காலத்தை இனிமேல் விரயம் செய்யாதீர்கள் – ஈஸ்வரபட்டர்

காலத்தை இனிமேல் விரயம் செய்யாதீர்கள் – ஈஸ்வரபட்டர்

 

எல்லா மண்டலமும் ஒரே நிலை கொண்டு வளர்ச்சி பெறும் என்பதல்ல…!

வான மண்டலத்தில் நட்சத்திர மண்டலமாகவும்… சிறு சிறு கோளமாக உள்ள மண்டலங்களும்… ஜீவனற்று உள்ள மண்டலங்களும்… பெரிய மண்டலங்களின் ஈர்ப்பு சக்தியில்
1.அதன் சக்தி நிலையும் (அமில நிலை) பெரிய மண்டலங்களின் அமில நிலையும் ஒன்றுபடும் பொழுது
2.இதன் ஈர்ப்புடன் வந்து சேர்ந்து அந்நிலையிலேயே கலந்து சுழல்கின்றது.

மண்டல வளர்ச்சி கொண்ட சிறு சிறு நட்சத்திர மண்டலங்களாய் சுற்றிக் கொண்டுள்ள கோளங்கள் எல்லாம் பெரிய மண்டலங்களின் பிரளய நிலையின் காலங்களில்தான் வந்து சேருகின்றன.

பூமியின் பூமத்திய ரேகையின் இன்றுள்ள நிலை… நடக்க இருக்கும் பிரளயத்தின் போது பிரளயத்தின் அசைவினால்… சிறிது மாறுபட்ட இடத்தில் வரப்போகின்றது.

1.இன்று நீர் நிலைகளாய் ஆழ்கடலாய்ச் சூழ்ந்துள்ள இடமெல்லாம்
2.சமமான தரையாகச் (நிலங்களாக) செயல் கொள்ளப் போகின்றது.

இம்மனித ஆத்மாக்கள் ஜீவராசிகள் மட்டும் மாறப்போகின்றன என்பதல்ல. இன்று வளர்ச்சியில் உள்ள தாவர வர்க்கங்களின் நிலையும் மாறப் போகின்றது.

இன்று ஆத்மீக நெறியை அறியும் சக்தி நிலையே குறைந்துள்ளது. செயற்கைக்கு அடிமைப்பட்டுள்ள ஆத்மாக்கள் எல்லாம் இயற்கையின் சீற்றத்திலிருந்து தப்பும் நிலையை உணர்ந்திடல் வேண்டும்.

வாழும் வாழ்க்கை செயற்கைக்கு அடிமைப்பட்டுள்ளதை மாற்றி இவ் இயற்கையின் கால மாறுதலை உணர்ந்தே வாழ்ந்திடுங்கள்.

1.பல சித்தர்கள்… பல ரிஷிகள்… வாழ்ந்து செயலாக்கி இன்றும் ஆண்டவன் ரூபம் கொண்டு
2.நம் கோயில்களின் மூலமாகப் பல சக்தி நிலைகளை உணர்த்திக் கொண்டிருக்கும் பாக்கியம் பெற்ற நாம்
3.நம் ஆத்மாவிற்கு உயர்ந்த சக்தியின் நிலையைச் சேமிக்கும் சக்தி பெற்றிட வேண்டும்.

நம் சக்தியைச் செயற்கைக்கும் விளையாட்டிற்கும் வீண் விவாதத்திற்கும் இன்றைய அரசியல் ஆட்டத்திற்கும் அடிபணியச் செய்திடக் கூடாது.

1.நம்மைப் பற்றிக் கொண்டுள்ள அடிமைப்படுத்திடும் எத்தகைய நிலையிலிருந்தும் மீளும் நிலையில் நம் சக்தியை ஓங்கச் செய்தே
2.இக் குறுகிய காலத்தில் அன்பு என்ற ஜெபத்தின் செயல் கொண்டு
3.ஆத்ம சக்தியை வளர்க்கும் பரிபக்குவ நிலையில் வாழ்ந்திடுங்கள்.

முருகன் சிலையிலிருந்து வரும் வாசனைகள்

முருகன் சிலையிலிருந்து வரும் வாசனைகள்

 

உணர்வின் இயக்கங்கள் பற்றி உங்களுக்குத் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றேன்.

விஞ்ஞான நிலைகள் படித்தவர்களோ… அல்லது இஞ்சினியர்களோ அந்த தொழில்நுட்பம் (TECHNIQUES) கொண்டு பாட நிலைகளை உற்றுப் பார்த்துப் பதிவாக்கி அதற்குண்டான இயந்திரங்களில் நினைவச் செலுத்துகின்றனர்.

அதை வைத்துத் தாவர இனங்களுக்குள் சூட்சும நிலைகள் இயக்கும் இந்த உணர்வினை அறிந்து
1.அதை மாற்றி அமைத்தால் என்ன…? இதனுடைய செயலாக்கங்கள் என்ன…? என்ற நிலைகள் விஞ்ஞானி கண்டறிந்து
2.இது மனிதனுக்கு உகந்ததா… இது உகந்ததல்லவா…? என்று இந்த உணர்வின் தன்மை அளவுகோல் சேர்க்கப்படும் பொழுது
3.அந்த உணர்வால் இவனுக்கு இந்த நிலை வருகின்றது.

உணவு உட்கொண்டு மற்ற நிலையில் இருக்கப்படும் பொழுது இந்த உணவிற்குச் சத்தை ஏற்றுவதற்கும்… மற்ற தாவர இனச்சத்தை இணை சேர்த்துப் புதுப் புது வித்துக்களை உருவாக்கி “சத்துள்ள ஆகாரம்…” என்றும் விஞ்ஞானி உருவாக்குகின்றான்.

இதைப் போன்று தான் அன்று மெய் ஞானி பெற்ற உணர்வின் தன்மையை இயற்கையின் நிலைகள் கொண்டு நஞ்சினை வென்ற அந்த அருள் ஞானத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

இயற்கையின் நிலைகள் எப்படி மாறுகிறது…? என்று ஞானிகள் கண்டதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொண்டால்
1.இந்த மனித வாழ்க்கையில் அறியாத நிலைகள் கொண்டு அவ்வப்பொழுது வரும் தீமைகளிலிருந்து விடுபட முடியும்
2.மகிழ்ந்து வாழும் உணர்வுகளை வளர்த்துக் கொள்ள முடியும்.

சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் போகன் விஷத்தின் தன்மை வென்றிடும் நிலைக்காக முருகன் சிலையை உருவாக்கினான்.

கோள்களிலிருந்து வரும் நவபாஷணத்தை எடுத்து… சூரியனிலிருந்து வரக்கூடிய ஒவ்வொரு தாவர இனங்களையும் அதிலே பாதரசம் கலந்திருப்பதைப் பிரித்து இதனுடன் இணை சேர்த்தான்.

மனிதனுக்குண்டான ஆறாவது அறிவின் ஆற்றலை… அதாவது நாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் நஞ்சினை மலமாக மாற்றுவது போல… மனிதனின் ஆறாவது உருவைக் கண்டு தீமைகளை அகற்றிடும் பச்சிலைகளை அதிலே சாரணைகளைக் கொடுத்து இணைத்தான்.

