சுக்ரீவனும்… அவனுடைய மந்திரியான ஆஞ்சநேயனும்…

சுக்ரீவனும்… அவனுடைய மந்திரியான ஆஞ்சநேயனும்…

 

இராமனின் பக்தன் ஆஞ்சநேயன்…! தீமையை நீக்கியவன் சீதாராமன்…! சந்தோஷப்படும் உணர்வின் தன்மையைச் சுக்ரீவன்…! என்று காவியங்கள் கூறுகிறது. ஆனால் இவ்வாறு காரணப் பெயர்களாக வைத்ததை நாம் புரிந்து விடக்கூடாது என்பதற்காகத் திரித்து விட்டார்கள்… மாற்றி விட்டார்கள்.

ஒரு நோயாளியிடம் இருந்து வேதனையான உணர்வுகள் வெளி வரும் பொழுது அது வாலி. அதனுடைய வலிமை மற்றவர்களையும் வேதனைப்படச் செய்யும்.

ஆனால் சீதாராமன் என்ற நிலையில்
1.அவர் உடல் நலமாக வேண்டும் என்ற எண்ணத்தை எடுத்து
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து உயிரிலே சேர்க்கப்படும் பொழுது “அஞ்சனை…”

அதாவது… தீமையை நீக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் (சுக்ரீவன்) உணர்வை எடுத்து நமக்குள் விளைய வைத்து அதைச் சொல்லாகச் சொல்லப்படும் பொழுது
1.அந்தச் சொல் அடுத்தவர் (துன்பப்படுவோர்) செவிகளில் படுகின்றது
2.உணர்ச்சியைத் தூண்டும் பொழுது அவரின் கண்கள் நாம் சொன்ன சொல்லைக் கவர்கின்றது.
3.உற்று நோக்கிப் பதிவாக்கப்படும் போது அவர் உயிருக்குள் சேருகின்றது.
4.உயிரில் பட்டபின் வாயுவாக மாறுகின்றது.
5.அது இரத்தங்களில் கலந்தபின் உடல் முழுவதும் பரவி உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
6.இராமனின் பக்தன் ஆஞ்சநேயன் வாயு புத்திரன்… அவன் சுக்ரீவனின் மந்திரி
7.துருவ நட்சத்திரம் எதைச் செய்யுமோ அந்த உடலுக்குள் அதைச் செய்யும்…! என்று தெளிவாகக் காட்டுகிறார்கள்.

இராமாயணத்தில் உணர்வின் மனம் எதுவோ அதற்குத் தக்க எண்ணங்கள் எப்படி வருகின்றது…? என்று இப்படித் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

நாராயணன் திரேதாயுகத்தில் சீதாராமனாகத் தோன்றுகின்றான் என்று சொல்கிற பொழுது மனிதன் தன்னையும் பாதுகாத்துக் கொள்கின்றான்.
1.அவனால் முடியாமல் இருக்கும் பொழுது உணர்ச்சியைத் தூண்டி அவன் உயிரிலே மோதச் செய்கின்றான்
2.இந்த உணர்ச்சிகள் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதும் பரப்பப்படும் போது வேதனையை நீக்கிச் சிந்திக்கும் தன்மை வருகின்றது.
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உடலுக்குள் புகும் போது கலியை மாற்றிக் கல்கியாக மாறுகின்றது.

உயிரைப் போன்ற உணர்வின் தன்மையைச் சிறுகச் சிறுக எண்ணப்படும் போது அந்த உடலில் ஒளியின் உணர்வாக மாறுகிறது. உயிரின் நிலைகளில் இது ஏற்படும் பொழுது “முழுமையான கனியாக மாறி…” அதனின் இனத்தின் வித்தை உருவாக்கிக் கல்கி… கடைசி நிலை.

மனிதனான பின் தான் ஒளியின் உணர்வாக உருவாக்கும் தன்மை பெறுகின்றான்.

கஷ்டமோ நஷ்டமோ மற்ற உணர்வின் தன்மை வலிமையாக்கப்படும் போது அது வாலியாகி விடுகிறது.

அதை மாற்ற… கொடுத்த சக்தியைச் சீராகப் பயன்படுத்தி நன்மை செய்யக் கூடிய சக்தியாக மாற்றிக் கொள்ள வேண்டும். ஆகவே ஒவ்வொரு நொடியிலும் ஆத்ம சுத்தி செய்ய மறந்து விடாதீர்கள்…!


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply