உடலை இயக்கும் நரம்பு மண்டலங்களில் ஏற்படும் சில நுண்ணிய மாற்றங்களும் அதனின் விளைவுகளும்

உடலை இயக்கும் நரம்பு மண்டலங்களில் ஏற்படும் சில நுண்ணிய மாற்றங்களும் அதனின் விளைவுகளும்

 

ஆதியிலே உருவான விஷம்…
1.மற்ற விஷமற்றதைத் தாக்கும் போது அது நகர்ந்து ஓடுகிறது.
2.தாக்கும் போது வெப்பமும்… நகர்ந்து ஓடும் போது ஈர்க்கும் காந்தமும் உருவாகிறது.

அந்த உணர்வின் சக்தியால் அது எதைத் தனக்குள் இணைத்ததோ அதை உருவாக்கச் செய்கின்றது. இதற்கெல்லாம் மூலம் ஆதியிலே உருவான விஷம் தான்.

அந்த விஷத்தின் அளவுகோல் எதுவோ அதனின் இயக்கமாக இயக்கும். அதற்குக் காரணப் பெயர் ஆதிசக்தி. ஆகவே ஆதிசக்தி என்பது கடுமையான விஷம்.

ஆரம்பத்திலே ஈர்க்கும் சக்தியாக வந்தது ஆதிலட்சுமி. ஆதியிலே உருவான அந்த வெப்பம் ஆதிபராசக்தி. சர்வத்தையும் உருவாக்கும் வெப்பமாகின்றது.
1.ஒன்று இயக்கும் சக்தி
2.ஒன்று உருவாக்கும் சக்தி
3,ஒன்று கவரும் சக்தி

விஷத்தின் தாக்குதலால் தான் வெப்பம் உருவாகிறது. அதைப் போன்று தான் நாம் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் எதிர்நிலையான உணர்வுகள் மோதலானால் உடலிலே வெப்பமாகிறது.

அடுத்தவர் செய்யும் தவறான உணர்வுகளைக் கூர்மையாக உற்று நோக்கி அதை எடுத்துக் கொண்டால் நமக்குள் கோப உணர்வின் தன்மை அதிகமாகிறது. அவர்கள் செயல்படுத்தும் வேதனை என்ற நஞ்சான உணர்வுகள் நம் மீது மோதுகிறது.

அப்படி மோதும்போது நமக்குள் அந்த உணர்வின் தன்மை கொதிப்பாகி அணுவின் தன்மை நம் உடலிலே பெருக்கம் ஆகின்றது… இரத்தக் கொதிப்பு என்று சொல்வார்கள்.

1.நம் உணர்வை இயக்கும் அந்தக் கொதிகலனான சுடு நீர் உடலுக்குள் சென்று
2.கவன நரம்புகளில் தாக்கப்பட்ட பின் அது தாங்காது வெப்பம் அதிகமாகின்றது.

உதாரணமாக ஒரு குக்கரில் கேஸ் அதிகமாக உருவானால் அந்தப் பாத்திரம் எப்படி வெடிக்கின்றதோ அதைப் போன்றுதான் இந்தக் கொதிகலனாகும் விஷத்தின் அழுத்தத்தின் தன்மைகள் நாம் கவன நரம்புகளிலே ஊடுருவுகிறது.

எந்த உணர்வாக இருந்தாலும் சிறு மூளை வழியாகச் சென்றுதான் நம் உடல் உறுப்புகளை இயக்கும். நரம்புகளுக்குள் அமிலமாக (ACID) மாற்றும் தன்மைகளும் வரும்.

1.எந்தப் பாகத்தின் தன்மையிலே இந்தக் கோபமும் விஷமும் கலந்து அதிகமாகச் செல்கிறதோ…
2.அந்த அழுத்த நிலைகள் அங்கே ஏற்படும் பொழுது அந்த இடம் விரிந்துவிடும்.
3.விரியும் தன்மை வரப்படும் போது மனிதனுக்கு மயக்க நிலை (தலை சுற்றல்) வருகின்றது.

ஆனாலும் மயக்கம் வருவதற்கு முன் சிறிதளவு நினைவு இருக்கும் போது எனக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்ற எண்ணம் வந்தால் வெடித்துவிடும்.

அதே போன்று
1.“மயக்க நிலைகள் வருகிறதே…!” என்ற எண்ணத்தை மீண்டும் அதிகரித்து விட்டாலும்
2.இந்த உணர்வின் தன்மை கொதிப்பாகி சிறு நாளங்கள் வெடித்து இரத்தங்கள் கசிவாகிவிடும்…
3.அடுத்த கணம் மரணம் தான்.

ஏனென்றால் இதை போன்ற உணர்வின் இயக்கங்கள் நம் உடலுக்குள் மோதலாகும் போது போராட்டங்கள் அதிகமாகிக் கொதிகலனாக எப்படி வருகிறது…? என்று ஞானிகள் அன்றே அதைச் சொல்லியுள்ளார்கள்.

சாதாரண மனிதனும் இதை அறிவதற்காக வேண்டி தெய்வச் சிலைகளை உருவம் அமைத்து 1008 குணங்களையும் தனித் தனியாகக் காட்டியுள்ளார்கள்.

பரிணாம வளர்ச்சியில் பல கோடிச் சரீரங்களில் வளர் பிறையாகி மனிதனாக வளர்வதற்கு மூலம் எது…? என்றும்… மனிதனாக ஆன பின் அவன் எடுத்துக் கொண்ட குணநலன்களின் இயக்கத்தையும்… அதனின் பின் விளைவுகளையும் உணர்த்துவதற்குத் தெய்வச்சிலைகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தனி வாகனத்தையும் கொடுத்துள்ளார்கள்.

எதனின்று நல்ல உணர்வுகளைச் சுவாசித்து… அதுவே வாகனமாக அமைந்து வளர்பிறையாக மனிதனாக எப்படி வந்தோம் என்றும்… மனிதனான பின்
1.கோபம் வேதனை ஆத்திரம் போன்ற குணங்களச் சுவாசிக்கும் பொழுது தேய் பிறையாகி
2.மனிதனல்லாத உடல்களுக்கு எப்படிச் செல்கிறோம்…? என்றும் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் நாம் மீண்டும் இன்னொரு பிறவிக்கு வர மாட்டோம்… அழியாத ஒளி உடல் பெறலாம்.

சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

தெய்வ சக்திகளாக நீங்கள் உருவாக வேண்டும் – ஈஸ்வரபட்டர்

தெய்வ சக்திகளாக நீங்கள் உருவாக வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

சொந்தபந்தம்…
தொழில்…
சுற்றுப்புறம்…
விஞ்ஞானம்…
வியாபாரம்…
மருத்துவம்…
இதிலே ஏதாவது ஒன்றிலே இன்றைய மனித வாழ்க்கை அமைந்திருக்கின்றது.

இந்த வாழ்க்கைத் தொடர் சுழற்சியுடனேயே நம் வளர்ச்சியின் வலுவைக் கூட்டிக் கொண்டு இந்த வாழ்க்கைப் பிடிப்பைத் தான்
1.மனிதனின் முற்றிய நிலை என்று இன்பத்தைக் கொள்ளாமல்
2.மனித ஆத்மாவின் உயர்வு வழிக்கு வழிகாட்டி வருகின்றேன் (ஈஸ்வரபட்டர்)

இதைத் தொடர்ந்து படிப்போர் பதிவாக்கி அதைச் செயலாக்கி வரும் நிலையில்
1.இதில் உணர்த்தபப்டாத பல உண்மைகளும் உண்டு…!
2.நேரடியாக உணர்த்தப்படாதவைகளைத் தங்களின் ஞானத்தைக் கொண்டு உணர்ந்து
3.உயரக் கூடிய நிலைகளுக்குத் தான் அவ்வாறு விடப்பட்டுள்ளது.

இனி வரப் போகும் கால நிலையில் துர்மார்க்க… அச்சம் கொள்ளும் அலை உணர்வு தான்… காற்றலையில் நச்சுத் தன்மையாக வளர்ந்தோங்கிச் சுழலும் தருணமாக உள்ளது.

இதிலே மனிதன் தன்னைத் தான் உணர்ந்து
1.தன் ஆத்ம வலுவைக் கூட்டி
2.பிற ஈர்ப்பின் பிடிப்பில் சிக்காமல்
3.உயர் ஞான வழித் தொடரின் தொடர்பைக் கொண்டு
4.வளர்ந்த பல கோடி தேவாதி தேவர்களான சகல சக்திகளையும் சமைக்கவல்ல
5.பேராற்றல் கொண்ட சப்தரிஷிகளின் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆகவே… உயர்ந்தோரின் உயர்வுடன் உயரும் எண்ணத்தில் உள்ள ஒவ்வொரு ஆன்மாவும் உயர்ந்தே செல்லும் வழி முறைக்காக
1.இங்கே வழி காட்டும் உண்மையை ஏற்று
2.ஞான விளக்கப் போதனைகளை ஒவ்வொரு ஆத்மாவும் பெற்று
3.மனித சக்திகளைத் “தெய்வச் சக்தியாக” உருவாக்குங்கள் ஒவ்வொருவருமே.

சாமி இருக்கிறார்… எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொள்வார்…! என்ற எண்ணத்தில் நிறையப் பேர் இருக்கின்றார்கள்

சாமி இருக்கிறார்… எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொள்வார்…! என்ற எண்ணத்தில் நிறையப் பேர் இருக்கின்றார்கள்

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் நீங்கள் உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டுமென்பதற்காகச் சுலபமாகக் கொடுக்கிறோம். அதை நீங்கள் நல்ல முறையிலே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

எந்தச் சங்கடமான உணர்வு வந்தாலும் சரி… உடனே ஆத்மசுத்தி செய்யுங்கள். உங்களிடம் அந்த அழுக்குச் சேராது.

உங்களிடம் அவ்வளவு பவரைக் கொடுக்கிறோம் என்றால் யாம் அனுபவித்து வந்தது.
1.நொடிக்கு நொடி… எம்மை இம்சை பண்ணியே குருநாதர் சக்திகளைக் கொடுத்தார்.
2.உங்களுக்கு இம்சை வரும்போதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து
3.ஆத்ம சுத்தி மூலம் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறோம்.

ஆனால்… சாமியை எண்ணிக் கொண்டிருந்தோம்… எனக்கு இப்படி இருக்கிறதே…! என்று (சாமியை) நினைத்துக் கொண்டே ஏங்கிக் கொண்டிருப்பார்கள்.

ஏதாவது உடலிலே வலித்தால் போதும். எம்மைத் திட்டத்தான் செய்கிறார்கள். சாமி… இப்படி இருக்கிறதே…! தலை வலிக்கிறதே… மேல் வலிக்கிறதே… என்றுதான் எண்ணுகிறார்களே தவிர ஆத்ம சுத்தி செய்யுங்கள் என்றால் எத்தனையோ பேர் விட்டுவிடுகிறார்கள்.

யாம் (ஞானகுரு) உங்களுக்கு லேசாகச் சொல்கிறோம். ஆனால் கஷ்டப்பட்டுத் தான் எல்லாவற்றையும் பார்த்து வந்தோம்.

உங்களுக்குள் வரக்கூடிய துன்பத்தைப் போக்க ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள்..! என்று அடிக்கடி சொல்லிக் கொண்டு வருகின்றேன். லேசாகச் சொன்னால் சொன்னால் பெரும்பகுதியானோர் அதைச் செய்வதில்லை.

சாமி மீது ரொம்பப் பற்று இருந்தால் போதும்…!
1.அவர்கள் என்ன தவறு செய்தாலும் சரி…
2.“சாமி இருக்கிறார்…” அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்…! என்ற எண்ணத்தில்
3.தன்னைத் திருத்திக் கொள்ள மாட்டார்கள்.
4.சாமி இருக்கிறார்…! என்ற எண்ணம் தான் வருகிறதே தவிர
5.சாமி சொன்னதை எடுத்துத் தன்னிடம் வரக்கூடிய தீமைகளைத் தடுப்பதற்கு இல்லை.

கோபத்தையும் ஆத்திரத்தையும் மற்றதையும் தான் எடுத்துக் கொள்கிறார்கள். சாமியிடம் ரொம்ப நெருங்கிப் பழகியவர்கள் இப்படிச் செய்கிறார்கள். நல்லதை எடுப்பதற்கு அவர்கள் எண்ணமே தடையாகிப் போகிறது.

ஐயா இப்படி இருங்கள்… உங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு ஞானிகளின் அருள் சக்தியை எடுங்கள் என்று சொன்னால் “சாமி தான் இருக்கிறாரே… சாமி செய்வார்…” என்றே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

சாமி என்ன செய்வார்…?

ஒவ்வொருவர் உயிரையும் கடவுளாக மதித்து உங்களை அறியாது ஆட்டிப்படைக்கும் தீமையான உணர்வுகள் மாற வேண்டும் என்று யாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

அந்த அடிப்படையிலே நீங்கள் எண்ணினால் தான் உங்களுக்குள் அந்த ஆற்றல்கள் பெருகும். ஆகவே…
1.சாமி சொன்ன உயர்ந்த சக்தியைத் தனக்குள் ஊன்றி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பற்றிப் பேச வேண்டும்… அதை எடுத்துத் தனக்குள் வளர்க்க வேண்டும்.

தியானத்தின் மூலம் நம் கேள்விகளுக்கு விடையை எப்படிப் பெறுவது…? – ஈஸ்வரபட்டர்

தியானத்தின் மூலம் நம் கேள்விகளுக்கு விடையை எப்படிப் பெறுவது…? – ஈஸ்வரபட்டர்

 

ஆண் பெண் ஆத்மக் கூட்டு ஐக்கியத் தொடருடன் பிறக்கும்… ஒளியின் உயர்வு வட்ட வளர் தொடர் சக்தியான “ஆதிமூலம்” என்று உணர்த்தும் மூலத்தையே
1.ரிஷி பத்தினி மூலத்தால் உருவாகும் வழியில் செல்லும் வழி முறைகளையும்
2.மனித ஆத்மாவின் உணர்வு எண்ண மோதலைக் கொண்டு தெய்வ குண சக்திகளைப் பெறும் நிலைக்கு
3.மனிதனின் எண்ண ஓட்டச் சமைப்பினால் செல்லும் வளர் முறைகளை இது நாள் வரை வழிப்படுத்தி வந்துள்ளேன்.

இதைப் படிக்கும் ஒவ்வொரு ஆத்மாவும் இங்கே காட்டியதைச் செயல் முறைப்படுத்தி வளர்ந்து வரும் தொடரில் தங்களுக்கு ஏற்படும் வினாக்களைத் தெளிவு முறை பெறும் மார்க்கத்திற்கு வழி உண்டு.

அதாவது இதைப் படிக்கும் போது ஏற்படக்கூடிய எண்ண மாற்ற நிலைகளைத் தெளிவு காணும் அறியும் நிலைக்கு… நீங்கள் எதை அறிய விரும்புகின்றீர்களோ
1.அறியும் எண்ணத்துடன் புருவ மத்தியில் நினைவைக் கூர் பாய்ச்சிச் செலுத்துங்கள்..
2.பின்… மேல் நோக்கிய சுவாசத் தொடர்பினால் உயர்ந்தோரின் நிலையுடன் எண்ணத்தைச் செலுத்துங்கள்…
3.வளர்ந்த ரிஷிகளுடன் நம் அறியும் எண்ண ஞானத்தைச் செலுத்துங்கள்.

