பிறந்த பின் அமைவது விதி அல்ல… தாயின் கருவில் தான் நம் விதியே நிர்ணயமாகின்றது

meditation high tech

பிறந்த பின் அமைவது விதி அல்ல… தாயின் கருவில் தான் நம் விதியே நிர்ணயமாகின்றது

 

இன்றைய மனிதனின் நிலைகளில் “விதி…!” என்ற நிலைகள் ஒன்று உண்டு என்றால் அது எப்படி இருக்கிறது…?

மனிதன் தாயின் கருவிலே சிசுவாக வளரப்படும் பொழுது அந்தத் தாய் எதை உற்றுப் பார்த்து அந்த உணர்வின் தன்மையை அது பதிவாக்குகின்றதோ…
1.அதுவே குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக ஆனாலும்
2.அந்த விதியே அவன் வளர்ச்சியில் அதன் நிலைகளே வளர்த்துக் கொண்டிருக்கும்.

உதாரணமாக ஒரு நோயாளியை அந்தத் தாய் கருவுற்ற ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்களிலே உற்றுப் பார்த்தால் கருவிலே விளையப்படும் பொழுது குழந்தைக்கு இந்த நோயின் உணர்வுகள் பதிவாகி விடுகின்றது.

அது வளர்ச்சி அடைந்து பிறக்கப்படும் பொழுது அந்தத் தருணம் வரப்படும் பொழுது முடிவின் தன்மையாக அவன் விதிப்படி அந்த நோய் வந்தே தீரும்.

நீங்கள் ஜோதிடம் பார்த்து அல்லது வேறு எந்த மந்திரத்தைச் செய்தாலும் டாக்டரிடம் சென்று நீக்க முயற்சி செய்தாலும் அந்த விதிப்படி அந்த நோயின் பாதிப்பு இருக்கத்தான் செய்யும்.

1.அவர் மருந்துகள் கொடுப்பார்
2.இருந்தாலும் அந்தத் தருணம் வந்த பின் அந்த மருந்து கொடுத்ததில் உள்ள நஞ்சே
3.அது தன்னுடன் இணைத்து இணைத்து அதுவும் பெருகி இவரை வீழ்த்தியே தீரும்.

ஆக சிறிது நாளைக்கு அந்த வலியிலிருந்து தப்பலாம். ஆனால் உள்ள விஷத்தைத் தனக்குள் எடுத்து உடல் உறுப்புகளைக் கொன்று இந்த விதிப்படி அவன் மடிந்தே தான் தீருவான்.
1.விதி இப்படிப்பட்ட ரூபத்திலே தான் வருகின்றது…!
2.நாம் பிறந்த பின் வருவதெல்லாம் அது விதியாகாது.

கருவில் வளரப்படும் பொழுது அந்தத் தாய் எதை எதை எல்லாம் தனக்குள் உருவாக்கி உள்ளதோ அந்த விதியின் பலனே நடக்கும்.

தாய் கருவிலே இருக்கும் பொழுது… ஒரு தத்துவத்தைப் பேசி உயர்ந்த ஞானத்தைப் பேசி “அதன் வழி உயர்ந்தார்…” என்ற ஏக்கத்துடன் தன் குடும்பத்தின் நிலைகள் சிக்கல் அதிகமாகும் பொழுது எண்ணி
1.அந்த மகான்களை எண்ணி…
2.அந்த மகானின் உணர்வுகள் எங்கள் குடும்பத்தில் படர வேண்டும் என்ற இந்த எண்ணத்தை ஓங்கி வளர்த்து
3.அதிலே நாட்டத்தை அந்தத் தாய் அதிகம் செயல்படுத்தியிருந்தால்
4.அந்த உணர்வின் தன்மை கொண்டு ஒரு சாது வரப்படும் பொழுது அந்த மகானின் அருள் பெறவேண்டும் என்று
5.அவரிடம் சக்தி இருக்கிறதோ இல்லையோ அவரை மகானாக எண்ணி
6.அந்த உணர்வினைப் பெறவேண்டும் என்ற எண்ணம் வரும் பொழுது அந்த உயர்ந்த சக்தி பதிவாகின்றது.

அதே சமயத்தில் ஒரு யாசகத்தைக் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நீ நன்றாக இரம்மா… உன் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்கும்…! என்ற இந்தச் சொல்லை அந்த சாதுவிடம் இருந்து பதிவாக்கப்படும் பொழுது அந்த உணர்வின் தன்மை கருவிலே வளரக்கூடிய சிசுவிற்கு “அது விதியாகின்றது…”

அதன் விதிப்படி அதன் வளர்ச்சிகள் இங்கே வளர அவன் எதிர்பார்க்காத நிலைகள் காரியங்கள் எல்லாம் சித்தியாகும். குடும்பத்தில் நான்கு பேர் இருந்தாலும் ஒருவன் தொலைத்துக் கொண்டே இருப்பான். ஆனால் இவன் ஒருவன் வளர்ந்து கொண்டே இருப்பான்.

அந்தக் குடும்பமோ தரித்திரமான நிலைகளில் இருக்கும். ஆனால் தாய் கருவில் இருக்கும் பொழுது எதை எடுத்ததோ ஒருவருக்கு நோய் வந்திருக்கின்றது என்றால் அந்தக் குழந்தை நலிந்து கொண்டே இருப்பான்.

அவனை எண்ணும் பொழுதெல்லாம் தாய் வேதனைப்பட்டுக் கொண்டேயிருக்கும். இந்த வேதனை குடும்பத்தில் அனைத்தையும் மாற்றிக் கொண்டேயிருக்கும்.

ஆனால் அதே குடும்பத்திலே ஒருவர் ஞானத்தின் வழி கருவாகி உருவாகி இருந்தால் தன் நிலைகளை எடுத்துக் கொண்டு இந்தத் தீமைகளை வெல்லும் சக்தியாக அவர் வளர்வார். இது எல்லாம் விதிப்படி நடக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

இதற்குத்தான் மதி கொண்டு அந்த விதியை மாற்ற வேண்டும் என்று சொல்வது…!

ஒரு தீமையை நாம் பார்க்கின்றோம் மனித வாழ்க்கையில். அந்த உணர்வு உடலுக்குள் ஊழ்வினை என்ற வித்தாக உருவாகின்றது. அந்த வித்து முளைக்காது தடுப்பதே மதி…!

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று
2.மதி கொண்டு தன் உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது
3.அந்தத் தீமை தனக்குள் வளராது முளையிலே அதைக் கிள்ளி எறிந்து விடுகின்றது.

புளியங்கொட்டை என்று அதைக் கீழே தட்டி விட்டால் அது குப்பையில் தான் விளையும். ஆனால் தன் வீட்டருகில் வந்து விட்டால் அது தன் விழுதுகளைப் பரப்பி அது பெரும் விருட்சமாக மாறுகின்றது.

அதை வெட்ட வேண்டும் என்றால் மிகுந்த பாதுகாப்பு வேண்டும். வெட்டும் போது வீட்டுப் பக்கம் சாய்ந்து விடாமல் நம் மதி கொண்டு அதைச் சிறுகச் சிறுகத் தான் அப்புறப்படுத்த வேண்டும்.

இதைப் போன்று தான் மதி கொண்டு விதியை மாற்றுதல் வேண்டும்.

இப்படித்தான் இந்த வாழ்க்கையில் இன்னொரு உடல் பெறாத நிலையில் தன் மதி கொண்டு உணர்வின் தன்மையை வளர்த்தான் துருவ மகரிஷி… தன் சந்தர்ப்பத்தால் பெற்ற உணர்வு கொண்டு…!

அந்த மதி கொண்டு தன் மனைவியும் அந்த உயர்ந்த சக்தி பெறவேண்டும் என்று ஊக்குவித்தான். அதனில் விளைந்த உணர்வுகள் கொண்டு தன் மதி கொண்டு தன் உணர்வுக்குள் மனைவியையும் சேர்த்துக் கொண்டான்.
1.இந்த உணர்வின் தன்மை கொண்டு தான் மதி கொண்டு விதியை மாற்றினான்
2.பிறவியில்லா நிலை அடைந்தான் துருவ மகரிஷி.

இதை எல்லாம் குருநாதர் ஒவ்வொரு நொடிக்கும் பல இன்னல்களைக் கொடுத்துக் காட்டிற்குள் அழைத்துச் சென்று இது எல்லாம் எப்படி உருப்பெறுகின்றது…? உருமாற்றியது…? இதிலிருந்து நீ எப்படி உருமாற வேண்டும்…? நீ எப்படி உருமாறினாய்…? எப்படி உருமாற்ற வேண்டும்…? என்ற நிலைகள் கொண்டு தான் உனக்குள் உபதேசிக்கின்றேன்.

1.அருள் ஞான வித்தை உனக்குள் கொடுக்கின்றேன்
2.இதைச் சீராகப் பண்படுத்தி வளர்த்துக் கொள்
3.அதிலே விளைந்த வித்தின் எண்ணங்களைப் பரப்பு
4.மக்கள் அனைவரும் உயர வேண்டும் என்ற உணர்வை உனக்குள் உயர்த்திக் காட்டு.

அந்த உணர்வின் சொல்களை ஒவ்வொரு நிலைகளிலும் வெளிப்படுத்து கேட்டுணர்ந்தோர் உணர்வுகளில் பதிவாகி விட்டால் அவர்கள் அதை மீண்டும் நினைவாக்கப்படும் பொழுது அருள் ஞானம் அங்கே நிச்சயம் வெளிப்படும்.

அதைக் கண்டு நீ பேரானந்தப்படு… அந்தப் பேரானந்தம் தான் உன்னை ஒளியின் சுடராக மாற்றும் என்று தெளிவாக்கிய அதே வழிப்படித்தான் உங்களுக்கும் இதை உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).

மெய் ஞானிகளையும் மகரிஷிகளையும் பற்றிய சூட்சமங்களை எல்லோரும் அறியும் கால நேரம் வந்து விட்டது – ஈஸ்வரபட்டர்

Golbal Tamil Nadu

மெய் ஞானிகளையும் மகரிஷிகளையும் பற்றிய சூட்சமங்களை எல்லோரும் அறியும் கால நேரம் வந்து விட்டது – ஈஸ்வரபட்டர்

 

இப்பூமி சுற்றுவதைக் காட்டிலும் சூரியன் சுழலும் வேகம் அதிகப்படுகிறது. இன்று இப்பூமியின் ஈர்ப்புத் தன்மைக்கு மேல் சூரியனின் ஈர்ப்புத் தன்மை பல மடங்கு அதிகமாக உள்ளது. அது ஈர்த்து வெளியிடும் நிலையும் அதே நிலைக்குகந்த துரித நிலையில் உள்ளது.

பல சூரியன்களின் தொடர்பு கொண்ட நம் சூரியன் நாம் காணும் சூரியனின் சக்தி மிகவும் வலுப்பெற்ற சக்தி. சூரியனின் பூமி நிலை குளிர்ந்த நிலை. இப்பூமியில் பிறவி எடுத்து இப்பூமியிலிருந்து சூட்சும நிலைக்கு சென்ற பலர் இருந்து செயல்படுத்தும் கோயில்தான் நம் சூரியன்.

இப்பூமியில் உதித்த உயிரணுக்கள் மற்ற மண்டலங்களில் வாழ்ந்திட முடியாது. சுவாச நிலை மாறுபடும் பொழுது அம்மண்டலத்தின் உந்தலினால் இம்மண்டலத்திற்கே உந்தப்பட்டு வருவார்கள் என்று உணர்த்தினேன்.

சூட்சும நிலைக்குச் செல்பவர்கள் பல மண்டலங்களிலும் இருந்து செயல்படுத்துகிறார்கள். இப்பூமியிலும் பிற மண்டலத்தில் உதித்து வாழ்ந்தவர்கள் சூட்சும நிலை பெற்றே இம்மண்டலத்திலும் (பூமி) சில நிலைகளைச் செய்கிறார்கள்.

வான சாஸ்திரம் என்று அறியப் பல நிலைகளைச் செய்கிறார்கள்.
1.அன்றே இப்பூமியும் மற்ற பூமிகளின் நிலையையும் என்றாவது ஒரு நாள் வெளிப்படுத்தும் நிலையில்
2.பல சித்தர்கள் ஒன்றுபட்டு இப்பூமியிலேயே அக்காலப் பெட்டகத்தைப் பதித்து வைத்துள்ளார்கள்.
3.இக்கலி மாறுவதற்குள் அந்நிலை வெளிப்படும்.
4.அந்நிலையை வெளிப்படுத்திட இக்கலியில் வந்து பல சித்தர்களினால் உருவப்படுத்தி ஜீவன் தந்த ஓர் உயிரணு
4.ஒரு தாயின் வயிற்றியிலேயே பிறந்து வந்துள்ளது
5.அவன் வெளிப்படுத்துவான் சூட்சும நிலையில் உள்ள பல சித்தர்களை என்றேன்…
6.சூட்சும நிலைக்குச் சென்ற பெரியோர்கள் என்றும் உணர்த்துகிறேன்.

அச் சூட்சும நிலைக்குச் சென்றவர்கள் தனித்த நிலையில் யாரும் இயங்குவதில்லை. அவர்களின் சக்தியை எல்லாம் ஒன்றாக்கி அச்சப்தரிஷிகளின் நிலையிலிருந்து செயல்படும் தன்மைக்கு வருகிறார்கள்.

மனிதர்களின் குண நிலை மாறுபட்ட குண நிலைகள். சூட்சுமத்தில் உள்ளோரின் குண நிலைகளோ ஒன்றுப்பட்ட நிலை.

இன்று சிறு தேவதைகள்… பெரும் தேவதைகள் என்று மாறுபட்டுப் பிரித்துச் சொல்கிறார்கள் புராணக் கதைகள் மூலமாக. இச்சிறு தேவதைகளின் நிலை துர் ஆவிகளின் நிலையில் இருந்து மாறுபட்ட அன்பு கொண்ட ஆத்மாக்கள்.

இவ்வுலகின் ஆசையுடன் இவ்வுலகில் உள்ளோரின் எண்ணமுடன் கலந்து தன்னையே ஆண்டவனாக ஏற்கும் நிலைப்படுத்திச் செய்து வரும் நிலை.
சூட்சுமத்திற்குச் சென்று அச்சகல தேவர்களின் தேவனாக இயங்கும் அச்சூரிய தேவனிடம் செல்லும் நிலைக்குப் பக்குவப்படாத நிலையிலேயே உள்ள நிலைதான். சித்து நிலையுடன் கலந்து உறவாடும் நிலை.

சூரிய தேவன் என்றேனல்லவா…? அனைத்துச் சித்தர்களும் முனிவர்கள் ரிஷிகள் சப்த ரிஷிகள் அனைவரும் ஒன்றுபட்டு அச்சக்தியின் சக்தியான அச்சூரியனில் ஒன்று கலந்து அச்சூரியனின் நிலையிலிருந்துதான் எல்லாச் செயல்களுமே இன்று செயல்படுத்துகின்றனர்.

இன்று அச்சூரிய தேவன் இல்லா விட்டால் எவ்வுலகமும் இல்லை. நம் சூரியனைப்போல் சக்தி கொண்ட பல சூரியன்கள் இருந்தாலும் அனைத்து சூட்சும சக்தியிலுள்ள தேவர்கள் கலக்கும் நிலை நம் சூரியன் தான்.

1.இவ்வுடலில் உள்ளபோதே அனைத்து நிலையையும் அறியும் பக்குவத்திற்கு உங்களைச் செயல்படுத்திடத்தான்
2.பல சக்திகளைக் கொண்ட சூட்சும நிலையில் உள்ளவர்களின் நிலையை ஒன்றுபடுத்தியே
3.இந்நிலையை இங்கு வெளிப்படுத்துகின்றோம்

சக்தியின் சக்தி பெற்ற இம் மனித ஜென்மத்தில் வாழும் பாக்கியத்தைப் பெற்ற சக்திகளே…!
1.உங்களின் சக்தியை அனைத்து சக்திகளுடன் ஒன்றுபட்டு
2.அனைத்து மண்டலங்களின் நிலையையும் உம் சக்திகளில் இருந்தே ஈர்த்து அறியும் பக்குவத்திற்கு
3.உம் சக்தியின் செல்வத்தைச் சக்தியாக்கி வாழுங்கள்.

நமது எல்லை பிறவியில்லா நிலை அடைவதே…!

polaris agastyar

நமது எல்லை பிறவியில்லா நிலை அடைவதே…!

 

1.இந்த மனித உடலைவிட்டு நாம் சென்றால் அடுத்து நாம் எந்த நிலை அடைய வேண்டும்…?
2.நமது எல்லை எது…? இனி பிறவியில்லா நிலையே அது…!

அவ்வாறு பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டுமென்றால் கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றாகி… அந்த ஒன்றிய நிலைகள் கொண்டு தன்னிலையை எவ்வாறு வளர்க்க வேண்டுமென்று
1.அகஸ்தியன் தனக்குள் கண்டுணர்ந்த உணர்வினை அனைவரும் அவ்வழியிலே பெற்றால்
2.அவர் சென்ற பாதைகளில் நாமும் அதைப் போய் அடையலாம்.

அதைத் தான் தென்னாட்டுடைய சிவனே போற்றி… எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி…! என்று நமது தமிழ் பாடல்களில் எல்லாம் முன்னணியில் உண்டு.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தென்னாட்டிலே தோன்றிய அந்த அகஸ்தியன் தான் விண்ணுலக ஆற்றலைத் தன்னுள் அறிந்து “இயற்கையின் சக்தி மோதலில் எவ்வாறு உருவானது…?” என்ற நிலையைத் தெளிவாக்கியபன்.

தன் ஐந்தாவது வயதில் துருவத்தை நுகர்ந்து துருவத்தின் ஆற்றலைத் தனக்குள் கவர்ந்து அதன் வழியில் பிரபஞ்சத்தை நுகர்ந்து துருவனாகின்றான்… திருமணமான பின் துருவ மகரிஷி ஆகின்றான்.

துருவத்தின் ஆற்றலை அறிந்துணர்ந்தவன் பின் அதனைத் தனக்குள் விளைய வைத்துத் துருவ மகரிஷி ஆகின்றான்.

அவனுக்குத் திருமணம் ஆகும் போது இரு மனமும் ஒன்றான நிலைகளில் தான் பெற்ற சக்திகள் அனைத்தையும் தன் மனைவி பெற வேண்டுமென்றும் தன் மனைவி பெற்ற சக்திகள் அனைத்தும் நான் பெற வேண்டும் என்ற நிலைகளில் இருவருமே ஒருக்கிணைந்து வாழ்ந்தவர்கள்.

எந்தத் தீமைகளும் தனக்குள் வராது உணர்வினை ஒளியாக மாற்றி ஆண் பெண் என்ற நிலைகளில் இரண்டு உயிரும் ஒன்றாக இணைந்து இரண்டு உடலும் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை ஒன்றாக இணைந்து இன்றும் துருவ நட்சத்திரமாக இயங்கிக் கொண்டுள்ளார்கள். அதற்கு அப்புறம் பிறவியில்லை.

இதைத்தான் முதலில் தோன்றிய உயிர் பின் நிலைகளில் எப்படி உருவாகின்றதென்றும் இந்த உயிர் தோன்றி பல கோடிச் சரீரங்களை எடுத்து
1.கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிய பின் கல்கி
2.இந்த உயிர் எப்படி உருவானதோ இதைப்போல் உணர்வின் அணுக்களைத் தனக்குள் உருவாக்கி
3.ஒளியின் சரீரமாக நிலை கொண்டு வாழ்வதே கடைசி நிலை
4,இந்த பிரபஞ்சத்தில் தோன்றிய “உயிரணுவின் கடைசி நிலை அது…!”

அவர்கள் பெற்ற சக்தியை பின் வரும் உயிராத்மாக்கள் நுகர்ந்த பின் அதன் வழி அவர்களுடைய அருள் வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக இணைகின்றனர் என்பதையும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

நான் சொல்வது புரியவில்லை என்று இதை விட்டுவிடாதீர்கள். இன்று குழந்தைகள் ரேடியோவையோ டி.வியையோ பார்க்கின்றது என்றால் அதன் உணர்வுகளைப் பதிவாக்கி கொள்கின்றது. பதிவான பின் அந்தப் பாடலை அப்படியே முழுமையாகப் பாடுகின்றது

நாம் பல எண்ணங்கள் கொண்டிருப்போர் இதைப் பார்க்கும்போது இதை பதிவாக்குவது இல்லை. அதைப் பாடவும் தெரிவதில்லை.

அந்தக் குழந்தைகள் பதிவாக்குவது போல் இந்த உபதேச உணர்வுகளைக் கூர்மையாகக் கவனித்தால் அது நமக்குள் பதிவாகி விடுகின்றது. அதை மீண்டும் நினைவாக்கப்படும்போது அந்த நினைவின் சக்தியாக வருகின்றது.

ஆகவே…
1.உபதேசிக்கும் உணர்வைக் கூர்மையாக எண்ணி உங்களில் பதிவாக்கி
2.இந்த நினைவினை வலுக்கூட்டினால் அந்த மெய் ஞானிகள் பெற்ற உணர்வை நீங்களும் பெற முடியும்.

துருவ தியானத்தை தினமும் நீங்கள் செய்தீர்கள் என்றால் அதை நீங்கள் எளிதில் பருகும் நிலையும் விண்ணுலக ஆற்றலையும் மண்ணுலக ஆற்றலையும் தன்னுள் எவ்வாறு இயங்குகின்றது…? என்ற நிலையையும் உணர முடியும்.

அவ்வாறு அதை உங்களில் உருப்பெறச் செய்யும் நிலைக்கே ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாள் அன்று உபதேசத்தை உங்களுக்குள் பதிவு செய்வது.

விஞ்ஞானத்தால் காண முடியாத உண்மைகளை மெய் ஞான சக்திகளின் துணை கொண்டு அறிய முடியும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

eswarapattaya-namaha

விஞ்ஞானத்தால் காண முடியாத உண்மைகளை மெய் ஞான சக்திகளின் துணை கொண்டு அறிய முடியும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

விஞ்ஞானம் கொண்டு இன்று பல ஏவுகணையின் மூலமாகப் பல மண்டலங்களின் உண்மை நிலையறியத் தன் சக்தியை விஞ்ஞானத்தில் செலுத்தி அறியப் பார்க்கின்றான் இன்றைய மனிதன்.

1.ஒவ்வொரு மண்டலத்திலும் மாறுபட்டதன் நிலையை அறியும் ஆவலில்
2.தன் எண்ண சக்தியை விஞ்ஞானத்தில் செலுத்தி அறிந்திட எண்ணுகின்றான்.

அனைவருக்கும் பொதுவான அச்சக்தியை ஒவ்வொருவரும் உணர்ந்தே தன் எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தினால் ஜெபம் கொண்ட நிலையில் எம் மண்டலத்திற்கும் அவரவர்களின் ஆத்மாவுடன் இவ்வுடலின் சக்தியையும் சேர்த்தே பல மண்டலங்களுக்குச் சென்று அம் மண்டலங்களில் உள்ள உண்மை நிலையை அறிந்து வரலாம்.

எந்த மண்டலத்தில் எந்த உயிரணு உதித்து வாழ்ந்ததுவோ அந்த மண்டலத்தை விட்டுப் பிற மண்டலத்தில் வாழ்வதற்கு அதற்குச் சக்தியில்லை.

1.சுவாச நிலை மாறுபடும் பொழுது வாழும் தன்மையும் அற்று விடுகிறது.
2.எம் மண்டலத்தில் இவ்வுயிரணு ஜீவன் பெற்றதோ
3.அந்நிலையிலிருந்து மாறுபட்டால் எந்த உயிரணுவினாலும் வாழ்ந்திட முடியாது.

நம் பாடத்தில் இவ்வாத்மா அழிவதே இல்லை இவ்வுடல்தான் மாறுகிறது என்றேன். அப்பொழுது இவ்வழியாத ஆத்மா பிற மண்டலத்துக்குச் சென்றால் மட்டும் அழிந்துவிடுமா…? என்பீர்.

எந்த மண்டலத்தில் எந்த உயிரணு தோன்றியதோ அவ்வுயிரணு என்ற ஆத்மாவானது அதன் சுவாசம் கொண்டு உயிர் என்னும் ஜீவனைப் பெற்ற இக்காற்று மண்டலத்திற்கு மேல் செல்லும் சக்தி அவ்வுயிரணுவிற்கு இல்லை.

இன்று விஞ்ஞானம் கொண்டு பிற மண்டலத்திற்கு எடுத்துச் செல்லும் ஜீவாத்மாக்களும் அந்நிலையில் இவர்கள் விட்டு வந்தாலும் (நாய், பூனை, குரங்கு) அந்நிலையின் சுவாச நிலைக்கும் இஜ்ஜீவாத்மாவின் சுவாச நிலைக்கும் ஏற்காத தன்மையில் அவ்வாத்மாவை எம்மண்டலத்தில் இருந்து வந்ததோ அம்மண்டலத்தின் நிலைக்கு ஏற்காத தன்மையில் உந்தித் தள்ளிவிடும். இனம் இனத்துடன்தான் சேரும்.

ஆனால் இங்கிருந்து பல உயிரணுக்களை.. உயிரினங்களை… எடுத்துச் சென்று மற்ற மண்டலத்தில் அங்கே வாழ்ந்திட முடியுமா…? என்பதனை அறியப் பல சக்திகளைச் செயலாக்குகிறார்கள்.

எந்த மண்டலத்திலும் உள்ள உயிரணு பிற மண்டலத்திற்குச் சென்று வாழ்ந்திட முடியாது. ஆனால் நம்முள் உள்ள சக்தியை அவ்வெண்ண சக்தியை ஒரு நிலைப்படுத்தி ஜெபம் கொண்டால் சகல நிலையையும் அறிந்திடலாம்.

சூட்சும நிலைக்குச் சென்றவர்கள் எந்த மண்டலத்திலும் வாழும் நிலைக்கு வந்திட முடிந்திடும். இன்று நம்மில் இருந்து சென்ற பல சூட்சும நிலை பெற்றவர்கள் எம்மண்டலத்திலும் செல்லும் பாக்கியத்தைப் பெற்றவராய் இருக்கின்றார்கள்.

இன்று சூரியனில் சென்று வாழலாமா…? பெரும் நெருப்பு கோளமான அந்நிலைக்கு எப்படிச் செல்வது…? என்று விஞ்ஞானம் கொண்டு ஏவுகணை அனுப்புபவனும் சூரியனின் நிலையைக் கண்டு அஞ்சுகின்றான்.

சூரியனின் நிலை குளிர்ந்த நிலை. நம் பூமியைப் போல் காலை மாலை இரவு என்று மாறுபட்ட நிலை அங்கில்லை. இங்கு எப்படி நம் நிழலைக் காணுகின்றோமோ அந்நிலையும் அங்கில்லை.

அதி சுவையான நீரும்… ஆனந்த மயமான மணமும்… உள்ள பூமி அது. இந்நிலையில் உள்ளது போல் மழை நிலையும் மாறுபட்ட நிலையில் அங்கு உள்ளது. மழை உண்டு ஆனால் மாறுபட்ட நிலை. பனியான மழை. எப்பொழுதும் அந்நிலை இருந்து கொண்டே உள்ளன.

காட்சி:
அந்நிலையில் ஜீவன் பெற்று பல உயிரணுக்கள் வாழ்கின்றன. நாம் இவையெல்லாம் கதைக்குச் சொல்வதைப் போல் சொன்னதின் நிலையல்ல. உள்ளதின் உண்மையைத்தான் ஜெபம் கொண்டு அறிந்ததில் வெளியிடுகின்றோம்.

ஒவ்வொருவரின் சக்தியிலும் அறிந்திடும் தன்மையுண்டு. இப்பூமியைப்போல் பல நூறு மடங்கு பெரியவையான அச்சூரியன் சுழலும் வேகத்திலேயே அதன் ஈர்ப்புத் தன்மையும் பல மடங்கு அதிகமாகப் பெறுகிறது.

இச்சூரியனைச் சுற்றி எப்படி 48 மண்டலங்கள் அதன் ஈர்ப்பு நிலைகொண்டு வாழ்கின்றனவோ அதைப்போல் சூரியனும் பல சூரியன்களின் சக்தியின் உதவியால் வாழ்கிறது.

உயிரினங்கள் ரூபம் பெறுவதை குருநாதர் நேரடியாகக் காணும்படி செய்தார்

baterfly

உயிரினங்கள் ரூபம் பெறுவதை குருநாதர் நேரடியாகக் காணும்படி செய்தார்

 

உதாரணமாக ஒரு தட்டாண் பூச்சி ஒரு செடியில் உள்ள மலரில் அதனுடைய முட்டையை இட்டு விட்டால் அந்த மலரில் வரும் சத்தினைக் கவர்ந்து அது ஒரு பூச்சியாக வளர்ந்து பட்டாம் பூச்சியாக வளர்கின்றது.

அந்தப் பூ என்னென்ன கலரில் இருந்ததோ பட்டாம் பூச்சி அந்த பூவில் இருந்து வரக்கூடிய நிலைகளைக் கவர்ந்து (XEROX) அதனுடைய இறக்கைகள் பூவின் ரூபமாக இருப்பதையும் காணலாம்.

ஏனென்றால் இதை உங்களுக்கு நான் (ஞானகுரு) லேசாக சொல்கின்றேன். அந்தப் பட்டாம் பூச்சிகள் அது எவ்வாறு உருவாகிறது…? என்று குருநாதர் காடும் மேடும் அலையச் செய்து அது உருப்பெறும் விதங்களை அறியும்படி செய்தார்.

இப்பொழுது நான் அறிந்த நிலைகளை நீங்களும் அறிய வேண்டும் என்றால் உங்கள் தொழிலை விட்டுவிட்டு அறியச் சென்றால் சோறு யார் போடுவது…?

எனக்குச் சோறு இல்லை என்றாலும் காட்டிற்குள் இரண்டு பச்சிலையைக் கையில் கொடுத்து அதை மென்று தின்ற பிற்பாடு வெறும் தண்ணீரைக் குடித்தோமென்றால் பசி தெரியாது.

அந்தப் பசி தெரியாத நிலைகள் கொண்டு பசி என்ற உணர்வு வரப்படும்போது இன்ன பச்சிலையை நீ உணவாக உட்கொள் என்று குருநாதர் காட்டியிருந்தார்.

1.அந்த ஒரு பச்சிலையை அதிலே ஒரு துண்டு தான்…!
2.அதை ஒரு நிமிடத்தில் உட்கொண்டுவிட்டு
3.மீண்டும் அவர் எதைச் சொன்னாரோ அது குறி தவறாது அந்த நினைவாற்றலைச் செலுத்தும்படி சொல்வார்.

அப்படிச் செலுத்தினால் தான் எனக்குள் நுகர்ந்த உணர்வுகள் அது எப்படி உருமாறுகின்றது…? அந்த உணர்வின் தன்மை ஒன்றோடு ஒன்று மோதும் போது எப்படி அதனுடைய உணர்வலைகள் அது இயங்குகின்றது என்ற நிலையை உணர முடியும். இப்படித்தான் குருநாதர் தெளிவாகக் காணும்படி செய்தார்.

இதை எல்லாம் நீங்கள் இங்கே அமர்ந்து கேட்கின்றீர்கள். நான் அங்கே இயற்கையின் நிலைகள் எப்படி உருப்பெறுகின்றது…? என்று
1.குரு அருள் அவருடைய வலுத் துணை கொண்டு
2.அதனை அறியும் வாய்ப்புகளை எனக்குக் கொடுத்தார்.

அவர் எனக்குக் காட்டிய அதே வழிப்படி உங்களுக்குள் இதை உபதேசிக்கும் போது இதன் உணர்வை நினைவாற்றலாக நீங்கள் வரும்போது
1.இயற்கையின் நிலைகளை நீங்களும் உணர முடியும்
2.உங்களை அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும்… அதை மாற்றியமைக்கவும் முடியும்.

அந்தப் பட்டாம்பூச்சிகள் அதனுடைய இறக்கைகளில் இந்த பூவிலிருந்து அது இழுக்கும் துகள்களில் பல வர்ணங்களில் வேஷமாகப் போடும்.

நீங்கள் பார்த்திருப்பீர்கள்…! எத்தனையோ வண்ணத்தில் பட்டாம் பூச்சிகளை. அதிலே எத்தனையோ வகையான பூச்சிகள் உண்டு இதெல்லாம் முதலில் புழு இனங்களாக வந்து பின் பூச்சி இனங்களாக மாறி பின்பு பறவை இனங்களாக மாறுகின்றது அது கவர்ந்த உணர்வுக்கொப்ப என்ற இந்த நிலையைத் தெளிவாக்கினார் குருநாதர்.

அதே சமயத்தில்… ரேவதி நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளும் கார்த்திகை நட்சத்திரத்திலிருந்து உணர்வுகளும் இரண்டும் ஆண் பெண் என்ற நிலைகளில் ஒன்றாக இயங்கி… உணர்வின் சத்தைக் கவர்ந்து… தான் கவர்ந்த உணர்வுகளை அந்தந்த குணங்களுக்கொப்ப அணுவின் தன்மை உருவாக்கி… அதனின் மணம் அது உடலாக்கி… அந்த உடலின் ரூபங்கள் எப்படி உருவாகின்றது…? என்ற நிலையையும் காட்டுகின்றார்.

இதை நாம் அறிவதற்காக…
1.இந்த உயிரின் இயக்கத்தை ஈசன் என்றும்
2.உயிரின் இயக்கத்திற்குள் ஏற்படும் ஈர்ப்பை (காந்தம்) லட்சுமி என்றும்
3.அந்த ஈர்ப்பால் அதனுடன் இணைந்து உருப்பெறும் சக்தியை பிரம்மம் என்றும்
4.நமது உயிரின் இயக்கங்களை குரு தெளிவாக்குகின்றார்.

இந்த உயிர் எதனைக் கலவையாக உருவாக்குகின்றதோ அதன் உணர்வின் தன்மை கொண்டு அதனதன் உணவாக எடுத்து அந்த உணர்வின் தன்மை விளையும்.

அந்த உணர்வின் தன்மை உணவு எதுவோ அக்குணத்தின் தன்மை எண்ணங்கள் கொண்டு இயங்கும் என்ற நிலையை தெளிவாகக்கிக் கொடுக்கின்றார்கள்.

இவ்வாறு வளர்ந்த அந்த நிலைதான் முதலிலே ஒரு புழுவாக உருவாக்குகின்றது. அங்கே உயிர் ஈசனாகவும் உயிருக்குள் ஏற்படும் வெப்பத்தை விஷ்ணு என்றும் அதே சமயத்தில் ஈர்க்கும் காந்தம் லட்சுமி என்றும் இங்கே உருப்பெறுகின்றது

இதை எல்லாம் உயிரினங்களில் ரூப மாற்றம் எப்படி…? என்பதை ஆதியிலிருந்து குருநாதர் வரிசைப்படுத்திக் காட்டினார்.

உலக நிலையையே இவ்வாறறிவு படைத்த மனிதன்தான் மாற்றுகின்றான் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Spiriual science

உலக நிலையையே இவ்வாறறிவு படைத்த மனிதன்தான் மாற்றுகின்றான் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

அனைத்துமே ஆவிதான்… ஆவியிலிருந்து வந்தது தான் அனைத்து உலோகங்களும்… ஜீவராசிகளும்…! அந்நிலையிலிருந்து பிரித்தெடுத்து அதனதன் தன்மையில் அறியும் ஆற்றலைப் பெற்றுள்ளோம்

இப்பூமியில் இயற்கையிலிருந்து எடுத்த நிலைகளிலிருந்து அணுகுண்டு செய்து இப்பூமியில் புதைத்து வைத்துள்ளார்கள். சகல பாதுகாப்புடனும் அவர்கள் பாதுகாத்து வைத்த உலோகத்தினாலான துருப்பிடிக்காத இரும்பைக் கொண்டு பாதுகாத்து வைத்துள்ளார்கள்.

பலர் பதப்படுத்தும் நிலையில் பதப்படுத்தி வைத்துள்ளார்கள். இப்பூமியிலிருந்து எடுத்த உலோகத்திலே தன் அறிவினால் விஞ்ஞானம் கொண்டு இவ்வணுகுண்டைச் செய்து வைத்துள்ளார்கள்.

அனைத்துமே ஆவிநிலை ஆகக்கூடியதுதான். உதாரணத்திற்கு தங்கத்தினால் ஓர் ஆபரணத்தைச் செய்து இன்று நீ பார்க்கும் எடைக்கும் பத்தாண்டிற்குப் பிறகு அவ்வாபரணத்தை உபயோகிக்காத நிலையிலேயே நிறுத்திப் பார்த்தால் அதன் நிறையில் ஒரே நிலை இல்லாமல் குறைந்துதான் இருக்கும்.

1.தேய்மானம் என்பார்கள்…!
2.பிற வஸ்துவில் பட்டுத் தேய்வதல்லை
3.இக்காற்றில் கலந்துள்ள ஆவித் தன்மையினால் இப்பூமிக்குள்ள காந்த சக்தியைக் கொண்டு ஈர்ப்பதினால் அதுவும் ஆவியாகிறது.

அனைத்து உலோகங்களின் நிலையும் இதுதான். இவ்வுலக நிலையும் இதுதான். இவ்வுலகம் ஆவியை ஈர்த்து அவ்வாவியையே வெளிப்படுத்துகிறது.

அதனால்தான் இன்று விஞ்ஞானம் கொண்டு செய்திடும் அணுகுண்டைப் பாதுகாக்கும் நிலை கொண்ட அவ்விரும்புக் கவசமே இவ்வுலகம் ஈர்த்து ஆவியை வெளிப்படுத்தும் தன்மையில் அதன் நிலையும் ஆவியாகி… “அதில் ஏற்படும் சிறு துவாரத்தினால் வரப்போகின்றது இவ்வுலக மாற்றமே…!”

இன்று விஞ்ஞானம் கொண்டு சூரியனிலிருந்து வரும் சக்தியினால் பல நிலைகளைச் செய்திடலாம் என்று விஞ்ஞானப் படுத்துகிறான். சூரியனிலிருந்து வந்த அணுக்கதிரினால் பூமியில் ஏற்பட்ட கனி வளங்களையும் பல திரவ வஸ்துக்களையும் தன்னிலைக்கு ஈர்த்து எடுத்துவிட்டான்.

இன்று இவன் செயற்கைக்காக சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிரை ஈர்த்து (SOLAR POWER) அதிலிருந்து பல சாதனை செய்து காட்டுகின்றானாம். இக்காற்றையே கரியாக்கி வாழ்கின்றான்.

1.வரும் சக்தியையே ஒவ்வோர் இடத்திற்கும் தன்னிலைக்குகந்த விஞ்ஞானமாக்கி ஈர்த்து எடுத்து விட்டான்
2.வாழும் மனிதர்கள் இக்காற்றிலிருந்து பிரித்தெடுத்து நல் சுவாசம் எடுப்பதற்குண்டான சக்தியை அழித்து வருகிறான்.
3.இன்றைஅ விஞ்ஞானத்தினால் வந்த வினைதான் இது…!
4.மனிதனுக்கு ஆறறிவு என்று அவன் பெற்ற அறிவினாலேயே உலக நிலையையே இவ்வாறறிவு படைத்த மனிதன்தான் மாற்றுகின்றான்.

இதனால் இவ்வுலகம் மட்டும் மாறப்போகிறதா…? உலகுடன் தொடர்பு கொண்ட எல்லா மண்டலங்களுமே மாறத்தான் போகின்றன.

இன்று இவ்வுலகில் வாழும் மக்களினால் வந்த வினை தான் அது.

1.ஆத்மீக வழியை வழியமைத்தால் ஏற்பதற்கும் ஆளில்லை.
2.இதன் நிலை அறிந்துதான் பல சித்தர்கள் பல உண்மைகளையே மறைத்தார்கள்.

இன்று குழந்தை பெறுவதற்கே செயற்கை முறைப்படுத்திப் பேழையில் கரு வளர்த்து அக்கருவை தாய்க்குச் செலுத்திக் குழந்தையை வளர விடுகின்றானாம்.

இன்று ஒரு சித்தனால் தாயும் தந்தையும் இல்லாமல் இக்காற்றில் உள்ள சகல சக்தியிலும் கலந்துள்ள இம்மனித ஜீவ அணுவிற்கு வேண்டிய ஜீவ அணுவையே பிரித்தெடுத்து அப்பிரித்ததின் ஜீவ அணுவை வளரவிட்டுக் குழந்தையாக்கிக் காட்ட முடியும்.

புராணக் கதைகளில் படித்திருப்பீர்… ஆறுமுகனைக் கார்த்திகைப் பெண்கள் வளர்த்தார்கள் என்று.

அந்த அறுமுகன் எந்தத் தாயின் கர்ப்பத்தில் இருந்தான் என்பதனைச் சூட்சுமத்தில் மறைத்தார்கள். அனைத்தையுமே இந்நிலையில் வெளியிட்டு நான் என்ற ஆணவத்தை ஏற்படுத்திடவும் விரும்பவில்லை.

நம் சக்தியை நல்வழிக்குச் செலுத்திவிட்டால் அந்நிலையில் என்றுமே நிலைத்திருக்கலாம். சக்தியையே… “நமக்குத் தெரிந்தது…! என்று ஆணவத்தால் செய்து காட்டி என்ன பயன்…? என்றுணர்ந்துதான் அன்றே பல சித்தர்களினால் பலவும் மறைக்கப்பட்டன.

1.எண்ண நிலையை ஒரு நிலைப்படுத்தினால்
2.சகல நிலையையும் சகலரும் அறிந்திடலாம்.

பௌர்ணமி தியானத்தின் மூலம் அபரிதமான சக்திகளை உங்களுக்குக் கிடைக்கச் செய்கின்றோம்

Full moon meditation

பௌர்ணமி தியானத்தின் மூலம் அபரிதமான சக்திகளை உங்களுக்குக் கிடைக்கச் செய்கின்றோம்

 

இன்று நமது வாழ்க்கையில் ஒரு நிமிடம் மகிழ்ச்சியாக இருக்கின்றோம் என்றால் சந்தர்ப்பத்தால் அடுத்த கணம் மனம் இருள் சூழ்ந்துவிடுகின்றது.

இதைப் போன்று மாறி மாறி வரும் இந்த நிலைகளில் இருந்து மாறாத நிலைகள் பெற்ற அந்த ஞானிகளின் உணர்வின் அலையைப் பெறச் செய்யக்கூடிய அந்தப் பிரகாசமான நாள் தான் நம் குருநாதர் காட்டிய இந்த பௌர்ணமி நாள்.

பௌர்ணமி அன்று நாம் எல்லோரும் சேர்த்து நம் மூதாதையருடைய உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மாக்களை உந்தித் தள்ளி சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலக்கச் செய்வதற்கே இந்த பௌர்ணமி தியானம்.

அவர்கள் முதலில் விண் சென்றால் அவர்கள் வழியில் நாமும் பின் நாம் செல்ல முடியும். நாம் முன்னாடி அங்கே அந்தப் பாதத்தை… பாதையை வகுத்துக் கொண்டால்தான் அந்த நிலைகள் பெற முடியும்.

ஆகையினாலே ஒவ்வொருவரும் இந்த மனித வாழ்க்கையில் இருந்தே அந்த அழியா ஒளிச் சரீரத்தைப் பெற வேண்டுமென்ற எண்ண வலுவைக் கூட்டிக் கொண்டு இந்த உடலைவிட்டு நாம் சென்ற பின் அந்த மகரிஷிகள் சென்றடைந்த எல்லையை நாமும் அடைய வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் நம்மை எதிர்கொண்டு துன்ப அலைகள் வீசுவதை அது நம்மை அணுகாது அந்த மகரிஷிகளின் உணர்வலைகளைச் சுவாசித்து அதிலிருந்து காத்து அந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் விண் செல்வதற்குத்தான் இந்தப் பௌர்ணமி தியானம்.

ஆகையினாலே….
1.நாம் அந்த மகரிஷிகளின் அருள் வழியில் செல்ல வேண்டும் என்று
2.நம் மனதில் ஆழமாகப் பதிந்து கொண்டால் தான் அங்கே செல்ல முடியும்.

இல்லை என்றால் ஈஸ்வரா… குருதேவா…! என்று சொன்னேன். என் கஷ்டம் என்னை விட்டுப் போகவில்லை… நானும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். என் மேல் வலி கால் வலி போகமாட்டேன் என்கின்றது. கொடுத்த கடன் திருப்பி வரமாட்டேன் என்கின்றது என்று இப்படி எல்லாம் ஊடே ஊடே கலந்து கொண்டிருந்தால் எல்லாம் போய்விடும்.

நமக்கு வர வேண்டிய பாக்கி வர வேண்டும். கடன் கொடுத்தோமென்றால் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும். அவர்களுக்கு வருமானம் வர வேண்டும்… எனக்குத் திரும்பக் கொடுக்கும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் நிச்சயம் பணம் வரும்.

இதைப்போன்ற பக்குவ நிலை கொண்டு நாம் எண்ணத்தை வளர்க்கும்போது
1.பிறிதொரு தீமையான உணர்வின் தன்மை வராது தடுத்தால்
2.நமக்குள் அதுவே பெரும் சொத்தாக வந்து சேர்ந்துவிடுகின்றது மெய் ஒளியின் சத்தாக…!

இந்த உடலை விட்டு எப்பொழுது பிரிந்தாலும் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் இதைச் செய்யலாம்.

இல்லை என்றால் இந்த மனித வாழ்க்கையில் என்ன செய்கிறோம்…?

நம் உடலைவிட்டு ஈசன் சென்று விட்டால் அப்புறம் நீச உடலுக்காக வேண்டித் தான் வெகுநாளாகப் பாடுபட்டிருக்கின்றோம் என்று அர்த்தம். ஏனென்றால் உயிர் போய் விட்டால் அப்புறம் என்ன இருக்கின்றது…?

நாற்றமாக இருக்கின்றது… சீக்கிரம் தூக்கிக் கொண்டு போய் விடுங்கள்… ஐஸ் கட்டி (FREEZER BOX) வைத்துவிடுங்கள்… அதை வையுங்கள் இதை வைத்துவிடுங்கள்…! என்று தானே சொல்கின்றோம்.

எவ்வளவு செல்வமாக அழகாக இந்த உடலை வளர்த்திருந்தாலும் அதிலே ஒரு சிறு அழுக்கு பட்டு விட்டால் என்ன பாடு படுகின்றோம்…!
1.ஆனால் அந்த ஈசன் உயிரை விட்டுப் போன பிற்பாடு என்ன செய்கின்றோம்…?
2.நடப்பதை எல்லாம் நாம் கண்ணிலே பார்க்கத்தான் செய்கின்றோம்
3.ஆனால் இது நமக்கு நினைவிற்கு வரமாட்டேன் என்கிறது.

