அகஸ்தியனின் ஒளியான உணர்வை எடுத்து… அதை வைத்துத் தான் நாம் எதையுமே அறியும் ஆற்றலாகக் கொண்டு வர வேண்டும்

அகஸ்தியனின் ஒளியான உணர்வை எடுத்து… அதை வைத்துத் தான் நாம் எதையுமே அறியும் ஆற்றலாகக் கொண்டு வர வேண்டும்

 

ஒரு மனிதனைப் பார்த்தால் அதனின் உணர்வு நமக்குள் விளைகிறது. எப்படி…?

அந்த மனிதனைப் பற்றி அவர் குணநலன்களைப் பற்றி நம்மிடம் “அவர் மோசமானவர்…” என்று சொல்லி நீங்கள் அதைப் பதிவு செய்தீர்கள் என்றால் அந்த மனிதனைப் பார்த்தவுடனே அன்றைக்கு அவர் சொன்னார் ஆனால் அவருக்கு மோசம் ஆக இருப்பார்.

ஆனால் அவர் சொல்லி விட்டால் என்றால் நாம் பார்த்து மோசமானவர் என்று எண்ணியவுடனே அவர் என்ன பதில் சொன்னாலும் அவரைக் குற்றவாளியாக்கக்கூடிய பதில் தான் வரும்.

1.அன்று மோசம் என்று அவர் சொன்னார்…
2.ஆனால் இன்று வந்து நல்லவன் என்று சொல்கிறார் என்று சொல்லப்படும் போது வித்தியாசம்…!
3.முதலில் சொன்னவரின் உணர்வை நமக்குள் பதிவாக்கி விட்டு அதற்குப் பின்
4.இரண்டாவது அவரைப் பற்றித் தெரியப்படும் போது இதை வைத்துத் தான் அளந்து பார்ப்போம்.

இதை நாம் மாற்றுவதற்கு…
1.மனிதனில் முதலில் ஒளியாகப் பெற்ற அகஸ்தியனின் உணர்வை நமக்குள் பதிவு செய்து கொண்டால்
2.அவன் ஒளியான உணர்வை நமக்குள் வளர்க்கப்படும் போது
3.அவர்கள் ஏன் தவறு செய்தார்கள்…? தவறான கருத்தை ஏன் சொல்கிறார்கள்…? என்ற உண்மைகளை எல்லாம் தெளிவாக உணர முடியும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும். அவர்கள் தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும்… என்ற எண்ணத்தை நமக்குள் வளர்க்க வேண்டும்.

ஆனால் அவர்களிடம் நாம் நேரடியாகச் சொல்ல வேண்டியதில்லை.
நாம் போய்ச் சொன்னால்
1.இவன் பெரிய யோக்கியன்… என்று நம்மிடம் சண்டைக்கு வருவார்கள்.
2.இன்னும் கொஞ்சம் மனதைக் கெடுக்கும்.

ஆகவே நமக்கு அதிகம் அறிமுகம் ஆகாதவர்களாக இருந்தால்… அவர்களுக்கு உண்மையை உணரும் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

காரணம்… அவர்கள் தவறு செய்யும் போது அவர்கள் செய்த தவறைச் சுட்டிக் காட்டினால் உங்களைக் குற்றவாளியாக்கி விடுவார்கள்.

ஆகையினால் தவறு செய்யும் நேரத்தில்…
1.அவர்கள் செய்யும் தவறான உணர்வு நமக்குள் விளையாதபடி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து அந்தத் தவறை நாம் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி… நம்முடைய கடந்த கால வருட அனுபவத்தை வைத்து
1.நம் தொழிலில் எப்படி நஷ்டம் வந்தது…?
2.பிள்ளை சொன்னபடி கேட்கவில்லை என்றதால் அவனைப் பற்றி எண்ணும் போது திருப்பித் திருப்பி வேதனைப்படும் போது
3.கை கால் குடைச்சல் எப்படி வந்தது…? என்பதையெல்லாம் நாம் தெரிந்து
4.பிறந்திருக்கும் இந்தப் புதிய வருடத்தில் நமக்குள் தீமைகள் வராது தடுத்துக் கொள்ள முடியும்.

இது மனிதனால் நிச்சயம் முடியும்.

ஆகவே… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் பெறச் செய்வதற்குத் தான் இத்தனை தரம் திருப்பித் திருப்பி உங்களிடம் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு). இந்தப் பதிவை நீங்கள் நினைவாக்கினால் உங்களுக்குள் வரும் தீமைகளை நீங்களே நீக்கும் திறன் பெறுகின்றீர்கள்.

அது இல்லை என்றால் மாற்ற முடியாது.

உதாரணமாக… சமைக்கும் போது குழம்பில் தெரியாமல் மிளகாயை அதிகமாகப் போட்டுவிட்டால் “காரம்” என்ற உணர்ச்சி தான் உந்தும். மற்ற பொருளைப் பற்றிச் சொல்ல மாட்டோம்.

அதே போல் உப்பு அதிகமாகி விட்டால் குழம்பு கையிக்கத் தான் செய்யும். “உப்பாக இருக்கிறது” என்று தான் சொல்வோம். குழம்பில் போடப்பட்டுள்ள மற்ற சுவையான பொருளைச் சொல்ல மாட்டோம்.

அது எப்படி எல்லாவற்றையும் மாற்றுகிறதோ அதே மாதிரி நம் உணர்வுக்குள் மாற்றி அமைக்கும் திறன் பெற வேண்டும்.

ஆகவே… மாற்றி அமைக்கும் திறன் பெற வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்… கஷ்டப்படுவோர் உடலில் படர வேண்டும்… அவர்கள் தெளிந்த மனம் கொண்டு தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும்… என்ற எண்ணத்தை நமக்குள் வளர்க்க வேண்டியம் (இது முக்கியம்).

1.மிகவும் கஷ்டப்படுவோராக இருந்தாலும் கூட… சொன்னால் சிலர் கேட்க மாட்டார்கள்.
2.அதே சமயத்தில் தெரிந்தவர்களாக இருந்து அவர்களுக்குச் சொன்னாலும்… இவருக்கு எதற்கு இந்த அக்கறை…? என்று நினைப்பார்கள்.
3.இது இப்படியும் வரும்… அப்படியும் வரும்.

அப்போது மனதால் நாம்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் படர வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று
1.மீண்டும் மீண்டும் இரத்தத்தில் கலந்து
2.அந்த அருள் உணர்வுகளை வளர்த்துக் கொள்ளப் பழக வேண்டும்.

இப்படிப் பழகிக் கொண்டால் பிறருடைய நோயைப் பற்றியோ வேதனையைப் பற்றியோ கேட்டறிந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தாலும் அந்த நோயோ துன்பமோ நமக்குள் வராமல் தடுத்துக் கொள்ள முடியும்.

அதற்குத் தான் இதைப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.

உயிரான்மாவிற்குச் சேமிக்கும் சொத்தே என்றும் அழியாததாகும்… அதை யாரும் அழிக்கவோ திருடவோ முடியாது

உயிரான்மாவிற்குச் சேமிக்கும் சொத்தே என்றும் அழியாததாகும்… அதை யாரும் அழிக்கவோ திருடவோ முடியாது

 

எண்ணத்திலும் செயலிலும் வார்த்தையிலும் உயர்வு தாழ்வு என்ற எண்ணம் தான் மனிதர்கள் மனதிலே ஊன்றியுள்ளது.

1.உயர்வு எனும் பொழுது அல்லது உன்னத நிலை எனும் பொழுது
2.நம் உடலுக்கு நம் உயிருக்கு அழியாச் செல்வம் என்ற உயர்ந்த நிலையைப் பெறவேண்டும் என்ற
3.அந்த உயர்ந்த எண்ணம் தான் நம் எண்ணத்தில் எல்லாம் ஊன்றி நிலைத்திட வேண்டுமப்பா…!

வாழ்க்கையில் சேர்த்திடும் சொத்து சுகத்தைத்தான் நாம் எண்ணி வாழ்கின்றோம். அழியாச் சொத்தை யாரும் எண்ணுவதில்லை. மனித உடல் பெற்ற இந்தப் பாக்கியத்தை உடலில் உள்ள பொழுதே அதைச் சீராகப் பயன்படுத்துவதில்லை.

இந்தத் தூல சரீரத்தைத்தான் எண்ணுகின்றார்கள். ஞானச் சரீரத்தை எண்ணிப் பார்ப்பதில்லை.

ஞானச் சரீரத்திற்கு… அந்த ஞான நிலை பெற… நம் உயிராத்மாவிற்கு அழியா நிலை பெற…
1.எண்ணத்திலும் செயலிலும் நல்ல உணர்வுகளையே நம் சுவாசத்தில் என்றுமே எடுத்துக் கொண்டால்
2.நம் உயிர் நிலை ஊட்டம் பெறுகின்றது.

மனிதர்களின் எண்ணமும் செயலும் இன்னும் ஒரு நிலைப்படாமல் இந்தச் சரீர நிலையை (உடலை) எண்ணிக் கொண்டே தான் வாழ்ந்திடுகின்றார்கள்.

வாழும் நாள் எல்லாம் மனித வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களுக்கு நாம் மனதைத் தந்து விட்டால்….!
1.நம் மன நிலையில் பல சோர்வுகளை அடைந்து
2.பல தீய அணுக்களின் செயல்களுக்கு நாம் உட்பட்டு
3.நம்மையே… நம் சுவாச நிலையையே… கெடுத்துக் கொள்கின்றோம்.

தீய எண்ணத்தை வளரவிட்டு அந்த நிலையையே எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது அந்தத் தீய அணுக்களின் வேலை துரிதப்படுகின்றது. அந்த நிலையில் நம் உயிருக்குப் பெரும் சோர்வின் தன்மையைத் தான் அளிக்கின்றோம்.

அதையே வளரவிட்டால் நம் சுவாச நிலையும் மாறுபட்டு இன்னும் பல தீய அணுக்களைத் தான் மேலும் மேலும் பெறுகின்றோம். இதை எல்லாம் அறிந்திடல் வேண்டும்.

ஆகவே
1.நம் உயிரணுவிற்கு நாம் பெறும் ஊட்ட நிலையை
2.அழியாச் செல்வமான ஆத்ம ஜோதி என்ற ஒளி நிலையைப் பெற
3.ஈஸ்வர தியானங்கள் பெற்று அந்த நிலையில் நமக்குக் கிடைத்திடும் அரிய பொக்கிஷங்களை
4.நம் உயிரணுவிற்குச் சேமித்திடல் வேண்டும்.
5.விண்ணிலே ஒளிரும் நட்சத்திரமாகலாம்…!

நம் உயிரான்மாவிற்குச் சேமிக்கும் அந்தச் சொத்தே என்றும் அழியாத சொத்தாகும். அதை யாரும் அழிக்கவோ திருடவோ முடியாது.

சுக்ரீவனும்… அவனுடைய மந்திரியான ஆஞ்சநேயனும்…

சுக்ரீவனும்… அவனுடைய மந்திரியான ஆஞ்சநேயனும்…

 

இராமனின் பக்தன் ஆஞ்சநேயன்…! தீமையை நீக்கியவன் சீதாராமன்…! சந்தோஷப்படும் உணர்வின் தன்மையைச் சுக்ரீவன்…! என்று காவியங்கள் கூறுகிறது. ஆனால் இவ்வாறு காரணப் பெயர்களாக வைத்ததை நாம் புரிந்து விடக்கூடாது என்பதற்காகத் திரித்து விட்டார்கள்… மாற்றி விட்டார்கள்.

ஒரு நோயாளியிடம் இருந்து வேதனையான உணர்வுகள் வெளி வரும் பொழுது அது வாலி. அதனுடைய வலிமை மற்றவர்களையும் வேதனைப்படச் செய்யும்.

ஆனால் சீதாராமன் என்ற நிலையில்
1.அவர் உடல் நலமாக வேண்டும் என்ற எண்ணத்தை எடுத்து
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து உயிரிலே சேர்க்கப்படும் பொழுது “அஞ்சனை…”

அதாவது… தீமையை நீக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் (சுக்ரீவன்) உணர்வை எடுத்து நமக்குள் விளைய வைத்து அதைச் சொல்லாகச் சொல்லப்படும் பொழுது
1.அந்தச் சொல் அடுத்தவர் (துன்பப்படுவோர்) செவிகளில் படுகின்றது
2.உணர்ச்சியைத் தூண்டும் பொழுது அவரின் கண்கள் நாம் சொன்ன சொல்லைக் கவர்கின்றது.
3.உற்று நோக்கிப் பதிவாக்கப்படும் போது அவர் உயிருக்குள் சேருகின்றது.
4.உயிரில் பட்டபின் வாயுவாக மாறுகின்றது.
5.அது இரத்தங்களில் கலந்தபின் உடல் முழுவதும் பரவி உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
6.இராமனின் பக்தன் ஆஞ்சநேயன் வாயு புத்திரன்… அவன் சுக்ரீவனின் மந்திரி
7.துருவ நட்சத்திரம் எதைச் செய்யுமோ அந்த உடலுக்குள் அதைச் செய்யும்…! என்று தெளிவாகக் காட்டுகிறார்கள்.

இராமாயணத்தில் உணர்வின் மனம் எதுவோ அதற்குத் தக்க எண்ணங்கள் எப்படி வருகின்றது…? என்று இப்படித் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

நாராயணன் திரேதாயுகத்தில் சீதாராமனாகத் தோன்றுகின்றான் என்று சொல்கிற பொழுது மனிதன் தன்னையும் பாதுகாத்துக் கொள்கின்றான்.
1.அவனால் முடியாமல் இருக்கும் பொழுது உணர்ச்சியைத் தூண்டி அவன் உயிரிலே மோதச் செய்கின்றான்
2.இந்த உணர்ச்சிகள் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதும் பரப்பப்படும் போது வேதனையை நீக்கிச் சிந்திக்கும் தன்மை வருகின்றது.
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உடலுக்குள் புகும் போது கலியை மாற்றிக் கல்கியாக மாறுகின்றது.

உயிரைப் போன்ற உணர்வின் தன்மையைச் சிறுகச் சிறுக எண்ணப்படும் போது அந்த உடலில் ஒளியின் உணர்வாக மாறுகிறது. உயிரின் நிலைகளில் இது ஏற்படும் பொழுது “முழுமையான கனியாக மாறி…” அதனின் இனத்தின் வித்தை உருவாக்கிக் கல்கி… கடைசி நிலை.

மனிதனான பின் தான் ஒளியின் உணர்வாக உருவாக்கும் தன்மை பெறுகின்றான்.

கஷ்டமோ நஷ்டமோ மற்ற உணர்வின் தன்மை வலிமையாக்கப்படும் போது அது வாலியாகி விடுகிறது.

அதை மாற்ற… கொடுத்த சக்தியைச் சீராகப் பயன்படுத்தி நன்மை செய்யக் கூடிய சக்தியாக மாற்றிக் கொள்ள வேண்டும். ஆகவே ஒவ்வொரு நொடியிலும் ஆத்ம சுத்தி செய்ய மறந்து விடாதீர்கள்…!

ஆண்டவனின் சக்தியைப் புரிந்து ஆத்ம ஜோதியாக நீங்கள் கலந்திட வேண்டும் என்பது தான் ஈஸ்வரபட்டன் அளித்திடும் பொக்கிஷம்

ஆண்டவனின் சக்தியைப் புரிந்து ஆத்ம ஜோதியாக நீங்கள் கலந்திட வேண்டும் என்பது தான் ஈஸ்வரபட்டன் அளித்திடும் பொக்கிஷம்

 

ஒவ்வொரு மனிதனும் “தன்னுள் ஆண்டவன் இருக்கின்றான்…!” என்ற எண்ணமுடன் வாழ்ந்திட்டால் இன்றைய கலியில் நடக்கும் கூத்துக்கள் எல்லாம் இருக்காதப்பா…!

ஆண்டவனின் சக்தியைக் கல்லிலும் மண்ணிலும் தான் பார்த்து வணங்குகின்றார்கள். இவர்கள் வேண்டுவது எல்லாம் அக்கல்லின் ரூபத்தில் இவர்களுக்கு வந்து அருள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் இன்றும் உள்ளது.

நம் ஆத்மாவில் உள்ள அருளை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமப்பா…! நம் உயிராத்மாவின் மூலமாக நாம் ஜெபம் இருக்கும் பொழுது எல்லா நிலையையும் அறிந்து கொள்ளலாம்.
1.நாம் யார்…?
2.நம் உயிராத்மாவின் நிலை என்ன…?
3.நம்முள் இருக்கும் ஈசனின் சக்தி என்ன…? என்ற எல்லா உண்மைகளையுமே அறிந்து கொள்ளலாம்.

நாம் பாவம் செய்தோம். நமக்கு இனி இந்த ஜென்மத்தில் என்ன பேறு கிடைக்கப் போகிறது என்று எண்ணிடலாகாதப்பா..!

தவறை எண்ணி வருந்தும் பொழுதே நம் உயிராத்மா நம் தவறுக்கு மன்னிப்பு அளிக்கின்றதப்பா…! நம் உயிராத்மாவின் நிலையேதான் ஆண்டவன் என்ற ஒரே எண்ணம் மக்களுக்கு வந்து தன் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டுமப்பா…!

அழியும் யுகத்தில்… அழியாச் செல்வம்… ஒரே செல்வம்… “இந்த உயிராத்மா தானப்பா…!”

கலியின் கடைசியில் கல்கி ஆரம்பமான நிலையில் இந்தக் கடைசி சந்தர்ப்பத்தை ஒவ்வொரு மனிதனும் பயன்படுத்திக் கொண்டு நம் ஆத்ம ஜோதியை அவ்வாண்டவனிடம் கலக்கவிட்டு ஆண்டவனுடன் ஆண்டவனாக சூட்சம உலகிற்கு அழைத்துச் செல்லத்தான் இதை உரைக்கின்றேனப்பா…!

1.இந்த உயிராத்மா என்னும் ஆண்டவனின் சக்தியைப் புரிந்து கொண்டு
2.ஆத்ம ஜோதியாகக் கலந்திட வேண்டும் என்பது தான்
3.ஈஸ்வரபட்டனாகிய நான் அளித்திடும் பொக்கிஷம்…!

துருவ நட்சத்திரத்தின் சக்தியை அடுத்தவர்களுக்குப் பாய்ச்சும் முறை

துருவ நட்சத்திரத்தின் சக்தியை அடுத்தவர்களுக்குப் பாய்ச்சும் முறை

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் பெற வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி அனுதினமும் துருவ தியானம் எடுக்கின்றோம்.

நாம் எடுத்து வளர்த்த பின் உடல் நலம் இல்லாதவர்களுக்கு அல்லது வேதனைப்படுவோருக்கு எப்படிச் செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா… என்று சொல்லி உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று வளர்த்து விளைய வைத்த ஞான வித்தை அவர்களுக்குள் சொல்லாகச் சொல்லப்படும் போது
1.கேட்டவுடனே அவர்கள் உடலுக்குள் இந்த உணர்வுகள் விளைகின்றது.
2.அவர்கள் உடலுக்குள் இந்த உணர்ச்சிகள் ஓடுவதைப் பார்க்கலாம்.
3.இதன் வலிமையான பின் நோயின் தன்மையான அந்த உடல்களில் நடுக்கமாவதையும் பார்க்கலாம்.
4.இது இரத்தத்தில் கலந்து துருவ நட்சத்திரத்தின் உணர்வை அவர்களுக்குள் ஊட்டும்.
5.உடலுக்குள் சென்று அந்த நோயின் வீரியத்தைத் தணிக்கும்… வேதனைகளை அடக்கும்.

உதாரணமாக நீங்கள் ஒரு நோயாளியையோ ஒரு தரக்குறைவாகப் பேசக்கூடியவர்கள் உணர்வையோ நுகர்ந்தால் உங்களுக்குள் பதட்டமாகிறது அல்லவா…! நுகர்ந்த பின் உடலுக்குள் எத்தனை வேகத்தை உண்டாக்குகிறது…?

அதே போல் தான் தீமையைக் கண்ட பின் ஈஸ்வரா… என்று சொல்லி உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடலில் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் நாம் செலுத்த வேண்டும்.

இது வலுவான பிற்பாடு…
1.அந்தத் தீமைகளைத் தள்ளி விட்டுவிடுகிறது
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வு முன்னணியில் வந்துவிடுகிறது.

ஆகவே… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் படர்ந்து எங்கள் உடலில் உள்ள நோய்கள் நீங்க வேண்டும் எங்கள் உடல் நலமாக வேண்டும் என்று சொல்லி இதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

இப்படி வளர்த்துக் கொண்ட ஞான வித்தை இதே உணர்ச்சி கொண்டு அடுத்தவர்களுக்குச் சொல்லும் போது செவிகளில் பட்டபின் இந்த உணர்வுகள் அங்கே உந்தப்பட்டு அவர்கள் தீமைகளை நீக்க உதவும்.

1.நாமும் உடல் நலம் பெறுகின்றோம்… மற்றவர்களுக்கும் அந்த அருள் சக்தியைப் பெறச் செய்து
2.அவர்களையும் உடல் நலம் பெறச் செய்கிறோம்.

சப்தரிஷி மண்டலங்களிலிருந்து தான் மக்கள் வாழும் உலகிற்கு ஞானிகளும் ரிஷிகளும் பல நன்மைகளைச் செய்திட முடிகிறதப்பா..!

சப்தரிஷி மண்டலங்களிலிருந்து தான் மக்கள் வாழும் உலகிற்கு ஞானிகளும் ரிஷிகளும் பல நன்மைகளைச் செய்திட முடிகிறதப்பா..!

 

இந்தக் காற்றில் கலந்துள்ள பல வகை மூலிகைத் தன்மைதான் நம் சுவாசத்தில் வந்து தான் நம் சுவாசத்திலும் வந்து கலக்கின்றது. நாம் ஆண்டவனை நினைத்துச் சில நிலைகளில் நம் உடல் நலக் குறைவுக்காக நம்பி எண்ணும் பொழுது
1.அந்தச் சித்தர்கள் உருவில் உள்ளவர்கள்
2.நலிவுற்ற உடலுக்கு அந்த உடலுக்கேற்ற மூலிகையின் மணத்தை
3.அந்த நலிவுற்றோருக்குச் சுவாச நிலையிலேயே அளிக்கின்றார்கள்.

மறைந்துள்ள சித்தர்களின் நிலையெல்லாம் பல கோடி இரகசியங்களைத் தனக்குள்ளே மறைத்து வைத்திருந்தாலும்
1.ஏங்கிடும் இதயத்திற்கு அவர்கள் பெற்ற சக்தியை
2.எந்த வழியிலாவது புகட்டி ஆசீர்வதிக்கின்றார்கள்.

தானறிந்த பல சக்தியின் இரகசியங்களை மக்களின் நிலைக்கு உகந்தபடி அந்த இரகசியங்களை வெளியிடாமல் “பல வகைகளில்…!” இன்றும் புகட்டிக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.

பல கோடிச் சித்தர்கள் இன்றும் உடலுடன் இந்த உலகிலே உலாவிக் கொண்டு தான் உள்ளார்கள். பல சித்தர்கள் பல வகைக் குகைகளை அமைத்தும் சமாதி நிலை எய்தியும் இன்றும் உள்ளார்கள்.

எப்படி இந்த உலகிலே வாழும் மனிதர்கள் குடும்பம் குடும்பமாக ஒன்றாகக் கலந்து வாழ்கிறார்களோ இந்த உலகிலே அதே போல் தான்
1.பல ஞானிகளும் சித்தர்களும் ரிஷிகளும் ஒன்று கலந்து ஒரு நிலைப்பட்டு
2.இந்த மக்களுக்காக அவர்கள் ஒரு உலகில் “சப்தரிஷி மண்டலங்களாக…” வாழ்கிறார்கள்.
3.அந்த உலகில் இருந்து தானப்பா மனித உடலுடன் வாழும் மக்களின் உலகிற்கு பல நிலைகளைச் செய்திட முடிகிறதப்பா..!

அன்று இருந்த சித்தர்கள் கோவில் அமைத்து
1.மனிதர்களின் எண்ணங்களை எல்லாம் ஒன்றுபடுத்திடத்தான்
2.அந்த ஆண்டவன் அந்தக் கோவிலிலே அமர்ந்துள்ளான்…! என்ற எண்ணத்தை
3.மக்களின் மனதினிலே ஆழமாகப் பதிய வைத்தார்களப்பா…!

மனித எண்ணத்தில் தான் பல தவறுகள் செய்தாலும் அந்த ஆண்டவனிடம் “மன்னிப்புக் கேட்கும் எண்ணமாவது… … இன்றும் உள்ளதப்பா…!”

தாவர இனச் சத்திற்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தியை முகப்பில் வைத்துத் தான் அன்று சித்தர்கள் செயல்பட்டார்கள்

தாவர இனச் சத்திற்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தியை முகப்பில் வைத்துத் தான் அன்று சித்தர்கள் செயல்பட்டார்கள்

 

தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வைப் பெற்ற பின் நஞ்சினை மாற்றும் உடலின் அமைப்பு வருகிறது.

பன்றியின் உடலாக இருக்கும் போது நஞ்சை நீக்கும் உணர்வுகள் பெற்று… நல்ல மணத்தை நுகர வேண்டும் என்று பட்டது. அதன் உணர்வின் தன்மை வரும் போது கலியாகி மனிதனாக மாற்றியுள்ளது.

எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட பின் தீமையை நீக்கும் உணர்வு பெற்று மனிதனாக ஆன வலிமை கொண்டு
1.இன்று விஞ்ஞானியோ அல்லது வைத்தியரோ
2.இதைக் காட்டிலும் வலுவான உணர்வு கொண்டு விஷத்தை மாற்றுகின்றனர்.

“சாம வேதம்…” என்று சொன்னாலும் வேப்ப மரத்தின் உணர்வை எடுத்துக் கொண்டால் சாம. அதாவது…
1.வேம்பின் மணத்தை நாம் நுகரப்படும் போது ஓ…ய்… என்ற சப்தத்துடன் உமட்டல் வருகிறது.
2.கசப்பின் தன்மை அதிகரிக்கப்படும் போது மற்றதை விடாதபடி வாந்தி வருகிறது – இது சாம.
3.அந்த வாசனை வரப்படும் போது அந்த உணர்ச்சிகள் உந்தி வெளியே தள்ளுகிறது.

உணர்வின் தன்மை கவரப்பட்டு உறையும் நிலை வரும் போது கிரேதா. அதைக் கடந்து அதிலிருந்து வரக்கூடிய மணம் தான் சாம… இசை. அதை உயிரணு நுகரப்படும் போது “உணர்ச்சியின் எண்ணங்கள்…” வருகிறது.

ஆனால் தாவர இனங்களாக இருக்கும் போது அந்த மணத்தின் வலிமை கொண்டு மற்றதைத் தன் அருகில் விடாது பாதுகாத்துக் கொள்கிறது.

ஆகவே அதைப் போன்று மனிதனான பின் தீமைகள் நமக்குள் வராது தன்னைப் பாதுகாக்கும் நிலையாக அருள் உணர்வை எடுத்துச் சேர்த்தல் வேண்டும்.

சாம வேதத்தை முழுமையாகத் தெரிந்து கொண்டவர்கள்
1.இந்தச் செடி இதைச் செய்யும்… இந்தச் செடி இன்னதைச் செய்யும்… என்று மணத்தால் நுகர்ந்து
2.எந்தச் செடியின் மணத்தை அதிகரித்து மனித உடலில் தீமையை நீக்கியதோ
3.அதன் உணர்வின் குணத்திற்கொப்பத் தாவர இனத்தின் மணத்தைக் கூட்டி
4.மனிதனுக்கு வரும் நோய்களை நீக்கக் கற்றுக் கொண்டார்கள் கடந்த கால மனிதர்கள்.

நோய்களை நீக்கக் கற்றுக் கொண்டாலும் இதன் வலுவின் தன்மை கொண்டு மாற்றும் போது அன்றைய காலத்தில் இந்தச் சாம வேதம் என்று வரும் போது இதைக் கொடுப்பதற்கு முன்
1.அந்தத் தாவர இனச் சத்தைக் கையில் ஏந்தி
2.அதற்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துச் சேர்த்து
3.விஷத்தினை வென்றிடும் வலுவைக் கூட்டும் போது கலியை மாற்றிக் கல்கியாகக் கொண்டு வந்தனர்.

இப்படி அந்த ஞானிகள் கூட்டிய சாம வேதத்தின்படி அந்த அருள் மணத்தின் உணர்வை நமக்குள் சேர்க்க வேண்டும். கலியாக மாறாமல் கல்கிக்குச் செல்ல வேண்டும்.

உங்கள் தியானத்திற்கு அந்த ஈசனே அருளை அளித்திடுவார்

உங்கள் தியானத்திற்கு அந்த ஈசனே அருளை அளித்திடுவார்

 

நாம் தியானிக்கும் பொழுது நாம் எண்ணும் மகரிஷிகளின் நிலையிலிருந்து “மகரிஷிகள் மட்டுமல்ல…” தியானிக்கும் நிலையில் உள்ள எல்லோருக்குமே நாம் ஒருவரை எண்ணித் தியானிக்கும் பொழுது அவர்கள் நமக்காக எண்ணித் தியானிக்க முடியுமப்பா…!

தியான வழியின் ஆரம்ப நிலையில் இருக்கும் பொழுது நமக்கு ஒரு குரு வேண்டுமல்லவா…!
1.அந்தக் குருவின் சக்தியை நாம் எங்கிருந்து தியானம் செய்தாலும்
2.அவரின் அருளாசியை ஒவ்வொருவரும் பெற முடியும்.

வீட்டிலிருக்கும் பொழுது நமக்கு விக்கல் எடுத்தால் யாரோ நம்மை நினைக்கின்றார்கள் என்று எண்ணுகின்றோம். எண்ணுபவர்கள் நினைத்திட்டால் இருவரும் ஒரே நிலையில் எண்ணும் பொழுது அந்த விக்கல் நின்று விடுகின்றது என்றும் சொல்கிறோம்.

அதே போலத்தான் தியான நிலையிலும்
1.நாம் தியானிக்கும் பொழுது
2.நாம் குருவாக ஏற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த நிலை தெரிந்து
3.நாம் செய்யும் தியானத்திற்கு அவரின் அருளாசியைப் பெறுகின்றோம்.

“ஓ…ம் ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா…! என்று ஒரே நிலையில் சுவாச நிலையை எடுத்துத் தியானிக்கும் பொழுது பல நல்ல நறுமணங்கள் கிடைக்கும்.

உங்கள் தியானத்திற்கு அந்த ஈசனே அருளை அளித்திடுவார். அந்த நல்ல மணங்களை எடுத்து எடுத்துத் தான் நம் உயிரான்மாவிற்கு ஊட்டத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

தியானத்தின் பொருளை உணர்ந்து மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்…!

கலி எது..! கல்கி எது…?

கலி எது..! கல்கி எது…?

 

வீட்டிற்குள் பாம்பு வந்து விடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஐயோ பாம்பு வந்து விட்டதே…! கடித்து விடுமே… கடித்து விடுமே… சொல்லிக் கொண்டு இந்த உணர்வு அதிகமானால் பாம்பின் நினைவே வருகிறது.

“கலி” என்ற இந்த உணர்வுகள் அதிகமானபின் அதன் உணர்வை எடுத்து மனிதனாக இருக்கும் நாம் அந்த உடலுக்குள் சென்று விடுகிறோம். பாம்பின் ஈர்ப்பிற்குள் சென்று அடுத்துப் பாம்பாகத் தான் பிறக்க நேரும்.

ஒரு மாட்டினை வளர்க்கின்றோம். மனிதனுடைய உணர்வைக் கூர்மையாகப் பார்க்கின்றது. அது தனக்குள் இதை எடுத்துக் கொண்டால் கலி தான்.

மனிதனுடைய உணர்வை எடுத்து வளர்த்துக் கொண்டபின் நம்மை ஏங்கியே அந்த மாடு இறக்கப்படும் பொழுது யார் மேல் பிரியமாக இருந்ததோ இறந்த பின்… வளர்த்த அந்த உடலுக்குள் செல்ல நேர்கிறது.

எனேன்றால் வளர்த்த ஆர்வத்தில் “நான் செல்லமாக வளர்த்தேனே… நான் சொன்னபடி எல்லாம் கேட்டதே…!” என்ற மனிதனின் உணர்வு வரும் போது அதனின் அறிவாக மாறுகின்றது. மாடு இறந்த பின் நம் உடலுக்குள் வந்துவிடுகின்றது. அது மாட்டிற்குப் பரிணாம வளர்ச்சி.

நாயோ கோழியோ ஆட்டையோ வீட்டில் நாம் செல்லப் பிராணிகளாக வளர்த்தாலும் மனிதனின் உணர்வு அதற்குள் வளரப்படும் பொழுது இறந்தால் மனிதனுக்குள் வருகின்றது. இதுவும் கலி தான். ஆனாலும் அவைகள் எல்லாம் பரிணாம வளர்ச்சி அடைகிறது.

உதாரணமாக… மனிதனாக இருக்கும் நாம் ஒரு நோயாளியைப் பார்க்கிறோம் என்றால் அந்த உணர்வை இரக்கத்துடன் நுகர்ந்தால் நமக்குள் அதே நோய் வரத் தொடங்குகிறது. நாம் தேய் பிறையாகின்றோம். இதுவும் கலியாகத் தான் ஆகிறது.

ஆனால் அந்த நேரத்தில்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டுமென்று துவாரகா யுகத்தில் சேர்க்கப்படும் பொழுது
2.நாம் எந்த நல்ல குணத்தால் நோயாளியை உற்றுப் பார்தோமோ அவரின் வேதனை நமக்குள் சேராதபடி
3.அவரைப் பற்றித் தெரிந்து கொண்டபின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்
4.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது
5.எந்தக் குணத்தின் மணத்தை உருவாக்கி அந்த எண்ணங்கள் வந்ததோ
6.அதில் அந்த அருள் ஞானத்தின் உணர்வினைச் செலுத்தப்படும் பொழுது இது “கல்கி” ஆக மாறுகிறது.
7.இருளை நீக்கும் அணுவின் தன்மையாக ஒளியாகின்றது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்

ஏனென்றால் திரேதாயுகம் (உடல்) என்று இருந்தாலும் துவாரகா யுகத்தில் “வேதனை” நமக்குள் வலுவானால் கலியாக மாற்றி நல்ல உடலின் ரூபத்தையே மாற்றி விடுகின்றது.

1.ஆனால் அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தோமென்றால் கல்கி ஆகின்றது
2.உயிர் கல்கி… நாம் நுகரும் உணர்வுகள் ஒவ்வொன்றையும் உயிரைப் போன்றே ஒளியாக மாற்றிக் கொண்டு வருதல் வேண்டும்.

மனிதன் கனியாக ஆன… துருவ நட்சத்திரமான அந்தக் கல்கியை நாம் பெற வேண்டும் என்று தான் இதை மீண்டும் மீண்டும் உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டு வருவது (ஞானகுரு).

சிறு சிறு திரைகள் நமக்குள் ஒவ்வொன்றிலும் உண்டு. நல்லதை மறைக்கும் அந்தத் திரைகளை நீக்கித் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நாம் கனியாக்குதல் வேண்டும்.
1.ஒவ்வொரு நாளும் இந்த உணர்வின் தன்மையை நாம் கூட்டிக் கொண்டே வர வேண்டும்.
2.நாம் நுகரும் ஒவ்வொரு உணர்வையும் ஒளியாக மாற்றிக் கொண்டு வரவேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொன்றிலும் நாம் இணைத்தால் தான் கல்கி. அதைச் சேர்க்கவில்லை என்றால் கலி தான்.

நீ என்னிடம் நம்பி வேண்டும் பொழுது… உன்னுடன் நான் (ஈஸ்வரபட்டர்) வருவேன்

நீ என்னிடம் நம்பி வேண்டும் பொழுது… உன்னுடன் நான் (ஈஸ்வரபட்டர்) வருவேன்

 

நம்பிக்கையிலிருந்து பெறுவது தான் ஜெப அருள்…! எப்படி…?

உன் எண்ணத்தில் உன் செயலில் ஒன்றை நினைத்து ஆண்டவனை எண்ணுகிறாய்.

ஞானிகள் கொடுத்த உருவ அமைப்பில் முருகன் விநாயகர் சரஸ்வதி இலட்சுமி வெங்கடாஜலபதி பராசக்தி என்று இப்படிப் பல நாமங்கள் உடைய ஆண்டவனை எண்ணும் பொழுது நம்பிக்கையின் மூலமாக ஜெப அருளைப் பெற்ற ஞானிகளூம் மகரிஷிகளும் நீ வணங்கும் நிலையில் உன் எண்ணத்தை அறிகின்றார்கள்.

அந்த நிலையில் அவர்கள்
1.உன் சொல்லுக்கு அவர்களாகவே பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்திப்
2.பல நிலைகளை உண்டு பண்ணி
3.உன் எண்ணத்திற்கு உன் செயலுக்கு வெற்றியை அளிக்கின்றார்கள்.

சூட்சம உலகில் இருந்து கொண்டே நடக்கும் செயல்கள் தான் இவை எல்லாம். அந்த நிலையில் அவர்களின் பரிபூரண அருளை நீ பெறுகின்றாய்.

ஒரு செயலைச் செய்யும் பொழுதும் வெளியில் எங்காவது செல்லும் பொழுதும் “ஈஸ்வரா…!: என்று உன் உயிரை நினைத்து வணங்கிச் செல். தடைகளையும் வரும் வினையையும் அவர் பார்த்து உனக்கு நல்வழி புகட்டிடுவார்.

நம்பிக்கையுடன் செல்லும் எந்த நிலையும் தோல்வி அடைவதில்லை…!

ஞானிகளாகவோ மகரிஷிகளாகவோ ஆவது எதற்காக…? என்று எண்ணுகிறார்கள் புரியாத பாமரர்கள். எண்ணத்திற்கு செயலுக்கும் இந்த உலக வாழ்க்கையில் இருந்து கொண்டு இவர்களை நல் வழி நடத்திடத்தான்
1.அந்த மகரிஷிகள் பல ஜெப வழிகளைப் பெற்று சூட்சம உலகில் இருந்து கொண்டே
2.நம்பிக்கை வைத்தவனுக்கு நடுக் கடலுமில்லை…! என்னும் வெற்றியை அளிக்கின்றார்கள்.

நடுக்கடல் எனும் பொழுது நடுக்கடலிலிருந்து மீள்வதற்கும் அவர்கள் அவர்களை எண்ணும் பொழுது மீட்கிறார்கள் ஆண்டவனின் ரூபத்தில்…! நம்பிக்கையின் எண்ணம் புரிந்ததா…?

ஆகவே இனிமேல் நீ ஒரு இடத்திற்குச் செல்லும் பொழுது எந்தக் காரணத்தைக் கொண்டும் மனக் கலக்கப்படாமல் பூஜை அறையில் வந்து நீயே நில்.
1.அந்த நிலையில் நீ என்னிடம் வணங்கி வேண்டும் பொழுது
2.நம்பி வேண்டும் பொழுது உன்னுடன் நான் (ஈஸ்வரபட்டர்) வருவேன்…!