அகஸ்தியரும் அவருடைய மனைவியும் இரு உயிரும் ஒன்றி வாழ்ந்த அருள் வாழ்க்கை

அகஸ்தியரும் அவருடைய மனைவியும் இரு உயிரும் ஒன்றி வாழ்ந்த அருள் வாழ்க்கை

 

அகஸ்திய மாமகரிஷி அவர்கள் தம்முள் உள்ள நஞ்சினை அடக்கிப் புவியின் துருவத்தின் வழியாக விண்ணின் ஆற்றலைத் தம்முள் நுகர்ந்து…
1.எதை எல்லையாக வைத்து எதனை நுகர்ந்தாரோ அதனின் ஆற்றலை தம்முள் பெற்றவர்.
2.புவியில் வாழ்ந்த காலத்தில் ஒவ்வொன்றின் உணர்வையும் அவர் நுகர்ந்தறிந்து
3.அதனைத் தம்முள் விளைய வைத்து அதனின் ஆற்றலைத் தம்முள் பெருக்கிக் கொண்டவர்.

அகஸ்தியர் தம்முள் விளைய வைத்து வளர்த்துக் கொண்ட பேராற்றல்களை தம் மனைவியின் பால் பாய்ச்சித் தமது மனைவியும் மெய்யுணர்வின் தன்மை பெற வேண்டும்… அதன் வழி கொண்டு இருளைப் போக்கி பொருள் காணும் திறன் பெற வேண்டும் என்றும் தம் மனைவி தம்முள் அறியாது சேர்ந்த நஞ்சை அடக்கி தம்முள் சேர்த்த உணர்வுகளை ஒளியின் உணர்வின் தன்மையாக மாற்ற வேண்டும் என்றும் அந்த அருள் உணர்வுகளைத் தன் மனைவிக்கு ஊட்டினார்.

அகஸ்தியரின் மனைவி… தமது கணவர் தமக்கு ஊட்டிய அருள் உணர்வின் தன்மைகளைத் தமக்குள் இணைத்து வளர்த்து அதன் நிலை கொண்டு பேரானந்தத்தின் உணர்வின் தன்மைகளை அறிந்து இவைகளைத் தாம் தன் கணவராலேயே பெற்றோம் என்று உணர்ந்து கொண்டார்.

அவ்வாறு உணர்ந்த பின்
1.தாம் பெற்ற பேரானந்தத்தின் உணர்வின் தன்மைகள் தமது கணவரிடத்தில் மென்மேலும் வளர வேண்டும்
2.அவர் உயர்ந்த ஆற்றல்களைப் பெற வேண்டும்.
3.அவருடைய அருள் துணை கொண்டு தம்முள் அருள் ஆற்றல்கள் பெருக வேண்டும் என்ற உணர்வை வளர்த்து
4.தமது கணவரின் உணர்வுகளுடன் தமது உணர்வுகளை இரண்டற இணைத்து இரு உணர்வுகளையும் ஒரு உணர்வாக ஒன்றிணைத்து
5.இவ்வாறு அந்த இருவருமே துருவத்தின் ஆற்றல்களைத் தம்முள் வளர்த்துக் கொண்டார்கள்.

அகஸ்தியரும் அவரும் மனைவியும் தங்களுடைய உணர்வுகளை ஓர் உணர்வாக்கி விஷத்தை அடக்கி நல் ஒளியின் உணர்வினை தங்களுக்குள் வளர்த்து… இரு உயிரையும் ஒரு உயிராக்கித் துருவத்தின் ஆற்றலை நுகர்ந்து தங்களுக்குள் விளைய வைத்துத் துருவ நட்சத்திரமாக எதையும் அடக்கிடும் உருவாக்கிடும் நிலையாக உருவானார்கள்.

அவர்கள் இன்றும் விண்ணிலே நம் பூமியின் துருவப் பகுதியில் துருவ நட்சத்திரமாக என்றும் பதினாறாக அழியா ஒளிச் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

பொதுவாக ஆண்பால் என்பது ஆதிக்க உணர்வும் பெண்பால் என்பது அரவணைத்து இயக்கும் நிலையும் கொண்டது. இதில் தனித்து இயங்கும் நிலையானால் ”முனியாகத்தான்” ஆக முடியும் என்ற உண்மையின் தன்மைகளை உணர்த்தியவர்கள் மெய் ஞானிகள்.

மெய் ஞானிகள் உணர்த்திய அருள் வழி கொண்டு ஒவ்வொரு குடும்பத்திலும் கணவனும் மனைவியும் இரு உணர்வும் ஒரு உணர்வாக ஒன்றுபட்டு… ஒருவர் மற்றவரை எண்ணி “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் உயர்ந்த ஆற்றல்களைப் பெற வேண்டும்” என்று ஒருவருக்கொருவர் எண்ண வேண்டும்.

1.இப்படிக் கணவனும் மனைவியும் ஒன்றிணைக்கும் பொழுது வலுவாகின்றது.
2.துருவ மகரிஷிகளின் அருளுணர்வுகளை எளிதில் ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கின்றது.

வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கும் நிலையாக… கணவனும் மனைவியும் தங்களுடைய உணர்வுகளை ஒன்றிணைத்துத் துருவ மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எண்ணி ஏங்கித் தியானித்து அதனின் உணர்வுகளை தங்களுடைய இல்லம் முழுவதும் படரச் செய்ய வேண்டும்.

அப்படிப் படரச் செய்யும் பொழுது அந்த இல்லத்தில் வசிப்பவர்களிடத்திலும் அந்த இல்லத்திற்கு வருகை புரிபவர்களிடத்திலும் அங்கே பதிந்துள்ள மகரிஷிகளின் அருள் உணர்வுகள் இணைந்து… அவர்களிடத்தில் தீமைகளைப் போக்கும் நிலையாக மலரைப் போன்று நறுமணமும் மகிழ்ச்சியும் பெறும் நிலையாக விளைகின்றது.

ஆகவே கணவன் மனைவி இருவரும் அதிகாலை 4.00 மணியிலிருந்து 6.00 மணிக்குள் துருவ தியானத்தில் ஒன்றாக அமர்ந்து துருவ மகரிஷிகளின் அருள் ஆற்றலின் உணர்வுகளை எண்ணி ஏங்கித் தியானித்துத் தங்களுக்குள் இணைத்து… சந்தர்ப்பங்களால் வந்து சேரும் தீமைகளை நீக்கிப் பொருள் காணும் திறன் பெற்று நஞ்சை அடக்கி ஒளியின் உணர்வுகளாக வளர்க்கும் நிலை பெறுதல் வேண்டும்.

அதைப் போன்று நீங்கள் பார்ப்பவர்களும் உங்களைப் பார்க்கின்றவர்களும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து தெளிந்த சிந்தனையுடன் மலரைப் போன்ற மணத்துடன் மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தியும் பெறுதல் வேண்டும்.

1.கரண்ட்டில் “பாசிடிவ் நெகடிவ்” என்ற இரு இணைப்பையும் கொடுக்கப்படும் பொழுது எப்படி விளக்கு ஒளி பெறுகின்றதோ அதே போன்று
2.கணவன் மனைவி இருவரும் தங்களுடைய உணர்வுகளை ஒருங்கிணைத்து
3.புவியில் படரும் துருவ மகரிஷிகளின் அருள் உணர்வுகளைத் தங்களிடத்தில் இணைத்துப் பெருக்க வேண்டும்.
4.அப்படிப் பெருக்கித் தங்களிடத்தில் நஞ்சான தீமைகளுக்கு இடமில்லாது செய்து அருள் உணர்வின் அணுக்களைப் பெருக்க வேண்டும்.

இதைப் படிப்போர்… நீங்கள் கணவனும் மனைவியும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து பிறவியில்லாத நிலையான அழியா ஒளிச் சரீர வாழ்வைப் பெறும் நிலையாக இரு உயிரையும் ஒரு உயிராக்கிப் பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து ஒவ்வொரு நாளும் அருள் ஆற்றலைத் தங்களிடத்தில் வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும். எமது அருளாசிகள்.

தொழில் ரகசியம்

தொழில் ரகசியம்

 

தொழிலைப் பற்றிய ரகசியங்களை உங்களுக்கு வேண்டிய நண்பர்களுக்குச் சொல்வதற்கு முன்பு “அவர் எப்படி உங்களுடன் பழகுகின்றார்…?” என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

தொழிலில் என்றைக்குமே கை மூடியே வைக்க வேண்டும். வாழ்க்கையை ஓட்டுவதற்கு ஓரளவுக்கு வருவாய் வந்து கொண்டிருக்கின்றது என்று இதை மட்டும் சொல்லலாம்.

நடப்பது அனைத்தையும்…
1.நான் இந்தப் பக்கம் போய்த் தொழில் செய்தேன்… பின் இந்தப் பக்கம் சென்றேன்…
2.எனக்கு அதில் வருமானம் இப்படி எல்லாம் வந்தது என்று சொல்லக் கூடாது.

ஆனால் உங்கள் கூட்டாளியாக இருப்பவரிடம் போகும் பாதைகளை இப்படி இருக்கின்றது… இதை எப்படி வழி நடத்தலாம்…? என்று இரண்டு பேரும் சிந்தனை செய்து செயல்படுத்துவது நல்லது.

இருவரும் கூட்டாளியாக இருந்து செயல்படுத்தும் போது ஒரு சிறு விஷயத்தை மறைத்து விட்டால் அவருக்கு உடனே நம்மிடம் மறைக்கின்றார் என்ற சந்தேகம் வந்துவிடும். ஆகவே அவரிடம் விஷயங்களைச் சொல்லக்கூடிய கடமைகள் உண்டு.

அதே சமயத்தில் மனைவியிடம் இந்த உண்மைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு சந்தோஷத்தை ஊட்டலாம்… தொழில் உயர வேண்டும் என்ற உணர்வை ஊட்டலாம்.

ஆனால் மிக முக்கிய நண்பராக இருந்தாலும்
1.ஏதோ உங்கள் ஆசியினால் தொழில் நன்றாக இருக்கின்றது…
2.உங்கள் ஆசி மீண்டும் தேவைப்படுகிறது என்று அவர்களை உயர்த்தி நாம் இப்படிக் கொண்டு வர வேண்டும்.

ஆனால் பப்ளிக்காக நாம் இதைச் சொல்ல தொடங்கினால் ஒருத்தருடைய உணர்வு விஷத் தன்மையாக இருக்கும். நாம் சொல்லும் பொழுதே அப்படியா…! என்று அவர்கள் கண்ணின் பார்வையும்… உற்று நோக்குவதும் இந்த நினைவாற்றலை அதற்குள்ளேயே நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஆகவே தொழிலின் ரகசியங்களை நாம் சொல்லவே கூடாது.

உலகிலேயே ஒரு புதிய தொழிலில் ஒரு பொருளைக் கண்டுபிடிக்கிறார்கள் என்றால் அதில் என்னென்ன சரக்கைப் போட்டிருக்கின்றோம்…? என்று விளம்பரப்படுத்துவார்கள். ஆனால் முக்கியமான பொருளைக் காட்டவே மாட்டார்கள்.

1.அரசாங்கம் கட்டாயப்படுத்தினாலும் அதில் ஒரு முக்கியமான பொருளையும்
2.அதனுடைய கலவை விகிதம் எவ்வளவு என்று சொல்ல மாட்டார்கள்.
3.மற்றதையெல்லாம் இன்னென்ன அளவு என்று எழுதியிருப்பார்கள்.

ஆனால் முக்கிய பொருளை மாற்றி விடுவார்கள். அதிலே போட்டிருப்பது போன்று மற்றவர்கள் கலவை செய்து பொருளை உற்பத்தி செய்தால் தரம் சரியாக வராது… வித்தியாசமாகிவிடும்.

அரசின் சட்டப்படி சொன்னாலும் அதற்காக வேண்டி இவர்கள் அளவுகோல்களை மாற்றி விடுவார்கள். அதிலே இல்லாத சரக்கையும் சேர்த்து விடுவார்கள். மற்றவர்கள் செய்து பார்த்தால் கடைசியில் வராது. அவர்கள் கொண்டு வரும் தரத்தை இங்கே கொண்டுவர முடியாது.

தொழில் ரீதியிலே நாம் மறைத்துச் சொல்ல வேண்டி இருக்கின்றது.

ஆன்மீக ரீதியிலே நீங்கள் வளரக்கூடிய உண்மை நிலைகளைச் சொல்லலாம். அந்த ஆன்மீகத்திலும் கூட
1.எனக்கு இவ்வளவு பெரிய காட்சிகள் கிடைத்தது… சக்திகள் கிடைத்தது என்று சொன்னால்
2.பார்…! அவருக்குக் கிடைக்கின்றது… எனக்குக் கிடைக்கவில்லை…! என்று இதிலும் பொறாமை உணர்வு வரும்.

உங்களுக்கு எப்படி இவ்வளவு கிடைக்கிறது…?
1.சாமி உங்களுக்கு ஸ்பெஷலா கொடுக்கின்றாரா…? என்று ஒருவர் கிண்டலாகவும் கேட்பார்.
2.உனக்கு மட்டும் தெரிகின்றது… எனக்கு ஏன் தெரியவில்லை…? என்று பொதுத் தன்மையில் வருபவர்கள் சிலர் இப்படியும் வந்து விடுவார்கள்

ஆகவே எதைச் சொல்ல வேண்டும்…? எதைப் பேச வேண்டும்…? என்று உணர்வின் தன்மை முழுமை அடைய நம் எண்னத்தைச் செலுத்துதல் வேண்டும்.

நாம் தெரிந்து கொண்ட உணர்வுகளைப் பக்குவப்படுத்த நாம் இப்படி இருக்க வேண்டும்… இப்படிச் செய்ய வேண்டும் என்று
1.உங்களுக்குள் தெரிந்த கருத்தை… நீங்கள் சொல்வதாக இருக்க வேண்டுமே தவிர
2.இந்தக் கருத்துக்கள் எனக்குத் தெரிந்தது என்று சொல்லக்கூடாது.

இதனால் பெரும் பிழைகளும் சந்தேகமும் அவமதிப்பும் சில நிலைகள் எல்லாம் ஏற்படும். இன்றைக்கு இருக்கும் சமுதாயத்திற்கு மத்தியில் இப்படி எல்லாம் நாம் வழி நடத்திச் செல்ல வேண்டி இருக்கின்றது.

பார்… அவருக்கு மட்டும் எல்லாம் தெரிகிறது…! அவர் என்னமோ உளறுகின்றார்… எல்லாம் தெரிந்த மாதிரிப் பேசுகிறார்…! என்று மற்றவரிடம் சொல்வார்கள்.

இதை நீங்கள் கேட்டால் என்ன செய்வீர்கள்…? ஆகவே உண்மை நிலைகள் தெரிந்தால்
1.அவர்களைப் பக்குவப்படுத்தக்கூடிய ஒரு ஞானத்தின் வழிகளிலே நீங்கள் சொன்னால்…
2.நீங்கள் சொல்வதாகத் தெரிந்து கொள்வார்கள்.

எனக்குத் தெரிந்தது இப்படி நீங்கள் நடந்து பாருங்கள்…! என்று சொன்னால் பிழையாகும். ஆன்மீகத்திலும் இப்படி ஒரு நிலை. மனிதனின் உணர்வுகள் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் உணர்வின் தன்மை அழுத்தமான பின் இன்னொரு மனிதன் இதைத் தாங்கும் நிலை இல்லை.

அவருக்கு அதைத் தாங்க முடியவில்லை என்றால் எதிர்மறை பொறிகளாகிவிடும்… அவர் உடலுக்குள் அந்த எதிர்ப்புகள் ஏற்படும். ஆனால் அவர்களுடைய குற்றம் அல்ல.

யாரும் வேண்டுமென்று அவ்வாறு சொல்வதில்லை.

ஆனால் இந்த உணர்வின் அழுத்தங்களாகும் பொழுது உணர்ச்சிகள் மாறுபட்டுவிடும். அழுத்தமாகும் போது அவர் உடலுக்குள் எதிர்ப்பு நிலைகள் உருவாகும் பொழுது வித்தியாசமாக வந்துவிடும். இது எல்லாம் உணர்வின் இயக்கம் தான்.

ஆகவே நீங்கள் பக்குவப்படுத்தி நடந்து கொள்ளுங்கள்.

பெண்கள் தான் “ஆதி சக்தி” – தாய்மை

பெண்கள் தான் “ஆதி சக்தி” – தாய்மை

மதங்கள் அனைத்துமே… மதத்தைக் காப்பதற்குப் பல நிர்பந்த ஆற்றல்களைப் பயன்படுத்தி மெய்யுணர்வை அவர்கள் பெறாத வண்ணம் தடுத்து நிறுத்தி அதை எல்லாமே பெண்கள் வழியில் தான் தீட்சனியங்களை அதீதமான நிலைகளில் பாய்ச்சி
1.எந்த மதமானலும் சரி… பெண்களைச் சாடியே தான் இருப்பார்கள்.
2.பெண்களுடைய ஆற்றலை மடக்கித் தடுத்து கொண்டே தான் இருப்பார்கள்.
3.அவர்களைப் பாதகப்படுத்தியே தான் இருப்பார்கள்.

அந்தப் பாதக நிலைகளிலே அவர்கள் எடுத்துக் கொண்ட மூச்சுக்கள் எந்தெந்தத் தாய்மார்களிடம் இது படுகின்றதோ அவரிட்ட மூச்சலைகள் அனைத்துமே அது “அக்னி சக்தி” என்று தெரியாது… ஆதி சக்திதான் அது.

ஆவி அது அண்டத்திலே சேர்ந்தபின் ஒரு திடப்பொருளாகும் பொழுது துவைதம்… அது சிவமாகின்றது. நம் உடலுக்குள் நின்று சக்தியாக இயங்குவதும் அதுவே… கருவின் தன்மை உருவாக்குவதும் அதுவே.

இந்தத் தாய்மையினுடைய நிலைகள், எண்ணத்தாலே இருவருடைய எண்ணங்கள் ஒன்று சேர்க்கவில்லை என்றால் அந்த உணர்வின் எண்ணம் பிரதிபலிக்காது.

கணவன் மனைவியினுடைய நிலைகள் ஒன்று சேர்ந்து யாரொரொவர் இயக்குகின்றனரோ அவர்களைப் “புனித மகான்…” என்றே கூடச் சொல்லலாம்.

