முன்னோர்களை வணங்க “ஜீவ நதி உள்ள இடத்திற்கு ஏன் செல்கிறோம்…?”

முன்னோர்களை வணங்க “ஜீவ நதி உள்ள இடத்திற்கு ஏன் செல்கிறோம்…?”

 

இது நாள் வரை முந்தைய பாடங்களில் அவரவர்கள் எடுக்கும் எண்ண நிலைக்கொப்ப அமிலங்கள் வளர்கின்றன என்று உணர்த்தினேன்.

இவ்வெண்ண‌ நிலையில் அதிகப்படியான குண நிலைகொண்டு
1.அதே குண எண்ணத்தைக் கொண்ட உடலை விட்டுப் பிரிந்த ஜீவ ஆத்மாக்களும்
2.இன்னும் தன் மகன், மகள் என்ற குடும்பப் பாசத்திலிருந்து சென்ற முன்னோர்களின் உயிராத்மாவும்
3.இத்தாயின் கருவில்தான் பிறக்க வேண்டுமென்ற பிறப்புத் தொடரில் இருந்தும்
4.முந்தைய காலங்களில் பல ஜென்மங்களாய் விட்ட குறையில் இருக்கும் உயிராத்மாக்களும்
5.இவ் ஆண் பெண் இரு பாலரின் பருவ மாற்ற உடல் வளர்ச்சி ஏற்படும் காலம் தொட்டே
6.அவர்களின் சுவாச அலையுடன் இவ்வாவிகளின் ஈர்ப்பு அவ்வுடலுடன் ஏறிக்கொள்ளுகின்றது.

நம் முன்னோர்கள் பருவம் எய்திய பெண்களை “அதிகமாக வெளியில் செல்லாமல் வைத்திருந்ததற்கு” இதுவும் ஒரு காரணம்.

தன் மண வாழ்க்கையில் தோல்வி கண்ட ஆவிகள் தன் எண்ணத்தை ஈடேற்ற அதே வயதுக்குகந்த அப்பருவநிலை கொண்டோரின் உடலில் ஏறிக்கொள்வதற்கு சந்தர்ப்பம் எதிர் நோக்கிப் பல நிலைகளைச் செய்கின்றது.

இதன் சக்தியின் நிலை சூரியனின் ஒளி அலை அதிகமாகப் பாயும் நேரத்தைக் கொண்டு இதன் செயல் நடக்கும் (உச்சி வெய்யிலில்) அதுவுமல்லாமல் இவ்வாவிகள் மற்ற இடங்களில் சுழன்று கொண்டிருப்பதைக் காட்டிலும் “நீர் நிலைகள் உள்ள இடங்களில்தான்” அதன் சுழற்சி அதிகப்பட்டிருக்கும்.

ஜீவனுக்கு வரவேண்டுமென்ற ஆசையிருப்பதினால்
1.தன் உயிரணுவுடன் கூடிய ஆத்ம நிலை சிதறி விடாமல் இருக்க…
2.நீரிலிருந்து சூரிய ஒளிபட்டு அதிகமாக அவ்வொளி அலை உள்ள இடங்களில் இருந்தால்
3.“இவ்வாவிகளுக்கு அதனுடைய ஆத்ம அமிலம் சிதறுபடாமல் காத்திருக்க முடியும்…”
4.முன்னோர்களை வணங்க எதற்காக “ஜீவ நதி உள்ள இடத்திற்குச் செல்லும் பொருள் புரிந்ததா…?”

இப்படிப் பலவாக உள்ள ஆவி ஆத்ம உயிரும், ஜீவ உடல் கொண்ட ஆத்ம உயிருமான மனிதர்களின் நிலையும் கலந்து வாழ்வதினால் தன் பிறப்பின் ஆசைக்காகப் பிறப்பெடுக்கப் பல உடல்களில் “முன் கூட்டியே இவ்வாவி ஆத்மாக்கள் ஏறிக்கொள்கின்றன…”

ஏறிக்கொள்வதோடு மட்டுமல்லாமல் அவ் உடலிலிருந்து தன் சாதக நிலைக்காக அம்மனிதனின் எண்ணத்தையே இவ்வாவி ஆத்மாக்கள் செயல்புரிகின்றன.

இப்படி உள்ள ஆவி ஆத்மாக்கள் தான் பிறப்பில் வரும் நிலையில் சிலருக்கு ஒன்றுக்கு இரண்டாகவும்… பலவாகவும்… கருவுக்கு வருகின்றது.

மனிதனைக் காட்டிலும் மிருகத்தின் சுவாசத்திற்கு மிருக உடலில் பல உயிர் ஆத்மாக்கள் ஏறிவிடுவதால் ஒரே சூலில் பல குட்டிகளை ஈணுகின்றது. மிருகங்களிலேயே ஒரு நிலை கொண்ட சாந்த குணமுடைய சில பிராணிகளுக்கு ஒரு சூலில் ஒரு கன்று ஈணும் நிலை வழி உள்ளது.

இப்பிறப்பில் நடைபெறும் இச்செயல்களும் எண்ணத்திலிருந்துதான் வழித்தொடர் பெற்று அதனதன் இன நிலையின் அமில குணம் தொட்டு பிறப்பிற்கு வருகின்றது.
1.இதன் தன்மையில் உடலில் ஏறிய அத்தனை உயிராத்மாக்களுக்குமே பிறப்பிற்கு வர முடியாமல்
2.அவ்வுடலிலிருந்து ஆவி பிரிந்த பிறகு அதற்கும் விடுதலை கிடைத்து
3.மீண்டும் தன் பிறப்புக்குகந்த இடம் எடுத்து வருவதற்குள் பல ஆண்டுகள் ஆகி விடுகின்றன… இவ்வுடலை விட்ட ஆவி ஆத்மாக்களுக்கு.

இவ்வாவி ஆத்மாக்களின் வழித்தொடரில் தான் பிறப்பு வருகின்றதா…? என்று வினா எழும்பலாம். ஒவ்வொன்றின் நிலை மனிதனிலேயே பலவாக வருகின்றது.

ஆகவே… இப்பொழுது உடலுடன் இருக்கும் நாம்
1.இந்த உடலையே கடைசி உடலாக எண்ணி
2.இதிலிருந்தே மெய் ஒளி காணும் மெய் ஒளி பெறும் நிலைக்கு நம் எண்ணத்தை உயர்த்தி
3.சித்தர்களுடனும் ஞானிகளுடன் இணைந்து வாழும் உன்னத நிலையைப் பெறுதல் வேண்டும்.

துருவன் துருவ மகரிஷி துருவ நட்சத்திரம் அனைத்துமே அகஸ்தியன் தான்…!

துருவன் துருவ மகரிஷி துருவ நட்சத்திரம் அனைத்துமே அகஸ்தியன் தான்…!

விஞ்ஞான அறிவால் வரப்படும் பொழுது மதத்தின் நிலைகள் கொண்டு தன் இனத்தையே அழித்துவிடும் உணர்வுகள் மனிதனுக்குள் விளைந்து விளைந்து
1.இன்று மனிதனின் உணர்வின் நினைவுகள் இழந்து
2.மனித உணர்வே இல்லாது அழியும் தருணம் வந்து கொண்டிருக்கின்றது.

மனிதன் தன்னுடைய ஆறாவது அறிவால் தன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி இந்த விண்ணுலகில் ஆறாவது அறிவை ஏழாவது நிலைகள் பெற்றவர்கள் சப்தரிஷிகள்… “சப்தரிஷி மண்டலங்களாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்…”

விண்ணிலே தோன்றிய உயிர் பூமிக்குள் விஜயம் செய்து தன் உணர்வின் தன்மை உயிரைப் போன்று உணர்வினை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக இன்றும் திகழ்ந்து கொண்டுள்ளார்கள்.

முதல் துருவ மகரிஷி துருவனாக இருந்தாலும் அது துருவ நட்சத்திரமாகி இன்றும் சுழன்று கொண்டிருக்கும் “இந்த வேளை…”

எப்படி நாகம் தன்னுடைய நஞ்சை மற்ற உயிரினங்களின் மீது பாய்ச்சி அவைகளை உணவாக எடுத்தாலும் அந்த உணர்வின் சத்து தனக்குள் விளைந்து விளைந்து “அந்த நஞ்சே வைரமாக விளைகின்றது..”

இதைப் போல அகஸ்தியன் துருவ நட்சத்திரமாகி துருவத்தின் எல்லையை அடைந்து துருவ நட்சத்திரம் ஆகும்பொழுது
1.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக அவன் ஆனாலும்
2.உலகிலேயே நஞ்சைத் தனக்குள் உள்ளடக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும்
3.மிக சக்தி வாய்ந்த நட்சத்திரமாக அங்கே அமைந்து விட்டது… அகஸ்தியன் தான்…!
4.அவனைத் துருவ மகரிஷி துருவன் என்றும் சொல்வார்கள்.

ஆறாவது அறிவின் துணை கொண்டு ஏழாவது நிலை அடைந்தவர்கள் சப்தரிஷி… சிருஷ்டித்துக் கொண்ட ரிஷியின் தன்மை அடைகின்றது.

அதனின்றி விளைந்த உணர்வுகள் நம் பூமியிலே படர்ந்து கொண்டிருப்பதை
1.”எவரெவர் அவர்கள் அணுகி அதை நுகர்கின்றார்களோ”
2.இந்த உணர்வின் தன்மை கொண்டு உடலில் உள்ள உணர்வுகளைப் பிளந்து ஒளியின் சிகரமாக மாற்றிக் கொண்டார்கள்.
3.உயிருடன் ஒன்றி இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து வளர்ந்து கொண்டும் உள்ளார்கள்.
4.அது நமக்கு முன் பரவிக் கொண்டுதான் உள்ளது அனுதினமும்.

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் சொல்கின்றேன். ஆகவே நாம் அடைய வேண்டிய எல்லை அந்தச் சப்தரிஷி மண்டலம் தான்.

உலகத்திலுள்ள பொருள் பொக்கிஷத்தை நாடி உங்கள் நாட்டம் செல்கிறதா…?

உலகத்திலுள்ள பொருள் பொக்கிஷத்தை நாடி உங்கள் நாட்டம் செல்கிறதா…?

 

குருநாதர்:-
உங்களின் தியான ஈர்ப்பின் அருளினால் உங்களின் ஈர்ப்புக்குகந்த போதனையை உணர்த்தி வருகின்றேனம்மா. நீங்கள் இருவரும் செலுத்திய தியானத்தின் ஈர்ப்பிற்கு உங்களுக்கு இப்பொக்கிஷப் பேழையை அளிக்கின்றேன்.

இதிலிருந்து அருளப்பெறும் உண்மைகளை உமதாகப் போற்றி சிவனடியார்கள் என்று உணர்த்திய சித்தர்களும் நாயன்மார்களும் பல பாடல்கள் பக்தி வழி பெற்று எதை அடைய வேண்டும் என்று அதன் நிலை பெற்று இதனை உமதாகப் பிறருக்கு வெளிப்படுத்தாத பொக்கிஷமாய் வைத்துப் பேரின்பப் பெருநிலை என்று அந்நிலையை அடையலாம்.

இன்றைய தியானத்தில் குருநாதர் (சற்குரு மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர்) இந்நிலையில் காட்டித் தந்து அருளியவுடன் பேரானந்தம் கொண்டு அவர் தந்த பேழையை நான் பெற்றவுடன்… என் எண்ணத்தில் சில வினாக்கள் தோன்றி அவரிடமே என்ன பயன்…? என்றெல்லாம் வினா எழுப்பினேன்.

பிறகு அவரிடம் அப்பேரின்பப் பெருநிலையை நீங்கள் தந்த அருள் பொக்கிஷத்தை நான் பெற்றால் சுயநலம் என்ற நிலையில் நான் தனிமையாக்கப்படுவேன். அதனால் பெறக்கூடிய பயன் என்ன…? என்ற வினா எழுப்பினேன்.

குருநாதர்:- நம் பூமியில் அதுவும் இவ் இந்திய கண்டத்தில் பல பொக்கிஷங்கள் அரசர்கள் ஆண்ட காலத்திலிருந்து வைக்கப்பட்டு அப்பொருள் உபயோகமற்று நம் பூமியில் உள்ளது.

இன்று உங்களுக்கு என் அருளினால் உலகத்தில் உள்ள எப்பொருள் எங்குள்ளது…? என்று உணர்த்தினால் அதன் பயனை நீங்கள் பெறவும் அதைப் பிறர் எடுக்கவும் உங்களின் தியான அருள் வழி செய்யும்…! என்று உணர்த்தி குருநாதர் பதிலுரைத்தார்.

இவர் எங்களை எங்களின் அருள் நிலையையும் அவர்பால் வைத்துள்ள பக்திக்கும் “பொருளைக் காட்டிச் சோதனைக்குள்ளாக்குகின்றார்” என்பதனை அறிந்து கொண்டோம்.

ஆரம்பத்தில் நீங்கள்தான் பாடத்தில் உணர்த்தியுள்ளீரே…! அரசர்களாலும், அன்றைய மக்களாலும் பூமிக்கடியில் புதைத்து வைத்துள்ள பொக்கிஷங்களை அவர்களின் ஆவியே அங்குள்ள பொழுது அதனை அடைவது நம் சாதனைக்குடையதா…? என்று சபல எண்ணமுடனும் முதலில் வினா எழும்பியது.

அதற்கும் குருதேவர் ஆவி நிலையில் பூதங்களாய் உள்ளவற்றை சப்தரிஷிகள் துணையுடன் எங்கள் துணை கொண்டு இப்பூமியில் எங்கெங்கு எப்படி எப்படி பொருள்கள் புதைக்கப்பட்டுள்ளன எனச் சிலவற்றைக் காட்டி எங்களைச் சோதனைப்படுத்தினார்.

1.அவர் ஒவ்வொரு நாளும் எங்களுக்குச் சில வினாக்களை எழுப்பி அதன் நிலையில்
2.எங்களை எண்ணத்தினால் பல சோதனைகள் வைத்துத்தான் எங்களின் அருள் நெறி தியானத்திற்கு வழிகாட்டித் தருவார்.

எங்கள் குரு வேணுகோபால சுவாமிகள் அடிக்கடி ஈஸ்வரப்பட்டர் அவர்கள் உடலுடன் உள்ள காலத்திலும் இன்றும் அவருக்கு ஏற்படும் சோதனையின் நிலையெல்லாம் ஒரு சில உணர்த்தியுள்ளார்.

இன்று எங்களையும் அதே சோதனைப்படுத்தினார்.

அப்பொழுது
1.”நான் தந்த அருள் பொக்கிஷத்தை நீ ஏற்கவில்லையா…?
2.எங்களின் அருளால் எங்களால் தான் இந்நிலை ஏற்பட்டது என்ற பெயர் நிலைக்கும்.
3.“நாங்களே அருள் தந்த பிறகு நீ எப்படி மறுக்கலாம்…?” என்ற வினாவும் எழுப்பினார்.

உடனே குருதேவர் “உள் நிலையில் இருந்து மட்டும் பதிலளிக்க வேண்டாம். உன் கணவரிடம் இவ்வினாவை எழுப்பு” என்றார்.

அவர் உடனே
1.”இப்பொழுது குருநாதரின் அருளினால் கிடைக்கப்பட்ட ஆத்மீக வழித்தொடரின்
2.ஞான பொக்கிஷத்தின் அருள் நிலையடையும் பக்குவப்பேற்றைத் தந்தால் போதும். பொருளான பொக்கிஷத்தால் எப்பயன்…?” என்றார்.

உடனே குருநாதர் “இதே வட்டத்தில் இருந்தால் போதுமா…? ஜீவாதாரப் பொருள் இருந்தால்தான் உயர்ந்தவனாக உலகம் மதிக்கும்… வாழ்க்கை நடக்கும்” என்று உணர்த்தினார்.

இப்பொழுது நான் எழுப்பிய வினாவிற்கு குருநாதர் கைதட்டிச் சிரித்துவிட்டுச் சில வழிமுறை பாடங்களைத் தந்தார்.
1.பல கோடி உயிரணுக்களைக் கொண்ட இவ்வுடலின் பிம்பத்திற்கு
2.“இவ்வுயிர் என்ற பொக்கிஷத்தினைப் போன்ற”
3.பலவாக உள்ள உலகத்தில் ஒன்றாகிய தெய்வ சக்தியைப் பெறும் பொக்கிஷத்தைப் பெறும் ஞான அருள் பெறுங்களம்மா…!

உலகத்திலுள்ள பொருள் பொக்கிஷத்தை நாடி உங்கள் நாட்டம் செல்கிறதா…? என்பதனைத்தான் இன்று உங்களுக்கு சோதனையாக்கிக் காட்டினேன் என்று கூறி அவரால் இன்னும் சில உபதேசங்களும் எங்களுக்கு அளிக்கப்பட்டன.

பல அவஸ்தைகள்… பல இன்னல்கள் பட்டு… “அதிலிருந்து விடுபட்டு விண் சென்றவர்கள் தான் மகரிஷிகள்”

பல அவஸ்தைகள்… பல இன்னல்கள் பட்டு… “அதிலிருந்து விடுபட்டு விண் சென்றவர்கள் தான் மகரிஷிகள்”

 

நமது பூமியில் மகரிஷிகளும் சாதாரண மனிதனாகத் தோன்றி
1.சாதாரண மனிதனிலிருந்து மகரிஷியாக வளர்ந்து உணர்வின் சத்தை உயிரோடு ஒன்றி ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாகவும்
2.துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிப்பட்ட அந்த உணர்வின் சக்தியைப் பெற்று சப்தரிஷி மண்டலங்களாகவும்
3.மண்ணுலகில் தோன்றிய மனிதன் விண்ணுலகில் இருக்கின்றார்கள் .

சூரியனிலிருந்து வெளிப்பட்ட உணர்வலைகள் கோளாக நட்சத்திரமாக மாறி ஓர் பிரபஞ்சமாக இருக்கின்றது. இந்தப் பிரபஞ்சத்திற்குள் நமது பூமியும் ஒன்று.

பிரபஞ்சத்தில் உருவாகும் அத்தனை உணர்வுகளும் பூமி தனக்குள் கவர்ந்து நீர் சத்து பிராணவாயு இதைப் போன்ற நிலைகளில் அதிகமாக உற்பத்தி செய்யக்கூடிய திறன் பெற்றதால் இங்கே உயிரினங்கள் வாழ்கின்றன.

இவ்வாறு பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய சக்தியை நமது பூமி எடுத்து… உயிரினங்கள் வாழ்வதற்கும் அது வளர்வதற்கும் அது வளர்ச்சி பெறுவதற்கும் மூல காரணமாக இருப்பது நமது பூமி.

அதிலே தோன்றிய உயிரணு தான் எத்தனையோ கோடி ஜீவணுக்களாக மலர்ந்து வளர்ந்து பல கோடிச் சரீரங்களைப் பெற்று…
1.கடைசியில் மனிதனாகப் பிறந்தபின்
2.மனிதர்களில் பல இன்னல்கள் பல கஷ்டங்கள் பல வேதனைகள் பட்டு அவதிப்பட்டு வந்தாலும்
3.சந்தர்ப்பவசத்தால் அத்தகைய விஷத்தின் தன்மைகளை அழித்து ”மனிதரில் மாணிக்கமாக மகரிஷிகள்”
4.தன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்றார்கள்.

நமது உடல் நாம் உணவாக உட்கொள்ளும் நல்ல உணவிற்குள் மறைந்துள்ள நஞ்சினை நீக்கி அதை மலமாக மாற்றுவது போல் ஒவ்வொரு பொருளிலும் மறைந்திருக்கும் நஞ்சினை நீக்கும் ஆற்றலைப் பெறக்கூடிய தகுதி பெற்றவர்கள் மனிதர்கள்.

இருந்தாலும் அன்றாட வாழ்க்கையில்… ஈகை இரக்கம் நல்ல உணர்வு அன்பு பாசம் பரிவு பண்புடன் நீங்கள் செயல்படும் இந்த வேளையில் பிறர் உடலில் அவர்கள் சந்தர்ப்பத்தால் அறியாது உருவாக்கப்பட்ட பல தீய விளைவுகளை நீங்களும் சுவாசிக்க நேர்ந்து… உங்கள் நல்ல உணர்வுகள் அதனால் வலு இழக்க நேருகின்றது.

1.அதை தடுக்கத்தான் ஞானிகள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் சேர்ப்பிக்கச் செய்கின்றோம்.
2.அறியாது சேர்ந்த தீய உணர்வின் ஆற்றலைப் பலவீனப்படுத்தி உணர்வை ஒளியாக மாற்ற செய்யப் பழகிக் கொடுக்கின்றோம்.

அந்த மெய் ஞானிகள் நஞ்சினைப் பிளந்து அதைத் தனக்குள் அடக்கி ஒளியின் சிகரமாக இன்றும் விண்ணுலகில் நிலைத்திருக்கின்றார்கள்.
1.அவர்கள் சென்றடைந்த அந்த எல்லையை அடைவதற்குத் தான் நமது குருநாதர் காட்டிய வழியில்
2.தியானப் பயிற்சியாக உங்களுக்கு இந்த உபதேச வாயிலாகக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

வட துருவம் – ஈஸ்வரன் – புருவ மத்தி

வட துருவம் – ஈஸ்வரன் – புருவ மத்தி

 

1.தெய்வ சக்தி பெறுவதும் மனிதன் தான்.
2.பேயாக… புழுவாகச் செல்லுபவனும் மனிதன் தான்.
3.மனித எண்ணத்தில் இருந்து தான் மனிதக் கருவின் வளர்ச்சி வாழ்க்கை மண்டலங்களில் வேரூன்றுகின்றது.

நம் பூமியின் ஈர்ப்புக் குணமும் வளர்ச்சி நிலையும் மனித குணத்தின் எண்ணச் செயலுக்குகந்ததாக உள்ளதினால்தான் மனிதன் இங்கு வாழ்கின்றான்.

மனிதன் காணாத அறியாத பல உயிரினங்கள் இப்பூமியில் வாழ்கின்றதென்றாலும் மனிதனின் தொடரிலிருந்து சென்ற வகைகள்தான் அவைகளும்.

இயற்கையில் பல மாற்றங்கள் இருந்தாலும் ஒன்றை ஒட்டி ஒன்று வளர்ந்து பலவாகிச் செயல்படும் நம் பூமியிலே பூமியின் இயற்கைத் தன்மை பலவாக உள்ளதற்கு இப்பூமி ஈர்க்கும் நிலை கொண்டு மனிதனின் தாவரங்களின் எண்ண சுவாச ஈர்ப்பின் நிலை வளர்ச்சி எப்படி மனிதனுக்கு உட்பட்டு வெளிப்படுகின்றதோ அதைப் போன்றுதான் பூமியின் ஈர்ப்பின் நிலைக்கொப்ப அந்தந்த இடங்களில் ஏற்படும் குண சீதோஷ்ண-தட்ப வெட்ப-நிலை என்று பல தடவை முந்தைய நூல்களில் உணர்த்தியுள்ளேன்.

ஆவியாகி… நீராகி… பிம்பமாகி.. மீண்டும் ஆவியாகி… நீராகி.. பிம்பமாகி…! முடிவில்லா மூன்று நிலைகளின் வட்டம் தான் இன்றுள்ள நிலை.

அன்று சித்தர்களினால் பண்டைய இராமாயணக் காவியங்களிலும் இன்னும் பல புராணங்களிலும் உள்ள உள் கருத்தை ஊன்றி நாம் அறிந்தோமானால்
1.கதையாகப் படைக்கப்பட்ட்தன் உள் ஞானத்தின் சத்தை எடுத்து ஆய்ந்து பார்த்தோம் என்றால்
2.“அதன் வடிகாலிலிருந்து பல உண்மைகளை நாம் அறியலாம்…”

இந்த உலகில் வட துருவ தென் துருவ நீர் நிலையினால் தான் இந்த உலகமே சுழன்று ஓடிக் கொண்டுள்ளது… வளர்ந்து கொண்டுள்ளது.

இந்தப் பூமியில் உள்ள விஷ அமில குணங்களைத் தன்னுள் ஈர்த்து இன்றைய மனிதனுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் வாழ வைக்கக்கூடிய திசை தான் வட திசையும் தென் திசையும்.
1.ஆனால் வட திசையை எதற்கும் ஆகாததாகச் சகுணம் பார்க்கின்றான்
2.தீயவை தீயவையுமல்ல… நல்லவை எல்லாம் நல்லவையுமல்ல…!

“சிவன் விஷத்தை உண்டு…” தன் கழுத்திற்குக் கீழ் அது செல்லாமல்… தன் கழுத்திலேயே பாம்பாக வைத்துள்ளார்…! என்ற தத்துவத்தின் உண்மை என்னப்பா…?
1.வட துருவம் விஷக் காற்றுக்களை ஈர்த்து வைத்துக் கொண்டு மற்ற பாகங்களில் அதைப் பரவாமல்
2.விஷ குண அமிலத்தையே நன்மையாகச் செயல் புரிகிறது வட துருவ தென் துருவ திசைகள்.

வட துருவத்தையே ஈஸ்வரனாக்கிப் பாற்கடலில் பள்ளி கொண்டு அவரின் செயல் சிலாக்கிய முறைகளை எல்லாம் தத்துவக் கதைகளில் பிம்பத்தை உணர்த்திப் பிம்ப நாம காவியம் படைத்தார்கள் நம் முன்னோர்கள்.

நம் பூமியில் இந்தக் கோடிக்கணக்கான ஆண்டு சுழற்சி வட்டத்தில் பூமியின் சத்துப் பலனை இதற்கு முன்னாடி நம் பூமி பெற்றது. ஆனால் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் அறிவின் வளர்ச்சி கொண்ட மனிதனால் நம் பூமியின் நிலையே பட்டுப் போன மரத்தைப் போல் உள்ளது.
1.பல ஆண்டுகள் பலன் தந்து தன் சக்தி வலுவிழந்து நிற்கும்
2.பட்டுப் போன மரத்தைப் போன்ற நிலையில் தான் நம் பூமியின் உள் ஜீவ நிலை உள்ளது.

பலனை எல்லாம் தந்தது. அந்தப் பலனை நாம் பலவாகப் பிரித்து எடுத்து விட்டோம். பின் இன்றைய நிலை எப்படியப்பா இருக்கும்…?

நம் பூமியின் வட துருவ தென் துருவ திசைகளிலும் அதிகப்படியான விஷத் தன்மையின் நிலையினால் அதை வடிகட்டி இது நாள் வரை நம் பூமிக்குச் சுத்தமாக்கித் தந்த காற்றின் நிலையே இன்று மாறி விட்டது.

வட துருவமும் தென் துருவமும் எப்படிக் விஷக் காற்றைத் தன்னுள் எடுத்துச் சுத்தப்படுத்தித் தருகிறது என்பீர்…?

மாம்பழத்திலும் இன்னும் சில வகைப் பழங்களில் அதன் உள் கொட்டை எப்படிக் கசப்பாகவும் பழங்கள் இனிப்பாகவும் உள்ளன…?

அதைப் போல் நம் பூமியின் இயற்கையே இந்தக் கரியமில வாயுவான விஷ அமிலக் காற்றைச் சுத்தப்படுத்தி வெளிப்படுத்தும் மையக் கோளங்களாக இந்த வட துருவ தென் துருவ நிலையுள்ளது. அதன் அமிலப் படிவமே மீண்டும் உறைந்து பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

1.மாற்றங்களின் வழித் தொடரிலும் நம் பூமியின் விஷ அமில குணத்திலும் அதிகப்படியான வளர்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதினால்
2.வட துருவ தென் துருவ செயல் நிலையிலும் “இந்த விஷத் தன்மை அதிகப்பட்டு விட்டது…!”

எதுவுமே… அதனதன் வளர்ச்சி நிலைக்கொப்ப தன் இயற்கையுடன் தானாக வளர்ந்து “ஒரு நிலையான வழி முறையுடன் வழி நடந்தால் தான்…” அதன் நிலையில் ஒன்று போல் இருக்க முடியும்.

குழந்தைப் பருவத்தில் அந்தந்த வயதுக்குகந்த அறிவு ஞான வளர்ச்சியை எப்படி வளர்த்துக் கொண்டு எந்த அறிவு செயல் முறை மனிதனாக வழி பெற்று அவன் வாழ்கின்றானோ அதன் தொடர் வாழ்க்கை தான் அவனால் வாழ முடியும்.

1.எண்ணத்திற்கு மேல் செயலை ஏற்றினால் செயல் முறையில் நிறைவைக் காண முடியுமா…?
2.அதிகப்படியான எண்ணச் சுமையை ஏற்றப்படும் பொழுது பைத்தியம் தான் பிடிக்கும் அந்த மனிதனுக்கு…!
3.அதைப் போன்ற நிலை தான் நம் பூமியில் வட துருவ தென் துருவ திசைகளுக்கு ஏற்பட்டுள்ளது.

அதனின் விளைவுகள் தான் சீதோஷ்ண நிலை மாற்றம்… பருவ நிலை மாற்றம்… அதிக வெயில் அதிக மழை அதிகக் குளிர்… எல்லாமே.

உங்களைக் காக்கும் ஆற்றல்மிக்க சக்தி

உங்களைக் காக்கும் ஆற்றல்மிக்க சக்தி

 

இந்த உபதேசத்தைக் கேட்பவர்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது
1.கூட்டுத் தியானத்தின் மூலமாக மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதியை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.
2.அதைப் பதிவு செய்வதற்குத் தான் பௌர்ணமி தியானமும் மற்ற அனைத்துமே.

மனிதனின் உணர்வில் கலந்த நஞ்சினை மாற்றி உணர்வுகளை ஒளியாக மாற்றி முதல் மனிதன் அகஸ்தியன் துருவத்தை அடைந்து துருவத்தின் சக்தியைத் தனக்குள் பெற்று ஒளிச் சரீரம் பெற்று விண்ணுலகம் சென்றது. அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரம் ஆனது

அவர்கள் உடல்களில் இருந்து வெளிப்படுத்தப்பட்ட நஞ்சினை வென்றிடும் உணர்வினைப் பின்பற்றிச் சென்றவர்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இன்றும் சப்தரிஷி மண்டலங்களாகத் திகழ்ந்து கொண்டு உள்ளார்கள்

அங்கிருந்து வெளிப்படும் அந்த உணர்வின் ஆற்றல் மிக்க சக்திகள் நம் பூமியிலே படர்ந்து கொண்டிருக்கின்றது. அதனை நாம் பருக வேண்டும் என்றால்
1.அந்த ஆற்றல்மிக்க சக்திகளை நம் உடலில் பதிவு செய்த பின்பு தான்
2.அந்தச் சக்தியைப் பெறும் தகுதியைப் பெறுகின்றோம்.

இப்பொழுது ஒருவருக்கொருவர் திட்டிக் கொண்டால் அதைப் பத்து வருடம் கழித்து எண்ணினால் கூட நமக்குள் அந்த எண்ணங்கள் உடனே கோபமும் ஆத்திரமும் வெறுப்பும் இந்த உணர்ச்சிகள் உணர்வுகள் தூண்டப்படுகின்றது.

இதைப்போன்று தான் மகரிஷிகளின் அருள் சக்திகள் ஆழமாகப் பதிவாக்கிக் கொண்ட பின் ஒவ்வொரு நிமிடமும் மனிதன் வாழ்க்கையில் நம்மை அறியாது வரும் சலிப்பு சஞ்சலம் வேதனை வெறுப்பு போன்ற உணர்வுகள் நமக்குள் அழுக்காகச் சேர்வதை நாம் மாற்றி அமைக்க முடியும்.

கூட்டு தியானங்களின் மூலமாக அனைவரும் நலம் பெற வேண்டும் என்று பதிவாக்கிய ஆற்றல்மிக்க சக்திகள் இங்கே பரவி உள்ளது அந்த ஆற்றலைப் பெற வேண்டும் என்று எண்ணி “வேறு எண்ணங்கள் இல்லாதபடி”
1.மகரிஷிகளின் அருள் சக்தியை நான் பெறுவேன்
2.என் உடல் முழுவதும் அதைப் பரவச் செய்வேன்
3.என்னை அறியாத வந்த இருளை நீக்கச் செய்வேன்
4.மகரிஷிகளின் ஆற்றலால் இந்த மனித வாழ்வில் நலமும் வளமும் பெறுவேன்
5.என் தொழிலில் மன மகிழ்ச்சி அடைவேன்
6.என் சொல் எல்லோரையும் நலம் பெறச் செய்யும்
7.என் பார்வை அனைத்தையும் நலம் பெறச் செய்யும்
8.என்னைப் பார்ப்பவர்களை அது நல்லவராக்கும் என்ற உணர்வுடன் நீங்கள் ஏங்கித் தியானித்தால் போதுமானது.
9.இந்தக் காற்றிலே பரவி உள்ள அந்த அருள் உணர்வுகள் “உங்களைக் காக்கும் உணர்வாக விளையும்…”

ஏனென்றால் அனைவரும் நலம் பெறும் சக்தியாகத் திகழ வேண்டும் என்று சதா நான் (ஞானகுரு) தியானம் இருக்கின்றேன்… தவம் இருக்கின்றேன்

இதை மனதில் வைத்து நீங்கள் அனைவருமே தியானத்தின் மூலம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று… அவ்வப்போது ஆத்ம சக்தி செய்து தீமையை நீக்கும்படி… உணர்வுகளை ஒளியாக மாற்றும்படி வேண்டிக் கொள்கின்றேன்.

நம் எண்ண ஈர்ப்பைச் சித்தன் பால் தந்தோமானால்… மெய் ஞானம் பெறலாம்

நம் எண்ண ஈர்ப்பைச் சித்தன் பால் தந்தோமானால்… மெய் ஞானம் பெறலாம்

 

சூரியனும் சூரியனில் இருந்து வெளிவரும் சக்தி அலையை நம் பூமியும் எடுக்காவிட்டால் பூமியின் வளர்ச்சி… நிலையாய்த் தோன்றி இருக்காது.

வளர்ந்த பின்னும் அதன் ஈர்ப்பில் பூமி எடுத்துக் கொள்ளும் நிலை தொட்டுத்தான் இன்றளவும் உருண்டோடி பலவான ஒன்றாகி… ஒன்றில் பலவாகி வாழுகின்ற இப்பூமியின் அனைத்து ஜீவராசிகளுக்கும் அதனதன் ஈர்க்கும் செயல் முறைக்கொப்ப வளர்ச்சி நிலையும் எண்ண நிலையும் அததுவே தான் எடுத்துக் கொள்கிறது.

மனிதனின் ஈர்ப்பு நிலையின் குண நிலை அமைவதுவும் அவன் எடுத்துக் கொண்ட ஆரம்ப வளர்ச்சி நிலை அமில குணத்தின் தொடரினால் ஒவ்வொருவரின் அறிவு நிலையும் அதற்குகந்த செயலாற்றும் திறமையும் அதன் வடிவ வட்டத்துக்குகந்த எண்ண ஓட்டத்தின் ஈர்ப்பை எதில் அவன் அகிகப்பட்டு வளர்த்துக் கொள்கின்றானோ அதன் வளர்ப்பு அமிலத்தின் கூட்டு நிலையின் எண்ண மோதலுடன் இவன் எண்ண மோதலுக்குகந்த மற்ற ஆவிகளின் எண்ண மோதலையும் வளர்ச்சியுடன் ஈர்க்க வேண்டியுள்ளது.

ஒரு மனிதன் தன் சுவாசத்தினால் எடுக்கும் எண்ணத்தின் அலையை ஒத்துத்தான் அவனது அறிவாற்றல் குணமும், உடல் உறுப்பும், உருவமும் இருந்திடும்.

1.எந்த ஆண்டவனும் எந்த ஒரு தனி மனிதனுக்கும் ஆண்டவனாக வழி அமைத்துத் தருவதில்லை.
2.எல்லாமும் ஒன்றாக ஒன்றிலே எல்லாமும் உள்ள பொழுது எதன் அடிப்படை சக்தியை எவ்வாத்ம எண்ணம் ஈர்த்து வாழ்கின்றதோ
3.அதன் தொடர்ச்சி நிலைக்குகந்த அளவு அறிவாற்றலும் வாழ்க்கை நிலையும் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அமைகின்றது.

ஒருவர் அதிக சுறுசுறுப்புடனும் செயலாற்றும் திறமையுடனும் நல் நிலையில் வாழும் பொழுது… அவர் எடுத்துக் கொள்ளும் எண்ண சுவாசத்தின் வளர்ச்சி அமிலத் தன்மையினால்தான் ஒரு மனிதன் உயர்கின்றான். அவன் எடுக்கும் நிலைக்கொப்ப ஆவிகளின் தொடர்பு நிலையும் ஏற்படுகின்றது.

மின் அலை எப்படி எந்தெந்த விகித நிலைக்கொப்ப பாய்ச்சப்படுகின்றதோ அதன் நிலைக்கொப்ப ஒளியைத் தரக்கூடிய நிலையையும் எந்தெந்த இயந்திரங்களுக்கு எந்தெந்த விகிதத்தில் மின் அலை பரப்பப்படுகின்றதோ அதன் சக்தி ஓட்டத்தைத் தான் அவ் இயந்திரம் எடுத்து ஓடுகின்றது.

அதைப் போல்
1.எதன் அடிப்படையில் எதன் விகித நிலைக்கொப்ப ஒவ்வொரு ஆத்மாவின் எண்ண சுவாசம் உள்ளதோ
2.அதன் சக்தி நிலையைத் தான் அவன் பெற முடியும்.

அதன் செயலில்தான் அவன் வாழ்க்கையும் அமைகிறதேயன்றி ஆண்டவனைப் பல கோயில் ஸ்தலங்களுக்குச் சென்று வணங்கி வந்து பூஜித்து சக்தி பெறுவதல்ல.

எண்ணத்தின் ஈர்ப்பை உயர்வாக்கி எடுக்கும் சுவாச குண அமிலத்தினால் பலவாக உள்ள இக்காற்றின் அமிலத்திலிருந்து நமக்குகந்த அமிலத்தை நாமாக எடுத்துக் கொள்ளலாம்.
1.இதன் வளர்ச்சியில் நமது எண்ணமும் சுவாசமும் இருக்குமானால் அதன் நிலையில் நாம் எடுக்கும் ஜெப முறையில்
2.நம் எண்ண ஈர்ப்பை நமக்கு மேல் சக்தி வாய்ந்த சித்தரின் பால் நம் எண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் சுவாச அலையின் தொடர்பினால்
3.உடலுடன் மனித உலக வாழ்க்கையில் பிம்பப் பொருளைக் கண்டு பொருளாக வாழும் இவ்வாழ்க்கையில் இருந்து பெற முடியாத ஞானத்தை
4.நம் ஈர்ப்பின் ஜெப எண்ணத்தை சித்தர்பால் செலுத்தி
5.அவர்களின் தொடர்பலையின் சக்தி குண அமிலங்களை நாம் பெறும்படி வழிப்படுத்திக் கொண்டால்
6.நம் ஞான வளர்ச்சியின் தொடரில் செல்லும் வழிமுறைப் பாதை தெரிந்து கொள்ளலாம்.
7.பாதையை அறிந்து விட்டால் நாம் செல்ல வேண்டிய வழியில் எத்தடங்கலும் இருக்காது.

பலவாக உள்ள உலக வாழ்க்கை எண்ணத்தில் நம் எண்ணத்தை ஒன்றாக்கி ஓ…ம் என்ற ஒலியுடன்… சித்தன் பால் நம் எண்ண ஈர்ப்பு சக்தியை நாம் தந்தோமானால்… “மெய் ஞானம் பெறும் வழி ஞானம் அறியலாம்…”

ஞானத்தின் ஈர்ப்பில் கலந்தோமானால் பல உண்மையின் பொருளை உலகளவுக்கு உணர்த்தலாம்.
1.ஞானிகளும் சப்தரிஷிகளும் தம் வளர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டு இருக்காவிட்டால்
2.நம் பூமியில் மனிதன் ஞானம் இன்று, ஞானமும் கண்டிருக்காது… விஞ்ஞானமும் கண்டிருக்காது.
3.இன்றைய காலகட்டத்தில் நம் சித்தர்களின் ஒளி சக்திகள் இவ்வுலகில் அதிகமாகச் செயல்பட்டுக் கொண்டுள்ளது.

மனித ஞானம் எல்லாமே ஞானத்தின்பால் செல்லும் வழி முறையற்றுப் பேராசையின் பிடி ஞானத்தில் தான் வலுவான விந்தை காணத் துடிக்கின்றது.

மனிதனின் பேராசையின் விபரீத எண்ணச் சுழல் காற்றுத்தான் பூமியின் சுழற்சியுடன் அதிகப்பட்டு மோதி உயிர்ப்பலிகள் அதிகமாகி… ஆவியின் சூழ்ச்சியில் அல்லலுக்குகந்த வாழ்க்கையில் வாழ்கின்றான் என்பதனை அறியாமல் அல்லவா வாழ்கின்றான் இன்றைய மனிதன்.

தனதாக உள்ளது எது…? என்பதுவும் இம் மனித ஞானத்திற்கு புரியவில்லை. தனி மனிதன் யாரும் வாழவில்லை. காற்றையும் நீரையும் நிலத்தையும் தன்னுளுள்ள பல கோடி அணுக்களையும் வாழ வைத்து வாழும் மனிதன் தானாக வாழ்கின்றானா…? தனது என்ற பேராசைக்கார மனிதன்?
1.ஒன்றின் துணையில்லாமல் ஒன்றுடன் ஒன்றில்லாமல் வாழவே முடியாத மனிதன்… நான் என்ற நானாக வாழுகின்றானாம்.
2.ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் ஆண்டவனின் ஸ்வரூபத்தை எண்ணி வாழ வேண்டுமப்பா.

“தயவு செய்து” உங்களை நீங்கள் நம்பிப் பழக வேண்டும்

“தயவு செய்து” உங்களை நீங்கள் நம்பிப் பழக வேண்டும்

 

நீங்கள் எப்பொழுது தபோவனம் வந்தாலும் சரி…
1.எந்த நன்மைகளை எல்லாம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தீர்களோ
2.அதை எண்ணி ஆத்ம சுத்தி செய்து மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
3.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஏங்கி இருந்தால் போதுமானது.

உங்கள் குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும்… அவர்களுக்கு நல்ல படிப்பு வர வேண்டும்… எங்கள் குடும்பத்தில் ஒற்றுமை வர வேண்டும்… விவசாயம் செழித்து வளர வேண்டும் என்று எதையெல்லாம் நல்லதாக வேண்டும் என்று விரும்புகிறீர்களோ ஒரு பத்து நிமிடம் மகரிஷிகளை எண்ணித் தியானித்த பின் இதை எண்ணுங்கள்.

மறுபடியும் ஒரு பத்து நிமிடம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி…
1.மீண்டும் அந்த நல்லதுகளை எண்ணினீர்கள் என்றால் இந்த உணர்வுகள் விளைந்து
2.உங்கள் நினைவலைகள் உங்கள் கஷ்டங்களை நீக்க இது உதவும்.
3.உங்களுக்கு இதெல்லாம் கிடைக்க வேண்டும் என்று தான்
4.நான் எங்கிருந்தாலும் தியானம் செய்து தவமிருந்து கொண்டிருக்கின்றேன்.

ஆகவே எனக்குக் கஷ்டமாக இருக்கின்றது… என் கஷ்டம் என்னை விட்டு போக மாட்டேன் என்கிறது… என்று “அதை இறுக்கிப் பிடித்துக் கொள்ளாதீர்கள்…”

எண்ண வேண்டிய சரியான முறை எது என்றால்…
1.மகரிஷிகளின் அருள் சக்தியால் கஷ்டம் எல்லாம் நீங்கி தொழில் வளம் பெருக வேண்டும்
2.நாங்கள் மன பலம் பெற வேண்டும் குடும்பத்தில் ஒற்றுமை வளர வேண்டும்
3.எல்லோரும் உடல் நலம் பெற வேண்டும் என்று கேட்டால்
4.இது எல்லாம் உங்களுக்கு நடக்கும் என்று நான் (ஞானகுரு) ஒரு சொல்லிலே உங்களுக்கு ஆசி கொடுக்க முடியும்.

ஆனால் இவ்வளவும் சொல்லி நல்லது நடக்க வேண்டும் என்று நான் கொடுத்தாலும்… அடுத்தாற்போல் என் பேரன் சரியாகப் படிக்கவில்லை அவனுக்கு உடல் நலம் சரியில்லாமல் போகின்றது என்று “நான் சொன்ன வாக்கை எடுக்காதபடி இதைச் சொல்கின்றார்கள்… “கஷ்டத்தையே பிடித்துக் கொள்கின்றார்கள்…”

போன தடவை உடல் நலம் சரியில்லாதபடி இங்கே வந்திருப்பார்கள் இப்பொழுது முக்கால்வாசி நன்றாக இருக்கும். ஆஅனால் இப்போது அங்கிருந்து வந்த உடனே என் மேல் வலி என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது என்று கேட்கின்றார்கள்

1.சாமி…! போன தடவை வந்த போது நீங்கள் சொன்னபடி தியானம் செய்தேன் இப்போது பரவாயில்லை
2.இன்னும் கொஞ்சம் இருப்பது நீங்க வேண்டும் அந்த நோய் பூரணமாக விலக வேண்டும்
3.நான் நன்றாக வேண்டும் என்று தான் நீங்கள் கேட்டுப் பழக வேண்டும்.

அந்த மனது தான் உங்களுக்கு வரவேண்டும்.

மகரிஷிகளின் அருள் ஒளியால் நாங்கள் உடல் நலம் பெற வேண்டும்… உடல் வலி நீங்க வேண்டும் என்று தான் நீங்கள் கேட்டுப் பழக வேண்டும். இதைத்தான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் பழக்கிக் கொடுக்கிறோம்.

ஏனென்றால் இதற்கு முன்பு… கோவிலுக்குச் சென்று அழுது புலம்பி கஷ்டத்தைச் சொல்லித் தான் வேண்டிப் பழகி இருக்கிறோம்.

அந்த பழக்கத்தை எல்லாம் விடுத்து விட்டு கஷ்டமெல்லாம் நீங்க வேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் நான் பார்ப்பவர்கள் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று இப்படி நீங்கள் கேட்டுப் பழகுதல் வேண்டும்.

இங்கே கூட்டுத் தியானம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு அரை மணி நேரமாவது நல்லதை எண்ணித் தியானம் செய்யுங்கள் உங்கள் மனதில் அமைதி கிடைக்கும் மன பலம் கிடைக்கும் “நீங்கள் எண்ணிய நல்லது நிச்சயம் நடக்கும்…”
1.இந்தப் பழக்கத்திற்கு வர வேண்டும் என்று தான் தியான மண்டபத்தைக் கட்டியது.
2.தயவு செய்து உங்களை நீங்கள் நம்பிப் பழக வேண்டும்.

ஞானிகள் சொன்னது நம் உயிர் கடவுளாக இருக்கின்றது… நாம் எண்ணிய எண்ணங்கள் இறையாகின்றது… உடலுக்குள் இறையான பின் அந்த உணர்வுகள் செயலாகும் போது தெய்வமாக இயக்குகின்றது.

எந்தக் குணத்தை எண்ணி எடுக்கின்றோமோ அது எப்படிச் செயலாக்குகிறது என்பதைத் தான் ஆலயங்களில் வைத்துக் காட்டியுள்ளார்கள். அதை எல்லாம் மனதில் வைத்து… அந்த உயர்ந்த நிலைகளை நீங்கள் எண்ணி…
1.நான் கொடுக்கக்கூடிய நல்ல வாக்குகளை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தி
2.அருள் வழியிலே அருள் வாழ்க்கை வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன்.

குப்பையில் வளர்கின்றது “நல்ல சக்தி மணிகள்”

குப்பையில் வளர்கின்றது “நல்ல சக்தி மணிகள்”

 

மாற்றத்தின் வளர்ச்சித் தொடர் அலையினால் இக்காற்றுடன் அதன் சக்தி நிலையும் வளர்ச்சியுறும் நிலையிலிருந்து கூடப் போகின்றது.

காற்றிலிருந்துதான் அத் தீய சக்தி அதன் ஈர்ப்பில் வளர்கிறது. அதனால் இனம் தான் அத்துடன் கலக்கப் பெறுகிறது என்று உணர்த்தியுள்ளீரே… “வளர்ச்சியுறும் நிலை” என்றால் என்ன…? என்று அடிப்படை வினா எழும்பலாம்.

சூரியனிலிருந்தும் பால்வெளி மண்டலத்திலிருந்தும் நம் பூமியின் ஈர்ப்புக்கு வரும் குண அமிலமானது பூமியின் சுவாசத்தில் இழுபட்டு அது வெளிப்படுத்தும் நிலையுடன் பூமியுடன் ஐக்கியப்பட்டு அதன் உயிரணுத் தோன்றி அதன் வளர்ச்சியில் வளரும் செழிப்பிலிருந்து வெளிப்படும் அமில குணங்களின் நிலை வேறுபடுகிறது. அழுத்தமான அமில குணங்கள்தான் சூரியனிலும் பால்வெளி மண்டலத்திலும் உள்ளன.

சுவாசத்தில் பட்டு வெளிப்படும் நிலையில் வளரும் இயற்கையிலிருந்து வெளிப்படும் அமிலத்தின் மாற்றம் உண்டு.

1.இப்பொழுது நாம் பலதரப்பட்ட உணவு வகைகளை உண்டு மீதியைக் குப்பையாக்குகின்றோம்.
2.அக்குப்பையில் இருந்து அதன் ஈர்ப்பில் உள்ள சத்துக்களை மட்டும் எடுத்து உன்னத மணிகளைக் காண்கின்றோம்.

இப்படி இது நாள் வரை அமில குணங்களையும் உயிரணுக்கள் சுவாச நிலைகள் மண்டலத் தன்மைகள் ஒவ்வொன்றின் நிலையையும் உணர்த்தி வந்தோம் என்றால் எதன் அடிப்படைப் பொருள் காண…?

1.நம் உடலில் பல வகை அமிலங்கள் கொண்ட பல கோடி உயிரணுக்கள் உள்ளன.
2.இதிலிருந்து எல்லாம் நம் ஞான மணியை ஈர்த்து ஒளி பெறல் வேண்டும்.

குப்பையில் வளர்கின்றது நல்ல சக்தி மணிகள்.
1.இவ்வுடல் என்ற குப்பைக் கூட்டிலிருந்து நம் மணிக்கான உரம் எடுத்துக் கொள்ள வேண்டிய செயல் முறையை
2.இத்தியானம் என்ற வழிபாட்டு முறையினை ஏற்படுத்திக் கொண்டால் பக்குவச் செயல்படுத்தி
3.நம் உடலில் உள்ள பல அமிலங்களில் கலந்துள்ள பல கோடி உயிரணுக்களில் இருந்து நம் ஞானத்தின் வளர்ச்சிக்கு சத்தெடுத்து
4.தெய்வ ஞானம் பெற்று… ஒவ்வொரு மனிதனும் “தான் அடைய வேண்டும் என்று எண்ணும்…” உன்னத நிலை எது…? என்று அறிந்து ஒளி பெறலாம்.

சக்தி நிலை சகலத்திலும் இருந்தாலும் அதற்குகந்த வழி நிலையில்தான் அச்சக்தி நிலை வளர்கின்றது. மாற்றவோ திருத்தவோ மனித ஞானத்திற்கு வழி தெரிகின்றது.

இருந்தாலும்… தன் ஞானத்தைப் பலவற்றிலும் கலக்கவிட்டுள்ள மனிதன் தன்னைத் தானே உணர்வும் ஞான வழிபாட்டினை அறியாமல் வாழுகின்றான். கால நிலையின் குறைவை… இப்பொழுது உள்ள மனித வாழ்க்கையின் சந்தர்ப்ப காலத்தைப் பயன்படுத்தி வாழுங்கள்.

“எனது குருவின் ஆசையை” நீங்களும் பெற வேண்டும்

“எனது குருவின் ஆசையை” நீங்களும் பெற வேண்டும்

 

மனிதன் என்ற நல்ல குணங்கள் இல்லாதபடி அரக்க உணர்வுகள் கொண்டு அழித்திடும் உணர்வுகளாக வளர்ந்து வரும் இக்காலங்களில்
1.நான் அறிவில்லாத மூடனாக இருந்தாலும் மகா ஞானிகள் உணர்வுகள் இயக்கப்பட்டு
2.இந்த தத்துவத்தை அந்த ஞானிகளின் உணர்வலைகளே பேசுகின்றது.
3.நான் பேசுகிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம்.

இயற்கையின் உணர்வின் அலைகளை அன்று வென்று… தனக்குள் ஒளியாக மாற்றிச் சென்ற மெய் ஞானிகள் உணர்வுகளே அது பேசுகின்றது.

எனது குருநாதர் பித்தனைப் போன்று இருந்தாலும்… சாக்கடைக்கு அருகில் எம்மை அமரச் செய்து… இவ்வளவு பெரிய தத்துவங்களையும் எனக்கு உணர்த்தினார்.
1.அதனை நான் கேட்டறிந்த பின் அவரின் உணர்வுகள் பதிவாகி
2.அவனை நினைவு கொள்ளும் போதெல்லாம் இந்த உணர்வின் நினைவாற்றல் வந்து
3.என்னை அறியாத வந்த இருளை நீக்கவும்
4.இதைக் கேட்டுணர்வோர் அவர்களை அறியாத வந்த இருளைப் போக்கும் உணர்வாகவும் அது வெளிப்படுகின்றது.

இந்த மூச்சலைகளை எடுத்து அந்த உணர்வின் ஆற்றல் நீங்கள் பெற வேண்டும் என்ற ஆசையில்
1.என் குருவின் ஆசையை நீங்களும் பெற வேண்டும் என்ற நோக்கிலே
2.அதன் வழியில் தான் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

நாம் யாரும் தவறு செய்யவில்லை… சந்தர்ப்பத்தின் நிலைகள் நாம் பரிவுடன் பண்புடன் மற்றவர்களுக்கு உதவி செய்தாலும் நமக்குள் அறியாது வரும் அத்தகைய தீமைகளை நீக்க வேண்டும் என்ற நோக்கத்திற்குத் தான் இதைச் சொல்வது.

கையிலே அழுக்குப் பட்டால் கையைக் கழுவி விடுகின்றோம் உடையில் அழுக்குப் பட்டால் துவைத்து விடுகின்றோம்.

இதைப் போன்று மனித வாழ்க்கையில் உயர்ந்த பண்பு கொண்டு பிறருக்குச் செய்த சேவையின் தன்மையை “முழுமையாக அனுபவிக்க வேண்டும்” என்றால்… நமக்குள் கேட்டறிந்த தீமைகள் உடலுக்குள் சேராத வண்ணம் அந்த ஞானிகளின் உணர்வலைகள் சேர்ப்பிக்கப்பட்டு… அந்த உணர்வால் துன்பங்கள் நீங்க வேண்டும் என்று எப்போது நாம் சொல்கின்றோமோ அப்போது மனிதன் என்ற முழுமை அடைகின்றோம்.

1.நம்மை அறியாது பட்ட அழுக்கையும் துடைக்கின்றோம்
2.ஞானிகள் அருளாற்றல் நமக்குள் பெருகுகின்றது
3.நம் எண்ணம் கூர்மையாக விண்ணை நோக்கிச் சென்றடைகின்றது.

அந்த விண்ணின் உணர்வுகள் சேரும் பொழுது கூர்மை அவதாரமாக…
1.எதைக் கூர்மையாக எண்ணி இந்த மனித வாழ்க்கையில் தன்னை இயக்கிய தீமைகளை வென்று ஞானிகள் எவ்வாறு விண் சென்றனரோ
2.அந்த உணர்வுகள் சிறுகச் சிறுக விளைந்து நமது உடலிலிருந்து உயிரான்மா பிரிந்து செல்லும் பொழுது
3.இதிலே விளைந்த உணர்வின் ஆற்றல் கொண்டு “விண்ணுலகில் அவர்கள் இருக்கும் இடத்திலே” நாம் சேர்கின்றோம்.
4.அந்த மெய் ஞானிகளுடைய அருள் வட்டத்தில் நாம் இணையும் பொழுது
5.நஞ்சினை வென்று தனக்குள் படைத்து வெளியிட்ட மூச்சலைகளை நாம் உணவாக எடுத்து
6.ஒளியின் சுடராக அவரின் ஈர்ப்பு வட்டதில் என்றும் நிலையாக இணைந்து வாழ முடியும்.

அதற்குத்தான் இந்த உபதேசம். ஒவ்வொரு நிமிடத்திலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த அருள் உணர்வை ஆழமாக உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

திட்டியவனைப் பதிவு செய்த பின் எண்ணும் பொழுது அவருடைய நினைவாற்றல் வந்து எப்படி உங்களுக்குள் கொதிப்படையச் செய்கிறதோ அதைப் போல உங்களுடைய நினைவுகள் எத்தகைய நிலையில் இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாது உங்கள் வாழ்க்கையிலே வந்த துன்பங்களை நீக்கி நல்லதைப் பெற வேண்டும் என்று ஏங்கி வந்த உங்களுக்குள் இந்த உணர்வுகளைப் பதியச் செய்கிறேன்.

எந்த ஈர்ப்புடன் இதைப் பதிவு செய்கின்றீர்களோ அந்த உணர்வின் எண்ணம் கொண்டு நீங்கள் நினைக்கும் பொழுது
1.அந்த அருள் ஞானிகள் உணர்வு உங்களுக்குள் சென்று
2.உங்களுக்குள் இருள் சூழச் செய்யும் தீமைகளை நீக்கிவிட்டுப் பொருள் காணும் உணர்வாக விளைந்து
3.ஒவ்வொரு நிமிடமும் உங்களைக் காத்திடும் எண்ணமாக விளைந்து நீங்கள் எண்ணியதை உங்கள் உயிர் ஈசனாக இயக்கி
4.அந்த உணர்வினை உங்கள் உடலுக்குள் வினையாக ஒளி பெறும் தன்மையாக ஒளிச்சரீரமாக மாற்றும் நிலையும்
5.அதுவே ஒளி பெறும் சிவனாக “இந்த உடலை நோயற்ற உடலாக உருவாக்கும் நிலையும்”
6.நமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தி “பேரண்டத்தின் ஆற்றலுடன் இணையச் செய்து”
7.மனிதனை முழுமை அடையச் செய்யும் “அந்த உயிரின் நிலைகள் கொண்டு நாம் இணைந்து செயல்படுவோம்” என்று வேண்டிக் கொள்கின்றேன்.