சூரியன் எப்படி மற்றதுடன் மோதும் பொழுது தன் வெப்பத்தின் தன்மை கூட்டுகின்றதோ இதைப் போல
1.சிலையின் மேலிருந்து சொட்டு சொட்டாக நீரை ஊற்றப்படும் பொழுது அதிலே எதிர்நிலையாகும்… அதிலே ஒரு விதமான வெப்பம் உருவாகும்.
2.அந்த வெப்பத்தினால் சிலைக்குள் போகன் மருந்துகளாகச் சேர்த்த உணர்வின் ஆவி அலைகள் வரும்
3.கண்களால் அதை உற்றுப் பார்த்து நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு
4.போகன் காட்டிய நெறிப் பிரகாரம் சிலையிலிருந்து வெளிவரும் அலைகளை (வாசனைகளை) நுகர்ந்து எடுத்தோம் என்றால்
5.பெரும் குஷ்டரோகமாக இருந்தாலும் சரி… கேன்சராக இருந்தாலும் சரி… அந்தத் தீமைகளை நீக்கிவிடும்.

ஆகவே இயற்கையின் உணர்வுகள் எதைக் கலவையாக எடுத்து நாம் எண்ணுகின்றோமோ அதன் அணுவாக நுகர்ந்து அந்த உணர்வின் செயலாகவே நம்மை மாற்றும்.

பிரளயத்தினால் பூமிக்கு வளர்ச்சி நிலை உண்டா…? ஈஸ்வரபட்டர்

பிரளயத்தினால் பூமிக்கு வளர்ச்சி நிலை உண்டா…? ஈஸ்வரபட்டர்

 

பூமி தோன்றிய நாள் கொண்டே இந்தப் பூமிக்கும் ஓர் எண்ண நிலையுண்டு. இரண்டு ஆத்மாக்கள் ஒன்றுபட்டு சக்தி நிலையைச் சேமித்து இப்பூமி என்னும் பிம்பத்தை வளர்த்தது என்று ஏற்கனவே சொன்னேன்.

ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் கிடைக்கக்கூடிய சக்தி நிலையை வைத்துப் பல நிலைகளிலிருந்தும் பல சக்திகளை ஈர்க்கும் நிலைப்படுத்தி இப்புண்ணிய பூமியைச் சிறுகச் சிறுக வளர்த்து… இன்று இப்பூமியே தன் எண்ண நிலையில் தானே கற்றும் நிலையில் உள்ளது.

பூமி வளர்த்த உயிரணுக்களின் சுவாச நிலையுடன் தன் சுவாச நிலையைக் கலக்கவிட்டே இப்பூமியே சுவாச நிலை எடுத்து ஓ…ம் என்ற ஓங்கார நாதத்தில் சுழல்கின்றது.

இப்பூமியில் உள்ள அனைத்து சப்த அலைகளையுமே இப்பூமி ஈர்த்து வெளிப்படுத்திக் கொண்டேயுள்ளது.

சிறு எறும்பு முதற்கொண்டு… எண்ணங்கள் கொண்டு சுவாச நிலையை ஈர்த்து வெளிப்படுத்தும் அனைத்து ஜீவராசிகளின் சுவாச நிலையும்… தாவர வர்க்கங்களின் சுவாச நிலையும்… இயந்திர வர்க்கங்களின் சப்த ஒலியும்… அனைத்துமே இக்காற்றுடன் கலந்து இப்பூமியின் சுவாசத்திற்கு வந்து சென்று கொண்டுள்ளன.

இப்பூமிக்கும் ஜீவன் உண்டு… எண்ணம் உண்டு… சுவாச நிலையும் உண்டு. அழியா ஆயுட்காலமும் உண்டு.

மாறி மாறிப் பிரளய நிலை ஏற்படுவதெல்லாம் இன்று நாம் எப்படிப் பிறப்பெடுத்து வாழ்ந்து இவ்வுடல் என்னும் இப்பிம்பம் செயல்படாமல் போகும் நிலையில் நம் ஆத்மா பிரிந்து செல்கின்றதோ அந்த நிலை போன்றது தான்.

அதாவது பூமியின் பிரளய நிலையினால்…
1.இப்பூமியின் ஆத்மா ஜீவன் இல்லாமல்… பிரிந்து செல்லாமல்
2.ஜீவனுடனே தன் ஆத்மாவைக் காத்துக் கொண்டே பிரளய நிலை ஏற்படுத்தி
3.தான் வளர்த்துச் செயலாக்கிய உயிரணுக்களின் மற்ற இயற்கையின் தன்மையைச் சிறிது மாற்றி
4.”பிரளயம்…” என்ற மாற்றத்தினால் சுற்றிக் கொண்டே வாழ்கின்றது.

பூமி சுழல இந்தச் சப்த அலைகள்தான் இப்பூமிக்கு உயிர் நாடி. பேரிரைச்சல் கொண்ட இக்கடல் அலைகளும் ஜீவராசிகளின் சுவாச நிலையும் இருந்தால்தான் இப்பூமியைச் சுற்றியுள்ள இக்காற்று மண்டலத்திற்கே செயல் நிலை வருகின்றது.

பூமி தோன்றிய நாளில்… இன்று இருக்கும் ஓங்கார நாதத்தின் உயிர் நாடியின் சப்த அலையை விட ஒலியின் சப்த நிலை குறைவாகத்தான் இருந்தது. இப்பூமி வளர வளரத்தான் சப்த அலை ஓங்காரமுடன் வளர்ந்து கொண்ட வந்துள்ளது.

இப்பூமியைக் காட்டிலும் சூரிய மண்டலமும் வியாழன் மண்டலமும் பெரியவை. அவற்றின் சுழலும் வேகமும் இதை விடப் பல மடங்கு அதிகம் என்று உணர்த்தியுள்ளேன்.

சூரிய மண்டலத்தில் உள்ள உயிரணுக்களின் தன்மையும் நம் பூமியின் தன்மையும் மற்ற மண்டலங்களின் தன்மையும் மாறு கொள்கின்றது என்று உணர்த்தினேன்.

அந்தந்த மண்டலத்தின் சீதோஷ்ண நிலைக்கொப்பத்தான் அம்மண்டலத்திலுள்ள உயிரணுக்களின் நிலையும் இருந்திடும்.

எந்த மண்டலத்திலும் உயிரணுக்கள் இருந்து சுவாசம் எடுத்திடாமல் இருந்தால் அந்த மண்டலத்திற்கே ஜீவனில்லை.
1.நடமாடும் பறக்கும் ஊரும் ஜெந்துக்களுக்கு மட்டும்தான் ஜீவன் உண்டு என்ற பொருளில்லை.
2.ஒவ்வொரு மண்டலத்திலும் அம்மண்டலத்துடனே வளர்ந்துள்ள கல் மண் நீர் அனைத்திற்குமே ஜீவனுமுண்டு… சுவாசமுமுண்டு.

