
விஷம் இல்லை என்றால் எதையுமே இயக்க முடியாது…!
எத்தனையோ கோடி விதமான விஷ உணர்வுகள் உண்டு. ஒவ்வொரு குணங்களுக்கும் ஒவ்வொரு நிலை உண்டு.
உதாரணமாக ஒரு நல்ல மருந்து இருக்கிறது… சுக்கு மிளகு திப்பிலி என்று வைத்துக் கொள்ளுங்கள்.
1.அதற்கு வீரிய சக்தி ஊட்ட வேண்டும் என்றால்
2.ஒரு விஷம் கலந்த செடியின் சத்தை இதனுடன் இணைக்க வேண்டும்.
அப்போது தான் சுக்கு திப்பிலியின் உணர்வுகளுக்குள் இந்த விஷத்தின் தன்மை ஊடுருவப்பட்டு அதற்குண்டான வீரிய உணர்வுகளை அது உருவாக்கும்.
ஆக விஷத் தாவரத்தை அதனுடன் இணைத்தால் தான் அந்த மருந்திற்கே சக்தி உண்டு. இதன் உணர்வு இப்படிச் செயல்படுவது போன்று தான் வைத்தியரீதியிலும் இதைச் செய்கின்றோம்.
பொதுவாக… இயற்கையின் அணுவின் தன்மையும் இதே போன்று தான் செயல்படுத்துகின்றது.
1.சூரியனிலிருந்து வெளிப்படுவது வெப்பம் காந்தம் என்று இருந்தாலும்
2.அதிலிருந்து பிரிந்து சென்ற விஷம் இதனுடன் மீண்டும் இணைந்தால் விஷம் இயக்கச் சக்தியாகவும்
3.அதனுடன் எந்தப் பொருள் இணைகின்றதோ அந்தச் சத்தின் மணத்தை வெளிப்படுத்தும் சக்தியாகவும் பெறுகின்றது.
4.இந்த விஷம் இல்லை என்றால் அந்த மணத்தை நாம் அறியும் தன்மை இழந்துவிடுகின்றோம் (நம்மால் அறிய முடியாது).
சில செடிகளில் விஷத்தின் தன்மை குறைந்திருந்தால் அந்த மணத்தை அறியும் தன்மையும் குறைவாகத் தான் இருக்கும்.
நல்ல மலர் இருப்பினும் அதில் உள்ள விஷத்தின் அளவுகோல் எதுவோ அதற்குத்தக்க அந்த மணத்தை விரிவடையச் செய்கிறது. விஷம் குறைந்தால் அந்த மலருக்கு மணத்தின் தன்மை வெளிப்படுத்தும் நிலைகளும் குறையும்.
ஆகவே விஷம் இல்லை என்றால் எதையுமே இயக்க முடியாது…!
அதற்குத் தான் பிரகலாதன் கதையைக் காட்டி இரண்யன் எனக்கு எதிலுமே இறப்பில்லை…! என்று சொல்வதாக… காற்றிலும் சரி… மழையிலும் சரி… நீரிலும் சரி… நெருப்பிலும் சரி… எனக்கு இறப்பு இல்லை என்று. விஷ்ணுவிடம் வரம் கேட்டுக் கொண்டான் என்று காட்டுகின்றனர்.
ஒரு பொருளின் தன்மையை நாம் நெருப்பில் இட்டுக் கொளுத்தினால் அல்லது வேக வைத்தால் அதில் உள்ள விஷம் பிரிந்து சென்றுவிடுகின்றது. ஆனால் இறப்பதில்லை.
இதைப் போல்
1.நம் உயிரும் நெருப்பில் பட்டால் இறப்பதில்லை
2.உயிருக்குள் இருக்கும் விஷமே துடிப்பின் இயக்கத்திற்குக் காரணமாகிறது
3.உயிர் இயங்க இந்த விஷமே மூலமாகின்றது.
ஒரு செடியில் இருக்கும் விஷத்தின் தன்மையே அதைப் பாதுகாக்கும் நிலையாக மற்ற செடியின் மணத்தைத் தனக்குள் அணுகாது இது வீரிய சக்தி கொண்டு தள்ளிவிடும்… அல்லது நகர்ந்து ஓடும்.
ஆனால் அதே சமயத்தில் இன்னொரு வீரிய சத்தின் தன்மை இதனுடன் மோதி விட்டால் அது சுழலும். இவ்வாறு
1.சந்தர்ப்பத்தால் இணைவதும்
2.நகர்வதும்
3.இணைவதும்
4.உருமாறுவதும் என்ற நிலையில்
5.காற்று மண்டலங்களில் தாவர இனங்கள் மாறுபடும் நிலைகள் வருகின்றது.
தாவர இனங்கள் எப்படி மாற்றம் அடைகின்றதோ அதைப் போன்று தான் மனிதர்களான நமக்குள்ளும் எதிர்மறையான நிலைகள் வரும் போது நம் எண்ணங்களும் உணர்வுகளும் அதற்குத் தக்க இயக்கங்களும் மாறுகிறது.
உடலில் அணுக்களும் மாற்றமாகிறது. அதனால் உடலில் சில உபத்திரவங்களும் வருகிறது.
ஆனால் நஞ்சை வென்ற அகஸ்தியன்… துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் நாமும் அவனைப் போன்று விஷத்தை அடக்கி ஒளியாக மாற்றலாம்… நாமும் அழியா நிலையான ஒளிச் சரீரம் பெறலாம்.
அத்தகைய தகுதி ஏற்படுத்தும் நிலைகளுக்குத் தான் இதைப் பதிவு செய்கிறோம்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.