இந்த மனிதப் பிறவியில் நாம் சேமிக்க வேண்டியது ஞானிகளின் சக்தி தான் – ஈஸ்வரபட்டர்

இந்த மனிதப் பிறவியில் நாம் சேமிக்க வேண்டியது ஞானிகளின் சக்தி தான் – ஈஸ்வரபட்டர்

 

மனித ஆத்மா ஒன்றுக்குத் தான் இக்காற்றினில் கலந்துள்ள பல அமில நிலைகளில் தனக்குகந்த அமில சக்தியை ஈர்க்கும் பக்குவ நிலை பெறலாம் “தாவர நிலையைப் போல…!”

மற்ற ஜீவ ஜெந்துக்களின் நிலையில் இத்தகைய சக்தி நிலை இல்லை. மனித ஆத்மாவில் அது நிறைந்துள்ளது.

ஆனால் சாதாரண வாழ்க்கையில் பார்த்தும் கேட்டும் சுவாசத்தில் உணர்ந்தும் பேசியும் வரும் நாம்… “நமக்குகந்த சக்தியை உணராமல் செயல் கொள்கின்றோம்…”

இயந்திரத்தின் துணையுடன் சில கருவிகளை “அதற்குகந்த அமிலத்தைச் செலுத்தி…” ஒளிப்படங்களைப் பிம்பப்படுத்திக் காண்கின்றோம்.

1.அந்த அமில சக்தியையே நம் உணர்வுடன் ஈர்த்து
2.இக்காற்றினில் கலந்துள்ள அச்சக்தியை ஒருநிலைப்படுத்தி
3.எங்குள்ள நிலையையும் உள்ள நிலையிலேயே நாம் கண்டிடலாகாதா…? என்றுணரல் வேண்டும்.

இவ்வுடல் என்னும் கோளத்திற்குகந்த காந்த சக்தியினால்… காற்றில் கலந்துள்ள எந்த அமில சக்தியையும்.. ஒலி ஒளி இவற்றின் சக்தி நிலையையும்… நம் உயிராத்மாவினால் செயல்படுத்தி ஈர்த்திட முடிந்திடும்.

வானொலியின் துணையுடனும்… தொலைக்காட்சியின் துணையுடனும்… இயந்திரத்தின் துணையுடனும் (கம்ப்யூட்டர்)… செயல் கொள்ளும் இந்த நிலையை மனிதனால் செயல்படுத்திய அந்தச் செயற்கையை “நம் இயற்கை ஆத்மாவினால் அனைத்து சக்திகளுமே அறிந்திட முடிந்திடும்…!”

1.மனித உடல் என்னும் இப்பிம்ப நிலை பெற்று இன்று நாம் வாழ்ந்திடும் நிலையில்
2.ஆதியிலே முதல் உயிணுவாய்த் தோன்றிய நாள் முதற்கொண்டு
3.பல நிலைகளை எடுத்துப் பல சுவாச நிலைகளின் தொடருடன் வாழ்ந்து
4.நம்முடனே கலந்து வந்துள்ள அமில சக்தியில் நம் ஆத்மாவுடன்
5.பல நன்மை தீமை கொண்ட பல கோடி அணுக்களைச் சேமித்தேதான் வழி வந்துள்ளோம்.

ஆனால் இனி வாழ்ந்திடும் வாழ் நாட்களில்… நம்முள் உள்ள… நாம் பழக்கப்படுத்தி அடிமை கொண்டு வாழ்ந்து வந்த தீய சக்திகளின் நிலைக்கு அடிபணிந்திடாமல்…
1.நல்லுணர்வைச் சேமித்து… நம் நியதியையே ஞானிகள் வழியில் சென்றிடும் தன்மைக்கு
2.சத்தியத்தையும் தர்மத்தையும் நியாயத்தையும் கடைப்பிடித்தே செயல்படல் வேண்டும்.

Leave a Reply