ஓரு அசுரன் இறந்தால் பல அசுரர்கள் தோன்றுகிறார்கள் – விளக்கம்

ஓரு அசுரன் இறந்தால் பல அசுரர்கள் தோன்றுகிறார்கள் – விளக்கம்

 

ஒருவன் இறந்து விட்டான் என்று நினைக்கின்றோம். ஆனால் அந்த உடலில் விளைந்த உணர்வுகள் அடுத்த உடலுக்குள் வந்து என்ன செய்யும்…? என்று அறிந்து கொள்ளுங்கள்.

இராமாயணத்தில் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள். ஒரு அசுரன் இறந்தான் என்றால் அதிலிருந்து பல அசுரர்கள் அதிலிருந்து தோன்றுகின்றார்கள் என்று காட்டுகின்றார்கள்.

ஓர் உயிர் தோன்றிய பின் அந்த அணுத் தன்மை அடைகிறது. ஜீவ அணுவாக மாறும் போது இதனுடைய நிலைகள் என்ன செய்கிறது…?
1.முதலில் உயிரணுவாக மாறுகிறது
2.பின் ஜீவ அணுவாக மாறுகிறது… ஜீவ ஆன்மாவாக மாறுகிறது.

உதாரணமாக வீட்டில் கொடூரத் தன்மைகளைச் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவன் இறந்த பிற்பாடு என்ன நடக்கிறது…? ஒவ்வொரு உடலுக்குள்ளும் போய் நரக வேதனைப்படுத்துகிறது.

குடும்பங்களில் பார்த்தோம் என்றால் என்னை இப்படிச் செய்தானே…! என்று நினைத்தார்கள் என்றால் அங்கிருந்து பரவி உள்ளுக்குள் வந்துவிடுகிறது.

1.சில குடும்பங்களில் அவன் தொலைந்து போய்விட்டால் பரவாயில்லை… எல்லாம் சரியாகிவிடும் என்று நினைப்பார்கள்.
2.போன பிற்பாடு தான் அந்த உணர்வின் தன்மை எல்லார் உடலிலும் பெருகத் தொடங்கும்.

அங்கே தொலைகிறது…?

இதை நாம் மாற்ற வேண்டுமா இல்லையா…? இராமாயணக் காவியங்களில்
1.இந்த உயிரின் இயக்கத்தால் வந்த நிலைகளும்
2.பத்தாவது நிலை அடையக்கூடிய இராவணன் எந்த நிலையில் இருக்கின்றான்…?
3.இந்த உடலில் வளர்த்துக் கொண்ட அந்த அணுக்கள் அனைத்தும் மீண்டும் எப்படி அசுர குணங்களை வளர்க்கிறது…? என்று காட்டுகிறார்கள்.

அதே சமயத்தில் இராவணனின் மகன் இந்திரஜித் என்ன செய்கிறான்…? செத்தாலும் கூட… யாருக்கும் தெரியாமல் “மறைந்திருந்தே செயல்படுவான்…” என்று காட்டுகின்றார்கள்.

ஒருவன் கொடூரமான நிலைகளில் சாகின்றான். பழி தீர்க்கும் உணர்வுடன் இறந்தால் ஒரு உடலுக்குள் வந்தால் அவருக்குத் தெரியாமலே அங்கே ஆட்டிப் படைக்கின்றான்.

உடலுக்குள் பேயாக வந்து ஆட்டுகிறது என்று சொல்கிறோம் அல்லவா.

எத்தனை ஆசைப்பட்டானோ செத்த பிற்பாடு என்ன செய்கின்றான்…? பேயாக வந்து ஆடுகின்றான். ஆகவே இவனுக்குள் விளைந்த இந்த உணர்வுகள்
1.அவன் கொல்ல வேண்டும் என்ற உணர்வுகள் மடிந்த பின் இத்தனை வேலைகளும் செய்கிறது
2.அவனுக்குப் பிறந்த குழந்தையும் அதன் வழியில் வளரப்படும் போது இப்படித்தான் வருகின்றான்.

நாம் பார்க்கின்றோம் அல்லவா.

நாம் நண்பர்களாகப் பழகுகின்றோம். அதே போல் எத்தனையோ பேருடன் பழகுகின்றோம். எதிர்பாராது அவர்கள் குடும்பத்தில் ஏதோ தொல்லை…! ஆனால் நாம் அன்பாகப் பேசிப் பழகிவிட்டோம்.

என்ன வாழ்க்கை…! என்று வெறுக்கப்படும் போது வீட்டில் உள்ளவர்களை எண்ணி… இப்படி எல்லாம் தொல்லை கொடுத்தார்கள் உருப்படுவார்களா…? என்று நினைத்து சாப அலைகள் விடுகின்றான்.

அந்தச் சமயத்தில் பழகிய நண்பர் மீது நினைவுகள் வந்து… என் குடும்பத்தில் ஒரே தொல்லையாக இருக்கிறது…. அதனால் நான் இந்த உடலை விட்டுப் போகிறேன் என்ற எண்ணத்தில் இறந்தால் போதும்.

நினைத்து இந்த எண்ணத்துடன் வெளி வந்தால் இங்கே அந்த நண்பர் அவர் போய்விட்டாரா…? என்று எண்ணினால் என்ன நடக்கிறது…?

பழகிய நண்பர் உடலுக்குள் வந்துவிடுகிறது.

1.அவன் எப்படித் தற்கொலைக்குக் காரணமானானோ அல்லது துன்புறுத்தும் உணர்வுகளுக்குக் காரணமனானோ
2.இந்த உடலுக்குள் வந்து அவன் செய்த வேலையை எல்லாம் செய்யும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply