ராம ராஜ்யம்

ராம ராஜ்யம்

 

ஒருவன் குற்றம் செய்தால் அவனைத் தண்டிக்கின்றோம். இது அரசர்கள் காட்டிய வழி. ஒருவன் ஒரு தவறு செய்கின்றான் அல்லது பிறருக்கு இம்சைகளைச் செய்கிறான் என்றால் அவனுக்கு இம்சை தரக்கூடிய தண்டனைகளையே தந்தனர் அன்றைய அரசர்கள்.

ஆனால் மகரிஷிகளோ…
1.ஒருவர் உடலில் அறியாது புகுந்த தீமை விளைவிக்கக் கூடிய உணர்வினை நீக்கி
2.உயர்ந்த கருத்தினை அவரினுள் செலுத்தி அவர்தம் உடலில் வரும் தீமையினை அடக்கி அதற்குத் தண்டனை அளித்து
3.இணைந்து செயல்படும் உணர்வினை வளர்த்துக் கொண்டார்கள்.

அதையே மக்களுக்கு உணர்த்தினார்கள்.

மகாத்மா காந்தி நம்மை இயக்கும் தீய உணர்வுகளில் இருந்து நாம் விடுபட வேண்டும் என்று சொன்னார். அதே சமயம் “ஆங்கிலேயர்களும் நம் சகோதரர்களே” என்று சொல்லி அவர்களிடம் இருக்கும் “மற்றவர்களை அடிமைப்படுத்தும் உணர்வைத்தான் விலக்க வேண்டும்” என்று பாடுபட்டார்.

1.உலக மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து
2.அந்த உடலில் இருக்கும் நல்ல உணர்வின் தன்மையை
3.சகோதர உணர்வுடன் பாவிக்க வேண்டும் என்பதைத்தான் “ராம ராஜ்யம்” என்றார்.

நாம் எடுக்கும் உயர்ந்த குணங்கள் எதுவோ அது மகிழ்ந்திடும் நிலையாக நமது செயல் இருக்கும் பொழுது… நம் உடலில் இருக்கும் சலிப்பு, சங்கடம், கோபம், குரோதம் போன்ற உணர்வுகள் அனைத்தையும் நீக்கி மகிழ்ச்சி என்ற உணர்வுகளில் நாம் எண்ணும் பொழுது நமக்குள் அது ஒருக்கிணைந்து நம்மை மகிழ்விக்கச் செய்கின்றது.

இது தான் ராம ராஜ்யம்.

வான்மீகி மகரிஷி கொடுத்தருளிய இராமாயணக் காவியத்தின் உண்மையின் தன்மை கொண்டுதான் காந்திஜி தமது உயிர் உடலை விட்டுப் பிரியும் கடைசி நொடி வரையிலும் வாழ்ந்தார்.

1.எல்லோரையும்… எல்லாவற்றையும் காக்கும் பல உணர்வுகளுடனும் பிறரைத் துன்புறுத்தா நிலைகளிலும்
2.அஹிம்சைத் தத்துவத்தைக் கடைப்பிடித்துத் தென்னப்பிரிக்காவில் வாழும் மக்களுக்கு நீதி பெற்றுத் தந்தபின்
3.இந்திய நாட்டைக் காக்க வேண்டும் என்ற ஆசை காந்திஜிக்கு வந்தது.

இந்திய மக்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபட வேண்டுமென்றால் பல உயிர்கள் பலியாக வேண்டியிருக்கின்றது என்ற உணர்வினை காந்திஜி உணர்ந்து… சாந்தத்துடன் ஞானத்துடன் விவேகத்துடன் மக்களை நல்வழிப்படுத்தினார்.

அதாவது… அன்னிய நாட்டிடமிருந்து நமது மகரிஷிகள் வெளிப்படுத்திய உணர்வினை மீட்டு அதை மக்களுக்குக் கிடைக்கச் செய்து மக்களை நல்வழியில் வாழச் செய்ய வேண்டுமென்ற முடிவை காந்திஜி தமக்குள் எடுத்து இந்திய மக்களைப் பண்படும்படி செய்தார்.

1.காந்திஜி “உலக மக்கள் அனைவரும் நம் சகோதரர்” என்பதை தமது எண்ணம் சொல் செயலில் வைத்து
2.இந்திய மக்கள் அனைவரும் தங்களிடமுள்ள பகைமை உணர்வுகளை நீக்கி
3.அனைவரையும் அரவணைக்கும் தன்மை பெற வேண்டும் என்று எண்ணி
4.இந்திய மக்களைச் சீர்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மன உறுதி கொண்டு செயல்படுத்தினார்.

இதனால் காந்திஜி உலக அரங்கில் அனைவருடைய உள்ளத்திலும் இடம் பிடித்தார்.

காந்திஜி “எதிரிகளையும்” கடவுளாக மதித்தார். அவர் தனக்குள் பகைமை உணர்வுகள் இயக்காதபடி தடுத்து… சாந்தம் ஞானம் விவேகம் எனும் நல்லுணர்வுகளைத் தமது உடலுக்குள் சுதந்திரமாக்கினார்.

ஞானத்தின் வழி கொண்டு நல் உணர்வுகளைத் தமக்குள் சுதந்திரமாக்கி அனைவரையும் அன்புடன் அரவணைக்கும் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வினைக் காந்திஜி தனக்குள் ஓங்கி வளரச் செய்தார்.

1.காந்திஜியின் உணர்வுகளை நாம் நுகர்ந்தோம் என்றால் உலகைக் காத்திடும் பேரருளை நாம் அனைவரும் பெறுவோம்.
2.காந்திஜியின் வழியில் சென்றோம் என்றால் நமது குடும்பத்தில் பகைமையை அகற்றி ஒன்றுபட்டு வாழும் தன்மை பெற முடியும்.

காந்திஜி மதங்கள் இனங்கள் என்ற பேதமில்லாது நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்றும் “சீதாராமா”என்றும் சொல்லத் தொடங்கினார்.

“சீதாராமா”என்று நாம் மகிழ்ச்சியான உணர்வை நுகர்ந்தால் நம்மிடம் மகிழ்ச்சியின் தன்மை வெளிப்படுகின்றது. மகிழ்ச்சியான சொல் வெளிப்படும் பொழுது கேட்போர் உணர்வுகளிலும் மகிழ்ச்சி அடைகின்றது.

இதைத் தான், காந்திஜி “ஹரே… ராமா…” என்று அடிக்கடி சொன்னார்.
1.“பிறரைத் துன்புறுத்தி வாழ்வதைக் காட்டிலும்
2.அனைவரையும் இன்புறச் செய்து வாழ வேண்டும்” என்ற உணர்வை ஓங்கி வளர்த்தவர் காந்திஜி.

எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உணர்வை நாம் எடுத்தால் அதன் உணர்ச்சிகள் நமது உடலுக்குள்ளும் நல்லதாகச் செய்யும்… மக்களுக்கும் நல்லது செய்யும் என்று காந்திஜி எண்ணினார்.

அதன் வழி அவருடைய சொல்லும் அவருடைய செயலும் ஒன்றாக இருந்தது.

மக்கள் ஏகோபித்த நிலையில் தவறு செய்யும் நிலை வரும் பொழுது காந்திஜி உண்ணாவிரதம் இருந்தார். காரணம் உண்ணாவிரதம் இருப்பதன் மூலம்
1.மக்களிடையே தம் மீதான பாசத்தை வரவைத்து
2.அதன் வழியில் மக்களுக்கு உண்மைகளைப் புரிய வைத்து
3.பிறருக்குத் தீங்கு செய்யாத நிலைகளையும்
4.தீண்டாமை என்ற நிலைகளை மறக்கச் செய்து அனைவரையும் அரவணைத்து வாழும் தன்மையும் பெற வேண்டும் என்ற
5.“உறுதி கொண்ட உணர்வை” மக்களுக்கு ஊட்டினார்.

நாம் ஒவ்வொரு ஞானியரையும் போற்றித் துதிக்கின்றோம்… காந்திஜியையும் போற்றித் துதிக்கின்றோம். ஆனால் அவர்கள் காட்டிய அற வழிகளை நமது வாழ்க்கையில் கடைபிடிப்பதில்லை.

ஒவ்வொரு காலத்திலும் மகான்கள் தோன்றுகின்றனர். ஆனால் மகான்கள் இருக்கும் வரை போற்றுகின்றோமே தவிர அவர்கள் மறைந்த பின் அவர்களைச் சுத்தமாக மறந்து விடுகின்றோம்.

இன்று மனிதர் ஒவ்வொருவரும் தனக்குச் செல்வத்தைத் தேட எத்தனையோ வழிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றனர். செல்வத்தைச் சேர்த்தபின்… அவர்களின் குடும்பத்திற்குள் செல்வத்திற்காகப் போரிட்டுக் குடும்பத்திற்குள் ஒற்றுமையற்ற நிலை உருவாகிச் செல்வத்தைச் சீரழிக்கச் செய்யக்கூடிய நிலையே நடக்கின்றது.

இது போன்ற நிலை பெரிய செல்வந்தர்கள் வீடுகளில் இப்பொழுதும் இருப்பதைக் காணலாம். இப்போர் முறைகளினால் செல்வம் கரைகின்றது. அந்த உணர்வுகள் வளர்கின்றன. அன்பு பண்பு என்ற நிலைகள் மறைகின்றன.

இது போன்ற நிலைகள் உலகம் முழுவதற்கும் இருக்கின்றது.

இவையெல்லாம் யாம் ஏன் சொல்கிறோம் என்றால் நமது நூற்றாண்டில் வாழ்ந்த காந்திஜி ஒரு மகான் என்பதை விட “ஒரு ரிஷி” என்றே சொல்லலாம்.

உலக மக்கள் அனைவரும் தெளிந்த நிலைகள் கொண்டு சகோதர தத்துவத்துடன் வாழ வேண்டுமென்று ஒரே நிலையில் இருந்தவர் காந்திஜி.

காந்திஜியே ஒரு சமயம் “அன்னியனே வெளியேறு…!” என்று சொல்லும் தன்மை வந்து விட்டது. சாந்தமும் விவேகமும் காந்திஜி கொண்டிருந்தாலும் அன்னியருடைய ஆட்சி மிகவும் கடுமையான நிலைகளில் வரும் பொழுது காந்திஜி எல்லா மக்களையும் ஒன்று திரட்டி, “அன்னியனே வெளியேறு” என்ற கோஷத்தை எழுப்பினார்.

அன்னியன் என்றால்
1.தீமை செய்வோர் தீமை செய்யும் சக்திகளை எல்லாம் வெளியேற்றி
2.அன்புடன் அரவணைக்கும் நிலையினை நமது நாட்டில் உருவாக்க வேண்டும் என்று காந்திஜி கூறினார்.

காந்திஜி யாரையும் அன்னியமாக எண்ணவில்லை. மற்றவரை யார் பகைமை உணர்வுடன் பார்க்கின்றனரோ அவர்கள் தான் அன்னியர் ஆகின்றனர். இந்த அன்னியத்தில் இருந்துதான் விடுபட வேண்டும் என்று “அன்னியர்கள் வெளியேற வேண்டும்” என்று சொன்னார்.

நாம் அனைவரும் காந்திஜியின் கொள்கைகளை நமது வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். நாட்டைக் காக்கும் பண்புகள் நமக்குள் வளர வேண்டும்.

நாட்டில் அன்பு கலந்த உணர்வுகள் வளர வேண்டும் என்ற அருள் உணர்வுகளைத் தங்களிடத்தில் வளர்க்கும் அன்பர்கள் அனைவரும்
1.மகாத்மா காந்திஜியின் அருள் சக்தி பெற்று… அனைவரையும் அரவணைத்து வாழும் அருள் சக்தி பெற்று
2.இந்த வாழ்க்கையில் சாந்தத்துடன் ஞானத்துடன் விவேகத்துடன் வாழ்ந்து
3.தெளிந்த ஞானமும் மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தி பெற்றுப் பேரானந்த பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.

தெய்வச் செயல்

தெய்வச் செயல்

 

தீமையானவற்றை நாம் காணும் பட்சத்தில்
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கும் பொழுது
2.நம்மிடத்தில் உணரப்பட்ட தீமை துடைக்கப்படுகின்றது.

இதைத் தான் “தெய்வச் செயல்” என்பது.

மேலும் யார் நமக்குத் தீமை செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றாரோ அவரிடத்தில் “நல்ல உணர்வுகள் வளர வேண்டும்” என்று எண்ணி அதனின் உணர்வை நாம் பரப்பும் பொழுது அங்கே கடும் சொல் வராது,

அது கனிந்திடும் நிலையாகக் கேட்போரின் உணர்வில் இனிமையானதாகப் பாய்ந்து அவரிடத்தில் இருக்கும் தவறை மாற்றி அவர் நம் மீது கொண்ட பகைமையை நீக்கி நட்பினை வளர்க்கும்.

பிறவிப் பெருங்கடல் நீந்தி தன் ஞானத்தால் பிறவி இல்லாப் பெரு நிலையை அடைந்து உயிருடன் ஒன்றி ஒளிச்சரீரமாக இன்றும் விண்ணிலே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மகரிஷிகள்.

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் ஏக்கத்துடன்
2.நமது நினைவின் ஆற்றல் அடிக்கடி அவர்கள் பால் செல்லும் பொழுது
3.அவர்களிடம் நமது உயிரான்மா இணைந்து அங்கே சுழலும் சக்தியாக
4.”பிறவா நிலை” என்னும் நிலையை அடையச் செய்கின்றது.

அவ்வாறில்லாமல் நமக்குத் தீங்கு செய்பவரைப் பற்றியே நாம் எண்ணிக் கொண்டிருந்தால் இந்த உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிரான்மா இந்த உடலில் வாழ்ந்த காலத்தில் எவரைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தோமோ அவரின் உடலுக்குள் இந்த உயிரான்மாவை அழைத்துச் சென்றுவிடும்,

பின் அந்தத் தீங்கின் விளைவை அனுபவிக்கச் செய்து அதன் மூலம் அவரிடத்தில் விளைந்த உணர்வின் சத்தை இந்த உயிரான்மா கவர்ந்து அவரின் உயிரான்மாவையும் வீழ்த்தி இதுவும் வீழ்ந்து பிறிதொன்றைக் கொன்று புசிக்கும் உயிரினங்களின் ஈர்ப்பிற்குள் சிக்கி அதனின் சரீரத்தை இந்த உயிரான்மா பெறுகின்றது.

ஆகவே நாம் தேய்பிறை போன்று இல்லாது வளர்பிறையாக
1.மெய் ஞானத்தை வளர்க்கும் விதமாக மெய் ஞானிகளின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்து வாழ்வில் வரும் தீமைகளை ஒடுக்கி
2.விண்ணில் நிலைத்த ஒளி சரீரத்துடன் இருந்து வரும் மகா ஞானிகளின் ஈர்ப்பில் கலந்து நாமும் அந்த ஓளிச்சரீரமாக வாழ்வோம்

இதன் வழியில் கூட்டுத் தியானங்களில் ஏங்கித் தியானிக்கும் அனைத்து உயிராத்மாக்களுக்கும் எமது ஆசீர்வாதங்கள்.

போகர் பல சிலைகளை உருவாக்கினார்… ஒன்றல்ல…!

போகர் பல சிலைகளை உருவாக்கினார்… ஒன்றல்ல…!

 

போகர் முருகன் சிலையைச் செய்திருக்கின்றார்.
1.மற்ற தாவர இனச் சத்துக்களை எடுத்துக் காயகல்பமாக உருவாக்கி… தான் அந்தக் கூட்டிலேயே இருந்து…
2.தான் சக்தி பெறும் வரையிலும் வேறு ஒரு உடலுக்குள் மாறவில்லை.
3.வெளியில் செல்வது மீண்டும் இந்தக் கூட்டிற்குள் வருவது மீண்டும் தான் சக்தியைப் பெருக்குவது.

இப்படித்தான் விண்ணினுடைய ஆற்றலை 27 நட்சத்திரங்களின் சக்தியையும் நவக் கோள்களின் சக்தியையும் எல்லாவற்றையும் இணைத்துத் தான் முருகன் சிலையை வடித்தது. அதிலே பாதரசங்களைச் சேர்க்கப்பட்டு முருகன் சிலையை வடித்து முழுமையாக்கப்பட்டது.

உணர்வின் தன்மையை ஒளியாக எப்படி மாற்றுவது…? என்பதற்குத் தான் சிலையை உருவாக்கி
1.அதே ஆவியை அவர் சுவாசித்து பகைமை உணர்வுகளை மாற்றி அதே ஒளியை எடுத்து அவர் சுவாசித்தார்.
2.குகைகள் இருக்கப்படும் பொழுது இந்தச் சிலையை வைத்திருக்கின்றார்.
3.அதன் மேல் சொட்டு சொட்டாக தண்ணீர் விழும்படி செய்து அந்த உணர்வின் சத்தை நுகர்வதும்
4.தனக்குள் அந்த அணுக்களின் தன்மை மாற்றுவதும் “இப்படிப் பல சிலைகள் உண்டு…”

அதே போல் சிலையை மக்களுக்குச் செய்யப்பட்டு மனிதனுடைய உணர்வுகளை மாற்றுவதற்கும் அவன் நினைவு வருவதற்கும் செய்தார் போகர். அவர் உருவாக்கிய முருகன் சிலை மீது அன்று பாத்திரத்தை வைத்திருப்பார்கள்… தண்ணீர் அது மேலே விழும்.

இப்பொழுது அது எல்லாம் இல்லை. கோயிலாகக் கட்டிய பின் அது எல்லாம் இல்லை. கோவில் கட்டுவதற்கு முன் வெறும் சிலை தான் இருந்தது.

பாத்திரத்திலிருந்து சிலை மீது தண்ணீர் சொட்டு சொட்டாக விழுந்து கொண்டே இருக்கும்.
1.நெகட்டிவ் பாசிட்டிவ் அதிலிருந்து வரக்கூடிய சத்து ஆவியாக மாறும்.
2.அதை நாம் நுகர்ந்து எடுக்கப்படும் பொழுது நமக்குள் இருக்கும் விஷத்தன்மைகளைப் போக்கும்.

இப்படித்தான் காயகல்பமாக அவர் உருவாக்கப்பட்டு அந்த உணர்வின் சக்திகளைத் தனக்குள் சேர்த்து நட்சத்திர மண்டலங்களை எண்ணி ஒளியின் சரீரமாகப் பெற்றது.

இன்னொரு உடலுக்குள் செல்லாதபடி அந்த உடலில் இருந்து சமாளிக்க வேண்டும் என்று செயல்படுத்தியவன் போகன். அகஸ்தியன் தன் உணர்வை எடுத்து உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக முதன் முதலில் விண் சென்றவன் துருவன் துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமாக ஆனது.

நம் குருநாதரும் பல உடல் தாவி வந்தவர்தான்… கூடு விட்டு கூடு பாய்ந்தவர். அபிராமிபட்டர் ஈஸ்வரபட்டர் என்று இப்படி ஒரு ஐந்து ஆறு உடல்களை எடுத்து வந்தவர் தான்.

அதிலேயும் பைத்தியக்காரராகத்தான் இதிலேயும் அப்படித்தான் இருந்தார். ஆனால் “தன்னுடைய காரியம் எதுவோ…” அதை சாதித்துக் கொண்டே வந்தார்.

தன் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டால் என்ன செய்வது…? என்று உணர்ந்து கடைசி உடலாகச் சக்திகளை சேமித்த பிற்பாடுதான் ரகசியங்களை சொல்லி அதை எப்படி எடுக்க வேண்டும்…? என்று எம்மிடம் சொன்னார்.

தான் உடலை விட்டுச் சென்ற பிற்பாடு அது எப்படி ஒளிச் சரீரம் ஆக வேண்டும்…? என்று
1.அதற்குண்டான மார்க்கத்தைக் காட்டி
2.அந்த உந்து விசை கொண்டு விண் செலுத்தும் படிச் செய்தார்.

தீமை தரக்கூடிய அணுக்களை நன்மை செய்யும் அணுக்களாக மாற்ற வேண்டும்

தீமை தரக்கூடிய அணுக்களை நன்மை செய்யும் அணுக்களாக மாற்ற வேண்டும்

 

ஒருவன் தீமையைச் செய்கிறான் என்றால் அவனிடம் உள்ள தீமையின் உணர்வுகளை வீழ்த்துவதற்குப் பதில் தீமை செய்தவனின் உடலையே சாய்த்துவிடும் நிலை வருகிறது என்று தெளிவாகக் காண்பித்தருளினார் நமது குருநாதர்.

தீமை தரக்கூடியவைகளாக இருந்தாலும் மனிதன் அவைகளைத் தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளும் வல்லமை வாய்ந்தவன். இன்றைய விஞ்ஞானம் அதை நிரூபிக்கின்றது.

அதே போன்று தீமை செய்வோரின் உணர்வுகள் நமது உணர்வில் கலந்து விட்டால் அந்தத் தீமையை விளைவிக்கும் உணர்வுகள் நமக்குள் விளையாது தடுத்துச் சமப்படுத்தும் நிலை பெற வேண்டும்.

1.மகரிஷிகள் தம்மிடத்தில் தீமையின் உணர்வுகள் வந்து மோதும் பொழுது அவைகளைச் செயலற்றதாக்கித் தீமையின் உணர்வுகளை ஒடுக்கி
2.அவைகளுடைய செயலாக்கங்களை மாற்றித் தம்முள் நல்லுணர்வினை வலிமை மிக்கதாக மாற்றியவர்கள்.

அவர்களைப் போன்று நாம் நம்முள் தீமையின் உணர்வுகளை ஒடுக்குகின்ற பொழுது ஒருவன் நமக்கு எத்தகைய தீமைகளைச் செய்து கொண்டிருந்தாலும் அது நம் உடலுக்குள் தீமை விளைவிக்கும் அணுக்களை உருவாக்குவதில்லை.

மகரிஷிகளின் அருளுணர்வுகள் நமது உடலில் கலக்கப்படும் பொழுது
1.நமது உடலில் தீமைகளை உருவாக்கும் அணுக்கள் விளைந்திருப்பினும்
2.அவைகளை நமக்குள் நன்மை பயக்கும் அணுக்களாக மாற்றுகின்றன.

உதாரணமாக… உடலுக்கு ஆரோக்கியம் தரும் நல்ல மருந்துடன் சிறிது விஷத்தைக் கலக்கப்படும் பொழுது விஷம் நல்ல மருந்திற்கு ஊட்டச்சக்தியாக மாறுகின்றது.

எந்த மருந்தைச் சிறிது விஷத்துடன் கலந்து கொடுக்கின்றோமோ அந்த விஷம் ஊடுருவி இந்த நல்ல மருந்தின் தன்மையை உடலெங்கும் பரவச் செய்கின்றது.

நோய்வாய்ப்பட்ட மனிதனின் உடலில் மருந்தினைச் செலுத்தும் பொழுது மருந்துடன் கலந்துள்ள விஷம் மருந்தினை எடுத்துச் சென்று உடலில் உள்ள வேதனையை உருவாக்கும் உணர்வின் அணுக்களை உணவாக உட்கொண்டு தன் இனத்தை உருவாக்கும் தன்மையால் நல்ல மருந்தின் தன்மை அடர்த்தியாகி வேதனையை உருவாக்கும் அணுக்களை வளரவிடாமல் தடுக்கச் செய்கின்றது மருந்துடன் கலந்துள்ள விஷம்.

இதைப் போன்று ஞானிகள் காண்பித்த வழியில் அருள் ஞானியின் உணர்வை நம் எண்ணத்துடன் கலந்து கொண்டே வர வேண்டும். அதனால்
1.நாம் எத்தகைய தீமையின் உணர்வைக் கண்டறிந்தோமோ அதனுடன்
2.மகரிஷியின் ஆற்றல் மிக்க சக்தி நாம் பெற வேண்டும் எனும் உணர்வினை இணைத்து நம் உடலுக்குள் செலுத்தி விட்டால்
3.அருள் ஞானியின் உணர்வுகள் இந்த விஷமான நிலையை ஒடுக்கிவிட்டு நமக்குள் வலு கொண்ட நிலையாக மாறுகின்றது.

இந்த உண்மைகளை எமது குருநாதர் எமக்கு உணர்த்தி எம்முள் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து எமக்குள் இதனின் நினைவின் ஆற்றலை பதியச் செய்து “துருவ மகரிஷிகளின் ஆற்றலை நீ பருகு…” என்றார்.

யாம் காட்டினுள் இருந்த பொழுது பல உயிரினங்கள் தன் பசியைத் தணிப்பதற்காக மற்ற உயிரினங்களைத் துரத்துவதும் மற்றவைகள் அஞ்சி ஓடுவதும் சிக்கிக் கொண்டவைகள் ஓலமிடுவதும் போன்றவைகளைக் கண்டு யாம் அச்சப்படும் நிலை உண்டானது.

அவைகள் செய்த துயர நிலைகளால்
1.துயரத்தை உருவாக்கும் அணுக்கள் எமக்குள் எப்படி விளைகின்றது…? என்றும்
2.இதை உடனடியாக மாற்றுவதற்கு யாம் எவ்வாறு செயல்பட வேண்டும்…? என்றும் எமக்கு குருநாதர் உபதேசித்தார்.

மகரிஷிகள் தமக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வை உன்னிடத்தில் வளர்த்துக் கொண்டால் மற்றொன்றைக் கொன்று புசிக்கும் அந்த உயிரினங்கள் உன்னைப் பார்த்தாலும் உன்னுள் வளர்த்துக் கொண்ட உணர்வின் மணம் கண்டு அது அஞ்சி ஓடும்.

அச்சுறுத்தும் உணர்வுகள் உனக்குள் வந்தாலும் அதை அடக்கி ஒளியாக உனக்குள் மாற்றுகின்றாய்.

1.எதனின் உணர்வை உனக்குள் அடக்குகின்றாயோ அதனின் உணர்வுகள் உனக்குள் வலு பெறும் பொழுது
2.வெளிப்படும் நுண்ணிய அலைகளை நுகரும் ஆற்றல் மற்ற உயிரினங்களுக்கு உண்டு.
3.இதனை நுகரும் உயிரினம் இவன் நம்மை அடக்கி விடுவான் என்ற உணர்வு கொண்டு
4.அது அஞ்சி ஓடும்…! என்ற நிலைப்படுத்தி அதை நிதர்சனமாகக் காண்பித்தார் குருநாதர்.

ஆகவே “மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் ஈஸ்வரா…” என்று எண்ணி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

நமக்குள் இருக்கும் துன்புறுத்தும் உணர்வின் அணுக்களுடன் மகரிஷிகளின் அருள் சக்தியை இணைக்கப்படும் பொழுது அது நம்முள் தீமைகளைக் கவர்ந்திடும் நிலைகளை மாற்றி அருள் மகரிஷிகளின் இனங்களைக் கவர்ந்திடும் நிலை வருகின்றது.

இப்படி மகரிஷிகளின் அருளுணர்வுகளை நம்முள் இணைக்கப்படும் பொழுது நமக்குள் தீமைகளை அடக்கிடும் தன்மை வருகின்றது.
1.நம்முள் அஞ்சிடும் நிலை மாறுகின்றது.
2.தெளிந்த மனதின் தன்மை நம்மில் உருவாகின்றது.

நாம் தெய்வமாக ஆவதற்குத்தான் ஆலயங்களை அமைத்தார்கள் ஞானிகள்

நாம் தெய்வமாக ஆவதற்குத்தான் ஆலயங்களை அமைத்தார்கள் ஞானிகள்

 

முன் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக இந்த மனித உடல் பெறும் பொழுது
1.நாம் எதை எண்ணுகின்றோமோ அதை ஜீவனாக்கும் திறன் பெற்றது.
2.ஒவ்வொரு பொருளையும் தெரிந்துணர்ந்து செயல்படும் திறன் பெற்றது.
3.அதனால் தான் சரஹணபவா குகா கந்தா கடம்பா கார்த்திகேயா என்று சொல்வது.

மனிதனின் ஆறாவது அறிவு சரஹணபவா…! நாம் சாப்பிடும் ஆகாரத்தில் கலந்துள்ள நஞ்சை மலமாக மாற்றிவிட்டு ஆறாவது அறிவாக நம் உடலில் அந்த மணம் வருகின்றது.

இந்த ஆறாவது அறிவின் மணம் கொண்டு சரஹணபவா குகா கந்தா பல பொருள்களை எண்ணினாலும் கடம்பா அதை உருவாக்கி கார்த்திகேயா என்று சொல்லும் பொழுது தெரிந்துணர்ந்து செயல்படும் திறன் பெற்றவன்.

அருள் ஞானிகள் உணர்வை எண்ணி அதை நமக்குள் ஜீவன் செய்யப்படும் பொழுது ஓ… அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் ஜீவனாக்கி அதை ம்… என்று நம் உடலாக ஆக்கும்போது அது ஓம் நமச்சிவாய…!
1.எல்லாவற்றையும் அடக்கிய அந்த அருள் ஞானியின் உணர்வுகளை நமக்குள் கணங்களுக்கு அதிபதியாக்கி
2.நமக்குள் சிறுமை ஊட்டும் உணர்வின் தன்மையை அடிமைப்படுத்தி மெய் ஞானிகள் உணர்வை நமக்குள் அதிபதியாக்கி
3.இந்த வாழ்க்கையில் தீமை அகற்றிடும் உணர்வாக விளைய வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொன்னார்கள் ஞானிகள்.

குடும்பத்தில் அறியாது சலசலப்பு சஞ்சலமும் வெறுப்பு வேதனைகள் வந்தாலும் இதை அகற்றிட ஆலயத்தை அருள் ஞானிகள் காட்டினார்கள். அங்கே விண்ணை நோக்கி ஏங்கிவிட்டுக் கோவிலுக்குள் சென்ற பின் தீப ஆராதனை காட்டப்படும் பொழுது பொருள்கள் தெரிகின்றது.

பொருளறிந்து செயல்படும் இச்சக்தி நாங்கள் பெற வேண்டும் இந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும். இந்த உண்மையை உணர்த்திய அருள் மகரிஷிகளின் உணர்வை நாங்கள் பெற வேண்டும் மலரின் மணம் பெற வேண்டும். இவை அனைத்தும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்னைப் பார்ப்போருக்கு அந்த நறுமணங்கள் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அங்கே வைத்திருக்கும் கனியைப் பார்க்கும் பொழுது கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெற வேண்டும் என் சொல்லைக் கேட்போர் வாழ்விலே இனிமை பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

1.ஆலயத்திற்கு வருவோர் அனைவரும் இந்தத் தெய்வ குணம் பெற வேண்டும்
2.அவர் குடும்பம் நலம் பெற வேண்டும்… அந்தக் குடும்பங்கள் அனைத்தும் மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

தொழில் நடத்தினால் எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவருமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். தெய்வ குணங்களைப் பெற வேண்டும் வாடிக்கையாளர் குடும்பங்களில் எல்லா நலங்களும் பெற வேண்டும். எங்கள் பார்வை எல்லோரையும் நலமாக்க வேண்டும். என்னைப் பார்ப்போருக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

இப்படி எண்ணி… நம் உயிரான ஈசனால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தை இந்த ஆலயத்தில் இருக்கும் நல்ல குணங்களைத் தெய்வமாக மதித்து நடக்கும்படி தான் அன்று ஆலயங்களை அமைத்தார்கள் ஞானிகள்.

நம்மையறியாது நமக்குள் வரும் வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு கோபம் குரோதம் என்ற தீமையான உணர்வுகள் அழுக்காக உடலுக்குள் சென்று நல்ல குணங்களை மாசுபடச் செய்யும் நிலையில் இருந்து நம்மைத் தூய்மைப்படுத்த விநாயகர் தத்துவத்தைக் காட்டினார்கள்.

நற்குணங்களின் தன்மையை… நறுமணத்தின் உணர்வைத் தனக்குள் எடுத்து நம்மைப் பிறர் பார்க்கும் பொழுது இந்த நறுமணங்கள் அங்கே வர வேண்டும். என் சொல்லைக் கேட்கும் பொழுது அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட வேண்டும் என்ற இந்த எண்ணங்களைத் தோற்றுவிக்கும் இடம் தான் ஆலயம்.

அபிஷேகம் ஆராதனைகளை இன்று செய்கிறோம். செய்துவிட்டு நமக்குள் கொதிப்பையும் வேதனையையும் தான் எண்ணுகிறோம்.

நல்லதைச் செய்தேன் ஆனால் தீமையே செய்கின்றான்…! என் குழந்தை நன்றாக வர வேண்டும் என்று விரும்பி உன்னைத்தான் வணங்கினேன். ஆனால் அவன் தவறு செய்கின்றானே எதிர்த்து பேசுகின்றானே…! என்று வேதனைப்பட்டு
1.அந்தத் தெய்வம் தான் செய்யும் என்று நாம் நம்புகின்றோம்.
2.ஆனால் அந்தத் தெய்வ குணத்தை நமக்குள் எடுத்தால் அந்த எண்ணம்
3.நம் செயலின் தன்மை அந்தத் தெய்வத்தின் தன்மையாகச் சொல்லால் இயக்கும்.
4.நாம் எண்ணிய தெய்வ குணத்தின் உணர்வுகள் நமக்குள் அந்தச் சக்தியாக மலரும்.
5.நாம் அந்தத் தெய்வமாக ஆவதற்குத் தான் ஆலயங்களை அமைத்தார்களே தவிர
6.அந்தத் தெய்வம் செய்யும் என்று யாரும் சொல்லவில்லை.

ஆனால் தெய்வம் செய்யும் என்ற நம்பிக்கையில் தான் செல்கின்றோமே தவிர
1.அந்தத் தெய்வ குணத்தை நமக்குள் எடுத்தால்
2.அந்தத் தெய்வ சக்தி நமக்குள் இருந்து நம் சொல்லையும் செயலையும் அது இயக்கும் என்ற நிலை காலத்தால் மறைந்து விட்டது.

நம்மை நாம் அறியாமலே நமக்கு நாமே நல்ல குணங்களுக்கு அடிக்கடி தீங்கு விளைவிக்கின்றோம்.

மனிதனை உருவாக்கிய… அனைத்தையும் அறிந்திடும் சக்தியாக இயக்கிக் கொண்டிருக்கும் உயிரான ஈசனுக்கு வேதனையும் சோர்வையும் எண்ணி எண்ணி
1.அந்த ஈசனுக்குச் சரியான நிலைகள் பணிவில்லாதபடி அவனுக்குண்டான சேவைகள் செய்யாதபடி
2.நம்மை ஆண்டு கொண்டிருக்கும் அந்த ஈசனுக்கு அடிக்கடி வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் என்ற
3.தீமையின் உணர்வின் சக்தியைத் தான் செலுத்திக் கொண்டிருக்கின்றோம்.

ஈசனை வணங்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஞானிகள் காட்டிய விநாயகத் தத்துவப் பிரகாரம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று இதை வினைக்கு நாயகனாக இந்த உடலுக்குள் ஆக்கிட வேண்டும்.

அதைக் கணங்களுக்கு அதிபதியாக்கி நமக்குள் தீமை விளைய வைக்கும் அந்த உணர்வினை அடக்கி ஞானிகள் உணர்வின் தன்மையை “ஒளியின் சுடராக…” நாம் உருவாக்க வேண்டும்.

வைரம் எப்படி நஞ்சினை ஒடுக்கி ஒளியின் சுடராக மாற்றுகின்றதோ இதைப் போன்று
1.வாழ்க்கையில் வரும் தீமைகளை… நஞ்சினை மகரிஷிகள் சக்தி கொண்டு ஒடுக்கினால்
2.நமக்குள் அறிந்திடும் ஆற்றலும்… உணர்வுகள் ஒளியாக மாறும் நிலையும் வருகின்றது.

இதைத்தான் ஞானிகள் நமக்கு ஆலயத்தில் தெளிவாக வழிகாட்டி உள்ளார்கள்.

ஞானியரின் அருள் உணர்வுகள் தீமைகளை விழுங்கிவிடும்

ஞானியரின் அருள் உணர்வுகள் தீமைகளை விழுங்கிவிடும்

 

இப்பொழுது உங்களுக்கு எது எது… எதை எதை விழுங்குகிறது…? என்ற நிலையை உணர்த்துகின்றோம். அதாவது
1.உங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை அந்த ஞானியர்களுடைய உணர்வுகளுடன் கலந்தவுடன்
2.அது விழுங்கி அந்தத் தீமையை அடக்குகின்றது.

அதை அடக்கிய நிலைகள் கொண்டு உணவாக அந்த உணவு தேவைதான். ஆனால் இதனுடைய தன்மை அதற்குத் தேவை.

ஒரு மரக் கட்டை எரிகிறதென்றால் பல உணர்வுகள் சேர்த்து எண்ணெய்ப் பசை இருந்தால்தான் அது எரியும். எண்ணெய்ப் பசை இல்லை என்றால் கருகிவிடும்.

இதைப் போலத்தான் நாம் வைக்கும் குழம்பிற்குள் சுவை தேவை என்றால் காரம் தேவை. அந்தக் காரத்தை எந்த அளவு சேர்க்கின்றோமோ அதற்குத் தக்கவாறுதான் அந்த உணர்ச்சிகள் உந்தும்.

இதைப் போல
1.நமக்குள் எத்தகைய தீய குணம் இருப்பினும் அருள் ஞானிகளின் உணர்வைச் சேர்த்து விழுங்கிடல் வேண்டும்.
2.அருள் ஞானிகளின் உணர்வை நாம் விழுங்கினால் அது தீமைகளை விழுங்கும்.
3.எனவே நாம் மகரிஷிகளின் உணர்வுகளை அதிகமாகச் சேர்க்க வேண்டும்.

ஞானத்தை அறிய வேண்டும் என்றால் இப்பொழுது நீங்கள் கேட்டறிந்த உணர்வுகள் உங்களுக்குள் எத்தனை கோடி குணங்கள் இருப்பினும் “அவை அனைத்திலும்…” எண்ணத்தால் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைக் கலக்க வேண்டும்.

அவ்வாறு கலக்கும் பொழுது இது உங்களுக்குள் பால்வெளி மண்டலமாகத் துகள்களாகச் சேர்கின்றது. இவ்வாறு சேர்த்துக் கொண்ட இந்தத் துகள்கள் இந்த உணர்வுகள் நுகர நுகர எண்ணங்களாக விரிவடைகின்றது.

எண்ணங்களின் தன்மை விரிவடையப்படும் பொழுது இங்கே பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் ஏற்படுகின்றது. அந்தத் திறன் இல்லையென்றால் நாம் செயலாக்க முடியாது.

1.அந்தத் திறன் நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் இந்த உணர்வைப் பதிவு செய்வதும்
2.அந்த உணர்வின் துணை கொண்டு தீமைகளை அகற்றும் வல்லமை நீங்கள் பெற வேண்டும் என்றும்
3.அதே சமயத்தில் அருள் ஞானிகளின் உணர்வை அடிக்கடி எண்ணும் பொழுது நுகர வேண்டுமென்பதற்கும் இதை உபதேசிப்பது.

நம் உடல் நாம் உணவாக உட்கொள்ளும் நிலைகளில் உணவில் கலந்துள்ள நஞ்சினை மலமாக மாற்றிடும் திறன் பெற்றது. அதே போன்று நமக்குள் உணர்வின் தன்மை பதிவு செய்த நிலைகள் கொண்டு கேள்விப்பட்ட தீமையான நஞ்சுகளையும் அது நீக்கி நல்ல உணர்வைப் படைத்திடும் ஆற்றல் பெற்றது.

ஆனால் மனித வாழ்க்கையில் வந்த நஞ்சினை எல்லாம் நீக்கியவன் மகரிஷி.
1.அந்த மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து எடுத்து நமக்குள் இணைத்திட வேண்டும் என்பதற்குத் தான் பல வட்டங்களை இங்கு எழுப்பி
2.உங்கள் உணர்வின் நினைவாற்றலை இணைத்து அதனுடன் மகரிஷிகளின் அருள் உணர்வை இணைத்து
3.உங்களுக்குள் அதைப் பெறும் தகுதியை ஏற்படுத்தியது.

மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களை நுகரும்படி செய்யும் பொழுது உங்களுக்கு அது பால்வெளி மண்டலங்களாக வருகின்றது. ஆனால் நீங்கள் இதை நினைவு கொள்ள வேண்டும்.

குறைகளை எவர் சொன்னாலும் அதை எண்ணத்தால் பதிவு செய்யக்கூடாது. உடனடியாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்ற நினைவை
1.“அங்கேயே அதிகமாக்கி…” இந்த கணக்கைக் கூட்ட வேண்டும்.
2.எந்த அளவிற்கு நீங்கள் இந்த கணக்கை அளவு கோல் கூட்டுகின்றீர்களோ அந்தத் தீமைகளின் நிலைகள் நமக்குள் வராது.

ஆனால் அவர் தீமை செய்தார் என்ற கணக்கினைக் கூட்டினால் நன்மை செய்யும் கணக்குகள் குறைந்துவிடும். ஆகவே நீங்கள் இதை மாற்றுதல் வேண்டும்.

நன்மை நன்மை, என்று நாம் சொன்னாலும் இந்த நன்மை நன்மையாகாது.
1.நல்லது நல்லதும் ஆகாது…
2.கெட்டது கெட்டதும் ஆகாது.

தீமை என்ற காரத்தினுடன் நன்மை என்ற நல்ல பொருளை அதிகமாகக் கூட்டினால்… அந்தத் தீமையின் நிலைகள் இதுக்குள் உள்ளடங்கி நன்மை பயக்கும் நிலையாக இணைந்தே இயக்கும்.

இதைப் போலத்தான் மகரிஷிகளின் அருள் வட்டத்தை நமக்குள் இணைத்துப் பழக வேண்டும்.

இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் வந்தாலும் அந்த மகரிஷியின் அருள் உணர்வுகள் என்னிலே பெற வேண்டும் என்று இதைப் பெருக்கிக் கொண்டிருக்க வேண்டும்.
1.தீமை என்ற கணக்கை இங்கே தள்ளிவிட வேண்டும்.
2.இது சரியில்லை தப்பான கணக்கு என்று அதை நீக்கிப் பழக வேண்டும்.

இது இல்லையென்றால் நாம் இந்த ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தவில்லை என்று தான் பொருள்.

ஆறாவது அறிவு தெளிந்திடும் நிலைகள் பெற்றவன் பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன், மனிதனான பின் நாம் சிருஷ்டிக்கும் வலிமை பெற்றவர்கள்.

மகரிஷிகள் சென்ற பாதையில் நாமும் பிறவியில்லா நிலைகளை அடைவோம். உணர்வுகளை உயிரோடு ஒன்றி உயிரைப் போன்று ஒளியாக மாற்றிடுவோம்.
1.பேரொளியாக மாற்றிப் பெரு வீடு என்ற நிலையாக
2.நாம் அனைவரும் சப்தரிஷி மண்டல எல்லையை அடைவோம்…
3.மெய் உலகைச் சிருஷ்டி செய்வோம்.

தீமைகளைக் கிழித்தெறியும் மெய் ஞானிகளின் அலைவரிசை

தீமைகளைக் கிழித்தெறியும் மெய் ஞானிகளின் அலைவரிசை

 

‘’ஓங்காரக்காளி’’ என்று நாம் சொன்ன ஓசோன் திரையையும் அணு குண்டினால் சிதறடித்து விட்டார்கள். இதனால் விஷத்தன்மைகள் பூமியில் வந்து படர்ந்து கொண்டிருக்கின்றது.

விஞ்ஞானக் கருவி கொண்டு விண்ணிலே பல அலைகளைப் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்கள்.
1.விண்ணிலே பாய்ச்சினால் இங்கே பாதிக்காது என்பது அவர்களுடைய எண்ணம்.
2.ஆனால் விண்ணிலே விஷத் துகள்கள் பரப்பப்படும்போது புவியின் ஈர்ப்புக்குள்
3.”சுழற்சியில் வரப்படும்போது” அந்த அலைகள் பூமிக்குள் வருகிறது.

அப்படி அலைகள் வரப்படும்போது தான் விஷத்தின் தன்மையை முறியடிக்கக் கூடிய சக்தி அதற்கு இருந்தாலும் மனிதன் விஞ்ஞானத்தினால் செய்யப்பட்டது அந்த ஒசோன் திரையைக் கிழித்து விடுகின்றது.

விண்ணிலே இருக்கக்கூடிய ஆற்றல்கள் துரித நிலைகளில் நம் பூமிக்கு வரக்கூடிய நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது.
1.அவ்வாறு வரக்கூடிய நிகழ்ச்சிகளினாலே மனிதனுடைய சிந்தனைகள் குறைக்கப்பட்டு விட்டது.
2.நாம் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம்.
3.ஆனால் உணர்வுக்குள் வேதனை தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது.

இந்த மாதிரி நிலைகளிலிருந்து மீட்டிக் கொள்வதற்கு நாம் செய்ய வேண்டிய ஒரே முறை அந்த மெய் ஞானியரின் அருளை நமக்குள் பெருக்குவது தான்.

ஓசோன் திரை எப்படிக் கிழிந்து வருகிறதோ அதைப் போன்று மற்ற விஷத்தின் தன்மையைக் கிழித்தெறியும் தன்மை நாம் பெற வேண்டும்.

1.நாம் சாதாரண மனிதர்கள் என்று எண்ண வேண்டாம்.
2.நம்மிடமிருப்பது சாதாரண ஆயுதம்தான்… பணம் வசதி உள்ளவர்கள் யாருமில்லை.
3.எண்ணத்தின் வலுவை நாம் பெற்று மெய் ஞானியரின் அருள் சக்திகளைப் பெற வேண்டும்.

அதனின் வலுக்கொண்டு தீயசக்திகள் நம்மை அணுகாது நாம் பாதுகாக்க வேண்டும். அந்த உணர்வின் ஆற்றல் மிக்க சக்திகளை நாம் பெற வேண்டும்… நமக்குள் பெருக்க வேண்டும்.

எப்படி அலைவரிசையினாலே மனிதனை இயக்க முடியும் என்று விஞ்ஞானிகள் சொல்கின்றனரோ அதைப் போல அந்த மெய் ஞானியரின் அருள் ஒளியை ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் கூட்டி “இந்த அலைவரிசைகளை நமக்குள் பெருக்கிப் பழக வேண்டும். ..”

அப்படிப் பழகுவதற்குத்தான் ஆத்ம சுத்தியும் பயிற்சியும் கொடுத்தது.

1.ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் அந்த மெய் ஞானியரின் அலைவரிசையின் தொடர் கொண்டு
2.நமக்குள்ளும் இந்த உலகிற்குள்ளும் வரும் எத்தகைய தீமைகளையும் நீக்கிடும் அருள் சக்தி பெறுவோம். எமது அருளாசிகள்.

மகரிஷிகளின் சக்தியை எடுத்து வளர்த்தால் தான் எத்தகைய நல்ல மாற்றத்தையும் நாம் கொண்டு வர முடியும்

மகரிஷிகளின் சக்தியை எடுத்து வளர்த்தால் தான் எத்தகைய நல்ல மாற்றத்தையும் நாம் கொண்டு வர முடியும்

 

இன்று “மதப்போர்…” என்ற நிலைகள் உலகம் முழுவதற்குமே இயக்கிக் கொண்டுள்ளது.

ஒரு நாடு தன்னிடம் இருக்கக்கூடிய விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் “லேசர் கதிரியக்கத்தால்” அடுத்த நாட்டின் ஆழத்தை அறிந்து கொண்டு அவனைத் தொலைக்க முடியும் என்று எண்ணுகின்றான். ஆனால் அந்த நாடோ
1.நீ கண்டுபிடித்து வைத்திருக்கும் நிலையைக் காட்டிலும் வலிமையானது எண்னிடம் உண்டு..
2.நான் சாகும் போது நீயும் சாவாய் என்ற நிலைகள் கொண்டு இறப்பைப் பற்றி சிந்திக்கவில்லை.
3.தன் கௌரவத்தைக் காக்க நான் இறந்தாலும் உன்னைக் கொல்வேன் உன்னை மடியச் செய்வேன்
4.உன்னை மடியச் செய்த பின்பு தான் நான் இறப்பேன் என்ற மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் இன்று உலகெங்கிலும் பரவி
5.மனிதன் என்ற சிந்தனை இழந்து மனிதன் அடைய வேண்டிய உயர்ந்த மார்க்கங்களைத் தடைப்படுத்தி
6.மனிதனுக்கு மனிதன் கொன்று அதை ரசிக்கும் உணர்வே இன்று வந்துவிட்டது.

இதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்.

ஆனால் நான் இதைப் பேசுகிறேன் என்று நீங்கள் எண்ண வேண்டாம். இது எனக்குத் தெரியவே தெரியாது…!

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்… அந்த மகரிஷிகள் கண்டறிந்த மெய் உணர்வுகள் மக்கள் அனைவருக்கும் அது எட்ட வேண்டும் என்று சொன்னார்.

உலகில் ஏற்படும் அந்தத் தீமைகளிலிருந்து மக்கள் காக்கப்பட வேண்டும் என்ற நிலைகள் கொண்டு இந்த ஸ்தாபனத்தை (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்) யாம் அமைத்த்து அவரின் உணர்வின் செயலே…! என்னால் அது முடியாது.

அவர்களின் இயக்கத்தால் தான் இது அனைத்துமே உருபெற்றது பொருள்கள் எப்படி வந்தது…? என்று நமக்கும் தெரியாது. ஒருக்கிணைந்த உணர்வின் செயலாக்கங்கள் கொண்டுதான் இதை அமைக்கவும் முடிந்தது.

குரு அருள் அதன் வழி தான் வழிபடுகின்றது.

1.நாம் அனைவரும் நம் குருவின் அருள் துணை கொண்டு எந்த மதத்திலும் சிக்காது
2.இன பேதமோ மொழி பேதமோ அரசியல் பேதமோ இல்லாது உலகைக் காக்கும் உணர்வை நமக்குள் வளர்த்து
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் பெறுவதே தலையாயக் கடமை ஆகும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்றால் நம்முடைய மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் கட்டாயம் இணைக்க வேண்டும்.

தங்கள் வாழ்க்கையில் வந்த நஞ்சான நிலைகளைச் சேர்த்துக் கொண்ட அந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து அந்த நஞ்சுகளை அந்த ஒளிக் கடலிலே கரைத்து உயிருடன் ஒன்றிய ஒளிச்சரீரமாக அவர்களை நாம் நிலை பெறச் செய்ய வேண்டும்.

1.அவர்கள் முன் சென்றால் அவர்களின் துணை கொண்டு அந்த மகரிஷிகள் அருள் சக்திகளை நாம் பெற முடியும்.
2.நமது குரு அருள் இதைத்தான் திரு அருளாக உபதேசித்தது.

உலகில் உள்ள ஒவ்வொருவரையும் காத்திட வேண்டுமென்றால் “அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் தகுதியை…” நாம் முதலில் பெற வேண்டும்.

இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமைகளைக் கேட்டறிந்தாலும் அந்தத் தீமை தனக்குள் பதியாது தடுக்க வேண்டும்.

அப்படித் தடுக்க வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்னை அறியாது சேர்ந்த தீமைகள் மறைய வேண்டும்… மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும்… என் சொல்லால் கேட்பவர்கள் இருள்கள் நீங்க வேண்டும்… அவர்களும் பொருள் காணும் நிலை பெற வேண்டும்… அவர் வாழ்க்கையில் மகிழ்ந்திடும் நிலை பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

இதை எல்லாம் எண்ண வேண்டும் என்றாலும்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதி பெற வேண்டும்.
2.இல்லை என்றால் இது வெறும் சொல்லாகத்தான் அமையும்.

அருள் ஞானப் பசியைத் தீர்க்கும் நிலைக்குத் தான் உபதேசிக்கின்றோம்

அருள் ஞானப் பசியைத் தீர்க்கும் நிலைக்குத் தான் உபதேசிக்கின்றோம்

 

“அருட்பெரும் ஜோதி நீ… தனிப்பெரும் கருணை நீ…” என்று உயிருடன் ஒன்றினார் இராமலிங்க அடிகள். அருள் ஞானம் பெற வேண்டும் என்று விரும்பிய ஆன்மா பல அற்புதங்களைச் செய்கிறது… அவருக்கே தெரியாமல் தான் இயங்குகிறது. அருள் ஒளியைத் தனக்குள் எடுக்கப்படும் பொழுது ஒளியாகின்றது.

1.”அன்பே சிவம்…” என்ற அரவணைக்கும் உணர்வுகள் எனக்குள் அன்பாகி உடலில் சிவமாக வேண்டும்.
2.எல்லாவற்றையும் அரவணைத்துக் கொண்டால் அந்த அரவணைக்கும் உணர்வின் தன்மை
3.தனக்குள் மகிழ்ச்சியூட்டும் உணர்வின் தன்மை ஒளியாக மாறும்.

அது தான் அருட்பெருஞ்ஜோதி நீ தனிப் பெரும் கருணை நீ.

பிறர் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று சந்தோஷத்தை எனக்குள் உருவாக்கி விட்டால் இருள் இங்கே வருமோ…? ஆக… இருண்ட நிலைகளில் இருந்து மீள வேண்டும் என்ற நிலையைத் தான் அவர் உணர்த்துகின்றார்.

அந்த மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் அருட்பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை நீ. எண்ணியதைத் தான் உருவாக்குகின்றாய் கந்தகோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே…! யார்…? நம் உயிர் தான்.

பல விதமான உணர்வு அமைந்துள்ள கோட்டை இது. வேல் என்றால் கூர்மையானது.
1.பல விதமான உணர்வுகள் சேர்த்துத் தான் இந்த உடல் உருவானது… கந்தக்கோட்டம்.
2.உயிருடன் எண்ணப்படும் பொழுது கூர்மையின் நிலைகளில் அதை உணர்த்துகின்றது.
3.அருட்பெரும் ஜோதி நீ தனி பெரும் கருணை அங்கே அமர்ந்து துடிப்பாகி உயிரின் துடிப்பாகி
4.கூர்மையாக உணர்வின் தன்மை அறியச் செய்து ஒவ்வொன்றையும் ஒளியாக எனக்குள் உணர்த்துகின்றாய்
5.அறிவின் செயலாக என்னை இயக்குகின்றாய் என்றார்.

உயிர் தான் அங்கே இருந்து இவ்வாறு செயலாக்குகின்றது.

இராமலிங்க அடிகள் உயிருடன் எடுத்துக் கொண்ட உணர்வுகள் ஒளியாக ஜோதியாக… விண்ணிலே இருக்கின்றார். உடல் பற்றை அவர் வைக்கவில்லை. இந்த உடலுடன் வந்தது உடலுடனே போகட்டும் என்ற நிலையில் உயிருடன் ஒன்றி அவர் விண் சென்று விட்டார்.

தனக்குள் தீமை வராது தடுக்கும் சேனாதிபதி… ஆறாவது அறிவு கார்த்திகேயா. பல கோடிச் சரீரங்களில் தீமைகளை உணர்ந்து உணர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்து…
1.தீமையிலிருந்து விடுபடச் செய்து அனைத்தையும் அறிந்திடும் அறிவாக மனித உடலில் உள்ளது.
2.அது தான் கந்தகோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே…!

அருட்பெரும் ஜோதி நீ தனிப்பெரும் கருணை நீ…! எப்பொழுதுமே ஜோதியாக இருக்கின்றாய் தனிப்பெரும் கருணையாக இருந்து என்னை இயக்குகின்றாய். ஆக எண்ணியதைத் தான் அது உருவாக்குகின்றது.

1.யாரிடமும் நான் யாசிக்கக் கூடாது… யாருக்கும் இல்லை என்றும் சொல்லக்கூடாது,
2.அருள் தாகத்துடன் வருபவருக்கு அந்த அருள் ஞானத்தைப் போதிக்க வேண்டும்
3.இருளை அகற்ற வேண்டும் என்பது தான் அவருடைய தத்துவம்…!

யாம் இப்பொழுது உங்களுக்குக் கொடுப்பதெல்லாம் அந்த அருள் ஞானப் பசியைத் தீர்க்கும் நிலைக்குத் தான்…! ஏங்கி வரக்கூடியவர்களுக்கு அந்த அணுக்களுக்கு அந்த ஞானத்தை ஊட்டுகின்றோம். ஏங்கி வருவோர் தான் இங்கே வருவார்கள்.

பசியைத் தீர்க்கும் போது அருள் ஒளியாக அங்கே வளர்கின்றது. அதனால்தான் “மணிக்கணக்காக…” இந்த உணர்வுகளை உங்களுக்குப் போதிப்பது.
1.மற்ற எண்ணங்களைத் திருப்பாதபடி மற்ற உணர்வுகளை எல்லாம் ஒடுங்கச் செய்து சொர்க்கலோகத்திற்கே அழைத்துச் செல்வது.
2.மற்ற உணர்வை மறக்கச் செய்வதற்குத் தான் அப்படிப் பேசுவது.

எனக்குள்ளும் அந்த அருள் வளர்கின்றது… இந்த உணர்வை நீங்கள் கேட்கப்படும் பொழுது அருளானந்தம் உங்களுக்குக் கிடைக்கிறது. தீமையிலிருந்து நீங்கள் நிச்சயம் விடுபடுகின்றீர்கள்.

விண்ணின் ஆற்றலைப் பெற்றுத் தீமைகளை ஜீரணித்தவர்கள் மகரிஷிகள்

விண்ணின் ஆற்றலைப் பெற்றுத் தீமைகளை ஜீரணித்தவர்கள் மகரிஷிகள்

 

பல நிலைகள் நாம் தவறு செய்யாமலே உருவாகின்றன. நாம் வயிறு நிறையச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பிறர் நம்முடன் சண்டை போட்ட நினைவுகளை நாம் கொண்டு வந்தவுடன் அன்று நமக்கு அஜீரணமாகின்றது… அல்லது சாப்பிட்ட ஆகாரத்தைச் சரியாகச் செயல்படுத்துவதில்லை.

ஏனென்றால் நம் உடலில் அனைத்து குணங்களின் செல்கள் பதிவாகி இருக்கின்றது.
1.நாம் எந்த குணத்தைச் செயல்படுத்துகின்றோமோ
2.அந்த உணர்வான செல்கள் அனைத்துமே ஒருங்கிணைந்து இயக்கப்படும்போது
3.அதற்குத் தக்கவாறுதான் நம் நரம்பு இயங்குவதும் நம் சுவாசம் இயங்குவதும் குடல் இயங்குவதும் நம் எண்ணங்கள் பேசுவதும் எல்லாமே.

இப்பொழுது கோபமாகப் பேசுபவரைப் பார்த்தால் உச்சிமுடி நட்டமாக எழுந்து நிற்கும். பயம் கலந்த கோபத்தை உண்டாக்கப்படும் போதும்… சில்… என்ற நிலை ஏற்படும்படி எதிர்பாராத ஒரு பயத்தை உண்டாக்கினாலும் நம் தலைமுடி கிர்… என்று மேலே எழுந்துவிடும்.

1.இவையெல்லாம் இந்த உணர்வின் செல்கள் இயங்குவதனால்தான்.
2.நாம் அல்ல… நாம் இதைத் தடுத்து நிறுத்த முடியாது.

இப்படித்தான் இயற்கையிலேயே நம்மை அறியாமலேயே பல நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதை நாம் அறிந்துணர்ந்து நம் உடலில் வரக்கூடிய பிணிகளைப் போக்க வேண்டும்.

அதற்கு என்ன செய்வது…?

மெய் ஞானிகள் அவர்கள் இங்கே வாழ்ந்த காலங்களில் விண்ணுலகச் சக்தியைப் பெற்று வளர்த்து… அவர்கள் உடலில் அத்தகைய ஆற்றல்களைப் பெற்றுத் தன்னையறியாமல் ஆட்டிப்படைக்கும் சில உணர்வுகளை அவர்கள் அடக்கினர்.

1.நமக்குக் கோபம் வருகிறதென்றால் நம்மையறியாமல் துடிப்போம்.
2.ஆனால் ஞானிகள் மத்தியில் அந்த உணர்வுகள் சென்றதென்றால் அது அவர்களுக்குள் அடங்கி அதற்குண்டான ஞானத்தை ஊட்டி
3.எந்தச் செயல் வேண்டுமோ… அந்தச் செயலுக்குண்டான வலுவை ஊட்டும்.

காரமான உணர்வுகள் தூண்டப்பட்டால் அந்தக் காரமான நிலைகளிலேயே நம்மைப் பேசும்படிச் செய்து பிறிதொன்றைத் தாக்கச் செய்யும். ஏனென்றால் அதை ஜீரணிக்கக்கூடிய சக்தி நம்மிடத்திலே இல்லை.

மெய் ஞானிகள் விண்ணின் ஆற்றல் மிக்க சக்தியைத் தனக்குள் எடுத்துக் கொண்டதனால்
1.அவர்களுடைய புலனறிவுகளில் எது சிக்கினாலும்
2.அது அவர்களுடைய உணர்ச்சிகளைத் தூண்டுவதில்லை.

எத்தகைய குணங்கள் கொண்டு பிறர் செய்தாலும் அந்த உணர்ச்சிகள் தூண்டா வண்ணம் அவர்களுக்குள் வந்தவுடன் அடங்கி
1.அவர்களது ஆற்றல் மிக்க சக்திகள் இவருடைய பார்வை பட்டவுடன்
2.அவர்களுக்குள் இருக்கக்கூடிய கெட்ட குணங்கள் அப்படியே அடங்கிவிடும்.

இப்பொழுது நாம் நல்லவர்களாக இருக்கிறோமென்றால் ஒருவர் சிறு குற்றமான செயலைச் செய்கிறார். நம் மீது ஒரு பழிச்சொல்லைச் சொல்கிறார் என்றால் “அந்தச் சொல் வெறும் வார்த்தை தான்…”

அதை நமக்குச் சொன்னவுடன் அந்த உணர்ச்சிகள் தூண்டப்பட்டு நமக்குள் அதை அடக்க முடியவில்லை. “இவ்வாறு சொல்கிறானே…!” என்று பதட்டமும் பயங்கரமான விளைவுகளும் ஏற்பட்டுவிடும்.

ஏனென்றால் அவர் செய்த உணர்வுகள் நமக்குள் இயக்கித் தவறு செய்யும் நிலைகளுக்கு… “எங்கிருந்து அந்தத் தவறு வந்ததோ அவர்களை அழிப்பதற்கு வருகின்றது…”

“இல்லாததைச் சொல்கிறான்…!” என்ற உணர்ச்சியின் வேகம் தூண்டுகின்றது. ஆனால் அதே சமயம் இந்த உணர்ச்சியுடன் சேர்ந்து உமிழ் நீராகச் சுரந்து நம் ஆகாரத்துடன் கலந்து விடுகின்றது.

இப்படி ஆகாரத்துடன் கலந்தவுடன் அது நம் உடலில் சாப்பிட்டவுடன் சத்தான ஆகாரத்தை ஜீரணிக்கக்கூடிய சக்தி இழந்து அதனுடைய செயல்களைச் செயலாக்கத் தொடங்கிவிடுகின்றது. அது இரத்தமாக மாறி நம் தசைகளாக மாறி நாளடைவில் வலியாகவோ வேதனையாகவோ வந்து விடுகின்றது.

1.மெய் ஞானிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த பெரும் தொல்லைகளையும் அடக்க
2.விண்ணின் ஆற்றல்களைப் பெற்றுத் தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றிச் சென்றனர்.
அவர்கள் எதை எதையெல்லாம் அவர்கள் மூச்சாலும் பேச்சாலும், சொல்லாலும் அவர்கள் வெளிப்படுத்தினார்களோ அந்த அலைகள் நம் பூமியில் படர்ந்து கொண்டிருக்கின்றது. அவையெல்லாம் சீக்கிரம் அழிவதில்லை.
நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் பேசியதெல்லாம் ஆற்றல் மிக்க உணர்வின் சக்தி கொண்ட வெப்பகாந்தங்கள் தாக்கியவுடன் அது அழிந்துவிடும்.
அந்த உணர்வுகள் இந்த உணர்வுடன் அதை ஈர்த்துக் கொண்டு மற்ற உணர்வுகள் காரத்துடன் காரம் சேர்த்து காரமாக உருப்பெற்று மற்றவர்களைத் தாக்கும் உணர்வாகச் சென்றுவிடும்.

ஆனால் மெய் ஞானியின் சக்திகளை அதை மற்ற சாதாரணமான ஒரு அணுவின் தன்மை புவிக்குள் வருவதை அதைச் செயலிழக்கச் செய்ய முடியாது.

ஆகையினால் அந்த ஞானிகளுடைய சக்தியை மனிதன் சாதாரணமாக எடுக்க முடியாது.

நினைத்தவுடன் நீங்கள் எடுக்கும் ஆத்ம சுத்திக்கு
1.‘’ஓ…ம் ஈஸ்வரா’…’ என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொண்டு
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கும்போது
3.அந்த அருள் சக்தியை நீங்கள் உடனே பெற முடியும் என்று உங்களுக்கு உறுதியாகச் சொல்கின்றோம்.

காரணம்… அவர்கள் எடுத்துக் கொண்ட ஆற்றல் எவ்வழிகளில் பெற்றார்களோ அதை…
1.அவருடைய நிலைகளை உபதேசித்து உங்கள் உணர்வுக்குள் பதியச் செய்யும் போது
2.இந்த உணர்வுகள் உங்களுக்குள் வித்தாக மாறுகின்றது.

அந்த வித்திற்கு நீங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரொளியை எடுத்து ஊட்டினால்தான் அந்த வித்திற்குச் சக்தி கூடும். அப்பொழுது அந்த ஞானியருடைய உணர்வலைகள் காந்தத்தின் பவர் கூடினால்தான் அந்த ஞானியருடைய எண்ண அலைகளுக்குச் சக்தி கூடுகின்றது.

‘’ஓ…ம் ஈஸ்வரா…’’ என்று உயிருடன் தொடர்பு கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் எங்கள் ஜீவாத்மா பெற வேண்டுமென்று எண்ணி நம் உடலுக்குள் எல்லா அணுக்களிலும் செலுத்த முடியும்.
1.அவ்வாறு எல்லா அணுக்களிலும் செலுத்திச் சர்வ தீமைகளையும் நீக்கி
2.அனைத்தையும் ஒளியாக மாற்றி நாம் மகிழ்ந்து வாழ முடியும்,

இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை என்ற அழியா ஒளிச்சரீரம் நாம் அனைவருமே பெற முடியும்.