யாம் (மறைமுகமாக) உங்களுக்குக் கொடுக்கும் ஞானிகளின் ஆற்றல்மிக்க சக்திகள்

யாம் (மறைமுகமாக) உங்களுக்குக் கொடுக்கும் ஞானிகளின் ஆற்றல்மிக்க சக்திகள்

 

நாம் என்ற நிலைகளில் தான் பேசுகின்றேனே தவிர நான் என்ற நிலை எனக்கு இல்லை.
1.நாம் என்ற நிலைகளில் அனைவரும் சேர்ந்தால்தான் இயக்க முடியும்.
2.காரணம்… சக்தி வாய்ந்த அந்த ஞானிகளின் அருள் ஆற்றல்மிக்க சக்தியை நாம் அனைவரும் பெற வேண்டும்.

கனமான பொருளைத் தூக்க வேண்டும் என்றால் ஒரு நூலால் முடியாது. பல நூல்களை ஒன்றாகத் திரித்து அனைவரும் ஒன்று சேர்ந்து தூக்கப்படும் பொழுது தான் அந்தப் பொருளைத் தூக்க முடிகின்றது.

அது போன்று நாம் எல்லோரும் சேர்ந்து நம்முடைய எண்ணத்தால் எடுக்கப்படும் பொழுது
1.அந்த ஞானிகளின் அருள் ஆற்றல் மிக்க சக்தியை… பிறவா நிலை அடைந்த அந்த ஆற்றல்களை நாம் பெற முடியும்.
2.அவர்கள் பெற்ற ஆற்றல்கள் நெருப்புக்குச் சமம்… நெருப்பு என்றாலும் பரவாயில்லை…! அதைக் காட்டிலும் வலுக் கொண்டவர்கள்.

அணுவைப் பிளந்தான். பிளந்து அதனை வெடிக்கச் செய்யும் பொழுது அது இரும்பு உலோகத்தையும் அதற்குள் இருக்கும் இயக்கத்தின் தன்மையும் மற்றதை உருக்கி விட்டுத் தன் அணுவின் தன்மையாக வளர்த்துக் கொள்கின்றது.

அத்தகைய ஆற்றல்மிக்க சக்தி கொண்டவர்கள் தான் ஞானிகள்.

சாதாரண மனிதர்கள் நாம் வெளிவிடும் எண்ணங்கள் கொண்டு
1.அத்தகைய ஞானிகள் உணர்வின் அருகிலே இருப்போம் என்றால்
2.அந்த உணர்வுகள் பட்டால் நம் எண்ணங்கள் சுக்குநூறாக ஆகி
3.இந்த உணர்வின் ஒலிக்குள் இருப்பதை அது கவர்ந்து அது தான் வளருமே தவிர
4.அதை நுகர்ந்து நமக்குள் சேர்த்து நமக்குள் இருளை நீக்கும் சக்தி கிடையாது.

இருந்தாலும் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்த ஞானிகளின் ஆற்றல்மிக்க சக்தியை உங்களுக்குக் கிடைக்கச் செய்கிறோம்.

1.ஞானிகளின் பால் உங்கள் நினைவின் தன்மை சிறுகச் சிறுகக் கூட்டி
2.அந்த ஆற்றலைப் பெருக்கும் நிலைகளுக்கு ஏக்க உணர்வு கொண்டு
3.உங்களுக்குள் விளைந்திடும் விளைந்திட்ட அந்த உணர்வின் எண்ண அலைகளுக்குள் ஒவ்வொன்றும்
4.ஒவ்வொரு குணத்தால்… ஒவ்வொரு குணத்தின் செயலையும் உங்களுக்கு உபதேசமாகக் கொடுக்கும் பொழுது
5.அதிலே ஞானிகள் உணர்வின் நிலைகளைப் பிணைக்கச் செய்து
6.பிணைத்த உணர்வின் நிலைகள் கொண்டு அதிலேயும் தொட்டுக் காண்பித்து அதைப் பதியச் செய்து
7.பதிந்த நிலைகளை நீங்கள் எண்ணும் பொழுது அந்த எண்ணத்தின் தன்மை விளைந்து
8.உங்களுக்குள் விளைந்த தீய உணர்வினைப் பிளந்து அதை ஒளியாக மாற்றும் திறனாக நீங்கள் பெறுகின்றீர்கள்.

அதைப் பெறச் செய்வதற்கு… நமக்கு முன் சுழன்று கொண்டிருக்கும் அந்த மெய் ஞானிகளின் எண்ணங்களை யாம் உங்களுடன் சேர்த்து… நாம் அனைவரும் சேர்த்து ஏக்க உணர்வு கொண்டு அதைக் கவரப்படும் பொழுது இங்கே அலைகளாகப் படர்கிறது.

சிறு நிலையாக இருந்தாலும் அந்த வலுவின் தன்மை வரும் பொழுது
1.நம்முடைய எண்ணங்கள் அவரை ஒத்த நிலையாக வரும் அந்த நினைவினை உங்களுக்குள் கூட்டச் செய்து…
2.கூட்டிய உணர்வை ஓங்கச் செய்து… இந்த உணர்வின் அலைகளைப் பெருக்கச் செய்து…
3.இந்த நினைவினைக் கூட்டச் செய்து… அதை இயக்கும் தன்மையாக தியானத்தை நாம் கொண்டு வந்து
4.வலுக் கட்டாயமாக நம் எண்ணங்கள் அனைத்தும் சேர்த்து அவர்களை ஒத்த உணர்வின் தன்மை வளர்க்கப்பட்டு
5.நாம் எத்தனை குணங்கள் கொண்டிருந்தாலும் அதை மறந்து மெய் வழியைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்ச்சியைக் கூட்டி வளர்த்து
6.கதிரவனின் காந்த அலைகள் கொண்டு காற்றிலே படர்ந்துள்ள ஞானிகள் உணர்வினைக் கவரும்போது
7.அவரவர்களுக்குச் சிறிதளவேனும்… சிறிது பங்கு கிடைக்கும்.

பெரிய மீனை எடுத்தாலும் அதனுடைய பசிக்கு நாம் சிறுகச் சிறுக எடுத்து நிறைய நாம் விளைய வைத்தாலும் நம்முடைய உணவுக்கு அது சிறிதளவாவது பெருகும்.

அது போல
1.ஆற்றல்மிக்க சக்தியைக் கவரச் செய்து உங்களை நுகரச் செய்து உங்களுக்கு அது கிடைக்கச் செய்ய
2.உங்களை எண்ணி நான் பிரார்த்திக்கும் பொழுது உங்களுக்கு அந்த வலு கிடைத்து
3.ஞானிகளின் உணர்வினை உங்களுக்குள் புகுரச் செய்து ஒவ்வொரு குணத்திலும் ஊடுருவச் செய்து
4.அதை விளையச் செய்ய இதே தியானத்தை மேற்கொண்டு
5.தீயவை எவை ஆனாலும் அது நினைவில் வராது அருள் உணர்வினைப் பெற வேண்டும் என்று ஏங்கும்போது பெறச் செய்து
6.இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் விளையச் செய்து உங்களை ஆட்டிப்படைக்கும் உணர்வைச் சிறுக்கும்படி செய்து
7.அந்த மெய் ஒளியை உங்களுக்குள் வளர்ச்சி பெறச் செய்வதற்கே இதைப் பதிவு செய்கின்றேன்.

அதன் வழிப்படி உங்களுக்குள் இருக்கும் உயிரான ஈசனுக்கு எதைக் கொடுக்கின்றீர்களோ அதை அவன் படைக்கின்றான் ஆகவே உங்கள் உயிரைக் கடவுளாக மதியுங்கள். உங்கள் உடலைச் சிவமாக மதியுங்கள்.

அனைத்திற்கும் பாத்திரமாகி அனைத்தையும் அணைத்துக் கொண்டு அது நினைவு கொண்டு இயக்கும் சக்தியாக நமக்குள் அவன் இருக்கின்றான். அந்த ஞானிகள் உணர்வினை விளைவிக்கும் போது ஈசனுடன் ஒத்த நிலையாக ஒளியின் சரீரமாக நாம் ஆகின்றோம்.

தன்னைத் தான் அறிதல் – இராமாயணத்தில் உள்ள மூலம்

தன்னைத் தான் அறிதல் – இராமாயணத்தில் உள்ள மூலம்

 

தசரதனின் கருவிற்குள்…
1.எத்தனையோ உடல்கள் இருப்பினும் பல கோடித் தீமைகளை வென்றிடும் உணர்வுகள் பெற்று
2.அந்த மனைவி என்ற நிலை வரும் போது அதற்குப் பிறந்தவன் தான் இராமன்.

அதே சமயத்தில் உறுதுணையாக இருந்து தன்னைக் காத்திடும் தன்மை தான் லட்சுமணன். ஒரு தாய்க்கு (சுமித்ரை) இரண்டு குழந்தைகள் பிறக்கின்றது.

முதலில் தசரதன் விஷ்ணுவை நோக்கித் தவம் இருந்தான். தூதுவனை அனுப்பிப் பாயாசத்தைக் கொடுத்தான். முதல் நிலையை இராமனின் தாயாருக்குக் கொடுத்தார். இரண்டாவது பரதனின் தாயாருக்கு கொடுத்த்து. மூன்றாவது லட்சுமணனின் தாயாருக்கு கொடுத்தது… தொக்கியுள்ள மிச்சத்தை மூன்றாவது மனைவிக்கே கொடுக்கின்றான்… சத்துருக்கன்.

இங்கே லட்சுமணன்…! லட்சுமணன் என்றால் என்ன…? சூரியன் தன்னுடைய பாதரசத்தால் தாக்கப்படும் பொழுது அதிலே விஷங்கள் பிரிகின்றது… வெப்பமாகின்றது… காந்தமாகின்றது.

காந்தமானாலும்
1.விஷம் பிரிந்து செல்வதை இந்தக் காந்தம் இழுத்துக் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.
2.அது தான் லட்சுமணா என்று காரணப் பெயரை வைக்கின்றார்கள்.

ஆக எதனின் உணர்வின் தன்மை கவர்ந்து கொள்கின்றதோ சத்துருக்களை… சகோதரன் என்ற நிலை வரப்படும் பொழுது
1.சத்துருக்கன் தீமைகள் வராதபடி பரதனுக்கும்…
2.லட்சுமணன் இராமனுக்கு உதவியாக இருப்பதாகவும் காட்டுகிறார்கள்.

ஏனென்றால் விஷம் இயக்கச் சக்தி அது தான் லட்சுமணா. காந்தம் கவர்ந்து கொண்டால்…
1.எந்தக் குணத்தின் தன்மை கொண்டு கவர்ந்து கொண்டதோ அதனின் இயக்கச் சக்தி
2ஆக… காந்தம் கவர்ந்து வெப்பத்துடன் எது சேர்ந்ததோ அதனுடன் சேர்த்து உருவாக்கும் சக்தி என்ற நிலைகளை
3.இப்படித் தனித்தன்மையாகப் பிரித்துக் கொண்டு வருகின்றார்கள்.

விஷ்ணுவை நோக்கித் தவம் என்று வரும் பொழுது உயிர் விஷ்ணுவாகின்றது. அவன் தவத்தின் தன்மை கொண்டு புத்திர பாக்கியம் வேண்டும் என்று எண்ணினான். அதன் உணர்வின் தன்மை கொண்டு தன் உடலில் பல நிலைகள் ஆகின்றது.

சூரியனோ தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு தனக்குள் பாதரசமாக மாற்றுகின்றது. மனிதன் புழுவில் இருந்து மிருகம் வரையிலும் அதனதன் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப அதன் கருத்தன்மை “விந்து தன்மை…” அடைகின்றது.

அந்த விந்தின் தன்மை அடைந்த பின் தான் ஒரு பூச்சியைக் கொன்று தின்றாலும்… அதன் உணர்வின் தன்மை கருவாக்கப்பட்டு அணுத் தன்மை கருவாக மாறுகின்றது. இதைப் போலத் தான் மனிதனின் நிலை.

நன்றாகச் சிந்தனை செய்து பாருங்கள். மெய் ஞானிகள் காட்டிய பேருண்மைகள் இராமாயணத்தில் உள்ளது இன்று அது திசை திரும்பி விட்டது அதைத்தான் நாம் இன்று பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

இராமனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்று எல்லோரும் ஆயத்தமாக இருக்கின்றார்கள். பரதனின் தாயாரும் அதிலே சேர்ந்திருக்கின்றது. இருந்தாலும் பரதன் இராமனுடன் சேர்ந்து வாழ்ந்தவன். நாம் ஏதாவது சொன்னால் அவனுடன் சேர்ந்து விடுவான்… நம்மிடம் மறுத்துப் பேசிவிடுவான் கைகேயி எண்ணுகிறது.

1.இராமனின் தாயார் எல்லோரையும் அரவணைத்தது.
2.பரதனின் தாயார் போரில் ஜெயிக்கும் உணர்வு பெற்றது… தன் சுயநலத்தைக் கொண்டது.
3.ஆனால் இராமனின் தாயாரோ பொது நலத்தைக் கொண்டது என்ற நிலையை பிரித்துக் காட்டுகின்றார்கள்.

அப்பொழுது அதனுடன் வாழும் குழந்தைகள் எல்லாம் இணைந்து வாழும் சக்தியாக வருகின்றது.

காவியத்தில் உள்ள மூலங்களை அவ்வப்போது உங்களுக்குப் பிரித்துக் காட்டுகின்றோம்.

உலக மாற்றத்தின் காலம்

உலக மாற்றத்தின் காலம்

 

ஒவ்வொரு நிமிடமும்… ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்… எது… எவ்வாறு… எதனுடன் சேர்ந்தபின்… அதன் உணர்வுகள் எப்படி மாறுகிறது…? என்ற உண்மையை அடிக்கடி சொல்லி வரும் போது அது உங்களுக்குத் தெளிவாகின்றது

1.அருள் உணர்வை நீங்கள் வளர்க்க வேண்டும்…
2.மறந்து விடாதீர்கள்…! கருவில் வளரும் குழந்தைகளுக்கு அந்த அருள் ஞானத்தை உங்கள் வீட்டிலிருந்தே ஊட்டுங்கள்.
3.அருள் உணர்வு பெற்று அந்தக் குழந்தைகள் வளர்ந்தால் உங்கள் துயரைத் துடைப்பான்… அருள் ஞானத்தைப் பெருக்குவான்… உலக சக்திகளைப் பெறுவான்.
4.அவன் பேச்சும் மூச்சும் உங்களை நலமாக்கும் உங்கள் வீட்டையும் நலமாக்கும் ஊரையும் நலமாக்கும்.
5.இப்படி அருள் ஞானிகளை நாம் உருவாக்க வேண்டும்.

அப்பொழுது தான் இந்த உலகத்தில் விஞ்ஞானத்தால் வரும் அஞ்ஞான வாழ்க்கையில் இருந்து விடுபட்டு மெய் ஞான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்ல முடியும்.
1.மூவாயிரத்திற்கு முன் பேரருள் பெற்ற உலகமாக மாறி
2.இங்கே படர்ந்துள்ள இருள்களை அகற்றி விட்டுப் பேரின்ப பூமியாக மாறும்.

அதே சமயத்தில்… மூவாயிரம் ஆவதற்கு முன் இந்த பூமியில் நீர் நிலைகள் அதிகமாகிவிடும். நாளடைவில் இது சூரியனைக் கடந்து சென்றுவிடும்… பனிப்பாறைகளாக மாறும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் நுகர்ந்த அருள் உணர்வுகள் வளரப்படும் பொழுது இந்த அருள் ஞானிகள் உணர்வின் தன்மை “துருவ நட்சத்திரத்துடன் நாம் இணையும் பருவம் வரும்…”

ஒளியின் சக்தியாக… என்றும் நிலையாக… பிறவி இல்லா நிலையாக… பேரின்ப நிலையாக… என்றும் அருள் ஞான உணர்வாக… வரும் இருளை அகற்றிடும் உணர்வாக… “என்றும் ஏகாந்தமாக வாழும் சக்தியை” நாம் பெறுகின்றோம்.

ஆகவே அருள் ஞானக் குழந்தைகளைக் கருவிலேயே உருவாக்கி விடுங்கள். அருள் உணர்வைப் பெருக்கச் செய்யுங்கள்.

1.இந்தப் பூமி அதனுடைய செயலைக் கூடிய சீக்கிரம் இழக்கத் தான் போகின்றது.
2.எப்படித்தான் இருந்தாலும் இந்த உடலும் நாளடைவில் பாழடையத்தான் போகின்றது.

இந்த உண்மைகளை உணர்ந்து நம்முடைய எல்லை… பிறவி இல்லா நிலை… சப்தரிஷி மண்டலம் அடைவது தான்…! என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு வாழுங்கள்.

ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்தால் அது நம் உடலில் உள்ள தீமை செய்யும் அணுக்களை உணவாக எடுக்கும்

ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்தால் அது நம் உடலில் உள்ள தீமை செய்யும் அணுக்களை உணவாக எடுக்கும்

 

1.தீமைகளை வென்றவன் அருள் ஞானி.
2.அதை வைத்து நமக்குள் உருவாகும் தீமைகளைக் கொல்ல வேண்டும்.

ஒன்றை ஒன்று புசித்துத் தான் ஒவ்வொன்றும் வாழ்கின்றது. ஆடு சாந்தமாந உணர்வாக இருந்தாலும் புலி அதைக் கொன்று புசிக்கத்தான் செய்யும்.

இதைப் போல நமக்குள் நல்ல உணர்வுகள் இருப்பினும்
1.நாம் எடுத்துக் கொண்ட வேதனையான உணர்வுகளால் உடலுக்குள் டி.பி.நோய் வந்து விட்டால்
2.உடலில் உள்ள நல்ல அணுக்களை அது கொன்று புசிக்கத் தான் செய்யும்…
3.எலும்புகள் இருக்காது காணாமல் போய்விடும்.

ஆக நாம் எடுத்துக் கொண்ட வேதனைகள் உடலில் இவ்வாறு உருவாகி விட்டால் அதைக் கொன்று புசித்து விடும்.

மனிதனில் விளைந்த வேதனையான தீமையான மூச்சலைகள் அங்கே தாவர இனங்களில் பட்டு நாம் எதைப் புசித்தோமோ அதைக் கொன்று நமக்கு உணவில்லாத படி செய்து அந்த இனத்தைக் கொன்று விடுகின்றது.

அதாவது நம் உடலுக்குள் மட்டுமல்ல… தாவர இனத்திலும் இதைத்தான் கொல்கிறது.

அக்ரிகல்ச்சரில்… தென்னை மரத்திலே அதனுடைய கருவுலகை எடுத்து அதிலுள்ள சாறை எடுத்து அதிலே தீமை விளைவிக்கும்
1.“ஓலைக் கருகல்” என்ற நிலையில் அந்தச் சத்தினை உறிஞ்சிச் சாப்பிடும் கொசுக்களையோ பூச்சிகளையோ கொல்ல
2.விஞ்ஞானிகள் மற்ற உணர்வைச் சேர்த்து அதிலே கருவை உண்டாக்குகின்றார்கள்.

விஞ்ஞான அறிவு கொண்டு மரத்திலே இணைத்த பின் இது படர்ந்து ஓலைகளின் சத்தை எடுக்கும்… ஆனால் அதே சமயத்தில் ஓலைச் சத்தைத் தின்று கொண்டிருக்கும் பூச்சிகளையும் கிருமிகளையும் இது கொன்று புசித்துக் கொண்டே இருக்கும்.

அது செத்த பிற்பாடு தான் இதுவும் போகும்… பின் மடியும்…!

அதே மாதிரித் தான் அந்த மகரிஷிகள் உணர்வின் சத்தை அந்த மெய் ஞானிகள் அருள் உணர்வை நமக்குள் எடுத்துக் கொண்டு உடலில் விளைய வைத்த பின்
1.மனிதனாக உருவாக்கிய நல்ல உணர்வின் அணுக்களை “எது கொன்று புசிக்கின்றதோ…”
2.அது இருக்கும் வரையிலும் அருள் ஞானிகள் உணர்வு அதைக் கொன்று புசித்துக் கொண்டே இருக்கும்.
3.பின் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலைத்தே இருக்கும்.

விஞ்ஞானத்திற்கு மெய் ஞானத்திற்கும் உள்ள நிலைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

உணவுக்காக விஞ்ஞானி அவ்வாறு செய்கின்றான். ஆனால் என்றும் நிலையான சரீரத்தை அதாவது “நம்மை ஒளியின் சரீரமாக…” நிலைக்கச் செய்கின்றான் மெய் ஞானி.

மின்னலுக்குள் இருக்கும் வீரிய சக்தியும்… நம் உயிரின் இயக்கச் சக்தியும்

மின்னலுக்குள் இருக்கும் வீரிய சக்தியும்… நம் உயிரின் இயக்கச் சக்தியும்

 

எதிர்நிலையான நட்சத்திரங்கள் மோதலாகும் பொழுது மின்னலாகிறது. அந்த மின்னல் மரத்திலே பட்டால் அதற்குள் ஊடுருவித் தன் இனத்தை எடுத்துக் கருக்கி விடுகின்றது.

நிலத்தில் பட்டால் பூமியின் நடுமையம் சென்று அடைகின்றது. இப்படி அதீதமான நிலைகளில் உள் சென்று எதிர்மறையான நிலைகள் கொண்டு பூமியின் நடு மையத்திற்குள் சென்றால் எந்தப் பகுதியில் ஆகின்றதோ அங்கே கொதிகலாகி அங்கே பாறைகள் உருகுகின்றது.

மேல் பகுதி உருகி ஆவியாக மாறும் போது பூமி வெடிக்கின்றது. மேல் பாறைகள் கீழே வருகின்றது. நிலநடுக்கம் என்று அடிப்பாகத்தில் செல்கின்றது. இதற்குள் அடக்கி விடுகின்றது.

1.இந்த மின் அணுக்களின் கதிர்கள் கடலிலே பதியப் படும் பொழுது மணலாக மாறுகின்றது.
2.கடல் நீருக்குள் இருக்கும் ஹைட்ரஜன்… உப்பின் சத்து அதனுடைய வீரியத்தைத் தணிக்கிறது.
3.கடல்களில் பாயும் நிலைகள் மணலாக மாறி வருவது… மின் அணுக்களின் துகள்கள் வரப்படும் பொழுது யுரேனியம் என்று எடுக்கிறர்கள்.
4.எந்தெந்த நட்சத்திரத்தின் கலவையாகி எதிர்நிலையாக ஆனதோ அந்த மணலில் உருவாக்கப்படுகின்றது.

அந்த மணலை எடுத்து அணுவைப் பிளக்கின்றான் விஞ்ஞானி. அது மற்றொன்றை அடக்கப்படும் பொழுது அதிலே வருவதைப் பிளந்து எடுக்கின்றான். அதிலே சிதைந்த உணர்வின் தன்மையைத்தான்
1.கம்ப்யூட்டரில் இந்த உணர்வைப் பாய்ச்சி ஒலி அதிர்வுகளைக் கண்டு உணர்வின் செயலாக்கங்களுக்கு
2.அந்த நுண்ணிய கதிரியக்கப் பொறிகளை மாற்றும் போது தான் கம்ப்யூட்டர் என்று வருகின்றது.

அது அவரவர்கள் கண்டறிந்த உணர்வின் தன்மையை இயற்கையின் நிலைகள் எப்படி வருகிறது…? என்பதை
1.மின் அணுவின் கதிரியக்கங்களின் நிலைகளை ஒரு காந்தப் புலன் அறிவால் கவரப்பட்டு
2.அதையே கம்ப்யூட்டர் காந்தத்தால் கவரும் உணர்வின் தன்மையைப் பதியச் செய்து உணர்வின் அறிவான பின் எதிரொலி
3.மின் அணுவைப் போன்று தோன்றும்… அந்த உணர்வுக்கு ஒப்ப எது ஆகின்றதோ அந்த ஒவ்வொரு உணர்வுக்கொப்ப உருவத்தையும் காட்ட முடியும்.

100 ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் இங்கே வாழ்ந்தார்கள் என்றால் அந்த வம்ச வழிகளிலே இருந்தால் “அந்த உருவங்கள் எப்படி இருக்கின்றது…?” என்பதைக் காணலாம்.

இந்த உணர்வின் தன்மை பதிவாக்கிக் கம்ப்யுட்டரில் எதிர் அலைகளை எடுத்துக் கொண்டால் ஒலியின் அதிர்வுகளை எடுத்துக் கொள்கின்றது. ஆயிரம் மடங்கு அதைக் கூட்டுகின்றான்.

மீண்டும் அந்த உணர்வின் எதிரொலிகள் வரப்படும் பொழுது அவர்கள் வாழ்ந்த உணர்வுகள் அங்கே பதிந்ததை எடுத்து மனித ரூபத்தையே கொடுக்கின்றது… விஞ்ஞானி அதைக் காட்டுகின்றான்.

இதைப்போன்று அன்றைய மெய் ஞானிகள் உணர்வையும் நாம் காண முடியும்.
1.அவனில் விளைந்த உணர்வை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது
2.அந்த உணர்வைத் தொடர்ந்து எடுத்தால் அவன் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை இங்கே வந்து
3.அவன் ஒளியான உணர்வைப் பெற்று நீங்களும் ஒளியாக முடியும்.

விஞ்ஞான அறிவு எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது… சாமி எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறார்…! என்று சிலர் நினைப்பார்கள்.

விஞ்ஞான அறிவு எப்படி இருக்கின்றது…? மெய்ஞான அறிவு எப்படி இருக்கின்றது…? குருநாதர் இந்த இயற்கையின் நிலைகளை அதனுடைய இயக்கத்தை எப்படி…? என்று எமக்கு உணர்த்தியதைத் தான் உபதேசிக்கின்றோம்.

1.காலம் வரும்போதெல்லாம் உங்கள் உணர்வுக்கொப்ப… காலத்தின் மாற்றத்திற்கொப்ப அதை நுகர்ந்து வரும் போது
2.அந்தந்தக் காலத்தின் உணர்ச்சிகள் அதைக் கவர்ந்து உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

முந்திச் சொன்னதெல்லாம் வேறு விதமாக இருக்கும். இந்த உணர்வின் வளர்ச்சி வரப்படும் பொழுது இயற்கையின் நிலைகள் உங்களை நீங்கள் அறியும் நிலைக்கு வர வேண்டும் என்பதற்குத்தான் இப்போது இதை உணர்த்துகின்றோம்.

என்றைக்கும் நிலையானது இந்த உயிர்.
1.அந்த உயிருடன் ஒன்றிய ஒளியான உணர்வின் தன்மை ஆக்கப்பட வேண்டும்.
2.பிறவியில்லா நிலை அடைந்த அருள் ஞானிகள் உணர்வைச் சேர்ப்பிக்கத்தான் இதை உபதேசிக்கின்றோம்.

ராம ராஜ்யம்

ராம ராஜ்யம்

 

ஒருவன் குற்றம் செய்தால் அவனைத் தண்டிக்கின்றோம். இது அரசர்கள் காட்டிய வழி. ஒருவன் ஒரு தவறு செய்கின்றான் அல்லது பிறருக்கு இம்சைகளைச் செய்கிறான் என்றால் அவனுக்கு இம்சை தரக்கூடிய தண்டனைகளையே தந்தனர் அன்றைய அரசர்கள்.

ஆனால் மகரிஷிகளோ…
1.ஒருவர் உடலில் அறியாது புகுந்த தீமை விளைவிக்கக் கூடிய உணர்வினை நீக்கி
2.உயர்ந்த கருத்தினை அவரினுள் செலுத்தி அவர்தம் உடலில் வரும் தீமையினை அடக்கி அதற்குத் தண்டனை அளித்து
3.இணைந்து செயல்படும் உணர்வினை வளர்த்துக் கொண்டார்கள்.

அதையே மக்களுக்கு உணர்த்தினார்கள்.

மகாத்மா காந்தி நம்மை இயக்கும் தீய உணர்வுகளில் இருந்து நாம் விடுபட வேண்டும் என்று சொன்னார். அதே சமயம் “ஆங்கிலேயர்களும் நம் சகோதரர்களே” என்று சொல்லி அவர்களிடம் இருக்கும் “மற்றவர்களை அடிமைப்படுத்தும் உணர்வைத்தான் விலக்க வேண்டும்” என்று பாடுபட்டார்.

1.உலக மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து
2.அந்த உடலில் இருக்கும் நல்ல உணர்வின் தன்மையை
3.சகோதர உணர்வுடன் பாவிக்க வேண்டும் என்பதைத்தான் “ராம ராஜ்யம்” என்றார்.

நாம் எடுக்கும் உயர்ந்த குணங்கள் எதுவோ அது மகிழ்ந்திடும் நிலையாக நமது செயல் இருக்கும் பொழுது… நம் உடலில் இருக்கும் சலிப்பு, சங்கடம், கோபம், குரோதம் போன்ற உணர்வுகள் அனைத்தையும் நீக்கி மகிழ்ச்சி என்ற உணர்வுகளில் நாம் எண்ணும் பொழுது நமக்குள் அது ஒருக்கிணைந்து நம்மை மகிழ்விக்கச் செய்கின்றது.

இது தான் ராம ராஜ்யம்.

வான்மீகி மகரிஷி கொடுத்தருளிய இராமாயணக் காவியத்தின் உண்மையின் தன்மை கொண்டுதான் காந்திஜி தமது உயிர் உடலை விட்டுப் பிரியும் கடைசி நொடி வரையிலும் வாழ்ந்தார்.

1.எல்லோரையும்… எல்லாவற்றையும் காக்கும் பல உணர்வுகளுடனும் பிறரைத் துன்புறுத்தா நிலைகளிலும்
2.அஹிம்சைத் தத்துவத்தைக் கடைப்பிடித்துத் தென்னப்பிரிக்காவில் வாழும் மக்களுக்கு நீதி பெற்றுத் தந்தபின்
3.இந்திய நாட்டைக் காக்க வேண்டும் என்ற ஆசை காந்திஜிக்கு வந்தது.

இந்திய மக்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபட வேண்டுமென்றால் பல உயிர்கள் பலியாக வேண்டியிருக்கின்றது என்ற உணர்வினை காந்திஜி உணர்ந்து… சாந்தத்துடன் ஞானத்துடன் விவேகத்துடன் மக்களை நல்வழிப்படுத்தினார்.

அதாவது… அன்னிய நாட்டிடமிருந்து நமது மகரிஷிகள் வெளிப்படுத்திய உணர்வினை மீட்டு அதை மக்களுக்குக் கிடைக்கச் செய்து மக்களை நல்வழியில் வாழச் செய்ய வேண்டுமென்ற முடிவை காந்திஜி தமக்குள் எடுத்து இந்திய மக்களைப் பண்படும்படி செய்தார்.

1.காந்திஜி “உலக மக்கள் அனைவரும் நம் சகோதரர்” என்பதை தமது எண்ணம் சொல் செயலில் வைத்து
2.இந்திய மக்கள் அனைவரும் தங்களிடமுள்ள பகைமை உணர்வுகளை நீக்கி
3.அனைவரையும் அரவணைக்கும் தன்மை பெற வேண்டும் என்று எண்ணி
4.இந்திய மக்களைச் சீர்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மன உறுதி கொண்டு செயல்படுத்தினார்.

இதனால் காந்திஜி உலக அரங்கில் அனைவருடைய உள்ளத்திலும் இடம் பிடித்தார்.

காந்திஜி “எதிரிகளையும்” கடவுளாக மதித்தார். அவர் தனக்குள் பகைமை உணர்வுகள் இயக்காதபடி தடுத்து… சாந்தம் ஞானம் விவேகம் எனும் நல்லுணர்வுகளைத் தமது உடலுக்குள் சுதந்திரமாக்கினார்.

ஞானத்தின் வழி கொண்டு நல் உணர்வுகளைத் தமக்குள் சுதந்திரமாக்கி அனைவரையும் அன்புடன் அரவணைக்கும் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வினைக் காந்திஜி தனக்குள் ஓங்கி வளரச் செய்தார்.

1.காந்திஜியின் உணர்வுகளை நாம் நுகர்ந்தோம் என்றால் உலகைக் காத்திடும் பேரருளை நாம் அனைவரும் பெறுவோம்.
2.காந்திஜியின் வழியில் சென்றோம் என்றால் நமது குடும்பத்தில் பகைமையை அகற்றி ஒன்றுபட்டு வாழும் தன்மை பெற முடியும்.

காந்திஜி மதங்கள் இனங்கள் என்ற பேதமில்லாது நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்றும் “சீதாராமா”என்றும் சொல்லத் தொடங்கினார்.

“சீதாராமா”என்று நாம் மகிழ்ச்சியான உணர்வை நுகர்ந்தால் நம்மிடம் மகிழ்ச்சியின் தன்மை வெளிப்படுகின்றது. மகிழ்ச்சியான சொல் வெளிப்படும் பொழுது கேட்போர் உணர்வுகளிலும் மகிழ்ச்சி அடைகின்றது.

இதைத் தான், காந்திஜி “ஹரே… ராமா…” என்று அடிக்கடி சொன்னார்.
1.“பிறரைத் துன்புறுத்தி வாழ்வதைக் காட்டிலும்
2.அனைவரையும் இன்புறச் செய்து வாழ வேண்டும்” என்ற உணர்வை ஓங்கி வளர்த்தவர் காந்திஜி.

எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உணர்வை நாம் எடுத்தால் அதன் உணர்ச்சிகள் நமது உடலுக்குள்ளும் நல்லதாகச் செய்யும்… மக்களுக்கும் நல்லது செய்யும் என்று காந்திஜி எண்ணினார்.

அதன் வழி அவருடைய சொல்லும் அவருடைய செயலும் ஒன்றாக இருந்தது.

மக்கள் ஏகோபித்த நிலையில் தவறு செய்யும் நிலை வரும் பொழுது காந்திஜி உண்ணாவிரதம் இருந்தார். காரணம் உண்ணாவிரதம் இருப்பதன் மூலம்
1.மக்களிடையே தம் மீதான பாசத்தை வரவைத்து
2.அதன் வழியில் மக்களுக்கு உண்மைகளைப் புரிய வைத்து
3.பிறருக்குத் தீங்கு செய்யாத நிலைகளையும்
4.தீண்டாமை என்ற நிலைகளை மறக்கச் செய்து அனைவரையும் அரவணைத்து வாழும் தன்மையும் பெற வேண்டும் என்ற
5.“உறுதி கொண்ட உணர்வை” மக்களுக்கு ஊட்டினார்.

நாம் ஒவ்வொரு ஞானியரையும் போற்றித் துதிக்கின்றோம்… காந்திஜியையும் போற்றித் துதிக்கின்றோம். ஆனால் அவர்கள் காட்டிய அற வழிகளை நமது வாழ்க்கையில் கடைபிடிப்பதில்லை.

ஒவ்வொரு காலத்திலும் மகான்கள் தோன்றுகின்றனர். ஆனால் மகான்கள் இருக்கும் வரை போற்றுகின்றோமே தவிர அவர்கள் மறைந்த பின் அவர்களைச் சுத்தமாக மறந்து விடுகின்றோம்.

இன்று மனிதர் ஒவ்வொருவரும் தனக்குச் செல்வத்தைத் தேட எத்தனையோ வழிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றனர். செல்வத்தைச் சேர்த்தபின்… அவர்களின் குடும்பத்திற்குள் செல்வத்திற்காகப் போரிட்டுக் குடும்பத்திற்குள் ஒற்றுமையற்ற நிலை உருவாகிச் செல்வத்தைச் சீரழிக்கச் செய்யக்கூடிய நிலையே நடக்கின்றது.

இது போன்ற நிலை பெரிய செல்வந்தர்கள் வீடுகளில் இப்பொழுதும் இருப்பதைக் காணலாம். இப்போர் முறைகளினால் செல்வம் கரைகின்றது. அந்த உணர்வுகள் வளர்கின்றன. அன்பு பண்பு என்ற நிலைகள் மறைகின்றன.

இது போன்ற நிலைகள் உலகம் முழுவதற்கும் இருக்கின்றது.

இவையெல்லாம் யாம் ஏன் சொல்கிறோம் என்றால் நமது நூற்றாண்டில் வாழ்ந்த காந்திஜி ஒரு மகான் என்பதை விட “ஒரு ரிஷி” என்றே சொல்லலாம்.

உலக மக்கள் அனைவரும் தெளிந்த நிலைகள் கொண்டு சகோதர தத்துவத்துடன் வாழ வேண்டுமென்று ஒரே நிலையில் இருந்தவர் காந்திஜி.

காந்திஜியே ஒரு சமயம் “அன்னியனே வெளியேறு…!” என்று சொல்லும் தன்மை வந்து விட்டது. சாந்தமும் விவேகமும் காந்திஜி கொண்டிருந்தாலும் அன்னியருடைய ஆட்சி மிகவும் கடுமையான நிலைகளில் வரும் பொழுது காந்திஜி எல்லா மக்களையும் ஒன்று திரட்டி, “அன்னியனே வெளியேறு” என்ற கோஷத்தை எழுப்பினார்.

அன்னியன் என்றால்
1.தீமை செய்வோர் தீமை செய்யும் சக்திகளை எல்லாம் வெளியேற்றி
2.அன்புடன் அரவணைக்கும் நிலையினை நமது நாட்டில் உருவாக்க வேண்டும் என்று காந்திஜி கூறினார்.

காந்திஜி யாரையும் அன்னியமாக எண்ணவில்லை. மற்றவரை யார் பகைமை உணர்வுடன் பார்க்கின்றனரோ அவர்கள் தான் அன்னியர் ஆகின்றனர். இந்த அன்னியத்தில் இருந்துதான் விடுபட வேண்டும் என்று “அன்னியர்கள் வெளியேற வேண்டும்” என்று சொன்னார்.

நாம் அனைவரும் காந்திஜியின் கொள்கைகளை நமது வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். நாட்டைக் காக்கும் பண்புகள் நமக்குள் வளர வேண்டும்.

நாட்டில் அன்பு கலந்த உணர்வுகள் வளர வேண்டும் என்ற அருள் உணர்வுகளைத் தங்களிடத்தில் வளர்க்கும் அன்பர்கள் அனைவரும்
1.மகாத்மா காந்திஜியின் அருள் சக்தி பெற்று… அனைவரையும் அரவணைத்து வாழும் அருள் சக்தி பெற்று
2.இந்த வாழ்க்கையில் சாந்தத்துடன் ஞானத்துடன் விவேகத்துடன் வாழ்ந்து
3.தெளிந்த ஞானமும் மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தி பெற்றுப் பேரானந்த பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.

தெய்வச் செயல்

தெய்வச் செயல்

 

தீமையானவற்றை நாம் காணும் பட்சத்தில்
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கும் பொழுது
2.நம்மிடத்தில் உணரப்பட்ட தீமை துடைக்கப்படுகின்றது.

இதைத் தான் “தெய்வச் செயல்” என்பது.

