“நம் எண்ணத்தின் முகப்பில்” துருவ நட்சத்திரத்தின் சக்தியை எப்போதுமே வைத்திருக்க வேண்டும்

“நம் எண்ணத்தின் முகப்பில்” துருவ நட்சத்திரத்தின் சக்தியை எப்போதுமே வைத்திருக்க வேண்டும்

 

ஒவ்வொரு நேரத்திலும் யாம் உங்களுக்கு உபதேசிக்கும் உணர்வுகள் கொண்டு தீமைகள் வந்தால் தீமைகளைக் கேட்டறிந்தாலும் அடுத்த கணம் அந்தத் தீமை வளராது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி விட்டு எல்லோருக்கும் நீங்கள் ஞானத்தைப் போதிக்க முடியும். அவர்கள் தீமைகள் உங்களுக்குள் புகாது தடுக்க முடியும்.

1.ஒரு கம்ப்யூட்டரில் பதிவாக்கி ஆணையிட்டு அதைச் செயல்படுத்துவது போல்
2.வீட்டை விட்டு நீங்கள் எங்கே சென்றாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று
3.இதை எண்ணி எடுத்துக் கொண்டால் “இது நமக்கு முன்னாடி வந்து…” வலிமை பெறுகின்றது.

எதிரிலே ஒரு பஸ்ஸோ மற்ற வாகனங்களோ வந்தாலும் இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணவுகள் அதிலிருந்து உங்களை ஒதுக்கிச் செல்லச் செய்யும்.

ஆனால் காலையில் எழுந்து நாம் தினசரி அலுவல்களைச் செயல்படுத்தும் போது பையன் இப்படி எல்லாம் செய்தான்… பக்கத்தில் உள்ளவர்கள் தொல்லை செய்கின்றார்கள்… வேலை பார்க்கும் இடத்தில் தொல்லையாக இருக்கிறது என்று
1.காலையில் எழுந்திருக்கும் பொழுதே இப்படிச் சோர்வாக எண்ணி இந்த உணர்வுகள் முன்னணியில் வந்து விட்டால்
2.நாம் ரோட்டில் நடந்து சென்றால் முன்னாடி சைக்கிள் வருவதும் தெரியாது அல்லது பஸ் வருவதும் தெரியாது.
3.நம்மை அறியாமலே விபத்தாகிறது.

எதன் உணர்வு நம் சிந்தனையைக் குறைக்கச் செய்கிறதோ அந்த உணர்வின் செயலே வாழ்க்கையில் நடந்து விடுகிறது. ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் அது முன்னணியில் வந்து விடுவதால் இவ்வாறு இயக்கி விடுகின்றது.

அதையெல்லாம் மாற்றி வாழ்க்கையில் வெளியில் செல்லும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் வலிமையான உணர்வுகளை எடுத்து முன்னாடி செலுத்திக் கொள்ளுங்கள்.
1.தீமை வந்தால் மற்ற இடர்பாடுகள் வந்தால் விலகி செல்லும் உணர்வுகளாக வரும்.
2.சிந்திக்கும் ஆற்றலும் தெளிந்து வாழக்கூடிய உணர்வுகளை ஊட்டிக் கொண்டேயிருக்கும்.

அதையெல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் பதிவு செய்து கொண்டே இருக்கின்றேன். எழுத்திலே படித்தாலும் புரியவில்லை என்று சென்று விடுவார்கள்.

ஆனால்
1.எமது உபதேசத்தைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது உங்களுக்குள் இது பதிவாகின்றது.
2.அப்படிப் பதிவாக்கி விட்டால் நிச்சயம் உங்களால் நல்ல குணங்களைக் காக்க முடியும்.
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற முடியும்… அதற்கு குரு அருள் உறுதுணையாக இருக்கும்.

என்றும் தெளிந்த நிலையினை நீங்கள் பெற முடியும்… பெறுவீர்கள் நிச்சயம் பெற்று விடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் தான் இந்த அருள் வாக்குகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.

“மற்றவர்களை உயர்த்தும் பொழுதுதான்…” நீ உயர முடியும் என்றார் குருநாதர்

“மற்றவர்களை உயர்த்தும் பொழுதுதான்…” நீ உயர முடியும் என்றார் குருநாதர்

இயற்கையின் உண்மைகள் எவ்வாறு இயங்குகின்றது…? என்று அறிந்து கொள்வதற்காக குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று பல அனுபவங்களைக் கொடுத்தார்.

மேலும்
1.பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் எப்பகுதியில் எந்தெந்த இடங்களில்
2.அவன் உணர்வுகளும் மூச்சலைகளும் பதிவாகியுள்ளதோ அங்கெல்லாம் குருநாதர் அழைத்துச் சென்றார்.

அவன் கண்டுணர்ந்த அகண்ட அண்டத்தின் பேருண்மைகளை என்னை அறியச் செய்தார். அவர் காட்டிய வழியில் உண்மைகளை அறிய முடிந்தது, உணரவும் முடிந்தது.

அறிந்து கொண்ட பின் எனக்குள் மட்டும் வளர்ந்தால் போதுமா..,? “நீங்களும்… அதைப் பெறவேண்டும் அல்லவா…”

ஆகவே.. “எல்லோரையும்… அதைப் பெறச் செய்…” என்றார் குருநாதர்.

ஆனால். நீ சுயநலம் கொண்டு நான் வளர்த்துக் கொண்டேன்.., “நான் பெரிய மகான்” நான் அதைச் செய்வேன்.., இதைச் செய்வேன்.., என்று உனது பெருமையைக் காட்டினால் உனக்குச் சிறுமையே வரும்.

1.ஒவ்வொருவரும் பெருமைப்படும்படி “அவர்களை உயர்த்தும்படி…” நீ இதைப் பெறச் செய்தால் நீ உயர்கின்றாய்..,.
2.அவர்களை உயர்த்துகின்றாய்… அந்த உயர்ந்த நிலைகளை நீ நுகர்கின்றாய்.
3.அவர்களும் உயர்கின்றனர்… அப்பொழுது நீயும் உயர்கின்றாய்…

இதைத்தான் நான் உன்னைச் செய்யச் சொல்கின்றேன்.

நீ இத்தனையும் கற்றுணர்ந்தபின் எல்லாம் செய்த பின்… “நான் தான் இதையெல்லாம் செய்தேன்…” என்ற “அகம்” எப்பொழுது உனக்குத் தோன்றுகின்றதோ அப்பொழுது உண்மையை அறியும் தன்மையினை இழக்கின்றாய்.

1.“ஒருவர் உயர வேண்டும்” என்ற உணர்வினை எப்பொழுது நீ ஊட்டுகின்றாயோ
2.அவர்கள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று எப்போது ஆசைப்படுகின்றாயோ
3.அவர்களைக் கேட்க வைக்கின்றாயோ அந்த அருள் ஞானத்தை உருவாக்குகின்றாயோ உருவான அந்த உணர்வு “உன்னை… வலுவாக்கும்…”

அதே சமயத்தில் உன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் அவர்களையும் காக்கும் நிலை வருகின்றது.

நீ இதை எவ்வாறு செய்யப் போகின்றாய்…? எவ்வாறு வெளிப்படுத்தப் போகின்றாய்…? கடும் தீமைகள் எதிர்த்துத் தாக்கும் உணர்வின் உலகில் நீ வாழ்கின்றாய். இதிலிருந்து நீ மீளும் மார்க்கம் என்ன…?

இப்படி அடிக்கடி எனக்குள் வினாக்களை எழுப்பி அந்த உண்மைகளை உணர்த்தினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆன அந்த ஆற்றல்களை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்று அவர் காட்டிய அருள் வழியில் தான் உங்களுக்குள் இதைத் திரும்பத் திரும்பப் பதிவாக்குகின்றோம், நினைவு படுத்துகின்றோம்.

1.அகஸ்தியன் பெற்ற ஆற்றல்களை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள்.
2.அவன் தீமையை நீக்கி உணர்வை ஒளியாக மாற்றி ஒளியின் சுடராக துருவ நட்சத்திரமாக வாழ்வது போல் நீங்களும் அந்த நிலை பெறுங்கள்.

மனிதரால் இது சாத்தியமானதே.

நாம் பெற்று வளர்க்க வேண்டிய அழியாச் சொத்து

நாம் பெற்று வளர்க்க வேண்டிய அழியாச் சொத்து

 

தீவிரவாதம் என்ற நிலையாகி மனிதனுக்கு மனிதன் கொன்று ரசித்து வாழ்வதும் அதே போல மனிதனையே புசித்திடும் நிலைகளும் வந்து விடுகின்றது,

தீவிரவாதிகளும் கொன்றவர்களைச் சும்மா விடுவதில்லை. பழி தீர்த்து அவனைக் கொன்று “அவனை உணவாக உட்கொண்டு வாழ்கிறேன்…” என்று சொல்கிறார்கள்.

1.அன்று ஒரு காலத்தில் ஆசியக் கண்டத்தில் இஸ்ரவேல் என்ற நாட்டில் யூதர்கள் இப்படிச் செயல்படுத்தி வந்தாலும்
2.அவர்களுக்குள் போர் வந்தால் பெண்களும் சரி ஆண்களும் சரி
3.உன்னைக் கொன்று உன் ஈரலை நான் விழுங்கப் போகின்றேன் என்பார்கள்.
4.சொல்வதோடு மட்டுமல்ல…! கொன்று அந்த ஈரலைப் பச்சையாகவே சாப்பிடுவார்கள்.

இதைப் போல வெறித்தனமான உணர்வுகள் கொண்டு அன்று செயல்படுத்தப்பட்ட நிலைகள் தான்.

ஆக… அந்த வம்சமே மற்றவர்களைக் கொன்று முழுமையாக அவர்களைத் தின்பது தான்.
1.அங்கே பரவிய அந்த உணர்வு தான்
2.உலகம் முழுவதற்கும் இப்பொழுது பரவிக் கொண்டிருப்பது.

புது வருடம் பிறந்து விட்டது முதல் தேதி என்று இவர்கள் கொண்டாடினாலும்… தீமைகளை உணர்த்தி தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று இயேசு அதைச் சொல்லி இருந்தாலும் “அந்த வம்சம் தான் இரக்கமற்றுக் கொன்றது… அதை ரசித்து வாழ்ந்தது…”

இன்றைய நிலைகள் நடப்பது… அன்றைய இதனுடைய தொடர்ச்சி தான்…!

இதைப் போன்ற கொடுமைகளிலில் இருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும் என்பதற்குத்தான் 25 வருடம் யாம் உங்களுக்குத் தொடர்ந்து அந்த மெய் ஞானிகளைப் பற்றி உபதேசித்து வருவது.

1.உங்கள் அனைவருக்குள்ளும் பரவச் செய்து அந்த அருள் மகரிஷிகள் உணர்வை ஏங்கிப் பெறும்படி செய்து செய்து கொண்டிருக்கின்றேன்.
2.அந்த மகரிஷிகள் உணர்வுகளை நாம் பெற்றால் ஒழிய இதிலிருந்து தப்ப முடியாது.
3.ஆகவே அருள் ஒளியைப் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்.

இன்றைய உலகச் சூழ்நிலையில் எந்தச் செல்வத்தையும் காக்கும் திறன் எவருக்கும் இல்லை.

1.ஆனால் என்றும் அழியாச் செல்வத்தை… அருள் ஞானச் செல்வத்தை.. அருள் சக்தியாக நமக்குள் உருவாக்கி விட்டால்
2.இதை யாரும் தடுக்க முடியாது… அதை அழித்திட முடியாது.

ஆறாவது அறிவின் துணை கொண்டு அந்த அருள் சக்திகளை வளர்க்க வேண்டும். அந்த ஒளியின் தன்மையாக நாம் அனைவரும் வளர வேண்டும்.

Bhogar Rishi

Bhogar Rishi

We name persons as per the old tradition of our elders and speak the language that they spoke. We name persons by the names of deities.

The common name ‘‘Muruga’’ that is used by the Hindus of South India was given by Bhogar to praise and worship the God with six good qualities in him.

There was no personal god by the name of ‘‘Muruga…’’
1.But whoever mentions that name or things of that name from anywhere,
2.the power of Bhogar, who remains in the temple at Palani in South India with his immortal body
3.enters into the hearts of those people who mention the name of Muruga, Bhogar showers his grace.

Remaining there with his immortal body he enters into the hearts of those who meditate on the name of Muruga and shares with them the powers that he has obtained from the Almighty.

The powers of Bhogar who comes in the name of Muruga are maintained without any decay. Still he is giving his Grace through the air to his devotees.

He comes even today as a common man sometimes and mixes with the people. Do you know in which way…?

The physical body does not come out of the cave on top of the hill temple at Palani in South India. But he comes as Muruga and in many other states to redress the grievances of his devotees.

In the state in which he has obtained his powers he shows to those who can separate their soul with the powers from their body and see him, he appears with his physical body by gathering physical materials from the air to form a physical body to exhibit to his devotees.

1.He has got powers to separate the vaporous acids in his body and join them together at any time as per his will.
2.He can appear at several places at the same time.
3.Bhogar does several things by remaining at one place.

All the powers are in the form of acid vapour. This body is also an image of vapour. When the soul leaves this body and goes to the spirit world it can live there only with the help of the essence of the acids of the body that the soul carries with it.

It is possible for us to make all the powers that exist on this earth as our power and live an immortal life. Our life does not consist of the portion that we live on this earth only.

This life is only a chance given to us to acquire a good fortune.
1.Every person should realise this and live a life of his own
2.not thinking why he should not enjoy the pleasures of this world in this life.

We should know that the powers that we get during this life time is one that will come along with us to the other world and we get the grace of Bhogar through our meditation and lead a good life.

Throughout this world each person gets the powers and utilises them as per his state.

பொய் உலகை விட்டு விட்டு… “நீ மெய் உலகம் செல்” என்றார் குருநாதர்

பொய் உலகை விட்டு விட்டு… “நீ மெய் உலகம் செல்” என்றார் குருநாதர்

நாம் இன்று எந்த உலகில் வாழ்கின்றோம்…! மெய் உலகில் வாழ்கின்றோமா..,? பொய் (மாய) உலகில் வாழ்கின்றோமா..,? என்று சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

1.மெய் என்றால் “உயிர்…” அந்த உலகை அடைய வேண்டும்.
2.நம் உடலெல்லாம் பொய் உலகம். அதைப் பொய் என்றுதான் சொல்ல முடியும்.

ஏனென்றால் இன்று நாம் மனிதனாக இருக்கின்றோம். அடுத்தாற்போல் பார்த்தால் சுருங்கிப் போய்விடுகின்றது. சுருங்கிய உணர்வு கொண்டு இந்த உயிர் என்ன செய்கின்றது…? வேறு ஒரு உடலை உருவாக்கத் தொடங்கிவிடுகின்றது.

ஆகவே நாம் பொய் உலகில் வாழ்கின்றோம் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

குருநாதர் அடிக்கடி சொல்வார். “ஏண்டா… பொய் உலகத்திற்குப் போகின்றாய்..,? “மெய் உலகிற்குப் போடா…” என்பார்.

மெய் உலகம் என்றால் உயிரை நீ எப்படி மதித்தல் வேண்டும்…? உயிர் எல்லாவற்றையும் உணர்த்துகின்றான் உணரச் செய்கின்றான்… உணரும் வழியில் வாழச் செய்கின்றான்.

ஆனால் ஆறாவது அறிவால் தெரிந்து கொண்டவன் நீ… எந்த உலகிற்குச் செல்கின்றாய்…?” என்று சில இக்கட்டான நேரங்களில் குருநாதர் உணர்த்திக் கேட்பார்.

சிக்கலான நிலைகள் வரும்போது நான் என்ன செய்வேன்…?

“என்ன வாழ்க்கை..,? போ…! மனைவியை நோயிலிருந்து மீட்டிக் கொடுத்தார் குருநாதர். ஆனால்
1.காட்டுக்குள் கூட்டிக் கொண்டு போய் இப்படியெல்லாம் கடுமையான தொல்லைகள் கொடுக்கிறார் என்று சொல்லி
2.“ரொம்பவும் கஷ்டம் வரும் பொழுதெல்லாம்” என் நினைவுகள் இப்படி வரும்.
3.எங்கேயாவது உடலை விட்டுப் போய்விடலாம்… “தற்கொலை செய்து கொள்ளலாம்…” என்று சொல்லி இரண்டு மூன்று தடவை முயற்சி செய்தேன்.

அப்பொழுது தான் குருநாதர் சிரிக்கின்றார்.

1.இந்த உலகை… என்ன…? என்று அறிந்தாய்.
2.உன் உயிரை… யார்…? என்றும் அறிந்தாய்
3.இந்த உடலின் நிலையையும்… அறிந்தாய்.
4.“மீண்டும்… ஏண்டா பொய் உலகிற்குப் போகின்றாய்…?”

ஆக மொத்தம் வேதனையிலிருந்து தப்ப வேண்டும் என்று நீ எண்ணுகின்றாய். நீ தற்கொலை செய்து கொண்டால் இந்த உணர்வுகள் இதைக் கேட்டவன் உணர்வுக்குள் செல்லும்.

1.அவன் உடலுக்குள் பேயாகப் போய் இதையே நீ செய்வாய். அவனையும் வீழ்த்துவாய்.
2.இந்த உணர்வின் தன்மை வந்தால் இந்த உடலுக்குப் பின் என்ன ஆவாய்…?
3.பிறிதொன்றைக் கொன்று தின்னும் இந்த உணர்வின் தன்மை தான் உனக்குள் வரும்.
4.இன்று நீ மனிதனாக இருக்கின்றாய். அடுத்து நீ… “பொய் உலகிற்கல்லவா போகின்றாய்…”

உயிரென்ற நிலை வரும் பொழுது பரிணாம வளர்ர்சியில் ஆறாவது அறிவால் தெரிந்து கொள்ளும் நிலைகளில் கார்த்திகேயா என்று “தெரிந்து கொண்டேன்..,.” என்ற நிலைகளில் என்று வந்தாய்.

இன்று மறுபடியும் ஏன் பொய் உலகிற்குச் செல்கிறாய்…? என்று அந்த இடத்தில் வைத்து விளக்கங்களைக் கொடுத்தார் குருநாதர்.

ஏனென்றால் பல தொல்லைகளைக் கொடுப்பார்.

நம் சகஜ வாழ்க்கையில் வியாபாரமோ மற்ற தொழிலோ எல்லாம் நன்றாகச் செய்ய வேண்டும் என்று ரொம்பவும் ஆர்வமாக இருப்போம். ஆர்வமாக இருக்கும் போது சந்தோஷமாக இருப்போம்.

அப்படிச் சந்தோஷமாக இருக்கும் பொழுது… “அதிலே சிறிது குறை வந்து விட்டால்…” போதும். “என்ன வாழ்க்கை…?” என்ற நிலையில் நம் மனது இருண்டுவிடும்.

இதைப் போன்று இந்த உடலைக் காக்க எத்தனையோ வகைகளில் இன்று சிரமப்படுகின்றோம். அதைச் செய்வோம்… இதைப் பேசுவோம்.. சண்டையிடுவோம். எல்லா வழிகளிலும் முயற்சி செய்வோம்.

ஆனால்
1.“ஒரு சொல்” தாங்கவில்லை… என்று சொல்லிவிட்டு
2.என்ன வாழ்க்கை…? என்று தற்கொலை செய்யப் போவோம் – “ஒரு சொல்லுக்காக…”

அப்பொழுது.., “இந்த உடலுக்காக” நாம் எதை எண்ணினோமோ அதை வளர்த்து விடுகின்றது. இந்த உடலை அழிக்க வேண்டும் என்றால் “அதன் வழியே நீ செய்…” என்றுதான் அந்த உணர்ச்சிகளை இயக்கி ஆளுகின்றது நம் உயிர்.

அதன் வழி சென்றபின் இந்த உடலை முழுமையாக நாம் வளர்ச்சியற்ற நிலைகளில் குறைக்கப்படும் பொழுது குறை உணர்வு கொண்ட விஷமான உயிரினங்களாக உயிர் நம்மை மாற்றி விடுகின்றது என்பதனைக் குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

மெய் உலகம் என்பது உயிர். இந்த உயிருடன் ஒன்றிய ஒளியின் தன்மை பெற்றது தான் துருவ நட்சத்திரம். ஆகவே அந்த மெய்யை நீ அடைய வேண்டும்.

“மெய்… மெய்யாக வரும் உன் உணர்வுகள்” மெய்யை உணர்த்தும் உணர்வுகள் பெறும் போது “நீ எப்படி இருக்க வேண்டும்…?” என்பதனை உணர்த்துவார் குருநாதர்.

அவர் தன் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி இன்று துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நமது குருநாதர் ஏகாந்த நிலைகள் கொண்டு வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்.
1.அவர் கற்றுணர்ந்த… கண்டுணர்ந்த… உணர்வுகளைப் பதிவாக்கப்படும் பொழுது நாமும் அந்த உணர்வுகளை நுகர்ந்தால்
2.இந்த வாழ்க்கையில் அவர் இருளை அகற்றியது போன்று நாமும் இருளை அகற்றி அவர் வாழும் அந்த “மெய் உலகை அடையலாம்…”

கடவுளின் அவதாரம் பத்து – “கல்கி” என்ற நிலையில் நமது உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறி துருவ நட்சத்திரத்தைப் போன்று நாமெல்லாம் குரு வழியில் அழியாத நிலைகள் பெற வேண்டும்.

யாம் பதிவு செய்வதை எல்லாம்… “உள் உணர்வால்” அறிய வேண்டும் என்ற ஒரு கட்டாயத்திற்கு வாருங்கள்

யாம் பதிவு செய்வதை எல்லாம்… “உள் உணர்வால்” அறிய வேண்டும் என்ற ஒரு கட்டாயத்திற்கு வாருங்கள்

 

வானியல் தத்துவத்தில் 27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் சக்திகளில் வெள்ளிக்கோள் ஒளியான உணர்வுகளை எடுத்துக் கொள்கின்றது. கேதுக் கோள் விஷத்தை எடுத்துக் கொள்கின்றது. கருகிய புகைகளை ராகுக் கோள் எடுக்கிறது. செவ்வாய்க் கோள் நாதங்களை எடுத்துக் கொள்கின்றது.

இந்த உணர்வலைகள் பிரபஞ்சத்திற்குள் பரவப்படும் பொழுது அதனதன் சக்தி கொண்டு அதனதன் நிலைகளை எடுத்துக் கொள்கின்றது.

இதைப் போன்று தான் மனிதர்கல் நமக்குள்ளும் ஒரு உணர்வின் தன்மை உயிருடன் மோதி ரத்தத்தில் கலக்கப்படும் பொழுது இணைகிறது.

1.பித்த சுரப்பிகள் பித்தத்தைக் கவர்கிறது… விஷத்தன்மைகள் அனைத்தையுமே அது கவர்கின்றது.
2.நுரையீரல் கல்லீரல் மண்ணீரல் அந்த அணுக்கள் அதைச் சுவாசித்து அதனின் மலங்களாக அந்தக் கூட்டைக் (உறுப்பு) கட்டுகிறது.

வியாழன் கோள் சனிக் கோள் போன்று நம் உடலில் உறுப்புகள் எப்படி மாறுகின்றது…? பிரபஞ்சத்தைப் போல உடலுக்கு உயிர் சூரியனாலும் அது நட்சத்திரம் தான். இந்தப் பிரபஞ்சத்திற்குச் சூரியன் ஆனாலும் அகண்ட அண்டத்திற்கு அது நட்சத்திரம் தான் என்று குரு காட்டுகின்றார்.

இந்தப் பிரபஞ்சம் எப்படி இயக்குகின்றதோ உடல் ஒரு பிரபஞ்சம். 2000 சூரியக் குடும்பங்கள் அது ஒவ்வொரு பிரபஞ்சமாக இருக்கின்றதோ ஒவ்வொன்றும் வெளிப்படுத்துவதை ஒன்றுடன் ஒன்று கலவையாகி எடுப்பதும் இப்படி ஒவ்வொன்றும் எடுத்து வளர்த்துக் கொள்கின்றது.

ஒவ்வொரு மனிதனை எடுத்துக் கொண்டாலும் அதுவும் ஒவ்வொன்றும் தனிப் பிரபஞ்சம் தான். அது இயற்கையில் கிரேதா யுகம்.
1.ஆனால் திரேதா யுகம் (உடலுக்குள்) பிறருடைய உணர்வுகளை நுகரப்படும் பொழுது உணர்வின் எண்ணங்கள் எப்படி மாறுகின்றது…?
2.உணர்ச்சிகள் உடலுக்குள் எப்படி மாறுகின்றது…?

நட்சத்திரங்கள் பால்வெளி மண்டலங்களாக மாற்றப்படும் பொழுது இந்த உணர்வுகளை மாற்றப்பட்டு சூரியன் தெளிவாக எடுத்துக் கொள்கின்றது. இதைப் போல் மனிதனான நாம் நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு பிறரின் உணர்வுகள் நம் உடலுக்குள் வந்து ரத்தத்தில் கலக்கப்படும் பொழுது ஒவ்வொரு உறுப்புகளும் அந்த விஷத்தின் ஆற்றலை எடுக்கின்றது… அதனதன் உணர்வுகளைப் பிரித்து எடுத்துக் கொள்கிறது.

வெள்ளிக் கோள் எப்படி ஒளியின் தன்மை பெறுகின்றதோ இதைப்போல
1.நம் உணர்வின் அறிவின் தன்மையை நமக்குள் அறிவு ஒளி என்று உணர்த்தும்
2..நமது அணுக்களை உருப் பெற வைக்கும் “சிறுமூளை பாகம்…” அதை இயக்குகின்றது…
3.உணர்வின் அறிவாக எடுத்து நமக்குத் தெளிவாக்குகின்றது.

சுவாசிப்பது நுரையீரலுக்கு வரும் பொழுது அதை எப்படிச் சுத்தமாக்குகின்றது…? கல்லீரல் மண்ணீரலுக்கு வரப்படும் பொழுது பிரபஞ்சத்தைப் போன்று எவ்வாறு சீராக இயங்குகின்றது…?

சூரியன் முதலில் வளர்ச்சி ஆவதற்கு முன்… ஒரு பிரபஞ்சமாக ஆவதற்கு முன்… எப்படி உயிரணு தோன்றிப் புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு அங்கங்கள் உறுப்புகள் மாறி மாறி… மாறி மாறி… ஒரு பிரபஞ்சம் என்ற நிலைகள் முழுமை அடைகின்றது.

சூரியன் எப்படி நஞ்சைப் பிரித்து நல்ல உணர்வுகளை எடுத்துக் கொள்கின்றதோ இதைப் போல மனிதனுக்குள் இருக்கும் ஆறாவது அறிவு நாம் நுகருவதற்குள் இருக்கும் நஞ்சைப் பிளந்து நல்ல உணர்வாக எடுத்துக் கொள்ளும் அறிவாகப் பெற்றதுதான் இந்த உடல் என்ற நிலையைக் குருநாதர் தெளிவாக்குகின்றார்.

ஒவ்வொரு மனிதனும் ஒரு பிரபஞ்சம்…! ஒவ்வொரு நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அதன் வழியில் எதிர்நிலையாகி இயக்கிப் பொறிகளை உருவாக்கி அதற்குத் தக்க உடல்களை மாற்றி மாற்றி வந்தது.

1.யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளை உங்கள் கண் கருவிழி பதிவாக்குகின்றது.
2.அதை நுகரும் தன்மை வரப்படும் பொழுது அதை மீண்டும் எண்ணினால்
3.அதைப் பெற வேண்டும் என்ற உணர்வு எடுக்கப்படும் பொழுது
4.கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் அதைக் கவரும் தன்மை வருகின்றது.
5.கவர்ந்த உணர்வு உயிரிலே படும் போது அந்த உணர்ச்சிகள் தெரியும்.

இதற்கு முந்தி… மனிதன் எண்ணத்தில் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு தெய்வங்களை வணங்கப்படும் பொழுது அது எந்தெந்த உருவத்தைக் கண்டோமோ அது அலைகளாக மாறுகின்றது.

அதே தெய்வத்தின் உணர்வை எடுக்கப்படும் பொழுது ஒரு மனிதனில் பெற்ற அந்த உணர்வினைப் பெற்றால் அதே மனித உணர்வு வரப்படும் பொழுது
1.அவனுக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வு ஆவியாகவும் பேயாகவும் தெய்வமாகவும் காட்சி தருகின்றது.
2.இது மனிதனின் உடலில் விளைந்தது.

ஆனால் இப்போது ஞானிகளால் உருவாக்கப்பட்ட சப்தரிஷி மண்டலங்களின் உணர்வினை அறிவதற்கு உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். சூரியனால் கவரப்பட்ட சூனியப் பிரதேசத்திலிருந்து அந்தச் சூரியன் எப்படி வளர்ந்தது…? என்ற நிலையில் அந்தச் சூனிய மண்டலம் ஆதியிலே எப்படி உருவானது…? என்ற நிலைகளை நீங்கள் அறிய முடியும்.

1.அதை நுகரப்படும் பொழுது அறியும் ஆற்றல் வரும்… அறிய முயற்சி எடுங்கள்.
2.அகண்ட அண்டத்தின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

அப்படி பதிவானாலும் சில நேரங்கள் சந்தர்ப்ப பேதங்களில் யாம் பதிவு செய்த உணர்வுகள் உங்களுக்குள் உண்டு. “அந்தப் பதிவின் துனை கொண்டு” நீங்கள் மீண்டும் எண்ணி எடுக்க முடியும்.

1.ஆனால் பல விதமான உணர்வுகள் ஆன்மாவிலே சேர்ந்திருக்கும் பொழுது சேர்க்கப்படும் பொழுது
2.இந்த உணர்வுகள் கலந்த பின் உடலின் ஈர்ப்பு அதிலே அதிகமான பின் பிற மண்டலங்களிலிருந்து வருவதைத் தடுக்கும்.
3.தடுத்தாலும் எப்படியும் பெற வேண்டும் என்று உள் உணர்வைச் செலுத்தி
4.அதை எல்லாம் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்தால் நிச்சயம் நீங்கள் பெற முடியும்.
5.குருநாதர் எனக்குள் பதிவு செய்தது போன்றே உங்களுக்குள்ளும் பதிவு செய்கின்றேன்.

இதை நீங்கள் சீக்கிரம் வளர்த்துக் கொண்டால் அகண்ட அண்டம் எப்படி ஆனது…? என்ற அந்த உண்மையின் இயக்கத்தை அதில் சூரியக் குடும்பம் ஒரு பிரபஞ்சம் எப்படி உருவானதோ…? இதைப் போன்று பல சூரியக் குடும்பங்கள் எப்படி உருவானதோ அதை எல்லாம் உங்களுக்குள் உணர்வின் அறிவாக நீங்கள் தெளிவாக இது உதவும்.

1.குருநாதர் எனக்குக் காண்பித்த முறைப்படி வழிப்படி உங்களுக்குள்ளும் இதைப் பயிற்சியாகக் கொடுக்கின்றேன்.
2.நீங்கள் தியானத்தின் மூலம் நிச்சயம் பெற முடியும்… உணர முடியும்.

Rishis’ state

Rishis’ state

By nature we start as an atom, get life, get the energy from vapour to the life-atom, get the body of a living being and live as human beings.

After the soul leaves the body it takes the essence of the body in the form of vapour with it and again takes, a body and the cycle goes on repeating. Such a life-atom as ours has got the capacity to absorb all the powers from nature.

Every life-atom has got its liberty to increase its power in whatever way it likes.

The people of today live without knowing their real power. Our ways of life today have come on account of our scattering our powers and living with greediness.

1.There are some great souls who were born on this earth
2.and are now blessing us as our Gods from their high states.

But we have wasted our powers and instead of leading a spiritual life with love, we live with greediness, suffering, lust, without self control, breeding in us malignity, mischief, anger and such bad qualities.

What is the use in leading such a life…?

I will tell you in this lesson how some souls having born as life-atoms have become human beings on this earth, known about their real powers and by the power of their souls how they got all the powers that are in this world.

Several souls who are Rishis now lived like us in this world with their famlies and undergone so many troubles. It is by their meditation, by meditation I mean
1.they lived in a steady state without being affected by any other thought waves,
2.taking good and bad in one way,
3.not affected by sorrow or elated by happiness
4.and not bound by family affection.

While living like this, they absorbed all the powers within themselves and sowed the seed for spiritual attainment.

Those who attain the first stage in gnana during their life time can continue in that state and get supernatural powers. From this state they can become Sages, Rishis and Sabdha Rishis.

Those who have gone to the mental stage by their powers can go to other planets.
1.They can acquire powers from other planets to their life-atom,
2.create new planets, create new living beings in them and that will become a new planet.

In this nature there are innumerable truths. All the planets that we see, started their life as life-atoms.