அறிந்து கொள்ளும் உயர் ஞான அறிவாற்றலினால் இவ் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது
1.உயர் ஞானம் பெற்ற அலை சக்தியின் தொடர் நமக்குக் கிடைத்து
2.நம் உடலின் காந்த நுண் அலை ஈர்ப்பில்
3.நாம் அறிய விரும்பிய அனைத்திற்கும் விடைகள் கிடைக்கும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற கடமை உணர்வு நமக்கு எப்பொழுதும் இருக்க வேண்டும்

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற கடமை உணர்வு நமக்கு எப்பொழுதும் இருக்க வேண்டும்

 

வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி மெய்ப் பொருளைக் காணும் நிலைகளுக்குச் சூரியனைப் போன்று நாம் ஒவ்வொருவரும் பிரகாசிக்க வேண்டும்.

நம் உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் நம் உயிரே சூரியனாக இருந்து இயக்குகின்றது. அதே மாதிரி நாமும் பிறருடைய நிலைகளுக்குப் பிரகாசிக்கும் நிலையாக ஒளியின் சுடராக சூரியனாக மாற வேண்டும்.

அதாவது… சூரியனைப் போன்று
1.துருவ மகரிஷி ஒளியின் சுடராகத் துருவ நட்சத்திரமாக அறிவின் ஞானமாக எப்படி வளர்கின்றதோ
2.நாம் ஒவ்வொருவரும் அந்தத் துருவ மகரிஷியாக மலர வேண்டும்.
3.அந்த மகரிஷி காட்டிய நிலைகளை நாம் பின்பற்ற வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி என்ற நிலையில் தீமைகளை அடக்கித் தீமைகளை அகற்றிடும் உணர்வாக உடலான பிரபஞ்சத்திற்குள் நாம் வளர்த்தல் வேண்டும்.

ஆகவே நீங்கள் அனைவரும் தீமைகளை அகற்றி விடுவீர்கள் என்று நம்புகின்றேன்.

1.குரு பக்தி என்ற நிலையில்… குரு என்று நாம் எதைச் சொல்கின்றோமோ
2.நமது குருநாதர் எதைச் சொன்னாரோ அதன் வழிகளிலே நாம் கடைப்பிடித்து
3.ஒருங்கிணைந்த நிலைகளில் வழிப்படுவோம்.

நம்மைக் காப்போம்… நம்மைச் சார்ந்தவரைக் காப்போம்… உலகைக் காப்போம்…! என்ற நிலைகளில் அந்த உயர்ந்த எண்ணங்களை வளர்ப்போம்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் “அந்தச் சப்தரிஷி மண்டலமே நமக்கு எல்லை…!” என்ற நிலையினை வகுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியாகத் தியானிப்போம்.

சப்தரிஷிகளின் அருள் சக்தி நாம் பார்க்கும் அனைவரும் பெற்று அவர்கள் வாழ்க்கையில் மன பலமும் மன வளமும் பெற்று தொழில் வளம் பெருகி செல்வம் செல்வாக்கு பெற்று மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தை ஒவ்வொரு நாளும் எடுத்து நாம் வளர்க்க வேண்டும்.

குரு வழியில் நாம் அனைவரும் அந்த ஞானத்தின் தொடர்பில் வளர வேண்டும். அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏககத்துடன் நாம் தியானிக்க வேண்டும்.

1.குரு நமக்கு எதை உபதேசித்தாரோ நமக்குள் ஒவ்வொரு நாளும் அதை வளர்க்க வேண்டும்
2.நம் பார்வையால் பிறருடைய தீமைகள் நீக்கப்பட வேண்டும்
3.நம் சொல்லால் பிறருடைய கஷ்டங்கள் நீக்கப்பட வேண்டும்.
4.குரு அருளால் அந்தச் சக்தியைப் பெற்று எல்லோரும் நலம் பெற வேண்டும் என்று நாம் தவமிருக்க வேண்டும்.

எல்லோருடைய குடும்பத்திலும் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து அவர்கள் மனமகிழ்ந்து வாழ வேண்டும் என்று நாம் தவமிருக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்ற கடமை உணர்வுடன் நாம் செயல்பட வேண்டும்.

மற்றவர்களுக்கு அந்த அருள் உணர்வினை எடுத்துப் போதிக்கும் தன்மைகள் பெற வேண்டும். அவர்களுக்கு எடுத்துக்காட்டாக நம்முடைய வாழ்க்கைத் தரம் அமைதல் வேண்டும்.

1.அவர்களை நல்வழிப்படுத்தும்… மன பலம் பெறச் செய்யும்… நிலையான வளர்ச்சியாக நீங்கள் பெற வேண்டும்…
2.அந்த நிலையை நீங்கள் அடைய வேண்டும் என்று நான் (ஞானகுரு) பிரார்த்திக்கிறேன்.

ஆண் பாதி பெண் பாதி… என்ற அகில உலகங்களையும் படைக்கும் சக்தி – ஈஸ்வரபட்டர்

ஆண் பாதி பெண் பாதி… என்ற அகில உலகங்களையும் படைக்கும் சக்தி – ஈஸ்வரபட்டர்

 

ஆண் பெண் இன விருத்தியில் ஆணின் அமில சக்தியின் பெண் ஈர்ப்பு ஜீவ நிலையில் சரீர வாழ்க்கை திருமண பந்த சொந்தத்தால் மனிதனின் வம்சத் தொடர் மக்கள் செல்வ நிலை பெற்று வாழும் வழித் தொடர் பூமிப் பிடிப்புச் செயலுடன் ஒன்றிய வாழ்க்கையாக உள்ளது.

இதனை ஒத்த பிறப்பு வளர்ப்பு இறப்புடன் ஒன்றிய சுழற்சியையே எப்படி இரண்டு இரண்டு உறுப்புகளின் உருவ உடல் ஞான ஒன்றிச் செயல்படுகின்றதோ அதற்கொத்த தன்மை போன்றே
1.ஆண் இன அமில ஆத்ம அலையும்
2.பெண் இன ஜீவ வளர்ப்புக்குகந்த ஆத்ம அலையும் ஒன்றாக
3.இரண்டு ஜீவ சரீர பிம்ப ஆத்மாக்களின் தொடர்பு பிறப்பு சிசு பிறப்பதைப் போன்று
4.வலுக் கொண்ட ஆத்ம இணைப்பின் தொடரில் பிறக்கும் நிலைதான் “அர்த்தநாரீஸ்வரர்” என்று காட்டினார்கள்.

ஆண் பாதி… பெண் பாதி… “சிவ சக்தி…” என்றுணர்த்திய தெய்வ நிலையில் வழிகாட்டிய உண்மைத் தத்துவ விளக்க நிலைக்கொத்த ஆத்ம ஐக்கியத்தில் பிறக்கப்படும் வளர்ச்சி நிலையுடன் சுழற்சியுடன் இச்சுழற்சியுடன் ஒத்த ஆத்ம தொடர் கொண்டோரின் ஈர்ப்பு நிலை மகவுகளை சரீரப் பிறப்பில் சரீர சிசு வளர்வதைப் போன்று
1.ஆண் பெண் இன ஆத்ம உயர் சக்தியைக் கொண்டு கூட்டமைப்பின் ஞான சித்தால்
2.“ரிஷி பத்தினி..” என்ற ஒளி நிலை பெறும் ஆத்ம சக்தியைக் கொண்டு
3.இந்தப் பூமி மட்டுமல்லாமல் மற்ற ஏனைய மண்டலங்களுக்கும் உயர்வைக் காட்டிட முடியும்.

ஞானச் சித்து கொண்டு “இரண்டு ஆத்ம ஐக்கியத்தில் ஒன்றானவர்கள்…”
1.உயர்வு கொள்ளாத் தனித்த நிலையில்
2.சித்து நிலையுடன் வளர்ச்சி பெற முடியா உயர் சக்தி கொண்ட தொடர்புகளும்
3.ஆத்ம இணக்க ஆண் பெண் சரீர இயக்கமுடன் ஒத்த நிலையில்
4.சித்து நிலை கொள்ளக்கூடிய ஜீவ சக்தித் தொடர்புடன் வளரும் ஆத்ம ஐக்கிய வளர் சக்தியின் கூட்டமைப்பில்
5.அந்த வலுவாகும் சக்திகள் ஐக்கியம் கொள்ளும்… தன் வளர்ப்பின் நிலைக்காக…!

பல கோடி உண்மைத் தத்துவ உயர் வளர்ச்சி “இன்பத்தின் கோடி…” என்று உணர்த்துகின்றார்களே அத் தொடருக்கும் உயர்ந்த சக்தி நிலைகளை இச்சரீர வாழ்க்கை பந்த ஆண் பெண் ஆத்ம வலுவைக் கொண்டு உயர முடியும்.

ஒரு நிலைப்படுத்தும் வழி – ஈஸ்வரபட்டர்

ஒரு நிலைப்படுத்தும் வழி – ஈஸ்வரபட்டர்

 

உலக வாழ்க்கை… பந்த… கர்ம… காரியங்கள் நடத்திட…
1.உலகச் சுழற்சியுடன் ஒன்றி வாழும் வாழ்க்கையையே
2.நாம் வளரும் வாழ்க்கைக்கு வலுவாக்கிக் கொள்ளும் சத்தாக
3.அவற்றின் நிலையை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

எப்படி ஒரு மரமானது பல விழுதுகளிட்டு வேர் ஓடி… விழுதின் மூலம் சத்தை எடுத்து அம்மரமானது வளருகின்றதோ அதைப் போன்றே வாழ்க்கை கர்ம காரியங்கள் யாவையும் “நம் உயர்வின் வளர்ச்சிக்குச் சத்தெடுக்கும் விழுதுகளாக” அமைக்க வேண்டும்.

1.தீயது என்று எதனையும் ஒதுக்காமல
2.தீயதில் இருந்து தான் “நல் முத்தை” எடுக்கும் வழி முறை போன்று
3.எண்ணத்தின் உணர்வைச் செலுத்தும் ஒவ்வொரு செயலையுமே
4.ஞானிகள் காட்டிய வழியில் வழி நடந்து பக்குவப்படுத்திடல் வேண்டும்.

மனித எண்ணமுடன் பலருடன் கலந்துறவாடும் நிலையிலும் அவர்கள் எந்தக் குண எந்த வளர்ச்சியில் ஒன்றியிருந்தாலும்… நம் உணர்வின் எண்ணம் செலுத்தும் அலைக்குகந்த… அலை உணர்வின் எதிர் அலை சக்தியை நாம் பெறும் நிலை தான் உண்டு.

ஆகவே ஒவ்வொரு காலங்களிலும்
1.பூமியின் சுழற்சியில் இருந்து தான் – இருட்டில் இருந்து தான் ஒளி பெறும் நிலையாக
2.உணர்வின் எண்ணம் செயல்படும் வலுவைக் கொண்டு தான்
3.ஆத்மாவின் வலுக்கூடிய நிலையில் ஆத்மாவின் இயக்க நிலை ரிஷித் தொடர்புடன் ஒன்றிய உயர் நிலைக்குச் செல்லும்.

இத்தகைய நிலை பெற வேண்டும் என்றால் நாம் எப்படி முயற்சிக்க வேண்டும்…?

அதாவது சரீர அவயங்களில் இரண்டு நிலை கொண்ட உறுப்புகள்
1.இரண்டு கால்களைக் கொண்டு ஒத்த நிலையில் “நடை” போடும் இயக்க நிலை போன்றும்
2.இரண்டு கைகளைக் கொண்டு (“இணைந்த கைகளாக”) ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல் கொள்ளும் இயக்க நிலை போன்றும்
3.ஒளி ஈர்க்கும் கண்களை… ஒத்த நிலை ஒன்று போல் கூர் பாய்ச்சிக் காணும் நிலை போன்றும் இருத்தல் வேண்டும்.

ஏனென்றால் கண்களின் விழிகளின் அமைப்புச் சிறிது மாறினாலும் இரண்டு உருவ நிலையைத்தான் காண முடியும். ஒரு உருவமாகக் காண முடியாது.

ஆக.. ஏற்றத்தாழ்வு நிலையின்றி…
1.இரண்டு விழியைக் கொண்டு ஒன்றாக காணும் ஒளி நிலையைப் போன்றும்
2.செவி… சுவாசம்… “இவற்றின் இணைப்பு” இந்த இரண்டின்
3.ஒரு நிலை கூடும் செயலை ஒத்தும் அமைத்தல் வேண்டும்.

அது மட்டுமல்ல…!

1.“சிவம்” என்ற அமிலமும்..
2.“சக்தி” என்ற ஈர்ப்பும்…
3.பூமியாக உருப்பெற்ற தொடரில்
4.சிவசக்தி விநாயகனாக உருவம் பெற்ற ஆத்ம சரீர பிம்ப வளர்ப்பானது
5.எப்படி அந்த “ஆண் பெண் அமில உணர்வு” வளர்ச்சியில் வலுக் கொண்ட ஜீவ நிலை (ஜீவனுள்ள உடலை) பெற்றதுவோ
6.அதைப் போன்று இவ்வாத்ம வழித் தொடர் நிலையிலும்
7.ஆண் பெண் என்ற இணைப்பால் தொடர் கொள்ளும் வழி முறையில் ஆத்மீக வளர்ச்சி கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்துடன் என்னை ஆயுள் மெம்பராக இணைத்தார் குருநாதர்… உங்களையும் இணைக்கின்றோம்

துருவ நட்சத்திரத்துடன் என்னை ஆயுள் மெம்பராக இணைத்தார் குருநாதர்… உங்களையும் இணைக்கின்றோம்

 

சாதாரணமாக மனிதனானவன் தீமையை அதிகமாக அவன் செயல்படுத்த வேண்டும் என்று எண்ணுவதில்லை. நன்மை செய்யவே முற்படுகின்றான். ஆனால்
1.நன்மை செய்ய முற்பட்டாலும்
பிறருடைய துயரப்படுத்தும் நிலையோ வேதனைப்படுத்தும் உணர்வோ அவன் நுகர்ந்து விட்டால்
3.அவன் நல்ல குணங்களை மறைத்து செயலற்றவனாக மாறி
4.இவனும் தீயவனாகத்தான் மாறுகின்றான்.

ஒருவர் நம்மை அடிக்க வருகிறான் என்று வைத்துக் கொண்டால் அவன் நம்மை அடித்து விடுவான் என்று பயந்து ஓடுகின்றோம்.

அப்படி ஓடினாலும் ஒரு சமயம்… “ஏன் இப்படி…?” என்று திரும்பினால் அவன் செய்வதற்கு முன் நாம் தவறு செய்பவனாக மாறுகின்றோம். இப்படித் தான் மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு அறியாத நிலைகளில் மக்கள் வாழ்ந்து கொண்டு வருகின்றனர். அதிலிருந்து அவர்களை மீட்க “மெய் ஞானிகளின் உணர்வினை நீ பதிவு செய்…” என்றார் குருநாதர்.

ஒவ்வொரு உயிரும் கடவுள். உயிரால் உருவாக்கப்பட்ட அந்த உடல் ஆலயம். மனிதனை உருவாக்கிய நல்ல குணங்களைத் தெய்வமாக மதித்து அதைப் பாதுகாக்கும் உணர்வுடன் நீ செயல்பட வேண்டும் என்றார்.

தீமைகளை நீ பார்க்க நேர்ந்தால்… கேட்க நேர்ந்தால்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும் என்று எண்ணி அந்தச் சக்திகளை நீ எடுத்துக் கொள்.

அவர்கள் நலம் பெற வேண்டும் என்றும்… அந்த ஈசன் வீற்றிருக்கும் ஆலயம் பரி்சுத்தம் ஆக வேண்டும் என்றும்…
1.நீ அந்த உயிரைக் கடவுளாக மதி. அவர் உடலை நீ கோயிலாக மதி.
2.மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்கள் அங்கே வளர வேண்டும் என்று நீ எண்ணு.

அதன் வழி நீ செயல்பட வேண்டும், அதற்கேதான் துருவ நட்சத்திரத்துடன் உன்னை (ஞானகுரு) ஆயுள் கால மெம்பராக இணைக்கிறேன் என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

1.நான் (ஈஸ்வரபட்டர்) அதிலே இணைந்தேன்.
2.நான் அங்கே செல்கின்றேன்.
3.நான் சென்ற பின்பும் இதன் உணர்வை நீ தொடர்பு கொண்டால்
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வை நீ பெற முடியும்.
5.அதை நீ எளிதில் பெற்று அனைவருக்கும் கொடுக்க முடியும்.
6.இருளிலிருந்து அனைவரையும் மீட்க முடியும் என்று உணர்த்தினார் குருநாதர்.

நல்லதைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் வருவோருக்கு என்றுமே நாம் தடையாக இருக்கக் கூடாது

நல்லதைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் வருவோருக்கு என்றுமே நாம் தடையாக இருக்கக் கூடாது

 

அருள் ஞானத்தைப் பெற வேண்டும் என்று எவ்வளவோ ஆர்வத்தில் இங்கே வருகின்றார்கள். ஆனால் இங்கே நானா… நீயா…? என்ற நிலைகளில் ஒரு சிலர் செயல்படுகின்றனர்.

ஞானம் பெற வேண்டும் என்று இங்கே எந்தப் பக்குவத்துடன் வருகின்றார்களோ அவர்கள் மனம் புண்பட்டால் அதனுடைய விளைவுகள் நம்முடைய வளர்ச்சியைக் குன்றச் செய்ததுவிடும்.

ஒரு மனிதன் எந்த ஏக்கத்துடன் வருகின்றானோ… அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் வரும் பொழுது… அதற்குத் தடையாக நாம் இருந்தால் அவன் எண்ணங்கள் எவ்வளவு பெரிய நிலையை நமக்கு உருவாக்கும்…! என்று உங்களுக்கே தெரியாது.

இதையெல்லாம் நாம் நம்மிடம் இருந்து அப்புறப்படுத்துதல் வேண்டும். பிறரை நாம் வாழ்த்த வேண்டும்.
1.பிறரை மதித்துத் தான் பழக வேண்டுமே தவிர
2.அவர்களை நாம் தாழ்த்திப் பழகவே கூடாது

குருநாதர் இதைத்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தார். தாயாகவும் நீ இரு… சேயாகவும் நீ இரு…! என்றார்.

1.குழந்தை தாயை ஏசிவிட்டாலும் அந்தத் தாய் “தன் குழந்தை” என்று அரவணைத்துத் தான் செயல்படும்
2.அதே சமயத்தில் குழந்தையைத் தாய் அடித்து விட்டாலும் மீண்டும் அந்தக் குழந்தை தாயை அணுகியே தான் வரும்.

தாயாகவும் சேயாகவும் நாம் ஒருங்கிணைந்த நிலையில் கொண்டு வாழ வேண்டும் என்று குருநாதர் எனக்கு இதைத்தான் முதலில் கொடுத்தார்.

எத்தனையோ பேர் உன்னை ஏசுவார்கள் பேசுவார்கள். ஆனால் தாயாக இருந்து அதை நீ ஏற்று… அவர்களுக்கு… சேய்க்கு உபதேசிப்பது போன்று ஒவ்வொரு நிலைகளிலும் நீ காத்தருள வேண்டும். தாய் தன் குழந்தையை எப்படிக் காக்கின்றதோ அதைப் போல நீ வரவேண்டும்.

ஆகவே நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் தாயாக மாற வேண்டும். சேயை எப்படி வளர்க்கின்றோமோ அது போலச் செயல்பட வேண்டும்.

குழந்தையிடம் யார் எதைப் பேசினாலும் அல்லது குழந்தையைத் திட்டிவிட்டு அடுத்து ஒரு பிஸ்கட்டைக் கையில் கொடுத்தால் அது வாங்கிக் கொள்ளும்.
1.அந்தக் குழந்தையின் செயலைப் போல
2.நாமும் பகைமையை மறத்தல் வேண்டும்

அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பார்க்கும் அனைவரும் பெற வேண்டும் என்ற எண்ணத்தை நமக்குள் உயர்த்த வேண்டும். இதைப் போன்ற நிலைகளை நாம் பின்பற்றுதலே நலம்.

அதற்குத்தான் இந்தக் கூட்டமைப்பை… ஸ்தாபனத்தை அமைத்திருக்கின்றோம். குருவின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்துள்ள நாம் அனைவரும் அதைச் செம்மையான முறையில் கடைப்பிடித்து வழி நடத்துதல் வேண்டும்.

பல்லாயிரக் கணக்கானோர் நல்வழியினை விரும்ப… இதற்குள் இரு நூறு பேர் தடைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்ற நிலையில் நானும் (ஞானகுரு) காட்டிற்குள் சென்று இதைச் செயல்படுத்த முடியும்.

ஏனென்றால் அந்த இடைஞ்சலான இடத்தில் போய் உட்கார்ந்தாலும் அங்கே வருபவர்கள் எத்தனையோ கஷ்டம் என்று ஒரு நான்கு பேர் அந்த “நல்லதைப் பெற வேண்டும்…” என்ற எண்ணத்தில் வருவார்கள்.