ஏனென்றால் நாம் இந்த உடலை விட்டு எப்பொழுது செல்வோம்…? என்று யாருக்கும் தெரியாது

ஆகவே இந்த உடலில் உயிர் இருக்கும்போது அந்த மெய் ஞானிகளுடைய அலைகளை ஒளி வட்டமாக நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அந்த நிலைகள் பெற வேண்டுமென்பதற்குத்தான் இந்த தியானத்தை உங்களுக்குள் சொல்லிக் கொடுப்பது. நம் மூதாதையர்கள் இன்னும் நமது பூமியில் சுழன்று கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய ஆத்மாக்கள் இன்னொரு உடலில் புகுந்திருந்தாலும் நாம் அடிக்கடி இது மாதிரி செய்யப்படும்போது அந்த உடலை விட்டு வெளிவரப்போகும்போது அந்த ஆத்மாக்களையும் நாம் விண் செலுத்திவிடலாம்.

ஆகையினாலே நீங்கள் ஒவ்வொருவரும் ஏனோ என்று இல்லாதபடி இந்த தியானத்தை எடுத்துக் கொண்டவர்கள் வாரத்திற்கு ஒரு நாள் உங்கள் வீட்டில் கூட்டுத் தியானங்கள் இருக்க வேண்டும். உங்கள் முதாதையர்களை விண் செலுத்த கூடிய எண்ணங்களைச் செலுத்த வேண்டும்.

அடுத்தாற்படி நாம் செய்ய வேண்டிய முறைகள் என்ன…?

நமக்குள் யாராவது பகைமை வெறுப்பு என்ற நிலைகளில் இருந்தால் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று அதைத் தணிக்க வேண்டும்.

உதாரணமாக நாம் பொண்ணு கொடுத்திருப்போம். மாமியார் வீட்டில் கொஞ்சம் தொல்லை கொடுத்திருப்பார்கள். அடப்பாவிகளா… இப்படி செய்கின்றார்களே…! என்று அவர்கள் மேல் பகைமையை வளர்த்துக் கொண்டே இருப்போம்.

அப்பொழுது அந்த உணர்வு என்ன செய்யும்…? நம் உடலில் அந்த உணர்வு விளைந்து கொண்டே இருக்கும். பின் நல்ல உடலை நோயாக மாற்றிக் கொண்டு இருக்கும்.
1.நாம் சொல்லக்கூடிய உணர்வுகள் நம் குழந்தைகளுக்கு இன்னும் கொஞ்சம் அங்கே சாடும்
2.இப்படி அந்தச் சிக்கலில் இருந்து மீளாதபடி
3.அந்த விஷத்தின் தன்மை ஒன்றில் பட்டுவிட்டால் அந்த விஷத்தின் நிலைகளில் நாம் மூழ்கி விடுகின்றோம்.

இதைப்போன்ற நிலைகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ள ஒரே வழி இதுதான். நாம் செய்ய வேண்டிய நிலைகள் வாரத்தில் ஒரு நாள் நாம் கூட்டு தியானம் இருக்கப்படும்போது
1.நாம் யார் கூட எல்லாம் வெறுப்பின் தன்மை அடைந்தோமோ
2.குடும்ப சகிதமாக எங்களுடைய பார்வை எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும்.
3.எங்களுடைய பேச்சும் மூச்சும் உலகம் நன்மை பயக்கும் நிலைகள் வர வேண்டுமென்று எண்ணுதல் வேண்டும்.

யாராவது நம் மேல் பகைமை கொண்டிருந்தால் என் பார்வை அவர்களை நல்லதாக்க வேண்டும் என் சொல் அவரை இனிமையாக்க வேண்டும். அவர்கள் என்னைப் பார்க்கும்போது நல்ல நிலைகள் அடைய வேண்டும். என் வாடிக்கையாளர் நல்ல நிலைகள் அடைய வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இப்பொழுது கடன் கொடுத்து வாங்குகின்றோம் என்றால் அவர்களுக்கு நல்ல வருமானம் வர வேண்டும். எனக்கு கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் வர வேண்டும் என்று இவ்வாறு எண்ணிக்கொண்டு இருந்தீர்கள் என்றால்
1.அங்கே பகைமை தீருகின்றது
2.நமக்குள் மெய் ஒளி வளருகின்றது
3.அந்த மெய்யின் தன்மை நாம் நிச்சயம் அடைய முடியும்.

அந்த நிலை பெறுவதற்குத்தான் வாரத்தில் ஒரு நாள் நீங்கள் கூட்டுத் தியானம் இருங்கள் என்று சொல்வது.

மனிதனால் பூமியில் புதைக்கப்பட்டுள்ள அணுகுண்டுகளின் பாதுகாப்பு பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Climate change

மனிதனால் பூமியில் புதைக்கப்பட்டுள்ள அணுகுண்டுகளின் பாதுகாப்பு பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இங்கே சில உண்மைகளை வெளிப்படுத்துகின்றோம் என்பதின் பொருளே
1.இக்கலியின் மாற்றத்திலிருந்து மக்களை நல்வழியில் கல்கிக்கு அழைத்துச் செல்வதற்காக
2.பல சித்தர்களினாலும் மறைக்கப்பட்ட பல உண்மைகளை இன்று இந்நிலையில் அச்சித்தர்களுடன் கலந்தே
3.இவ்வுலக மக்கள் இதிலிருந்து மீண்டு உண்மையை உணர்ந்து ஏற்று நடப்பதற்காகத்தான்
4.இந்தச் சக்தி அனைவருக்கும் பொதுவானதே.

அச்சக்தியின் நிலையை ஏற்கும் தன்மை மட்டுமல்ல ஏற்றதனை வழி நடப்பதிலும் அச்சக்தியின் தன்மையுள்ளது.

அனைத்தையும் அறிந்து விட்டோம் என்ற நிலையில் நம் சக்தியை விரையமாக்கினாலும் அச்சக்தி நிலைத்திடாது. அச்சக்திகளை நிலைநிறுத்தி வாழும் தன்மையிலே வழி வந்திட வேண்டும் நாம் அனைவருமே.

சூரியனிலிருந்து நாம் அணுக்கதிர்களைப் பெற்று வாழ்கின்றோம். அவ்வாவியான அணுவேதான் இவ்வுலகும் அனைத்து உலகுமே.

ஆவியான அணுவை ஆக்கும் வழியில் செயல்படுத்திடாமல் அழிக்கும் நிலைக்குச் செயல்படுத்திடும் வினையை இவ்வுலக மக்கள் கூடிய விரைவில் உணரும் காலம் மிகவும் நெருங்கிக்கொண்டே வருகிறது.

எந்நிலையில் என்று கேட்பீர்கள்…?

இவ்வுலகில் சூரியனிலிருந்து வரும் அணுக்கதிர்களைக் கொண்டேதான் பல நிலை பெற்ற செயல்களை இம் மனிதனின் எண்ணம் கொண்டு உருவாக்கியுள்ளான்.

இவன் உருவாக்கிய அணுகுண்டுகளை ஒவ்வொரு நாட்டிலும் பாதுகாக்கும் நிலையில் பூமியின் அடியில் புதைத்துப் பல இரும்புக் கவசங்களைக் கொண்டு சிறு அணுவும் வெளிப்படாத நிலையில் தன் அறிவை எல்லாம் சக்தியையெல்லாம் செயல்படுத்தி விஞ்ஞானக் குண்டுகளைப் பல நாடுகளில் புதைத்து வைத்துள்ளான்.

“இன்று வெடிக்கப் போகின்றேன்… நாளை வெடிப்பேன்…!” என்று பயமுறுத்தலுடன் பயமுறுத்தலுக்காக வைத்துள்ள குண்டுகளை இவனும் வெடிக்கப் போவதில்லை… மற்றவனும் வெடிக்கப் போவதில்லை.

ஆனால் இவ்வுலகம் சுற்றிக் கொண்டே உள்ள நிலையில் சூரியனின் அணுக்கதிர்களைப் பெற்றுக் கொண்டே உள்ளது. இவ்வுலகமும் ஈர்த்து வெளிப்படுத்திக் கொண்டே உள்ளது.

ஆவியில் வந்த அணுக்கதிர்கள்தான் அனைத்துமே. இவ்வுலகம் ஈர்த்த நிலையில் அது வெளிப்படுத்தும் நிலைகொண்டு இவ்வுலகத்தின் பாதுகாப்பினால் ஆன அணுகுண்டுகள் வைத்துள்ள நிலையெல்லாம் இப்பூமி வெளிப்படுத்தும் காந்த சக்தியை ஈர்த்துக் கொண்டே உள்ளன.

இந்நிலையிலேயே இன்னும் சில காலங்களில் அதன் சக்தி இழந்து இவ்வுலக சக்தி தன்னுள் ஈர்த்த சக்தியை வெளிப்படுத்தும் நிலையில் கக்கும் நிலையில் அதன் மேல்பட்டு ஓர் இடத்தில் வெடிக்கும் நிலையில் அணுக்களின் சிதறலினால் அனைத்து அணுகுண்டுகளுக்கும் அதனதன் ஈர்க்கும் நிலையில் அனைத்தும் வெடிக்கும் நிலை மிகக் குறுகிய காலத்தில் உள்ளது.

இப்பூமியில் அணுகுண்டுகள் வெடிக்கும் நிலையில் இப்பூமியே அதிரும் நிலையில்தான் சிறு அதிர்வினால் இவ்வுலக நிலையே மாறும் தன்மைக்கு வரப்போகின்றது.

இந்நிலையை அறிந்து நல்வழி பெற்று வாழ்வதுதான் நம்மால் இன்று செய்திட முடியும்.

இன்று இந்நிலையை வெளிபடுத்துபவர் ஏன் அந்நிலையிலிருந்து காப்பாற்றலாமே…? என்ற வினாவும் எழலாம்.

1.அனைத்தையும் அறிந்து சூட்சும நிலைகொண்டு நல்வழி புகட்டிடலாமே தவிர
2.அனைத்தும் அறிந்த ஆண்டவன் என்ற அச்சக்தியின் சக்தியே நான் என்ற சக்தி எனக்கில்லையப்பா.

யானறிந்த சக்தியை என்னுடன் கலந்துள்ள பல ரிஷிகளின் நிலை கொண்டே இந்நிலையை வெளியிடுகின்றேன். அதி விரைவில் அனைவருக்குமே வெளியிடவும் காலம் சொல்வோம்.

அரச மரத்தைப் போல் நம் நினைவுகளை விண்ணிலே ஊடுருவிப் பாய்ச்சி மெய் ஞானிகளின் உணர்வைக் கவர்தல் வேண்டும்

pipal-tree-vinayagar

அரச மரத்தைப் போல் நம் நினைவுகளை விண்ணிலே ஊடுருவிப் பாய்ச்சி மெய் ஞானிகளின் உணர்வைக் கவர்தல் வேண்டும்

 

நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக இந்த மனித உடல் பெற்றதை விநாயகன் என்றும் இந்த வினையெல்லாம் தீர்க்கும் தகுதி பெறுகின்றான் என்றும் ஞானிகள் காட்டுகின்றார்கள்.

வினையெல்லாம் தீர்ப்பவனே விநாயகனே… ஆதிமுதல்வனே…! என்றும் சொல்கிறோம். ஆதிமுதல்வன் என்றால் யார்…?

நம்முடைய இந்த மனித உடலை உருவாக்கிக் கொண்டு வருவதற்கு ஆதிமுதல்வனாக இருந்தது நமது உயிர். அதைத் தான் ஆதிமுதல்வன் என்றார்கள் ஞானிகள்.

ஆனால் நாம் என்ன செய்கின்றோம்…? விநாயகர் கடவுளுக்கு அப்பாற்பட்டவர். அவர்தான் முதல்…! என்ற நிலைகளை நாம் எண்ணுகின்றோம்.

நம் உடலுக்குள் நின்று இந்த மனிதனாக உருவாக்கிய இந்த நிலைகளை “ஆதிமுதல்வன் நம் உயிர் தான்…!” என்று தெளிவுற அன்று உணர்த்தியுள்ளார்கள்.

விநாயகருக்கு புல்லைக் காட்டித் தழை தாம்புகளை வைத்து அதை அரச மரத்தையும் வேப்ப மரத்தையும் ஸ்தல விருட்சமாக வைத்து இதை நமக்கு உணர்த்தியுள்ளார்கள்.

அரசு என்ன செய்கின்றது…? ஒரு குருவி அந்த அரசம் பழத்தைச் சாப்பிட்டுவிட்டு அது இட்ட மலம் ஒரு பாழடைந்த கட்டிடத்தின் மேல் பட்டுவிட்டால் அதற்குள் அந்த வித்து நீரேயற்ற இடத்தில் வளரத் தொடங்குகிறது.

இப்பொழுது நாமெல்லாம் ஒரு வீட்டில் குடியிருந்தோமென்றால் அங்கே நாம் நீரைச் சிந்துவோம். அதிலிருந்து வரக்கூடிய வாசனைகள் படும். இது அதனால் முளைத்தது என்று சொல்லலாம்.

ஆனால் குருவிகள் இட்ட அந்த மலத்தின் தன்மை கொண்டு அரச வித்து ஒரு பாழடைந்த கட்டிடத்தின் மேல் பட்டுவிட்டால்…
1.அந்த அரசு காற்றிலே இருக்கக்கூடிய வீரிய சக்தியும்
2.தன் இனமான சக்தியையும் எடுத்து ஓங்கி வளர்ந்து
3.தன் விழுதை நீர் இருக்கும் இடத்தில் பாய்ச்சித் தனக்கு வேண்டியதை நுகர்ந்து எடுத்துக் கொள்கின்றது.

அதனின் விழுதுகளில் உள்ளது போல இலைகளில் உள்ள நரம்பியல்கள் காற்றில் இருக்கும் ஈரப்பதைத் தனக்குள் அது உறிஞ்சி தன் உணர்வின் தன்மையை வலுப் பெறும் தன்மையை அது அடைகின்றது.

அன்று மனிதனாக வாழ்ந்தவர்கள் தங்கள் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி இன்றும் சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.

விண்வெளியிலே சப்தரிஷி மண்டலங்களாக இருக்கிறதென்றால் அங்கே எல்லை இல்லை. ஆனால் தனித்து நிற்கின்றது. நீரோ குளமோ அங்கே கிடையாது.

இருந்தாலும்…
1.மனிதனாக இருந்த போது தன் உடலில் உணர்வின் தன்மை ஒளியான வித்தாக மாற்றி
2.விண் சென்றபின் பேரண்டத்தில் வரும் விஷங்களை எல்லாம் முறித்து
3.உணர்வின் தன்மையை தனக்குள் ஒளியாக மாற்றி என்றும் நிலையான சரீரமாக
4.எந்த உழைப்பும் இல்லாமல்… தூங்காது…
5.தூங்காமல் தூங்குவது எக்காலம் என்பது போல ஓங்கி வளர்ந்து
6.இன்றும் நிலையான சரீரம் பெற்றுள்ளார்கள் என்ற நிலையைக் காட்டி
7.அந்த நிலையை நாம் அடைய வேண்டும் என்பதற்குத்தான் அரசையும் வேம்பையும் வைத்துக் காட்டுகின்றார்கள்.

வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நாம் உயர்ந்த எண்ணங்கள் கொண்டு வந்தாலும் இடைப்பட்ட நேரங்களில் கசப்பின் தன்மையான உணர்வுகள் நாம் நுகர நேருகின்றது. நம்மை மேலே எழுந்திரிக்காமல் செய்கின்றது.

அதே சமயம் நாம் விண்ணை நோக்கி அண்டத்திலே இருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் நுகர்ந்து… கசப்பான நிலைகளை இங்கே சிறுக்கப்பட்டு அந்தக் கசப்பின் தன்மையை நீக்கி நல் உணர்வின் தன்மை ஓங்கி வளரும் நிலையாக ஒளியின் சரீரம் பெற வேண்டுமென்பதற்காக அங்கே நினைவுப்படுத்தி ஸ்தல விருட்சமாக வேம்பையும் அரசையும் அங்கே வைத்தார்கள்.

ஆனால் இந்த வேம்பையும் அரசையும் நாம் வேடிக்கையாகத் தான் சுற்றி வருகின்றோமோ தவிர அதில் உணர்த்தப்ப்ட்ட உயர்ந்த சக்தியை நுகர்வோர் யாரும் இல்லை. அதை நினைப்பாரும் யாருமில்லை.

சுற்றி வந்தால்… விநாயகன் நமக்கு ஓடி ஓடி வந்து செய்வான் என்றும்… அவன் எங்கோ இருக்கின்றான்…! நமக்கு எப்படியோ வந்து செய்கின்றான் என்ற நிலையிலும் தான் நாம் இருக்கின்றோமே தவிர அந்த உண்மையின் தன்மையை நாம் உணர முடியல்லை.

இன்று இந்த உண்மையைச் சொன்னாலும் நம் உடலுக்குள் பதிவு செய்த இந்த உணர்வுகளோ எதிர்க்கும் நிலையாக வருகிறது.

இப்பொழுது யாம் (ஞானகுரு) இதைத் தெளிவுபடுத்தினாலும் கூட…
1.என்ன…? அன்றைக்கு எழுதி வைத்தவர்கள் எல்லாம் முட்டாளா..?
2.இவர் மட்டும் புதிதாகச் செய்கின்றார் என்றால் அது எப்படி…? என்ற நிலையில்
3.நாம் ஏற்கனவே எடுத்துக் கொண்டது அது வெறுக்கின்றது.

ஒரு கசப்பைச் சாப்பிட்ட பின் நாம் இனிப்பை கொடுத்தால் எப்படி இருக்கும்…! அந்த உணர்வின் தன்மை இனிப்பை ஏற்றுக் கொள்ளாது.

அதைப் போல இந்த உடலுக்குள் சேர்த்துக் கொண்ட இந்த உணர்வின் இயக்கங்கள் அந்த உணர்வின் வழிகளைத்தான்… “நாம் எண்ணியதை… இந்த உணர்வின் தன்மை… சேர்த்த மணத்தின் உணர்வின் எண்ணமாக…” நமக்குள் அது இயக்கிக் கொண்டிருக்கின்றது.

எந்த உணர்வு ஆனாலும் நம் உயிர் அந்த மணத்தை நுகர்ந்தால் அதை எண்ணமாக மாற்றுகின்றது.
1.ஆனால் அதற்குள் மறைந்த இந்த உணர்வின் சக்தி
2,இந்த உடலைத் தனக்குள் அதனின் இயக்கமாகச் செயல்படுகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு ஞானிகள் நமக்குக் காட்டிய வழியில் செல்வதே நல்லது.