It is possible for the life-atom to do all these only when it is with a human body. Some great souls have come to this stage.

மனிதர்கள் வாழ்ந்த வியாழன் கோளில் இன்றும் வளர்ச்சியற்ற சில உயிர் இனங்கள் வாழ்கின்றது…!

மனிதர்கள் வாழ்ந்த வியாழன் கோளில் இன்றும் வளர்ச்சியற்ற சில உயிர் இனங்கள் வாழ்கின்றது…!

நம் நாட்டிற்குள் தோன்றிய மகரிஷிகள் இந்த உலகம் உய்ய அவர்கள் எத்தனையோ நிலைகள் இங்கே படரச் செய்தது இந்தத் தமிழ் நாட்டில் தான்.

நான் (ஞானகுரு) தமிழன் என்பதற்காக இதைச் சொல்லவில்லை.

“தென்னாட்டுடைய சிவனே போற்றி…
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!” என்று சொல்கிறோம் அல்லவா…

இந்தத் தென்னாட்டிலே தோன்றிய இந்த அகஸ்தியன் தான் உலகைக் காத்திட வட துருவத்தின் நிலைகள் பனி உறைந்து ஒரு பக்கமாகத் திரும்பும் நிலையிலிருந்து தென் பகுதியில் வெப்பத்தின் தணலைக் கூட்டச் செய்து பூமியைச் சமப்படுத்தினான்.

அதனால் தான் பூமியில் நடு மையமாக இருக்கும் இடங்களில் மனிதர்கள் உயிர் வாழச் செய்யும் நிலையும் இங்கே வந்தது.

இல்லை என்றால் வியாழன் கோள் போல் முழுவதும் பனிப் பிரதேசமாக மாறியிருக்கும்.

சிறிதளவிற்கு ஒரு நொடி மாறினாலும் நமது பூமி பெரும் பனிப் பாறையாக மாறி உயிர் இனங்களே வாழ முடியாத நிலைகள் ஆகிவிடும்.

அப்படியே உயிரினங்கள் வாழ்ந்தாலும் பனிப் பகுதிகளில் மீன் இனங்களும் மற்ற இனங்களும் வாழ்வது போல மனித இனமே அல்லாது நீர் வாழும் உயிர் இனங்களாகத் தான் திரிய முடியும்.

அன்று பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வியாழன் கோளிலும் நம் பூமியைப் போல் மனிதர்கள் வாழ்ந்தார்கள்.

1.இன்று நாம் செயல்படுத்தும் விஞ்ஞானக் கருவிகளைக் காட்டிலும் பன் மடங்கு நவீனமாகச் செயல்படுத்தப்பட்டு
2.அதன் வழிகளிலே மாற்றங்கள் ஆகி வியாழனின் சுழற்சி வேகம் கூடி பனிப் பாறையாக மாறிவிட்டது.

பனிப் பாறைகளில் உயிரினங்கள் எப்படி வாழுகின்றதோ இதைப் போல மனிதனாக இருப்பவரும் வளர்ச்சி அற்ற நிலைகள் கொண்டு உயிரினங்களாக இன்றும் வியாழனின் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதிலிருந்து வெளிப்படும் சில உணர்வலைகள் இன்று பிரபஞ்சத்திலும் மிதந்து கொண்டு வருகின்றது.

மிதந்து வந்தாலும் அவ்வாறு வந்த நிலைகளால் தான் அந்த உயிரணுக்கள் நமது பூமிக்குள் கவரப்பட்டு உயிரணுக்கள் வளர்ச்சி அடைந்து மனித உருவாக நாம் வந்துள்ளோம்.

இப்பொழுது வந்த நிலை அல்ல அது. இந்தப் பிரபஞ்சத்திற்கு சூரியன் இயக்கச் சக்தியாக இருந்தாலும் ஞானிகள் வியாழனைக் குருவாகக் காட்டினார்கள்.

இன்று இங்கிருக்கும் விஞ்ஞான அறிவைக் காட்டிலும் அன்று வியாழன் கோளில் விஞ்ஞான அறிவின் அபரித வளர்ச்சியாகி இங்கே அணுகுண்டுகள் செய்தது போல செய்து இருள் சூழச் செய்து மனித இனமே முழுமையாக அழிந்துவிட்டது.

ஆனால் அன்று இது நடந்தாலும் இயற்கையின் நிலைகள் கொண்டு வளர்ந்ததனால்
1.உயிரணுவின் தோற்றங்கள் அது மாற்றமில்லாது
2.அதே உயிர் இனங்கள் இதே பிரபஞ்சத்தில்
3.இன்று நாம் மனிதனாக வாழ்ந்து வருகின்றோம்.

ஆனால் இன்றைய பிரபஞ்சமே கார்த்திகை நட்சத்திரம் அசுவினி போன்ற ஐந்தாறு நட்சத்திரங்கள் தனித் தன்மை கொண்டு தனக்கென்று ஒரு பிரபஞ்சமாகப் பிரிந்து செல்லும் நிலைக்கு வந்துவிட்டது.

அதனால் இங்கே நாம் மனிதர்கள் வாழத் தேவையான சிந்தனைக்குரிய நிலைகள் அழிந்து கொண்டும் தெரிந்து செயல்படும் நிலைகள் மாறிக் கொண்டிருக்கின்றது.

விஞ்ஞான அறிவால் இருள் சூழ்ந்த நிலைகளாக மாறி நம்மையே நாம் அழித்துக் கொள்ளும் நிலையாகி நமக்கு நாமே தண்டனை கொடுக்கும் உணர்வாக விஞ்ஞான அறிவு வளர்ந்து விட்டது.

1.ஒரு குடி போதையில் உள்ளவர்களை நீங்கள் என்ன தான் எடுத்துச் சொன்னாலும் அது தான் அவர்களுக்கு ரசனையாக இருக்கும்.
2.இதைப் போல விஞ்ஞான அறிவால் கண்டுணர்ந்த பல பல கருவிகளையும் உபகரணங்களையும் உபயோகப்படுத்திப் பழகிவிட்டோம்.
3.அது இல்லை என்றால் இன்றைய சூழலில் நம்மால் இயல்பு வாழ்க்கை வாழ முடியாது.

உதாரணமாக நான் உபதேசித்துக் கொண்டிருந்தாலும் மைக் இல்லாமல் பேசினால் அடுத்த நிமிடம் இங்கு யாரும் அமர்ந்து இருக்க மாட்டார்கள்.

இந்த மைக்கின் மூலம் விஞ்ஞான அறிவில் பலரைக் கேட்டு அறியச் செய்கின்றோம். டி.வி. ரேடியோ ஸ்டேஷன் மூலம் அந்த அலைகளைப் பரப்பினால் உலகம் முழுவதற்கும் அறியும் தன்மை வருகின்றது.

