உலக மாற்றத்தின் காலம்

உலக மாற்றத்தின் காலம்

 

ஒவ்வொரு நிமிடமும்… ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்… எது… எவ்வாறு… எதனுடன் சேர்ந்தபின்… அதன் உணர்வுகள் எப்படி மாறுகிறது…? என்ற உண்மையை அடிக்கடி சொல்லி வரும் போது அது உங்களுக்குத் தெளிவாகின்றது

1.அருள் உணர்வை நீங்கள் வளர்க்க வேண்டும்…
2.மறந்து விடாதீர்கள்…! கருவில் வளரும் குழந்தைகளுக்கு அந்த அருள் ஞானத்தை உங்கள் வீட்டிலிருந்தே ஊட்டுங்கள்.
3.அருள் உணர்வு பெற்று அந்தக் குழந்தைகள் வளர்ந்தால் உங்கள் துயரைத் துடைப்பான்… அருள் ஞானத்தைப் பெருக்குவான்… உலக சக்திகளைப் பெறுவான்.
4.அவன் பேச்சும் மூச்சும் உங்களை நலமாக்கும் உங்கள் வீட்டையும் நலமாக்கும் ஊரையும் நலமாக்கும்.
5.இப்படி அருள் ஞானிகளை நாம் உருவாக்க வேண்டும்.

அப்பொழுது தான் இந்த உலகத்தில் விஞ்ஞானத்தால் வரும் அஞ்ஞான வாழ்க்கையில் இருந்து விடுபட்டு மெய் ஞான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்ல முடியும்.
1.மூவாயிரத்திற்கு முன் பேரருள் பெற்ற உலகமாக மாறி
2.இங்கே படர்ந்துள்ள இருள்களை அகற்றி விட்டுப் பேரின்ப பூமியாக மாறும்.

அதே சமயத்தில்… மூவாயிரம் ஆவதற்கு முன் இந்த பூமியில் நீர் நிலைகள் அதிகமாகிவிடும். நாளடைவில் இது சூரியனைக் கடந்து சென்றுவிடும்… பனிப்பாறைகளாக மாறும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் நுகர்ந்த அருள் உணர்வுகள் வளரப்படும் பொழுது இந்த அருள் ஞானிகள் உணர்வின் தன்மை “துருவ நட்சத்திரத்துடன் நாம் இணையும் பருவம் வரும்…”

ஒளியின் சக்தியாக… என்றும் நிலையாக… பிறவி இல்லா நிலையாக… பேரின்ப நிலையாக… என்றும் அருள் ஞான உணர்வாக… வரும் இருளை அகற்றிடும் உணர்வாக… “என்றும் ஏகாந்தமாக வாழும் சக்தியை” நாம் பெறுகின்றோம்.

ஆகவே அருள் ஞானக் குழந்தைகளைக் கருவிலேயே உருவாக்கி விடுங்கள். அருள் உணர்வைப் பெருக்கச் செய்யுங்கள்.

1.இந்தப் பூமி அதனுடைய செயலைக் கூடிய சீக்கிரம் இழக்கத் தான் போகின்றது.
2.எப்படித்தான் இருந்தாலும் இந்த உடலும் நாளடைவில் பாழடையத்தான் போகின்றது.

இந்த உண்மைகளை உணர்ந்து நம்முடைய எல்லை… பிறவி இல்லா நிலை… சப்தரிஷி மண்டலம் அடைவது தான்…! என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு வாழுங்கள்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply