எந்தக் கவலை வந்தாலும்… எந்தத் தொல்லை வந்தாலும்… எந்தச் சங்கடம் வந்தாலும்… கண்களைத் திறந்து தியானிக்க வேண்டும்

எந்தக் கவலை வந்தாலும்… எந்தத் தொல்லை வந்தாலும்… எந்தச் சங்கடம் வந்தாலும்… கண்களைத் திறந்து தியானிக்க வேண்டும்

 

உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் வாழ்க்கையே தியானமாக்க வேண்டும்.

1.உட்கார்ந்து தியானம் செய்து கொண்டே இருப்பது தியானமல்ல.
2.அது தியானம் ஆகாது.

காரணம்… தியானத்தை எடுத்துக் கொண்டு செல்கிறீர்கள். அடுத்தாற்போல் திடீரென்று ஒரு விபத்து ஆகிறது என்றோ உங்களை நோக்கி ஒரு மாடு மிரண்டு ஓடி வந்தால் ஆ…! என்று அலறினால் போதும். இது வந்து உள்ளே உருவாகிவிடும்.

இந்த உணர்வு அதிகமானால் தியானத்தில் அடுத்து உட்கார முடியாது.
1.அதிர்ச்சியான செய்தியைக் கேட்டால் அது தான் முன்னாடி நிற்கும்.
2.அப்புறம் நீங்கள் எப்படித் தியானம் எடுப்பது…?

ஆகவே அப்போதைக்கப்போதே துடைத்துப் பழகினால் தான் அடுத்து உங்களைத் தியானத்திற்கே விடும். அப்படிப் பழகவில்லை என்றால் தியானத்திற்கே வர முடியாது.

மனதை ஒரு நிலைப்படுத்துவது (CONCENTRATION) என்றெல்லாம் சொல்வார்கள். அதெல்லாம் முடியாது.
1.நீங்கள் எவ்வளவு செய்தாலும்… பல காலம் நான் தியானமிருந்தேன் என்று சொன்னாலும்
2.முதலில் நன்றாக இருந்தது… இப்போது தியானம் செய்ய முடியவே இல்லை என்று தான் சொல்ல முடியும்.

காரணம் எதிர்பாராதபடி அதிர்ச்சியோ மற்றதோ வந்த பின் அது நமக்குள் வலுப் பெற்று விடுகிறது. நம் ஆன்மாவில் கலந்து விடுகிறது. அது வலிமை பெறுகிறது… அதனால் முடியாது போகிறது.

அந்தச் சமயத்தில்… நன்றாகத் தியானம் செய்தேனே… போய்விட்டதே…! தியானம் செய்தேனே… போய்விட்டதே…! என்று வேதனைப்பட்டு அந்த விஷத்தைத் தான் உங்களால் வளர்க்க முடியுமே தவிர அதைப் போக்க முடியாது.

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் கையில் அழுக்குப்பட்டதைத் துடைப்பது போல் யாம் (ஞானகுரு) கொடுத்த அருளை உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும்.

1.எப்போது தீமையைக் காணுகின்றீர்களோ அப்போதெல்லாம் ஈஸ்வரா… என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொள்ளுங்கள்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று
3.புருவ மத்தியில் இணைத்து உள்ளே புகாது தடுத்துவிடுங்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உள்ளுக்குள் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி நமக்குள் அது வளர வளர…
1.எந்தத் தீமையை நுகர்ந்தோமோ அதை உங்கள் ஆன்மாவிலிருந்து தள்ளிக் கொண்டே போகும்
2.நம் ஈர்ப்பு வட்டத்தை விட்டுக் கடந்து சென்றால் சூரியன் அதைக் கவர்ந்து சென்றுவிடும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கூடக் கொஞ்ச நேரம் சேர்த்து எடுத்தீர்கள் என்றால் யாம் சொல்வதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

எந்தக் கவலை வந்தாலும்… எந்தத் தொல்லை வந்தாலும்… எந்தச் சங்கடம் வந்தாலும்…
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கண்களைத் திறந்தே எடுங்கள்… அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.
2.கண்களை மூடுங்கள்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி உடலில் இருக்கும் எல்லா அணுக்களும் பெற வேண்டும் என்று உள்ளே செலுத்துங்கள்.
3.இப்படி எண்ணி உங்கள் நினைவைக் கூட்டிப் பாருங்கள்.

உங்களால் சாத்தியமாகிறதா இல்லையா என்று பாருங்கள். ஆகவே… வாழ்க்கையையே தியானமாக்க வேண்டும்.

அப்போதைக்கப்போது துடைக்கவில்லை என்றால் உள்ளுக்குள் சென்று அது வலுவாகிவிடும். உங்கள் ஆன்மாவில் அது வலுவாகிவிடும்.

அடுத்து… தியானத்தில் உட்கார்ந்தவுடனே அவன் அப்படிச் சொன்னான்… அதிர்ச்சியாகிவிட்டது என்று அந்த நிலை தான் வரும். அந்த மாதிரி அதிர்ச்சி வந்தாலும் மீண்டும் மேலே சொன்ன முறைப்படி எண்ணி எடுத்து அதைத் தடுத்துக் கொள்ளுங்கள்.

இது தான் உண்மையான தியானம். ஒவ்வொரு நொடியிலும் உங்கள் ஆன்மாவைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள்.

எதை எதையோ ஒவ்வொரு நிமிடமும் நம் வாழ்க்கையில் பதிவு செய்கின்றோம். திருப்பி எண்ணும் போது அதனின் உணர்வே நம்மை இயக்குகிறது… நம்மைத் திசை திருப்புகிறது.

ரேடியோ டி.வி.யில் எந்த அலைவரிசையைத் திருப்பி வைக்கின்றோமோ காற்றிலிருந்து இழுத்து அதைப் பேசுகின்றது. அது போல் நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்த அரும்பெரும் சக்தியை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.

அதை நினைவுக்குக் கொண்டு வரும் போது
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் உடனடியாகப் பெற முடியும்.
2.மன பலம் பெற முடியும்… மகிழ்ந்து வாழும் சக்தி நிச்சயம் பெற முடியும்.

ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளைப் பெறுவோம். துருவ நட்சத்திரத்துடன் ஒன்றியே நாம் வாழ்வோம்.

என்னை அழைத்துச் செல்… உன்னுடன் வருகின்றேன்

என்னை அழைத்துச் செல்… உன்னுடன் வருகின்றேன்

 

எங்கே வெளியில் செல்வதாக இருந்தாலும் சரி… எந்தக் காரியம் செய்வதாக இருந்தாலும் சரி… புருவ மத்தியில் ஈஸ்வரா…! என்று எண்ணி ஒரு நிமிடம் ஏங்கி என்னை அழைத்தால்
1.உன்னுடனே நான் வருவேன்.
2.உன்னுள் இருக்கும் என்னை நீ பார்..!
3.உன்னையே நீ பார்…!

எந்தக் காரியம் துவங்குவதாக இருந்தாலும் அல்லது எந்தச் சிக்கலாக இருந்தாலும் எத்தகைய கடுமையான நிலையைச் சந்தித்தாலும் அடுத்த கணம் புருவ மத்தியில் ஈசனை எண்ணும் பழக்கம் வந்துவிட்டால் எல்லாமே நல்லதாகத்தான் முடியும்.

ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில்…
1.நம் எண்ணத்தை… நம் மனதை… புருவ மத்தியில் இருக்கும் ஈசனிடம் திருப்பும் பழக்கம் வந்து விட்டால்
2.நம் வாழ்க்கை என்றுமே சீராக இருக்கும்.

நம் ஆறாவது அறிவை ஞானிகள் காட்டிய வழியில் பயன்படுத்த வேண்டிய முறை

நம் ஆறாவது அறிவை ஞானிகள் காட்டிய வழியில் பயன்படுத்த வேண்டிய முறை

 

மிளகாய் காரமாக இருக்கிறது என்றால் அந்தக் காரத்தை நாம் வாயிலே சுவைத்துத் தான் ஸ்… ஆ…! என்று உணர்கின்றோம். ஆனால் விஞ்ஞான அறிவோ அந்தக் காரத்தின் நிலையையே மாற்றி அமைத்து அதைச் சுவையான மிளகாயாக உருவாக்குகின்றார்கள்.

எப்படி…?

1.மிளகாயின் காரத்தின் அளவுகோலை அறிந்து… அதனுடைய இயக்கம் எவ்வாறு…? அதனின் வீரியங்கள் எவ்வாறு…? என்று
2.இயந்திரத்தின் மூலம் எலெக்ட்ரிக் எலெக்ட்ரான் என்ற உணர்வின் துணை கொண்டு இயக்கங்களைக் கண்டறிகின்றான் தன் விஞ்ஞான அறிவால்.

மனிதனாக வளர்ச்சி பெற்ற பின் காரத்தைக் குறைப்பதற்கு இப்படிக் கண்டறிகின்றான்.

உதாரணமாக… மிளகாயைச் சட்டியில் போட்டு வறுக்கிறார்கள் அல்லது மிளகாயைப் பொடியாக அரைக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதை நாம் நுகர்ந்தால் என்ன ஆகும்…?

நச்… நச்… என்று தும்ம வேண்டி வரும். கார உணர்ச்சிகள் உடலுக்குள் சென்ற பின் “ஒரே நெடியாக இருக்கிறது…” என்று தான் நாம் அறிகின்றோம். காரணம்… அந்தக் காரத்தின் உணர்ச்சிகள் நம்மை இயக்கிவிடுகின்றது.

இதைத் தணிப்பதற்காக… மனிதன் இயந்திரத்தினை உருவாக்கி அதனின் உணர்வின் அதிர்வுகளை எலெக்ட்ரான் ஆக மாற்றி அதனின் உணர்வின் செயலாக்கங்களைச் செயல்படுத்துகின்றார்கள்.

காரம் என்று சொன்னாலும் அதிலே எத்தனையோ வகை உண்டு.

“குடமிளகாய்…” பெரிதாக இருக்கும். அதிலே பல விதமான வாசனைகளும் வரும். ஆனால் காரம் இலேசாக இருக்கும். இது மனிதன் உருவாக்கியது.

தாவர இன வித்திலேயே பல விதமான உணர்வுகளைக் கலந்து செயல்படுத்துகின்றனர். அதாவது… ஒவ்வொரு செடிகளுக்கென்று மரபணுக்கள் உண்டு.

1.காரம்… புளிப்பு… உப்பு… நல்ல நறுமணங்கள்… கொண்ட தாவர இனங்களில் உள்ள மரபணுக்களை எடுத்து
2.அதை ஒரு புது விதமான வித்தாக உருவாக்குகின்றனர்.

எந்தெந்தச் செடிகளில் அந்தச் சுவைகள் தனித் தனியாக வளர்ந்ததோ அதனின் மரபணுக்களை இணைத்து ஒன்றாகக் கூட்டாக அமைக்கப்படும் போது காரத்தின் அளவும் நல்ல நறுமணத்தின் நிலைகளையும் அதே சமயத்தில் அந்த மிளகாயில் சுவையும் கூடுகிறது.

அதை நாம் குழம்பிலோ மற்றதிலோ போடப்படும் போது அதிலே இத்தனை மணங்களும் வருகிறது. ஏனென்றால்
1.பல விதமான செடிகளின் மரபணுக்களிலிருந்து காரத்தை எடுத்து இணைத்து
2.இந்த உணர்வுக்கொப்ப குடமிளகாயை உருவாக்குகின்றார்கள் மனிதன்.

இப்படி நம் சுவைக்காக வேண்டி அதை உருவாக்கி உணவாக உட்கொள்ளும்போது நாம் ரசித்துச் சாப்பிடுகின்றோம். மகிழ்ச்சி பெறும் சக்தியாக “ஆறாவது அறிவு” உருவாக்குகின்றது.

ஆக இந்த உடலை மகிழச் செய்ய விஞ்ஞானம் இப்படித் தாவர இனங்களை உருவாக்கி மகிழச் செய்யும்படி வைக்கின்றது.

ஆனால் மெய் ஞானியோ வாழ்க்கையில் தன்னை அறியாமல் வரும் எத்தனையோ சுவையற்ற நிலைகளை (தீமைகளை) சுவைமிக்கதாக மாற்றிக் கொண்டவர்கள்… முருகு… மாற்றியமைக்கும் சக்தி பெற்றவர்கள்.

ஏனென்றால் நல்ல குணத்துடன் இருக்கின்றோம். கஷ்டப்படுகின்றவர்களைப் பற்றிக் கேட்டறிகின்றோம். அவர்களுக்கு வேண்டிய உதவிகளும் செய்கின்றோம். அவர்கள் கஷ்டப்பட்டது ஆறாவது அறிவில் இங்கே வந்து சேர்ந்து கொள்கின்றது.

அப்பொழுது இதைச் சேர்த்தால் வேதனையான எண்ணம்தான் வருகின்றது.
1.வேதனைப்படும்போது யார் காப்பாற்றுவது…?
2.இந்த ஆறாவது அறிவில் கலந்ததைச் சுத்தப்படுத்துவது யார்…?

பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்று ஞானிகள் காட்டுகின்றார்கள். முருகனைப் பார்க்கப்படும் போது எதை எண்ண வேண்டும்…?

இந்த உண்மையை உணர்த்திய
1.மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று
3.இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு தன்னைக் காத்திடும் நிலையாகத் துடைக்க வேண்டும்.

இப்படி எண்ணினோம் என்றால் ஓ…ம் நமச்சிவாய. இந்த ஆறாவது அறிவின் தன்மை நமக்குள் அதைப் வலுப்படுத்தும் சக்தியாக தீமைகள் நம் உடலுக்குள் உருவாகாதபடி பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்று செயல்படுகின்றது.

வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் தீமைகள் விளையாது அந்த ஞானியின் உணர்வை நமக்குள் விளையச் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கின்றான். இந்த ஆறாவது அறிவு கொண்டு நாம் எப்படிச் செயல்பட வேண்டும்…? என்று ஞானிகள் தெளிவாகச் சொல்லி இருக்கின்றார்கள்.

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு உன் உணர்வின் தன்மை ஒளியாக்கு – கார்த்திகேயா…! கார்த்திகேயா என்றால் வெளிச்சம். கெட்டதை நீக்கி நீ இதை இப்படிச் செய்ய வேண்டும் என்று ஞானிகள் சாதாரண பாமரனுக்கும் புரியும்படி தெரியப்படுத்துகின்றர்கள்.

ஆகவே…
1.நல்லதைக் காக்க வேண்டும் என்ற நிலையில்
2.உனக்குள் உன்னைக் காப்பாற்றிய நல்ல தெய்வம் இந்த ஆறாவது அறிவு தான்…! என்கின்ற நிலையில்
3.நீ பக்குவப்படுத்திப் பார்…!” என்று ஞானிகள் தெளிவாகவே காட்டியுள்ளார்கள்

உங்கள் நினைவாற்றல் குருநாதர் இருக்கும் எல்லைக்குச் செல்வதற்கே உபதேசிக்கின்றோம்

உங்கள் நினைவாற்றல் குருநாதர் இருக்கும் எல்லைக்குச் செல்வதற்கே உபதேசிக்கின்றோம்

 

உங்களுக்குள் இருக்கும் நல்ல குணங்களை மறைத்திருக்கும் சித்திரை என்ற நிலைகளிலிருந்து… அந்தத் தீமைகளை நீக்கிடும் ஆற்றல் கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நீங்கள் செல்ல வேண்டும் என்பதற்குத் தான் அருள் உரைகளை உங்களுக்குள் பதியச் செய்கின்றோம்.

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) எல்லாம் கற்றுக் கொடுத்தாலும் அதை நான் (ஞானகுரு) மறைத்து விட்டால் என்ன செய்யும்…? அவ்வாறு இல்லாது
1.இந்த விஞ்ஞான உலகில் வரும் பெரும் தீமைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும்.
2.உங்கள் பார்வையால் மற்றவர்களின் தீமைகளைப் போக்கும் நிலை பெற வேண்டும்.
3.உயிருடன் ஒன்றிய ஒளியாக அந்த ஞானத்தின் வழியில் நீங்கள் வாழ்ந்திட வேண்டும்.

உதாரணமாக நாம் நல்ல குணங்கள் கொண்டிருந்தாலும் சந்தர்ப்பத்தில் ஒரு அச்சுறுத்தும் உணர்வை நுகர்ந்து விட்டால் நம் நல்ல குணத்தில் அது இணைந்து விடுகிறது.

அந்தப் பயமுறுத்தும் உணர்வு நமக்குள் விளைந்து விட்டால் நல்ல குணங்களை நம்மால் காக்க முடியவில்லை… காக்க முடியாது போகிறது.

அதாவது…
1.ரோட்டிலே இன்ன மரம் இருந்தது… அந்த இடத்தில் கோர விபத்தானது என்று கேள்விப்பட்டவுடனே “ஆ…” என்று பயமான உணர்வு பதிவாகின்றது.
2.பதிவான பின் அதே நினைவு வருகிறது… அந்த இடமே அவர்களுக்குத் தெரிய ஆரம்பித்துவிடும்.

ஆகவே அச்சுறுத்தும் உணர்வை மாற்றிடும் சக்தியாகத் தான் குருநாதர் கொடுத்த அந்த அருள் சக்திகளை… தீமைகளை வென்ற அந்த அருள் உணர்வுகளை மீண்டும் மீண்டும் உங்களுக்குள் இந்த உபதேசத்தின் வாயிலாகப் பதிவாக்குகின்றோம்.

1.எம்மிடமிருந்து (ஞானகுரு) சொல்லாக அது வெளி வந்தாலும் (உங்களுக்குள் பதிவு)
2.அந்த அருள் ஞானிகள் நுகர்ந்த அந்த எல்லையில் யாம் பெற்ற நிலையில்
3.அங்கே யாம் பெற்றதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால்
4.உங்கள் நினைவாற்றல் என் குருநாதர் காட்டிய அந்த எல்லைகளுக்கே செல்லும்
5.அங்கே உருவான அந்த மெய் உணர்வை நீங்களும் நுகர முடியும்.

நீங்கள் மீண்டும் மீண்டும் அதை நினைவுபடுத்தி உங்கள் நல்ல குணங்களை மறைத்துக் கொண்டிருக்கும் சித்திரை என்ற நிலைகளை மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் உணர்வின் அணுவாக மாற்றிட வேண்டும்.

ஏனென்றால் திரும்பத் திரும்பச் சொல்லித் தான் உங்களுக்குள் அந்த ஞானிகள் உணர்வை இணைத்துக் கொண்டு வருகின்றேன்.

உதாரணமாக பள்ளியில் படித்த பின் தேர்வை வைக்கின்றனர். தேர்வின் மூலமாக அவன் தெரிந்து கொண்டானா…? இல்லையா…? என்று பரீட்சித்துப் பார்க்கின்றனர்.
1.படித்தது நினைவுக்கு வந்தால் எழுதிவிடுகின்றான்.
2.படித்ததை நினைவுக்குக் கொண்டு வந்தால் சிந்திக்கும் தன்மையும் வருகின்றது.

படித்ததை வைத்து நினைவு கொண்டு அந்தச் செயலாக்கங்களை எப்படி மாற்ற வேண்டும் என்ற சிந்தனை கொண்டால்… சிந்தித்துச் செயல்படும் ஞானமாக அங்கே வருகின்றது.

அது போன்று தான் குருநாதர் காட்டிய உண்மைகளை எல்லாம் உங்களுக்குள் சிறுகச் சிறுகப் பதிவாக்கிக் கொண்டே வருகின்றேன்.
1.அதை யாரெல்லாம் நினைவுபடுத்தி அதைக் கவரும் நிலைக்கு வருகின்றனரோ
2.அவர்களுக்கு நிச்சயம் குரு பெற்ற அருள் ஞானம் கிடைக்கும்… மெய்ப் பொருள் காணும் திறனும் கிடைக்கும்.

இந்த மனிதப் பிறவியில் நாம் சேமிக்க வேண்டியது ஞானிகளின் சக்தி தான் – ஈஸ்வரபட்டர்

இந்த மனிதப் பிறவியில் நாம் சேமிக்க வேண்டியது ஞானிகளின் சக்தி தான் – ஈஸ்வரபட்டர்

 

மனித ஆத்மா ஒன்றுக்குத் தான் இக்காற்றினில் கலந்துள்ள பல அமில நிலைகளில் தனக்குகந்த அமில சக்தியை ஈர்க்கும் பக்குவ நிலை பெறலாம் “தாவர நிலையைப் போல…!”

மற்ற ஜீவ ஜெந்துக்களின் நிலையில் இத்தகைய சக்தி நிலை இல்லை. மனித ஆத்மாவில் அது நிறைந்துள்ளது.

ஆனால் சாதாரண வாழ்க்கையில் பார்த்தும் கேட்டும் சுவாசத்தில் உணர்ந்தும் பேசியும் வரும் நாம்… “நமக்குகந்த சக்தியை உணராமல் செயல் கொள்கின்றோம்…”

இயந்திரத்தின் துணையுடன் சில கருவிகளை “அதற்குகந்த அமிலத்தைச் செலுத்தி…” ஒளிப்படங்களைப் பிம்பப்படுத்திக் காண்கின்றோம்.

1.அந்த அமில சக்தியையே நம் உணர்வுடன் ஈர்த்து
2.இக்காற்றினில் கலந்துள்ள அச்சக்தியை ஒருநிலைப்படுத்தி
3.எங்குள்ள நிலையையும் உள்ள நிலையிலேயே நாம் கண்டிடலாகாதா…? என்றுணரல் வேண்டும்.

இவ்வுடல் என்னும் கோளத்திற்குகந்த காந்த சக்தியினால்… காற்றில் கலந்துள்ள எந்த அமில சக்தியையும்.. ஒலி ஒளி இவற்றின் சக்தி நிலையையும்… நம் உயிராத்மாவினால் செயல்படுத்தி ஈர்த்திட முடிந்திடும்.

வானொலியின் துணையுடனும்… தொலைக்காட்சியின் துணையுடனும்… இயந்திரத்தின் துணையுடனும் (கம்ப்யூட்டர்)… செயல் கொள்ளும் இந்த நிலையை மனிதனால் செயல்படுத்திய அந்தச் செயற்கையை “நம் இயற்கை ஆத்மாவினால் அனைத்து சக்திகளுமே அறிந்திட முடிந்திடும்…!”

1.மனித உடல் என்னும் இப்பிம்ப நிலை பெற்று இன்று நாம் வாழ்ந்திடும் நிலையில்
2.ஆதியிலே முதல் உயிணுவாய்த் தோன்றிய நாள் முதற்கொண்டு
3.பல நிலைகளை எடுத்துப் பல சுவாச நிலைகளின் தொடருடன் வாழ்ந்து
4.நம்முடனே கலந்து வந்துள்ள அமில சக்தியில் நம் ஆத்மாவுடன்
5.பல நன்மை தீமை கொண்ட பல கோடி அணுக்களைச் சேமித்தேதான் வழி வந்துள்ளோம்.

ஆனால் இனி வாழ்ந்திடும் வாழ் நாட்களில்… நம்முள் உள்ள… நாம் பழக்கப்படுத்தி அடிமை கொண்டு வாழ்ந்து வந்த தீய சக்திகளின் நிலைக்கு அடிபணிந்திடாமல்…
1.நல்லுணர்வைச் சேமித்து… நம் நியதியையே ஞானிகள் வழியில் சென்றிடும் தன்மைக்கு
2.சத்தியத்தையும் தர்மத்தையும் நியாயத்தையும் கடைப்பிடித்தே செயல்படல் வேண்டும்.

ஓரு அசுரன் இறந்தால் பல அசுரர்கள் தோன்றுகிறார்கள் – விளக்கம்

ஓரு அசுரன் இறந்தால் பல அசுரர்கள் தோன்றுகிறார்கள் – விளக்கம்

 

ஒருவன் இறந்து விட்டான் என்று நினைக்கின்றோம். ஆனால் அந்த உடலில் விளைந்த உணர்வுகள் அடுத்த உடலுக்குள் வந்து என்ன செய்யும்…? என்று அறிந்து கொள்ளுங்கள்.

இராமாயணத்தில் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள். ஒரு அசுரன் இறந்தான் என்றால் அதிலிருந்து பல அசுரர்கள் அதிலிருந்து தோன்றுகின்றார்கள் என்று காட்டுகின்றார்கள்.

ஓர் உயிர் தோன்றிய பின் அந்த அணுத் தன்மை அடைகிறது. ஜீவ அணுவாக மாறும் போது இதனுடைய நிலைகள் என்ன செய்கிறது…?
1.முதலில் உயிரணுவாக மாறுகிறது
2.பின் ஜீவ அணுவாக மாறுகிறது… ஜீவ ஆன்மாவாக மாறுகிறது.

உதாரணமாக வீட்டில் கொடூரத் தன்மைகளைச் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவன் இறந்த பிற்பாடு என்ன நடக்கிறது…? ஒவ்வொரு உடலுக்குள்ளும் போய் நரக வேதனைப்படுத்துகிறது.

குடும்பங்களில் பார்த்தோம் என்றால் என்னை இப்படிச் செய்தானே…! என்று நினைத்தார்கள் என்றால் அங்கிருந்து பரவி உள்ளுக்குள் வந்துவிடுகிறது.

1.சில குடும்பங்களில் அவன் தொலைந்து போய்விட்டால் பரவாயில்லை… எல்லாம் சரியாகிவிடும் என்று நினைப்பார்கள்.
2.போன பிற்பாடு தான் அந்த உணர்வின் தன்மை எல்லார் உடலிலும் பெருகத் தொடங்கும்.

அங்கே தொலைகிறது…?

இதை நாம் மாற்ற வேண்டுமா இல்லையா…? இராமாயணக் காவியங்களில்
1.இந்த உயிரின் இயக்கத்தால் வந்த நிலைகளும்
2.பத்தாவது நிலை அடையக்கூடிய இராவணன் எந்த நிலையில் இருக்கின்றான்…?
3.இந்த உடலில் வளர்த்துக் கொண்ட அந்த அணுக்கள் அனைத்தும் மீண்டும் எப்படி அசுர குணங்களை வளர்க்கிறது…? என்று காட்டுகிறார்கள்.

அதே சமயத்தில் இராவணனின் மகன் இந்திரஜித் என்ன செய்கிறான்…? செத்தாலும் கூட… யாருக்கும் தெரியாமல் “மறைந்திருந்தே செயல்படுவான்…” என்று காட்டுகின்றார்கள்.

ஒருவன் கொடூரமான நிலைகளில் சாகின்றான். பழி தீர்க்கும் உணர்வுடன் இறந்தால் ஒரு உடலுக்குள் வந்தால் அவருக்குத் தெரியாமலே அங்கே ஆட்டிப் படைக்கின்றான்.

உடலுக்குள் பேயாக வந்து ஆட்டுகிறது என்று சொல்கிறோம் அல்லவா.

எத்தனை ஆசைப்பட்டானோ செத்த பிற்பாடு என்ன செய்கின்றான்…? பேயாக வந்து ஆடுகின்றான். ஆகவே இவனுக்குள் விளைந்த இந்த உணர்வுகள்
1.அவன் கொல்ல வேண்டும் என்ற உணர்வுகள் மடிந்த பின் இத்தனை வேலைகளும் செய்கிறது
2.அவனுக்குப் பிறந்த குழந்தையும் அதன் வழியில் வளரப்படும் போது இப்படித்தான் வருகின்றான்.

நாம் பார்க்கின்றோம் அல்லவா.

நாம் நண்பர்களாகப் பழகுகின்றோம். அதே போல் எத்தனையோ பேருடன் பழகுகின்றோம். எதிர்பாராது அவர்கள் குடும்பத்தில் ஏதோ தொல்லை…! ஆனால் நாம் அன்பாகப் பேசிப் பழகிவிட்டோம்.

என்ன வாழ்க்கை…! என்று வெறுக்கப்படும் போது வீட்டில் உள்ளவர்களை எண்ணி… இப்படி எல்லாம் தொல்லை கொடுத்தார்கள் உருப்படுவார்களா…? என்று நினைத்து சாப அலைகள் விடுகின்றான்.

அந்தச் சமயத்தில் பழகிய நண்பர் மீது நினைவுகள் வந்து… என் குடும்பத்தில் ஒரே தொல்லையாக இருக்கிறது…. அதனால் நான் இந்த உடலை விட்டுப் போகிறேன் என்ற எண்ணத்தில் இறந்தால் போதும்.

நினைத்து இந்த எண்ணத்துடன் வெளி வந்தால் இங்கே அந்த நண்பர் அவர் போய்விட்டாரா…? என்று எண்ணினால் என்ன நடக்கிறது…?

பழகிய நண்பர் உடலுக்குள் வந்துவிடுகிறது.

1.அவன் எப்படித் தற்கொலைக்குக் காரணமானானோ அல்லது துன்புறுத்தும் உணர்வுகளுக்குக் காரணமனானோ
2.இந்த உடலுக்குள் வந்து அவன் செய்த வேலையை எல்லாம் செய்யும்.

இனி நடப்பது எல்லாம் நல்லதாக இருக்கட்டும் – ஈஸ்வரபட்டர்

இனி நடப்பது எல்லாம் நல்லதாக இருக்கட்டும் – ஈஸ்வரபட்டர்

 

இன்றைய இவ்வுலக நியதியிலே “நீதி…” என்னும் சொல்லே
1.இக்காலத்திற்குகந்ததாக
2.இன்றைய மனிதர்களின் எண்ணத் தொடரினால்
3.மாறி மாறி வரும் இவ் அரசியலின் நிலைக்கொப்ப சாதகப்படுத்தி
4.”அநீதியையே நீதி…” என்ற சொல்லாக்கி நிலை நாட்டுகிறார்கள்.

இன்றைய இவ்வுலக நியதியில் நீதியும் சத்தியமும் எங்கு ஓங்கி நிற்கின்றது…? தனக்குகந்த பொருளாதாரத்தின்… “செல்வத்திற்கு அடிபணிந்த நிலையில்தான் இன்றைய உலக நீதியே உள்ளது…!”

சத்தியமும் ஜெயமும் ஒன்றுமறியாத பாமர மக்களுக்குத் தான்…! இன்றைய உலக நியதிப்படி சொந்தமில்லா நிலையில் அடிமைப்படுத்திட்ட நிலையில்தான் நீதியும் சத்தியமுமே நிலைத்துள்ளன.

இச்செல்வத்திற்கு அடிமைப்பட்டும்… செயற்கையில் வாழ்ந்திடும் இவ்வுலக நியதியில்… தர்மமும் நியாயமும் தலை நிமிர்ந்திட வழியுமில்லை… இன்றைய நிலைக்கொப்ப நீதியுமில்லை.

அவரவர்களே தான்…
1.தன் உணர்வை நல் நிலையாக தன் எண்ண ஜெபத்தில் வழிப்படுத்தி
2.நம்முள் உள்ள பல கோடி அணுக்களையும் பல நிலை கொண்ட அணுக்களையும்
3.நம் ஜெபத்தினால் நல்லணுவாய் அடக்கச் செய்து… நம் ஆத்மாவை வளர்ச்சி கொண்டிடல் வேண்டும்.

நம்மையே நாம் ஓர் ஆண்டவனாய்… அனைத்து சக்திகளுமுள்ள கோளமாய் உணர்ந்து…
1.நம்முள் உள்ள மற்ற அணுக்களின் உந்தலுக்கு அடிபணிந்திடாமல்
2.நம் உணர்வே ஒரு நிலை கொண்ட நீதியாய் சத்தியமுடன் செயல்படல் வேண்டும்.

இன்றைய இவ்வுலகின் ஜீவஜெந்துக்களின் எண்ண நிலையே மாறு கொண்டு தீய சக்திகளுக்கு அடிபணிந்தே இந்நிலையின் தொடரின் எண்ண சக்தியால் “காற்றில் அசுத்த அணுக்கள் நிறைந்து பரவி வருகின்றது…”

இன்றைய நிலைக்கொப்ப புதிய புதிய வியாதிகளின் தொடர் நிலை பரவும் நிலையும் வெகு துரிதமாக உள்ளது.

விஞ்ஞானத்திலும் மருத்துவ ஆராய்ச்சியிலும் பல பல புதிய மருத்துவத்தைக் கண்டுணர்ந்து செயலாக்கினாலும் இக்காற்றிலுள்ள விஷத் தன்மையை மாற்றும் நிலை எங்குள்ளது…?

இச்சுவாசத்தின் எண்ண சக்தியின் நிலைதான் இன்றைய இவ்வுலகின் நிலையுடன் கலந்துள்ள நிலை.

இவ்வுலகின் மேல் கலந்துள்ள சுவாசத்தையேதான் நம் பூமியும் ஈர்த்துச் சுவாசமெடுத்து வெளிப்படுகின்றது.
1.இந்த அசுத்தக் காற்றை உயிராத்மாக்கள் மட்டும் சுவாசித்து வெளிப்படுத்தவில்லை
2.இப்பூமியும் அக்காற்றையேதான் தன் சுவாசத்தில் ஈர்த்து வெளிப்படுத்துகிறது.

இக்கலியில் மாறு கொண்டதுதான் இக்காற்றின் அசுத்த நிலையெல்லாம். கலியில் வந்த மனிதர்களின் பேராசையினால் தான் இவ்வுலகின் நியதியே மாறு கொள்ளப் போகின்றது…!

இப்பூமியில் மனித ஆத்மாவாய் வாழ்ந்திடும் நாம்… நம் ஜெப நிலையை ஒருநிலைப்படுத்தினாலன்றி மாறப்போகும் கலியின் பிடியில் சிக்கி மீள வழி பெற முடியாது.

அத்தகைய அல்லல்படும் நிலையில் இருந்து மீண்டு சூட்சும நிலை பெறவில்லை என்றால்…
1.இன்று மனிதராய் வாழும் இப்பாக்கியத்தை
2.நாமே நசியவிடும் நிலைதான் நமது நிலையாகிவிடும்.

ஒவ்வோர் ஆத்மாவுக்கும் நல் சக்தி உண்டு…!

வாழ்க்கையில் நடந்த பல தீய நிலைகளை எண்ணி… சோர்வை அண்ட விடாமல் இனி நடக்கும் நிலையை உணர்ந்து செயல்பட்டு… ஒவ்வோர் ஆத்மாவுமே சக்தி ஜெபம் பெற்று…
1.சக்தியுடன் சக்தியாய்… ஒளியுடன் ஒளியாய்க் கலந்துள்ள…
2.நம் சப்தரிஷிகளின் நிலையுடனே கலந்திடலாம்.

மிக… மிக… மிக… மிக… பெரிய சக்தியாகக் கொடுக்கின்றோம் – ஞானகுரு

மிக… மிக… மிக… மிக… பெரிய சக்தியாகக் கொடுக்கின்றோம் – ஞானகுரு

 

காலையிலிருந்து இரவு வரையிலும் எத்தனையோ உணர்வுகளை எண்ணத்தால் நாம் எண்ணி எடுத்தாலும் அதிலே அறியாது வரும் தீமைகளைத் தடுக்க வேண்டும் அல்லவா.

அதற்காகத் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானத்தின் மூலம்
1.மிக… மிக… மிக… மிக… பெரிய சக்தியாகக் கொடுக்கின்றோம் (ஞானகுரு).
2.அதைச் சாதாரணமாக எண்ண வேண்டாம்.
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவு செய்து
4.”கொஞ்சம்…” நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் போதும்.

கோபித்தான்… துன்பப்பட்டான்… கஷ்டப்பட்டான்.. என்ற உணர்வு வரப்படும் போது ஈஸ்வரா… என்று தடைப்படுத்தி “அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…” என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வர வேண்டும்.

ஆனால் முதலில் கண்ணின் நினைவைக் கோபித்தவர் மேல் அல்லது துன்பப்படுவோர் மீது வைத்தோம். அதை ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்கினோம். அவர் உடலிலிருந்து வந்த கோபமான உணர்வுகள் அல்லது வேதனையான உணர்வுகள் நமக்குள் ஆன்மாவாக மாறுகின்றது.

நுகர்ந்து (சுவாசித்து) உயிரில் பட்டவுடனே உணர்ச்சிகள் எழும்புகிறது. விஷ்ணு என்ன செய்கிறான்…? வரம் கொடுக்கின்றான். ஒலி எழுப்புகிறது. உடல் முழுவதும் அந்த உணர்ச்சிகள் பரவுகிறது.

அவன் கோபமாகப் பேசியதை…
1.ஒன்று – நாம் கொஞ்சம் வலு கொண்டவராக இருந்தால் சண்டைக்குப் போவோம்.
2.இரண்டு – நாம் வலு குறைவாக இருந்தால் கிடு… கிடு… என்று பயமாகி இப்படிப் பேசுகிறானே.. என்று வேதனைப்படுகின்றோம்.

அதற்கடுத்து ஏதாவது அவனிடம் வாய் திறக்கின்றோமா..? நமக்கு வேதனை என்ற உணர்வு வருகின்றது. அந்தக் கார உணர்வுடன் வேதனை உணர்வைச் சேர்த்தவுடனே என்ன செய்யும்…?

மிளகாயை எடுத்து அரைத்தால் கையில் எரிச்சல் ஆவது போல் நம் உடலில் எரிச்சல் ஆகின்றது. ஆகவே அத்தகைய தீமைகள் புகாது தடுக்க என்ன செய்ய வேண்டும்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் நம் கண்ணின் நினைவைக் கொண்டு செல்ல வேண்டும்.
1.உயிரான ஈசனிடம் நாம் வேண்ட வேண்டும்…
2.அவனிடம் கேளுங்கள்… அவனிடம் தான் கேட்க வேண்டும்
3.ஏனென்றால் எல்லாவற்றையும் அவன் தான் நமக்குள் உருவாக்குகின்றான்.
4.இத்தனையும் தெரிய வைப்பது அவன் தானே…!

ஆனால் நாம் ஈசனை எங்கேயோ தேடிக் கொண்டிருக்கின்றோம்.

உருவாக்குவது அவனே தான். நாம் பார்ப்பது கேட்பது நுகர்வது எல்லாவற்றையும் இயக்கிக் காட்டுவது அவனே தான். நம்மை ஆண்டு கொண்டிருப்பது உயிர் தான் என்கிற வகையில் நாம் மறந்துவிடுகின்றோம்.

அழகான துணிகளைப் போடுகின்றோம்… நம்மை அழகுபடுத்துகின்றோம். இருந்தாலும் யாராவது ஒரு கடும் சொல் சொல்லிவிட்டால் நம்மால் தாங்க முடியவில்லை.

உயிர் வெளியே போய்விட்டால் என்ன செய்கிறது…? கோடீஸ்வரனின் மகனாக இருந்தாலும் உடல் சவமாகி விட்டால் சீக்கிரம் தள்ளி விடப்பா…! என்று தானே நாம் சொல்கிறோம்.

சொத்து எல்லாம் இருந்து என்ன செய்வது…? அவனால் அதை அனுபவிக்க முடிகிறதா…? இல்லையே…!

இது எல்லாருக்கும் தெரிகிறது. தெரிந்தாலும்
1.இந்த உடலில் எடுத்து நாம் வளர்த்துக் கொண்ட வேதனையான உணர்வு… அதற்குச் சாப்பாடு தேவை.
2.அந்த உணர்ச்சிகள் உந்தி நம்மைச் சிந்திக்க விடாதபடி செய்கிறது.

ஆகவே… பிறர் செய்யும் தீமையான எண்ணங்களும் குற்றச் செயல்களும் நம் உடலுக்குள் போனால் என்ன செய்யும்…? அந்தத் தீமையின் உணர்வாக அதனுடைய வலிமை கொண்டு இயக்க ஆரம்பித்துவிடும்.

நம் நல்ல குணம் வேலை செய்யுமோ…? அது செயலற்றுப் போகும். இப்படி நாம் நல்லதைச் செய்து வந்தாலும் தீமைகள் உடலுக்குள் வருகிறது. வெளியிலிருந்து தான் அது வருகிறது.

அதனால் தான் இராமாயணத்தில் வாலியை இராமன் குகைக்குள் போட்டு மூடி விடுவதாகக் காட்டுகிறார்கள். அதாவது “தீமைகள் நமக்குள் உட்புகாதபடி தடுக்க வேண்டும்…” என்று உணர்த்துகிறார்கள்.
1.குகைக்குள் வாலி இருக்கின்றான்.
2.இராமன் அம்பை எய்து ஒரு கல்லைப் போட்டு அந்தக் குகையின் வாசலை அடைத்து விடுகின்றான்.
3.ஆனால் அவனைக் கொல்லவில்லை.
4.அவன் வீரியத்தைத் தடைபடுத்துகிறான்…! என்று காட்டுகின்றார்கள்..

தீமையான உணர்வுகள் நமக்குள் புகாதபடி துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அதைத் தடுக்க வேண்டும்…! என்று தெளிவாகக் காட்டுகிறார்கள்.

இயந்திரங்களின் (ARTIFICIAL INTELLIGENCE) சக்தியை அதிகமாக நம்புகின்றனர்… தன் ஆத்ம சக்தியை உணரவில்லை – ஈஸ்வரபட்டர்

இயந்திரங்களின் (ARTIFICIAL INTELLIGENCE) சக்தியை அதிகமாக நம்புகின்றனர்… தன் ஆத்ம சக்தியை உணரவில்லை – ஈஸ்வரபட்டர்

 

இன்றைய மனிதனின் பல எண்ண சக்தியினால் கணிதத்தின் (கம்ப்யூட்டர்) தொடர்பு கொண்டு…
1.செயற்கையினால் இயந்திரத்தின் துணை கொண்டு
2.ஒருவர் இருவர் அறிந்த சக்தியை இயந்திரங்களின் வழியில் செயல்படுத்தி
3.மற்ற ஆத்மாக்களின் சக்தியை இவ்வியந்திரத்தின் கணிதத் தொடர்பு கொண்டு சக்திக்கு அடிமைப்படுத்தி
4.செயலற்ற சோம்பேறி நிலையில் சென்று கொண்டுள்ளது இன்றைய உலகம்.

உலகம் எப்படித் தோன்றியது…? எந்நிலையில் உயிரினங்கள் வளர்ச்சி கொண்டன…? என்ற நிலையை அறியவும் ஆராயவும் இன்றளவும் இம் மனித எண்ணங்களின் நிலையுள்ளது.

பிறரின் தொடர்பை மட்டும் இயக்கி உள்ள நிலை இது…!

1.தான் பிறந்து வளர்ந்து செயல் கொண்டு வாழ்ந்திட… தனக்குள்ள சக்தியையும்…
2.தான் வாழவே தன்னுள் உள்ள தன் ஆத்மாண்டவனையும் வணங்கிடல் வேண்டும்…! என்று உணராமல்
3.பிறரின் சக்தியில் அடிமை கொண்டு வாழ்ந்து என்ன பயன்…?

நாம் பிறவியெடுத்த பயனை உணர்ந்து ஆத்ம ஜெபம் கொண்டால் நம் சக்தியுடன் அனைத்து நற்சக்திகளையும் ஈர்த்துச் செயல்படுத்தி வாழ்ந்திடலாம்.

நம் ஆத்மாவான நம் சக்தியை நாம் உணர்ந்து செயல் கொண்டால்தான் இம் மாறப்போகும் இக்கலியின் மாற்றத்திலிருந்து நம் ஆத்மாவை ஒளிரச் செய்திட முடிந்திடும்.

ஆத்ம சக்தியை உணர்ந்து கொண்டால் அவரவர்களிடத்திலுள்ள இவ்வெண்ண சக்தியின் தொடரைக் கொண்டு இக்கோளம் மட்டுமல்ல… இப் பிரம்மாண்ட அனைத்துக் கோளங்களையுமே நமதாக்கும் சக்தி ஒவ்வோர் ஆத்ம சக்திக்கும் உண்டு.

அனைத்துக் கோளங்களுமே நமக்குச் சொந்தமானவைதான்.

