விண்ணிலிருந்து ஒளி அலைகளை எடுத்து “ஜோதி நிலை பெறுவது எப்படி…?”

விண்ணிலிருந்து ஒளி அலைகளை எடுத்து “ஜோதி நிலை பெறுவது எப்படி…?”

 

உந்து விசையின் வேகத்தைக் கொண்டு அதில் செலுத்தும் எரிபொருளின் தன்மைக்கொப்ப அவ்விசையின் எரிபொருள் மோதலிலிருந்து வெளிப்படும் துடிப்பு நிலையைக் கொண்டு வாகனங்களின் ஓட்டத்தை விஞ்ஞானத்தால் வழிப்படுத்துகின்றனர்.

அதைப் போன்றே…
1.உயிரணுவின் ஆத்ம அலையின் வார்ப்புக் கூடான இச்சரீரக் கூட்டு இயந்திரம்
2.சுவாசம் என்ற உந்து விசையைக் கொண்டு உடல் சமைக்கும் ஆத்ம எரிபொருளின் ஜீவத்துடிப்பு நிலை
3.ஒலி ஈர்த்து ஒளி பெற்றுச் சொல்லாற்றி சுவை கண்டு உணருகின்ற எண்ண ஓட்டக்கோளத்தின் வளர்ப்பு நிலையில் அடுத்த நிலை யாது…?

உயிராத்மாவின் வளர்ப்பிற்கு ஜீவ சரீர உணர்வின் எண்ணத்தால் சமைக்கப்படும் வலுவைக் கொண்டுதான்… ஆத்மாவின் வலு நிலை சரீர ஓட்டத்தில் செயல்படும் தன்மை நிலை ஏற்படுகின்றன.

சரீரமற்ற ஆவி ஆத்மாவிற்குச் “சுவாச நிலை இல்லாததனால்” அதனுடைய உண்மைத் துடிப்பு நிலை காற்றின் அலைத் தொடர்புடன் உயிர் ஆத்மாவானது இருக்கின்றது.

அதாவது நாம் எப்படி நட்சத்திரங்களைக் காணும் பொழுது மின்னும் நிலையைக் காணுகின்றோமோ அதைப் போன்றே
1.ஆத்ம அலையின் துடிப்பு நிலையின் செயல் கொண்ட சுழற்சியில் தான்
2.உடலை விட்டுப் பிரிந்த ஆத்மா செயல் கொள்கின்றது.

பூமியின் பிடிப்பலை எண்ண உணர்வுடன்… வாழ்க்கையுடன் ஒன்றிய வாழ் நாளில் எண்ணத்தின் சுவாசத்தை எடுத்து… அச்சுவாசம் சமைக்கும் தொடர்பு வாழ்க்கையின் வழி முறைப்படி… ஆத்மாவின் உயர் சக்தியை அறியாமல்… வாழ்க்கைப் பிடிப்பில் சிக்கி வாழ்ந்து மடியும் உயிராத்மா… அதன் உயர்வு நிலை பெறாமல்… வளர்ச்சியற்றுப் போய் மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பு என்ற சுழற்சியிலேயேதான் இருக்க முடியும். உயிராத்மா வளர்ச்சி கொள்ள முடியாது…!

ஆகவே…
1.பல கோடி ஆண்டுகளாக வார்ப்புப்படுத்தி வார்ப்புப்படுத்தி வளர்ச்சி கொண்டு வந்த
2.ஆத்ம வளர்ச்சியின் மனிதச் சரீரத்தின் வலுப் பெற்ற வளர்ச்சி நிலையிலிருந்து
3.உயர் நிலை பெற – சுவாசத்தைக் கீழ் நோக்கிய பூமி ஈர்ப்பு எண்ணமுடன் செலுத்தாமல்
4.சூரியனின் சமைப்பின் வழித் தொடர் பல நிலையில் மாறு கொண்டு வளரும் தன்மையில்
5.பூமி சமைத்து வெளிப்படுத்தும் அலையை எடுக்காமல்
6.பூமி சமைப்பினால் சரீரம் பெற்று எண்ணத்தின் உணர்வு நல்ல நினைவு உள்ள காலங்களிலேயே
7.மேல் நோக்கிய சுவாசத்தால் நாம் எடுக்கும் நேரடி காந்த நுண் அலைகளைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

அதாவது ஏழு வகை வண்ணத்தில் சமைக்கப்பட்ட ஆறு நிலை கொண்ட வண்ண ஒளி அலைகளை… காந்த ஈர்ப்பு நுண் அலையின் தொடர் வளர்ச்சி நிலை எண்ணத்தின் மோதலினால் நேரடியாகப் பெற வேண்டும்.

இப்படிப் பெற்ற வளர்ச்சியைக் கொண்டு பூமியின் பிடிப்பற்ற நிலைக்கு வர முடியும். அதன் மூலம் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் வழி முறையிலிருந்து மனிதனுக்கு அடுத்த நிலையான வளர்க்கும் நிலையான “வண்ண ஒளி ஜோதியாகலாம்…!”

மனிதனின் எண்ணத்தால் எடுக்கும் நிலை கொண்ட வார்ப்பு நிலை தான் ஆத்மாவின் வளர்ச்சி நிலை. ஆகவே இவ்வாத்மாவில் சேமிக்கும் வண்ண ஒளியின் வளர்ச்சி நிலையில் தான் மனித நிலையிலிருந்து வளர்ச்சி பெறும் அடுத்த நிலை உருவாகின்றது.

சீப்பை எடுத்து நாம் தலையை வாரும் பொழுது கீழ் நோக்கி வாரும் பொழுது
1.பூமியின் ஈர்ப்புடன் ஒன்றியதாக ரோமக்கால்களின் அணு வளர்ச்சியும்
2.கீழ் நோக்கி வளரும் வளர் நிலைக்கொப்ப ஈர்ப்பில் சீவப்படும் நிலையில் எந்நிலையான பாதிப்பும் தெரிவதில்லை.
3.அதே சீப்பைக் கொண்டு மேல் நோக்கி நம் கூந்தலைச் சீவினோம் என்றால்
4.உடல் நிலையே சிலிர்ப்புத் தன்மை இவ்வுணர்வு பெறுகின்றது.

இதை எப்படி அனுபவத்தில் காணுகின்றோமோ அதைப் போன்ற உண்மை நிலையை சுவாச நிலையால் எண்ணத்தை மேல் நோக்கிச் செலுத்தும் பொழுதும்… நேரடி சுவாசத்தை மேல் நோக்கி எடுக்கும் அலையை இந்த உடல் உடனே பெறுகின்றது…!

இத்தொடர் வளர வளர… மனிதச் சக்தியின் வலுச் சக்தியை இந்த ஆத்மா பெற்று… இவ்வாத்மாவின் ஒளி அலைகளைத் தனித்து இயக்கவல்ல வளர்ச்சி வழி கொள்ள முடியும்…!

மெய் ஞான சக்தியின் உருவகம்தான்… “உருவான சக்தி அனைத்தும்”

மெய் ஞான சக்தியின் உருவகம்தான்… “உருவான சக்தி அனைத்தும்”

 

நிழலுக்காகக் குடை தேடுகின்றோம்… வெய்யிலில் நிரந்தரக் குடில் அமைக்கின்றோம். வாழ்க்கையில். அதைப் போன்று தெய்வத்தின் சக்தி நிலையையும்…
1.அவசரக் காலங்களுக்குத் தெய்வம் வந்து காக்குமென்ற நம்பிக்கைக் குடையைத் தேடுகின்றோமே தவிர
2.நிரந்தரக் குடிலமைப்பைப் போல் ஆத்ம தெய்வத்தைத் தெய்வ சக்தியாக்கிக் கொள்வதில்லை.

“சொல்வாக்கு செல்வாக்கு சகல சக்திகளையும்” ஆத்ம ஞான வளர்ச்சியினால் வழிப்படுத்தும் ஆற்றல் எண்ணத்தின் உணர்வினால் வழியமைத்துக் கொள்ள முடியும்.

ஆலயத்தைக் காட்டி எண்ணத்தைக் குவித்து உயர வழி காட்டிய தொடர் நிலை இன்று, ஆலயமென்ற ஸ்தலத்தில்தான் ஆண்டவன் அருள் நிலையை அடையும் பொக்கிஷமாக உணர்வின் மோதலின் உந்தல் பல ஆயிரம் ஆண்டுகளாக மனித உணர்வின் பிறப்புடன் தொடர்பு கொண்டு பக்தி இயக்க அலைத் தொடர்பின் போற்றித் துதித்து “தன்னைத்தான் தாழ்த்தி… தெய்வத்தின் உயர்வைப் புகழ்ந்து வழித் தொடர் பிறப்பில் தான் வந்துள்ளோம்…”

வழித்தொடர் பிறப்பென்பது
1.பிறப்பெடுத்த ஆத்மா பிறப்பில் வளர்த்த எண்ண வேட்கையின் “அலை சக்தியின் இறப்பில்”
2.ஆவி ஆத்ம நிலையின் வேட்கை அலையின் எண்ணம் அதன் பிறப்பு வாழ்க்கையில் வளர்த்த வீரிய பதிவு நிலையின் பக்தி நிலை
3.பிறப்பில் வாழும் மனித ஆத்மாவின் அலை ஈர்ப்புடன் உணர்வின் எண்ணத்தில் மோதி… அத்தொடர்பில் வெளிப்படுத்தும் உண்மைதனை
4.மனிதன் இன்று தெய்வம் பேசுகின்றது முருகன் வந்து அருள் சொல்கின்றார் என்ற தெய்வங்களின் நாமத்தைக் கொண்டு வளர்ந்த அவர்கள்
5.வளர்த்த கவிநயப் போற்றல் கவிதைகளை வழித்தொடரில் உருப்போட்டு ஜெபித்து
6.பல கோடி கோடி ஒன்றின் தொடர்பில் ஒன்று உருண்டு உருண்டு வளரும் ஆதிசக்தியின் வளர்சக்தியின் வீரியத் தொடர்பினை
7.தன் ஞானத்தின் உயர்வு வழித் தொடரில் செலுத்தாமல் ஏட்டுப்படிப்பில் படிக்கும் போதனையின் அறிவு நிலையின் தொடர் வட்டத்தைப் போன்றுதான்
8.இன்றைய பக்தி முறையின் வழிபாட்டு நிலையும் உள்ளது.

ஒன்றுடன் ஒன்று கூட்டி அதன் மாற்று விகிதத்தில் மாறி வரும் உருப்பெறும் தொடர்பினால் பிறிதொரு நிலையை ஆராயும் தன்மை அடிப்படை ஞானத்தில் மனித எண்ணம் செல்ல வேண்டும்.

மிருகங்களின் தன்மையில் ஒளி பாய்ச்சி ஒலி ஈர்ப்பில்…
1,ஓர் ஆட்டின் தொடர்பில் ஆட்டு மந்தையே செல்வதைப்போன்ற நிலை தான்
2.இன்றைய மனிதனின் வழித்தொடரும் உள்ளது.

பல கோடி மனிதர்கள் உள்ளனர் என்றால்… ஒன்றுக்கொன்று மாறு கொண்டு சக்தி நிலை கொண்டுதான் உருப்பெற்றுள்ள மனித நிலை…
1.இவ்வெண்ணத்தின் உணர்வைச் செலுத்தக்கூடிய ஞானக்கூட்டுச் சேர்க்கையால்
2.ஒவ்வொரு மனிதனுமே தன்னுள்ளுள்ள சக்திப் படைப்பினை வளர்ப்பின் வளர்ப்பாய் வழித் தொடர்களாகப் படர்ந்துள்ள அமிலக்கூறின் சத்தெடுத்து
3.ஒவ்வொரு மனிதக் கோளத்திலும் அதைச் சமைத்து சமைப்பின் சுவையை ஆத்ம முலாம் சுவைத்து
4.ஆத்மாவின் உயர்வைக் கொண்டு அகில சக்தியின் உன்னத சக்தியாய்ப் பிரித்து உயர்வுப் படைப்புகளைப் படைக்கலாம்.

மனித எண்ண சக்தியின் வளர்ச்சி கொண்டு… எண்ணத்தின் ஞானத்தால் சாதிக்கவல்ல சக்தித் தன்மை உயர்வு தானப்பா “சூரிய சக்தியும் சகல வளர்ந்த சக்தி நிலைகளுமே…”

1.வாழ அமைக்கும் ஜீவாதார பாதுகாப்பு வேலிதான் உயர்வு என்ற உருவகக் கோபுரங்கள் கட்டி உழன்றுள்ள மனிதன்
2.உணர்வின் எண்ண ஞான சக்தியின் உருவகம்தான்… “உருவான சக்தி அனைத்தும்” என்றுணர்ந்து செயல்பட வேண்டுமப்பா.

விண்ணின் ஆற்றலைக் கண்ட மெய் ஞானிகளின் நுண்ணிய அறிவினை உங்களையும் பெறச் செய்கின்றோம்

விண்ணின் ஆற்றலைக் கண்ட மெய் ஞானிகளின் நுண்ணிய அறிவினை உங்களையும் பெறச் செய்கின்றோம்

 

விஞ்ஞான அறிவால் ஒரு மனிதனுக்குள் பதிந்த நிலைகளை… இங்கிருந்து இராக்கெட்களைக் கோள்களுக்குள் ஏவி… அதனின் உணர்வை இங்கே தரையில் இருக்கக்கூடிய எந்திரத்தின் துணை கொண்டு கவர்ந்து விஞ்ஞானி படம் எடுக்கின்றான்… அதை அறிகின்றான்.

ஒளி எவ்வளவு தூரம் பாய்கிறதோ… அதாவது இப்பொழுது லைட் போட்டோம் என்றால் அது எவ்வளவு தூரம் சீறிப் பாய்கின்றது என்ற நிலையைக் கணக்கிட்டு… விஞ்ஞானக் கருவிகளின் மூலம் “ஒளி ஆண்டு” என்று கண்டு சொல்வார்கள்.

ஒரு எரி நட்சத்திரம் வியாழன் கோளில் விழுகின்றது என்று வைத்துக் கொள்வோம்,
1.அதை அங்கிருந்து படம் எடுத்து இங்கே வருவதற்கே அதனுடைய வேகத்துடிப்பு அதிகமாகி நான்கு நாட்களாவது ஆகும்… குறைந்தபட்சம்.
2.அந்த நான்கு நாள்களில்… படம் எடுத்த இந்த உணர்வுகள் அலைகளாக இங்கே அனுப்பச் செய்து
3.இங்கே எந்திரத்தின் துணை கொண்டு அது சிறிதளவு புள்ளியைப் பெரிதளவாக அதைப் பெருக்குகின்றான்.
4.பின் அது விழுந்த இடத்தினையும் அவன் அறிகின்றான்.
5.இவன் அங்கே படம் எடுத்து வந்தாலும் “இந்த உணர்வலைகள்” பின் வரும் பொழுது “எதிர்நிலையான அலைகளாகப் பட்டால் இது பிரிக்கும்…”

ஆனால் அங்கே படம் எடுத்த உணர்வின் தன்மையை… மீண்டும் அவன் எடுப்பான் என்றால் அவனுக்குள் அங்கு அந்த ஒளியின் தன்மை எடுத்து அலைகளாக அனுப்பும் பொழுது “இங்கே மாற்றங்களே ஏற்படும்…”

ஆக இங்கே ஒரு எல்லையைக் குறித்து இதனின் வேகத் துடிப்பு வரும் பொழுது சுழற்சியின் வேகத்தில் கண்டுணரலாம். மலை போன்ற உள்ள அந்த பெரும் பாறையின் தன்மைகள் அது சுழன்று வரப்படும் பொழுது… வியாழன் கோளிலே வந்து மோதும் வேகமும் வியாழன் சுழற்சியின் வேகம் அதிகரிக்கப்படும் பொழுது… அந்த வியாழனிலோ தனது ஈர்ப்பின் சக்தி அதிகமாகும் பொழுது அது பனிப்பாறைகள் தான் அவை.

சுழற்சியின் வேகம் கூடும் பொழுது அதன் ஈர்ப்புக்குள் வந்தவுடனே இது சுக்குநூறாகத் தெறித்துப் பஸ்பம் ஆக மாறும்.

அதைப் போன்ற எரிகற்கள் பூமியின் ஈர்ப்புக்குள் வரும் பொழுது பெரும் பாறாங்கல்லாக இருப்பது சிறு கல்லாகத் தேய்ந்து இங்கே விழுகின்றது.
1.அது இங்கே உராய்வின் தன்மையில் “எரியவில்லை” என்றால்
2.மனிதர்கள் இங்கே பூமியில் வாழவே முடியாது.

ஆக இந்த சுழற்சியின் வேகத்திற்கும் சுழற்சியின் வேகத்தில் வரும் காற்று மண்டலத்தில் உராய்ந்து தான் இந்த இதனுடைய நிலைகள் அது குறைந்து வருகின்றது. ஆக இதைப் போன்று பன் மடங்கு சுழலும் நிலைகளில் அது வருகின்றது.

இதை எல்லாம் விஞ்ஞானிகளும் இன்று கண்டு நமக்குச் சொல்கிறார்கள்.

இதே மாதிரித் தான் மெய் ஞானிகள் அன்று அவர்கள் கண்டுணர்ந்தது.
1.தனக்குள் இருக்கும் ஆற்றலின் தன்மை கொண்டு விண்ணிலே தன் எண்ணங்களைப் பாய்ச்சுகின்றான்…. அனைத்தையும் அறிகின்றான்.
2.அந்த மெய் ஞானத்தின் உணர்வின் தன்மையை உங்களில் பதிவு செய்யும் பொழுது
3.இந்த உணர்வைத் திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப நாம் எண்ணும் போது
4.கோடிக் கணக்கான சரீரத்தில் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் அது பெருகி
5.அது எப்படி நமக்குள் மனிதனாக உருவாக்கியது…? என்ற நிலையை நாம் காண முடியும்.

அந்த மெய் ஞானிகளில் “முதன்மையாக…” 2000 சூரியக் குடும்பத்தையும் கண்டறிந்தவன் அகஸ்தியன்
1.அவன் கண்டுணர்ந்த உணர்வுகள்… அவனில் விளைந்த உணர்வுகள் தான் இன்றும் நம் பூமியில் படர்ந்து கொண்டு உள்ளது.
2.அவன் விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் அறிந்து… தீமைகளை அகற்றி உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி
3.துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்தும் வளர்ந்து கொண்டுள்ளான் அகஸ்தியன்.

அவன் அருளை நாம் பெற்றால் அவன் கண்டதை நாமும் முழுமையாகக் காணலாம்… அறியலாம். பிறவியில்லா நிலை அடையலாம்… ஒளியின் சரீரம் பெறலாம்.

நமது எல்லை

நமது எல்லை

 

தேர் என்பது மிகவும் வலிமையானது… பல நூறு பேர் ஒன்று சேர்ந்து இழுத்தால் தான் அது நகர்ந்து ஓடும். ஆளுக்கு ஒரு பக்கமாக இழுத்தால் தேர் எல்லை வந்து சேராது.

இது போன்றுதான் நமக்குள் இருக்கும் ஆயிரக்கணக்கான குணங்கள்
1.ஒன்று தீமையின் நிலைகள் இழுத்தால் ஒன்று நன்மையின் நிலைகள் இழுக்கப்படும்போது
2.நம் உணர்வின் தன்மை ஒளியாகும் அறிவின் தன்மைகள்… உயிருடன் ஒன்றி எல்லையைச் சென்றடையாது.

அந்த எல்லையை அடைய… எவ்வாறு செயல்படுத்த வேண்டும்…? என்பதுதான் குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் தெளிவாகப் பதிவு செய்து
1.இந்த உணர்ச்சிகளை உந்தும்படி செய்து அந்த உணர்வின் ஏக்கத்தால்
2.மகரிஷியின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்துவதே கூட்டுத் தியானம்.

அதன் வழி கொண்டு நீங்கள் தியானித்த பின் நம் மூதாதையரான குலதெய்வங்களின் உயிரான்மாக்களை நினைவுக்குக் கொண்டு வந்து அந்த சப்தரிஷி மண்டலங்களுடன் அவர்களை இணையச் செய்து
1.அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று உந்து விசையால் உந்தித் தள்ளினால்
2.சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து ஒளியின் சரீரம் பெறுகின்றனர்.

காரணம் சப்தரிஷிகள் என்பவர்கள் நஞ்சினை வென்றவர்கள் உணர்வை ஒளியாக மாற்றியவர்கள் இருளை மாய்த்தவர்கள். அந்த ஒளிக்குள் இந்த உயிரான்மாக்கள் பட்ட பின் இருள் சூழும் உணர்வுகள் கருகி விடுகின்றது.
1.உயிருடன் ஒன்றிய நிலைகள் அறிவால் தெளிந்த உணர்வுகள் நிலைக்கின்றது… அதனின் ஈர்ப்பு வட்டத்தில் சுழல்கின்றது
2.இவ்வாறு நாம் செய்தோம் என்றால் சப்தரிஷி மண்டலங்களில் அவரும் ஒன்றாகி விடுகின்றார்கள்… “சப்தரிஷிகளாகின்றார்கள்…”
3.சப்தரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று நாம் எப்போது எண்ணினாலும்
4.அதைப் பெறக்கூடிய தகுதி நமக்கு அங்கே கிடைக்கின்றது.

அவர்கள் முன் செல்ல வேண்டும்…! காரணம் அவருடைய உணர்வுகள் தான் நமது உடல் அந்த உணர்வினை நினைவு கொண்டு வந்து உந்தித் தள்ளி அந்த உணர்வினை நாம் பெறச் செய்தால்… அவர்கள் முன் சென்றால் நாமும் எளிதில் பின் செல்ல முடியும்.

இந்த மார்க்கத்தைத் தான் விநாயகர் தத்துவத்தில் தெளிந்த நிலைகள் கொண்டு காட்டியுள்ளார்கள். உடலை விட்டுச் சென்றால் ஆறாவது அறிவின் துணை கொண்டு நமது எல்லை சப்தரிஷி மண்டலம் தான்.

அப்படி இல்லை என்றால் என் பிள்ளை இப்படிச் சொன்னானே… இந்தச் சொத்தெல்லாம் வைத்திருக்கிறேன்… நாளை அவன் அதை என்ன செய்வானோ…? என்று இப்படி எண்ணினால்
1.நம் எல்லை பையன் உடலுக்குள் தான் செல்ல வேண்டி வரும்
2.நாம் பட்ட கஷ்டம் எல்லாம் அவனுக்குள் விளையத் தொடங்கும்.

ஒருவன் என்னைச் சாபமிட்டான்…! இப்படி செய்தானே அவன் குடும்பம் உருப்படுமா…? என்று நினைத்தால் அவனைப் பழி தீர்க்கும் உணர்வாகச் சேர்ந்தால் “நம்முடைய எல்லை சாபமிட்டவன் இடத்திற்குச் சென்றுவிடும்…”

சாகப் போகும் பொழுது நினைவு எங்கெல்லாம் போகின்றது…? என்று தெரிந்து கொள்ளுங்கள்.

எல்லோருக்கும் நான் சுவையான உணவை ஆக்கிப் போட்டேன் எனக்கு நல்ல கறித் துண்டு (மட்டன்) உண்டா…? என்று நினைத்தால் ஆடாகத்தான் போக வேண்டி வரும்… இது நிச்சயம்.. எல்லை அது தான்…!

ஏனென்றால் அன்று நன்றாக இருக்கும் பொழுது எல்லோருக்கும் சுவையாக ருசியாகச் சமைத்து போட்டேன் ஆனால் இப்பொழுது எனக்கு என் ருசிக்காக ஒரு துண்டு கூட கொடுக்கவில்லை பாருங்கள்… எல்லாவற்றையும் அவர்களே சாப்பிடுகின்றார்கள்.

1.இப்படி எண்ணினால்… எல்லை அந்தக் கறித்துண்டின் மேல் ஞாபகம் வந்தால்… அந்த உயிரினத்திடம் தான் இந்த உயிர் செல்லும்.
2.ஆகவே எதனை கடைசி முடிவாக நினைவின் ஆற்றலைக் கொண்டு வருகின்றமோ… எல்லை அதுவாகவே நிர்ணயிக்கப்படுகிறது.

இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆத்மாவின் “விழி நிலையின் ஒளி நிலை”

ஆத்மாவின் “விழி நிலையின் ஒளி நிலை”

 

பிறவா வரம் கொண்டு ஜோதி நிலை பெறும் ஒளி நிலையின் உயர் தத்துவத்தை உணர்ந்தீரானால் உயர்வு கொண்ட “ஒளி நிலையின் உண்மை புரியும்…”

சகல ஜீவசக்திகளிலும் சரீர உணர்வினால் செயல்படும் ஒளித்தன்மையின் “விழி நிலை” ஜீவராசிகளுக்குத் தான் உண்டு.

பூமியும் பூமி வளர்க்கும் தாவர இனம் மற்றையத் தாதுப் பொருள்கள் ஒவ்வொன்றும் ஜீவ சக்தி கொண்டிருந்தாலும் அவற்றின் முலாம் வளர்ச்சியின் முதிர்வு நிலையில்
1.ஒன்றின் தொடர் கொண்டு ஒன்றாய் மாறி மாறி வரும் வளர்ப்பு, அழிவு, வளர்ப்பு என்ற நிலையில்
2.ஒவ்வொன்றின் வார்ப்பு வளர்ப்பில் அணு சமைத்து வளர்ந்த முலாம் கொண்டு
3.உயிரணு தோன்றி ஒவ்வொன்றிலும் பல வார்ப்பு நிலையில் வளர்ந்து, அழிந்து சக்தி கொண்டு பல நிலைகளுக்குப் பிறகு
4.ஜீவ சரீரம் பெறும் விழி நிலையாற்றல் ஊர்வன, நீந்துவன, பறப்பன, நடப்பன
5.இத்தொடர் ஜீவராசிகளில் விழி நிலை ஒளிகாணும் உருவ “எதிர் நிலையை அறியும் ஆற்றல்” வழி வருகின்றது.

பலவில் முதிர்ந்து மனித எண்ண செயல் அங்க அவயவங்களின் ஆற்றல் வளர்ப்புநிலை பல கோடி ஆண்டுகளுக்குப் பின் உயிரணு தோன்றி பல வார்ப்பில் மோதுண்டு வளர்ச்சி கொண்டு முற்றிய நிலையில்
1.விழியின் ஒளியை எதிர்ப்படும் பொருள் கண்டு… விழியின் பாப்பாவில் படம் பிடித்து
2.உணர்வு கொண்ட எண்ணத்தில் அறியும் வாழ்க்கை நிலையிலிருந்து
3.சாதாரண பிறப்பு இறப்பு என்ற நிலையில் ஜீவசக்தி பிரிந்து உடலை விட்ட உயிராத்மாவிற்கு ஆத்ம ஒளி வட்டம்தான் உண்டு.

காற்றலையில் இப்பூமி வளர்ப்பில் ஜீவன் பிரிந்த ஆத்ம அலைகள் சுழன்று கொண்டே காற்றலையில் மிதந்து கொண்டே இப்பூமி ஈர்ப்பில் சுழன்றாலும் “விழியால் பார்க்கும் நிலை அவ்வாத்மாவிற்கு இல்லை…” சுவையையும் மணத்தையும் நுகரும் சுழற்சி வட்டத்தில் தான் சுழலுகின்றது.

ஜீவனுடன் உள்ளவர்களின் சரீர எண்ணத்தால்… உடலை விட்டுப் பிரிந்தவர்களின் நினைவில் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது அவ்வலையின் உணர்வு இவர்களின்மேல் மோதி அத்தொடர்புடன் அவர்களுக்கும் ஜீவகாந்த அலைத்தொடர்பு கிட்டியவுடன் அவர்கள் தொடர்புடன் ஆவி ஆத்மாவும் விழி அலை பிம்பத்தை எதிர்கொண்டு பார்க்க முடிகின்றது.

அலை உணர்வின் தொடர்பைக் கொண்டு பார்க்கும் நிலையானது
1.எப்படிப் புகைப்படக் கருவியைக் கொண்டு அதில் பூசப்பட்ட அமிலப் புகை பிம்ப தாள்களை அக்கருவியுடன் பொருத்தி
2.அதற்குகந்த விசை அழுத்தத்தைத் தந்து எதிர் பிம்பத்தைப் பதிவு செய்வதைப் போன்று ஆவி ஆத்மாக்களின் செயல் நிலையுண்டு.

எதிர் நிலையில் காண்பதை விழியில் காணும் நிலைதான் மனித சரீரத்திற்கே உண்டு. தன் முதுகை தான் காண முடியாது. தன் பிம்பத்தையே எதிர் அலையின் நிலைக் கண்ணாடியிலோ நீரிலோதான் பார்க்கும் நிலை உண்டு.

ஆத்ம தியான சக்தியைக் கொண்டு ஞான திருஷ்டியால் விழியை மூடிக்கொண்டு ஞானத்தால் பெறும் தியான சக்தியில் ஆத்ம சக்தியின் உயர்வு நிலையால்… இச் சரீரக் கூட்டிலிருந்தே சகல சித்துக்களையும் பெறும் வழித்தொடர் கொண்டு… ஞானத்தால் காணும் விழியின் ஒளி நிலை காட்சிகளை… எண்ணத்தால் எண்ணியவை யாவையுமே காணத்தக்க விழி நிலையின் ஒளித்தன்மை இவ்வாத்ம அலையே பெற்று விட்டால்… ஏகமும் ஒன்றான அகில சக்தியின் தொடர்பிலும் விழி அலை ஒளி நிலையில் காண முடியும்.

இச் சரீரக் கூட்டின் சமைப்பில்…
1.காந்த மின் அலையின் வலுத்தன்மையை எலும்புக்கூடுகள் பெறும் தன்மை கொண்டுதான்
2.ஆத்மாவின் விழி நிலையின் ஒளி நிலை பெறும் ஆத்ம ஜோதியான ஜோதி நிலை சக்தியினால்
3.ஏகத்தையும் காணும் ஆத்ம நிலையின் ஜோதி நிலை கொண்டு
4.நம் வளர்ப்பின் தொடருக்கு வழிகாட்டிய ரிஷி சக்தியின் உயர்வுத் தொடர்புடன்
5.அவர்களின் வளர்ப்பின் வட்டமுடன் நம் ஐக்கியச் செயலையும் ஐக்கியப்படுத்தலாம்.

நமக்குள் மறைமுகமாக செயல்படும் இயக்கங்கள்

நமக்குள் மறைமுகமாக செயல்படும் இயக்கங்கள்

 

கண்ணுக்குப் புலப்படக்கூடியது அனைத்துமே துவைதம்… அதிலே மறைந்த உணர்வின் தன்மை எடுக்கப்படும் பொழுது அத்வைதம்…
1.அந்த உணர்வலைகளை நாம் கவர்ந்து விட்டால் விசிஷ்டாத்வைதம்.
2.எதனின் உணர்வின் தன்மை நமக்குள் எடுத்துக் கொள்கின்றோமோ
3.அந்த உணர்வு நம் உடலுக்குள்ளேயே இருந்து மறைந்திருந்து செயல்படுத்துகின்றது.

சந்தர்ப்பத்தில் ஒரு வேதனைப்பட்ட நிலைகளைப் பார்த்தோம்… அது சூட்சமமாக இருக்கின்றது அது.

அவர்கள் வெளிப்படுத்திய அந்த வேதனை உணர்வலைகள் அத்வைதம். அதை நாம் இப்படி செய்கின்றாரே என்று நுகர்ந்தறியப்படும் பொழுது விசிஷ்டாத்வைதம். கவர்ந்து கொண்ட உணர்வுகள் நமக்குள் இயக்குகின்றது.

பின் என்ன செய்கின்றது…?

1.என்னை அறியாமலே அவர்களை எண்ணும் பொழுதெல்லாம் வேதனை வருகின்றது.
2.வேதனை வருவது ஏன்…? என்று நமக்குத் தெரிவதில்லை… நம்மை அறியாமலே அப்பொழுது புலம்புகின்றோம்.

ஆகையினால் தான் இதை விசிஷ்டாத்வைதம் என்று காண்பிக்கின்றார்கள்.

1.நீ கவர்ந்து கொண்ட உணர்வு எவ்வாறு உன்னை இயக்குகிறது…? என்பது
2.சாஸ்திர விதிகளில் தெளிவாக இப்படிக் காட்டப்பட்டு இருக்கின்றது.

ஆனால் அத்வைதம் வேறு விசிஷ்டாத்வைதம் வேறு என்று இரண்டு பிரிவாகப் பிரிந்து கொண்டு சண்டை இட்டுக் கொள்கின்றார்கள். இது தான் உண்மை இல்லை இதுதான் உண்மை என்று சொல்கின்றார்கள். மறைமுகமாக இயக்குகிறது என்று சொல்கின்றது… நீங்கள் எப்படி நேரடியாக இயக்கும் என்று சொல்லலாம்…? அவர்களுக்குள் ஒரு போர் முறை.

வியாசகரால் கொடுக்கப்பட்டது தான் இந்த உண்மைகள்…! அதையாவது குறைந்தபட்சம் தெரிந்து கொண்டிருக்கின்றோமா…? என்றால் இல்லை. அதை அறியும் பக்குவமாவது இருக்கிறதா…? என்றால் இல்லை.

மற்றவர்கள் வெளிப்படுத்திய உணர்வலைகள் அத்வைதம்… சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அதை அலைகளாக வைத்துள்ளது. அதே சமயத்தில் அந்த உடலைப் பார்த்து அதே உணர்வின் தன்மை நுகரப்படும் பொழுது விசிஷ்டாத்வைதம்.

தனக்குள் கவர்ந்து கொண்ட நிலைகள் தன்னை அறியாமலேயே மறைமுகமாக செயல்படுகின்றது… விசிஷ்டாத்வைதம் என்று தெளிவாகவே ஞானிகள் நமக்குக் கொடுத்துள்ளார்கள்.

இதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் அல்லவா…!

விநாயகர் தத்துவப் பிரகாரம் வணங்கப்படும் பொழுது நம்மை அறியாது இயக்கும் இந்த நிலைகளை மாற்றி அமைக்க
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
3.எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் என்ற இந்த உணர்வை
4.தனக்குள் மறைமுகமாகவே தீமைகளை அகற்றும் நிலையாக உருவாக்குவது – விசிஷ்டாத்வைதம்.

ஞானிகள் உணர்வைத் தனக்குள் சேர்த்துத் தீமை வராதபடி இந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்கும் மார்க்கமாக இதை நீ வினைக்கு நாயகனாக ஆக்கு “விநாயகா…”
1.அருள் உணர்வுகளுக்கு நாயகனாக நீ இரு
2.அந்த உணர்வின் செயலின் எண்ணத்தை உனக்குள் உருவாக்கு…! என்று தெளிவாக ஞானிகள் நமக்குக் கொடுத்துள்ளார்கள்.

ஆகவே அந்த ஞானிகள் காட்டிய வழியில் அருள் உணர்வுகளை நுகர்ந்தபின்… அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் உலகில் வாழும் மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும் எல்லோரும் அருள் ஒளி பெற வேண்டும் அவர்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும் என்று
1.இப்படி எண்ணும்படி தான் ஆலயங்களைக் கட்டி
2.அதிலே மறைமுகமாகவே நமக்குள் பல உயர்ந்த சக்திகளைப் பெறும்படி செய்தார்கள் ஞானிகள்.

ஜீவ ஆத்ம ஞான சக்தியின் ஜீவ வளர்ச்சி

ஜீவ ஆத்ம ஞான சக்தியின் ஜீவ வளர்ச்சி

 

நீங்கள் இருவரும் தியானத்தில் எடுத்த அலைத்தொடர்பு அவரவர்களின் உடல் அமிலச் சேர்க்கை உருவக எண்ணத்தின் சக்திக்குகந்த அலையின் தொடர் காட்சிகளை தியான முறையில் தினசரி பார்க்கவும்… பேசவும்… அவ்வழியைக் கொண்டு உங்கள் ஞானத்தை வளரவும் வழி தெரிகின்றது அல்லவா…!

இதன் தொடரைப் போன்றே அமில சக்தியின் வார்ப்பு ஜீவித உயிரணு தோன்றிய ஒவ்வொரு ஜீவ வளர்ச்சிக்கும் அவையவை பெற்ற சுவை, மணம் குணத்துக்குகந்த தனித்தன்மை உருவான உயர் குணங்கள் பல உண்டு.

பால்வெளி மண்டலத்தில் படர்ந்துள்ள பல கோடி அமில குணங்கள் அதனதன் சுழற்சி ஓட்டத்தில் அங்கங்கு உள்ள படர்ந்த அமில குணங்களுக்கொப்ப ஒன்றுடன் ஒன்று உராய்ந்து தன் தன் இன வளர்ச்சிக்கொப்ப வளர்ந்த மண்டலமாயும் அதனதன் ஈர்ப்பின் சுழற்சியில் சுழன்று கொண்டே வளர்ந்து கொண்டே மாறிக் கொண்டே வழி கொள்ளும் வளர்முறை உள்ளது.

மணலுண்டு நீருண்டு சுண்ணாம்பும் உண்டு மரம் மண் இவை யாவையும் இருந்தாலும்… அதனை நாம் நமக்கு வேண்டிய பக்குவச் செயலுக்காக சுண்ணாம்பையும் மணலையும் நீரையும் கொண்டு நமக்கு உகந்த இல்லங்கள் அமைத்துப் பாதுகாப்பு இடம் தேடி வாழுகிறோம் அல்லவா…!

அதைப் போன்று பால்வெளியில் நிறைந்துள்ள அமிலச் சுழற்சியில் தன்னிச்சையில் வளர்ந்து கொண்டே மாறிக் கொண்டே சுழலும் வழித் தொடரிலிருந்து எப்படி வீடமைக்கப் பல பொருட்களை வீட்டிற்கு வேண்டிய நிலைக்கு பக்குவப்படுத்தி வீட்டைக்கட்டி வாழுகின்றோமோ அதைப் போன்றுதான்
1.அமிலச் சுழற்சியின் உயர்வு நிலை சக்தி கொண்ட ஆத்ம நிலை கொண்டு
2.எண்ணத்தின் ஞானம் கொண்டு உயர்ந்த ரிஷிக் கோடிகளின் அமைப்புநிலை உருவகங்கள்தான்
3.ஆதிசக்தியின் சக்தி வழி வந்த… ரிஷி வழி மண்டல அமைப்பின்… ஜீவ ஆத்ம ஞான சக்தியின் ஜீவ வளர்ச்சி வளருகின்றது.

அதது எடுத்து வளர்ந்த நிலைக்கொப்ப வளர்ச்சியின் உயர்ந்த தன்மை கூடும் நிலை வழி பெற…
1.மனித ஞான உயர்வினால் மட்டும்தான்
2.உயர்வின் உருவகத்தையே உருவாக்கும் தன்மை உறுப்பெறும் என்பதனை உணர்த்தியுள்ளேன்.

உண்மையின் உன்னத சக்திதனை உணர்த்தினால் உருவாக்கிடலாம் உலக சிருஷ்டியையே…!

இப்பூமிக்கு மனிதக் கரு வர ஆண் பெண் என்ற இரண்டு ரிஷித்தன்மை கொண்ட ஆத்ம சுழற்சி பூமியான இப்பூமியின் நிலைக்கு சிவசக்தி என்ற ஆத்மக் கரு எங்கிருந்து வந்தது…?

இப்பூமியில் மட்டுமல்ல நம்மைக் காட்டிலும் உயர்ந்த ஞான சக்தி கொண்ட மனித ஆத்மாக்கள்… நம் சூரியக் குடும்பமல்லா (நாற்பத்தி எட்டு கோளங்கள்) மண்டலங்களில் ஜீவிக்கின்றனர்.
1.ஞானச் சித்து கொண்டு அவர்கள் நம் பூமியுடனும்
2.மற்றெல்லா பூமித் தொடருடனும் தொடர்பு கொண்டுள்ள நிலையில் செயல் கொண்டுள்ளனர்.

இன்று மனித ஆத்மாக்களின் பெருக்கத்திலுள்ள இப்பூமியின் எண்ண உணர்வு செயற்கையின் சுழற்சியில் சிக்காமலும்… விஞ்ஞானத்தை நம்பி வாழும் உருநிலை பெறாமலும் இருந்திருந்தால்… வளர்ந்துள்ள ஜீவ வளர்ச்சியின் சொல் செயல் ஞானம் கொண்ட வழித்தொடரினால் தன் ஞானம் உயரும் நிலை பெற்றிருந்ததென்றால்… இப்பூமி பெற்ற உன்னத உயர்ந்த சக்தியே மிகவும் உன்னத சக்தியாய் இன்னும் பல கோடி கோடி ஆண்டுகளுக்குச் சொல்லாற்றலும் செயலாற்றலும் கொண்ட மனிதர்களாக இருந்திருப்பார்கள்.

மிக உயர்ந்த குண சக்தியின் ஆனந்த அன்பு கொண்ட இனிமை வாழ்க்கையை வாழக்கூடிய தன்மையையே இன்றைய வாழ்க்கை முறை இன்னலின் பிடிப்பில் இறுக்கம் கொண்டு…
1.மனிதனை மனிதனே அழித்து… அழித்து என்பதன் பொருள் இல்லற வாழ்க்கையில் கூடி மனிதப் பிறப்புக்கு வரும் சிசுக்களை
2.சிசுவைக் கருவுக்கே வர விடாமல் பல காலமாய் அவை சேமித்த சக்தி நிலையையே கருவில் வந்து மறைக்கப்பட்ட தன்மையிலேயே
3.இம் மனிதனே மனிதக் கருவை அழித்து அதனை ஞானத்தில் வளர விடாமல் இழிநிலையான சுழற்சியில் அமிழ்த்தி விடுகின்றான்.

தான் படும் வாழ்க்கைச் சுழற்சியில் இன்பங்கள் தனக்குச் சொந்தமானதாகவும் துன்பங்கள் ஆண்டவனின் சோதனையாகவும் எண்ணத்தில் கொண்டு வாழும் வாழ்க்கை ஓட்ட அலையில்… எண்ணத்தில் ஏக்கமுடனும் பேராசை எதிர் நிலையிலும்தான்… “மக்களை நடத்திச் செல்லும் மத வழி போதனைகளும் அரசியல் சுழற்சிகளும் சுழன்றுள்ளன…”

தன் ஆத்ம ஞானத்தைக் கொண்டு “உலகத்தையே சிருஷ்டிக்கவல்ல ஆதி முதலாம் விநாயக சக்தி கொண்ட சொல் செயல் ஞானம் கொண்ட மனித ஆத்மாக்களை” இப்பூமி சரீர வாழ்க்கையிலிருந்தே அதை உருவாக்க முடியும்.
1.எப்படி ஆண் பெண் வாழ்க்கை இணைப்புச் செயற்கையில் உருவாகி… சரீரம் பெற்று வாழ்க்கை வழித்தொடருக்கு வந்தோமோ…
2.அதே தொடரில் ஆண் பெண் இணைப்பினால் கருநிலை உருவாகி… பூமி ஈர்ப்பு கரு வளர்க்கின்றோமோ அதைப் போன்றே
3.ஆண் பெண் என்ற இரண்டு ஆத்மாக்களும் தன் ஞான சக்தியினால் சித்து நிலை பெற்று ஒளி நிலைத் தன்மையுடன்
4.உடல் இயக்க உறவு நிலையில் கருத் தோன்றி வளர்வதைப் போல்
5.ஆத்ம இணைப்பில் ஒளி வட்டத்தின் ஆத்மச் சேர்க்கையில் இருந்து பிறக்கும் ஒளி நிலையைக் கொண்டு “ஞானவட்டமாய்”
6.அவ்வலைத் தொடரை எம் மண்டலத்திற்கு அனுப்புகின்றோமோ அம் மண்டலத்தில் எல்லாம் ஜீவச் சிசுவை வளர்க்கவும்
7.ஜீவசக்தியை வளர்க்கவல்ல வழிமுறை ஆத்ம சக்தியை ஆத்ம சேர்க்கையைக் கொண்டு
8.அன்று எப்படி இராமாயணக் காலத்தில் இராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர் சூட்சுமத்தால்
9.லவ குசா என்ற குழந்தைகளின் படைப்பு நிலையை மறைக்கப்பட்ட நிலையில் உணர்த்தியதைப் போன்றும்
10.காந்தர்வன் கன்னி நீரில் வாழும் பொழுது
11.மேகக் கூட்டத்திலிருந்து விந்துக்கள் தோன்றி கன்னி கருத்தரித்து ஞான தெய்வக் குழந்தை பிறந்ததென்றும்,
12.கார்த்திகைப் பெண்கள் முருகனை வளர்த்தனர் என்று கதையில் சொல்லும் உண்மைதனை
13.ஒவ்வொரு மனிதனும் ஞானம் கொண்டு அதிலுள்ள சூட்சுமத்தை உணர்ந்தீர்களானால்
14.சிவசக்தி கருத்தரிக்கவில்லை, சிவன் உருவாக்கிய குழந்தை முருகன் என்று
15.மறைக்கப்பட்ட பல உண்மைகள் அவற்றில் அடங்கியுள்ளன.

என்றோ நடந்தவை அவை…! அவற்றின் சக்திதான் இன்று நாம் வாழ்வது என்ற எண்ண உலாத்தான் உள்ளதேயன்றி… “இன்று நடப்பவையும் அத்தன்மைதான்…”

ஜீவக் கரு எத்தனை கோடி கோடி ஆண்டுகள் எம்மண்டலத்தில் வளர்ந்து வாழ்ந்தாலும் இன்று உணர்த்திய இத்தொடரின் உண்மை போன்றுதான்
1.ஜீவ சக்தியின் ஆண் பெண் ஆத்ம சக்தியால்தான் ஜீவ ஆத்மாவில் பெறப்படும் சித்துத் தன்மையும்
2.ரிஷித் தன்மையும் கொண்ட ரிஷிபத்தினி… “ரிஷித்தன்மையைக் கொண்டுதான் உருவாகும் ஜீவனுக்கே ஜீவவித்து விருட்சகம்…”

பதிவு எப்படியோ அப்படித்தான் உணர்வின் இயக்கங்கள்

பதிவு எப்படியோ அப்படித்தான் உணர்வின் இயக்கங்கள்

 

இரண்டு நண்பர்கள் பிரியமாக இருக்கின்றார்கள் ஒருவர் தவறு செய்கின்றார் என்று யாராவது சொன்னால்… நான் சும்மா இருக்கும் பொழுது… “அப்படி இப்படி என்று” எல்லாம் என்னைத் தவறாகச் சொல்கின்றார்கள் என்பார்.

1.நாம் பிரியமாக இருப்பதால் இதைக் கேட்டுப் பதிவு செய்து கொள்கின்றோம்.
2.அடுத்து அவர் தவறு செய்து விட்டு “இல்லை” என்று மறுக்கப்படும் பொழுது அதை ஏற்றுக் கொள்கின்றோம்… நண்பர் என்பதால்…!

இவர்தான் தவறு செய்தார் என்று மற்றவர் வந்து சொன்னாலும் அது எல்லாம் எனக்கு தெரியாதங்க…? என் நண்பருடைய சமாச்சாரம்…! என்போம்.

தவறு செய்தார் என்று சொன்னால் கூட… இல்லை நேரடியாக நான் பார்த்தேன் என்று அவர் சொன்னாலும்
1.அப்படி எல்லாம் செய்யக்கூடிய ஆள் இவர் கிடையாது…! தெரியாமல் ஏதாவது நடந்திருக்கும்.
2.நண்பன் மேல் பிரியம் இருக்கும் பொழுது முதலிலே மறுக்கின்றோம்.
3.இல்லைங்க… நான் நேரடியாக கண்ணிலே பார்த்தேன் என்று இன்னொரு நண்பர் சொன்னால்
4.அசந்தர்ப்பமாகத்தான் அப்படி இருக்குமே தவிர “அவர் தவறு செய்யக்கூடிய ஆளே இல்லைங்க…” என்போம்.

ஏனென்றால் அவர் மீது இருக்கக்கூடிய பற்று தவறை கூட நாம் சுட்டிக் காட்டாதபடி “தெரியாமல் தான் நடந்திருக்கும்…” என்று தான் சொல்கின்றோம்.

இதே போன்று ஒரு குடும்பத்தில் இரண்டு பையன்கள் இருக்கின்றார்கள் ஒருவன் மீது தந்தை பிரியமாக இருக்கின்றார்… இன்னொருவன் மீது வெறுப்பாக இருக்கின்றார்.

அந்த வெறுப்பாக இருக்கக்கூடிய பையன் வெளியே சென்று ஆபத்திலிருந்து ஒருவரைக் காப்பாற்றுகிறான்… ஒரு நல்ல காரியத்தை அவன் செய்கின்றான். அதை மெச்சி அவர் என்ன செய்கின்றார்…?

நீ யார் பெத்த பிள்ளையோ…? உன் தந்தையிடம் நான் நன்றி சொல்ல வேண்டும்…! என்று அழைத்து வருகின்றார். கூப்பிட்டு வந்தவுடன் உங்க பையன் தானுங்களா…? எங்கள் குடும்பத்தையே இவன் காத்தான்…! என்று உயர்வாகச் சொல்கின்றார்.

அப்படியா…! நீங்கள் நாளைக்கு வந்து வேறு விதமாகச் சொல்லி விடாதீர்கள் ஐயா…! என்பார் தந்தை. பையன் செய்த நன்றிக்குச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனது இங்கு தந்தையிடம் இல்லை.

ஆனால் அதே சமயத்தில் பிரியமாக இருக்கும் இன்னொரு பையன் ஒரு இடத்தில் சுட்டித்தனம் செய்கின்றான். அங்கிருந்து வந்து தந்தையிடம் அவனைப் பற்றி முறையிடுகின்றார்கள் “இவன் தவறு செய்கின்றான்” என்று.

1.நீங்கள் இன்னொரு பையனைச் சொன்னால் கூடப் பரவாயில்லை
2.இவன் அந்த மாதிரித் தவறு செய்ய மாட்டான் என்று பிரியமானவனை ஏற்றுக் கொள்கின்றார்கள் எனக்கு தெரியாதுங்களா…? என்று கேட்கின்றார்.
3.உங்கள் பையன் தான் ஏதாவது தவறு செய்திருப்பான் என்று தான் சொல்வார்கள்

ஆனால் அவர்கள் போன பிற்பாடு என்ன கேட்பார்கள் ஏன்டா டேய் அவர்கள் என்ன கேட்கின்றார்கள் பார்த்தாயா…? என்று பையனிடம் கேட்பார்கள்.

இன்னொருவன் நல்லது செய்து வந்தான் அல்லவா…! அவனைப் பார்த்து டேய் இங்கே வாடா…! எத்தனை பேரை நீ ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய்…? நாளை என் பெயர் கெட்டுப் போவதற்கு நீ என்ன செய்கின்றாய்…? என்று கேட்பார்.

ஏனென்றால் இந்த உணர்வுக்கொப்ப அப்படித்தான் “அந்த அறிவுகள் வேலை செய்யும்…” எதனின் உணர்வின் தன்மையோ அது தான் இயக்கமாகும்.
1.ஒரு செடி எந்த மணத்தின் தன்மை தனக்குள் வைத்துக் கொண்டதோ
2.மற்ற செடிகளின் மணத்தைத் தன் அருகில் விடாது.

இதைப்போல எந்தச் செடியின் மணத்தை நாம் உணவாக உட்கொண்டு பழகினோமோ அந்த மணத்தின் ஞானமே நமக்கும் வரும்… இது வழி தொடர்ந்து வரும்.

ஆகவே அந்த குணத்தின் இயல்பாகத்தான் நம்முடைய உணர்வின் செயல்களும் அமைகின்றது தாவர இனத்தின் நிலைகள் கொண்டு. இதைப் போன்று தான்
1.எதனை எடுத்து எதனின் வழிகளில் நாம் இணைத்து
2.அதனின் உணர்வின் எண்ணங்களாக மாறுகின்றதோ இதனின் உணர்வு தான் இயக்கம்.

இதற்குத் தான் கடவுளின் அவதாரத்தில் இராமனை மூன்றாவது ஸ்தானத்தில் வைத்துள்ளார்கள். இந்த எண்ணம் சீதாராமா…! ஒரு பையன் மீது எவ்வளவு பிரியமாக இருக்கின்றோமா அந்த சுவை சீதா.

அதே சொல்லை நாம் எடுத்துத் திருப்பிச் சொல்லும் பொழுது இராமன்..!. இராமன் அம்பை எய்தான் என்றால் அந்த கணைகளைத் திரும்ப வாங்கிக் கொள்வான். இதே பதில் தான் மீண்டும் வரும்.
1.யார் மேல் எதன் உணர்வை வைத்தோமோ இந்த உணர்வின் சொல்லை எடுத்து
2.“மோசமானவன்” என்ற பதிவிருந்தால் மீண்டும் அதே குறையான சொல்லைத்தான் சொல்லும்படிச் செய்யும்.

கடவுளின் அவதாரத்தில் சூரியனின் இயக்கங்கள்
1.அந்தக் காந்தச் சக்தி மற்ற பொருளைக் கவர்ந்த பின்
2.நாம் நுகர்ந்த உணர்வுகள் அந்தச் சுவையைக் கவர்ந்தாலும்
3.அதே எண்ணத்தைக் கொண்டு நுகரப்படும் பொழுது சீதா சுவை
4.இந்த உணர்வின் நிலைகள் நம் தசையாகின்றது… நினைவின் சொல்லாக “அந்தந்த எண்ணங்கள் வருகின்றது…”

இந்த இயற்கையின் தன்மையை நாம் புரிந்து கொள்வதற்காக இராமாயணம் மகாபாரதம் கந்த புராணம் சிவபுராணம் என்ற நிலைகளில் விண்ணுலக ஆற்றலின் தன்மை உணர்வுகள் கலந்து அது மனிதனாக உருவாக்கப்படும் பொழுது பழமை எவ்வாறு இன்று புதுமையில் இருக்கின்றது…? என்று காட்டியுள்ளார்கள்.

பழமை கலந்ததின் உணர்வின் மாற்றங்கள் எவ்வாறு இருக்கிறது…? என்பதைத்தான்
1.ஒரு மனிதனின் இயல்பு எவ்வாறு மாறுகிறது என்ற நிலையைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள் ஞானிகள்.
2.இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

“சித்தர்களும் மகரிஷிகளும்” நம்மைப் பக்குவப்படுத்தி வழி நடத்துவார்கள்

“சித்தர்களும் மகரிஷிகளும்” நம்மைப் பக்குவப்படுத்தி வழி நடத்துவார்கள்

 

ஆத்மாவின் செயல் உணர்ந்தீர்களா…?

எங்களின் பதில்: தியானத்தில் அமர்ந்து எங்களுக்கு வழிகாட்டிய ஞானகுரு வேணுகோபால சுவாமிகள் உபதேச நிலைக்கொப்ப அத்தொடரில் அவர் காட்டிய எல்லா நிலைகளையும் அறியாவிட்டாலும் சில உண்மைகளைச் செயலாலும் ஞானத்தாலும் அறியும் வழி பெற்றோம்.

1.இந்த மார்க்கத்தில் தொடர்பு கொண்ட பல ஆத்மாக்கள் தன்னைத்தான் உணர்ந்து தன் வழியில் பல உண்மைகளை அறிந்ததையும் கண்டோம்.
2.இச்சரீர பிம்பம் மயங்கிய நிலையோ தன்னைத்தான் மறந்து செயல்படும் முறையன்றி இத்தியானத்தால் அடைந்த உண்மை நிலைகள் பல உண்டு.

அல்லி மலர் காலை உதயசூரியனைக் கண்டவுடன் மலர்ந்து சூரிய ஒளி மறைந்தவுடன் கூம்பிவிடுகின்றது. இன்னும் சில மலர்கள் சூரிய ஒளியின் அலைபாயும் இடத்தில் எல்லாம் அதன் மலர் முகம் காட்டி மலர்ந்து அதன் ஒளி திக்கிலேயே அதன் ஈர்ப்பும் திரும்பிய நிலையில் வாடி விடுகின்றது.

இவையெல்லாம் இயற்கை என்கின்றான் மனிதன். எல்லா சக்தியைக் காட்டிலும் இனி தன் செயற்கைக்கு உதவப் போவது சூரியசக்தி தான் என்ற உண்மை வழியைச் செயற்கைக்கு பாழ்படுத்தும் மனிதன்
1.அடுப்பான இப்பூமியில் பாத்திரமான இச்சரீரத்தில் ஒளியான ஜீவ சக்தி தரவல்ல சூரிய சக்தியைப் போட்டு
2.இவன் சமைக்கும் சுவையில் எச்சுவையையும் பெறவல்ல சக்தி இச்சரீர ஜீவனில் உள்ளதை மனிதன் அறியவில்லை.

இயந்திரத்தின் துணை கொண்டு சூரிய அலையைச் சில உலோகங்களின் தொடர்பைக் கொண்டு சக்தி பெறும் மனிதன் இவ்வெண்ணத்தின் ஆற்றலைக் கொண்டு எதனையும் செயல்படுத்தக்கூடிய செயல் தெய்வமாய்
1.தன்னுள் உள்ள ஆத்ம சக்தியைச் செயல்படுத்தி
2.இவ்வாத்மாவின் தொடர்பலையால் எவ்வலையையும் அதன் தொடர்பு கொண்டு
3.தொடர்புப்படுத்தி செயலாக்கக்கூடிய ஆற்றல் இவ்வாத்ம ஞானத்திற்கு உண்டு.

இவ்வுடலின் செயலுக்கொப்ப இவ்வெண்ண ஈர்ப்பு செல்லும் முறையைச் சிறிது மாற்றி
1.இவ்வுடலை இயக்கும் ஆத்மாவை இவ்வெண்ணத்தில் நாம் செலுத்தும் ஞானத்தால்
2.இச்சரீர இயக்க ஆத்மாவையே இது நாள் வரை உணர்த்திய ஞான உபதேசத்தின் தியான வலுவால்
3.இவ்வாத்மாவை சக்தி வாய்ந்த ரிஷிகளின் ஆத்மாவுடன் தொடர்புபடுத்தி
4.அவர்கள் பெற்ற சக்தி நிலையை நாமும் பெறவல்லை இயக்க நிலையை இம்மனித ஞானத்தால் செயல்படுத்துங்கள்.

இச்சரீரக்கூடு ஜீவத்துடிப்புடன் இருந்தால்தான் இவ் இயக்கத்தின் காந்த மின் அலையின் வளர்ப்பைக் கொண்டு ஆத்மபலத்தை நாம் பெருக்க முடியும்.

ஆத்ம பலம் பெற்ற நிலையில் வேறு ஒரு ஈர்ப்புப்பிடிக்கு நாம் சிக்காமலும்… இக்காற்றுடன் கலந்துள்ள பல கோடி நிலைகளில் நம் சரீர சுவாச ஈர்ப்பிற்கு எவ்வலையும் உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாவானாலும் சரி… உடலுடன் உள்ளவர்களின் எண்ண அலைகள் ஆனாலும் சரி… இவ் ஈர்ப்பு வட்டத்தில் சிக்காமல்
1.எப்படி எரியும் நெருப்பில் எது போட்டாலும் அதுவும் பஸ்பம் ஆகி விடுவதைப் போல்
2.இச்சரீர இயக்கத்தால் நாம் பெற்ற ஆத்ம பலம் கூடக் கூட “இவ்வாத்மாவின் வலுவை நாம் தனித்து காண முடியும்…”

வலுப்பெற்ற ஆத்மாவை நாம் உள்ள இடத்திலிருந்தே எங்கும் அனுப்பி எதனையும் அறிந்து வரச் செயல்படுத்த முடியும். தன்னைத்தான் உணர்ந்து தன்னுள் உள்ள இறைவனான ஆத்மாவை அறியவல்ல செயல்தான் “சித்து வழியில் முதல் சித்து…”

ஆத்ம பலம் பெற்று வேறு ஒரு ஈர்ப்பலைக்கு இவ்வாத்மா செல்லாத வலுவாக நம் எண்ண ஞானம் வளர்ந்திருக்க வேண்டும்.

