின் பிரகாரம் நாம் சிந்தனை இழந்த நிலையாகச் செயல்படுவோம்.

1.எந்த எண்ணத்தால் “அவனை அழித்திட வேண்டும்…” என்ற எண்ணம் ஓங்கி வளர்கின்றதோ
2.அதன் மேல் நாம் கொள்ளும் பாசம் அவனுக்குள் விளைந்த தீயவினைகள் நமக்குள் விளையத் தொடங்குகின்றது.

அதே சமயத்தில் ஒரு நோயாளியை நாம் உற்றுப் பார்த்துப் பதிவாக்கி விட்டால் பாசத்தால் “இப்படி வேதனைப்படுகின்றாரே…” என்று எண்ணினால் அவர் நோயின் உணர்வுகள் நமக்குள் வருகிறது.

அப்படி நோயாளியை உற்றுப் பார்த்த அந்தக் கணக்கின் பிரகாரம்
1.அவரையே நாம் எண்ணிக் கொண்டிருந்தால் அந்த நோயின் தன்மை நமக்குள் வளர்ந்து விடுகிறது.
2.அடுத்து நாமும் வேதனைப்படுவோம்.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் நாம் கண்ணுற்றுப் பார்க்கப்படும்போது
1.அவர்களைப் படமெடுத்து
2.அவர்களில் உருவான உணர்வுகள் அவருடைய நிலைகளை
3.“எவ்வளவு நேரம் எண்ணுகின்றோமோ… எவ்வளவு நேரம் அறிகின்றோமோ…?”
4.அந்தக் கணக்குகள் கூடிவிடும்.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் பெறப்படாதது… பெறக் கூடாதது… “மனிதனின் ஆசை…!”

சிவன் ஆலயத்தில் “நந்தீஸ்வரா…” என்று இது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

நந்தீஸ்வரன் என்றால் நாம் ஒவ்வோரு நொடியிலும் சுவாசிப்பதை உயிரான ஈசன் உருவாக்கும். நம் உடலுக்குள் போனவுடன் அதே குணத்தை உருவாக்கும்.

1.நாம் சுவாசிக்கும் உணர்வின் கணக்குகள்… நம் உடலுக்குள் கூடும் பொழுது
2.அதில் எது அதிகமோ அடுத்த நிலை அடைவாய்…! என்று தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

ஆகவே அந்த நந்தீஸ்வரன் எதுவாக இருக்க வேண்டும்…?

நம்மைப் போன்று இந்தப் பூமியில் வாழ்ந்தவர்கள் தன் மனித வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்களை வென்று நஞ்சினை ஒளியாக மாற்றினார்கள்.

உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை ஒளியின் சரீரமாகப் பெற்று கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து அந்த உணர்வின் தன்மை கொண்டு அவர்கள் விண்ணிலே துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று நந்தி (அணுகி) நமக்குள் சென்று அவன் எப்படித் தீமைகளை நீக்கினானோ… அதைப் போல நாமும் நமக்குள் தீமைகளை நீக்க வேண்டும்.

அப்படி நீக்குவதற்கு நாம் எப்படிச் சுவாசிக்க வேண்டும்…?

காலை 4 மணிக்கு இதை எடுத்து துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலந்து… எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்த சக்தியைப் பெற வேண்டும் என்று
1.நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு இப்படிச் சாப்பாடு கொடுக்க வேண்டும்.
2.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அவரின் துணை கொண்டு அதனை நாம் பெறுதல் வேண்டும்.

ஆகவே நாம் பெற வேண்டியது இதைத் தான்…!

பற்றும் பாசமும் நம்முடன் வருவதில்லை என்றால் நாம் பற்ற வேண்டியது எதை…?

பற்றும் பாசமும் நம்முடன் வருவதில்லை என்றால் நாம் பற்ற வேண்டியது எதை…?

 

ஒரு நண்பன் மேல் பாசம் கொண்டு அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றேன். இந்த உணர்வு எனக்குள் பதிவாகின்றது. அதே நினைவுடன் கண் கொண்டு நண்பனைப் பார்த்த பின் மகிழ்ச்சியுடன் அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்கின்றேன்.

நண்பன் என்று வளர்ந்தாலும் காலப் போக்கில் அவன் என்னை மதிக்கும் தன்மை குறைந்து விட்டால் என்ன ஆகிறது…?

நான் நண்பனை மதிக்கின்றேன். ஆனால் நண்பனோ என்னைச் சரியாக மதிக்கவில்லை… சீராக எனக்கு உதவி செய்யவில்லை…! என்று
1.இந்த எதிர்பார்ப்புகள் அதிகாமன பின் நண்பனை வெறுக்கும் உணர்வுகள் வளர்கின்றது.
2.அன்று அத்தனை உதவி செய்தேன்… இன்று எனக்கு இப்படிச் செய்கிறான்… என்று அகம் கொள்ளுகின்றது
3.தன்னைக் காத்துக் கொள்ளும் நிலைகள் கொண்டு அவனைக் குற்றவாளியாக்குகின்றது
4.முதலில் உதவி செய்த பண்புகளை மாற்றிவிட்டு அவனுக்குத் தீங்கு செய்யும் நிலையையே உருவாக்கி விடுகின்றோம்.

ஆக…. நமக்குள் இருக்கும் 108 அகமதிகளும் (108 விதமான குணங்கள்) அகங்கார நிலைகளும் “தன்னைத் தன்னைக் காத்திடும் நிலையாகவே” அது வருகின்றது.

விவசாயப் பண்ணைகளில் ஒரு செடியில் அதனுடன் மற்ற செடிகளின் கருக்களைச் சேர்த்த பின் அதற்குத்தக்க செடிகளில் மாற்றங்கள் அடைகின்றது.

இதைப் போன்று விஞ்ஞான அறிவு கொண்டு உயிரினங்களில் உள்ள அணு செல்களை எடுத்து மற்ற மற்ற உயிரினங்களில் இணைக்கும் போது உயிரினங்களிலே உருமாற்றங்களைச் செயல்படுத்தும் தன்மை மனிதனுக்கு வருகின்றது.

தாவர இனங்களை மாற்றுவது போல் உயிரினங்களை மாற்றுவது போல் தான் நாம் நுகரும் உணர்வுகளைச் சீர்படுத்தவில்லை என்றால்
1.அது நம் நல்ல குணங்களைத் தீமையின் உணர்வுகளாக மாற்றிவிடும்
2.உடலின் அமைப்பை மாற்றிவிடும்… குணங்களை மாற்றிவிடும்
3.பின் இருள் சூழும் நிலைகள் கொண்டு பரிணாம வளர்ச்சியில் வளர்ந்ததற்கு மாறாக தேய்பிறையான நிலைகளுக்கு அழைத்துச் சென்று விடும்.

மனிதர்களான நாம் ஆறாவது அறிவு கொண்டு இன்று பல பொருள்களை இணைத்துச் சுவை மிக்கதாக உருவாக்கி உணவாக உட்கொள்கிறோம்.

அது போல… நமது வாழ்க்கையில் கேட்டுணர்ந்த உணர்வுகளையும் அதனதன் இயக்கத்திற்கு விடாதபடி நாம் சமப்படுத்த வேண்டும்.

நல்லது கெட்டது என்று தெரிந்தாலும் நுகர்ந்த உணர்வுக்கொப்பத் தான் தனக்குள் சமப்படுத்தும் நிலை வருகின்றது. நாம் எதை எண்ணுகின்றோமோ அதன் வழியே வழி பார்க்கின்றது

1.நண்பன் என்ற நிலையில் எண்ணங்கள் பாசத்துடன் வரும் பொழுது காக்கும் நிலைகளை உருவாக்குகின்றோம்
2.ஆனால் சிறிதளவு பகைமை என்று உணர்வுகள் வந்து விட்டால் அவனைத் தாக்க வேண்டும் அவனை அழித்துவிட வேண்டும் என்ற உணர்வே வருகின்றது

ஆகவே பற்றும் பாசமும் இந்த உலகில் நமக்குள் பல நன்மைகளையும் செய்கின்றது தீமைகளையும் செய்கின்றது.

ஆனால் பற்றும் பாசமும் நம்முடன் வருவதில்லை. அப்படி என்றால் நாம் பற்ற வேண்டியது எதை…?

அருள் மகரிஷிகளின் உணர்வுகளைத் தான்…!

பிறிதொன்று நம்மை இயக்காதபடி அருள் ஒளி என்ற நிலைகளில்
1.அகண்ட அண்டத்திலும் நஞ்சின் தன்மை தன்னைத் தாக்கிடாது
2.அதை ஒளியாக மாற்றிய அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து
3.பகைமை உணர்வுகள் எப்பொழுது உருப் பெறுகின்றதோ அதை அடக்குதல் வேண்டும்;.

மிளகாய் காரத்தின் தன்மை கொண்டது தான். மற்ற பொருளுடன் இணைக்கப்படும் பொழுது அந்தக் காரத்தின் உணர்ச்சிகள் தணிகின்றது. உப்பு கைப்பாக இருக்கின்றது… அதை மற்றவைகளுடன் சமப்படுத்தும் போது சுவையின் தன்மை கூடி மகிழ்ச்சி ஊட்டுகின்றது.

எனவே எதனை நாம் நுகர்ந்தாலும் அருள் ஒளியின் உணர்வை நமக்குள் சேர்த்து
1.அந்த அகங்காரத்தை எடுத்து விடாதபடி
2.அருள் ஞானத்தை நமக்குள் வளர்த்திடல் வேண்டும்.

அப்படி வளர்த்தோம் என்றால் நம்மை இருள் சூழாத நிலையும் ஒளியின் உணர்வாக மாற்றிடும் ஆற்றலையும் நாம் பெறுகின்றோம்.

ஒரு நொடிக்குள் ஏற்படப் போகும் மாற்றம்…

ஒரு நொடிக்குள் ஏற்படப் போகும் மாற்றம்…

 

விஞ்ஞான உலகில் வாழும் அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு மெய் ஞான வாழ்க்கையை நாம் தொடர்தல் வேண்டும்.

விஞ்ஞான வாழ்க்கையில் வரும் கடுமையான விஷத்தன்மைகளால் சூரியனின் இயக்கச்சக்தி எத்தனையோ மாற்றங்களைச் சந்தித்து வருகிறது.

1.வெயிலின் அழுத்தம் கடுமையாக… இன்று எப்படிச் சுட்டெரிக்கும் வெயிலாக வருகின்றதோ
2.சூரியனின் இயக்கம் ஒரு நொடிக்குள் கரண்ட்டை அதிகமாக உற்பத்தி செய்யும் நிலையாக
3.பூமிக்குள் நிலநடுக்கம் ஏற்படுவது போல் மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகள் சூரியனை அணுகும் நிலையாகி விட்டது.

ஒரு எலக்ட்ரிக் வயருடன் இன்னொரு எலக்ட்ரிக் வயர் உராய்ந்தால் அதிகமான மின்சாரம் பாய்ந்து பல்புகள் ஃப்யூஸ் ஆவது போல
1.ஒரு நொடிக்குள் சூரியனுக்குள் தாக்குதல் அதிகமாகி அதிகமான காந்தப்புலன்களை அது உமிழ்த்தி
2.அந்த உணர்வுகள் மனித உயிருக்குள் உராயப்பட்டு அதனின் உணர்வின் தொடராக அதிகமான உணர்ச்சிகளைத் தூண்டி
3.நம் உடலில் உள்ள அணுக்களில் கடுமையான மாற்றங்கள் மாற்றப்பட்டு
4.மனிதனே மனிதனல்லாத நிலைகள் செயல்படுத்தும் உணர்ச்சிகளைத் தூண்டி மனிதனைத் தாக்கிடும் நிலையாக வரும்.

ஒரு நொடி மாற்றத்தின் நிகழ்வுகளிலிருந்து உங்களைக் காக்கவும் உங்கள் சார்புடையவரைக் காக்கவும் இந்த உலகைக் காக்கவும் அருள் ஒளியின் உணர்வை தினமும் காலை துருவ தியானத்தில் கணவனும் மனைவியும் எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் நமக்கு உறுதுணையாக இருக்க
2.”நாம் அனைவரும் ஒன்று…” என்ற நிலைகளில் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற
3.எங்கிருந்தாலும் துருவ தியானத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தியானித்துப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் அழுத்தத்தை நாம் அதிகமாகக் கூட்டி அதை அடர்த்தியாக உலகெங்கிலும் பரவச் செய்து உலக மக்களையும் காக்க முடியும்… அவர்களையும் நாம் நல்லவர்களாக்க முடியும்.

உலக மக்களின் தீமையான உணர்வுகள் நமக்குள் இருந்தாலும் பகைமையான உணர்வை வளர்க்கும் தன்மையிலிருந்து நம்மை மீட்டிக் கொள்ள முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நமக்கு அருளிய அருள் வழிப்படி இந்த வாழ்க்கையில் வரும் பகைமைகளை மாற்றி நஞ்சினை வென்று… நஞ்சினை வென்றிடும் அருள் உணர்வின் தன்மையை நமக்குள் உருவாக்கிடல் வேண்டும்.

நம் ஆறாவது அறிவைக் கார்த்திகேயா என்றாலும்… தீமைகள் புகாது சேனாதிபதியாக அருள் ஒளியின் உணர்வை எடுத்துத் தீமைகளைத் தடுத்து நிறுத்தி அதனுடைய செயலாக்கங்களை மாற்றிடல் வேண்டும்.

ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி மெய் உணர்வின் வழிப்படி நாம் வாழ்ந்தோமென்றால் அடுத்து நமக்குப் பிறவி இல்லை. அதை அடைவது தான் மனிதனுடைய கடைசி எல்லை.

1.உயிர் தோன்றி உணர்வின் தன்மை மனிதனாக உருவாக்கிய நிலைகளில்
2.உயிருடன் ஒன்றிய உணர்வின் அறிவாக ஒளியாக மாறுதல் நாம் வேண்டும்.

எத்தகைய அழுக்குப் பட்டாலும் உடலை நாம் தூய்மைப்படுத்துகின்றோம். இந்த உடலிலே ஒரு திரவகமே பட்டு அதனால் தசைகள் வெந்தாலும் நாம் மருந்தைப் போட்டு அதை ஆற்றத் தொடங்குகிறோம்.

இதைப் போன்று
1.கடும் வேதனையான உணர்வுகளை நுகர்ந்தாலும் “அருள் மகரிஷிகள் உணர்வுகளை வைத்து அதை நீக்கிடல் வேண்டும்…”
2.இதுவே வாழ்க்கை என்ற நிலையில் அருள் வாழ்க்கை வாழ்வோம்
3.அருள் ஆற்றலை நாம் பெறுவோம்… அருள் ஆசையுடன் வாழ்வோம்.

இதைப் பேராசை என்று கூடச் சொல்லலாம்…!

அருள் வாழ்க்கை வாழ வேண்டும் என்ற இந்த ஆசை என்றுமே நமக்குள் நிலையானதாக இருக்க வேண்டும். அதன் வழி வளர்ச்சி அடைந்தால் “உடல்” என்ற ஆசையிலிருந்து விடுபடுகின்றோம்.

ஆனால் உடலுக்காக வாழும் போது “எண்ணியபடி நடக்கவில்லை…!” என்று நம்முடைய ஆசைகள் தடைபடும் பொழுது இது பேராசையாக மாறுகின்றது.
1.முதலில் ஒரு பத்தாயிரம் ரூபாய் இருந்தால் போதும் என்று நினைப்போம்
2.அது வந்த பின் அடுத்து ஒரு லட்சம் கிடைத்தால் போதும் என்று நினைப்போம்.
3.முதலில் ஒரு சிறிய வீட்டைக் கட்டி இருப்போம்
4.அடுத்து இதைக் காட்டிலும் விசாலமான வீட்டைக் கட்டினால் நலமாக இருக்கும் என்று ஆசையைக் கூட்டிக் கொண்டே இருப்போம்.
5.சிறிது தடைப்பட்டாலோ வேதனைகள் கூடிவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

ஆகவே இருளை அகற்றிடும் அருள் சக்தியைப் பெறுவோம்… மெய் ஞானிகளுடன் ஒன்றி வாழ்வோம்… மெய் ஞான வாழ்க்கை வாழ்வோம்

உயிருடன் ஒன்றி நாம் வாழ்வோம்… என்றும் பேரின்பம் பெறுவோம்… பெரு வாழ்க்கை வாழ்வோம். பிறவி இல்லா நிலை அடைவோம்… அருள் ஒளியாக என்றுமே நிலை கொள்வோம்.

1.சூரியனே அழிந்தாலும் அகண்ட அண்டத்தில் என்றுமே நாம் என்றும் பதினாறு என்ற நிலைகளில் ஏகாந்தமாக வாழலாம்
2.வைகுண்ட ஏகாதசி வைகுண்டம் என்றால் அகண்ட அண்டத்திலும் ஏகாந்த வாழ்க்கை வாழக்கூடிய தன்மை.

பகைமை உணர்வுகள் நமக்குள் வளராது அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற வாழ்க்கையை வாழத் தொடங்கினால் இதுவே வைகுண்ட ஏகாதசி…! என்றும் பகைமைகள் புகாத நிலையாக வருகின்றது.

ஆனால் விஷத்தின் தன்மை அதிகரித்து விட்டால் புவியின் ஈர்ப்புக்குள் நம்மைச் சிக்க வைத்துவிடும். இதிலிருந்து நாம் மீண்டு அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்வோம்… ஏகாந்த நிலை பெறுவோம்.

பேரின்பம் பெறுவோம்… ஏகாந்த நிலை பெறுவோம்…! என்று பிரார்த்தித்து நிறைவு செய்கின்றேன் (ஞானகுரு).

சூரியனிலிருந்து மீண்டும் மீண்டும் விஷமான கதிர்வீச்சுகள் (CME) வெளி வரக் காரணம் என்ன…?

சூரியனிலிருந்து மீண்டும் மீண்டும் விஷமான கதிர்வீச்சுகள் (CME) வெளி வரக் காரணம் என்ன…?

 

இன்று விஞ்ஞான அறிவால் கண்டுணர்ந்த நிலைகள் கொண்டு மற்ற நட்சத்திரங்களில் ஏற்படும் கதிரியக்கப் பொறிகளை அடக்கி அணு சக்தியாக (ஆயுதங்களாக) மாற்றுகின்றார்கள்.

அணு ஆயுதங்களை வெடிக்கச் செய்யும் பொழுது அது உலோகத்திற்குள் இருக்கும் ஒரு நட்சத்திரத்தின் சக்தியை அதாவது
1.அந்த உலோகத்தில் இருக்கும் அணுக் கதிரியக்கங்களில் இந்த இரண்டும் மோதிய பின்
2.அந்தக் கடினமான உலோகமே ஆவியாக மாறி விடுகின்றது

இது போன்ற நிலைகள் விஞ்ஞானத்தால் கவர்ந்த விண்ணுலக ஆற்றல்கள் பரவிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் சூரியனுடைய காந்தப் புலனறிவு அதைக் கவருகின்றது… கவர்ந்தபின் அதை ஜீரணிக்கும் சக்தியும் இழக்கின்றது.