விஞ்ஞான அறிவால் எங்கிருந்தாலும் நாம் தொடர்பு கொள்ள முடிகின்றது. எங்கேயோ விளையாடும் விளையாட்டினை வீட்டில் அமர்ந்தபடியே பார்க்கின்றோம்.

1.இப்படி நம்முடைய உடலின் சுகத்திற்காக மற்றதை மறந்து
2.மதுவை அருந்தினால் மற்றதனைத்தையும் சிந்தனையற்றுச் செயல்படுத்துவது போல்
3.விஞ்ஞான அறிவில் சிக்கிக் கொண்டுள்ளோம்.

போதைப் பொருளை உபயோகித்தது போலவே விஞ்ஞான உணர்வில் சிக்குண்டு மனிதச் செயலை இழந்து மனிதனே கூண்டுடன் அழிந்திடும் நிலையாக வளர்ந்து வந்துவிட்டது.

ஆகவே நம்மை அறியாது நமக்கு முன் சுழன்று கொண்டு இருக்கும் அந்த உணர்வின் நிலைகளில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

1.”மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்” உணர்த்திய அருள் வழிப்படி
2.மெய் உணர்வின் ஆற்றலுடன் நாம் அனைவரும் இணைந்து
3.அழியா ஒளிச் சரீரம் பெறும் நிலையாக
4.மகா மகரிஷிகளின் அருள் உணர்வுடனே என்றுமே நாம் ஒன்றி வளர்வோம்.

“போர் முறை இல்லாது… எதிர்ப்பு இல்லாது…” சுழலும் வியாழனின் இயக்கம்

“போர் முறை இல்லாது… எதிர்ப்பு இல்லாது…” சுழலும் வியாழனின் இயக்கம்

 

27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களில் இருந்து சக்திகளைக் கவர்ந்து நம் பிரபஞ்சத்திற்குள் அனுப்புகின்றது. இவ்வாறு ஒவ்வொரு கோளுக்குள்ளும் சென்று வரும் அந்தச் சக்திகள்
1.வியாழன் கோளுக்கு வரும் பொழுது எத்தகைய நட்சத்திரங்களின் மோதலின் கலவைகளில் வருகின்றதோ
2.அது 27 உபக்கோள்களை வைத்து அவைகளைக் கவருகின்றது.

சூரியன் எப்படி எடுத்துக் கொள்கின்றதோ அதைப் போல் தனக்குள் அதை எடுத்து எடுத்து… கோள்களிலே வளர்ச்சி அதிகமாகி.. சுழற்சியின் ஈர்ப்பு வட்டத்தில் உபக் கோள்களை வியாழன் வளர்த்து வைத்திருக்கின்றது.

வளர்த்துக் கொண்ட உணர்வுக்குத் தக்கவாறு வியாழன் கோள் 27 நட்சத்திரங்களின் சக்தியை ஒன்றாகச் சமைத்து அதை ஆவியாக மாற்றி உறைபனியாக மாற்றிக் கொள்கின்றது.

இது கவர்ந்து கொண்ட உணர்வுகள் வெளிவரும் பொழுது
1.வியாழனின் சுழற்சி அதிகமாகும் பொழுது எல்லாவற்றையும் அதனுடன் இணைத்து
2.புதுவிதமான அணுக்களை இணைத்துக் கொள்ளும் ஒரு பாலமாக அமைகின்றது.

நம் உயிர் இந்த உடலுக்குள் இயங்கும் பொழுது எந்த உணர்வின் தன்மை பெற்றோமோ… உதாரணமாக வேதனை என்று வரப்படும் பொழுது அந்த உணர்வுகள் உயிருடன் சேர்க்கப்படும் பொழுது எதன் வலுவோ அதன் வழி நமக்குள் மாற்றுகின்றது.

உடலான இந்தக் கோளுக்கு நமது உயிர் குருவாக இருக்கின்றது. இதைப் போன்று தான் இந்தப் பிரபஞ்சத்திற்குச் சூரியன் ஆனாலும்
1.வியாழன் கோள் இந்தப் பிரபஞ்சத்திற்குக் குருவாக இருக்கின்றது.
2.அதனால் தான் குரு என்று காரணப்பெயராக வைத்தார்கள்.

அதற்குள் வரும் அனைத்தையும் இணைத்துப் புது விதமான அணுக்களாக மாறுகின்றது. இதற்குள் நட்சத்திரங்களின் மின்னல் கதிரியக்கங்கள் ஊடுருவினால் இரண்டும் ஆண் பெண் என்ற நிலைகளில் உருவாகும் பொழுது அணுக்களாக மாறுகின்றது… வளர்ச்சியடைகின்றது.

அப்படி வளர்ச்சி அடைந்த உணர்வின் தன்மை தான் சூரியன் கவரும் தன்மை வருகின்றது.

27 நட்சத்திரங்கள் சக்தியை வியாழன் எடுத்துத் தன் சுழற்சியின் வேகத்தில் வெப்பத்தின் தணல் கூடி ஆவியாக மாற்றி மேல் பரப்பில் உறையும் தன்மை வருகின்றது.

கரண்டை வைத்து நாம் ஐஸ் பெட்டியை (ஃபிரிட்ஜை) உருவாக்குவது போன்று அதே கரண்டை வைத்து சூட்டை உருவாக்குவது போன்று
1.வியாழன் கோள் பல விதமான உணர்வுகள் கொண்டு அமைதிப்படுத்திப் “போர் முறை இல்லாதபடி…”
2.அந்த உணர்வின் தன்மை வேக வைத்து அமைதியின் தன்மை “எதிர்ப்பு இல்லாதபடி…” உருவாக்குகின்றது.

அது தான் 27 நட்சத்திரத்தின் உணர்வை தனக்குள் சேர்த்துக் கொள்கின்றது.

ஆனால் ஜாதகங்களில் பல விதமாகக் காட்டியிருப்பார்கள் ஆனால் உண்மை எதிலிருந்து வருகிறது…? என்று தெரியாது.

கோள்களைப் பிரித்துத் தான் எழுத முடியுமே தவிர சூரியனுக்கு நேராக வரும் போது ஒரு கோளின் தன்மை இணைந்து சுழல் வட்டத்தில் வரும் என்று இப்படித்தான் அவர்கள் அதைப் பிரித்து காட்ட முடியுமே தவிர இயற்கையின் உண்மையின் இயக்கங்களைச் சொல்ல முடியாது.

1.இதையெல்லாம் மனிதனுக்கு உகந்த நிலைகளாக எழுதப்பட்டு மதத்திற்குத் தக்கவாறு ஜாதகத்தைப் பிரித்து
2.இந்த நேரத்தில் இதைச் செய்தால் ஆண்டவனுக்கு ஆகாது என்பார்கள்.
3.ஆனால் ஆண்டவன் அதை எல்லாம் மாற்றி அமைக்கும் சக்தி பெற்றவன் என்று
4.ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு இடத்திற்கும் தக்கவாறு ஜாதகத்தைக் குறித்து விட்டார்கள்.

இதை வைத்துத்தான் நாம் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்து அலைந்து கொண்டுள்ளோம்.

ஆக எது பதிவோ அந்த நினைவு நமக்குள் அந்த உணர்ச்சிகளை ஊட்டுகின்றது. எந்தெந்த நிலைகளை இப்படி எடுத்துக் கொள்கிறோமோ அந்தப் பதிவுதான் செயல் ஆகின்றதே தவிர நல்ல நேரமோ கெட்ட நேரமோ இல்லை.

1.அந்த கோள்களின் இயக்கத்தில் மனிதன்… இவர்கள் சொல்வது போன்று இல்லை.
2.ஆனால் சூரியன் எல்லாவற்றையும் கவர்ந்து வரும் போது தாவர இனங்களுக்கோ கல் மண் இவைகளுக்கோ அது சேரும்… அதனின் இயக்கமாகும்.

உங்களுக்குத் தெரியாமலே உயர்ந்த சக்திகளைக் கொடுக்கின்றேன்

உங்களுக்குத் தெரியாமலே உயர்ந்த சக்திகளைக் கொடுக்கின்றேன்

கேள்வி:-
ஈஸ்வரபட்டர் உங்களுக்கு எல்லாச் சக்திகளும் கொடுத்தார்… நீங்கள் அதை எல்லாம் பெற்றீர்கள். ஆனால் எங்களுக்கு நீங்கள் ஒன்றும் கொடுக்கவில்லையே… உபதேசமாகத் தான் சொல்லிக் கொண்டே போகிறீர்கள்…!

யாருக்காவது நீங்கள் கொடுத்து அதைப் பார்த்துத் தெரிந்து கொண்டால் நாங்களும் ஆர்வமாகச் செய்வோம். இது எங்களுக்குச் சந்தேகமாகவும் ஒரு யோசனையாகவும் இருக்கிறது. கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் சாமி.

ஞானகுருவின் பதில்:-
நீங்கள் சாப்பாடு போடுகிறீர்கள். “நன்றாகத்தான் இருக்கின்றது…” என்று நான் சொல்லிவிட்டால் மட்டும் போதுமா…?

நல்ல சுவையான சாப்பாடை நான் சாப்பிட்டால்தான் எனக்கு நல்லது. ஆகையினால் போடும் சாப்பாட்டைச் சரியான முறையில் சாப்பிட வேண்டும். அப்பொழுது தான் அந்த ருசியின் தன்மை தெரியும்

1.இன்னொருவர் சாப்பிட்டுவிட்டு “நன்றாகத் தான் இருந்தது” என்று சொல்கிறார்.
2.எப்படி இருந்தது…? என்று கேட்கும் போது நன்றாக இருந்தது… நன்றாக இருந்தது… என்றே சொன்னால்
3.அது எப்படி நன்றாக இருந்தது…? என்று திரும்பவும் கேட்டால் சொல்லத் தெரியாமல் இருக்கின்றோம்…!

உதாரணமாக… உடலில் ஒரு இடத்தில் புண்ணாகி விடுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அது நம்மை வேதனைப்படுத்தினாலும் மருந்தைப் போட்டுக் குணப்படுத்த விரும்புகின்றோம்.

ஆனால் அப்போதும் சிறிது வேதனை இருக்கிறது. ஆற வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தால் புண்ணுக்கு அந்த மருந்தைப் போட்டுக் கொள்கிறோம்.

ஆனால் மருந்தைப் போட்டுக் கடுகடுப்பாகி விட்டால் என்ன…! இப்படி ஆகி விட்டதே…? என்று மருந்தைத் தூக்கி எறிந்து விட்டால் புண் ஆறுமா…?

இதைப் போன்று தான் மனித வாழ்க்கையில் நாம் சந்திக்கும் நிலையில் நமக்குள் எத்தனையோ விதமான வேதனைகளைத் தோற்றுவிக்கும்.
1.எத்தனை விதமான வேதனைகளைத் தோற்றுவித்தாலும்
2.அதை மாற்றியமைத்த அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை நாம் அடிக்கடி நுகர்தல் வேண்டும்.

அப்பொழுது அந்த வேதனையைப் போக்கும் சக்தி கிடைக்கின்றது

1.இப்பொழுது என்ன தான் நான் (ஞானகுரு) உங்களுக்கு உயர்ந்த சக்திகளைக் கொடுத்தாலும்
2.நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய முறையில்தான் அது இருக்கின்றது.

உங்களுக்குத் தெரியாமலே எவ்வளவோ மிக உயர்ந்த சக்தியைக் கொடுக்கிறேன். ஆனால் உங்களுக்கு அது தெரியாது.

ஆனால் அது எப்படி இருக்கிறது…? என்று உங்களிடம் சொல்ல ஆரம்பித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்…? “ஜீபூம்பா…” வேலையெல்லாம் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்.

அப்படி நடந்ததுதான் முந்திய கால நிலைகள்.
1.எனக்கே சக்தி இருக்கின்றது…
2.சாமி தயவு என்ன வேண்டிக் கிடக்கிறது…? என்று
3.பிய்த்துக் கொண்டு போனவர்கள் தான் பெரும்பகுதியான நிலைகள்.

குருநாதர் மூலம் பெற்ற அரும் பெரும் சக்திகளை எல்லோருக்கும் தெரிய வைக்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த அற்புதமான நிலைகளைத் தெரிந்து கொண்டால் “உலகத்திற்கு எவ்வளவோ நன்மை பயக்கும்…” என்றும் நினைத்தேன்.

கடைசியில் எல்லோருக்கும் அது ஆசையைத் தூண்டி விடும் நிலையில் தான் முடிந்துவிட்டது. ஆக மொத்தம்
1.ஒருவருக்கு புரியக் கூடிய சக்தியைக் கொடுத்தாலும்
2.அடுத்தவர்கள் புரிந்து விடக் கூடாது என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.
3.எல்லாம் தெரிந்த பின் அவர்கள் குருவாகவே மாறி விட்டார்கள்.

நான் கொடுப்பதை விட நீங்கள் எந்த அளவுக்கு அந்தச் சக்திகளை எடுக்கின்றீர்களோ… குரு காட்டிய நெறியைக் கடைப்பிடிக்கின்றீர்களோ… அதை மற்றவர்களுக்கு அப்படியே பெறச் செய்கிறீர்களோ… அதிலே நீங்கள் இந்தச் சக்திகளைக் காண முடியும்.