அவர்களுக்கு மட்டும் நான் அருள் ஞானத்தைப் பெறச் செய்ய முடியும். கஷ்டப்பட்டு எபப்டியும் நல்லதைப் பெற வேண்டும் என்ற நிலைகளில் வருவோர் நிச்சயம் அதைப் பெறுவார்கள்.

ஆனால் கஷ்டமில்லாமல் நல்லதைப் பெற வேண்டும் என்ற நிலைக்கு வரும் பொழுது எப்படி இருக்கும்…? அது இலேசாகத் தான் தெரியும்.

அது போன்று நீங்கள் ஆகிவிடக் கூடாது என்பதற்குத் தான் இதைச் சொல்லி எச்சரிக்கை செய்கிறேன் (ஞானகுரு).

உயிராத்மாவைப் பாதுகாக்க வேண்டிய முறை – ஈஸ்வரபட்டர்

உயிராத்மாவைப் பாதுகாக்க வேண்டிய முறை – ஈஸ்வரபட்டர்

 

நீர்ச் சத்து நிறைந்த பொருளை உஷ்ணப்படுத்தி வேக விடும் தருணத்தில் நீர் சத்து சுண்டி அப்பொருளும் வெந்து விடுகின்றது.

அதையே இன்னும் அதிக உஷ்ணமுடன் வேக விட.. வேக விட… உஷ்ணத்தினால் எரிசக்தியின் காந்தலுக்குகந்த கருகும் நிலை கொண்டு எந்தப் பாத்திரத்தில் வேக விடுகின்றோமோ கருகிய நிலையுடன் அதிலே ஒட்டி உலர்ந்த பக்குவம் பெற்று விடுகின்றது.

அதுவே நீர் சக்தி இல்லாத எண்ணை வித்தை ஓர் வாணலியில் எண்ணை விட்டு அதைக் காய்ச்சும் பொழுது
1.எவ்வளவு நேரம் அந்த எண்ணை காய்ந்தாலும்
2.மெழுகு போல் திடம் கொண்டு… பிசின் போன்ற நிலை பெறுகின்றது.
3.உலர்ந்த தன்மை பெறுவது இல்லை.

இதைப் போன்றுதான் நம் உடலில்… ஜீவ உணர்வு எண்ண பூமி சமைப்பின்…
1.நீர் சக்தியுடன் நாம் எடுக்கும் சுவாச அலையானது…
2.பூமி ஈர்ப்புப் பிடியுடன் ஒன்றிய சரீர இயக்க வலுத் தன்மையாக
3.இந்தப் பூமி சமைக்கும் நிலைக்கொப்ப ஒன்றிய உடல் வாழ்க்கையாக நிலை அமைகின்றது.

ஆனால் வலுக் கூடிய வளர்ச்சி கொண்ட… இந்தப் பூமியின் வலுப் பெற்ற… பிற மண்டலத்தில் இருந்து அகிலத்தையும் அறியவல்ல ஆற்றல் கொண்ட ரிஷிக் கோடிகளான தேவாதி தேவர்களின் சக்தியை நாம் பெற வேண்டும்.

அத்தகைய வலுக் கொண்டோரிடம் எண்ணத்தின் உணர்வைச் செலுத்தி நாம் எடுக்கும் சுவாச வலுவால்
1.சரீர இயக்க வலுத்தன்மையும்
2.எலும்புகளின் உறுதி ஊட்டச் சத்தும்
3.உண்ணும் உணவைக் காட்டிலும் சத்தாக
4.எலும்புகளின் வளர்ச்சி முற்றி ஆத்ம வலு நிலை கொள்கின்றது.

நீரின் சத்தை எடுத்துத்தான் வித்தாகின்றன எண்ணைச் சத்து தரும் வித்துக்கள். அதைப் போன்று நம் ஆத்மாவை “சரீர ஜீவ நீர் சத்தைக் கொண்டு”
1.எலும்புகளை எல்லாம் எண்ணை வித்தின் வளர்ப்பு நிலை போன்று வலுவாக்கி
2.அந்த வலுவின் தொடரைக் கொண்டு ஆத்ம இயக்கம் செயல் கொள்ள வேண்டும்.

உதாரணமாக நீர் சத்தால் துருப்பிடிக்கும் இரும்பு உலோகத்தை எண்ணைச் சத்தை இட்டு அதைத் துருப்பிடிக்காமல் செய்கின்றோம் அல்லவா…!

அந்த இரும்பைப் பாதுகாக்கும் செயல் தன்மை போன்று நம் ஆன்மாவைப் பாதுகாக்க வேண்டும்.

அதாவது…
1.ஜீவ இயக்க எண்ண உணர்வானது இந்தப் பூமி சமைப்பின் உணர்வு எண்ண
2.கர்ம காரிய வாழ்க்கையுடன் சிக்கித் துருப்பிடிக்கும் கரையும் நிலை போன்ற நிலைப்படுத்தாமல்
3.எண்ணை வித்தைப் போன்று
4.சத்து நிலை பூண்ட… சத்து குண வலுக் கொண்டோரின் வலுவைப் பூசி
5.ஆத்ம உடலைப் பாதுகாத்திடல் வேண்டும்.