மேலும் யார் நமக்குத் தீமை செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றாரோ அவரிடத்தில் “நல்ல உணர்வுகள் வளர வேண்டும்” என்று எண்ணி அதனின் உணர்வை நாம் பரப்பும் பொழுது அங்கே கடும் சொல் வராது,

அது கனிந்திடும் நிலையாகக் கேட்போரின் உணர்வில் இனிமையானதாகப் பாய்ந்து அவரிடத்தில் இருக்கும் தவறை மாற்றி அவர் நம் மீது கொண்ட பகைமையை நீக்கி நட்பினை வளர்க்கும்.

பிறவிப் பெருங்கடல் நீந்தி தன் ஞானத்தால் பிறவி இல்லாப் பெரு நிலையை அடைந்து உயிருடன் ஒன்றி ஒளிச்சரீரமாக இன்றும் விண்ணிலே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மகரிஷிகள்.

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் ஏக்கத்துடன்
2.நமது நினைவின் ஆற்றல் அடிக்கடி அவர்கள் பால் செல்லும் பொழுது
3.அவர்களிடம் நமது உயிரான்மா இணைந்து அங்கே சுழலும் சக்தியாக
4.”பிறவா நிலை” என்னும் நிலையை அடையச் செய்கின்றது.

அவ்வாறில்லாமல் நமக்குத் தீங்கு செய்பவரைப் பற்றியே நாம் எண்ணிக் கொண்டிருந்தால் இந்த உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிரான்மா இந்த உடலில் வாழ்ந்த காலத்தில் எவரைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தோமோ அவரின் உடலுக்குள் இந்த உயிரான்மாவை அழைத்துச் சென்றுவிடும்,

பின் அந்தத் தீங்கின் விளைவை அனுபவிக்கச் செய்து அதன் மூலம் அவரிடத்தில் விளைந்த உணர்வின் சத்தை இந்த உயிரான்மா கவர்ந்து அவரின் உயிரான்மாவையும் வீழ்த்தி இதுவும் வீழ்ந்து பிறிதொன்றைக் கொன்று புசிக்கும் உயிரினங்களின் ஈர்ப்பிற்குள் சிக்கி அதனின் சரீரத்தை இந்த உயிரான்மா பெறுகின்றது.

ஆகவே நாம் தேய்பிறை போன்று இல்லாது வளர்பிறையாக
1.மெய் ஞானத்தை வளர்க்கும் விதமாக மெய் ஞானிகளின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்து வாழ்வில் வரும் தீமைகளை ஒடுக்கி
2.விண்ணில் நிலைத்த ஒளி சரீரத்துடன் இருந்து வரும் மகா ஞானிகளின் ஈர்ப்பில் கலந்து நாமும் அந்த ஓளிச்சரீரமாக வாழ்வோம்

இதன் வழியில் கூட்டுத் தியானங்களில் ஏங்கித் தியானிக்கும் அனைத்து உயிராத்மாக்களுக்கும் எமது ஆசீர்வாதங்கள்.

போகர் பல சிலைகளை உருவாக்கினார்… ஒன்றல்ல…!

போகர் பல சிலைகளை உருவாக்கினார்… ஒன்றல்ல…!

 

போகர் முருகன் சிலையைச் செய்திருக்கின்றார்.
1.மற்ற தாவர இனச் சத்துக்களை எடுத்துக் காயகல்பமாக உருவாக்கி… தான் அந்தக் கூட்டிலேயே இருந்து…
2.தான் சக்தி பெறும் வரையிலும் வேறு ஒரு உடலுக்குள் மாறவில்லை.
3.வெளியில் செல்வது மீண்டும் இந்தக் கூட்டிற்குள் வருவது மீண்டும் தான் சக்தியைப் பெருக்குவது.

இப்படித்தான் விண்ணினுடைய ஆற்றலை 27 நட்சத்திரங்களின் சக்தியையும் நவக் கோள்களின் சக்தியையும் எல்லாவற்றையும் இணைத்துத் தான் முருகன் சிலையை வடித்தது. அதிலே பாதரசங்களைச் சேர்க்கப்பட்டு முருகன் சிலையை வடித்து முழுமையாக்கப்பட்டது.

உணர்வின் தன்மையை ஒளியாக எப்படி மாற்றுவது…? என்பதற்குத் தான் சிலையை உருவாக்கி
1.அதே ஆவியை அவர் சுவாசித்து பகைமை உணர்வுகளை மாற்றி அதே ஒளியை எடுத்து அவர் சுவாசித்தார்.
2.குகைகள் இருக்கப்படும் பொழுது இந்தச் சிலையை வைத்திருக்கின்றார்.
3.அதன் மேல் சொட்டு சொட்டாக தண்ணீர் விழும்படி செய்து அந்த உணர்வின் சத்தை நுகர்வதும்
4.தனக்குள் அந்த அணுக்களின் தன்மை மாற்றுவதும் “இப்படிப் பல சிலைகள் உண்டு…”

அதே போல் சிலையை மக்களுக்குச் செய்யப்பட்டு மனிதனுடைய உணர்வுகளை மாற்றுவதற்கும் அவன் நினைவு வருவதற்கும் செய்தார் போகர். அவர் உருவாக்கிய முருகன் சிலை மீது அன்று பாத்திரத்தை வைத்திருப்பார்கள்… தண்ணீர் அது மேலே விழும்.

இப்பொழுது அது எல்லாம் இல்லை. கோயிலாகக் கட்டிய பின் அது எல்லாம் இல்லை. கோவில் கட்டுவதற்கு முன் வெறும் சிலை தான் இருந்தது.

பாத்திரத்திலிருந்து சிலை மீது தண்ணீர் சொட்டு சொட்டாக விழுந்து கொண்டே இருக்கும்.
1.நெகட்டிவ் பாசிட்டிவ் அதிலிருந்து வரக்கூடிய சத்து ஆவியாக மாறும்.
2.அதை நாம் நுகர்ந்து எடுக்கப்படும் பொழுது நமக்குள் இருக்கும் விஷத்தன்மைகளைப் போக்கும்.

இப்படித்தான் காயகல்பமாக அவர் உருவாக்கப்பட்டு அந்த உணர்வின் சக்திகளைத் தனக்குள் சேர்த்து நட்சத்திர மண்டலங்களை எண்ணி ஒளியின் சரீரமாகப் பெற்றது.

இன்னொரு உடலுக்குள் செல்லாதபடி அந்த உடலில் இருந்து சமாளிக்க வேண்டும் என்று செயல்படுத்தியவன் போகன். அகஸ்தியன் தன் உணர்வை எடுத்து உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக முதன் முதலில் விண் சென்றவன் துருவன் துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமாக ஆனது.

நம் குருநாதரும் பல உடல் தாவி வந்தவர்தான்… கூடு விட்டு கூடு பாய்ந்தவர். அபிராமிபட்டர் ஈஸ்வரபட்டர் என்று இப்படி ஒரு ஐந்து ஆறு உடல்களை எடுத்து வந்தவர் தான்.

அதிலேயும் பைத்தியக்காரராகத்தான் இதிலேயும் அப்படித்தான் இருந்தார். ஆனால் “தன்னுடைய காரியம் எதுவோ…” அதை சாதித்துக் கொண்டே வந்தார்.

தன் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டால் என்ன செய்வது…? என்று உணர்ந்து கடைசி உடலாகச் சக்திகளை சேமித்த பிற்பாடுதான் ரகசியங்களை சொல்லி அதை எப்படி எடுக்க வேண்டும்…? என்று எம்மிடம் சொன்னார்.

தான் உடலை விட்டுச் சென்ற பிற்பாடு அது எப்படி ஒளிச் சரீரம் ஆக வேண்டும்…? என்று
1.அதற்குண்டான மார்க்கத்தைக் காட்டி
2.அந்த உந்து விசை கொண்டு விண் செலுத்தும் படிச் செய்தார்.

தீமை தரக்கூடிய அணுக்களை நன்மை செய்யும் அணுக்களாக மாற்ற வேண்டும்

தீமை தரக்கூடிய அணுக்களை நன்மை செய்யும் அணுக்களாக மாற்ற வேண்டும்

 

ஒருவன் தீமையைச் செய்கிறான் என்றால் அவனிடம் உள்ள தீமையின் உணர்வுகளை வீழ்த்துவதற்குப் பதில் தீமை செய்தவனின் உடலையே சாய்த்துவிடும் நிலை வருகிறது என்று தெளிவாகக் காண்பித்தருளினார் நமது குருநாதர்.

தீமை தரக்கூடியவைகளாக இருந்தாலும் மனிதன் அவைகளைத் தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளும் வல்லமை வாய்ந்தவன். இன்றைய விஞ்ஞானம் அதை நிரூபிக்கின்றது.

அதே போன்று தீமை செய்வோரின் உணர்வுகள் நமது உணர்வில் கலந்து விட்டால் அந்தத் தீமையை விளைவிக்கும் உணர்வுகள் நமக்குள் விளையாது தடுத்துச் சமப்படுத்தும் நிலை பெற வேண்டும்.

1.மகரிஷிகள் தம்மிடத்தில் தீமையின் உணர்வுகள் வந்து மோதும் பொழுது அவைகளைச் செயலற்றதாக்கித் தீமையின் உணர்வுகளை ஒடுக்கி
2.அவைகளுடைய செயலாக்கங்களை மாற்றித் தம்முள் நல்லுணர்வினை வலிமை மிக்கதாக மாற்றியவர்கள்.

அவர்களைப் போன்று நாம் நம்முள் தீமையின் உணர்வுகளை ஒடுக்குகின்ற பொழுது ஒருவன் நமக்கு எத்தகைய தீமைகளைச் செய்து கொண்டிருந்தாலும் அது நம் உடலுக்குள் தீமை விளைவிக்கும் அணுக்களை உருவாக்குவதில்லை.

மகரிஷிகளின் அருளுணர்வுகள் நமது உடலில் கலக்கப்படும் பொழுது
1.நமது உடலில் தீமைகளை உருவாக்கும் அணுக்கள் விளைந்திருப்பினும்
2.அவைகளை நமக்குள் நன்மை பயக்கும் அணுக்களாக மாற்றுகின்றன.

உதாரணமாக… உடலுக்கு ஆரோக்கியம் தரும் நல்ல மருந்துடன் சிறிது விஷத்தைக் கலக்கப்படும் பொழுது விஷம் நல்ல மருந்திற்கு ஊட்டச்சக்தியாக மாறுகின்றது.

எந்த மருந்தைச் சிறிது விஷத்துடன் கலந்து கொடுக்கின்றோமோ அந்த விஷம் ஊடுருவி இந்த நல்ல மருந்தின் தன்மையை உடலெங்கும் பரவச் செய்கின்றது.

நோய்வாய்ப்பட்ட மனிதனின் உடலில் மருந்தினைச் செலுத்தும் பொழுது மருந்துடன் கலந்துள்ள விஷம் மருந்தினை எடுத்துச் சென்று உடலில் உள்ள வேதனையை உருவாக்கும் உணர்வின் அணுக்களை உணவாக உட்கொண்டு தன் இனத்தை உருவாக்கும் தன்மையால் நல்ல மருந்தின் தன்மை அடர்த்தியாகி வேதனையை உருவாக்கும் அணுக்களை வளரவிடாமல் தடுக்கச் செய்கின்றது மருந்துடன் கலந்துள்ள விஷம்.

இதைப் போன்று ஞானிகள் காண்பித்த வழியில் அருள் ஞானியின் உணர்வை நம் எண்ணத்துடன் கலந்து கொண்டே வர வேண்டும். அதனால்
1.நாம் எத்தகைய தீமையின் உணர்வைக் கண்டறிந்தோமோ அதனுடன்
2.மகரிஷியின் ஆற்றல் மிக்க சக்தி நாம் பெற வேண்டும் எனும் உணர்வினை இணைத்து நம் உடலுக்குள் செலுத்தி விட்டால்
3.அருள் ஞானியின் உணர்வுகள் இந்த விஷமான நிலையை ஒடுக்கிவிட்டு நமக்குள் வலு கொண்ட நிலையாக மாறுகின்றது.

இந்த உண்மைகளை எமது குருநாதர் எமக்கு உணர்த்தி எம்முள் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து எமக்குள் இதனின் நினைவின் ஆற்றலை பதியச் செய்து “துருவ மகரிஷிகளின் ஆற்றலை நீ பருகு…” என்றார்.

யாம் காட்டினுள் இருந்த பொழுது பல உயிரினங்கள் தன் பசியைத் தணிப்பதற்காக மற்ற உயிரினங்களைத் துரத்துவதும் மற்றவைகள் அஞ்சி ஓடுவதும் சிக்கிக் கொண்டவைகள் ஓலமிடுவதும் போன்றவைகளைக் கண்டு யாம் அச்சப்படும் நிலை உண்டானது.

அவைகள் செய்த துயர நிலைகளால்
1.துயரத்தை உருவாக்கும் அணுக்கள் எமக்குள் எப்படி விளைகின்றது…? என்றும்
2.இதை உடனடியாக மாற்றுவதற்கு யாம் எவ்வாறு செயல்பட வேண்டும்…? என்றும் எமக்கு குருநாதர் உபதேசித்தார்.

மகரிஷிகள் தமக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வை உன்னிடத்தில் வளர்த்துக் கொண்டால் மற்றொன்றைக் கொன்று புசிக்கும் அந்த உயிரினங்கள் உன்னைப் பார்த்தாலும் உன்னுள் வளர்த்துக் கொண்ட உணர்வின் மணம் கண்டு அது அஞ்சி ஓடும்.

அச்சுறுத்தும் உணர்வுகள் உனக்குள் வந்தாலும் அதை அடக்கி ஒளியாக உனக்குள் மாற்றுகின்றாய்.

1.எதனின் உணர்வை உனக்குள் அடக்குகின்றாயோ அதனின் உணர்வுகள் உனக்குள் வலு பெறும் பொழுது
2.வெளிப்படும் நுண்ணிய அலைகளை நுகரும் ஆற்றல் மற்ற உயிரினங்களுக்கு உண்டு.
3.இதனை நுகரும் உயிரினம் இவன் நம்மை அடக்கி விடுவான் என்ற உணர்வு கொண்டு
4.அது அஞ்சி ஓடும்…! என்ற நிலைப்படுத்தி அதை நிதர்சனமாகக் காண்பித்தார் குருநாதர்.

ஆகவே “மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் ஈஸ்வரா…” என்று எண்ணி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

நமக்குள் இருக்கும் துன்புறுத்தும் உணர்வின் அணுக்களுடன் மகரிஷிகளின் அருள் சக்தியை இணைக்கப்படும் பொழுது அது நம்முள் தீமைகளைக் கவர்ந்திடும் நிலைகளை மாற்றி அருள் மகரிஷிகளின் இனங்களைக் கவர்ந்திடும் நிலை வருகின்றது.

இப்படி மகரிஷிகளின் அருளுணர்வுகளை நம்முள் இணைக்கப்படும் பொழுது நமக்குள் தீமைகளை அடக்கிடும் தன்மை வருகின்றது.
1.நம்முள் அஞ்சிடும் நிலை மாறுகின்றது.
2.தெளிந்த மனதின் தன்மை நம்மில் உருவாகின்றது.

நாம் தெய்வமாக ஆவதற்குத்தான் ஆலயங்களை அமைத்தார்கள் ஞானிகள்

நாம் தெய்வமாக ஆவதற்குத்தான் ஆலயங்களை அமைத்தார்கள் ஞானிகள்

 

முன் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக இந்த மனித உடல் பெறும் பொழுது
1.நாம் எதை எண்ணுகின்றோமோ அதை ஜீவனாக்கும் திறன் பெற்றது.
2.ஒவ்வொரு பொருளையும் தெரிந்துணர்ந்து செயல்படும் திறன் பெற்றது.
3.அதனால் தான் சரஹணபவா குகா கந்தா கடம்பா கார்த்திகேயா என்று சொல்வது.

மனிதனின் ஆறாவது அறிவு சரஹணபவா…! நாம் சாப்பிடும் ஆகாரத்தில் கலந்துள்ள நஞ்சை மலமாக மாற்றிவிட்டு ஆறாவது அறிவாக நம் உடலில் அந்த மணம் வருகின்றது.

இந்த ஆறாவது அறிவின் மணம் கொண்டு சரஹணபவா குகா கந்தா பல பொருள்களை எண்ணினாலும் கடம்பா அதை உருவாக்கி கார்த்திகேயா என்று சொல்லும் பொழுது தெரிந்துணர்ந்து செயல்படும் திறன் பெற்றவன்.

அருள் ஞானிகள் உணர்வை எண்ணி அதை நமக்குள் ஜீவன் செய்யப்படும் பொழுது ஓ… அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் ஜீவனாக்கி அதை ம்… என்று நம் உடலாக ஆக்கும்போது அது ஓம் நமச்சிவாய…!
1.எல்லாவற்றையும் அடக்கிய அந்த அருள் ஞானியின் உணர்வுகளை நமக்குள் கணங்களுக்கு அதிபதியாக்கி
2.நமக்குள் சிறுமை ஊட்டும் உணர்வின் தன்மையை அடிமைப்படுத்தி மெய் ஞானிகள் உணர்வை நமக்குள் அதிபதியாக்கி
3.இந்த வாழ்க்கையில் தீமை அகற்றிடும் உணர்வாக விளைய வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொன்னார்கள் ஞானிகள்.

குடும்பத்தில் அறியாது சலசலப்பு சஞ்சலமும் வெறுப்பு வேதனைகள் வந்தாலும் இதை அகற்றிட ஆலயத்தை அருள் ஞானிகள் காட்டினார்கள். அங்கே விண்ணை நோக்கி ஏங்கிவிட்டுக் கோவிலுக்குள் சென்ற பின் தீப ஆராதனை காட்டப்படும் பொழுது பொருள்கள் தெரிகின்றது.

பொருளறிந்து செயல்படும் இச்சக்தி நாங்கள் பெற வேண்டும் இந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும். இந்த உண்மையை உணர்த்திய அருள் மகரிஷிகளின் உணர்வை நாங்கள் பெற வேண்டும் மலரின் மணம் பெற வேண்டும். இவை அனைத்தும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்னைப் பார்ப்போருக்கு அந்த நறுமணங்கள் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அங்கே வைத்திருக்கும் கனியைப் பார்க்கும் பொழுது கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெற வேண்டும் என் சொல்லைக் கேட்போர் வாழ்விலே இனிமை பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

1.ஆலயத்திற்கு வருவோர் அனைவரும் இந்தத் தெய்வ குணம் பெற வேண்டும்
2.அவர் குடும்பம் நலம் பெற வேண்டும்… அந்தக் குடும்பங்கள் அனைத்தும் மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

தொழில் நடத்தினால் எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவருமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். தெய்வ குணங்களைப் பெற வேண்டும் வாடிக்கையாளர் குடும்பங்களில் எல்லா நலங்களும் பெற வேண்டும். எங்கள் பார்வை எல்லோரையும் நலமாக்க வேண்டும். என்னைப் பார்ப்போருக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

இப்படி எண்ணி… நம் உயிரான ஈசனால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தை இந்த ஆலயத்தில் இருக்கும் நல்ல குணங்களைத் தெய்வமாக மதித்து நடக்கும்படி தான் அன்று ஆலயங்களை அமைத்தார்கள் ஞானிகள்.

நம்மையறியாது நமக்குள் வரும் வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு கோபம் குரோதம் என்ற தீமையான உணர்வுகள் அழுக்காக உடலுக்குள் சென்று நல்ல குணங்களை மாசுபடச் செய்யும் நிலையில் இருந்து நம்மைத் தூய்மைப்படுத்த விநாயகர் தத்துவத்தைக் காட்டினார்கள்.

நற்குணங்களின் தன்மையை… நறுமணத்தின் உணர்வைத் தனக்குள் எடுத்து நம்மைப் பிறர் பார்க்கும் பொழுது இந்த நறுமணங்கள் அங்கே வர வேண்டும். என் சொல்லைக் கேட்கும் பொழுது அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட வேண்டும் என்ற இந்த எண்ணங்களைத் தோற்றுவிக்கும் இடம் தான் ஆலயம்.

அபிஷேகம் ஆராதனைகளை இன்று செய்கிறோம். செய்துவிட்டு நமக்குள் கொதிப்பையும் வேதனையையும் தான் எண்ணுகிறோம்.

நல்லதைச் செய்தேன் ஆனால் தீமையே செய்கின்றான்…! என் குழந்தை நன்றாக வர வேண்டும் என்று விரும்பி உன்னைத்தான் வணங்கினேன். ஆனால் அவன் தவறு செய்கின்றானே எதிர்த்து பேசுகின்றானே…! என்று வேதனைப்பட்டு
1.அந்தத் தெய்வம் தான் செய்யும் என்று நாம் நம்புகின்றோம்.
2.ஆனால் அந்தத் தெய்வ குணத்தை நமக்குள் எடுத்தால் அந்த எண்ணம்
3.நம் செயலின் தன்மை அந்தத் தெய்வத்தின் தன்மையாகச் சொல்லால் இயக்கும்.
4.நாம் எண்ணிய தெய்வ குணத்தின் உணர்வுகள் நமக்குள் அந்தச் சக்தியாக மலரும்.
5.நாம் அந்தத் தெய்வமாக ஆவதற்குத் தான் ஆலயங்களை அமைத்தார்களே தவிர
6.அந்தத் தெய்வம் செய்யும் என்று யாரும் சொல்லவில்லை.

ஆனால் தெய்வம் செய்யும் என்ற நம்பிக்கையில் தான் செல்கின்றோமே தவிர
1.அந்தத் தெய்வ குணத்தை நமக்குள் எடுத்தால்
2.அந்தத் தெய்வ சக்தி நமக்குள் இருந்து நம் சொல்லையும் செயலையும் அது இயக்கும் என்ற நிலை காலத்தால் மறைந்து விட்டது.

நம்மை நாம் அறியாமலே நமக்கு நாமே நல்ல குணங்களுக்கு அடிக்கடி தீங்கு விளைவிக்கின்றோம்.

மனிதனை உருவாக்கிய… அனைத்தையும் அறிந்திடும் சக்தியாக இயக்கிக் கொண்டிருக்கும் உயிரான ஈசனுக்கு வேதனையும் சோர்வையும் எண்ணி எண்ணி
1.அந்த ஈசனுக்குச் சரியான நிலைகள் பணிவில்லாதபடி அவனுக்குண்டான சேவைகள் செய்யாதபடி
2.நம்மை ஆண்டு கொண்டிருக்கும் அந்த ஈசனுக்கு அடிக்கடி வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் என்ற
3.தீமையின் உணர்வின் சக்தியைத் தான் செலுத்திக் கொண்டிருக்கின்றோம்.

ஈசனை வணங்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஞானிகள் காட்டிய விநாயகத் தத்துவப் பிரகாரம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று இதை வினைக்கு நாயகனாக இந்த உடலுக்குள் ஆக்கிட வேண்டும்.

அதைக் கணங்களுக்கு அதிபதியாக்கி நமக்குள் தீமை விளைய வைக்கும் அந்த உணர்வினை அடக்கி ஞானிகள் உணர்வின் தன்மையை “ஒளியின் சுடராக…” நாம் உருவாக்க வேண்டும்.

வைரம் எப்படி நஞ்சினை ஒடுக்கி ஒளியின் சுடராக மாற்றுகின்றதோ இதைப் போன்று
1.வாழ்க்கையில் வரும் தீமைகளை… நஞ்சினை மகரிஷிகள் சக்தி கொண்டு ஒடுக்கினால்
2.நமக்குள் அறிந்திடும் ஆற்றலும்… உணர்வுகள் ஒளியாக மாறும் நிலையும் வருகின்றது.

இதைத்தான் ஞானிகள் நமக்கு ஆலயத்தில் தெளிவாக வழிகாட்டி உள்ளார்கள்.