வாழ்க்கை பந்தத்தில் சுவைக்கும் மற்ற பொருள் நிலை எவற்றிற்கும்… இவ்வெண்ணமானது பேராசைக்கோ ஏக்கத்திற்கோ சஞ்சல சலிப்பு நிலைக்கோ செல்லும் வழிமுறை சிறிது இருந்தாலும்… இவ்வாத்மாவின் செயல் தனித்து தன்னிச்சைக்கு இயங்க இச்சரீர பிம்பத்தின் உணர்வில் “செயல் நிலை தடைப்படும்…”

ஞானத்தின் வளர்ச்சியானது எவ் ஈர்ப்பலையின் பிடியிலும் இவ்வெண்ண செயலின் உணர்வு நிலை செயல் கொள்ளும் பக்குவம் கொண்டுதான்… இவ்வாத்ம பலம் கூடியுள்ள தருணத்தில்…
1.நாம் ஜெபித்த தியானித்த சித்தர்களின்… வளர்ந்த ரிஷிகளின் தொடர்பு வட்ட அலை ஈர்ப்பு
2.நம் ஆத்ம வலு வளர்ந்த வளர்ப்பின் பதம் பார்த்து… நம்மை வழி நடத்துவார்கள்.

“ஆத்ம வலுவை மட்டும்” இச்சரீர பிம்ப வாழ்க்கையில் இருந்து தான் இந்த ஞானத்தால் வளர்ச்சியுறச் செய்ய முடியும். ஆத்ம பலம் பெற்ற ஞானத்தால் இவ்வாத்மாவின் பலம் கொண்டே இச்சித்துத் தொடரின் செயல் சித்துக்களை இவ்வாத்மாவினால் தான் வளர்த்துக் காட்ட முடியும்.

முதல் சித்தான ஆதம் பலம் பெற இச்சரீர பிம்ப இயக்கம் இருந்தால் தான் பெற முடியும். இச்சரீர பிம்ப எண்ணத்தின் அறியும் ஞானத்தைக் கொண்டு ஆத்ம பலத்தால் சித்து நிலைத் தொடர் யாவையும் நாம் பெற முடியும்.

ஈஸ்வரபட்டர் கண்டுணர்ந்த உணர்வுகளை நாம் பருக வேண்டும்

ஈஸ்வரபட்டர் கண்டுணர்ந்த உணர்வுகளை நாம் பருக வேண்டும்

 

எனது குருநாதர் உடலுடன் இருக்கப்படும் போது அவருக்குள் கற்றுணர்ந்த அந்த உயர்ந்த உணர்வை எனக்குள் பதிவு செய்தார். அதை நினைவு கொண்டு எடுக்கும்படி சொன்னார்… எடுத்து அதிலே வளர்ச்சி பெற்றேன் (ஞானகுரு).

உடலை விட்டு நான் பிரிந்து சென்ற பின் “எனக்கு நீ செய்ய வேண்டிய கடமைகள் இன்னதுதான்” என்று அவர் சொன்னார்.
1.அருள் ஞானத்தின் உணர்வை எனக்குள் வளர்த்துக் கொண்டதற்கு உயிரான்மா புவியின் ஈர்ப்புக்குள் வராதபடி விண் செல்ல உந்து விசை தேவை.
2.என்னை விண்ணிலே வீசு…!
3.இங்கிருந்து அகன்று சென்றால் தான் உடல் பெறும் உணர்வுகளைக் கருக்க முடியும்… ஒளியின் சுடருடன் நான் சுழல முடியும்.

ஞானத்தின் தன்மையை எனக்குள் வளர்த்தாலும் அந்த உணர்வின் தன்மை கொண்டு இங்கே விரிவடைந்து பேசலாம். “தன்னிச்சையாக விண் செல்லும் நிலை எவருக்கும் இல்லை..” வலு கொண்ட பல நிலைகள் உறுதுணை கொண்ட உணர்வின் துணை கொண்டு தான் செல்ல முடியும்.

எடை கூடிய பொருளை ஒரு நூலால் தூக்க வேண்டும் என்றால் கடினம். ஆனால் பல நூல்களை ஒன்றாக்கிக் கயிறாகத் திரிக்கப்படும்பொழுது அதைத் தூக்கும் சக்தி வருகின்றது.

இதைப் போன்று தான்
1.“ஒன்றிய நிலைகள் எங்கே வருகின்றதோ” அந்த வலுவான உணர்வு கொண்டு உந்து விசையால் என்னை உந்தித் தள்ள வேண்டும்.
2.உடல் பெறும் உணர்வுகள் கருகும் எல்லை அதுதான்
3.கருகிய உணர்வு கொண்டு அங்கே நுகர்ந்த உணர்வுகளை ஒளியாக மாற்றும்.
4.அந்த ஒளியின் சுடரே தான் என்றும் நிலைத்து அழியாது கொண்டு இருக்கும்.
5.இங்கே புவியில் வந்தால் உணர்வின் தன்மை மாய்க்கும்.

நஞ்சினை வென்றிடும் உணர்வின் அலைகளுக்குள் செல்லப்படும் பொழுது நஞ்சை வென்றிடும் உணர்வையே நான் பெற முடியும்.

நஞ்சை இந்த வாழ்க்கையில் வென்றாலும் வென்றிடும் உணர்வுகள் பெற்றாலும் இதைக் கடந்து செல்லும் ஈர்ப்பு எனக்கு இல்லை.
1.கடந்து செல்லும் இந்த ஒத்த நிலைகள்
2.இங்கே கீழிருந்து இயக்கப்படும் பொழுதுதான் விண செல்ல முடியும்.

அவர் ஆன்மா வெளியே செல்லும் பொழுது அவர் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை அதற்கென்று என்னென்ன பக்குவத்தைச் செய்தாரோ… அதைப் பக்குவப்படுத்தி “அவர் வழியில் விண் செலுத்திய பின்பு தான் விண்ணுலக ஆற்றலை நான் பருக முடிந்தது…”

விண்ணின் ஆற்றலை எனக்குள் பதிவு செய்திருந்தாலும் நினைவு கொண்டு எடுக்கும் சக்தி அந்தத் திறன் அவரை விண் செலுத்திய பின் தான் எனக்குக் கிடைத்தது.

என் குருவின் இயல்பான நிலைகள் கொண்டு அவர் உணர்த்திய உணர்வின் ஒளி அலைகள் நிலை கொண்டிருக்க அவர் காட்டிய வழிகளில் அவரை விண் செலுத்தினேன்.
1.அதனின் தொடர் கொண்டு தான் அவருடைய தொடர்பும் வருகின்றது
2.இந்த புவியியல் வரக் கூடிய தீமைகளை என்னால் அகற்ற முடிகின்றது.
3.உங்களுக்கும் அந்த ஆற்றலைப் பதிவு செய்ய முடிகின்றது.
4.உங்களுக்குள் விளைந்த தீமைகள் என்னை நாடாத வண்ணம் தப்பித்துக் கொள்ள முடிகின்றது.

இல்லை என்றால் அது முடியாது…! சரியான மார்க்கம் இல்லாதபடி எதையும் செய்ய முடியாது.

சில நேரங்களில் குருநாதர் போஸ்ட் கம்பியில் கல்லைக் கொண்டு தட்டுவார் ஹலோ…! என்பார் நான் போன் செய்கிறேன் என்பார்.

போஸ்ட் கம்பியில் ஏன் கல்லைக் கொண்டு தட்டுகிறீர்கள் சாமி…? என்று நான் கேட்பேன்.

கடவுளுக்கு போன் செய்கிறேன் என்பார். கல்லிலே தட்டுவதை நீதான் ஏன் என்று கேட்டாய்… மற்ற யாரும் கேட்கவில்லை. காரணம் அதிலே வரக்கூடிய நாதங்களைச் சுட்டிக் காட்டி விண்ணிலே நாதங்கள் எப்படி வருகிறது…? என்று பார்…!

விண்ணுலகில் எடுத்துக் கொண்டால் ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று மோதுகின்றது. மோதியவுடன் சுருதிகள் மாறுகின்றது. அகண்டு சென்ற பின் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப “எத்தனையோ உருவங்களாகத் தோற்றம் தருகிறது…” விண்வெளியில் இப்படி உருவாகின்றது.

அத்னுடைய வேகங்கள் வரும் பொழுது நாதங்கள் எப்படி வருகிறது பார் என்றார். அதற்குத் தான் கல்லைக் கொண்டு நான் தட்டிக் காண்பித்தேன்…! என்றார் நாதத்தை நீ பார் என்றார்.

1.இது எல்லாம் அனுபவபூர்வமாக… அவருடைய சக்தி கொண்டு உலகம் எப்படி இருக்கிறது…? என்று
2.அவர் கண்டறிந்த உணர்வு அவருக்குள் இருந்து வருகின்றது.
3.அதை எல்லாம் நாம் பருக வேண்டும் என்பதற்குத் தான் இதை ஞாபகப்படுத்துவது.