
“அவரவர்கள் வீட்டில்…” குடும்பமாக அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்
வீட்டில் உள்ள தரை சுவர் கல் மண் அனைத்திலும் காந்தப்புலன் உண்டு. நாம் பேசுவது அனைத்துமே அதிலே பதிவாகின்றது.
ஒரு வீட்டிலிருப்போர் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்… ஒருவரை ஒருவர் கொடூரமான நிலையில் தாக்கிக் கொள்கின்றார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
அவர்கள் அந்த வீட்டைக் காலி செய்த பின் அந்த வீட்டிற்குப் புதிதாக குடி புகுந்தார்கள் என்றால்
1.இந்த உணர்வுகளை இழுக்கப்பட்டு இவர்களும் சண்டை போட ஆரம்பிப்பார்கள்.
2.மோசமான உணர்வின் செயல்கள் அந்த வீட்டிலே பதிவாகி இருந்தால்
3.புதிதாக வந்தவர்களையும் அந்த உணர்வுகள் தாக்கி அவர்களையும் சண்டை போட வைக்கும்.
4.அவர்களை அங்கே குடி இருக்க விடாது… ஒற்றுமையில்லாது சண்டையிடச் செய்து வெளியேற்றிவிடும்.
காரணம்… அதில் உள்ள மேக்னெட் இழுத்துக் கவர்ந்து அவ்வாறு இயக்கச் சக்தியாகக் கொண்டு வருகின்றது. அதை மாற்ற வேண்டும் அல்லவா…! என்ன செய்ய வேண்டும்…?
1.உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய ஒவ்வொரு அணுக்களுக்கும்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஈர்க்கப் பழக்க வேண்டும்.
எனக்கு குருநாதர் வானியல் புவியியல் தாவரயியல் அகண்ட அண்டத்தின் உண்மைகளை உபதேசத்தின் மூலமாக உணர்த்தினார். அதே போல் தான் உங்களுக்கும் உபதேசிக்கின்றேன்.
குருநாதர் கொடுத்ததை ஈர்க்கும் சக்தியாக அந்த உணர்ச்சிகளை உங்களுக்குள் தூண்டச் செய்து… தியானிக்கும் போது உங்கள் உடலில் உள்ள அணுக்கள் அதைப் பெறக்கூடிய தகுதியைக் கொடுக்கின்றோம்.
அந்தத் தகுதியை ஏற்படுத்தி
1.அதன் வழி கொண்டு உயர்ந்த உணர்வுகள் உங்கள் வீட்டில் பரவப்படும் பொழுது
2.உயர்ந்த சக்திகள் தரைகளிலும் சுவர்களிலும் பதிவாகிறது.
அத்தகைய அருள் உணர்வுகளை வீட்டிலே ஆழமாகப் பதிவு செய்யப்படும் பொழுது சிந்திக்கும் ஆற்றலும் தன்னை அறிதலும் பகைமையிலிருந்து விடுபடச் செய்யவும் பகைமையற்ற உணர்வைச் சேர்த்துக் கொள்ளவும் இது உதவி செய்யும்.
ஏனென்றால் இது மிக மிகச் சக்தி வாய்ந்த நிலைகள். அந்த அருள் உணர்வை வீட்டில் நாம் பரவச் செய்ய வேண்டும்.
உங்கள் வீட்டிலே தியானிக்கும் போது அந்த இடங்களில் பதிவாகிறது.
1.அதே சமயத்தில் அந்த அலைகள் படர்கின்றது பதிவாக்கும் பொழுது அந்த உணர்வு இழுக்கும்… “நல்ல நறுமணத்தை உண்டாக்கும்…”
2.மகரிஷிகள் கொடுத்த வானஇயல் புவியியல் தத்துவங்களை வீட்டிலே பதிவு செய்ய வேண்டும்.
உலக இருளை நீக்க நம் உணர்வின் தன்மையைத் தெளிவாக்கும் அந்த உணர்வின் அறிவை நாம் பெறுவதற்குத் தான் நாம் அனைவரும் அவரவர்கள் வீட்டிலே குடும்ப தியானத்தை அவசியம் அமைக்க வேண்டும். கூட்டமைப்பாக நாம் அந்த மூச்சலைகளைப் பதிவு செய்தல் வேண்டும்.
உதாரணமாக எத்தனையோ கோடி ஆண்டுகளுக்கு முன் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் மடிந்த டைனோசார் மண்ணுடன் மண்ணாகிக் கல்லாகி விட்டது.
அதிலிருந்து வெளிப்படும் உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது. விஞ்ஞானிகள் அதை எலெக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற உணர்வின் அதிர்வுகளைக் கொண்டு இன்ன இடத்திலே இப்படித்தான் வாழ்ந்தது என்று கண்டுபிடிக்கின்றார்கள்.
அதில் உள்ள செல்களை எடுத்து அதே டைனோசாரைப் போன்று ஜீவ அணுக்களை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானி சொல்கின்றான்.
இதே போன்றுதான் எத்தனையோ லட்சம் ஆண்டுகளுக்கு முன்
1.அன்று வாழ்ந்த “அகஸ்தியன் வெளியிட்ட மூச்சலைகள்… உணர்வலைகள்… நம் பூமியிலே உண்டு…”
2.அதன் தொடர் கொண்டு வளர்ச்சி அடைந்த துருவ நட்சத்திரம் உண்டு.
3.அதை வரிசைப்படுத்தி எடுத்து இந்த உணர்வை உங்களுக்குள் இப்பொழுது பதிவாக்கப்படும் பொழுது “இந்த நினைவு உங்களைக் காக்கும்…”
இந்த அருளை ஒவ்வொரு நிமிடமும் உங்கள் உடலில் உள்ள ஜீவணுக்களில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை வளர்க்கச் செய்து வாழ்க்கையில் அறியாது வரும் இருளை நீக்கித் தெளிந்து தெளிவான வாழ்ந்திட உதவும்.
இதைக் கேட்போர் அவரவர்கள் வீட்டிலே இந்த உயர்ந்த சக்திகளைப் பதிவு செய்தல் வேண்டும்.
வீட்டில் உள்ள அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து மலரைப் போன்ற மணம் பெற்று மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும். இந்த வீட்டிற்கு வரும் அனைவரும் அவர்கள் வாழ்க்கையில் தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கை வாழ்ந்திடும் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் தியானிப்போம்… தவமிருப்போம்…!
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.