மகரிஷிகள் காட்டிய வழிப்படி… அந்த மாமகரிஷி ஆதிசங்கரர் சொன்னது போன்று
1.சிவ சக்தியின் ஸ்வரூபமாகக் கணவன் மனைவி ஒன்று சேர்ந்த நிலையில்
2.ஒருங்கிணைந்த எண்ணத்துடன் அவர்கள் வாழ்க்கையில் தொடரப்படும் போது
3.தனக்குப் பிறக்கும் குழந்தைகளும் மெய்யுணர்வின் தன்மை கொண்டு மெய் ஒளி வளர்க்கப்பட்டு
4.விண்ணின் ஆற்றலைப் பெறும் தகுதியை அந்தக் குழந்தைகள் பெறும் போது
5.அந்தத் தாய்மையான நிலைகள் அவர்களுக்குக் கிடைக்கின்றது.

வியாழன் கோளிலிருந்து பூமிக்கு வந்தவர்கள் தான் நாம் (விஞ்ஞானிகள் கண்டு இனி சொல்வார்கள்)

வியாழன் கோளிலிருந்து பூமிக்கு வந்தவர்கள் தான் நாம் (விஞ்ஞானிகள் கண்டு இனி சொல்வார்கள்)

 

நாம் வாழும் இந்த பூமி சீக்கிரம் அழியப் போகின்றது. காரணம் விஞ்ஞான உலகின் அணுக்கதிரியக்கங்கள் அதிகமாகப் பரவி விட்டது. சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து விட்டது. பூமியின் நடு மையத்திற்குள் இது ஊடுருவிச் சென்று கொண்டிருக்கின்றது.

அணுக் கதிரியக்கங்கள் சூரியனின் வெப்ப காந்தத்தில் கலந்த பின்
1.இந்த உணர்வுகள் அதில் இருக்கக்கூடிய காந்தமும்
2.பூமியிலிருக்கும் காந்தமும் உலோகத்தில் இருக்கக்கூடிய காந்தங்களுடன் மோதிய பின்
3.புயலடித்த மாதிரி இரும்பும் உருகுகின்றது… கதிரியக்கங்கள் மீண்டும் அது வளர்ச்சி பெறுகின்றது.

மற்றதெல்லாம் பிளந்து விட்டு ஊடுருவி அனைத்தையும் அழித்துவிட்டு
1.அதில் இருக்கக்கூடிய வீரிய சக்தி அடங்கும் வரையிலும் சுழிக் காற்று போன்று
2.செடி கொடி கல் மண் மரம் எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு செல்கின்றது.
3.பூமியில் இருக்கும் அணுவினைப் (கதிரியக்கம்) பிளந்து விஞ்ஞானிகள் செய்து கொண்ட நிலைகள் இது.

அதை வைத்து மின்சாரத்தை நாங்கள் உற்பத்தி செய்கிறோம். எத்தனையோ பல வேலைகள் செய்கிறோம் என்று சொல்லலாம். அதனுடைய தணிந்த உணர்வின் நிலைகள் வந்தாலும் இந்தச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்தே இருக்கின்றது.

பூமிக்குள் இருந்தால் தான் இதனால் விபத்து என்ற நிலை இருந்தாலும் பூமியைக் கடந்து பிரபஞ்சத்திலே பரிசீலனைக்காக வெடிக்கச் செய்தாலும் வான வீதியிலே இந்த அணுக்களின் தன்மை படர்ந்து “பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஓசோன் திரையைக் கிழித்து விட்டு…” இந்த விஷத்தின் தன்மை பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து கொண்டு தான் இருக்கின்றது.

இது அனைத்தும் பூமியின் நடு மையம் சென்றடைந்து விடும். வெப்பத்தின் தணல்கள் கூடும்… பனிப்பாறைகள் அனைத்தும் உருகும். உருகிய நீர்கள் நிலங்களைக் குறையச் செய்யும்.

நீர்கள் கூடினாலும் வெப்பத்தினால் பனிப்பாறைகள் கரைய நீரின் தன்மை பரவிப் படர்ந்தாலும்
1.சூரியனை விட்டு இந்த பூமி நகர்ந்து செல்லும் சந்தர்ப்பம் உருவாகின்றது.
2.அப்படி நகர்ந்து சென்ற பின் பூமிக்குள் நீர்கள் அனைத்தும் பனிப் பாறைகளாக உறைந்து விடும்.
3.நம் உயிர்கள் எல்லாம் அதற்குள் அமுங்கிவிடும்.

கோழி முட்டையை ஐஸ் பெட்டிக்குள் வைத்துத் தேவை ஏற்படும் போது அதை எடுத்துக் குஞ்சாகப் பொரிப்பது போன்று ஆகிவிடும்.

ஏனென்றால் “வியாழன் கோளில் நம் உயிரணுக்கள் அனைத்தும் சிக்கப்பட்டு…” அதிலிருந்து மீண்டும் தெறிக்கப்பட்டு வான் வீதிக்கு வந்து இப்பொழுது மனிதனாக நாம் இங்கே இந்தப் பூமியில் பிறந்து இருக்கின்றோம்.

அதனால் தான் வியாழன் கோளைக் குரு என்று சொல்வது.

அதில் மனிதர்கள் வாழ்ந்து வளர்ச்சியாகி தவறு செய்து போர் முறையாகி அவர்கள் உபயோகித்த ஆயுதங்கள் எல்லாம் அங்கே உண்டு.

1.வியாழன் கோளில் இப்போதும் மண்ணைத் தோண்டி எடுத்தோம் என்றால்
2.இங்கிருக்கும் விஞ்ஞானிகள் செய்ததற்கெல்லாம் அப்பனாக அவர்கள் செய்து வைத்த ஆயுதங்கள் அங்கே அடியில் பதிந்துள்ளது.

இதை எல்லாம் குருநாதர் எமக்குக் காட்டி இருக்கின்றார்.

அங்கே ஏற்பட்ட பிரளயத்தால் பனிப்பாறைகளாக ஆகி அதிலே சிக்கிய உயிர்கள்… எடுத்துக் கொண்ட நிலைகள் தான் கதிரியக்கச் சக்தியாக மாறிப் பல நிலைகள் மாறியது.

பின் இதிலே வந்த ஒவ்வொரு உயிரணுவின் தன்மை மீண்டும் ஜீவன் பெற்று பல நிலைகள் வந்தது. வியாழனின் நிலைகள் நட்சத்திர நிலைகள் கொண்டு சில நிலைகள் வந்தது என்று எமது குருநாதர் காட்டியுள்ளார்.

1.விஞ்ஞானிகள் இதையெல்லாம் கண்டு கொள்வதற்குப் பல காலமாகும்.
2.ஆனால் இப்பொழுது யாம் சொல்வதைப் பின்னாடி ஒரு காலத்தில் சொல்வார்கள்.

பிறருக்கு உதவி செய்தாலும்… மறைமுகமாக வரும் தீமையிலிருந்து நம்மைக் காக்க வேண்டும்

பிறருக்கு உதவி செய்தாலும்… மறைமுகமாக வரும் தீமையிலிருந்து நம்மைக் காக்க வேண்டும்

 

குருநாதர் எமக்குச் சொன்னது…! வாழ்க்கையில் நீ நல்லதை எண்ணி ஏங்கினாலும் பிறர் செய்யும் தவறைப் பார்க்கப்படும் பொழுது
1.அதற்காக இரக்கப்பட்டோ… பரிவு கொண்டோ ஏங்கி அதைச் சுவாசித்து
2.ஏராளமான பணங்களைக் கொடுத்து… உடலைக் காக்க பொருளைக் கொடுத்து நீ உதவி செய்தாலும்
3.உனக்குள் வந்த அவரின் வேதனையான உணர்வின் தன்மையைத் துடைக்கவில்லை என்றால் என்ன ஆகும்…?

இந்த மனித வாழ்க்கையில் புகழ் கிடைக்கும் பேர் கிடைக்கும் இரக்கமானவர் நல்லவர் என்று போற்றுவார்கள்.
1.ஆனால் அதே சமயத்தில் நலிந்து போகும் பொழுது யாரும் நம்மைப் பார்க்க மாட்டார்கள்.
2.பின்… வேதனையான நிலைகள் கொண்டு நான் நல்லதைச் செய்தேன் எனக்கு இப்படி ஆகிவிட்டது…! என்று
3.வேதனைக் குரலைத் தான் எழுப்ப முடியுமே தவிர நல்லதைச் சிந்திக்க முடியாது.

இந்த உணர்வை வளர்த்துக் கொண்ட பின் மனித இனத்தையே வெறுக்கும் நிலை வந்துவிடும்.

ஆனால் மனித உடலுக்குள் மீண்டும் சென்றாலும் அந்த உடலையும் அழித்து விட்டு வேதனை என்ற விஷத்தை அதிகமாகக் கூட்டி உடலை விட்டுச் சென்ற பின்… பரிணாம வளர்ச்சியில் வந்த விஷத்தைத் தாங்கிடும் மற்ற உயிரினங்களின் ஈர்ப்புக்குள் சென்று அந்த உடலாக உயிர் மாற்றிவிடும்.

இதையெல்லாம் குரு இயற்கையாக எனக்குக் காட்டினார். அதையெல்லாம் கண்டு தான் இந்த உண்மைகளை உங்களுக்கு உணர்த்துகிறோம்.

நீங்கள் செய்த நன்மையின் நிலைகள்… உங்களைக் காக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கூட்டுத் தியானங்களை வலுப்படுத்தி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்தை ஓங்கிச் செலுத்த வேண்டும்.

பின் தியானத்தில் அமர்ந்திருக்கக்கூடிய அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
1.அவர்கள் உடல் முழுவதும் அந்த அருள் சக்தி படர வேண்டும்
2.அவர்கள் குடும்பத்தில் உள்ள இன்னல்கள் நீங்க வேண்டும்
3.அவர்கள் வாடிக்கையாளர்கள் நலம் பெற வேண்டும்
4.அவர்கள் வாழ்விலே மகிழ்ச்சி பெற வேண்டும்
5.என் பார்வை அவரை நல்லதாக்க வேண்டும் என்ற இந்த உணர்வுகளை உங்களுக்குள் செலுத்தினீர்கள் என்றால்
6.இந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் பாய்ச்சப்படுகின்றது.

இந்தச் சொல்லின் வாக்கும் உங்களுக்குள் விளைகின்றது. உங்கள் மூச்சு அவரை நலம் பெறச் செய்கின்றது. இதைத்தான் மனிதர்களுக்குள் பொறுமையாக இருந்து செயல்படுத்த வேண்டும்.

வயலிலே காய்கறிகளை விதைத்த பின் உடனடியாக அதைச் சமைக்க முடிவதில்லை. அது விளைந்த பின் பறிப்பவர் ஒருவர்… கடையில் வியாபாரம் செய்பவர் ஒருவர்… கடைசியில் நாம் கடைக்குச் சென்று அதை வாங்கிச் சமைக்கும் நிலையாக இருக்கின்றது.

இதைப் போல அந்த உணவைப் பக்குவமாகச் சமைத்துச் சாப்பிடுவது போன்று நாம் எண்ணியதைக் கொண்டு அந்த உணர்வுகளை எல்லாம் சீர்படுத்திக் கொண்டு வருவது தான் யாம் சொல்லும் இந்தத் தியானம்.

1.அதற்கு அந்த மெய்ஞானிகள் அருள் சக்திகளைப் பெற்று அதை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
2.அதுவே நம்மைக் காத்திடும் அரும்பெரும் சக்தியாக அமையும்.

வாலி என்ற விஷமான உணர்வை சுக்ரீவன் துணை கொண்டு தான் அடக்க முடியும்

வாலி என்ற விஷமான உணர்வை சுக்ரீவன் துணை கொண்டு தான் அடக்க முடியும்

 

நாம் இரக்கம் ஈகை அன்பு கொண்டு வாழும் பொழுது நமது குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்று நினைக்கின்றோம். நமது மகன் நல்ல முறையில் படிக்க வேண்டும் என்று எண்ணி வருகின்ற பொழுது அதற்கு மாறாக அவன் சரியாகப் படிக்கவில்லை என்றால் வேதனைப்படுகின்றோம்.

இதனால் வேதனையின் உணர்ச்சியாகி “அவன் இப்படி இருக்கிறானே, சரியாகப் படிக்கவில்லையே அவனின் எதிர்காலம் என்னாவது..?” என்று எண்ணி இதனைச் சமைத்து நமது உடலையும் கெடுத்துக் கொள்கின்றோம்.

மேலும் அவனிடத்திலும் கோபப்பட்டு வேதனைப்பட்டு “ஏன்டா இப்படி இருந்தால் என்னாவது…?” என்று சொல்லும் பொழுது இதனின் உணர்வுகள் அவனுடைய உடலில் பாயும். இதனால் அவன் இன்னும் அதிகமாகப் படிப்பிலும் செயலிலும் மந்தமாவான்.

1.அவன் படிக்கவில்லை… இப்படிச் செய்கிறான்…! என்று எண்ணும் பொழுது என்ன செய்கின்றது…?
2.வாலி என்ற உணர்வுகள் நமக்குள் போய் நமது உடலில் அவன் மீது இருக்கும் பிரியத்தை எல்லாம் கெடுத்து
3.“அவனை உதைத்தால்தான் சரிப்பட்டு வரும்… அவன் தொலைந்தால் பரவாயில்லை…” என்ற உணர்வு கொண்டு இதை அடிக்கடி சொல்ல
4.நாம் எதை எண்ணுகின்றோமோ அது அவனை அங்கே வழிநடத்தச் செய்கின்றது.

தந்தையான நாம், மகனைப் பார்த்து “டேய் இங்கே வாடா…” என்று முறைத்துப் பார்த்துக் கொண்டே அழைப்போம்.

அதற்கு மகன் “அன்று என்னைத் திட்டினாய்… இன்று என்னை நீ ஏன் கூப்பிடுகிறாய்…?” என்பான். இதைத் தடுத்து நிறுத்த நாம் என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடலிலுள்ள ஜீவாத்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி நமது உடலில் எழும் வேதனையின் உணர்வுகளை முதலில் அடக்க வேண்டும்.

1.பின் தன் மகன் உடல் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்,
2.அவன் அருள் ஞானிகளைப் போன்று சிந்திக்கும் தன்மை பெற வேண்டும் என்று
3.இதனின் உணர்வுகளைச் சமைத்துவிட்டுப் பின் இதனின் நிலை கொண்டு நல் அறிவுரைகளை அவனுக்குச் சொல்ல வேண்டும்.

இராமாயணத்தில் என்ன சொல்கிறார்கள்…? வேதனைப்படும் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அது நமக்குள் வாலியாகின்றது. நமது உடலிலுள்ள நல்ல குணங்களை இழக்கச் செய்கின்றது. சுக்ரீவன் எல்லோருக்கும் உதவிகள் செய்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

மனிதரில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானவர். எத்தகைய கொடிய தீமைகளையும் நீக்கும் வல்லமை பெற்றவர். துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருள் உணர்வுகளைத் தான் சுக்ரீவன் என்று அழைத்தார்கள் ஞானிகள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற உணர்வை நமக்குள் வலிமையாக்கினால் என்னவாகின்றது…?

1.மகனால் வேதனைப்பட்ட உணர்வுகள் இங்கே நமக்கு முன்னாடி நமது ஆன்மாவில் இருக்கின்றது.
2.துருவ நட்சத்திரத்தின் அருளுணர்வுகள் நமக்குள் வலிமையானபின்
3.வேதனையால் வந்த தீமையின் உணர்வுகளை நமது ஆன்மாவிலிருந்து ஒதுக்கித் தள்ளி விட்டு விடும்.

இப்படி நமது ஈர்ப்பு வட்டத்திலிருந்து விலகும் பொழுது அந்த வேதனையான உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொண்டு மேலே சென்று விடுகின்றது.

இதன் மூலம் நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்துகின்றோம்.

இப்படிச் சுத்தப்படுத்திக் கொண்டபின் அவன் கல்வியில் ஞானம் பெற வேண்டும், அருள் ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அவன் தெளிந்த மனம் பெற வேண்டும் என்று துருவ நட்சத்திரத்தை எண்ணி இதனின் உணர்வுகளை அவனுள் பாய்ச்ச வேண்டும்.

பின் அவனிடத்தில் சந்தோஷமாக இருக்க வேண்டியதைப் பற்றிச் சொல்லாகச் சொல்லப்படும் பொழுது சீதா. இதைச் சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பகாந்தம் கவர்ந்து கொள்கின்றது. ஆகவே இது பரப்பிரம்மம்…. எந்தச் சுவை இணைந்ததோ அதன் மணம் வரும் பொழுது ஞானம்.

1.அப்பொழுது தன் மகனைக் கண் கொண்டு பார்த்து அவன் அருள் ஞானம் பெற வேண்டும் என்று சொல்லால் சொல்கின்றோம்.
2.அவன் இதைக் காதால் கேட்கின்றான்… அவனின் கண் கவர்கின்றது
3.உயிரால் நுகரப்படும் பொழுது நுகர்ந்த உணர்வின் உணர்ச்சி அவனை ஆளச் செய்கின்றது ஆண்டாள்.

நாம் இப்படிச் சமைத்துச் சொல்லக் கூடிய சொல்லைச் சூரியன் எடுத்துக் கொண்டால் சீதாராமன். இதனின் சுவைக்கொப்ப உணர்ச்சியின் எண்ணங்களைத் தோற்றுவிக்கும்.

இப்படி இதனின் உணர்வுகள் அவனுக்குள் பதிவானதால் வெளியூருக்கு எங்கேனும் சென்றால் அங்கிருக்கும் பொழுது தன் மகனின் மீதான ஞாபகத்துடன் இருந்தால் அதனின் உணர்ச்சிகள் அவனைத் தூண்டச் செய்கின்றது. சுவையின் உணர்ச்சியை அறியும் தன்மை வருகின்றது.

1.இப்படி நாம் சொன்னவுடனே வாயு புத்திரன் ஆஞ்சநேயன் இராமனின் பக்தன் அவன் ஒரு மந்திரி.
2.இதனால் மகன் சோர்விலிருந்து விடுப்பட்டுச் சிந்திக்கும் தன்மை வருகின்றது.
3.அவனை நாம் சரியான வழியில் வழி நடத்தும் நிலை உருவாகின்றது.

State of Rishis

State of Rishis

The Rishis who live in the mental region have got several powers by their penance and meditation. Those powers will remain effective only when they are used in good ways and their penance become useful.

1.Such Rishi will not waste even a small portion of their powers.
2.There is no room for praise, reproach, hatred, excitement or to use them for evil purposes.
3.They do not use their power against evil, or to fight against such power to control it.
4.They do not have arrogance of ‘I’ or self.

Even when we have connection with those Rishis and we have their grace, when we have some trouble created by some other person in our worldly life and we pray to them for help, the Rishies will not utilise their power to curb the evil.

From their state they will guide us to go to such a state in which we can ourselves get the power to overcome the troubles.

When we get some trouble we pray to God saying
1.I have not done any harm to anybody; why are you seeing these harms being done to me who is innocent…?
2.Why not you stop these bad things being done to me…? and so on.

The Rishis who have got all the powers of God will not use their power to curb the bad elements.

Whenever we pray to any God
1.we should not bring into our thought any of the bad elements.
2.We should install in our temple, the body, only good thoughts and remain in that state always.
3.We should pray to God requesting Him to give good thoughts to those who do harm to us.

By treating all people with good feelings and increasing the good feelings in us and by meditating we will get powers from God.

1.By engaging ourselves in meditation
2.getting good feelings and giving the good feelings to all and proceeding in good path
3.we will have the privilege of getting the grace at an early date
4.of all those who have attained the state of Rishis.

When there is rain we take an umbrella or go to a shelter. We cannot cover the entire town with a shed or covering.

The fruits of our past lives will mix with our state in this life and the way in which we proceed will depend upon the kind of thought that we now cherish.

Knowingly or unknowingly we live in continuation of those old thoughts we are not able to get into a state wherein we can accept good feelings.

Nature creates all persons alike and not some as good and some others as bad.

There is no mistake made by us or in our state,
1.It is the way in which we are brought up
2.the persons with whom we mix and the environments round us that lead us in the bad way.

Once we become a slave of the bad forces, we are forced to go in the same bad path. Similar bad forces also join with us immediately.

1.In the present state of this world bad forces are on the majority and they grow much quicker than good ones.
2.In the forces that are in the air bad ones are on the majority.

The number of those who seek a good path is lesser.

The evils that have come out of this artificial ways of life will go on increasing in the coming days.

It is by the powers of the several crores of Rishis, that this world remains at least in the present state. Due to the power of bad thoughts that exist now, Nature herself, is going to show her fury.

It is to save all those who are good from this fury the powers of meditation that all the Rishis have got are being utilised.

Even though we had some bad thoughts in the life that we have so far lived at least hereafter we should cherish only good thoughts in us.

1.We have taken birth in this world as pure souls
2.and we should mingle our thoughts with those of the Rishis
3.and live getting the grace of those Rishis.

எதையுமே உணர்வால் அறியும் ஆற்றலாக… அந்த அறிவின் ஞானம் உங்களுக்குள் வர வேண்டும்

எதையுமே உணர்வால் அறியும் ஆற்றலாக… அந்த அறிவின் ஞானம் உங்களுக்குள் வர வேண்டும்

 

இந்த மனித வாழ்க்கையில் எல்லோராலும் சில இதுகளை நாம் உணர்வால் உணர முடிகின்றது. ஆனாலும்
1.இந்தத் தியான வழியில் பெரும்பகுதி இந்த உடலுக்குள் செல்லும் நிலைகளை உணர வேண்டும்.
2.உணர்ச்சிகள் நமக்குள் எப்படி இயக்குகிறது என்று…?

நம் உடலுக்குள் சேர்ந்த உணர்வுகள்… மற்ற உணர்வு நம் மீது மோதிய பின் “எதனால் நம்மை இயக்கப்படுகின்றது…?” என்ற இந்த அறிவின் ஞானத்தை நமக்குள் வளர்க்க வேண்டும்.

இதை எல்லாம் நமக்குள் நுகர நுகர நம் உடலுக்குள் நாம் நுகரும் உணர்வுகள் இரண்டும் “ஒரு எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்…”
1.உயிரிலே மோதி உணர்வின் தன்மை நினைவுடன் இருக்கப்படும் பொழுது…
2.மற்றொரு உணர்வு சேர்ந்த பின்
3.அதனுடைய அழுத்தமும்… அதனுடைய இயக்கமும்… நம்முடைய உணர்வும்…
4.அதற்குக் கீழ் எப்படி இருக்கிறது…? என்ற நிலையை நாம் அறிந்து உணர முடிகின்றது.

இதைப் பழக்கப்படுத்துவதற்குத் தான்
1.எது நம்மை இயக்குகிறது…?
2.எதனால் நாம் இயங்கிக் கொண்டிருக்கின்றோம்…?
3.எதை நாம் வளர்த்துக் கொள்கின்றோம்…? என்ற உண்மையை நீங்கள் அறிந்து கொள்வதற்குத் தான்
4.தியானத்தில் காட்சியாகக் கொடுக்கப்பட்டதன் உண்மை நிலைகள்.

இது உங்களுக்குள் வளர்ந்தால் நல்லதாகும்.

Powers of Rishis

Powers of Rishis

This world vapourises the atoms of energy that come to it in the same way as this world and all the other worlds connected with it grow with their power of attraction.

All the minerals that grow in this earth have the power to vapourise themselves. They have all grown and consolidated from their original vapour form by their power of attraction.

The vegetation and living beings that grow on a particular part of the earth will be in the same state in which that portion of earth attracts the minerals and grows.

The vegetation that grows on the surface of the earth, human beings, insects, ants and all such beings living on the surface of the earth absorb the type of atoms that they require, just as the minerals inside the earth absorb those type of atoms that they require for their growth.

Some of the vegetation absorb only some type of atoms that they require for their growth just as minerals like gold, diamond, tin, copper iron etc. which grow inside the earth absorb only such atoms as are required for their growth.

1.Our elders have told us that a certain type of greens called in tamil “Siru Keerai’’ contains gold
2.and by consuming that greens we will get the essence of gold into our body.
3.Just like this there are several plants that have the essence of iron in them.
4.By consuming those plants we get the essence of iron in our body.

Each plant absorbs certain kind of acid for its growth. We are in the same state in which our elders had shown us the ways to prepare the vegetables and greens and take them as our food.

There are some beetles that absorb some acids for their growth just like vegetation. The beetle takes only that type of breath that is required for its growth.

We see some beetles shining like gold, they have the essence of gold in them. In the same way as we mine gold ore, purify it get gold out of it, it is possible for us to extract gold from these beetles.

We get silk from silk worm; from sheep we get wool. There are some beetles which absorb only certain kind of acids as exists in some fruits.

How did the lion get its power…? It has got the power of absorption of “Rasamani’’ a tamil word for mercury which exists in solid form at the atmospheric pressure and temperature.

1.In the body of the lion the acidity of “Rasamani” exists to a large extent.
2.The eye sight of lion is very powerful.
3.The attraction power of every living being can be found from the power of its eye sight and from which world it absorbs the acids for its power.

All the living beings in this earth absorb a particular power as required by it from the air and exhibits its power.

The earth is a ball of several kinds of acids and what the earth expels is absorbed by other earths. The quality of the acid that exists in this earth differs from those that exist in other earths. The metals that grow in other earths also vary from what that grows in this earth.

In planets there are small ones like stars which absorb and emit the same states. If they operate in one state then they will be able to grow.

These planets which are used to attract in one state, when there is a variation in the state of the energy that they receive they are unable to absorb the varied energy, lose their life and unable to rotate, spurt out and are attracted by some other planets which attracts the same kind of acids and energy.

This is on the principle “birds of the same feather flock together…” In this way there are several crores of planets in the sky some absorbing the acids required by them and maintaining their life.

There are some others which are not able to absorb the acids which they required to maintain their life, and so go and join with some other planet which lives by absorbing the same type of acids.

These take place everyday.

1.Our Rishis have seen all these powers merged them into their bodies and live their life.
2.Know about the exalted state of the powers that our Rishis have got.

வளரும் பிள்ளைகளை அருள் வழியில் அழைத்துச் செல்ல வேண்டும்

வளரும் பிள்ளைகளை அருள் வழியில் அழைத்துச் செல்ல வேண்டும்

நம் பிள்ளை படித்து நன்றாக இருக்க வேண்டுமென்று எண்ணுவோம். அவன் படிக்கவில்லை என்றால் “இப்படிப் பண்ணுகிறானே… இப்படிப் பண்ணுகிறானே” என்று ஜெபம் பண்ண ஆரம்பித்து விடுகிறோம்.

வீட்டுக்காரர் வந்தவுடன் பிள்ளைகளை நீங்கள் இப்படி வளர்த்துக் கெடுத்து விட்டீர்களே…! என்று ஜெபம். அவர்களையும் திட்டுவதற்கு ஆரம்பித்து விடுவார்கள். போனபின் தியானம்… என்ன தியானம்…?
1.அவன் இப்படிப் பண்ணிக் கொண்டிருக்கிறான்… இவன் அப்படிப் பண்ணிக் கொண்டிருக்கிறான்… படிக்க மாட்டேன் என்கிறான்.
2.இவரும் கேட்க மாட்டேன் என்கிறார்…! என்று மனதிலே எண்ணித் தியானம்.

அந்த நேரத்தில் அவரது பேரப்பிள்ளை யாராவது வந்தால் “தொலைந்து போ…” என்று அவனையும் சாபமிட ஆரம்பித்துவிடும். இந்த ஜெபம் என்ன செய்யும்…?

அந்தச் சாபம் வந்தவுடன் கோபம் வந்துவிடும். இரவு நேரத்தில் கை கால் குடைச்சல் மேல் வலி உடல் வலி என்று எல்லாமே வந்துவிடும்… சகிக்க முடியாது. ஏனென்றால் அவன் செயலையும் அதனால் வேதனையையும் எடுத்தவுடன் கை கால் குடைச்சல் வரும். இந்தத் தியானம் செய்கிறோம்.

ஆனால் இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?

இரவில் படுக்கப்படும்போது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… என் ஜீவாத்மா பெற வேண்டும் என்று “ஆத்ம சுத்தி” செய்யுங்கள்.

நீங்கள் யாம் கொடுத்த சக்திக்காக வேண்டித் தியானமிருக்கும் போது
1.ஒரு நாளில் பத்து நிமிடம் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுங்கள்.
2.அந்தச் சக்தியை எடுக்கும் போது அந்த ஞானியரின் சக்தியைப் பிரித்துக் கொடுக்கும்.
3.அதை உங்களுக்குச் செய்து கொடுக்கிறோம்.

சாமி வந்தவுடன் எல்லாம் நன்றாகி விட்டது… நன்றாகி விட்டது என்கிறோம். அடுத்ததாக இரண்டு தரம் வந்து நல்லதாக ஆகிவிட்டது என்பார்கள். மூன்றாவது தடவை என்ன செய்கிறார்கள்…?

யாம் எத்தனை தடவை செய்து கொடுப்பது…? ஒரு தரம் இரண்டு தரம் மூன்று தரம் கூடச் செய்து கொடுக்கலாம். நான்காவது தரமும் யாமே செய்து கொடுக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.

ஒன்றும் பலனில்லையென்றால் “சாமி என்னத்தைச் செய்துவிட்டார்…?” என்று உடனே ஜோசியக்காரனிடம் சென்று நல்ல நேரம் வருகிறதா…? கெட்ட நேரம் வருகிறதா…? என்று பார்த்து அதற்கு யாகத்தைச் செய்து விட்டால் அல்லது எந்திரத்தைக் கொண்டு வைத்தால் நல்ல நேரம் வருமா…? என்றிருப்பார்கள்.

உங்கள் எண்ணத்திற்குள் எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள் என்றால் செயல்படுத்த மாட்டார்கள். ஆகையினால்தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுப்பது.

மனித வாழ்க்கையில் இன்று குடும்பத்தில் ஒரு பிரச்சனையால் பையன் தவறு செய்கிறான் என்றால்
1.அவன் செய்த தவறின் உணர்வுகள் நமக்குள் பட்டவுடன் நமக்குக் கோபம் வரத்தான் செய்யும்.
2.ஆனால் அதே கோபத்தால் நாம் சாபமிடும் நிலைகளுக்கெல்லாம் நாம் வாக்கைக் கொடுத்து விடுவோம்.
3.அந்தக் கெட்டது உடனடியாக வேலை செய்யும்.

நாம் குழந்தை மேல் பாசமாக இருப்போம். நம்மையறியாமலே இந்த உணர்வைப் பாய்ச்சியவுடன் நம் எண்ணமே துரித நிலைகளில் வேலை செய்து அவர்களுக்கு இடைஞ்சலாகும். அதனால் அவர்கள் சங்கடப்படும் போது அதை எண்ணி மீண்டும் வேதனைப்படுவோம்.

இதைப் போன்று
1.நம்மை அறியாமலேயே பின்னிப் பிணைத்துத் துன்பப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையை மாற்றுவதற்குத்தான் தக்க ஆயுதத்தை
2.“மிஷின் கண்” (MACHINE GUN) போன்று ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கிறோம்.

அதைப் பயன்படுத்தினால் இருள் சூழும் நிலையை நிச்சயம் மாற்றியமைக்க முடியும்.