உங்கள் கரு விழிக்குள் யாம் பதிவாக்கும் உயர்ந்த சக்தி

உங்கள் கரு விழிக்குள் யாம் பதிவாக்கும் உயர்ந்த சக்தி

 

“நீங்கள் மெய் வழி செல்ல வேண்டும்…” என்ற உணர்வின் நிலைகளைச் செலுத்துகின்றீர்கள்.
1.இதற்கு உங்களைப் பிரார்த்திக்கக்கூடிய குரு வேண்டும்.
2.அப்படிப் பிரார்த்திக்கக்கூடிய குருவினுடைய தன்மை பெற்றால் தான் உங்கள் உணர்வின் தன்மை வலு கூடும்.

நாம் அனைவருமே T.V. RADIO மூலமாக அனைத்தையும் பார்த்து… கேட்டு அறிகின்றோம். இதைப் போன்று விஞ்ஞான அறிவு கொண்டு செயற்கைக்கோள் எங்கேயோ விண்ணிலே பரவக்கூடிய அந்த உணர்வின் அலைகளை எடுத்துப் படங்களை அனுப்புகின்றது.

அந்தப் படங்களை எடுத்துக் கொள்வதற்காக வேண்டி கம்ப்யூடர் சிஸ்டம் என்று வைத்துள்ளார்கள். ஒன்றுக்குள் ஒன்று இணையச் செய்து
1.அது விண்ணிலே எத்தனையோ கோடி மைல்களுக்கு அந்தப் பக்கம் பறந்து கொண்டிருந்தாலும்
2.அது அங்கிருக்கும் உணர்வலைகளைப் படமெடுத்துத் தரையிலிருக்கும் ஆண்டெனாக்களிலே இயக்கப்படுகின்றது.
3.கம்ப்யூடர் அந்த நிலையை இழுத்துப் பதிவு செய்து விடுகின்றது.

இதைப் போன்று
1.உங்கள் உடலின் தன்மை அனைத்துமே “இயந்திரம்…!” நம் கண்ணின் புலனறிவு “ஆண்டெனா…!”
2.அந்தப் பவரின் சக்தி கொண்டு (மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று) தியானிக்கப்படும் போது
3.நம் உடலுக்குள் எத்தனை உணர்வுகள் இருந்தாலும் கண்ணுக்குள் தொடர்பு உண்டு.

நாம் எந்தெந்த நிலைகளில் நினைவைச் செலுத்துகின்றோமோ அந்த உணர்வின் தன்மை ஆற்றல்மிக்க நிலைகள் கொண்டு கண்ணுக்குள் இருக்கக்கூடிய கரு விழிக்குள் அது தொடர்பு கொள்கின்றது.

அவ்வாறு அது தொடர்பு கொள்ளும் பொழுது நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி
1.உங்கள் கண்ணுக்குள் இருக்கக்கூடிய அந்தக் கரு விழிகளிலே
2.மெய் ஞானிகளின் அருளாற்றல்களை நீங்கள் பெற வேண்டும் என்ற உணர்வை உந்தச் செய்து அங்கே பதிவு செய்கின்றோம்.

அதாவது கண்ணாலே பார்ப்பதும் அந்தப் பார்வையின் நிலைகள் கொண்டு உணர்வின் ஆற்றலைப் பெருக்கச் செய்யும் நிலையாக இது அமைகிறது.

குருநாதர் எமக்கு எவ்வாறு காட்டினாரோ அந்த உணர்வின் நிலைகள் கொண்டே
1.உங்கள் கருவிழிக்குள் அந்த உணர்வின் திரை ஈர்ப்பின் சக்தியைப் பெறச் செய்யும் போது
2.நீங்கள் இரவிலே படுத்துக் கொண்டிருக்கும்போது இது பதிவு ஆகின்றது.

இவ்வாறு நீங்கள் பழக்கப்படுத்திக் கொண்ட பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று இரவிலே ஆத்ம சுத்தி செய்து விட்டு நீங்கள் படுக்கும் போது “இந்த உணர்வலையின் ஓட்டங்கள்…” இருந்து கொண்டிருக்கும். அப்பொழுது
1.சப்தரிஷி மண்டலங்களில் இருந்தும் துருவ நட்சத்திரத்தில் இருந்தும் வரக்கூடிய அலைகளை
2.அது தன்னிச்சையாகவே அந்த உணர்வுகளைக் கவர்ந்து இழுத்துவிடும்.
3.இரவு முழுவதுமே தியானமாக அது அமைந்து விடும்.

கண் கருவிழிக்குள் இருக்கும் லென்ஸ் பற்றிய பேருண்மை

கண் கருவிழிக்குள் இருக்கும் லென்ஸ் பற்றிய பேருண்மை

 

உதாரணமாக… ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டான் என்றால் அதிலே பொருள் அறிதல் வேண்டும்.

காரணம்… பாசத்தால் அவருடைய துயரைக் கேட்டறிந்தோம். கேட்டறிந்த உணர்வுகள் அந்த நோயின் வலிமை நம் நல்ல குணத்தைச் செயலற்றதாக மாற்றி உடலுக்குள் அதே பலவீனமான நிலைகள் வருகிறது என்று இந்தப் பொருளை நாம் அறிதல் வேண்டும்.

தெய்வம் நல்லதைச் செய்யும் என்று ஆலயத்தில் வரப்படும் பொழுது
1.அந்தத் தெய்வ குணத்தைக் காட்டுவதற்காகத் தீப ஆராதனை காட்டப்படுகின்றது.
2.அவ்வாறு காட்டப்படும் பொழுது தெய்வமும் தெரிகின்றது.
3.தெய்வத்திற்குக் கனி வைத்திருப்பதும் மலர் மாலைகளைச் சூட்டியிருப்பதும் தெரிய வருகின்றது.
4.தெய்வத்தின் மேல் வைர கிரீடம் வைத்திருப்பதும் தெரிகின்றது.

ஆக… பொருளை அறியக்கூடிய தன்மை அந்த வெளிச்சத்தினால் வருகின்றது.

1.நாம் சந்தோஷமாக இருக்கும் பொழுது அங்கிருக்கும் நல்ல நறுமணங்களும் நல்ல மணங்களும் பார்க்க அல்லது நுகர முடிகின்றது.
2.ஆனால் வேதனை என்று வந்துவிட்டால் குடும்பத்தில் ஒரு நல்ல பொருளைப் பார்த்துச் சந்தோஷப்படுகின்றோமா…?
3.நல்ல குணம் கொண்ட நம் பையனைப் பார்த்தால் சந்தோஷம் வருகின்றதா…? இல்லை…!

நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை எதுவோ கண் வழி தான் பாய்ச்சுகின்றோம். கண் வழி பாய்ச்சப்படும் பொழுது ஒரு கண்ணாடியில் எந்தக் கலரின் தன்மை போடுகின்றோமோ அதன் வழி தான் முன்னாடி இருக்கக்கூடிய பொருள் தெரிய வரும்.

எக்குகுணத்தை எண்ணி எடுக்கின்றோமோ
1.நம் கருவிழிக்குள் கண்ணாடி என்ற ஒரு பொருள் உண்டு.
2.அந்தந்த உணர்வுக்கொப்பக் கலர்கள் மாறும்… இந்த உணர்ச்சிகள் மாறும்.
3.அதைப் போன்று தான் நாம் அறிந்திடும் தன்மை வருகின்றது… இயற்கையின் நியதிகள் இது.

அதாவது எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அதற்குத் தக்க தான் எண்ணங்கள் வருகின்றது.

கோவிலில் தீபாராதனை கொடுக்கப்படும் பொழுது…
1.வீட்டில் நம் பையன் இப்படிச் செய்கின்றானே என்று வேதனைகளை எண்ணினால்
2.இந்த இருள் சூழ்ந்த நிலையே கண் பார்வையில் தெரிய வரும்.

அங்கிருக்கும் பொருளைக் காண முடியுமா…? நல்லதைச் சொன்னால் கேட்க முடியுமா…? என்றால் முடியாது. அந்த விஷத்தின் தன்மை கரு விழியிலே படப்படும் பொழுது அழுகையும் வேதனையும் வருகின்றது.

நான் தெய்வத்தை வழிபட்டேனே… எல்லோருக்கும் நன்மை செய்தேனே எனக்கு ஏன் இந்தத் தொல்லைகள் வருகின்றது…? என்ற இந்த உணர்வு தான் வரும்.

இந்த உணர்வை ஏற்றுக் கொண்ட பின் கருவிழியின் தன்மைகள் அந்தச் சிலையின் ரூபத்தையோ அங்கே அலங்காரமாகப் போடப்பட்டுள்ள மலர்களையோ ஆபரணங்களையோ வைரக்கல்களையோ ரசிக்காது… ரசிக்க விடாது. வேதனை என்ற உணர்வே மீண்டும் வரும்.

1.இருளில் நாம் பார்த்தால் பொருளின் ரூபத்தைக் காண முடியாது…
2.ஒளி கொண்டு தான் பார்க்க முடியும்.

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

ஆலயப் பண்புகளாக அங்கே வெளிச்சத்தைத் தான் காட்டுகின்றனர். அதனால் பொருட்கள் தெரிகின்றது… அப்பொழுது
1.பொருளறிந்து செயல்படும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை நாம் ஏங்கிப் பெறுதல் வேண்டும்.
2.நாம் சுவாசித்த உணர்வு கண்ணில் இந்த உணர்ச்சிகள் படப்படும் பொழுது இந்த வெளிச்சத்தின் உணர்வு நமக்குள் வருகின்றது.
3.அப்பொழுது தெளிந்த மனம் வருகின்றது.

அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்….?

இந்த ஆலயம் வருபவர்கள் எல்லாம் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும். என் குடும்பத்தில் உள்ள அனைவரும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று இப்படி நாம் எண்ண வேண்டும்.

தன்னைத் தான் அறிதல் – இராமாயணத்தில் உள்ள மூலம்

தன்னைத் தான் அறிதல் – இராமாயணத்தில் உள்ள மூலம்

 

தசரதனின் கருவிற்குள்…
1.எத்தனையோ உடல்கள் இருப்பினும் பல கோடித் தீமைகளை வென்றிடும் உணர்வுகள் பெற்று
2.அந்த மனைவி என்ற நிலை வரும் போது அதற்குப் பிறந்தவன் தான் இராமன்.

அதே சமயத்தில் உறுதுணையாக இருந்து தன்னைக் காத்திடும் தன்மை தான் லட்சுமணன். ஒரு தாய்க்கு (சுமித்ரை) இரண்டு குழந்தைகள் பிறக்கின்றது.

முதலில் தசரதன் விஷ்ணுவை நோக்கித் தவம் இருந்தான். தூதுவனை அனுப்பிப் பாயாசத்தைக் கொடுத்தான். முதல் நிலையை இராமனின் தாயாருக்குக் கொடுத்தார். இரண்டாவது பரதனின் தாயாருக்கு கொடுத்த்து. மூன்றாவது லட்சுமணனின் தாயாருக்கு கொடுத்தது… தொக்கியுள்ள மிச்சத்தை மூன்றாவது மனைவிக்கே கொடுக்கின்றான்… சத்துருக்கன்.

இங்கே லட்சுமணன்…! லட்சுமணன் என்றால் என்ன…? சூரியன் தன்னுடைய பாதரசத்தால் தாக்கப்படும் பொழுது அதிலே விஷங்கள் பிரிகின்றது… வெப்பமாகின்றது… காந்தமாகின்றது.

காந்தமானாலும்
1.விஷம் பிரிந்து செல்வதை இந்தக் காந்தம் இழுத்துக் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.
2.அது தான் லட்சுமணா என்று காரணப் பெயரை வைக்கின்றார்கள்.

ஆக எதனின் உணர்வின் தன்மை கவர்ந்து கொள்கின்றதோ சத்துருக்களை… சகோதரன் என்ற நிலை வரப்படும் பொழுது
1.சத்துருக்கன் தீமைகள் வராதபடி பரதனுக்கும்…
2.லட்சுமணன் இராமனுக்கு உதவியாக இருப்பதாகவும் காட்டுகிறார்கள்.

ஏனென்றால் விஷம் இயக்கச் சக்தி அது தான் லட்சுமணா. காந்தம் கவர்ந்து கொண்டால்…
1.எந்தக் குணத்தின் தன்மை கொண்டு கவர்ந்து கொண்டதோ அதனின் இயக்கச் சக்தி
2ஆக… காந்தம் கவர்ந்து வெப்பத்துடன் எது சேர்ந்ததோ அதனுடன் சேர்த்து உருவாக்கும் சக்தி என்ற நிலைகளை
3.இப்படித் தனித்தன்மையாகப் பிரித்துக் கொண்டு வருகின்றார்கள்.

விஷ்ணுவை நோக்கித் தவம் என்று வரும் பொழுது உயிர் விஷ்ணுவாகின்றது. அவன் தவத்தின் தன்மை கொண்டு புத்திர பாக்கியம் வேண்டும் என்று எண்ணினான். அதன் உணர்வின் தன்மை கொண்டு தன் உடலில் பல நிலைகள் ஆகின்றது.

சூரியனோ தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு தனக்குள் பாதரசமாக மாற்றுகின்றது. மனிதன் புழுவில் இருந்து மிருகம் வரையிலும் அதனதன் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப அதன் கருத்தன்மை “விந்து தன்மை…” அடைகின்றது.

அந்த விந்தின் தன்மை அடைந்த பின் தான் ஒரு பூச்சியைக் கொன்று தின்றாலும்… அதன் உணர்வின் தன்மை கருவாக்கப்பட்டு அணுத் தன்மை கருவாக மாறுகின்றது. இதைப் போலத் தான் மனிதனின் நிலை.

நன்றாகச் சிந்தனை செய்து பாருங்கள். மெய் ஞானிகள் காட்டிய பேருண்மைகள் இராமாயணத்தில் உள்ளது இன்று அது திசை திரும்பி விட்டது அதைத்தான் நாம் இன்று பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

இராமனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்று எல்லோரும் ஆயத்தமாக இருக்கின்றார்கள். பரதனின் தாயாரும் அதிலே சேர்ந்திருக்கின்றது. இருந்தாலும் பரதன் இராமனுடன் சேர்ந்து வாழ்ந்தவன். நாம் ஏதாவது சொன்னால் அவனுடன் சேர்ந்து விடுவான்… நம்மிடம் மறுத்துப் பேசிவிடுவான் கைகேயி எண்ணுகிறது.

1.இராமனின் தாயார் எல்லோரையும் அரவணைத்தது.
2.பரதனின் தாயார் போரில் ஜெயிக்கும் உணர்வு பெற்றது… தன் சுயநலத்தைக் கொண்டது.
3.ஆனால் இராமனின் தாயாரோ பொது நலத்தைக் கொண்டது என்ற நிலையை பிரித்துக் காட்டுகின்றார்கள்.

அப்பொழுது அதனுடன் வாழும் குழந்தைகள் எல்லாம் இணைந்து வாழும் சக்தியாக வருகின்றது.

காவியத்தில் உள்ள மூலங்களை அவ்வப்போது உங்களுக்குப் பிரித்துக் காட்டுகின்றோம்.

தசரதன் இறந்தாலும்… கைகேயி மலர்ந்த முகத்துடன் இருப்பதாகக் காட்டியதன் உட்பொருள்

தசரதன் இறந்தாலும்… கைகேயி மலர்ந்த முகத்துடன் இருப்பதாகக் காட்டியதன் உட்பொருள்

 

இன்றைய உலக சூழ்நிலையில் நம்முடைய ஆசையின் நிமித்தம் எதன் வழி செல்கின்றமோ அதனால் வேதனை என்ற உணர்வுகளே வருகின்றது. அதாவது
1.பிறரைத் துன்புறுத்த வேண்டும் அழிக்க வேண்டும் அடக்க வேண்டும் என்று இந்த வாழ்க்கையில் விரும்பினால்
2.நமக்குள் வளர்ந்துள்ள நல்ல குணங்களைக் கொல்கிறோம் என்று தான் பொருள்.

அப்படிப்பட்ட உணர்வுகள் உடலில் விளைந்தால் என்ன ஆகும்…? என்பதைத் தான் இராமாயணம் தெளிவாகக் காட்டுகின்றது.

இராமனுக்குப் பட்டம் சூட்டாமல் அவனைக் காட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று நிலை வரும் பொழுது அதனால் தசரதன் இறந்து விடுகின்றான்.

பரதன் அங்கிருந்து வருகின்றான். அப்பொழுது நகரமே சூனியமாக இருக்கின்றது. யாரிடத்தில் கேட்டாலும் எல்லோருமே மௌனமாக இருக்கின்றார்கள். என்ன நடந்தது… ஏது ஆனது…? என்ற நிலையில் பரதன் உண்மையை அறிய முடியவில்லை.

இராமனின் தாயிடம் கேட்கின்றான். அதுவும் மௌனமாக இருக்கின்றது. கேட்கும் இடமெல்லாம் மௌனமாக இருக்கின்றது. கடைசியில் தன் தாயிடமே கேட்கின்றான்.

ஒன்றுமில்லையப்பா…! என்று சொல்கிறது.
1.அது மலர்ந்த முகத்துடன் இருக்கின்றது… அரசன் இறந்து விட்டான் என்ற நிலையே அங்கில்லை.
2.காரணம் ராமன் காட்டுக்குச் சென்று விட்டான் தன் மகனுக்குப் பட்டம் சூட்டும் நேரம் வந்து விட்டது வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றது.

தசரதன் தன் உடலுக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை… அதாவது எதிரியை வீழ்த்தச் சூட்சமமான நிலைகள் கொண்டு எப்படிச் செய்தானோ… அது கூனி என்ற நிலையில் இங்கே வருகிறது.

1.”குறுகும் நிலை” உடலுக்குள் வளர்கிறது என்று கூனி என்ற ஒரு பாத்திரத்தை அமைத்து
2.அது கைகேயியைத் தூண்டி தசரதரிடம் இப்படிக் கேளு…! என்று
3.எதிரியை வீழ்த்திய உணர்வுகள் தனக்குள் கலந்து எப்படிச் செய்கிறது…? என்பதைத் தான் கூனி என்ற பாத்திரத்தைக் கொடுத்து
4.தன் இனத்தைக் குறுக்கி இவளுடைய ஆசையைத்தான் தனக்குள் பெருக்குகின்றது என்று
5.உப பாத்திரங்களைப் போட்டு இவ்வளவு தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.

அதை நாம் கொஞ்சமாவது புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா…!

ஆனால் நாம் என்ன நினைக்கிறோம்…? அங்கே பார்…! கூனி என்னென்ன வேலை எல்லாம் செய்கிறாள்…? என்று அந்தக் கதாபாத்திரத்தை சுட்டிக் காட்டி அவள் எவ்வளவு தவறு செய்கின்றாள்…? என்று நாம் “கடுப்பாவோம்…”

ஏனென்றால் இந்த உணர்வைத் தெளிவாக்கிக் கொண்டு வரும் நிலையில் பரதன் சொல்கின்றான்.
1.”உன் தாயார்” (கூனி) என் பாட்டன் வீட்டையே இப்படித்தான் நாசமாக்கியது.
2.அதே போல என் தந்தையின் குடும்பத்தையும் நீ கெடுக்க வந்திருக்கின்றாய்…
3.இன்று உன்னைக் கொன்றால் தான் என்ன…? என்று இவன் ஆத்திரமான நிலைகள் வருகின்றது.

காரணம்… பரதன் கைகேயியின் மகனாக இருந்தாலும் பழகிய உணர்வு கொண்டபின் அவன் என்ன செய்கிறான்…? என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள். எந்த உணர்வை எடுத்ததோ… “அதிலே உருவானது தான்…” இந்த நிலை. அதிலே உருவாக்கப்படும் போது அதனின் இயல்பு என்று காட்டுகிறார்கள்.

அதாவது விஞ்ஞானத்தினால் விஷத் தன்மைகளை மாற்றி அதை நல்ல வித்துக்களாக இன்று மாற்றுகின்றார்கள். வீரிய உணர்வுகள் அது விஷத்தன்மை கொண்டாலும் நல்ல உணர்வின் தன்மையைச் சேர்த்து அந்த வீரியத்தின் தன்மை கொண்டு நல்ல வித்தாக உருவாக்குகின்றார்கள்.

அதே மாதிரி
1.சாந்தமான நிலைகள் கொண்டதை விஷமான கொடூரமான மிருகத்தின் உணவுக்குள் சேர்த்து
2.நல்ல உணர்வின் தன்மை கொண்ட உடல் அமைப்பாக மாற்றுகின்றார்கள்.
3.கொடூரமான மிருகங்களைச் சாந்தம் கொண்ட மிருகமாகவே மாற்றுகின்றான் இன்று விஞ்ஞானி

இதைப் போலத்தான் அந்த இராமாயணத்தின் காவியத்தின் தெளிவுகள்… அதாவது…
1.போரில் வெற்றி பெற வேண்டும் என்று தசரதன் உடலில் அணுவின் தன்மையாக அது விளைந்தாலும்
2.நல்ல அணுக்களின் தன்மை கலந்து பரதன் அதன் உணர்வு கொண்டு ஒன்று சேர்த்து வாழும் தன்மை பெற்றான் என்று பிரித்துக் காட்டுகிறார்கள்

ஆனால் வீழ்த்த வேண்டும் என்ற உணர்வின் தன்மை வரப்படும் பொழுது விஷத்தின் தன்மை கொண்டது.
1.பரதனின் தாயின் பாட்டி தான் அந்தக் குடும்பத்தினை நாசம் ஆக்கியது.
2.ஏனென்றால் இது பரம்பரை நோய் என்ற நிலையைக் கொண்டு வருகின்றார்கள்.

நாம் எதை எண்ணுகின்றோமோ இந்த உணர்வின் தன்மை நமக்குள் எப்படி இயங்குகின்றது…? என்பதைத்தான் இராமாயணம் கூறுகின்றது.

அந்தத் தாயின் நிலைகள் எப்படி…? என்கிற போது நாம் எதன் உணர்வை எடுத்தோமோ அது தாயாக வருகின்றது. இந்த உணர்வின் தன்மை தன் இனத்தைப் பெருக்கப்படும் பொழுது உடலுடன் இணைத்து வரப்படும் பொழுது தீமையாக எப்படி விளைவிக்கின்றது…?

ஆகவே நாம் எதை நீக்க வேண்டும்…? என்பதை இராமாயணம் சுட்டிக் காட்டுகிறது. இராமாயணம் என்றாலே – நம் எண்ணம் தான். நாம் நுகர்ந்த உணர்ச்சிகள் கொண்டு… அந்த உணர்ச்சிகள் எதுவோ அது நம்மை இயக்குகின்றது என்று காட்டுகிறது.

வேனையான உணர்வைச் சூரியன் எடுத்துக் கொண்டால் வாலி. ஆனால் மனிதனான நிலையில் இப்படிப்பட்ட இருளான நிலைகளை நீக்கியவன் அகஸ்தியன் உணர்வை ஒளியாக்கியவன் சுக்ரீவன்.

வேதனைப்படும் அல்லது வேதனைப்படுத்தும் உணர்வுகளை நுகர்ந்தால் நம்மைப் பலவீனப்படுத்தும்.
1.அதை மாற்றத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இணைத்தால்
2.வேதனை என்ற வலுவின் தன்மை குறைந்து அது நன்மை செய்யும் சக்தியாக மாறுகின்றது.
3.அது தான் சுக்ரீவன் – எல்லோருக்கும் நன்மை செய்பவன் என்று காவியங்கள் கூறுகின்றது.

வேதனையான உணர்வுகள் உயிரால் நுகரப்பட்டால் அதனை வென்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கலந்தால் இந்த வீரிய உணர்வு கலக்கப்பட்டு தீமை நீக்கும் உணர்ச்சிகள் நம் ரத்த நாளங்களில் கலக்கின்றது.

1.தீமை உருவாகாதபடி நாம் மாற்றியமைக்கும் சக்தி பெறுகின்றோம்.
2.அப்படிப்பட்ட சக்தி பெற வேண்டும் என்பது தான் காவியத்தின் உட்கருத்து.

குருதேவர் அனுபவபூர்வமாக எமக்கு உணர்த்திய உண்மைகள்

குருதேவர் அனுபவபூர்வமாக எமக்கு உணர்த்திய உண்மைகள்

 

நமது குருநாதர் சொன்னபடி மூன்று இலட்சம் பேரை யாம் சந்திக்க நேர்ந்தது, ஒவ்வொருத்தரையும் சந்திக்கும்போது
1.அவர்களுடைய கஷ்டங்கள் எவ்வாறு இருக்கின்றது…?
2.அவர்களுக்குத் துன்பங்கள் எப்படி நேருகின்றது…?
3.நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணும் போது அவரகளைத் துயரங்கள் எப்படி வந்தடைகின்றது…?
4.அதிலிருந்து அவர் மீள்வதற்கு வழி இல்லாதபடி எப்படி இருக்கின்றனர்…? என்று காட்டுகிறார்.

பக்தி என்ற நல்லொழுக்கத்தை மட்டும் கடைபிடித்து வாழ்ந்தாலும்… நல்லதை எண்ணுகின்றனர்… ஆனால் அந்த நல்லதைக் காக்கும் திறன் இழக்கும் நிலையில் இன்று ஒவ்வொரு மனிதனும் இருக்கின்றனர். நல்லதைக் காக்கும் வலுவான நிலைகள் ஒவ்வொரு மனிதனிடத்திலும் செயலிழந்து இருக்கின்றது.

நல்லதைப் பெற வேண்டுமென்று அரசர்கள் பக்தி ஒன்றை மட்டும் நமக்குக் காட்டிவிட்டு நல்லொழுக்கத்தைக் காக்கும் திறனை அவர்கள் விட்டு விட்டுச் சென்று விட்டார்கள். அதைப் பெற முடியாதபடி தடைப்படுத்திவிட்டார்கள்.

ஏனென்றால்
1.பக்தி என்ற நிலைகளில் மக்கள் நல்லொழுக்கத்தைக் கடைபிடித்தாலும்
2.மெய் ஒளி பெற்று உண்மைகளை அவர்கள் உணர்ந்தால் தனக்குக் கீழ் அடிபணியமாட்டார்கள் என்ற நிலையில்
3.அரசர்கள் தங்கள் சுகபோகங்களுக்காக உலக ரீதியிலேயே ஞானிகள் சொன்ன உண்மைகளை மாற்றினார்கள்.

ஞானிகள் கண்ட பேரண்டத்தின் பேராற்றல்கள் பூமிக்குள் வந்தாலும் சாதாரண மக்கள் நாம் பெற முடியாதபடி எப்படித் தடையானது…? அதிலிருந்து மீண்டு நமது உயிராத்மாவை எப்படி ஒளி நிலை பெறச் செய்ய வேண்டும்…? என்ற நிலையை நமது குருநாதர் அவருடைய உயிராத்மா உடலை விட்டு வெளியே செல்லப் போகும்போது முதல் நிலையாக எனக்குச் சொன்னார்.

அவர் உடலுடன் இருக்கும் போதே பிரணவத்தின் தத்துவத்தை முழுமையாக எம்மைப் பெறச் செய்தார். கன்னியாகுமரி முதல் இமயமலை வரை சென்று வரச் செய்து எனக்குப் பல அனுபவங்களைக் கொடுத்தார்.

நம் பூமி வட துருவத்திலிருந்தும் தென் துருவத்திலிருந்தும் ஆற்றல் மிக்க சக்திகளை எப்படிப் பெறுகின்றது…? என்பதை குருநாதர் உடலுடன் இருக்கப்படும் போது நேரடியாகவே எமக்கு உணர்த்தினார்.

1.அவர் எங்கே செல்கின்றாரோ அவருடன் எம்மை அணைத்துக் கொண்டு ஆங்காங்கு நிறுத்தி
2.இயற்கையின் செயலாக்கங்கள் எப்படி இருக்கிறது…? என்ற நிலையை
3.நாம் எப்படி T.V.க்களில் பார்க்கின்றோமோ அதைப் போன்று எமக்கு உணர்த்தினார்.

சுமார் 12 வருட காலம் பல காடு மேடு அலைந்தேன். உயிரினங்கள் எவ்வாறு செயல்படுகின்றது…? தாவரங்கள் அதனதன் தாவர இனச் சத்தை எப்படி இழுக்கின்றது…? தாவரங்கள் எப்படி வளர்கின்றது…? அந்த வளர்ச்சியின் தன்மை கொண்டு பூமியின் காற்றலைகள் எப்படி மாறுகின்றது…? என்று அவர் உணர்த்தியதை எல்லாம் நானும் உணர்ந்தேன்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் அதை உணர்வதற்கு நேரடி அனுபவத்தைக் கொடுத்தார். அவ்வாறு அனுபவத்தால் பெற்ற உண்மைகளை நீங்களும் பெற முடியும் என்ற நம்பிக்கையில் இதைச் சொல்கிறோம்.
1.எமக்குள் பெற்று வளர்த்த அந்த ஆற்றல் மிக்க சக்திகளை எல்லோரும் பெறுவதற்கே
2.இந்த உபதேசத்தின் மூலமாக உங்களுக்குள் அதைப் பதிவு செய்கின்றோம்.

“என்னுடைய சீடர்கள்…” படிக்க வேண்டிய மிக முக்கியமான உபதேசம்

“என்னுடைய சீடர்கள்…” படிக்க வேண்டிய மிக முக்கியமான உபதேசம்

 

எமது உபதேசங்களைக் (ஒலி நாடாவில்) கேளுங்கள்.. நூல் வடிவில் வந்த புத்தகங்களைப் படியுங்கள். அதனின் விளக்கத்தைச் சொல்லிப் பழகுங்கள்.
1.சாமி இந்த மாதிரிச் சொல்லி இருக்கின்றார்…
2.ஆகவே இந்த மாதிரி நடக்க வேண்டும் என்று வெளிப்படுத்துங்கள்.

காரணம்… எம்முடைய உபதேசங்களைக் கேட்டாலும் வாழ்க்கை நடைமுறைகளில் அதை வெளிப்படுத்தும் போது ஆழமாகப் பதிவாகும்.
1.அப்படிப் பதிவாக்கி விட்டால் தவறு என்று வந்தால்
2.“டக்…” என்று பிரேக் போட்டு… “திருத்தி வாழச் செய்யும் உணர்வுகள்…” நமக்குள் வரும்.

உதாரணமாக… ஒரு இன்ஜின் ஓடிக்கொண்டிருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். கற்றுக் கொண்ட என்ஜினியர்கள் அதில் வரக்கூடிய சப்தத்தை வைத்தே “இன்ன இடத்தில் குறைபாடுகள் இருக்கிறது…” என்று கண்டுபிடிக்கின்றார்கள். அதே போல மெக்கானிக் இதை எல்லாம் செய்கின்றார்.

இந்த இடத்திலே இன்னென்ன உலோகங்கள் இப்படி இப்படிச் செய்தால் இயந்திரத்தில் அந்த இடத்தில் வலுவாக இருக்கும் என்று இஞ்சினியர் சொல்வார்.

1.அவ்வாறு அதைச் செய்து கொண்ட நிலையில் ஓடும் பொழுது சப்தம் வந்தால்…
2.அதிலே இன்ன இடத்தில் பலவீனமாக இருப்பதால் தான் குறைபாடாகின்றது என்று கண்டறிந்து
3.அந்த மெக்கானிக் அதைச் சரி செய்கின்றார்… இல்லையா…?

அதே போன்று தான் மேலெழுந்தவாரியாக யாம் கண்டுபிடித்த உணர்வுகளை உங்களிடம் உபதேசிக்கின்றேன். நீங்கள் மெக்கானிக்காக ஆக மாற வேண்டுமா இல்லையா…!

அதை எடுத்து
1.“சாமி…!” இன்ன இடத்தில் இந்த மாதிரி இருக்கிறது…
2.எப்படித் திருத்தி வாழ்வது என்று கேட்டால் சொல்ல முடியும் அல்லவா…!

ஆகவே… எமது உபதேசத்தைக் கேட்டுப் பதிவாக்கி அதை வளர்த்துக் கொண்டவர்கள் அனைவருமே இந்த அருள் வழியில் தயாராக வேண்டும்… அருள் சேவைக்கு முன்னுக்கு வர வேண்டும்.

ஏனென்றால் ஆரம்பத்திலே நானும்
1.குருநாதர் காட்டிய வழியில் வளர்த்துக் கொண்ட அருள் உணர்வுகளை முதன் முதலில் வெளிப்படுத்தும் போது
2.கூட்டத்தைக் கண்டபின் பட…பட… என்று சொல்லக்கூடிய நிலையாகி மறந்து போயிருக்கிறது.

எல்லோருக்கும் அப்படித்தான்…! துணிவுடன் பேசும் பொழுது தன்னாலே வந்துவிடும்.

தியானத்தில் எடுத்து சக்திகளைப் பெறுகின்றீர்கள்… இந்த மாதிரிச் செய்யுங்கள் என்று சொல்கிறோம். தியானத்தை மட்டும் செய்து கொண்டிருக்கின்றோமே…! என்று சோர்விலே கொண்டு போய் விட்டு விட்டால் என்ன செய்வது…?

தோசையைச் சுட வேண்டும்… எல்லோருக்கும் அதைக் கொடுக்க வேண்டும் என்று ஆசை இருக்கின்றது. ஆனால் நெருப்பைக் கூட்டி விட்டால் என்ன ஆகும்…? அடிபிடித்து விடும்… நெருப்பு அதிகமாகும் இடமெல்லாம் கருகிவிடும்.

சீக்கிரம் எல்லோருக்கும் செய்து கொடுக்க வேண்டும் என்று விரும்பினோமே… இப்படிக் கருகிப் போய்விட்டது என்று தோசைச் சட்டியைச் சுரண்டு சுரண்டு என்று இப்படி ஒரு இரண்டு தரம் ஆகிவிட்டால் “அந்தச் சட்டியையே தூக்கி எறிந்து விடுவோம்…”

1.தியான வழியில் நம்முடைய மனது அது போல் ஆகிவிடக்கூடாது.
2.ஏனென்றால் தியான வழியில் நாம் நிதானமாகச் செயல்பட வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டும்.
3.நாம் சுவாசிக்கும் உணவுகள் அனைத்தையும் ருசியாக மாற்ற வேண்டும்.

அவசர புத்தி என்ன செய்யும்…? தப்புத் தப்பாகப் பண்ணிவிடும். அப்படிப்பட்ட நிலையினை மாற்றி நல்ல முறையில் செயல்பட வேண்டும்.

இதே போன்று வடை சுடும் பொழுதும் அந்தப் பக்குவ நிலை தேவை. முதலில் சூடு ஏறிவிட்டதா…? என்பதைப் பார்ப்பதற்கு நீரைத் தெளிக்கின்றார்கள். சுர்…ர்ர்… என்று சத்தம் கேட்டபின்… சரி என்று சொல்லி வடையைச் சுட ஆரம்பிப்பார்கள்.

ஆனால்… மூன்றாவது வடையில் சூடு குறைந்து விடும். முதல் வடை கருகும் இரண்டாவது ஓரளவுக்கு இருக்கும்… மூன்றாவது வடை அப்படியே மிதந்து கொண்டிருக்கும்… எண்ணெயெல்லாம் கவர்ந்து கொள்ளும்… வடை வேகாது… சுவையே கெட்டுவிடும்.

ஆனால் பதமான நிலைகள் கொண்டு அந்த எண்ணெயின் சரியான சூட்டைக் கணித்து வடையைச் சுட்டுப் பாருங்கள். “கரெக்டாகச் செய்த பின்…” அது மொறு… மொறு… என்று எல்லா வடையுமே ஒன்று போலச் சுவையாக இருக்கும்.

ஆனால் ஒரே நெருப்பு தான்…!
1.காரணம் எது…? ருசியாக்குவது யார்…? மனது…!
2.நம் மனதைப் பக்குவப்படுத்தினால் ருசியாகின்றது… மனதில் சிறிது அவசரப்பட்டால் கருகி விடுகின்றது.

ஆகவே மனம் தானே காரணம். இதை உருவாக்குவது யார்…? நம் மனதினை நாம் தெளிவாக்க வேண்டும். தெளிவானால் பொறுமை வரும். பொறுமையால் ஞானத்தின் வளர்ச்சி வரும்.

ஆனால் அவசரப்பட்டோம் என்றால் எல்லாம் போய்விடும். இதையெல்லாம் நாம் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

1.நாம் அனைவரும் ஞானிகளாக மாற வேண்டும்.
2.சாமி மாதிரி நீங்களும் ஞானத்தைப் போதிக்கக் கூடிய வல்லுனர்களாக மாற வேண்டும்.

என்னுடைய உபதேசங்களைக் கேட்டுப் பதிவாக்கி அதனுடைய விளக்கங்களைத் தெரிந்து கொண்டே வரவேண்டும். இந்த உணர்வுகள் உங்களுக்குள் விளையும்… அப்படி விளைய வைக்க வேண்டும்.

1.என்னுடைய உபதேசக் கருத்துக்களை நிதானமாகப் படித்து
2.“முத்து…” மாதிரி எடுத்துச் சொல்லப் பழகிக் கொள்ளுங்கள்.

கட… கட… என்று படிக்கக் கூடாது. அப்படிப் படித்தால் படிப்பவருக்கும் அர்த்தமாகாது… அதைக் கேட்பவர்களுக்கும் அர்த்தமாகாது. ஆகவே நிறுத்தி நிதானமாகப் படித்து முடிந்த பின்
1.குரு வழியில் அதன் உள் கருத்துக்களை அறிந்து
2.“சாமி இதைத்தான் சொல்கிறார்… நாம் இதைப் பெற வேண்டும்…” என்று விளக்கமாகச் சொல்ல வேண்டும்.
3.ஏனென்றால் அருள் வழியில் உங்களைப் பேச வைப்பதற்குத் தான் இதைச் சொல்கின்றேன்.

நான்கு வரி நீங்கள் படித்தாலும் அதில் உள்ள மூலக்கூறுகளை
1.“சாமி இவ்வாறு வெளிப்படுத்துகிறார்…! நாம் இதைப் படித்துப் பதிவாக்க வேண்டும்…! இந்த மாதிரி நாம் செயல்பட வேண்டும்…! என்று
2.நிறுத்தி நிதானமாக அதை விளக்கமாக எடுத்துச் சொல்லி கொண்டே வந்தால் எல்லோருக்கும் மனதில் பதியும்.

புத்தகத்தை எடுத்து ஒரு பத்து நிமிடத்தில் வேகமாகப் படித்த பின்… அடுத்தாற் போல் “அதிலே என்ன விளக்கம் இருக்கிறது…?” என்று கேட்டால் படித்தது மட்டும் தான் மிச்சமாக இருக்கும்… விளக்கம் தெரியாது.

ஏனென்றால்… யாம் கொஞ்சம் தான் கற்றிருக்கின்றோம்…!
1.என்னுடைய சீடர்கள் இதைக் காட்டிலும் நிறையக் கற்றுக் கொள்ள முடியும்.
2.உண்மையின் உணர்வுகளை எடுத்துச் சொல்லக்கூடிய நிலை வரும்.

பகைமையுடன் அல்ல…! “நான் தெரிந்து கொண்டேன் என்ற நிலை இல்லாதபடி…” உபதேசக் கருத்துக்களை மீண்டும் மீண்டும் படித்துப் பதிவாக்குங்கள். அது ஞானத்தின் வழியில் உங்களை அழைத்துச் செல்லும். அதற்குத் தான் இதை ஞாபகப்படுத்துகிறேன்.

காரணம் இந்த உடலில் சிறிது காலமே வாழுகின்றோம். அதற்குள் இந்த அருள் உணர்வுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கும் வெளிப்படுத்தும் அந்தத் தகுதியை நீங்கள் பெற வேண்டும்.

குருநாதர் என்னிடம் எவ்வளவோ சக்திகளைக் கொடுத்தார்.
1.ஆசைப்பட்ட உள்ளங்களுக்கெல்லாம் இதைச் செய்யப்பா என்றார்.
2.அதன் வழியில் நான் உங்களைத் தயாராக்க வேண்டும் அல்லவா.

ஆனால் ஒரு சிலர் யாம் கொடுக்கும் சக்திகளைத் தன் சுயநலத்திற்குப் பயன்படுத்தி விடுகின்றனர். அது எல்லாம் வேலைக்கு ஆகாது.

நீங்கள் எல்லோரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வு வரப்படும் பொழுது எல்லோருடைய உணர்வும் ஒன்றாகின்றது. அதைச் சீராக நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றாக இருப்பீர்கள்.

1.உங்கள் வீட்டில் கர்ப்பம் என்று தெரிந்தாலே அங்குள்ள அனைவரும் சொந்தக்காரர்களும் ஒன்று சேர்ந்து
2.கருவில் வளரும் குழந்தை ஞானியாக வளர வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள். பெரிய தத்துவ ஞானியாக அவன் வருவான்.

நாம் பாய்ச்சும் அருள் உணர்வை அந்தத் தாய் நுகர்ந்து அந்த உணர்வுகள் தாயின் ரத்தத்தில் கலந்து அதே அருள் உணர்வு கருவிலிருக்கும் சிசுவிலும் விளையும்.

அப்படிப்பட்ட நிலையில் வளர்ச்சி அடைந்து அந்தக் குழந்தை பிறந்தால் போதும்.

எந்த அருள் உணர்வுகளைப் பாய்ச்சிக் குழந்தையை வளர்த்தீர்களோ அவன் பிறந்த பின் எண்ணம் சொல் வெளி வரும் பொழுது அது நமக்கு சொந்தமாகின்றது.
1.அவனால் பகைமையை நீக்கும் உணர்வுகளைப் பெறுகின்றோம்.
2.நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் தான்.

பல உணர்வின் தன்மையை எடுத்து நமக்குள் அணுக்களாக உருவாக்கப்படும் பொழுது அதை விளைய வைத்து உணவாக உட்கொள்கிறோம்.

இதே போல தான் ஞானிகளாகப் பிறக்கச் செய்வதற்கு மனிதனுடைய ஆறாவது அறிவால்
1.கர்ப்பிணி “செவி கொண்டு நுகரப்படும் பொழுது…” தான் இதைப் பெற வேண்டும்
2.தன் கருவில் இருக்கும் குழந்தையும் அந்த அருள் ஞானம் பெற வேண்டும்
3.உலக ஞானம் பெற வேண்டும் இருளை அகற்றும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறுதல் வேண்டும்.

நம்மைப் போன்றவர்களின் தூண்டுதல் ஆகி… அந்தத் தூண்டுதலை நல்ல நிலையில் எடுத்துத் தியானித்து ஞானக் குழந்தை உருவாக வேண்டும் என்று செய்தால் மிகவும் நல்லது.

எதிர்காலத்தில் இத்தகைய ஞானிகள் தேவை. தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொல்வது போல நாம் இதைச் செய்து பழகுதல் வேண்டும். ஞானிகளை உருவாக்க வேண்டும்.

1.நம் தெருவிலே இரண்டு ஞானிகள் வளர்ந்தால் போதும்
2.அந்தத் தெருப் பக்கம் தீமைகள் வராது அருள் ஞானிகள் உணர்வுகளைப் பெறச் செய்யும்.

ஒவ்வொருவரும் இதைப் போன்று ஆங்காங்கு வாழும் இடங்களில் செயல்படுத்தினால் இந்த நாட்டிலேயே உயர்ந்த நிலைகளை உருவாக்கி நீக்கி விஞ்ஞான உலகின் நஞ்சிலிருந்து மீட்டிடும் அருள் சக்தியாகப் பெருகும்.

ஆகவே அருள் ஞானக் குழந்தைகளை உருவாக்க மறந்து விடாதீர்கள்…!

1.ஒவ்வொருவரும் குரு காட்டிய வழியில் ஞானிகளாக மாறுங்கள்.
2.கூட்டமைப்பாகச் செயல்பட்டு உலகில் வரக்கூடிய தீமைகள் அனைத்தையும் நீங்கள் மாற்றி அமைக்க முடியும்…!

நிச்சயம் நீங்கள் செய்வீர்கள்…!

தியான வழியில் உள்ள சிலர்… காசுக்காக ஞானத்தை இழந்து தவறான வழியில் சென்று கொண்டுள்ளார்கள்

தியான வழியில் உள்ள சிலர்… காசுக்காக ஞானத்தை இழந்து தவறான வழியில் சென்று கொண்டுள்ளார்கள்

1.இப்பொழுது நாம் பயன்படுத்தக்கூடிய சில பொருள்களிலும் சரி உணவுப் பொருள்களிலும் சரி
2.கெமிக்கல் கலக்காதது “இது அனைத்துமே பச்சிலைகள் சார்ந்தது…” என்று சொல்லிக் கொண்டு நிறையப் பேர் வருகின்றார்கள்.

துணிகளிலும் கூட பச்சிலைகளைப் பயன்படுத்துகின்றார்கள். ஆனால் அந்த துணிகள் இத்துப் போய்விடும். கெமிக்கல் கலக்காமல் செய்ய வேண்டும் என்று ஆராய்ச்சி செய்து அப்படிக் கொண்டு வந்துள்ளார்கள்.

சில பச்சிலைகளைக் கையில் எடுத்தால் அரிப்பு அதிகமாகும். கெமிக்கல் எதிலிருந்து வருகின்றது…?
1.நுகர்ந்த உணர்வுகள் கெமிக்கலாக மாறுகின்றது.
2.பச்சிலைகளிலும் அது இணைந்து நமக்குத் தெரியாமலே அவ்வாறு ஆகின்றது.

அமெரிக்காவிலிருந்து எவ்வளவோ பொருள்கள் இப்படிக் கெமிக்கல் இல்லாதது என்று சொல்லி இறக்குமதியாகி இங்கே வந்து கொண்டிருக்கின்றது.

இது எவ்வளவு பெரிய விளைவுகளைன் உண்டாக்கும்…? என்பது “பின்னாடி தான் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்…”

1.அமெரிக்காவின் ராஜதந்திரம்… மற்றவருடைய புத்திகளைக் கெடுப்பதற்கு அதிலே ஆசையால் மோகம் வரும்படிச் செய்து
2.அனைவரும் அதன் பின் செல்லும் நிலையாக… தன்னை அறியாமலே இயங்கிக் கொண்டுள்ளார்கள்.
3.இதிலிருந்து மக்கள் விடுபட வேண்டும். நாம் நினைக்கிறோம்… இது நல்லது என்று…!

ஆனால் நம்மை எங்கேயோ அது கொண்டு போய் விட்டு விடும்.

தியானத்தைக் கடைப்பிடிப்பவர்களும் சிலர் இதிலே இணைந்து கொண்ட நிலையில் இவ்வளவு பணம் கிடைக்கும் என்ற நிலையில் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்…
1.கடைசியில் தியானத்தை விட்டு விடுவார்கள்.
2.அந்த மோகம் கொண்ட நிலையில் அதன் பின்னாடி தான் சென்று கொண்டிருப்பார்கள்
3.ஏனென்றால் அந்த மோகம் “தன் நிலையை” மறக்கச் செய்யும்.

யாம் கற்றுக் கொடுத்த உணர்வின் தன்மைகள் எல்லாம் அவர்களுக்குள் மாறி… இறக்குமதியாகும் அந்தப் பொருள்களை விற்றால் “இவ்வளவு சம்பாதிக்கலாம்…” என்று வீடு வீடாகச் சென்று கொடுத்தால் நல்லது என்று அவர்களின் ஆசை இப்படிச் சென்று கொண்டிருக்கிறது.

“குருநாதர் காட்டிய வழியில் ஆன்மீகத்தை வலுப் பெறச் செய்வதற்குப் பதில்…” இந்தப் பொருள்கள் இத்தனை வருடம் உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்… சுத்தமானது… கெமிக்கல் கலக்காது…! என்று வீட்டு வீட்டுக்குச் சென்று சொல்லி
1.நாலு காசுக்காக இந்த மாதிரிச் செய்து கொண்டுள்ளார்கள்.
2.காசு ஆசையும் உடல் ஆசையும் இந்த உணர்வை இயக்குகின்றது.

கெமிக்கல்களில் உள்ள கெடுதல்களைப் பற்றி யாம் ஏற்கனவே பல முறை உபதேசித்துள்ளோம். ஆக இதிலே எத்தனை பேர் பாதிக்கப்படப் போகின்றார்கள் என்பது இனி பின்னாடி தான் தெரியும்.

அமெரிக்காவின் தந்திரங்கள் (TRICKS) இது போன்ற நிலைகளைச் செய்து கொண்டு நுண்ணிய அலைகளை எடுத்து மனிதனின் சிந்தனையைப் பித்து பிடித்துப் பேய் மாதிரி செயல்பட்டுக் கொண்டுள்ளது.
1.அவர்களுக்குச் சிந்தனையே இருக்காது.
2.ஞானத்தை இழக்கும் தன்மைகளுக்கு தான் வந்து கொண்டுள்ளதே தவிர
3.பண்பென்ற நிலைகள் முழுவதும் அழியக்கூடிய நிலை தான் அதில் இருக்கின்றது.

உங்கள் வீடுகளுக்கெல்லாம் தேடி வருவார்கள் இத்தனை வருடத்திற்கு இது பயனுள்ளதாக இருக்கும் அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என்று வந்து “கத்து… கத்து…” என்று சப்தமிட்டுக் கொண்டுள்ளார்கள்.

1.இதுகள் எல்லாம் எங்கே கொண்டு போய் விடும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்…!
2.”இது எல்லாம் தவறான வழி…!”

நாம் இந்த ஆன்மீகத்தின் வழியில்… அழியா உணர்வுகளைப் பெருக்கி நல்வழியில் நாம் ஜீவிக்கும் தன்மைக்கு வர வேண்டும். ஆகையால் தயவு செய்து நெறிப்படுத்திக் கொள்ளுங்கள்… நல்வழியில் நீங்கள் வளருவீர்கள்…!

மழை நீர் உருவாகும் விதம்

மழை நீர் உருவாகும் விதம்

 

அகஸ்தியன் தாய் கருவிலிருக்கும் பொழுது நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற்றான்.

அவன் குழந்தையாகப் பிறந்த பின் அவன் உடலில் இருந்து வெளிப்படும் மணங்கள் நஞ்சு கொண்ட உயிரினங்கள் அவனை அணுகாது அவனைப் பாதுகாக்கும் நிலையாக அமைந்தது.
1.அத்தகைய மணம் உண்மையின் உணர்வின் தன்மையை இயக்கி அதன்வழி அவன் வளர்ந்து
2.வான் வீதியின் உணர்வுகளை நுகர்ந்து வளர்ச்சி பெற்றான்.

நஞ்சை வென்றிடும் சக்தியைத் தாயின் கருவிலே பெற்றான். அதன் வழி கொண்டு வான் வீதியிலிருந்து நுகர்ந்தான் என்றால்… எதை…?

நம் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களிலிருந்து விஷத் தன்மையைத் தான் கவர்கின்றது. பால்வெளி மண்டலங்களாக மாற்றிக் கொள்கின்றது.

பால்வெளி மண்டலங்களாக மாற்றும் பொழுது தூசுகளாக வருகின்றது.
1.இந்தத் தூசிகள் சூரியன் அருகிலே வரப்படும் பொழுது மோதுகின்றது.
2.ஒன்றுடன் ஒன்று மோதி எதிர் நிலையாகி மின்கதிர்களாக மாறுகின்றது.

மின் கதிர்களாக மாறும் ஒளிக் கற்றைகளை வெள்ளிக் கோள் எடுத்துக் கொள்கின்றது. அதிலே விஷத்தின் தன்மை பிரிவதைக் கேதுக் கோள் அந்த விஷத்தினைத் தான் வலு கொண்டு கவர்ந்து கொள்கின்றது. அதே சமயத்தில் இணைத்த உணர்வின் தன்மையை ராகுக் கோள் தனக்குள் கவர்ந்து தன்னுடன் இணைத்துக் கொள்கிறது.

இதிலே வரும் ஓசை… சப்தத்தை செவ்வாய்க் கோள் எடுத்துக் கொள்கின்றது. இதிலே வரும் கழிவு ஆவித் தன்மை தனித்தன்மை அடைந்ததைச் சனிக்கோள் எடுத்துக் கொள்கின்றது.

சாதாரணமாக… நாம் சமையல் செய்யும் போது நாம் பல பொருள்களை எடுத்து வேக வைக்கின்றோம் அப்பொழுது அந்தச் சத்தெல்லாம் ஒன்றுடன் ஒன்று கலந்து விடுகின்றது.

ஆவித் தன்மைகள் மேலே செல்லுகின்றது. ஆவித் தன்மை அடைந்தபின் மேகக் கூட்டத்துடன் இணைந்து கொள்கின்றது.
1.அதில் நீர் என்ற நிலைகள் வந்தாலும் மேகக் கூட்டத்திற்குள் கலந்தபின்
2.அதன் உணர்வின் தன்மையை பல வர்ணங்களில் பல ஒளிக் கற்றைகள் மின்னல்கள் தாக்கப்படும் பொழுது
3.அதில் கலந்து கொண்ட உணர்வின் தன்மையுடன் மோதுகின்றது….
4.அப்பொழுது பளீர்…ர்ர் என்று மின்னல் ஆகிறது… மின் கதிர்கள் அதைக் கருக்குகின்றது.
5.கருக்கிய நிலைகள் கொண்டு ஆவித் தன்மை மேகம் சுத்தம் ஆகின்றது.
6.சுத்தமான பின் இதிலே பிரிந்த உப்புச் சத்தின் தன்மை கலக்கப்படும் பொழுது மழை நீராகப் பெய்கின்றது.

எத்தனையோ வகைகள் இப்படிச் செல்கின்றது.

ஆனால் மனிதனான பின் விஷம் கலந்த உணர்வின் தன்மை (தொழிற்சாலைகளிலிருந்து வருவது) ஆவியாக மாறப்படும் பொழுது வான் வீதியில் சென்று அது மேகக் கூட்டங்களாக மாறி மழை நீராக வரப்படும் பொழுது “கெமிக்கல் மழை…” என்று விஞ்ஞானத்தின் தன்மையால் ஏற்படுகின்றது.

விஞ்ஞானத்தின் விளைவால் வரும் விஷத்தை அடக்கி அதை ஒளியாக மாற்றுங்கள்

விஞ்ஞானத்தின் விளைவால் வரும் விஷத்தை அடக்கி அதை ஒளியாக மாற்றுங்கள்

 

இன்று “பல கெமிக்கலைக் கலந்து…” பல விதமான வர்ணங்களை உருவாக்குகின்றார்கள். அத்தகைய வர்ணங்களை ஆடைகளில் ஏற்றப்படும் பொழுது விஷத்தன்மையாகின்றது.

1.அந்த ஆடையை நாம் அணிந்திருக்கும் பொழுது அது உடலுடன் ஒட்டி
2.எந்த விஷத்தின் தன்மை (வர்ணமாக) ஆடையில் கலக்கப்பட்டதோ
3.அது வெளிப்பட்ட உணர்வுகள் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டுக் காற்றிலே கலந்திருப்பது
4.நம் ஈர்ப்பிற்குள் வந்து உடலில் ஜீவன் பெறும் சக்தியாக மாறும்.

இதன் வழி அந்த விஷத்தன்மைகள் நம் உடலுக்குள் சிறுகச் சிறுக ஊடுருவத் தொடங்கும். எதிர்மறையான விளைவுகளை உருவாக்குகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை…!

விஞ்ஞான உலகில் வாழுகின்றோம்… ஆனந்தமாக இருக்கின்றோம். ஆனால் மேலே சொன்ன விஷ தன்மைகள் பரவி அணுக்களின் தன்மை மாற்றப்படும் பொழுது உறுப்புகள் சிதைந்து விட்டால் “மாற்று உறுப்புகளைச் செய்து…” மனிதனை வாழ வைக்கின்றார்கள்.

எத்தனையோ வகையான மாற்றங்களை இன்று பார்க்கின்றோம் அல்லவா…!

சர்க்கரைச் சத்து உடலில் அதிகமாகும் பொழுது…
1.மற்ற இணைந்து வாழ்ந்து மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளில் அது பிரிக்கப்படும் பொழுது…
2.ஒன்று சேர்த்து வாழும் அந்த சர்க்கரைச் சத்து என்ற நிலைகள் ரத்தத்தில் அதிகமாகி விடுகின்றது.
3.சர்க்கரைச் சத்து என்று சுவை மிக்க நிலை வரும் போது தீய அணுக்களைப் பரப்பும் தன்மை வருகின்றது.
4.ரத்தத்திலே கலக்கும் நல்ல அணுக்களை மாற்றி… ரத்தத்தில் இருக்கும் உணர்வை இது எடுத்துக் கொள்கின்றது.
5.ஆனால் நீராக மாற்றி விடுகின்றது.

ரத்தம் நீராக மாறி விட்டால் என்ன ஆகும்…? ஊடுருவித் தன் நிலைகளை மாற்றி விடுகிறது.

மனிதனாக வாழும் காலத்தில்… உடலுக்குள் தீய விளைவுகளை ஏற்படுத்தும் இத்தகைய கெமிக்கல்களை நுகர்ந்து விட்டால் “டாக்டரிடம் சென்றால்… ரத்தத்தைத் காணோம்…” என்பார்.

மனித வாழ்க்கையில் இப்படி எல்லாம் விஞ்ஞான உலகில் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டுள்ளது. இதை மாற்றுவது யார்…? இதை மாற்றி அமைத்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அல்லவா.

அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…? இந்த விஞ்ஞான உலகில் இத்தகைய தீய விளைவுகளிலிருந்து மனிதன் தப்ப வேண்டுமா இல்லையா…?

அதற்குத் தான் ஆத்ம சக்தி என்ற கடுமையான ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம். பல விதமான உணர்வுகள் தாக்கப்படும் பொழுது
1.அந்த உணர்வின் உணர்ச்சியின் இயக்கங்களைப் பற்றி இந்த உபதேச வாயிலாகச் சொல்லப்படும் பொழுது இதுவும் பதிவாகின்றது.
2.இந்த உணர்வால் வரப்படும் பொழுது தன்னை எது இயக்குகின்றது…? என்பதைத் தன்னை அறிந்து கொள்ள முடியும்.

அடுத்த நிமிடமே ஆத்ம சுத்தி செய்தால் உங்களுடைய மனக் கலக்கம் நீங்குகின்றது… வரும் வேதனை உணர்வுகள் தடுக்கப்படுகின்றது… துருவ நட்சத்திரத்தின் சக்தி ஈர்க்கப்படுகின்றது… அதன் வலுவின் தன்மை நமக்குள் சேர்க்கப்படுகின்றது.

காரணம்… இன்று மின்னல்கள் தாக்கப்படும் பொழுது வெள்ளிக் கோள் அந்த உணர்வின் அலைகளைத் தனக்குள் எடுத்துக் கொள்கின்றது. இதைப் போல்
1.உங்களுக்குள் அந்த அருள் ஞானிகள் உணர்வைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பதிவு செய்யப்படும் பொழுது
2.மின்னல்கள் கடுமையான நிலைகளை எடுத்தாலும்
3.இந்த உணர்வின் தன்மை கண் கொண்டு பார்த்தாலும் உயிர்வழி ரத்தத்தில் கலக்கப்பட்டு
4.உடலில் உள்ள அணுக்கள் ஒளிக்கற்றைகளாக மாற்றும்.

மின்னல் (ஒளியின் தன்மை) என்பது 27 நட்சத்திரங்களின் எதிர்நிலையான போர் மறை தான் அது.

வினை… வினைப்பயன் என்று சொல்வதன் பொருள்

வினை… வினைப்பயன் என்று சொல்வதன் பொருள்

 

இன்று கசாப்புக் கடையில் பார்க்கலாம்… அங்கே உயிருடன் அறுக்கின்றார்கள்… சூடாக இருக்கும் தண்ணீரில் “டபக்” என்று முக்குகின்றார்கள்… அது வேதனைப்படுகிறது. ஆனால் அந்த மாமிசங்களைத் தான் உட்கொள்கின்றோம்.

சுடு தண்ணீரில் முக்கும்பொழுது அவன் பாவத்தைச் செய்கின்றான்… அதை நாம் உற்று நோக்குகின்றோம். ஆனால் அதற்காக அதை உட்கொள்ளாமல் இருப்பதில்லை.
1.சுடு தண்ணீரில் முக்கும் பொழுது கஷ்டமாக இருக்கின்றது.
2.அந்தப் பாவ நிலைகள் நமக்குள் பாவ வினையாகச் சேருகின்றது.

ஏனென்றால் கண்ணிலே உற்றுப் பார்த்தோம்… சுடு தண்ணீரில் அது எப்படி எரிகின்றதோ அந்த உணர்வை நுகர்கின்றோம்… நம் ரத்தத்தில் அது கலக்கின்றது.

1.ஒரு நான்கு ஐந்து தடவை இவ்வாறு கோழிகளை உயிருடன் சுடு தண்ணீரில் அமுக்கும் போது பார்த்தோம் என்றால்
2.அந்த எரிச்சல் நிச்சயம் நம் உடலில் உருவாகும்.

அந்தக் கோழியைத் தான் சாப்பிடுகின்றோம். அதனுடன் சேர்ந்து அது எப்படி எரிச்சல் அடைந்ததோ அந்த எரிச்சல் நம் உடலில் நிச்சயம் வரும்.

கடைக்காரன் காசுக்காக அவ்வாறு செய்கிறான். பாவமே…! என்று பார்க்கின்றோம். உணவாக உட்கொள்வதற்காக நாம் இதை நுகர வேண்டி இருக்கின்றது. இருந்தாலும் உட்கொள்ளும் போது ருசித்து உட்கொள்கின்றோம்.

ஆகவே இந்த உணர்வின் இயக்கங்கள் எப்படி இருக்கும்…? சற்று சிந்தித்துப் பாருங்கள். இது எல்லாம் பாவ வினைகள்.

ஒருவன் தீய செயலைச் செய்கின்றான். “இப்படிச் செய்கின்றானே…” என்று நாம் கூர்மையாக உற்று நோக்கிப் பார்க்கின்றோம்… அது தீய அலைகள்…!
1.அந்த உணர்வை நுகர்கின்றோம்.
2.நம் ரத்தத்திலே கலந்து அணுவாக மாறுகின்றது. இது தீய வினை.

ரோட்டில் ஒருவன் எவனையோ பார்த்து நாசமாகப் போ…! என்று சாபமிடுகின்றான். அது சாப அலைகள்.
1.நாம் அதைப் பார்க்க நேர்ந்தால் அவன் விடும் சாபத்தை நுகர்ந்து விடுகின்றோம்.
2.உடலுக்குள் சென்ற பின் அது தீய செயல்களையே செய்கின்றது.

ஆரம்பத்தில் தாய் கருவிலே சிசுவாக இருக்கின்றோம். தாய் இது போன்று எத்தனையோ அதிர்ச்சியான நிலைகளையோ தவறு செய்பவர்களையோ உற்றுப் பார்த்து நுகர்ந்திருக்கும்.
1.தாயின் இரத்தத்தின் வழியாக அந்த உணர்வுகள் கருவிலேயும் சேர்ந்து விடுகிறது
2.இது பூர்வத்தில் வரும் வினை.

இப்படிப் பல விதமான உணர்வுகள் அந்தந்தச் சந்தர்ப்பத்திற்கு எது எதை நுகர்கிறோமோ அவை எல்லாம் நமக்குள் வந்து சேருகின்றது.

பாவத்தைப் பார்க்கும் பொழுது “அடப் பாவமே…” என்று எண்ணுகிறோம்… அந்தப் பாவத்தை வளர்க்கின்றோம். தீய செயல்கள் செய்பவனை உற்றுப் பார்க்கும் பொழுது தீய வினைகளை நமக்குள் வளர்க்கின்றோம். அந்தந்த அணுக்கள் உருவான பின் அதனதன் ருசியையேத் தேடுகின்றது.

இந்த வினைகளை எல்லாம் போக்க வேண்டுமல்லவா…!

வினை என்றால் வித்து. செடி கொடிகள் வளரும் பொழுது அதில் வித்துக்கள் உருவாவது போல்
1.நாம் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் வினையாகி உணர்ச்சியாக இயக்கி
2.உடலில் விளையும் பொழுது அணுக்களாக மாறுகின்றது… வித்தாக மாறுகின்றது…!

சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா…! இவை அனைத்தையும் நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கொடுத்துள்ளது.