உயிருடன் ஒன்றி என்றும் ஒளி என்ற உணர்வுகளை உருவாக்கும் நிலை தான் கல்கி

உயிருடன் ஒன்றி என்றும் ஒளி என்ற உணர்வுகளை உருவாக்கும் நிலை தான் கல்கி

 

இந்த உடலில் சிறிது காலமே நாம் வாழ்கிறோம். நமக்கு இந்த உடலும் சொந்தமில்லை. இதிலே தேடிய செல்வமும் சொந்தமில்லை. காரணம்…
1.செல்வத்தைத் தேடிய பின் உடலில் முதுமை அடையப்படும் போது கவலையும் வேதனையும் தான் வருகிறது.
2.தன் பையன் என்ன செய்யப் போகின்றான்..?
3.இவ்வளவு பொருளையும் விட்டுவிட்டுச் செல்கிறேன்… என்ன ஆகப் போகிறதோ…? என்ற
4.இந்த உணர்வின் பற்று தான் வருகிறது… அந்த நினைவுடனே இந்த உயிர் உடலை விட்டுச் செல்கிறது.

பின் யார் மேல் எந்தப் பற்று வருகிறதோ மீண்டும் பிறவிக்கே வருகிறது. இவரின் உடல் கூட வருகிறதா என்றால் இல்லை.
1.இவர் தேடிய ஆசையின் உணர்வே கூடச் செல்கிறது.
2.அந்த உணர்வு கொண்டு தான் அடுத்த உடலாக மாற்றுகிறது
3.மீண்டும் அதிலே வேதனையைத் தான் தேடுகிறது.

ஆகவே நாம் இப்போது ஆசையின் நிமித்தம் கலியில் சிக்கி மீண்டும் உடல் நிலையே பெறுகின்றோம்.

இதிலிருந்து விடுபடும் நிலையாக இந்த உடலில் நல்ல நினைவு இருக்கும் போதே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டால் அதன் உணர்வின் தன்மை கொண்டு நாம் பிறவி இல்லா நிலை அடைய முடியும்.

நாம் பல கோடி உடல்களில் சேர்த்துக் கொண்ட “கார்த்திகேயா…” எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் அறிவு… தீமை என்ற நிலைகள் புகாதபடி தணித்துக் கொள்ளும் சக்தி தான் ஆறாவது அறிவு.

1.தீமை என்று தெரிந்து கொண்ட பின் “வள்ளி…” அந்த வலிமையான சக்தியின் துணை கொண்டு
2.வலிமை பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து உயிரிலே படும் போது
3.அது தெய்வ ஆணையாகத் தீமைகளை நீக்கும் உணர்ச்சிகளாக உடலுக்குள் வருகிறது.

ஆக… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இச்சைப்பட்டால் நம் உயிரிலே அது கிரியையாகி அந்த ஞானத்தின் வழி நம் வாழ்க்கையை அமைக்கின்றது.

நாம் பெற்ற இச்சைகள் நம் உடலில் கிரியையாகி அந்த ஞானத்தின் வழியாக நம் வாழ்க்கை அமைந்து உயிருடன் ஒன்றிய ஒளியாகப் பிறவி இல்லா நிலை அடைவதே கல்கி… கடைசி நிலை.

உடல் என்ற ஆசை வராதபடி என்றுமே இந்த உயிர் எல்லா உலகையும் காட்டுவதற்கு எல்லா உணர்வையும் ஊட்டியது. ஆகையினால் அந்த உயிரைப் போன்று உணர்வின் ஒளியாக நாம் மாறுதல் வேண்டும்.

1.நாம் உயிருடன் என்றுமே ஒன்றி ஒளியான நிலை பெற வேண்டும்
2.உடலான நிலைகள் மாறி அந்த ஒளியான நிலைகள் பெற வேண்டும் என்பது தான் நம் குரு காட்டிய அருள் வழி.

அதனால் அதை நாம் உருவாக்குவோம் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன் (ஞானகுரு).

இதைப் படிப்போர் அனைவரும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெற்று… இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றி… மெய்ப் பொருளைக் காணும் அருள் சக்தி பெற்று… கலியை அகற்றிக் கல்கியாக மாறி… ஆனந்த நிலை பெற்று… என்றும் ஏகாந்த நிலை பெற எல்லா மகரிஷிகளையும் வேண்டிக் கொள்கிறேன்.

எதிர்த்து வரும் ஏதிர் நிலைகளுக்கு நம்மை அடிமைப்படுத்தாமல் மெய் ஞானி காட்டிய வழியிலேயே நாம் செயல்பட வேண்டும்

எதிர்த்து வரும் ஏதிர் நிலைகளுக்கு நம்மை அடிமைப்படுத்தாமல் மெய் ஞானி காட்டிய வழியிலேயே நாம் செயல்பட வேண்டும்

 

உதாரணமாக சாதம் உண்ணும் பொழுது அதிலே ஒரு கல் பட்டு உடம்பே சிலிர்க்கின்றது.

நாம் நல்ல நிலையில் நல்ல உணர்வும் எண்ணங்களும் கொண்டு வாழ்ந்து வந்து ஞானத்தின் வழித்தொடரைப் பெற்றாலும்
1.அறுசுவையான உணவை உட்கொள்ளும் பொழுது அதனுடன் சேர்ந்து வந்த சிறு கல்லைப் போல
2.அருள் வழியில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது சில இடர்கள் வரத்தான் செய்யும்.
3.அந்த நிலையில் உணவுடன் வரும் கல்லுக்காக நாம் சாப்பாடு சாப்பிடாமல் இருப்பதில்லை.
4.நம்மை எதிர்த்து வரும் அந்த ஏதிர் நிலையான உணர்வுக்கு நம்மையே நாம் அடிமைப்படுத்தாமல்
5.ஞானிகள் காட்டிய மெய் வழியிலேயே நாம் செயல்படுதல் வேண்டும்.

உதாரணமாக ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்றால் பலமான அஸ்திவாரம் வேண்டும். அதே போலத்தான் சுவரை எழுப்பவும் அதற்குகந்த கலவைகள் அந்தந்த அளவிலே சேர்த்துக் கட்டினால் தான் அந்தச் சுவர் உறுதியாக நிற்கும்.

சுவர் எழுப்பும் பொழுது அதன் கலவையில் போடும் பொருள்களில் அளவு மாறுபட்டால் அந்தச் சுவருக்குப் பலமில்லை.
1.மணல் அதிகப்பட்டால் உதிரும் நிலையும்
2.சிமெண்ட் அதிகமானால் வெடிக்கும் தன்மையும்
3.நீர் அதிகமானால் அதன் பக்குவ நிலை செயல்படாத நிலையும்
4.மனிதனால் உருவாக்கப்பட்ட சுவருக்கே அதன் கலவை மாறும் பொழுது அது நிற்பதில்லை.

ஆகவே நம் உடலிலுள்ள உணர்வின் எண்ணங்கள் சீராகவும் சமமாகவும் இருந்தால் தான் உடல் நலமாக இருக்கும். உடல் நலமாக இருந்தால் அது எண்ணத்தின் “மையக் கோலாகி (வலுவாகி)” ஆத்ம சக்தியைப் பெற முடியும்.

சலிப்பு சங்கடம் கோபம் ஆத்திரம் வேதனை பேராசை அதிகமான உடல் இச்சைகள் லாகிரி வஸ்துக்களைப் பயன்படுத்துதல் போன்ற நிலைகளில் அடிமைப்பட்டு வாழும் பொழுது
1.நாம் எடுக்கும் சுவாசமானது “கடினமாகி…!”
2.நம் உடலில் சேரும் (உணர்வின் எண்ணங்கள்) அமிலத் தன்மை கூடியும் குறைந்தும் விடுகின்றது

அதனால் உடலில் உள்ள சுரப்பிகளில் சுரக்கக்கூடிய அமிலங்களில் வித்தியாசமாகி (உப்புக்கள் சர்க்கரை கொழுப்பு) நம் உடல் நிலை பாதிக்கப்பட்டு நாம் சோர்வடைந்து விடுகின்றோம். அதனால் பல நோய்களுக்கும் ஆளாகிவிடுகின்றோம்.

இதைப் போன்ற நிலைகளைச் சமப்படுத்தும் நிலைக்குத்தான் உங்களுக்குச் சரியான ஆயுதமாக ஆத்ம சுத்தியைக் கொடுத்துள்ளோம்.

ஒவ்வொரு நிமிடமும் அந்த மகரிஷிகளின் உணர்வை எடுத்து உடல் உறுப்புகளுக்குள் பாய்ச்சி அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்களையும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்து கொண்டே வந்தால் நம்முடைய வாழ்க்கை அருள் வாழ்க்கையாக அமையும்.

மகிழ்ந்து வாழும் சக்தி பெறுகின்றோம். மகரிஷிகளின் அருள் வட்டத்திலேலே ஒன்றி வாழும் தகுதி பெறுகின்றோம்.

உயிரால் தான் இயக்கப்படுகின்றோம்… உயிர் தான் அனைத்திற்கும் காரணம்

உயிரால் தான் இயக்கப்படுகின்றோம்… உயிர் தான் அனைத்திற்கும் காரணம்

 

நம்மைத் திட்டியவனை எண்ணும் போது அவனைச் சும்மா விடலாமா…? கொலை செய்யலாமா…? என்று கூட எண்ணம் வந்துவிடுகிறது. நம் பிள்ளைகளாக இருந்தாலும் கூட வெறுக்கும் தன்மையே வருகிறது.

இது எல்லாம் கலி தான்.

1.வெறுக்கும் தன்மை கொண்டு கொலை செய்ய வேண்டும் என்ற உணர்வை எடுக்கும் போது
2.அல்லது அவனுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள் வரும் போது
3.நம் உடலுக்குள் அதே உணர்வாகக் கலி ஆகி
4.மனிதனை உருவாக்கிய நல்ல அணுக்களை நமக்குள் நாம் கொலை செய்துவிடுகின்றோம் என்பதனை மறந்துவிடாதீர்கள்.

அந்த வலுவான விஷத் தன்மைகள் மனிதனை உருவாக்கும் அணுக்களை… அதனுடைய செயலாக்கங்களை மாற்றி விட்டால் கலியாக மாறுகின்றது நமக்குள்ளேயே.

மற்ற விஷத்தின் தன்மையைப் பெருக்கி மனிதனல்லாத உருவை உருவாக்கும் நிலைகள் பெற்றுவிடுகின்றது. இதை நாம் மாற்ற வேண்டுமல்லவா.

1.ஒவ்வொரு உடலையும் காக்க… உயிருடன் ஒன்றிய உணர்வுகள் தான் வருகிறது.
2.இந்த உடலைக் காக்கத் தான் இந்த உணர்ச்சிகளைத் தூண்டி இயக்கச் சக்தியாக வருகிறது.

இது யாரால் இயக்கப்படுகிறது…?

நம் உயிரால் தான் இயக்கப்படுகிறது என்பதை மனிதனான பின் தெரிந்து கொண்டவன் அகஸ்தியன். ஆகவே அவன் கூறிய வழிப்படி பார்த்தோம் என்றால் தான் நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத் தான் நம் உயிர் உருவாக்குகிறது.

அவன் நமக்குள் இருக்கப்படும் போது…
1.அவனை எண்ணி உயர்ந்த ஞானியின் உணர்வுகளை எடுக்கப்படும் போது அதனை நம் உடலுக்குள் உருவாக்குவதும் அவனே தான்
2.அந்த ஞானத்தின் வழியில் எண்ணும்போது அந்தச் சுவையின் எண்ணங்கள் வருகிறது
3.அந்த எண்ணத்தின் அடர்த்தியானால் தீமையை நீக்கிடும் வலுவாகிறது.
4.தீமையை நீக்கிடும் வலுவாக்கப்படும் போது அந்த உயிரின் இயக்கத்தால் தீமைகள் நமக்குள் புகாத தன்மை வருகிறது.

எத்தனையோ கோடி உடல்களைப் பெற்று மனிதனான பின் நாம் எல்லாவற்றையும் அறிந்திடும் உணர்வு வருகிறது… கார்த்திகேயா. நம் உடலுக்குள் தீமை என்ற உணர்வினை… அந்த நஞ்சினை மலமாக மாற்றிடும் உடலாக மாற்றிவிடுகிறது நம் உயிரே தான்.

அவன் தான் இத்தனை செயலுக்கும் காரணம்…!

எதை இந்த உடலில் ஆசைப்படுகின்றோமோ அதை உருவாக்கிவிடுகின்றான். ஆகவே தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்வு பெற்ற பின் நஞ்சை ஒளியாக மாற்றுகின்றான்.

இதைப் பெறக்கூடிய தகுதியாக எல்லோரும் வர வேண்டும் என்பதற்குத் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் ஒவ்வொரு கால கட்டத்திலும் எனக்கு (ஞானகுரு) எப்படிப் போதித்தாரோ
1.அவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள்ளும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இணைக்கப்படும் போது
2.வசிஷ்டர் அதைப் பெற வேண்டும் என்ற ஆசையின் தன்மையை நீங்கள் அதிகமாக வளர்த்தால் “அது பிரம்மமாகி…”
3.உயிரைப் போன்று அந்த உணர்வின் தன்மை ஒளியாக மாறி நாம் கல்கியாகின்றோம்.

ஒரே நிலையில் ஆண்டவனின் பெயரை மட்டும் உச்சரித்துக் கொண்டு… ஆண்டவன் பால் செல்வதல்ல வாழ்க்கை

ஒரே நிலையில் ஆண்டவனின் பெயரை மட்டும் உச்சரித்துக் கொண்டு… ஆண்டவன் பால் செல்வதல்ல வாழ்க்கை

 

மனதை ஒரு நிலைப்படுத்த வேண்டும்…! ஆண்டவனிடம் சென்று ஐக்கியப்பட வேண்டும்…! என்றால் அப்படிப்பட்ட ஆண்டவன் எங்குள்ளான்…?

1.ஒன்றுடன் ஒன்று இணைந்தது தான் “ஆதி சக்தியின் நிலையே….!”
2.காற்றும் நீரும் மோதுண்டால் “ஒளி..” உருவாகின்றது.
3.ஒலியும் ஒளியும் மோதுண்டால் “ஜீவன்…” உண்டாகிறது.
4.ஒளி நீர் ஒலி எல்லாமே சேர்ந்த பிறகுதான் அந்த ஜீவனுக்குச் “சுவாசத் துடிப்பே…” வருகிறது.
5.சுவாசத் துடிப்பு வந்தவுடன் பல உணர்வின் எண்ணங்களுடன் அந்த ஜீவன் (அணு) மோதி மோதி “ஈர்க்கும் சக்தி பெற்றுச் சுழல்கிறது…”

அந்த ஈர்ப்பின் நிலைக்கொப்ப அது தனக்குள் சேமித்த குணத்தின் தன்மைக்கொப்ப இந்தப் பூமியில் உள்ள பல சத்துகளுடன் மோதி மோதி தன் வளர்ச்சிக்கு அதன் சுவாசத்திற்கொப்ப “வழித் தொடரைப் பெறுகின்றது…”

ஒன்றுடன் ஒன்று மோதாத நிலையில்… “ஜீவனே பெற முடியாது…!”

இரண்டு நிலைகள் கொண்ட நிலையில் மோதலில் மூன்றாகி நான்காகி பலவாகிச் சுழல்வது தான் இந்த அகண்ட அண்டத்திலுள்ள எல்லா ஜீவன்களும்…! (மண்டலங்களாக இருந்தாலும் சரி உயிரினங்களாக இருந்தாலும் சரி அப்படித்தான்…!)

1.தனித்த (சக்தி) ஆண்டவன் என்று எங்கே இருக்கின்றான்…?
2.ஆண்டவனின் பெயரை ஜெபித்துக் கொண்டே நாம் எங்கே செல்லப் போகிறோம்…?
3.முடிவே இல்லாத உண்மையின் ஒளிர் தத்துவ அடக்கமே (பேரருள் பேரொளி) அந்த மோதலின் சுழற்சியில் தான் உள்ளது.

ஆதி சக்தி என்பது விஷம். அந்த விஷம் விஷமற்றதைத் தாக்கும் பொழுது ஏற்படுவது வெப்பம். வெப்பத்தினால் ஈர்க்கும் காந்தமாகி மற்றதைக் கவர்ந்து ஒரு திடப் பொருளாகின்றது… “பரம்பொருள்…”

மோதவில்லை என்றால் எதுவுமே சிருஷ்டியாகாது. ஒன்றுடன் ஒன்று மோதவில்லை என்றால் ஆண்டவன் என்ற சொல்லுக்கே பொருள் இல்லை…! மோதலினால் ஏற்படும் அந்தச் சுழற்சியில் ஜீவன் கொண்ட வளர்ச்சியில் உருவங்களாகி மனிதன் வரை வளர்ச்சி பெற்று வந்துள்ள நாம்

1.எல்லாமில் எல்லாமாக….
2.”ஒளிரக் கூடிய எல்லாமே ஆண்டவன் தான்…!” என்று உணர்தல் வேண்டும்.

குரு கொடுத்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தின் பலன்

குரு கொடுத்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தின் பலன்

 

எத்தகைய குறைகளைக் கண்டாலும் நமக்குள் உட்சென்று நம்மை வேதனைப்படச் செய்யும் செயல்களைத் தடுத்து நிறுத்த “ஆத்ம சுத்தி…” என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

அதை நீங்கள் பயன்படுத்துவதற்கு யாம் பனிரெண்டு வருட காலம் நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி காடு மேடெல்லாம் அலைந்து அந்த ஆற்றலைப் பெற்றோம்.

ஒரு மருந்தைத் தயார் செய்து “நோய் போய்விடும்…” என்று வைத்தியர்கள் சொல்கின்றார்கள்.

வைத்தியத்தின் முறைகளில் நோய் நீங்கினால் அவருக்குப் பொருள் கிடைக்கும் என்ற நிலைகளில் வைத்தியர்கள் செய்கின்றார்கள்.

நமது குருநாதர் கொடுத்த நிலைகளோ துன்பங்கள் விளைய வைக்கும் நிலைகளிலிருந்து மீள்வதற்கு என்னைப் பனிரெண்டு வருட காலம் காடு மேடெல்லாம் அலையச் செய்தார்.

அவர் சொன்ன முறைப்படி அங்கே அலைந்தோம்.

1.தாவர இனத்தின் உணர்வின் சத்து எவ்வாறு வேலை செய்கின்றது…? என்ற நிலையும்
2.மனித சஞ்சாரமே இல்லாத நிலைகள் அங்கே அமைதி கொண்டிருக்கப்படும் பொழுது
3..மனித உணர்வின் எண்ணங்கள் எவ்வாறு செயலபடுகின்றது…? என்ற எண்ணத்தை எடுத்து
4.அதைப் மனித உடலில் விளைய வைத்துத் துன்பத்தை நீக்கிடும் ஆற்றலை ஞானியர்கள் எவ்வாறு பெற்றார்கள்…? என்ற நிலையை
5.எம்மைப் பெறச் செய்தார் குருநாதர்.

அதைப் பெறச் செய்தபின் எனக்கு அடிக்கடி துன்பங்களை விளைய வைத்து அந்தத் துன்பத்தை நீக்க… “நீ எப்படி எடுக்க வேண்டும்…” என்றும் உணர்த்தினார்.

அவர் காட்டிய வழிப்படி யாம் எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றலால்தான் எமக்குள் வரக்கூடிய துன்பத்தையும் எமக்குள் வரக்கூடிய வியாதியையும் நிவர்த்தி செய்ய முடிந்தது.

நமது குருநாதர் காட்டிய வழியின் தன்மையை எமக்குள் பதியச் செய்து கொண்டேன். அதை ஒவ்வொரு நேரத்திலும் எடுத்து அதிலே வளர்த்துக் கொண்ட “அந்த உணர்வின் எண்ண அலைகளைத்தான்” உபதேச முறைப்படி
1.ஒவ்வொரு உணர்வின் அலைகளுக்கும் (நன்மை தீமைகளை உருவாக்கும்)
2.நன்மையை உருவாக்கும் உணர்வுடன் கலந்து உபதேசிக்கப்பட்டு
3.இந்த உணர்வுகளை உங்களுக்குள் திணிக்கின்றேன்.
4.உங்கள் துன்பத்தைப் போக்க உங்களுக்குள் அந்த நல்ல உணர்வினைப் பதியச் செய்கின்றேன்.

துன்பத்தை ஊட்டும் உணர்வுகள் உங்களை ஆட்டிப்படைக்கும் உணர்வுகளைத் தூண்டச் செய்கின்றது.

நீங்கள் அந்த மனதின் நிலைகளை அடக்கி உங்களைக் காக்கக்கூடிய அந்தச் சக்தியை நீங்கள் பெறுவற்குத்தான் இதைச் சொல்கின்றோம்.

அந்தப் பனிரெண்டு வருட கால அனுபவத்தின் நிலையை யாம் சொல்லும் பொழுது அந்தத் துன்பத்தினுடைய நிலைகளை மெய்ஞானியின் அருள் ஒளியுடன் கலந்து திரும்ப உபதேசத்தின் வாயிலாக “வாக்கின் நிலைகள் கொண்டு… உங்கள் உடலிலே பதியச் செய்கின்றோம்…”

அவ்வாறு பதியச் செய்த அந்த வித்தின் நிலைகளுக்கு மெய் ஞானிகளின் சக்தியைப் பெறுவதற்கு நீங்கள் எந்த நிமிடமானாலும் “ஓ…ம் ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரை எண்ணி எடுக்க முடியும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி மகரிஷிகளின் அருள் சக்தியை எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று உங்கள் உடலுக்குள் நினைத்துச் செயல்படுவீர்கள் என்றால் துன்பத்தைப் போக்கக் கூடிய மெய்ஞானியின் அருள் சக்தி உங்களுக்குள் ஊடுருவச் செய்கின்றது.

1.உங்களையறியாமல் ஆட்டிப்படைக்கும் மனக்குழப்பத்தை மனக்குடைச்சலை இது நிவர்த்தி செய்கின்றது
2.உங்கள் எண்ணத்திற்குள் தெளிவாக்கி உங்கள் வாழ்க்கையில் உங்கள் செயலையும் தெளிவுபடச் செய்ய இது உதவுகின்றது.
3.வியாபாரத்திலும் உங்களைத் தெளிவாக்கச் செய்கின்றது.
4.குடும்பத்திலும் உங்களைத் தெளிவாக்கச் செய்கின்றது.
5.குடும்பத்திலும் ஒற்றுமையாக்கச் செய்கின்றது.

மெய் ஒளியான அக அழகைக் காண முயலுங்கள்… பேரருள் பெற்று பேரொளியாக நிச்சயம் மாறுவீர்கள்

மெய் ஒளியான அக அழகைக் காண முயலுங்கள்… பேரருள் பெற்று பேரொளியாக நிச்சயம் மாறுவீர்கள்

 

1.கண்ணாடியில் படிந்துள்ள தூசியைத் துடைத்தால் தான் நம் முகம் தெளிவாகத் தெரியும்.
2.இருட்டில் உள்ள பொழுது வெளிச்சத்தைக் காண முயல்கிறோம்.
3.வெயிலில் உள்ள பொழுது தான் நிழலுக்காக ஏங்குகின்றோம்.

ஆனால் இந்த நிலை பெற்ற பிறகு உண்மையின் நிலையிலேயே உள்ளோமா…? தன்னிச்சைப்படி இந்த வழித் தொடரின் வாழ்க்கையிலே தான் சுழன்று கொண்டுள்ளோம். அதே போல் நம் வாழ்க்கையில் பல நிலைகளை நம் உடலுக்குள் கூட்டிக் கொண்டுள்ளோம்.

இந்த நிலையை மாற்றி உண்மையான ஒளியைக் காண முயல்கின்றோமா…? சற்றுச் சிந்தியுங்கள்…!

கண்ணாடியில் உள்ள தூசியை அகற்றிவிட்டுத் தெளிவான உருவைக் காண ஆசைப்படுகின்றோம். ஆனால்
1.நம் உடலிலுள்ள அசுத்த அலைகளையும் தீமையான எண்ணங்களையும் மாற்றிவிட்டு
2.நம்முடைய உண்மையான அழகைக் காண விரும்புவதில்லை…!

நம்மிடம் உள்ள அசுத்த அலைகளை அகற்ற “நாம் ஆசைப்படாமல்…!”
1.கடவுள் வந்து தானாக அகற்றுவான்……! என்று
2.தெய்வத்திடம் வேண்டி அக அழகைக் காண விரும்புகின்றோம்.

