மகரிஷிகள் விரும்பும் செயலும்… ஈஸ்வரபட்டர் விரும்பும் செயலும்…!

Sage Agastiyar

மகரிஷிகள் விரும்பும் செயலும்… ஈஸ்வரபட்டர் விரும்பும் செயலும்…!

 

ஈஸ்வரபட்டர் குளவியைக் காட்டுகின்றார். குளவி புழுவைத் தூக்கிக் கொண்டு வந்து, தனக்குள் இருக்கும் விஷத்தின் தன்மை கொண்டு புழுவைத் தாக்கித் தன் இனமாக மாற்ற விரும்புகின்றது. காட்டிற்குள் இதையெல்லாம் காட்டுகின்றார்.
1.அதாவது மகரிஷிகள் ஒளியாதவற்கும்
2.தன் இனமாக (மகரிஷிகளாக) மாற்ற விரும்பும் நிலையையும், அங்கே காட்டுகின்றார்.

உயிரினங்களில் தன் இனத்தைப் பெருக்க வேண்டும் என்ற உணர்வுகளில்
1.இனச் சேர்க்கை வேறு.
2.இனத்தை உருவாக்க வேண்டும் என்ற உந்துதல் வேறு.

குளவி தனக்குள் எண்ணிய உணர்வின் தன்மையைப் புழுவின் மேல் பாய்ச்சுகின்றது. தனக்குள் ஊறும் உமிழ் நீரைக் கூடாகக் கட்டி அந்தப் புழுவினை அங்கே இணைக்கப்படும் பொழுது தன் உணர்வின் இயக்கங்களை அதன் மேல் தாக்குகின்றது.

இதற்குள் இருக்கும் விஷத்தின் தன்மை தாங்காது புழுவுக்கு அந்தக் குளவியின் நினைவே வருகின்றது. புழுவின் உணர்வுகளுக்கு அந்த உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது அதிலே பதிந்து விடுகின்றது.

1.அப்பொழுது திடீரென்று ஓங்கி எம்மை (ஞானகுரு) அடிக்கிறார் குருநாதர்.
2.அடித்தவுடன் குளவியைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது
3.”குருநாதர் மேல் திருப்பம் வருகின்றது…!”

அந்தக் குளவியைப் பற்றிக் காண்பித்துக் கொண்டிருக்கும் பொழுது, குளவி அதனுடைய விஷத்தால் புழுவின் மேல் தாக்கப்படும் பொழுது, புழுவின் நினைவலைகள்
1.குளவியால் தாக்கப்பட்ட உணர்வு கொண்டு எவ்வாறு இணைக்கின்றது…?
2.அந்த உணர்வுகள் அதற்குள் இருக்கக்கூடிய காந்தப் புலனறிவு எவ்வாறு இயக்குகின்றது…?
3.எவ்வளவு துரிதமாக இயக்குகின்றது…? என்பதை உணர்த்துகின்றார்.

அதே சமயத்தில் எம்மை ஓங்கி அடிக்கின்றார். அடித்தவுடன்… அவரைத் திடீரென்று பார்க்கின்றேன்.

திடீரென்று திரும்பியவுடன்… அவர் உணர்த்திய உணர்வின் அலையை…
1.அந்த மெய்ஞான உணர்வை எடுத்து எம் எண்ணத்தில் கவரச் செய்கின்றார்.
2.இழுக்கச் செய்கின்றார்.
3.இப்படி அவர் உணர்த்தும் மெய் உணர்வை யாம் கவர்ந்து எமக்குள் இழுத்தவுடன்… சிரிக்கின்றார் குருநாதர்.

குளவிக்கும் மனித வாழ்க்கைக்கும் எடுத்துச் சொல்லப்படும் பொழுது சாதாரண மனிதன் தன்னைக் காத்துக் கொள்வதற்காக ஒருவனைத் தாக்கபடும் பொழுது இந்த உணர்வுகள் அவன் மேல் பாய்ச்சப்பட்டு அதே நிலைகளில், எதிர் பதிலாக ”அவனை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகின்றது.

இந்த மூன்றுக்கும் உண்டான வித்தியாசங்களைக் காட்டுகின்றார்.

குருநாதர் எம்மை அடித்தவுடன் திரும்பிப் பார்க்கின்றேன். அவருக்குள் விளைந்த சக்திகள் அவர் எண்ணத்தால் வெளியிடுவதை உடனே உற்றுப் பார்த்தவுடன் அந்த உணர்வுகள் வருகின்றது.

அப்பொழுது அவர் விளைய வைத்த உணர்வுகள் அவரை எண்ணியபின்
1.அவர் எம்மை அடித்த அடியை மறந்து
2.குளவி எப்படி விஷத்தால் புழுவைத் தாக்கியபின் அந்தப் புழு வேதனையை நீக்கிவிட்டுக் குளைவியையே எண்ணுகின்றதோ
3.அதே மாதிரி குருநாதருடைய எண்ணத்தை வைத்து குருநாதருடைய நிலைகளை எண்ணுகின்றேன்,

அப்படி எண்ணப்படும் பொழுது…
1.அவர் அந்த “மூல உணர்வுகளின் நிலைகள்” அவருக்குள் இணைத்ததை எமக்குள் இணைக்கின்றார்.
2.இப்படித்தான் குருநாதர் மெய் உணர்வின் தன்மையை எம்மைப் பெறச் செய்தார்.

இதைப் போன்று நீங்களும் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் தீமைகளைச் சந்திக்கின்றீர்களோ உங்கள் நல்ல உணர்வுகள் மாறுகின்றதோ
1.உடனடியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் திருப்பமாகி நினைவச் செலுத்தும் பொழுது
2.அதிலிருந்து வரக்கூடிய பேரருள் பேரொளியைச் சுவாசிக்கும் பொழுது
3.பிறருடைய தீமையான உணர்வுகள் உங்களுக்குள் வருவதில்லை.

அதே சமயத்தில் அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக நஞ்சினை வென்று உணர்வினை ஒளீயாக மாற்றி என்றும் பதினாறு என்று கணவன் மனைவியாக இணைந்து வாழ்ந்து வளர்ந்து கொண்டு, தன் இன மக்களை வளர்க்கச் செய்து கொண்டிருக்கின்றான்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அருள் உணர்வுகளை, நாம் நமக்குள் கூட்டும் சந்தர்ப்பம் உருவாகின்றது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் வட்டத்தில், நாம் இணைந்து வாழும் நிலை உருவாகின்றது.
1.இந்த உடலுக்குப்பின் நாம் பிறவியில்லா நிலை அடைந்து
2.அழியா ஒளி சரீரம் நாம் அனைவரும் பெறுகின்றோம்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply