“அன்பு” தானப்பா கடவுள்

“அன்பு” தானப்பா கடவுள்

 

அன்பு வழி காட்டிட்டு… அன்பு கொண்டே ஊட்டிடும் செயலாய் செயற்படுபவன்…
1.தன்னுள் ஈர்த்துக் கொண்டு தன்னை வளர்ச்சிப்படுத்தும் தன்மைக்கு “அன்பே கடவுள்” என்று சொல்லிய சொல்லிலும்
2.பிற உயிர்களையும் தன்னுயிர் போல் நேசிக்கும் செயற்பாடு உடையவனாய் இருத்தல்
3.தன்னுள்ளே வேரூன்றி வளர்ச்சி கொண்டிட்ட அன்பினில் நிறைவு போதனையாய் வெளிப்படும் பொழுதே போதனையை ஏற்று
4.தன் ஆக்கத்தின் வளர்ச்சிக்கு உபதேசத்தை ஏற்றவன் அந்த நன்நெறியில் பிறழாமல்
5.அவ்வன்பையே பற்றுக் கோடாய்க் கொண்டிட்ட எண்ண செயலினால்
6.நல் வழிவகைச் செயலைக் கைக் கொள்வோன் மனிதன் என்ற முழுமை பெறுகிறான்.
7.அன்பும் பரி பூரணத்துவம் பெறுகின்றது.

இயேசு காட்டிட்ட அன்பு வழி… “மதம்” என்ற ஆக்ரோஷ வலைக்குள் அகப்பட்டுத் தத்தளிக்கின்றது. ஆனால் எம்மதத்தினரையும் குற்றம் குறைகள் காண்பதல்ல நம் வழி.

மனித எண்ணத்தையும் அன்பு சாம்ராஜ்யத்தையும் ஆள வந்த அம்மகானுக்கே தந்திட்ட பரிசு “சிலுவை ஏற்றுதல்…” இன்றும் உண்மையைப் புகட்டினாலும் மத வழிச் செயலில் ஏற்றுக் கொள்வோர் இல்லையப்பா…!

அன்பு வழி காட்டிய மாமகான் இயேசு தான் தெளிந்த உண்மைகளை உலகினுக்கு உவட்டாமல் ஊட்ட வந்த நிலை என்னப்பா…?

1.குழந்தைக்குத் தாய் உணவை ஊட்டும் பொழுது தாயின் மனத்தின் எண்ண நினைவு எத்தகையதோ அதே உணர்வால்
2.உலக மக்கள் படும் இன்னல்களுக்காக தன்னையே அர்ப்பணிக்க வந்த மகான் இயேசு தாய்மையின் உணர்வு கொண்டே
3.ஜெபம் கொண்டு உயர் ஞான சித்தியின் வழி உயர் நிலை பெறவே ஊட்டிட்டார்… ஊட்டிட்டார்… அன்பு கொண்டே ஊட்டிட்டார்.

தாய் முகம் கண்ட குழந்தை தாவி ஓடுவதைப் போல் மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு உபதேசங்களை செவிமடுத்தினர் என்றால்… அன்றைய கால கட்டத்தில் அரசாட்சியின் அதிகாரத்தில் அறிவின் ஆற்றல் செயற்படாதொழிந்த குழப்ப சூழ்நிலையில் உண்மையை உணர்த்தி அளித்திட்ட போதனைகள் மக்களுக்கு தெளிந்த சிந்தனை அளித்து ஈர்த்தது என்றால் அன்பின் திறத்தை என்னவென்பது…?

அன்புதானப்பா கடவுள்.

சத்திய நிலை கடைப்பிடித்த மகான்களுக்கே அவச்சொல் என்றால்
1.சிந்தனா சக்தி செல்லும் வழிதான் என்ன…?
2.தன் குடும்ப நலத்தைப் பெருக்கிக் கொள்வதற்காகவா… அல்லது வளப்படுத்திக் கொள்வதற்காகவா கூட்டங்கள் கூட்டினார்….!

இன்றைய நடைமுறை வழி அதைத்தான் காட்டுகிறது.

ஆனால் அன்று அவர் காட்டிய அன்பு வழியில் உயர் ஞான சக்தி பெறுவோர் அம்மத வழிதனில் எண்ணிக்கையில் பலர் இருப்பினும்… அவர்களும் வழி வந்த குருக்களின் போதனையால் அறியாத வெறி உணர்வுகளுக்கே செலுத்தப்படுகின்றனர்.

உண்மை வழியறிந்து அம்மகான் காட்டிட்ட வழிதனை கடைப்பிடிக்க முயலுவோர் முயலட்டும்.

அன்பு கொண்டு குணங்களின் செயலை தன்னுள் கண்ட இயேசுபிரான்
1.’சைத்தான்’ என்று காட்டியது தீய குணங்களைத் தான்.
2.சைத்தானின் குணங்களுக்கு ஆட்படும் பொழுது அதி ஆசைகளின் வழி செல்லும் மாற்று நிலைகளைக் காட்டி
3.அவைகளைப் பக்குவமாய் விலக்கிடவே தியானத்தின் வழி காட்டியதே “அப்பமும் மீனும்…”

இருபத்தியேழு நட்சத்திரங்களும் நவக்கோள்களும்

இருபத்தியேழு நட்சத்திரங்களும் நவக்கோள்களும்

 

27 நட்சத்திரங்களும் ஆற்றலை நீங்கள் பெற வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் இயக்கத்தின் தன்மை கொண்டது.

அந்த நட்சத்திரத்தின் இயக்கம் கொண்ட எந்தெந்தத் தாவர இனமோ அதனின் உணர்வின் தன்மை விளைந்த பின் தன் இனத்தின் தன்மை இங்கே ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டுள்ளது.
1.ஒவ்வொரு உயிரும் 27 நட்சத்திரத்தால் இயக்கும் உணர்வின் துணை கொண்டு
2.அந்த நட்சத்திரங்களின் சக்திகள் நமக்குள் ஐக்கியமாகிடல் வேண்டும்.

எப்படி 27 நட்சத்திரங்களுடைய சக்தி ஒருங்கிணைந்து ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கி சூரியன் ஒளியின் சுடராக வாழுகின்றதோ இதைப் போல
1.உயிரின் இயக்கத்தால் உணர்வின் எண்ணங்களை வளர்க்கப்பட்டு வாழ்ந்திடும் உணர்வின் தன்மையும்
2.தன் இனத்தின் பெருக்கம் வரும் பொழுது ஒளியின் சிகரமாக ஒளியின் நிலையாக நமக்குள் அந்த இனத்தைப் பெருக்கும் நிலை தான்
3.27 நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெற வேண்டும் என்று நமக்குள் ஒருங்கிணைந்த நிலையில் கூட்டச் செய்வதற்கே “இது…”

இப்பொழுது நான் பேசும் நிலையோ நவக்கோள்கள். உயிரணு தோன்றும் பொழுது எந்த கோளின் தன்மையை அதிகரித்துச் சேர்த்திருந்ததோ அதனின் பங்கு விகிதமே மனிதனுக்குள் வரும் பொழுது அந்தக் கோள் முன்னணியில் இருக்கும்.

நவக்கிரகம் என்பதும் இதே தான்…! எந்தக் கோளின் தன்மை நமக்குள் அதிகரித்தோமோ மற்ற கோளின் தன்மை வரும் பொழுது எதிர்மறையான நிலைகள் இயக்கச் சக்திக்கே இது உதவும்.

நம் உடலின் தன்மை உடல் ஒரு கோள்தான்.
1.சகோதர உணர்வு கொண்டு எடுக்கப்படும் பொழுது இது ஓ என்று இயக்கப்பட்டு ஒன்றிட்ட நிலை வரும் போது
2.நவக் கோளின் சக்தியை ஒருக்கினைந்த நிலைகள் கொண்டு நமக்குள் உருவாகும் நிலையே வருகின்றது.

“நான் ஏதோ சாதாரணமாகச் சொல்கிறேன்” என்று எண்ண வேண்டாம்
1.குருநாதர் பித்தரைப் போன்று இருந்து உயர்ந்த நிலைகளை எனக்குள் அனுபவபூர்வமாகக் கொடுத்த நிலைகளை
2.நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கின்றேன்.

ஏனென்றால் விஞ்ஞான அறிவு ஒரு பக்கம் அழிவின் தன்மை சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மனிதனின் சிந்தனை அழியும் நிலை வருகின்றது.

மனிதனின் சிந்தனையே அழியும் பொழுது இழிநிலையான நிலைகளுக்குச் செல்வதற்கு முன் “நீங்கள் அனைவரும் தயாராகி விட வேண்டும்…”

தயாரானால்…
1.இருண்ட உலகை அப்புறப்படுத்தி விட்டு ஒளி காணும் உணர்வாக
2.உங்கள் பேச்சும் மூச்சும் உலகைக் காத்திடும் நிலையாகப் பெற வேண்டும் என்பதற்குத்தான்
3.என் குரு இட்ட ஆணைப்படி உங்களில் பதிவு செய்து கொண்டிருக்கின்றேன்.
4.அந்த நவக் கோள்களின் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று உபதேசிக்கின்றேன்.

இதனின் தொடர் கொண்டு சூரியன் எப்படி ஒளிச் சுடராக இருக்கின்றதோ உயிருடன் நீங்கள் தொடர் கொண்டு… காந்தப் புலனாக உருவாக்கிக் கொண்டிருக்கும் அந்த உயிரின் நிலைகள் கொண்டு… மகரிஷிகள் உணர்வைத் தனக்குள் அறிவாக எடுத்து…
1.நாம் அனைவரும்… அனைவருக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று
2.ஒளியின் சுடராக இணைக்கச் செய்வது தான் உயிரின் நிலைகள்.

சூரியன் எவ்வாறு மற்ற கோள்களின் தன்மையை தனக்குள் எடுத்துச் சமமாக ஒளியாக மாற்றுகின்றதோ இதைப் போல நமக்குள் ஒளியின் சிகரமாக “அந்த மாமகரிஷிகளுடன் நாம் ஒன்றி” உணர்வினை ஒளியாக மாற்ற முடியும்.

இதற்குத் தான் 27 நட்சத்திரங்களின் சக்தியும்… நவக்கோள்களின் சக்தியும்… சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும்… சப்தரிஷிகளின் அருள் சக்தியும்… மனிதனாக உருவாக்கிய நிலைகளில் ஆறாவது அறிவை ஏழாவது நிலைகள் கொண்டு… “ஒளியின் சரீரமாக இருக்கும் அதனை நாம் அனைவரும் பெரும் பாக்கியமாக இணைத்திடும் நிலை தான்… தியானத்திலே இந்த உணர்வினை ஐக்கியப்படுத்துகின்றோம்…”

நவக்கோளின் சக்தி என்றால் வேறு எதுவும் இல்லை…!

இந்த உடலை விட்டு எப்பொழுது வேண்டுமென்றாலும் உயிர் வெளியில் செல்லும் என்பதை மனதில் வைத்து…. அதற்கு முன் அருள் ஒளியைச் சேர்க்க வேண்டும்.

காரணம்… இந்த உடலுக்குள் எதை எல்லாம் இணைத்தோமோ அந்த உணர்வின் துணை கொண்டே அடுத்த உருவை உயிர் உருவாக்கும். இன்று மனிதன் என்ற வெறுப்பு கொண்டால் மனித ஈர்ப்பிற்குள்ளே மீண்டும் இழுத்துச் சென்று விடும்

1.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்
2.அது மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணினால் அந்த உணர்வின் தன்மை கொண்டு
3.நம்மை மகரிஷிகள் இருக்கும் இடத்திற்கு உயிர் அழைத்துச் செல்லும்.
4.உயிர் நமக்குள் இருந்து அதைச் செயல்படுத்திக் காட்டும்.

உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் அவர் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று எமது குருநாதர் காட்டிய அருள் வழி… உங்களுக்கெல்லாம் அது பெற வேண்டும்… இந்த உணர்வின் தன்மை உங்களில் விளைய வேண்டும் என்று எண்ணும் பொழுது நான் அதுவாகின்றேன்.

1.நீங்களும் இதைப் போன்று உலக மக்கள் ஒளி நிலை பெற வேண்டும் என்று எண்ணத்தைக் கூட்டி
2.அந்த ஒளியின் சரீரமாகும் உணர்வைப் பற்றுடன் பற்றி அதன் வழி சென்றால் உங்கள் உயிர் உங்களை அங்கே அழைத்துச் செல்லும்.

மனித சக்திகளைத் தெய்வ சக்தியாக்குங்கள் ஒவ்வொருவருமே

மனித சக்திகளைத் தெய்வ சக்தியாக்குங்கள் ஒவ்வொருவருமே

 

ஆண் பெண் ஆத்மக் கூட்டு ஐக்கியத் தொடருடன் பிறக்கும்… ஒளியின் உயர்வு வட்ட வளர் தொடர் சக்தியான “ஆதிமூலம்” என்று உணர்த்தும் மூலத்தையே
1.ரிஷி பத்தினி மூலத்தால் உருவாகும் வழியில் செல்லும் வழி முறைகளையும்
2.மனித ஆத்மாவின் உணர்வு எண்ண மோதலைக் கொண்டு தெய்வ குண சக்திகளைப் பெறும் நிலைக்கு
3.மனிதனின் எண்ண ஓட்டச் சமைப்பினால் செல்லும் வளர் முறைகளை இது நாள் வரை வழிப்படுத்தி வந்துள்ளேன்.

இதைப் படிக்கும் ஒவ்வொரு ஆத்மாவும் இங்கே காட்டியதைச் செயல் முறைப்படுத்தி வளர்ந்து வரும் தொடரில் தங்களுக்கு ஏற்படும் வினாக்களைத் தெளிவு முறை பெறும் மார்க்கத்திற்கு வழி உண்டு.

அதாவது இதைப் படிக்கும் போது ஏற்படக்கூடிய எண்ண மாற்ற நிலைகளைத் தெளிவு காணும் அறியும் நிலைக்கு… நீங்கள் எதை அறிய விரும்புகின்றீர்களோ
1.அறியும் எண்ணத்துடன் புருவ மத்தியில் நினைவைக் கூர் பாய்ச்சிச் செலுத்துங்கள்..
2.பின் மேல் நோக்கிய சுவாசத் தொடர்பினால் உயர்ந்தோரின் நிலையுடன் எண்ணத்தைச் செலுத்துங்கள்…
3.வளர்ந்த ரிஷிகளுடன் நம் அறியும் எண்ண ஞானத்தைச் செலுத்துங்கள்.

அறிந்து கொள்ளும் உயர் ஞான அறிவாற்றலினால் இவ் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது
1.உயர் ஞானம் பெற்ற அலை சக்தியின் தொடர் நமக்குக் கிடைத்து
2.நம் உடலின் காந்த நுண் அலை ஈர்ப்பில்
3.நமக்கு அறிய விரும்பிய அனைத்திற்கும் விடைகள் அனைத்தும் கிடைக்கும்.