ஒரு செம்பில் உள்ள அசுத்த நீரில் அதற்கு மேல் நல்ல நீரை ஊற்ற ஊற்ற நல்ல நீரும் அசுத்த நீரும் சேர்ந்து வெளிப்பட்டுப் பிறகு அனைத்துமே நல்ல நீராக மாறுகின்றது.

இதைப் போன்று தான் நம்மிடம் உள்ள தீய அணுக்களையும் அசுத்த உணர்வுகளையும் அகற்ற
1.நாம் எடுக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியின் ஈர்ப்பினால்
2.மேலும் மேலும் சேமிக்கப்படும் நல் உணர்வின் அலை அதிகப்படும் பொழுது
3.தீய அணுக்கள் எல்லாம் பல ரூபத்தில் நம்மிடமிருந்து வெளிப்பட்டுச் சென்றுவிடும்.

அதே சமயத்தில் நம் உடலில் உள்ள இரத்த நாளங்களில் ஆக்ரோஷமான ஆன்மா ஏறியிருந்தாலும் தீமையான உணர்வுகள் நம்மிடமிருந்து வெளிப்படும் பொழுது அந்த ஆன்மாவிற்குகந்த ஆகாரம் கிடைக்காததால் அதன் பாதிப்பான உணர்ச்சியின் தூண்டுதலும் நம்மை ஒன்றுமே செய்ய முடியாது.

இதை நீங்கள் உணர்ந்து கொண்டால் தான் உங்களுக்குள் வளர்ச்சியின் தன்மை கூடும். ஏனென்றால்
1.இந்தப் பிரம்மாண்டமான அண்டசராசரங்களில் உள்ள
2.அனைத்து சக்திகளையும் அறியும் ஆற்றல் மனித ஆன்மாவிற்குத்தான் உண்டு.
3.மனித ஆன்மாவினால் முடியாத சக்தி எந்தச் சக்திக்குமில்லை.

ஆகவே இந்த உடலில் நாம் வாழும் காலத்தில் உயர் ஞானத்தின் சக்திகளைச் சேமித்து உயிரான்மாவிற்கு அதை ஊட்டமாகக் கொடுத்து மெய் ஞானத்தின் வீரிய சக்தியாக நாம் ஒவ்வொருவரும் வளர வேண்டும்.

உங்களை நீங்கள் நம்புங்கள். மெய் ஒளியான அக அழகைக் காண முயலுங்கள். பேரருள் பெற்று பேரொளியாக நிச்சயம் மாறுவீர்கள்…!

அகஸ்தியன் அருளைப் பெற மறந்து விடாதீர்கள்… தவறி விடாதீர்கள்

அகஸ்தியன் அருளைப் பெற மறந்து விடாதீர்கள்… தவறி விடாதீர்கள்

 

தென் துருவம் வட துருவம் என்கிற போது
1.தென் துருவம் பூமியின் அச்சிலே இருக்கிறது
2.வட துருவத்தின் வழியாக வரும் போது… மற்றது எது வருகிறதோ ஒதுக்கித் தள்ளும்.
3.தென் துருவம் தனக்குள் இழுத்துக் கொள்ளும்… பிடிப்பாக இருக்கும்.

இதனுடைய காந்தப் புலனறிவுகளை அறிந்து கொண்டு இன்று விஞ்ஞான அறிவுகளில் பல விதமான வித்தைகளைச் செய்கின்றனர்.

துருவப் பகுதியை அறிந்து இன்று விஞ்ஞானி அதைச் செய்கின்றான். அன்று துருவத்தின் எல்லையில் நின்றான் அகஸ்தியன்

அந்தத் துருவத்தின் எல்லையில் அகஸ்தியன் இருக்கும் போது வானுலக ஆற்றலை அறிந்தான். துருவத்தின் எல்லையில் அவன் நின்று
1.துருவத்தில் நீளமாக இந்தப் பூமி மாறும் போது (கோழி முட்டை போல் நீளமாக) அதனின் உணர்வை மாற்றியமைத்து
2.சமமான நிலையில் வைத்தான் அகஸ்தியன்… இன்றும் அவன் வைத்தது தான் ஓடிக் கொண்டுள்ளது.

ஏனென்றால் சர்வத்தையும் தனக்குள் கவர்ந்திடும் சக்தியாக அவன் எல்லை கடந்து தன் எண்ணங்களை விண்ணிலே செலுத்தி… உணர்வின் தன்மை ஆற்றலைப் பெறும் போது “துருவத்தின் வழியாகத் தான்…” இவன் நுகர்ந்தறிய முடிந்தது.

அதன் வழி அறிந்த அகஸ்தியன் இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றான். அதிலிருந்து வரக்கூடிய உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றது. நம் பூமி துருவத்தின் வழியில் அதைக் கவர்கிறது.

அப்படிக் கவரப்படும் போது
1.அவன் எப்படி ஒளியின் தன்மை பெற்றானோ… பூமியைத் திசை மாற்றினானோ…
2.இதைப் போல் அவன் உணர்வின் தன்மையை நாம் அனைவரும் பெற முடியும்.
3.அப்படிப் பெறுவதற்குத் தான் அகஸ்தியன் விநாயகர் தத்துவத்தைக் கொடுத்தான்.

அதாவது முன் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக இன்று நம்மை மனிதனாக உருவாக்கியது என்று மனித உடலில் யானையின் தலையைப் போட்டு
1.வடமேற்காக விநாயகரை வைத்து… வடகிழக்காக விண்ணிலே நம்மை உற்றுப் பார்க்கும்படி செய்து
2.அகஸ்தியன் எப்படி ஒளி உடல் பெற்றானோ துருவ நட்சத்திரமாக ஆகும் பருவம் பெற்றானோ
3.தன் இன மக்கள் அதைப் பெறுவதற்காக… அவன் இருக்கும் போது அத்தகைய நிலையை உருவாக்கி விட்டுச் சென்றான்.

அவன் வழியிலே சென்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாமும் பெற வேண்டும். நம் உடலில் ஆழமாக ஊழ்வினை என்ற வித்தாக அதைப் பதிவாக்கிக் கொண்டால் காற்றுக்குள் மறைந்திருக்கும் அருள் உணர்வை நாம் பெற முடியும்.

ஏனென்றால் அவன் சர்வ சக்தியும் பெற்றவன். தெற்கிலிருந்த அந்த உணர்வுகள் அது வழக்கில் வந்த உணர்வின் தன்மையைக் கவர்ந்து அவன் ஒளியின் உடல் பெற்றான். அந்த உணர்வின் தன்மை வடக்கிலிருந்து பூமிக்குள் பரவிக் கொண்டு தான் உள்ளது.

1.அது வரும் பாதையில் வடகிழக்கினை உற்று நோக்கி – அதிகாலையில் நாம் நுகர்ந்து
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எப்போதுமே எடுக்க முடியும் என்ற தன்னம்பிக்கை கொள்ள வேண்டும்.

அவன் உணர்வை எடுத்து நமக்குள் உருவாக்கினால் நமது உயிர் அதன் வலுவாகக் கொண்டு செல்கிறது. ஆகவே அந்த அகஸ்தியன் பெற்ற அருளைப் பெற மறந்துவிடாதீர்கள்… தவறி விடாதீர்கள்.

அகஸ்தியன் துருவனாகித் துருவ நட்சத்திரமான உணர்வை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சேர்த்துக் கொண்டே வர வேண்டும். அந்த உணர்வுகளை வலு ஏற்றிக் கொள்ளுங்கள். அவன் உணர்வைப் பெற்ற பின் அவன் அடைந்த எல்லையை நாம் அடையலாம்.

இந்தப் பூமியில் உயிரணு தோன்றி உணர்வின் தன்மை ஒளியாகி ஆன பின்
1.சூரியனே அழியலாம்… அத்தகைய சந்தர்ப்பம் வந்து கொண்டுள்ளது
2.இந்தப் பிரபஞ்சமே அழியப் போகிறது… இதிலே சிக்கிய உயிரணுக்கள் எல்லாம் மீண்டும் வேறு பிரபஞ்சத்தில் பரவும்
3.எந்தப் பிரபஞ்சம் கவர்கிறதோ அங்கே சென்று அடுத்த உடல் பெறும் சந்தர்ப்பம் கிடைக்கும் வரை வேதனை தான் இருக்கும்.
4.நரகலோகத்தைத் தான் அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும்.

ஆகவே இன்று இந்த உடலில் நல்ல நினைவு இருக்கும் போதே அந்த அருள் உணர்வைச் சேர்த்துக் கோண்டால் நாம் அங்கே சப்தரிஷி மண்டலம் செல்கிறோம்.

உன்னையும் ரிஷியாக ஆக்கத்தான்.. ஈஸ்வரபட்டனாகிய யான் கடும் தவம் செய்து இந்த உலகில் சுற்றிக் கொண்டுள்ளேன்…!

உன்னையும் ரிஷியாக ஆக்கத்தான்.. ஈஸ்வரபட்டனாகிய யான் கடும் தவம் செய்து இந்த உலகில் சுற்றிக் கொண்டுள்ளேன்…!

 

“ரிஷி நிலை…!” பெற்ற மகரிஷிகளின் நிலையெல்லாம் ஒன்றிரண்டு நாளில் பாட நிலையில் சொல்ல முடியாத நிலையப்பா.

ரிஷி அருள் பெற்றவர்கள் எல்லாம்
1.இவ்வுலகை… இவ்வுலக மக்களுக்காக… இவ்வுலக நன்மைக்காக… தாங்கள் பெற்ற அருளை
2.பல ரூபத்தில்… பல வழிகளில்… பல உடல்களில் வந்து… பல கோயில்களின் சிலைகளின் ரூபத்திலும் வந்து…
3.ஆண்டவனை அடிபணிந்து.. ஆண்டவன் ஒருவன் உள்ளான்… அவன் நம்மைக் கைவிடமாட்டான்… என்ற ஒரே நிலையில் அண்டி வருபவர்களுக்கு
4.ஆண்டனவனாக வந்து அருள் புரிகிறார்கள்…! என்று பல பல தடவை சொல்லிவிட்டேன்.

பல புராதனக் கோயில்களில் சென்றிருந்தால் தெரியும். கோயில் வாசலின் உட்புகும் பொழுதே கோயிலின் மணம் ஒன்று எல்லோருக்குமே தெரியுமப்பா.

பல மூலிகைகள் கலந்த அவ்வாசனையை “என்ன…” என்றே நாம் புரிந்திட முடியாத நிலையில் அம்மணம் வீசிடுமப்பா. அம்மணங்கள் எங்கிருந்து வருகின்றன…?

பல பக்தர்கள் ஒன்றுகூடி பிள்ளையாரப்பா…! முருகா…! ஈஸ்வரா…! கோவிந்தா…! என்ற நாமத்தை ஒரே நிலையில் ஒலித்துக் கொண்டே அக்கோவிலுக்குள் செல்கிறார்கள்.

அக்காலத்தில் இந்த ரிஷிகள் தவமிருந்து அமைத்த கோவில்களில் எல்லாம் இம்மணங்கள் வீசிடும். அந்த ரிஷிகள் தான் பெற்ற ஈஸ்வர சக்தியில் இருந்து பல மணங்களைத் தன் வழிக்கு ஈர்த்து வரும் மானிடர்களுக்கு எல்லாம் “அம்மணங்களை அளிக்கிறார்கள்…!”

சித்தர்களின் அருளையும் ரிஷிகளின் அருளையும் சிந்தித்துப் பார்க்கவே முடிந்திடாதப்பா. அந்நிலையில் அருள் பெற்றவர்கள் பல கோடிச் சித்தர்களும் ஞானிகளும் தவப்பயன் பெற்ற ரிஷிகளும் இல்லாவிட்டால் இவ்வுலக நிலையே வெறும் குட்டிச்சுவராகி இருக்குமப்பா.

அந்த மகரிஷிகளும் ஞானிகளும் இக்கலியின் கடைசியில் கடும் தவமிருக்கிறார்களப்பா. கல்கிக்கு இம்மானிட மக்களை எப்படியாவது ஈர்த்துச் செல்ல வேண்டும். இக்கலியில் மடியாமல் கல்கிக்கு வந்திட வேண்டும் என்று பேராவல் கொண்டு பெரும் தவமுள்ளார்கள்.
1.கல்கியின் ஆரம்ப நிலைதானப்பா
2.சில இடங்களில் மனித உள்ளங்களில் இந்த மெய் ஞானத்தின் நிலை பரவி வருகின்றதப்பா.

ஏனென்றால் இக்கலியில் உள்ள மனிதர்களின் நிலையை “என்ன…?” என்று எண்ணிப் பார்த்திடவே முடியவில்லையப்பா.
1.ஆசை
2.அதியாசை
3.பேராசை
4.கலியில் கடைசி நிலை இதுதானப்பா. பேராசை நிலை,
5.இந்நிலையில் யாரும் (இங்கே) தனித்து நிலைத்திட முடியாதப்பா.

ஆகவே காலமுடன் கலந்துதான் உயிரான ஈசனை எண்ணித் தியானிக்க வேண்டுமப்பா.

1.ஊர் நிலையில்…
2.உலக நிலையில் ஒத்துப் போய்..
3.உங்கள் எண்ண நிலையில் மட்டும் ஈசனின் அருளை மாற்றிடாமல் தியானித்திடுங்களப்பா… ஜெப அருளைப் பெற்றிடுங்கள்…!

அச் சித்தர்களின் நிலையையெல்லாம் நீங்கள் அறிந்திட மட்டும்தான் இந்த ஜெப அருள் இல்லையப்பா. இந்நிலையில் இருந்து கொண்டே உன்னையும், சித்தராகவும் ஞானியாகவும் ரிஷியாகவும் ஆக்கத்தான்… கல்கியில் கலக்கத்தான்… கடும் தவம் செய்து “ஈஸ்வரபட்டனாகிய யான் இந்த உலகில் சுற்றிக் கொண்டுள்ளேன்…!”

புரிந்த பாடத்தை நல்ல நிலையில் ஏற்றுக் கொள்ளுங்களப்பா. என்றும் என் அருள் உங்கள் எல்லோருக்கும் உறுதுணையாக இருக்கும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்க வேண்டியதன் அவசியம் என்ன…?

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்க வேண்டியதன் அவசியம் என்ன…?

 

ஒவ்வொரு வருடமும் நமக்குள் வெறுப்பு கோபம் குரோதம் எல்லாம் விளைந்திருக்கின்றது. அதிலே கோபமான உணர்வு அதிகமாகியிருந்தால் நம் அனுபவத்தில் போன வருடத்தில் நாம் எப்படிக் கோபித்தோம்…? என்று சிந்தித்து இந்த வருடத்தில் நாம் அதை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.

தமிழ் வருடங்கள் மொத்தம் 60 என்றால் அந்தக் கணக்கின் பிரகாரம் நம் பூமி 2000 சூரியக் குடும்பத்தைச் சுற்றி வருகிறது. இதே நேரத்தில் போன வருடத்திற்கும் இந்த வருடத்திற்கும் பார்த்தால் வேறு ஒரு சூரியப் பிரபஞ்சத்தில் நிற்கும் (சுழன்று வரும் பகுதிகள்).

1.எந்தச் சூரியக் குடும்பத்தைச் சந்திக்கின்றதோ அதன் உணர்வை நம் பிரபஞ்சம் இழுத்துக் கவரும் போது
2.அது நல்ல பிரபஞ்சமாக இருந்தால் நமக்கும் நல்லதாகும்…
3.இல்லை என்றால் அதனதன் நிலைக்கொப்ப மாற்றங்கள் வரும்.

ஆகவே அதற்கொப்ப இந்த வருடத்தில் எப்படித் திருப்பம் ஏற்படுகிறதோ அது இந்த வருடம் முழுமைக்குமே அப்படித் தான் இருக்கும் (60 வருடத்தில் ஒவ்வொன்றிலும்).

அதிலே கொஞ்சம் கொஞ்சமாக மாறி வேறு இடத்திற்குப் போகும் போது அதன் உணர்வு மாறும்.
1.மாறும் போது அதற்குத் தக்கவாறு நாம் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.
2.இதை மனிதன் ஒருவனால் மாற்ற முடியும்.

இப்படி இந்த 2000 சூரியக் குடும்பத்தில் நாம் ஒத்து வாழும் போது நமக்குள் மாற்றங்கள் வருகிறது.

இதே மாதிரித் தான் நாம் எத்தனை பேரிடம் பழகுகின்றோமோ அது எல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரபஞ்சம் தான். அந்த மனிதரிடத்தில் (பிரபஞ்சத்தில்) கஷ்ட நஷ்டங்களைக் கேட்கப்படும் போது அவருடைய கஷ்டம் எல்லாம் நமக்குள் விளையத் தொடங்குகிறது.

அதை மாற்றிடும் நிலையாக
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து
2.நம் இரத்தங்களில் கலக்கச் செய்தால் நம் உடலில் அது அதிகமாகிறது… கல்கியாகிறது.

வேதனை என்ற உணர்வு அதிகமானால் அது கலியாகிறது. கலியும் கல்கியும் நமக்குள் மாறி மாறி வருகின்றது. ஆனாலும்
1.கல்கி என்ற நிலைக்கு வரப்படும் போது
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்றே ஆக வேண்டும்.

அதை நாம் பெற்றோம் என்றால் தங்கத்தில் திரவகத்தை ஊற்றியபின் அதில் உள்ள செம்பு பித்தளை வெள்ளி எல்லாம் ஆவியாகித் தங்கம் எப்படிப் பரிசசுத்தமாகிறதோ அதைப் போல் துருவ நட்த்திரத்தின் சக்தியை எடுத்தால் நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்த அது உதவும்.

இதை நாம் வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கடந்த வருடத்தில் நாம் எதைத் தூய்மைப்படுத்தாமல் விட்டோம்…? இந்தப் புது வருட்த்தில் எதை எதைச் சந்திக்கின்றோம்…? என்பதை உணர்ந்து அந்தத் தீமைகளைத் துடைத்துப் பழக வேண்டும்.

ஒவ்வொரு குணத்திலும் சிறு சிறு திரைகளாக இருக்கும் அதை நீக்கிவிடலாம். பெரும் திரையாக மாறிவிட்டால் அவைகளை மாற்றுவது சிரமம்.

சித்திரை…! நம் உடலில் ஒவ்வொரு குணத்திலும் சிறு சிறு திரைகளாக (தீமைகள்) வருவதை நாம் நீக்கிக் கொண்டே வர வேண்டும். நீக்கிக் கொண்டு வந்தால் நாம் கலி என்ற நிலைக்கு வந்துவிடுகின்றோம்.
1.கலி முழுமை அடையப்படும் போது கல்கிக்கு வந்துவிடுகின்றோம்.
2.தீமைகளை நீக்கும் உணர்வு கலியாகிக் கொண்டே வரும் போது கல்கியாகவே மாற்றிக் கொண்டே வர வேண்டும்.
3.ஆக ஒளி என்ற உணர்வு வரும் போது கல்கியாக மாறுகிறது
4.கல்கி என்ற நிலை ஆனால் உயிருடன் ஒன்றி என்றும் நிலையான நிலை பெறுகின்றோம்.

அந்த நிலை பெறச் செய்வதற்குத் தான் ஞானிகள் எத்தனையோ உபாயங்களைக் காட்டுகின்றார்கள். அதை நாம் பின்பற்றுதல் வேண்டும்.

எல்லாம் தந்து அருள் பெறுவது அருளல்ல…! வரும் நிலையிலிருந்தெல்லாம் மீண்டு பெறுவதுதான் ஆண்டவனின் அருள்

எல்லாம் தந்து அருள் பெறுவது அருளல்ல…! வரும் நிலையிலிருந்தெல்லாம் மீண்டு பெறுவதுதான் ஆண்டவனின் அருள்

ஏழ்மையில் இருப்பவனின் எண்ணத்தில் அவன் எண்ணமேதான் அவனை ஏழ்மையாக்குகின்றது. செல்வந்தனின் நிலையும் அதுதான். செல்வந்தனும் அவன் எண்ணத்தில்தான் செல்வந்தன் ஆகின்றான்.

ஏழ்மையும் செல்வமும் அவனவன் எண்ணத்தில் இருந்து தான் வருகின்றன.
1.பிறப்பில் வருவது அல்ல எதுவுமே…!
2.ஜாதகத்தில் வருவது அல்ல எதுவுமே…!
3.எண்ணத்தில் வரும் “எண்ணத்தையே கொண்டு……!”
4.அவரவர்கள் வழிக்கு வாழ்கிறார்கள் இக்கலியில் பிறந்த பாமர மக்கள் எல்லாருமே…!

ஆகவே
1.வரும் சோதனையைக் கண்டு கலங்கிடாதே.
2.எல்லாம் தந்து அருள் பெறுவது அருளல்ல…!
3.வரும் நிலையிலிருந்தெல்லாம் மீண்டு பெறுவதுதான் ஆண்டவனின் அருள்.

ஏமாற்றி வாழ்பவன் வாழ்கின்றான். தர்மமுடன் வாழ்பவனுக்குப் பல தடைகள் ஏனப்பா என்கிறாய்…! “தடையில் இருந்து மீள்பவன் தான் தர்மவான்…!” சத்திய நியாயத்துடன் வாழ்பவனுக்குச் சத்திய சோதனைதான் வந்துவிடும்.

அச்சோதனையில் இருந்து மீண்டால்தான் சத்தியவனாகலாம். சகலத்தையும் அளித்துவிட்டு… “சத்தியவான் நிலையை எப்படியப்பா எய்த முடியும்…?”

சத்தியத்துக்குச் சோதனை வந்தால்தான் அவன் சத்தியவான் ஆகலாம்…!

முருகா……! என்று கோவிலுக்குச் சென்று வணங்கி விட்டால் உடனே உன் நிலைக்கு முருகன் ஓடி வந்து உன் நிலைக்கு எல்லாமே அவன் அளித்து விட்டால் ஆண்டவன் என்பவன் எதற்கப்பா…?

நீ உண்ணும் உணவையே எடுத்துக் கொண்டால் உழுது பயிர் செய்து… அப்பயிரில் விளையும் தானியத்தைப் பக்குவ நிலை செய்து… அதன் பிறகு சமைத்துத் தான்… நீ உண்ண முடிகிறதப்பா…!

சிறு உதாரணத்திற்கு இதைச் சொல்லுகிறேன்.
1.எந்த நிலையும் வேலை செய்யாமல் எந்தக் கஷ்டமும் படாமல் எதுவுமே வருவதில்லை.
2.அவ்வாண்டவன் அருளைப் பெறவும் பல சோதனைகளில் இருந்து மீண்டுதான் ஒரு நிலையை எய்தி
3.அவன் அருளையே… உன்னுள் இருக்கும் அவனை நீ… உன்னையே நீ கண்டிடலாம்…!
4.வரும் தடங்கலைத் தடங்கலாக எண்ணிடாமல் ஜெயத்துடன் ஜெயித்துக் காட்டிடப்பா.
5.உன் ஜெபத்துக்கு என் அருள் உண்டு…! என்ற ஒரு எண்ணம் மட்டும் உங்களுக்கு இருந்தால் போதும்,
6.உன் ஜெபத்துக்கு நான் வருகிறேன்…!
7.ஜெபிக்க வேண்டியது நீ தானப்பா…
8.புரிகிறதா பாடநிலை…? உழுதால் தான்… சமைத்தால் தான் உண்ண முடியும்.

ஆண்டவனே… என்று எண்ணி வாயைத் திறந்தால் உணவை ஆண்டவனா வந்து உன் உடலுக்கு அளித்திடுவான்…..? புரியாத பாமரர்கள் “பழியைப் போடுவதெல்லாம் அவ்வாண்டவனின் மேல்தான்…!”

ஆண்டவன் என்பது யாரென்று புரிந்து விட்டதா… உங்களுக்கு…!

ஒவ்வொரு மனிதனும் ஆண்டவனாகலாம்…! எல்லாமே அவன் எண்ணத்திலும் சுவாசத்திலும்தான் உள்ளது.

ஆண்டவனாக வாழ்வதும் அழுகும் உடலை அழுகவிட்டு மனச்சோர்வுடன் மடிவதும் எல்லாமே மனித எண்ணத்தில் இருந்து வருவது தான். இந்நிலையைப் புரிந்து கொண்டுதான் சித்தர்கள் ஞானிகள் ரிஷிகள் ஒளிச் சரீரம் என்ற அந்த நிலையை எய்தினார்கள்.