ஞானிகள் வழியில் சத்தியத்தையும் தர்மத்தையும் நியாயத்தையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும்

ஞானிகள் வழியில் சத்தியத்தையும் தர்மத்தையும் நியாயத்தையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும்

 

மனித ஆத்மா ஒன்றுக்குத் தான் இக்காற்றினில் கலந்துள்ள பல அமில நிலைகளில் தனக்குகந்த அமில சக்தியை ஈர்க்கும் பக்குவ நிலை பெறலாம் “தாவர நிலையைப் போல…!”

மற்ற ஜீவ ஜெந்துக்களின் நிலையில் இத்தகைய சக்திநிலை இல்லை. மனித ஆத்மாவில் அது நிறைந்துள்ளது.

ஆனால் சாதாரண வாழ்க்கையில் பார்த்தும் கேட்டும் சுவாசத்தில் உணர்ந்தும் பேசியும் வரும் நாம்… “நமக்குகந்த சக்தியை உணராமல் செயல் கொள்கின்றோம்…”

இயந்திரத்தின் துணையுடன் சில கருவிகளை “அதற்குகந்த அமிலத்தைச் செலுத்தி…” ஒளிப்படங்களைப் பிம்பப்படுத்திக் காண்கின்றோம்.

1.அந்த அமில சக்தியையே நம் உணர்வுடன் ஈர்த்து
2.இக்காற்றினில் கலந்துள்ள அச்சக்தியை ஒருநிலைப்படுத்தி
3.எங்குள்ள நிலையையும் உள்ள நிலையிலேயே நாம் கண்டிடலாகாதா…? என்றுணரல் வேண்டும்.

இவ்வுடல் என்னும் கோளத்திற்குகந்த காந்த சக்தியினால்… காற்றில் கலந்துள்ள எந்த அமில சக்தியையும்.. ஒலி ஒளி இவற்றின் சக்தி நிலையையும்… நம் உயிராத்மாவினால் செயல்படுத்தி ஈர்த்திட முடிந்திடும்.

வானொலியின் துணையுடனும்… தொலைக்காட்சியின் துணையுடனும்… இயந்திரத்தின் துணையுடனும் (கம்ப்யூட்டர்)… செயல் கொள்ளும் இந்த நிலையை மனிதனால் செயல்படுத்திய அந்தச் செயற்கையை “நம் இயற்கை ஆத்மாவினால் அனைத்து சக்திகளுமே அறிந்திட முடிந்திடும்…!”

1.மனித உடல் என்னும் இப்பிம்ப நிலை பெற்று இன்று நாம் வாழ்ந்திடும் நிலையில்
2.ஆதியிலே முதல் உயிரணுவாய்த் தோன்றிய நாள் முதற்கொண்டு
3.பல நிலைகளை எடுத்துப் பல சுவாச நிலைகளின் தொடருடன் வாழ்ந்து
4.நம்முடனே கலந்து வந்துள்ள அமில சக்தியில் நம் ஆத்மாவுடன்
5.பல நன்மை தீமை கொண்ட பல கோடி அணுக்களைச் சேமித்தே தான் வழி வந்துள்ளோம்.

ஆனால் இனி வாழ்ந்திடும் வாழ் நாட்களில்… நம்முள் உள்ள… நாம் பழக்கப்படுத்தி அடிமை கொண்டு வாழ்ந்து வந்த தீய சக்திகளின் நிலைக்கு அடிபணிந்திடாமல்…
1.நல்லுணர்வைச் சேமித்து… நம் நியதியையே ஞானிகள் வழியில் சென்றிடும் தன்மைக்கு
2.சத்தியத்தையும் தர்மத்தையும் நியாயத்தையும் கடைப்பிடித்தே செயல்படல் வேண்டும்.

அமிர்தவர்ஷினியின் ஆசி வேண்டுமப்பா…!

அமிர்தவர்ஷினியின் ஆசி வேண்டுமப்பா…!

 

சித்தன் காட்டிய சொல்லில்…
1.எதிலுமே அதனின் ஆரம்ப நிலை கொண்டு
2.”முடிவு இதுதான்…” என்று நாம் கணித்து விடக்கூடாது.

ஞான வளர்ச்சியின் பாதையில் இருப்போர்… சித்தர்கள் என்னும் நிலையைப் பெற… வாழ்வியல் அனுபவ ஞானம் பெறும் போது வெறுப்பு மிகுதியாக இருக்கும் காலங்களில் எல்லாம் தங்களைக் காத்துக் கொள்ள
1.உண்மைகளை உணர வேண்டும் என்று மறைபொருள் சூட்சும சூத்திரங்கள் கொண்டு
2.அந்த அறிவின் மயக்கத்தை நீக்க அவர்கள் கூறி வெளிப்படுத்திய பாடல்களில் சிறிது கடுமையும் உண்டு.

சிவசக்தி நிலை கலப்பாக மேன்மையுறும் செயல்களைத் தம்முள் கண்டு தெளிந்து… தங்களை வளர்த்துக் கொள்ளும் பக்குவத்தில்… மௌனத்தின் செயல்பாடாகச் சாந்த நிலையை ஏற்றிட… அதை “ஊக்குவிக்கும் செயல் சக்தியை…” சித்தர்கள் தமக்குள் எப்படி கூட்டிக் கொண்டார்களப்பா…?

1.“ஆரம்ப நிலை கொண்டு எதையும் கணித்து விடாதே…” என்று கூறுவதெல்லாம்
2.பிறர் பால் நாம் கொண்டிடும் எண்ணத்தின் உயர்வைக் கூட்டுவதற்குத் தான்.

மாமகரிஷி போகப்பெருமான் தன்னை வளர்த்து உயர்த்திக் கொள்வதற்காகத் தாய் சக்தியினைப் பெற்ற பேறைச் சொல்லால் விளக்கிட முடியுமா…?

தாய்மையின் சக்தியை விளக்குதல் என்பது என்றால் இந்த பூமியின் (புவனேஸ்வரி) உயர்வு நிலையைத் தான் முதலில் காட்டப்பட வேண்டும். பல முறையும் இதைக் கூறி வந்துள்ளேன்.

என் நிலையோ அந்த நிலை…? நன் நிலையே நமக்கு.

அம்மன் சக்திகள் அனைத்தும்… “ஆவியின் நிலைகள்…” என்று உரைத்திட்டால்… எந்த வகையில் தெளிந்திட்ட உண்மை அது…?

1.சகலமும் ஆவி தான்
2.இந்தப் பூமியும் ஆவி தான்
3.அண்ட சராசரங்களும் ஆவி தான்
4.”ஆவியான உன்னை…” (நீ) அறிந்து கொள்ள காட்டப்படும் நெறிமுறைகளில் தெளிவினைக் காட்டுவது எது…?