கல் பேசும் மண் பேசும் என்பதின் பொருளென்ன…? அதனதன் சுவாசமே அதனதன் சொற்கள்தான். சுவாசமில்லாமல் எந்த மண்டலமுமில்லை சுவாசம் எடுத்திடாமல் எந்த உயிரணுக்களும் இல்லை.

1.இஜ்ஜீவத்துடிப்பின் ஒலியினால்தான் ஒவ்வொரு மண்டலமும் வாழ்கின்றது
2.நம் பூமியின் சக்தி நிலையும் கூடிக் கொண்டே வருகின்றது.

கலியின் பிரளயத்திற்குப் பிறகு வரப்போகும் கல்கியின் வளர்ச்சியிலிருந்து நம் பூமி இன்னும் சக்தி நிலை நிறைந்ததாகத்தான் சுழலப் போகின்றது. இன்று சூரியனின் சக்தியினால் சக்தி கொண்டு சுழலும் நம் பூமியே சூரியனின் நிலைக்கொப்பச் சுழலப் போகின்றது.

ஒவ்வொரு பூமியின் நிலையும் ஒவ்வோர் உயிராத்மாவின் சக்தியினால் செயல் கொண்டு சுழல்கின்றது அதனதன் நிலைக்கொப்ப…!

இங்கொன்றும் அங்கொன்றுமாக உபதேசத் துணுக்குகளை யாம் கொடுப்பதன் நோக்கம்

இங்கொன்றும் அங்கொன்றுமாக உபதேசத் துணுக்குகளை யாம் கொடுப்பதன் நோக்கம்

 

யாம் (ஞானகுரு) உபதேசம் கொடுக்கும் பொழுது சிலதுகளை விளங்காமல் சொல்கிறேன் என்றால் அதற்குக் காரணம் உண்டு.
1.சிலருக்குக் கிடைக்காமல் செய்வதற்கும்
2.பதிவானதை நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது உங்களுக்குள் தெரிந்து கொள்வதற்கும் இது உதவும்.

ஏனென்றால் உபதேச வாயிலாக பேருண்மைகளைச் சொன்னாலும் சில மாயாஜாலங்கள் உள்ளவர்கள் இதை எடுத்து
1.அதிலிருக்கும் உள் மூலக்கூறைத் தெரிந்திடாது
2.விஷம் கலந்த உணர்வு கொண்டு அவன் இச்சைக்கே அதைக் கவர்ந்து விடுவான்.

ஆக இந்த உண்மையின் தன்மை செயல்படும் பொழுது அங்கே அவனுக்குப் பயனற்றதாகும் ஆகும். அவன் மக்களை வசியப்படுத்த சொற்றொடரில் இது உதவும். அதைப் போன்ற தீமைகள் வெளிப்பட்டு விடக்கூடாது என்பதற்குதான் அவ்வாறு செய்வது.

ஆனால் அதே சமயத்தில்
1.உங்களுடன் தொடர்பு கொண்ட நிலையில்… உங்களுக்குள் பதிவாக்கும் இதனின் விளக்கம்
2.அடுத்த உபதேச நிலைகள் வரப்படும் பொழுது இணைத்து
3.அந்த உண்மைப் பொருளின் உணர்வை நீங்கள் அறிந்து
4.உங்கள் வாழ்க்கையில் தெளிவாக்கிக் கொள்ள முடியும்.

எம்முடைய உபதேசப் கருத்துக்களைப் புத்தக வாயிலாக வெளிப்படுத்தினாலும் மற்றவர்கள் இதைக் கலவையாக்கி மனித வாழ்க்கைக்குத் தான் பயன்படுத்துகின்றனர்.

இந்த மனித வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றும் உணர்வுகள் பதிவு செய்யும் எண்ணமும் இல்லை.

அவருடைய ஆசை கொண்டு…
1.இதை எடுத்து இப்படிச் செய்தால் தனக்குச் செல்வம் வரும்… செல்வாக்கு வரும்… என்று நிலைகள் வரப்படும் பொழுது
2.அந்த ஆசையின் உணர்வு வந்து உண்மையின் தன்மை பெறாதபடி ஆகி
3.யாம் கூறிய ஞானத்தின் உணர்வுகளும் நாளடைவில் மறைந்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகள் மாற்றுவதற்குத் தான்
1.இங்கொன்றும் அங்கொன்றும் தொட்டு உங்களுக்குள் இதைப் பதிவாக்கப்படும் பொழுது
2.அடுத்த உணர்வுடன் இணைந்து தெளிந்த மனம் பெற்றிடும் அந்த நிலையை உருவாக்கிடத் தான்

இப்போது ஒன்றைச் சொல்கிறேன் என்றாலும்… இதனுடன் இணை சேர்த்த நிலைகள்… அடுத்த அறிவின் தன்மை தொடர் வரும் பொழுது உங்களுடன் இணைத்து… அந்த ஞானத்தைப் பெற்று எத்தகைய தீமையில் இருந்தும் நீங்கள் விடுபட முடியும்

விஷத்தினை வென்று உணர்வை ஒளியாக மாற்றிடும் நிலை பெறுவதற்குத் தான் எல்லாவற்றிலும் கலந்து கலந்து… உபதேசங்களை அந்தந்தக் காலப் பருவத்தில் கொடுக்கின்றோம்.

அதற்குண்டான விளக்கங்களைத் தான் இங்கே வெளிப்படுத்திக் காட்டுகின்றோம் (ஞானகுரு).

நம் பூமியின் பூர்வாங்கம் – ஈஸ்வரபட்டர்

நம் பூமியின் பூர்வாங்கம் – ஈஸ்வரபட்டர்

பூமி தோன்றிய நிலையை… சூரியனிலிருந்து சிதறி வந்த கோளங்கள் பல ஒன்று சேர்ந்து ஆரம்ப நிலையில் ஆவியாய்க் குளிர்ந்து ஒன்றுபட்டு இப்பூமியாகச் சுழல்கின்றது என்ற யூக நிலையில் உள்ளனர்.

பூமி தோன்றிய நிலையை ஆரம்ப நிலைப்படுத்திப் பல நிலைகளில் செப்பி வந்துள்ளேன். வரிசைத் தொடரை இன்று உணர்த்துகின்றேன்.

இந்தப் பூமியே “ஆண்பால் பெண்பால் கொண்ட இரண்டு ஆத்மாக்களின் ஜோதிக் கலப்பினால்…” உற்பத்தியானது.

இந்தப் பூமியைப் போன்ற… இன்று வாழ்ந்திடும் வளர்ந்த அறிவு நிலை பெற்ற… ஆத்ம உடல் கொண்ட மனித இனம் இப்பூமியில் வளரும் நிலைக்கும் முதலே…
1.நம் சூரியனைச் சார்ந்துள்ள 48 மண்டலங்களில்லாமல்
2.மற்ற சூரியனைக் காட்டிலும் சக்தி கொண்ட நிலையில் வாழும் மண்டலங்களில்
3.பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே மனித ஆத்மாக்கள் உண்டு.

