புராதன ஆலயங்களின் சுவர்களிலும் சிலைகளிலும் பூசப்பட்டிருக்கும் “வர்ணங்களின் இரகசியம்…”

புராதன ஆலயங்களின் சுவர்களிலும் சிலைகளிலும் பூசப்பட்டிருக்கும் “வர்ணங்களின் இரகசியம்…”

 

விஞ்ஞான உலகில் “நாகரீகம்…” என்ற போர்வையில் நாம் உடுத்தும் ஆடைகளிலும் சாயங்கள் என்ற பெயரில் விஷத் தன்மைகள் கலக்கப்பட்டு விட்டது. இன்று அத்தகைய ஆடைகளைத் தான் நாம் அணிகின்றோம்.

நாம் அணிந்திருக்கும் ஆடைகளில் உள்ள விஷத் தன்மைகள்… அதே இனமான தன் சக்தியைக் காற்றிலிருந்து கவர்ந்து நம் ஆன்மாவில் கலக்கச் செய்துவிடுகிறது.

அதன் வழி ஆன்மாவிலிருந்து சுவாசிக்கும் போது நுகர்ந்த உணர்வு உயிரிலே பட்டு நம் இரத்தநாளங்களில் விஷத் தன்மைகள் கூடிவிடுகின்றது.

ஜெர்மனி போன்ற நாடுகள் எல்லாம் இத்தகைய சாயங்கள் கலக்குவதனால் அதிலுள்ள விஷத்தினால்
1.கேன்சர் என்ற நோய் வருகிறது.
2.ஆஸ்த்மா என்ற நோய்கள் வருகிறது.
3.மனிதன் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகிறது என்று கண்டு கொண்டனர்.

ஆகவே தீமையை உருவாக்கும் இத்தகைய சாயங்களை நீக்க வேண்டும்… எங்கள் நாட்டிலே இறக்குமதி செய்யக்கூடாது என்று தடுத்து நிறுத்தினான்.

நம் நாட்டின் பண்பின் பிரகாரம் இன்றும் பழைய ஆலயங்களில் எல்லாம் சாயங்கள் (வர்ணம்) என்று பூசியிருப்பார்கள்.
1.இயற்கையில் உருவான பச்சிலைகளை எடுத்து
2.பல பல தீமைகளை அகற்றக்கூடிய அத்தகைய மூலிகைகளை
3.மற்றவைகளுடன் கலந்து மற்ற கலருடன் இணைக்கச் செய்யப்படும் போது
4.அந்த ஒன்றுபட்ட நிலைகள் கொண்டு… அதனின் உணர்வுகளை
5.ஆலயத்தில் உள்ள சுவர்களில் உள்ள காந்தப் புலன்கள் இதைக் கவர்ந்த பின்
6.அதிலிருந்து மகிழ்ச்சி ஊட்டும் உணர்வாக வெளி வரும்.

அந்த உணர்வுகள் காற்றிலே பட்ட பின் நீங்கள் அந்த ஆலயத்திற்குள் சென்ற பின் இருளை நீக்கும் அரும் பெரும் சக்தியைப் பெறச் செய்யும் தகுதிக்குத் தான் “இயற்கையில் விளைந்த தாவர இனங்களைச் சேர்த்தான் அன்றைய ஞானி…”

அன்று பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் கருவிலே இருக்கப்படும் போது தாய் தந்தையர்கள் பல விஷத் தன்மை கொண்ட விஷத்தை முறித்திடும் தாவர இனங்களை தாங்கள் படுத்திருக்கும் குகைப் பக்கம் போட்டு வைத்திருந்தனர்.

அந்த மணத்தை நுகர்ந்த பின் விஷப் பூச்சிகளோ மற்றவைகளோ அச்சத்தால் நகர்ந்து ஓடுகிறது. அகஸ்தியனின் தாய் தந்தையருக்கு ஒரு பாதுகாப்பாக அது அமைகிறது.

அவர்கள் தங்களைக் காத்திடும் நிலையாகச் செயல்படுத்திய தாவர இனத்தின் மணங்களை அந்தத் தாயின் கருவிலே வளர்ந்த அகஸ்தியனுக்குள்ளும் இது பெறப்படுகின்றது.

இதைப் போன்று தான் இயற்கையில் விளைந்த அத்தகைய தாவர இனங்களில் உள்ள
1.தீமைகளை அகற்றிடும் இப்படிப்பட்ட பச்சிலைகளை எடுத்துத் தான்
2.அன்று ஆலயங்களிலே வர்ணங்களாகக் கலந்து பூசுவதும்
3.அந்த வண்ணங்களை எடுத்து நமக்குள் நுகரப்படும் போது
4.தீமைகளை அகற்றிடும் ஒளிக்கதிர்களை தனக்குள் பாய்ச்சும் தன்மையாகக் கொண்டு வந்தனர் அகஸ்தியனுக்குப் பின் வந்த ஞானிகள்.

எப்படி ஒரு தாவர இனம் தன் தாய்ச் செடியின் சத்தைக் கவர்ந்து அந்த வித்துக்கள் விளைகின்றதோ… அதைப் போன்று தீமைகளை வென்றிடும் தாவர இனத்தின் சத்தை இங்கே நம்மை நுகர வைக்க சுவர்களிலும் சிலைகளிலும் வர்ணங்களாகத் தீட்டுகின்றனர்.
1.அந்த அலைகளைக் கவரும் தன்மையால்
2.இந்த ஆலயத்திற்குள் தீமை வராதபடி ரொம்பவும் நாசூக்காக அன்றைய ஞானிகள் செய்தனர்
3.அகஸ்தியன் பெற்ற பேருண்மையின் தன்மைகளை மக்களுக்குக் கிடைக்க ஆலயங்களில் இப்படிச் செய்தனர்.

ஆலயங்களில் பார்த்தோமென்றால் வர்ணங்கள் எத்தனையோ இருக்கின்றது. நன்றாக யோசனை செய்து பாருங்கள்…!

உன் தியான நிலையைக் கூட்டிக் கொண்டால் நீ செய்யும் தொண்டுடன் வந்திடுவேன் நானும் அங்கே…!

உன் தியான நிலையைக் கூட்டிக் கொண்டால் நீ செய்யும் தொண்டுடன் வந்திடுவேன் நானும் அங்கே…!

 

தியான நிலையின் பொருள் என்னப்பா…? தியானம் செய்வது எதற்காக…?

உணவிற்கோ உடைக்கோ உலக ஆசாபாசத்திற்கோ செய்வது தியானம் அல்ல…! என்று பலர் சொல்வார்கள். மனிதனாகப் பிறந்தவனுக்கு உண்ணும் உணவும் உடுக்க உடையும் ஆசாபாசங்களும் உள்ளது தானப்பா. இந்த உலகில். இந்த உடலையும் பாதுகாக்க வேண்டுமப்பா…!

தியானத்தின் பொருள்
1.இந்த உடலில் நாம் உள்ளவரை “ஒ…ம் ஈஸ்வரா… குருதேவா…!” என்ற ஜெபத்தை
2.உயிரைப் புருவ மத்தியில் எண்ணித் தியானிக்க வேண்டுமப்பா.
3.அப்படித் தியானித்தால் உன் சுவாச நிலை நல்லதாக மாறிவிடும்.

அந்த நிலையில் உன் எண்ணமெல்லாம் சிதறிவிடாமல் பரிபக்குவமான நிலையில் உயிரான ஈசனை எண்ணும் பொழுது “சுவாச நிலை ஒரு நிலைப்படுகின்றது….!”

சுவாச நிலை ஒரு நிலைப்பட்டவுடன் உன் உயிர் நிலைக்குப் பெரும் உன்னதத் தன்மை வருகின்றது. அந்த நிலையை எய்திவிட்டால் பிறரின் துவேஷமும் எந்தத் தொழிலுக்கும் வேறு எந்த நிலை வந்தாலும் உன் நிலை மாறாது.

உன் நினைவெல்லாம் “ஈஸ்வரா…!” என்று உயிருடனே ஒன்றி இருக்க வேண்டும். எந்தத் தீமையான உணர்வும் உன்னை அண்டாது. துன்பங்களும் உன்னை அண்டாது. உன் எண்ணத்தில் உள்ள கோபதாபங்களைக் குறைத்துவிடும்.

1.பிறரின் புகழுக்கு மயங்கிடாதே…!
2.பிறரைப் போற்றுவதையும் விட்டிடப்பா…!
3.விஷமான தன்மை தான் இந்த இரண்டும்.

ஜெப நிலையில் இருந்திட்டால் தோல்வி நிலை எந்த நிலையிலும் அண்டிடாதப்பா…! உன் நிலைக்கு உதயத்தை (தக்க உபாயத்தை) அளித்திடுவான் அந்த ஈஸ்வரனே…! நீ எடுக்கும் ஈஸ்வர தியானத்தினால் ஜெயித்திடலாம் உன் வழிக்கே…! எல்லாமே…!

உன் தியான நிலையைக் கூட்டிக் கொண்டால்
1.நீ செய்யும் தொண்டுடன் வந்திடுவேன் நானும் அங்கே…!
2.உன் நிலையில் வருபவர்களுக்கெல்லாம் வாழ்த்திடப்பா “நலமாக வாழ்வாய்…!” என்ற சொல்லை.
3.வாழ்வாங்கு வாழ்த்துவார்கள் அவர்கள் உன்னை.
4.அவர்கள் வாழ்த்திடும் வாழ்த்து தானப்பா ஈஸ்வரனின் வாழ்த்து…!

ஈசனின் வாழ்த்தையே நீ பெற்றிவிடுவாய்…!

ஆடல் கலைகளை ஞானிகள் நமக்கு வகுத்துக் கொடுத்ததன் உண்மையான நோக்கம் என்ன…?

ஆடல் கலைகளை ஞானிகள் நமக்கு வகுத்துக் கொடுத்ததன் உண்மையான நோக்கம் என்ன…?

 

பண்புகளை இழந்து நாகரீகம் என்ற நிலைகள் கொண்டு ஆட்டங்கள் ஆடிக் கொண்டிருக்கும் போது தையா…தக்கா… என்று ஆடுவதும் ஆணும் பெண்ணும் மோதுவது போல் செயல்படுத்துவதும்… இது தான் இன்றைக்கு இருக்கும் ஆடல் பாடல் கொண்டாட்டம் எல்லாமே.

கழுதை கத்துகிற மாதிரியும்… குதிரை கத்துகிற மாதிரி ஊளையிடுவதும்… அதாவது மிருகங்களுக்குச் சமமான நிலைகள் கொண்டு ஆடுவது தான் இன்றைய டான்ஸ் (DANCE).

ஆடுவதைப் பார்த்தால் ஏய்….ஊய்… என்று அவனையே பைத்தியக்காரனாக ஆக்கும் நிலையில் இது தான் கலாச்சாரமாகப் போய்விட்டது.

ஆனால் ஞானிகள் காட்டிய நிலைகள் என்ன…?

மனித வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் எதிர்படும் உணர்வுகளால் மனது சோர்வடைகிறது. அதனால் உள் உறுப்புகள் சோர்வடைந்து பல நோய்களுக்குக் காரணமாகின்றது. அதைச் சீராக்குவதற்காக வேண்டி…
1.இனிமையான இசை கொண்டு அங்கங்களை அசைத்து அதற்குத் தக்க அபிநயங்களைக் காட்டப்படும் போது
2.உள் உறுப்புகள் இயக்கமாகி உடலில்… சிக்கல் உள்ள நீர்களை மாற்றுவதும்
3.தும்மல் வரும் போது ஒரு பக்கம் சிக்கலானால்… இங்கே அபிநயமாகும் போது அந்தச் சிக்கலை மாற்றி
4.உடல் நலம் பெறுவதற்கும் மகிழ்ந்து வாழும் உணர்வுகளை நுகரச் செய்வதற்கும் நாட்டியங்களாக (ஆடல் கலைகள்) உருவாக்கினார்கள்.

ஏனென்றால் மனிதன் வேகமாக இருக்கும் போது உள் உறுப்புகளில் குறிப்பாக நுரையீரலில் சிக்கலாகி விட்டால் அதனால் இருமல்கள் வரும்.
1.அடிக்கடி விரிவடையவில்லை என்றால் அழுத்தங்கள் அதிகமாகும்
2.அப்போது நுரையீரலில் எதிர்ப்பாகிவிடும்.
3.நாளடைவில் அந்த உறுப்பே பாழடைந்து விடுகிறது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்குத் தான் கலை அபிநயம் கொண்டு உணர்வின் தன்மை கொண்டு அங்கங்களை அசைத்து மகிழ்ச்சியின் உணர்வுகளைத் தனக்குள் தோற்றுவிக்கும்படி செய்தார்கள்.

1.தன்னை அறியாது உடலில் உண்டாகும் நரம்புப் பிடித்தங்களையோ
2.உறுப்புகளில் ஏற்படும் சிக்கல்கலையோ நீக்குவதற்கு அதைச் செயல்படுத்தினார்கள்.

ஆனால் இன்று நாகரீகம் என்ற பெயரில் தையா… தக்கா… என்று குதித்து தவறான உணர்வுகளைத் தூண்டி… கருத்தை இழக்கச் செய்து அநாகரீக நிலைகளை வளர்க்கச் செய்து… மாடுகளைப் போல் நம்மை ஆடும்படி வைத்துவிட்டார்கள்.

குழந்தைக்குப் பிறந்த நாள் கொண்டாடுகிறோம் என்றால் ஞானிகள் காட்டிய நிலைகள் என்ன…?

விளக்கை (ஜோதியை) ஏற்றி வைத்துச் சொந்தமோ பந்தமோ நண்பர்களோ எல்லோரும் சேர்ந்து அந்தக் குழந்தையைப் பார்த்து…
1. அவன் உலக ஞானம் பெற வேண்டும்
2.உலகைக் காக்கும் அருள் ஞானம் பெற வேண்டும்
3.குடும்பத்தைக் காக்கும் அருள் ஞானியாக வேண்டும்
4.இருளை அகற்றும் அருள் ஞானம் பெற வேண்டும்
5.பண்புள்ளவனாக வளர வேண்டும் பரிவுள்ளவனாக வளர வேண்டும் என்று வாழ்த்துக்களைச் சொல்லி
6.பாடலைப் பாடி அவனை மகிழச் செய்து… உன்னுடைய வழி எப்படி இருக்க வேண்டும்…?
7.அன்னை தந்தையரால் நீ வளர்க்கப்பட்ட நிலைகள் என்ன…? கல்வியின் தரங்கள் என்ன…? கருத்தின் தன்மை என்ன…? என்ற
8.இந்த உணர்வுகளின் தன்மை எடுத்துப் பாடலின் ரூபமாக அவனுக்கு எடுத்துக் கூறியது தான் அக்கால வழக்கங்கள் – ஆடல் பாடல்கள்.

அதை யாராவது நாம் இப்போது செய்கிறோமா என்றால் இல்லை. இதைச் சொன்னால் அநாகரீகம் என்ற நிலையில் விட்டுவிடுகிறார்கள்.

எரியும் வெளிச்சத்தை ஊதி அணைத்து இருள் சூழச் செய்து… எல்லோரும் சப்தமிட்டு… அதன் பின் கேக்கைக் கத்தியால் அறுத்துக் கொடுப்பது தான் நம்முடைய கலாச்சாரமா…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

“அறிவிப்பு” – நல் சுவாசத்தை எடுத்தவர்களை எல்லாம் ஒரு நொடியில் பறக்கச் செய்கின்றாள் ஆதிசக்தி

“அறிவிப்பு” – நல் சுவாசத்தை எடுத்தவர்களை எல்லாம் ஒரு நொடியில் பறக்கச் செய்கின்றாள் ஆதிசக்தி

 

இந்தக் கலி மாறி கல்கி வரும் பொழுது இந்த உலகின் தன்மையே விஞ்ஞானிகளால் உருவாக்கிய அணுகுண்டால் விஷத் தன்மை உலகம் முழுவதும் பரவுகின்றது.

அந்த நிலையிலேயே
1.இந்தப் பூமித் தாயின் பொக்கிஷங்களை (உலோகங்கள்) எல்லாம் இன்றைய மனிதன் பாளம் பாளமாக வெட்டி எடுக்கின்றான்.
2.அதே சமயத்தில் உறிஞ்சும் தன்மை கொண்டு பூமிக்குள் இருக்கும் திரவங்களை (OIL) எல்லாம் எடுத்துக் கொண்டேயிருக்கின்றான்.

அதனின் விளைவாகக் கலியின் கடைசியில் அணுகுண்டின் கதிரியக்க அணுக்களும் மனிதன் செய்த பெரும் செயற்கையின் விளைவுகளாலும் ஒரு நிலையில் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த உலகம் அந்த அணுக்களின் தாக்குதலால் அந்த ஒளி பட்டவுடன் பூமியின் இயற்கைத் தன்மையைச் செயற்கையின் நிலையாக மாற்றியதால் “ஒரு நொடியில் உலகமே அழிகின்றது…!”

“நல் சுவாசம் எடுத்தவனுக்கு…!” அந்த அணுகுண்டின் விஷத் தன்மையும் இந்த உலகத் தன்மையும் வந்து தாக்கிடாது.

இந்த உலகத் தன்மை மாறும் பொழுது இந்தப் பூமியின் நிலை மீண்டும் கல்கிக்கே வருகின்றது. கல்கியில் இருந்த நிலையெல்லாம் பெரும் நீர் நிலை தான்.

ஒரு நொடியில் உலகத் தன்மை மாறுகிறது என்றேன் அல்லவா…! அந்த நிலையில் உலகத் தன்மை மாறும் பொழுது
1.உன் சுவாச நிலையின் தன்மையால்…
2.அவரவர்கள் செய்த பூர்வ புண்ணிய பலனால்…
3.பெரும் சித்தர்களும் ஞானிகளும் மகரிஷிகளும் வந்து கலக்கும் கல்கி என்ற அந்த நிலையில்
4.நல் சுவாசத்தை எடுத்திட்டவர்களை எல்லாம் ஒரு நொடியில் அவர்களைப் பறக்கச் செய்கின்றாள் அந்தச் சக்தி.

பாவ உடல்களில் உள்ளவர்கள் தான் அந்தச் சுவாச நிலையின் தன்மையால் கலியின் கடைசியை முடிக்கின்றார்கள்.

ஆரம்பமாகும் முதல் படியாக கல்கியில் ஒளியாக ஒவ்வொருவரும் வந்திடவே இதை உணர்த்துகின்றேன்…!

மூச்சுத் திணறல் வருவதற்கு மூல காரணம் என்ன…?

மூச்சுத் திணறல் வருவதற்கு மூல காரணம் என்ன…?

 

குழந்தைகள் மீது அன்பிருந்தாலும் சரி… மனைவி மீது கணவனுக்கு அன்பிருந்தாலும் சரி… அந்த அன்பு கொண்ட நிலையில் சிறிது குறைகள் வந்துவிட்டால் தொழில் நிமித்தம் வெளியில் வெறுப்படைந்து வீட்டிற்குள் வரும் சமயங்களில் மனைவி மீது கணவன் வெறுப்படையும் தன்மை வருகின்றது.

வெறுப்படையும் உணர்வுடன் வரப்படும் போது சாப்பிடும் போது மனைவி ஆகாரத்தைச் சுவையாகச் செய்திருந்தாலும் அந்தச் சுவையை ரசித்துச் சாப்பிடும் நிலையை அது இழக்கச் செய்து விடுகின்றது.

அப்போது சோர்வடைந்து… என்ன சாப்பாடு இப்படி இருக்கிறது என்ற வேகங்கள் வருகிறது.

நாம் உழைத்துச் சம்பாரித்துப் போட்டாலும் கூட “இங்கே சாப்பாடு மோசமாக இருக்கின்றதே…” என்று இந்தக் குறையான உணர்வுகளைச் சுவாசித்து நம்மை அறியாமலே அன்பு கொண்ட மனைவியையும் வெறுக்கும் தன்மை வந்துவிடுகின்றது.

ஏனென்றால் நாம் அல்ல.

காரணம்…
1.நாம் எடுத்துக் கொண்ட பிற உணர்வுகள் நம் நல்ல குணங்கள் கொண்ட உணர்வுகளை மறைத்து விடும் போது
2.உணவைப் பார்க்கும் போது சுவைமிக்க உணர்வின் அமிலங்கள் ஊறினாலும்
3.அதிலே… சந்தர்ப்பத்தால் எடுத்த விஷம் கலந்த அமிலங்கள் கலக்கப்படும் போது
4.சுவையான அந்த உணவின் ருசியையே மாற்றிவிடுகிறது.

அதனால் பித்தம் அதிகமாகின்றது. பித்தம் கூடி விட்டால் அடுத்து எதைச் சாப்பிட்டாலும் வாந்தியாக வருகிறது. சுவையான உணவை நீங்கள் உட்கொண்டாலும் உடல் அதை ஏற்க மறுக்கின்றது. இதை எல்லாம் உங்கள் அனுபவத்தில் பார்த்திருப்பீர்கள்.

ஆக பித்தத்தின் தன்மை கொண்டு நாம் உடல் வலுப் பெற வேண்டும் என்றாலும் முடியாத நிலை செய்கின்றது. இது எல்லாம் நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் அது அமிலங்களாக எச்சிலாக மாறுகின்றது.

உணவாக உட்கொள்ளும் நிலையில் அந்தந்த உணர்வுக்கொப்பத் தான் உடல் ஜீரணிப்பதும் ஆஜீரணமாவதும்.
1.நீங்கள் அதிகமான சலிப்பும் சஞ்சலத்துடன் இருந்துவிட்டு அந்த உணர்வுடன்
2.நல்ல சுவையான உணவை உட்கொண்டால் அதை ஜீரணிக்கும் சக்தியும் குறைகின்றது.

கஷ்டப்பட்டு உழைத்து அப்பொழுது நல்ல சுவையான உணவை உட்கொண்டு உடல் வலுப் பெற வேண்டும் என்று எண்ணினாலும் சலிப்பு சஞ்சலம் என்ற உணர்வுகள் உமிழ் நீராக மாறும் போது ஜீரணிக்கும் சக்தி இழந்து புளித்த ஏப்பமாக வரும்.

1.புளித்த ஏப்பம் வந்த பின் அந்த வாயு என்ற நிலைகளால் வயிறு உப்புசமாகும்
2.வயிறு உப்புசமானாலும் வாயுத் தன்மை நுரையீரலில் அதிகமானால் அங்கே மூச்சுத் திணறல் போன்று வரும்… ஆயாசமாக வரும்.

ஆனால் நாம் தவறு செய்தோமா என்றால் இல்லை.

இதைப் போன்று நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் எப்படி எல்லாம் இயக்குகிறது…? என்ற நிலையை நம் குருநாதர் அருள் வழியில் எமக்குக் காட்டினார்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் காலை துருவ தியானத்தில் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நீங்கள் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

ஒவ்வொரு நிமிடத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானித்து இந்த உணர்வின் தன்மை வலுவாகச் சேர்த்துக் கொண்டால் எத்தகைய குறைகள் வந்தாலும் அதை நீக்க முடியும்.

ஆகவே மன உறுதி கொண்டு…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று அடிக்கடி உடலில் சேர்த்துக் கொண்டால்
2.சோர்வு சலிப்பு சங்கடம் சஞ்சலம் போன்ற உணர்வுகளை மாற்றி அமைக்க முடியும்.
3.மற்றவர்கள் செயலைப் பார்த்து நுகரும் தீமையான உணர்வுகள் நமக்குள் உருப்பெறாதபடி தடுக்கவும் முடியும்… நோயாகவும் மாறாது.

நாடியைப் பார்த்தால் தெரிந்துவிடும் மூன்று ஜென்மக் கதையும்

நாடியைப் பார்த்தால் தெரிந்துவிடும் மூன்று ஜென்மக் கதையும்

 

ஒரு குழந்தை வீட்டில் பிறந்தவுடன் அந்த வீட்டில் உள்ள பெரியவரும் தன் வாயால் சொல்வதில்லை. பிறந்த நேரம் எப்படி உள்ளதோ…?!
1.ஜாதகக்காரனிடம் கேட்டால் பகர்ந்திடுவான்.. என்ற எண்ணத்துடன்
2.ஓடுகின்றார்கள்…… ஜாதகத்தைப் பார்க்க.

அந்த ஜாதகக்காரனின் தன்மையிலே சொல்கின்றதாம்…! குருவும் கேதுவும் சனியும் சந்திரனும் சூரியனும் புதனும் வியாழனும்…! இதை எல்லாம் பகர்ந்தவன் யாரப்பா…?

ஒன்பது கட்டம் போடுகின்றான். புதனின் பார்வையிலே சந்திரன் படுகின்றானாம். கேதுவின் நிலை பார்க்கின்றதாம்…! சனி உச்சத்தில் உள்ளதாம்.. சுக்கிரன் நடக்கின்றானாம்…! எப்படி இருக்கிறது பார்த்தாயா…?

குழந்தை பிறந்தவுடன் இப்படிப் பகர்கின்றான் பாவக்காரன். அந்தக் குழந்தையின் ஜாதகத்தையே வளரும் காலமெல்லாம்
1.அக்குழந்தையை வளர்ப்பவனுக்கும்
2.அக்குழந்தை விபரம் வந்த பிறகும்
3.ஜாதகக்காரன் சொல்வது தான் மனதினுள்ளே பதிகின்றது.

அதை வைத்து வளர்த்திட்டால் அந்த எண்ணத்தில் வைத்து வளரும் வளர்ப்புத்தான் வந்திடும். ஜாதகத்தில் வந்ததனால் எண்ணத்தின் ஊன்றிவிடுகின்றது.

அந்த “எண்ணமே தான் மனிதன்…!” என்று பல முறை பகர்ந்திட்டேன்,

எண்ண வடிவில் வருவதெல்லாம் கால நிலையில் வந்திடுமப்பா. ஜாதகத்தில் வந்ததல்ல அந்நிலை. ஜாதகம் ஜோதிடம் என்பதெல்லாம் பொய்யுமல்ல… நடப்புமல்ல…!

முன் ஜென்மத்தின் நிலையையும் கண்டிடலாம். இந்த ஜென்மத்தின் நிலையையும் கண்டிடலாம் என்னும் நிலையில் தான் ஆதிகாலத் தவசிகள் பெரும் தவமிருந்து பெற்றிட்டார்கள்.

1.ஓலைச் சுவடி முறையின் முறையிலே
2.நாடி நரம்பு என்ற வழியினிலே
3.ஒருவன் ஜாதகத்தைத் தெரிந்திட அவனின் நாடியைப் பார்த்தால் தெரிந்துவிடும்
4.அவன் மூன்று ஜென்மக் கதையும் – முன் ஜென்மக் கதையும் நடக்கும் ஜென்மமும் அடுத்த ஜென்மமும்.

எல்லாவற்றையும் மாற்றிவிட்டார்கள் பெரும் ஆத்திரக்காரர்கள்… அழித்துவிட்டார்கள் தான் பிழைக்கும் வழிக்காக. போகர் எழுதிய நாடியெல்லாம் நடு ஆற்றில் விட்டுவிட்டார்கள்.

எழுதுகிறார்கள் ஜாதகத்தை… புதனைச் சனி பார்ப்பதாக…!

ஜாதகம் என்பது முன் ஜென்மத்தில் நடந்தவற்றைத் தெரிந்து இந்த ஜென்மத்தில் நடப்பதைச் சொல்வது தான். திரித்துவிட்டார்கள் ஜாதகத்தின் உண்மை நிலையை.

இன்று ஜாதகம் பார்ப்பதெல்லாம் பேராசையின் ஆவலால் தான்.

ஆகவே ஜாதகத்தைப் பார்க்க எங்கும் சென்றிட வேண்டாம்…
1.உன் நிலையிலேயே உன் உள்ளத்திலேயே உன் ஜெப நிலையைக் கூட்டிக் கொண்டால்
2.தெரிந்துவிடும் “ஏழு ஜென்மப் பலனும்…!”

நல்லது நடக்காது… என்று எண்ணுவதற்குப் பதிலாக நல்லது நடக்கட்டும்… நல்லது வரட்டும்… என்று மாற்றி யோசிக்க வேண்டும்

நல்லது நடக்காது… என்று எண்ணுவதற்குப் பதிலாக நல்லது நடக்கட்டும்… நல்லது வரட்டும்… என்று மாற்றி யோசிக்க வேண்டும்

 

குடும்பத்தில் அன்புடன் தான் வாழ்கின்றோம். பிள்ளை அமெரிக்காவில் இருந்தாலும் “என் பிள்ளை ஒரு மாதமாகத் தபால் போடவில்லையே…” என்று தாய்க்குள் வேதனையின் உணர்வின் தன்மை வரும் போது அது வலுவான உணர்வுகளாக வருகின்றது… பாச உணர்வு இயக்குகிறது.

அந்த வேதனையின் உணர்வுகளைப் பாசத்தால் தாய் பதிவு செய்கிறது. பாசத்தின் உணர்வு கொண்டு குழந்தையை எண்ணி வேதனைகளைப் பாய்ச்சப்படும் போது அங்கே என்ன நடக்கிறது…?

தாய் வெளிப்படுத்திய வேதனை உணர்வு
1.அங்கே (அமெரிக்காவில்) அந்தக் குழந்தையின் உணர்வுகளில் அது நுகரப்பட்டு… சிந்திக்கும் தன்மை இழக்கப்பட்டு
2.மேடு பள்ளம் தெரியாதபடி கீழே விழுந்து காயமாகின்றான்.

அப்போது… நான் நினைத்தேனே… அது போல் ஆகிவிட்டதே…! என்று தாய் மீண்டும் வேதனைப்படுகிறது. ஆனால் தபால் வரவில்லையே என்ற வேதனையுடன் எண்ணப்படும் போது… “என்ன ஆனதோ…? ஏது ஆனதோ…? என்ற பதட்ட உணர்வின் இயக்கம் தான்…” அங்கே குழந்தையை அவ்வாறு இயக்குகிறது.

இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தை தபால் போடவில்லை… சரி…!
1.இருந்தாலும் மன வலு கொண்டு உறுதியான நிலைகள் கொண்டு
2.தபால் வருவதில் ஏதோ மாற்றங்கள் இருக்கலாம்… என்று இதை மாற்றி விட்டால்
3.தபாலின் மாற்றங்களாகத் தான் நாம் அறிந்து கொள்ளக் கூடிய தன்மை வரும்.
4.பின்னாடி பார்த்தோம் என்றால் ஓ… தபால் தேங்கி வந்தது…! என்ற நிலை வரும்.

ஆனால் தபால் வரவில்லையே என்ற வேதனை உணர்வு கலக்கப்படும் போது எந்தக் குழந்தை மேல் பாசமாக இருந்தோமோ… அங்கே இயக்கப்பட்டுச் சிந்தனை இழக்கச் செய்து குழந்தை தடுமாறிக் கீழே விழுந்து விடுகிறது.

அதே மாதிரி நண்பர்களுக்குள் ஒருவருக்கொருவர் நல்ல சந்தோஷமாக இருக்கின்றோம் என்று பதிவாக்கிக் கொள்கிறோம். கூட்டாகத் தொழிலும் செய்கிறோம்.

ஆனால் சந்தர்ப்ப பேதத்தால் வியாபாரத்தில் ஏதோ மந்தமாகி விட்டால் இவன் எனக்குத் துரோகம் செய்கிறான்… இல்லை நீ தான் எனக்குத் துரோகம் செய்தாய்…! என்ற கோப உணர்வுகள் பதிவாகத் தொடங்கிவிடுகிறது.

இருவரும் சேர்த்து தொழில் செய்யும் போது பொருள் நஷ்டமான பின்… இரண்டு பேருமே துரோகம் செய்தான் பாவி…” என்று ஒருவருக்கொருவர் சாபமிடும் நிலை வருகிறது.

உன்னை நம்பி வந்தேன் எனக்கு நஷ்டமாகிவிட்டது… உன்னை நம்பி வந்தேன் எனக்கு நஷ்டமாகிவிட்டது…! என்று இருவருமே அடிக்கடி சொல்லத் தொடங்குவார்கள்.

1.இப்படி இரண்டு பேருக்குள்ளும் ஆகிப் பிரிவு ஏற்பட்ட பிற்பாடு
2.அடுத்து அவர்கள் எங்கே போய் எந்தத் தொழில் செய்தாலும் சரி…
3.இந்த உணர்வுகள் இயக்கப்பட்டு நல்லதை அவர்கள் பெறவே முடியாது.
4.இவரும் சரி… அவரும் சரி… இரண்டு பேரும் தான் கெடுகின்றனர்.

இதைப் போல் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டிருக்கும் போது இது எல்லாம் எதைக் காட்டுகின்றது…?

சிறு திரைகளாக அமைந்து நம் நல்ல குணங்களை அது மறைத்துச் சிந்தனை என்ற நிலை நமக்குள் வருவதில்லை. ஆகவே தெளிந்த மனதுடன் நாம் எப்படி வாழ வேண்டும் என்று நினைவுபடுத்துவதற்குத் தான் சித்திரை… புது வருடப் பிறப்பைக் கொண்டாடுகின்றோம்.

எப்படி..?

நம் வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலோ வரக்கூடிய நிலைகளில் இருந்து
1.என் நண்பன் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்
2.என் குழந்தை கல்வியில் உயர்ந்த ஞானம் பெற வேண்டும்… சிந்திக்கும் தன்மை பெற வேண்டும்
3.கணவன் மனைவி நாங்கள் ஒன்று சேர்ந்து வாழ்தல் வேண்டும்.
4.யாருடன் பகைமையாக இருந்தாலும் ஒன்று சேர்த்து வாழும் தன்மை வர வேண்டும்
5.அருள் உணர்வு பெற வேண்டும் என்று எல்லோரும் சொல்ல வேண்டும்.

இப்படி எண்ணும் போது குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் பகைமையை மறந்து விடுகின்றோம். சிறு திரைகளை நீக்கிவிடுகின்றோம். பேரருளை நமக்குள் பெருக்கிக் கொள்கின்றோம்.

நாம் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற நிலைக்கு வரும் போது நம்மை அறியாது ஒருவருக்கொருவர் இயக்கும் தீமையான உணர்வின் இயக்கத்திலிருந்து முழுமையாக விடுபட முடியும்.

அதற்குண்டான பயிற்சி தான் இது.

மறு ஜென்மம் என்பது உள்ளதப்பா…! ஒவ்வொரு மனிதனையும்… அவனைப் பார்த்துக் கொள்ள…!

மறு ஜென்மம் என்பது உள்ளதப்பா…! ஒவ்வொரு மனிதனையும்… அவனைப் பார்த்துக் கொள்ள…!

 

ஆவி உலகில் ஊடுருவி (நமக்கு முன் இருக்கும் இந்தக் காற்று மண்டலம்) அதன் தன்மையில் பார்த்தால் உலக நிலைமை எல்லாமே தெரிந்துவிடும்.
1.மனித உடலில் உள்ள வரை தான் அமைதியையும் சாந்தத்தையும் சந்தோஷத்தையும் காண முடியும்.
2.ஆவி நிலை எல்லாம் பெரும் அல்லல்படும் நிலை தான்.
3.(ஆவி என்றாலும் ஆன்மா – உயிரான்மா என்றாலும் இங்கே பொருள் ஒன்று தான்)

மனித உடலின் நிலையிலே மூன்றில் ஒரு பாகம் அமைதியான ஆனந்தமான நித்திரையை இந்த இயற்கையே நமக்குக் கொடுத்துள்ளது. ஆவிகளுக்கு எந்த நிலையிலும் இந்த ஆனந்தமான நித்திரை இல்லையப்பா.

மனித உடலில் பெற்ற பேற்றை வழி வழியாக உங்களுக்குச் சொல்கின்றேன். இந்தப் பேறு பெற்றதற்குப் பல கோடித் தவம் வேண்டும்.
1.தவமிருந்து பெற்ற உடலைத்
2.தன்னிச்சையாக அழிக்கின்றார்கள் மானிடர்கள்.

மனித உடலின் தன்மையெல்லாம் பெரும் பேரின்ப நிலையப்பா. மனித உடலில் இருந்து கொண்டே வாழும் வாழ்க்கை அழகுடனும் அர்த்தமுடனும் ஆனந்தத்திலும் களித்திட வேண்டுமப்பா.

மனித உடலை எய்தியவன் எல்லாம் தன் நிலையை உணர்ந்திடாமல் பிறந்தவுடனே ஆத்திரத்துடனும் பேராசையுடனும் பழி வாங்கும் நிலையிலும் கோபதாபத்துடனும் வளர்க்கப்படுகின்றான்.

எப்படியப்பா இருக்கும் வாழ்க்கை நிலை…?

பிறந்தவுடனே நல்லறிவை ஊட்டும் குடும்பத்தில் வளரும் குழந்தை நல்ல நிலைக்கு வந்திடுவான். வளரும் தன்மையிலே தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அமைகின்றது.

காலமறிந்து கருத்தறிந்து செயல்பட நாம் பழகிக் கொள்ள வேண்டும்

காலமறிந்து கருத்தறிந்து செயல்பட நாம் பழகிக் கொள்ள வேண்டும்

 

கணவன் மனைவிக்குள் அன்பு கலந்ததாக இருப்பினும் சில நேரங்களில் கணவர் தொழில் நிமித்தம் கடினமான வேலைகள் செய்துவிட்டு வீட்டிற்குள் வரப்படும் பொழுது என்ன நடக்கிறது…?

தொழிலில் சோர்வடைந்த நேரத்தில் மனைவி சிரித்துக் கொண்டு (இதற்கு முன் அன்பாகப் பேசியது போல்) கணவரிடம் பேசினால் ஆது கணவனுக்கு எதிர்மறை ஆகின்றது.

1.நேரம் காலம் தெரியாதபடி சிரிக்கும் நேரம் இது தானா…? என்று
2.இந்தச் சந்தர்ப்பம் அந்த நல்ல குணங்களை வேதனை என்ற உணர்வால் அது மறைக்கப்படுகிறது
3.வேதனை என்ற உணர்வுகள் மறைப்பதால் மனைவி மீது இருக்கக்கூடிய பாசங்கள் அது மறைந்து விடுகின்றது.

ஏனென்றால் கணவனின் சந்தர்ப்பம்… வெளியிலே கஷ்டமான நிலைகளில் வேலை செய்துவிட்டோ… அல்லது மற்றொருவரிடம் தகராறு செய்துவிட்டோ… மிக வருத்தத்துடன் வீட்டுக்கு வரும் பொழுது
1.மனைவி அதற்கு முன் கணவனிடம் சந்தோஷமாக இருந்தாலும்
2.கணவன் வருத்தம் அடைந்த நேரத்தில் அதே சந்தோஷத்தை ஊட்டும் பொழுது
3.அங்கே சந்தோஷத்தை வெளிப்படுத்தினால் எதிர்மறை ஆகின்றது.

எதிர்மறையாகும் போது மனைவி மீது வெறுப்பு வருகின்றது. நல்ல குணத்தில் இந்த விஷத்தின் தன்மை திரையாக மூடி விடுகின்றது. அவர் மீது இருக்கக்கூடிய அன்பை அது மறைத்து விடுகின்றது.

அன்பை மறைத்து விட்டால் மீண்டும் அதிலிருந்து பகைமை தான் வளர்கின்றது. அதை மாற்ற வேண்டும் என்றால் அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்.

கணவன் அங்கே வருத்தத்துடன் இருக்கப்படும் பொழுது அவரை மனைவி உற்றுப் பார்க்கப்படும் பொழுது கண்கள் வழி அதை நுகர நேருகின்றது.

இதை… மூலாதாரத்தில் மூண்டெழும் கனலைக் காலமறிந்து கருத்தறிந்து செயல்பட வேண்டும் என்று விநாயகர் தத்துவத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

வெளியில் கணவனுக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை…! அவர் சோகத்துடன் இருக்கின்றார்… வருத்தத்துடன் இருக்கின்றார்… என்ற உணர்வை அறிந்து அவரை மனைவி பார்த்த பின் நுகர நேர்கின்றது… உயிரிலே மோதுகின்றது மூலாதாரத்தில்…!

மூலத்தில் (உயிரிலே) மோதும் பொழுது வேதனை உணர்வுகள் தெரிய வருகின்றது. தெரிந்து கொண்ட பின் என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன்
1.கணவருக்கு அருள் ஞானம் கிடைக்க வேண்டும்
2.சாந்தமும் ஞானமும் அவர் பெற வேண்டும்
3.அவரைப் பார்ப்போருக்கு நல்ல மனம் பெற வேண்டும் என்று
4.மனதால் அந்த உணர்வின் தன்மையை தனக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்
5.மனைவியும் அந்தச் சமயத்தில் அமைதியாக (பொறுமையாக) இருந்து
6.அவர் பார்த்துச் சொல்லப்படும் பொழுது என்ன விவரத்தை சொல்கிறார் என்று “எதிர்பார்த்து…”
7.நாம் அந்த உயர்ந்த நிலையை அவருக்கு எப்படிக் கொடுப்பது…? என்று மனைவி சிந்தித்து அதைச் சொன்னால்
8.கணவர் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வருகின்றது.

ஆனால் காலம் தெரியாதபடி அவர் வருத்தமாக இருக்கும் பொழுது சிரித்து… “ஏன் இப்படி வேதனைப்பட்டு கொண்டே இருக்கின்றீர்கள்…?” என்று சொன்னால்… இந்த வேதனை உணர்வுகள் அங்கே சோர்வாக இருக்கும் பொழுது எதிர்மறையாகி… நல்ல செயல்கள் அங்கே செயல்படுவதில்லை

இதைப் போன்று மனிதனின் வாழ்க்கையில் சித்திரையாக… சிறு சிறு திரைகள் நம்மை மறைத்து விடுகின்றது… உண்மையின் உணர்வை அறிய முடியாது போகின்றது.

மறைத்து விட்டால் அது என்ன பொருள் என்று தெரியவில்லை. அப்போது அந்தப் பொருளின் தரத்தை நாம் அறிந்து கொள்ள முடியுமா…?

1.நமது வாழ்க்கையில் நல்ல குணங்கள் இப்படித்தான் மறைக்கப்படுகின்றது
2.நல்ல குணங்களை அந்த நேரத்தில் செயல்படுத்த முடியாதபடி பகைமை உணர்வு வந்து விடுகிறது.

இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்பதற்குத் தான் பயிற்சியாக இத்தகைய உபதேசங்களைக் கொடுக்கின்றோம் (ஞானகுரு).

தன்னைத் தானே உணரும் விழிப்பு நிலை பெறுங்கள்

தன்னைத் தானே உணரும் விழிப்பு நிலை பெறுங்கள்

 

ஒரு மத யானையை மாவுத்தன் அடக்குவது “தன் மதி கொண்டு தான்…”

மனித உணர்வின் எண்ணம் (நம்முடைய எண்ணம்)
1.தன் ஞானத்தைக் கொண்டு தன் ஆத்மா விழிப்புறும் மதி அறிந்தாலும்
2.தன் உணர்வின் எண்ணத்தை நியாயப்படுத்தும் செயல் கொண்டு
3.பிறரின் உணர்வுகள் செயல்படும் எண்ணத்தை – “தன் எண்ணம் கொண்டு பார்க்கும் பொழுது..!”
4.பிறிதொருவரின் செயலைக் குற்றமாகக் குறையாக எண்ணி
5.தன்னையே நியாயப்படுத்தும் பொழுது
6.இப்பிரபஞ்சத்தில் பரவியுள்ள பகுத்தறிவின் ஞானம் நமக்குள் வளர்ச்சி பெற்றதாக வந்த நிலையில்
7.அந்த ஞானத்தை நாம் விரயப்படுத்துவதால் ஆத்மாவின் விழிப்பு (தன்னை அறியும் நிலை) உறங்கி விடுகின்றது.

பிறிதொருவரின் உணர்வு மோதும் பொழுது தன்னை உயர்த்தி பிறிதொருவரைக் குறைக்கும் எண்ணத்தை எடுத்தோமானால் தன் உணர்வில் முதலில் மோதுவது குறை கொண்ட ஒலித் தன்மைதான்,

ஞானத்தின் செயலானது ஒவ்வொரு அணுவுமே மூச்சலையிலிருந்து வெளிப்படும் சுவாசக் காற்றானது
1.சாதாரண மனிதனுக்கு உள் இழுப்பது நல்ல காற்றும் வெளிப்படுவது தீய காற்றாகவும் இருக்கின்றது. – இது இயல்பு
2.ஆனால் தன்னை உணரும் மெய் ஞானியின் மூச்சுக் காற்றோ உள் இழுக்கும் காற்றுக்கு மேல் அவன் வெளிப்படுத்தும் சுவாசக் காற்று பரிசுத்த ஒளியாகப் பரவக்கூடிய தன்மை உண்டு.

தீமையை நன்மையாக்கும் சூட்சும உயிர் தான் மனித உயிராத்மா (மனித உயிரும் + ஆத்மாவும்). ஆதிசக்தியின் படைப்பால் பலன் கொண்ட நிலையில் படைக்கப்பட்ட உயர்ந்த படைப்பு தான் அந்த மனித உயிராத்மா. அண்டத்தையே ஆளுகின்ற சக்தி அந்தப் படைப்புக்குத் தான் உண்டு.

அந்தப் படைப்பின் பலனைப் பெற வேண்டும் என்றால் மாமகரிஷிகளின் அருள் ஒளி சக்தி கொண்டு ஆத்மாவும் உயிரும் இணையும் வலுக் கொண்ட விழிப்பு நிலையாக
1.மெய் ஞானத்தில் பெறும் தியானத்தின் முறையால்
2.தன்னைத் தானே உணரும் விழிப்பு ஒவ்வொருவருக்கும் வேண்டும்.