புது மனை புகுகிறோம் என்றால் அங்கே அருளைப் பெருக்கும் மனையாக அனைவரும் சேர்ந்து உருவாக்க வேண்டும்

புது மனை புகுகிறோம் என்றால் அங்கே அருளைப் பெருக்கும் மனையாக அனைவரும் சேர்ந்து உருவாக்க வேண்டும்

 

பெரும்பகுதியானவர்கள் புதிதாக்க் கட்டிய வீட்டிலே பெரிய யாகத்தை நடத்துகின்றார்கள்… அதன் மூலம் தோஷத்தை எல்லாம் போக்குகிறோம் என்பார்கள்.

நெருப்பை உண்டாக்கிப் பல பொருள்களைப் போட்டு புகையை மூட்டுவார்கள். வீட்டிற்குள் இருக்கும் மற்றவர்கள் கண்ணைக் கசக்கிக் கொண்டிருப்பார்கள். எப்படா இது முடியும்…? என்று எண்ணுவார்கள்.

காசைக் கொடுத்துத் தான் யாகத்தை நடத்துகின்றார்கள். மந்திரம் சொல்கின்றார் என்றாலும் அதை யாராவது நினைக்கின்றார்களா என்றால் இல்லை.

1.அங்கே உட்கார்ந்து இருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் எத்தனையோ விதமான எண்ணங்கள் செல்கின்றது.
2.வீடு கட்டி இருப்பதைப் பார்த்த பின்… எப்படிக் கட்டி இருப்பார்கள்…? என்ற இந்த உணர்வு வரும்.
3.கடன் வாங்கிக் (லோன் வாங்கி) கட்டியிருப்பார்கள் போல என்று அடுத்தவரிடம் பேசுவார்கள்.
4.எவ்வளவு கடன் வாங்கி இருப்பார்கள்…? என்று தெரியவில்லை…!

வீட்டிற்குள் வந்தபின் இந்த நினைவெல்லாம் வருகின்றது.

நானும் வீடு கட்டலாம் என்று நினைக்கின்றேன்… முடியவில்லை…! பெண்கள் மத்தியிலே இந்த உணர்வுகளை உருவாக்கி விடுகின்றார்கள்… ஆண்களும் அதே மாதிரித் தான்.

ஆனால் புதிதாக வீட்டைக் கட்டி இருக்கின்றார்கள்
1.அதை வாழ்த்த வந்திருக்கின்றோம் என்று தெரிவதில்லை.
2.அங்கே யாகத்தை வளர்த்து அவர்கள் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
3.ஆனால் இங்கே இந்த யாகத்தை நடத்தி வேண்டாத்தை எல்லாம் சிந்தனை பண்ணிக் கொண்டிருப்போம்.

கண் எரிகிறது என்று ஒரு சிலர் வெளியிலே உட்கார்ந்து இருப்பார்கள். சொந்தபந்தங்கள் எல்லாம் கண்ணைக் கசக்கிக் கொண்டு உள்ளே உட்கார்ந்து இருப்பார்கள்.

ஞானிகள் நமக்குக் காட்டியது உயிர் ஒரு நெருப்பு.
1.புது மனையிலே அமர்ந்து குருநாதர் காட்டிய வழியில் அகண்ட அண்டத்தின் உணர்வுகளை இந்தப் பிண்டத்திற்குள் கொண்டு வருகின்றோம்.
2.இந்தப் பிண்டத்திற்குள் ஒளியாக மாற்றிய உணர்வின் தன்மையை உங்களிடம் செவிகளில் படும்படிப் பதிவு செய்கின்றோம்.

இதைப் பதிவு செய்த நிலையில் உங்கள் உடலில் கை கால் வலியோ மற்ற நிலைகளோ குறைந்திருக்கும். மனதில் ஒரு நிம்மதி இருக்கும்.

உபதேச உணர்வுகளை நீங்கள் காதிலே கேட்டு அதனின் மூச்சலைகள் இந்த வீட்டிற்குள் படர்ந்தால் எப்படி இருக்கும்…?

இந்தத் தியானத்தை எடுத்து
1.இந்த வீட்டிலே மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்.
2.தொழில் வளம் பெறுக வேண்டும்
3.இங்கே வசிப்போர் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் சொன்னால்
4.இந்த வீட்டிலும் பதிவாகின்றது… இந்த வீட்டுக்காரர்கள் செவிகளிலும் படுகின்றது.
5.இந்த உணர்வை அவர்கள் நுகர்கின்றார்கள்… அவர் ரத்தத்தில் கலக்கின்றது.
6.இந்த வலுவான சக்தியை நாம் அனைவரும் சேர்ந்து அவர்களுக்குக் கொடுக்கின்றோம்.

இது தான் உண்மையான யாகம் என்பது. அது புறத் தீ… இது அகத் தீ…! அகத்திற்குள் இருக்கும் தீயிற்குள் (உயிறுக்குள்) அருள் சக்தியைப் பாய்ச்சி அந்த உணர்வலைகளை ஊட்ட வேண்டும்.

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

காசைக் கொடுத்து யாகத்தைச் செய்து பாவத்தைப் போக்கிவிடலாம் என்று நினைத்தால் அப்படி முடியாது. பாவத்தைச் சேர்க்கும் நிலையாகத் தான் ஆகும். ஆசை என்ற நிலைகள் வளரும். இருளைப் போக்கும் தன்மை நமக்குள் இருக்காது.

ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி தீமை புகாது தடுக்கும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்பதற்குத்தான் இந்த இல்லத்தில் அமர்ந்து யாம் இதை உபதேசிப்பது.

ஆகவே குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் அருள் ஞானத்தைப் பெருக்கி அருள் உணர்வுகளைக் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஊட்ட வேண்டும்.

1.பொறுமையுடன் பொறுத்திருந்து அருள் மணம் கமழும் வாக்கினை இந்தப் புது மனையிலே வெளிப்படுத்த வேண்டும்.
2.உலகிற்கு எடுத்துக்காட்டும் ஞானக் குடும்பமாக நாம் அனைவரும் வளர வேண்டும்.
3.அதை வளர்ப்பதற்குத் தான் இந்தப் பதிவும்… நினைவும்… மீண்டும் நினைவும்…!

இது தான் உண்மையான யாகம்.

ஆனால் யாகத்தை வளர்த்து மந்திரங்களைச் சொல்கின்றார்கள். இந்த மந்திரத்தை நாம் நுகர்ந்தால் உடலுக்குள் பதிவாகின்றது. இறந்த பின் அதே மந்திரத்தைச் சொல்லி நமது ஆன்மாவைக் கைகவல்யப்படுத்த உதவும்.

மந்திரத்தின் உண்மை நிலை இது தான்.

ஆனால் அருளைப் பெற வேண்டும் என்று அந்த மகரிஷிகளின் உணர்வுகளைச் செவி வழி உணர்ச்சிகளை உந்தி இரத்தத்தில் கலந்தால்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் இந்த இல்லத்தில் பெருக்கப்பட்டு
2.இருளைப் போக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் தன்மை வருகின்றது… பகைமையை அகற்றுகின்றது.

