வியாழன் பனிப் பாறையாக ஆனது போல்… பூமியும் பனிப் பாறையாக மாறலாம்…!

வியாழன் பனிப் பாறையாக ஆனது போல்… பூமியும் பனிப் பாறையாக மாறலாம்…!

 

நம் நாட்டிலே தோன்றிய மகரிஷிகள் இந்த உலகம் உய்ய எத்தனையோ நிலைகளில் உயர்ந்த சக்திகளை இங்கே படரச் செய்துள்ளனர்.

“தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…” என்பது போல தென்னாட்டிலே தோன்றிய அந்த அகஸ்தியன் தான் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் இந்தப் பூமியைச் சமப்படுத்தினான்.

பூமியின் துருவத்திலே பனிப் பாறைகள் உறைய உறைய… எடை கூடிக் குடை சாயும் நிலைகளுக்குச் சென்றதை
1.துருவத்தில் உறையும் பனிகளை… வெப்பத்தின் தணல் கொண்டு உருகச் செய்து
2.பூமியிலே நடு மையமாக மனிதனாக உயிர் வாழச் செய்யும் நிலையாக அவன் செயல்படுத்தினான்.

இல்லை என்றால் வியாழன் கோள் பனிப் பாறைகளாக எவ்வாறு பெரிதாக ஆகி இருக்கின்றதோ அதைப் போல சிறிதளவு ஒரு நொடி மாறினாலும் நமது பூமியும் பெரும் பனிப்பாறையாக மாறி உயிரினங்கள் வாழ முடியாத நிலை ஆகிவிடும்.

அப்படியே வாழ்ந்தாலும் பனிப் பிரதேசங்களில் மீன் இனங்களும் மற்ற உயிரினங்களும் வாழ்வது போல
1.மனித இனமே அல்லாத மற்ற உயிரினங்களாக மாற்றிவிடும்.
2.பனிக்குள் வாழும் உயிரினமாகத்தான் நாம் திரிய முடியும்.

நம் பிரபஞ்சத்தில் உள்ள வியாழன் கோளும் நம்மைப்போல மனிதர்களாக வாழ்ந்த இடம்தான்.

அங்கே விஞ்ஞானத்தின் அபரிதமான வளர்ச்சியாகி அதற்குண்டான செயற்கைக் கருவிகளை அதிகமாகச் செயல்படுத்தப்பட்டு அதன் வழிகளிலேயே பெரும் பனிப்பாறையாக மாறிச் சுழற்சியின் வேகம் கூடி இன்று ஓடிக் கொண்டுள்ளது.

இப்போது எப்படிப் பனிப்பிரதேசங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவோ அதே போல
1.மனிதனாக இருப்பவரும் வளர்ச்சியற்ற நிலைகள் கொண்டு
2.உயிரினங்களாக இன்றும் வியாழனில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதிலிருந்து வெளிப்படும் சில உணர்வலைகள் இன்றும் இந்த பிரபஞ்சத்தில் மிதந்து கொண்டு வருகின்றது. பிரபஞ்சத்தில் மிதந்து வந்தாலும் அவ்வாறு வந்த அந்த நிலைதான் நம் பூமியில் உயிர் அணுக்களாக தோன்றி உயிரணுவின் நிலையிலிருந்து மனிதனாக உருப்பெரும் நிலைகளை நாமும் பெற்றிருக்கின்றோம்.

1.இந்தப் பூமியில் மனித இனம் இன்று வந்ததல்ல
2.வியாழன் கோளின் நிலைகளில் இருந்து நாம் வந்திருக்கின்றோம்.
3.இதை அறிந்து கொள்வதற்குத் தான் நம் பிரபஞ்சத்திலேயே சூரியன் இயக்கச் சக்தியாக இருந்தாலும்
4.வியாழன் கோளைக் “குருவாக…” வைத்தது.
5.உயிரணுவின் ஆற்றலை உயிர் அணுவாக உடலின் தன்மை பெறச் செய்தும் வியாழனின் நிலை தான்.

இங்கே நம் பூமியில் இன்று இருக்கும் விஞ்ஞான அறிவைக் காட்டிலும் பல கோடி ஆண்டுகளுக்கு முன் அன்று வியாழன் கோளில் விஞ்ஞான அறிவின் வளர்ச்சியால் தான் மனித இனங்கள் முழுமையாக அழிந்தது.

இங்கே இப்போது அணு ஆயுதங்களைச் செய்து வைத்திருப்பது போல பல கோடி ஆண்டுகளுக்கு முன் வியாழன் கோளில் வாழ்ந்த மனிதர்கள் அதைச் செய்து தான் இருள் சூழச் செய்து விட்டனர். பனிப் பாறைகளாகிக் பெரும் கோளாக மாறி விட்டது.

அங்கிருந்து தான் உயிரினங்கள் கடக்கப்பட்டு இந்தப் பூமியில் மனிதனாக உருவாகி இருக்கின்றோம். அன்று வியாழனில் மனிதர்கள் உருவானாலும் உயிரணுவின் தோற்றங்கள் இதே சூரியனின் இயக்க நிலைகள் கொண்டு வளர்ந்ததனால் மாற்றம் இல்லாதபடி இதே பிரபஞ்சத்தில் பூமியில் இன்று மனிதனாக வாழ்கின்றோம்.

அது போக… நம் பிரபஞ்சத்தில் உள்ள கார்த்திகை நட்சத்திரம் போன்ற ஏனைய பல நட்சத்திரங்கள் தனித்தன்மை கொண்டு தனக்கென்று ஒரு பிரபஞ்சமாக இயக்கும் நிலைகளில் சிறுகச் சிறுக (சுமார் 25 வருடங்களுக்குள்) பிரிந்து விட்டது.

பிரிந்ததனால்…
1.இந்தப் பிரபஞ்சத்தில் உருவான மனிதர்களுக்குக் கிடைக்கும் அறிவின் சிந்தனைக்குரிய நிலைகளும்
2.அனைத்தும் தெரிந்து கொள்ளும் ஆற்றலும் குறைந்து கொண்டே இருக்கின்றது.

அதனின் விளைவால் விஞ்ஞான அறிவால் இருள் சூழ்ந்த நிலைகளாக மாறி
1.நம்மையே அழித்துக் கொள்ளும் நிலையும்
2.நமக்கு நாமே தண்டனை கொடுக்கும் உணர்வாக இன்றைய விஞ்ஞான அறிவு வளர்ந்து விட்டது.

குடிபோதையில் உள்ளவர்களை என்ன தான் அவர்களை அதை நிறுத்தச் சொன்னாலும் அது தான் அவருக்கு ரசனையாக இருக்கும்… கேட்க மாட்டார்கள்.

உடலின் இன்பத்திற்காக மதுவை அருந்துபவர்களும் மற்ற சிந்தனையற்றுத் தன் நிலைகளில் அதையே தான் செய்து கொண்டிருப்பார்கள்.

அதே போல் விஞ்ஞான அறிவிலே சிக்கிய நாமும் இந்த உடலின் சுகத்திற்காக மற்றதை மறந்து தன் செயலை மறக்கும் நிலைக்கு வந்து விட்டோம்.

போதைப் பொருளை உபயோகிப்பது போலவே நாமும் விஞ்ஞான உணர்விலே சிக்குண்டு மனித உணர்வின் செயலைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கின்றோம்.

மனித இனமே பூண்டோடு அழிந்திடும் நிலை வளர்ந்து கொண்டிருக்கின்றது…!

முக்காலத்தையும் அறிய முடியுமா…! – ஈஸ்வரபட்டர்

முக்காலத்தையும் அறிய முடியுமா…! – ஈஸ்வரபட்டர்

 

இஜ்ஜீவ காந்த சரீரத்தில்… எண்ணத்தின் அலைத் தொடர்பு அனைத்தும்… நினைவின் வளர் காலம் (நினைவு தெரியும்) முதற் கொண்டு பூமியில் பிறந்த சரீரத்தின் ஆத்ம அலையுடன் பதிவு பெற்று விடுகின்றது.

மீண்டும் மீண்டும் எண்ணும் எண்ணம் இச் சரீர ஜீவகாந்த அலையுடன் மோதப் பெற்று… இச்சரீரத்தை இயக்கும் ஆத்ம அலையில் பதிவு நிலை பெற்று…
1.ஒலியின் எதிர் தொடர்புடன் எண்ணத்தின் செயல் வாழ்க்கை
2.இப்பூமி ஈர்ப்பு பிடியில் நாம் வாழுகின்றோம்.

அதாவது மின்காந்தத்தால் ஒலி அலையை நாடாக்களில் பதிவு செய்து மீண்டும் அதே மின் காந்தத்தைப் பாய்ச்சி பதிவான ஒலியை கேட்கின்றோம் அல்லவா…!

அதைப் போன்று… ஜீவ காந்த சரீரத்தின் உணர்வுடன் கூடிய எண்ண அலைகள்… ஆத்மாவில் பதிவானதை… மீண்டும் அவ்வலைத்தொடர் இச்சுவாசமுடன் ஜீவகாந்த அலையுடன் மோதியவுடன்… அதன் பிடிப்பிலேயே மீண்டும் மீண்டும் பூமியின் பிடியிலேயே சிக்க வேண்டியதிருக்கும்.

இப்பூமிப் பிடிப்பிலிருந்து விடுபடத் தன் ஆத்ம வலுவைப் பெற வேண்டுமென்றால் இஜ்ஜீவ காந்த சரீர உணர்வின் எண்ணத்தில் ஏற்கனவே பதிவு பெற்ற தொடர்பு நிலைகளை மாற்றி அமைக்க வேண்டும்.

வலுவான ஒலி சக்திகளை… காந்த மின் அலைத் தொடர்பைப் பெற்று… உணர்வின் எண்ணத்தில் இப்பூமி வளரத் தொடர்பு கொண்ட நம் சூரிய குடும்ப ஒளி சக்திகளுடன் எண்ணத்தைச் செலுத்தி பல சமைப்பின் முலாமைப் பெற வேண்டும்.

அதனின் வளர்ச்சியில்… பகுத்தறியும் விழி ஒளியைப் பாய்ச்சி எதிர்படும் பொருளறிந்து வழி செல்லும் வாழ்க்கைதனை… “ஞான ஒளி பாய்ச்சி” எதனையும் அறியும் தொடர்பைப் பெற முடியும்.

இஜ்ஜீவ காந்த சரீரத்தில் இன்று செயல்படும் ஆத்ம வலுவின் வளர்ச்சித் தொடருக்கு மேலும் வலுக்கூட்டும் “சப்தரிஷிகளின் தொடர்பில்” உணர்வின் எண்ணத்தைச் செலுத்தி…
1.ஜீவகாந்த சரீரத்தின் எண்ண அலைக்கு
2.வலுவான ஒளி காந்தத்தை மேன்மேலும் நாம் எடுக்கும்போது
3.ஞானத்தின் ஒளி நிலையைப் பெற முடியும்.

ஞானத்தின் ஒளித் தன்மையை இவ்வாத்மாவின் பதிவு நிலைப்படுத்தப்பட்ட வீரிய சக்தியினால்… “முக்காலமும் அறியும் மூல மந்திரத்தை” ஒவ்வொரு ஆத்மாவும் பெறலாம்.

ஆதிசக்தியின் சக்தியாக… ஜீவசக்தியின் சமைப்பு நிலைக்கு நம் சூரியக் குடும்பமல்லாத
1.வேறு பல சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த ரிஷி சக்திகளின் சமைப்பு நிலை கொண்டு
2.அதற்குகந்த வலுக்களை… ஒளியின் வண்ணச் சமைப்புகளால் சுவை கூட்டும் ரிஷித் தொடர்பில்தான்
3.கரு உரு வார்ப்பக வழித் தொடர்கள் வளருகின்றது.

அத்தகைய வழித் தொடர் பெற்று உயர்ந்த நிலையில் வளரும் மனித உயிராத்மாக்களுக்கு மீண்டும் உரம் சேர்க்கும் வளர்ப்பிற்கு வளர் சக்தியின் ஒளி சக்தியான “ரிஷி சக்தியின் ஒளித் தொடர்பால் தான்” உயர்வு நிலை கிட்டும்.

மகரிஷிகளுடன் நாம் என்றுமே இணைந்த நிலையில் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்

மகரிஷிகளுடன் நாம் என்றுமே இணைந்த நிலையில் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்

 

பால் எவ்வளவு சுவையாக இருந்தாலும் அதிலே காரம் விழுந்து விட்டால் அதனின் சுவையை அது எப்படி மாற்றுகின்றதோ அதைப் போல் தான் இந்த மனித வாழ்க்கையில் நாம் பண்புள்ளவர்களாக இருந்தாலும் பிறருடைய தீமையின் நிலைகளை நுகரப்படும் போது இயக்கங்கள் மாறி அந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகி விடுகிறது…

காரணம்…
1.மனிதர்களான நாம் எவரும் எவரிடமிருந்து பிரிந்து இல்லை.
2.அனைவருடன் சேர்ந்து தான் இயங்கிக் கொண்டிருக்கின்றோம்.

ஒருவரின் தீமையான செயல்களைப் பார்த்தாலும் கேட்டுணர்ந்தாலும் அவருக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை என்று. எண்ணலாம்.

ஆனால் அவருக்குள் விளைய வைத்த தீமையின் தன்மை கொண்டு “தீயவன்…” என்று அவரை எண்ணினாலும் அதனுடைய தொடர்பு கொண்டு அந்தத் தீய உணர்வுகள் நமக்குள் விளைந்து
1.அவனை எண்ணும் போதெல்லாம் நம்மைத் தீய வழிகளுக்கு இட்டுச் செல்லும்
2.தீய சொல்களைச் சொல்ல வைத்துவிடும்
3.தீயதையே நமக்குள் விளையச் செய்து தீயவனாக நம்மையும் மாற்றும் நிலை வந்து விடுகிறது.

ஆகவே எதிலேயும் நாம் தொடர்பு கொண்டவர்கள் தான். யாரிடமிருந்தும் பிரிந்து சென்றவர்கள் இல்லை.

அதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் அந்த மெய் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி… மனிதனாகப் படைத்த நம் உயிரை நாம் மதித்து நடக்க வேண்டும்.

விநாயகர் தத்துவத்தை உணர்த்திச் சென்ற அகஸ்தியனின் வழிப்படி ஒவ்வொரு நிமிடத்திலும் வாழ்க்கையில் எந்தக் குறைகள் வந்தாலும் அதை நிவர்த்திக்க வேண்டும்.

நாம் செய்யும் தொழில் நஷ்டமானாலும் வீட்டிலுள்ளோர் அனைவரும் சேர்ந்து தியானமிருந்து மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

பின்… எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் வாழ்வில் நலம் பெற வேண்டும் என்று இந்த எண்ணங்களை எடுத்து அந்த அருள் உணர்வுகளை வளர்க்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்திகள் பெருகும். வியாபாரம் சீராகும். நமக்குள் வரும் துயரங்களையும் நோய்களையும் மாற்ற முடியும். நம் சொல்லின் நிலைகள் பிறரின் இருளைப் போக்கிடும் சக்தியாக வரும். மெய் உணர்வின் தன்மையை நாம் பெற முடியும்.

அத்தகைய நிலைகள் நீங்கள் பெற வேண்டும் என்ற ஆசையில் தான் இதைச் சொல்கிறேன்.

1.நான் (ஞானகுரு) படிப்பறிவில்லாதவன் தான்.
2.மூடனாக இருந்த என்னைக் குருநாதர் பக்குவப்படுத்தி அறியும் ஆற்றலைக் கொடுத்தார்
3.அவர் கொடுத்ததை எல்லாம் இப்போது உங்களுக்கு உப்தேசமாகவும் கொடுக்க முடிகிறது.
4.அந்த மேய் ஞானிகளின் உணர்வை நுகர்ந்து சொல்லாகவும் செயல்படுத்த முடிகிறது.
5.என் வாக்கினைக் கேட்போர் வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கவும் முடிகிறது.

அவர்கள் இருள்கள் எப்படிப் போகிறதோ அதைப் போல் இந்த உபதேசத்தைக் கேட்டுணர்ந்து அதைப் பின்பற்றுவோர் நீங்களும் வளர முடியும். உங்கள் சொல்லினைக் கேட்போருக்கும் அது இருளைப் போக்கும் சக்தியாக வளரும்.

இன்றைய உலகில் நாம் அறியாதபடியே
1.இருள் சூழும் தன்மைகள் உருவாகி நஞ்சுகள் பரவி நல்லவனையும் தீயவனாக ஆக்கி
2.ஒன்றும் அறியாத பாமர மக்களையும் அழித்திடும் உணர்வுகளாக வெளிப்பட்டு
3.உணர்ச்சி வசப்பட்ட நிலையில் எத்தனையோ வெறித் தன்மையான நிலைகளும் செயல்பட்டு
4.உலகிலே படர்ந்து கொண்டிருக்கும் அத்தகைய தீய விளைவுகளை
5.நீங்கள் விடும் மூச்சலைகள் இதை மாற்றி அனைவரையும் நல்வழிப்படுத்தும் சக்தியாகப் படரும்.

உலகைக் காத்திடும் அரும் பெரும் சக்தியாக நாம் ஒவ்வொருவரும் வளர வேண்டும்.

இமயமலையில் சப்தரிஷிகளின் செயல்பாடுகள் – ஈஸ்வரபட்டர் 

இமயமலையில் சப்தரிஷிகளின் செயல்பாடுகள் – ஈஸ்வரபட்டர் 

 

போகர் தன் உயிராத்மாவின் வளர் சக்திக்காக… முருகா என்ற ஆறுகுண. அமில வழி… ஜீவித நீர் நிலை வளர்க்கும் மூல வித்தினை… இப்பூமியின் ஜீவ வளர்ப்பில்… புவனம் வளர்க்கும் புவனேஸ்வரித் தாய் சக்தியை வணங்கி… முருக குண வித்தை வளர்க்க… நவபாஷண அமிலத்தை முருக குணச் சமைப்பாக்கிச் சிலை செய்து வைத்துள்ளார்.

1.எச்சிலையை நவபாஷணத்தால் முருகனின் உருவத்தைச் செய்தாரோ
2.அதன் தன்மையில் அமில ஜீவ வளர்ப்பின் வித்து இப்பூமியில் வளரும்
3.ஜீவ முருக அறுகுண வண்ண அமிலத்தின் வலுவைக் கூட்டும் முருக குண சக்தி நிலை
4.போகரினால் இப்பூமியில் இன்று செயல்படுகின்றது.

இப்பூமியின் இமயமலையில் பல ரிஷிகளின் செயல் நடக்கின்றது…!

“ரிஷிகளின் ஜெபமிடம் அதுதான்…!” என்ற நிலை மட்டும்தான் மனித உணர்வில் தெரிகின்றதோ தவிர உண்மையில் இமயமலையின் உச்சியில் நடுத் தாழ்வான ஓர் இடத்தில் உச்சிக்கு அப்பால் இந்திய கண்டத்தின் பின்புறத்தில் “சப்தரிஷியின் ஜீவித மனித ஆத்மா வளரும் வித்தின் உணர்வு சமைப்பு தாவர வலுவிற்கு… அங்கு குளம்…” ஒன்று உண்டு.

அந்நீர் கொப்பளிக்கும் தன்மையில் செயல்பட்டுக் கொண்டே உள்ளது.

1.போகர் எப்படி நவபாஷணத்தால் முருகன் சிலையைச் செய்வித்தாரோ…
2.அதைப் போன்று ஜீவ நீரில் வடித்தெடுத்த அமில சேர்க்கையால் திடமாக்கப்பட்ட
3.சிவலிங்கம் ஒன்றை அங்கு ரிஷிகள் பிரதிஷ்டை செய்து வைத்துள்ளனர்.

அதற்குச் சுற்றிலும் அந்நீர் நிலை கொதி நிலை பெற்றுச் செயல்பட்டுக் கொண்டுள்ளது. அதன் தொடர்பில் பல மாற்று நிலைகள் இப்பூமிக்கு மனித உணர்வின் செயல் வலுவைச் சப்தரிஷிகளினால் செயல்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளது.

ஆக சப்தரிஷிகள் செயல்படும் ஞான விருட்சக மலை தான் இமய மலை…!

1.இயற்கையின் மாற்றத்தில் மனித நிலை வாழ வலுக் கூட்டும் ரிஷி சக்தியுடன் நம் எண்ணத்தின் உணர்வைச் செலுத்தி
2.இஜ்ஜீவ காந்த சரீரத்தில் ஒளிக் காந்தத்தின் மின் அலையை செலுத்தச் செலுத்த
3.விழி பார்த்துப் படமெடுக்கும் வாழ்க்கையை ஞான விழி கொண்டு ஜோதி நிலைக்கு மனித நிலை உயர முடியும்.

ஞானகுருவின் புத்தாண்டு வாழ்த்தும் அருளாசியும்

ஞானகுருவின் புத்தாண்டு வாழ்த்தும் அருளாசியும்

 

ஞானிகள் கண்டுணர்ந்த இயற்கையின் உண்மை நிலைகளை யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் போது “சாமி என்னமோ சொல்கிறார்…” என்று விட்டு விடாதீர்கள்.

காரணம் உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்யவே இதைச் சொல்கிறேன். பதிவானதை மீண்டும் நீங்கள் நினைவு கூறும் பொழுது நிச்சயம் அது உங்களுக்குள் இயங்கத் தொடங்கும்.

ஒருவன் கடுமையாத் திட்டி விட்டால் நீங்கள் அதைக் கூர்மையாகப் பதிவு செய்து கொள்கிறீர்கள்.
1.அதைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது பன்மடங்கு ஆத்திரமூட்டும் செயலாகவும்
2.அறிவை இழக்கச் செய்யும் செயலாகவும் உங்களுக்குள் கொடூரத் தன்மைகளையும் விளைவிக்கச் செய்கிறது.

அப்படி விளைந்து விட்டால் சகோதர உணர்வுடன் நீங்கள் இருந்தாலும் இந்தச் சொல்லின் தன்மை கடும் சொல்லாக வெளிப்படும். நீங்கள் எடுத்துக் கொண்ட உணர்வலைகள் உடல் நோயாக மாறும் நிலையும் வந்து விடுகிறது.

ஒருவன் செய்த கொடூரத் தன்மையின் நிலைகள் இங்கே ஊடுருவி நல்ல பண்பை இழக்கச் செய்து தீமை செய்யும் உணர்வின் தன்மையாக நம்மை இயக்கச் செய்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலையில் இருந்து மீள மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்றுப் பழக வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் இந்தப் புத்தாண்டு
1.மகிழ்ச்சி பெறும் நன்னாளாக அது வளர வேண்டும்
2.மகிழ்ச்சி பெறும் செய்தியாக நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்
3.மகிழ்ச்சி பெறும் செயலாக அனைவரும் பெற வேண்டும்
4.நீங்கள் விடும் மூச்சலகள் அனைவரையும் மகிழ்ந்து வாழச் செய்யும் சக்தியாகப் படர வேண்டும்
5.உங்கள் வாழ்க்கையில் அறியாது வந்த இருள்கள் அனைத்தும் நீங்கிட வேண்டும்
6.அந்த மெய்ப்பொருள் காணும் மெய் வழிகள்… மெய் ஒளிகள் நீங்கள் பெற வேண்டும்
7.குருநாதர் காட்டிய வழியில் அதை எல்லாம் நீங்கள் பெற வேண்டும். என்று பிரார்த்திக்கின்றேன்.

எல்லோரும் மகிழ்ந்து வாழ வேண்டும்… மக்களுக்குள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்… என்ற நிலையில் ஞானிகளும் மகரிஷிகளும் எதை ஆசைப்பட்டார்களோ அந்த நிலையை ஒவ்வொருவரும் நீங்கள் பெற வேண்டும்.

உதாரணமாக மாங்கனியாக இருக்கும் பொழுது அது சுவையாகவும் பிஞ்சாக இருக்கும் பொழுது துவர்ப்பாகவும் காயாக இருக்கும்போது புளிப்பாகவும் இருக்கிறது.

மனிதர்களாக இருக்கும் நாம் காயின் தன்மையில் இருக்கின்றோம். அந்த ஞானிகளோ கனியின் தன்மை அடைந்து உயிருடன் ஒன்றிய ஒளியாக முழுமை பெற்றவர்கள்.

அவர்கள் உணர்வை நாம் பெற்று நம் ஒவ்வொரு உணர்வையும் இனிமை கொண்டதாக மாற்றி அந்தக் கனியின் தன்மை அடைந்த அந்த ஞானிகள் சென்ற வழியில் நாம் அனைவரும் நிச்சயம் செல்ல முடியும். உங்களை நம்பிப் பாருங்கள்.

எப்படித்தான் இன்று இருந்தாலும் நாம் எண்ணியதற்குத் தகுந்த மாதிரி அடுத்த உடலாக மாற்றி விடுகிறது நம் உயிர். அதே போல்
1.நாம் அருள் உனர்வுகளை எடுத்து வளர்த்துக் கொண்டால்
2.இந்த உடலை ஒளிச் சரீரமாக மாற்றுவதும் இதே உயிர் தான்.

ஆகவே…
1.ஒளியாக மாற்றி விண் சென்ற அந்த மெய் ஞானிகளின் அருளப் பெறுவோம்.
2.நமக்குள் அறியாது வந்த இருளைப் போக்குவோம்
3.நம் சொல்லும் செயலும் கேட்போர் உணர்வுகளில் இருளை நீக்கச் செய்து பொருள் காணும் சக்தியைப் பெறச் செய்வோம்.
4.நம் பேச்சும் மூச்சும் அனைவரையும் மகிழ்ச்சி பெறச் செய்யட்டும்
5.உலகம் முழுவதும் சகோதர உணர்வுகளை வளர்க்கச் செய்வோம்.

மனிதனுக்கு மனிதன் ஒருவருக்கொருவர் துன்பத்தை நீக்கும் நிலையாக உண்மையை உணரச் செய்யும் சக்தியாகப் பெற வேண்டும் என்று நாம் தியானிப்போம்… தவமிருப்போம்.

உலகில் சுழன்று கொண்டிருக்கும் அசுர உணர்வுகளிலிருந்து அனைவரும் மீண்டு மெய் ஒளிகள் மெய் உணர்வின் தன்மை இங்கே படர வேண்டும் என்ற நமது குருவின் ஆசைகள் உங்களுக்குள் பதிவாகி அது ஓங்கி வளரட்டும்.

1.குருவின் ஆற்றல் மிக்க அந்தச் சக்தி உங்களுக்குள் விளைந்து
2.நீங்கள் இடக்கூடிய மூச்சலைகள் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு
3.உலகில் வரும் இருளைப் போக்கி மெய்ப் பொருள் காணும் சக்தியாக இந்தப் புத்தாண்டில் மலரட்டும்.

மெய்… உண்மை… சத்தியம்…! – ஈஸ்வரபட்டர்

மெய்… உண்மை… சத்தியம்…! – ஈஸ்வரபட்டர்

 

தீக்குச்சியில் பூசப்பட்ட மருந்தும் பெட்டியில் பூசப்பட்ட மருந்தும் உராயும் பொழுது தீக்குச்சி எரிந்து அம்மருந்தின் வேகம் உள்ளவரை ஒளி தருகின்றது.

இவ்வுராய்வைப் போன்றே திரவக எரி பொருளும் அதன் தொடர்பு கொண்ட உராய்வுக் கல்களைச் செலுத்தும் பொழுது தன் ஒளியினைத் தருகின்றது.

ஒன்று போல் உள்ள இரண்டு கற்களை உரசும் பொழுதும் அதிலிருந்து ஒளி பிறக்கின்றது.

இப்படி உலக உணர்வில் மனித ஞானத்தின் சமைப்புத் தன்மை கொண்டு செயற்கை ஞானத்தில் வழிப்படும் உண்மைகளும்… இயற்கையின் உணர்வில் பிறக்கப்பட்ட உண்மையும்… சூரியனின் சமைப்பு தன்மையால் சுழன்று ஓடிக் கொண்டேயுள்ளது.

சூரியனின் ஈர்ப்புப் பிடியில் உந்தித் தள்ளும் காற்றலையில் மோதப் பெறும் அமில ஒளி நிலையில் ஜீவன் கொண்ட “உயிரணு…”
1.சூரியனின் பிடிப்பலையை விட்டுக் காற்று மண்டல நிலையற்ற பால் வெளி மண்டலத்தில் மிதந்து வரும் அவ்வுயிரணு
2.பூமியின் ஈர்ப்புப் பிடியில் தான் எச்சுவைக் கொண்டு உயிர் பெற்றதோ
3.அதன் தொடர்பில் ஜீவ வளர்ப்பு நிலை மாற மாற
4.ஒன்றின் சமைப்பிற்கு முலாம் பெற்று… ஜீவ வளர்ச்சியின் உஷ்ண நிலையில் ஓர் தொடர்பு வளர்ச்சி நிலை மாறி
5.மீண்டும் பிறிதொரு வளர்ச்சிக்கு வரும் வழித் தொடர் மாற
6.அவ்வுயிரணுவின் வலுத்தன்மையைக் கூட்டிக் கூட்டி… உயிரணுவின் பரிமாணம் கனம் பெற்று
7.எல்லாவற்றையும் அறியக்கூடிய செயல்… சொல்… ஞானம் பெறும்… சரீர நிலைக்கு (மனித உடல்)
8.அவ்வுயிர் காந்தம் ஜீவ காந்த உணர்வு நிலை செயல் கொள்ளப் பல சமைப்பில் புல்லாகிப் பூண்டாகி என்ற வழி நிலைக்கொப்ப
9.பல கோடி அமிலத் தன்மையில்… பல மோதலில்… பிம்ப நிலை மாற்று நிலை மாறி… மாறி…
10.சமைப்பின் அமில வீரிய சக்தியான உயிர் ஜீவாத்மா ஒளி பெற்ற சரீர இயக்கத்தில்
11.பல மோதலில் உருப்பெற்ற உணர்வின் எண்ணச் சரீரத்தில்
12.மெய் ஞான சக்தி பெறுவதுதான் மனிதனுக்கு அடுத்த நிலை.
13.மெய் என்றால் உண்மை என்ற பொருள் தான்… உலக இயல்பின் செயல்படும் உண்மையாக உள்ளது.
13.இன்று நடப்பவை சொல்லப்படும் சொல் சத்தியம் என்றால் அதுவே நாளை கனவாகி விடுகின்றது.

இவ்வுடலில் உயிர் இயக்கமும்… வாழும் வாழ்க்கையும்… “சத்தியம்” என்றால் உடலை விட்டு உயிர் பிரிந்த பின் எது சத்தியமாகின்றது…?

சொல்லப்படும் சொல்லிலேயோ வாழும் வாழ்க்கையிலேயோ சுழலும் ஓட்டத்தில் சத்தியம் இல்லை. சத்தியத்தின் உண்மை நிலையை ஒவ்வொருவரும் உணரல் வேண்டும்.

1.சூரியனின் ஒளி பூமியில் படும் போதுதான் பூமிக்கு வெளிச்சம்.
2.பூமியின் மேல் சூரியனின் ஈர்ப்பு வட்டம் இல்லா இடத்தில் அங்கு சத்தியம் செயல்படுவதில்லை.
3.சூரியனின் ஒளி நிஜம் இல்லை என்று இரவில் பூமி சொல்ல முடியுமா…?

ஒளிரும் மங்காத் தன்மையான உயிர் ஜீவ ஜோதி நிலை தான் “சத்திய நிலை…!” சத்தியத்தின் ஒளியை ஒளிரச் செய்யும் சக்தியாகத் தான் மனித உணர்வின் எண்ணத்தின் ஞானத்தைச் செயல்படுத்த வேண்டும்.

உலகப் பிடிப்பில் நீ சிக்காதே…
உலகத்தையே நீ வெறுக்காதே…
உலகத்தையே நீ உனக்கு சொந்தமாக்கு…!

உலகம் உனக்குச் சொந்தமல்ல…
உலகுக்காக நீ வாழவில்லை…
உலகத்தில் தான் நீ வாழுகின்றாய்…!

உலகம் உறங்குவதில்லை…
உலகத்தில் நீ உறங்காதே…
உலக சுகத்தை நம்பாதே…!

உலகத் தேரில் பவனி வா…!
உலக ஞானம் நீ பெற்றால்…
உலகையே நீ படைக்கலாம்…!

ஹைட்ரஜனிலிருந்து வரும் கன நீரும்… மகரிஷிகளின் ஆற்றல்களும்

ஹைட்ரஜனிலிருந்து வரும் கன நீரும்… மகரிஷிகளின் ஆற்றல்களும்

 

விநாயகர் தத்துவத்தை ஞானிகள் மக்களுக்குக் காட்டியிருந்தாலும் அவர்களை நாம் “முன்னே பின்னே பார்த்ததில்லை…”

1.அந்த மெய் ஞானி நல்லதைச் செய்து “தன்னையறிந்தான்…” என்ற நினைவை ஊட்டி
2.சிறுகச் சிறுக அவர்கள் பெற்ற சக்தியை நமக்குள் வலுவை ஏற்றுவதற்கு
3.காலையில் எழுந்தவுடன் அந்த மகரிஷியின் அருள் ஒளி பெற வேண்டும் என்று
4.வானை நோக்கி எண்ணி ஒவ்வொருவரும் எடுப்பதற்காக விநாயகரை வைத்தார்கள்.

அப்போது… தன் வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கி மெய் ஒளியைப் பெற்று பொருளறிந்து செயல்படும் திறன் பெற்று தன் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிச் சென்ற “அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…” என்று எண்ண வேண்டும்.

எந்த மகா ஞானி உண்மையை அறிந்தானோ…
1.விண்ணிலே ஒளியின் சுடராக இருக்கும் அவனை நினைவு கொள்ளும் பொழுது
2.சூரியனின் காந்த சக்தி அந்த அலைகளைக் கவர்ந்து கொண்டு வரும் அவனின் உணர்வை நாம் சுவாசித்து
3.நமக்குள் அந்த உணர்வின் வலுவை ஏற்ற வேண்டும்.

விஞ்ஞானிகள் அணுவைப் பிளந்து அணுகுண்டுகள் செய்து அதை ஹைட்ரஜனைக் (கன நீர் – DUTERIUM) கொண்டு அடக்கி வைக்கின்றனர்.

நீருக்குள் இருக்கக்கூடிய சக்தியை… அதாவது ஒரு அணுவிற்குள் இருக்கும் சக்தியை அணுவின் தன்மை பிளந்தாலும்
1.மற்றதுக்குத் தீமைகளை விளைவிக்காத ஹைட்ரஜன் என்ற கன நீரை
2.அதாவது நீரை வடித்து உப்பின் சக்தியை அதிகமாக்கி வெடிக்க விடாது அதனுடைய ஆற்றலைக் கலந்து கொள்வது.
3.ஏனென்றால் கன நீரின் அழுத்தத்தின் தன்மையால் வெடிக்கும் நிலையைச் செயலற்றதாக மாற்றிவிடும்.

உப்பைப் போட்டால் எப்படி ஊறுகின்றதோ அதைப் போல் ஹைட்ரஜன் கதிரியக்கத்திற்குள் இருக்கும் “பசப்பை நீக்கி” தன் உணர்வின் தன்மை கொண்டு அதை அடக்கிவிடும்.

விஞ்ஞானி அணுப் பிளப்பை இவ்வாறு கட்டுப்படுத்துவது போல் மெய் ஞானி என்பவன் விண்ணிலிருந்து வரும் எத்தகைய நஞ்சினையும் (கதிரியக்கச் சக்திகளை) அடக்கிடும் கன நீராக… ஹைட்ரஜன் ஆனான்.

அந்த மெய் ஞானியின் உணர்வின் ஆற்றலை நாம் விண்ணிலிருந்து எடுத்து நம் வாழ்க்கையில் வரும் தீமைகளை எல்லாம் அடக்கச் செய்ய வேண்டும் என்பது தான் விநாயகர் தத்துவம்.

இன்றைய வாழ்க்கையில் நல்லதை எண்ணுகின்றோம்… பிறர்பால் இரக்கமும் படுகிறோம். ஆனால் அவர்கள் உடலில் விளைந்த துன்பமும் துயரமும் குறைகளும் நமக்குள் வந்து அந்த உணர்வின் சக்தியாக நமக்குள் மாறித் தீய வினைகளாக விளைந்து விடுகிறது.

அதை நீக்க வேண்டுமல்லவா…!

ஆகவே விநாயகரைப் பார்த்ததும் நாம் விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா என்று உடலுக்குள் அந்த ஆற்றலைச் செலுத்த வேண்டும்.

கருவில் இருக்கும் குழந்தைக்குக் கண்ணன் உபதேசித்தான் என்று காவியங்கள் உண்டு. அதாவது நாம் சுவாசித்தது ஒவ்வொன்றுமே உடலுக்குள் கருவாகி அணுவாக விளைகின்றது.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி
1.அந்த நினைவலைகளைச் சிறுகச் சிறுகக் கூட்டிப் பின்
2.மொத்தமாக உடல் முழுவதும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற நினைவைக் கூட்டி
3.உடலில் உருவாகிக் கொண்டிருக்கும் அணுக்களுக்குள் எல்லாம்
4.கண்ணின் நினைவு கொண்டு அந்த ஞானியின் நினைவலைகளை இங்கே உபதேசிக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் ஒளியின் வீரியத் தன்மை கொண்டு அது நமக்குள் ஓங்கி வளரும். தீமையிலிருந்து “நம்மைக் காக்கும் சக்தியாக வளரும்…”

பலவாக ஓடும் எண்ணத்தை ஒன்றாக்கும் வழி – ஈஸ்வரபட்டர்

பலவாக ஓடும் எண்ணத்தை ஒன்றாக்கும் வழி – ஈஸ்வரபட்டர்

 

மனித எண்ண ஓட்டங்கள்… உணர்வின் எண்ணம் கொண்டும் எண்ணத்தின் உணர்வு கொண்டும் பலவாக ஓடிக் கொண்டே உள்ளது. உறக்கத் தன்மையிலும் மயக்க நிலையிலும் கூட ஓடிக் கொண்டுள்ளது.

உணர்வின் அவயங்கள் சோர்வுபட்டு உறங்கும் தருவாயில்
1.எண்ணத்தின் அலை உறக்க நிலையில் சரீரமுடன் சுவாசத்தில் மோதப் பெறும் காற்றலையின் அலைத் தன்மை
2.சுவாசம் எடுத்துக் கவன நரம்பில் மோதும் பொழுது
3.காற்றலையில் ஏற்கனவே பதிவு பெற்ற அலைத் தொடர்பின் தொடர் தன்மை
4.உடல் கூறின் அமில சமைப்பு வலுத் தன்மையின் ஈர்ப்புடன் மோதும் பொழுது உணர்வுடன் ஒத்த தன்மையும் மோதுகின்றது.

இந்த உடலிலிருந்து வெளிக் கக்கும் அமிலத் தொடர்பின் ஈர்ப்புக்கு வரும்… “காற்றலையின் சந்திப்பும்” இச்சுவாசத்தில் மோதும் பொழுது… உறக்க நிலையில் காணப்படும் கனவுகள்… வாழ்க்கைத் தொடரில் விழிப்புடன் உள்ள செயலுக்கொத்த தொடர் போன்றே நம் எண்ணத்தைச் செலுத்தாமலே காணுகின்றோம்.

இப்படிக் காணக்கூடிய கனவின் செயலும்… இஜ்ஜீவ காந்தச் சரீரத் தொடருடன் எடுக்கப்படும் அலையினால் “வலுவான சில கனவுகள்” தம் எண்ணத்தை உருவாக்கும் ஆத்மாவிலும் பதிவாகி விடுகின்றது.

நினைவின் உணர்வுடன் உள்ள பொழுது… மீண்டும் கனவில் நடந்த அந்த நிலை நம் நினைவிற்கு வருகின்றது.

ஆத்மாவின் “பதிவு” தான் எண்ணத்தின் ஓட்டம்…!

ஆத்ம இயக்கம் இச்சரீர வாழ்க்கையில் வலுக் கொள்ளும் தன்மையும்… சரீரமுடன் கூடிய ஜீவ காந்த மின் அலையின் வலுக் கொண்டுதான்… ஆத்மாவை மீண்டும் வலுவாக்க முடியும்.

முந்தைய பாடங்களில் சொன்னபடி உயிர் ஆத்மா உடல் பிம்ப சரீரத்தின் தொடரை உணர்த்தியுள்ள முறையில் “ஆத்மாவின் செயலை” உணர்ந்திருப்பீர்.

இச்சரீரக் கூறில் சேர்க்கப்பட்ட சுவையின் அமிலத்தின் வார்ப்பு ஜீவ சரீரச் செயலுக்கொப்ப…
1.ஆத்மாவின் செயல் எண்ண அலையின் மோதலைக் கொண்டு
2.எண்ணத்தின் உணர்வும்… உணர்வின் எண்ணமும்… செயல் கொள்கின்றன.
3.பலவாக ஓடும் எண்ணத்தின் ஆத்மாவின் பதிவில் உள் மனம் வெளி மனம் என்று
4.இப்படி ஒரே சமயத்தில் பல நினைவு கொண்ட செயலில் எண்ண ஓட்டம் செயல் கொள்கின்றது.

பூமி சமைப்பில் சரீரத் தொடர் வாழ்க்கையில் சாதாரணத் தொடர்பு கொண்டு நாம் பெற்ற ஒலித் தன்மைக்குகந்த எண்ணத்தைச் செயல்படுத்தி வாழும் போது என்ன நடக்கின்றது…?

நாம் பரிணாம வளர்ச்சியில் நாம் பெற்று வளர்ந்து வந்த வளர்ச்சிக்கு உரம் செலுத்தாமல்… பெற்ற வலுவைச் சரீர எண்ண ஓட்ட சமுதாய எண்ணப் பிடியுடன் செயல்படுத்தும் உணர்வினால்…
1.மீண்டும் மீண்டும் இப்பிடிப்பலையில் சிக்கி
2.வலுப் பெற்ற ஆத்ம ஒளியை மங்கவிடும் இழி நிலை தான் ஏற்படும்.

ஆகவே வாழ்க்கையில் உணர்வின் எண்ணத்தில் மோதப்படும் குண நிலையில் நாம் சிக்கக் கூடாது. மேலும் எண்ணத்தில் செயல்படும் பல நிலை கொண்ட நினைவு எண்ண ஓட்டத்திலும் சிக்கிடக் கூடாது.

சந்தர்ப்பத்தில் எண்ணத்தின் உணர்வுகள் ஈர்க்கப்பட்டு சஞ்சலப்படும் காலங்களில் எல்லாம்
1.நம் உணர்வின் எண்ணத்தை வலுவாக்கும் முறையான
2.உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு மின் காந்த ஒளி சக்தியின் உரத்தை
3.அந்த மாமகரிஷிகளின் ஒளி காந்த சக்தியை நுகர்ந்து.. சுவாசித்து.. உடலுக்குள் செலுத்தும் பொழுது
4.பலவாக ஓடும் எண்ணத்தை ஒன்றாக்கலாம்.

ஒளி நிலை பெற்ற அந்த ஒளி சக்தியை… இச்சரீர உணர்வில் எடுக்கும் பொழுது நம் எண்ணத்தின் வலுக் கூடும். ஆத்மாவின் வலுவையும் வலுவாக்க முடியும். மெய் ஞானத்தில் தொடர் வளர்ச்சி காண முடியும்…!

அடுத்தவரின் கஷ்டத்தைப் பரிவுடன் கேட்போர் அனைவரும் வேதனையைத் தான் விலைக்கு வாங்குகிறார்கள்

அடுத்தவரின் கஷ்டத்தைப் பரிவுடன் கேட்போர் அனைவரும் வேதனையைத் தான் விலைக்கு வாங்குகிறார்கள்

 

மனிதர்களாக இருக்கக்கூடிய நாம் அடுத்தவருக்கு எல்லா உதவிகளையும் செய்வோம். உதவி செய்த பின்… கடைசியில்
1.இந்தப் பாவிப் பயலுக்கு இப்படியெல்லாம் உதவி செய்தேனே…
2.எனக்கு அவன் ஒன்றும் செய்யவில்லையே…! என்று வேதனைப்பட்டுக் கொண்டிருப்போம்.

வேதனைப்பட்டவர்களுக்கு எல்லாம் முதலில் உதவி செய்திருப்போம். கஷ்டங்களை எல்லாம் பரிவுடன் கேட்டு அவர்களிடம் இருக்கும் வேதனைகளை எல்லாம் விலைக்கு வாங்கி விடுவோம்.

வேதனையாகி நோயான பின் என்ன சொல்வோம்…?

நான் இங்கே இவ்வளவு உதவி செய்தேனே… அங்கே அவர்களுக்கு அந்த உதவி செய்தேனே…! எனக்கு இப்படி வந்துவிட்டதே…! என்ற இந்தத் துன்பப்படும் உணர்வுதான் மீண்டும் மீண்டும் வரும்.

காரணம்… உதவி செய்த பின் நாம் நினைத்தவுடன் மற்றவர்கள் வரவேண்டும் என்று எதிர்பார்ப்போம். ஆனால் அவர்கள் ஏதாவது ஜோலியாகச் செல்வார்கள்.

அன்றைக்கு நான் எப்படி எல்லாம் உதவி செய்தேன்…! இன்று நான் கூப்பிடுகிறேன்… அவர்கள் வரவில்லையே…! என்று அவர்கள் மீதே எண்ணமே இருக்கும்.

1.உதவி செய்தேன் வரவில்லையே… உதவி செய்தேன் வரவில்லையே… என்று
2.பிறரின் உணர்வைத் தான் எண்ணி வேதனையை இங்கே வளர்த்துக் கொண்டிருப்போம்.

அவர்கள் உணர்வு பூராம் இந்த உடலில் சேர்த்து நோயாகி இறந்தபின் எங்கே செல்வோம்…?

நான் அவனுக்கு உதவி தான் செய்தேன். ஆனால் அவனோ எனக்குப் பல தொல்லைகளைக் கொடுத்தான் பாவி…! என்று எண்ணி வேதனையாகி நோயாக மாறி இந்த உடலை விட்டுப் போன பிற்பாடு யாருக்கு உதவி செய்தோமோ அந்த உடலுக்குள்ளே தான் போவோம்.

இங்கே வேதனைப்பட்டு எரிச்சல் கொண்டு வெளியேறிய உயிரான்மா அந்த உடலுக்குள் போய் மனிதனாகவும் பிறப்பதில்லை.
1.அங்கே சென்று வேதனையை மீண்டும் உருவாக்கி நோயாக மாற்றி
2.அவனை வீழ்த்தத்தான் செய்யும்… குழந்தையாகப் பிறப்பதில்லை.

அந்த உடலிலும் வேதனையை அதிகமாக வளர்த்துக் கொண்டபின் உயிரான்மாவில் விஷம் அதிகமாகி விடுகின்றது.

பாலில் விஷத்தைக் கொஞ்சம் போட்டால் குடித்தால் மயக்கம் வரும். அதிகமான விஷத்தைப் போட்டு விட்டால் சுத்தமாகவே நினைவை இழக்கச் செய்துவிடும்

அது போல் கடைசியில் மனிதனுடைய நினைவுகள் எல்லாம் இழந்த பிற்பாடு எந்த அளவிற்கு விஷத்தை அதிகமாகச் சேர்த்துக் கொண்டோமோ அதற்குத்தக்க விஷம் கொண்ட உயிரினமாகப் பிறக்கச் செய்யும் நம் உயிர்.

புழுவிலிருந்து மிருகமாக வரும் வரையிலும் அவைகளின் உடலில் விஷம் அதிகமாக இருக்கும். பூனை விஷமான உயிரினத்தை அடித்துச் சாப்பிடுகிறது. அது போல் மற்ற உயிரினங்களும் விஷத்தைத் தாராளமாக உட்கொள்கிறது. அந்த உடலுக்குள் ஒன்றும் செய்வதில்லை.

ஆனால் சாதாரண ஒரு பல்லியின் எச்சம் நம் மீது பட்டாலே உடலில் கொப்புளம் ஆகிவிடும். விஷம் பட்டவுடனே நம் உடலில் இத்தனை நிலையும் ஏற்படுகிறது.

நாம் விஷத்தை நீக்கும் உடலாகப் பெற்றிருந்தாலும் விஷமான உணர்வு நமக்குள் கலந்து விட்டால் நம்மைச் செயலற்றதாக ஆக்கி விடுகிறது.

ஆனால் மற்ற உயிரினங்கள் விஷத்தைத் தனக்கு உணவாக ஏற்றுக் கொண்டால் உடலிலே அது வலுவின் தன்மையாகக் கொண்டு வருகின்றது. அந்த விஷம் அதை ஒன்றும் செய்வதில்லை

புழுவிலிருந்து மற்ற எல்லா உயிரினங்களுக்கும் விஷம் உண்டு. தேளுக்கு ஒரு விஷம் பாம்புக்கு ஒரு விஷம் கட்டுவிரியனுக்கு ஒரு விஷம் புலிக்கு ஒரு விஷம் பூனைக்கு ஒரு விஷம் நாய்க்கு ஒரு விஷம் இப்படி எல்லாவற்றிலும் விஷத்தின் வலிமை உண்டு.

ஆனால் மனிதன் எடுத்துக் கொண்ட குணம் அடிக்கடி யாரிடமாவது சள்… சள்… சள்… என்று பேசும் நிலைகள் வந்து விட்டால்
1.“என்னை இப்படிச் செய்து கொண்டே இருக்கின்றான்…” என்று சள்..சள்…சள்… என்று சொல்லச் சொல்ல
2.யாரைக் கண்டாலும் வெறுத்துப் பேசச் செய்யும்.

இப்படிப் பேசி வெறுக்கும் நிலைகள் வளர்ந்தால் அந்த நஞ்சின் தன்மை உடலிலே விளைந்த பின் உடலை விட்டுச் சென்றபின் எங்கே செல்வோம்…?

1.நாயிடம் இருக்கும் விஷமும் இந்த உயிராத்மாவில் வளர்த்துக் கொண்டே விஷமும் ஒன்றாகி
2.உயிர் நம்மை அடுத்து நாயாகப் பிறக்க வைத்துவிடும்.

இது எல்லாம் இயற்கையின் நியதிகள். நாம் நினைக்கின்றோம் ஒன்றுமே செய்யவில்லை என்று…!

ஆனால் உயிரின் வேலை… நாம் சுவாசித்து எடுத்ததை எல்லாம் உடலாக உருவாக்கி உடலில் விளைந்த சத்தை உயிராத்மாவாக மாற்றி அதிலே எது வலுவோ அதற்குத் தக்க அடுத்த உடலுக்குள் அழைத்துச் சென்று அந்தந்த உடலாக மாற்றிவிடும்.

மனிதனாக இன்று இருக்கும் நாம் அடுத்து எங்கே செல்ல வேண்டும்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

உயிராத்மாவின் பரிமாணத்தைப் பெருக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

உயிராத்மாவின் பரிமாணத்தைப் பெருக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

அண்டத்தின் தன்மையை நாம் மனிதர்கள் அறிய முடியும். ஆனால் அண்ட கோளங்கள் நம்மை அறியாது.

உணர்வின் எண்ணத்தைக் கொண்டு மனிதனின் பகுத்தறிவு உணரும் பக்குவத்தில்…
1.ஆதிசக்தியின் படைப்பான உயிர் காந்தத்தில் வளர்க்கப்பட்ட
2.ஆத்ம சரீர உயிர் அணுக்களின் வலுவைக் கொண்டுதான்…
3.சரீர ஆத்ம உயிரின் வலுவின் பரிமாணத்தை
4.மங்காச் செயல் நிலைக்குச் செயல் கொள்ள முடியும்

அதாவது எண்ணத்தின் உணர்வைச் சமம் கொண்டு நாமெடுக்கும் சுவாச உணர்வின் ஜெப அலையில் சேர்க்கப்படும் மகரிஷிகளின் மின் காந்த அலையின் தொடர்பினால் “அது சாத்தியமாகும்…”

தாயின் கருவில் சிசுவாக இருக்கும் பொழுது அங்கங்கள் உருப்பெறும் காலத்தில் அதற்குகந்த உஷ்ண அலையின் இயக்க உருவக அமைப்பாய் நுரையீரலும் இதயமும் சதையும் மயிர்க்கால்களும் நகமும் பல்லும் உருவாக ஊன் தன்மையின் அலை சக்தியில் ஆவியாகி எலும்பின் வளர்ச்சியைக் கொண்டு உருப்பெற்று அங்கத்தின் கூட்டு இயக்கங்களாய் உயிர் அணுக்களின் வளர்ச்சி பெற்று பிறப்பு நிலை பெற்றோம் அல்லவா…!

அதைப் போன்று… சரீர இயக்கத்தில் மனித உணர்வின் எண்ண வளர்ச்சியில்… ஆத்ம உயிர் இயக்கத்தின் வலு நிலை கூடக் கூட… அங்கங்களின் உயிர் அணுக்கள் வீரியத் தன்மை பரிமாணம் பெறும்.

1.உடலின் பசிக்கு உணவும் உணர்வின் உந்தலுக்குகந்த செயலும் கொள்ளும் தன்மை தான் மனிதச் சரீர இயக்கம் உள்ளது.
2.பல கோடிச் சரீரங்களில் இந்த உயிராத்மா பெற்ற வலுத் தொடரை
3.சரீர வாழ்க்கைத் தொடர்பு காலங்களில் சேர்க்கப்படும் சலிப்பு சஞ்சலத் தொடர்புடன் சரீர வாழ்க்கை முடிவுற்று
4.உயிராத்மாவின் ஒளியைச் சரீர இயக்கமுடன் முடிவுற்று மங்கச் செய்யாமல்
5.ஆதியிலே எந்த ஒலி கொண்டு ஒளி பெற்று ஆத்ம உயிரின் உயிர் அணுக்கள் வளர்ந்து…
6.ஒலி… ஒளி… சுவை… உணர்வு… மணம்… குணம்… ஆகியவற்றை இச்சரீரம் பெற்றதோ
7.அத்தன்மையில் வளர்ச்சியின் வலுத் தொடரை மனித வாழ்க்கையில்
8.அடுத்த நிலைக்கு உணர்வின் எண்ணத்தை ஜெபம் கொண்டு வலுவாக்கினால்
9.மனிதத் தன்மையின் சித்துத் தன்மையைச் செயலில் ஒவ்வொருவரும் காண முடியும்.

சாதாரண வாழ்க்கை நிலையில் கிடைக்கும் ஞான வளர்ச்சி… ஆரோக்கிய நிலை… அங்கங்களின் செயல் தன்மை… இவற்றின் நிலையைக் காட்டிலும்
1.ஜெப சக்தியின் உயிர் அணுவின் வீரிய வளர்ச்சியின் செயலைக் கொண்டு – “ஒளி பாய்ச்சி”
2.நினைத்ததை மனிதன் செயலாக்கக் கூடிய வலு வீரியத் தன்மை செயல் கொள்கின்றது.

ஆங்காங்கு உள்ள சிற்றாறுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து பெரும் கடலாகச் செயல்படுகிறது. அதைப் போன்று நம் செயலின் தன்மையில் வேகத்தைக் கூட்டும் பொழுது “துரிதத் தன்மை” ஒவ்வொன்றிலும் ஏற்படுகிரது.

ஆக… இச்சரீர இயக்கத்தின் உயிர் அணுக்களை வீரியப்படுத்த வேண்டும் என்றால்
1.ஒலி நாதத்தைக் கொண்டு ஒளி பாய்ச்சி
2.எண்ணத்தின் கூர்மையால் உயிரணுக்கள் ஒவ்வொன்றையும் வீரியப்படுத்தி
3.“உயிரின் பரிமாணத்தின் வளர்ச்சி கொள்ள…” எண்ணத்தால் எடுக்கும் தியானத்தைக் கொண்டு
4.மங்காத ஒளித் தன்மையைப் பெற முடியும்.