நட்சத்திரங்கள் பிற மண்டலங்கள் வெளிப்படுத்தும் சக்திகளைக் கவர்ந்து தூசிகளாக மாறி வரும் நிலையில்… சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் அது வரப்படும் பொழுது தனக்குள் உருவாக்கப்பட்ட பாதரசத்தின் சக்தி கொண்டு எதிர்த்துத் தாக்கி நெருப்பாகி அதில் உள்ள விஷத்தைப் பிரிக்கின்றது. இது இயற்கை.

ஆனாலும் மனிதன் விஞ்ஞான அறிவால் கண்டுணர்ந்த நிலைகள் அணுக்கதிரியக்கங்களாக உருவாக்கப்பட்டு அதைப் பரவச் செய்யப்படும் பொழுது பூமியைக் கடந்து வெளி செல்கிறது. அதைச் சூரியனுடைய காந்தசக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.

இருந்தாலும் சூரியனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் அது செல்லப்படும் பொழுது கதிரியக்கப் பொறிகள் சூரியனுக்குள் ஊடுருவி விடுகின்றது… சூரியன் அதை ஜீரணிக்கும் சக்தி இழந்து விடுகின்றது
1.மனிதனால் உருவாக்கப்பட்ட இத்தகைய நிலைகள் சூரியனுக்குள் ஊடுருவப்படும் போது
2.நடு மையம் அடைந்தபின் கொதிகலனாக மாறுகின்றது.

ஆனால் சூரியனோ ஐஸ் பாறைகளால் உருவாக்கப்பட்டது. அந்த உணர்வின் தன்மை வரப்படும் பொழுது பாதரசங்களாக உருவாகும் குளிர்ந்த சாதனம் போன்று உண்டு. பாதரசத்தை எடுத்துக் கொண்டால் விறு விறு விறு என்று இருக்கும்.

ஆக… கதிரியக்கப் பொறிகளால் பாதரசத்தை உருவாக்கும் சூரியனுடைய நிலைகள் மாறி கொதிகலன்கள் ஆக மாறுகிறது.
1.இன்று பத்திரிக்கைகளிலும் டி.வி.க்களிலும் பார்க்கலாம்…
2.சூரியனின் கரும்புள்ளிகளிலிருந்து கடுமையான கதிர்வீச்சுகள் வெளி வருகிறது என்று – CORONAL MASS EJECTION “CME”)

கடல் நீருக்குள் இருக்கும் ஹைட்ரஜனை வைத்து விஞ்ஞான அறிவால் உருவாக்கப்பட்ட அணுகுண்டுகளை அடக்கி வைத்துள்ளார்கள் விஞ்ஞானிகள்.

அதே போல சூரியனும் தனக்குள் அடக்கும் சக்தி இருந்தாலும் அந்தச் சக்தி இழக்கும் தன்மை வந்து விட்டது. செயற்கையில் உருவாக்கப்பட்டது பெருகப் பெருக நாளடைவில்
1.அந்தக் கதிரியக்கப் பொறிகள் சூரியனையே மாற்றி அமைக்கும் சக்தியாக வந்து விட்டது.
2.அதே உணர்வுகள் ஊடுருவிய பின் நம் உலகத் தன்மையும் மாறுகின்றது.
3.தாவர இனங்கள் மரம் செடி கொடிகளில் இந்த உணர்வுகள் படரப்படும் மரங்கள் கருகும் தன்மை வருகின்றது… காடுகள் கருகுவதையும் பார்க்கலாம் (FOREST FIRE).

அதே சமயத்தில் இந்த உணர்வின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது மேகங்களில் ஊடுருவி மேகங்கள் மறைந்துள்ள அணுக் கதிரியக்கங்களைத் தன்னுள் இணைத்த பின் மேகக் கூட்டத்தை கலைத்திடும் நிலை வருகின்றது. இன்னொரு பக்கம் அது குவிந்து கடுமையான மழை பெய்து ஊரையே அழிக்கிறது (CLOUD BURST).

இதைப் போன்று இந்தக் கதிரியக்கங்கள் மழை நீரின் வழி வரப்படும் பொழுது மற்ற உலோகங்களில் கலக்கப்பட்டுத் தாவரங்களிலும் சேர்கின்றது.

உணவுப் பயிர்கள் வழி இது மனிதனின் உணர்வுக்குள் கலக்கப்படும் பொழுது மனிதனுடைய உடலில் உள்ல அணுக்களிலும் இது கலக்கப்படுகின்றது.

இப்படி வானுலக ஆற்றல் கதிரியக்கப் பொறிகளாக விஞ்ஞான அறிவில் வந்தபின் அணு ஆயுதங்கள் வெடித்தால் எல்லாமே அதன் தொடர் வரிசையில் கருகிவிடும்.

அதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால்
1.அருள் ஞானிகளின் உணர்வை எடுத்து அகஸ்தியன் உணர்வின் தன்மை கொண்டு
2.கதிரியக்கப் பொறிகளை வெடிக்காத வண்ணம் “நீர் நிலைகள் உருவாக வேண்டும்…” என்ற உணர்வினை
3.உங்கள் எண்ணத்தால் பாய்ச்சினால் அந்தச் சாதனங்கள் செயல் இழக்கப்படுகின்றது.

காரணம்… அந்த நீரின் வன்மையை
1.அகஸ்தியன் அவன் அமர்ந்த இடங்களில் மேகங்களைக் கூட்டச் செய்து நீராக வடியச்செய்து ஜீவ நதியாக ஓடும் நிலைகள் பெற்றது.
2.ஜீவனுள்ளதாக அனைத்தையும் உருவாக்கும் நிலைகள் ஆஅதியிலே அகஸ்தியனால் உருவாக்கப்பட்டது.

அகஸ்தியன் பெற்ற நீர் சக்தி மிக மிக முக்கியமானது

தாவர இனச் சத்தை உணர்வின் ஒளியாகத் தனக்குள் வளர்க்கப்பட்டவன்… தாய் கருவிலே அத்தகைய சக்தியைப் பெற்றவன். அந்த அகஸ்தியன் அவன் வெளிப்படுத்திய பேருண்மைகளை… இயற்கையின் தன்மைகளை மாற்றி விட்டார்கள்.

மறைந்த நிலைகளைத் தான் குருநாதர் காட்டிய வழியில் இங்கே வெளிப்படுத்துகின்றோம்.

ஞானிகளின் உணர்வை ஏன் பற்ற வேண்டும்…? மற்றவைகளைப் பற்றற்றதாக ஏன் மாற்ற வேண்டும்…? என்பதை அறிந்து கொள்ளுங்கள்

ஞானிகளின் உணர்வை ஏன் பற்ற வேண்டும்…? மற்றவைகளைப் பற்றற்றதாக ஏன் மாற்ற வேண்டும்…? என்பதை அறிந்து கொள்ளுங்கள்

 

ஒரு தெருவில் வளர்ந்த நாய் அடுத்த தெருப் பக்கம் வரும்போது அந்தத் தெருவில் இருக்கக்கூடிய நாய்கள் இதை விடுவதில்லை. பார்த்தோமென்றால் சண்டை போட்டுக் கொண்டே இருக்கும்.

காடுகளிலே வாழும் புலிகளை எடுத்துக் கொண்டாலும் ஒரு பக்கம் உருவான புலிகள் அடுத்த பக்கம் வாழும் புலிகள் இருக்கும் இடத்திற்குச் சென்றால் அங்கிருக்கும் புலிகள் எல்லாம் சேர்ந்து அதைக் கொல்லப் பார்க்கும்.

கூட்டமாக வாழும் மான் இனங்களும் ஒரு பகுதியில் உள்ளது அனைத்தும் இணைந்து வாழ்ந்தாலும் இன்னொரு பகுதிக்கு அவைகள் சென்றால் அங்கிருக்கும் மான்கள் எல்லாம் சேர்ந்து இதை எதிர்த்துத் தாக்கும் நிலை வருகின்றது.