பெண்கள் தலையில் உருவாகும் பேன் பற்றிய உண்மைகள்

பெண்கள் தலையில் உருவாகும் பேன் பற்றிய உண்மைகள்

 

உதாரணமாக பெண்கள் தங்களது குழந்தைகள் மீது அன்பாக இருப்பார்கள்… பாசமாக இருப்பார்கள். ஆனால் பையன் சேட்டை செய்யும் பொழுது “சும்மா சேட்டை செய்கிறானே… தொலைஞ்சு போறவன்…” என்று, பெண்கள் தங்களது பையனைப் பேசி விடுவார்கள்.
1.தன் குழந்தை மேல் பாசமாக இருந்தாலும்
2.கோபத்தில் “தொலைஞ்சு போறவனே…!” என்ற வார்த்தையைச் சுலபமாகச் சொல்லிவிடுவார்கள்.

இதே போன்று மாமியார் மருமகளைப் பார்த்து ஒரு வேலையாக “ஏம்மா இப்படிச் செய்கிறாய்…? அதைச் செய்தால் என்ன…?” என்று ஒரு முறைக்கு இரு முறையாகச் சொல்லி விட்டால் போதும்.

உடனே மருமகள்… “சும்மா சொல்லிக் கொண்டேயிருந்தால் எப்படி…? நான் செய்ய மாட்டேனா… எனக்குத் தெரியாதா…?” என்று வெறுப்பை வெளிக்காட்டி விடுவார்.

1.இந்த உணர்வின் அலைகள் புவியின் ஈர்ப்பால் வீட்டில் பதிந்து விடுகின்றது.
2.பதிந்தபின் இந்த உணர்வுகள் அலைகளாக வெளிப்படுகின்றது.
3.நுகர்ந்த உணர்வுகள் அங்கே வெறுப்பாகின்றது.
4.வெறுப்பான உணர்வுகள் இருவரிடத்திலும் படரப்படும் பொழுது அது அவர்களிடம் விஷ அணுக்களை உருவாக்கத் தொடங்குகிறது,
5.அவர்களது உடலில் நல்ல குணத்திற்கு எதிர்மறையான உணர்வுகள் மோதும் பொழுது அவர்களது உடலில் அரிப்பு வரும்

சில வீடுகளில் சங்கடமும் சஞ்சலமும் இருந்தால் போதும். அங்கிருப்பவர்களுக்கு உடலில் அரிப்பு வரும்… பார்க்கலாம். அதுவும் சிறிது நாள் சென்றால் அவர்களுடைய தலைகளில் சீலைப் பேனாக மாறிவிடும்.

வீட்டில் சஞ்சலமும் சலிப்பும் சங்கடமும் வேதனையும் கொண்டவர்கள் தலையில் நிச்சயம் பேன் வரும்.
1.சந்தோஷத்தை உருவாக்கிப் பாருங்கள்… பேன் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.
2.ஏனென்றால் பேனிற்கு மனிதரின் சந்தோஷமான உணர்வுகள் எதிரி.

வீட்டில் சலிப்பு… மாமியாரின் கோபம்… பையனின் சேட்டை… கடை வியாபாரத்தில் மந்தம்… பக்கத்து வீட்டுக்காரரின் வம்பு… என்று பலவற்றை எண்ணிச் சலித்து வெறுத்துப் பேசிக் கொண்டிருந்தால் போதும். நிச்சயம் அவர்கள் தலையில் பேன் வரும்.

அந்தப் பேன் அவர் தலையை விட்டு இறங்கினால் அடுத்து சஞ்சலம் கொண்ட இன்னொருத்தரிடம்தான் போகுமே தவிர மற்றவர்களைப் பார்த்தால் அஞ்சி ஓடிவிடும். ஒரு வீட்டில் நாலைந்து பேர் இருந்தாலும் சஞ்சலம் கொண்டவரிடத்தில் மட்டுமே பேன்கள் உருவாகும்.

இது எதனால் இப்படி ஆகிறது…?

நமக்குள் எடுத்துக் கொண்ட மூச்சலைகளையும்… நாம் வெளிப்படுத்தும் எண்ண ஒலி அலைகளையும் சூரியனின் காந்தச் சக்தி எடுத்து வைத்துக் கொள்கின்றது.
1.மீண்டும் அதை நம்முள் சேர்த்தவுடனே அது ஜீவ அணுவாக மாறுகின்றது.
2.நம் உடலிலிருந்து வந்தது… நம் உடலிலேயே பாய்கின்றது.

இந்த உணர்வின் தன்மையை ஒட்டி இதனுடைய சக்தியை எடுத்து அது அணுவாக மாறுகின்றது. நம் உடலுக்குள் வந்து சாப்பிட ஆரம்பிக்கின்றது.

இதை நாம் தெரிந்து கொள்வது நலம்.

தியானத்தில் இருந்தால் மட்டும் பத்தாது…!

தியானத்தில் இருந்தால் மட்டும் பத்தாது…!

 

மைனர்கள் எல்லோரும் “தியானத்தில் இருந்தால் மட்டும் பத்தாது…” நீங்கள் ஒவ்வொருவரும் வழிகாட்டியாக அமைய வேண்டும்… உலகத்திற்கு எடுத்துக்காட்டாக ஞானிகளாக மாற வேண்டும்.

சாமி மீது உங்களுக்குப் பற்று அதிகமாக இருக்கலாம்… ஆனால்
1.பற்று எதுவாக இருக்க வேண்டும்…?
2.அந்த அருளைப் பற்ற வேண்டும் இருளைப் போக்க வேண்டும்.
3.அந்த அருள் பற்று தான் நமக்குத் தேவை.

சாமியினுடைய உடல் பற்றல்ல…!

1.சாமியைக் கௌரவிப்பதும் சாமியை உயர்வாகச் சொல்வதும் உடலைத் தான்.
2.சாமியிடம் கேட்கும் உபதேசங்களை… அந்த அருளைப் பற்றி அதை நாம் போற்றுதல் வேண்டும்.

சாமியிடம் இருக்கும் அருள் பற்று எப்படி இருக்க வேண்டும்…?
1.ஞானத்தை வளர்த்தால் சாமியின் உடல் பற்று வராது.
2.சாமியின் ஞானப்பற்று தான் உங்களுக்கு வரவேண்டும்.

“எங்கள் சாமி உயர்ந்தவர்…” என்று சொல்வதைக் காட்டிலும்…
1.”அந்த உயர்ந்த உணர்வு என்னிலே வளர்கிறது…” என்று
2.உலகிற்கு நீங்கள் எடுத்துக் காட்டினால்… வழி நடத்தினால் அருள் பற்று வருகின்றது.

இந்தத் தியானத்தைக் கடைபிடிப்போர்கள் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் அனைவரும் இன்னொரு வேலை செய்ய வேண்டும். என்னுடைய உபதேசங்களை எழுத்து வடிவிற்குப் புத்தகமாகக் கொண்டு வர வேண்டும்.
1.அதை எழுதி என்னிடம் கொடுங்கள்… திருத்தங்களைச் சொல்லிக் கொடுக்கின்றேன்
2.ஒவ்வொருவரும் அருள் ஞானத்தை வெளிப்படுத்தும் நூல் ஆசிரியராக வாருங்கள்.

அந்த மாதிரிப் பழகிக் கொண்டால் பகைமைகள் புகாது தடுக்கலாம். அருளைப் பெருக்கலாம். இருண்ட உலகில் இருந்து மீட்டித் தெளிந்த மக்களாக கொண்டு வர முடியும்.