நம் பூமியில் இம்மனித இன வர்க்கங்கள் தோன்றியதெல்லாம் மூன்று மாற்றங்களுக்குப் பிறகு தான்… மனித இன வர்க்கமே அறிவு நிலை பெற்று வளர்ச்சி நிலையில் வாழ்ந்து வருகின்றது.

அதுவும் இக்கலியினால் மாற்றம் கொண்டு கல்கியில் இன்னும் மாற்றம் கொண்ட நிலையில்தான் செயல்படப் போகின்றது.

ஆனால் இந்நிலையில் செப்பியபடி மனித ஆத்மாக்கள் வளர்ச்சி கொண்ட மண்டலங்கள் பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வருகின்றன.

அத்தகைய மண்டலங்களில் வாழ்ந்த அறிவு நிலை பெற்ற ஆத்ம உடல் கொண்ட சூட்சும நிலையைக் கொண்டோருக்கு எந்த மண்டலத்திலும் தன் நிலையைச் செயலாக்கும் பக்குவம் உண்டு.

அத்தகைய வளர்ச்சி கொண்ட… ஜீவன் கொண்ட ஆத்மாக்களினால்தான்
1.ஒவ்வொரு மண்டலமுமே ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு
2.ஈர்ப்பு நிலையின் சக்தியினால் ஒவ்வொரு மண்டலமாக (புதிதாக) உருப் பெறுகின்றது.

சப்தரிஷிகளின் மண்டலம் ஏழு என்று உணர்த்துகின்றனர். இவ் ஏழு நட்சத்திர மண்டலம் மட்டும் சப்தரிஷியினால் உருக்கொண்டு செயல்பட்டு வாழ்கிறார்கள் என்பதல்ல பொருள்.

இந்த ஏழு சப்தரிஷி மண்டலம் என்பதின் பொருள்…
1.இந்தப் பூமியிலிருந்து இம் மனித ஆத்மா உயர் நிலை பெற்று
2.ஜெப நிலை கொண்ட ஆத்ம மண்டலங்கள்தான் அந்த ஏழு நட்சத்திர மண்டலங்களும்.

அனைத்து மண்டலங்களுமே ஆத்ம நிலை பெற்ற ஜீவன் கொண்டு வாழ்ந்து வழி வந்த ஆத்ம மண்டலங்கள்தான். இப்பூமி தோன்றிய நிலையும் இரண்டு ஒன்றுப்பட்ட ஆத்மாக்களின் அன்புக் கலவையினால் ஆண் பெண் என்ற சக்தி நிலையில் உருவானது தான்.

1.மற்ற சூரியக் குடும்பத்தில் இருந்து வீரிய ஜெபம் கொண்டு
2.ஒரே நிலையில் சூட்சுமம் பெற்று
3.இப்பூமியை இரண்டு ஆத்மாக்களுமே ஒன்றுபட்டு ஈர்த்து ஆவி நிலையாக ஆத்மாவுடன் இணைத்து
4.இரண்டு ஆத்மாவுமே ஆத்மாவுக்குகந்த சக்தியின் ஈர்ப்புத் தன்மையினால்
5.பல சக்திகளைத் தன்னுள் ஈர்த்தே சிறுகச் சிறுக வளர்த்துத்தான் உயிருடன்
6.உணர்வுடனே இப்பூமியை இன்றளவும் வளர்த்துக் கொண்டே தன் சக்தியின் செயலினால் சுற்றிக்கொண்டு
7.பல உயிரினங்களை வளர்த்துக் கொண்டே வாழ்கின்றது இந்தப் பூமி.

இப்பூமியில் ஆண் பெண் என்ற பிணைப்பு நிலையினால் மற்ற உயிராத்மாக்களின் உற்பத்தி நிலை ஏற்படுவதின் நிலையும் இப்பூமியின் நிலையும் ஒன்றுபட்டதுதான்.

இப்பூமி தோன்றி உயிரணுக்கள் உதித்துச் சில காலங்களிலேயே இனத்துடன் இனச் சேர்க்கையினால் இன வளர்ச்சி பெறும் நிலை வந்துவிட்டது.

உயிரணு உதித்தால் அந்த உயிரணுவிலிருந்து பல கோடி உயிரணுக்கள் வளர்ச்சி பெறுகின்றன. அதன் தொடர்ச்சியிலே எந்த உயிரணுக்களுமே அழிவதில்லை. உயிரணுவாய் உதித்த பிறகு அவற்றின் உடல் பிம்ப நிலைதான் மாறு கொள்கின்றது.

இந்நிலையில் வளர்ச்சி பெறும் உயிராத்மாவாக ஞானி சித்தன் ரிஷி சப்தரிஷியாக ஆகி சூட்சுமம் கொண்ட பிறகு
1.ஒவ்வொரு சப்தரிஷியின் நிலையிலும் தான் ஈர்த்து செயல் கொண்ட ஆசை நிலைக்கொப்ப
2.மற்ற மண்டலத்துடன் சேர்ந்தும் தனி மண்டலமாய் உருப்பெற்றும்
3.தான் வாழ்ந்து வழிவந்த மண்டலத்தை ஆண்டவனாய்க் காத்திடும் நிலையிலும்
4.தன் தன் சக்தி நிலைக்கொப்ப இவ்வுலகில் மட்டுமல்லாமல்
5.மற்ற மண்டலங்களிலும் பால்வெளி மண்டலத்திலும் சென்று வரும் நிலையிலும்
6.தான் பெற்ற சக்தியைச் செயலாக்குகின்றனர் சப்தரிஷிகளெல்லாம்.

ஆகவே… பூமியில் இன்று மனித ஆத்மாவாய் வளர்ச்சி கொண்ட நிலையில் நாம் சேமிக்கும் சொத்து நிலைதான் அப்பேரானந்த நிலை. ஆனால் வழியின் நிலையை அறிந்திடாமல் வாழ்ந்திடும் நிலைதான் இன்றுள்ள நிலை.

இன்றுள்ள மக்களின் எண்ண நிலையே “ஆராயும் நிலையையும்… தர்க்க நிலையையும்” வளர்த்துக் கொண்ட நிலையாக உள்ளது.

எந்த நிலையையும் ஆராய்ந்து… அறிவு நுட்பத்தின் வழித்தொடரின் ஞான வழியில் வந்திட்டால்… உண்மை நிலையின் வழித் தொடரை அறிந்திடலாம்.

1.ஆனால் இன்றுள்ள ஆராயும் நிலையோ சஞ்சலமுடன் செயல்படுவதினால்
2.மெய் உணர்வை அறிந்திட முடியாமல் உள்ளது.

அரசர்கள் உருவாக்கிய மந்திர தந்திரங்களில் உள்ள உண்மையின் நிலைகள்

அரசர்கள் உருவாக்கிய மந்திர தந்திரங்களில் உள்ள உண்மையின் நிலைகள்

 

ஒரு மனிதனுக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வினை எடுத்துப் பிரித்துத் தான் அன்றைய அரசர்கள் பல மந்திர தந்திர வேலைகளைச் செய்தார்கள்.

ஒவ்வொரு குணத்திற்கும் ஒவ்வொரு மந்திரம் என்று உண்டு. அதை மனிதனுக்குள் பதிவாக்கி… அதன் வழி வாழ்ந்து கடைசியில் அந்த மனிதன் இறந்த பின் அதற்கென்ற மந்திர ஒலியை அந்த ஆன்மாவைக் எழுப்பிக் கவர்ந்து கொள்வார்கள்.
1.பின் அதனை வைத்து… கருவின் உணர்வு கொண்டு
2.ஒரு மனிதனுக்குள் இதைச் செய்து வா… உனக்கு இப்படி இருக்கும்…
3.உன்னைப் பாதுகாக்கும்…! என்று சொல்வார்கள்.

இப்படி இன்னொரு ஆவியின் தன்மை கொண்டு மற்றவரை அடக்கலாம்… இதை அடக்கவும் செய்கின்றான். மற்ற நினைவுகள் வராதபடி சில செயல்களைச் செய்தாலும்
1.ஒரு மனிதனின் உணர்வை மந்திர ஒலி கொண்டு எடுத்துப் பிரித்துக் கொண்ட நிலைகள் சிறிது காலம் வேலை செய்யும்.
2.மீண்டும் பகைமை உணர்வினை உருவாக்கி… நோயை உருவாக்கி… அந்த உடலினை (புகுந்த) வீழ்த்திவிடும்.

ஆதியில் உருவாக்கிய உடலில் உருவான உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்ததனால்… உடலைக் கருக்கி அந்த உணர்வின் தன்மை தனக்குள் கவர்ந்து கொண்டதும்… மற்ற கலவை கொண்டு மற்ற கருவுக்குள் இது செலுத்தப்பட்டு
1.அவன் பிரித்தெடுத்துச் செயல்படும் சில நிலைகள் தான்
2.இன்று மந்திரம் என்று சொல்லி வசியப்படுத்துவதும்…
3.ஒன்றை அடக்குவது என்றும் மனிதன் இத்தகைய நிலைகளில் செயல்பட்டான்.

இவர்கள் மற்றதைக் கொன்றது போல் இந்த உணர்வின் தன்மை இது இணைந்தாலும்… மீண்டும் பிரிந்திடும் நிலைகள் கொண்டு… தன் உடலிலே அந்த நோயின் தன்மை கொண்டு இது பிரித்துவிடும்.
1.ஆக ஒன்று சேர்ந்தனர்… இணைந்தனர்
2.நோயாக ஆனது… பிரிந்து விட்டது என்று.

ஆனால் மந்திரத்தின் தன்மையினால் இறந்த பின் அதே மந்திரவாதி மீண்டும் எண்ணினால்… பிரிந்து வெளி வந்த ஆன்மாவை அவன் தனக்குள் கைவல்யப்படுத்திக் கொள்வான்.

இதை வைத்துப் பல வேலைகளையும் பல அற்புதங்களையும் அவன் செய்வான். “ஆண்டவன் ஆட்சி…” என்ற நிலைகளிலும் அதைக் கொண்டு வருவார்கள்.

இதைப் போன்ற நிலைகள் என்ன…? என்று அறியாதபடி நாம் அத்தகைய மந்திரவாதியிடம் சென்றால் நம் ஆன்மாவும் கைவல்யமாகும் நிலைக்கே வந்துவிடுகின்றது.

அப்படிச் சேர்த்திடும் உணர்வு கொண்டு மனிதர்களுக்குள் செயல்படுத்தினான் என்றால்… இது ஒவ்வொன்றும் நோயின் தன்மையாக உருவாக்கி இதைப் பிரித்துவிடும்.

பிரிந்து விட்டாலும் மீண்டும் மந்திரவாதி கையில் சிக்கி இதைக் கொண்டு இது இணை சேர்த்தது… இணை சேர்த்தது… இணை சேர்த்தது… இணை சேர்த்தது… என்ற நிலைகளில் சில நிலைகள் உருவாக்கப்படும் போது அதர்வண வேதத்தில்… (அரசர்கள் பிரித்துக் கொண்டது)
1.ஒன்றை ஒன்று அதிகப்படுத்தி அதனின் உணர்வின் தன்மை அடிமையாக்கி
2.அதன் உணர்வின் தன்மை தனக்குள் எப்படிச் செயலாக்குகிறது என்றும்
3.ஒன்றை அதிகப்படுத்தி அதை வசியம் என்றும்… அதனைக் கொண்டு கவர்ந்து இழுப்பதற்கும்
4.இறந்த பின் மீண்டும் அதே மந்திரத்தைச் சொன்னால் கைவல்யம் என்றும்
5.தன்னுடைய இயக்கத்திற்காக வரும் நிலையாக அவர்கள் செயல்படுத்தும் நிலைகள் தான் அது எல்லாம்.

மந்திரங்களும் மாயங்களும் எடுத்து அதர்வண வேதத்தின் தன்மை கொண்டு தன் எண்ணத்தை நிலைப்படுத்தி அரசு என்ற நிலைகள் கொண்டு அந்த அரசர்களாள் உருவாக்கப்பட்ட மதத்தின் அடிப்படையிலே அந்த இயக்க நிலைகளில் தான் நாம் இன்று வாழ்ந்து கொண்டுள்ளோம்.

ஆனால் இதை எல்லாம் வென்றவன்… புவியின் ஈர்ப்பைக் கடந்து சென்றவன் துருவ மகரிஷி. அவன் துருவப் பகுதியை உற்று நோக்கி அதன் ஆற்றல் கொண்டு
1.நஞ்சினை வென்றிடும் உணர்வை இந்தப் பூமியில் வாழும் காலத்தில் பெற்றவன்.
2.புவிக்குள் வரும் நஞ்சினை வென்று உணர்வை ஒளியாக உருமாற்றிக் கொண்டவன்.
3.இப்படி உருமாற்றிய அவனின் நிலைகளிலிருந்து நாமும் அவன் பெற்ற ஆற்றல்களைப் பெற வேண்டும்.

அதற்குத் தான் இதை எல்லாம் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு). புரியவில்லை என்று விட்டுவிடாதீர்கள். பதிவு செய்தால் அதனின் ஞானத் தொடர்களை நீங்கள் நிச்சயம் பெற முடியும்.

மகரிஷிகளின் துணை என்றும் உறுதுணையாக இருக்கும் – ஈஸ்வரபட்டர்

மகரிஷிகளின் துணை என்றும் உறுதுணையாக இருக்கும் – ஈஸ்வரபட்டர்

 

“எண்ண நிலைப்படிதான் அனைத்து நிலைகளும் இயங்குகிறது…!” என்று உணர்த்தி வந்தேன். இந்நிலையின் சூட்சும நிலையை உணர்த்துகிறேன்.

முன் பாட நிலைப்படி… மகிழ்ச்சியாக உள்ள இடத்தில் அனைவரின் எண்ண நிலையும் மகிழ்ச்சி கொண்டதாகவும்… துக்கம் அனுஷ்டிக்கும் இடத்தில் அந்த நிலைக்கொப்ப அனைவரின் நிலையிலுமே துக்க நிலை சாடும் என்றுணர்த்தினேன்.