ஏனென்றால்…
1.இங்கே வந்து விட்டால் தனக்குக் கிடைக்கும் உணவு பங்கு போய்விடுமே…! என்று தான்
2.இந்தப் போர் நிலை வருகின்றது… இயற்கையிலிருந்தே இந்த நிலை தான் வருகிறது.

இதைப் போன்றே மனிதனும் மாறுபட்டு வந்தான் என்ற நிலைகள் வரும் பொழுது அன்று வாழ்ந்த காட்டுவாசிகளும் அப்படித்தான் வாழ்ந்தார்கள்.

அதற்குப் பின் நாட்டுக்கு நாடு ஆளும் அரசர்கள் என்று வந்தாலும் அடுத்த நாட்டுக்காரன் இங்கே வந்தால் நம்மை அடிமைப்படுத்தி விடுவான் என்றும் இப்படி ஒருவருக்கொருவர் போர் செய்யும் நிலையும் அதன் வழியில் மற்றவரை அடிமைப்படுத்தும் தன்மை வந்தது.

இது வளர்ந்து வளர்ந்து உலகமெங்கும் இந்த உணர்வுகள் பரவி…
1.தன் இனத்தைத் தவிர மற்றது வந்தாலே
2.எதிர்த்துத் தாக்கும் நிலையே உள்ளது.

ஒருவன் தவறு செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அந்தத் தவறு செய்பவன் வெளிப்படுத்தும் உணர்வை ஒரு நல்ல மனிதன் நுகர்ந்தான் என்றால் அந்த உணர்ச்சியின் தன்மை அவனுக்குள் வருகிறது.

நல்ல மனிதன் அதை நுகரும்பொழுது “அவன் தவறு செய்கிறான்…” என்ற எண்ணங்களைத் தோற்றுவிக்கின்றது. தவறு செய்கிறான் என்று சுட்டிக் காட்டிச் சொன்னால் தவறு செய்தவனுக்கு நம்மைப் பற்றி இவன் தவறாகச் சொல்கிறான் என்ற பழி உணர்ச்சி வருகின்றது.

1.தவறு செய்கிறான் என்று சொன்னால்
2.என்னைப் பற்றித் தவறாகப் பேசுகிறார் என்று அவனை எதிரியாகப் பார்க்கின்றான்.
3.அவனுக்கு எப்படியும் தொல்லை கொடுக்க வேண்டும் என்ற உணர்வு தான் வருகின்றது.

இப்படித்தான் நாம் வெளிப்படுத்தும் உணர்வுகளை மற்றவர்கள் நுகர்ந்தால் அந்த நுகரந்த உணர்வு அவர்களை எப்படிச் செயல்படுத்துகிறது என்பதைப் பார்க்கலாம்.

நண்பர்களாகப் பழகுகின்றோம்… அன்பாகப் பழகுகிறோம் என்றும் என்று வைத்துக் கொள்வோம். நம்மிடம் பழகிய அந்த நண்பன் இன்னொரு பக்கம் தவறு செய்கிறான்.. பெரிய குற்றங்களை அவன் செய்து விட்டான்.

சம்பந்தப்பட்டவர்கள் ஏன் இப்படிச் செய்கிறாய்…? என்று கேட்கின்றார்கள். நண்பன் என்ற பற்று இருக்கும் போது
1.பாசத்தால் அவன் தவறை மறந்து
2.தவறு செய்ததை மற்றவர் கேட்கப்படும் பொழுது அவர்களைத் தாக்க ஆரம்பிக்கின்றோம்.

இது தான் இன்று இருக்கக்கூடிய உணர்வுகளின் இயக்கங்கள்.

காரணம்… பற்று எதன் மீது இருக்கின்றதா அவன் உணர்வும் இங்கே வந்து விடுகின்றது. அந்த உணர்வின் வழிப்படியே இவருடைய செயலும் மாறுகின்றது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டால் தான் ஞானிகள் காட்டிய பேருண்மைகளை நாம் உணர முடியும்… பகைமை இல்லாது துன்பம் இல்லாது உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.