விஞ்ஞானத்தின் விளைவுகளிலிருந்து நம்மையும் நாட்டையும் உலகையும் காக்க முடியும்.

ஒரு வித்தை மண்ணில் ஊன்றினோம் என்றால் அது உபயோகமற்றதாக மாறுகின்றது. பின் செடியாக வளர்ந்து தன் இனத்தின் வித்தைக் கவர்ந்து எல்லோருக்கும் பசியாற்றுகின்றது.

இதைப் போன்று கருவில் வளரும் சிசுக்களுக்கெல்லாம் அருள் ஞான வித்துக்களைப் பதிவு செய்து ஊன்றினால் அவன் வளர்ந்து அருள் ஞானத்தைக் கொண்டு அனைவரையும் காக்கும் திறன் கொண்ட ஞானி ஆகின்றான்… நாட்டைக் காக்கும் ஞானியாகின்றான்.

இத்தகைய அருள் ஞானிகளை வளர்த்தால் தான்
1.இனி அரசாங்கங்க நிர்வாகத்தைத் தனதாக மாற்றி
2.“நாம்…” என்ற நிலைகளில் ஒன்றுபட்ட இயக்கமாக அவன் கொண்டு வருவான்.

இப்பொழுது உலகெங்கிலும் நடக்கும் அரசாங்கங்கள் அனைத்தும் “நான்…” என்ற நிலையில் தான் நடக்கிறது.

நாம் என்ற நிலையில் அத்தகைய அரசாங்கத்தை உருவாக்கி மகிழ்ந்து வாழும் மக்களாக நாம் உருவாக்க வேண்டும். அத்தகைய ஞானிகள் உருவானால் அனைவரையும் பிறவி இல்லா நிலை அடையச் செய்யும் அரும்பெரும் சக்தியாக அது மாறும்.
1.ஆகவே ஞானிகளை உருவாக்குவோம்.
2.நமக்கு இனி ஒரு பிறப்பு வேண்டாம்… நம்முடைய எல்லை ஒளி உடல் பெறுவது தான்.

பிறரைத் துன்புறுத்துவதால் ஏற்படும் தீய விளைவுகள்

பிறரைத் துன்புறுத்துவதால் ஏற்படும் தீய விளைவுகள்

 

குமாரபாளையத்தில் யாம் சுற்றுப்பயணம் செய்யும் போது பண்டரி கோவிலில் இருக்கும் பொழுது ஒரு அம்மா வரும். அந்த அம்மா “ஐய்யய்யோ எனக்கு உடம்பெல்லாம் எரியுதே…!” என்று விழுந்தடித்து ஓடி வரும்.

சாப்பிடப் போய் உட்கார்ந்தால் போதும் உடம்பெல்லாம் எரியும். அந்த அம்மாவின் வீட்டுக்காரர் இந்த அம்மா சொன்னபடியெல்லாம் கேட்பார். ஆனால் இந்த அம்மா தன் மாமியாருக்குச் சாப்பாடு போடாதபடி உதை… உதை… என்று உதைத்துச் சாகப்போகும் பொழுது இந்த நிலைகளிலே இறந்தது.

அந்த அம்மாவிற்குக் கப…கப… என்று எரியும். அங்கிருந்து விழுந்து எழுந்து ஓடும். பிறகு யாம் நீ வீட்டில் போய் உன் மாமியாரை நினைத்து அவர் உயிராத்மா நல்ல நிலைகள் பெற வேண்டும். எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி அந்த உயிராத்மா பெற வேண்டும். வீட்டில் வைத்து இதைப் போன்று எண்ணுங்கள் என்று சொன்னோம்.

1.அவ்வாறு செய்து வந்த பத்து நாட்களுக்குள் நன்றாக இருக்கும்.
2.யாம் சொன்ன மாதிரிச் செய்தவதை அடுத்து விட்டு விட்டால் மறுபடியும் விழுந்தடித்து ஓடி வரும்.
3.இது யாம் கண்ட அனுபவம். விட்டுவிட்டால், மறுபடியும் வரும்.

அனுபவத்திற்காக வேண்டி யாம் உலகம் முழுவதற்கும் சுற்றி ஒவ்வொரு மனிதனுடைய உணர்வும் எப்படி இயங்குகின்றது…? என்று ஒவ்வொரு ஊரில் தங்கியிருந்து கண்டறிந்த உண்மையைச் சொல்கின்றோம்.

அதே குமாரபாளையத்தில் எமக்குப் பல எதிர்ப்புகளும் துன்பங்களும் எப்படியெல்லாம் வந்தது…? என்று அங்கிருந்தோருக்குத் தெரியும்.

ஏனென்றால்
1.தன்னையறியாது ஒரு மனிதனுக்குள் உணர்வின் செயல்கள் எவ்வாறு இயங்குகின்றது…? என்று அறிந்து உணர்வதற்குத்தான்
2.யாம் மூன்று இலட்சம் பேரைச் சந்திக்க வேண்டியிருந்தது.
3.ஒரு மனிதனுக்குள் இருக்கும் உணர்வலைகள் எவ்வாறு இயங்குகின்றது…?
4.அதை எப்படியெல்லாம் நாம் கண்டறிவது…? என்ற நிலைகளை
5.குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு யாம் அறிந்துணர்ந்தோம்.

இதே மாதிரித்தான் ஒவ்வொரு அனுபவமும்…! ஒவ்வொரு மனித உடலுக்குள் இயங்கும் நிலைகளை அறிந்தோம்.

நாம் யாரும் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பங்கள் அந்த நிகழ்ச்சியை நடத்திவிடும். அதிலிருந்து மீட்டுக் கொள்ளும் வழியைப் பின்பற்ற வேண்டும்.

ஒவ்வொரு மனிதரும் தங்களை அறியாமல் இயக்கக்கூடிய ஆற்றலிலிருந்து தன்னைத் தானே மீட்டுக் கொள்வதற்குத் தான் இதைச் சொல்கிறோம். மெய் ஞானியின் அருள் சக்தியை நீங்கள் பெறப் பழகிக் கொள்ளுங்கள்.

எப்பொழுதெல்லாம் துன்பங்கள் வந்து உங்களைத் துன்புறுத்துகின்றதோ அப்பொழுது ஆத்ம சுத்தி என்ற இந்த ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள்.

அப்படி ஆத்ம சுத்தி செய்யும் போது
1.உங்களைத் துன்புறுத்தும் உணர்வின் ஆற்றலை மாய்த்து உங்கள் சொல்லுக்குள் மனவலிமை பெற்று
2.யார் உங்களைத் துன்புறுத்துகின்றார்களோ நீங்கள் எடுக்கும் இந்த அருள் உணர்வுகள் அவருக்குள் ஊடுருவி
3.துன்புறுத்தும் ஆற்றலை அங்கு குறைத்து உங்களுக்குள் இன்புறச் செய்யும்.

அந்த நல்ல உணர்வின் ஆற்றலை நீங்கள் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

இதை நீங்கள் ஒவ்வொருவரும் பின்பற்றுங்கள். உங்களை நீங்கள் நம்புங்கள் தாய் தந்தையைத் தெய்வமாகக் கருதுங்கள். உங்கள் உயிரை ஈசனாக மதியுங்கள். உங்கள் உடலைக் கோவிலாக மதியுங்கள்.

ஒவ்வொரு நிமிடமும் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணினால் உங்களுக்குள் மகிழ்ச்சியும் மனவளமும் பெருகி இந்த வாழ்க்கையின் புனிதத் தன்மையை உங்களுக்குள் நீங்கள் காணலாம்.

மகாலட்சுமி

மகாலட்சுமி

 

ஒரு புதுப் பெண் (மருமகள்) திருமணம் ஆகி வீட்டிற்கு வந்தாலும் வீட்டில் உள்ள மாமியார் அந்த வீட்டில் உள்ள நிலையை அது இப்படி இருக்கிறது…? என்று பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

1.அந்தப் பெண்ணிற்குத் தெரியவில்லை என்றாலும் இந்த ஞானத்தை ஊட்ட வேண்டும்.
2.இந்தக் குடும்பம் இப்படி இருக்கின்றது… “நமது குடும்பம்…” என்று நினைக்க வேண்டும் என்று வழிகாட்ட வேண்டும்.

ஏனென்றால் புதிதாக வரும் பொழுது கூச்சம் இருக்கும்… தனது வீட்டில் இருப்பது போல் சீராகச் செயல்படுத்தத் தெரியாது. அந்தக் கூச்சத்தினால் ஒரு பொருளையோ டம்ளரையோ கொடுக்கும் போது அதைச் சரியாக வாங்காது கீழே போட்டு விடும்.

அதைப் பார்த்தவுடன் இப்பொழுதே இந்தப் பெண் இவ்வாறு செய்கின்றது… இனி என்ன நடக்குமோ…? என்று மாமியார் இந்த எண்ணத்தை மனதில் பதிவு செய்து கொள்கின்றது.

1.இந்தப் பதிவு உடலுக்குள் சேர்ந்த பின் பார்வையும் மாறும்.
2.கருவிழி உந்தி அந்த பெண்ணைப் பயப்படச் செய்யும். ஏனென்றால் வெளி வரும் சொல் கடுமையாக இருக்கும்.
3.உற்றுப் பார்க்கும் பொழுது “நம்மை ஏதாவது சொல்லிவிடுவார்களோ…?” என்று மருமகளுக்குப் பயம் வந்துவிடும்.
4.மாமியாரின் கடும் சொல் பதிவான பின் அடுத்து இந்தப் பயம் வரும்.

அதே போல் மருமகள் சமையலில் அடுப்பிலே ஏதாவது ஒரு பொருளை வைக்கப்படும் பொழுது கீழே போட்டு விடும்… அல்லது கையைச் சுட்டு விடும். எனக்கு அப்போதே தெரியும் நீ இப்படித்தான் செய்வாய் என்று…! மாமியார் உடனே சொல்லும்.

ஆகவே புதுப் பெண் வீட்டிற்குள் வரும் பொழுது அவர்களை எப்படி வழி நடத்த வேண்டும்…? என்று மாமியார் தெரிந்து கொள்ள வேண்டும்.

இது உன் வீடு… உனக்குப் பொறுப்பு இருக்கின்றது. வீட்டில் பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து விட்டோம். நீயும் அவர்களை ஞானமாக வளர்க்க வேண்டும்.
1.நீ தான் எங்களைக் கவனிக்க வேண்டும்… எங்களுக்கு வயதாகி விட்டது… பொறுப்புடன் இருந்து வேலைகளைச் செய்ய வேண்டும்,
2.நாங்கள் எங்கள் பிள்ளைகளைக் காத்தோம்… அதே போல் அனைவரையும் காக்கக்கூடிய சக்தியாக வரவேண்டும்
3.இந்த வீட்டையும் காக்க வேண்டும் அந்த சக்தி வர வேண்டும்.
4.நான்கு பிள்ளைகள் இருக்கின்றார்கள்… ஒன்றுபட்டு வாழும் உணர்வுகள் நமக்குள் வளர வேண்டும்
5.பெண்ணாக இருக்கின்றோம்… நாம் இப்படித் தான் வழி நடத்த வேண்டும் என்று மாமியார் பக்குவமாகச் சொன்னால்
6.மருமகளிடம் இருக்கும் அந்தக் கூச்சம் போய்விடும்.

தன்னுடைய அத்தையைப் பார்க்கும் பொழுது அந்தப் பெண்ணிற்கு பயம் நீங்கிவிடும். வேலைகளைச் செய்ய அந்தத் துணிவு வரும்… சீராகவும் செய்ய முடியும்

ஆனால் ஒரு சில வீடுகளிலே புதுப் பெண் சென்றால் அங்கே எப்படியெல்லாம் அவஸ்தைப்படுகிறது…? என்பதைப் பார்க்கலாம்.

முதலில் பெண் பார்க்கச் செல்லும் பொழுது “எங்கள் வீட்டிலே இப்படி எல்லாம் செய்வோம்… இருப்போம்…” என்று சொல்வார்கள். ஆனால் பெண்ணோ அவர்கள் வீட்டிலே செல்லமாக வளர்ந்து இருக்கும்.

புகுந்த வீட்டிற்குள் வரப்படும் பொழுது முதலில் கொஞ்சம் வித்தியாசங்கள் வரும். ஆனால் வித்தியாசம் வரும் பொழுது இந்த வீட்டிலிருக்கும் மாமியார் அதைப் பக்குவப்படுத்த வேண்டும்.

மருமகள் என்றாலும் தன் மகனை எப்படிப் பார்க்கின்றோமோ… தன் மகளை எப்படி பார்க்கின்றோமோ… அந்த நிலை கொண்டே மாமியார் பார்க்க வேண்டும்.

இன்றைக்கு மருமகளாக வருகின்றார்கள். மாமியாரின் கடுமையான உணர்வுகள் வளர்ந்து விட்டால் இந்தப் பழக்கம் வரும் பொழுது… பின்னாடி அவர்களுக்கு வரக்கூடிய மருமகளையும் “தன் மாமியார் எப்படித் தன்னை நடத்தினார்களோ… அதே செயலைத்தான் தன் மருமகளுக்கும் செயல்படுத்தும்,..”

1.தாய் என்ற நிலையில் தான் நாம் வளர்க்கின்றோம்
2.ஆனால் அந்தத் தாய்மை என்ற நிலையில் நாம் எப்படிச் செயல்பட வேண்டும்…? என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

காரணம்… இயற்கையில் முதலில் பெண்பாலாக இருந்து தான் படைப்பின் சக்திகள் வளர்கிறது.

ஆகவே
1.திருமணமாகி வீட்டிற்கு வரும் அந்தப் பெண்ணை மகாலட்சுமியாக மாற்ற வேண்டும்.
2.சர்வத்தையும் அறிந்திடும் நிலையும் சர்வத்தையும் வளர்த்திடும் நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.

அணுகுண்டின் விஷத்தையும் நாம் மாய்க்க முடியும்

அணுகுண்டின் விஷத்தையும் நாம் மாய்க்க முடியும்

 

அந்த மெய் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் பதியச் செய்வதற்குத்தான் யாம் இப்போது உபதேசிப்பது. இதைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கின்றோம்.
1.நீங்கள் கவனமாகக் கேட்டுக் கொண்டு இருந்தால் போதும்… தெரிந்து ஒன்றும் எடுக்கப் போவதில்லை.
2.இந்த வித்து உங்களுக்குள் வளர்ந்து விட்டால் ஓ…ம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணினால்
3.அந்த மகரிஷியின் அருள் சக்தி உங்களுக்குள்ளே வளரத் தொடங்கும்.

உங்களைக் காக்க அந்த உணர்வுகள் வளரும். அதற்குத்தான் உபதேசிப்பது.

நீங்கள் என்னைப் போல் காட்டுக்குள்ளேயும் வீட்டுக்கு வெளியேயும் மிருகங்களுக்குள்ளேயும் சேற்றுக்குள்ளேயும் கடும் மழையிலேயும் அட்டைக்குள்ளேயும் என்றைக்குப் போய் இதை நீங்கள் கற்றுக் கொள்வது…? என்றைக்கு நீங்கள் தெரிந்து கொள்வது…? இந்தச் சத்தை நீங்கள் எப்படி வளர்த்துக் கொள்வது…?

அதற்கு நேரமும் இல்லை… காலமும் இல்லை. நீங்கள் சாப்பாட்டிற்குப் பார்ப்பீர்களா…? சக்தியை வளர்ப்பீர்களா…?

1.குருநாதர் எம்மை (ஒருவரை) உருவாக்கினார்… குருநாதர் சொன்னதைச் செய்தோம்.
2.குருநாதர் எமக்கு எப்படிச் சொல்லிக் கொடுத்தாரோ அதே மாதிரி உங்களை நீங்கள் காத்துக் கொள்வதற்காக இதைச் சொல்கின்றோம்.

ஆகையினாலே இதை அலட்சியப்படுத்தி விடாதபடி என்னமோ சாமி விஞ்ஞானத்தைப் பற்றிச் சொல்கிறார் இதைப் பற்றிச் சொல்கிறார் என்று எண்ணிவிட்டுக் கொஞ்சம் விபூதி வாங்கிச் சென்றால் தலைவலி போனால் போதும் உடல் வலி போனால் போதும் என்ற நினைப்பிலே சிலர் இருப்பார்கள்.

யாம் சொல்லும் இந்நிலைகளை எடுத்தால் வாழ்க்கையில் வரும் வேதனைகளை நீங்கள் உங்கள் மூச்சினாலேயே தடுக்க முடியும்.
1.உங்கள் மூச்சின் ஆற்றலை உணர்ந்து கொண்டால்
2.நாளைக்கு வரக்கூடிய எத்தகைய அணுகுண்டின் விஷத் தன்மையையும் உங்களாலே தடுக்க முடியும்.

இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒருவர் உங்களுக்குக் கெடுதல் செய்து கொண்டே இருக்கிறார் என்றால் யாம் சொல்கின்ற மாதிரி ஆத்ம சுத்தி செய்து விட்டு உங்கள் எண்ணத்தைப் பாய்ச்சி நாளை அவர் எனக்கு நல்லது செய்ய வேண்டுமென்று எண்ணினால் அவரின் எண்ணங்கள் மாறிவிடும்.

இதே மாதிரி எனக்குக் குழந்தை இல்லை… அது இல்லை… இது இல்லை…! நீங்கள் நினைத்துக் கொண்டேயிருக்கிறீர்கள். அதையெல்லாம் நீங்கள் அறவே விட்டுவிடுங்கள்.

1.யாம் சொல்கின்றபடி ஆத்ம சுத்தி தியானம் செய்து “எனக்குக் குழந்தை உண்டு…!” என்று யாரொருவர் எண்ணினாலும்
2.கண்டிப்பாக அவர்களுக்குக் குழந்தை பிறக்கும்.

நாளைக்கு அது ஞானக் குழந்தையாக வரும். அது எடுக்கும் மூச்சு உங்களைக் காக்க உதவும். அதே சமயத்தில் அந்தக் குழந்தை வளரும் நிலைகள் கொண்டு நீங்கள் எடுத்துக் கொண்டது விஞ்ஞானத்தில் வரக்கூடிய தீய அலைகளை நம்மை மயக்கும் நிலையை அந்தத் துடிப்பின் நிலையைத் தடுக்கவும் முடியும்.

1.இது உங்களுக்குப் பரீட்சை… உங்களை நீங்கள் நம்ப வேண்டும். உங்கள் அனைவருக்கும் இந்த ஆற்றலைக் கொடுக்கிறோம்.
2.உங்களைக் காக்க வேண்டுமென்ற நிலையில் பேரண்டத்தின் சில சத்துகளை எடுத்துத் தியானித்து உங்களுக்குப் பாய்ச்சுகின்றோம்.

கஷ்டத்தை மாற்றியமைக்கக் கூடிய சத்து உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று தான் இத்தனையும் செய்து கொண்டிருக்கின்றோம். வீட்டிலிருந்து கொண்டே உங்கள் கஷ்டத்தையெல்லாம் போக்க இதைப் போன்று யாம் சொல்லும் நிலையை எண்ணுவதற்குச் சிரமமா…?

விபூதி வாங்கிச் சென்றால் போதும்… “உட்கார்ந்து தியானிக்க நேரமில்லை…!” எனறு விட்டுவீடாதீர்கள்.

சமையல் பண்ணும் பொழுது “ஓம் ஈஸ்வரா குருதேவா” என்று உயிரை எண்ணிக் கொண்டு நாங்கள் சமைப்பதெல்லாம் நன்றாக இருக்க வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எல்லோரும் பெற வேண்டும் என்று நினைக்க வேண்டும்.

வாழ்க்கையில் வரும் இன்னல்களை எல்லாம் நீங்கள் மாற்றி அமைப்பதற்குத்தான் இதை உணர்த்துகின்றோம்.

இணைக்கும் சக்தியான வியாழன்

இணைக்கும் சக்தியான வியாழன்

 

சூரியனுக்கு உபகோள்கள் எத்தனை இருக்கின்றது…? வியாழன் செவ்வாய் புதன் பூமி சந்திரன் சனி கேது ராகு என்று எல்லாம் இருக்கின்றது.

நம் உடலிலும் இதே மாதிரித் தான்.

1.கேது என்று சொன்னால் பித்த சுரப்பி…
2.ராகு என்கிற பொழுது உடலின் மேல் தோல் பகுதி.
3.உயிரின் இழுக்கக்கூடிய பாகம் குரு… எல்லாவற்றையும் எடுத்து சமைக்கக் கூடியது.

அந்த உணர்வின் தன்மை வந்தவுடன் இரத்தத்தில் கலந்து எதை எதற்கு மாற்ற வேண்டுமோ மாற்றுகின்றது. கடைசியில் உடலில் சுற்றி வந்த பிற்பாடு என்ன செய்கிறது…?

1.உயிரைப் போலவே உணர்வின் தன்மை…
2.இந்த உடலைப் போலவே உணர்வின் தன்மை… என்ற இரண்டு நிலைக்கு வருகின்றது.

சூரியன் இந்தப் பிரபஞ்சத்தை எப்படி இயக்குகின்றதோ நம் உயிர் எடுத்துக் கொண்ட உடலுக்குத் தக்க மாதிரி உறுப்புகளாக மாறுகின்றது.

மனிதனான பின் தீமைகளைச் சமப்படுத்தும் சக்தியாக நஞ்சை மலமாக மாற்றும் தன்மை வருவதால் பரசுராமன் ஆகி… பலருடைய உணர்வுகளை நுகரப்படும் பொழுது நம்மை அறியாமலே பிறருடைய கஷ்டமெல்லாம் இரத்தத்திலே வந்து விடுகின்றது. அது சேராதபடி தடுக்க வேண்டும்.

அது தான் மடி மீது இரண்யனை வைத்து வாசல் படி மீது அமர்ந்து நர நாராயணன் பிளந்தான். தீமைகள் நமக்குள் புகாதபடி தடுக்க வேண்டும்.

நமக்குத் துரோகம் செய்பவன் அமெரிக்காவில் இருந்தாலும் இடைஞ்சல் செய்தான் பாவி என்று எண்ணினால் அங்கே புரையோடுகின்றது. நன்மை செய்தான் என்று எண்ணினால் அங்கே விக்கலாகிறது. பாசத்தால் என்ன ஆனதோ என்று வேதனைப்பட்டால் அங்கே சிந்தனையைக் குறைக்கின்றது.

எந்தெந்த வகையில் நாம் எடுத்து இப்படிப் பதிவாக்குகின்றோமோ நமக்குள் இந்த உயிர் இயக்குகின்றான்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று முதலில் உள்ளே செலுத்துகின்றோம்.
1.ரத்தத்தில் கலந்து வெளியே வரும் பொழுது உள்ளே சுற்றும்.
2.உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று சொல்லி அதிலே அமுக்கி விடுகின்றோம்
3.அந்த வேதனையான உணர்வை இங்கே தடைப்படுத்துகின்றது… உந்தித் தள்ளுகின்றது.
4.தள்ளியவுடன் வேதனையை இழுக்கும் சக்தி இல்லை என்றால் சூரியன் பிடிப்பில்லாத அந்த உணர்வுகளை எடுத்துக் கொள்கின்றது
5.நம் ஆன்மாவை அப்பொழுது தூய்மைப்படுத்திக் தூய்மைப்படுத்திக் கொள்கின்றோம்.

நாம் செய்யும் தியானம் சரி இல்லையோ…? என்ற எண்ணமே வரக்கூடாது

நாம் செய்யும் தியானம் சரி இல்லையோ…? என்ற எண்ணமே வரக்கூடாது

 

நமது அன்பர் ஒருவர் ஆட்டோவை வேகமாக ஓட்டி வருகிறார். அப்பொழுது அது அவருக்குக் குஷியாகத் தெரிகிறது. ஆனால் தபோவனத்தின் கேட்டின் பக்கம் வரும் போது பிரேக் போட்டவுடன் சரியான நேரத்தில் திருப்பாமல் விட்டதால் கவிழ்ந்து விட்டது. அவர் தப்பி விட்டார்… வண்டியில் இருந்தவர் சிக்கிக் கொண்டார்.

இதற்கெல்லாம் காரணம் நமது உணர்வுகளில் வேகம் எதுவோ அதில் மகிழ்ச்சியைத் தூண்டும்.
1.அதனின் வேகச் செயலாக வேலை செய்யும்.
2.இதன் விளைவு நமக்குள் எப்படி ஊட்டும்…? என்பதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் இதைச் சொல்கிறோம்.

இதே மாதிரித் தான் நாம் ஆர்வமாகத் தியானம் செய்து கொண்டிருக்கிறோம். ஆர்வமாக இருக்கும் போது முந்தைய நிலைகள் நமக்குள் இயக்கும் போது “என்னத்தை எடுத்தோம்…? இப்படி வருகிறதே…! நாம் ஜெயிக்கவில்லை… நம்மால் முடியவில்லை போலும்…!” என்று விரக்தி அடைந்து விடுவார்கள்.

யாம் நீங்கள் அனைவரும் உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகின்றோம். இந்த உணர்வின் தன்மை மனக்கட்டுப்பாடு இல்லாதபடி இயக்கி வருகிறது.

1.ஏற்கனவே பதிவு செய்த உணர்வுகள் குறுக்கே குறுக்கே வருகிறது.
2.நாம் செய்யும் தியானம் சரியாக இல்லையோ…? என்று எண்ணத் தூண்டும்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

முந்தைய நிலைகளில் பதிவு செய்த நிலைகள் நமக்குள் உண்டு… அதை நாம் அடக்க வேண்டும். இந்த ஆறாவது அறிவிற்குள் அந்த மெய் ஞானிகளின் உணர்வைக் கவரும் திறமையாக வரவேண்டும். இதைப் படைக்க வேண்டும்.

இது தான் பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன்.
1.இந்த ஆறாவது அறிவால் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெற வேண்டும்… அதை ஞானமாக்க வேண்டும்.
2.இதைத் தான் உங்களுக்குள் அடிக்கடி பதிவு செய்கிறோம்.

அறியாது வரும் தீங்குகளை எப்படி நீக்கிப் பழக வேண்டும்…? என்று பல வழிகளிலும் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றோம்.

சப்தரிஷிகளின் அருள் ஒளி என் ஈர்ப்பு வட்டத்திற்குள்ளேயே இருக்க வேண்டும்

சப்தரிஷிகளின் அருள் ஒளி என் ஈர்ப்பு வட்டத்திற்குள்ளேயே இருக்க வேண்டும்

 

ஒரு நண்பன் நம்மிடம் துன்பம் என்று சொல்லும் பொழுது அதைக் கேட்டுணர்ந்து நுகர்ந்து அவர்களுக்கு உதவி செய்தாலும் அந்தத் துன்ப உணர்வுகள் உங்களுக்குள் சேராத வண்ணம் தடுக்க வேண்டும்.

1.இரும்பைப் புடம் போட்டு எப்படிப் பஸ்பமாக்குகின்றோமோ
2.அதனின் வலுவான சத்தை இழக்கச் செய்யாமல் அதனின் ஆற்றலை ஆக்கச் சக்தியாக மாற்றுவது போல
3.உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கேட்டறிந்த துன்ப உணர்வுகள் உங்களுக்குள் தீய விளைவுகளை உருவாக்காதபடி
4.இருளைப் போக்கி விஷத்தைப் புடமிட்டு உணர்வின் ஆற்றலைப் பெருக்கிய மாமகரிஷிகளின் உணர்வுகளை உங்கள் உடலுக்குள் சேர்த்த உடனே
5.புடம் போட்டு எடுத்தது போன்று உங்களைப் பரிசுத்தப்படுத்துகின்றது.
6.நீங்கள் எண்ணிய பொழுதெல்லாம் அந்தச் சக்தியை பெற முடியும்.

ஆண்டனாக்களைச் சரியான முறையில் பொருத்தி வைத்த பின் வெகு தொலைவில் இருந்து வரும் அலைகளை டிவி கவர்ந்து தெளிவாகக் காட்டுகிறது.

அதைப் போன்று உங்கள் நினைவால் மகரிஷிகளை எண்ணி ஏங்கும் பொழுது அந்த உணர்வின் சக்தியை நீங்கள் கவர்ந்து நீங்கள் செய்த நன்மையின் சக்தியை “என்றுமே நிலைத்திருக்கச் செய்ய முடியும்…”

1.உங்களை அறியாது புகுந்த விஷத்தின் தன்மை அதனுடைய தீய விளைவுகளை இயக்காது உங்களுடன் ஒத்துழைத்து
2.மெய் உணர்வுகள் மெய் ஞானிகளின் அருள் உணர்வுடன் இயக்கச் செய்யும் நிலையே இந்த ஆத்ம சுத்தி.

ஆகவே ஒவ்வொருவரும் கெட்டதைக் கேட்டாலும் கெட்டதைப் பார்த்தாலும் கெட்டதை எண்ணினாலும் கெட்டதைப் பேசினாலும் அடுத்த கணமே ஈஸ்வரா என்று உங்கள் உயிரை வேண்டி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி உடலுக்குள் செலுத்துங்கள்.

1.ஒரு நிமிடம் கண்களிலே அவ்வாறு ஏங்கிப் பெறுவதும்
2.அதற்குப்பின் கண்களை மூடி மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒரு நிமிடம் உங்கள் உடலுக்குள் செலுத்தித் தியானிக்கும் போது
3.இதற்கு ஆத்ம சுத்தி என்று பெயர்.

வீட்டை விட்டு வெளியே எங்கு சென்றாலும் ஆத்ம சுத்தி செய்துவிட்டுச் செல்லுங்கள்.

எந்தக் காரியத்திற்குச் செல்கின்றோமோ அவர்களை எண்ணி என் பார்வை அவரை நல்லதாக்க வேண்டும் என் சொல் இனிமை பெற வேண்டும் என்னைப் பார்க்கும் பொழுது “நன்மை செய்யக்கூடிய எண்ணங்கள்” அவர்களுக்கு வர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

உங்கள் கடைக்குச் செல்கிறீர்கள் என்றால் ஆத்ம சுத்தி செய்து விட்டு என் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவருமே மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் அவர் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

1.இதைப்போல் ஆத்ம சுத்தி செய்து அந்த உணர்வோடு கடையில் இருக்கும் பொருள்களைப் பார்த்து
2.இதைப் பயன்படுத்துவர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் உடல் நலமும் மன பலமும் மன வளமும் பெற வேண்டும்
3.அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ணிக் கடை வியாபாரத்தைத் தொடங்க வேண்டும்.

தொழில் செய்யும் இடத்திலும் அங்கே அமர்ந்து ஆத்ம சுத்தி செய்துவிட்டு நம்மிடம் வேலை செய்பவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என் பார்வையால் அவர்கள் உடல் நலமும் மன பலமும் செய்யும் தொழிலைத் திறம்படச் செய்யும் சக்தியாகவும் என் பார்வை அவர்களை நல்லதாக்க வேண்டும். என் சொல் அவர்களை இனிமை பெறச் செய்ய வேண்டும்… அவர்களைப் புனிதப்படுத்தும் செயலாக அமைய வேண்டும் என்று எண்ண வேண்டும்.

மேல் அதிகாரிகளுக்கும் இதே போன்று எண்ணும் பொழுது என் பார்வை அவர்களை நல்லதாக்க வேண்டும் என் செயல் அவரைப் போற்றும் நிலையாக வர வேண்டும். என் சொல் அவருக்கு இனிமை பெற வேண்டும் அவர் என்னைப் பார்க்கும் பொழுது நல்ல செயல்கள் செய்து தர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

நாம் உற்பத்தி செய்யும் பொருள்களைப் பயன்படுத்துவோர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு நாம் தொழிலைச் செயல் படுத்த வேண்டும்.

நோயாளிகளைப் பார்த்தால் ஆத்ம சுத்தி செய்துவிட்டு மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள்… மகரிஷிகளின் அருள் சக்தியால் உங்கள் நோய் நீங்கும் நலம் பெறுவீர்கள் என்ற இந்த வாக்கினை அங்கே பதிவு செய்யுங்கள்.

குழந்தைகள் செயலைப் பார்த்து வெறுப்பு வரும் பொழுது ஆத்ம சுத்தி செய்துவிட்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தி குழந்தைகள் பெற்று அதன் வழி அவர்கள் எதிர்காலம் சிறந்திருக்கும்
2.கல்வியில் சிறந்த குழந்தைகளாக வளர்வார்கள்
3.என் பார்வை அவர்களை அந்த நிலைக்கு உயர்த்தும் என்று எண்ணிச் செயல்படுத்துங்கள்.
4.இந்த உணர்வோடு குழந்தைகளிடம் பேச முற்படுங்கள்.

கணவனும் மனைவியும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒருவருக்கொருவர் பாய்ச்சுங்கள்.

பெண்கள் சமையல் செய்யும் பொழுது ஆத்ம சுத்தி செய்துவிட்டு நான் சமைக்கும் ஆகாரம் அதை உணவாக உட்கொள்ளும் அனைவருக்கும் உடல் உடல் நலமும் மன பலமும் பெற வேண்டும் என்று எண்ணிச் செயல்படுத்துங்கள்.

ஆகாரத்தைப் பரிமாறும் பொழுதும் நான் பரிமாறும் இந்த ஆகாரத்தை உட்கொள்ளும் அனைவரும் மன பலம் உடல் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பரிமாறுங்கள்.

சாப்பிடுபவர்களும் ஆத்ம சுத்தி செய்துவிட்டு நான் சாப்பிடும் ஆகாரம் என் உடலில் நலம் பெறும் சக்தியாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தியாக அது மலர வேண்டும் என்று எண்ணி உட்கொள்ளுங்கள்.

இரவிலே படுக்கச் செல்லும் பொழுது ஆத்ம சுத்தி செய்துவிட்டு எதையெல்லாம் நல்லதாகப் பெற வேண்டுமா
1.உங்கள் உணர்வின் வட்டம் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அந்த உணர்வின் ஆற்றல் எனக்குள் விளைந்து கொண்டே இருக்க வேண்டும்.
2.சப்தரிஷிகளின் அருள் ஒளி என் ஈர்ப்பு வட்டத்திற்குள்ளேயே இருக்க வேண்டும்.
3.என்றுமே அந்த உணர்வின் சக்தி எனக்குள் வளர வேண்டும் என்று எண்ணிவிட்டுப் படுங்கள்.

காலையில் எழுந்திருக்கும் பொழுது ஆத்ம சுத்தி செய்து என் பார்வை அனைவரையும் நலமாக்க வேண்டும் என் சொல் கேட்போர் அனைவரையும் மகிழச் செய்ய வேண்டும். என் பேச்சைக் கேட்போர் மெய் ஒளியாகப் படர வேண்டும் நாம் பார்க்கும் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் எண்ணி அந்த உணர்வோடு எழுந்து வேலைகளைச் செய்யுங்கள்.

நம்மிடம் பொருள் வாங்கிச் சென்றவர்கள் பாக்கியைத் திரும்பத் தரவில்லை என்றால் ஆத்ம சுத்தி செய்துவிட்டு அவர்கள் வியாபாரம் செழித்து வளர வேண்டும் அவர்களுக்கு நல்ல வருமானம் வர வேண்டும் நமக்குத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர்கள் பால் செலுத்துங்கள்.

இது போன்று வாழ்க்கையில் எத்தகைய நிலைகளைச் சந்தித்தாலும் கோபமோ வெறுப்போ வந்தாலும் அந்த உணர்வுகள் நமக்குள் வளராது தடுக்க ஆத்ம சுத்தி செய்யுங்கள்.

பின் யார் மேல் கோபமோ வெறுப்போ வருகின்றதோ என் பார்வை அவரை நல்லதாக வேண்டும் அவர் செயல்கள் அனைத்தும் புனிதம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

1.ஆத்ம சுத்தி என்ற நிலையில் அடிக்கடி நாம் விண்ணை நோக்கி ஏங்கி வரும் பொழுது
2.இந்த வாழ்க்கையில் சப்தரிஷி மண்டல உணர்வுடன் நாம் கலக்கின்றோம்… அதை நம் உடலுக்குள் சேர்க்கின்றோம்.

நம் உடலில் எத்தகைய நோய் இருந்தாலும் அந்த நோயை மறந்து விடுங்கள். மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலில் படர வேண்டும் உடல் நோய் நீங்க வேண்டும் எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும் என்னைப் பார்ப்பவர் எல்லாம் நலம் பெற வேண்டும் அந்தச் சக்தி எனக்குள் ஓங்கி வளர வேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி என்றுமே என்னுள் நிலைத்திருக்க வேண்டும் நோய்கள் அனைத்தும் நீங்கிட வேண்டும் என்று எண்ணுங்கள்.

எந்த இடத்தில் உடலில் அந்தப் பாதிப்புகள் இருக்கின்றதோ அங்கே நினைவைச் செலுத்தி “நோய் நீங்க வேண்டும்… நீங்க வேண்டும்…” என்று எண்ணுங்கள்.

1.மகரிஷிகளின் அருள் சக்தியால் என் உடல் நலம் பெறும் சக்தியாக வளர்கின்றது
2.இப்பொழுது நான் நலம் பெற்று வருகிறேன்
3.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என் எண்ணங்கள் சுழல்கின்றது
4.என் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெறுவேன்
4.என் உடலில் மகிழ்ச்சி பெறுவேன் என்று இது போன்று எண்ணங்களை அடிக்கடி எண்ணிப் பாருங்கள்.

இவ்வாறு நாம் எண்ணிக் கொடுப்பது அனைத்தையும் இந்த உயிர் படைக்கின்றது இயக்குகின்றது உடலாக்குகின்றது விளைய வைக்கின்றது… இந்த உணர்வையே தன்னுள் இணைத்துக் கொள்கின்றது. அதனுடைய வளர்ச்சியில் நம்மை ஒளிச் சரீரமாக நிலைக்கச் செய்கின்றது.

ஒவ்வொரு நிமிடமும் நாம் வெளிப்படுத்தும் இத்தகைய மூச்சலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. இந்தக் காற்று மண்டலத்தில் அது பெருகுகின்றது. அனைவருக்கும் நன்மை பெறும் சக்தியாக அமைகின்றது.

இதைத் தொடர்ந்து செய்து வர சப்தரிஷி மண்டல அலைகள் நமக்குள் பெருகிக் கொண்டே வருகின்றது.

1.இந்த உடலை விட்டு நாம் எப்பொழுது வெளியில் செல்வோம் என்று தெரியாது.
2.ஆகவே உடலில் இருக்கும் பொழுதே நம் வாழ்க்கையைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்துக் கொண்டால்
3.இந்த நினைவுடனே நாம் அங்கே செல்ல முடியும்.

உடலுக்குள் வரக்கூடிய கெடுதலை குரு அருளால் நீக்க முடியும்

உடலுக்குள் வரக்கூடிய கெடுதலை குரு அருளால் நீக்க முடியும்

 

ஒரு நாள் இரவு மழையுடன் பக்கத்துக் கிராமத்திலிருந்து, பெண் குழந்தை ஒன்றை இளம்பிள்ளை வாதத்துடன், (இரண்டு காலும் ஆடிக்கொண்டிருக்கிறது) தபோவனத்திற்கு எடுத்துக் கொண்டு வந்தார்கள். காலை 05.30 முதல் 6 மணிக்குள் இருக்கும்.

அழுது கொண்டு வருகிறார்கள். இளம் பிள்ளை வாதம் வந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது. பெண் குழந்தையாக இருக்கிறது. ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது என்று பொலபொலவென்று அழுது கொண்டே இருந்தார்கள்.

ஆரம்பக் காலங்களில் இது நடந்தது. அப்பொழுது கொஞ்சம் ரூம்கள்தான் இருந்தது. குழந்தைக்குச் சரி செய்து விட்டோம். எழுந்து நடந்தது. அதன்பின் சாமி எப்படி இருக்கிறார்…? என்று எட்டிக்கூட பார்க்கவில்லை. வைத்தியம் பார்த்தது அவர்களுக்குச் சௌகரியமாக போய்விட்டது.

நாளைக்கு நீங்கள் கஷ்டப்படாதபடி இந்த மூச்சை எடுத்துக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று இதையும் கொடுத்துள்ளோம்.
1.உடல் நலமாக வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்தத் தியானம் செய்வதாலே உடம்பு நல்லதாகி விடும்…
2.வரக்கூடிய கெடுதலை உங்களாலேயே மாற்றிக் கொள்ள முடியும்.

பெரும் பகுதியானோர் இன்னும் சாமியாரைத் தேடிப் போக வேண்டும் ஜோசியம் பார்க்க வேண்டும் என்று தான் எண்ணிக் கொண்டிருக்கிறார்களே தவிர தனக்குள் தீமை வராமல் தடுத்துக் கொள்ள இப்படிச் செய்யுங்கள் என்கிறோம்…! இதைக் கவனிக்க மாட்டேன் என்கிறார்கள்.

உடம்புக்கே சௌகரியம் இல்லாமல் போய் விட்டாலும் கூட
1.அப்பொழுது இந்தத் தியானத்தைச் செய்யலாம் என்றாலும் கூட அதற்கும் நேரமில்லை என்றுதான் சொல்கிறார்கள்.
2.காசைக் கொடுத்துத் தான் உடம்பை நல்லதாக்க வேண்டும் என்று எண்ணுகின்றார்கள்.

ஆனால் மனிதனாகப் பிறப்பது ரொம்ப அபூர்வம். நாம் துன்பத்தைச் சுவாசித்தவுடன் நம் உடலில் புண் வருகிறது சிரங்கு வருகிறது அது வருகிறது இது வருகிறது என்றால் இந்த உணர்வின் அணுக்களாகச் சேர்த்து உயிராத்மாவில் சேர்ந்து விடுகின்றது.

1.ஆகவே ஒவ்வொருத்தரும் உங்களை முழுமையாக நம்புங்கள்.
2.உங்கள் அம்மா அப்பாவைத் தெய்வமாக எண்ணுங்கள்.
3.உங்கள் உயிரைக் கடவுளாக மதியுங்கள்… உங்கள் உடலை அவன் அமைத்துக் கொண்ட கோயில் என்று நினையுங்கள்.
4.நல்ல குணத்தை வளர்ப்பதற்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுங்கள்.

ஞானிகளின் உடலில் விளைந்த நல்ல சக்தியை எடுப்பதற்கு உபதேசத்தின் வாயிலாகச் சக்தி கொடுக்கிறோம். உடனடியாக அதைப் பெறுவதற்கு ஆத்ம சுத்தி என்ற வாக்கையும் கொடுக்கிறோம்.

இதைப் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டத்தை, நிவர்த்தி பண்ணுங்கள். சுலபமாகக் கொடுக்கின்றோம்… உங்களால் நிச்சயம் தீமைகளை நீக்க முடியும்.