வாழ்க்கை, சொந்த பந்த தொழில், சுற்றுப்புற, விஞ்ஞான, வியாபார, மருத்துவ எத்தொடரில் நம் வாழ்க்கை அமைந்திருந்தாலும், வாழ்க்கைத் தொடர் சுழற்சியுடனேயே நாம் தொடர்பு கொண்ட சுழற்சிக்கு நம் வளர்ச்சியின் வலுவைக் கூட்டிக் கொண்டு வாழ்க்கைப் பிடிப்பலைதான் மனிதனின் முற்றிய நிலையென்று இன்பத்தைக் கொள்ளாமல்
1.மனித ஆத்மாவின் உயர்வு வழிக்கு வழிகாட்டி இங்கே உணர்த்திய இத்தொடரில் பல நிலைகளை
2.அந்தந்த இடங்களில் அதைப் படித்துச் செயலாக்கி அதில் விட்டுள்ள… நூலில் உணர்த்தப்படா பல உண்மைகளும்
3.ஞானத்தைப் படிப்பவர்களின் ஞானத்தைக் கொண்டு உணர்த்திய முறையை
4.செயலாக்கிச் செயல்வழிக்கு உயரக்கூடிய சில நிலைகளை இப்பாடத்திலும் “ஆங்காங்கு விட்டுள்ளது…”

வரப்போகும் கால நிலையில் துர்மார்க்க அச்சம் கொள்ளும் அலை உணர்வுதான் காற்றலையின் நச்சுத்தன்மை வளர்ந்தோங்கிச் சுழலும் தருணமாக உள்ளது.

மனிதன் தன்னைத் தான் உணர்ந்து தன் வலுவைக் கூட்டி பிற ஈர்ப்பின் பிடிப்பில் சிக்காமல்… உயர் ஞான வழித் தொடரின் தொடர்பைக் கொண்டு… வளர்ந்த பல கோடி தேவாதி தேவர்களும் செயலில் சக்தியாய் செயல் கொள்ளும் சப்தரிஷிகளின் சகல சக்தியையும் சமைக்கவல்ல ஆற்றல் கொண்ட உயர்ந்தோரின் உயர்வுடன்… பூமிப்பிடிப்பில் பிறப்பெடுத்து வாழும் மனித ஞான உணர்வெண்ணத்தைச் செலுத்தி
1.உயர்ந்தோரின் உயர்வுடன் உயரும் எண்ணத்தில் உள்ள ஒவ்வொரு ஆத்மாவும்
2.உயர்ந்தே செல்லும் வழிமுறையாய் இங்கே வழிகாட்டிய வழிமுறையின் உண்மையை ஏற்று…
3.ஞானத்தைப் போதனையாக்கி வழிகாட்டிய ஞானகுரு ‘வேணுகோபால சுவாமிகளின் போதனைப் பெற்றும்
4.ஆத்ம ஐக்கியக் கூட்டு வழிமுறை தியானச் செயலில் ஞானவிளக்கப் போதனை நிலைகளை ஒவ்வொரு ஆத்மாவும் பெற்று
5.மனித சக்திகளைத் தெய்வ சக்தியாக்குங்கள் ஒவ்வொருவருமே…!

ஏவல்

ஏவல்

 

உங்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்களை விண்ணுலகம் (சப்தரிஷி மண்டலம்) ஏற்ற சக்தி தேவை. விண் செலுத்தி விட்டால்
1.அவர்கள் விண் சென்ற பின் அந்த விண்ணினுடைய ஆற்றலை
2.அவர்கள் துணை கொண்டு அருள் ஞானிகளின் உணர்வை எளிதில் பெறலாம்.
3.நம்மை அறியாத வந்த தீமைகளைச் சுட்டுப் பொசுக்க முடியும்.

இது தான் உண்மையான தியானம்.

இதைக் கேட்டுணர்ந்தோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தியைக் கவரும் நிலைக்கே “உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்ததும் வசியப்படுத்தியதும்…”.

நீங்கள் ஏக்கத்துடன் இருக்கப்படும் பொழுது அந்த அருள் மகரிஷிகள் போதித்த உணர்வையே உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

1.இந்த உணர்வின் தன்மை கூடும் பொழுது அந்த ஞானிகள் உணர்வைக் கைவல்யப்படுத்த முடியும்
2.உங்களுக்குள் அந்த வசியப்படுத்தும் நிலையாக உற்று நோக்கிய உணர்வுகள்
2.அந்த ஞானிகள் உணர்வு உங்களுக்குள் பதிவான பின் வசியம்.
3.அதே சமயத்தில் நாம் எல்லோரும் ஒன்றாகச் சேர்க்கும் பொழுது அது கைவல்யம்…
4.தனக்குள் அந்தச் சக்தியைச் சேர்த்திட முடியும்… பின் இதனின் உணர்வின் தன்மை கொண்டு ஏவல்…!
5.யாரைப் பார்த்தாலும் தீமைகள் அகன்றுவிடும் என்று சொல்லால் சொல்லி ஏவல்படுத்தும் பொழுது அங்கிருக்கக்கூடிய தீமைகள் ஒடுங்கும்.

இதைப் பெற வேண்டும் என்றால் வலிமை கொண்டு ஒன்று சேர்ந்து மூதாதையர்களை விண் செலுத்த வேண்டும்.

ஒரு தேரைப் பல நூறு பேர் சேர்ந்து இழுத்து எல்லையைச் சேர்ப்பது போன்று பல ஆயிரம் பேர் சேர்ந்து ஒருக்கிணைந்து இயக்குவோம் என்றால் நமக்கு முன் பரவிக் கிடக்கும் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை அவரவர்கள் எண்ணி ஏங்கிய பங்கின் விகிதாச்சாரப்படி ஆன்மாவிலே கலக்கும்.

இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் வரும் பொழுது தான் கைவல்யமாகும்.

1.முதலில் வசியப்படுத்தும் நிலைக்கே உங்களைத் தயார் செய்கின்றேன்… அதற்கு உபதேசம்.
2.பின் அதனின் உணர்வின் தன்மை ஏங்கப்படும் பொழுது கைவல்யம் உங்களுக்குள் அந்த சக்தியின் தன்மை பெருகுகின்றது.
3.பின் அந்த தீமையை அகற்றும் உணர்வின் தன்மை கொண்டு நினைவால் சொல்லால் ஏவல்…! தீமைகளை அகற்ற முடியும்…!

ஆகவே உங்களை நீங்கள் நம்புங்கள். எனது குருநாதர் அதைத்தான் கொடுத்தார்

தயவு செய்து இந்த உபதேசத்தைக் கேட்டுணர்வோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் என்னை அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்னை அறியாது சேர்ந்த நோய்கள் நீங்க வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் கேட்டு பழகுங்கள்.

எதை எண்ணி ஏங்கிக் கேட்கின்றீர்களோ கேட்டுணர்ந்த உணர்வுகள் நீங்கள் எண்ணும் பொழுது
1.நான் கொடுக்கும் வாக்கு உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகி
2.அந்த நினைவின் ஆற்றல் தீமைகளை அகற்றும் சக்தியாக உங்களுக்குள் விளையும்.
3.பல முறை நான் இதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆண் பாதி… பெண் பாதி – “சிவ சக்தி…”

ஆண் பாதி… பெண் பாதி – “சிவ சக்தி…”

 

ஆண் பெண் இன விருத்தியில் ஆணின் அமில சத்தின் பெண் ஈர்ப்பு ஜீவ நிலையில் சரீர வாழ்க்கை திருமண பந்த சொந்தத்தால் மனிதனின் வம்சத் தொடர் மக்கள் செல்வ நிலை பெற்று வாழும் வழித் தொடர் பூமிப் பிடிப்புச் செயலுடன் ஒன்றிய வாழ்க்கையாக உள்ளது.

இதனை ஒத்த பிறப்பு வளர்ப்பு இறப்புடன் ஒன்றிய சுழற்சியையே எப்படி இரண்டு இரண்டு உறுப்புகளின் உருவ உடல் ஞான ஒன்றிச் செயல்படுகின்றதோ அதற்கொத்த தன்மை போன்றே
1.ஆண் இன அமில ஆத்ம அலையும்
2.பெண் இன ஜீவ வளர்ப்புக்குகந்த ஆத்ம அலையும் ஒன்றாக
3.இரண்டு ஜீவ சரீர பிம்ப ஆத்மாக்களின் தொடர்பு பிறப்பு சிசு பிறப்பதைப் போன்று
4.வலுக் கொண்ட ஆத்ம இணைப்பின் தொடரில் பிறக்கும் நிலைதான் “அர்த்தநாரீஸ்வரர்” என்று காட்டினார்கள்.

ஆண் பாதி… பெண் பாதி… “சிவ சக்தி…” என்றுணர்த்திய தெய்வ நிலையில் வழிகாட்டிய உண்மைத் தத்துவ விளக்க நிலைக்கொத்த… ஆத்ம ஐக்கியத்தில் பிறக்கப்படும் வளர்ச்சி நிலை சுழற்சியுடன்… இச்சுழற்சியுடன் ஒத்த ஆத்ம தொடர் கொண்டோரின் ஈர்ப்பு நிலை மகவுகளை சரீரப் பிறப்பில் சரீர சிசு வளர்வதைப் போன்று… ஆத்மாவினால் ஆண் பெண் இன ஆத்ம உயர் சக்தியைக் கொண்டு கூட்டமைப்பின் ஞானச் சித்தால் “ரிஷி பத்தினி..” என்ற ஒளி நிலை பெறும் ஆத்ம சக்தியைக் கொண்டு “இந்தப் பூமி மட்டுமல்லாமல் மற்ற ஏனைய மண்டலங்களுக்கும் உயர்வைக் காட்டிட முடியும்…”

ஞானச் சித்து கொண்டு “இரண்டு ஆத்ம ஐக்கியத்தில் ஒன்றானவர்கள்…”
1.உயர்வு கொள்ளாத் தனித்த நிலையில்
2.சித்து நிலையுடன் வளர்ச்சி பெற முடியா உயர் சக்தி கொண்ட தொடர்புகளும்
3.ஆத்ம இணக்க ஆண் பெண் சரீர இயக்கமுடன் ஒத்த நிலையில்
4.சித்து நிலை கொள்ளக்கூடிய ஜீவ சக்தித் தொடர்புடன் வளரும் ஆத்ம ஐக்கிய வளர் சக்தியின் கூட்டமைப்பில்
5.அந்த வலுவாகும் சக்திகள் ஐக்கியம் கொள்ளும்… தன் வளர்ப்பின் நிலைக்காக…!

பல கோடி உண்மைத் தத்துவ உயர் வளர்ச்சி “இன்பத்தின் கோடி…” என்று உணர்த்துகின்றார்களே அத் தொடருக்கும் உயர்ந்த சக்தி நிலைகளை இச்சரீர வாழ்க்கை பந்த ஆண் பெண் ஆத்ம வலுவைக் கொண்டு உயர முடியும்.

உலகை அழிவிலிருந்து காக்கும் பித்தராகிய குருநாதர் என்னிடம் சொன்னது

உலகை அழிவிலிருந்து காக்கும் பித்தராகிய குருநாதர் என்னிடம் சொன்னது

 

“உலகை அழிவிலிருந்து காக்கும்” அன்று பித்தனைப் போன்று இருந்த எமது குருநாதர் பல நிலைகளை எமக்குத் தெளிவாக எடுத்துரைத்தார்.
1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதி
2.அந்த உணர்வின் ஆற்றல் மிக்க நிலைகள் கொண்டு மனிதனாக உருவாக்கிய நற்குணத்தினை நீ தெய்வமாக மதி.
2.உயர்ந்த உணர்வுகள் அங்கே விளைய வேண்டும் என்று நீ பிரார்த்தனை செய்தால்… உனக்குள் அது விளையும்.
3.அந்த உணர்வின் சொல்லாக அந்தக் கடவுளுக்கு மகிழ்ச்சியான உணர்வு கொண்டு ஆராதனை செய் என்றார்.

ஆகவே… உங்கள் உயிரைக் கடவுளாகக் காட்டினார்… உடலைக் கடவுள் அமைத்த கோட்டை என்று காட்டினார். மனிதனாக உருவாக்கிய அந்த உயர்ந்த உணர்வின் ஆக்கச் செயல்களை தெய்வமாக மதிக்கச் சொன்னார். அதைத்தான் உங்களில் நான் பார்க்கின்றேன்.

இந்த உபதேசத்தைக் கேட்டுணர்ந்தோர் உங்களை அறியாது சேர்ந்த இன்னல்களில் இருந்து மீண்டு “மகிழ்ச்சி…” என்று வாயில் எப்பொழுது சொல்கின்றீர்களோ அது தான் எனக்குப் பேரானந்தப் பெருநிலையான அந்த சொத்தின் தன்மையாக அந்த மகிழ்ச்சி எனக்குள் விளையும்.

தீமைகள் சுழன்று கொண்டிருக்கும் இந்த வேளையில் அதிலிருந்து விடுபட நான் (குருநாதர்) காட்டிய அருள் சக்தியை
1.ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஊடுருவச் செய்து
2.அங்கே உட்புகுந்த தீமைகளை நீக்கச் செய்து
3.மகிழ்ந்திடும் உணர்வின் எண்ன அலைகள் அங்கே விளையச் செய்து
4.அவர்கள் சொல்லால் மூச்சால் பேச்சால் ஒலிபரப்பும் நிலைகளைக் கண்டு நீ ஆனந்தப்பட வேண்டும்.

அதைத்தான் குரு எமக்குச் சொன்னார்.

ஒருவர் நமக்கு எதிரியாகி விட்டால் அவன் வேதனைப்பட வேண்டும் அவனுக்கு அப்படித்தான் வேண்டும்… நமக்கு எவ்வளவு தொல்லைகள் கொடுத்தான்… அவன் கஷ்டப்பட்டுத் தான் ஆக வேண்டும் என்று ரசிப்பார்கள்.

இப்படி ரசிப்பவருடைய நிலைகள்… தன் உடலுக்குள் இருக்கும் நல்ல குணத்தை எல்லாம் நஞ்சின் தன்மையாக அது அடையச் செய்துவிடும்.

பின் இந்த உணர்வின் தன்மை வரும் பொழுது எந்த நஞ்சு இங்கே விளைந்ததோ மனிதன் சிந்தனை இழக்கப்பட்டு இறந்த பின் பாம்பின் ரூபமாகத்தான் நஞ்சினைப் பாய்ச்சி மற்றதை ரசித்துச் சாப்பிடும் நிலையாகச் செல்ல வேண்டி வரும். நஞ்சுகள் கூடி பாம்பினமாகத் தான் பிறக்க வேண்டும்…
1.அதிலே நீ சென்று விடாதே
2.நஞ்சினை நீக்கி அருள் ஞானிகள் உணர்வுகள் அங்கே பெற வேண்டும் என்று நீ தியானி.
3.அதனின் உணர்வின் தன்மை ஒளியான உணர்வுகளைப் பரப்பு தீமைகளைப் போக்கு அதைக் கண்டு நீ மகிழ்ச்சி பெறு.

குருநாதர் சொன்னது இது தான்.

பித்தனைப் போன்று தான் அவர் இருந்தார். உலகம் அனைத்தும் “அவரைப் பித்தன்” என்று எண்ணினார்கள். ஆனால் “உலக மக்கள் பித்தராக இருக்கிறார்கள்” என்று தான் அவர் சொன்னார்.

உலகம் பித்தின் நிலையில் இருந்து தன்னை அறியாது பல சித்தின் நிலைகள் கொண்டு… அவரவர்கள் உற்பத்தியாகும் நிலை தான் இவ்வாறு உருவாக்கிக் கொண்டுள்ளார்கள்… அதிலிருந்து நீ மீள வேண்டும்.

என்னைப் பித்தன் என்று சொல்பவர்கள் அவர்கள் தன்னைப் பித்தன் என்பதை மறந்து விட்டார்கள்.
1.அந்தப் பித்து கொண்ட உணர்வின் தன்மை எனக்குள் எட்டிடாது
2.அந்த மகரிஷிகள் உணர்வை ஒன்றே எனக்குப் போதும் என்று
3.இந்தச் சாக்கடைக்கு மொழி பூச வேண்டாம்… உடல் சாக்கடை என்று உணர்த்திவிட்டு
4.சாக்கடை அருகில் இருந்து தான் இந்த உபதேசங்களை உணர்த்தினார்.

இந்தச் சாக்கடைக்கு முக்கியத்துவம் கொடுக்காதே…! எதை எடுத்தாலும் சாக்கடை கழிவுகள் சேரும். ஆகவே… உயிராக இயக்கப்பட்ட உணர்வின் ஒளியின் தன்மை கொண்டு ஒளியின் சுடராக ஆக வேண்டும்.

வராகன் எப்படி நாற்றத்தைப் பிளந்து சாக்கடைக்குள்ளிருந்து நல்ல உணர்வை எடுத்து மனிதனாக உருவாகக் காரணமானதோ அதைப் போல் அந்த மெய் ஞானிகள் உணர்வை நீ நுகர்ந்து (உனக்குள்) சாக்கடைக்குள் மறைந்து இருக்கும் உயிரின் நிலைகள் கொண்டு அவனுடன் நீ ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு என்றும் நீ வாழ வேண்டும்.

அதை நீ பெற வேண்டும் என்றால் நீ சந்திக்கும் கோடானு கோடி மக்களும் அதாவது முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சொல்வார்கள்… ஏனென்றால் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு உடலைச் சிருஷ்டித்தது ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு குணத்தின் அடிப்படையில் இயக்குகின்றது
1.யாராக இருந்தாலும் அந்த உணர்வுகள் அனைத்தும் ஒருக்கச் சேர்ந்து ஒளியின் சரீரமாகப் பெற வேண்டும்.
2.அந்த உயிருடன் ஒன்றிய நிலைகள் பெற வேண்டும்… ஈசன் வீற்றிருக்கும் ஆலயம் பரிசுத்தமாக இருக்க வேண்டும்
3.அங்கே மகிழ்ந்திடும் நிலைகள் பெற வேண்டும் என்று ஏங்கி நான் உனக்குக் காட்டிய நிலைகள் கொண்டு நீ தியானி.

அதை நீ செய்தால் நீ அதுவாகின்றாய்… ஒளியின் சரீரமாகின்றாய். உன்னைப் பார்ப்பவர்களும் உன்னுடன் அவரும் ஒளியாக ஆகின்றார்கள் என்று இப்படித்தான் எனக்கு வழி காட்டினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

தீயதில் இருந்து “நல் முத்தை” எடுக்கும் வழி

தீயதில் இருந்து “நல் முத்தை” எடுக்கும் வழி

 

உலக வாழ்க்கை… பந்த… கர்ம… காரியங்கள் நடத்திட…
1.உலகச் சுழற்சியுடன் ஒன்றி வாழும் வாழ்க்கையையே
2.நாம் வளரும் வாழ்க்கைக்கு வலுவாக்கிக் கொள்ளும் சத்தாக
3.அவற்றின் நிலையை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

எப்படி ஒரு மரமானது பல விழுதுகளிட்டு வேர் ஓடி… விழுதின் மூலம் சத்தை எடுத்து அம்மரமானது வளருகின்றதோ அதைப் போன்றே வாழ்க்கை கர்ம காரியங்கள் யாவையும் “நம் உயர்வின் வளர்ச்சிக்குச் சத்தெடுக்கும் விழுதுகளாக” அமைக்க வேண்டும்.

1.தீயது என்று எதனையும் ஒதுக்காமல்
2.தீயதில் இருந்து தான் “நல் முத்தை” எடுக்கும் வழி முறை போன்று
3.எண்ணதின் உணர்வைச் செலுத்தும் ஒவ்வொரு செயலையுமே
4.ஞானிகள் காட்டிய வழியில் வழி நடந்து பக்குவப்படுத்திடல் வேண்டும்.

மனித எண்ணமுடன் பலருடன் கலந்துறவாடும் நிலையிலும் அவர்கள் எந்தக் குண எந்த வளர்ச்சியில் ஒன்றியிருந்தாலும்… நம் உணர்வின் எண்ணம் செலுத்தும் அலைக்குகந்த… அலை உணர்வின் எதிர் அலை சக்தியை நாம் பெறும் நிலை தான் உண்டு.

ஆகவே ஒவ்வொரு காலங்களிலும்
1.பூமியின் சுழற்சியில் இருந்து தான் – இருட்டில் இருந்து ஒளி பெறும் நிலையாக
2.உணர்வின் எண்ணம் செயல்படும் வலுவைக் கொண்டு தான்
3.ஆத்மாவின் வலுக்கூடிய நிலையில் ஆத்மாவின் இயக்க நிலை
4.ரிஷித் தொடர்புடன் ஒன்றிய உயர் நிலைக்குச் செல்லும்.

இத்தகைய நிலை பெற வேண்டும் என்றால் நாம் எப்படி முயற்சிக்க வேண்டும்…?

அதாவது சரீர அவயங்களில் இரண்டு நிலை கொண்ட உறுப்புகள்
1.இரண்டு கால்களைக் கொண்டு ஒத்த நிலையில் “நடை” போடும் இயக்க நிலை போன்றும்
2.இரண்டு கைகளைக் கொண்டு (“இணைந்த கைகளாக”) ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல் கொள்ளும் இயக்க நிலை போன்றும்
3.ஒளி ஈர்க்கும் கண்களை… ஒத்த நிலை ஒன்று போல் கூர் பாய்ச்சிக் காணும் நிலை போன்றும் இருத்தல் வேண்டும்.

ஏனென்றால் கண்களின் விழிகளின் அமைப்புச் சிறிது மாறினாலும் இரண்டு உருவ நிலையைத்தான் காண முடியும். ஒரு உருவமாகக் காண முடியாது.

ஆக.. ஏற்றத்தாழ்வு நிலையின்றி…
1.இரண்டு விழியைக் கொண்டு ஒன்றாகக் காணும் ஒளி நிலையைப் போன்றும்
2.செவி… சுவாசம்… “இவற்றின் இணைப்பு” இந்த இரண்டின்
3.ஒரு நிலை கூடும் செயலை ஒத்தும் அமைத்தல் வேண்டும்.

அது மட்டுமல்ல…!

1.“சிவம்” என்ற அமிலமும்..
2.“சக்தி” என்ற ஈர்ப்பும்…
3.பூமியாக உருப்பெற்ற தொடரில்
4.சிவசக்தி விநாயகனாக உருவம் பெற்ற ஆத்ம சரீர பிம்ப வளர்ப்பானது
5.எப்படி அந்த “ஆண் பெண் அமில உணர்வு” வளர்ச்சியில் வலுக் கொண்ட ஜீவ நிலை (ஜீவனுள்ள உடலை) பெற்றதுவோ
6.அதைப் போன்று இவ்வாத்ம வழித் தொடர் நிலையிலும்
7.ஆண் பெண் என்ற இணைப்பால் தொடர் கொள்ளும் வழி முறையில் ஆத்மீக வளர்ச்சி கொள்ள வேண்டும்.

அதர்வண வேதம்

அதர்வண வேதம்

 

ரிக் வேதம் சாம வேதம் யஜுர் வேதம் அதர்வண வேதம் – ஒரு பொருளின் நிலைகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் பொழுது
1.ஒன்றை விழுங்கி… அப்போது நாதத்தின் சுருதிகள் மாறுகின்றது.
2.அதனுடைய இனப்பெருக்கம் இனச்சேர்க்கை இனத்தை உருவாக்கும் என்ற நிலைகள் வேதங்களில் இப்படிப் பிரிக்கப்பட்டுள்ளது.

இயற்கையின் விளைவின் தன்மை பெறப்படும் பொழுது அதர்வண வேதத்தைத் தனியாகப் பிரித்துக் காட்டுவார்கள்.

ஒரு புலி மானைப் பார்க்கிறது என்றால் அதனுடைய வேகத்துடிப்புகள்… மான் பார்த்த பின் உடனே அஞ்சி நடுங்க வைக்கின்றது. இது அதர்வண வேதத்தைச் சேர்ந்தது.

புலியின் உணர்வு இதற்குள் சேர்ந்த பின் மான் செயலற்றதாகி அதனைப் புலி விழுங்கி விடுகின்றது. மானின் உணர்வுகள் இயங்காது உயிர் அகன்று வந்த பின் புலி கவர்ந்து கொண்ட பின் தன் இனமாகச் சேர்த்து அதனின் உயிரைத் தன் இனமாக வளர்கின்றது. இதைக் கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்.

அதர்வண வேதம் என்ற நிலையில்
1.ஒரு உணர்வின் தன்மை ஒன்றைக் குவித்து உணர்வால் மாற்றப்பட்டு இது வளர்ந்த பின்
2.உயிருடன் இணைந்த பின் இதைக் கொண்டு அது இணைத்துக் கொண்ட
3.அதாவது விழுங்கிய உணர்வின் தன்மை கொண்டு எவ்வாறு ரூபங்கள் மாறுகின்றது…? என்ற நிலையை அதர்வண வேதம் காட்டுகிறது.

வேத சாஸ்திரங்கள் படித்தவர்கள் இருக்கலாம். ஆனால் வேதத்தின் நுண்ணிய நிலைகளை அன்று மெய் ஞானிகள் சித்தரித்துக் காட்டினார்களே…!
1.அதனின் உண்மைப் பொருளை இன்று காணாது
2.அதர்வண வேதம் என்ற நிலைகளில் யாகத்தைச் செய்து ஒவ்வொரு தெய்வத்திற்கும் சக்தி ஊட்டுகின்றார்கள்.

யாக வேள்விகளை நாம் பரப்பப்படும் பொழுது அந்த மந்திரங்களைச் சொன்ன பின் இந்தத் தெய்வத்திற்குச் சக்தி ஊட்டப் போகின்றோம் என்ற நிலைகளில் 48 நாட்கள் மந்திரங்களை ஓதுகின்றார்கள்.

அந்த தெய்வத்திற்காகப் பல பொருள்களை இட்டு அவர்கள் சொல்லும் மந்திரங்களும் யாகத் தீயில் போடும் பல மணங்களும் இவையெல்லாம் சேர்த்து சோமபானம் (மது) என்பதையும் ஐதீகத்திற்காக என்று சொல்லி ஊற்றுவார்கள்.

அங்கே அவர்கள் சொல்லும் மந்திரங்களை நாம் கேட்டுணர்ந்தால் இதற்குப் பெயர் வசியம். ஆலயத்தில் உள்ள தெய்வத்திற்கு சக்தியைச் செருகேற்றுகின்றார்கள் என்றால் இப்படிச் சொல்லும் பொழுது மனிதன் இந்த தெய்வம் இன்னது செய்யும் என்று காவியங்களைத் தீட்டுகின்றார்கள்… மந்திரங்களைச் சொல்கிறார்கள் நாம் கேட்டறிகின்றோம்.

அவர்கள் சொல்வதெல்லாம் நமது உயிருக்குள் ஆழமாகப் பதிவாகி விடுகின்றது.

மந்திரத்தைச் சொன்ன பின் வாத்தியங்களை வைத்து இசைகளை இசைப்பார்கள். ஒவ்வொரு மேளத்திற்கும் ஒவ்வொரு விதமான நாதங்கள் உண்டு ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான வாத்தியங்களை வாசிப்பார்கள்.

1.கருப்பண்ணசாமி மாடசாமி இவர்களுக்கெல்லாம் டும்…டும்…டும்… என்று அடிப்பார்கள்.
2.அப்படி அடித்தாலே போதும் தன்னை அறியாமலே ஆட்டங்கள் வந்து விடும்.
3.எதைப் பதிவு செய்து வைத்துள்ளதோ அந்த உறுமி மேளச் சத்தத்தைக் கேட்டாலே போதும்…
4.ஆடாத பேயெல்லாம் ஆட ஆரம்பித்து விடும். இது எல்லாம் சுருதிகள் மந்திரத்தால் ஏற்படுத்தப்பட்ட நிலைகள் தான்.
5.யாக வேள்விகளால் வரக்கூடிய சில தீமைகள் இவைதான்.

பக்தி மார்க்கங்களில் யாகத்தைச் செய்து தெய்வத்திற்கு நெய்வேத்தியம் வைத்து அதன் வழிகளில் நாம் சக்தி பெறுவது என்பது “மந்திர ஒலிகள் தான்…”

மந்திரம் இல்லாத மதங்கள் இல்லை. ஒவ்வொரு மதமும் மந்திரத்தை உருவாக்கித் தான்… உருவத்தின் தன்மை கொண்டு ஒவ்வொரு கோயிலுக்கும் சில நிலைகளைச் செயல்படுத்துகின்றார்கள்.

இதைப்போல எடுத்துக் கொண்ட உணர்வுகள் நாம் கேட்டறியும் போது
1.நாதங்கள் சுருதிகள் அவர்கள் சொல்லும் வாக்கியங்கள்… இந்தத் தெய்வம் இன்னது செய்யும் என்று பறைசாற்றி…
2.தெய்வ குணங்களைச் சித்தரித்து அது நமக்கு வாரி வழங்கும் என்று ஆசையை ஊட்டி
3.அதனின் நிலைகள் இவர்கள் ஓதும் மந்திரத்தை நாம் செவிகொண்டு கேட்கப்படும் பொழுது ஒலி அலைகள் நமக்குள் பதிவாகின்றது.

அவர்கள் சொல்லும் உணர்வுகள் வந்து நல்ல குணத்தில் அதர்வண வேதமாக “நல்லதுக்குள் தீமைகளாகப் பதிவாகி விடுகின்றது…”

இதிலிருந்தெல்லாம் மீள வேண்டும் அல்லவா.