ஜெப நிலையின் (தியானம்) முக்கியத்துவத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Sri Vivekananda

ஜெப நிலையின் (தியானம்) முக்கியத்துவத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

கேள்வி:
நாம் ஏதாவது ஒரு காரியத்தைப் பற்றி முடிவு எடுக்க முடியாமல் இருந்தால் அதைப் பற்றித் திரும்பத் திரும்ப யோசித்துக் கொண்டு இருக்காமல் அந்த விஷயத்தை ஆராய்ந்து கூறுமாறு அந்தராத்மாவிடம் ஒப்பித்து விட்டு நமது வேறு காரியங்களைச் செய்து கொண்டிருந்தால் அந்த அந்தராத்மா அந்தக் காரியத்தை அலசிப் பார்த்து சரியான விடையைக் கண்டு பிடித்து நம் வெளி மனதிற்குத் தெரியப்படுத்தும் என்று எண்ணுகின்றேன்.

ஈஸ்வரபட்டர்:
இந்நிலைதான் ஜெப நிலை (தியானம்) என்று நான் உணர்த்தும் நிலை.

ஒரு நிலைக்கு நம்முள் தீர்வு கண்டிட நம்முள் சுற்றியுள்ள எண்ணச் சிதறல்களை ஒரு நிலைப்படுத்தி அந்நிலையிலேயே நம் மனதை அமைதியுறச் செய்து அந்நிலையில் நம் மனது தெளிவு பெறும் நிலைதான் நீங்கள் சொல்லும் அந்தராத்மா முடிவெடுக்கும் நிலை என்பது.

அந்நிலைதான் ஜெப நிலையும். ஜெபம் என்பது மனதை ஒருநிலைப்படுத்தும் நிலைதான்.

இன்று நம்மில் கலந்துள்ள பல பெரியோர்களின் வழியில் அவர்கள் வழிப்படுத்திச் சென்ற நிலை வாழ்க்கை நிலைக்கும் ஜெப நிலைக்கும் வேறுபாடில்லை.

வாழ்க்கை நிலையில் வரும் நிலைகளுக்குத் தெளிவு பெற வழியமைத்த நிலைதான் இஜ்ஜெபநிலை. இந்நிலையையே ஞானிகளும் சித்தர்களும் வழியமைத்து வந்ததுதான் அவர்களின் உயர்ந்த நிலை.

இவ்வெண்ணம் ஒவ்வொரு மனிதனுக்கும் பல நிலைகளில் செயல் படுத்துகிறது.
1.உள் மனம் வெளி மனம் மட்டுமல்ல
2.முதல் பாடத்தில் சொல்லியுள்ளேன் அகக்கண் புறக்கண் என்பதையே ஞானக்கண்ணால் வென்று வா என்று.

சாதாரண மனிதர்களின் நிலைக்கும் சித்தர்களின் நிலைக்கும் எந்நிலையில் மாற்றம் உள்ளது…?

நாம் சாதாரண மனிதர்களாகிய நாம் ஒன்றை எண்ணும் பொழுது பிற நிலை தாக்கினால் நம் எண்ணம் ஒன்றையேத்தான் சுற்றிக் கொண்டிருக்கும். அந்நிலையில் தாக்கும் மற்றதின் நிலையை இந்நிலைபோல் செயல்படுத்திட முடிந்திடாது.

1.எண்ணத்தின் சிதறலைத் தாங்கும் சக்தியை இழந்து
2.அந்நிலையில் மனச் சோர்வு கொண்டு நம்மை அறியாமல் பல சொற்களை வெளியிடுவோம்.
3.நம் நிலைக்கும் பதட்டம் வரும்
4.அப்பதட்டத்திலிருந்து வருவது தான் கோபமும்.

இப்படி நாமே வளர்த்துக் கொள்வதுதான் நம்மில் இந்நிலையெல்லாம். இந்நிலையில் இருந்து மீள்வதற்குத் தான் பல நிலையின் மோதல்களைத் தாங்கும் நிலை ஏற்படுத்திட ஜெபம் என்ற நிலையை உருவாக்கினார்கள் நம் முன்னோர்கள்.

ஜெப நிலையை நம்முள் ஏற்படுத்திக் கொண்டால் எந்நிலையிலும் அது தாக்கும் நிலையிலேயே அந்நிலைக்குத் தீர்வு கண்டிட நம்மைப் பக்குவப்படுத்திடும் நிலையாக வரும். நம்மை நாமே அடிமைப்படுத்தும் நிலையிலிருந்து அத்தகைய ஜெப நிலையைப் பெற்றிட வேண்டும்.

இதை நமக்குப் புரியச் செய்வதற்காகப் பல இதிகாச நூல்களில் ஆண்டவன் என்று ரூபப்படுத்தி ஆண்டவனுக்குப் பல தலைகள் பல கைகள் இருப்பதாகக் காட்டினார்கள் ஞானிகள்.

ஆண்டவன் ஒரே சமயத்தில் பலருக்கும் எந்நிலையில் அருள் புரிகின்றார் என்பதைப்போல் சித்தர்கள் மக்களுக்கு உணர்த்தும் வகையில் உணர்த்திய வழிகள் தான் ஆண்டவனுக்குப் பல தலைகளும் பல கைகளும் காட்டப்பட்டது.

சூட்சும நிலையில் உள்ளவர்கள் (ஞானிகள்) ஒரே சமயத்தில் பல நிலைகளில் தன் செயலைச் செயலாக்குகிறார்கள்.

ஒவ்வொரு மனிதனும் அவரவரின் எண்ணத்தின் சிதறலினால்தான் பல நிலைகள் பதட்ட நிலை பெற்று தன்னுள் தன்னையே கைதியாக்கி வாழ்கின்றான்.

உள் மனம் வெளி மனம் என்பதல்ல இவ்வெண்ண மனம். பல நிலைகளுக்குச் சென்றாலும் ஒரு நிலைப்படுத்திடும் பக்குவம் பெற்றாலே ஒவ்வொரு மனிதனும் தன் ஆத்மாவிற்கு நல் சொத்தைச் சேர்த்த நிலை பெறுகின்றான்.

1.இன்று மக்களுக்குப் போதனை நிலையும் குறைவு
2.வழி நடத்திடும் அவர்களது பெரியோர்களின் நிலையும் குறைவு
3.வழி நடத்திடும் அவர்களது பெரியோர்களின் நிலையும் (தாய் தந்தை) உபதேசிக்கும் நிலையற்றதினால் வந்த நிலை இவ்வுலகின் நிலை இன்று.

முந்தைய காலத்தில் பல நீதி நிலைகளைக் கதையாக்கி தாத்தா பாட்டி கதை என்ற ரூபத்திலும் அரிச்சந்திரனின் கதையாகவும் விக்கிரமாதித்தனின் கதையாகவும் மக்களின் எண்ணத்தில் பதிய வைப்பதற்காகப் பல நீதி நூல்களை வெளியிட்டார்கள்.

இன்று அனைத்து நீதி நூல்களையுமே ஆராயும் தன்மையில் வைத்துள்ளார்கள். அந்நிலையையும் மாற்றி அன்று சித்தர்கள் வெளியிட்டதின் வழியிலேதான் இன்று இருக்கும் விஞ்ஞான உலகத்தின் அறிந்த நிலையெல்லாம்.

“முள்ளை முள்ளால் எடு…” “வைரத்தை வைரத்தால் அறு…” என்பதைப் போல் ஒவ்வொரு நோய்க்கும் அந்நோயின் தன்மை கொண்ட எந்நிலை கொண்ட நோய் வருகிறதோ அதன் தன்மைக்குகந்த மருந்தை அதன் விஷத் தன்மையிலேயே அதற்கு மேல் இதை ஏற்றி இதை வெளிப்படுத்தும் நிலையை உணர்த்தியவர்களே நம் சித்தர்கள் தான்.

இவ்வுலகில் வந்து குவியும் அமிலத் தன்மையிலிருந்து பல நிலைகளைத் தன்னுள் ஈர்த்து ஒவ்வொன்றையும் செயல்படுத்திக் காட்டிய பல ரிஷிகள் உள்ளார்கள்.

போகரின் நிலையும் போகரை ஒத்த நிலைகளில் உள்ள பல ரிஷிகளின் நிலையும் இன்று அழியாத உடலை எந்நிலையில் பாதுகாத்து வைத்துள்ளார்கள்.

இக்காற்றில்தான் அனைத்து நிலைகளுமே கலந்துள்ளன. தன் நிலையையும் தன் உடலையும் அழியாத நிலைப்படுத்திப் பாதுகாக்கும் பக்குவத்தை இன்றும் ஈர்த்துச் செயல்படுத்துகிறார்கள்.

இவ்வுடலையே கல்லாகவும் எந்நிலைக்கொண்ட உலோகம் போலவும் காத்து வைத்திட முடியும். இக்காற்றில் உள்ள அமிலத்தை தனக்குகந்ததை ஈர்த்துக் காத்து வருகின்றார்கள்.

வைரமாகவும் இவ்வுடலை ஆக்கிட முடியும். மண்ணுடன் மண்ணாக மக்கும் நிலையிலும் ஆக்கிடுகின்றோம்.

அனைத்துமே இவ்வெண்ணத்தினால் வந்ததுதான்…!

உலக சக்தியும்… சக்தியாக சக்தியுடனே நம் எண்ணத்தைக் கலக்கிவிட்டு நல்சக்தி பெற்றுவிட்டால் “அனைத்து சக்திகளையுமே நம்முள்ளே கண்டிடலாம்…!”

இவ்வெண்ண சக்தியினால் வளர்வதுதான் வளர்வது மட்டுமல்ல வாழ்வதுதான் இவ்வுலகமும் பிற உலகங்களுமே.