அம்மன் சக்திகளில் “பெயர் சொல்லி உலவக்கூடிய ஆவிகள்” – மை போட்டுக் குறி கூறுபவன் நிலையாக வளர்ந்து… அவைகளின் வளர்ச்சி நிலையைப் பற்றிச் சிறிது கோடிட்டுக் காட்டிடவும் முடிந்திடும்.

அது எல்லாம் மனிதனின் எண்ணத்தை வயப்படுத்தும் செயலுக்கே உபயோகப்பட்டுக் கொண்டுள்ளது. பத்திரிக்கை உலகையும்… மற்ற எத்தனையோ வெளி உலகத் தொடர்புகளையும் (MEDIA) விட்டுவிடவில்லை…. “வசியம் என்ற பேரில்” எல்லாவற்றையும் பீடித்திருக்கிறது.

மனித மனத்தினைத் தாக்கிடும் சக்தியாகச் செயலுறும் அவைகளின் பிடியிலிருந்து… தங்களைக் காத்துக் கொள்ள எண்ணம் கொள்வோர் அரிதாகிக் கொண்டே வருகின்றனரப்பா.

சத்தியம் என்பது உன்னுள் நிலைபெற்று இருத்தலே சாஸ்வதமானது.
1.எந்தச் சிறு சக்தியின் எதிர்ப்பின் நிலையும் தமக்குகந்த வேகத்தை காட்டும்
2.அந்த நிலை நமக்கு எதற்கு…?

“அம்மன் சக்திகள்” அக்கினி போல் சுடர்கின்றதப்பா. அருளாசி வேண்டுவது நம்மை வளர்த்துக் கொள்வதற்குத் தான்… புரிகிறதா…? அந்த நிலையில் நமது எண்ணம் உயர்வு அடைவதற்குத் தடைக்கல்லாக இருப்பது எது…? என்று உணர்ந்து கொண்டாயா…?

“சக்தி புராணம்” என்று கூறப்பட்டதே வான இயல்புகளைக் காட்டுவதற்குத். தான்.
1.”ஆகாய கங்கை” பாகீரதன் தவத்திற்கு எங்கிருந்தப்பா இறங்கி வந்தாள்…?
2.நாம் கூறுவது நம்முள் வளர்ச்சிப்படுத்திக் கொள்ள வேண்டிய “தாய் சக்தியின்” உயர்வைத் தான்.
3.எண்ணத்தின் உயர்வு உயர் ஞானம் என்றால்… அந்த மெய் ஞானம் விழிப்பாகி அது சுடராகப் பிரகாசிக்கும்
4.அமிர்தவர்ஷினியாக அது பெருகிடுமப்பா.

ஜோதித்துவ பொருளுக்கும் – உயிர் சக்தியின் தொடர்பிற்கும் மறைபொருள் உண்மையை நீ உணர்ந்து பார். சக்தியின் கலப்பாகப் பொருள் காட்டும் எந்த நிலையாக இருந்தாலும்
1.“அதிலே குறை காண்பது நம் நோக்கம் அல்ல….!”
2.நாம் கொண்ட உண்மையில் வளர்ந்து காட்டுவதே விவேகம்
3.வாய்ச்சொல் தவத்தைக் காட்டும்… மொழியின் உயர்வையும் காட்டும்.
4.ஆனால் நாவடக்கம் நம்முள் உயர்வைக் காட்டி தவத்தைக் கூட்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி உமிழ் நீராக உடலுக்குள் சேரச் சேர “உணவு உட்கொள்வது குறையத் தொடங்கும்”

துருவ நட்சத்திரத்தின் சக்தி உமிழ் நீராக உடலுக்குள் சேரச் சேர “உணவு உட்கொள்வது குறையத் தொடங்கும்”

 

சூரியன் தனக்குள் இருக்கும் பாதரசத்தால் அருகில் வரும் நஞ்சினை விரட்டுகின்றது. அதைப் போன்று மனிதன் தன் ஆறாவது அறிவால் தீமை தனக்குள் புகாதபடி அதை விலக்கிக் காட்ட வேண்டும்.

மேலே ஏழு லோகம்… கீழே ஏழு லோகம்… ஆக… கலர் ஆறு ஏழாவது ஒன்று (ஒளி). மனிதநின் அறிவு ஆறு ஏழாவது ஓன்று (தெரிந்து செயல்படும் ஒளி). இந்த ஏழு லோகங்களை வென்ற மனிதன் தான் விண் செல்ல முடியும் என்பார்கள்.

ஆனால் மகாபாரதத்தில் மேலே ஏழு லோகம் இருக்கிறது. மூன்று லோகத்திலும் பார்த்தேன். நஞ்சு கொண்ட… விஷங்கள் கலந்த நாகலோகத்திலும் சென்று பார்த்தேன்… காணவில்லை என்றெல்லாம் சொல்வார்கள்.

இப்படி விரிவாக்கிக் காட்டும் நிலை என்ன…?

மனிதன் அறிவு ஆறு… ஆனால் அதே சமயத்தில் விஷத்தின் தன்மை அதனின் அடுக்குகள் வேறு. அதை நாம் ஒளியாக மாற்றும் சக்தி பெற வேண்டும்.

இது எல்லாம் நமது குருநாதர் தெளிவாகக் காட்டிய நிலைகள்.

யாம் (ஞானகுரு) உபதேசிக்கப்படும் போது இப்பொழுது உங்களுக்குள் உமிழ் நீர் சுவை மிக்கதாக ஊறும். உங்கள் ஆகாரத்துடன் இந்த உமிழ் நீர் கலக்கின்றது.

இது சேரச் சேர சாப்பாடு அதிகமாக உட்கொள்ளும் நிலைம் உங்களுக்கு இருக்காது. ஏனென்றால் இந்த உணர்வின் தன்மை அமுதாக… மிக சக்தி வாய்ந்ததாக உங்களுக்குள் சேருகின்றது.

அதாவது… ஞானிகள் உணர்வு கலந்த உமிழ் நீர் உங்களுக்குள் சேர்ந்து கொண்ட பின் சாப்பிட்ட உணவைச் சத்துள்ளதாக… “அமுதாக” மாற்றுகின்றது நல்ல ஜீரணிக்கும் சக்தி கிடைக்கும்… நல்ல அணுக்களாக உருவாக இது உதவும்.

எந்த அளவுக்கு இந்த உபதேசங்களைத் திரும்பத் திரும்பக் கேட்கின்றீர்களோ… உங்களுக்குள் இது சக்தி வாய்ந்ததாக மாறிக்கொண்டே வரும்.

வெயில் காலத்தில் மாங்காய் சாப்பிட்டிருக்கின்றீர்களா…? காரத்தையும் உப்பையும் தொட்டுத் தின்றால் அது எப்படி இருக்கும்…? இப்பொழுது சொன்னவுடனே உமிழ் நீர்கள் எப்படி ஊறுகிறது.

அந்த உணர்வினை நுகர்ந்தவுடனே அந்தப் புளிப்பை இழுத்துக் கவர்கிறது அல்லவா. இது போன்றுதான் நாம் எண்ணும் உணர்வுகள் எதுவோ நம் உமிழ் நீராக மாறி ஆகாரத்துடன் கலந்து கொண்டே வரும்.

அந்தந்த ஆகாரம் சாப்பிடும் பொழுது எனக்கு அஜீரணம் ஆனது… எனக்கு நெஞ்சைக் கரித்தது…! என்றெல்லாம் நாம் சொல்வோம்.

நல்ல ஆகாரத்தைச் சாப்பிட்ட பின்… ஒரு மனிதன் வேதனைப்படுவதை அந்த விஷமான உணர்வை நுகரப்படும் பொழுது சாப்பிட்ட ஆகாரத்தை அது அஜீரணமாக்குகின்றது.

அதை எல்லாம் மாற்றி அமைப்பதற்குத் தான் மணிக்கணக்காக உபதேசிக்கின்றோம்.

உங்கள் உடல் இருக்கக்கூடிய அனைத்து குணங்களுக்கும்… மனிதனாக உருவாக்கிய அந்தத் தெய்வங்களுக்குக் குருநாதர் காட்டிய அருள் உணர்வை இந்த உபதேச வாயிலாக “யாம் அமுதாகப் படைத்தது… நல்ல உணவாகக் கொடுத்தது…”

உங்கள் உடலில் உள்ள அணூக்களுக்கு அமுதாகக் கிடைக்க வேண்டும் என்று என்று முதலில் பிரார்த்தனை செய்துவிட்டுத் தான் உபதேசத்தை உங்களுக்குக் கொடுக்கின்றேன்..

சந்தர்ப்பம்… உங்கள் உடலில் அந்த அமுது இப்போது கிடைத்திருக்கின்றது. மீண்டும் இதைப் போல் எண்ணி எடுத்து அமுதாகக் கொடுத்துக் கொண்டே வாருங்கள்

வேதனை என்ற விஷத்தின் தன்மையைக் கொடுத்து விடாதீர்கள்.

அந்த அருளைப் பெற வேண்டும் இருளை நீக்கி மெய்ப்பொருளைக் காண வேண்டும் என்று அந்த மகரிஷியின் அருள் உணர்வுகளை அமுதாகச் சேர்த்துப் பாருங்கள். உங்களுக்குள் அருள் ஞானத்தைப் பெருக்க முடியும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் உங்களுக்குள் பதிவாக்கிய பின் அதை அருள் சக்தியாகப் பெருக்கும் தகுதியை உங்களுக்குள் உருவாக்குகின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவைக் கூட்டிக் கொண்டு இந்த உடலுக்கு பின் நாம் பிறவியில்லா நிலை அடைய முடியும். நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டு பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்தவும் முடியும்.

மகிழ்ந்து வாழும் சக்தியை நாம் பெற முடியும்.

“நம்முடைய இச்சை” எதுவாக இருக்க வேண்டும்…?

“நம்முடைய இச்சை” எதுவாக இருக்க வேண்டும்…?

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் கொடுத்த அரும் பெரும் சக்தியை… என்னை எப்படி அதைப் பெறச் செய்தாரோ நீங்கள் அனைவரும் அதைப் பெற வேண்டும். அவர் கண்ட உண்மைகளை நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும்.

நாம் தவறு செய்கின்றோமா…? நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மைத் தவறு செய்ய வைக்கின்றதா…? என்பதை நீங்கள் சிந்தனை செய்து அந்த தவறு செய்யும் உணர்ச்சிகளைத் தடுக்கப் பழக வேண்டும்.

அதற்கு வேண்டிய கடும் ஆயுதமாகத் தான் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இந்த உபதேச வாயிலாக உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து ஆயுதமாகப் பயன்படுத்தும் போது… தவறென்ற உணர்வு உங்களுக்குள் வராதபடி… உங்கள் உடலுக்குள் தீமையை விடாதபடி தடுக்கும். அது தான் கார்த்திகேயா…!

ஒருவன் வேதனைப்படுகின்றான் என்று நம் ஆறாவது அறிவால் தான் தெரிந்து கொள்கின்றோம். தெரிந்து கொண்டாலும் அந்த வேதனை உடலுக்குள் புகாதபடி தடுக்கும் சக்தியாக… நம் ஆறாவது அறிவை சேனாதிபதியாக மாற்ற வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இச்சைப்படுதல் வேண்டும். அதை நுகர்ந்தால் நமக்குள் கிரியை ஆகின்றது. கிரியை ஆகும் போது “தீமையை நீக்கும் அந்த ஞான சக்தியாக” வருகின்றது.

முதலில் சொன்ன மாதிரி நண்பன் என்ற நிலையில் ஒருவர் மீது பாசமாக இருக்கின்றீர்கள். நோயுடன் வேதனைப்படுகின்றான் என்று உற்றுப் பார்க்கின்றீர்கள்.

அதை இச்சைப்பட்டுக் கேட்டறியப்படும் போது உங்களுக்குள் கிரியையானால் அந்த வேதனை உணர்வு தான் ஞானமாக உங்களை இயக்கும். அந்த நண்பருடன் சேர்ந்து நீங்களும் வேதனையில் தான் உழல முடியும்.

நோயால் வேதனைப்படுகின்றான் என்று தெரிந்து கொண்டாலும் அடுத்த கணமே ஈஸ்வரா… என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று “அதை இச்சைப்பட வேண்டும்…” உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும் என்று இச்சைப்பட வேண்டும்..

அடுத்து அந்த நண்பன் உடலில் துருவ நட்சத்திரத்தின் சக்தி படர வேண்டும் என்று இச்சைப்படுங்கள்… அவன் நோயிலிருந்து விடுபட வேண்டும் என்று இச்சைப்படுங்கள்.

இப்படி இச்சைப்படும் போது அந்த அருள் சக்தி இங்கே கிரியை ஆகின்றது. தீமை நீக்கும் உணர்வு உங்களுக்குள் வலிமை ஆகின்றது.

அதற்குப் பின் அவன் செவிகளில் படும் படியாக… நீ துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற இச்சைப்படு. அவ்வாறு நீ இச்சைப்பட்டால் அது உன் தீமைகளை நீக்கும்… நீ நன்மை பெறுவாய்…! என்று சொல்லிப் பழக வேண்டும்.

இது எல்லாமே நம் புராணங்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

மனிதனாக ஆனபின் எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட கார்த்திகேயா என்று நம் உணர்வுகளை ஒளியாக்கப்படும் பொழுது இதே உணர்வானால் உயிர் எல்லாவற்றையும் தெரிவிக்கின்றது… உணர்வுகள் ஒன்றாகின்றது தெளிவாகின்றது… பிறவியில்லா நிலை அடையச் செய்கின்றது.

காரணம்… நாம் இந்த உடலில் “நீடித்த காலம் இருப்போம்…” என்று எண்ண வேண்டாம் முழுமையான நிலையில் அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் இருந்தாலும் உலகில் விஷத்தன்மை இன்று அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றது.

அதிலிருந்து தப்பித்துக் கொள்ளத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அடிக்கடி எடுத்து வலு சேர்த்துக் கொள்ளுங்கள். இங்கே உபதேசிக்கும் அருள் ஞானக் கருத்துக்களை திரும்பத் திரும்பப் படித்து உங்களுக்குள் பதிவாக்குங்கள்.

ஜாதகமோ ஜோதிடமோ வாஸ்து சாஸ்திரமோ மற்ற நியூமராலஜியோ “நமக்கு எல்லாம் செய்யும்” என்று அதை நம்பிக் கொண்டு… நேரத்தையும் காலத்தையும் வீணாக்காதபடி… காலத்தால் வரும் தீமைகளை அகற்றும் அருள் ஞான சக்தி நமக்கு உண்டு என்று “உங்களை நம்பிப் பழகுங்கள்…”

அத்தகைய அருள் சக்தி தான் இப்பொழுது உங்களுக்குள் கொடுக்கப்படுகிறது. அதைப் பெருக்கி வாழ்க்கையிலே பேரின்பம் பெறுங்கள்… ஏகாந்த நிலை என்ற பகைமயற்ற உணர்வை உடலில் வளர்த்துக் கொள்ளுங்கள்.

இதை உங்களுக்குள் உறுதியாக்கிக் கொள்ளுங்கள்.

புதுப் புது மருத்துவத்தை விஞ்ஞானம் கண்டுணர்ந்து செயலாக்கினாலும் காற்றிலுள்ள விஷத் தன்மையை மாற்றும் நிலை இல்லை

புதுப் புது மருத்துவத்தை விஞ்ஞானம் கண்டுணர்ந்து செயலாக்கினாலும் காற்றிலுள்ள விஷத் தன்மையை மாற்றும் நிலை இல்லை

 

இன்றைய இவ்வுலக நியதியிலே “நீதி…” என்னும் சொல்லே
1.இக்காலத்திற்குகந்ததாக
2.இன்றைய மனிதர்களின் எண்ணத் தொடரினால்
3.மாறி மாறி வரும் இவ் அரசியலின் நிலைக்கொப்ப சாதகப்படுத்தி
4.அநீதியையே நீதி என்ற சொல்லாக்கி நிலை நாட்டுகிறார்கள்.

இன்றைய இவ்வுலக நியதியில் நீதியும் சத்தியமும் எங்கு ஓங்கி நிற்கின்றது…? தனக்குகந்த பொருளாதாரத்தின்… “செல்வத்திற்கு அடிபணிந்த நிலையில்தான் இன்றைய உலக நீதியே உள்ளது…!”

சத்தியமும் ஜெயமும் ஒன்றுமறியா பாமர மக்களுக்குத் தான்…! இன்றைய உலக நியதிப்படி சொந்தமில்லா நிலையில் அடிமைப்படுத்திட்ட நிலையில்தான் நீதியும் சத்தியமுமே நிலைத்துள்ளன.

இச்செல்வத்திற்கு அடிமைப்பட்டும் செயற்கையில் வாழ்ந்திடும் இவ்வுலக நியதியில் தர்மமும் நியாயமும் தலை நிமிர்ந்திட வழியுமில்லை… இன்றைய நிலைக்கொப்ப நீதியுமில்லை.

அவரவர்களே தான்…
1.தன் உணர்வை நல் நிலையாக தன் எண்ண ஜெபத்தில் வழிப்படுத்தி
2.தம்முள் உள்ள பல கோடி அணுக்களையும் பல நிலை கொண்ட அணுக்களையும்
3.தன் ஜெபத்தினால் நல்லணுவாய் அடக்கச் செய்து… தன் ஆத்மாவை வளர்ச்சி கொண்டிடல் வேண்டும்.

நம்மையே நாம் ஓர் ஆண்டவனாய்… அனைத்து சக்திகளுமுள்ள கோளமாய் உணர்ந்து…
1.நம்முள் உள்ள மற்ற அணுக்களின் உந்தலுக்கு அடிபணிந்திடாமல்
2.நம் உணர்வே ஒரு நிலை கொண்ட நீதியாய் சத்தியமுடன் செயல்படல் வேண்டும்.

இன்றைய இவ்வுலகின் ஜீவஜெந்துக்களின் எண்ண நிலையே மாறு கொண்டு தீய சக்திகளுக்கு அடிபணிந்தே இந்நிலையின் தொடரின் எண்ண சக்தியால் “காற்றில் அசுத்த அணுக்கள் நிறைந்து பரவி வருகின்றது…”

இன்றைய நிலைக்கொப்ப புதிய புதிய வியாதிகளின் தொடர் நிலை பரவும் நிலையும் வெகு துரிதமாக உள்ளது.

விஞ்ஞானத்திலும் மருத்துவ ஆராய்ச்சியிலும் பல பல புதிய மருத்துவத்தைக் கண்டுணர்ந்து செயலாக்கினாலும் இக்காற்றிலுள்ள விஷத் தன்மையை மாற்றும் நிலை எங்குள்ளது…?

இச்சுவாசத்தின் எண்ண சக்தியின் நிலைதான் இன்றைய இவ்வுலகின் நிலையுடன் கலந்துள்ள நிலை.

இவ்வுலகின் மேல் கலந்துள்ள சுவாசத்தையேதான் நம் பூமியும் ஈர்த்துச் சுவாசமெடுத்து வெளிப்படுகின்றது.
1.இந்த அசுத்தக் காற்றை உயிராத்மாக்கள் மட்டும் சுவாசித்து வெளிப்படுத்தவில்லை
2.இப்பூமியும் அக்காற்றையேதான் தன் சுவாசத்தில் ஈர்த்து வெளிப்படுத்துகிறது.

இக்கலியில் மாறு கொண்டதுதான் இக்காற்றின் அசுத்த நிலையெல்லாம். கலியில் வந்த மனிதர்களின் பேராசையினால் தான் இவ்வுலகின் நியதியே மாறு கொள்ளப் போகின்றது…!

இப்பூமியில் மனித ஆத்மாவாய் வாழ்ந்திடும் நாம்… நம் ஜெப நிலையை ஒருநிலைப்படுத்தினாலன்றி மாறப் போகும் கலியின் பிடியில் சிக்கி மீள வழி பெற முடியாது.

அத்தகைய அல்லல்படும் நிலையில் இருந்து மீண்டு சூட்சும நிலை பெறவில்லை என்றால்…
1.இன்று மனிதராய் வாழும் இப்பாக்கியத்தை
2.நாமே நசியவிடும் நிலைதான் நமது நிலையாகிவிடும்.

ஒவ்வோர் ஆத்மாவுக்கும் நல் சக்தி உண்டு…!

வாழ்க்கையில் நடந்த பல தீய நிலைகளை எண்ணி… சோர்வை அண்ட விடாமல் இனி நடக்கும் நிலையை உணர்ந்து செயல்பட்டு… ஒவ்வோர் ஆத்மாவுமே சக்தி ஜெபம் பெற்று…
1.சக்தியுடன் சக்தியாய்… ஒளியுடன் ஒளியாய்க் கலந்துள்ள…
2.நம் சப்தரிஷிகளின் நிலையுடனே கலந்திடலாம்.

ஓடம் தேரில் செல்லுமா…! அல்லது தேர் ஓடத்தில் செல்லுமா…!!

ஓடம் தேரில் செல்லுமா…! அல்லது தேர் ஓடத்தில் செல்லுமா…!!

 

இராமன் குகன் மீது நட்பு கொண்டான்… குகனின் துணை கொண்டு கங்கையில் ஓடத்தில் இராமன் சென்றான் என்றாலும்…
1.இராமன் கொண்ட பாசம் சகோதர நயமாக…
2.தன் மனத் தேரில் குகன் பவனி வரும் பாங்காக வந்தது என்பது… அது அன்பில் சிறந்தது

ஒரு தேரை (தவளை) ஆற்றின் கரையில் வாழும் பொழுது ஆகாரம் புசிப்பதற்காக சிறு சிறு பூச்சிகளை விழுங்குகின்றது. அந்தப் பூச்சிகளின் உயிர் தேரைக்குள் சென்று தேரையாகப் பிறக்கும் நிலை பெறுகின்றது.

ஆனால் இராமன் தன் பாணத்தால் “அறிந்திடாத் தன்மையால்” அதன் மீது எய்த பொழுது அவ் உயிர் சக்திகளின் பிறப்பின் நிலை மனித உடலுக்குள் வந்து உயிரணுக்களாக… மனிதனாகப் பிறக்கும் (உயர்ந்த நிலையாக) விமோசனம் பெறுகிறது.

ஆனாலும்…
1.சந்தர்ப்பத்தின் வசம் வினைப் பயன் காரியார்த்த நடைமுறைகள் அதை உணர்ந்து கொண்டிடும் உயர் ஞானம் போல
2.அதிவேக உணர்வுகள் கூட்டிக் கொண்டிடும் உணர்வுகளால்
3.எண்ணத்தால் ஏற்படுத்தப்படும் சந்தர்ப்பத்தின் வசம் “இராமன் கொண்ட அனுபவமாக”
4.தெய்வீக புருஷன்… அரக்க குணம் கொண்ட (இராவண) பிறப்பின் நிலை எண்ணத்தால் வரு(ந்)த்திட்டான் என்று காட்டி
5.”இராமபாணம் துளைத்தது” என்று கொண்டிட்ட உயர்வான எண்ணம் எடுத்துத் தன்னைத்தான் காத்துக் கொண்டு
6.சாப நிலையை மாற்றி விமோசனத் தன்மையாகத் தன்னை உயர்த்தியது என்பதுதான் இராம காவியத்தின் சூட்சுமம்.

அன்பின் வசம் தான் அனைத்துமே (அகண்ட அண்டத்தில்) அடங்கும்…!

உலக நிலையில் ஒன்றை அறிந்து கொள்தல் என்பது இன்றைய அனுபவ நடைமுறையாக இருக்கலாம். ஆனால் இயற்கை என்ற “வசுக்கள் சக்தியை…”
1.மனிதன் இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னில் தெளிந்து
2.ஆத்ம பலம் பெற்றிடும் வழியாகத் தன்னைத்தான் வளர்த்து
3.ஈர்ப்பின் செயல் (எங்கே செல்ல வேண்டும் என்ற) சூட்சுமம் அறிந்து கொள்ள வேண்டும்

புயலால் கடல் மிகவும் கொந்தளிக்கும்… அது போல் கோப குணத்தால் மனிதனின் மனம் தத்தளிக்கும்….! ஞானச் செல்வங்கள் அத்தகைய உணர்வுகளில் சிக்கிடாத நிலைக்கு வானவியல் தத்துவ செயல் குணம் கொள்ள வேண்டும்,

மேகத்தின் ஊடே சூரிய ஒளியைக் கவர்ந்து பல வண்ணம் காட்டும் “ஸ்படிக நீர்…” வான்வெளியில் செயலுருவாக கருப்பொருள் காட்டுவதைப் போன்று
1.ஒளியின் சக்தியைப் பெற்றுப் பெற்று உயர்ந்திடுவேன் என்ற எண்ணம் வளர வளர…
2.அந்த மேன்மையான நிலையில் வழி நிற்றலே சம்பூரணம்

ஆக…
1.தானாக வளர்வது இயல்பு நிலை…
2.பலனாய் வளர்ப்பது “நம் நிலை…!” (ஞானிகள் வழி)

இதிலே பொருள் உண்டு… உணர்ந்து கொள்…!

ஞானவனம்… தபோவனம்…!

ஞானவனம்… தபோவனம்…!

நீங்கள் தான் உங்களைக் காத்துக் கொள்ள முடியுமே தவிர “மற்றவர்கள் உங்களைக் காப்பாற்ற வேண்டும்…” என்ற நிலைக்குப் போகாதீர்கள்.

ஏனென்றால் நாம் எதை நல்லதாக எண்ணுகின்றோமோ உயிர் நம்மை அதன் வழியே இயக்குகின்றது… அந்த நல்ல உணர்வை உருவாக்குகின்றது.

இன்று மனித உடலில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் முழுமையாக இதிலேயே இருக்க முடியுமா…? இல்லை…! மிகக் குறுகிய காலமே இந்த உடலில் நாம் வாழுகின்றோம்.

அந்தக் குறுகிய காலத்திற்குள் என்றும் ஏகாந்த நிலை பெற்ற துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் பெருக்க வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்தத் தான் உபதேச வாயிலாக அதைப் பதிவாக்குகின்றோம்.

பதிவானதை நீங்கள் மீண்டும் எண்ணும்போது துருவ நட்சத்திரத்தின் சக்தி உங்களுக்குள் வளர்ந்து… தீமைகள் புகாது தடுத்து அது உங்களைக் காக்கக்கூடிய அரும்பெரும் சக்தியாக வரும்.

அதை நீங்கள் எப்படியும் பெற வேண்டும் என்று தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் அந்த உயர்ந்த சக்தியைப் பாய்ச்சுகின்றேன்.

அதை எடுத்து உங்கள் எண்ணத்தால் தீமைகளை நீக்கி… உங்களைக் காத்து வாழ வேண்டும். சாமி (ஞானகுரு) செய்து தருவார்…! என்று அல்ல. சாமி சொன்ன வழியிலே “அந்த உயர்ந்த சக்திகளை எடுக்க முடியும்… நம்மால் தீமையை நீக்க முடியும்… நம்மால் பிறருடைய தீமைகளையும் போக்க முடியும்…!” என்ற இந்த நம்பிக்கைக்கு நீங்கள் வரவேண்டும்.

நாம் யாருமே கெட்டவர்கள் அல்ல சந்தர்ப்பமும் சூழ்நிலையும் வேதனைப்படும்படி ஆக்கிவிடுகிறது.

உதாரணமாக… ரோட்டிலே நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராதபடி திடீரென்று ஒரு நாய் குறுக்கே விரட்டுகிறது என்று வைத்துக் கொள்வோம். நாய் விரட்டும் போது நமக்குப் பதட்டமாகிறது.

அந்தப் பதட்டத்திலே நல்லதை எண்ண முடியாது போகின்றது நாய் விரட்டுகின்றது ஐய்யய்யோ… நாய் கடித்து விடுமே…! என்று பயப்படுகின்றோம் யாராக இருந்தாலும் அப்படித்தான் சொல்வோம்.

அந்த மாதிரி நேரங்களில் நாய் நம் பக்கத்தில் வந்தாலும் கூட ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அந்தப் பதட்டத்தைத் தணித்து அமைதிப்படுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… இரத்த நாளங்களில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உள்முகமாக இதைச் சுவாசித்துச் சுத்தப்படுத்த வேண்டும்.

மற்றவர்களுக்குச் (அவர்களை நாய் விரட்டினால்) சொல்லும் போது துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீ பெறுவாய். உனக்குள் அந்த வலுவான நிலை கிடைக்கும்… இனிமேல் நாய் உன்னை விரட்டாது என்று சொல்லிவிட்டு… மகரிஷிகளின் அருள் சக்தியால் அந்த நாய் என்னைக் கடிக்காது இருக்கக்கூடிய சக்தியாக அது பெற வேண்டும் என்று எண்ணும்படி நாம் வழி காட்ட வேண்டும்.

அதே சமயத்தில் மேலே சொன்ன எதையும் சொல்ல முடியவில்லை என்றாலும் கூட உன் தாயை எண்ணி “அம்மா…..” என்று நீ சொல்லப்பா… நாய் கடிக்காது… உன்னை விரட்டாது.

“அம்மா…” என்ற சொல்லைச் சொல்லும் போது தாய் நம்மை காத்த்திட்ட உணர்வுகள் அங்கே குவியும். நம்மைக் கககும் சக்தியாக அது அப்போது வரும். அம்மா… என்று சொன்னாலே போதுமானது… பதட்டப்பட வேண்டியதில்லை…! என்று தெளிவாக்க வேண்டும்.

ஏனென்றால் நாயைக் கண்டு பயத்தையும் பதட்டமான உணர்வையும் எடுத்துக் கொண்ட பின் அது உடலுக்குள் எல்லா அணுக்களிலும் சேர்ந்து விடுகின்றது.

அப்படிச் சேர்ந்து விட்டால் அவன் எப்பொழுது பார்த்தாலும் பதட்டம் அடைபவனாகவே…. எந்த வேலையைச் செய்தாலும் பதட்டத்துடன் செய்வதும்… சரியாகச் செய்யாதபடி “குற்றவாளியாக” மாற்றிக் கொண்டே இருக்கும்.

காரணம்… அது அவருடைய குறை அல்ல…!

அதற்கு முன்னாடி அவன் கெட்டிக்காரனாக இருந்தாலும் கூட… இது போன்று சந்தித்த பின்… எதிர்பாராதபடி நாய் விரட்டிய நிலைகள் “கடிக்க வந்து விடுமே…” என்று எடுத்த உணர்வுகள் பதட்டம் பயமும் ஏற்பட்டபின் இந்த உணர்ச்சிகள் உடலில் சேர்ந்து மாற்றி விடுகின்றது.

காரணம்… எல்லா அணுக்களிலும் இந்தக் காந்தம் உண்டு. அப்படி ஆகாதபடி தடுப்பதற்குத் தான் “துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று அடிக்கடி சொல்கிறோம்.

தீமைகளை நீக்கக்கூடிய ஞானவனமாக இந்த உடலை தபோவனமாக நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

அன்று நாம் அரசனுக்கு அடிமை… இன்று இயந்திரங்களுக்கு (ARTIFICIAL INTELLIGENCE) நாம் அடிமை

அன்று நாம் அரசனுக்கு அடிமை… இன்று இயந்திரங்களுக்கு (ARTIFICIAL INTELLIGENCE) நாம் அடிமை

 

இன்றைய மனிதனின் பல எண்ண சக்தியினால் கணிதத்தின் (கம்ப்யூட்டர்) தொடர்பு கொண்டு…
1.செயற்கையினால் இயந்திரத்தின் துணை கொண்டு
2.ஒருவர் இருவர் அறிந்த சக்தியை இயந்திரங்களின் வழியில் செயல்படுத்தி
3.மற்ற ஆத்மாக்களின் சக்தியை இவ்வியந்திரத்தின் கணிதத் தொடர்பு கொண்டு சக்திக்கு அடிமைப்படுத்தி
4.செயலற்ற சோம்பேறி நிலையில் சென்று கொண்டுள்ளது இன்றைய உலகம்.

உலகம் எப்படித் தோன்றியது…? எந்நிலையில் உயிரினங்கள் வளர்ச்சி கொண்டன…? என்ற நிலையை அறியவும் ஆராயவும் இன்றளவும் இம் மனித எண்ணங்களின் நிலையுள்ளது.

பிறரின் தொடர்பை மட்டும் இயக்கி உள்ள நிலை இது…!

1.தான் பிறந்து வளர்ந்து செயல் கொண்டு வாழ்ந்திட… தனக்குள்ள சக்தியையும்…
2.தான் வாழவே தன்னுள் உள்ள தன் ஆத்மாண்டவனையும் வணங்கிடல் வேண்டும்…! என்று உணராமல்
3.பிறரின் சக்தியில் அடிமை கொண்டு வாழ்ந்து என்ன பயன்…?

நாம் பிறவியெடுத்த பயனை உணர்ந்து ஆத்ம ஜெபம் கொண்டால் நம் சக்தியுடன் அனைத்து நற்சக்திகளையும் ஈர்த்துச் செயல்படுத்தி வாழ்ந்திடலாம்.

நம் ஆத்மாவான நம் சக்தியை நாம் உணர்ந்து செயல் கொண்டால்தான் இம் மாறப்போகும் இக்கலியின் மாற்றத்திலிருந்து நம் ஆத்மாவை ஒளிரச் செய்திட முடிந்திடும்.

ஆத்ம சக்தியை உணர்ந்து கொண்டால் அவரவர்களிடத்திலுள்ள இவ்வெண்ண சக்தியின் தொடரைக் கொண்டு இக்கோளம் மட்டுமல்ல… இப் பிரம்மாண்ட அனைத்துக் கோளங்களையுமே நமதாக்கும் சக்தி ஒவ்வோர் ஆத்ம சக்திக்கும் உண்டு.

அனைத்துக் கோளங்களுமே நமக்குச் சொந்தமானவைதான்.

இப்பூமியில் உயிரணுவாய் உயிராத்மாவாய் வாழ்ந்திடும் நாம் நம் சக்தியைச் செயல் கொண்டதாக்கி வாழ்ந்து காட்டிடல் வேண்டும். ஜீவன் பிரிந்த பிறகு ஆவி உலகில் இவ்வுடலில்லாமல் நம் சக்தியை வளர்த்திட முடியாது.

மாறப் போகும் கலியிலும் பிறகு வரும் கல்கியிலும் ஆவி உலகில் ஆத்மாக்களாய்ச் சுற்றிக் கொண்டுள்ள நிலையில்…
1.இவ்வுடலில் இருந்து பிரிந்து சென்ற நிலையிலுள்ள எண்ண நிலைக்கொப்ப…
2.பிறவி எடுத்திடும் நாள் வரை இவ்வாவி உலகில் சுற்றிக் கொண்டேதான் எண்ணத் தவிப்புடனே இருந்திடல் வேண்டும்.

இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

“தன்னுடைய பிழைப்புக்கு” ஞானகுருவின் ஆசீர்வாதம் வேண்டும் என்று விரும்புகிறார்கள்

“தன்னுடைய பிழைப்புக்கு” ஞானகுருவின் ஆசீர்வாதம் வேண்டும் என்று விரும்புகிறார்கள்

 

இனம் இனத்தை வளர்க்கும் என்று சொல்வார்கள். ஆனால் இனத்துக்குள் ஒன்றுடன் ஒன்று தன் இரைக்காக மோதுவதும் உண்டு.

அதே சமயத்தில்
1.தன் இனத்தின் தன்மை பெருக்கும் நிலைகள் கொண்டு வருவதும் உண்டு.
2.ஞானிகள் அப்படித்தான் இயங்கிக் கொண்டுள்ளனர்.

இதைப் போன்று உயர்ந்த ஞானிகள் 27 நட்சத்திரங்களின் உணர்வின் தன்மைளை உடலிலிருக்கும் ஒவ்வொரு அணுக்களுக்கும் செலுத்தப்பட்டு உணர்வினை ஒளியாக மாற்றி தன் அறிவின் ஞானத்தை வளர்த்து விண் சென்றுள்ளார்கள்.

அதிலே விண்ணுலக ஆற்றலைக் கண்டுணர்ந்த முதல் மனிதனான அகஸ்தியன் ஒளியின் சுடராக மாற்றித் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

அதிலிருந்து உணர்வின் அலைகள் வெளிப்படுவதை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது பூமியின் ஈர்ப்பு வட்டத்தில் அது பரவச் செய்து கொண்டுள்ளது.

இதைப்போல் 27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களின் உணர்வின் சத்தைத் தனக்குள் கவர்ந்து துகள்களாக மாற்றப்படும்போது அதைச் சூரியன் கவர்ந்து தனது உணவாக உட்கொண்டு வெப்ப காந்தங்களாக அதன் அலைகளைப் பரப்பிக் கொண்டுதான் இருக்கின்றது.

சிலருக்கு எம்முடைய (ஞானகுரு) உபதேசங்களை படிக்கும் போதும் கேட்கும் போதும் சில வித்தியாசமான நிலைகள் ஏற்படலாம்.
1.நமக்கு இது எல்லாம் எதற்கு…?
2.நாளைக்கு விடிந்தால் சோறு இருந்தால் போதும்.
3.குருடனுக்குக் கண் தானே தேவை…
4.நாளைக்கு என்ன ஆகப்போகின்றதோ…? ஏது ஆகப்போகின்றதோ…! இன்றைக்கு எனக்கு இரண்டு சோறு கிடைத்தால் போதும்
5.ஞானகுரு ஆசீர்வாதம் இருந்தால் போதும்
6.தொழில் கிடைத்தால் போதும். தொழில் நல்ல முறையில் நடந்தால் போதும்.
7.என் உடல் நோய் தீர்ந்தால் போதும் என்ற இந்த உணர்வில் தான் நாம் இருக்கின்றோமே தவிர
8.நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

ஏனென்றால் சந்தர்ப்பத்தால் நுகர்ந்து கொண்ட உணர்வுகள் நம் உடலிலுள்ள அணுக்களில் சேர்க்கப்பட்டு
1.“நம்மை அறியாமல் வேதனையை உருவாக்கி…” நல்லவைகளை எண்ண விடாதபடி
2.நமக்குள் வேதனையை உருவாக்கிக் கொண்டே உள்ளது.

இதை நாம் மீட்கவில்லை என்றால் நஞ்சின் தன்மை அடைந்து மீண்டும் நாம் உயிரணுக்களின் தோற்றங்களில் ஆரம்பத்தில் விஷ அணுக்களாகத் தோன்றியது போல் நம்மை இந்த உணர்வுகள் அனைத்தும் விஷ அணுக்களாக மாற்றப்பட்டுவிடும்.

மீண்டும் புழுவாக… பூச்சியாக… பாம்பாக… தேளாகத்தான் மீண்டும் பிறக்க வேண்டிய நிலை வரும். எனென்றால் இந்த இயற்கை மாற்றங்களில் அதனுடைய இயக்கம் எது…? என்ற நிலைகளில்
1.எதனுடைய கலவைகள் அதிகமாகின்றதோ
2.அதற்குத்தக்கவாறு தான் மாறுகின்றது… மாற்றம் அடையச் செய்கிறது.

இன்று மனிதனாக இருக்கின்றோம்… விஷத் தன்மைகள் உலகெங்கிலும் பரவிக் கொண்டுள்ளது. அதிலிருந்து தப்புவதற்கு என்ன வைத்திருக்கின்றோம்…?

மெய் ஞானிகளின் அருள் சக்திகளைப் பெற்றால் தான் விஷத் தன்மைகளிலிருந்து மீட்டிக் கொள்ள முடியும். அதற்குத் தான் தொடர்ந்து இதைச் சொல்கிறோம்.

உயர் ஞானத்தால் கிடைக்கும் “விமோசனம்”

உயர் ஞானத்தால் கிடைக்கும் “விமோசனம்”

 

1.ஆதிசக்தியின் (ஆவியாக இருக்கும் இருண்ட உலகில்) அகண்ட பேரண்டத்தில் காந்தத்தின் புலமாய் (BLACK HOLE)
2.அண்டத்தின் செயலில் காந்தத்தின் உள் நிகழ்வாகச் சிருஷ்டியின் அளப்பரிய செயலுறும் வளர்ச்சியாக
3.எண்ணிலடங்காத கோடானு கோடி உயிரணுக்களின் ஜீவிதமாகத் துடிப்பும் வெப்பமும் கொண்டு
4.அநித்திய மறைபொருள் சூட்சுமக் கலப்பே பிரம்மமாகப் படைப்புகள் உருவாகி… பின் மாற்றமாகி…
5.சுருதியின் ஆதார நாதமய செயல் உருவாக… குணங்களாக உள்ளடக்கும் ஓர் மறை பேரும் உன்னுள் அறிந்திடவே (ஒலி மொழி சொல் உணர்வு)
6.காந்தப்புலனின் ஈர்ப்பாக சரீரத்தையே சுற்றி ஓடும் ஓங்கார நாத இலயத்தில் கலந்து (ஆன்மா)
7.அதே துடிப்பின் நிகழ்வுகளை அறிந்திட முடியும்.

மகரிஷிகளின் சக்திகளை எடுத்துத் தியானிக்கும் அனைத்து உயிராத்மாக்களும்… இஜ்ஜீவபிம்ப சரீரம் கொண்டே உணர்ந்து கொள்வதோடு மட்டுமின்றி… உண்மையின் நெறி முறைகளைக் கருத்தினுள் தெளிந்து கொள்ள முடிவதே… “உயர் ஞான வளர்ப்பின் துவக்கமப்பா…”

ஒன்றுக்குள் செயல்படும் கருத்தின் வழிமுறைகளை…
1.வினா (விடை) என்ற பாங்கில் எண்ணி எடுக்கப்படும் போது…
2.அதிலே தெளிவுபடுத்திக் கொள்ளும் விடையே “அறிவின் தெளிவு…”

தெளிந்ததைச் செயலாக்கத்திற்குக் கொண்டு வரப்படும் போது அதுவே உயர் நிலை பெறுவதற்கு வழி வகுக்கும்.

“சிரசின் உச்சியே ஆகாயம்…” என்று உணர்த்திய பொழுது… தொழில்படு வினையின் “கட்டளைக் கேந்திர மூளையின் செயலிலும்” இருவிதமான செயல்கள் உண்டு (இடது வலது).

சுவாசம் கொண்டு கவன ஈர்ப்பு நரம்பின் மூலம் எடுக்கும் நாதம்… (உயிர் வழி சுவாசம்) அந்த எண்ணத்தின் பாங்கைச் செயல் நடத்திடும் அமைப்பின் கருத்து உயர் ஞானம் என்றால்
1.அவ்வளர்ப்பின் ஆக்கம் வினைப் பயன் களைந்திட… வேரற நீக்கிடும் செயலுக்கு…
2.மனித சரீரத்தின் கட்டளைக் கேந்திர மூளையின் வலப் பக்க செயலைச் சிவமாகக் காட்டினான் சித்தன்.

அதே போல்
1.தாய்மையின் மேன்மையை… சக்தியாகச் சுடர்விடும் ஒளியே
2.மகரிஷிகளின் பாசப் பிணைப்பில் கட்டுண்டு செயல்படும் நிலையைக்
3.கட்டளைக் கேந்திர மூளையின் இடது புறமாகக் காட்டினான்.

ஒன்றின் செயலில் கொள்ளப்படும் அறிவு உயர் ஞானம் என்றால்… அது வினைப் பயன் களைவதோடு மட்டுமின்றி எண்ணம் சொல் உள்ளடங்கிய செயல் உயர் ஞானத் தெளிவைக் காட்டி மேலாம் அறிவாகச் சித்திக்கும்… பரப்பிரம்ம லயத்தில் (மகரிஷிகளுடன்) அது கலக்கச் செய்யும்.

பூமியின் நிகழ்வுகளை ஊன்றி அறிந்திருப்பாய், மழை பெய்த அடுத்த நாளே… நீரின் சக்தியில் அணுக்கள் பச்சை வண்ணமாகப் “பாசி பிடித்தல்” என்ற நிலையைக் காட்டும்.

வண்ணத்தின் பகுப்பைக் காட்டும் சந்திரனின் காந்த ஒளி அலைகள் பூமியில் படரும் பொழுது… நீரின் ஊடே பாய்ந்திடும் அந்த ஒளிக் கிரணங்கள் பூமியின் ஒத்த நிலையாக… பூமியின் ஈர்ப்பின் செயலிலும் ஜீவத் துடிப்பு ஏற்பட்டு… சூரியக்கதிர்களின் வெப்ப அலைகள் தணிவுற்றுச் சமைத்திடும் காலங்களில் ஏற்படும் அதே ஜீவத்துடிப்பு மரகதக் கற்களாக பூமியில் விளைகிறது.

அது போல்…
1.நீரமில சக்தியை உண்டு சூரியக் கதிர் சமைப்பு நிலைகளாக வளர்ந்திடும் அனைத்துத் தாவர இனங்களும்
2.”பச்சையம்” என்ற ஜீவரசத்தைத் தன் வளர்ச்சியின் வளர்ப்பிற்கு உள் நடத்துவதைப் போல்
3.புவியியலில் நாம் பெற்றிடும் ஞானம் வானவியலில் தொடர்பு கொண்டு
4.அவ்வண்ணம் கடந்த உயர்வு… சுடரில் மறைந்துள்ள வண்ணமாக (ஆறு வண்ணம் – ஏழாவது வெண்மை ஒளி)
5.வான் காட்டும் திறப்பில் படர்ந்துள்ளதை அறிந்து கொள்ள வேண்டும்.