செயற்கை நிலைக்கொத்த “கலி மகவுகள் தான்” இனி வரும் பிறப்புகளும் கலி மாற்றப் பிறப்புத் தொடர்புகளும்

செயற்கை நிலைக்கொத்த “கலி மகவுகள் தான்” இனி வரும் பிறப்புகளும் கலி மாற்றப் பிறப்புத் தொடர்புகளும்

 

எண்ணத்தின் உணர்வால் நற்குண சமைப்பான அமிலச் சேர்க்கையின் சமநிலை கொள்ளும் இப் பூமி வாழ்க்கைச் சுழற்சியில் சிக்குண்ட பல குண மோதல் நிலையிலும்… எண்ணத்தின் உணர்வு சமநிலை பெறத்தக்க வழி ஆற்றல் எண்ணம் கொண்டு சூரியனின் அலை சக்தியை காந்த மின் அலை வார்ப்பாக உடல் எலும்புகளின் ஊன் நிலை எடுக்கவல்ல வழிதனை மனித எண்ணத்தால் பெறக்கூடிய ஆத்ம பலத்தின் வலுவைக் கொண்டு…
1.இன்றைய இக்கலியில் சிதறுண்டு சிக்கித் தவிக்கும் மனிதனின் எண்ண உணர்வு வேட்கை
2.மனித ஆத்மாவின் உண்மை உயர்வை உணர்ந்து ஞான வளர்ச்சி குன்றியுள்ள இக்கலியின் கடைசிக் காலத்தில்
3.மனித ஆத்மா உயரும் ஞான போதனை வழித்தொடர் அற்று
4.மனித எண்ணங்களும் ஆவி உலகில் உள்ள உடலை விட்டுப் பிரிந்த ஆவி ஆத்மாக்களும்
5.செயற்கை விஞ்ஞான ஒலி ஈர்ப்பில் உணர்வைச் செலுத்தி இயந்திர அலைத் தொடர்பின் ஒலி மோதலில் மனித ஆத்மா எடுத்து வெளிப்படுத்தும் சுவாச அலையும்
6.இயந்திர அலையில் வெளிப்படும் காந்த சக்தியைச் சமைத்து சமைக்கப்பட்டதின் ஒலி எடுத்து வெளிப்படுத்தும் மனித சுவாச அலை அணுக்கள்
7.அதற்குண்டான அணு வளர்ப்பைத்தான் வளர்க்கும் ஆற்றலைத் தான் பெற்றுள்ளது.

அதனால்… மனித உணர்வின் சுவாசமே இயந்திர கதியின் ஒலி ஈர்ப்பின் உணர்வெடுக்கும் எண்ண சுவாச அணுக்கதிர்கள்தான் சுவாசத்திலிருந்து வளரும்.

இயற்கைத் தாவர நறுமண மூலிகையின் தொடர்பற்ற… இயந்திர ஓட்ட செயற்கை மனித நிலையில் வெளிப்படும் சுவாச அலையின் அணுக்கதிர்களில் இருந்து வளரவல்ல உயிரணுக்களே…
1.கலி மனிதன் வெளிப்படுத்தும் அலைக்குகந்த புதிய புதிய குறுகிய எண்ண வேட்கை ஞானச் செயலற்ற ஜீவ ஜெந்துக்கள் தான்
2.இப்பொழுது வளரும் ஜீவ அணு உயிர் வளர்ப்புகளும் தாவர இன வளர்ப்புகளும்.
3.இத்தொடரிலேயே செல்லும் வழி தான் செல்லும் நிலை தான் “இன்றைய காலமும் இனி வரும் காலமும்…”

பல நூற்றாண்டுகளுக்கு முன் மனித உருவங்களும் மனிதனைக் காட்டிலும் மிருக உருவங்களும் இன்றுள்ள நிலையைக் காட்டிலும் உருவத்தில் வளர்ந்து வண்ணமும் பொலிவும் மிக்க ஒளியுடன் மிளிர்ந்தன.

இராமாயண காலத்தில் வால்மீகியார் எழுதிய குணத்தின் அடிப்படைக் கதாபாத்திரமே அந்தந்த குணத்திற்கொப்ப “எண்ணத்தில் குறுகியவருக்குக் கூனி என்றும் சகுனி என்றும்…” எண்ணத்தில் உயர்ந்த இராமருக்கு அவரின் உருவ குண அழகை வழிக்காட்டிப் படைத்த காவியத்திலேயே எண்ணத்தைக் கொண்டு உருவகத்தைச் சித்திரித்துக் காட்டினார் வால்மீகியார்.

வளர்ந்தோடிய இக் கலி ஓட்டத்தில் இயந்திரத் தொடர்பு கொண்ட செயற்கை ஒலி ஈர்ப்பில் வாழக்கூடிய மனித எண்ணங்களின் உணர்வு அதன் தொடர்பில் செலுத்தப்படும் வழித்தொடர் கொண்ட எண்ண வேட்கையின் சுவாசு அலை வீச்சின் சுழற்சிதான்… இக்கலி ஓட்ட பூமி ஜீவ ஜெந்துகளின் உருவக வார்ப்புநிலை வழி கொள்ளும் வளர்ச்சியின் வழிமுறையில் எவ் ஒலி அதிகமாய்க் கேட்டு அவ் ஒலி ஈர்ப்பின் சுழற்சியில் சுழல் கொள்ளும் வார்ப்பக ஞான வளர்ச்சியும் மீண்டும் பிறப்பிற்கு வரும் பொழுது
1.ஞானத்தின் வளர்ச்சி கொண்ட எண்ண உணர்வு மகவு பிறப்பதைக் காட்டிலும்
2.தன் ஞானமற்று விஞ்ஞான வேட்கை வழி தந்த உணர்வு ஈர்ப்பில் கர்ப்பம் கொள்ளும் சிசு நிலையிலேயே
3.விஞ்ஞான செயற்கை நிலைக்கொத்த “கலி மகவுகள் தான்” இனிவரும் காலப் பிறப்புகளும் கலிமாற்றப் பிறப்புத் தொடர்புகளும்.

அன்றைய காலங்களில் ஆயகலைகள் அறுபத்தி நான்கு என்று பிறக்கும் மகவுகளுக்கே பயில்விக்கும் பயிற்சி ஞான போதனைகள் இன்றைய செயற்கைப் போதனை தன்னைத்தான் நம்பா செயற்கைப் பிடியின் நம்பிக்கை கொண்டு நடைபெறும் காலச் சுழற்சியின் ஓட்ட கதியுடன் மனிதனின் எண்ணம் சென்று கொண்டுள்ளது.

இதிலிருந்து மீண்டிடும் நிலையாக …
1.மனிதனின் ஞானத்தால் ஆத்ம பலத்தின் உயர்வைக் கொண்டு ஜீவ மனித எண்ண உணர்வின் ஞானம் கொண்டு அடையும்
2.இன்ப நிலையின் வழித் தொடரைத்தான் உபதேச போதனையாய் உயரும் வழிகாட்டி
3.ஒவ்வொரு ஆத்மாவும்… மனிதனுக்கடுத்த நிலையான தெய்வநிலை பெறவல்ல வழித் தொடருக்கு இங்கே வழி காட்டுகின்றோம்.

அகஸ்தியன் கண்டது அனைத்தையும் “நீங்கள் காணுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு”

அகஸ்தியன் கண்டது அனைத்தையும் “நீங்கள் காணுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு”

 

“அகஸ்தியன் என்று சொல்லும் அக்காலத்தில் வாழ்ந்த அந்தச் சிசு” தன் தாயின் கருவில் இருக்கப்படும் பொழுதே பல உன்னதமான சக்திகளைப் பெறுகின்றது. அவை அனைத்தும் அதற்குப் “பூர்வ புண்ணியமாக” அமைகின்றது

பிறந்து… அந்தக் குழந்தை தனிமையிலே கிடந்தாலும் நஞ்சு கொண்ட உயிரினங்களோ பாம்புகளோ மற்ற பூச்சிகளோ இவனைக் கண்டாலே விலகிச் செல்லும் நிலையே ஏற்படுகின்றது.
1.சூரியனை வணங்கி வந்த அக்காலத்தில் இது கடவுளின் பிள்ளை கடவுளால் கொடுக்கப்பட்டது என்று
2.அவருடைய தாய் தந்தையரே அவனைக் கடவுள் என்றே வணங்கத் தொடங்குகின்றார்கள்.

பல அற்புத நிகழ்ச்சிகள் நடக்கின்றது காட்டு விலங்குகள் அனைத்தும் இவனை அணுகாது விலகிச் செல்கின்றது.

ஆனால் அகஸ்தியனுடைய தாய் தந்தையர் மிருக ஜந்துக்களிடமிருந்து தப்பிப்பதற்கு தாவர இனங்களின் விழுதுகளை அரைத்து உடலில் மூலமாகப் பூசினார்கள்.

அந்த முலாமின் உணர்வுகள் தான் கருவிலே உருப்பெற்ற அகஸ்தியனுக்குப் பூர்வ புண்ணியமாகக் கிடைத்தது.
1.சூரியனின் உணர்வின் ஆற்றலே இவனுக்குள் பெருகிப் பெருகி அதை இவன் நேரடியாகப் பார்க்கின்றான்
2.அங்கே நடக்கும் நிகழ்ச்சிகளையும் காணுகின்றான்.

விஞ்ஞான அறிவுப்படி வலிமையான தொலைநோக்கிகளை வைத்து விண்வெளியில் தொலை தூரத்தில் இருக்கும் மண்டலங்களைக் காணுவது போன்று
1.அவனின் உணர்வின் செல்களுக்கும் மற்றதை ஒளி கொண்டு வெகு தூரம் நினைவலைகள் பாய்ச்சப்பட்டு
2.அணுவின் ஆற்றலை அறியும் தன்மையும் இவனுக்குத் தாய் தந்தையினுடைய வடிவிலே கருவிலேயே பூர்வ புண்ணியமாகக் கிடைக்கின்றது.

இது அவனுடைய சந்தர்ப்பம்.

பிறந்து ஐந்தே வயது ஆகும் பொழுது விண்ணை நோக்கிப் பார்ப்பதும் மற்ற விஷம் கொண்ட மிருகங்கள் இவனைக் கண்டு விலகிச் செல்வதும் பல அற்புத நிகழ்ச்சிகளை அணுவின் சிதைவும்… அணுவின் கூட்டமைப்பும்… அணுவின் ஆற்றலையும்… அவன் நேரடியாக்க் கண் கொண்டு அறியத் தொடங்குகின்றான்.

1.ஒரு உயிரினம் முட்டை இடுக்கிறது என்றால் அது என்ன முட்டை என்றும்
2.அதற்குள் அணுவின் தன்மை எப்படி உருப்பெறுகிறது என்பதையும் அவன் கண்டுணர்கின்றான்.

நமது பூமியிலே மணங்களைக் காணும் (நுகர்ந்து) பொழுது இந்தச் செடியில் இருந்து வந்த மணம் என்று அதைப் பிரித்துச் சொல்லும் தன்மை ஐந்து வயதிலேயே அவனுக்கு வருகின்றது.

இது போன்ற வளர்ச்சி வந்தபின் தாய் தந்தையருக்கு பேரானந்த நிலை வருகின்றது.

இருப்பினும் இந்தக் குழந்தை தன்னிச்சையாக எங்கே சென்றாலும் அச்சமின்றி அவன் செல்கின்றான். மற்றவைகள் தான் இவனைக் கண்டு அஞ்சுகின்றது. ஆனால் அவருடைய தாய் தந்தையரோ தாவர இனத்தின் முலாம்களைப் பூசாமல் சென்றால் மிருகங்கள் அவர்களைக் கொன்றுவிடும்.

இப்படி நடக்கப்படும் பொழுது இவர்கள் பூசிய முலாம்கள் உடலில் அதனின் நஞ்சுகள் பெருகி அது அதிகரித்து நோயாகி மடிகின்றார்கள். அவனுக்கு ஐந்து வயது முடிவதற்கு முன் இருவரும் இறந்து விடுகின்றார்கள்.

இரண்டு பேருமே தன் குழந்தை மீது… இளம் பிஞ்சு உள்ளத்தை எண்ணியே காட்டுக்குள் அவனைத் தனித்து விட்டுச் செல்கிறோமே என்ற ஏக்க உணர்வு அதிகரித்து இருவரும் செயலற்ற நிலை வரும் பொழுது
1.குழந்தையை ஏங்கி அந்த உயிரான்மாக்களும் ஒருமித்த நிலைகள் வெளி வருகின்றது.
2.வெளிவந்த பின் எந்தக் குழந்தை மீது பற்று வைத்தார்களோ அகஸ்தியனின் உடலுக்குள் புகுந்து விடுகின்றது.
3.அவர்கள் வாழ்க்கையில் எதையெல்லாம் வளர்ச்சி பெற்று வந்தார்களோ அந்த உணர்வின் ஆற்றல்கள்
4.”இந்தக் குழந்தையைக் காத்திடும் உணர்வாக” அந்த உடலுக்குள் புகுந்து விடுகின்றது.

அதற்குப்பின் அந்த குழந்தைக்கோ தன் தாய் தந்தை மடிந்ததை எண்ணி அதுவும் ஏக்கத்தால் எண்ணுகின்றது. “அன்னை தந்தையைப் பார்க்க வேண்டும்” என்ற ஏக்கத்திலேயே சூரியனை உற்றுப் பார்க்கின்றான்.

ஏனென்றால் சூரியனைக் கடவுள் என்று காண்பித்த நிலைகளில் இவன் உற்று நோக்கும் போது விண்ணிலே நடக்கும் அதிசயங்களைக் கண்டுணர்கின்றான்.

1.இவன் உடலில் விளைய வைத்த அவை ஒவ்வொன்றும் அறிவின் தன்மையாக விண்ணின் ஆற்றலை அறியும் நிலையாக
2.இவனின்று உமிழ்த்தும் உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் படரச் செய்து கொண்டுள்ளது.

அதை எல்லாம் நான் (ஞானகுரு) இப்பொழுது பேசுகிறேன் என்றால்…
1.என் குருநாதர் அதை எடுக்கும் வழியை உணர்த்தியதனால்
2.அதனின் உணர்வின் துணை கொண்டு தான் அறியும் ஆற்றலைப் பெற்று
3.அறிந்த பின் உங்களுக்கும் அதைச் சொல்ல முடிகிறது.

ஏனென்றால் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டதை இன்று நம்மால் பார்க்க முடியும்.
1.நீங்கள் அனைவருமே அதைக் காண முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
2.எனது குருநாதர் எனக்கு எப்படி அதைக் காண்பித்தாரோ அதைப் போல விண்ணுலக ஆற்றலை நீங்கள் ஒவ்வொருவரும் கண்டுணர முடியும்.

மனிதனான பின் முழுமை அடையும் நிலைகளாக உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் நீங்கள் பெற முடியும் என்பதற்கே இதை உணர்த்துகின்றேன்.