குறைகளையும் துன்பங்களையும் பற்றி எத்தனை முறை எண்ணினாலும் நமக்கு அதனால் ஒரு பலனும் கிடைக்கப் போவதில்லை

குறைகளையும் துன்பங்களையும் பற்றி எத்தனை முறை எண்ணினாலும் நமக்கு அதனால் ஒரு பலனும் கிடைக்கப் போவதில்லை

 

ஏகாதசி விரதம் என்று சொல்வார்கள்…! அதாவது
1.தன்னிச்சையாகவே… நாம் பார்க்கும் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று
2.நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ணத்தை எடுத்துக் கொண்டால் “செய்யும் தொழிலே தெய்வமாகின்றது…”

நம்முடைய எண்ணங்கள் அனைத்தும் “பிறர் நலம் பெற வேண்டும்” என்ற அக்கறையே நமக்குள் வளர்கின்றது. இதிலே சுயநலமும் வருகின்றது… அதிலே பொது நலமும் கலக்கின்றது. இரண்டு உணர்வும் சேர்க்கின்றது.

உதாரணமாக நாம் சமையல் செய்யும் பொழுது அரிசியை எடுத்துத் தூய்மைப்படுத்தித் தண்ணீர் ஊற்றி வடிகட்டி எடுத்தாலும் அதிலே “ஒரு கல்” வந்து விடுகிறது.

இதைப் போல வாழ்க்கையில் சில நேரங்களில் குறைபாடுகள் வந்துவிடும்.
1.அத்தகைய நிலை வந்தாலும் “அந்த உணர்வு நம்மை இயக்கி விடாதபடி” உடனே ஆத்ம சுத்தி செய்து
2.அத்தகைய உணர்வுகளைச் சுத்திகரித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பழக்கத்திற்கு வந்து விட்டால் உங்கள் வாழ்க்கைப் பயணம் பகைமை வராதபடி அருள் உணர்வைப் பெருக்கிடும் அருள் வாழ்க்கையாக அமையும். இந்த உடலுக்குப் பின் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப உயிர் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கே அழைத்துச் செல்லும்.

ஆனால் வாழ்க்கையில் வரும் குறைபாடுகளையே அதிகமாக எண்ணி வளர்த்துக் கொண்டால் எவர் உணர்வு நமக்குள் அதிகமாகின்றதோ இந்த உடலுக்குப் பின்… உயிர் அந்த உடலுக்கு அழைத்துச் செல்லும்.

அங்கே சென்று பேயாக மாற்றும்… நோயாக மாறும். பின் அந்த உடலை விட்டு வெளிவந்த பின் விஷத்தின் அளவுகோலுக்கொப்ப மனிதரல்லாத உடலை உருவாக்கி விடும்… இதே உயிர் தான்.

ஆகவே உயிரை நாம் மதித்துப் பழக வேண்டும்.
1.ஆனால் நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் உயிர் இயக்குகின்றது…
2.அதைத்தான் உடலாக்குகின்றது… அதைத்தான் ஆளுகின்றது.
3.எண்ணும் பொழுது அதன் வழியாகவே வருகின்றது.

அதாவது… உடலான மணமே நமக்குள் எண்ணமாகி அந்த எண்ணத்தின் உணர்ச்சியே வாழ்க்கையின் செயலாகவும் மாறிக்கொண்டே இருக்கின்றது.

தீமைகளை நீக்கிய அருள் உணர்வை நமக்குள் ஏங்கிப் பெற்று அதை வளர்த்துக் கொண்டால் இன்றைய உலகில் பரவி வரும் விஷத்தன்மை நமக்குள் கவராது மாற்றிக் கொள்ள முடியும்.

அதற்கு ஒவ்வொரு நொடிப்பொழுதும் நாம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

பத்திரிகையைப் படித்தாலும் சரி… மற்றவைகள் மூலம் உலக நடப்புகளைப் பற்றிக் கேட்டு அறிந்து கொண்டாலும் சரி…! அறிந்து கொண்ட தீமை நமக்குள் வளராதபடி “மனத்தூய்மையை” நாம் செய்து கொண்டே இருத்தல் வேண்டும்.

அப்படிச் செய்தோம் என்றால்
1,நம் வாழ்க்கையில் அந்தக் கணக்குப்படி நமது உயிர் ஜட்ஜ்மெண்டாக தீர்ப்பாக
2.நம்மைப் பிறவி இல்லாத நிலை அடையச் செய்யத் தீர்ப்பளிக்கும்.

அதிலே நாம் தவறினால் விஷத்தன்மை சூழ்ந்துவிடும்… ஏனென்றால் அது வலிமையானது. அந்த உணர்வின் அடிப்படை வளர்ந்து விட்டால் அதனின் தீர்ப்பாக உயிர் மீண்டும் பிறவிக்குக் கொண்டு வந்துவிடும்.

ஆனாலும் இன்றைய விஞ்ஞான உலகம் விஷத் தன்மை வாய்ந்ததாக இருப்பதால் மீண்டும் “மனிதனாக வருவதற்குப் பல காலமாகும்…”
1,நல்ல நினைவு இருக்கும் போதே நம் குருநாதர் காட்டிய அருள் வழியில்
2.அந்த அருள் உணர்வை இப்பொழுதே வளர்த்துக் கொள்ளுங்கள்.

எம்முடைய உபதேசத்தைப் பதிவாக்கிக் கொண்டால் உங்களுக்கு நல்ல நேரம்

எம்முடைய உபதேசத்தைப் பதிவாக்கிக் கொண்டால் உங்களுக்கு நல்ல நேரம்

 

டாக்டருக்குப் படிக்கச் செல்கிறார்கள் என்றால் “படிக்க வேண்டும்…” என்ற அக்கறை உள்ளவர்கள் படித்து முன்னுக்கு வந்து விடுகின்றார்கள். ஏதோ நான் படித்துக் கொண்டேன் என்று போகிறவர்களுக்குப் படிப்பு ஏறுவதில்லை… சரியான நிலையில் மருத்துவமும் பார்க்க முடிவதில்லை.

அதே மாதிரித் தான் உங்கள் குடும்பத்தில் எத்தனையோ நடக்கின்றது. நல்ல நேரம் கெட்ட நேரம் என்று பார்த்து அதற்குத் தக்க காலங்களை நிர்ணயித்துக் காரியங்களைச் செயல்படுத்துகின்றீர்கள்.

1.உங்கள் உடலுக்குள் எதை வலுவாக எடுத்துக் காரியத்தைச் செய்ய முயற்சிக்கின்றீர்களோ அது நல்ல நேரம்.
2.ஜோதிடம் பார்ப்பவர்களோ அல்லது மற்றவர்களோ… “என்ன இந்த நேரத்தில் போய் உன் காரியத்தைச் செய்யப் போகின்றாயா…?” என்று
3.அவர்கள் உணர்வை உள்ளே விட்டு விட்டால் அவர்கள் எண்ணிய உணர்வுப்படி அது கெட்ட நேரமாகி விடுகின்றது.

நல்ல நேரம் கெட்ட நேரம் எல்லாமே நம் எண்ணத்திற்குள் தான் இருக்கின்றதே தவிர வேறு எதுவும் இல்லை.

ரோட்டில செல்லும்போது ரெண்டு பேர் கோபமாகப் பேசித் தாக்கிக் கொள்கிறார்கள். அதைப் பார்க்கும் நேரம் வந்துவிட்டது… பார்த்து விடுகின்றோம். அந்த உணர்வினை நுகர்ந்தால் வெறுப்பான உணர்வு நமக்குள் வருகின்றது. அது கெட்ட நேரம்.

ஆனால் அடுத்த கணமே யாம் உங்களிடம் கொடுத்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வைத்து “ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணி என்று நினைவை அங்கே செலுத்த வேண்டும்.
1.ஏனென்றால் இந்த கண் கருவிழி கருமணி துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஆழமாகப் பதிவாக்குகின்றது…
2.சண்டை போட்ட உணர்வைத் தள்ளிவிட்டு விடுகிறது… இதைக் கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்.

சண்டை போடுபவர்களையும் வேதனைப்படுபவர்களையும் பார்த்து அதைப் பதிவாக்குகின்றோம். அது நம்மை இயக்கத் தொடங்குகிறது.

செல்ஃபோனில் முந்திரி பருப்பு அளவு தான் உள்ளே வைத்திருக்கின்றார்கள். ஆனால் அதற்குள் லட்சக்கணக்கான பதிவுகளை ஏற்றும்படி வைக்கின்றார்கள்.

அந்தப் பதிவுகளை வைத்து எத்தனையோ வேலைகளை இன்று மிகவும் எளிதாகச் செய்யும்படி வைத்துள்ளார்கள். யார் பேசுகின்றார்கள்…? என்பதையும் தெரிந்து கொள்ள முடிகின்றது… அவர்களுக்கும் காட்டுகிறது.

பாக்கெட்டிலேயே வைத்துக் கொண்டுள்ளோம். விஞ்ஞான அறிவில் இதைச் செய்கிறார்கள்.

1.இதே போன்றுதான் நம் கண்ணின் கருவிழி விலா எலும்புகளுக்குள் உள்ள ஊனுக்குள் பதிவாக்கி விடுகின்றது.
2.அதை வைத்துத் தான் நாம் பேசுவதும் எண்ணுவதும் இயக்குவதும் எல்லாமே நடக்கிறது.
3.இதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொண்டால் அவ்வப்போது வரும் தீமைகளை நீங்கள் உடனுக்குடன் நீக்க முடியும்.

அதற்குத் தான் இதைச் சொல்கிறேன்.

ஆனால் மற்ற ஸ்தாபன்ங்களில் இதை எல்லாம் எப்படிச் சொல்லிக் கொடுப்பார்கள் தெரியுமா…?

தன்னுடன் சீடர்களாக வந்து… தான் சொன்னதை எல்லாம் கேட்பவர்களுக்கு… ஒழுக்கமாக வருகின்றார்களா…? இல்லையா…! என்று பார்த்து அதற்கு அப்புறம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

இப்படி எல்லாம் வரம்புகளை விதித்து… கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்து அந்தக் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றார்களா…? இல்லையா…! என்பதை எல்லாம் பார்த்துச் சரியானபடி நடப்பார்களா மாட்டார்களா…? என்று பல தடவை இழுத்தடித்து
1.அதற்குப் பின் மெம்பர் ஆக்கி சத்தியம் வாங்கி…
2.இனிமேல் இதிலிருந்து மாற மாட்டேன் என்று சொல்லிக் கடைப்பிடித்து வருபவர்களுக்குத் தான் சொல்லிக் கொடுப்பார்கள்.

ஒரு ஸ்தாபனத்திற்குள் சென்றால் அவர் சொல்வதெல்லாம் கேட்டுப் பதிவாக்கி சத்தியம் செய்ய வேண்டும்… முதலில் இதைத் தான் வாங்குவார்கள். அதற்குப் பின் சொல்லிக் கொடுப்பார்கள்.

1.உங்களிடம் இது எதையுமே நான் வாங்கவில்லை.
2.உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன்… உடலை ஆலயமாக மதிக்கின்றேன்.
3.ஈசன் வீற்றிருக்கும் ஆலயம் புனிதமாக வேண்டும் என்பதற்குத் தான் சொல்கிறேன்.

இயற்கையின் இயக்கத்தின் உண்மையை அறிந்து கொண்டேன். குருநாதர் கொடுத்தார். அதை அப்படியே உங்களுக்கும் கொடுக்கின்றோம்.

வேதனையைக் குறைக்கும் வழி

வேதனையைக் குறைக்கும் வழி

 

உடலிலே வலி வந்து விட்டால் “அம்மம்மா… மேல் வலிக்கிறதே…!” என்று அந்த அணுக்களுக்குச் சாப்பாடு கொடுக்கின்றோம். ஏதாவது தொல்லைகள் வந்து விட்டால் அதை எண்ணும் பொழுது அந்த அணுக்களுக்குச் சாப்பாடு கிடைக்கின்றது.

1.சந்தோஷமான வார்த்தையைச் சொல்லி அதை நிவர்த்தி செய்யலாமா…? என்றால் முடியாது… சந்தோஷமான வார்த்தை அங்கே எதிரி ஆகிறது.
2.வேதனைப்படும் நேரத்தில் யாராவது சந்தோஷமாகப் பேசுவதைப் பார்த்தால் அது உடனே எதிரியாக மாறுகின்றது.

ஆனால்… இந்த எதிரிகளை வென்றவர் யார்…? சந்தோஷத்தை ஊட்டியது யார்…? அந்த மகரிஷிகள்.

அந்த மகரிஷிகளை நாம் எண்ணும் பொழுது அதற்கு ஆகாரத்தைக் கொடுத்த பின் வலுவாகின்றது. அப்பொழுது உயிரான ஈசனிடம் நாம் எதைக் கேட்க வேண்டும்…?

1.யாம் பதிவு செய்த மகரிஷிகள் உணர்களை நினைவுக்குக் கொண்டு வர வேண்டும்.
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
3.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ண வேண்டும்.

மற்றவருடைய குறைகளையோ வேதனைகளையோ கண்ணுற்றுத் தான் நாம் பார்க்கின்றோம். அப்படிப் பார்க்கும் பொழுது ஆன்மாவாகிச் சுவாசத்தின் வழி இழுத்து “அகக் கண்ணாக இருந்து…” உயிர் உணர்த்துகின்றது. அகக் கண்ணாக இருந்து பதிவு செய்து மீண்டும் நினைவு கொடுக்கின்றது.

அதே சமயம் நமது புறக்கண் படம் எடுத்து ஆத்மாவாகி உயிருடன் ஒன்றும் போது தான் அந்த உணர்வை அகக் கண்ணாகக் காட்டுகின்றது.
1.ஆனால் மகரிஷிகள் உணர்வைப் பதிவு செய்து மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து
2.உயிரான அகக் கண்ணுடன் இணைக்கப்படும் பொழுது இந்த ஆன்மாவிலிருந்து வருவதைத் தடைப்படுத்துகின்றது.

வேதனை அதிகமாக இருக்கிறது என்றால் ஈஸ்வரா…! அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற நினைவினை உயிர் வழி சிறிது நேரம் செலுத்தினால் மூச்சு திணறலோ உடலில் வலியினால் ஏற்படக்கூடிய வேதனையோ உபாதைகளோ அது குறையும்.

முதலில் எடுக்கவே விடாது.

இருந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் உடலில் உள்ள ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் எல்லாம் பெற வேண்டும் என்று
1.அந்த உயர்ந்த சக்திகள் கிடைக்க வேண்டும் என்ற எண்ண அலைகளைப் பரப்பப்படும் பொழுது
2.சிறுகச் சிறுக வலிகள் தணியும்… செய்து பாருங்கள்.

“எத்தனை வருடம்…” உயிர் இந்த உடலில் இருக்கப் போகின்றது…!

“எத்தனை வருடம்…” உயிர் இந்த உடலில் இருக்கப் போகின்றது…!

 

தியானத்தின் சக்தி கொண்டு இந்த உடலை நலமாக்கி நலமாக்கி நாம் வாழ்ந்து வந்தாலும் “எத்தனை வருடம்…” உயிர் இந்த உடலில் இருக்கப் போகின்றது…!

உடல் நலத்திற்காக நாம் எண்ணினாலும்
1.என்றும் நீடித்த ஆயுளாக இருக்கும் அருள் மகரிஷிகள் உணர்வை எடுக்கப்படும் பொழுது
2.உடல் வேதனைகளை நீக்கிவிட்டு சிறிது காலமாவது மகிழ்ந்து வாழ முடியும்.
3.அந்தக் குறுகிய காலத்திலே உயர்ந்த சக்தியினைப் பெற்று வெளிவரும் பொழுது
4.எதைப் பற்றுடன் பற்றி நாம் அந்தச் சக்தியை எடுத்து வளர்த்தோமோ அங்கே செல்ல முடியும்.

அவ்வாறு நாம் செயல்படவில்லை என்றால்… தன் வாழ்க்கைக்கு இந்த உடலுக்கு யார் உதவி செய்தார்களோ அவர்கள் மீது எண்ணத்தைச் செலுத்தினால் அந்த உடலுக்குள் தான் ஆன்மா செல்லும்.

சொத்தைச் சம்பாதித்து வைத்தேன்… என் பிள்ளை எப்படிச் சமாளிக்க போகின்றானோ…? என்று தன் பையன் மீது குறை கூறி எண்ணத்தைச் செலுத்தினால் அங்கே தான் செல்லும்.

இப்படிப் பல நிலைகள் கொண்டு மனிதனின் ஈர்ப்புக்குள் சிக்கி விடுகிறது. அங்கே சென்றாலும் நோயைத்தான் உருவாக்குவோம்… அடுத்து மனிதனல்லாத உருவை உயிர் உருவாக்கும்.

இதை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும்.

விஷத்தின் தன்மை எதிலே ஊடுருகின்றதோ அதன் நிலையாகத் தான் அது மாற்றும். ஆனால்
1.விஷத்தை வென்றவன் அருள் ஞானி.
2.அந்த உணர்வினை எடுத்து உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும் பாய்ச்சப்படும் பொழுது ஒளியாக மாற்ற முடியும்.

பாம்பினங்கள் தனக்குள் இருக்கும் விஷத்தினை மற்ற உயிரினங்கள் மீது பாய்ச்சி அதில் உள்ள விஷத்தினையும் தனக்குள் எடுத்து நாகரத்தினமாக எப்படி மாற்றுகின்றதோ… இதைப் போலத் தான் எத்தகைய நஞ்சையும் அடக்க வல்லமை பெற்றவன்… ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றியவன் சப்தரிஷி.

“அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…” என்று நம் எண்ணத்தைக் கூட்ட வேண்டும்.

எத்தகைய துயரைக் கேட்டறிந்தாலும் சலிப்படைந்தாலும் சங்கடப்பட்டாலும் அடுத்த நிமிடம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

பின் அங்கிருக்கக்கூடிய கஷ்டங்கள் நீங்க வேண்டும் என்று நாம் சொல்லி விட வேண்டும்.

நாம் சொல்வதை யார் எண்ணி எடுக்கின்றார்களோ அவர்களுடைய கஷ்டங்களும் நிச்சயம் நீங்குகின்றது. அப்போது அந்தக் கஷ்டமான உணர்வுகள் நமக்குள் வராது தடுக்க முடியும்.
1.உங்களுடைய வாக்கு அங்கே செயலாகும்.
2.அதைக் கண்டு நீங்கள் மகிழ முடியும்… உணர்வுகள் ஒளியாக மாறுகிறது.

ஆனால் நாம் சொல்லியும் கேட்கவில்லையே என்று அவர்கள் உணர்வை நுகர்ந்து மனதை இருளச் செய்து விடக்கூடாது.
1.எப்படியும் அந்த அருள் உணர்வைப் பெறுவார்கள்…
2.வாழ்க்கையில் தெளிந்து செயல்படுவார்கள் என்ற எண்ணத்தை நமக்குள் வளர்க்க வேண்டும்.

“முருகு…” மாற்றி அமைக்கும் சக்தி

“முருகு…” மாற்றி அமைக்கும் சக்தி

 

மனிதனான பின் அன்பால் பரிவால் பிறருடைய கஷ்டங்களைக் கேட்டறிகின்றோம். வெளியில் நடக்கும் பல தவறான உணர்வுகளை நுகருகின்றோம். இவையனைத்தும் உடலுக்குள் வலிமையாகின்றது. நம் உடலில் உள்ள நல்ல குணத்திற்கும் இதற்கும் போர் நடக்கின்றது.

இதைத்தான் சாஸ்திரங்களில் பரசுராமனுக்கும் சீதாராமனுக்கும் போர் நடக்கின்றது என்று காட்டினார்கள். சீதாராமனோ விஷ்ணு தனுசை எடுத்துப் பரசுராமனை வீழ்த்துகின்றான்.

பரசுராமனோ சிவ தனுசை எடுக்கின்றான். ஆனாலும் தோல்வி அடைகின்றான். நமது சாஸ்திரங்களில் தெளிவாகக் காட்டி இருக்கின்றார்கள்.

வராகனுக்குப்பின் (பன்றி) பரசுராமன் மனிதன் என்ற நிலைகள் ஆன பிறகு
1.எல்லோரும் பேரன்போடு வாழ வேண்டும் என்ற ஆசை வருகின்றது.
2.ஆனால் நமக்குள் இருக்கும் தீமையை நீக்கத் தெரியவில்லை.
3.நமது சந்தர்ப்பம் எது வலிமையாகின்றதோ அதன் வழிதான் செல்கின்றோம்.

ஒரு குழம்பு வைக்க வேண்டுமென்றால் மிளகாய் உப்பு புளி அனைத்தையும் சமமாகச் சேர்த்துச் சுவைமிக்கதாகச் சமைக்கின்றோம்.

இதைப் போல வேதனை என்ற உணர்வை நமக்குள் எடுத்துத் தெரிந்து கொண்டாலும் அதை மாற்றி அமைக்கும் சக்தி நமக்குள் வேண்டும். அந்தச் சக்தி பெறச் செய்யும் சந்தர்ப்பத்தை உங்களுக்கு ஏற்படுத்துவதற்குத்தான் இதை உபதேசிப்பது.
1.இதன் மூலம் உங்களை நீங்கள் அறிகின்றீர்கள்.
2.இந்த உயிரின் இயக்கத்தையும் மனிதனான நிலையையும் உங்களால் அறிய முடிகின்றது.

கோபிப்பது நாமல்ல; வேதனைப்படுவதும் நாமல்ல; வெறுப்படைவதும் நாமல்ல; தற்கொலை செய்யச் சொல்வதும் நாமல்ல, தவறு செய்யச் சொல்வதும் நாமல்ல.

நெருப்பிலே ஒரு பொருளைப் போட்டால் அந்தப் பொருளின் மணம் தான் நுகர்ந்தவரை இயக்குகின்றது. இதைப் போல நம்முடைய எண்ணம் தான் நம்மை இயக்குகின்றது.

வேதனைப்படுவோரையோ கோபப்படுவோரையோ எண்ணினால் அது வாலி. நமது நல்ல குணங்களை அது அடக்கி நமக்குள் வலிமையானதாக மாறி நம்மை அதன் வழிகளில் இயக்குகின்றது.

இவைகளை நமக்குள் மாற்றி அமைக்க வேண்டுமென்றால் நமது ஆறாவது அறிவு கொண்டு தீமைகளை வென்று ஒளியின் உடல் பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இந்த உணர்வைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

இது வலுவானபின்
1.நாங்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
2.கனியைப் போன்ற இனிமையான சொல்லும் செயலும் பெற வேண்டும்
3.தெய்வீக குணத்தைப் பெற வேண்டும் தெய்வீக அன்பைப் பெற வேண்டும் தெய்வீக அருளைப் பெற வேண்டும்
4.தங்கத்தைப் போல மனம் மங்காத நிலை பெற வேண்டும்
5.மலரைப் போல மணம் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

கடவுளின் அவதாரத்தில் ஒன்பதாவது அவதாரம் நரசிம்ம அவதாரம்… நாராயணன் வாசற்படியில் அமர்ந்து மடி மீது இரண்யனை வைத்துப் பிளந்தான் என்று காட்டப்பட்டுள்ளது.

சூரியனான நாராயணன் 27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்துவதை… பால்வெளி மண்டலங்களிலிருந்து… தான் கவர்வதைத் தனது உடலில் உள்ள பாதரசத்தால் மோதிப் பிளக்கின்றது. இது அதன் சந்தர்ப்பம்.

ஆனால் மனிதனோ வேதனைப்படும் மனிதனைச் சந்திக்கும்போது வேதனைப்பட வைக்கின்றது. நமது அந்தச் சந்தர்ப்பம் உடல்களில் உள்ள உணர்வுகளைப் பலவீனமடையச் செய்கின்றது.

ஆனால்…
1,பல கோடி உடல்களில் தீமையை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் பெரருளைப் பெறும் சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்த வேண்டும்.
2.அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி நமது கண்களின் நினைவிற்குக் கொண்டு வரவேண்டும்.

பின் புருவ மத்திக்குக் கண்களின் நினைவைக் கொண்டு வரவேண்டும். நம் மூக்கின் வழி சுவாசிப்பதற்கு மாறாக கண் வழி கவர்ந்து இதை இணைக்க வேண்டும்.

1.இது வலிமையானபின் உணர்வின் பிராணயாமம்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் இயக்கமாக மாற்றுகின்றோம்.
3.இது தான் “முருகு…!” மாற்றி அமைக்கும் சக்தி.

தீமைகளை நீக்கிய அருள் உணர்வை உயிரிலே இணைத்தபின் தீமைகள் நம் உடலுக்குள் செல்லாது உடலைச் சுற்றியே நிற்கும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களிலே கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று வலுவெற்ற வேண்டும்.

அந்தச் சக்தி உடலுக்குள் வலுவாக்கப்படும் போது உடலைச் சுற்றி இருக்கும் தீமைகள் நம்மை விட்டு அகலும்.

துணியில் அழுக்குப்பட்டால் எப்படிச் சோப்பைப் போட்டு நுரையை ஏற்றி அழுக்கை அப்புறப்படுத்துகின்றோமோ அதைப் போல
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளை நம் உடலுக்குள் செலுத்தி அதை வலுவாக்கித்
2.தீமைகளை நம் ஈர்ப்பு வட்டத்தை விட்டு அகன்று செல்லச் செய்கின்றோம்.

அதற்குப்பின் ஒரு நோயாளியைப் பார்த்தால் துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நீங்கள் பெற்று உடல் நலம் பெறுவீர்கள் என்று வாக்கினை அங்கு பதிவு செய்தால் அவரும் நலம் பெறுவார்.

சுவைக்கொப்ப எண்ணங்கள் சீதாராமன். தீமைகளை நீக்கியது துருவ நட்சத்திரம்… அது சீதாராம். இராமனின் பக்தன் ஆஞ்சனேயன். அவன் வாயு புத்திரன் சுக்கிரீவனின் மந்திரி.

சுக்கிரீவன் என்பது துருவ நட்சத்திரம். அதை எண்ணத்தால் எண்ணி (சீதாராம்) நமக்குள் வலுப் பெற்று எல்லோரும் பெற வேண்டும் என்று சொல்லும் போது அந்த வலுவான எண்ணம் (ஆஞ்சனேயன்) வாயுவாகச் சென்று மற்றவர்களையும் பெறச் செய்யும்.

நரக வேதனைப்பட்டு… அது என்னை எப்படித் துன்புறுத்துகிறது…? என்று கண்டுணர்ந்து தான் இதைச் சொல்கிறேன்

நரக வேதனைப்பட்டு… அது என்னை எப்படித் துன்புறுத்துகிறது…? என்று கண்டுணர்ந்து தான் இதைச் சொல்கிறேன்

 

உதாரணமாக வேதனைப்படுவர் உணர்வை நாம் நுகர்ந்து விட்டால் மீண்டும் அவனைப் பற்றியே நம்மை எண்ண வைக்கின்றது. அந்த வேதனையான அணுக்கள் நமக்குள் பெருகுகின்றது. பின் வேதனைப்படும் உடலாகவே உயிர் மாற்றி விடுகின்றது.

வேதனைப்பட்டவன் எத்தன்மை கொண்டு அவ்வாறு ஆனானோ அவன் வேதனையாக இருப்பினும்
1.அவனின் எண்ணம் நமது வாழ்க்கையில் தொடர்ந்து வரப்படும் பொழுது… தன் குடும்பத்தினை எண்ணி
2.என் பிள்ளை இப்படி இருக்கின்றான்… அவனுக்கு அப்படி நோயாகி விட்டது…!
3.நோயினால் பொருள் போய்விடுமே…! என்ற இத்தகைய எண்ணங்கள் வருகின்றது.

அதாவது வேதனைப்பட்டவரின் உணர்வுகள் இங்கே கலந்து புது வித்தாக உடலில் உருவாகின்றது.

நோயால் இறந்தாலும்… அந்த நோயைப் பற்றி விசாரித்துக் கேட்டறிந்த மனிதன் இவருடைய உணர்வுக்குத் தக்க விஷத்தின் உணர்வுகள் மாறி இவரும் அந்த ரூபத்திற்குப் போவார்.

இதை எல்லாம் “நேரடியாக…” எம்மைக் காணும்படிச் செய்தார் குருநாதர். ஒவ்வொரு இடங்களுக்கும் எம்மைப் போகச் சொல்லி “20 வருடம் பார்த்துவிட்டுத் தான்…” உங்களிடம் சொல்கின்றேன்.

வேதனை இங்கே மாறும் போது அதற்குப் பெயர். அதர்வண வேதத்தின் மூலங்களை புரிந்து கொள்.
1.வேதத்தை எப்படித் தவறாகப் பயன்படுத்துகின்றார்கள் என்பதை நீ உற்றுப் பார்…!
2.அந்தத் தவறின் நிலைகளுக்கு நீ சென்று விடாதே…! என்றார் குருநாதர்.
3.காரணம்… இன்று உடலில் இச்சைக்குத் தான் அதர்வண வேதத்தைக் கொண்டு சென்று விட்டார்கள்.
4.ஆனால் அருள் ஒளியாக யஜூர்…! பேரின்ப நிலைகளுக்கு அதைக் கொண்டு செல்லவில்லை.

இறந்த பின்… யாருக்கு என்ன தெரியப் போகிறது…? என்று விட்டு விடுகின்றார்கள்.

அதர்வண யஜூர் மீண்டும் சாம அவருடைய வேதனையை எண்ணும் பொழுது உடலில் நோயாகின்றது… மனித உருவத்தையே மாற்றி விடுகின்றது.

தினமும் தியானமிருக்கின்றோம். இருந்தாலும் பிறிதொரு வேதனை உணர்வை நுகர நேர்கிறது. தான் எண்ணிய காரியம் நடக்கவில்லை என்றால் வேதனையான உணர்வுகளைச் சேர்த்து இணைத்து விடுகின்றோம். அதர்வண… நம் நல்ல குணத்தை அப்போது அது அடக்குகிறது.

நல்லவர்களுக்கு நல்ல காரியத்தைத் தான் செய்தோம். மேலே சொன்ன அதர்வண என்று ஆகும் பொழுது
1.மீண்டும் நாம் நல்லதைச் சொன்னாலும் யாரும் கேட்க மாட்டார்கள்.
2.முதலிலே நாம் சொன்னதைக் கேட்டிருப்பார்கள்.
3.அன்று என்னிடம் எல்லாம் இருந்தது…! கேட்டார்கள்…! இன்று என்னைத் தூற்றுகின்றார்கள் என்போம்.
4.நம்மைக் கண்டாலே வெறுப்பு வருகின்றது… என்ற இந்த நினைவாற்றல் தான் இங்கே கடைசியில் வருகின்றது.

இத்தகைய நிலை உருவாகி விட்டால் மாற்ற வேண்டும் அல்லவா…!

காலை துருவ தியானத்தில் அரும்பெரும் சக்தியைக் கொடுத்து உங்களைப் பெறும்படி செய்கின்றேன். எண்ணும் பொழுது கிடைக்கும்படியும் செய்கின்றேன்.
1.இதை விடுத்து விட்டு உடலின் இச்சைக்கு நீங்கள் இணைத்து விட்டால்
2.அதைத்தான் உங்கள் உயிர் உருவாக்குமே தவிர வேறு நல்லது கிடைக்காது.

குருநாதர் எனக்குப் பல சிரமங்களை உண்டாக்கி அது எப்படி உருவாகின்றது…? அதிலிருந்து நீ எப்படி விடுபட வேண்டும் மாற்றி அமைக்க வேண்டும்…? என்று அரும் பெரும் சக்தியைக் கொடுத்தார்.

நீங்கள் என்னைப் போன்று காட்டிற்குள் சென்று என்று தெரிந்து கொள்வது…? அப்படி முடியாது.
1.நரக வேதனைப்பட்டுத் தான்…
2.ஒவ்வொரு வேதனையும் எப்படி என்னைத் துன்புறுத்துகிறது என்பதைப் பார்த்துவிட்டுத் உங்களிடம் வந்து சொல்கிறேன்.

தான் எண்ணிய காரியம் தோல்வி அடைந்தால் சோர்வு வருகின்றது. அப்பொழுது சிந்திக்கும் வலிமை இழக்கப்படுகிறது.. மாற்றமாகிறது. எண்ணியபடி நடக்கவில்லை என்றால் விஷமாகின்றது.

வேதனை என்ற மூன்றும் சேர்த்துக் கருவாகி இந்த உயிர் அந்த அணுவாக உருவாக்கி விடுகின்றது.
1.மீண்டும் நான் நினைத்தேன்… தியானித்தேன் வரவில்லையே…! என்று எண்ணுவதும்
2.சாமி சொன்னார்… “எனக்குக் கிடைக்கவில்லையே கிடைக்கவில்லையே…” என்ற உணர்வைச் சேர்த்துத் தான் அதை வளர்க்க முடியும்.
3.அப்போது வலுக்கொண்ட நிலையில் சாமியை எண்ணுவீர்கள்… ஆனால் சாமி சொன்னதை விட்டு விடுவீர்கள்.

உதாரணமாக வயலில் விதைத்திருக்கின்றோம்… பயிர் வளர்ந்திருக்கின்றது. அதிலே களைகளை எடுங்கள் சொன்ன பின் களையை எடுப்பதற்கு மாறாக செடி முளைத்திருப்பதைத் தட்டி விட்டால் என்ன ஆகும்…?

நல்ல வித்தினைத் தான் கொடுத்துள்ளார்கள். நல்ல பயிரைப் பிடுங்கி விட்டால் என்ன ஆகும்…? இதுவும் போய்விட்டது.

அது போல்
1.யாம் கொடுத்த அருள் ஞான வித்தை வளர்க்கும் போது
2.சந்தர்ப்பத்தில் வரும் களையை நீக்குவதற்குப் பதில் ஞான வித்தையே வீழ்த்தி விடுகின்றோம்.

நல்ல குணத்தை உயர்ந்த நிலைக்குச் செல்லப்படும் போது இந்த உணர்வுகள் அதர்வண. இதை அடக்கி இதனுடன் இணைந்து யஜூர் அணுவின் தன்மை அடைந்து விடுகின்றது.

அதன் பின் மீண்டும் உங்கள் நினைவு எதிலே வரும்…? அந்தக் காரியத்தை எண்ணும் போதெல்லாம் தன்னைச் சோர்வடையச் செய்யும். வேதனை என்ற நிலைகள் உருவாக்கிக் கொண்டே வரும்.

புழுவில் இருந்து எப்படி மனிதனாக வளர்ச்சி அடைந்து வந்தோம்…? தன்னைக் காட்டிலும் வலு கொண்ட உடல்களிலிருந்து மீள வேண்டும் என்ற உணர்வைச் சேர்த்து இந்த உணர்வின் தன்மை உடல் மாற்றத்திற்கு அதன் வலிமையைச் சேர்த்து அதர்வண யஜுர் அதன் நிலையை எடுத்துப் பரிணாம வளர்ச்சியாகி அதன் தொடர் கொண்டு தான் மனிதனாக வந்தோம்.

இத்தனையும் கடந்து வந்த மனிதன் மீண்டும் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட இச்சையின் உணர்வு கொண்டு… எண்ணியது நிறைவேறவில்லை என்றால் சோர்வும் வேதனையும் உருவாகிறது. அத்தகைய அணுவின் தன்மை வளரப்படும் பொழுது நல்ல குணங்களை அது அடக்கி விடும்… அதர்வண.

அடக்கி அதனின் செயலாக்கங்களாக அதிலே உருவாகும் கருவின் தன்மையாக அணுவின் தன்மையாக உயிர் உருவாக்கி விட்டால் யஜுர் மீண்டும் சாம… வேதனைப்படும் நிலைக்கே அது கொண்டு செல்லும்.

1.இத்தகைய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டால் உடனே ஈஸ்வரா… என்று உயிரை எண்ணுங்கள்.
2.அரும் பெரும் சக்தியை உங்களிடம் கொடுத்திருக்கின்றேன். அதை ஒரு நிமிடம் எண்ணி எடுப்பதற்கு என்ன…?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று உயிரிடம் வேண்டுங்கள். எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் ஜீவான்மா பெற வேண்டும் என்று இணைத்துக் கொண்டே வாருங்கள்.

வேதனை என்ற உணர்வை அடக்கி அதர்வண…!
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அந்த அணுக்களைச் சேர்க்கப்படும் பொழுது அடுத்து என்ன செய்யும்…?
2.அந்தத் துருவ நட்சத்திரத்தையே அது எண்ணும்படிச் செய்யும்… அப்பொழுது யஜூர் ஆக மாறுகின்றது.

அந்த ஒளியான வித்தினைத் தான் நமக்குள் வளர்க்க வேண்டும்.

“ஓம் ஈஸ்வரா…” என்ற நெருப்பைக் கூட்டி… “மகரிஷிகளின் அருள் ஒளியைக் கூட்டு”

“ஓம் ஈஸ்வரா…” என்ற நெருப்பைக் கூட்டி… “மகரிஷிகளின் அருள் ஒளியைக் கூட்டு”

 

வேதனயான உணர்வை நாம் நுகர்ந்தால் அது நமது இரத்த நாளங்களில் கலந்து விடுகின்றது. நம்மை மனிதனாக உருவாக்கிய உடலின் அணுக்களில் விஷத்தின் தன்மை கலந்தபின் உடலின் அணுவின் தன்மை மாறுகின்றது.
1.அணுக்கள் விஷத்தின் தன்மையாக மாறும் பொழுது உடலில் வலி வருகின்றது.
2.வலி வந்தால் உடல் நலிகின்றது… எண்ணம் குறைகின்றது.

நம் ஊர்களில் திரும்பும் பக்கமெல்லாம் மாரியம்மன் கோவில் இருக்கும். ஏன்…?

மனித வாழ்க்கையில் அடிக்கடி சலிப்பு வருகிறது சங்கடம் வருகிறது. ஒருவர் தவறு செய்கின்றார் என்றால்
1.அந்தத் தவறான நிலைகளை உற்றுப் பார்க்கும் பொழுது
2.அந்த உணர்வு தனக்குள் மாறித் (மாரி) தன்னை அறியாமல் ஆட்டிப் படைக்கின்றது.

நிவர்த்திப்பதற்கு என்ன செய்ய வேண்டும்…?

மாரியம்மன் கோவிலில் நெருப்புச்சட்டி வைத்திருப்பார்கள். நெருப்பு என்ன செய்யும்…? சுட்டுப் பொசுக்கும்.

அதாவது நாம் நுகர்ந்த தீமைகள் அனைத்தையும் அதில் போட்டுச் சுட்டுப் பொசுக்க வேண்டும் என்று காட்டுகிறார்கள்.
1.நாம் எடுத்துக் கொண்டது விஷம்… நமக்குள் வந்தால் பதறச் செய்கிறது.
2.மாரியம்மனின் கோவிலில் அக்கினிச் சட்டியைக் கண்டு தீயதைச் சுட்டுப் பொசுக்க வேண்டும்.

அந்த மாரியைத் தடுப்பதற்கு என்ன செய்கிறோம்…? நெருப்பு…!
1.யாராவது அதைக் காட்டியிருக்கிறார்களா…? யாராவது சொல்லி இருக்கிறார்களா…? இல்லை.
2.அந்த நெருப்பு யார்…? அந்த மகரிஷிகள்.
3.மனித வாழ்க்கையில் வந்த இடைஞ்சல்களை எல்லாம் நீக்கிப் பழகியவர்கள்.

‘’ஓம் ஈஸ்வரா…’ என்ற’ இந்த நெருப்பைக் கூட்டி ‘’மகரிஷிகளின் அருள் ஒளியைக் கூட்டு…’ மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் ஜீவாத்மாக்கள் பெற வேண்டும் என்று ஏங்க வேண்டும்.

அவ்வாறு ஏங்கிவிட்டு நமக்குத் தீங்கு செய்தவர்கள் நாளை அறியாமையிலிருந்து விடுபடவேண்டும். நல்லதைச் செய்யும் எண்ணம் அவர்களுக்குள் வரவேண்டும் என்ற இந்த உணர்வை நமக்குள் சுவாசிக்க வேண்டும்.

அதற்குத் தான் மாரியம்மன் கோவிலில் மத்தியில் அக்கினிச் சட்டி வைத்திருப்பார்கள். கோவில்களெல்லாம் தப்பல்ல…! நாம் வழிபடும் முறைதான் தப்பாக இருக்கும்.

ஆகவே நாம் தியானிக்க வேண்டும்… எதை…?

இந்தத் தெய்வம் நல்லது செய்திருக்கிறது.
1.இந்தத் தெய்வ குணத்தை நாங்கள் பெற வேண்டும்
2.நாங்கள் செய்வதனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும்,
3.எங்கள் பேச்செல்லாம் பிறருக்கு நல்லதாக இருக்கவேண்டும்.
4.இந்தத் தெய்வ குணத்தின் சக்தி எங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும்.
5.இதை உணர்த்திய மெய் ஞானிகளின் அருள் ஒளி வளர வேண்டும்.
6.அந்த அருள் ஒளியால் எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று தியானித்துப் பாருங்கள்.

இது தான் உண்மையான அர்ச்சனை…! இதைத்தான் ஆதிசங்கரர் சொன்னார்.
1.“அத்வைதம்…!” சூட்சுமமாக இருப்பதை உனக்குள் எடுத்து உன் சுவாசமாக்கு.
2.அந்த உயர்ந்த சக்தியை உனக்குள் கூட்டு என்று அன்றைக்கு ஆதிங்கரர் சொன்னார்.

அவர் காட்டிய அருள் வழியில் காற்றில் மறைந்துள்ள அருள் ஞானிகளின் அருள் சக்தியை நமக்குள் சேர்த்து அனைவரும் மகிழ்ந்து வாழ்வோம். பிறவியில்லா நிலையெனும் அழியா ஒளிச்சரீரம் நாம் அனைவரும் பெறுவோம்.

விதி மதி

விதி மதி

 

நாம் எவ்வளவு நல்லவராக இருந்தாலும் வேதனைப்படுவோரின் நிலைகளைக் கண் கொண்டு பார்க்கும் பொழுது நமக்குள் “அது வித்தாகப் பதிந்து விடுகின்றது…”

உடலில் பதிந்த ஆந்த வேதனையின் வித்து நமது உடலில் இருந்து கொண்டு அதனின் உணர்வின் கிளர்ச்சியைத் தூண்டி வித்துக்குச் சத்தாகத் தன் உணர்வை ஈர்க்கின்றது.

இது போன்று
1.எதனின் உணர்வின் குணத்தை அதிகமாக நமக்குள் பதிவு செய்கின்றோமோ
2.அது நமக்குள் விதியாக மாறுகின்றது.

நமக்குள் எத்தகைய தீமையைப் பதிவு செய்தாலும் அந்த உணர்வின் தன்மை நம்முள் ஊழ்வினையாக விதியாக உருவாகின்றது. மீண்டும் மீண்டும் அதே எண்ணங்களை எண்ணும் பொழுதுதான் அதன் வழிகளில் நாம் செயல்பட ஆரம்பித்து விடுகின்றோம்.

இதைத்தான் சிவனுக்குக் கணக்குப் பிள்ளை நந்தீஸ்வரன் என்று பக்தி மார்க்கங்களில் சாதாரண மனிதரும் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் வண்ணம் காவியங்களைத் தொகுத்தனர்.

வித்தாகப் பதிந்து வளரும் உணர்வுகளை நாம் மதி கொண்டு மாற்றிடல் வேண்டும்.

அவ்வாறில்லாமல் வேதனையின் உணர்வுகள் வளர்ந்து விதியாகச் செயல்படுமானால் அது நம் உடலைக் கரைத்து இறுதியில் நம்மை மடியச் செய்துவிடும்.

1.அந்த விதியை மதி கொண்டு மாற்றிட வேண்டும்.
2.மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க சக்தியை நம்முள் வலுப் பெறச் செய்வதே மதியாகும்.

இந்த மதி கொண்டு நம்முள் சேரும் நஞ்சான இருளை அகற்றுவோம். மகரிஷிகளின் அருள் சக்தியினை நமக்குள் வளர்ப்போம்.

மனிதன் அன்று காட்டுமிராண்டித்தனமாக வாழ்ந்தது போன்றே தீமைகள் இப்பொழுது வளர்கின்றது

மனிதன் அன்று காட்டுமிராண்டித்தனமாக வாழ்ந்தது போன்றே தீமைகள் இப்பொழுது வளர்கின்றது

 

பிற மண்டலங்களில் இருந்து வால் நட்சத்திரமாக நகர்ந்து வரப்படும் பொழுது விஞ்ஞான அறிவால் அதைக் கணக்கிட்ட முறை கொண்டு அதனின் ஓடு பாதையில் நம் வியாழன் கோள் வருகின்றது. அதனுடைய ஈர்ப்பின் சுழற்சிக்குள் சிக்கி இணைந்து விட்டது என்று விஞ்ஞானிகள் காட்டினார்கள்.

இதே போன்று தான்
1.விஞ்ஞான அறிவு உலகில் பரவினாலும் அது அனைத்தும் மனிதனின் உணர்வுக்குள் பரவி…
2.மனிதனுடைய சிந்தனைகள் சீர்குலையும் நிலையாக வந்துவிட்டது.

சில நாடுகளில் பார்க்கலாம்… அங்கே மனிதருக்குள் பல பல இனங்களாகப் பெருகி வெறி கொண்ட உணர்வு கொண்டு அழித்திடும் உணர்வாக மற்றவர்களை அழித்துக் கொண்டுள்ளார்கள். உகண்டாவில் இதெல்லாம் அன்று நடந்தது.

இங்கே நம் நாட்டிலும் இனத்திற்கு இனம் மோதிக் கொண்டார்கள். ஒரு நொடிக்குள் மனிதனை அழித்திடும் உணர்வே வெளி வருகின்றது. இந்த உணர்வுகள் அதிகமாகப் பெருகி விட்டால்
1.மனிதனுக்கு மனிதன் அழிக்கும் உணர்வே பெறுகின்றது.
2.மனிதனாக வாழும் நிலைகள் அறுத்து விடுகின்றது.

இன பேதங்கள் கொண்டு ஒருவருக்கொருவர் தாக்கிடும் நிலைகள் வரும் பொழுது… அதை நேரடியாகக் கண்டுணர்ந்து நுகர்ந்தால் நம்முடைய நிலைகளும் “அஞ்சிடும் உணர்வாக…” விளைந்து விடுகின்றது.

தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அவன் எந்தச் செயல்களைச் செய்தானோ அதே செயல்கள் கொண்டு “அவனைக் கொன்றால்தான் நாம் மீள முடியும்…” என்ற உணர்வுகள் வளர்ந்து விடுகின்றது.

இந்த உணர்வுகள் வளர்ந்து விட்டால் மனிதன் எங்கே வாழ்வது…? மனிதனுக்கு மனிதன் அன்று காட்டுமிராண்டித்தனமாக வாழ்ந்தது போன்றே தீமைகள் இப்பொழுது வளர்கின்றது.

அப்படிப்பட்ட தீமைகள் வரப்படும் பொழுது மனிதன் என்ற உலகத்திற்குள் தீமை அகற்றிடும் நிலைகள் அழிந்து விட்டால் என்ன ஆகும்…? இது போன்ற நிலைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

1.அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் புகுத்தி எந்தத் தீமையும் நம்மை அழித்திடாது
2.உயிருடன் ஒன்றிய ஒளியின் நிலைகளில் இந்த உலகை விட்டு எப்பொழுது அகன்றாலும்
3.மெய் ஒளியாக வீசிக் கொண்டிருக்கும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணைய வேண்டும்.

இது இல்லை என்றால் மீண்டும் இங்கே வந்தால் பாம்பாகவோ தேளாகவோ பிறக்க நேரும். இதைப் போன்ற நிலைகளிலிருந்து மனிதனின் உணர்வுகள் அழிந்திடாத நிலைகளில் நம்மைக் காத்திடல் வேண்டும் என்பதற்குத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியினை உபதேசிக்கின்றோம்.

இனிமேல் இந்த உலகில் தீமைகள் அதிகமாக ஊடுருவும். அதனால் நமக்குள் அஞ்சிடும் நிலையையே உருவாக்கும்.

பாலிலே பாதாமைப் போட்டாலும் நஞ்சு கலந்தால் எவ்வாறு நஞ்சின் செயலாக்கமாக அது மாறுவது போன்று
1.எவ்வளவு திடகாத்திரமாக இருப்பினும்
2.எவ்வளவு உயர்ந்த குணங்கள் இருப்பினும்
3.எவ்வளவு திறமையாக இருப்பினும்
5.தீமை செய்வோரின் உணர்வுகள் நமக்குள் புகுந்தால்… மனிதனின் சிந்தனைகளை அழித்திடும் நிலையே வருகின்றது.

ரஷ்யா எவ்வளவோ கட்டுப்பாட்டுடன் வளர்ச்சி அடைந்த நாடாக இருந்தாலும் அங்கேயும் மனிதனுக்கு மனிதன் கொன்று தின்னும் நிலை வருகின்றது.

உணவு உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் மனிதன் இறந்தாலும் அந்த உடலை அறுத்து உணவாக உட்கொள்ளும் நிலை வந்து விடுகின்றது.

இவ்வாறு மாறும் பொழுது இங்கே மனிதர்கள் மிஞ்சுவது எப்படி…?

உலகிலேயே உயிரினங்கள் பெருகிப் பெருகி ஒன்றை ஒன்று கொன்று புசிக்கும் உணர்வு வரப்படும் பொழுதுதான் உலகில் தன் இனத்தையே தான் புசிக்கும் நிலைகள் வளர்ந்து அந்த இனங்களே (அன்று வாழ்ந்த மிகப் பெரிய மிருகங்கள்) முழுமையாக அழிந்துவிட்டது.

தன் இனத்தையே கொன்றிடும் நிலை வரும் பொழுது அதே அசர உணர்வுகள்… மனித இனத்தைக் கொன்று புசிக்கும் உணர்வுகள் வளர்ந்து விட்டால் யாரும் மிஞ்ச முடியாது.

ஆகவே சற்று சிந்தித்துப் பாருங்கள்.

இதையெல்லாம் நம்முடைய காலத்திற்குள்ளேயே உலகில் இன்று பார்க்கலாம்.

ஆனால் எப்படித்தான் இருந்தாலும் உடலை விட்டு உயிர் வெளியே செல்கின்றது. எப்பொழுது வெளியேறினாலும் நஞ்சு கொண்டோர் உணர்வுகளால் நமக்குள் அஞ்சிடும் நிலை வந்தாலும் இந்த உணர்வே வெளிப்படும்.
1.எவர் மேல் வெறுப்பு கொண்டோமோ அங்கே தான் நாம் சென்று இணைய முடியும். இந்தக் கணக்கு தான் கூடும்.
2.ஆனால் சப்தரிஷிகளின் கணக்கை நமக்குள் கூட்டினால் அது பெருகும்… இது சிறுத்துவிடும்.

விண்ணின் ஆற்றலைப் பெருக்கி உயிர் ஒளியாக உருப் பெற்றது. எதைக் கவர்ந்ததோ அதன் அறிவால் அதைக் காத்திட்டது. காத்திட்ட அறிவின் தன்மை விளைந்தது. விளைந்திட்ட உணர்வின் தன்மை கொண்டுதான் மனிதனானது.
1.மனிதனான பின் உயிருடன் ஒன்றிடும் ஒளியின் தன்மையாக ஒளியின் சிகரமாக மாற்றிவிட்டால்
2.என்றுமே ஒளியின் நிலையாக நிலை கொண்டு வாழ்ந்திட முடியும்.

அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் சென்றால் அவன் நிலை கொண்டு வாழ்வது போல… இனம் இனத்தைத் தான் காத்திடும். எத்தகைய நிலையில் இருந்தாலும் தன் இனத்துடன் இணைந்தே தீரும்.

ஆகவே… எந்த இனத்துடன் நாம் இணைய வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அந்த இனத்துடன் நாம் இணைகின்றோம்.

எந்தக் கோபத்தின் நிலைகள் எண்ணினானோ அதன் உணர்வு கொண்டு மற்றொன்றைக் கொன்று புசிக்கின்றதோ அதிலே இணைந்தால்… அதன் இனத்துடன் இணைந்து அதன் ரூபமாக மாற்றிவிடும். அந்த ஈர்ப்புக்குள் சென்று அத்தகைய உடலாக நம்மை உயிர் மாற்றிவிடும்.

ஆகவே நாம் ஒளியின் சரீரமாக வாழ்ந்திடும் அந்த அருள் மகரிஷிகளுடன் இணைந்து கொண்டால் நாம் அருள் வாழ்க்கை வாழ்ந்திட முடியும். இன்றைய உலகின் இருள் சூழ்ந்த நிலைகளிலிருந்து அதைப் பிளந்திட வேண்டும்.

மனிதர்கள் இருப்போம்… இருந்தாலும் இந்த உலகில் தினசரி எத்தனை மாற்றங்கள் ஏற்படுகின்றது…? மாற்றங்கள் ஆகிக் கொண்டே இருக்கும் நிலையில் தன் இனம் என்று கொண்டு சென்றாலும் இருண்ட நிலையில் வாழும் நிலை தான் வருகிறது.

மனித உலகில் அந்த மகிழ்ச்சி இருக்காது.

இருண்ட உலகில் வாழ்ந்து கொன்று பசித்திடும் உணர்வாக வளரப்படும்போது மனித இனமே தன் இனத்தைக் கொன்று புசிக்கும் நிலையாகச் சிறுகச் சிறுக உருமாறிக் கொண்டிருக்கிறது.

இதிலிருந்து நாம் விடுபட வேண்டும்.
1.நாம் உடலுடன் வாழும் இந்த நல்ல நேரத்திலேயே மெய் ஞானிகளின் உணர்வை எடுத்து இருளைப் போக்கி
2.என்றும் உயிருடன் ஒன்றி ஒளி சுடராக பேரருள் பேரொளியாக அடைவது தான் நம் குருநாதர் காட்டிய அருள் வழி.
3.அதை நாம் பெற வேண்டும்.

தோல்வியிலிருந்து மீளச் செயும் அருள் ஞானம்

தோல்வியிலிருந்து மீளச் செயும் அருள் ஞானம்

 

விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறி இருக்கிறது. செவ்வாய்க் கோளுக்கு இராக்கெட்டை அனுப்புகின்றனர். அங்கே இருக்கும் உண்மைகளை அறிய விரும்புகின்றனர்.

செவ்வாய் நாதகாரகன். இவர்கள் அனுப்பும் இராக்கெட்டின் ஒலியைக் காட்டிலும் செவ்வாயின் ஒலி அதிகமாக இருப்பதனால் செவ்வாய்க் கோளில் இறங்கிய இராக்கெட்டின் ஒலி அதிர்வுகள் மாறி இராக்கெட்டின் இயந்திர இயக்கங்களும் மாறுகின்றது. அப்படி ஆனாலும் விஞ்ஞானிகள் விடுவதில்லை.

ஏன்…? எதனால்…? எப்படி…? என்ற நிலைகளில் சிந்திக்கின்றனர். குறையினை மாற்றியமைத்து மறுபடியும் செவ்வாயில் இராக்கெட்டை இறக்குவதற்கு விஞ்ஞானிகள் முயற்சி எடுக்கின்றனர்…. வெற்றி பெறுகின்றனர்.

இதைப் போன்று நமது வாழ்க்கையில்…
1.தியான வழியில் சில சந்தர்ப்பங்களில் நமது செயல்பாட்டில் தோல்வி அடைந்தாலும்
2.எப்படியும் இதிலிருந்து மீள வேண்டும்… எது நம்மை மாற்றியமைத்தது…? என்று சிந்தித்து
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் பெருக்கி இருளை அகற்றும் நிலைகளை நமக்குள் பெறுதல் வேண்டும்.

சாமியிடம் சென்று ஆசீர்வாதம் வாங்கினேன்… தொழில் நன்றாக நடந்தது. சாமியிடம் ஆசீர்வாதம் வாங்கினேன்… என் வேதனைகள் நீங்கியது என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளாமல் உயர்ந்த உணர்வின் தன்மையை அருள் உணர்வை உங்களுக்குள் பெருக்கினால் உங்கள் உடலில் உள்ள குறைகள் நீங்குகின்றது.

தன்னிச்சையாக வியாபாரமும் பெருகிவரும். நீங்கள் தேடி அலைய வேண்டியதில்லை.

அருள் உணர்வைப் பெருக்கினாலே அதற்குண்டான அமைப்பும் தேடி வருகின்றது என்று அதிக ஆசைப்பட்டால் எதனையும் நிர்வகிக்கும் குறைந்துவிடும். பின் கிடைத்த செல்வத்தையும் பாதுகாக்கும் தன்மையினை நாம் இழந்து விடுவோம்.
1.இது போன்ற நிலைகள் இல்லாதபடி
2.நமது வாழ்க்கையில் “குரு அருள்…” ஒன்றையே பிரதானமாக வைத்து நாம் வாழ்வோம்.

குருவின் துணையால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியினைப் பெறுவோம். நம்மில் அறியாது சேர்ந்த, இருளை விலக்குவோம் என்று அருளுணர்வைத் தம்முள் வளர்த்து வரும் அன்பர்கள் அனைவரும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றி மெய்ப்பொருள் காணும் திறன் பெற்று மலரைப் போன்ற மணம் பெற்று மகிழ்ந்து வாழும் சக்தி பெற்று இந்த வாழ்க்கையில் பிறவியில்லா நிலை பெறும் நிலையாகப் பேரின்பப் பெரு வாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.