இப்பூமியில் உயிரணுவாய் உயிராத்மாவாய் வாழ்ந்திடும் நாம் நம் சக்தியைச் செயல் கொண்டதாக்கி வாழ்ந்து காட்டிடல் வேண்டும். ஜீவன் பிரிந்த பிறகு ஆவி உலகில் இவ்வுடலில்லாமல் நம் சக்தியை வளர்த்திட முடியாது.

மாறப் போகும் கலியிலும் பிறகு வரும் கல்கியிலும் ஆவி உலகில் ஆத்மாக்களாய்ச் சுற்றிக் கொண்டுள்ள நிலையில்…
1.இவ்வுடலில் இருந்து பிரிந்து சென்ற நிலையிலுள்ள எண்ண நிலைக்கொப்ப…
2.பிறவி எடுத்திடும் நாள் வரை இவ்வாவி உலகில் சுற்றிக் கொண்டேதான் எண்ணத் தவிப்புடனே இருந்திடல் வேண்டும்.

இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நம் சிரசு பாகம் இருக்கும் ட்ரான்சாக்சன் (TRANSACTION) செய்யும் இடம்

நம் சிரசு பாகம் இருக்கும் ட்ரான்சாக்சன் (TRANSACTION) செய்யும் இடம்

 

கோபத்தின் உணர்ச்சி அதிகமாகி விட்டால் நீங்கள் எவ்வளவு சந்தோஷமாக இருந்தாலும் கூட அடுத்தவர்கள் செயலைப் பார்த்தவுடனே வெறுக்கும் உணர்வு தான் வரும். மற்ற உணர்வுகள் மோத… மோத… அந்த வேதனையின் உணர்ச்சிகளைத் தான் நுகருவோம்.

சில பேரைப் பார்த்தோம் என்றால்
1.சந்தோஷமாகச் சொன்னாலே அவருக்கு எரிச்சலாகிக் கொண்டே இருக்கும்… தாங்காது.
2.ஏனென்றால் எதிர்ப்பு உணர்வின் தன்மைகள் அந்த ட்ரான்சாக்சன் செய்யக்கூடிய இடங்களில்
3.இந்தக் கார (கோப) உணர்வின் அணுத் தன்மை… அதிகமாக அந்தப் பாகம் வெடித்து விட்டால்
4.இந்த உணர்வின் அணுக்கள் அங்கே பெருக்கமாகி விடுகின்றது.
5.அப்படிப் பெருக்கமாகி விட்டால் நீங்கள் அடுத்து… நீங்கள் கேட்கும் நிலைகளில் அது மறுக்கப்படுகின்றது
6.மகிழ்ச்சி ஊட்டும் நிலை இழக்கச் செய்து விடுகிறது.

ஆனாலும் அத்தகைய நிலைகள் அதிகமாகி விட்டால் நம் உடல் உறுப்புகளில் குறிப்பாக நுரையீரலில் துடிப்பின் தன்மை அதிகரித்துவிடும்.

அப்படி அதிகரித்து விட்டால் காரத்தை வாயில் வைத்தால் ஸ்ஸ்…ஆ… ஸ்ஸ்…ஆ… என்று சொல்வது போல் இந்த உணர்வுகள் அந்த நுரையீரலைச் சீராக இயக்கும் சக்தி இழந்துவிடுகிறது.

அப்போது…
1.நமக்குள் அதிகமான துடிப்பும்
2.ஏதாவது வேலை செய்தால் மிகவும் கடினமாகவும்
3.அதிமாகப் பேசினால் முடியாமலேயும்… போன்ற நிலைகளை உருவாக்கிவிடுகின்றது.

ஏனென்றால்… அந்தக் காரமான உணர்வு ஊழ்வினை என்ற வித்தாக்கப்படும் போது
1.அந்த அணுவின் கருத்தன்மை இழுத்து உடலுக்குள் உணர்ச்சிகளை உயிருடன் ஒன்றச் செய்து…
2.உணர்வுகளைத் தாங்கி நம் உடலுக்குள் பரப்பச் செய்யும் இடத்தில்
3.அந்த அணுத் தன்மை வெடித்து விட்டால் இத்தகைய நிலை ஏற்பட்டு விடுகின்றது.

நாம் தவறு செய்யவில்லை. இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள வேண்டுமல்லவா.

ஆகவே… விஷ்ணு வரம் கொடுத்து விட்டான்… குறித்த காலம் வரும் போது அணு வெடித்து விட்டால் அதே உணர்ச்சியை ஊட்டும் அணுக்களாக அது மாறுகின்றது. அது தான் பிரம்மா உருவாக்குகின்றான்… விஷ்ணுவின் மகன் பிரம்மா என்று சொல்வது.

நாம் நுகர்ந்த உணர்வுகள் காந்தத்தால் (லட்சுமி) ஈர்க்கப்பட்டு அந்த வெப்பத்தால் (விஷ்ணு) இணைக்கப்பட்டு அந்த உணர்வின் தன்மை கருத்தன்மையாக உருவாகும் தன்மை தான் விஷ்ணுவின் மகன் பிரம்மா என்று தெளிவாகக் கூறுகின்றனர்.

ஆகவே சிந்திக்கும் இடங்களில் அந்த அணுத் தன்மைகள் வளர்ந்து விட்டால்…
1.நாம் சிந்தனை இழப்பதும்
2.அடிக்கடி நாம் கோபிப்பதும்
3.நம்மை அறியாமலே சிரசில் ஒரு விதமான வலி எடுப்பதும்
4.பிறர் சொல்வது மோதியவுடனே நமக்குத் தாங்க முடியாத நிலை வருவதும்
5.நம்மை அறியாமலே பிறரிடத்தில் கோபிப்பதும் இத்தகைய நிலைகள் உருவாகின்றது.

நாம் ஏதாவது தவறு செய்தோமா… இல்லை…!

கோபமாகப் பேசியவனை உற்று நோக்கினோம். அந்த உணர்வின் தன்மை வலுவாகி அந்த உணர்வின் எண்ண அலைகள் வெளிப்படும் போது அவன் உடலிலிருந்து வரக்கூடியது நமக்குள் வித்தாக மாறுகின்றது.

ஊழ்வினை என்ற வித்தான பின் அந்த உணர்வுகள் நமக்குள் வந்து அந்த உணர்ச்சிகளை ஊட்டும் அணுத் தன்மைகள் பெருகத் தொடங்குகின்றது.

இது தான் அதில் உள்ள மூலம்.