ஞானத்தை வளர்க்க வேண்டும் என்றால் அதற்கு ஆதாரமான விழுதுகள் தேவை

ஞானத்தை வளர்க்க வேண்டும் என்றால் அதற்கு ஆதாரமான விழுதுகள் தேவை

 

நம் குருநாதர் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தின் தன்மையைத் தன்னுள் கண்டுணர்ந்தார்.
1.இந்த மண்ணுலகை வென்று எப்படி விண்ணுலகிற்குச் செல்ல வேண்டும்…? என்று முழுமை பெற்றார்.
2.தான் முழுமை பெறுவதற்குண்டான பாதையைக் கற்றார்.
3.முழுமை பெறுவதற்குத் தனக்குத் துணை வேண்டுமென்று எண்ணினார்.

விண்ணுலகம் செல்ல வேண்டும் என்றால் உயிராத்மாவை விண்ணிற்கு உந்தி தள்ளத் தனக்குகந்த ஆதாரங்கள் தேவை.

1.விழுதுகள் இல்லாது எந்த மரமும் வளர்ந்திடாது.
2.ஆகவே தனக்கென்று விழுதுகளை உருவாக்குகின்றார்.

தான் பெற்ற சக்திகளை “ஒவ்வொரு உயிரும் பெற வேண்டும்” என்ற நிலையினை அவர் தான் இங்கே செயல்படுத்திக் கொண்டிருக்கின்றார்.

யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் இந்த உணர்வலைகள் கொண்டு எல்லோரும் ஏகோபித்த நிலைகளில் நமது குரு காட்டிய வழியில் தியானத்து அதைச் செயல்படுத்துவோம்.

1.உங்களுக்கு நான் விழுது… எனக்கு நீங்கள் விழுது…! என்ற இந்த உணர்வுகள் வளர வேண்டும்.
2.ஒன்றின் துணை கொண்டு தான் ஒன்று வளர முடியும். ஒன்றில்லாது ஒன்று விளையாது

அனைத்தையும் வெறுத்தேன்… நான் தனித்துச் சக்தி பெறுவேன் என்றால் அது சாத்தியம் இல்லை

அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனும் தனக்குள் அனைத்தையும் இணைத்துத் தான் ஒளியாக்கினான். தனக்குள் அரவணைத்தான்… எதற்கும் தீங்கு செய்யாது அடக்கினான்.

ஆகவே தான் எதனையும் ஒளியாக மாற்றும் திறன் பெற்றான். அவன் பெற்ற அந்த உணர்வுகளைத் தியானத்தின் மூலம் நமக்குள் கவரப்படும்போது நிச்சயம் நாமும் அதைப் பெறலாம்.

துணுக்குத் துணுக்காகச் சொல்கின்றேன் என்று எண்ண வேண்டாம். இதை இப்போது உங்களுக்குள் பதிவு செய்கிறேன். சந்தர்ப்பத்தில் நினைவாக்கித் தீமைகளை அகற்றும் சக்தியாக உங்களுக்குள் விளையும்… அப்படி விளைய வேண்டும் என்பதற்குத்தான் இதைத் தெளிவாக்குகின்றேன்.

குருநாதர் எனக்கு எப்படி கற்றுக் கொடுத்தாரோ… பெறும்படி செய்தாரோ… அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நீங்களும் பெற வேண்டும்… உங்களால் அதைப் பெற முடியும் என்ற முழு நம்பிக்கையில் சொல்கின்றேன்.

ஆகவே… உங்களுடைய நினைவுகள் கூர்மையாக இருத்தல் வேண்டும்.யாம் உபதேசிப்பதை ஆழமாகப் பதிவு செய்தல் வேண்டும். பதிந்ததை மீண்டும் நினைவிற்குக் கொண்டு வர வேண்டும். அந்த நினைவின் ஆற்றல்… அதுவே உங்களை வளர்க்கும். அதாவது
1.முதலில் அதனை நீங்கள் எடுத்து வளர்க்க வேண்டும்
2.பின் அது உங்களை வளர்க்கும்
3.இந்த அருள் ஞானத்தை உங்களுக்குள் போதிக்கும்
4.உங்களை அருள் வழியிலே என்றுமே அழைத்துச் செல்லும்.

உள் மனம்… வெளி மனம்… என்ற இரு நிலையால் வரும் போராட்டம் நல்லதா கெட்டதா…? – ஈஸ்வரபட்டர்

உள் மனம்… வெளி மனம்… என்ற இரு நிலையால் வரும் போராட்டம் நல்லதா கெட்டதா…? – ஈஸ்வரபட்டர்

பிறப்பெடுத்த நாளிலிருந்து நாம் இறக்கும் காலம் வரை… “நினைவின் ஓட்ட நிலை” சுழன்று கொண்டே தான் உள்ளது.

எண்ணத்தின் சரீர உணர்வின் நினைவு நிலை இச்சரீர வாழ்க்கையில் மட்டும் தானா…? ஆவி நிலையில்… கர்ப்பக் காலத்தில்… இதன் ஓட்ட நிலை யாது…? என்ற நிலையை உணரல் வேண்டும்.

ஆத்ம பிம்பத்தில் இந்நினைவலைகளின் சுழற்சி ஓட்ட எண்ண உணர்வு ஒவ்வொரு நொடிப் பொழுதும் ஓடக்கூடிய நிலைக்கொப்ப எண்ணத்தின் நினைவின் ஆணைக்கொப்ப சரீரச் செயல் சொல்லாகவும் செயலாகவும் நடைபெறுகின்றது.

எண்ணத்தின் ஓட்ட இயக்க நிலைக்கொப்பச் சரீரச் செயல் நடக்கவும்… உண்ணவும்… எழுதவும்… சரீரத்தால் இயங்கத்தக்க அவய நிலைகள் எண்ணத்தின் உணர்வு உந்தியவுடன்… தன் தன் செயலைப் புரிகின்றது.

எண்ணத்தின் நினைவோட்டத்தை
1.செய்த நிலை… செய்யப் போகும் நிலை… செய்யும் நிலை என்ற தொடரில் எண்ணத்தைச் செலுத்தும் நிலையிலும்
2.சரீர அங்கத்தின் செயல் நிலை செயல் கொள்ளா எண்ண நிலையிலும்
3.எதில் எதிலெல்லாம் எண்ணத்தின் உணர்வுகள் உருள்கின்றதோ அத்தொடரில் எல்லாம்
4.ஜீவ சக்தியுடன் கூடிய உஷ்ண அலை கொண்ட இச்சரீர ஓட்ட இயக்கத் தன்மையிலேயே
5.சுவாசத்தின் மோதலில் – நடக்கப் போகும் நினைவின் எண்ண உணர்வு செலுத்தக் கூடிய தருணத்திலும்
6.சுவாச அலையின் துடிப்பு நிலை அணு வளர்ப்பைக் கொண்டு
7.நினைவலையின் எண்ண உணர்வை இச்சரீர பிம்ப வாழ்க்கையில்
8.ஆத்மா தன் பதிவு நிலைக்குப் பதித்துக் கொள்கின்றது.

ஆனால் நடை முறையில் அவரவர்கள் உடல் அமைப்பு நிலைக்கொப்ப நினைவின் எண்ண ஓட்டம் சுழன்று கொண்டேயுள்ள நிலையில் “ஒரே சமயத்தில்” இரண்டு நிலையான போராட்ட நிலையும் இச்சரீரத்திற்கு உண்டு.

நினைவின் எண்ணத்தால் ஆத்மாவில் பதியப் பெற்ற எண்ண நிலையும்… எண்ணத்தின் உணர்வை ஆத்மா சமைக்கும் தருண நிலை மோதலில்
1.“பதிவு பெற்ற நிலை… பதிவாக்கும் நிலை…!” இந்த இரண்டு நிலையில்
2.ஒன்றை நாம் முடிவெடுக்க எண்ணத்தைச் செலுத்தும் தருணத்தில் போராட்டமாகின்றது.

எச்செயலுக்காக எண்ணத்தைச் செலுத்திச் செயல் கொள்ள விழைகின்றோமோ அதே செயலைச் செய்விக்க வேண்டிய நிலைக்காக
1.ஆத்மாவின் பதிவு நிலையில் ஏற்கனவே பதியப் பெற்ற நிலையில் எண்ணங்கள் மோதும் பொழுது
2.:உள் மனம் வெளி மனம்” என்ற இரண்டு நிலையான ஓட்ட நிலையில் மோதும் எண்ணச் செயலை
3.இச்சரீர பிம்ப வாழ்க்கையில் காண்கின்றோம்.

அதில் சில போராட்ட நிலைகளும் எண்ணத்தில் ஏற்பட்டு அதன் வழியிலும் சில முடிவுகள் ஏடுக்கின்றோம்.

சரீர அங்கத்தில்… ஆத்மாவின் செயல் இயக்கும் பிறப்பு இறப்பு கால ஓட்டத்தில்… எண்ணத்தின் நினைவோட்ட நிலை “இரண்டு நிலையில்” செயல் கொள்ளும்.
1.இத்தகைய இரண்டு நிலையே
2.மனிதனின் அறிவு… பகுத்தறியக் கூடிய உயர் ஞானத்திற்கு வித்தாக அமைந்துள்ளது.

மிருகங்களின் செயலில் இத்தகைய இரண்டு நிலை கொண்ட எண்ண ஓட்ட அறிவின் பகுத்தறியும் தன்மை நிலை குறைவாக உள்ளது. மேலும் சரீர அங்கத்தின் செயல் தன்மையும் மனிதனை ஒத்த சொல்லாற்றல் நிலையும் குறைவு.

ஆகையினால்… சரீர உணர்வின் நிலைக்கொப்ப ஆத்மாவின் பதிவு நிலை செயலை “எண்ண உணர்வின் மோதாத சரீர எண்ண நிலைக்கொப்ப… ஒரு நிலையில் தான்” மிருகத்தின் செயல் உள்ளது.

ஆனால் மனித ஞானத்தில் உயர்ந்த சக்தி நிலையாக ஆத்மாவின் பதிவு நிலை செயல் ஞானம் அமைந்துள்ளது.

உடலுடன் உள்ள சரீர ஜீவ சக்தியின் செயலினால் மனித ஆத்மாவின் உயர்வு நிலையே “உள் மனம்… வெளி மனம்…” என்ற நினைவின் எண்ண உணர்வு செயல் கொள்ளும் செயலினால்…
1.அறிவின் பகுத்தறிவு நிலை கொண்டு
2.ஞானத்தின் வளர்ச்சியை எந்நிலைக்கும் வளர்த்துக் கொள்ள முடியும்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆத்மாக்கள்… சரீரத்தில் உள்ள பொழுது பதித்துக் கொண்ட அதனின் நினைவோட்டங்கள் ஆத்மாவுடன் பதிவாகி… ஆவி நிலையில் சுழன்று ஓடினாலும் எவ் எண்ண அலையாக இந்த ஆத்மா பதித்துக் கொண்டதோ அதே எண்ண நிலைக்கொப்பத்தான் சுழல முடியும்.

அவ்வாறு சுழலும் நிலையில் தான் பெற்ற சுவை குண எண்ண நிலைக்கொப்பச் சரீரங்கள் கிடைக்கும் பொழுது அவ் ஈர்ப்பில் இவை சிக்கி ஆவி நிலையில் உள்ள ஆத்மா சரீர ஈர்ப்பில் உட்புகுந்து விடுகின்றது.

அதாவது…
1.ஜீவ சக்தி கொண்ட அலை கிடைத்தவுடன்
2.தன் ஆத்மாவின் வலுவை வளர்க்க நீர் சத்தின் உஷ்ண நிலை கிட்டியவுடன்
3.அதனுடைய வளர்ப்பு நிலை வளர்ச்சி கொண்டு பிறப்பு நிலைக்கு வருகின்றது.

தெய்வங்களுக்குப் பல பல வாகனங்களை ஏன் போட்டுள்ளார்கள் ஞானிகள்…?

தெய்வங்களுக்குப் பல பல வாகனங்களை ஏன் போட்டுள்ளார்கள் ஞானிகள்…?

 

கருப்பணசாமிக்கு முன் மோப்ப நாயை வைத்திருப்பார்கள். ஞானிகள் காட்டிய வழியில் அதனின் உட்பொருளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்,

உதாரணமாக ஒரு நாயை யார் வளர்க்கின்றாரோ அவருக்குச் சாதகமாகத்தான் அந்த நாயும் இருக்கும்.
1.அவர் நல்லவராக இருந்தால் அவர் சொன்னபடி எல்லாம் அது செய்யும்.
2.அவர் போக்கிரித்தனம் செய்தால் மற்றவர்கள் தாக்க வந்தால் அவர் மீது உள்ள விசுவாசத்தின் நிலை கொண்டு
3.அவரைக் காக்க அந்தப் போக்கிரித்தனமான நிலைகளில் நல்லவரைத் தாக்க அந்த நாய் வருகின்றது.

இதைப் போன்றுதான் நாம் எடுக்கும் மோப்பங்கள் (சுவாசம்) சந்தர்ப்பத்திலே தீமையான உணர்வுகளைச் சுவாசித்து விட்டால் அந்த உணர்வுகள் அனைத்தும் நம்மை இருள் சூழச் செய்து…
1.நம்மை அறியாமலேயே தவறு செய்யும் நிலைகளுக்கு அழைத்துச் செல்லும்
2.கொடூர நிலைகளுக்குப் பழி தீர்க்கும் உணர்வினை உருவாக்கும்.

ஆகவே… இருண்ட நிலைகள் வரும்போது மனிதனுக்குள் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது… நல்ல உணர்வுகளைக் கொன்று விடுகிறது… என்ற இந்த உணர்வினைக் காட்டுவதற்குத்தான் கருப்பணச்சாமிக்கு முன் வாகனமாக நாயை வைத்துக் காட்டியுள்ளனர் ஞானிகள்… கையிலே அரிவாளையும் வைத்துக் காட்டி இருப்பார்கள்.

நமக்குள் இயங்கும் ஒவ்வொரு குணத்தின் இயக்கத்தையும் உணர்த்துவதற்காக ஒவ்வொரு நிலைகளிலும் தெய்வத்திற்கு உருவங்கள் அமைத்து அதற்கு முன் வாகனங்களையும் ஞானிகள் அமைத்துள்ளனர்.

1.கடவுளின் அவதாரம் பத்து என்றாலும்
2.ஒவ்வொரு ஊரிலும் அமைக்கப்பட்டுள்ள தெய்வங்களுக்குப் பத்து நாள் திருவிழா என்றாலும்
3.ஒவ்வொரு கோயில்களிலும் புலி வாகனம் அன்ன வாகனம் மயில் வாகனம் பரி வாகனம் சிம்ம வாகனம் என்று வாகனங்களை வைத்திருப்பார்கள்.

மாரியம்மனோ அல்லது காமாட்சியோ மற்ற தெய்வங்களோ அந்தந்த உணர்வின் குணங்களுக்கு
1.ஒவ்வொன்றும் தன் உணர்வின் தன்மை கொண்டு எடுத்து
2.அந்த உணர்வின் சக்தியை இணைத்து… அது ஒரு எண்ணமாக உருவாகி… அந்த எண்ணமே காக்கும் நிலையாகி
3.அது இப்படி ஒவ்வொன்றும் இணை சேர்த்து 1008 குணங்களாக மாறி
4/மனிதனாக உருவாக்கக் காரணமாக இருந்தது.

நாய் நரி பூனை இதைப் போன்று பல உயிரினங்கள் அது ஒன்றை ஒன்று விழுங்கினாலும் வலுவானவற்றிலிருந்து தன்னைக் காத்திடும் உணர்வு கொண்டு ஒரு அணுவின் தன்மையாக விளைந்து அடுத்த உடல் பெறுகின்றது.

1.அதன் வழிகளில் ஒவ்வொரு குணங்களையும் சிருஷ்டித்து
2.இப்படி மனித உடலுக்குள் 1008 குணங்களாக உருவானது என்று
3.1008 தெய்வங்களை வைத்துக் காட்டுகின்றார்கள்.

இத்தகைய இயற்கையின் நிலைகளை உணர்ந்து நமக்குத் தெளிவாக வகுத்துக் கொடுத்தவன் அன்றைய மகா ஞானியான அகஸ்தியன் தான்

எண்ணத்தின் கூர்மை எது…! அதைப் பயன்படுத்த வேண்டிய முறை எது…? – ஈஸ்வரபட்டர்

எண்ணத்தின் கூர்மை எது…! அதைப் பயன்படுத்த வேண்டிய முறை எது…? – ஈஸ்வரபட்டர்

 

1.நம் செவியில் படும் ஒலி நாதத்தின் ஈர்ப்பிற்கொப்ப…
2.எண்ண உணர்வு சமைக்கப்படும் அணு வளர்ச்சி கொண்டு தான்
3.“உடல் வாழ்க்கை” நடக்கின்றது.

உடலின் இயக்கத்தால் எடுக்கக்கூடிய நம் எண்ண நிலையின் செயல் உணர்வு நிலைக்கொப்ப அணு வளர்ப்பின் முலாமைத் தான் (ஆத்மாவில்) நாம் பெறுகின்றோம்.

அதனால் வாழ்க்கையுடன் ஒன்றிய ஈர்ப்பு வட்டத்தில் ஒலி கொண்டு ஒலி பெறும் இச் சரீர இயக்கத்தை
1.உயர் நாத விந்து வளர்ப்பு நிலை பெறத்தக்க
2.ஒலி நிலை கொண்ட ஒளி பெறும் (மகரிஷிகளின்)
3.காந்த மின் அலைத்தொடர் வளர்ச்சிக்குக் கொண்டு செல்லுதல் வேண்டும்.

உயர் ஞான சக்திகளின் வளர்ப்பாக உடலில் ஒளியான அணுக்களை உருவாக்கி… அதன் மூலம் உடலின் எலும்புகளின் ஊன்களை உறுதியாக்கும் தன்மை பெற்றால் நம் ஆத்மாவே ஒளி நிலை கொண்ட “ஜோதி நிலை” அடைகின்றது.

1.எதனின் ஈர்ப்புப் பிடியிலும் சிக்காத இந்த ஆத்மாவின் ஒளிப் படர்வின் செயலினால்
2.ஒளி பெற்ற ஆத்ம சரீர அலையிலிருந்து வெளிப்படும் ஒலி அலைகள்
3.ஒளி கொண்டு திக்கெட்டும் பாயும் உயர் ஞான ஒலிகளாக…!

ஒலி பாய்ச்சி ஒளி கொண்டு எத்தொடரில் உயர் ஞான சக்தியினால் எடுக்கப்பட்ட சொல் நாதம் ஒலிக்கின்றதோ அச்சொல்லின் செயல் “வாக்காகச் செயல் கொள்ளும்…”

“சொல் வாக்குப் பெற்ற சக்தி நிலை” என்பது விழி கொண்டு பாய்ச்சப்படும் ஒளியின் கூர்மை கொண்டு… ஒளி வழித் தொடர் அலையின் உயர்வு நிலை… “ஒளி பட்ட இடத்திலேயே செயலாக்கம் ஆகும்…”

அதாவது…
1.எரியும் பொருள்களில் சிறு நெருப்புப் பொறி பட்டவுடன்…
2.சிறு நெருப்புப் பொறியானது பெரும் நெருப்பாகச் சகலத்தையும் பஸ்பமாக்குகின்றது.

அதைப் போன்று இவ்வொளியைப் பாய்ச்சி உயரக்கூடிய வழி நிலைக்கும்
1.ஒலி கொண்டு ஒளி பெற்ற “விழி ஒளியின் கூர்மை கொண்டு”
2.எந்த அலைத் தொடரையும் மாற்றவல்ல “ஒளி நிலை பெறலாம்…” இந்த ஒளி நிலை ஞானத்தால்.

சரீரத்தின் எண்ண உணர்வைச் செலுத்தப்படும் செயல் கொண்டு
1.செயலின் வழி ஞானம் மிகவும் கூர் பாய்ச்சிய தன்மையில்
2.வாழ்க்கை வழி முறையில் அதை மிகவும் சாந்தத் தன்மையில் செயல்படுத்த வேண்டும்.

சகுணம் பார்க்க வேண்டுமா…? எப்படிப் பார்க்க வேண்டும்…? ஈஸ்வரபட்டர்

சகுணம் பார்க்க வேண்டுமா…? எப்படிப் பார்க்க வேண்டும்…? ஈஸ்வரபட்டர்

 

கழுதையின் சரீரச் செயலே பல சுமைகளைச் சுமக்கவல்ல ஜட உணர்வு கொண்ட அமைப்பில் உள்ளது. கழுதை அதன் கூட்டமைப்பு உருவம் பெற்ற ஜெனிப்புத் தன்மைக்கொப்ப அதனுடைய ஒலித் தன்மை “விகார நிலையில் ஒலிக்கின்றது…!”

இதனை நம் முன்னோர்கள் ஒலியின் விகாரத்தை மனித உணர்வு பெற்றால் என்ன நடக்கும்…? என்று உணர்த்தினார்கள்.

ஒரு விகாரமான ஒலித் தன்மையை செவி நிலை பெற்று அதன் மூலம் அமையும் சுவாசத்தின் அணு வளர்ப்பு வளர்க்கும் நிலைக்கொப்ப எண்ணத்தின் உணர்வு செயல்படுவதை “அன்றே” நம் முன்னோர்கள் காட்டினார்கள்.

அதாவது மனித வாழ்க்கைக்கு… பூமி சுழற்சியில் பிறப்பெடுத்த ஜீவ ஜெந்துக்களின் தொடர்புடன் வாழ்க்கை நிலை ஒன்றியதனை
1.ஒலியின் நாதத்தால் மனித உணர்வு ஞானம் வழித் தொடர் அமையவல்ல நிலையை
2.நன்மை தீமை என்ற சகுணங்களை அடிப்படைக் குணமாகக் காட்டி
3.கழுதை கத்தும் ஒலியையே நன்மை என்ற சகுண நிலையைக் காட்டி
4.நல்லது நடக்க கழுதையின் கத்தல் உகந்தது…! என்று உணர்த்தினார்கள்.

மனித வாழ்க்கை அமைப்பில் மோதுண்டு சுழலுகின்ற ஜீவ ஜெந்துக்களின் தொடர்பில் இருந்தெல்லாம் மனித ஒலி ஒளி சமைப்பு நிலைக்கொப்பத் தான் மனிதனின் எண்ண உணர்வு செயல்முறை எண்ண வளர்ச்சி ஆகியன வளர்கிறது என்ற உண்மையை உணர்ந்த நம் முன்னோர்கள் தான் இதை இப்படி வழிப்படுத்தினர்.

இன்றல்ல நேற்றல்ல…! பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே
1.ஒளியின் ஒலி நாதம் கொண்டு
2.உயருகின்ற உயர்வு நிலைக்காக வழியமைத்துக் காட்டினார்கள்.

ஒலி கொண்டு சேமிக்கப்பட்ட அமில உணர்வு எண்ண நிலைக்கொப்ப அதனதன் அணு வளர்ந்து… அந்த அணுவிற்குகந்த அமில முலாமின் கரைசலை ஜீவ சரீரங்கள் பெற்று… வளருகின்ற வளர்ச்சி நிலை ஒவ்வொன்றின் தொடரும் “ஒலி கொண்டு ஒளிரும் நிலை பெற்றது தான்…!”

அந்தந்தச் சரீரக்கூறின் அமிலச் சேர்க்கைக்கு ஒப்பத்தான் ஒலித் தன்மை ஒலிக்கின்றது.

கழுதை கத்தும் தருணத்தில்… அதனுடைய உணர்வின் சந்தோஷ மிகுதி உந்தும் வேளையில் அதன் கத்தும் ஒலியானது ஜீவ உணர்வுடன் தான் வெளிப்படுகிறது. அதை நாம் கேட்கும் பொழுது
1.அதனுடைய (சந்தோஷ) இனிமை உணர்வுக்கொப்ப இனிமை பெற்று
2.இனிய நற்காரியங்கள் நடைபெறுவதை உணர்த்தியது
3.நம் முன்னோர் காலத்திலிருந்தே வழி வழியாக வந்தது தான்.

ஒலிக்கும் ஒலியைக் கொண்டு… அவ்வொலியை நாம் ஈர்க்கும் நிலைக்கொப்ப…
1.நம் எண்ணத்தின் உணர்வு எடுக்கும் அலைத் தொடரைக் கொண்டு
2.மனித வாழ்க்கையில் செயல் கொள்ளகூடிய செயல் முறை உந்தல் நடைபெறுகின்றது என்று தெளிவாக்கினார்கள் முன்னோர்கள்…!

இன்று நாம் எல்லாவற்றையுமே பார்த்தாலும் நல்லதை நுகர்கின்றோமா…!

ஓமுக்குள் ஓம் நாம்…! ஒ..ம் ஆக… ஓமை… நாம் வளர்க்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

ஓமுக்குள் ஓம் நாம்…! ஒ..ம் ஆக… ஓமை… நாம் வளர்க்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

சப்த கோடிகளே….!
சகல நாத விந்துக்களே…!
மணமாகி ஒளியாகி நீராகி நிகழுகின்ற உருக்கோல ஜீவ திட சக்தி தொடர் நிலைகளே…!
“கல்கி நிலை உருவாக உருத்தாருங்கள்…!”

ஒலி கொண்டு ஒளி பெற்று… ஒலிக்கின்ற “ஓ…ம்” என்ற இப்பூமியின் நாத சுழற்சியில்… ஓ…ம்ம்ம்ம்… என்ற நாதத்தில் தான் நம் பூமி ஜெனித்து ஓடிக் கொண்டுள்ளது.

பூமியின் நாதத்தில் வளர்கின்ற பல கோடி நாதத் தொடர்பால் ஒலி கொண்டு ஒளி பெற்ற இச்சரீர (நம் உடல்) கோள நாதமாக
1.ஓமுக்குள் ஒமாக… நாதத்திலிருந்து நாதமாக
2.நம் நாத ஒலி சுழற்சியில் ஓம் என்ற கோளமாக
3.பிறிதொரு கோளத்தை உருவாக்கும் நாத விந்து வளர்ச்சியை நாம் பெற வேண்டும். (அது தான் மண்டலப் படைப்பு)

அதைப் பெற்றோமானால் ஓ…ம் என்ற நாதத்துடன் உருளுகின்ற உலகைப் போல் இம்மனித சரீர பிம்பத்தில் ஒலி கொண்டு ஒளி பாய்ச்சி சுவாச நாதம் வளர்க்கும் விந்துவின் இந்திரிய வலுவைக் கொண்டு உடலை இயக்கும் ஆத்மாவின் ஈர்ப்பு வட்டத்தில் ஜோதி நிலை (ஓளி நிலை) அடையலாம்.

சூரியன் தன் ஒளியின் நாத சுழற்சியைக் கொண்டு சூரிய வட்டத்தில் உள்ள பல கோள்களுக்கும் “ஒளி தந்து…” ஒலி பெற்று… தன் சுழற்சியின் கூட்டமைப்பின் சக்தியுடன் ஒன்றித் தானும் வளர்கின்றது.

அதே போல் நம் பூமியும் ஓ…ம் என்ற நாதத்துடன் “ஒளி பெற்று” ஒளியாக்கிச் சுழலும் தொடர்பைப் போன்று தான் மனித சரீரம் பல கோடி ஒலித் தொடர்புடன் ஒளி பெற்றுள்ளது.

அவ்வாறு உருவான இந்த ஆத்மாவிற்கு வலு கூட்டிக் கொள்ள சூரியனின் நிலையை ஒத்த குண சமைப்பைப் போன்று சரீர உணர்வின் எண்ண சமைப்பு பிறிதொரு ஆத்மாவின் மேல் “ஒளி பாய்ச்சி” ஒலி பெற்று வலுக் கூட்ட வேண்டும்.

“ஒளி பாய்ச்சி” என்பது என்ன…?

இந்தப் பூமியின் சுழற்சியில் திடம் பெற்ற பல கோடிச் சரீரங்களும் ஒன்றை ஒத்து ஒன்று இல்லை. ஒருந்தாலும்… ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சக்தி நிலை “உயர்வு” கொண்டு இயங்குகிறது.

அவ்வாறு இயங்கக்கூடிய ஒலி… ஒளி… ஞானம்… செயல் திறன்… பொருந்திய சரீர உணர்வு கொண்ட எண்ண உணர்வுடன் தான் நாம் மனிதர்கள் செயல் கொள்கிறோம்.

சரீரத் தொடர்புடன் நம்முடைய உணர்வின் எண்ணம் செலுத்தும் வழிதனில்…
1.ஒருவரை நாம் பார்க்கும்… ஒளி பாய்ச்சும் நிலையிலேயே…
2.விழி படமெடுத்து…
3.நாசி சுவாசம் எடுத்து
4.ஒளியின் ஒலியாக நாத விந்துக்கள் உடலின் இந்திரிய அணு வளர்ப்பாக வளர்ந்து விடுகிறது.

இப்படி… “ஒளி பாய்ச்சி” ஒலி பெறும் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் சரீர சமைப்பு சுழற்சி சுழன்று கொண்டேயுள்ள இத்தொடரில்
1.நம்முடைய உணர்வின் எண்ணத்தைப் பிறிதொரு ஈர்ப்பில் சிக்காமல்
2.நம் ஆன்ம வளர்ப்பு நிலையின் வலுத்தன்மை கொண்டு
3.ஞான குண ஒளி பாய்ச்சும் தன்மையினால்
4.எந்த உயர்ந்த எண்ணத்தைக் கொண்டு பிறிதொருவரின் மேல் நாம் ஒளி பாய்ச்சுகின்றோமோ
5.அதன் தொடர் காந்த மின் அலை ஒளி ஈர்ப்புடன்
6.இச்சரீர ஈர்ப்பிற்கு சுவாச ஒலி எடுத்து வித்துக்கள் வளர்ந்து
7.”ஆத்மாவின் வலு” ஒலி “ஒளியாகப் பதிவு கொள்கின்றது…”

எங்கோ இருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை… நினைத்தவுடன் உங்களுக்குக் கிடைக்கும்படி செய்கின்றோம்

எங்கோ இருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை… நினைத்தவுடன் உங்களுக்குக் கிடைக்கும்படி செய்கின்றோம்

 

அன்புடன் பண்புடன் மற்றவர்களுக்கு உதவி செய்து நாம் வாழக் கூடியவர்களாக இருந்தாலும் அவர்கள் பட்ட வேதனை நமக்குள்ளும் பதிவாகிறது.

அந்த வேதனையை உருவாக்கும் உணர்வுகள் நமக்குள் வலுப் பெற்று விட்டால்
1.அதனின் உணர்வு நம் ஆன்மாவாக மாறும் பொழுது
2.அதிலிருந்து இழுத்து நாம் சுவாசிக்கும் போது
3.அந்த வேதனையான எண்ணங்கள் தான் மீண்டும் மீண்டும் வரும்.

இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் விடுபட இங்கே உபதேசத்தின் வாயிலாகக் காட்டும் வழிகளைச் சீராகக் கடைப்பிடித்து வாருங்கள். ஞானிகளின் உணர்வுகளை ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்,
1.சந்தர்ப்பத்தில் இது உங்கள் நினைவுக்கு வரும்
2.உங்களைக் காக்க உங்கள் எண்ணம் உதவும்.

பள்ளிக்கூடத்திற்குச் சென்று முதலில் படிக்கச் செல்லும் பொழுது எல்லாவற்றையும் உடனடியாக நாம் தெரிந்து கொள்வதில்லை. திரும்பத் திரும்பப் படிக்கும்போதுதான் அந்த நினைவாற்றல் நமக்குள் பெருகுகிறது.

அது போல் தான் இங்கே உபதேச வாயிலாகக் கொடுக்கும் அருள் உரைகளை…
1.ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ பதிவு செய்து விட்டாலும்
2.அதைப் பெற வேண்டும் என்ற எண்ணம் வலுவாக இருந்தால் தான்
3.திரும்பத் திரும்ப அதை மனதில் பதியச் செய்வோம்… அதை வளர்க்கவும் செய்வோம்.
4.திட்டியவர்களை மீண்டும்…மீண்டும்… மீண்டும்…மீண்டும் எண்ணுவது போல்…!

ஆனால் நாம் எல்லாம் ஆரம்பத்தில் பக்தியிலே ஆலயத்திற்குச் சென்று… விநாயகருக்கு அருகம்புல்லை வைத்துச் சூட தீபாராதனை காட்டி… தேங்காய் பழம் வைத்துக் கும்பிட்டுப் பழகியவர்கள்.

இருந்தாலும்…
1.எங்கோ இருக்கக்கூடிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை
2.ஒரு நிமிடத்திற்குள் எண்ணி எடுக்கும் சக்தியை… அந்த ஆற்றலை இப்பொழுது பெறுகின்றோம்.

இதைச் சொல்லும் போது முதலிலே சிறிது கடினமாக தோன்றும். ஆனால் உடனே பெறக்கூடிய தகுதிக்குத் தான் இந்த உபதேசமே கொடுக்கின்றோம். ஞான வித்தாக உங்களுக்குள் கொடுக்கின்றோம்.

அதை நீங்கள் வளர்த்துக் கொள்வதில் தான் உங்களுடைய வளர்ச்சி இருக்கின்றது. அதற்குண்டான நீரான அருள் சக்தியை எடுக்கும்போது தான் உங்களுக்குள் அந்த ஞான வித்து ஓங்கி வளரும்.

யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி காலையில் நான்கு மணிக்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் சக்திகளை எடுத்துக் கொள்ளலாம்.
1.அந்த நேரத்தில் வேறு ஒன்றும் செய்ய வேண்டாம்.
2.எழுத்து உட்கார்வதற்குச் சோம்பேறித்தனமாக இருந்தாலும் கூட
3.உங்கள் எண்ணத்தை நேரடியாகத் துருவ நட்சத்திரத்திற்கு அனுப்புங்கள்.
4.துருவ நட்சத்திரத்திலிருந்து ஒளிக் கதிராக வருவதைத் தியானித்து எடுத்துக் கொள்ளலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி இந்த உணர்வை உங்கள் உடலுக்குள் வலிமையாக்குங்கள்.

எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை விண்ணில் செலுத்தி… உடல் முழுவதும் படர வேண்டும் என்ற மீண்டும் உடலுக்குள் செலுத்துங்கள். உள்ளுக்குள் செலுத்தச் செலுத்த தீமைகள் எல்லாம் கரைந்து விடும்

உடல் அழுக்கைப் போக்கத் தினசரி தண்ணீரை விட்டுக் குளிக்கின்றீர்களோ அதை போல் அருள் ஞானிகளின் உணர்வை உங்கள் உடலுக்குள் சேர்த்து உங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

குறிக்கோளுடன் தான் தியானம் செய்ய வேண்டும் – ஈஸ்வரபட்டர்

குறிக்கோளுடன் தான் தியானம் செய்ய வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

இன்றைய மனித வாழ்க்கையில் பக்தி வழியில் நந்நெறியில் வாழ வேண்டும் என்று எண்ணி நடந்தாலும் நம் வாழ்க்கை நாம் எண்ணியபடி அமைவதில்லை.
1.அதற்கு ஊழ்வினை காரணம் என்று சொல்லப்படுகின்றது.
2,அதாவது விதி வழித்தான் எல்லாமே நடக்கும்…! என நம்புகின்றோம்.

துன்பங்களிலிருந்து மீள தெய்வ வழிபாடு முதலியன செய்கின்றோம். இருந்தாலும் முழுப் பயன் எவருக்கும் கிட்டுவதில்லை.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்களும் மகரிஷிகளும் மனிதன் மெய் ஞானம் கொண்டு “விதியை மதியால் வெல்லலாம்” என்று சொல்லியுள்ளார்கள்.

“அந்த வழியில் மனித இனம் இது வரையிலும் கவனம் செலுத்தவில்லை…!” ஆனால்…
1.இன்றைய நிலை முழுக்க முழுக்க விஞ்ஞானத்தைப் போற்றும் நிலைக்கும்
2.விGnaaGnaagaaaaஞ்ஞான வாழ்க்கைக்கு நம்மை அடிமையாக்கும் நிலைக்கும் வந்துள்ளோம்.

ஏனென்றால் விஞ்ஞான முன்னேற்ற வசதிகள் எல்லாம் இந்த உடல் வாழ்க்கைக்குத் தான் பயன்படும். இன்னும் சொல்லப் போனால் இன்று இந்த விஞ்ஞானத்தின் அபரிதமான வளர்ச்சி காரணமாக “சகல ஜீவராசிகளும் மடிந்து போகும் தருணம்” வந்து விட்டது. உலகமே நடுங்கும் நிலைக்கு வந்து விட்டது.

இங்கே பாரத புண்ணிய பூமியில் ஞானிகள் சொன்னதெல்லாம் மறந்து விட்டோம். ஆனால் விஞ்ஞானியால் எதைச் செய்ய முடியுமோ அதை விட அதி அற்புத சக்தி வாய்ந்த எந்தச் செயலையும் மெய் ஞானிகளால் செய்ய முடியும்… அடைய முடியும்.

இப்படி இந்த உலகமே கேள்விக்குறியில் நிற்கும் இத்தருணத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன…?

மாமகரிஷிகள் மனித இனம் உய்ய மெய் வழியைக் காட்டுகின்றார்கள். அதன் வழியில் நடந்திட வேண்டும்.

1.முதலில் தாய் தந்தையரை தெய்வமாக வணங்கி
2.உயிரான ஈஸ்வரனைப் புருவ மத்தியில் எண்ணி வணங்கி
3.உணர்வுடன் கூடிய தியானத்தில் மகரிஷிகளை எண்ணி
4.அனு தினமும் தியானிப்பதன் மூலம் நம் உடலில் உயர் காந்த மின் நுண் அலைகள் பதிவாகும்
5.அதன் வளர்ச்சியைப் பொருத்து நம் ஊழ்வினையான தீய வினைகளைச் சக்தி இழக்கச் செய்ய முடியும்.

முருக குணங்களான அன்பு… பரிவு… பாசம்… வீரம்… ஞானம்… சாந்தம்.. மூலம் உயரிய சக்திகளைப் பெற்று… அதன் மூலம் நம் உயிராத்மாவிற்கு வலுக் கூட்டி… நாம் எண்ணியபடி வாழ்வை அமைத்துக் கொள்ள “மகரிஷிகள் தியானம்” ஒன்றே வழி.

ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் தியானிப்பதன் மூலம்
1.நம்மை விட மேம்பட்ட சக்திகளான
2.மாமகரிஷிகளின் நேரடித் தொடர்பு கிடைக்கும்
3.அவர்கள் துணையும் கிடைக்கும்.

ஆனால் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய சூட்சமம் எந்தக் குறிக்கோளுடன் தியானம் செய்வது என்பது தான். நம் ஆத்மாவுக்கு வலுக்கூட்டிப் பிறவா நிலை என்னும் “தெய்வ சக்தி” நிலையைப் பெறுவது தான் நம் குறிகோள்.

அதற்கு நம் எண்ணம் பரிசுத்தமாக வேண்டும். தியானத்தின் மூலம் எண்ணத்தைப் பரிசுத்தப்படுத்த முடியும். இத்தகைய முறைகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கு மகரிஷிகளின் துணை எளிதில் கிடைக்கும்.

கண்களை மூடி இருந்தாலும் சரி… அல்லது திறந்திருந்தாலும் சரி… நம் நினைவுகள் துருவ நட்சத்திரத்தின் பால் செல்ல வேண்டும்

கண்களை மூடி இருந்தாலும் சரி… அல்லது திறந்திருந்தாலும் சரி… நம் நினைவுகள் துருவ நட்சத்திரத்தின் பால் செல்ல வேண்டும்

 

காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் எப்பொழுது விழிப்பு வருகிறதோ அப்போதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று குறைந்தபட்சம் பத்து நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரையாவது எடுக்க வேண்டும்.
1.கண் விழித்து இருந்தாலும் சரி… கண்களை மூடி இருந்தாலும் சரி…
2.கண்ணின் நினைவலைகள் புருவ மத்தியில் வரவேண்டும் (முக்கியம்)
3.உயிர் வழி தான் நாம் உடலுக்குள் அனுப்ப வேண்டும்.

காரணம்… நாம் வெளியிலே பார்த்துணர்ந்த… கேட்டுணர்ந்த… உணர்வுகள் அனைத்தும் ஆன்மாவாக இருக்கின்றது… நல்ல எண்ணங்களை எண்ண விடாது. ஏனென்றால் நாம் எத்தனை பேருடைய தீமைகளைப் பார்த்தோமோ அதற்கெல்லாம் வலு அதிகம்.

பாலிலே பாதாமைப் போட்டாலும் மற்ற பொருள்களைப் போட்டாலும்… சிறிதளவு விஷத்தைப் போட்டு விட்டால் பாதாமிற்கும் சக்தி இல்லை… பாலுக்கும் சக்தி இல்லை.

அதே போல் அதில் சிறிதளவு காரத்தைப் போட்டுவிட்டால் அதனுடைய சுவைகளை அறிய முடியாது. காரத்தின் சுவை தான் முன்னணியில் இருக்கும். உப்பின் தன்மை இணைத்து விட்டால் அந்த உப்பின் தன்மை முன்னணியில் வந்து விடும்.

இதைப் போன்று தான் நமது வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் பிறரிடம் கோபப்பட்டது ஆத்திரப்பட்டது வேதனைப்பட்டது சலிப்புப்பட்டது எல்லாமே நம் ஆன்மாவில் வந்துவிடுகிறது.

அதையெல்லாம் மாற்றி அமைக்க அதிகாலையில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்ற உணர்வினை நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் கூட்டிக் கொள்ள வேண்டும். அந்தச் சக்திகள் கூடிய பின் உடலிலிருந்து வரக்கூடிய மணம் நம் கேட்டறிந்த தீமைகளை ஆன்மாவிலிருந்து அப்புறப்படுத்தும் நிலையாக வரும்.

1.காரணம் மகரிஷிகள் அருள் சக்தியை உடலுக்குள் கூட்டும் போது
2.ஆன்மாவில் இருக்கும் தீமை செய்யும் உணர்வுகளின் பிடிப்பு அற்றுப் போய்விடும்… ஆன்மாவிலே நிற்காது.
3.அப்போது கஷ்டமான எண்ணங்கள் நமக்குள் வராது

இதை நாம் பழகிக் கொண்டால் மிகவும் நல்லது.

வாழ்க்கையில் பிறருடைய கஷ்டங்களைக் கேட்கப்படும் போதோ அல்லது விபத்தைப் பற்றி அறிய நேரும் பொழுதோ வேதனைப்பட்டுக் கொண்டிருப்போரை அவர்களைக் கண் கொண்டு பார்க்கும் பொழுதோ அது எல்லாம் பதிவாகி விடுகிறது.

அது எல்லாம் ஒரு வித்தாக மாறிவிடுகிறது. மீண்டும் அதை நுகரப்படும் பொழுது அணுவாக மாறுகின்றது. உடலிலே உருவான அந்த அணுக்கள் தன் இரைக்காக அதே (விபத்து வேதனை) உணர்வலைகளைத் தனக்குள் கவர்ந்து தன் இனத்தை வளர்க்கத் தொடங்குகிறது.

அது வளரத் தொடங்கி விட்டால் நம் ஆன்மாவாக மாறுகின்றது
1.எத்தகைய உணர்வாக இருந்தாலும் அது நம் உயிரிலே படும் போது தான் நம்மை இயக்கும்.
2.நல்லவனாக்குவதும்… கெட்டவனாக்குவதும்… அல்லது நோயாக மாறுவதும் இது போன்று தான்.

இதைப் போன்ற நிலைகளை நாம் தூய்மைப்படுத்த அதிகாலையில் விழித்தவுடனே துருவ நட்சத்திரத்தின் சக்தியை எண்ணி எடுக்க வேண்டும்.

1.உட்கார்ந்து தான் இதைச் செயல்படுத்த வேண்டும் என்று இல்லை
2.எழுந்து உட்கார வசதியாக உள்ளவர்கள் அப்படிச் செய்யலாம்.
3.படுக்கையில் விழிப்பு வந்த பின்… நேராகத் துருவ நட்சத்திரத்தை எண்ணி
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று
5.புருவ மத்தியில் எண்ணி உடலுக்குள் உள்முகமாக உடல் முழுமைக்கும் செலுத்துங்கள்.
6.உள்முகமாகச் செலுத்தச் செலுத்த ஆன்மாவில் இருக்கும் தீமைகளை அதை நீக்கிக் கொண்டே இருக்கும்.

தினசரி நீரை ஊற்றி உடல் அழுக்கை எப்படிப் போக்குகின்றோமோ அதைப் போல நம் ஆன்மாவில் பட்ட தீமைகளை நீக்க அந்த மகரிஷியின் அருள் சக்தியை நம் உடலுக்குள் அவ்வப்போது செலுத்த வேண்டும்.

அது வலுப் பெற்றால் தான்… உடலுக்குள் வலுவானால் தான்… தீமைகளை நீக்க முடியும். எப்படியும் உங்களுக்குள் அதை வலுவாக்க வேண்டும் என்பதற்குத் தான் மீண்டும் மீண்டும் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு).

நம்மை அறியாமலே “செயற்கை அறிவு” கொண்ட மனிதர்களாக மாறிக் கொண்டிருக்கின்றோம் – ஈஸ்வரபட்டர்

நம்மை அறியாமலே “செயற்கை அறிவு” கொண்ட மனிதர்களாக மாறிக் கொண்டிருக்கின்றோம் – ஈஸ்வரபட்டர்

 

இக்கலியின் கடைசிக் காலத்தில் மனித ஆத்மா உயரும் ஞான போதனை வழித் தொடர் அற்று மனித எண்ணங்களும் ஆவி உலகில் உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்களும் செயற்கை விஞ்ஞான ஒலி ஈர்ப்பில் உணர்வைச் செலுத்தியே இன்று இயங்கி வருகின்றது.

ஆகையினால் இன்றைய மனித உணர்வின் சுவாசமே இயந்திர கதியின் ஒளி ஈர்ப்பில் உணர்வெடுக்கும் எண்ண சுவாச அணுக் கதிர்களாகத் தான் சுவாசத்திலிருந்து வெளி வந்து கொண்டுள்ளது.

இப்படி…
1.அன்றைய இயற்கைத் தாவர நறுமண மூலிகைகளின் தொடர்பற்ற நிலையில்
2.இயந்திர ஓட்டச் செயற்கை மனித நிலையில் வெளிப்படும் சுவாச அலையின் அணுக் கதிர்களிலிருந்து
3.அதிலிருந்து வளரவல்ல உயிரணுக்களே கலி மனிதன் வெளிப்படுத்தும் அலைக்குகந்த
4.புதிய புதிய குறுகிய எண்ண ஆசைகள் கொண்ட ஞானச் செயலற்ற ஜீவ ஜெந்துக்கள் தான்
5.தற்பொழுது வளரும் ஜீவ அணு உயிர் வளர்ப்புகளும் தாவர இன வளர்ப்புகளும்…!

இந்தத் தொடரிலேயே செல்லும் நிலை தான் இன்றைய காலமும் இனி வரும் காலமும்…!

பல நூறாண்டுகளுக்கு முன்… மனித உருவங்களும் மனிதனைக் காட்டிலும் மிருக உருவங்களும் இன்றுள்ள நிலையைக் காட்டிலும் உருவத்தில் வளர்ந்து வண்ணமும் பொலிவும் மிக்க ஒளியுடன் மிளிர்ந்தன.

இராமாயணக் காவியத்தில் வான்மீகியார் எழுதிய குணத்தின் அடிப்படைக் கதாபாத்திரமே அந்தந்தக் குணத்திற்கொப்ப எண்ணத்தில் குறுகியவருக்குக் “கூனி” என்றும் “சகுனி” என்றும் (வியாசர்) காட்டினார்கள்.

எண்ணத்தில் உயர்ந்தவருக்கு அவரின் உருவ அழகை இராமனாகச் சித்தரித்துக் காட்டினார் வான்மீகியார்.

ஆனால் இன்றைய கலி ஓட்டத்தில் “இயந்திரத் தொடர்பு கொண்ட… செயற்கை ஒலி ஈர்ப்பில்…” வாழக்கூடிய மனித எண்ணங்களின் உணர்வுகள் தான் அதிகமாகச் சுழன்று கொண்டுள்ளது.

இதன் தொடர்பில் செலுத்தப்படும் வழித் தொடர் வளர்ச்சியின் வழி முறையில் எந்தச் செயற்கை ஒலியை அதிகமாகக் கேட்டு அவ் ஒலி ஈர்ப்பின் சுழற்சியில் சுழல் கொண்டு மீண்டும் பிறப்பிற்கு வரும் பொழுது…
1.ஞானத்தின் வளர்ச்சி கொண்ட மக்கள் பிறப்பதைக் காட்டிலும்
2.தன் ஞானமற்று விஞ்ஞான வேட்கை வழி தந்த உணர்வு ஈர்ப்பில் கர்ப்பம் கொள்ளும் சிசு நிலையிலேயே
3.விஞ்ஞான செயற்கை நிலைக்கொத்த கலி மக்கள் தான்
4.இனி வரும் காலப் பிறப்புகளும் கலி மாற்றப் பிறப்புத் தொடர்புகளும்.

அன்றைய காலங்களில் “ஆயகலைகள் அறுபத்தி நான்கு” என்று பிறக்கும் மக்களுக்குப் பயில்விக்கும் பயிற்சி ஞான போதனைகள் இருந்தது.

இன்றைய செயற்கைப் போதனையோ… தன்னைத் தான் நம்பாமல் செயற்கைப் பிடியில் நம்பிக்கை கொண்டு அந்தச் சுழற்சி ஓட்ட கதியுடன் மனிதனின் எண்ணம் சென்று கொண்டுள்ளது.

இதிலே சிக்குண்டு அந்த ஏக்கமுடனே இன்பத்தின் எல்லை எது…? என்று அறியாதபடி… வாழ்க்கையின் வேட்கையில் சுழன்றிடும் தன்மையை மாற்றி
1.ஆத்ம பலத்தின் உயர்வைக் கொண்டு
2.ஜீவ மனித எண்ண உணர்வின் ஞானம் கொண்டு அடையும் இன்ப நிலையின் வழித் தொடரை
3.இங்கே உபதேச போதனையாக உயரும் வழியைக் காட்டி
4.ஒவ்வொரு ஆத்மாவும் மனிதனுக்கடுத்த நிலையான “தெய்வ நிலை” பெறவல்ல வழித் தொடருக்கு வழி காட்டுகின்றோம்.