வியாழன் கோளின் (குரு) சக்தியைப் பெற வேண்டிய அவசியம்… அதனின் இரகசியம்…!

jupiter

வியாழன் கோளின் (குரு) சக்தியைப் பெற வேண்டிய அவசியம்… அதனின் இரகசியம்…!

 

ஆற்றின் ஆழம் தெரியாமல் கடந்து சென்றுவிட எண்ணுபவன் செயல் போல் இல்லாமல் இலட்சிய நோக்கில் “விழிப்பாக இரு…!”

பால்வெளி மண்டலத்தின் சக்திகளை ஈர்த்து வலுக் கொண்டு பால்வெளிச் சூட்சமத்தின் பூதியை அறிந்து கொள்ளும் முன்
1.மாமகரிஷிகளின் அருளாசி பெறுவது
2.சக்தியின் வலுவை வலுவாக்கிக் கொள்வது
3.புவியின் காந்த நீர் சக்தியை ஈர்த்துச் செயல் கொள்வது என்ற
4.அந்தப் பாடத்தைப் படி… படி… படி… என்று சொன்னதெல்லாம்
5.இந்தப் படி தான்… இந்த வழி தான்… என்று அறிந்து கொள்ளுதலும்…!
6.நீர் சக்தியை வென்று காட்டினேன்… அதனுடன் ஒன்றியும் காட்டினேன்..! என்ற அகத்தியரின் கூற்று தான்.

இதனுடைய சூட்சமம் புரிகிறதா…?

நாம் வாழும் இந்தப் பூமித் தாயின் தொடர்பில் சக்தி பெற்று வலுக் கொண்டு மனிதனாக வளர்ந்த செயலுக்கு அன்று தாயின் பால் அருந்தினாய்.

இன்று சரீர வலுவின் வீரியத்தில் மண்டலங்களின் சுழற்சியினை (விண்ணுலகம்) அறியும் செயலுக்கு… எண்ண வலுவின் நேர் கோட்டில் அறிந்து கொள்ளும் செயலுக்கு
1.பூமித்தாய் புவி காந்த நீர் பாலை அமுதாக்கி அளித்திடக் காத்துக் கொண்டிருக்கின்றாள்.
2.வளர்த்து வலுக் கொண்டு சுயப்பிரகாச தனிச் சக்திச் சுழல் மண்டலமாக ஆக்கிடும் உங்கள் செயலுக்கு நானும் ஊட்டிவிட்டேன்…!

அகத்தியர் கூறிய அந்தச் சூட்சமப் பொருளைக் கூறுகின்றேன்.

1.நம் சூரியக் குடும்பத்தில் சுழன்று ஓடும் கோளங்களில் குரு என்று சிறப்பித்த வியாழன் கோள்
2.ஆதிசக்தியின் நீர் சக்தி அமில முலாமைத் தன் சக்திக்கு வலுக் கொண்ட செயலின் இரகசியம்
3.தன் ஈர்ப்பின் சுழல் வட்டத்தில் நெருங்கி வரும் அத்தனை வளரும் சுழல் சக்திகளையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்டு
4.அந்தச் சக்தியைத் தன்னுள் ஒன்றச் செய்து… தன் வலுவை வலுவாக்கி வீரியம் கொண்டே சுழன்று ஓடிடும் செயலில்
5.அந்த வியாழன் கோள் அலையை ஈர்த்திடும் பக்குவத்தை ஞானச் செல்வங்கள் பெறப் பழகிக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் அகத்திய மாமகரிஷி அந்தக் கோளின் அலையைத் தன் வீரிய அமில ஈர்ப்பைக் கொண்டு தன் அமில வீரிய முலாமுடன் ஒன்றச் செய்து தன் சக்தியையே வலுக் கொண்டதாக்கிக் கொண்டார்.

துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் என்ற தனித்துவமான மண்டலங்களாகச் செயல் கொண்ட செயலுக்கு ஜெபத்தின் வேகம் என்று சொல்லிய சொல் நாதத்தின் குணத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

அலை வீசாக்கடல் என்ற பால்வெளி சூட்சமத்தில் இப்படித் தனக்கென ஓர் சுய அமைப்பு மண்டலத்தை உருக்கொள்ளும் செயலின் கதிக்கு ஒவ்வொருவரும் வளர்தல் வேண்டும்.

தன் உயிராத்ம சக்தியின் வலுவிற்கு வலுக் கொண்டிடும் ஜெப நிலையில்
1.ஓர்முகப்படுத்தப்பட்ட எண்ண அம்பு…
2.பிரம்மாண்டமாகப் படைப்பின் படைப்பாக எய்தி
3.பூதியில் உருவாக்கப்படும் தன் ஒளி காந்த வட்டத்திற்குள் “ஒளி தீபம்…” ஏற்றப்பட வேண்டும்.

2004ல் ஆரம்பித்து அதற்கு மேல் உலகில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் கடுமையான விஷத் தன்மைகள்

End of the world

2004ல் ஆரம்பித்து அதற்கு மேல் உலகில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் கடுமையான விஷத் தன்மைகள்

 

இன்று நாம் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலைகள் இருக்கும் பொழுது சீராக இயங்குகின்றது.
1.ஆனால் அதற்குள் மாறுபட்ட உணர்வுகள் கலந்து விட்டால்
2.அந்த எலெக்ட்ரானிக் கருவியே முழுவதும் செயலிழந்து விடுகின்றது.

அதைப் போன்று தான் இன்றைய நிலைகளில் சூரியனின் மாற்றம் எலெக்ட்ரிக் அதிகமாக உருவாகும் சக்தியாக வளர்ந்து விட்டது.

காரணம் மனிதன் அணுக்கதிரியக்கங்களை உருவாக்கி வான் வீதியில் பரீட்சித்துப் பார்த்த இந்த உணர்வுகள் மற்ற கோள்களுக்குள்ளும் சென்று அதன் உணர்வுகள் இன்று உமிழ்த்திச் சூரியனுக்கு அருகே வரும் நிலைகள் வந்துவிட்டது.

அதிலே மோதல் ஏற்பட்டால் என்ன ஆகும்…?

உதாரணமாக மின்சாரம் இரு மடங்காக வந்தால் பல்புகள் ப்யூசாகிவிடும் (FUSE)… மோட்டார்கள் எல்லாம் எரிந்து விடும். அதைப் போல சூரியனுள் உருவாகும் அதீத மின்சாரம் இரு மடங்காகப்படும் பொழுது (SUN FLARE EMISSION)
1.நம் உயிரின் தன்மை துடிப்பு அதிகமாகும்.
2.நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களும் அதே நிலையாகும்.

அதே சமயத்தில் விஞ்ஞான அறிவால் கண்டுணர்ந்த கம்ப்யூட்டர் நிலைகள் பாதுகாப்பாக இருந்தாலும் எதிர் நிலையின் மோதல்களால் கம்ப்யூட்டர் செயல் இழந்துவிடும். கன்ட்ரோல் (CONTROL) இல்லாது போகும்.

அப்படிப்பட்ட நிலையானால் விஞ்ஞானத்தால் உலகம் முழுவதற்கும் நஞ்சின் தன்மை பாய்ந்து பரவும் நிலை இருக்கின்றது. விஞ்ஞான உலகில் அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கண்டுபிடித்த உணர்வுகள் உடலுக்கு நல்லது என்றாலும்
1.அடுத்த நாட்டை அழிக்க விஷத் தன்மைகளை உருவாக்கித் தன்னைப் பாதுகாக்கச் செய்த நிலையில் பரவச் செய்த அலைகள்
2.சூரியனால் அந்த விஷத் தன்மைகள் பூமிக்குள் பரவி பிரபஞ்சத்திலும் பரவி
3.மீண்டும் சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் செல்லப்படும் பொழுது இரு மடங்கு மின்சாரம் அதிகமாக உருவாக்கும் தன்மை வந்து விடுகின்றது.

அப்பொழுது காட்டுகளில் இருக்கும் விலங்குகள் போல் மனிதனின் சிந்தனைகள் தவறிவிடும்.
1.உயிரின் துடிப்பு அதிகமாகும் பொழுது ஈர்க்கும் சக்தி அதிகமாகி
2.நரம்பு மண்டலங்கள் எல்லாம் இயக்கங்கள் மாறி
3.பித்துப் பிடித்தவன் போல் சிந்திக்கும் தன்மை இல்லாது பைத்தியம் பிடிக்கும்.

இதைப் போன்ற இந்த உணர்வின் வலுவாகிவிட்டால் மனிதனுக்கு மனிதன் தாக்கும் நிலைகளும் சிந்தனையற்ற நிலைகளும் வருகின்றது.

மற்ற உயிரினங்கள் எதுவோ பூமிக்குள் வங்கிட்டுக் குடி கொண்டுள்ள மற்ற உயிரினங்கள் நில நடுக்கம் வரும் பொழுது அதை அறிந்து கொள்கிறது. உடனே வெளியேறுகின்றது. (மனிதனுக்கு அது தெரிவதில்லை).

இதைப் போன்ற இயற்கையின் உண்மைகளை அறிந்து இயக்கம் பரிணாம வளர்ச்சியில் வருவதை உணர்வின் அதிர்வுகளைக் கண்டு மற்ற உயிரினங்க தன்னைத் தான் பாதுகாத்துக் கொள்கின்றது.
1.மனிதனுக்கு அப்படி இல்லை…!
2.வந்து தாக்கும் பொழுது தான் தெரிந்து கொள்கின்றான்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் 2004ல் ஆரம்பித்து அதற்கு மேல் சென்றால் மிகக் கடினமான காலங்களாக வருகின்றது.

இப்பொழுது பத்திரிக்கை டி.வி.யில் பார்க்கின்றோம். மதம் இனம் என்று மனிதனுக்கு மனிதன் வெறி கொண்டு தாக்குவதைப் பார்க்கின்றோம். இவன் அவனைத் தாக்க… அவன் இவனைத் தாக்க… என்ற இந்த நிலைகள் தான் வருகின்றது.

மனித இனமே அழித்திடும் உணர்வுகளாக இன்று விளைந்து அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு
1.மதத்தின் அடிப்படையிலும் சரி
2.இனத்தின் அடிப்படையிலும் சரி
3.தெய்வ பக்தியின் அடிப்படையாக இருந்தாலும் சரி
4.விஞ்ஞான அறிவிலும் சரி
5.இதுகள் எல்லாம் சிந்திக்கும் திறனை இழக்கச் செய்து
6.மனிதனை மனிதன் கொன்று குவிக்கும் நிலைகளாக விஷத் தன்மைகள் கூடி
7.அதற்குள்ளேயே நாம் வாழும் தருணம் வந்துவிட்டது.

இதிலிருந்தெல்லாம் நாம் மீள்தல் வேண்டும் என்பதற்குத்தான் அந்த மெய் ஞானிகளின் ஆற்றல் மிக்க சக்திகளை உங்களுக்குள் மீண்டும் மீண்டும் தெளிவாகக் கூறி ஆழமாகப் பதிவாக்குகின்றோம்.

அதை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அதை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் உங்கள் எண்ணம் நிச்சயம் காக்கும்…!

அகஸ்தியன் பெற்ற ஜீவ சக்தியைப் (நீர்) பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

agastya and water

அகஸ்தியன் பெற்ற ஜீவ சக்தியைப் (நீர்) பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

எண்ண ஓட்ட கதியையும் நீரோட்டச் சக்தியின் செயலையும் ஒன்றுபடுத்தி அதன் உட்பொருளை வெளிக்காட்டி எண்ணத்தினுள் சிந்திக்கும் கருப்பொருள் தத்துவத்தினால் எண்ணத்தின் வழிச் செயல் நீர் சக்தி பெறும் ஆரம்ப முறை ஞான வழியமைத்தவர் தான் “அகஸ்திய மாமகரிஷி…!”

1.வானத்தில் கன பரிமாணம் கொண்ட நீர் சக்தி… இடி மின்னல் ஒரு புறமும்
2.மறுபுறம் ஆகாயத்தில் சரி பாதி இருக்கும் கோள்களையும் விண்மீன்களையும் காட்டி
3.எண்ண ஓட்ட கதியின் தத்துவத்தை எண்ணி எடுக்க வைத்த அந்த அகஸ்திய மாமகரிஷி தான்
4.நீர் சக்தியை (ஜீவன்) வென்றதாகவும்… பின் அதனுள்ளே தான் ஒன்றியதாகவும் கூறப்பட்டுள்ளது.
5.அகஸ்தியன் ஜீவ சக்தியைப் பெற்றது மிக மிக முக்கியமானது…!

அதாவது சரீரமாகிய திடமும் அந்தத் திடத்திற்குள் உள்ள நீர்ச் சக்தியும் நீரினுள் இருந்த பொழுது நீரோடு நீர் சேர்ந்து ஒருநிலைப்படுத்திட
1.தன் திடச் சரீர நிலை அணுக்கள் அனைத்தையுமே
2.நீரோட்ட நீர் சக்தியின் லேசான தன்மை போல் நீரோட்டச் சக்தியின் கதியையே தன்னுள் அடக்கி
3.நீர் மேல் உலவ… நீர் மேல் அமரும் செயலில்… ஓர் சூட்சமம் கூறப்பட்டது.

எண்ண ஓட்டச் செயல் சக்தியாகும் சூட்சமத்தை… அதனுள் ஏற்படுத்தப்படும் பதிவு… அல்லது ஈர்க்கப்படும் செயல் அனைத்தையும்…
1.ஒருமித்த கருத்தின் விளைச்சல்களாக (மகசூலாக) உருவாக்கிடும் நிலையாக
2.யாம் சொல்லும் தியானத்தின் வழித் தொடர் கொண்டு
3.அந்த எண்ண ஓட்டத்தின் கதியையே நற்கதியாக ஆக்கும்…
4.உயரிய ஞானம் பெறும் முறைகளாக வழியமைத்துக் கொள்ள வேண்டும்.

காற்றின் நீரே இளநீராகி… அதனுள் உள்ள விஷ அமில சக்தியே தேங்காய்க்குள் எண்ணையாக இருக்கும்
1.“மறைந்துள்ள அந்தத் தொடர்பை அறிந்து…”
2.அதையும் பயனுற வழிப்படுத்திக் கொள்ளும் செயலே ஞானம் என்பதாகும்..!

விமான விபத்திலிருந்து எல்லோரையும் காப்பாற்றியது – நடந்த நிகழ்ச்சி

Polaris protection

விமான விபத்திலிருந்து எல்லோரையும் காப்பாற்றியது – நடந்த நிகழ்ச்சி

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) காட்டிய வழியில் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு சமயம் நான் (ஞானகுரு) பத்ரிநாத் போய் விட்டு வந்து கொண்டிருந்தேன்.

எனது நண்பர் என்ன செய்தார்…! சென்னைக்குப் போகலாம்…! என்று சொல்லி என்னைக் கூட்டிக் கொண்டு போகிறார். என் கையில் பணம் இல்லை.

டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தேன். விமானம் டெல்லியை விட்டுப் புறப்பட்டு மேலே பறந்து சென்று சிறிது நேரம் தான் இருக்கும்.

அந்த விமானிக்கும் தெரியவில்லை. அந்த நேரத்தில் எப்படி… என்ன ஆனது… என்று தெரியாதபடி “கிர்…ர்ர்…” என்று எவ்வளவு உயரத்தில் மேலே போனதோ அதே வேகத்தில் “கிர்…ர்ர்…” என்று விமானம் கீழே இறங்குகிறது.

அப்பொழுது குருநாதர் அங்கே அதனுடைய இயக்கங்களைச் சொல்கிறார். இயற்கையின் நியதிகளில் நம் பிரபஞ்சத்தைச் சேர்ந்த இருபத்தியே ஏழு நட்சத்திரங்களும் இருபத்தியேழு விதமான உணர்வுகளை எடுத்துக் கொள்கிறது.

ஒரு நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் துகளும் இன்னொரு நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் அது பிரபஞ்சத்தில் பூமிக்கு வெளியே மோதினால் அது ஆவிகளாக மாறப்படும்போது எந்தெந்தக் கோள் அந்தப் பாதையில் வருகின்றதோ அதனின் சத்தை அது எடுத்துக் கொள்கின்றது

ஆனால் எதிர்நிலையான நட்சத்திரங்களின் துகள்கள் வரப்படும்போது அது ஒன்றோடு ஒன்று மோதினால் என்ன ஆகின்றது…?

நம் பூமியில சூறாவளி என்று சொல்கிறோம் அல்லவா…! இதே போல் நம் பிரபஞ்சத்திற்குள்ளும் சூறாவளி உண்டு. அதைத்தான் அங்கே காட்சியாக உணர்த்துகின்றார் குருநாதர்.

பூமியின் ஈர்ப்பு வட்டத்தில் மேலே செல்லப்படும் பொழுது அங்கே அனுபவரீதியிலே காட்டுகின்றார்.
1.அங்கே எதிர்மறையான நட்சத்திரங்களின் உணர்வலைகள் அதிகமாகப் பரவி இருக்கும்போது
2.ஈர்க்கும் காந்தம் அங்கே குவிந்திருக்கின்றது.
3.விமானம் அந்த இடத்தின் அருகிலே சென்றதும் குவிந்த நட்சத்திரத்தின் அலைகள் கிர்…ர்ர்..! என்று கீழே இழுத்துக் கொண்டு போகிறது. (அந்த நேரத்தில் காட்டுகின்றார் குருநாதர்)

அந்த விமானத்தில் உள்ள பயணிகள் அத்தனை பேரும் அப்படியே கதிகலங்கிப் போனார்கள்.
1.எல்லோரும் சத்தம் போட்டார்கள்…!
2.நான் அசையாமல் உட்கார்ந்து கொண்டு இருக்கின்றேன்.

ஏதாவது அசம்பாவிதங்கள் ஆனால் விமானத்தை ஓட்டுகிறவர்கள் பயணிகளுக்குத் தைரியத்தைச் சொல்வார்கள். ஆனால் திடீரென்று இப்படி ஆனவுடனே விமானி (PILOT) முதல் எல்லோரும் கதிகலங்கிப் போனார்கள்.

வானியலை முன் கூட்டியே அறிந்து தான் விமானத்தை ஓட்டுகின்றனர். ஆனாலும்
1.சில பகுதிகளில் இதே மாதிரி மற்ற நட்சத்திரத்தின் உணர்வுகள் அதிகரித்து
2.அதாவது எதிர்மறையான நட்சத்திரத்தின் துகள்கள் நம் பூமியின் உணர்வுக்குள் ஈர்க்கப்பட்டால்
3.அது மின் கதிர்களாக மாற்றப்படும் போது இது எதிர் நிலை ஆகிச் சுழல் காற்றாக மாறுகின்றது.
4.அப்படிப்பட்ட சுழல் காற்றுக்குள் நேராக விமானம் போகும் போது
5.ஒரு நொடியில் கீழே இறக்குகின்றது…! என்பதை அனுபவமாகக் காட்டுகின்றார் குருநாதர்.

நம் குருநாதர் சாதாரணமானவர் அல்ல…!
1.பைத்தியக்கான் தான்…!
2.கிழிந்த வேஷ்டியைத் தான் கட்டி இருந்தார்.
3.ஒவ்வொரு நொடியிலும் இந்த நிலையைக் காட்சி கொடுத்து உபதேசித்துக் கொண்டே வந்தார்
4.அந்தச் சந்தர்ப்பம் நான் தெளிவாகிக் கொண்டேன். அதனால் சிரித்துக் கொண்டே இருந்தேன்.

கடைசியில் விமானம் வர வேண்டிய இடத்திற்குப் பாதுகாப்பாக வந்து இறங்கியது. அங்கே இறங்கியவுடன் எல்லாரும் சேர்ந்து என்னிடம் வந்து
1.நீங்கள் ஏன் சிரித்துக் கொண்டிருந்தீர்கள்…? என்று கேட்டனர்.
2.நீங்கள் சிரித்துக் கொண்டு உட்கார்ந்ததைப் பார்த்தால்
3.நீங்கள் எங்கள் கூட வந்ததால் தான் நாங்கள் தப்பித்தோம் என்றனர்.

விமானத்தில் வந்த எல்லோரும் என்னிடம் ஆசீர்வாதம் வாங்கினார்கள். விமானத்திலிருந்து நான் கீழே இறங்கி வர முடியவில்லை.

ஐயா எனக்கு ஒன்றும் தெரியாது…! என்று நான் சொன்னேன்.

இல்லை இல்லை…! விமானம் கிர்… என்று கீழே இறங்குகிறது. நீங்கள் மட்டும் சிரிக்கிறீர்கள்.. உங்களிடம் ஏதோ சக்தி இருக்கிறது…! என்று என்னைப் பிடித்து கொண்டார்கள்

ஆனால் எனக்குத் தெரியாமல் குருநாதர் என்னை அப்படி அங்கே இயக்கினார். அனுபவரீதியில இதை அந்தச் சந்தர்ப்பத்தில் உணர்த்திக் காட்டினார்.

விமானத்தில் விஞ்ஞான அறிவு கொண்டு நுட்பமாகச் செயல்பட்டாலும் சந்தர்ப்பத்தில் இதைப் போன்ற விபத்துக்கள் நிறைய ஏற்பட்டு விடுகிறது.

குருநாதர் காட்டிய வழியில் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் பாதுகாப்புக் கவசமாக்கிக் கொண்டால் நாம் எடுத்துக் கொண்ட அந்தச் சக்திகள் நம்மை நிச்சயம் காக்கும்…!

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இந்த அனுபவத்தை உணர்த்துகின்றேன் (ஞானகுரு).

மனிதன் வாழ்க்கையில் வரும் சங்கடத்தையும் சலிப்பையும் சோர்வையும் அகற்ற வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

HUMAN BIRTH TREASURE

மனிதன் வாழ்க்கையில் வரும் சங்கடத்தையும் சலிப்பையும் சோர்வையும் அகற்ற வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

உதாரணமாக கரும்பு பயிரிடும் ஒரு விவசாயி தான் பெறும் மகசூலை எத்தன்மை கொண்டு பாதுகாப்பாகப் பெறுவது…? என்பதிலும் நம் உயிரான்ம சக்தியின் வளர்ச்சிக்குச் “சூத்திரம்…” உள்ளது.

பூமியைப் பண்படுத்திச் செப்பனிட்டு உரமிட்டுக் காலமறிந்து கரும்பின் வித்தைப் பயிரிடும் செயலில் கரும்பு வளரத் தேவையான நீரைப் பாய்ச்சிப் பாதுகாப்பாக அந்த வித்தை வளர்த்திடும் தொடர் வேண்டும்.

தேவையான நீரை விட்டுக் கரும்பு வளர்ந்து வரும் காலகட்டத்தில் “சோகைகள்…” என்ற கரும்பின் இனத் தன்மைகள் அகற்றப்பட்டுத் தூய்மைப்படுத்தப்படாவிட்டால்
1.சிறு உயிரினங்கள் அதனுள் வாசம் செய்து கரும்பின் சுவையைக் கெடுத்துவிடும்.
2.அதனால் நல்ல பலன் பெற முடியாது.

நீர் பாய்ச்சும் செயலிலும் இயற்கையாக அதி தீவிர மழை நீர் பெய்து விட்டால் அவை நிலத்தில் தங்கினால் கரும்பில் நீர் சக்தி கூடி விடும். சுவை குறைவுபடும். ஆகவே தேங்கிய நீரை உடனே அகற்ற வேண்டும்.

பக்குவ காலத்தில் கரும்பை அறுவடை செய்யாமல் நாட்கள் என்ற கணக்கின் தொடர் நீண்டுவிட்டால் அந்தக் கரும்பின் சுவை சத்து ஈர்க்கப்பட்டு
1.கரும்பின் பூ என்ற தொடர் வளர்ச்சி ஆக்கும் செயலில்
2.வேண்டோடுதல் என்ற சொல் நாம குணத்திற்கொப்ப
3.அந்தக் கரும்பின் சுவை குணம் நீங்கிப் பலனில் மாற்றம் ஏற்படும்.

மனம் என்ற வயலைப் பக்குவப்படுத்தும் ஞானி… களைகளைக் களைந்து… தன் செயலில் ஒழுக்கம் என்ற பாத்தியிட்டு… நற்பண்பு என்ற ஜெப நீரைப் பாய்ச்சி… ஞான வித்தாம் கரும்பினைப் பயிர் செய்திடும் பக்குவம்… ஞானப் பயிர் காக்கப்பட வேண்டும் என்ற செயலுக்கு ஞான வித்தை ஈர்த்திடும் செயலே… விவசாயி கரும்பின் பயிரைக் கண்ணும் கருத்துமாகப் பேணுகின்ற வழி முறை போல் இருந்திடல் வேண்டும்.

ஞானப் பயிர் வளர்த்திடும் மனதில் தேவையற்ற களைகள் அகற்றப்பட்டு நல்லொழுக்க நீர் என்ற ஜெபம் என்ற சக்தித் தொடரினால் “நேர் செய்யப்பட வேண்டும்…!”

அப்படிச் செயல்படுத்தினால் பயிர் தனக்குத் தேவையான ஆகாரத்தைப் பூமியிலிருந்து பெற்றுச் சமைத்து வளர்வதைப் போல் நாம் தியானத்தின் மூலம் ஈர்த்திடும் எண்ண ஜெப நீரால் ஞானப் பயிர் நல்லொழுக்க முறைச் செயலுக்கு வளர்ச்சி பெற்றிடும்.

உலகோதய வாழ்க்கை முறை எதிர் மோதல் என்ற… கடும் மழைக் காலம் மிகுந்து விட்டாலும் விவசாயி பயிர் செய்யும் பூமியில் மழை நீர் தேங்கி அந்தப் பயிர் அழுகிப் போகாமல் நீரை நீக்கிட முற்பட்டும் ஓர் வழி அமைத்து வெளியேற்றுவது போல்
1.உலகோதய மழை நீர் தேங்கி
2.ஞானப் பயிர் வளர்ப்பின் முறையில் மாறுபாடு ஆகாதபடி
3.நாம் சுட்டிக் காட்டும் தியான வழித் தொடரில் அந்தத் தீமைகள் அனைத்தும் நீக்கப் பெற்று
4.நல்லாக்கம் பெறும் முயற்சியாக விவசாயி தன் பயிரைக் காத்திடும் செயல் போல் அமைத்திடல் வேண்டும்.

சரீரத்தில் வந்து மோதும் எதிர் அலை மோதல் ஈர்ப்பின் செயல் உடலிலிருந்து கழிவுகள் நீக்கப்படா விட்டால் எதிர் மோதல் குணத் அமிலத் தன்மைகள் சரீரத்தில் தங்கிப் பிணியாக உடலில் மாறிவிடும்.

ஆக உயரிய ஞான வளர்ப்பின் பயனைப் பெறுவதிலும் தடங்கள் ஏற்படாத செயலுக்கு எதிர் மோதல் குணங்ள் எல்லாம் நீக்கப்பட வேண்டும்.

கரும்பின் கழிவு என்ற சோகைகள் அடர்ந்து வளர்ந்து விட்டால் அதனுள் வாசம் செய்யும் சிறு உயிரினங்கள் தன்மை போல்
1.வாழ்க்கையில் வரும் எதிர் நிலையான குணங்கள் செயல்பட்டு
2.அந்தச் சிறு உயிரினங்களால் கேடுகள் உண்டாகிக் கரும்பின் பயிர் இனிய குணச் சுவையை நீங்கி புளிப்பின் சுவையைப் பெறுவது போல்
3.ஞான வளர்ச்சியின் செயலில் ஆகாதபடி “அதி தீவிர எண்ண வலு என்ற பாதுகாப்பு அவசியம்…!”
4.ஒவ்வொருவரும் விவசாயி போல் ஞானப் பயிரைப் பாதுகாத்துக் கொள்வதன் அவசியத்தை உணர்தல் வேண்டும்.

அறுவடை செய்த கரும்பினைப் பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கரும்பின் சுவை குணத்தில் உண்டாக்கப்படும் பல்பொருள்கள் என்ற செயலுக்கு முன்பே கடும் மழையால் அறுவடை செய்யப்பட்ட பயிர் நீரினுள் மூழ்கிவிட்டால்… பயிர் காக்கப்படா விட்டால் பலனை எப்படிப் பெற முடியும்…?

விவசாயியினால் காக்க முடியாமல் போன பலனை… பாதுகாப்பற்ற செயலின் தன்மை கொண்டு கேட்பாரற்று நீரில் மூழ்கிவிட்ட பயிரினை… ஒரு வியாபாரி பொருளுக்காக விற்பதின் செயலினால் விவசாயி என்ன செய்ய முடியும்…?

ஏனென்றால் அந்தக் கரும்பின் புளிப்பின் சுவையை ஒவ்வொருவரும் சுவைத்திடும் பொழுது தான் பயிர் செய்த நிலத்தின் பலனை
1.சோர்வு என்ற சலிப்பு என்ற சங்கட அலை உந்தும் செயலினால்
2.தன் முயற்சியில் பாதுகாப்பற்ற செயலினால்
3.தன் பயிரைத் தானே விலை கொடுத்து வாங்கிடும் செயல் நிகழ்வுகளின் வேடிக்கைகளை என்னவென்பேன்…?

அதாவது ஞானப் பயிர் யாருக்கு உரியதோ அவரின் முயற்சி இன்மையினால்… உலகோதய வாழ்க்கையில் சிக்கிக் கொண்டால் ஞானத்தின் மகசூலைப் பெற முடியாது.

எண்ணம் சொல் செயல் இந்த மூன்றின் செயல் குண நிகழ்வுகளின் மாற்றம்… எண்ணம் கொண்டு செயல்படுவதால் மனம் என்று கூறுவதெல்லாம் மன எண்ணச் செயல் நிகழ்வால் “மனமே பகை…!”

பகை என்ற தனித்துவம் ஞானத்தில் இல்லை என்ற செயல் உண்மை வாய்ந்தது. எதிர் மோதல் பகை என்ற குணங்கள் தாக்கினாலும் ஞானியின் ஈர்ப்பின் செயலில் உண்மையின் உயரிய உயர் ஞான எண்ண வலு பெற்றிருப்போன் அந்தப் பகை குண அமிலத் தன்மைகள் தன் ஞானத்தில் மோதினாலும் அனைத்தையும் அது துகள்களாக்கிவிடும்.

ஞானச் செல்வங்கள் பெற்றிடும் உயர் ஞான வளர்ப்பின் செயலுக்கு
1.எந்த வித எதிர் மோதல் குணங்களும் தாக்கிடாத வண்ணம்
2.பக்குவப்படுத்தப்பட்டுச் செயல்படும் நிகழ்வனைத்தும்
3.மகரிஷிகளின் அருள் ஒளி என்ற எண்ண வலுத் தொடரில் நிலை பெற்று நின்று வளர்ப்பின் வளர்ப்பாக்கி
4.பேரண்டக் கோளத்தையே உருவாக்கிடும் செயல் சக்திக்கு… சக்தியின் முயற்சிக்கு… “என்றும் எனது ஆசிகள்…!”

விஞ்ஞான உலகில் இருந்தாலும் நம்மைக் காக்கும் நம்பிக்கை இருக்கிறதா…?

Trust and confidence

விஞ்ஞான உலகில் இருந்தாலும் நம்மைக் காக்கும் நம்பிக்கை இருக்கிறதா…? 

இன்று விஞ்ஞான உலகில் தான் இருக்கின்றோம். விஞ்ஞானத்தின் மூலம் அண்டத்தையும் கம்ப்யூட்டர் என்ற சாதனைத்தின் மூலம் அளந்தறிகின்றனர்.
1.உலக இயக்கத்தையும் அறிகின்றனர்.
2.எங்கேயோ (COSMOS) காணாத இடத்திலிருப்பதையும் அந்த உணர்வுகளை நுகர்கின்றார்கள்.
3.அதை எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலைகளில் இங்கே பதிவாக்கிப் பல ஆயிரம் மடங்கு பெருக்குகின்றார்கள்
4.அந்தக் கோள் எங்கே இருக்கின்றதோ அதே உணர்வை இங்கே பதிவாக்கி உந்து விசையால் இராக்கெட் மூலம் செயற்கைக் கோளை ஏவுகின்றனர்
5.விண்ணிலே பாய்ச்சப்படும் பொழுது அதிலே பதிவான உணர்வுடன் தன் இனத்தைக் கண்டதும் செயற்கைக் கோளை அதன் வழியில் அழைத்துச் செல்கிறது.
6.அங்கே இருக்கக்கூடிய நிலைகளை எல்லாம் தரையிலே இங்கே அறிய முடிகின்றது.

இதைப் போன்ற நிலையில் விஞ்ஞான அறிவு இன்று இருக்கும் இக்காலத்தில் நாம் பக்தி மார்க்கத்தில் எப்படி இருக்கின்றோம்…?

யாரோ செய்வார்… சாமியார் செய்வார்… சாமி செய்யும்… ஜாதகம் செய்யும்… மந்திரம் செய்யும்… யாகம் செய்யும்… வேள்விகள் செய்யும்…! என்ற நிலைகளில் அஞ்ஞான வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஆனால் மெய் ஞானிகள் காட்டிய பேருண்மை என்ன…?

தீமை என்ற நிலைகள் நமக்குள் இருப்பினும் அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை நாம் நுகர்ந்தால் நம் உயிர் அதை “ஓ…” என்ற ஜீவ அணுவாக உருவாக்கி “ம்…” என்று நம் உடலாக மாற்றும்.

அதே வழியில் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளைத் திரும்ப எண்ணும் பொழுது
1.அது நமக்குள் நன்மை பயக்கும்..
2.நம் உடலுக்குள் நலம் பெறும் சக்தியாக மாறும்…
3.நம் சொல் கேட்போருக்கும் நலம் பெறும் சக்தியாக மாறும் என்பதைத்.தெளிவாகக் கூறியிருப்பினும்
4.அதை நாம் யாரும் இது வரை பின்பற்றவில்லை.

சாமி (ஞானகுரு) வந்தார் என்றால் அவரிடம் பெரிய சக்தி இருக்கின்றது… “அவர் தான் நமக்குச் செய்வார்…!” என்ற இந்த ஆசை தான் வருகின்றது.

சாமி உபதேச வாயிலாகக் கொடுக்கும் அந்த அருள் உணர்வின் சக்தியை நமக்குள் பதிவு செய்து மீண்டும் அதை நினைவுக்குக் கொண்டு வந்தால்
1.அந்த உயர்ந்த குணத்தை நாமும் பெற முடியும்
2.நமக்குள் தாழ்மைப்படுத்தும் உணர்வை.. தீமை செய்யும் உணர்வை மாற்ற முடியும்
3.நாம் சொல்லாகச் சொல்லி வெளிப்படுத்தும் உணர்வுகள் பிறரைப் புனிதமாக்கவும் உதவும்
5.நமக்குள்ளும் புனிதமாக்கும் உணர்வுகள் விளையும்…! என்ற இந்தத் தன்னம்பிக்கை வருதல் வேண்டும்.

இதைத்தான் கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று தெளிவாக்கப்பட்டுள்ளது.

மனிதனுக்கு அடுத்த அந்தத் தெய்வ நிலையை அடையும் மார்க்கங்களைத் தான் நம்முடைய ஆலயங்கள் அனைத்திலும் ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.

மெய் ஞானிகள் காட்டிய வழியில் நாம் செல்தல் வேண்டும்…!

சிவ நடனத்தைக் காணவேண்டும்…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Siva thandavam

சிவ நடனத்தைக் காணவேண்டும்…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

பூமியின் ஈர்ப்பில் பரவிப் படர்ந்து தன் செயலுக்கு வரும் உயிரணுக்கள் ஒன்றிலிருந்து ஒன்றாகப் பரிணாம வளர்ச்சியாக வளர்ச்சியின் முதிர்வில் பல நிலைகள் பெற்றுத்தான் இயற்கையின் கதியில் செயல்படுகின்றன.

படைப்பின் வித்தானது தன் இன வளர்ப்பிற்குத் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும் காத்தல் தொழிலுக்கு மண்ணின் தொடர்பில் நீரை உண்டு.. ஒளியை உண்டு.. காற்றையும் உண்டு… ஓர்மித்த ஈர்ப்பின் செயல் நிகழ்வுகளுக்குத் தன்னையே வளர்ச்சிப்படுத்திக் கொள்கிறது.

ஆகாரத்தை உண்டு வாழும் இந்த ஜீவ பிம்பச் சரீரத்திற்கும் அதே போன்ற செயல் உண்டு.

சிவன் உருவத்தில் முத்தலை சூலம் என்று காட்டப்பட்டதில் முத்தொடராகப் பல பொருள்கள் உண்டு.
1.கண்டத்தில் விஷம் – கழுத்தைச் சுற்றிப் பாம்பு என்பது
2.உயிரணுக்கள் உதித்திடும் செயல் அமில குணங்களாக விஷத்தின் எதிர் மோதல் தன்மைகளாக
3.பரவெளியில் உயிரணுக்களாக அசைந்திடும் தன்மைகளை உணர்த்தவே ஜீவனுள்ள பாம்பு.

அத்தகைய இருவினைச் செயல்கள் இயற்கையில் என்றுமே உண்டு. ஏனென்றால்
1.அமைதியாகத் தவழ்ந்திடும் காற்றே புயலாகவும் எழுகின்றது.
2.அமைதி காட்டும் நீரே கொந்தளிப்பாகவும் காணப்படுகின்றது.
3.நின்று எரியும் நெருப்பே உரத்து எழுந்து தாண்டவமாடுகின்றது.

இது எல்லாம் இயற்கையின் கதியில் செயலில் இரு தன்மைகள் என்று கூறப்பட்டாலும் “இரண்டும் ஒன்று தான்…!”

அவைகள் செயலுறும் காலத்தில் நிகழும் தன்மைகள் கொண்டே உணர்வாக அறிந்து கொள்ளும் பக்குவத்தில் “ஜோதி நிலையைக் காட்டவே..” சிவன் கையில் அக்கினி வைத்துக் காட்டப்பட்டுள்ளது.

ஒலியின் வேகத்தில் ஒளி பிறக்கின்றது. நாதமே ஒளியாகின்றது. நாதத்தில் கலக்கும் உஷ்ணமே காக்கும் செயலாகப் புரிகின்றது.

மான் மழு… புலித் தோல் ஆடை.. அபயஹஸ்தம்… குஞ்சிதபாதம் சுட்டும் நற்சுவாச நிலைகள்… பாதத்தின் அடியில் முயலகன்…! என்றிட்ட இவ்வகை விளக்கங்கள் எல்லாம் “ஜீவ பிம்பம் பெற்ற மனித ஆத்மாக்கள் பெற வேண்டிய.. கடைப்பிடிக்கக வேண்டிய வழிகளாக.. உண்மையை உணர்த்தும் தத்துவங்களே ஆகும்…!

“சிவ நடனம்…” காண வேண்டும் என்பதே…
1.ஆத்மார்த்தமாக…! இயற்கையுடன் ஒன்றிய உயர் ஞான வளர்ப்பில் இயற்கையுடன் கலந்தே
2.அதன் உள்ளிட்ட சக்தியாகச் சக்தி பெற்றிடவே போதனைகளை அளித்திடுகிறோம் இங்கே…!
3.அந்தச் சக்தியை யாரும் பெற்றுத் தருவதில்லை.

ஆக.. “சித்தன் போக்கு சிவன் போக்கு…!” என்பது இயற்கையுடன் ஒன்றி வாழும் வாழ்க்கையில் சிவ தத்துவமாகத் தன்னையே… “தன் உயிராத்மாவையே…” வழி நடத்தும் செயலுக்குத் தன்னை உணர்ந்து கொண்டது தான்.

ஒளியின் அமைதி பெற எனது (ஈஸ்வரபட்டர்) ஆசிகள்.

ஸ்வரூபம் சிவமாகவும் சக்தியின் ஸ்வரூபம் கலையாகவும் கண்டுணர்ந்த தன்மைகளில்… பூமியின் சுழற்சியும்.. பொருள் மறைவாக காந்த ஈர்ப்பின் செயலையும்… தன்னகத்தே தெளிந்து… சிவனாரின் உருக்கோலம் காட்டப்பட்டதில் ஜடாமகுட சிரசே… ஆகாய வெளியாகும்…!

ஆகாய கங்கை என்றால் என்ன…?

நீரமில சக்தி ஒன்றுடன் ஒன்று கனபரிமாணம் கொண்டு வானிலிருந்து பெய்திடும் நீராக வரும் நிலையில் “ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே…!” என்று இடி மின்னல் என்று சூட்சமமாக விளக்கப்பட்டுள்ளது.

(ஆனால் பூமியைச் சுற்றி ஓடும்… பூமியிலிருந்து குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் அமைந்திருக்கும் ஒரு புலத்தையே இன்றைய விஞ்ஞான உலகம் ஆகாய கங்கை என்று அழைக்கின்றது)

சிவன் நெற்றியில் பிறைச் சந்திரனைக் காட்டியது என்ன..?

பூமியின் சுழற்சியுடன் ஒட்டியே வலம் வந்து அண்ட இருளில் மறைந்தும் (அமாவாசை) பின் வெளிப்பட்டுச் சூரியனின் ஒளி காந்த சக்தியை ஈர்த்துத் தன் சமைப்பால் வெளிவிடும் “தண் ஒளிக் கிரகணங்கள்…” காட்டுகின்றது.

அது பூமியுடன் இணைவாகச் சுழன்று பார்வைக்கோண வளர் பிறையாகி… பின் பௌர்ணமியாகக் காணும் நிலையையே சிவனுக்குப் பிறைச் சந்திரனாகக் காட்டியது.

பரவெளியின் சக்தியை ஈர்த்துப் பூமி தன் சமைப்பாக வெளிவிடும் மூச்சலைகளில்
1.அதே நிகழ்வின் தொடர்வில் மீண்டும் மீண்டும் ஈர்த்திடும் செயலில்
2.காற்றின் சக்தியாகப் பரவெளி மோதலின் உராய்வும்
3.அதனுள் பிறந்திட்ட ஒலி நாதங்களையே சிவனாரின் கையில் “உடுக்கை” என்று காட்டியது.

பூமியின் துருவங்களில் ஈர்த்துப் படர்ந்திடும் பனித் துளிகள் (பனிப்பாறைகள்) அனைத்தையும் சதாசிவமாகக் காட்டி அறிவின் ஆற்றல் என்று சூட்சமமாக
1.மனித சரீரத்தின் நெற்றிப் பகுதியையே
2.சதாசிவன் மண்டலம் என்று தத்துவம் கூறப்பட்டது.

விழிப் பார்வையில் செயல்படும் நெற்றிப் பொட்டின் உள் நின்ற ஞான விழிப்பார்வை என்ற முத்தொடரையே முன் பாடங்களில் “புவியின் காந்த ஈர்ப்புக் கிணறுகள்..” என்று மறைபொருள் காட்டியுள்ளோமப்பா…!

முக்கண் என்று காட்டுவது
1.சிவனாரின் வடிவத்தில் பூமியை உணர்த்திடவும்
2.நாம் பெற்றிடும் உயர் சக்தியின் மெய் ஞான வளர்ப்பிற்கும்
3.அதே முக்கண் தெளிவா(க்)கும்…!

குடுகுடுப்புக்காரன் “வாசல்படி மண்ணையும்… தலை முடியையும்.. பழைய துணியையும்… ஏன் கேட்கின்றான்…?

kudukuduppai

குடுகுடுப்புக்காரன் “வாசல்படி மண்ணையும்… தலை முடியையும்.. பழைய துணியையும்… ஏன் கேட்கின்றான்…?

நாம் கோயில்களில் யாகங்கள் செய்வதைப் பார்ப்போம். தெய்வத்திற்கு யாகங்கள் செய்து கும்பாபிஷேகம் செய்து சக்தி ஊட்டுவார்கள்.

1.அங்கே சொல்லும் மந்திரம்… வாசிக்கும் இசை…
2.நெருப்பில் போடும் புகை… அதில் என்னென்ன மணங்கள் வருகிறதோ…
3.அதை எல்லாம் யாகத்தில் உட்கார்ந்து இருப்போர் நுகர நேர்கிறது.

கோயில்களில் இருக்கும் இந்தத் தெய்வத்திற்கு இன்ன சக்தி இருக்கின்றது என்று இப்படி மக்கள் மத்தியிலே அதன் உணர்வுகளை உருவாக்குகின்றனர்.

அடுத்து அந்தத் தெய்வத்திற்கு இன்னென்ன அர்ச்சனைகள் செய்தால் நம்முடைய குறைகளை எல்லாம் நீக்கி நலமாக இருப்போம் என்று அதையும் ஆழமாகப் பதிவு செய்து கொள்கிறோம். அந்த உணர்வுகளை அங்கே ஊட்டுவார்கள்.

ஆனால் அத்தகைய யாகத்தில் உட்கார்ந்து நாம் கேட்டு நமக்குள் அங்கே செய்வதை எல்லாம் பதிவாக்கினால் இதற்குப் பெயர் “வசியம்…” சில கோயில்களில் பனிரண்டு வருடம் ஆகிவிட்டால் மீண்டும் இத்தகைய யாகத்தைச் செய்து மனித உடலிலே பதிவு செய்து அந்தக் கோயிலுக்குக் கூட்டமாக வருவார்கள்.

அக்காலங்களில் இதைப் போன்ற நிலைகள் நிறைய உண்டு.

ஏனென்றால் அந்த மந்திரங்களை எல்லாம் பதிவு செய்து பக்தி கொண்ட நிலையில் தெய்வத்தை எண்ணி வாழ்ந்து இறந்தபின் அரசர்கள் இந்த மாதிரி ஆன்மாக்களைக் கைவல்யப்படுத்திக் கவர்ந்து கொள்வார்கள்.

1.ஆக மொத்தம் உடலுடன் இருக்கும்போது அரசனுக்குச் சேவை செய்கின்றோம்.
2.உடலை விட்டுப் பிரிந்து சென்றபின் அவன் செய்யும் வேலைகளுக்குப் பயன்படுவோம்.

ஆலயத்தில் அரசன் வழிப்படுத்திய முறைப்படி மந்திரங்களை நாம் பதிவு செய்து கொள்கின்றோம். (பெரும் பகுதி இன்று மந்திரம் சொல்லாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்)

மந்திரங்களைப் பதிவு செய்து கொண்ட ஆன்மாக்களை வசியம் செய்து அடுத்து அவர்கள் இறக்கப்படும் போது இந்தக் குறிப்பை எடுத்துக் கொள்வார்கள். அதற்குத்தான் குடுகுடுப்புக்காரன் வருகின்றான்.

இவர்கள் எல்லாம் அக்காலங்களில் அரசருக்கு ஐந்தாம்படை என்று சொல்வார்கள். காடு ஆறு மாதம் நாடு ஆறு மாதம் என்று தனித் தனிக் கூட்டமாக (BATCH) வருவார்கள்.

ஒரு கூட்டம் இந்த வருடம் காடுகளில் வளர்ந்து மந்திரங்களை செய்வதும் அடுத்து அதே மந்திரத்தைக் கொண்டு வந்து நாட்டுக்குள் வந்து இரவிலே வீடு வீடாக வந்து நல்ல நேரம் வருகின்றது.. கெட்ட நேரம் வருகின்றது… அது வருகிறது… இது நடக்கப் போகிறது…! என்று சொல்வார்கள்.

அப்படி வரும் பொழுது நம் வீட்டு வாசல் படியில் இருக்கின்ற மண்ணை எடுத்துக் கொள்வான். ஏதாவது ஜோசியத்தைச் சொல்லி துணி மணிகள் கொடுங்கள்…! என்று கேட்பான்.

அந்தக் குடுகுடுப்புக்காரன் கேட்டவுடனே புது துணியை எடுத்துக் கொடுப்பீர்கள்.

அவன்… வேண்டாங்க..! பழைய துணி கொடுங்கள்…! என்பான். அப்புறம் ஏதாவது சொல்லி நம்முடைய தலைமுடியை எடுத்துக் கொள்வான். கேட்டால்… தோஷத்தை நீக்க வேண்டும் என்பான்.

இதை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் அதற்கென்ற அரசனிடம் ஒப்படைப்பான். இந்தத் தேதியில் இத்தனை மணிக்கு இந்த நிலைகளில் இறந்தார்கள்…! என்று எல்லாவற்றையும் கூறுவான்.

அந்த அதர்வண வேதத்தைக் கற்றுணரந்தவர்கள் இதை அடிப்படை ஆதாரமாக வைத்து மந்திரங்களை ஜெபித்து இந்த ஆன்மாவை எல்லாம் அங்கே கைவல்யப்படுத்திக் கொள்வார்கள்.

ஆக உடலோடு இருக்கும் போதும் அரசனுக்கு அடிமை. உடலை விட்டுப் பிரிந்து சென்ற பின்னும் அந்த ஆன்மாவை அவன் கைவல்யப்படுத்தி அடிமையாக்கி… அடுத்த நாட்டின் மேல் ஏவல் செய்வார்கள்.
1.ஒவ்வொரு அரசனும் அவனுக்கு வேண்டிய குலதெய்வம் என்ற நிலையை உருவாக்கி
2.அவன் நாட்டு மக்களுக்குள் இதை பதிவு செய்வான்.

நம்மை ஆட்சிப் புரிந்து வந்த கடந்த கால அரசர்கள் குலதெய்வம் என்று வைத்து அதன் வழியில் குடி மக்கள் இப்படிச் செய்வார்கள்…! என்று பதிவாக்கிக் காலம் காலமாக வைத்துள்ளார்கள்.

குலதெய்வம் என்ற நிலைகள் கொண்டு அந்த மக்கள் இறந்த பின் அந்த ஆன்மாக்களைக் கைவல்யப்படுத்திக் கொள்வார்கள். எதிரிகள் போர் முறை என்று வரப்படும்போது கைவல்யப்படுத்திய ஆன்மாக்களைப் பில்லி சூனியம் ஏவல் என்ற நிலைகளுக்கு எதிரிகளை வீழ்த்திடவும் அவர்களைப் புத்தி பேதமாக்கவும் பயன்படுத்துவார்கள்.

இன்றைய கால கட்டத்தில் விஞ்ஞான அறிவை எடுத்துக் கொண்டாலும் கூட
1.ஒரு நாட்டில் உளவாளிகளாக (SPY) வைத்து
2.அங்குள்ளவர்கள் என்ன செய்கிறார்கள்..? என்ற நிலையை
3.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகளில் அறிந்து இயக்கி
4.அதை வைத்து உலகம் முழுவதற்கும் பல வகைகளிலும் தீமைகளைப் பரப்புகின்றனர்

அதே சமயத்தில் விஞ்ஞானத்தில் முதிர்ந்திருந்தாலும் கர்த்தர் தான் தன் கடவுள் என்று சொல்பவர்களும் அந்த அதர்வண வேதத்தைக் கற்றிருப்பார்கள்.

மற்ற மதத்தில் உள்ளவர்களும் அங்கிருக்கும் உணர்வுகளை அந்த ஆன்மாக்களைச் சேர்த்துப் பக்தி கொண்ட நிலையில் மற்றவர்களை இயக்குவார்கள்.

அத்தகைய ஆன்மாக்களைத் தேர்ந்தெடுத்துத் “தன் மதம் தான் பெரிது…!” என்று இயக்குவார்கள். உலகம் முழுவதுமே இன்று பார்க்கலாம். இனப்போர் மொழிப்போர் மதப்போர் என்று இரக்கமற்றுத் தாக்கும் நிலை வருகின்றது.

இதுகள் எல்லாம்
1.மனித உடலில் ஒரு ஆவி புகுந்து கொண்டால் அதன் நிலையையே செயல்படுத்துகின்றது.
2.அந்த ஆவி எந்தெந்த நிலைகளில் அந்த உடலில் இருக்கும் போது இடைஞ்சல் செய்ததோ
3.இன்னொரு உடலுக்குள் புகுந்தாலும் அதே தீயவினைகளைச் செய்கின்றது
4.அதற்கு நாம் மருத்துவம் பார்த்தாலும் எந்த வேலையும் ஆவதில்லை.

ஆனால் மந்திரங்களைச் செய்து… யாகங்கள் செய்து… சக்கரங்கள் வைத்து நீக்கி விடுவோம்…! என்ற நிலையில் செய்கின்றனர். அது நீங்காது.

1.அந்த உடல் இறக்கும் பொழுது தான் அந்த ஆன்மாக்களும் வெளியில் வரும்.
2.வந்த பின் அடுத்து மனிதனல்லாத மிருக உடலோ ஊர்ந்து செல்லும் உயிரினமாகவோ தான் அது பிறக்கும்.
3.அல்லது இன்னொரு மனிதன் பற்று கொண்டான் என்றால் மீண்டும் அங்கே செல்லும்.

ஆக எப்படிப் பார்த்தாலும் அமாவாசை அன்று சாங்கியங்களையுக் யாகங்களையும் செய்து மறுபடியும் மனிதனில்லாத பிறப்பிற்குதான் நாம் கொண்டு வருகின்றோம்.

1.இந்த உடலைச் விட்டு சென்ற பின்
2.”பிறவியில்லா நிலை அடையும் மார்க்கங்கள்…”
3.இன்று.. இது வரையிலும்… மத அடிப்படையில் இல்லை.

மகரிஷிகள் விரும்பும் செயலும்… ஈஸ்வரபட்டர் விரும்பும் செயலும்…!

Sage Agastiyar

மகரிஷிகள் விரும்பும் செயலும்… ஈஸ்வரபட்டர் விரும்பும் செயலும்…!

 

ஈஸ்வரபட்டர் குளவியைக் காட்டுகின்றார். குளவி புழுவைத் தூக்கிக் கொண்டு வந்து, தனக்குள் இருக்கும் விஷத்தின் தன்மை கொண்டு புழுவைத் தாக்கித் தன் இனமாக மாற்ற விரும்புகின்றது. காட்டிற்குள் இதையெல்லாம் காட்டுகின்றார்.
1.அதாவது மகரிஷிகள் ஒளியாதவற்கும்
2.தன் இனமாக (மகரிஷிகளாக) மாற்ற விரும்பும் நிலையையும், அங்கே காட்டுகின்றார்.

உயிரினங்களில் தன் இனத்தைப் பெருக்க வேண்டும் என்ற உணர்வுகளில்
1.இனச் சேர்க்கை வேறு.
2.இனத்தை உருவாக்க வேண்டும் என்ற உந்துதல் வேறு.

குளவி தனக்குள் எண்ணிய உணர்வின் தன்மையைப் புழுவின் மேல் பாய்ச்சுகின்றது. தனக்குள் ஊறும் உமிழ் நீரைக் கூடாகக் கட்டி அந்தப் புழுவினை அங்கே இணைக்கப்படும் பொழுது தன் உணர்வின் இயக்கங்களை அதன் மேல் தாக்குகின்றது.

இதற்குள் இருக்கும் விஷத்தின் தன்மை தாங்காது புழுவுக்கு அந்தக் குளவியின் நினைவே வருகின்றது. புழுவின் உணர்வுகளுக்கு அந்த உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது அதிலே பதிந்து விடுகின்றது.

1.அப்பொழுது திடீரென்று ஓங்கி எம்மை (ஞானகுரு) அடிக்கிறார் குருநாதர்.
2.அடித்தவுடன் குளவியைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது
3.”குருநாதர் மேல் திருப்பம் வருகின்றது…!”

அந்தக் குளவியைப் பற்றிக் காண்பித்துக் கொண்டிருக்கும் பொழுது, குளவி அதனுடைய விஷத்தால் புழுவின் மேல் தாக்கப்படும் பொழுது, புழுவின் நினைவலைகள்
1.குளவியால் தாக்கப்பட்ட உணர்வு கொண்டு எவ்வாறு இணைக்கின்றது…?
2.அந்த உணர்வுகள் அதற்குள் இருக்கக்கூடிய காந்தப் புலனறிவு எவ்வாறு இயக்குகின்றது…?
3.எவ்வளவு துரிதமாக இயக்குகின்றது…? என்பதை உணர்த்துகின்றார்.

அதே சமயத்தில் எம்மை ஓங்கி அடிக்கின்றார். அடித்தவுடன்… அவரைத் திடீரென்று பார்க்கின்றேன்.

திடீரென்று திரும்பியவுடன்… அவர் உணர்த்திய உணர்வின் அலையை…
1.அந்த மெய்ஞான உணர்வை எடுத்து எம் எண்ணத்தில் கவரச் செய்கின்றார்.
2.இழுக்கச் செய்கின்றார்.
3.இப்படி அவர் உணர்த்தும் மெய் உணர்வை யாம் கவர்ந்து எமக்குள் இழுத்தவுடன்… சிரிக்கின்றார் குருநாதர்.

குளவிக்கும் மனித வாழ்க்கைக்கும் எடுத்துச் சொல்லப்படும் பொழுது சாதாரண மனிதன் தன்னைக் காத்துக் கொள்வதற்காக ஒருவனைத் தாக்கபடும் பொழுது இந்த உணர்வுகள் அவன் மேல் பாய்ச்சப்பட்டு அதே நிலைகளில், எதிர் பதிலாக ”அவனை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகின்றது.

இந்த மூன்றுக்கும் உண்டான வித்தியாசங்களைக் காட்டுகின்றார்.

குருநாதர் எம்மை அடித்தவுடன் திரும்பிப் பார்க்கின்றேன். அவருக்குள் விளைந்த சக்திகள் அவர் எண்ணத்தால் வெளியிடுவதை உடனே உற்றுப் பார்த்தவுடன் அந்த உணர்வுகள் வருகின்றது.

அப்பொழுது அவர் விளைய வைத்த உணர்வுகள் அவரை எண்ணியபின்
1.அவர் எம்மை அடித்த அடியை மறந்து
2.குளவி எப்படி விஷத்தால் புழுவைத் தாக்கியபின் அந்தப் புழு வேதனையை நீக்கிவிட்டுக் குளைவியையே எண்ணுகின்றதோ
3.அதே மாதிரி குருநாதருடைய எண்ணத்தை வைத்து குருநாதருடைய நிலைகளை எண்ணுகின்றேன்,

அப்படி எண்ணப்படும் பொழுது…
1.அவர் அந்த “மூல உணர்வுகளின் நிலைகள்” அவருக்குள் இணைத்ததை எமக்குள் இணைக்கின்றார்.
2.இப்படித்தான் குருநாதர் மெய் உணர்வின் தன்மையை எம்மைப் பெறச் செய்தார்.

இதைப் போன்று நீங்களும் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் தீமைகளைச் சந்திக்கின்றீர்களோ உங்கள் நல்ல உணர்வுகள் மாறுகின்றதோ
1.உடனடியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் திருப்பமாகி நினைவச் செலுத்தும் பொழுது
2.அதிலிருந்து வரக்கூடிய பேரருள் பேரொளியைச் சுவாசிக்கும் பொழுது
3.பிறருடைய தீமையான உணர்வுகள் உங்களுக்குள் வருவதில்லை.

அதே சமயத்தில் அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக நஞ்சினை வென்று உணர்வினை ஒளீயாக மாற்றி என்றும் பதினாறு என்று கணவன் மனைவியாக இணைந்து வாழ்ந்து வளர்ந்து கொண்டு, தன் இன மக்களை வளர்க்கச் செய்து கொண்டிருக்கின்றான்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அருள் உணர்வுகளை, நாம் நமக்குள் கூட்டும் சந்தர்ப்பம் உருவாகின்றது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் வட்டத்தில், நாம் இணைந்து வாழும் நிலை உருவாகின்றது.
1.இந்த உடலுக்குப்பின் நாம் பிறவியில்லா நிலை அடைந்து
2.அழியா ஒளி சரீரம் நாம் அனைவரும் பெறுகின்றோம்.

சரீரம் என்ற பாத்திரத்தில் நாம் ஈர்த்துத் தியானிக்க வேண்டியது எது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

meditation poses

சரீரம் என்ற பாத்திரத்தில் நாம் ஈர்த்துத் தியானிக்க வேண்டியது எது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இந்தச் சரீரம் சகலத்தையும் ஈர்த்துச் சமைக்கும் திறன் பெற்றது. உயர் சக்தியின் ஆகாரமான “ஆதி நீர் சக்தி என்ற குளிர்விப்புச் சக்தியே…” தியான வழித் தொடரில் வெப்ப நீர் சக்தியாக மாற்றப்படும் பொழுது எண்ணத்தின் வலுவிற்கு எது இலட்சியமோ அதுவே பெறப்படும் ஆகாரமாகின்றது.

அந்த ஆகாரத்தைப் பெறும் மூல சக்தியின் சமைப்பின் முன் போடப்படும் உணவுப் பொருள் என்ற அமில குணங்களும் இந்தச் சரீரமாகிய பாத்திரத்தில் நிறைந்துள்ள ஆதி சக்தியின் நீர் அமிலம்
1.தியானம் என்ற அக்கினியில் குளிர்விப்பு நீர் சக்தி வெப்பச் சக்தியாகச் செயல்படும் செயலுக்கு
2.இந்தச் சரீரப் பாத்திரம் தன்னுள் ஈர்த்துச் செயல் கொண்டிட வேண்டியது
3.சகல மகரிஷிகளின் அருள் சக்தியே ஆகும்.

விறகிற்குள் மறைந்திருக்கும் நெருப்பின் உணர்வு கொண்டு நல்லாக்கச் செயலை (புறத்திலே சமைக்கும் சமையல் போல்) உண்டாக்கப்படுவது போல்
1.மகரிஷிகளின் அருள் என்ற ஜோதித் தத்துவத்தில் இருந்து
2.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு வளர்த்திடல் வேண்டும்.

அதாவது
1.விறகினுள் உறைந்துள்ள நெருப்பைக் கலயம் ஈர்ப்பது போல்
2.கலயத்தினுள் குளிர்வு நீர் சக்தி அந்த வெப்பத்தை ஈர்ப்பது போல்
3.அந்த நீர்ச் சக்தியிலிருந்து எண்ண குண ஆகாரச் சமைப்பு
4.அந்த அருள் சக்தியின் தொடரை ஈர்த்துக் கொள்கிறது.

ஈர்த்துக் கொண்டாலும்… ஆகாரப் பக்குவம் பெற்றுவிட்ட தன்மையை அறிந்துணர்ந்து தெளிவுபடும் செயலுக்கு
1.மாற்று குண எதிர் மோதல் தன்மைகளை விலக்கிடவும் வேண்டும்.
2.சஞ்சல உணர்வுகளை நமக்குள் மோதவிடலாகாது.

பிறவிக்குக் காரணம் ஆசை தான்…! என்ற தொடரை புத்தன் வெளிப்படுத்தினாலும் வெளிப்படுத்தாச் சூட்சமம் புத்தன் அறிந்த அனுபவ ஞான ஆத்ம இரகசியம் “பேரின்பப் பிரம்ம ஐக்கிய லயம்…!” என்பது.

தியான வழித் தொடரில் நிலை நின்று தன் உயிராத்ம சக்தியை வலுக் கொண்ட தொடருக்குச் சகலத்தையும் ஈர்த்திடும் சித்தத்துவ ஆனந்த ஈஸ்வர அனுபூதியைத்தான் புத்தர் பெற்றார்.

ஒவ்வொருவரும் அந்த ஈஸ்வர அனுபூதியைப் பெற வேண்டுகின்றேன்…!