இப்படி இவ்வெண்ண நிலையின் சுவாச நிலை கொண்டுதான் இன்றைய “கைரேகை ஜோதிட நிலையும்… மனோவசிய நிலையும்” உள்ளன.

அந்நிலையிலுள்ளோர் (மனோவசியம் செய்பவர்) தன் எதிரில் அமர்ந்துள்ளவரின் எண்ணத்துடன் தன் எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தி அவரது எண்ணத்துடன் ஈர்க்கும் நிலையில் மனோவசியம் செய்யப்படுவோரின் அனைத்து நிலைகளுமே செய்யப்படுபவருக்கு இவரின் எண்ணக் கலவையுடன் வந்து மோதி அனைத்து நிலைகளும் அறிகின்றனர். இந்நிலை அறிபவர்கள் மற்ற ஆவியின் தொடர்பை வைத்து ஈர்க்கும் சக்தியைச் செயல்படுத்துகின்றனர்.

ஆனால் நம்மில் உயர்ந்த ரிஷிகளின் நிலையும் எண்ண சக்தியின் சக்தி நிலைத்தொடர் கொண்டுதான் அவர்கள் சூட்சும நிலைக்குச் சென்றதின் நிலையும்.

இவ்வுலகினில் பிறந்திட்ட அனைவருக்குமே ஒவ்வொரு நிலையான எண்ணக் கலவையின் வாழ்க்கை நிலையுண்டு.

அவ்வழியில் நல்லுணர்வு கொண்ட சக்தி நிலையின் எண்ணக் கலவையுடன்… வாழ்க்கையில் வழி வந்தவர்களின் நிலையில்தான் இவ்வுலகம் தோன்றிய நாள் கொண்டே…
1.பல சக்தி நிலையை இவ்வெண்ணத்துடனே ஈர்த்து இன்று ஆண்டவனாய்ச் செயல்படுகின்றனர்.
2.அவர்கள் மனித ஆத்மாவாய் நம்மைப் போன்ற நிலையில் வந்தவர்கள் தான்…!

எண்ணமுடன் தீய சக்தியை வளரவிட்டவர்களின் நிலை எல்லாம் எந்த நிலைக்குச் சென்றிட்டார்கள் என்று முன் பாட நிலையிலேயே உணர்த்தியுள்ளேன்.

நல்லுணர்வின் வழி வந்தவர்கள்…
1.தன் வாழ்க்கையில் நடந்திடும் கஷ்ட நஷ்டங்களை எல்லாம் ஜெயித்த நிலை கொண்டு வந்தவர்கள் தான்
2.இவ் உலகில் தோன்றிய மகான்கள் எல்லாரும்.

இதன் வழி வந்தவர்களின் உடல்களைத்தான் இவர்களின் நிலையைக் காட்டிலும் சக்தி கொண்ட ரிஷிகள் தன் உடலாக ஈர்த்துச் செயல்படுகின்றனர்.

ஆதிசங்கரர் போன்றோரும் மற்றும் அருணகிரிநாதர் முகமது நபி புத்தர் இயேசு பிரான் ஐயப்பர் கோலமாமகரிஷி இக்கலியில் வந்திட்ட இராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகாநந்தரும் இன்னும் பல ரிஷிகளும் இவ்வழியில் வந்தவர்கள் தாம்…!

நம் போகரே பல உடல்களைத் தன்னுடலாகச் செயல் கொண்டு செயல்படுத்தி வந்தார். இவ்வுலகினிலே ஆறுமுகனாய் இவர்கள் புராணக் கதையில் சொல்லிய நிலையில்லாமல் ஆறு உடல்களைத் தனதாகச் செயல்படுத்தி வந்தார்.

1.பிறவி எடுத்துப் பிறந்து வளர்ந்து வழிபடுத்தவில்லை… தன் சக்தி நிலையை நம் போகர்
2.பல ஆத்மாக்களை ரிஷியின் நிலைக்குச் சென்றிடும் பக்குவ நிலை ஏற்படுத்தித் தந்தார் நம் போகர்
3.இன்று அனைவருக்கும் முருகனாய் ஜோதி அருள் அளித்திட ஆண்டவனாய்ச் செயல் கொண்டுள்ளார்.

இவ்வெண்ண நிலையின் தொடர் நிலையை வைத்துத்தான் நம் ரிஷிகளின் சக்தி நிலையெல்லாம் செயல் கொண்டு நடக்கின்றது. போகரைப் போன்றே இந்நிலையில் பல சித்தர்கள் இவ்வுலகெங்கும் செயல் நிலைப்படுத்தி நல் உணர்வுகளை இன்றும் செயலாக்கி வருகின்றனர்.

ஆனால் இக்கலியில் பக்தி நிலையும் தன் உணர்வும் குறைந்ததினால் பல நிலைகள் செயல்படாமல் செயற்கைக்கே அடிமைப்பட்டுச் சென்று விட்டனர்.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால்…
1.நம் எண்ண சக்தியின் தொடர் நிலையை ஈர்த்து
2.நல்லுணர்வு கொண்ட எந்த ரிஷியின் சக்தியின் தொடரையும் நாம் ஈர்த்துச் செயல் கொண்டிட முடிந்திடும்
3.நாமும் அவர்களின் நிலையை அடைய முடியும் என்பதற்குத் தான்…!

நம்மை அறியாமல் தான் கெட்டது வருகிறது… அதே போல் நன்மையைக் கொண்டு வந்து அதை என்றுமே நிலைத்திருக்கச் செய்ய முடியும்

நம்மை அறியாமல் தான் கெட்டது வருகிறது… அதே போல் நன்மையைக் கொண்டு வந்து அதை என்றுமே நிலைத்திருக்கச் செய்ய முடியும்

 

நண்பருக்குள் ஒருவருக்கொருவர் பகைமையாகித் “துரோகம் செய்தான் பாவி…” என்று எண்ணினால் புரையோடுகிறது. நண்பருக்குள் “உதவி செய்தார்…” என்று ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக எண்ணினால் விக்கலாகிறது.

பற்று பாசத்துடன் நம் குழந்தையை வளர்க்கின்றோம். இருந்தாலும் அந்தப் பாச உணர்வுகளினாலும் சில தீமைகள் சந்தர்ப்பத்தில் வந்து சேர்கிறது.

இன்னொரு நண்பரிடம் பழகுகின்றோம். அவருடைய குழந்தைக்கு எதிர்பார்க்காதபடி… “விபத்தானது…” என்று கேள்விப்படுகின்றோம்.. என்ன… ஏது…? என்று விசாரிக்கின்றோம்.

அவர் அதைச் சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் அதே நினைவு கொண்டு வெளி ஊரில் இருக்கும் நம் குழந்தையை எண்ணத் தொடங்குகிறோம்.
1.நண்பர் வாயிலாகக் கேட்ட இதே உணர்ச்சிகள் இயக்கப்பட்டு
2.தன் குழந்தையின் மீது உள்ள பாசத்தால் அங்கே நடந்த அதே வேதனையான எண்ணங்கள் வந்தால்
3.இந்த உணர்வு அங்கே நம் குழந்தையை இயக்கி
4.இயந்திரத்திலேயோ வாகனத்திலேயோ அவன் செயல்படும் போது அவன் சிந்தனையைக் குறையச் செய்து
5.எதிர்பாராதபடி விபத்துக்களில் சிக்க வைத்துவிடும்… நடந்து சென்றால் கூட பள்ளம் மேடு தெரியாதபடி கீழே விழுகச் செய்யும்.

ஐயோ… நான் நினைத்தேனே இப்படி நடந்துவிட்டதே…! என்று நாம் சொல்லத் தொடங்குவோம். காரணம்…
1.மற்றோர் சொல்லும் உணர்வைக் கேட்கப்படும் போது
2.ஒருவருக்கொருவர் தொடர் கொண்ட நிலையில் இப்படி எல்லாம் இயக்கிவிடுகின்றது.

ஆகவே நட்பின் தன்மை வரும் போது
1.நல்லதைப் பிரித்திடும் நிலைகளை… அந்தத் தீமையை மாற்றி
2.தீமைகளைப் பிரித்து நல்லதைச் சேர்த்திடும் தன்மை நமக்குள் வர வேண்டும்.

அத்தகைய அருள் ஞான சக்தி பெறுவதற்குத் தான் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் மெய் ஞானிகள் உணர்வை ஆழமாகப் பதிவு செய்கிறேன். ஒவ்வொரு நிமிடத்திலும் இந்த ஞானிகளின் உணர்வலைகளை உங்களுக்குக் கிடைக்கும்படி செய்கின்றேன் (ஞானகுரு).

அதை நீங்கள் பெற்று அந்த உணர்வின் துணை கொண்டு
1.நீங்களே தீமைகளிலிருந்து விடுபடும் சக்திகளைப் பெற முடியும்.
2.நீங்கள் எண்ணியதை உங்கள் உயிர் உருவாக்கி அந்த ஆற்றலாகப் பெறச் செய்யும்.

அதே போன்று குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் பகைமை இருந்தால் உங்கள் நினைவாற்றல் கொண்டு கணவனைத் தன்னுடன் இணையச் செய்ய முடியும். பகைமை கொண்ட உணர்வுகள் அவரை ஆட்டிப் படைக்கும் நிலைகளிலிருந்து மீட்டிட முடியும்.

மெய் உணர்வின் வலிமை கொண்டால் அறியாத இருள் சூழந்த நிலைகளை அகற்றுகிறது. அருள் உணர்வைச் சேர்க்கச் சேர்க்க சிந்திக்கும் செயலும் வருகின்றது… இணைந்து வாழும் நிலைகள் வருகின்றது.

இது எல்லாம் இந்த இயற்கையின் நிலைகள்.

இன்னொன்று… தாய் கருவில் சிசுவாக இருக்கப்படும் போது பிறர் துன்பப்படுவதையோ அல்லது விபத்தான உணர்வுகளையோ தாய் உற்றுக் கேட்டு… பாசத்தின் உணர்வு கொண்டு எண்ணி… அதனைத் தனக்குள் பதிவாக்கியிருந்தால்… இந்த உணர்வுகள் தாய் கருவிலேயே குழந்தைக்குள் உருவாகிவிடுகின்றது.

குழந்தை பிறந்து வளர்ந்த பின்..
1.இந்தப் பூர்வ புண்ணியத்தின் நிலைகள் கொண்டு
2.அதே பருவம் வரப்படும் போது விபத்தோ அல்லது நோயோ
3.தாய் எதைப் பதிவாக்கியதோ அந்த நிலை செயலாகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீட்டிட வேண்டும் என்றால் அது பூர்வ புண்ணியமாக இருந்தாலும் அந்த உணர்ச்சிகள் இயக்குவதை மெய் ஞானிகள் காட்டிய வழிகளில் செயல்படுத்தி அந்தக் குழந்தையை அருள் ஞானத்தின் வழியில் மாற்றிக் கொண்டு வர முடியும்.

நல்லவர்களுக்காகவே உலகம் இன்றளவும் நிலைத்திருக்கின்றது – ஈஸ்வரபட்டர்

நல்லவர்களுக்காகவே உலகம் இன்றளவும் நிலைத்திருக்கின்றது – ஈஸ்வரபட்டர்

 

இன்றும் இக்கலியில் ஆத்மீக நெறியும் நல்லொழுக்கம் அன்பு பாசம் பக்தி தர்மம் நியாயம் சமத்துவம் இப்படிப்பட்ட நல்லுணர்வுகளும் சத்தியத்துடன் வளர்ந்து கொண்டுதான் உள்ளன.
1.இந்த நிலையில் வாழும் ஆத்மாக்களின் நல்லுணர்விற்காகவே
2.இப்பூமியின் நிலை இன்றளவும் நிலைத்துச் செயல்படுகிறது.

எண்ணத்தில் நல் சக்தியும் தீய சக்தியும் உள்ள நிலையில்… நல்லுணர்வைக் காட்டிலும் தீய உணர்வின் வழி நிலைதான் பெருகும் நிலையில் உள்ளது.

இன்று வாழ்ந்திடும் மனித ஆத்மாக்கள் மட்டுமல்ல தீய உணர்வுடன் வாழ்வது. இவ்வுடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்களிலும் தீய சக்தி நிறைந்த எண்ண நிலைகள்தான் நல்லுணர்வைக் காட்டிலும் பெருகிய நிலையில் உள்ளன.

ஆவி உலகிலும் நல்லுணர்வு கொண்ட ஆத்மாக்களின் நிலையுண்டு. வாழும் மனித ஆத்மாக்களிலும் இந்நல்லுணர்வின் நிலை உள்ளதினால்தான் நம் ரிஷிகளின் சக்தி நிலை இன்றளவும் இப்பூமியின் நிலையைக் காத்தருளும் நிலையில் செயல் கொண்டு நடக்கின்றது.

இன்றைய விஞ்ஞானத்தினால் செய்து வைத்துள்ள அணு குண்டுகளும் விஷ மருந்துகளும் நிறைந்துள்ள இந்த நிலையிலும்
1.ஒரு நொடியில் அனைத்துமே மாற்றம் கொள்ளும் விஷ சக்தியின் தாக்குதலிலிருந்து
2.நல்லுணர்வு உடையோர் வாழ்வதினால்… இவ்வுலக நிலையே நம் ரிஷிகளினால் காக்கப் பெற்று வருகிறது.

நல்லுணர்வையே உலகெங்கும் பரப்பிடும் நிலைக்காகப் பக்தி நிலையை வளரவிட்டதின் நிலையே… இன்று பக்தியையே தன் பேராசைக்கு உகந்த சக்தியாக நாடும் நிலையாக இன்றைய எண்ண நிலை உள்ளது.

பூமிக்காகவும் இப்பூமியில் வாழ்ந்திடும் உயிராத்மாக்களுக்காகவும் தன் சக்தி நிலையைச் செயல்படுத்திய நம் ரிஷிகளின் சக்தி நிலை செயல்படாமல்… மீட்டுச் செல்லும் நிலைக்கு இன்று வந்துள்ளது.

“மீட்டுச் செல்லும் நிலை…” என்பது…
1.இம் மாறப்போகும் கலியில் வாழ்ந்திடும் மனித ஆத்மாக்கள் இக்கலியுடனே ஈன நிலை பெற்று…
2.கல்கியின் ஆரம்ப நிலை உயிரினமாகிப் பல நிலைகளை எய்தி…
3.பல கோடி ஆண்டுகள் இவ்வெண்ண சக்தியுடனே அல்லல் கொண்டிடாமல் தடுக்கும் நிலை தான்.

இக்கலியிலேயே மனித ஆத்மாவை மனிதனாய் ஞானியாய் சித்த அருள் பெற்று சூட்சும நிலைக்குச் சென்றிடச் செயல் கொண்டிடும் நிலைதான் இன்றுள்ள நம் ரிஷிகளின் செயல் நிலை.

இந்நிலையை ஒவ்வொருவரும் உணர்ந்து… மாறப் போகும் இக்கலியின் நிலையை எண்ணத்தில் கொண்டு இவ்வெண்ண சக்தியினால் செயல் கொண்டே வாழ்ந்திடுங்கள்.

விஷம் இல்லை என்றால் எதையுமே இயக்க முடியாது…!

விஷம் இல்லை என்றால் எதையுமே இயக்க முடியாது…!

 

எத்தனையோ கோடி விதமான விஷ உணர்வுகள் உண்டு. ஒவ்வொரு குணங்களுக்கும் ஒவ்வொரு நிலை உண்டு.

உதாரணமாக ஒரு நல்ல மருந்து இருக்கிறது… சுக்கு மிளகு திப்பிலி என்று வைத்துக் கொள்ளுங்கள்.
1.அதற்கு வீரிய சக்தி ஊட்ட வேண்டும் என்றால்
2.ஒரு விஷம் கலந்த செடியின் சத்தை இதனுடன் இணைக்க வேண்டும்.

அப்போது தான் சுக்கு திப்பிலியின் உணர்வுகளுக்குள் இந்த விஷத்தின் தன்மை ஊடுருவப்பட்டு அதற்குண்டான வீரிய உணர்வுகளை அது உருவாக்கும்.

ஆக விஷத் தாவரத்தை அதனுடன் இணைத்தால் தான் அந்த மருந்திற்கே சக்தி உண்டு. இதன் உணர்வு இப்படிச் செயல்படுவது போன்று தான் வைத்தியரீதியிலும் இதைச் செய்கின்றோம்.

பொதுவாக… இயற்கையின் அணுவின் தன்மையும் இதே போன்று தான் செயல்படுத்துகின்றது.
1.சூரியனிலிருந்து வெளிப்படுவது வெப்பம் காந்தம் என்று இருந்தாலும்
2.அதிலிருந்து பிரிந்து சென்ற விஷம் இதனுடன் மீண்டும் இணைந்தால் விஷம் இயக்கச் சக்தியாகவும்
3.அதனுடன் எந்தப் பொருள் இணைகின்றதோ அந்தச் சத்தின் மணத்தை வெளிப்படுத்தும் சக்தியாகவும் பெறுகின்றது.
4.இந்த விஷம் இல்லை என்றால் அந்த மணத்தை நாம் அறியும் தன்மை இழந்துவிடுகின்றோம் (நம்மால் அறிய முடியாது).

சில செடிகளில் விஷத்தின் தன்மை குறைந்திருந்தால் அந்த மணத்தை அறியும் தன்மையும் குறைவாகத் தான் இருக்கும்.

நல்ல மலர் இருப்பினும் அதில் உள்ள விஷத்தின் அளவுகோல் எதுவோ அதற்குத்தக்க அந்த மணத்தை விரிவடையச் செய்கிறது. விஷம் குறைந்தால் அந்த மலருக்கு மணத்தின் தன்மை வெளிப்படுத்தும் நிலைகளும் குறையும்.

ஆகவே விஷம் இல்லை என்றால் எதையுமே இயக்க முடியாது…!

அதற்குத் தான் பிரகலாதன் கதையைக் காட்டி இரண்யன் எனக்கு எதிலுமே இறப்பில்லை…! என்று சொல்வதாக… காற்றிலும் சரி… மழையிலும் சரி… நீரிலும் சரி… நெருப்பிலும் சரி… எனக்கு இறப்பு இல்லை என்று. விஷ்ணுவிடம் வரம் கேட்டுக் கொண்டான் என்று காட்டுகின்றனர்.

ஒரு பொருளின் தன்மையை நாம் நெருப்பில் இட்டுக் கொளுத்தினால் அல்லது வேக வைத்தால் அதில் உள்ள விஷம் பிரிந்து சென்றுவிடுகின்றது. ஆனால் இறப்பதில்லை.

இதைப் போல்
1.நம் உயிரும் நெருப்பில் பட்டால் இறப்பதில்லை
2.உயிருக்குள் இருக்கும் விஷமே துடிப்பின் இயக்கத்திற்குக் காரணமாகிறது
3.உயிர் இயங்க இந்த விஷமே மூலமாகின்றது.

ஒரு செடியில் இருக்கும் விஷத்தின் தன்மையே அதைப் பாதுகாக்கும் நிலையாக மற்ற செடியின் மணத்தைத் தனக்குள் அணுகாது இது வீரிய சக்தி கொண்டு தள்ளிவிடும்… அல்லது நகர்ந்து ஓடும்.

ஆனால் அதே சமயத்தில் இன்னொரு வீரிய சத்தின் தன்மை இதனுடன் மோதி விட்டால் அது சுழலும். இவ்வாறு
1.சந்தர்ப்பத்தால் இணைவதும்
2.நகர்வதும்
3.இணைவதும்
4.உருமாறுவதும் என்ற நிலையில்
5.காற்று மண்டலங்களில் தாவர இனங்கள் மாறுபடும் நிலைகள் வருகின்றது.

தாவர இனங்கள் எப்படி மாற்றம் அடைகின்றதோ அதைப் போன்று தான் மனிதர்களான நமக்குள்ளும் எதிர்மறையான நிலைகள் வரும் போது நம் எண்ணங்களும் உணர்வுகளும் அதற்குத் தக்க இயக்கங்களும் மாறுகிறது.

உடலில் அணுக்களும் மாற்றமாகிறது. அதனால் உடலில் சில உபத்திரவங்களும் வருகிறது.

ஆனால் நஞ்சை வென்ற அகஸ்தியன்… துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் நாமும் அவனைப் போன்று விஷத்தை அடக்கி ஒளியாக மாற்றலாம்… நாமும் அழியா நிலையான ஒளிச் சரீரம் பெறலாம்.

அத்தகைய தகுதி ஏற்படுத்தும் நிலைகளுக்குத் தான் இதைப் பதிவு செய்கிறோம்.